மகாராஷ்டிரா மாநிலம் மும்பய் நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான், அவரது நண்பர் ஜாவேத் ஷேக் என்ற பிரானேஷ் பிள்ளை மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று குஜராத் போலீசாலும், மைய உளவுத்துறையாலும் குற்றம் சாட்டப்படும் அம்ஜத் அலி, ஜிஷன் ஜோஹர் அப்துல் கனி ஆகிய நால்வரும் கடந்த ஜூன் 15, 2004 அன்று குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத் நகரின் புறநகர்ப் பகுதியில் துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர். “இந்நால்வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பினைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்லும் பயங்கரவாத நோக்கத்தோடு குஜராத்துக்கு வந்துகொண்டிருந்தபொழுது அகமதாபாத் நகரக் குற்றப்பிரிவு போலீசாரால் வழிமறிக்கப்பட்டனர். அப்பொழுது நடந்த மோதலில்தான் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக” குஜராத் மாநில அரசு அறிவித்தது. அச்சம்பவம் நடந்து ஏழாண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், அது ஒரு போலிமோதல் கொலைதான் என்பதனை குஜராத் உயர்நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு கடந்த நவம்பர் மாதம் அறிவித்திருக்கிறது.
இம்‘மோதல்’ கொலை சம்பவம் நடந்தவுடனேயே, அதன் உண்மைத் தன்மை குறித்து மனித உரிமை அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பினர். “தனது மகள் தீவிரவாதி கிடையாது; ஏழ்மையில் வாடியபோதிலும் படித்து ஆசிரியராக வேண்டும் எனக் கனவு கண்ட பெண்; குடும்பத்தின் வறுமை காரணமாகக் கல்லூரியில் படித்துக்கொண்டே வேலைக்கும் போய்க்கொண்டிருந்த அப்பாவிப் பெண்” என அன்றே கதறினார் இஷ்ரத் ஜஹானின் தாய் ஷமிமா.
செப். 2009இல் இவ்வழக்கை விசாரித்த அகமதாபாத் பெருநகரக் குற்றவியல் நீதிமன்றம், இறந்துபோன அந்நால்வரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் அறிக்கை ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு, “இதுவொரு போலிமோதல் கொலை; அந்நால்வரும் மோதல் நடந்ததாகச் சொல்லப்படும் நாளுக்கு முதல்நாளே மிகவும் அருகாமையிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்” என்று தீர்ப்பளித்தது. மோடி அரசோ அந்நீதிமன்றம் தனது வரம்பை மீறி நடந்துகொண்டுள்ளதாகக் கூறி, அந்நீதிமன்ற முடிவை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது.
இதனிடையே இஷ்ரத் ஜஹானின் தாய் ஷமிமாவும், இஷ்ரத் ஜஹானோடு சேர்த்துக் கொல்லப்பட்ட ஜாவேத் ஷேக் என்ற பிரானேஷ் பிள்ளையின் தந்தை கோபிநாத் பிள்ளையும் இப்படுகொலை குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று இது உண்மையான மோதல் கொலைதானா என்று ஆராய்வதற்காக, தனது கண்காணிப்பின் கீழ் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது, குஜராத் உயர் நீதிமன்றம்.
இச்சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்படுவதை ரத்து செய்யக் கோரி மோடி அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது; அதனை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. குஜராத் உயர் நீதிமன்றம் நியமித்த புலனாய்வுக் குழு இம்‘மோதல்’ கொலை தொடர்பாக 240 சாட்சிகளை விசாரித்தது. அந்நால்வரும் ‘மோதலில்’ கொல்லப்பட்ட விதம் குறித்து குஜராத் போலீசு கூறியிருந்தவற்றை மூன்று முறை அப்படியே நிகழ்த்திப் பார்த்து, இது போலி மோதல் கொலைதான் என ஒருமனதாக முடிவுக்கு வந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் இப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய 21 போலீசு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யவும், இப்படுகொலையின் மற்ற பின்னணிகள் குறித்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது, குஜராத் உயர் நீதிமன்றம்.
இஷ்ரத் ஜஹான் படுகொலை பற்றிய சிறப்புப் புலனாய்வுக் குழுவின் இந்த அறிக்கை, மோடி அரசை மட்டுமல்ல, மத்திய அரசையும் அம்பலப்படுத்தியிருக்கிறது. ஏனென்றால், “அந்நால்வரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள்; குஜராத்தில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த வருகிறார்கள்” என மோடி அரசுக்கு உளவுத் தகவல் கொடுத்தது ஐ.பி என்ற மைய அரசின் உளவுத்துறைதான். தற்போது இது போலி மோதல் கொலை என்று நிறுவப்பட்டுவிட்ட போதிலும், “நடந்ததது போலி மோதல் கொலையாக இருக்கலாம். ஆனால், கொல்லப்பட்டவர்கள் நால்வரும் தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்ற மத்திய உளவுத்துறையின் தகவலை உயர் நீதிமன்றம் மறுத்துவிடவில்லை” என்று கூறி மோடி அரசுக்கு முட்டுக் கொடுக்கிறார், மைய அரசின் முன்னாள் உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை. அது மட்டுமின்றி, “இஷ்ரத் ஜஹான் பல விடுதிகளில் வெவ்வேறு ஆண்களோடு சேர்ந்து தங்கியிருந்ததாக”க் கூறி அப்பெண், ‘நடத்தை கெட்டவள்’ என்று சித்தரிப்பதன் மூலம் உளவுத்துறையை நியாயப்படுத்த நரித்தனமாக முயன்றுள்ளார்.
இஷ்ரத் ஜஹானின் குடும்பம் இப்பொழுது தானே மாவட்டத்திலுள்ள மும்ப்ரா பகுதியில் குடியிருந்து வருகிறது. இஷ்ரத்தின் சகோதரன் அன்வரைத் தவிர, அவரின் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் பள்ளிப்படிப்பைக்கூட முடிக்க முடியாமல் இடையில் நின்றுவிட்டார்கள். அதற்கு அக்குடும்பத்தின் வறுமை மட்டும் காரணமில்லை. குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு முன்பாகவே, இஷ்ரத் முசுலீம் தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்டுவிட்டதால், அக்குடும்பம் சமூகத்துக்கு அஞ்சி ஒதுங்கி வாழும் நிலை ஏற்பட்டுவிட்டது. இஷ்ரத் சுட்டுக் கொல்லப்பட்ட பின் அவரது குடும்பம் கடந்த ஏழாண்டுகளில் ஐந்து முறை வீடு மாற வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியிருக்கிறது. “இத்தீர்ப்பு வரும் வரை நாங்கள் நரக வேதனையை அனுபவித்தோம்” என்கிறார், இஷ்ரத்தின் தாயார் ஷமிமா. வறுமையோடு அக்குடும்பம் போராடுவதைப் பார்த்தாலே, இஷ்ரத்தின் மீது அவதூறு செய்வதற்கு யாருக்கும் நா எழாது.
குஜராத்தில் நடக்கும் மோடியின் ஆட்சியை அலசிப் பாரத்தால்தான் இஷ்ரத் ஜஹான் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் பின்னணியையும், அதன் பரிமாணத்தையும் புரிந்துகொள்ள முடியும். குஜராத் இனப்படுகொலை நடந்துமுடிந்த அடுத்த ஆண்டு, மார்ச் 26, 2003 அன்று மோடிக்கு நெருக்கமானவராக இருந்தவரும், அவரது அரசில் வருவாய்த்துறை இணை அமைச்சராக இருந்தவருமான ஹரேன் பாண்டியா மர்மமான முறையில் நடுவீதியில் காருக்குள்ளே இறந்துகிடந்தார். ஹரேன் பாண்டியா முசுலீம் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகப் பீதி கிளப்பிய மோடி அரசு, இவ்வழக்கு விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்து நடுநிலை நாடகம் ஆடியது. இப்படுகொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 12 முசுலீம்களையும் கீழமை நீதிமன்றம் பொடா சட்டப்படி தண்டித்தது. எனினும், குஜராத் உயர் நீதிமன்றம், அந்த 12 பேர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை எனக் கூறித் தண்டனையை ரத்து செய்துவிட்டது.
ஹரேன் பாண்டியாவைக் கொன்றது யார் என்ற மர்மம் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்றாலும், மோடி கும்பலுக்கு நெருக்கமானவனும் இராசஸ்தானிலுள்ள கிரிமினல் கும்பலைச் சேர்ந்தவனுமான சோராபுதீனுக்கும் பாண்டியாவின் கொலைக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது. 2005 ஆம் ஆண்டில் இந்த சோராபுதீன் குஜராத்திற்குக் கடத்தி வரப்பட்டு, அம்மாநில போலீசாரால் போலி மோதலில் கொல்லப்பட்டான். சோராபுதீனோடு சேர்த்துக் கடத்தப்பட்ட அவரது மனைவி கவுசர் பீ விஷ ஊசி போட்டுக் கொல்லப்பட்டார். ஹரேன் பாண்டியா கொலையில் தொடர்புடையவனும்; சோராபுதீன், அவரது மனைவி கவுசர் பீ கொலைகளின் சாட்சியாகக் கருதப்படுபவனும் சோராபுதீனின் கூட்டாளியுமான துளசிராம் பிரஜாபதி 2006 ஆம் ஆண்டு குஜராத் மாநில எல்லையருகே போலி மோதலில் கொல்லப்பட்டான். சோராபுதீன் மற்றும் பிரஜாபதி கொலைகளைப் பற்றி அறிந்திருந்த மற்றொரு சாட்சி அஜம் கானைச் சுட்டுக் கொல்ல நடந்த முயற்சியில் அவன் நல்வாய்ப்பாகத் தப்பிவிட்டான். அதன் பின் அஜம் கான் உயிர் பயம் காரணமாக சோராபுதீன் கொலைவழக்கில் பிறழ்சாட்சியாக மாறினான். இந்தப் பின்னணியில்தான் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நால்வரின் படுகொலையையும், அவர்கள் தீவிரவாதிகளாகச் சித்திரிக்கப்படுவதையும் வைத்துப் பார்க்க வேண்டும்.
இஷ்ரத் ஜஹான் படுகொலையைப் போலவே, சோராபுதீன் கொலையும் போலி மோதல்தான் என்பது நிரூபணமாகி, அதில் தொடர்புடைய டி.ஐ.ஜி. டி.ஜி. வன்சாரா, உதவி ஆணையர் நரேந்திர அமின் உள்ளிட்ட போலீசு அதிகாரிகள் விசாரணைக் கைதிகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த போலீசு அதிகாரிகள் கும்பல்தான் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நால்வரையும் போலி மோதலில் கொன்றொழித்தது. சோராபுதீன் கொலையில் தொடர்புடைய, மோடி அரசில் அமைச்சராக இருந்த அமித் ஷா பிணையில் வெளியே வந்துவிட்டாலும், அவர் குஜராத்திற்குள் நுழையக் கூடாது என உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
ஹரேன் பாண்டியாவின் கொலையில் அரசியல் பின்னணி உள்ளது என்று அவரது தந்தையே குற்றம் சாட்டி வந்தார். ஹரேன் பாண்டியா, குஜராத் இனப்படுகொலை தொடர்பாக மக்கள் நீதிமன்றம் என்ற அமைப்பு நடத்திய விசாரணையில், அப்படுகொலையில் மோடிக்கு உள்ள பங்கு குறித்து சாட்சியம் அளித்ததுதான் பாண்டியாவின் கொலைக்கான அரசியல் பின்னணி. இது போலவே, குஜராத் இனப்படுகொலை வழக்குகளுள் ஒன்றான நரோடா பாட்டியா வழக்கின் முக்கிய சாட்சியான நதீம் அகமது சையதும் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குஜராத் இனப்படுகொலையில் மோடி மற்றும் அவரது அரசின் பங்கு குறித்து அம்பலப்படுத்த முன்வந்துள்ள போலீசு அதிகாரிகளான சஞ்சீவ் பட், ராகுல் சர்மா உள்ளிட்ட பலரை, சாமானியர்களைப் போலப் போட்டுத் தள்ள முடியாததால், அந்த அதிகாரிகளைத் தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்வது, பொய் வழக்குப் போடுவது என மிரட்டி வருகிறது, மோடி கும்பல்.
குஜராத்தை ஆண்டு வரும் மோடியின் தலைமையிலான கிரிமினல் கும்பல் எத்தனை கொடூரமானது என்பதை இந்த விவரங்களிலிருந்து யாரும் புரிந்து கொள்ளலாம்; அக்கிரிமினல் கும்பலின் தலைவனான நரேந்திர மோடியை அப்பழுக்கில்லாத உத்தமனாகவும், பிரதமர் பதவிக்குத் தகுதியுள்ளவனாகவும் முன்னிறுத்து கின்ற பத்திரிகைகள், தரகு முதலாளித்துவக் கும்பலின் யோக்கியதையையும் புரிந்து கொள்ளலாம்.
இஷ்ரத் ஜஹான் என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டுவிட்டாள். அவள் தீவிரவாதியா, இல்லையா என்று விசாரணை நடக்கிறது. மோடி என்ற இந்து மதவெறிக் கொலைகாரனைத் தண்டிப்பதற்குத் தேவைக்கும் அதிகமான ஆதாரங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. தண்டனைதான் தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது.
it is public knowledge in Mumbra near Mumbai,that all these 4 were genuine mujahideen operatives,as usual the pseudo secular mafia does random investigation and comes up with desired results.
It is the court after carefully examining more than 240 witnesses came up to the conclusion that Ishrat’s was a fake encounter and not the secularists. A person who has the love for the mankind and believes in justice will not have the gumption to call the democrats as pseudo secular mafia. I think you too might have involved in perpetrating the act of such violence against the weaker sections of the society or waiting for an opportunity to do it somewhere.
//it is public knowledge in Mumbra near Mumbai//
From when did this mujahideens start plotting operations publicly. Do you have any proof to support your point. Or is it just the same brahminical hindu fundamentalistic ‘diarrhea’?
அணுமின நிலையம் அமைத்து சுற்று புறங்களை அழிக்காமல் சூரிய ஒளி மின் சக்தியை ஊக்கிவிகும் மோடி கொலை காரர்தான்!என்ன இருந்தாலும் மத சார்பற்ற மாயாவதி அளவுக்கு ஆட்சியை யாரும் தந்துட முடியுமா என்ன?
கொலை செஞ்சிட்டு சூரிய ஒளியை மின்சக்தியாய் மாற்றினால் பிரச்சனையில்லை போலும் பிரவீன்ஜிக்கு. யாருக்கு தெரியும் கீதைல எங்கையாவது சொல்லி இருப்பாங்க போல.
கீதையா? போதையா? 🙂
kola pannittu savapeti thantha nallavanaa !!
nee enna saamiyara? pechu mattum buddhar maadhiri pesunga,seyyaradhellam mollamaarithanam.
அப்பாவி மக்கள் மீது தீவிரவாத முத்திரைகுத்தி கொன்றொழிக்கும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் யாவரும் இறைவனின் தண்டனையிலிருந்து தப்பவேமுடியாது,இது நிச்சயம்
u assume too much mr,sukhdev,dont go into a facade.I know how the Congress makes a living out of manipulating public institutions.If u r too naive to see through it,i am not worried.
@Ashraf
The people who ll be guilty under this judgement of yours ll be mostly not hindus.
மோடி தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.
6 cm பொந்துகுள் 52 அடி நீள பாம்பு இருந்துச்சாம் இதறுகு விடை தெரியுமா ? கண்ணுமணி ரசிகர்களுக்கு ?
Appa athuu mudaiiiiiiii (egg)
இந்த சூனியகாரன் அயோக்கியன் நாட்டின் பிரதம் மந்திரயா வந்தால் அவ்வளவுதான் ஒற்றுமையாக இருக்கும் மக்களை பிரிதாழும் சூழ்ச்சி செய்து நாட்டை சுடுகாடா ஆக்கி விடுவான். மக்களே எவனை நீங்கள் ஆட்சியிலே அமர்த்தினாலும் இந்த மோடி படுவாவை மட்டும் கொண்டு வந்து விடாதீர்கள் அண்ணன் தம்பிகளாக பழகும் மக்களை பிரித்து அப்படி என்னத்த சாதிக்க போறான்னு தெறியல.
Modi ll be a great Prime Minister.Country’s bureaucracy will be more efficient,Common people regardless of differences can experience a better governance and infrastructure projects ll happen at a much greater pace and overall the country ll forge ahead.
ஹிட்லர் மாதிரி நெம்ப நல்லவரா ஆச்சி செய்வாரு.
Fact: Hitler மிக சிறந்த ஆட்சியாளர் தான். ஆட்சி பொறுப்பேற்று (சர்வாதிகாரி ஆன பின்) இரண்டே வருடத்தில் பஞ்சத்தின் பிடியில் இருந்த Germany ஐ மீட்டு நான்கு வருடத்தில் வல்லரசாக மாற்றினார்.
யூத எதிர்ப்பு இல்லாமல் அவரால் மக்களிடையே செல்வாக்கு பெற முடியாமல் போயிருக்கும், இந்திய நாடு அரசியல் வாதிகள் போல மேலேரியவுடன் கொடுத்த வாக்குறிதிகள் மறக்க அவரால் முடிந்து யூத அழிப்பை விட்டிருந்தால் இன்று சரித்திரத்தில் உச்சியில் இருந்திருப்பார்.
யூத எதிர்ப்பு எப்படி அவரை மேலேற்றியதோ அதுவே அவரின் அழிவுக்கும் காரணமானது.
PS: இது Hitler பற்றிய fact மட்டுமே. கட்டுரைக்கு சம்பந்தமில்லை.
”கொன்றால் பாவம் தின்றால் போச்சு” ன்னு சொல்லுறீங்களா!
//இது Hitler பற்றிய fact மட்டுமே. கட்டுரைக்கு சம்பந்தமில்லை.//
கட்டுரைக்கும் இதுக்கும் நிறைய சம்பந்தங்கள் இருக்கின்றன. அதைத் தான் நான் மேலே குறிப்பிட்டேன்.
Hitler wanted to be famous so he killed jews. He used them as a tool to come in Power.
மோடி வித்தை பற்றி வினவிலேயே பல கட்டுரைகள் வந்த்துவிட்டது சும்ப்ரமணியன்வாள்…. ஜலத்தை குடிங்கோ…ஜலத்தை குடிங்கோ…!!!
It seems you are the PA of Modi. With what proof you are saying he is best prime minister. Every year Gujarat GDP growth is lesser than Tamilnadu itself. Have you seen Gujarat? There are many states more developed than gujarat. One reason enough for him that he is not fit for PM is the 2002 riot.
திருவாள்ர் சு..மணியன் அவர்களே, மோடியால் குஜராத் கொலைக்களமாகி இருக்கிறது என்று சொன்னால், அந்த குற்றவாளியை பிரதமராக்கி இந்தியாவையே கொலைக்களமாக மாற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களே.நீங்களும் மோடியைப் போல நரமாமிசம் சாப்பிடுபவரா? கட்டுரைக்கு மட்டும் பதில் சொல்லுங்கள். தேவையில்லாததை பேசி கட்டுரையின் முக்கிய கருத்திலிருந்து தடம் மாற்றாதீர்கள்
//திருவாள்ர் சு..மணியன் அவர்களே//
என்ன இப்படி சுருக்கிட்டீங்க?
அந்த ‘சு’ வுக்குள் தான் மனிதகுலத்துக்கு எதிரான ஒரு தத்துவமே அடங்கி இருக்கு.
அந்த ‘சு’வுக்குள் தான் மனிதகுலத்தை உருவாக்கும் பொருளும் அட்ங்கி இருக்கிறது.
If you watch carefully, most of accused Muslims are convicted at the earliest; and the Hindu dominated judiciary deliberately delays to convict the Hindu accused.
Incidentally today one of my co-workers, a staunch Brahmin, was explaining how Gujarat is progressing under Modi s leadership. So everywhere the Hindus are same, whatever may be the issues.
ஒரு கொலை குற்றவாளி வேறு உயரிய குணத்துடன் இருந்தால் அந்த உயரிய குணத்தை அனைவரும் எடுத்துகொண்டு அதே சமயம் அவன் செய்த கொலைக்காக தண்டனையும் அனுபவிக்கட்டும் என்ற நிலைபாடு எனக்கு சரியாக படுகிறது.
மோடியின் தலைமையில் ஒரு மாநிலம் முன்னேறுகிறது என்பதை நாம் ஏன் மறுக்க வேண்டும். அவர் தீய செயல்கள் புரிந்திருக்கலாம்; அதற்காக அவருடைய சாதனைகளை ஏன் மறைக்க வேண்டும்?
அ,ஆ முதல் Mehbooba Mufti வரை தனிமையில் மோடியை புகழ்ந்து விட்டு செய்தி public domain ல் வெளிவந்த பிறகு அதை மறுப்பதும் ஏன் ரெட்டை வேடம் போட வேண்டும்? அதற்கு பதில், மோடியின் ஆட்சியை ரசிக்கிறேன் அதே சமயம் அவரின் குற்றங்களை எதிர்கிறேன் என்பதே சரி.
மோடியின் மேல் விசாரணை தொடரும் அதே வேலையில் அவருடைய Good practices இந்தியா முழுமைக்கும் பரப்ப வேண்டும் என்பதே சரியாக இருக்கும்.
//மோடியின் தலைமையில் ஒரு மாநிலம் முன்னேறுகிறது என்பதை நாம் ஏன் மறுக்க வேண்டும்.//
ஏனெனில் அதில் உண்மை இல்லை.
http://communalism.blogspot.com/2011/05/modis-gujarat-marketing-myth.html
“The beneficiaries seem to be a small and exclusive club. Employment generation has not kept up with that in other States. Teesta Setalvad, in an article entitled “Vibrant Gujarat summit – 2011 – Ridiculous show-off of Power”, has compared the investment and employment opportunities of Gujarat, Maharashtra and Tamil Nadu. She concludes that from 2006 to 2010, Maharashtra had Rs.4,20,546 crore in investment and employment opportunities worth Rs.8,63,395; and Tamil Nadu had investments worth Rs.1,63,280 crore and employment opportunities worth Rs.13,09,613, whereas Gujarat had investments worth Rs.5,35,873 crore and employment opportunities worth Rs.6,47,631.
Teesta Setalvad’s analysis says: “At the end of the year 2009-10 in Gujarat there were 8,32,000 educated unemployed people. Number of educated unemployed people was 9,64,000 in 2004, 9,00,000 in 2005, 8,30,000 in 2006, 7,78,000 in 2007, 8,25,000 in 2008 and in 2009 also it was 8,25,000. Now if in the year 2003, 2005, 2007 there has been capital investment as per [what the] Chief Minister says, then why there has not been any significant decrease in the number of these unemployed people?”
முதலாளிகளுக்கு தனது மாநில நிலத்தை அள்ளிக்கொடுப்பதற்கும் மக்களின் வரிப்பணத்தை தூக்கிக் கொடுப்பதற்கும் 2000 முஸ்லீகளின் உயிர்கள் குறிவைக்கப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் மக்களை பயபீதியில் ஆழ்த்தி தனது அயோக்கியத்தனங்களுக்கு எதிர்ப்பு வராமல் பார்த்துக்கொண்டான். குஜராத் மின்னுகிறது என்பதெல்லாம் மக்களின் வாழ்க்கைத் தரம் பற்றியதல்ல முதலாளிகளின் இலாப் உத்தரவாதம் பற்றியதுதான். இதனை டாடா, அம்பானி, மாருதி ஆலை முதலாளிகளின் குஜராத் பற்றிய அறிக்கைகளிலிருந்தே புரிந்துகொள்ளமுடியும்.
gujaratla agri growth rate is @10 % india is @ 2.5
Please tell what are the great great things he has done. Gujarat is now only hearing the word development.
Any place in India can become a Bloodfield.It has nothing to do with Modi/Anyone.Infact he has the most to lose by allowing/perpetrating such a riot thing.The reality is most of North India still has strong partition hangover and the hindus and muslims are highly divided.The only exception is Uttar Pradesh where many muslims were highly educated and they stayed back in India and they have good relationship with the hindus.
It is not so easy for Modi to have orchestrated this without real street action.He did turn a blind eye but he is not such an idiot to make the compartment also catch fire and also cause the riots.The compartment was indeed set on fire to fry the karsevaks.The reaction was multiple times but once u act first u cannot determine the reaction.
If the same thing happens in south india where there is no religious conflict,then u can be surprised and cry foul,but in north india it is a thin line of hatred and it can blow anytime.Thats the reality.
the topic is about Modi,so i did speak on topic.
That way what the Congress and Rajiv Gandhi did with the Sikhs is thousand times worse and that was truly brutal.
Here nobody supports CONGRESS. It does not mean that they support BJP/RSS.
இருபது கோடி முஸ்லிம்கள் வசிக்கும் இந்தியாவில், மோடியை கொலை செய்ய முயற்சித்தாக குற்றம் சுமத்தி, ஒரு 19 வயது பெண்ணை கொலை செய்ய வேண்டிய அவசியம் குஜராத் போலீசுக்கு என்பதை இந்த கட்டுரை தெளிவாக்கவில்லை. குற்றப் பின்னணி உள்ள நடுத்தர வயது (சோரபுத்தின் போல) முஸ்லிம் ஆண் ஒருவர் கூடவா குஜராத் போலீசுக்கு கிடைக்கவில்லை?
சி.பி.ஐ விசாரணையில் எதற்காக இந்த போலி என்கவுண்டர் நிகழ்த்தப்பட்டது என்ற உண்மை வெளிவரும் என்று நம்புவோம்.
//இருபது கோடி முஸ்லிம்கள் வசிக்கும் இந்தியாவில், மோடியை கொலை செய்ய முயற்சித்தாக குற்றம் சுமத்தி, ஒரு 19 வயது பெண்ணை கொலை செய்ய வேண்டிய அவசியம் குஜராத் போலீசுக்கு என்பதை இந்த கட்டுரை தெளிவாக்கவில்லை.// இத புரிஞ்சிக்க கொஞ்சம் பொதுஅறிவு இருந்தா போதும். ஒருத்தரை கொன்னு பலிகடா ஆக்குவது என்று முடிவெடுத்துவிட்டால் ஒருத்தரைத்தான் கொல்ல முடியும். 20 கோடி பேரையும் அல்ல.
ராமுக்கு என்ன கவலையென்றால் 20 கோடி பேரையும் என்கவுண்டர் செஞ்சிட்டு விசாரணை வைக்காம இப்போவே வைச்சிட்டாங்களே என்பதுதான். ஆம் ஐ கரெக்டு ராமு?
100% கரெக்ட் அகமது.
“ஒருத்தரை கொன்னு பலிகடா ஆக்குவது என்று முடிவெடுத்துவிட்டால்”……. அதுதான் ஏன் என்பது பொது அறிவில்லாத என் மர மண்டைக்கு புரிய மாட்டேன் என்கிறது. மும்ப்ராவில் அப்பாவியாக காலேஜ் போய்கொண்டிருந்த ஒரு 19 வயது பெண்ணை, அகமதாபாத்திற்கு கடத்திப்போய் Point Blank கா சுட்டுக் கொன்று, இரண்டு பாகிஸ்தான் Fidayeen தீவிரவாதிகளுடன் சேர்த்து போட வேண்டிய காரணம் என்ன?
ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்பற்காக மதம் மாறிய பிராணேஷ் பிள்ளை க்கும் இந்த இஷ்ராத் – பாகிஸ்தான் தீவிரவாதிளுக்கும் என்ன சம்மந்தம்?
இதயெல்லாம் பொது அறிவில்லாத மர மண்டையன் ராம் காமேஸ்வரன் கேட்கவில்லைங்க. இந்தியாவின் முதல் இஸ்லாமிய செய்திதாள் மில்லிகாஸெட் Milligazette தான் CBI இதயெல்லாம் விசாரிக்கணம்னு கேட்பது.
http://www.milligazette.com/news/3004-is-time-ripe-for-presidents-rule-in-gujarat
How did Pakistani fidayeen Amjad Ali Rana and Jishan Johar, who were killed in the encounter, come to join Ishrat Jahan and Javed Sheikh?
How did the fidayeen reach Gujarat? And when did they meet Javed and Ishrat? These are questions that beg answers.
If Javed and Ishrat were picked up near Vasad tollnaka by N K Amin and Tarun Barot, as per the report, then where were Amjad Ali and Jishan Johar at that time. And how and when did they join them?
சி.பி.ஐ விசாரணையில் எதற்காக இந்த போலி என்கவுண்டர் நிகழ்த்தப்பட்டது என்ற உண்மை வெளிவரும் என்று நம்புவோம்.
காஷ்மீரில் ஒரு எழுபது வயதான மூத்த தீவிரவாதியைக் கொன்று விட்டதாக ராணுவம் பிணத்தை போட்டோ பிடித்துக் காட்டியது. பின்னர் தான் தெரிந்தது அவர் ஒரு பிச்சைக்காரர் என்பது.
உங்கள் சந்தேகம் சரியானது. இதற்கு வினவிடம் பதில் இருக்கா?
மோடியின் அதே மொழியை திரு. சு..மணியும் கக்கியிருக்கிறார். வினையை செய்துவிட்டு, அதை எதிராளியின் மீது சுமத்தி, அவர்களுக்கு எதிராகவே எதிர்வினையையும் நிக்ழ்த்தும் நரமோடியின் சாமார்த்தியம் புத்திசாலித்தனம் என்று போற்றுகிறார். ரயில் பெட்டியை எரித்ததிலும் அவரின் நரித்தனத்தைப் பாருங்கள். எல்லோரும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள். அவரின் இனத்தைச் சார்ந்தவர்கள் யாரும் இல்லை.
படித்த முசுலீம்கள் உத்திரப்பிரதேசத்திலிருந்து போகாமல் அங்கேயே தங்கிவிட்டார்கள் என்று சொல்கிறார். அவர்கள் யாரும் வெளியிலிருந்து இந்தியாவிற்குள் வரவில்லை உங்களைப் போல்.
@Raja
Most people living in North India/Pakistan regardless of caste are in the land only for the last 1000 years and less.Infact they are the most recent immigrants to India and Modi is OBC boss,by the way.
Ennakodumai sir ithu?
இமிக்ரன்ட்ஷ் என்றால் பிற நாட்டில் இருந்து குடியேறியவர்களைத் தானே சொல்வது.நீங்கள் குறிப்பிடும் முசுலீம்கள் பிறந்த இந்த நாட்டை விட்டு வெளியேறாமல் இருப்பவர்கள். இன்னும் சொல்லப்போனால் நம் மூதாதையர்கள் செய்த கொடுமையால் மதம் மாறியவர்கள் என்று சொல்லலாம். இந்த 21 ஆம் நூற்றாண்டிலேயே தாழ்த்தப்பட்டவர்களை இந்த பாடுபடுத்தும் நீங்கள் அப்போது என்ன கொடுமை செய்திருப்பீர்கள்.
மன்னிக்கவும். ரயில் பெட்டியில் உங்களைப் போன்றவர்கள் என்று சொல்வதற்குப் பதில் அவரைப் போன்றவர்கள் என்று சொல்லிவிட்டேன்.
and i know for a fact that my family has been in tirunelveli for atleast 800 years.whos calling me an immigrant?Go call periyar,vaiko and those telugu naidus and naickers,they r the immigrants.
As far as TAMILAN is concerened you both are immigrants.
என்ன சு..மணி அவர்களே! ஆத்திரத்தில் நீங்களும் பால் தாக்கரே போல் ஆகிவிட்டீர்களே! இந்தியாவிற்குள் மாநிலம் விட்டு மாநிலம் மாறினாலூம் விரட்டி அடிக்க வேண்டும் என்று சொல்கிறீர்களே? அந்த பெரியார் போன்றவர்கள் மட்டும் இல்லையென்றால் இந்நேரம் நாங்கள் உங்கள் திருநெல்வேலி அக்ரகாரத் தெருவில் சுதந்திரமாக எங்களை நடமாடத்தான் விடுவீர்களா?
போலி மதசார்பின்மைவாதிகளின் வாதம் இது. குஜராத் இந்திவிலேயெ முதன்மை மாநிலமாக திகல்கிறது. உலகம் முழுவதும் இஸ்லாமிய பயஙகரவாதிகளால் என்னநடக்கிறது என்று இப் பத்திரிக்கைக்குத் தெரியவில்லை போலும். எங்கு பார்த்தாளும் பயங்கரவாதம். அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். குஜராத்தில் ரயிலில் உயிரோடு 100 க்கும் மேற்ப்பட்ட அப்பாவிகள் முஸ்லீம் பயங்கரவாதிகளால் எரித்துக்கொல்லப்பட்டபோது இவர்கள் என்ன செய்து கொன்டு இருந்தார்கள். முஸ்லீம்களால் பணம் கொடுத்துநடத்தப்படும் இதுபொன்ற பத்திக்கைகள் மக்களால்நிராகரிக்கப்பட வேண்டியவை. உண்மையை சொல்லி பத்திக்கைநடத்துங்கள்.
//குஜராத்தில் ரயிலில் உயிரோடு 100 க்கும் மேற்ப்பட்ட அப்பாவிகள்// கொன்னது முஸ்லீம்கள் என்பது நிரூபிக்கப்படவில்லை. மேலும் செத்தவர்கள் அப்பாவிகள் அல்ல. கரசேவைக்கு கடப்பாறையுடன் சென்ற காவி பயங்கரவாதிகள் அவர்கள்.
\\கொன்னது முஸ்லீம்கள் என்பது நிரூபிக்கப்படவில்லை\\
நிரூபிக்க முடியாது என்றுதானே இவ்வுளவு ஆட்டம்… இரட்டை கோபுர தாக்குதல் கூட உங்கள் மொழியில் நிரூபிக்கப்படவில்லை என்று தானே கூறுகிறீர்கள்… நிரூபிப்பது என்றால் என்ன ஜமாத்தார் முன்னாள் குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொண்டால்தான் அதை நம்புவோம் என்கிறீர்கள்… எப்படி நியாயம்? அது வரை தங்களை தாங்களே எரித்து கொண்டார்கள் என்று கூறலாமா ?
\\மேலும் செத்தவர்கள் அப்பாவிகள் அல்ல. கரசேவைக்கு கடப்பாறையுடன் சென்ற காவி பயங்கரவாதிகள் \\
மறுமொழி இலக்கம் 16 ல் அன்பர் ராஜா கூறியிருப்பது,
\\ரயில் பெட்டியை எரித்ததிலும் அவரின் நரித்தனத்தைப் பாருங்கள். எல்லோரும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள். அவரின் இனத்தைச் சார்ந்தவர்கள் யாரும் இல்லை.\\
தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் உங்களுக்கு பயங்கரவாதிகளா ? காபிர்கள் அனைவரும் பயங்கரவாதிகளா ?
காஃபிர்களை கண்டவிடமெல்லாம் வெட்டுங்கள், கொல்லுங்கள், கொள்ளையடியுங்கள் என்ற கட்டளை உங்கள் இரத்தத்தில் ஊறி உள்ளது விளங்குகிறது…
ரயிலில் கரசேவகர்கள் எரிக்கப்பட்டது முஸ்லீம்களால் அல்ல என்று நிறுபிக்கப்ப்ட்டது மனிதனுக்கு தெரியாதா.நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகள் அனைத்தும் யாரால் என்று யோசித்து பாருங்க நண்பரே
நாட்ராயன் அவர்களே. பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாக்கிய பத்திரிக்கை கூற்றினையே நீங்களும் கடைபிடிக்கிறீர்களே? உலகில் நடைபெறும் பயங்கரவாதத்திற்கு காரணம் அமெரிக்காவின் அண்டர்கிரவுண்ட் வேலை தான் என்பது மிகவும் படித்த நீங்களே மறைக்கலாமா? குஜராத் ரயில் எரிப்பும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முசுலீம் இன அழிப்பும் நரமோடி வகையராக்களின் திட்டமிட்ட சதி என்பது இப்போது புலப்பட்டுக்கொண்டிருப்பதும் உங்கள் அறிவிற்கு புலப்படவில்லையா?
எத்தனை முசுலீம் எதிர்ப்பு கட்டுரைகள் வினவில் வெளிவ்ந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாதா? பணம் கொடுத்து தங்களைத் தாங்களே யாராவது திட்டிக் கொள்வார்களா?
அப்படியானால் ரயிலில் வந்த இந்துக்கள் மட்டும் தஙகளைத் தானே தீ யிட்டுக் கொண்டார்களா? என்ன கொடுமை இது!!!!!!!
//அப்படியானால் ரயிலில் வந்த இந்துக்கள் மட்டும் தஙகளைத் தானே தீ யிட்டுக் கொண்டார்களா? என்ன கொடுமை இது!!!!!!!//
மோடி தனது நோக்கத்திற்காக இந்துக்களை காவு கொடுத்தான் என்பதுதான் உண்மை.
முஸ்லீம்களுக்கு வக்கலத்து வாங்கும் நீங்கள் இந்தியாவில்நடந்த பல பயங்கர வாதஙளை நினைவு கூறுங்கள். உங்கள் பத்திரக்கையின் பெயரை “இஸ்லாம் புது ஜனநாயகம்” என்று மாற்றிக்கொள்ளூங்கள்.
//நீங்கள் இந்தியாவில்நடந்த பல பயங்கர வாதஙளை நினைவு கூறுங்கள். உங்கள் பத்திரக்கையின் பெயரை “இஸ்லாம் புது ஜனநாயகம்” என்று மாற்றிக்கொள்ளூங்கள்.// இதுல பாதி குண்டுவெடிப்புகளை செய்துள்ளது ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள். இஸ்லாம் பயங்கரவாதிகளை, அடிப்படைவாதிகளை வினவு கண்டித்து எழுதியுள்ளது. நீங்கள் ஆர் எஸ் எஸை கண்டிப்பீர்களா? அவர்களை எதிரி என்று அறிவிப்பீர்களா? இல்லையெனில் உங்க பேரே ஆர் எஸ் எஸ் பயங்கரவாதி நாட்ராயன் என்று மாற்றிக் கொள்வீர்களா?
ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான்,இஸ்ரேல், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற பலநாடுகளில் குண்டு வெடித்து
அப்பாவி மக்கள் ஏராளமானபேர் கொல்லப்பட்டார்கலே. இதுவும் ஆர்.எஸ்.ஏஸ். வேலையா? ஒரளவாவது உண்மையை தெரிந்து கொண்டு எழுதுங்கள்.
RSS doesn’t endorse violence of any kind.
🙂 பூனைக் குட்டி வெளிய வந்துடுச்சு…
அது எப்பவோ வந்துருச்சு…
Today our nations Industires are being swollowed one by one by major overseas corporations. Big capital from private players are giants and they are coming for an UNEQUAL COMPETITION.
No affordable health care,no quality free education,no infrastructure facilities for the 80 % of the population.
RSS and other religious persons when faced with this sort of questions , in my experience wit my father (who supports BJP,RSS % Tuklak Cho & Co)will never answer the questions in a honest manner.
I am surprised by the fact that the RSS,BJP and other religios fundementalis (Muslim & christians also) all are escaping the question of country becoming a puppet of the US and Europe Imperialism. No patience,no honest,No Perseverance is the common thing i face when i argue with the religios fundementalist. they are not open for a dialouge . if they are really open minded ,i am sure they will be one day understand how our country has been sold out and how the entire so called swadeshi parties are arrogantly silent abt it.
regards
GV
@Paramesu
Public knowledge needs no proof.anyway i know thats the truth,u r free to not believe in it.makes no difference to anyone.
I know i am a kitten,u r a tiger cub.atleast i wont starve to death like a tiger would or hunted down by some alien species.
//Public knowledge needs no proof.anyway i know thats the truth,u r free to not believe in it.makes no difference to anyone.//
மிஸ்டர் பூனைக்குட்டி.
தெஹெல்காவில் ஆர். எஸ்.எஸ், பஜ்ரங்தள், வி.எச். பி. நாய்கள் தாங்கள் செய்த கொலை கற்பழிப்புகளை பெருமையோடு சொன்ன போது, நீங்கள் கண்ணை மூடிக் கொண்டு பால் குடித்துக் கொண்டிருந்தீரா?
அந்த நாய்களின் வாக்குமூலங்களைப் படிக்க:
டேஹெல்கா சுட்டி
http://www.tehelka.com/story_main35.asp?filename=Ne031107Conspirators.asp
ஒரு பொய்யை திரும்ப திரும்பச் சொல்லி உண்மையாக்க முயர்சிக்காதீர்கள்!!! கோயாபல்ஸ் தத்துவத்தை உண்மையாக்க முயற்சித்தால் அவனுக்குநேர்ந்த கதி தான் உங்களுக்கும் ஏற்ப்படும்!!!!