Wednesday, October 4, 2023
முகப்புஉலகம்அமெரிக்காபதிவர்களோடு விவாதம்: சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு !

பதிவர்களோடு விவாதம்: சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு !

-

“சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டையும் பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளையும் அனுமதிப்பதால் விவசாயிகளுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. சொல்லப் போனால் இத்தனை காலமாக இடைத்தரகர்களாலும் கமிஷன் மண்டி ஏஜென்டுகளாலும் பாதிக்கப்பட்டு வந்த விவசாயிகள் பிழைக்க வேண்டுமானால் அது அவர்களை வால்மார்ட்டின் கையில் ஒப்படைத்தால் மட்டுமே நடக்கும்” – படித்த நடுத்தரவர்க்கத்தின் பொதுப்புத்தியில் இவ்வாறான கருத்துக்களை முதலாளித்துவ ஊடகங்களும் பிற அல்லக்கைகளும் வலிந்து திணிக்கும் கருத்து இது.

வால்மார்ட் எத்தனை நாடுகளில் விவசாயிகளைக் ‘காப்பாற்றி’ இருக்கிறது என்பதைப் பார்க்கும் முன், இங்கே விவசாயத்தின் அழிவுக்கு யார் காரணம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய விவசாயத்தின் அழிவுக்கு ஒரு பெரிய வரலாறே இருக்கிறது. அது பசுமைப் புரட்சிக்கும் முன் ஒரு நூற்றாண்டுக்கும் மேல் நீண்ட வரலாறு கொண்டது. ‘பசுமைப் புரட்சியின்’ விளைவாய் மண்ணில் கொட்டப்பட்ட லட்சக்கணக்கான டன் ரசாயன உரங்களால் மண்ணே மலடாகிப் போன நிலையில் ஓரளவுக்காவது மகசூல் பார்க்க வேண்டுமானால் விலை கூடிய வீரிய ரசாயன உரங்களை வாங்கியாக வேண்டிய கட்டாயத்துக்குள் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளர்.

மேலும், பசுமைப் புரட்சிக்குப் பின் பாரம்பரிய மரபுசார் விதை / நாற்று ரகங்கள் அழிந்து போய் தற்போது விதைக்கும் கூட பன்னாட்டுக் கம்பெனிகளைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயமும் விவசாயிகள் மேல் விழுந்துள்ளது. கடந்த பதினைந்து இருபது ஆண்டுகளில் படிப்படியாக பல்வேறு கட்டங்களில் விவசாயத்திற்கு அளிக்கப்பட்டு வந்த மானியங்கள் ரத்து செய்யப்பட்டு அவை உர முதலாளிகளுக்கும் மட்டும் அளிக்கப்படுகிறது. பாசனப் பராமரிப்பு உள்ளிட்ட விவசாய உள்கட்டமைப்புக்கான ஒதுக்கீடுகளை வெட்டுவது என்பதை ஒரு கொள்கையாகவே செயல்படுத்துகிறார்கள்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்துக்கும் மேல் சீறிப்பாய்வதாக பீற்றிக் கொள்ளும் முதலாளித்துவ அறிஞர் பெருமக்கள், விவசாயம் 0.5 சதவீதமாக தேய்ந்து வருவதைப் பற்றி மூச்சு விடுவதில்லை. 1980 காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 36.4 சதவீதமாக இருந்த விவசாயம், 2008-ம் ஆண்டுக்குப் பின் 17 சதவீதமாக வீழ்ந்துள்ளது.

தொண்ணூறுகளின் துவக்கத்தில் இந்தியா கையெழுத்திட்ட காட் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமுல்படுத்தப்பட்டு வரும் புதிய பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் இந்திய அரசு விவசாயத்திற்காக ஒதுக்கப்படும் மானியத்தை வெட்ட வேண்டும் என்பது உலக வங்கியின் ஆணை. உள்நாட்டு விவசாயத்தை அழித்து நாட்டின் உணவுத் தற்சார்பை ஒழித்துக் கட்டுவதன் மூலம், இந்த சந்தையை பன்னாட்டுக் கம்பெனிகளின் கையில் சிக்க வைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

இது படிப்படியாக திட்டமிட்ட ரீதியில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. காங்கிரசு போய் பாரதிய ஜனதா வந்தாலும் சரி, மூன்றாம் அணி ஆட்சியமைத்தாலும் சரி, நாட்டை அந்நியர்களுக்கு அடிமையாக்கும் இந்த மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகளை அமுல்படுத்துவதில் மட்டும் இவர்களுக்குள் எந்த கொள்கை வேறுபாடும் இருந்ததில்லை. கடந்த 15 ஆண்டுகளில் உணவு தானியங்களைக் கொள்முதல் செய்யும் பொறுப்பிலிருந்து அரசு படிப்படியாக விலகிக் கொண்டுவிட்டது. 80களின் இறுதியில் உணவு தானியக் கொள்முதலில் 45% அரசு செய்தது – இன்றோ அது 75% தனியார்களின் கையில் இருக்கிறது.

2002-ம் ஆண்டு நாட்டில் கடும் வறட்சியும் பஞ்சமும் நிலவிய காலகட்டத்தில் அரசு தனது கையிருப்பில் இருந்த 2.2 கோடி டன் தரமான கோதுமையை ஐரோப்பிய பன்றிகளுக்கு ( ஆம் பன்றிகளுக்குத் தான்) ஏற்றுமதி செய்தது. அதே நேரம் விவசாயிகளுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை விட இரண்டு மடங்கு விலை கொடுத்து ஆஸ்திரேலியாவில் இருந்து தரமற்ற கோதுமையை இறக்குமதி செய்தது பஞ்சாப் அரசு. அப்போது மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது ‘தேசபகதர்’ வாஜ்பாயின் தலைமையிலான பாரதிய ஜனதா.

ஒருபுறம் விவசாயத்தை அரசின் பொறுப்பில் இருந்து கைகழுவி அதை அப்படியே அந்நிய தேசங்கடந்த தொழிற்கழகங்களுக்கும் உள்நாட்டு தரகு முதலாளிகள் கையிலும் ஒப்படைப்பதையே கொள்கையாகக் கொண்டு செயல்படுத்தி வருகிறார்கள். இதனடிப்படையில் அழிவின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் வேறு வழியின்றி கார்ப்பரேட் கம்பெனிகளின் கையில் சிக்குகிறார்கள். அமெரிக்காவின் பெப்சி நிறுவனத்துக்கு உருளைக்கிழங்கு பயிரிட்டுக் கொடுத்த பஞ்சாப் விவசாயிகளும், மான்சான்டோவின் பி.டி. காட்டன் விதையைப் போட்ட மராத்திய விவசாயிகளும் கடனாளியாகித் தற்கொலை செய்து கொண்ட செய்திகளை நாம் பத்திரிகைகளில் வாசித்திருப்போம்.

இவர்களின் நோக்கம் விவசாயத்தை வாழ வைப்பதல்ல – அதை ஒட்டச் சுரண்டிக் கொழுப்பது தான். இதில் ரிலையன்ஸ், ஐ.டி.சி, பெப்சி, மான்சாண்டோ, வால்மார்ட் என்று இவர்களுக்கும் தேச பேதமெல்லாம் இல்லையென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆக்ஸ்பாம் என்கிற அமைப்பு பல்வேறு நாடுகளில் செய்துள்ள ஆய்வுகளின் அடிப்படையில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் வால்மார்ட் போன்ற திமிங்கலங்களின் வருகை விவசாயிகளை கடுமையாக பாதித்திருப்பதை வெளிக் கொணர்ந்திருக்கிறது.

தென்னாப்பிரிக்க  ஆப்பிள்களின் ஏற்றுமதிக்கான கொள்முதல் விலை 33 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளத்து. அமெரிக்காவிலேயே விவசாயிகளிடம் தக்காளி கொள்முதல் விலை 25 சதவீதமாக குறைந்துள்ள அதே நேரம் நுகர்வோருக்கான விலை 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. உலகளவில் விவசாய விளைபொருட்களின் மொத்த சந்தையில் 40 சதவீத அளவுக்கு நான்கு அல்லது ஐந்து பன்னாட்டுக் கம்பெனிகள் தாம் கட்டுப்படுத்துகின்றன.

ஆரம்பத்தில் நல்ல விலை கொடுத்து பொருட்கள் கொள்முதல் செய்யும் இவர்கள், தங்களது உள்ளூர் போட்டியாளர்களை ஒழித்துக் கட்டியபின் விலையை அடாவடியாகக் குறைப்பது, பணத்தை இழுத்தடித்துக் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு வகைகளில் விவசாயிகளைக் கசக்கிப் பிழிகிறார்கள். உதாரணமாக, ஆக்ஸ்பாம் நடத்திய ஆய்வில் ஒப்பந்த விவசாயத்தில் விளைவித்த ஆப்பிள்கள், 65மில்லி மீட்டர் சுற்றளவு கொண்டதாக இருக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்திய கார்பரேட் கம்பெனி ஒன்று அந்த அளவுக்குக் கீழ் இருக்கும் ஆப்பிள்கள் தரம் குறைந்தது என்று சொல்லி அடிமாட்டு விலைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

ஆக, இடைத்தரகர்களை ஒழிப்பதல்ல இவர்கள் நோக்கம். ஊருக்குப் பத்து கமிசன் மண்டி ஏஜென்டுகள் என்கிற நிலையை ஒழித்து நாட்டுக்கே நாலு பிரம்மாண்டமான கமிஷன் மண்டிகளை உருவாக்குவது தான் இவர்கள் நோக்கம். இந்த பெரிய சந்தை இன்றைய நிலையில் உள்ளூர் அளவில் பல்வேறு சிறிய போட்டியாளர்களுடன் இயங்கி வருகிறது. இதை ரிலையன்ஸிடமும் வால்மார்ட்டிடமும் ஒப்படைத்து விட்டால் விவசாயிகளுக்கு வேறு போக்கிடமே இல்லாமல் போய் விடும். இடைத்தரகர்களை ஒழிப்பதே நோக்கம் என்று நீட்டி முழங்கும் இவர்களின் உண்மையான திட்டம்  அதற்கு நேர் எதிரானது – இருக்கும் சாதா ஏஜெண்டுகளை ஒழித்து விட்டு சூப்பர் ஏஜெண்டுகளை வளர்ப்பது தான் அது.

விலைவாசி குறையும் என்கிற ஏமாற்று – விலைவாசி உயர  யார் காரணம்?

“இடைத்தரகர்களை ஒழித்து விட்டால் விலைவாசி குறைந்து விடும். இவர்களால் தான் விலைவாசியே உயர்ந்து கொண்டே போகிறது. மேலும் சில்லறை வர்த்தகமே முறைப்படுத்தப்படாமல் இருக்கிறது. இதை முறைப்படுத்துவதன் மூலம் விலைவாசியை ஒரு கட்டுக்குள் வைக்கமுடியும்” – இது மவுனமோகன் சிங், சிதம்பரம் கும்பலில் இருந்து தமிழில் வலைபதியும் ‘டிராபிக் ராமசாமிகள்’ வரை ஒரே குரலில் பாடும் பாட்டு.

இப்போதாவது தனது பொருளை சந்தைக்கு எடுத்து வரும் விவசாயிக்கு பத்து கமிஷன் மண்டிகளில் நல்ல விலை கிடைக்கும் மண்டியைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதை முறைப்படுத்த வேண்டுமென்றால் அரசே தலையிட்டு குறைந்தபட்ச விலையை உத்திரவாதப்படுத்திக் கொடுக்கலாமே தவிர அந்தப் பொறுப்பிலிருந்து கைகழுவி விட்டு இருக்கும் கமிஷன் மண்டிகளை ஒழித்துக்கட்டி ரிலையன்ஸையும் வால்மார்ட்டையும் அந்த இடத்தில் அமர வைப்பதல்ல தீர்வு.

இது ஒருபக்கமிருக்க, விலைவாசி உயர்வுக்கு கமிஷன் மண்டிகள் மட்டும் தான் காரணம் என்று சொல்வதே பச்சை அயோக்கியத்தனம். விவசாயத்தை ஒரு முனையில் புறக்கணிக்கும் அதே சமயத்தில், உணவு தானியத்தை ஆன்லைன் டிரேடிங் வர்த்தகத்தில் திறந்து விட்டிருக்கிறார்கள். கட்டுப்படுத்தவியலாலாத பங்குச்சந்தை சூதாட்டத்தில் மக்களின் அடிப்படை உணவு ஆதாரம் சிக்குண்டு கிடக்கிறது.

உதாரணமாக, இன்னும் விளைந்திராத ஒரு குவிண்டால் நெல்லுக்கு விலை பத்தாயிரம் என்று விலை நிர்ணயித்து ஒப்பந்தம் செய்து கொள்ளும் பன்னாட்டுக் கம்பெனி, விளையாத அந்த நெல்லுக்கான ஒப்பந்தப் பத்திரத்தை பங்குச் சந்தையில் ஏலம் விடுகிறார். பல கைகள் மாறிச் சுழலும் இந்தப் பத்திரங்கள் ஓவ்வொரு சுழற்சியிலும் அபரிமிதமாக விலை கூடிக் கொண்டே போகிறது. இறுதியில் அதன் சந்தை விலை பத்து லட்சம் என்று வந்து நிற்கும் போது விளைந்த நெல்லை முன்பு போடப்பட்ட ஒப்பந்த விலையான பத்தாயிரத்துக்கே பறித்துச் செல்கிறது பன்னாட்டுக் கம்பெனி. விளைவித்தவனுக்கே விளைபொருள் மேல் உரிமையில்லை.

இந்தியாவின் உணவுப் பொருட்கள் தானியங்கள் உள்ளிட்டு பல்வேறு பண்டங்களின் மேல் நடக்கும் இந்தச் சூதாட்டச் சந்தையின் மதிப்பு 45 லட்சம் கோடிகளுக்கும் அதிகம். இந்தச் சூதாட்டத்தில் 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் அரசே கொள்முதல் செய்து வைக்க உணவுக் கிடங்குகள் கட்ட நிதியில்லை என்று புலம்பும் அதே அரசு தான், இந்த பன்னாட்டுப் பதுக்கல்காரர்கள் கட்டும் தானியக் கிடங்குகளுக்கு 50 சதவீத மானியம் வழங்குகிறது.

விலைவாசி உயர்வு என்பதை ‘இடைத்தரகர்கள்’ என்கிற ஒற்றைப் பரிமாணத்தில் பார்த்துப் புரிந்து கொள்ளக் கூடாது. ஆனால், பத்ரி போன்ற ‘மெத்தப் படித்தவர்களே’ கூட அவ்வாறு தான் சிந்திக்கிறார்கள். அவர்களின் மண்டையோட்டுக்குள் நிறம்பி வழியும் ஏகாதிபத்திய அடிமைப் புத்தி அதற்கு மேல் அவர்களின் பார்வை செல்லாமல் தடுக்கிறது. ஒருபக்கம் பல்வேறு வழிகளில் விவசாயத்தை திட்டமிட்டு அழித்து விட்டு அதன் வினியோக வலைப்பின்னலை பன்னாட்டுக் கம்பெனிகளிடம் கொடுத்து விடுவதன் மூலம் விலை குறையும் என்று சொல்வதும், விவசாய விளைபொருட்களின் மேல் நடக்கும் சூதாட்டத்தை விவாதத்திற்குட்படுத்தாமல் மறைப்பதும் மாபெரும் மோசடி. ஆனால், இது தான் தமிழில் வலைபதியும் பார்த்தசாரதிகளின் யோக்கியதை.

எட்டப்பன் காலத்தில் மட்டும் கூகிளும் பிளாகரும் இருந்திருந்தால் தனது ஏகாதிபத்திய அடிமைச் சிந்தனையை பத்ரி, நாராயணன், வவ்வால் போன்றோரை விட  சிறப்பாக நியாயப்படுத்தியிருப்பான். அப்படித்தான் இவர்கள் எழுதுகிறார்கள், பேசுகிறார்கள்.

வால்மார்ட்டால் விலைவாசி உயர்வு – பிற நாடுகளின் அனுபவம்

வால்மார்ட்டின் பிரம்மாண்ட மூலதன பலமும் உலகளாவிய வலைப்பின்னலும் தொழில் துவங்கிய சில காலத்துக்கு விலையைக் குறைக்கும் வாய்ப்பை அளிக்கிறது. இங்கே வரும் நட்டத்தை வேறெங்கோ கிடைக்கும் லாபத்தைக் கொண்டு ஈடுகட்டிக் கொள்ள முடிகிறது. இந்த ஆரம்பகட்ட விலைக்குறைப்பின் மூலம் உள்ளூர் அளவிலான போட்டியாளர்களை ஒழித்துக் கட்டியபின், அவன் வைத்ததே விலை. உற்பத்தியாளர்களிடம் அடாவடியாக விலையைக் குறைத்து வாங்கும் வால்மார்ட், நுகர்வோருக்கு அதிகவிலையில் விற்பது அவன் ஏற்கனவே கால்நாட்டியிருக்கும் சந்தைகளின் அனுபவத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் பாடம்.

தாய்லாந்தில் பன்னாட்டு சூப்பர் ஸ்டோர்களின் வருகைக்குப் பின் நுகர்வுப் பொருட்களின் விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. அர்ஜென்டினாவில் காய்கறிகளின் விலை 14 சதவீதம் அதிகம். மெக்ஸிகோவில் சாதாரண கடைகளை விட சூப்ப்ர் ஸ்டோர்களில் விற்கப்படும் பொருட்களின் விலை மிக அதிகமாக இருப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. வியட்நாமில் 2002 காலகட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் 10 சதவீத அளவுக்கு பொருட்களின் விலை உயர்ந்திருப்பது தெரியவந்தது.

நாம் எதை நுகர்வது என்பதை யார் தீர்மானிப்பது?

வால்மார்ட் தனது விற்பனைப் பொருட்களை கொள்முதல் செய்யும் விதம் பற்றி “மலிவு விலையில் மரணம்” கட்டுரையில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்களை வரவழைத்து தலைகீழ் ஏலம் நடத்தும் வால்மார்ட், அதில் குறைந்த விலைக்கு தனது உற்பத்திப் பொருட்களை விற்க முன்வரும் நிறுவனத்திடமிருந்தே கொள்முதல் செய்கிறது. உதாரணமாக, துணி துவைக்கும் சோப்புக் கட்டிகளில் இன்று இருக்கும் பல்வேறு பிராண்டுகளான அரசன், பொன்வண்டு, மகாராஜா போன்றவைகள் சந்தையில் காலம் தள்ள முடியாது. பன்னாட்டு கம்பெனிகளின் தயாரிப்புகளான ரின், சர்ப் போன்றவைகளே வால்மார்ட் எதிர்பார்க்கும் அளவுக்கு உற்பத்தி செய்து குவித்து தாக்குப் பிடிக்க முடியும்.

உணவுப் பொருட்கள் என்று பார்த்தால், ஏற்கனவே இந்தியாவில் ஐ.டி.சி நிறுவனம் தானியக் கொள்முதல் செய்கிறது. இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் “ஆசீர்வாத் ஆட்டா’ நாடு முழுவம் ஒரே சுவையுள்ளதாக இருக்க வேண்டுமென்பதால் அதற்கேற்ற விதையை விநியோகித்து ஒரே விதமான கோதுமையைப் பயிரிடும்படி பல மாநிலங்களின் விவசாயிகளை அந்நிறுவனம் மாற்றிவிட்டது. பலவிதமான ருசிகளைக் கொண்ட கோதுமை ரகங்கள் இப்படி திட்டமிட்டே அழிக்கப்பட்டு விட்டன. தான் உற்பத்தி செய்யும் உருளைக் கிழங்கு வறுவலுக்கு பொருத்தமான ஒரே வகை உருளைக் கிழங்கை உற்பத்தி செய்யும் படி பஞ்சாபின் சில மாவட்டங்களையே மாற்றியிருக்கிறது பெப்சி நிறுவனம்.

வால்மார்ட்டுக்கு உலகளாவிய சந்தை இருக்கிறது. அதை ஆதரிப்பவர்களோ “ஆஹா சீனாவுக்கும் அமெரிக்காவுக்கு நம்ம ஊர் கிழங்குகள் போகப் போகிறது – விவசாயம் வாழப் போகிறது” என்று குதூகலிக்கிறார்கள். இவர்களுக்கு விவசாயம் பற்றிய அரிச்சுவடி கூடத் தெரியாது என்பதற்கு வேறு சான்றுகள் ஏதும் தேவையில்லை. பாரம்பரியமாக விளைவிக்கப்படும் சுதேசி ரகங்கள் என்பது அந்தந்த மண்ணின் தன்மைக்கு உகந்தது. அமெரிக்காவில் உருளை வறுவல் சந்தைக்கான உருளைக் கிழங்கு என்பது அந்த சந்தைக்கேற்ற ரகமாகத் தான் இருக்கும். அந்நிய ரகங்களை நமது மண்ணில் விளைவிக்க வேண்டுமென்றால், நிறைய ரசாயனங்களைக் கொட்டியாக வேண்டும். ஏற்கனவே உரங்களால் செத்துப்போன நிலங்களின் நிலை இன்னும் மோசமாகும்.

மட்டுமல்லாமல், இப்படி அந்நிய ரகங்களுக்கான சாகுபடிக்கு விதையில் இருந்து பூச்சி மருந்து, தொழில்நுட்பம் என்று சகல வகையிலும் பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கும். தற்போது, ஒரு பகுதியளவுக்காவது தற்சார்புடன் இருக்கும் விவசாயம் முற்றாக பன்னாட்டுக் கம்பெனிகளை நம்பி இருந்தாக வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளுவதாகவே இது அமையும். ஐ.டி.சி ஏற்கனவே கணிசமான அளவுக்கு சந்தையைக் கைபற்றியிருக்கும் நிலையில், முழுமையாக அந்தச் சந்தை அவன் கைகளில் விழுந்தால், நமக்கு நாம் விரும்பிய ரக கோதுமையை உண்ணும் வாய்ப்பு கிடைக்குமா?

வால்மார்ட் வந்தால் சிறு உற்பத்தியாளர்கள் பிழைப்பார்கள் என்கிற புளுகு

வால்மார்ட் உள்ளிட்ட பன்னாட்டு மளிகைக்கடைகள் தமது சங்கிலித் தொடர் சூப்பர்மார்ட்டுக்கான கொள்முதலில் 30 சதவீதத்தை உலகெங்கும் உள்ள சிறு உற்பத்தியாளர்களிடம் வாங்கிக் கொள்வார்கள் என்றும், அப்படி நெல்லுக்கு இறைத்தது புல்லுக்கும் கொஞ்சம் புசியுமாதலால் நமது அம்மி அப்பள கம்பேனியிலிருந்து பூ மார்க் பீடி கம்பேனி வரை பிழைத்துக் கொள்வார்கள் என்றும் இதன் மூலமும் நல்ல வேலைவாய்ப்பு உருவாகும் என அதன் ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.

சிறு உற்பத்தியாளர்கள் ஒருபுறம் இருக்கட்டும் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ப்ராக்டர் & காம்பிள் நிறுவனமே வால்மார்ட்டின் ஏகபோகத்தை கட்டுப்படுத்த அரசு தலையிட வேண்டுமென்றும், அதன் கொள்முதல் கொள்கையின் விளைவால் தங்களால் தொழில் நடத்த முடியவில்லையென்றும் தெரிவித்துள்ளது. வால்மார்ட்டுக்கு பொருட்கள் சப்ளை செய்யும் முதல் பத்து நிறுவனங்களில் நான்கு நிறுவனங்கள் மஞ்சள் நோட்டிஸ் கொடுத்து ஓட்டாண்டிகளாகியுள்ளன.

2004-ம் ஆண்டு காலகட்டத்தில் அமெரிக்க பொம்மைச் சந்தையில் தனக்கு அடுத்த படியாக இருந்த டாய்ஸ் ‘ஆர்’ யூ நிறுவனத்தோடு விலைக்குறைப்புப் போட்டியில் இறங்கிய வால்மார்ட், அந்த நிறுவனம் விற்ற அதே பொம்மைகளை 10 டாலர் குறைவான விலையில் விற்றது. இதன் மூலம் டாய்ஸ் ஆர் யு நிறுவனத்தின் 146 கடைகள் ஜனவரி 2004-ம் ஆண்டு இழுத்து மூடப்பட்டன. இதில் 3,800 தொழிலாளர்கள் வேலையிழந்தனர். அதன் பின் அமெரிக்க பொம்மைச் சந்தையில் 30 சதவீதத்துக்கும் மேலாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த வால்மார்ட், ஏற்கனவே விலைக்குறைப்பில் விட்டதையெல்லாம் பிடித்துக் கொண்டது.

இதே போல் டெக்ஸ்டைல் சந்தையை கபளீகரம் செய்த வால்மார்ட், கரோலினா மில்ஸ், லவ்வபிள் கார்மென்ட்ஸ் போன்ற நிறுவனங்களை ஓட்டாண்டிகளாக்கியுள்ளது. அமெரிக்காவில் மட்டுமின்றி தான் கால்பதித்த நாடுகளிலெல்லாம் உள்ளூர் உற்பத்தியாளர்களை ஒழித்துக் கட்டியிருக்கிறது வால்மார்ட். பிற நாடுகளின் அனுபவங்களில் இருந்து நாம் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இது இந்தியச் சந்தைக்குள் நுழையும் விஷக் கிருமி. ரிலையன்ஸ், ஐ.டி.சி போன்றவை மெல்லக் கொல்லும் ஆர்செனிக் என்றால் வால்மார்ட் உடனே வேலையைக் காட்டும் சயனைட்.

இன்றைய நிலையில் சர்வதேச அளவில் மீளமுடியாத கட்டமைப்பு நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது உலக முதலாளித்துவ வர்க்கம். சூதாட்டப் பொருளாதாரத்தின் விளைவாய் வீங்கிப் பெருத்துப் போயுள்ள தனது பிரம்மாண்டமான மூலதனத்தை சுழற்சிக்கு விடும் சந்தைகளை வெறிகொண்ட முறையில் தேடியலைந்து கொண்டிருக்கிறது ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டுத் தொழிற்கழகங்கள். இந்தப் பின்னணியில் தான் மூன்றாம் உலக நாடுகளை இரண்டாம் தலைமுறை பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள உலக வங்கி நிர்பந்தித்து வருகிறது. சில்லறை வர்த்தகம் என்றில்லாமல் விமானப் போக்குவரத்து, வங்கித்துறை, இன்சுரென்ஸ், தபால் துறை என்று லாபம் கொழிக்கும் துறைகளில் பொதுத்துறையை ஒழித்து விட்டு அந்நிய மூலதனத்தை அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கைகளை வலுவாக முன்தள்ளுகிறார்கள்.

சில்லறை வர்த்தகம் என்றில்லாமல் பல்வேறு வகைகளில் உள்நுழையும் இந்த மூலதனத்தின் தாக்குதலையும் அதையே செயல்திட்டமாகக் கொண்டிருக்கும் மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கைகளையும் எதிர்த்துப் போராடுவதே நாட்டின் இறையாண்மையைக் காக்க நாட்டுப் பற்று மிக்கவர்கள் உடனே செய்ய வேண்டிய கடமை.

________________________________________________

– தமிழரசன்

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

———————

———————

———————

———————

  1. எவ்வளவு தெளிவாக எழுதினாலும்,இந்த அல்லக்கை சொம்புதூக்கிகள் மாறப்போவதில்லை.வரிசையா வருவானுங்க பாருங்க.
    ஆனா ஒரு பயலும் கட்டுரையில் உள்ள மேட்டரை
    தொடவும் மாட்டானுங்க.கேள்விக்கு பதிலும் வராது.

  2. அண்ணாச்சி கடைக்காகப் பரிந்து பேசுபவர்கள் அந்தக் கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் நிலைமையை எண்ணிப் பார்த்ததுண்டா?
    சம்பளம் ரூ 500 – 1000 என்கிற ரேஞ்சில் இருக்கும். பி.எஃப், இ.எஸ்.ஐ., 8 மணிநேரக் கணக்கு எதுவும் கிடையாது. ‘சம்பள ஆள் இல்லை’ என்ற போர்டு தொங்கும். கேட்டால், ‘இவன் என் மச்சான், ஊரிலிருந்து அழைத்துவந்து உதவிக்கு வைத்திருக்கிறேன்’ என்பார் அண்ணாச்சி. குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பது படு சகஜம். அந்தச் சின்னப் பசங்கள் அடிக்கப்படுவதும் சகஜமே.

    இதுவே வால்மார்ட்டாக இருந்தால் முறையான ஒப்பந்தத்துடன் வேலை, 8 மணிநேரப் பணி, நியாயமான சம்பளம், பெரியவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு, பணிப்பாதுகாப்பு, பி.எஃப், இ.எஸ்.ஐ. வசதிகள்; யாரும் அடிக்கவோ, மரியாதையின்றி நடத்தவோ முடியாது- மீறினால் தட்டிக் கேட்கத் தொழிற்சங்கம் என சகல உரிமைகளும் உண்டு. ஏன் ஸ்ட்ரைக் செய்யக்கூட முடியும்! இத்ல்லாம் அண்ணாச்சி கடையில் நினைத்துப் பார்க்கவாவது முடியுமா?

    ஆண்ணாச்சி கடைகளும் அவர்களது கஸ்டமர் உறவுகளும் நிலப் புரபுத்துவத்தின் நீட்சியே! உதாரணமாக அண்ணாச்சிகள், தன் சொந்த ஊர்க்காரன், சாதிக்காரனுக்கு மட்டுமே வேலை தருவார்கள். உண்மையில் நிலப்புரபுத்துவ மதிப்பீடுகளைக் கொண்ட அண்ணாச்சி கடைகள் அழியுமென்றால் அதை உண்மையான கம்யூனிஸ்டு வரவேற்க வேண்டும். இப்படி அடுத்த வளர்ச்சிநிலையான முதலாளித்துவமும், அது உருவாக்கும் ‘ஆர்கனைஸ்டு லேபரும்’ தான் கம்யூனிஸத்துக்கே அடிப்படைத் தேவைகள். நம்ம ஊர் கம்யூனிஸ்டுகளுக்கு இதெல்லாம் புரியாது – காரணம் அவர்களிடமும் நிலப்பிரபுத்துவ, சாதிய நோக்குதான் உள்ளது என்பதே! அவர்கள் மார்க்ஸியம் பேசுவது ஒரு சுயநலன் சார்ந்த வசதிக்காக மட்டுமே.

    அவர்களுக்கு நம் அரசுப்பள்ளிகளில் பாடம் நடத்தப்படாமல் வீணாகும் ஏழை மாணவன் பற்றி அக்கறை கிடையாது; நல்ல சம்பளம் வாங்கிக்கொண்டும் வகுப்புக்கு வராத, அல்லது வந்தாலும் பாடம் நடத்தாத ஆசிரியரது வர்க்க நலன் மட்டுமே அவர்களுக்கு முக்கியம். மிடில் கிளாஸான ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் ‘உழைக்கும் வர்க்கம்’ என்றுகூறிக் காப்பாற்றிவருபவர்களைக் கார்ல் மார்க்ஸ் இன்று இருந்திருந்தால் கம்யூனிஸ்ட் என்றே ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்.

    • //இதுவே வால்மார்ட்டாக இருந்தால் முறையான ஒப்பந்தத்துடன் வேலை, 8 மணிநேரப் பணி, நியாயமான சம்பளம், பெரியவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு, பணிப்பாதுகாப்பு, பி.எஃப், இ.எஸ்.ஐ. வசதிகள்; யாரும் அடிக்கவோ, மரியாதையின்றி நடத்தவோ முடியாது- மீறினால் தட்டிக் கேட்கத் தொழிற்சங்கம் என சகல உரிமைகளும் உண்டு//

      தாங்க முடியலை சரவணன்.

      தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு வால்மார்ட் உலகளவில் பேர் போன நிறுவனம். “ஸ்வெட் ஷாப்+வால்மார்ட்” என்று கூகிளில் தேடிப் பாருங்கள். தொழிலாளர்களை 16 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்ய நிர்பந்திப்பது, குறைந்த கூலி, நினைத்தால் தூக்குவது, கருங்காலிகளை வைத்து சங்கம் கட்டுவதைத் தடுப்பது மற்றும் சட்டப்பூர்வ / சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் தொழிலாளர் அணிசேர்க்கையை உடைப்பது போன்றவற்றில் வால்மார்ட் நிபுணத்துவம் பெற்ற நிறுவனம். உலகத் தொழிலாளர் வர்க்கமே காறித்துப்பும் ஒரு நிறுவனத்தை மேண்மையானது என்று சொல்ல வேண்டுமென்றால் அசாத்தியமான திமிரும் கொழுப்பும் வேண்டும். அது உங்களிடம் கூடுதலாகவே இருக்கிறது போல் தெரிகிறது. காலாற நடந்து தெரு முக்கில் இருக்கும் அண்ணாச்சிக் கடைக்குப் போய் அவரிடம் பேச்சுக் கொடுத்து ‘உழைப்பு’ என்றால் என்னவென்று முதலில் புரிந்து கொள்ளப் பாருங்கள் – உழைப்புச் சுரண்டல் எல்லாம் பெரியவார்த்தை அதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.

      சிறு வணிகர்கள் பற்றி உங்களுக்கு என்ன எழவு தெரியும்? எத்தனை அண்ணாச்சிக் கடைகளில் வேலையாள் வைத்து நடத்துகிறார்கள்? அது ஒரு குடும்பமே சேர்ந்து வேலை செய்யும் இடம். உள்நாட்டுத் தொழில்களின் அழிவில் தான் புரட்சி நடக்குமென்றால் சோமாலியாவில் தான் நடந்திருக்க வேண்டும். இல்லை வால்மார்ட் வலுவாக இருக்கும் நாடுகளில் நடந்திருக்குமென்றால் அமெரிக்காவில் நடந்திருக்க வேண்டும். காப்பாற்றிக் கொள்ள சொந்த பொருளாதாரமே இல்லாத இடத்தில் மக்கள் பிழைக்கும் வழி தேடுவார்களா இல்லை சமூகப் பொருளாதார நடவடிக்கைகளுக்கு வருவார்களா?

      உங்களுக்கு அண்ணாச்சிக் கடையென்றாலே சரவணா ஸ்டோர்ஸ் தான் தெரியுமா? உங்கள் தெருமுக்கில் இருக்கும் சின்ன மளிகைக்கடையும் பெட்டிக்கடைகளும் தான் 99.9999 சதவீத சிறு வணிகர்கள். உழைத்துப் பிழைக்க வேண்டும் என்று காலை முதல் இரவு வரை வேர்வையில் செத்து சுண்ணாம்பாகிறவர்கள் ஒழிந்து போக வேண்டும் என்று சாதாரண மனிதத் தன்மை கொண்ட எவரும் நினைத்துக் கூட பார்க்க மாட்டார்கள். முதலில் மனிதத்தன்மை என்னவென்று புரிந்து கொள்ள முயலுங்கள் மார்க்சியத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

    • சரவனன்,நம்ம ஊரில் அரசியல்வியாதிகளை கவனித்து விட்டால் குழந்தை தொழிலாலர்கள், தொழிலாலர்கள் நலன் போன்றவற்றை மயிருக்கு கூட நிறுவனங்கள் மதிக்க வேன்டியதில்லை. இதை வால்மார்ட் நண்றாகவே உனர்ந்திருப்பான்.

    • மீறினால் தட்டிக் கேட்கத் தொழிற்சங்கம் என சகல உரிமைகளும் உண்டு. ஏன் ஸ்ட்ரைக் செய்யக்கூட முடியும்…………….noooooooooooooooooooooo

  3. Dear Author,
    The following lines are truly majestic and 100 % precise.

    //இன்றைய நிலையில் சர்வதேச அளவில் மீளமுடியாத கட்டமைப்பு நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது உலக முதலாளித்துவ வர்க்கம். சூதாட்டப் பொருளாதாரத்தின் விளைவாய் வீங்கிப் பெருத்துப் போயுள்ள தனது பிரம்மாண்டமான மூலதனத்தை சுழற்சிக்கு விடும் சந்தைகளை வெறிகொண்ட முறையில் தேடியலைந்து கொண்டிருக்கிறது ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டுத் தொழிற்கழகங்கள்.//
    Good article . It’s full of facts and truth. only truth. congrats for initiative.
    Regards
    GV

  4. ஆன் லைன் வர்த்தகம் அமலுக்கு வந்தே ஆறு வருடங்கள் தான் ஆகிறது.அதற்கு முன்பு விவசாயிகளின் பொருள்களுக்கு நியாயாமான விலை கிடைத்து வந்ததா என்பதை விளக்கவும்.

  5. வாழ்த்துக்கள் தமிழரசன். உங்கள் கட்டுரை நிறைய புரிதல்களைத் தருகிறது.

  6. இது மவுனமோகன் சிங், சிதம்பரம் கும்பலில் இருந்து தமிழில் வலைபதியும் ‘டிராபிக் ராமசாமிகள்’ வரை ஒரே குரலில் பாடும் பாட்டு.—நாய்க்கு தெரியுமா?இது நல்ல நாள்
    பானை என்று. அதுமாதிரி இருக்கு ஒரே குரலில் பாடும் பாட்டு

  7. மிக எளிமையான விளக்க கட்டுரை. பல இடங்களில் நம்மூர் நிலவரத்தை ஒப்பிட்டுள்ளது பல புரிதல்களை தருகிறது. நன்றிகள்.

  8. 1.100 சதவீதம் அந்நிய மூலதனத்தை ஏற்று கொண்ட சீனாவில்அது நடந்து 10 ஆண்டுக்கு பின்பும் அந்த நாட்டின் மொத்த சில்லறை வணிகம் என்பது இன்னும் 20 சதமானம் மட்டுமே முறைபடுத்தபட்ட வணிகமாக இருப்பது ஏன்

    2.உற்பத்தி முதலாளித்துவமாக இருக்கும் போது வினியோகம் முதலாளித்துவமாக இருக்கும் போது அதில் நடக்கும் சுரண்டலை மட்டும் மறைப்பது ஏன்

    3.இந்தியாவின் அரசு முதலாளித்துவ வர்க்க சார்புடைய அரசு என்பதை புரிந்து கொண்டால் அது 52 சதவீதம் மட்டுமே அந்நிய முதலீட்டை அனுமதிப்பது ஏன் என்றும் மீதம் 48 சதவீதத்தை அது ந்ரிலையன்சின் கடைக்கன் உத்தரவு க்டைத்தால் மட்டுமே அனுமதிக்கும் என்பதும் புரிந்து கொள்ள என்ன தயக்கம்

    4.என்ன இருந்தாலும் சரவணா ஸ்டோரில் வேலை செய்பவன் சொந்த சாதிக்காரணாக இருந்தாலும் அவனுக்கு

    வெளிய வந்து கடை ஓணராக வாய்ப்பிருக்கு என சொல்லும் உங்கள் குட்டி பூர்சுவா சிந்தனை எதை காட்டுகிறது ?

    (ரிலையன்ஸில் வேலை செய்யும் இழப்பதற்கு ஏதுமற்ற வர்க்கத்தை பற்றி சிந்தித்துக்கூட பார்க்காத உங்கள்

    குட்டி பூர்சுவா மனப்பான்மை அம்பலப்படுவதையும் அம்மணமாக நீங்கள் நிற்பதையும் உணருகிறீர்களா இல்லையா?

    5.வால் ஸ்டீரிட் போராட்டகாரர்கள் தங்களின் சமூக பொருளாதார பிரச்சனைக்கு மறந்தும் கூட அமெரிக்க அர்சுதான் காரணம் என சொல்ல மறுப்பதைபோல நீங்களும் விவசாயிகள் பரந்து பட்ட மக்களின் பிரச்சனைக்கு காரணம் இடைத்தரகர்களான வியாபாரிகள் என்பதையும் இந்த அமைப்பு முழுவதும் முதலாளித்துவ அமைப்புதான் என்பதையும் சொல்ல மறுத்து இதை உடைக்க முயலாமல் பகுதியை கட்டிகாக்க முயலுவதேன்

    6.நீங்க யார் என்பதும் யாரை காக்க போராடுகிறீர்கள் என்பது புரிகிறதா ? வணிகர்களை காப்பாத்த போராடுகிறீர்கள் அவ்வப்போது விவசயிகளுககாக நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள் சரத்குமாருக்கும் உங்களுக்கும் பெரிசா வேறுபாடு இல்லையே நீங்கள் கம்யூனிஸ்டா ?

    7.உங்கள் சிகப்பு அங்கியை கழட்டி விட்டு தமிழ் தேசியவாத கட்சின்னு சொல்லிகொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் . நீங்கள் நேரத்துக்கு தகுந்தாற்போல் முரண்பாடுகளை பேசுவதை விடுத்து பேசாமல் கட்சிக்கு பேரை மாற்றி கொள்ளுங்கள் -தமிழ் தேசிய கட்சி போன்ற பெயர்களை பரிந்துரைக்கிறேன்

    • 100 சதவீதம் அந்நிய முதலீட்டைக் கோரும் நீங்கள்தான் மெய்யான கம்மூனிஸ்டு

    • பெட்டிக்கடைக்காரர், இட்லி சுட்டு விற்கும் ஆயா, சிறு மளிகைக்கடைக்காரர், ஆட்டோ ஓட்டுனர், பானிபூர் விற்கும் சிறுவன், ரோஸ் மிட்டாய் விற்கும் பீகாரி, பீச்சில் சுண்டல் விற்கும் சிறுவன் போன்ற “முதலாளிகளையும்” அவர்களின் “மூலதனத்தையும்” எதிர்த்து ஒழித்துக் கட்டிவிட்டு நீங்கள் நடத்தப் போகும் ‘புரட்சியைக்’ கண்டு வியக்காமல் இருக்க முடியல.

      வியப்பெல்லாம் மக்களுக்குத் தான். வால்மார்ட்டுக்கு சந்தோஷமாக இருக்கும்.

      மக்களே நல்லா பாத்துக்கங்க. நம்ம தியாகுவும் ரவுடி தான்.

      ஒரு பெட்டிக்கடைக்காரரின் ஐந்தாயிரம் முதலீட்டையும் அதை விட லட்சக்கணக்கான கோடி பிரம்மாண்டமான வால்மார்ட்டின் மூலதன பலத்தையும் ஒரே தராசில் வைத்து சமன்படுத்தும் மார்க்சியம் மார்க்சுக்கே தெரியாமல் போனது ஒரு சோகம் தான்.

      உங்கள் கணக்குப் படி, ஏர்கலப்பை சொந்தமாக வைத்து (மூலதனம்!?) அரை ஏக்கரில் (மூலதனம்!?) விவசாயம் பார்க்கும் விவசாயியும் லட்சக்கணக்கான ஏக்கரில் விவசாயம் பார்க்கும் அம்பானியும் ஒன்று தான். இருவரும் முதலாளிகள் இரண்டும் ஒரே சமமான மூலதனம்.

      நீங்கள் இப்படி எதிர்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைவதைப் பார்த்தால் கடைசியில் ஒருத்தரும் மிஞ்சமாட்டார்கள். நீங்கள் தனியே பீச்சாங்கரைப் பக்கமாக ஒதுங்கி உங்களைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுக் கொண்டு அதை ஒரு சோசலிச நாடாக பிரகடணம் செய்து கொள்ள வேண்டியது தான். புரட்சி வென்று விடும்.

      //ரிலையன்ஸில் வேலை செய்யும் இழப்பதற்கு ஏதுமற்ற வர்க்கத்தை பற்றி சிந்தித்துக்கூட//

      நீங்கள் சிந்தித்த வெங்காயம் தான் ஊரே நாறுகிறதே. இருக்கும் பெட்டிக்கடைக்காரனையெல்லாம் ஒழித்து விட்டு ரிலையன்சுக்கும் வால்மார்ட்டுக்கும் அனுப்பி ‘இழப்பதற்கு ஏமற்ற வர்க்கமாக’ மாற்றி அவர்களை வைத்து சங்கம் கட்டி, கட்சி கட்டி, புரட்சி செய்து….. முடியல. முடியல.

      சுசியே ஒரு அரைவேக்காடு – அதிலிருந்து பிய்த்துக் கொண்டு வந்ததுகள் கால்வேக்காடாகத் தான் இருக்கும் என்பதை நீங்கள் நிரூபிக்கிறீர்கள். அரசியலெல்லாம் நல்லாத் தான் சொல்லிக் கொடுத்திருக்கானுக.. ஆனா பேரை மட்டும் தப்பா சொல்லிட்டாய்ங்க – மார்க்சியமல்ல – வால்மார்டியம்.

      போங்க பீச்சாங்கரை பக்கமா ஒதுங்குங்க – சோசலிசம் அமைக்கத்தாவலை?

      • //பெட்டிக்கடைக்காரர், இட்லி சுட்டு விற்கும் ஆயா, சிறு மளிகைக்கடைக்காரர், ஆட்டோ ஓட்டுனர், பானிபூர் விற்கும் சிறுவன், ரோஸ் மிட்டாய் விற்கும் பீகாரி, பீச்சில் சுண்டல் விற்கும் சிறுவன் போன்ற “முதலாளிகளையும்” அவர்களின் “மூலதனத்தையும்” எதிர்த்து ஒழித்துக் கட்டிவிட்டு நீங்கள் நடத்தப் போகும் ‘புரட்சியைக்’ கண்டு வியக்காமல் இருக்க முடியல.//

        வால்மார்ட் வந்து இட்லி சுட்டி விற்க போகிறான்,சுண்டல் விற்க போகிறான்,பாணிபூரி விற்க போகிறான் என்கிற வகையான் உமது விவாதம் சின்னபுள்ள தனமா இருக்கு

        //வியப்பெல்லாம் மக்களுக்குத் தான். வால்மார்ட்டுக்கு சந்தோஷமாக இருக்கும்.

        மக்களே நல்லா பாத்துக்கங்க. நம்ம தியாகுவும் ரவுடி தான்.

        ஒரு பெட்டிக்கடைக்காரரின் ஐந்தாயிரம் முதலீட்டையும் அதை விட லட்சக்கணக்கான கோடி பிரம்மாண்டமான வால்மார்ட்டின் மூலதன பலத்தையும் ஒரே தராசில் வைத்து சமன்படுத்தும் மார்க்சியம் மார்க்சுக்கே தெரியாமல் போனது ஒரு சோகம் தான்.//

        அந்த வேலையை நீங்கதான் செய்றீங்க மக்களே பார்த்துகங்க இவரு ரவுடியே இல்லை பேஸ்மட்டம் வ்வீக்கு பில்டிங்க ஸ்டாராங்கு

        ரிலையன்ஸ்சுக்கும் வால்மார்ட்டுக்கும்தான் மோதல் நடக்கும்னு மக்கள்ட சொல்ல பயப்படும் இவர்கள்தான் அக்மார்க் கம்யூனிஸ்டு

        //உங்கள் கணக்குப் படி, ஏர்கலப்பை சொந்தமாக வைத்து (மூலதனம்!?) அரை ஏக்கரில் (மூலதனம்!?) விவசாயம் பார்க்கும் விவசாயியும் லட்சக்கணக்கான ஏக்கரில் விவசாயம் பார்க்கும் அம்பானியும் ஒன்று தான். இருவரும் முதலாளிகள் இரண்டும் ஒரே சமமான மூலதனம்.

        நீங்கள் இப்படி எதிர்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைவதைப் பார்த்தால் கடைசியில் ஒருத்தரும் மிஞ்சமாட்டார்கள். நீங்கள் தனியே பீச்சாங்கரைப் பக்கமாக ஒதுங்கி உங்களைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுக் கொண்டு அதை ஒரு சோசலிச நாடாக பிரகடணம் செய்து கொள்ள வேண்டியது தான். புரட்சி வென்று விடும்.//

        நீங்க போய் முதலில் மார்க்சியத்தில் அ ஆவன்னாவை படிங்க எனக்கு மூலதனம் வகுப்பெடுக்கும் முன்

        //ரிலையன்ஸில் வேலை செய்யும் இழப்பதற்கு ஏதுமற்ற வர்க்கத்தை பற்றி சிந்தித்துக்கூட//

        நீங்கள் சிந்தித்த வெங்காயம் தான் ஊரே நாறுகிறதே. இருக்கும் பெட்டிக்கடைக்காரனையெல்லாம் ஒழித்து விட்டு ரிலையன்சுக்கும் வால்மார்ட்டுக்கும் அனுப்பி ‘இழப்பதற்கு ஏமற்ற வர்க்கமாக’ மாற்றி அவர்களை வைத்து சங்கம் கட்டி, கட்சி கட்டி, புரட்சி செய்து….. முடியல. முடியல.

        சுசியே ஒரு அரைவேக்காடு – அதிலிருந்து பிய்த்துக் கொண்டு வந்ததுகள் கால்வேக்காடாகத் தான் இருக்கும் என்பதை நீங்கள் நிரூபிக்கிறீர்கள். அரசியலெல்லாம் நல்லாத் தான் சொல்லிக் கொடுத்திருக்கானுக.. ஆனா பேரை மட்டும் தப்பா சொல்லிட்டாய்ங்க – மார்க்சியமல்ல – வால்மார்டியம்.

        போங்க பீச்சாங்கரை பக்கமா ஒதுங்குங்க – சோசலிசம் அமைக்கத்தாவலை?
        //

        இருக்கிற பெட்டிகடை காரனெல்லாம் நேரே பொய் விவசாயிகிட்ட கொள்முதல் செய்வது போலவும் விவசாயி மாடி வீடு கட்டி இருப்பதும் போலவும் பாசாங்கு காட்டி கமிசன்மண்டி காரன் உட்பட கோடிகணக்காக சுருட்டி கொண்டிருக்கும் பெரு முதலைகளை காப்பாற்றுகிறீர்கள்

        • வால்மார்ட் வந்து இட்லி சுட்டி விற்க போகிறான்,சுண்டல் விற்க போகிறான்,பாணிபூரி விற்க போகிறான் என்கிற வகையான் உமது விவாதம் சின்னபுள்ள தனமா இருக்கு
          I live in Canada….Wall Mart selling hot fried Chicken wings legs and parts in their bakery section.Ready to eat.If WM in India defenitely they do all you listed.When you write comments try to contraint yourself not to write..சின்னபுள்ள தனமா இருக்கு

          • //I live in Canada….Wall Mart selling hot fried Chicken wings legs and parts in their bakery section.Ready to eat.If WM in India defenitely they do all you listed.When you write comments try to contraint yourself not to write..சி//

            கனடாவில் லெக் பீஸ் சாப்பிடும் தாங்களும் இந்தியாவின் குடிசை பகுதியில் இட்டிலி சாப்பிடும் நானும் என்னை போன்ற பெரும்பகுதி இந்திய மக்களும் ஒரே வாங்கும் சக்தி கொண்டவர்கள் அல்ல மிஸ்டர் வீரா .
            வால் மார்ட் வருகிறதென்றால் அது என்னை போன்ற வாங்கு சக்தி அற்ற பெரும்பான்மை மக்களை குறிவைத்து வரவில்லை வாங்கும் சக்தி கொண்ட இந்தியாவின் 20 சதவீதம் மக்களையே குறிவைக்கிறது

            • தியாகு…

              %%%%குடிசை பகுதியில் இட்டிலி சாப்பிடும் நானும் %%%%
              %%%%என்னை போன்ற வாங்கு சக்தி அற்ற பெரும்பான்மை மக்களை %%%%

              ஏன்க இப்படி புழுகுறீங்க? நீங்க ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளர் ஆக கணிசமான சம்பளத்தை வாங்கி, குழுந்தையை கான்வென்டுக்கு அனுப்புவதே சரியானது என்று வாதிடும், அண்ணா ஹசாரேவை ஆதரிக்கும் நடதுத்தர வர்க்கத்தை ஆதரிக்கும் பக்காவான நடுத்தர வர்க்க ஆசாமி.. பாட்டாளிகளுக்கான அரசியல் பேசுவது வேறு, நடுத்தர வர்க்கத்தின் நலனை தூக்கிப்படித்துக்கொண்டே நானும் ஒரு பாட்டாளி என்று நாடகமாடுவது வேறு. நீங்க இப்ப அதான செய்யறீங்க..

              %%%%%வால்மார்ட் வாங்கும் சக்தி கொண்ட இந்தியாவின் 20 சதவீதம் மக்களையே குறிவைக்கிறது%%%%

              இது நீங்களே மல்லாக்க படுத்து யோசிச்சிருந்தாலும் சரி அல்லது இயக்கத்து காரங்க்கிட்டேருந்து கடன் வாங்கியதான இருந்தாலும் சரி சுத்த அபத்தம். அப்படி மேட்டுகுடியை டார்கெட் செய்யும் நிறுவனம் ஏனய்யா எங்களை விட குறைந்த விலை வேறுங்கும் இல்லைங்கரதயே தனது கம்பெனியின் தாரக மந்திரமாக வைத்திருக்கிறான். வால் மார்ட்டின் இலக்கே நடுத்தரவர்க்கமும் அதன் கீழ் இருப்பவர்களும்தான்.

              இணையத்தை அக்கப்போர்களுக்காக மட்டும் பயன்படுத்தாமல் கொஞ்சம் ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்தவும். இணையத்தில் வால்மார்ட் பற்றி தேடிப்பார்க்கவும். குறைந்த பட்சம் கட்டுரையையாவது படித்துவிட்டு எழுதுவது நலம், இல்லேன்னா இப்படித்தான் தியாகுத்தனமா (ஓஹ் நீங்கதானே அது) எழுதவரும்.

              பின் குறிப்பு – அண்ணாச்சிகளெல்லாம் அதிக மார்ஜின் வைத்து மக்களை சுரண்டுகிறார்கள், வால்மார்ட் வந்தால் அம்மக்கள் அந்த சுரண்டலில் இருந்து விடுபட முடியும்னு ஒரு மானஸ்தர் எழுதியிருந்தார் அவரைத்தான் தேடிக்கிட்டிருக்கேன்….

              • //ஏன்க இப்படி புழுகுறீங்க? நீங்க ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளர் ஆக கணிசமான சம்பளத்தை வாங்கி, குழுந்தையை கான்வென்டுக்கு அனுப்புவதே சரியானது என்று வாதிடும், அண்ணா ஹசாரேவை ஆதரிக்கும் நடதுத்தர வர்க்கத்தை ஆதரிக்கும் பக்காவான நடுத்தர வர்க்க ஆசாமி.. பாட்டாளிகளுக்கான அரசியல் பேசுவது வேறு, நடுத்தர வர்க்கத்தின் நலனை தூக்கிப்படித்துக்கொண்டே நானும் ஒரு பாட்டாளி என்று நாடகமாடுவது வேறு. நீங்க இப்ப அதான செய்யறீங்க../

                ஊசி உங்களில் எத்தனை பேர் சொந்தமா கம்பெனி நடத்திட்டே பாட்டாளிவர்க்க அரசியல் பேசுகிறீர்கள் என்பது எனக்கும் தெரியும் எத்தனை பேர் முக்கால் லட்சம் சம்பளம் வாங்கிட்டு பாட்டாளி வர்க்க அரசியல் தப்புதவறாக பேசுகிறீர்கள் எத்தனை பேர் ஒரு போராட்டத்துக்கு கூட கலந்து கொண்டிராத பக்கா கீபோர்ட் புரட்சியாளர்கள் என்கிற லிஸ்டெல்லாம் பேச வரவில்லை

                பாட்டாளிவர்க்க அரசியல் என்பது இப்படி ரிலையன்ஸ்க்கும் வால்மார்ட்டுக்கும் நடக்கும் சண்டையை நேரா ரிலையன்ஸுக்கும் சதாரண இட்லி வியாபாரிக்கும் நடக்கும் சண்டையாக திரிச்சு யாரை காப்பாத்த போராடுகிறீர்கள் சாமி

                //அண்ணாச்சிகளெல்லாம் அதிக மார்ஜின் வைத்து மக்களை சுரண்டுகிறார்கள், வால்மார்ட் வந்தால் அம்மக்கள் அந்த சுரண்டலில் இருந்து விடுபட முடியும்னு ஒரு மானஸ்தர் எழுதியிருந்தார் அவரைத்தான் தேடிக்கிட்டிருக்கேன்//

                அண்ணாச்சி எல்லாம் அதிக மார்ஜின் வச்சு சுரண்டவில்லை என்றால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக அண்ணாச்சிகளை போல இருந்திருப்பார்கள் என்கிற அடிப்படை பார்வை கூட இல்லையே உங்க கிட்ட

                • தியாகு நான் கூடத்தான் உங்களவுக்கு சம்பளம் வாங்குறேன், பாட்டாளி வர்க்கத்தோட நலனை பிரதிபலிக்கும் அரசியலை பேசறேன்..அப்படிப்பட்ட ஒரு அமைப்பில் இணைஞ்சு வேலை செய்யறேன்…

                  ஆனா நடுத்தரவர்க்க வாழ்க்கை வாழும், அவர்களுக்கான அரசியலை தூக்கிப்பிடிக்கும் நீங்க எத்தனான் தேதியிலிருந்து வாங்கும் சக்தியற்றவராகிப்போனீங்க? ஏன் அப்படி பொய் பேசுனீங்க

                  %%%%%%%%%%%%%

                  அண்ணாச்சி விவசாயப்பொருள் மட்டுமா விக்குறாரு… வர சரக்குல பெரும்பான்மை கம்பெனி தயாரிப்பு என்பது உங்கள் மண்டைக்கு ஏறவே ஏறாதா இல்ல வாழ்க்கையில மளிகை கடை பக்கம் போனதே இல்லயா

                  • நடுத்தர வர்க்க அரசியலை நான் தூக்கி பிடிக்கவில்லை ஆனால் அதை உங்களை போன்று பேசும் வினவு நபர்களே தூக்கி பிடிக்கிறார்கள் ஆதாரம் வேண்டும்னா பாருங்க முந்திய கட்டுரையில் இங்கே அண்ணாச்சி கடைகளில் சுரண்டல் இருக்கிறது ஆனால் அந்த சுரண்டலுக்கு உள்ளாகும் தொழிலாளிக்கு ஒரு முதலாளியாகும் வாய்ப்பு இருக்கிறது என சொல்லி இருக்கிறார்

                    இதானே நடுத்தர வர்க்க சிந்தனை இதற்கு என்ன பதில் மிஸ்டர் ஊசி

                    %%%%%%%%%%%%%

                    அண்ணாச்சி விவசாயப்பொருள் மட்டுமா விக்குறாரு… வர சரக்குல பெரும்பான்மை கம்பெனி தயாரிப்பு என்பது உங்கள் மண்டைக்கு ஏறவே ஏறாதா இல்ல வாழ்க்கையில மளிகை கடை பக்கம் போனதே இல்லயா//

                    • அட அட அட இப்படி ஒரு தியாகுத்தனாமான கண்டுபிடிப்பை நிகழ்த்தி மேலே நீங்க எழுதிய தர்கத்தின் பிரதிபலனாய் உங்களின் அண்டாடாயர் உருவப்பட்ட பின்னூட்டமும் கூடத்தான் இருக்கு… பாக்கனுமா இதோ சுட்டி

                      https://www.vinavu.com/2011/12/09/wal-mart-2/#comment-53384

                      %%%இதானே நடுத்தர வர்க்க சிந்தனை இதற்கு என்ன பதில் மிஸ்டர் ஊசி%%%

                      எது அண்ணாச்சி கடையில் வேலை பார்க்கும் ஒருவனோ, மெக்கானிக் கடையில் வேலை பார்க்கும் ஒருவனோ, லேத்துப்பட்டரையில் வேலை பார்க்கும் ஒருவனோ வெளியே வந்து சுயமாக தொழில் துவங்கும் இந்த சமூக யதார்தம் நடுத்தர வர்க்க சிந்தனைன்னே ஒரு பேச்சுக்கு வச்சுகுவோம் அப்ப வால்மார்ட் வந்தா அண்ணாச்சி ஒழியுவான், அது நல்லதுன்னு நீங்க எழுதறது பாசிச சிந்தனைதானே.. ஆனா நாங்க அப்படி சொல்லல, உங்களை லூசுன்னு சொல்றோம், தியாகுன்னு சொல்றோம்

                      பேசுற பாயின்டுக்கு பதில் சொல்லம இப்படி சுத்திவளைச்சு ஜல்லியடிச்சிகிட்டிருந்தா அப்பால நீங்க எழுதனது சுத்தமான தியாகுத்தனம் என்பதை நீங்களே ஒத்துகிட்டமாதிரி ஆகிடும்..இப்பவே சொல்லிட்டேன்

              • //குறைந்த விலை வேறுங்கும் இல்லைங்கரதயே தனது கம்பெனியின் தாரக மந்திரமாக வைத்திருக்கிறான். வால் மார்ட்டின் இலக்கே நடுத்தரவர்க்கமும் அதன் கீழ் இருப்பவர்களும்தான்.//

                இதற்கு பதில் இதுதான்

                //Wal-Mart has serious competition from Reliance Group, Piramals, Pantaloon brigade of Central Megamarts, Big Bazaar, Tru-Mart etc. It has to survive in a already buzzing and extremly dynamic market, create its own TRUST factor and be able to focus on India’s rising middle-level population with huge disposable incomes.

                Sincerely,

                Shrinath Navghane

                Founder & CEO, SDN Financial – Investment Banking, Equity, JV Debt & Commercial Funding, Real Estate.Edit
                //

                • ஓஹ் இதுதான் பதிலா.. அப்ப வால்மார்ட் வாங்கும் சக்தி படைத்த மேட்டுக்குடிக்கு பினாத்துனது சுத்தமான உளரல்னு ஒத்துகிட்டீங்களாக்கும்..

                  அது கிடக்கட்டும், அதியமானை விஞ்சும் அளவுக்கும் ஒரு பங்குச்சந்தை சூதாடியின் கருத்தை கொண்டு வைத்து வாதாடுகிறீர்களே, இதுக்கு பேசாம வால்மார்ட் போர்ட் ஆப் டைரக்டர்ஸ் கருத்தையே எழுதியிருக்கலாமே.

                  பரவால்ல இயக்கத்து காரவுக ந்ல்லா மார்க்சியம் சொல்லிக்கொடுத்திருக்காங்க..விரைவில் பாட்டாளித் தோழர் சாம் வால்டன்னு ஒரு பதிவு எழுதுவீங்க போலயே 🙂

                  • //அது கிடக்கட்டும், அதியமானை விஞ்சும் அளவுக்கும் ஒரு பங்குச்சந்தை சூதாடியின் கருத்தை கொண்டு வைத்து வாதாடுகிறீர்களே, இதுக்கு பேசாம வால்மார்ட் போர்ட் ஆப் டைரக்டர்ஸ் கருத்தையே எழுதியிருக்கலாமே.
                    //

                    வால்மார்ட் ரிலையன்ஸுக்கு போட்டி இல்லைன்னு எதாவது ஆதாரம் இருந்தா நிறுவுங்க அப்படி ஏதும் ஆதாரம் இல்லாட்டி பேசாம போய் அதியமான் பக்கதில ஜெய் போட்டு உக்கார்ந்துகங்க கொஞ்சம் கொஞ்சமா நீங்க அதியமானைத்தான் ஆதரிக்கிறீங்க

                    ஏன்னா முதலாளிகளை உருவாக்கும் அண்ணாச்சி கடைன்னு சொன்ன பிற்பாடு அம்பல படுவதற்கு ஏதுமில்லை

                    • ரிலையன்சு வால்மார்டுக்கு போட்டியா இருந்தா என்ன இல்லேன்னா என்ன அதுக்கும் ஒரு பங்குச் சந்தை சூதாடியின் கருத்தை நீங்க வழிமொழிவதர்கும் என்ன தொடர்பு?

                      கொக்கோ கோலோவுக்கு கூடத்தான் தம்ஸ் அப்- லிம்கா வெல்லாம் போட்டியா இருந்திச்சு, அப்புறம் அந்த கம்பெனியை அவனே வாங்கிட்டான்.. உங்களுக்கு லிம்கா கம்பெனி காரன் பத்துன கவலை, எங்களுக்கு கோக்-பெப்சியினால அழிந்து போன உள்ளூர் குளிர்பான நிறுவனங்களை பற்றிய அக்கறை.

                      மற்றபடி வால்மார்ட் எப்படி ”தொழில்” செய்கிறது என்பதை இணையத்தில் தேடிப்பார்த்து தெரிந்து கொள்ளவும், அல்லது கட்டுரையை முழுக்க வாசிக்கவும்..

                  • மேலும் இந்திய முதலாளிகளில் நேசசக்தி என அழைக்கும் நீங்க எந்தமாதிரி கம்பெனியெல்லாம் நேசசக்தி எதெல்லாம் எதிரி சக்தின்னு சொல்லிட்டீங்கன்னா விளங்கி கொள்ள ஏதுவாக இருக்கும்

                    ஏன்னா ருசி ஊறுகாய் காரன் வெளிநாட்டில் இடங்களை வளைத்து போடுவதும் இந்தியாவில் பல கம்பெனிகள் அந்நிய நாட்டில் சுரண்டுவதும் நடப்பதை பற்றிய தங்களின் மேலான கருத்து என்ன

                    • வால்மார்ட் அல்லது கேரி போர் எந்த கம்பெனியாக இருந்தாலும் இன்னொரு பெரிய நிறுவனத்துடன் மோதாமல் தனது சந்தையை கைபற்ற முடியாது அந்த உண்மைதான் இந்தியாவில் வால்மார்ட்டுக்கு போட்டியாக ரிலையன்ஸ் உள்பட

                      அமெரிக்காவில் வால்மார்ட்டுக்கு போட்டி :

                      கேமார்ட் ,டார்கெட் , கனெடியன் சூப்பர் ஸ்டோர் போன்றவையே சில சின்ன கடைகள் டாலர் ஸ்டொர்ஸ் எனப்படுபவை வால்மார்ட்டை வெற்றி கரமாக தோற்கடித்துள்ளன சுட்டி

                      //In North America, Wal-Mart’s primary competition includes department stores like Kmart, Target, ShopKo and Meijer, Canada’s Zellers, Hart the Real Canadian Superstore and Giant Tiger, and Mexico’s Comercial Mexicana and Soriana. Competitors of Wal-Mart’s Sam’s Club division are Costco, and the smaller BJ’s Wholesale Club chain operating mainly in the eastern US. Wal-Mart’s move into the grocery business in the late 1990s also set it against major supermarket chains in both the United States and Canada. Several smaller retailers, primarily dollar stores, such as Family Dollar and Dollar General, have been able to find a small niche market and compete successfully against Wal-Mart for home consumer sales.[100] In 2004, Wal-Mart responded by testing its own dollar store concept, a subsection of some stores called “Pennies-n-Cents.”[101]//

                      ஜெர்மனியில் வால்மார்ட் தனது வாலை சுருட்டி கொண்டுள்ளது

                      //Wal-Mart also had to face fierce competition in some foreign markets. For example, in Germany it had captured just 2% of German food market following its entry into the market in 1997 and remained “a secondary player” behind Aldi with a 19% share.[102] In July 2006, Wal-Mart announced its withdrawal from Germany. Its stores were sold to German company Metro.[80] Wal-Mart continues to do well in the UK, and its Asda subsidiary is the second largest chain after Tesco.[103]//

                      ஆக வால்மார்ட் வந்தால் இட்லி கடைக்காரன் அழிந்துவிடுவான் ர்லையன்ஸ்சுக்கும் வால்மார்ட்டுக்கும் சம்பந்தமில்லை போட்டி இல்லை என்ற பொய்யை வாபஸ் வாங்கவும்

                    • அண்ணாச்சி என்றாலே அது சரவணா ஸ்டோர்ஸ் என்று உளருவதை,
                      பெட்டிகடை முதலாளியும் ரிலையன்சு முதலாளியும் ஒன்று என்று உளருவதை..
                      குண்டூசி தயாரிச்சாலும் தொழிலதிபர் – டொகோமோ கம்பெனி ஓனரும் தொழிலதிபர் என்று உளருவதை…

                      நீங்கள் நிறுத்திக்கொண்டு ‘சிந்தித்தால்’ இதற்கான விடையை நீங்களே தெரிந்து கொள்ளலாம்

                    • சரியான விவரம் தியாகு, இப்போதாவது உழைத்து கண்டுபிடித்திருக்கிறீர்களே, பாராட்டுக்கள், ஆனால் சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொண்டீர்கள்.

                      உங்கள் விவரத்திலிருந்தே தெரிவது

                      மொத்தம் 5 கம்பெனிகள்தான் அமெரிக்காவில் கோலோச்சுகின்றன
                      வால்மார்ட் அமெரிக்காவில் மளிகைகடை-பெட்டிகடை கூட வைத்து நடத்துகிறது
                      வால்மார்ட்டை விட விலை குறைக்க முடியாமல் பலர் கடைகளை மூடினர், சிலர் டாலர் ஸ்டோர் என (எதை யெடுத்தாலும் ஒரு டாலர் போல) பெட்டிகடை வைத்தனர், வால்மார்ட் அதிலும் நுழைந்தது

                      ஜெர்மனியில் ஏற்கனவோ உள்ளூர் மளிகை கடைகளை அழித்து சில்லறை விற்பனையில் ஏகபோகம் அனுபவிக்கும் கம்பெனியை வால்மார்ட்டால் வீழ்த்த முடியவில்லை

                      லண்டனில் வால்மார்ட்டின் பினாமி கம்பெனி நம்பர் டூவாக இருக்கிறது
                      ————————–

                      சரி…..

                      இப்படி சில கோடி குடும்பங்கள் உழைத்துப் பிழைக்கும் இந்திய சில்லறை விற்பனை சந்தையை விரல் விட்டு எண்ணக்கூடிய சில பண்ணாட்டு கம்பெனிகளின் கையில் ஒப்படைக்க நீங்கள் மாமா வேலை பார்ப்பது ஏன் என்பதுதான் இங்கே கேள்வியே

                    • ஏம்பா ரெண்டு பெரும் இப்படி சண்டை போடுறிங்க ஒருவர் வால்மார்டை கொண்டு வருவதில் குறியாக இருக்கிறார். இன்னொருவர் அண்ணாச்சிக்கு லாபம் குறையக்கூடாது என்று போராடுகிறார். ரெண்டு பேருமே முதலாளிகள் தான் ஒன்னு பெருசு இன்னொன்னு சிறுசு. இதில் எவன் வாழ்ந்தா நமக்கு என்ன நமக்கு நல்ல பொருளை எவன் கொடுக்கிறானோ அவன் கடையில வாங்கி கொள்வோம். விடுங்க சார்

    • உனக்கு எத்தனை முறை டவுசரை கழட்டி ஒட விட்டாலும் எப்படி தியாகு இவ்வளவு தெகிரியம் வருது ?

      கழிவறையில் எழுதி வைக்க வேண்டிய உன்னுடைய லூசுத்தனமான உளறல்கள் எல்லாம் ஒரு கம்யூனிஸ்ட் புரட்சியை நடத்துவதற்கு உதவும் என்கிற அளவுக்கு உன்னைப்பற்றி நீ நினைத்துக்கொண்டிருக்கிறாய் என்றால் நீ எவ்வளவு பெரிய மறை கழண்ட பேர்வழியாக இருப்பாய்.

      பேசாம அங்கேயே எழுதி காலத்தை ஓட்ட வேண்டியது தானே இங்க வந்து எதுக்கு அடி படுற ?

      • அலோ மிஸ்டர் அம்பேத் ,

        போய் பெரியவங்க யாராவது இருந்தா கூட்டிட்டு வா இல்லா விட்டால் உன்னோட டவுசர் கழர போவத் உறுதி

  9. அழகற்ற அண்ணாச்சி கடை கூட அழகாக மாறிவிட்டது.
    வால் மார்ட் வரும்போது அழகாக வரும்.

    வேறு ஏதும் வித்தியாசம் இருக்காது.

    ரிலையன்ஸ் பிரஷ், ஆதித்ய பிர்லாவின் மோர், சந்திரபாபுவின் Heritage கடைகளின் தொழிலாளிக்கு சம்பளம் எவ்வளவு என்று கேட்டு வந்து விமர்சனம் எழுதுங்கள். அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தையும் அப்படியே எழுதுங்கள்.

    மற்ற கதையை பிறகு பேசுவோம்.

  10. ஆண்டு 1993.

    அன்று இடதுசாரிகள் சொன்னார்கள் – மெக்டொனால்ட்ஸும், பிட்ஸா ஹட்டும் வந்து ஆப்பக்கடை ஆயாவை விரட்டப்போகிறது என்று! அப்படி நடந்ததா என்ன?

    ஆண்டு 2005.

    டெல்லி ஜன்பத்தில் சரவண பவனும் மெக்டொனால்ட்ஸும் அடுத்தடுத்து இருந்தன. (இப்போதும் அப்படியா என்று தெரியவில்லை) மெக்டொனால்ட்ஸ் காற்றுவாங்கும். சரவண பவனிலோ காத்துக்கிடந்துதான் சீட் பிடிக்க முடியும்! இத்தனைக்கும் அப்பவே ஒரு தோசை ரூ.40 க்கு விற்றார்கள் – அநியாய விலை. அப்படி இருந்தும் கூட்டம் மொய்த்தது.

    அதுபோல, எஃப்.டி.ஐ. யை வரிந்துகட்டிக்கொண்டு ஆதரிக்கும் அனைவரும், நான் உட்பட லோக்கல் கடைகளில்தான் பெரும்பான்மையான பர்ச்சேஸ் செய்கிறோம், செய்வோம். அவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள். அரிசி வாங்கிவிட்டு, அதில் ஒருநாள் சமையலுக்கு எடுத்துவிட்டு, ‘அரிசி சரியில்லப்பா, எடுத்துக்கிட்டு மாத்திக்கொடு’ என்று சொல்ல்லாம்! எடைபோட்டு எடுத்துக்கொண்டு மாற்றித்தருவார்கள்! பணம் வசதிப்பட்டபோது தரலாம். டெலிவரி செய்யும் பையனின் கனவு தான் ஒருநாள் சொந்தமாக மளிகைக்கடை வைக்கவேண்டும் என்பது. (அப்பதான் அவர்கள் சாதியில் பெண் தருவார்களாம்!)

    அந்தப்பையன் ஒருநாள் கடைவைத்து வால்மார்ட்டைத் தடுமாற வைப்பான் என்பது உறுதி. வால்மார்ட்டால் கஸ்டமருடன் இத்தனை நெருங்கிவந்து பெர்சனலைஸ்டு சேவை தர முடியாது.

    அப்புறம் ஏன் நான் சூப்பர்மார்க்கட் (ரிலையன்ஸ்) செல்கிறேன்? அண்ணாச்சி கடையில் டீத்துள் வாங்கலாம், ஆனால் டீ பேக்ஸ் கிடைப்பதில்லை; மிக்ஸட் ஃபுரூட் ஜாம் கிடைக்கும், ஆரஞ்ச் மார்மலேடு கிடைப்பதில்லை; பிரட் கிடைக்கும், கார்ன் ஃபிளேக்ஸ் (சாக்கோஸ் தவிர) கிடைப்பதில்லை. இம்மாதிரி சில ஸ்பெஷலைஸ்டு பொருட்களுக்காக மட்டுமே ரிலையன்ஸ் ச்செல்கிறேன். வால்மார்ட் வந்தாலும் அப்படியே.

    நம் சில்லறை விற்பனையாளர்கள் அஞ்சத்தேவையில்லை. விவசாயிகளை உறிஞ்சிக் கொழுக்கும் இடைத்தரகர்களின் (கமிஷன் மண்டி ஏஜன்டுகள்) நாட்கள் எண்ணப்பட்டுவிட்டன. அவர்களை வால்மார்ட் விரட்டியடிக்கும்போது நம் விவசாயத்தோழர்களோடு சேர்ந்து கைதட்டி மகிழலாம்.

    • ஏம்ப்பா சரவணா…கட்டுரையை நல்லா படிச்சியா?? ஏன் கேட் கிறேன் என்றால், முதலில் வேற மாதிரி உளறியிருக்கே…எப்படி, இப்படி……”…உண்மையில் நிலப்புரபுத்துவ மதிப்பீடுகளைக் கொண்ட அண்ணாச்சி கடைகள் அழியுமென்றால் அதை உண்மையான கம்யூனிஸ்டு வரவேற்க வேண்டும்….”

      அப்புறம் எல்லோரும் சேர்ந்து தொங்கப்போடவும்…..அண்ணாச்சி கடைகளை விட்டு விட்டு இப்படி உளறியிருக்கிறாய்…..”…..நம் சில்லறை விற்பனையாளர்கள் அஞ்சத்தேவையில்லை. விவசாயிகளை உறிஞ்சிக் கொழுக்கும் இடைத்தரகர்களின் (கமிஷன் மண்டி