செய்தி: அ.தி.மு.க., அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மனிதச்சங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாக செயற்குழு கூட்டம் முடிந்த பின்னர் தி.மு.க.,தலைவர் கருணாநிதி நிருபர்களிடம் தெரிவித்தார்.
நீதி: நில மோசடி வழக்குகளுக்காக உடன்பிறப்புகள் குடியிருக்கும் சிறையிலா போராட்டம்?
____________
செய்தி: “”நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரத்தில் இருந்து, மக்கள் கவனத்தை திசை திருப்பவே, காங்கிரஸ் கட்சி, என் மீது புகார்களை வாரி இறைத்துள்ளது,” என, மகாராஷ்டிர மாநில, “மாஜி’ துணை முதல்வர் அஜித் பவார் குற்றம் சாட்டியுள்ளார்.
நீதி: சரி, நீங்களும் திசை திருப்ப யார் மீதாவது புகார் கொடுங்கள். உங்கள் போட்டியில் உண்மைகள் வெளிவரட்டும்!
___________
செய்தி: விரைவில் மாற்றம் செய்யப்படவிருக்கும் ஆளும் காங்கிரஸ் அரசில் அமைச்சர் பதவி எங்களுக்கு வேண்டாம் என்று சொல்வதற்கென முடிவு எடுப்பது தொடர்பாக தி.மு.க, அவசர செயற்குழு இன்று காலையில் அறிவாலயத்தில் கூடியது.
நீதி: இல்லையேல் கோபாலபுரத்திற்கும், சிஐடி காலனிக்கும், மதுரைக்கும் வேளச்சேரிக்கும் உலகப்போரே மூண்டிருக்கும்! பிழைத்தார் கருணாநிதி!
___________
செய்தி: சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங். கட்சி டில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
நீதி: கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு இடம்பெயர்ந்திருக்கும் இந்த சலிப்பூட்டும் நாடகத்தை ஆர்ப்பாட்டம் என்று அழைப்பது நடிப்புக் கலையை இழிவுபடுத்துவதாகும்.
___________
செய்தி: சென்னை:தமிழக இளைஞர் காங்கிரஸ், மாநிலத் தலைவராக யுவராஜா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நீதி: தேர்வு செய்யப்படாதவர்கள் தி.நகரில் வேட்டிகளை வாங்கிக் கொண்டு சத்தியமூர்த்தி பவனுக்கு விரைந்துள்ளனர்.
__________
செய்தி: “கூடங்குளம் அணு உலையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, விரிவாக ஒரு அறிக்கை தயார் செய்து, அக்டோபர், 4ம் தேதி, சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கிறது,” என, மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
நீதி: பாதுகாப்பு ஏற்பாடுகளில் கருமாதிக்கான ஏற்பாடுகளும் அடக்கம்தானே?
___________
செய்தி: “மத்திய அரசுக்கு எதிராக, தேசிய ஜனநாயகக் கூட்டணிசார்பில், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் திட்டம் இல்லை,” என, ஐக்கிய ஜனதா தளம் தலைவர், சரத் யாதவ் கூறி உள்ளார்.
நீதி: சில்லறை வணிக அந்நிய முதலீட்டை எதிர்ப்பதில் எங்களுக்கே நம்பிக்கை இல்லை! நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஓட்டு இல்லை! எனவே நம்பிக்கையில்லா தீர்மானம் இல்லை. இல்லவே இல்லை.
___________
செய்தி: “அரசியல் களத்தில், மீண்டும் புத்துணர்ச்சியுடன் குதிக்க விரும்புகிறேன்’ என, 86 வயதான, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர், என்.டி.திவாரி கூறியுள்ளார்.
நீதி: ஒரே ஒரு நிபந்தனையுடன்: படுக்கை அறையில் கேமரா இருக்கக் கூடாது.
___________
செய்தி: “அரசியல் முழுவதும் அழுக்கு நிறைந்தது,” என, சமூக சேவகர், அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
நீதி: சாக்கடையில் இறங்கி தூர்வாரினால் வெள்ளைச் சட்டை அழுக்கடையும் என்பதால் கரையிலிருந்து சவுண்டு மட்டும் கொடுப்பேன்.
___________
செய்தி: “2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலம், நவம்பர் 12ம் தேதி துவங்குகிறது. இந்த ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்கள், குறைந்த பட்ச டேவணித் தொகையாக, 1,332 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதி: கமிஷனை கருப்பாக சுவிஸ் வங்கியில் செலுத்த வேண்டுமோ?
___________
செய்தி: நாட்டின் பெரிய, துணை ராணுவ படையான, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.,) பொது இயக்குனர் பதவியில் இருந்து, கே. விஜயகுமார் நேற்று ஓய்வு பெற்றார்.
நீதி: இதனால் தண்ட்காரன்யா பழங்குடி மக்கள் நிம்மதி அடைய முடியாது. ஒரு விஜயகுமார் போனால் இன்னொரு அஜய் குமார் வருவார்.
___________
செய்தி: :”நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும், அரசு நிறுவனமான, “ஏர் இந்தியா’வை, பாதியளவுக்கு தனியார் மயமாக்கினால், லாபப் பாதையில் திரும்பும்’ என, மத்திய கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சகத்தின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதி: ஏர் இந்தியாவை மட்டுமல்ல, ஏரையே (AIR-காற்று) தனியார் மயமாக்கினால் லாபம் பிய்த்து உதறுமே?
__________
செய்தி: காவிரி நதி நீர் பிரச்னையில், கர்நாடக அரசு கடைபிடிக்கும் போக்கு, டெல்டா பாசன விவசாயிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதால், தஞ்சை சுற்றுப்பயணத்தை, பிரதமர் மகள் உபீந்தர் சிங் திடீரென ரத்து செய்து விட்டு, டில்லிக்கு புறப்பட்டார்.
நீதி: இப்படி இந்திய மக்கள் கொதித்தெழுந்தால் மன்மோகன் சிங் அமெரிக்காவிற்கு புறப்படுவார்!
இந்தியாவிற்கான இறையாமை உள்ள செய்தியும்,மறுமொழியான நீதியும் யாருக்கும் அடங்காத அடிபிறலாத கடுத்தாக்கங்கள் மிக்க நன்றி./தொடருங்கள் தங்களது பணியினை என்றாவது ஒருநாள் நாம் அடைவோம்நமது நேரிய வழியை நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.///
எப்பொழுதும் வினவில் வரும் செய்திகள் எங்களைப்போன்ற தேசிய இறையாண்மையும், உண்மையான நாட்டு பற்று உள்ளவர் களுக்கும் நல்ல எழுச்சிமிகுந்த ஊட்ட சக்தியாக விளங்குகிறது.இதில் வெளிவருவது கதை கற்பனையல்ல.ஆனால் இக்கால கட்டத்தில் இந்தியாவை ஆள்பவர்கள்,அரசதிகாரிகள்,தலைமை பொறுப்பிலுள்ளவர்கள்,அரசியல்வாதிகள்,தொழிளதிபர்கள்,உளவுத்துறையினர்,நீதி நிவாகத்தில் உள்ளவர்கள்,காவலர்கள் கடமையினை சரிவரச்செய்தால் இவ்வளவு மோசமான கையூட்டு,ஊழல்,எதெற்கெடுத்தாலும் இடைத்தரகு பணப்படி இது நமது நாட்டை மோசமான நிலைக்கு[அழிவுக்கு] இட்டு செல்கிறது இது கண்கூடாகத்தெரிகின்றது. ஆனால் இதனை நிவர்தி [சரி] செய்வதாகச் சொல்லி நமக்குள் சாதி+மத+மொழி+இட பிரிவுகளால் அரசியல் செய்து சண்டை,கலவரம்,கொலை போன்ற சமூக கேட்டிற்க்கு நாடு நடந்து செல்கின்றது
///செய்தி: “அரசியல் முழுவதும் அழுக்கு நிறைந்தது,” என, சமூக சேவகர், அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
நீதி: சாக்கடையில் இறங்கி தூர்வாரினால் வெள்ளைச் சட்டை அழுக்கடையும் என்பதால் கரையிலிருந்து சவுண்டு மட்டும் கொடுப்பேன்.///
அதான் தனது சிஷியன் இறங்க போகிறார்.
நீதி: இதனால் தண்ட்காரன்யா பழங்குடி மக்கள் நிம்மதி அடைய முடியாது. ஒரு விஜயகுமார் போனால் இன்னொரு அஜய் குமார் வருவார்.
//பாதுகாப்பு ஏற்பாடுகளில் கருமாதிக்கான ஏற்பாடுகளும் அடக்கம் தானே//
மன்னிக்கணும் தோழர் போராடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் ஜெபக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருப்பார்கள்.
அங்கேயும் அவரை சேர்த்துக்க மாட்டார்கள்….நம்ம நாட்டு மக்கள் தான் போனா போகட்டும்னு வச்சிருகாங்க…அதை போல் வேறு எங்கேயும் சேர்த்துக்க மாட்டார்கள்…
நன்றி,
மலர்
கூடங்குளம் குறித்த விமர்சனம் பிற்போக்கானது; அறிவியலுக்கு எதிரானது; பொறுப்பற்றது.
மேலும் மானுடவியலுக்கு எதிரானதும் ஆகும். பாதுகாப்பில் குறைபாடுகள் இருப்பின், அவற்றைப் பற்றி
எழுதலாம்.அணுவுலையை விட அனந்த கோடி மடங்கு பெரிதான பெரு வெடிப்பை ஜெனீவாவில்
மானுடம் நிகழ்த்தி வுள்ளது. அங்கு யாருக்கும் கருமாதி நடந்து விடவில்லை.மனிதன் கடவுளை விடப்
பெரியவன்; ஆற்றல் மிகுந்தவன். தங்கள் விமர்சனம் மானுடத்தை மட்டம் தட்டுகிறது. எனவே பிற்போக்கானது.மானுட வீறு பாடுபவனே மார்க்சிய வாதி!