privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காசில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு! விவசாயிக்கு ஆதாயமா?

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு! விவசாயிக்கு ஆதாயமா?

-

சில்லறை-வணிகம்சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை ஆதரிப்பவர்களும், அமல்படுத்தும் அரசும் பல பொய்களை நம்பும் விதத்தில் திரும்பத் திரும்பப் பிரச்சாரம் செய்கின்றனர். இது குறித்து இன்றைய (24.9.2012) தீக்கதிரில் “சில்லரை விற்பனையில் அந்நிய முதலீடு மத்திய அரசின் கோயபல்ஸ் விளம்பரமும் – உண்மையும்” என்ற கட்டுரை வெளியாகியிருக்கிறது.

அதில் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டின் வருகை குறித்த அரசின் பிரச்சாரங்களுக்கான பதில்கள் விரிவாக தரப்பட்டிருக்கிறது. அதில் முதன்மையானது வால்மார்ட்டால் விவசாயிகளுக்கு நன்மை என்ற கருத்து. ஆனால் வால்மார்ட்டின் வருகை இந்தியாவில் இருக்கும் சிறு விவசாயிகளை ஒழித்து விட்டு பண்ணை விவசாயம் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தைத்தான் கொண்டு வரும். மேற்கத்திய நாடுகளில் இருக்கும் ஒரு விவசாயிக்கு சில பல ஆயிரம் ஏக்கர் நிலம் இருக்கும் போது இந்தியாவில் அது ஓரிரு ஏக்கராக இருக்கிறது. பண்ணை விவசாயம் வந்தால் பல கோடி சிறுவிவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் வேலை இழப்பார்கள்.

அடுத்து விவசாயிகளின் பொருளை கொள்முதல் செய்து குளிர்பதன கிட்டங்கியில் வைத்து விற்பார்கள் என்பெதல்லாம் ஏட்டுச்சுரக்காய் மட்டுமே. நடைமுறையில் சாத்தியமே இல்லை. மேலும் உள்ளூர் அளவில் நுகரப்படும் விலை குறைந்த சந்தையை வால்மார்ட் அழித்து விடும் என்பதும் முக்கியமானது. இதனால் நகர்ப்புறத்து விலைகளுக்கு இணையாக கிராமங்களிலும் விலைவாசி உயரும்.

வால்மார்ட்டின் வருகைக்குப் பிறகு பல நாடுகளில் சில்லறை வணிகத்தை நம்பி வாழும் மக்கள் தூக்கி எறியப்பட்ட கதை எத்தனை பேருக்குத் தெரியும்? ஆகவே சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்பது வேலையின்மையை அதிகரிக்கவே செய்யும். வணிகர்களை மட்டுமல்ல, சிறு, நடுத்தர தொழில்களையும் வால்மார்ட்டின் வருகை ஒழித்து விடும். சீனாவிலிருந்து மலிவு விலையில் பல்வேறு பொருட்கள் வால்மார்ட்டால் இறக்குமதி செய்யப்படும் போது இந்தியாவின் தொழில்கள் பல காணாமல் போகும். இந்த வேலையிழப்பு தனி.

இவை குறித்தும், இன்னும் பல உண்மகளை ஆதாரங்களோடு தீக்கதிர் கட்டுரை விரிவாக பேசுகிறது. படித்துப் பாருங்கள். அதே நேரம் போலிக் கம்யூனிஸ்டுகள் சீனாவை இன்னமும் ஒரு கம்யூனிச நாடாக கருதுவதால் இந்தக் கட்டுரை சீனாவில் வால்மார்ட்டின் வருகை பிரச்சினை எதையும் ஏற்படுத்தவில்லை என்று கூறுகிறது. அமெரிக்க வால்மார்ட்டின் விற்பனை என்பது சீனத் தயாரிப்பினால்தான் சாத்தியமாகிறது என்பதற்கேற்ப சீன மக்கள் சுரண்டப்படுகின்றனர்.

மேலும் அமெரிக்கா அதிகம் தின்றால்தான் சீனாவின் பொருளாதாரம் இழுத்துச் செல்லப்படும். சீனாவின் இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகமென்றாலும் அந்த பலனும் அமெரிக்க கடன்பத்திரங்களின் மேல்தான் முடக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா தின்பதைக் குறைத்தாலோ, இல்லை டாலரின் மதிப்பு குறைந்தாலோ சீனாவின் பொருளாதாரம் பிரச்சினைக்குள்ளாகும். இதை இந்தக்கட்டுரை கணக்கில் கொள்ளவில்லை. மற்றபடி இந்தக்கட்டுரை அரசின் பொய்ப்பிரச்சாரத்தை தர்க்க பூர்வமாக முறியடிக்கிறது.

படியுங்கள்: