privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கவிஜயகாந்த் - தே.மு.தி.க: "எங்கே செல்லும் இந்தப் பாதை?"

விஜயகாந்த் – தே.மு.தி.க: “எங்கே செல்லும் இந்தப் பாதை?”

-

விஜயகாந்த்மிழகத்தில் காஸ்ட்லியான கனவு எது? கோட்டையில் கொடியேற்றும் கனவுதான் அது. சென்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க எதிர்ப்பு அலையில், பாசிச ஜெயாவின் கடைக்கண் பார்வையோடு கரையேறியவர் விஜயகாந்த். 29 சட்ட மன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றதோடு எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தும் அடுத்த தேர்தலில் மேற்படி கனவு நனவாகும் என்று கணிசமாக போதையேற்றிருக்கும்.

விஜயகாந்த் ஒரு ஆளாவதை அ.தி.மு.க, தி.மு.க இரண்டு கட்சிகளுமே விரும்பவில்லை. சென்ற தேர்தலில் நடிகர் வடிவேலு தி.மு.க மேடைகளில் “கேப்டனை” வறுத்தெடுத்ததை ‘அம்மாவும்’ ரசித்திருப்பார் என்பதே உண்மை. போயஸ் தோட்டத்திற்கு பிழைப்பைத் தேடி போன தலைவர்கள் எவரும் சுயமரியாதை என்ற ஒன்றை தலைமுழுகி விட்டுத்தான் பாயாசம் குடிக்க முடியும் என்பதற்கு அத்வானி முதல் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வரை பல்வேறு சான்றுகள் இருக்கின்றன. இதில் டாக்டரேட் முடித்தவர் தா.பாண்டியன். அதனால்தான் அவருக்கு மட்டும் அங்கே தனி கவனிப்பு.

ஆனால் ‘புரட்சித் தலைவி’யின் ஈகோவுக்கு சற்றும் குறைவில்லாமல் இயங்கும் ‘கேப்டனது’ ஈகோவும் ஒரு உறைக்குள் இரண்டு ஈகோ ஃபாக்டரி இயங்க முடியாது என்பது பட்டவர்த்தனமான உண்மை. இவ்வளவிற்கும் ஆரம்பத்தில் கேப்டன் அம்மாவுக்கு அனுசரணையாக தி.மு.கவை மட்டும் விளாசியவாறு அரசியல் செய்து வந்தார். என்னதான் ஈகோ மலை இருந்தாலும் கட்சியை தொடர்ந்து நடத்துவதற்கு சில பல எம் எல் ஏக்கள் வேண்டும் என்பதால் கூட்டணிக்கு சம்மதித்தார். ஒரு வேளை அவர் சம்மதிக்காமல் தனி ஆவர்த்தனம் செய்திருந்தால் இந்தக் கோமாளிக்கு அப்போதே மங்களம் பாடியிருக்கலாம். ஆனால் தி.மு.க, அ.தி.மு.கவில் ஆளாக முடியாத கொட்டை போட்ட பெருச்சாளிகள் கைக்காசை போட்டு செலவு செய்து தே.மு.க.தி.கவிற்கு வெளிச்சம் போட்டு நுழைந்தவர்கள் வியாபாரத்தில் ரிடர்ன்சை எதிர்பார்த்தனர்.

அந்த நிர்ப்பந்தம் கேப்டனை வழிக்கு கொண்டு வந்தது. இப்படித்தான் ஆரம்பத்தில் அவர் மனம் கோணாமல் அம்மாவிடம் தஞ்சம் அடைந்தார். எனினும் உள்ளே அவருக்கு எப்போதும் இருக்கும் ஈகோ ஃபயர் கொஞ்சம் தணிந்திருந்தது. ஆனால் அதை அம்மா எப்போதும் கண்டு கொள்ளவில்லை என்பதோடு அவ்வப்போது குட்டவும் செய்தார். தான் போட்ட பிச்சைதான் அந்த 29 எம்.எல்.ஏக்கள் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இந்த மனநிலைதான் உள்ளூராட்சித் தேர்தலில் கேப்டனை எச்சில் பருக்கை இல்லாமல் கூட விரட்டியடிக்க காரணமாக இருந்தது. அதில் தனியாக நின்ற கேப்டன் மண்ணைக் கவ்வினார் என்பதிலிருந்து தே.மு.தி.கவின் இத்துப் போன பலத்தை புரிந்து கொள்ளலாம்.

அதன் பிறகு தே.மு.தி.க சட்ட மன்ற உறுப்பினர்கள் பலர் அ.தி.மு.கவிற்கு தாவலாம் என்பதை ஊடகங்கள் எப்போதும் சொல்லி வந்தன. கேப்டனுக்கே இந்த பயம் இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. தற்போது நாளொன்றுக்கு இரண்டு எம்.எல்.ஏக்கள் வீதம் கோட்டையில் அம்மாவை சந்திந்து அருளாசி பெறுகிறார்கள். இந்தக் கணக்கில் போனால் இன்னும் இரண்டு வாரத்தில் கேப்டனது கட்சி எம்.எல்.ஏக்கள் கோட்டை கிரிவலத்தை முடித்திருப்பார்கள். அதிலும் மைக்கேல் ராயப்பன், அருண் பாண்டியன் போன்ற பெரும்புள்ளிகளே அம்மா சரணத்தில் புகலிடம் அடைந்திருப்பதில் கேப்டனுக்கு ராச்சோறு கூட இறங்கியிருக்காது. அதுதான் பத்திரிகையாளர்களிடம் அவர் சீறியதன் பின்னணி.

கோட்டையில் கொடியேற்றும் கனவு இருக்கட்டும், கொல்லைப்புறத்தில் கூட நிம்மதியாக கால் கழுவ முடியாத நிலைதான் கண்ணீரை வரவழைக்கிறது. இனி அடுத்த சுற்றுக்கு தி.மு.கதான் கதி என்றான பிறகு கேப்டன் தனது சரணம், பல்லவிகளை மாற்றிப் போட வேண்டும். கேட்டால் லியாகத் அலிகான் அய்யா சரணத்தை தீப்பிடிக்கும் தமிழில் எழுதித் தந்து விடுவார். திரும்பவும் முதலிலிருந்து ஆரம்பிப்பார் கேப்டன்.

தே.மு.தி.கவின் டங்குவார் இப்படி நொந்து நூடில்சாகும் அடிப்படை என்ன? தி.மு.க, அ.தி.மு.க எனும் இரண்டு பெருச்சாளிகளுக்கு மாற்று என்று பேசிவிட்டு அந்த பெருச்சாளிகள் கொண்டிருக்கும் அதே அடிப்படையில் பிறந்த மற்றொரு பெருச்சாளி இல்லையில்லை சுண்டெலிதான் தே.மு.தி.க. தனிநபர் துதி, குடும்ப ஆதிக்கம், ஊழல் பெருச்சாளிகளே தளபதிகளாய் கட்சியை ஆக்கிரமித்திருப்பது, மருந்துக்கு கூட ஜனநாயகமின்மை, சென்டிமெண்ட் அரசியல், பிழைப்பிற்க்காக நாய் நரியுடன் கூட கூட்டணி வைப்பது, மக்கள் பிரச்சினைகளுக்காக சூடாக பேசியே காலம் கடத்துவது…. இத்தகையதின் நீட்சிதான் கேப்டனது இந்த காமடி போர் தோல்விக்கு காரணங்கள்.

ஓட்டுப் பொறுக்கி கட்சிகளது நடைமுறை இதுதானென்பது நிதர்சனமாயிருப்பதால் புதிதாத் தோன்றும் ஒட்டுண்ணிகளால் மாற்றம் எதுவுமில்லை. சிவப்பு படங்களில் ஊழல் எதிர்ப்பு வசனங்களை நா புடைக்க பேசியவர் என்பதை வைத்து மட்டும் தமிழகத்தை ஆண்டு விடலாமென மனப்பால் குடிக்கிறார் என்றால் குடிப்பவரை விடுங்கள், அப்படி குடிக்கலாம் என்று ஒரு நிலைமையை தமிழக மக்கள் வைத்திருப்பதுதான் கேவலம்.

  1. னிஜத்தில் தான் எவ்வளவு பக்குவமில்லாத அரைவேக்காட்டு மனிதன் என்பதை இவர் அரசியலுக்கு வந்ததிலிருந்து ஒவ்வொரு விசயத்திலும் காட்டிக்கொண்டேதான் இருக்கிறார்..

  2. “கைக்காசை போட்டு செலவு செய்து தே.மு.க.தி.க விற்கு வெளிச்சம் போட்டு நுழைந்தவர்கள் வியாபாரத்தில் ரிடர்ன்சை எதிர்பார்த்தனர்”.

    ரிட்டர்ன்ஸ் இல்லை என்றால் ஓட்டுச்சீட்டுக்காரனுக்கு வேறு வழி ஏது?

    கேப்டன் என்றைக்கோ கேடட் ஆகிவிட்டார். அதனால் இதில் ஆச்சரியமோ அதிர்ச்சியோ ஏதும் இல்லை.

    “யுத்தத்தில் அம்மா வென்று, அல்லக்கைகள் அள்ள வாய்ப்பளித்தால் ‘ரிவோக்’ ஆகாமலா போகும். அம்மாவின் ஆணையின் கீழ் இப்போதைக்கு ‘கேடட்டாய்’ இருப்பதே மேல்”.

    கேப்டன் கேடட் ஆன கதை!
    http://hooraan.blogspot.com/2011/03/blog-post_06.html

  3. தேமுதிகவிற்கு விழுந்த பத்து சதவீத ஓட்டுகளும் விஜயகாந்திற்காகத்தான் விழுந்தன என்று கருதுகிறேன். எம்.எல்.ஏ. எலெக்சனில் நின்ற நண்டு சிண்டுகளுக்கல்ல.

    மற்றபடி, கூட்டணியோ தனித்தோ.. விஜயகாந்த் எப்போது எலெக்‌ஷனில் நின்னாலும் ஜெயிப்பார். காரணம், அரசியல்ல வேலை இல்லன்னா படம் நடிக்க வந்துடுவாரே.. இதுக்காகவாவது மக்கள் அவரை ஜெயிக்க வச்சிடுவாங்க. 🙂

  4. ஊடகங்கள் கேட்க்கும் கேள்விக்கு ஒரு சிறு கேள்விக்குகூட பதில் சொல்ல தெரியாமல், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அரசியல் தெரியாத அரசியல் கோமாளி.
    பெண்டாட்டி, மச்சான் என குடும்ப ஆதிக்கமும்
    தன் தெலுங்கு சாதியினர் ஆதிக்கும் செய்யும்
    இவன் கட்சியின் பெயர், முற்போக்கு திராவிட கழகமாம்.
    முற்போக்கு, பகுத்தறிவு, இறைமறுப்பு, தமிழ், தமிழர் வரலாறு என எதுவும் தெரியாத இந்த மங்குனி பெரியார், அண்ணாதுரை, காமாரசர் படத்தைவேற போட்டு கொண்டு அலைகிறான் அப்படியாவது பகுத்தறிவு என்ற அறிவு வருமா என்றால் அதுவும் இல்லை.
    இவன் பின்னாடி தமிழர்கள் வேற என்ன செய்ய

  5. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கட்சி ஆரம்பிப்பது சுலபம் – திராவிட என்ற வார்த்தை வேண்டும்; அவ்வளவுதான்…
    அதனுடன் ‘முன்னேற்றம்’, ‘தேசிய’, ‘அனைத்திந்திய’, ‘லட்சிய???’ போன்ற வார்த்தைகளைச்சேர்த்து மிக்ஸ் செய்தால் கட்சிப்பெயர் ரெடி!!!
    ‘புரட்சி’ அடைமொழி ஒன்றை தலைவருக்குத்தேர்ந்தெடுக்க வேண்டும்…
    கட்சிக்கென்று கொள்கை வேண்டும்…ஆனால் நம்மூருக்கு அது தேவை இல்லை…
    மேடையில் நடிக்கத்தெரிந்தால் போதும்…
    இவர்களின் ‘புரட்சி’ தொல்லை தாங்க முடியல சாமி…
    என்னத்த புரட்சி பன்னாங்களோ தெரியல…
    மக்கள் மூளையை ஆட்டு மூளை போல் மாற்றியுள்ளதைத்தான் திராவிட புரட்சிக்கட்சிகள் செய்துள்ளனவோ?

    இருக்கற புரட்சிகள் போராதென்று இவர் வேற கெளம்பிட்டார்…

  6. ஆணவ, அம்மா திமுக, மற்றும் தீயசக்தி திமுக, இரண்டு முதலாளிகளும் தங்களுக்கு மட்டும்தான் தமிழ்நாடு சொந்தம் என்று இருந்த நிலையில் விஜயகாந்த் ஏதாவது சாதிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தமிழ்நாட்டில் கருணாநிதி இருக்கும்வரை எந்தக்கொம்பனாலும் ஆரோக்கியமான அரசியல் செய்வது என்பது இலேசான காரியம் இல்லை என்பது விதி. விஜயகாந்தை நிறையப்பேர் விமர்சிக்கின்றனர்,, இந்த விமர்சனங்களே விஜயகாந்தை தடுமாற வைப்பதாகவும் எண்ணத்தோன்றுகிறது. இப்போ நடக்கும் ஜெயலலிதாவின் செயற்பாடுகள் அனைத்தையும் தீர்மானிப்பது மூத்த தீய சக்தி கருணாநிதிதான் என்பதை எவராவது ஒத்துக்கொள்ளுவார்காளா? ஆனல் உண்மை ஜெயலலிதாவின் நகர்வு அனைத்தையும், தீய சக்தி கருணாநிதிதான் சிஐடி நகரிலும் கோவாலபுரத்திலிருந்து தீர்மானிக்கிறார் என்ற பேருண்மை கூர்ந்து கவனித்தால் தெரியவரும். விமர்சனங்களிலும் தீய சக்திகளின் நீரோட்டத்திலும் கரையாமல் கரை சேருவாரா கப்ரன் என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.

Leave a Reply to ரிஷி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க