privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககோவில்பட்டி சிலை உடைப்பு: தேவர் சாதிவெறி ரவுடித்தனம்!

கோவில்பட்டி சிலை உடைப்பு: தேவர் சாதிவெறி ரவுடித்தனம்!

-

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் சங்கரலிங்கபுரம் பகுதியில் 23/03/2013 அன்று அதிகாலையில் அடையாளம் தெரியாத சிலரால் தேவர் சிலை உடைக்கப்பட்டிருக்கிறது. சுற்றிலும் இரும்பு கிராதி வைத்து பாதுகாக்கப்பட்டிருக்கும் அந்தச் சிலையை அவ்வளவு எளிதாக யாரும் உடைத்துவிட முடியாது. அதனால் இரும்பு கிராதியின் இடைவெளி வழியே கடப்பாரையை உள்ளே செலுத்தி சிலையின் மூக்கையும் கையையும் சேதப்படுத்தியிருக்கிறார்கள். இது காலை 6.30 மணிக்கு அந்தப் பகுதி வழியே சென்றவர்களால் கவனிக்கப்பட்டு காட்டுத்தீ போல் செய்தி பரவுகிறது. 8.30 மணிக்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்தப்பகுதியில் ஒன்று திரள்கின்றனர். மூக்கிலும் கையிலும் லேசாக சேதப்படுத்தப்பட்டிருப்பது போதாது என எண்ணினார்களோ என்னவோ இரும்பு கிராதிக் கூண்டு தூக்கி வீசப்படுகிறது. செங்கல் சிமெண்டால் செய்யப்பட்ட அந்தச் சிலை முற்றிலும் தகர்க்கப்படுகிறது. எட்டரை மணிக்கு முன்பு மூக்கும் கையும் மட்டுமே சேதப்படுத்தப்பட்டிருப்பதை நேரில் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். மட்டுமல்லாது சேதப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட கடப்பாறையும் இரும்புக்கூண்டுக்கு உள்ளேயே கிடந்திருக்கிறது. பிறகு அந்தக் கடப்பாறை குறித்து தகவல் இல்லை. யார் உடைத்தார்கள் என்பதற்கு முக்கியமான தடயமாக இருந்திருக்கக் கூடிய அந்தக் கடப்பாறை குறித்து காவல்துறையும் அக்கரை கொள்ளவில்லை.

கோவில்பட்டி
படம் : மாலைமலர்

ஓர் ஓடையால் கிழக்கு மேற்காக பிரிக்கப்பட்டிருக்கும் சங்கரலிங்கபுரம் பகுதியில் மேற்குப் பகுதியில் தேவர் சாதியினரும் கிழக்குப் பகுதியில் தாழ்த்தப்பட்ட (பள்ளர்) சாதியினரும் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களிடையே அவ்வப்போது சிறு சிறு உரசல்களும் தொடர்ச்சியாக இருந்து வந்திருக்கின்றன. ஜான் பாண்டியனின் கொடிக்கம்பை வெட்டிச் சரித்தது, திருவிழாக்களின் போது ஒலிபெருக்கியை சப்தமாக வைக்கக் கூடாது என்று தகராறு செய்வது, போவோர் வருவோரை இழிவாக பேசுவது, தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பொதுப்பாதையை அடைத்து நிகழ்ச்சிகள் நடத்துவது, கபாடிக் குழுவில் எதிரெதிர் குழுவினர் வென்றுவிடக் கூடாது என்பதற்காக குறுக்கு வழிகளைக் கையாள்வது என எப்போதும் தேவர் சாதியினரின் கைதான் இங்கு ஓங்கியிருக்கும். இந்த நிலையில் தான் சிலை சேதப்படுத்தப்பட்ட நிகழ்வு நடந்திருக்கிறது.

எட்டரை மணிக்கு திரண்ட கூட்டத்தினர் சிலை உடைக்கப்பட்டதற்கு எதிராக மூன்று கோரிக்கைகளை முன்வைத்து சாலை மறியல் செய்கிறார்கள்.

1. உடைக்கப்பட்ட சிலைக்கு மாற்றாக உடனே மாற்றுச் சிலை நிறுவப்பட வேண்டும்.
2. இடித்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
3. சங்கரலிஙகபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பொது ரேஷன் கடையையும், சுடுகாட்டையும் தனித்தனியாக மாற்றவேண்டும்.

காவல்துறை உயரதிகாரிகள் அங்கே வந்து கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம், இன்றே வேறொரு சிலையை தருவித்துத் தருகிறோம் என்று உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்படுகிறது.

ஆனால் இதன் பிறகு அங்கு செயல்பட்டுக் கொண்டிருக்கும் புது ரவுடிகளும், மறுகாலனியாக்கத்தால் பயனடைந்த புதுப்பணக்காரர்களும் பிரச்சனையை முடித்துவிட விரும்பாமல் கோவில்பட்டி நகரெங்கும் வாகனங்களில் வலம் வந்து கடையை அடைக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். கடையை அடைக்க மறுத்த 15 கடைகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. இப்படி அடித்து நொறுக்கப்பட்ட கடைகளில் தேவர்சாதியினர் நடத்தும் கடைகளும் அடக்கம். 4 பஸ்களும் சேதப்படுத்தப்படுகின்றன. ஒரு காவலர் மட்டும் கடையடைப்பை எதிர்க்க அவர் தாக்கப்படுகிறார். நகரெங்கும் இவர்கள் சுதந்திரமாக சுற்றி வந்து ரவுடித்தனம் செய்தும், கவல்துறையினரையே அடித்துப் போட்ட பின்பும் இந்த ரவுடிகளைக் கட்டுப்படுத்த காவல்துறை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மட்டுமல்லாமல் கடையை அடைக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள் என்று புகார் செய்தபோது, “சொல்கிறார்கள் அல்லவா கடையை அடைத்துவிட்டுப் போக வேண்டியது தானே” என்று ஒத்தூதியிருக்கிறார்கள். இதனிடையே சிலை உடைப்புக்கு காரணமானவர்கள் என்று கூறி 25 வயதிற்குட்பட்டவர்கள் 11 பேரை கைது செய்திருக்கிறது காவல்துறை. எந்த அடிப்படையில் அவர்களைக் கைது செய்தார்கள் என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை. யாரையாவது கைது செய்து காட்டவில்லை என்றால் பிரச்சனையாகும் எனும் எண்ணத்திலேயே வழக்கம் போல் கைது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். கிழக்கு பகுதி மக்களோ என்ன நடக்குமோ எனும் பதட்டத்தில் இதை எதிர்ப்பதற்கும் இயலாமல் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

இது மட்டுமல்லாது, திரைப்படங்களில் காமடியனாக வந்து போணியாகாமல் சாதி வெறியனாக வலம் வந்து கொண்டிருக்கும் கருணாஸ் இரவில் கோவில்பட்டி வந்து, அனைத்து மக்களும் நலமாக வாழ வேண்டும் என்றெண்ணி தன் வாழ்நாளை அர்ப்பணித்த தேவர் சிலையை இடித்தார்களே காந்தி சிலையை இடிப்பார்களா என்று உசுப்பேற்றி விட்டு கருணாநிதி பாணியில் இந்த நேரத்தில் தான் நாம் அமைதியாக இருக்க வேண்டும் என்று பேசிச் சென்றிருக்கிறார்.

பின்னர் கன்யாகுமரி மாவட்டம் மயிலாடியிலிருந்து போலீசின் ஏற்பாட்டில் கற்சிலை ஒன்று மதியம் 3.30 மணிக்கு கொண்டுவரப்பட்டு மேளதாளத்துடன் ஏற்கனவே சிலை இருந்த இடத்திற்கருகில் வைக்கப்பட்டிருக்கிறது.

மறுநாள் முற்பகல் 11 மணிவரை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. 11 மணிக்கு மேல் மேற்குப் பகுதியின் பெண்கள் கையில் கம்பு துடைப்பம் போன்ற பொருட்களை எடுத்துக் கொண்டு கிழக்குப் பகுதிக்கு சென்று தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். காவலுக்கு நின்ற போலீசார் அவர்களை தடுக்கவோ, திருப்பியனுப்பவோ செய்யவில்லை. மாறாக அவர்களுக்கு துணை நின்றுள்ளனர். ஏனென்றால் அங்கு காவல் பணிக்காக கோவில்பட்டி பகுதியிலுள்ள தேவர்சாதி காவலர்களை மட்டும் பொருக்கியெடுத்து போட்டிருக்கிறார்கள். சிறிது நேரம் கழித்து அந்தக் கும்பலுடன் ஆண்களும் இணைந்து கொண்டார்கள். இதில் மேற்குப் பகுதியை ஒட்டியிருக்கும் பால்கார அம்மாவின் வீட்டையும், மாடுகள் கட்டுவதற்கான கொட்டகையையும் முழுவதும் இடித்து தகர்த்திருக்கிறார்கள். குறிப்பாக மேற்குப்பகுதியுடன் இணைந்திருக்கும் பத்து வீடுகளை மட்டும் குறி வைத்து அடித்திருக்கிறார்கள். அதிலும் தர்மபுரி தாக்குதல் போலவே, நேரடியாக ஆட்களைத் தாக்காமல் பொருட்களை சேதப்படுத்துவதிலேயே கண்ணாக இருந்திருக்கிறார்கள்.

போதிய கால அவகாசம் அளித்த பின்னர் தடுக்க முயன்ற காவல் துறை மீதும் மேற்குப் பகுதியினர் கல்வீசி தாக்கியிருக்கின்றனர். இதனால் தடியடி நடத்தி ஆதிக்க வெறியர்களை அடித்து விரட்டியிருக்கின்றனர். அதேநேரம் அந்தப் பகுதியில் இருக்கும் சில வழக்குறைஞர்களும் மக்களும் ஒன்றிணைந்து தாக்குதலை தடுக்கவும், சிலையை உடைத்ததாக பொய்யாகக் கூறி கைது செய்யப்பட்ட 11 இளைஞர்களை விடுதலை செய்யவும் கோரி அம்பேத்கார் சிலை முன்பு சாலை மறியல் செய்திருக்கின்றனர். ஆதிக்க சாதியினர் சாலை மறியல் செய்தபோது கோரிக்கைகளை ஏற்று ஆவன செய்வதாக வாக்குறுதி அளித்து அதன்படி சிலையையும் வரவழைத்துக் கொடுத்த காவல்துறை ஒடுக்கப்பட்டவர்கள் சாலை மறியல் செய்த போது அவர்களிடம் என்னவென்று கேட்காமல் தடியடி நடத்தி கலைத்திருக்கின்றனர். தற்போது 144 தடை உத்தரவு போடப்பட்டு பதட்டம் தடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழகமெங்கும் ஈழ மக்களுக்காக எழுச்சியும் போராட்டங்களும் நடந்துவரும் இவ்வேளையில் மக்கள் கவனத்தை அதிலிருந்து திசை திருப்பும் வண்ணம் இராமேஸ்வரம், கோவில்பட்டி என திட்டமிட்டு கலவரச் சூழல் ஏற்படுத்தப்பட்டு வருவதாக எண்ணத் தோன்றுகிறது. தமிழுணர்வை விட தேவர் சாதி  உள்ளிட்ட ஆதிக்க சாதி உணர்வு அதிகம் என்பதால் அப்படித் தோன்றுகிறது. அதிலும் ஆதிக்க சாதியினருக்கு ஒரு மாதிரியும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு வேறொரு மாதிரியும் நடந்து கொண்டு கிளப்பப்படும் சிறு பொறிகளை ஊதி நெருப்பாக மாற்ற காவல்துறை முயல்வதாகவும் தெரிகிறது. அந்தப் பகுதியில் இருக்கும் பாலன் எனும் இரகசிய காவலரின் குடும்பத்தினரும் உறவினர்களும் நடந்த சாலை மறியலிலும் கலவரத்திலும் முன்னணியில் நின்றிருக்கின்றனர். என்றாலும் மக்களிடம் போதிய ஆதரவு இல்லாததால் பெரிய அளவில் எதுவும் நடக்காமல் முடிவுக்கு வந்திருக்கிறது. இதை அனைத்து பகுதி மக்களும் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு உணர்ச்சியை தூண்டிவிடும் வண்ணம் நடைபெறும் அரசின் சதிகளுக்கு பலியாகாமல் முறியடித்து சமூகப் பிரச்சனைகளுக்கான நம்முடைய போராட்டங்களை தொடர வேண்டும் என்பதே நம்முடைய நலனுக்கு உகந்ததாக இருக்கும்.

– வினவு செய்தியாளர்

  1. பின்னூட்டப்பெட்டி தவறுதலாக மூடப்பட்டிருந்தது திறக்கப்பட்டுவிட்டது. சிரமத்திற்கு வருந்துகிறோம்.

  2. ராத்திரியில் சிலையை உடைக்க செய்த முயற்சி கை கூடாமல் போகவே பகலில் கூட்டத்தை திரட்டிக்கொண்டு வந்து உடைத்திருக்கிறார்கள். சிலையை உடைத்த வனும் அவன்தான் , சிலை உடைப்புக்கு எதிராக மறியல் செய்தவனும் அவன்தான்.

    Very Good !

    ஒரு குறிப்பிட்ட சாதித்தலைவரோட ஜெயந்தி விழாவுக்கு நம்ம முதலமைச்சரே நேரில் ஆஜராகிறார்கள். ( ஆனா, அவங்களோட சொத்து குவிப்பு வழக்குக்கு மட்டும் நேரில் ஆஜராக முடியாம 1330 வாய்தா வாங்குகிறார்கள் என்பது வேறு விசயம் ) நடக்கிறது நம்ம ஆட்சின்னு தெரிஞ்சு தான் ‘வீரர்கள்’ சாதி வீராப்பைக்காட்டுகிறது.

    வில்லேஜ் வாசி .

  3. இந்த லட்சணத்தில், மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கம் அவர்களின் பெயரை வைக்கவேண்டும் என்று ராமதாஸ் வேறு சாதி அத்திரத்தை கையில் எடுத்துள்ளார். விமான நிலையம் அமைந்துள்ள இடம் தேவேந்திர குல வேளாளருக்கு சொந்தமானது என்பது அவருக்கு தெரியாமல் இல்லை. என்ன செய்து…? அரசியல் செய்தாக வேண்டுமே….?. மேலும் ராமதாஸ் அவர்களின் பரிணாம வளர்ச்சியை அறிந்துகொள்ள விரும்புபவர்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

    http://namvaralaaru.blogspot.in/2013/03/blog-post_25.html

    • மணிமண்டபம் கட்டுவோம்.. என்று இராமதாஸ் தென்மாவட்டத்தை சுற்றி வந்தபோது உமக்கு ரொம்ப இனித்தது..! உயர்சாதினர் ஒரு கூட்டமைப்பு என வந்தபின்பு உங்கள் மக்களை தாழ்ந்தவர்கள் என இராமதாஸ் அவர்கள் குறிப்பிட்டபின்பு கசக்குது..!

  4. பள்ளர் என்றால் பள்ளர் என்றே எழுதுங்கள்.தாழ்த்தப் பட்டவன் தலித் என்று இன்மேல் எழுதவேண்டாம்.அப்படி இனியும் எழுதினால் வினவு தளத்திற்கு எதிராக சாலைமறியல் போன்ற எதிற்பு போராட்டங்களை நாங்கள் நடத்துவோம்.விளைவுகள் மோசமாக இருக்கும்.தேவர் தேவர் என்று எழுதும் நீங்கள் பள்ளர் தங்கள் குலமரபுப் பெயராகிய மள்ளர் என்பதை எத்தனையோ ஆண்டுகளாக எழுதி வருகிறார்களே.ஒருநாள் பார்த்தாவது மல்லர் என்று எழுதினீர்களா? அம்பேத்கர் தலைமையில் 1946 ம் ஆண்டு தேவேந்திரகுல வேளாளர் மாநாடு நடை பெற்றது.ஒருநாளாவது தேவேந்திரகுல வேளாளர் என்று இவர்களை குறிப்பிட்டு எழுதினீர்களா?உண்மையான எதிரி இந்த சமூகத்துக்கு நீங்களே தான்.

    • “தேவர் தேவர் என்று எழுதும் நீங்கள் பள்ளர் தங்கள் குலமரபுப் பெயராகிய மள்ளர் என்பதை எத்தனையோ ஆண்டுகளாக எழுதி வருகிறார்களே.ஒருநாள் பார்த்தாவது மல்லர் என்று எழுதினீர்களா?”

      திருத்தம் கள்ளரை தேவர் என்று எழுதும்பொழுது …….

  5. ***அடையாளம் தெரியாத சிலரால் தேவர் சிலை உடைக்கப்பட்டிருக்கிறது***

    என்னது அடையாளம் தெரியாதா..உங்களுக்கு..? என்னது சிவாஜி செத்துட்டாரா என்பதைப்போல உள்ளது..

  6. **தமிழுணர்வை விட தேவர் சாதி உள்ளிட்ட ஆதிக்க சாதி உணர்வு அதிகம் என்பதால் அப்படித் தோன்றுகிறது***

    அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பயம் மாதிரி உங்கள் சீழ் சிந்தனைக்கு உண்மை நிகழ்வுகள் எல்லாம் உளவுத்துறை வேலை…

    தமிழுணர்வு என்பதே தேவர் சாதிதான்..

    தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் தொகுத்த தமிழ் ஓலைகள் எல்லாம் தேவரினத்டம் பெற்றதே..

    உங்கள் கட்டுரையை படித்தால் இந்த குறள்தான் நினைவுக்கு வருகிறது

    “தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
    மேவன செய்தொழுக லான்”

    விளக்கம்:-
    தேவர்கள் உயர்ந்த செயல்களையே செய்வர், கயவர்கள் இழிந்த செயல்களையே செய்வர் என்னும் பொருள் குறிப்பால் உணர்த்துவதைக் கானலாம்.

      • தேவர் என்ற வார்த்தைக்கு மூன்று அர்த்தம் உள்ளது அது அகமுடையார்,மறவர்,கள்ளர்.

  7. ***அனைத்து மக்களும் நலமாக வாழ வேண்டும் என்றெண்ணி தன் வாழ்நாளை அர்ப்பணித்த தேவர் சிலையை இடித்தார்களே காந்தி சிலையை இடிப்பார்களா ***

    கருனாஸ் நியாயமாகத்தான் பேசியிருக்கார்..அனைத்து மக்களும் நலமாக வாழ வேண்டும் என நேதாஜியின் கொள்கையை கடைக்கோடி இந்திய பிரஜைக்கு கொண்டு சேர்த்த தேசிய தலைவர் தேவர் சிலை இடிப்பவர்கள்….மக்களிடையே பிரிவினை ஏற்ப்படுத்திய காந்தி சிலை இடிப்பார்களா..?

    “பாக்கிஸ்தானை கொடுத்தவனும் முட்டாள்..பாக்கிஸ்தானை கேட்டவனும் முட்டாள்” தேவரின் கட்டுரை கண்ணகி இதழில் 1949-ல் வெளியானது.

  8. வினவு செய்தியாளர்க்கு…,

    தேவர் சிலை என்பது இந்த வாரம் மட்டும் ஒடைக்கப்பட்டதில்லை…தேவரின் நூற்றாண்டு விழாவிலிருந்தே தொடர்ந்து இந்த தேசவிரோத காரியத்தை செய்துக்கொண்டிருக்கிறார்கள்..

    சும்மா இருகும் மக்களை சண்டைக்கு வா என இழுப்பது யார்..?
    (உங்க கிட்ட நியாயம் கேட்டா விளங்கும்…தேவர் ஜெயந்தியில் இறந்தவர்கள் அவர்களாக இறந்தார்கள் என கட்டுரை எழுதிய கண்ணையவான்கள் நீங்கள்)

  9. உடைப்பட்டது சிலை அல்ல எங்கள் உடல்..

    தேவர் சிலை உடைக்கபடுமெனில் எங்கள் உடலில் ரத்தம் வழியும்..

    இங்கு இருக்கும் 2.5 கோடி உயிர்கள் அந்த ஓற்றை உடலில் வாழ்கின்றன..

    சிலையை உடைப்பது..மறைந்திருந்து கல்லெறிவது…மஞசள் உடையணிந்து பெட்ரோல் குண்டெறிவது.. வரலாறை திருப்பி பாருங்கள்…நேருக்கு நேர் காலம் சொல்லி நேரம் சொல்லி அடிப்போம்!

    • அரைவேக்காடு தியாகு! அவ்வளவுதானா இன்னும் எதாவது இருக்கா?

      உம்மை போன்றோரு எல்லாம் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.

      மக்களுக்கு பயன்படும் அறிவு தான் உயர்வானது மற்றதெல்லாம் வீண்.

      அறிவு ரீதியாக தன்னை உயர்வாக முன்னிறுத்த முடியாத அறிவிலிகள் ‘சாதி, மதம், இனம், மொழி, பணம், பாலினம், பதவி’ ரீதியில் தன்னை உயர்வாக காட்டிக்கொள்ள முற்படுகிறான்.

      ”நான் யாரு தெரியுமா” என்று சொல்ல முடிகிறது ஏனென்றால், அவன் யார் என்று அவன் மட்டும் தான் சொல்லிக்கொண்டு திரிய வேண்டும்.

      சாதி, மத ரீதியாக மக்கள் பிரிந்து இருப்பது எவ்வளவு அநீதி! ஆனால் அதெல்லாம் உங்களுக்கு தெரியாது ஏனென்றால் மக்களைப் பற்றி உங்களுக்கு என்ன கவலை. மக்களை ஏய்த்து பிழைக்க வேண்டும் அது தான் உங்களுக்கு தேவை. உதாரணமா இந்த கருணாஸ் யாரு? அவன் படத்தில் உள்ள ஒரு பாட்டு ”திண்டுக்ல்லு…..” என்று ஆரம்பிக்கும் அந்த பாட்டை உங்கள் மகள், மனைவி, தாயோடு கேட்க முடியுமா?

      ஆனால் அவனால் பாட முடியும், ஆட முடியும். காரணம் பணம் சம்பாதிக்க வேசிதனமான காரியம் செய்பவன்.

      ஆனால் அவன் பெரிய தலைவன் போல் யோக்கின் போல் ஏமாற்ற முடிகிறது எப்படி?

      மக்களை சாதிரீதியாக பிரித்து முட்டாளிக்கி வைத்திருப்பதால் தான்.

      ஏன் நீங்கள் அவனுக்கு வக்காளத்து வாங்கியது எதனால்? உங்களை முட்டாளாக்கிய சாதிவெறி!.

      சரி அது என்ன வீரம்?

      வீரம் என்றால் என்ன?

      கத்தி எடுத்து மரத்தை எல்லோராலும் வெட்ட முடியும். அதேபோல் இன்னொரு மனிதனை வெட்ட முடியாதா?

      தியாகு சாரே உங்களைப் போன்றோர்கள் நிறைய அறிவை பெருக்கி கொள்ள வேண்டும. அது சாதிவெறி என்ற முட்டாள் தனம் இருக்கும் வரை முடியாது.

      இல்லை பேசிக்கொண்டே திரிவீர்கள் என்றால், இதே மக்களால் தான் வீழ்த்தப்படுவீர்கள். சந்தேகமே வேண்டும் மக்களை எப்பொழுதும் முட்டாள்தனத்திலே இருத்தி வைக்க முடியாது. அதற்கு வரலாறு இடம் கொடுக்காது!

    • அட கொன்யா… கள்ளர், மறவர், அகமுடையார் இப்படி ஒன்றாக மாறுபட்ட 3 சாதிகளையும் சேர்த்தால் 50 லட்சம் கூட வராதுயா…

      • அதை அரசியல்வாதிகளிடம் சொல்லிப்பாருங்க தெரியும்.

    • ஆர்.தியாகு
      /தேவர் என்ற வார்த்தைக்கு மூன்று அர்த்தம் உள்ளது அது அகமுடையார்,மறவர்,கள்ளர்./
      Thease guys among themselves are not feeling equal and horizontal in line but vertical in line and depends upon their menrallity

  10. தமிழ் மாணவர்கள் போராட்டத்தின் போது ஒரு உண்மை தமிழரின் சிலை உடைக்கப்படுகிறது..தனது கழுத்தில் தொங்கும் வேல் உருவத்தில் “வெல்க தமிழ்” என எழுதி வைத்த முதல் தமிழ் தலைவர் இவர்.

    ஒரு பச்சை தமிழரின் சிலையை ஒரு அந்நியந்தான் உடைக்கமுடியும்..அவன் வடநாட்டுக்காரரை தலைவராக கொண்டவன்..ஒரு ரெட்டியாரை இன்று தலைவனாக கொண்டுள்ளான்..சும்மா இறந்த கிருத்துவனை தியாகியாக ஆக்கிவனும் அவனே..! ஒரு கிருத்துவனை தலைவனாக இன்று கொண்டவனும் அவனே..!!

    • தியாகு, அக்காவ அய்யான்னு நினச்சிக்கிட்டு தலைவராக்கி கொண்ட கும்பலை தெரியுமா.?

    • “தனது கழுத்தில் தொங்கும் வேல் உருவத்தில் “வெல்க தமிழ்” என எழுதி வைத்த முதல் தமிழ் தலைவர் இவர்.”

      கழுத்தில் வேலை தொங்கவிட்டிருந்ததால் தான் பெயரில் வேல் இருக்கக் கூடாது என்று இம்மானுவேலைக் கொலை செய்தாரா?

      • தமிழ் உங்கள் தமிழ் ஞானத்தை என்ன வென்று மெச்சுவது.!

        தமிழ் இனி மெல்ல மெல்ல சாகும் என பாரதி பயந்ததுப்போல தமிழ் என்ற பெயரில் நீங்கள்..

        இமானுவல் என்பதே சரி அது இமானுவேல் அல்ல…மற்றும் இது தமிழ் பெயரும் அல்ல சொல்லும் அல்ல…

        இப்படிதான் கற்பனைத்திறனில் உங்க வரலாறும் சம்பவமும் இருக்கிறது..உண்மைக்கு புறப்பாக இருக்கிறது..!

        • கொன்றது உண்மையா? இல்லையா? அதைச் சொல்லுங்கள் முதலில். ஜாதி வெறியில் உங்கள் பின்னூட்டங்களில் மனிதத்தன்மையே தெரியவில்லை. அது தமிழோ, மலையாளமோ, தெலுங்கோ அல்லது பெயரில் ஒரு எழுத்து இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன, அவர்களையும் மனிதர்களாகப் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

          • ஐயா, தமிழ்,

            இம்மானுவேலை யாரோ கொலை செய்தார்கள். அது உண்மைதான். ஆனால் யார்? என்ன காரணத்திற்காக கொலை செய்தார்கள் என்று ஏன் காமராஜர் நிறுவிய தனி நீதி மன்றங்கள் கண்டுபிடிக்கவில்லை. ஏன் அதற்கான முயற்சியே செய்யவில்லை?

            அதையெல்லாம் கேள்வி கேட்டா நீங்க ஆங்கிலமாகிவிடுவீங்க. மன்னிக்கணும் புத்திசாலி ஆகிடுவீங்க.

            • நீதி மன்றங்களில் நிரூபிக்கப்படவில்லை என்பதால் உண்மை பொய்யாகிவிடுமா? உள்ளங்கையை நோக்குவதற்கு முகம் பார்க்கும் கண்ணாடியை தேடுபவர்கள் தானே நீங்கள்!!! உங்களை மாதிரி அதி புத்திசாலித்தனம் (சாதி வெறி)எனக்கு தேவையில்லீங்க. நான் இப்படியே இருந்து விட்டுப் போறேன்ங்க.

    • கிருத்துவனை தலைவனாக கொண்டவன் என்று என்று அலட்சியமாக சொல்லியிருக்கிறாய்? அப்போ உன் ஜாதியில் கிறிஸ்தவர்கள் இல்லையா? உன் இனத்திற்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்? விவரமாக பேசுகிறேன் என்று நினைத்து உன்னை நீயே ஏன் தாழ்த்திக் கொள்கிறாய்? நீ சொல்லியதிலும் ஒரு அர்த்தம் உள்ளது? ஏன் என்றால் இந்த இந்து மதம்தானே ஜாதியை கொண்டது, இந்த ஜாதியை வைத்துதானே ஒன்றுமே இல்லாவிட்டாலும் உங்களால் ஜாதி பெருமை பேச முடிந்தது, இந்த மதக் கடவுளான முருகனைத்தானே கண்ணால் பார்த்தோம், காதால் கேட்டோம் என்று கதையை அள்ளி விட்டு மக்களை அடிமை படுத்த முடிந்தது ? மற்ற மதங்களிடம் உங்கள் ஜம்பம் பலிக்காது அல்லவா?

  11. வினவு செய்தியாளர் அவர்களுக்கு,
    ஒரு சம்பவம் நடக்கும் போது அதை மக்களுக்கு தெரிவிப்பதில் ஊடகங்கள் பல்வேறு வேறுபாடுகளை கடைபிடிக்கலாம். ஆனால் உண்மையை முற்றிலும் மறைத்து பொய்யான செய்தியை மக்களுக்கு தெரிவிப்பதின் முலம் ஊடகத்தின் நம்பகத்தன்மை தான் குறையும். தேவர் சிலையை உடைக்கும் அளவிற்கு தேவரின மக்கள் நெஞ்சில் ஈரமில்லாதவர்கள் இல்லை. மாணவர்களின் போராட்டங்களை திசைதிருப்ப எங்கள் தெய்வத்தின் சிலையை தட்டிப்பார்த்திருக்கிறார்கள். எங்களது உணர்வுகளை திசை திருப்ப நீங்கள் முயன்றிருக்கிறீர்கள். பரவாயில்லை. தலித் ஆதரவு இருக்க வேண்டியது தான். அது அவரவர்களின் உணர்வுகளைப் பொறுத்தது.வினவு அனைத்து தரப்பு மக்களுக்குமான ஒரு ஊடகம் என்பதை தாண்டி தலித் மக்களுக்கு மட்டுமானது என்ற பாதையில் பயணித்துக் கொண்டருக்கிறீர்கள். எதுவாக இருந்தாலும் நிகழ்வுகளை எழுதுங்கள். அவற்றில் உங்களுக்கு தகுந்தாற்போல் கூட்டி குறைத்து எழுதிக் கொள்ளுங்கள்.
    உங்கள் கருத்து சுதந்திரம் எங்களைப் போன்றவர்களின் புண்படுத்தக்கூடாது. எங்களிள் உறவினர்களை ரௌடிகள் என்றும் போனியாகாதவர்கள் என்றும் சொல்வதற்கு நீங்கள் யார்? கண்ணித்துடன் நடந்து கொள்ளுங்கள். உங்கள் ஊடக நண்பர்களின் நம்கபத்தன்மையை காப்பாற்றுங்கள்.
    நன்றி
    சே.மதுரைவீரன்
    ஆசிரியர்
    தேவர் மலர்

    • மதுரைவீரன்,எந்த__________ எங்களை தலித் என்று கூறுவது?எங்களுக்கென்று தனிப்பெரும் இலக்கியங்களும் வரலாறுகளும் உயிர்வாழ்ந்துகொண்டே இருக்கின்றன.பள்ளர் என்றோ அல்லது மள்ளர் என்றோ எமது சாதிப் பெயரை முதுகெலும்புள்ள எவரும்பயன்படுத்தலாம்.அதுதான் முறைமையும்கூட.பெட்ரோல் குண்டு எறிந்தவர்களுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்தவன் நான்.சிலர் நோக்கம் மள்ளர் மறவர்களை மோதவிட்டு அழிவுப்பாதையில் இட்டுச் செல்வதே.எங்கள் மக்களை தலித் வட்டங்களுக்குள் யாரும் சேர்க்காதீர்கள்.மள்ளர் பள்ளர் தனித்த சாதிபிரிவாகவே இருக்க விரும்புகிறார்கள்.எண்கள் வரலாறும் தனித்தே இருக்கட்டும்.தேவர் மள்ளர் பகை மூட்டப்பட்டது காமராசராலும் நேருவாலும் என்பதை அறிந்தவர்கள் இங்கே பலருண்டு.தேவரின் வளர்ச்சி பொறுக்கமுடியாமல் அவர்கள் அப்படிச் செய்தார்கள்.சிலை உடைப்பு செய்யவில்லை என்பதின் உண்மைத் தன்மை உங்களால் வழங்கப்பட வேண்டியது மிக அவசியம்.

      • குமரன், தங்களுக்கு முதுமுகெலும்பு இருக்கிறது என்பதையும் தங்களது வாதத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். பள்ளர் என்ற சொல்லை இழிவு சொல்லாக நினைப்பது தங்களது சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தான். பள்ளர் என்று சொன்னவுடன் அதையே பயன்படுத்தி பி.சி.ஆர் சட்டத்தில் புகார் அளிக்கச் செல்வது நாங்களா? நேருவும், காமராசரும் தான் கலவரத்தை ஏற்படுத்தினார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் அதையே இன்று வரை கடைபிடிப்பது தான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தேவர் சிலையை உடைத்து தான் உங்களது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டுமா? உங்களது முன்னேற்றத்தில் முழுக்கவனம செலுத்துங்கள். சமுதாய அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவர்களின் சொற்களுக்கு மயங்காமல் அவரவர்களின் வேலைகளை பார்த்துக் கொண்டாலே போதும். என்ன பிரச்சனை நடந்தாலும் இரு சமுதாயங்களிலும் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான் என்பதை உணர்ந்தாலே போதும் என்று நினைக்கிறேன்.
        குமரனின் கருத்துக்கு நன்றி
        சே.மதுரைவீரன்
        ஆசிரியர் – தேவர் மலர்

  12. தேவர் சிலையை உடைப்பதன் மூலம் என்ன சாதிக்க விரும்புகிறார்கள் இவர்கள், எங்களுக்குள் தூங்கிகொண்டிருக்கும் ஜாதி உணர்வை எழுப்பிவிடுவதை தவிர?. வீணர்கள் இதன்மூலம் இழப்பது தவிர பெறுவது ஒன்றும் இல்லை.

  13. @வில்லேஜ் வாசி,

    ஜெயலலிதா ஓன்றும் தேவர் இன ஆதரவாளர் அல்ல…பாராளுமன்ற தேர்தலுக்கு முன் வரும் எந்த மக்கள் செல்வாக்கு படைத்த தலைவர் விழாவிலும் கலந்துக்கொள்வார்…அவர் ஓரு அரசியல்வாதி அவ்வளவே..அதனால்தான் உங்களைப்போன்றோர் ஆதரவு பெற தாழ்த்தப்பட்டவர்கள் விடுதியை மறுசீரமைப்பு செய்ய 200 கோடியை ஒதுக்கிறார்..

    வீரம் என்பது உண்மை வரலாற்றை பார்த்தால் தெரியும்…போலி வரலாறை படித்து கோலி விளையாடும் உங்களுக்கு தமிழர்களையும் தெரியாது..தமிழும் தெரியாது…

    உங்கள்.. பிதற்றல்கள் சிரிப்பை வரவைக்கின்றன..

    • வீரம் என்பது உண்மை வரலாற்றை பார்த்தால் தெரியும்…ஆமாம் ,எத்தனை குடிசைய கொளுத்தி இருக்கிறோம்.!

  14. சில வருடங்களாக வினவு என்ற தளத்தை அவ்வபோது பார்த்து பல நல்ல விசயங்களை கண்டுள்ளேன்..அதற்கு வினவு தளத்தை உருவாக்கியவற்கு முதலில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் அவர்களுக்கு,…………உங்கள் கட்டுரையில் ஏன் குறிப்பிட்ட பள்ளர் சமூகத்தை எழுதும் போது தாழ்த்தப்பட்டவன்,தலித் என்று அடையாளம் செய்யும் அதே வேலையில் சாதி பட்டியலில் இல்லாத சாதியான “தேவர்”சாதி என்றும் குறிப்பிடுகின்ரீர்கள்…ஏன் இந்த பாகுபாடு என்று உங்களிடம் கேட்பதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது அதே சமயத்தில் உங்களை அப்படி எழுதக்கூடாது என்பதற்கு அதிகாரம் இருக்கா இல்லையா என்று எனக்கு தெரியாது……..அப்படி உங்களுக்கு ம(ப)ள்ளர்களை தலித் என்றும் தாழ்த்தப்பட்டவன் என்று எழுதும் வேலையில் சீர்மரபினர் அல்லது குற்றப்பரம்பரை என்று (மறவர்,சேர்வை,கள்ளர்) என்று எழுத உங்கள் கை கூசுகிறதா…பட்டியலை வைத்து நீர் எங்களை தாழ்த்தப்பட்ட பள்ளர் என்று எழுதும் வினவு ஆசிரியர் அவர்களே அதே கையில் உமக்கு ஏன் குற்றப்பரம்பரை என்று எழுதுவதற்க்கு உங்களுக்கு கை வரவில்லை?????????? …………வினவு வாசகர் அ.வீரக்குமார்ப்.பி.இ

  15. அவரவர் ஜாதியின் உரிமைகளுக்காக போராடுவது என்பது அவர்கள் விருப்பம்? ஆனால் இவ்வளவு வேறுபாடுகளை வைத்துக்கொண்டு இந்த மக்கள் இலங்கை தமிழனுக்காக போராடுவதுதான் புரியவில்லை? இங்கே தமிழன் என்று இல்லாத இனப்பற்று,இலங்கை என்றால் மட்டும் எப்படி வருகிறது? தமிழ் நாட்டில் குறிப்பிட்ட ஒரு சில ஜாதியை சார்ந்தவர்கள் இருக்கிறார்கள் அந்த ஜாதியில் பிறந்ததிற்காக பெருமை படுபவர்கள் இவர்கள்? வீரத்தில் எங்களை மிஞ்ச யாரும் கிடையாது என்று அவர்களாகவே நினைத்துக்கொண்டிருப்பவர்கள். (இன்னுமா அவர்களுக்கு புரியவில்லை சென்னையில் ஒரு சில ஆயிரம் பணத்திற்கே கொலை செய்பவர்கள் இருக்கிறார்கள் அப்போ இந்த மாதிரி கூலிக்கு கொலை செய்பவர்களும் வீரர்களா? அடுத்தவர்களை மிரட்டுவதும், துன்புறுத்துவதும்தானா வீரம்?) இத்தனை வருடங்களில் இவர்களின் ஜாதி பெருமையால் இவர்களுக்கு கிடைத்தது என்ன? உயர்ந்த ஜாதி என்று சொல்லிக்கொண்டு அரசாங்கம் கொடுக்கும் இட ஒதிக்கீடு இந்த உயர்ந்த ஜாதிக்கு உறுத்தலாக இல்லையா? எடுக்கிற பிச்சையை அலுமினிய தட்டில் எடுத்தால் என்ன, தங்க தட்டில் எடுத்தால் என்ன? செயல் ஒன்றுதானே? அப்புறம் ஏன் வீரன் ஜம்பம்? இட ஒதிக்கீட்டை யாராவது உரிமை என்று சொன்னால் அது தவறு? இது ஒன்றும் மனிதனை அடிப்படை உரிமை கிடையாது? இட ஒதிக்கீடு சம்பந்தமாக அரசாங்கம் யாருக்கும் எந்த வாக்குறுதியையும் நிரந்தரமாக கொடுக்க முடியாது?

    • அரசு அலுவலக சம்பளம் வாங்கும் வாட்ச்மேனும் அரசு ஊழியந்தான்..நாட்டை ஆளும் பிரதம மந்திரியும் அரசு ஊழியந்தான்..அதனால் இருவரும் ஓன்றா..?

      உங்களுக்கு மனசாட்சி உறுத்தவில்லையா..தங்களை தாழ்த்தப்பட்டவர் என்றோ தலித் என்றோ சொல்லக்கூடாது எனில் எதுக்கு சலுகையும்..இடஓதிக்கீடும்…

      • பெயரிலேயே தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வார்த்தையை சுமந்துதான் அரசிடம் சலுகை பெற்றோம்? ஜாதி பெயர் இருக்கும் வரை சலுகையை பெறுவதில் என்ன தவறு? ஏன் உயர்ந்த ஜாதி என்று சொல்லிக்கொண்டு நீ சலுகை பெறவில்லையா? மற்றவர்களை சொல்லும் முன் உன் நிலைமை என்ன? ஒன்று இட ஒதிக்கிடு வேண்டாம் என்று சொல்லி உயர்ந்த ஜாதியாக இரு, இல்லாவிட்டால் நீ என்ன பெருமை பேசினாலும் எங்கள் பார்வையில் நீயும் தாழ்த்தப்பட்ட ஜாதிதான்?

        • உங்க ஓதிக்கீடுக்கும் எங்க ஓதிக்கீட்டுக்கும் நிறைய வித்யாசம் உண்டு..

          எடுக்கும் மார்க் – லிருந்து வயது வரை நிறைய வித்யாசம்! பரிச்சைக்கு வந்து போகும் செலவு தொகைக்கூட நீங்கள் பெற முடியும்..வேலை பெற்றதும்

          மதிப்பெண்களில் ஓதிக்கீடு
          வயதில் ஓதிக்கீடு
          வந்து போகும் பயணசெலவில் ஓதிக்கீடு
          தங்கும் விடுதிக்கு ஓதிக்கீடு
          வேலை கிடைத்ததும் பதவி உயர்வில் ஓதிக்கீடு
          இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்…

          உங்க ஓதிக்கீடுக்கும் எங்க ஓதிக்கீட்டுக்கும் நிறைய வித்யாசம் உண்டு..

      • அரசு அலுவலக சம்பளம் வாங்கும் வாட்ச்மேனும் அரசு ஊழியன்தான் ..நாட்டை ஆளும் பிரதம மந்திரியும் அரசு ஊழியன்தான்.. .அதனால் இருவரும் ஓன்றா..? —-

        பதவி அடிப்படையில் பார்த்தால் ஒன்றில்லைதான் ஆனால் யாராக இருந்தாலும் கை நீட்டி பிச்சை எடுக்கும் போது யாரை உயர்வாக கருத முடியும்? நீங்கள் என்ன சொல்ல வருகீறீர்கள் என்றால் நாங்கள் உயர்ந்த பிச்சைகாரர்கள் என்றுதானே, பரவாயில்லை இதுதான் உங்கள் விருப்பம் என்றால் அப்படியே இருக்கட்டும்?

        • பிண்ணுட்டம் 15.1.1.1 பார்க்கவும்

          எங்களுக்கு சலுகை என்பது எல்லாம் கண்துடைப்பே!! உங்களுக்கு வாழ்வாதாரம்..எங்களுக்கு பயன் உள்ளதும் அல்ல…பயனடையவுமில்லை

  16. தேவர் மலர் @ அவர்களுக்கு வினவு ஆசிரியர் குறிப்பிட்டது சரிதானே உங்கள் சாதியில் தான் மதுரை மாவட்டத்தில் ரவுடிகள் உள்ளனர் உதாரணம் அட்டாக் பாண்டி( மறவன்),எஸ் ஆர்.கோபி (சேர்வை),மன்னன் (மறவன்),வி.ஜி.கே.மணி ,இப்படி பல பட்டியல் உள்ளது மதுரையில் ……….இப்படி இருக்க வினவு ஆசிரியர் சொல்வது சரியாகத்தான் படும்………………………

    • நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நபர்கள் அழகிரியிடம் வேலை பார்ப்பவர்கள் அவ்வளவு தான். இறந்து போன பொட்டு சுரேஸ்ம் ரௌடி தான். அவர் எங்கள் இனத்தைச் சேர்ந்தவரா? இவர்கள் அனைவரும் எங்கள் இனத்திற்கு ஆதரவாகவோ அல்லது உங்கள் இனத்திற்கு எதிராகவோ ஏதாவது ஒன்று செய்திருக்கிறார்களா என்று கூற முடியுமா?. அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் உரிமையாளருக்கு விசுவாசமாக இருக்கிறார்கள் அவ்வளவு தான். நாங்கள் ஜான்பாண்டியனையும், பசுபதிபாண்டியனையும் ரௌடிகள் என்று சொன்னால் நீங்கள் மறுத்துப் பேச மாட்டீர்களா?

  17. இலங்கை தமிழர் பிரச்சனைக்கு போராடி கொண்டிருக்கும் வேலையில் ……….இராமேஸ்வரம் பகுதியில் இரு சாதி பிரிவினர் (மறவர் & முத்திரையர் ) இவர்களுக்கு ஏர்பட்ட பிரச்சனையை விரிவுபடுத்த கோவில் பட்டியில் முக்குலத்து ஆட்கள் செய்த வேலையாகத்தான் இருக்கும்……….இது ஒன்றும் அவர்களுக்கு புதிது அல்ல மதுரை மாவட்டத்தில் வடக்குமாசி,தெற்குமாசி ,போன்ற வீதீகளில் உள்ள சிறு முத்துராமலிங்கமறவர் சிலையை அவர்களே உடைத்து ,,,,,அதற்கு பதிலாக பெரிய சிலை அமைக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் வலியுறுத்தி உள்ளனர்.இப்படி நாடகம் ஆடிய காலங்கள் நீடித்துக்கொண்டே செல்கிறது.

    • என்னது மறவர்களுக்கும் முத்திரையருக்கும் சண்டையா..?

      உம் புலனாய்வு அறிவைக்கண்டு மெச்சுகிறோம்..
      அல்ல தகவல் சேகரிக்கிறீர்கள்…இப்படியே இருக்கவும்.

    • ///…இலங்கை தமிழர் பிரச்சனைக்கு போராடி கொண்டிருக்கும் வேலையில்…///

      ஏதோ இலங்கை பிரச்சனையை இவர்கள் தான் வலிநடத்துவது போன்று பேசுவார்கள். கட்சத்தீவு தாரைவார்க்கப்பட்ட போது வெறும் அறிக்கை அரசியல் செய்யாமல் தமழிக மக்களின் ஒட்டு மொத்த மனசாட்சியாக நின்று போராடியவரே பி.கே.எம்.தேவர் தான். இலங்கை தமிழர்களின் உணர்வுகளை விற்று இரட்டை வேஸம் போட்டு வாழ்க்கை நடத்துபவர்கள் யார் என்று உலக மக்களுக்கு தெரியும். தேவர் சிலைக்கு அரசாங்கத்திடம் கெஞ்சி நிற்கிறோமா? இன்றைக்கும் அரசியல்வாதிகளின் முடக்கத்தால் 50க்கும் மேற்பட்ட தேவர் சிலைகள் திறப்பு விழா காணாமல் இருக்கிறது.
      கோவில்பட்டியில் சிலை உடைப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேர்களில் 3 பேர் படிக்கும் மாணவர்கள். அதனால் அவர்களை விட்டுவிடுங்கள் மீதமுள்ளமுள்ளவர்கள் சிலையை உடைத்ததாக வழக்கு போடுங்கள் என்று தேவரின மக்களிடம் கெஞ்சியது யார்? நாங்களா? கதை எழுதுவதை விட்டு விட்டு பிரச்சனையின் உண்மைத்தனத்தை உணர முயற்சியுங்கள்

      சே.மதுரைவீரன்
      தேவர மலர்

  18. ஆர்.தியாகு அவர்களே என்னாது “தமிழுணர்வு என்பது தேவர் சாதி தான்”………நல்லா இருக்கே உங்க புலுவல்…………………

  19. இப்படி எல்லாம் பிற சாதிகளை இன்னமும் ஒடுக்க நினைக்கும் தேவர்களுக்கு எவ்வித நிபந்தனையும் இல்லாமல் இட ஒதுக்கீடு தருவது நியாமா ?

    தியாகு போன்றவர்கள் உருவாக யார் காரணம் ?

    இட ஒதுக்கீடு எனபது ஒரு தலித்களுக்கு உரிமை ஆனால் ஆதிக்க சாதிகளுக்கு இட ஒதுக்கீடு எனபது ஒரு ரிவார்ட். அதை தீய சாதி பழக்கத்தை விடுபவர்களுக்கு மட்டுமே தர வேண்டும் . சாதியை போர்ற்றுபவர்களுக்கு அல்ல

    • @ராமன்

      நீங்கள் தலித்,தாழ்த்தப்பட்டவர்கள் என்ற பெயரில் கருத்து பதிந்தால் அது சீர்திருத்தம்..நாங்கள் செய்தால் அது சாதி பிரியம்.. உங்க நியாயம் உங்க தெருவுக்குத்தான் ஊருக்கல்ல..

    • ஐயா பஹூத்தறிவாளி ராமன்,

      இட ஒதுக்கீடு தலித்களுக்கு உரிமையாம். மற்றவங்களுக்கு பரிசாம்.

      அதெப்படிங்க உங்களுக்கு உரிமையாகும் இட ஒதுக்கீடு எங்களுக்கு பரிசாகிறது?

      சாதிப் பெயரைச் சொல்லியே பிழைப்பு நடத்தும் நீங்கள் சாதியை பழிப்பதுதான் ஆச்சரியம்.

      சாதி கெட்டது கிடையாது. அதில் உள்ள கெட்ட பழக்கங்கள்தான் தவறு. அதை ஒழிப்பதை விட்டுவிட்டு சாதியை ஒழிக்க முயன்றால் நீங்கள் ஒழிந்தே போவீர்கள்.

    • தலித்கள் சாதிப் பெயரில் சலுகை வாங்கும்போது மற்றவர்கள் மட்டும் ஏன் சாதிப் பெயரில் சலுகை வாங்கக் கூடாது?

  20. தியாகு அவர்களே தாங்கள் ஒரு படித்த முட்டாளா அல்லது மூளை நோய் உள்ளவரா?? @@@உங்களுக்கு மனசாட்சி உறுத்தவில்லையா..தங்களை தாழ்த்தப்பட்டவர் என்றோ தலித் என்றோ சொல்லக்கூடாது எனில் எதுக்கு சலுகையும்..இடஓதிக்கீடும்…@@@@@
    தாழ்த்தப்பட்டவர் மற்றும் இட ஒதிக்கீட்டை அனுபவிக்கிறார்கள் என்று சொல்லுவது சபையில் உள்ளவர்கள் பாருங்க………..அப்ப இந்த கள்ளர் அதாவது குற்றப்பரம்பரை அதாங்க தெலுங்கர் கருணா வைத்த பெயர் சீர்மரபினர் ………….இவுங்க இட ஒதிக்கீட்டை பயன்படுத்துவது அனைத்து கள்ளர்களுக்கும் தெரியும் அதாங்க அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி …….இதெல்லாம் இட ஒதிக்கீடு இல்லாய அப்பு………………யென்ன நான் சொல்றது ஓம்பாட்டுக்கு பேசிட்டு இருக்கப்பு தியாகு..

    • யார் மதியற்றவர் என்பது உங்கள் சுய பரிசோதனைக்கே விட்டுவிடுகிறேன்!!!

      மேலப்பாளையத்தில் இன்றும் பழமை வாய்ந்த “முஸ்லீம் மேல்நிலை பள்ளி” உள்ளது
      மாவட்டம் தோறும் கிருஸ்துவ பள்ளிகள் உண்டு
      அதுப்போல் இந்து பள்ளிகலும் மற்றும் கல்லூரிகளும் உண்டு..இதைப்போலவே கள்ளர் பள்ளி வெள்ளையனால் தொடங்கப்பட்டது…

      இதில் படிப்பவர்களோ பணிப்புரிவர்களோ கள்ளராக இருத்தல் அவசியமில்லை..எல்லா சாதினரும் உண்டு…

      இன்னோரு விசயம் தெரியுமா..? அரசு கள்ளர் பள்ளியிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடஓதிக்கீடு உண்டு..

      (பாவம் பயபுள்ள விவரமில்லாம மாட்டிக்கிச்சு)

  21. தியாகு இங்க மதுரை அருகில் செக்கானூரனி மற்றும் உசிலம்பட்டி ,மற்றும் இராமநாட்,தேனி,இப்படி பல ஊர்களில் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி உள்ளது……..இதெல்லாம் யாரு இட ஒதிக்கீடு அப்பு ஒரு வேலை உங்க கிழுவ நாட்டில் இருந்து வந்த சேதிபதி மன்னன் காசுல கட்டிய பள்ளிகளாப்பு???/ போப்புபு……………………உங்கள கீற்று,திண்ணை பல தளங்களில் நீர் அசிங்கப்படுவதே வாடிக்கையா போச்சு அய்யோ அய்யோ இவர் எவளவு கமென்ட் பண்ணாலும் அசராம அண்ட புலுவு மன்னன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று

    • பிரமணர்களுக்கு பள்ளைகள் உணடு அதுப்போல முகமதியர்களுக்கும் பள்ளைகள் உணடு அதுமாதிரியானதுதான் இதுவும்..

      கைரேகை வைக்க மறுத்து வெள்ளைய காவல்துறையினரை எதிர்த்து சண்னையிட்டு 17 பேர் துப்பாக்கி சூட்டில் வெள்ளையனை எதிர்த்ததால் உயிர் விட்டனர்..அது பெருங்காமநல்லுர் படுகொலை..தெற்கத்திய ஜாலியன் வாலாபக் என்று வர்ணிக்கப்படும் நிகழ்வு அது..

      ஜல்லிக்கட்டு நடத்திவதினாலேயே இது முரட்டுதனமான மனிதயினம் இவ்ர்களை பெரும் சட்டம் கொண்டு அடக்கவில்லை எனில் அது தமது ஆட்சிக்கே எதிராய் முடியும் என கருதியே வெள்ளையன் இரண்டு விசயத்தை குற்றமாய் சேர்த்தான் அது “ஆண்டப்பரம்பரை என்று கலவரம் செய்பவர்கள்” மற்றும் “ஜல்லிக்கட்டு நடத்தி கலகம் செய்பவர்கள்” இதன் கீழேதான் முக்குலத்தோர்கள் மீது கைரேகை சட்டம் பாய்ந்தது.

      அரங்சாங்கத்திற்கு அவர்கள் ஓத்தழைப்பை வேண்டியும்..அரசங்காம் அவர்களுக்கு நலம் பயக்கவே என புரிதல் ஏற்ப்படுத்தவும் வெள்ளையனால் கொண்டு வரப்பட்டதுதான் “அரசு கள்ளர் பள்ளி”

  22. பொதுவாக தேவேந்திர குல மக்கள் யாருடனும் வீண் வம்பு சண்டைக்கு போகமாட்டார்கள்….ஆனால் ஒன்று யாரேனும் இவர்களை அடக்கவேண்டும் என்று நினைக்கும் போது தான் அவர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள நடத்தும் யுத்தத்தில் வெற்றி அல்லது வீரமரணம்………………

    • //பொதுவாக தேவேந்திர குல மக்கள் யாருடனும் வீண் வம்பு சண்டைக்கு போகமாட்டார்கள்//

      கடந்த தேவர் ஜெயந்தியில் பெட்ரோல் குண்டு கொல்லப்பட்ட அப்பாவி இளைஞர்கள் எந்த தேதியில் உங்களுடன் வம்புக்கு வந்தார்கள் என்று சொல்ல முடியுமா..?

      உங்களிடம் வம்பு செய்தவர்களிடம் பெட்ரோல் குண்டு வீச வீரமில்லாமல் தானே..சும்மா சென்ற இளைஞர்கள் மீது மறைந்திருந்து வேகம் காட்டமுடிந்தது..!

  23. ஆர்.தியாகு இனத்தால் ,நீங்களும் நாங்களும் வேற வேற தான் ஆனால் மொழியால் இருவரும் ஒன்று ……………….ஈழப்பிரச்சனையை கையாள்வோம்…………..இலங்கை தமிழர் விடுதலைக்கு ஒன்றுபடுவோம்………..

    • @மள்ளர் வம்சம் வீரா

      தமிழ் என்ற உணர்வு உங்களுக்கு மேலோங்கி இருக்குமானால் முதன்முதலில் நீங்கள் இந்த பிண்ணுட்டதை தான் இட்டிருக்க வேண்டும்.. இந்த பக்கத்தில் நீங்கள் இட்ட முந்தைய பிண்ணுட்டத்தை பாருங்கள் சுயபரிசோதனைக்கு பயனுல்லதாய் அமையும்.

      தமிழர்ணவு கொண்டிருக்கும் இந்த நிலையில் இதுப்போன்ற கட்டுரையும் பிரிவினை உருவாக்கும் என நினைவில் கொள்ளாமல் தாந்தோன்றி தனமாக வெளியிடும் இதுப்போன்ற கட்டுரையாளரும் தமிழ் பிரிவினை வாதியே..

  24. ///இம்மானுவேலைக் கொலை செய்தாரா?///

    அருமை அறிவு உணரா அன்பருக்கு, முதலில் தேவர் கைது செய்யப்பட்டது “தேசிய பாதுகாப்பு தடை சட்டத்தின்” படி தான். அதுவும் அப்பொழுது அவர் பாராளுமன்ற உறுப்பினர். கைது செய்தது சென்னை மாகாண காவல்துறை, காமராசர் முதலமைச்சர்.

    அப்பொழுதும் இம்மானுவேலின் கொலைக்கும் அவரின் கைதுக்கும் எந்த தொடர்பும் இன்றி தனித்தனி விசாரணையாகத் தான் இருந்தது. “கொலையில் தொடர்பிருப்பதாக சந்தேகப்படுவதற்கு கூட இடமில்லை” என்று தான் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட தேவர் அவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இன்னமும் சிலர் காமராசரின் அரசியல் சதிக்கு ஏன் தீனியாக இருக்கிறார்கள் என்று புரியவில்லை.

    முதலில் அவர் கைது செய்யப்பட்டது தொழிலாளர் பிரச்சனைக்காக (மகாலட்சுமி மில்), இரண்டாவது கைதும் தொழிலாளர் பிரச்சனைக்காக.

    அனைத்து மக்களுக்குமான இருபத்தி மூன்று தொழிற்சங்கங்களுக்கு தலைவர் தேவர் அவர்கள். அவரிடம் கைகோர்த்து செயல்பட்டது தோழர் ஜீவானந்தமும் தோழர். ப.ராமமூர்த்தியும். தேவர் தலைவர்,ஜீவானந்தம் துணைத் தலைவர் மதுரை பஞ்சாலை தொழிற்சங்கத்தில்.

    பார்வர்ட் ப்ளாக் என்பது முற்போக்கு சமதர்ம மக்களுக்கான கட்சி. போஸ் அவர்கள் தலைவராகவும் ஐந்து பொறுப்பாளர்களில் தென்னகத்துக்கு தேவரும் இருந்தனர். அவர்கள் எல்லாம் பேசியது செயலாற்றியது காலனியாதிக்க கொடூரம் அகற்றும் உலக அரசியல். காந்தியின் பட்டாபி சீத்தராமையவை எதிர்த்து போஸ் வென்றதும் ராஜாஜியை (காந்தியின் சம்பந்தியானவர்) எதிர்த்து காமராஜர் வென்றதும் இவர்களின் அரசியல் பணிகளில் சில.

    அரசியலுக்காக தேசம் கடந்து போரிட்டது ஒட்டு மொத்த மக்களுக்காக தன்னுடைய சுக போக அய்.சி.எஸ் பணியை துறந்து தேசத்திற்காக கடைசிவரை வாழ்ந்தவர் போஸ் அவர்கள். அதே போல் 32 1/2 சிற்றூர்கள் சொத்துகளுடன் மிகப்பெரும் நிலக்கிழாரை சுக போகமாய் வாழ்ந்திருக்க வேண்டியவர் மூன்று வேட்டி சட்டைகளோடு ஊர் ஊரை பயணம் செய்து காங்கிரஸ் வளர்த்தவர் தேவர். பேருந்து, ஒலிபெருக்கி இல்லா களங்களில் ஆன்மீகத்தையும் (விவேகானந்தரையும் வள்ளலாரையும், மண்ணின் பெருமையையும்) அரசியலையும் (காந்தியையும் போஸையும், பாரதத்தின் எதிர்காலத்தையும்) மக்களிடம் சென்று சேர்த்தவர் தேவர் திருமகனார். அதைத் தான் “தேவகுமாரன்” என்றார் ஈ.வே.ராமசாமி. “காங்கிரசை காத்தான்” என்றார் சத்தியமூர்த்தி.

    மறவர்களை விட பள்ளர்கள் அதிகம் இருக்கும் தொகுதியில் கடைசி வரை வெற்றி பெற்றவர் தேவர் திருமகன். காமராசரின் காவல் துறை சுட்டதில் இறந்தவர்கள் மறவரும், சேர்வையும், குடும்பனாரும் (பள்ளரும்) அடக்கம் என்பதை கவனிக்க வேண்டும்.

  25. ///குற்றப்பரம்பரை என்று எழுதுவதற்க்கு உங்களுக்கு கை வரவில்லை?????????? ///
    மக்களுக்கான மக்களோடு செய்யும் போராட்டம் தான் வெற்றி பெரும் என்பது தான் அவரின் குற்றபரம்பரசை சட்டம் நீக்குவதர்க்காக போராட்டமும், இன்றும் அவரை கொண்டாடும் உசிலபட்டி மக்களின் கள்ள பாசமும்.

    அறிவுள்ளவர்களுக்கு தெரியும் குற்றபரம்பரை சட்டத்தில் “கள்ளர், மறவர், சேர்வை, தொட்டி நாயக்கர், வன்னியர், பள்ளர், பறையர், குறவர்,, ” என பல சாதிகள் இருந்தனர் என்பது. முக்குலத்தோர் மட்டும் என்று மொத்தமாக சுருக்குவது முட்டாள்களின் பொய்வாதம், என்றும் சிறப்பு பெறாது.

    அறிவு தெளிவு வேண்டுமென்றால் தேடிப்படியுங்கள்.

  26. //கிழுவ நாட்டில் இருந்து வந்த சேதிபதி மன்னன் காசுல கட்டிய பள்ளிகளாப்பு???/ ///

    அது எங்கே இருக்குன்னு சொன்ன நல்லா இருக்கும்..
    “முத்துவடுகநாததேவரை” வடுகர், தெலுங்கர், வந்தேறி என்று சொன்னவர்கள் தானே நீங்கள் எல்லாம்.!

    இன்றும் இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டையில் அவர்கள் ஆரம்பித்த கல்லூரிகள் தான் கம்பீரமாய் அவர்களின் பெயரை உச்சரித்துக் கொண்டிருக்கிறது,

    நீங்கள் என்ன வேண்டுமானால் சொல்லலாம்!!!! எவன் கேட்பது என்பது தான் பிரச்னை.

  27. Thiru Thaniyan, In the name itself Muthu Vaduka Nadhan we can found as Vaduka means Telugu, you have to learn history in between 1400 to 1700 A.D………and how the names like Vijaya….Ragunadha…….Raya……..came…..

    • புதுமைராஜாவுக்கு புதுமையாய் கதை சொல்லுதல் பிகவும் பிடிக்கும் போல…

      உங்களில் உள்ள பெயர் இமானுவல், ஜான்பாண்டியன்,கிருஷ்த்துதாஸ் காந்தி இது தமிழ் பெயரா..இல்லை என்பதால் இவர்களை ஆங்கிலேயர்கள் என எடுத்துக்கொள்வோமா..?

      ஆங்கிலேயர்கள் ஆட்சியின் காரணத்தால் அவர்கள் பெயரை இங்குள்ளவர்கள் தழுவுக்கொண்டார்கள்..அப்படி வந்ததே கிருஷ்ணசாமி என்பதும்

      அதுப்போலவே அன்று நாயக்கரின் ஆட்சியின் பாதிப்பால் உருவானதே வடுகன் என்ற சொல்லும் வார்த்தையும் பெயரும்..

  28. “குற்றபரம்பரை சட்டத்தில் “கள்ளர், மறவர், சேர்வை, தொட்டி நாயக்கர், வன்னியர், பள்ளர், பறையர், குறவர்,, ” என பல சாதிகள் இருந்தனர் என்பது”

    அப்படி என்றல் கள்ளனுக்கு மட்டும் எப்படி ” கள்ளர் சீர்திருத்த அமைப்பு / நல வாரியம் ” என்று தனியாக அமைப்பு தொடங்கி கள்ளர் சாதி மக்கள் படித்து முன்னேற மட்டுமே தனியாக பள்ளி கூடம் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுகிடு செய்து உங்களை முன்னேற வழி செய்கிறது .

    நீங்கள் சொல்லுவது போல் மற்ற சாதிக்கும் “குற்றபரம்பரை சட்டடம் ” இருக்குமெனில் அவர்களுக்கு ஏன் அந்த சலுகை வழங்கப்படவில்லை.

    தமிழ்நாட்டில் எல்லா சாதிக்கும் ஒரு சலுகை என்றால் உங்களுக்கு 2 சலுகைகள் நீங்கள் ரொம்ப லக்கி ”

    மேலும் பொது தலத்தில் மட்டும்தான் நீங்கள் கள்ளன் இல்லை என்று வாதிடுகிரிகள் அனால் உங்கள் சாதி வலைதளங்களில் நீங்க கள்ளர் திருட்டை தொழிலாக கொண்டவர்கள் என்று பெருமை பேசுகிறிர்கள். போங்க நீங்களும் உங்கள் விவாதமும்

  29. தேவர் என்ற சொல்லை சாத்திய பேராக பயன்படுத்த தடை பண்ணவேண்டும்.

  30. சாதிவெறி பிடித்த வினவு சாதி வெறி பற்றி எழுதுவதுதான் வேடிக்கை. அது சரி, உங்க செய்தியாளர் எல்லாருமே தலித்கள்தானா அல்லது வேறு சாதிக்காரர்களும். இருக்கிறார்களா?

  31. போன குருபூஜையில் போலீஸ் தேவர்கள் மீது அடக்குமுறையை செய்ததை எல்லாம் மறந்து விட்டீர்களா?

  32. சரி தேவர் என்ற சாதிப் பெயரை தடை செய்வீர்கள், தலித் என்ற சாதிப் பெயரை தடை செய்வீர்களா? ஹாஹாஹா என்ன ஒரு முற்போக்குச் சிந்தனை?

  33. //நீங்கள் சொல்லுவது போல் மற்ற சாதிக்கும் “குற்றபரம்பரை சட்டடம் ” இருக்குமெனில் அவர்களுக்கு ஏன் அந்த சலுகை வழங்கப்படவில்லை.//

    அவர்களுக்கும் செய்திருக்கிறார்கள்.

  34. தலித் என்றால் சாதி வெறி இல்லையாம். தேவர்கள் என்றால் சாதி வெறியாம். நல்லா இருக்குய்யா உங்க நியாயம்.

    • தலையை கொடுத்தவனும், தலையை எடுத்தவனும் உன்னாய்யா… சாதி கட்டமைப்பில் பெரும்பாண்மை மக்களை ஆதிக்கம் செய்யும் சாதி எது? அச்சுறுத்தும் சாதி எது? அச்சாதிகளை ஆதிக்க சாதி என்றோ அதில் ஈடுபடுபவர்களை ஆதிக்க சாதிவெறியர்கள் என்றோ என சொன்னால் அதில் என்ன தவறு இருக்க முடியும்.

      • @அப்புக்குட்டி

        அப்படி ஆதிக்க சாதிய என நீங்கள் சொல்ல விருப்பினால் தமிழ்சாதிகளில் உள்ள எல்லா உயர்சாதிகளையும் அப்படி சொல்ல வேண்டும் ஆனால் தேவர்களை மட்டும் ஏதோ சமூககூட்டமைப்பின் விரோதியாக கருத்திடுவது நடுநிலையாளர்களுக்கு நியாயமானதல்ல..!

        உதாரணம்:-

        “உத்தபுரம்” கிராமம் உசிலப்பட்டி அருகில் உள்ளது என்றவுடன் எல்லோரும் தேவர் கிராமம என நினைத்துவீட்டீர்கள்..”உத்தபுரம்” என்பது முழுக்க முழுக்க “பிள்ளைமார்கள்” கிராமம்..அங்கு பள்ளர்களுகும் அவர்களுகும் நடந்தது என்ன என்பது அறீவீர்கள்.. (பிள்ளை என சாதிப்படியலில் எல்லை என்பதால் …ஜயகோ என அலறவேண்டாம்..ஏன்னெனில் சாதிப்படியலிருந்து பிறந்தததல்ல பட்டங்கள்..60 ஆண்டுகாலமாகதான் ஜாதிப்பட்டியல்..10000000 ஆண்டு காலமாக இருக்கிறது பட்டம்)

      • //தலையை கொடுத்தவனும், தலையை எடுத்தவனும் உன்னாய்யா…//

        ஆமாம் அப்புக்குட்டி, இதையேதான் நாங்களும் கேட்கிறோம். எவன் தலையை எடுக்கிறானோ அவனுக்கு மட்டும்தானே தண்டனை தரவேண்டும்? அவன் பரம்பரைக்கே கொடுப்போம் என்றால் எப்படி? அதைத்தான் வினவு செய்ய முயற்சிக்கிறது. அதற்குத்தான் நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம்.

        • பெருமாளு உங்க வார்த்தைகளுக்கு – அவையெல்லாம் பயங்கரமான, பதிலளிக்க சிரமமாயிருக்கும் கேள்விகள்னு கருதும் உங்கள் அப்பாவித்தனத்தை நினைத்தால் உண்மையில் பாவமாயிருக்கிறது – தனித்தனியாக பதில் எழுதும் அளவுக்கு நேரமில்லை. அதனால் உங்களை கேள்விகளுக்கு நேரில் பதிலளிக்க விரும்புகிறோம். இதில் நீங்கள், தியாகு, புலி அனைவரும் கூட கலந்து கொள்ளலாம். இல்லை தனித்தனியாக கூட வரலாம். நேரில் பேசி உங்களை நெறிப்படுத்துகிறோம். எழுதி மாளாது. சென்னையில் சந்திக்கலாம்.
          எமது புதிய கலாச்சாரத்தின் அலுவலக முகவரி:
          Puthiya Kalacharam
          Address – 16, Mullai Nagar Shopping Complex,
          Second Avenue, Ashok Nagar,
          Chennai 600083.
          Tamilnadu, India
          Mobile – (91) 99411 75876
          தொலைபேசியில் அழைத்து உறுதி செய்துவிட்டு வரவும். எங்களை நேரில் சந்தித்தால் உங்கள் வாழ்க்கையில் வியக்கத்தக்க அளவில் மாற்றங்கள் நடக்கும். நம்புங்கள்!

          • வினவு சார்,

            //பெருமாளு உங்க வார்த்தைகளுக்கு – அவையெல்லாம் பயங்கரமான, பதிலளிக்க சிரமமாயிருக்கும் கேள்விகள்னு கருதும் உங்கள் அப்பாவித்தனத்தை நினைத்தால் உண்மையில் பாவமாயிருக்கிறது //

            நாங்க எல்லாம் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் கிடையாது. ஆனா இந்த சின்னப் புள்ளைகளுக்கே பதில் சொல்ல முடியவில்லையே என்பதுதான் ஆச்சரியம்.

            எல்லாருக்கும் ஆண்டவன் 24 மணி நேரம்தான் கொடுத்திருக்கிறான்.

            //– தனித்தனியாக பதில் எழுதும் அளவுக்கு நேரமில்லை. அதனால் உங்களை கேள்விகளுக்கு நேரில் பதிலளிக்க விரும்புகிறோம். இதில் நீங்கள், தியாகு, புலி அனைவரும் கூட கலந்து கொள்ளலாம். இல்லை தனித்தனியாக கூட வரலாம். நேரில் பேசி உங்களை நெறிப்படுத்துகிறோம். எழுதி மாளாது. சென்னையில் சந்திக்கலாம்.//

            ஹாஹாஹா

            என்னவோ போங்க, பெந்தகொஸ்தே பாஸ்டர் மாதிரி பேசுறீங்க.

            அதாவது நாங்கள்
            சாதிப் பெருமை பேசித் திரிபவர்கள்,
            தீண்டாமையை கடைப்பிடிப்பவர்கள்,
            சாதிவெறியர்கள்,
            கொலைகாரர்கள்
            என்று ஏற்கனவே தீர்மானித்துவிட்ட நீங்கள் எங்களை நெறிப்படுத்தப் போகிறீர்களா?

            இந்த அழைப்பே ஏற்றுக் கொண்டாலே நாங்கள் நெறியற்றவர்கள் ஆகிவிடுவோமே.

            //எமது புதிய கலாச்சாரத்தின் அலுவலக முகவரி:
            Puthiya Kalacharam
            Address – 16, Mullai Nagar Shopping Complex,
            Second Avenue, Ashok Nagar,
            Chennai 600083.
            Tamilnadu, India
            Mobile – (91) 99411 75876//

            குறித்துக் கொள்கிறோம் நேரம் வந்தால் வருகிறோம்.

            //தொலைபேசியில் அழைத்து உறுதி செய்துவிட்டு வரவும். எங்களை நேரில் சந்தித்தால் உங்கள் வாழ்க்கையில் வியக்கத்தக்க அளவில் மாற்றங்கள் நடக்கும். நம்புங்கள்!//

            திரும்பவும் பெந்தகொஸ்தே பாஸ்டரின் பிரச்சாரமாக உள்ளது.

            வணக்கம்.

            • நேரில் சந்தித்து பேசுவதற்கு பயப்படுகிறீர்களா? ஏன் அழைப்பை நிராகரிக்கிறீர்கள்? பெந்தகோஸ்தேகாரர்களும் உங்களது பாட்டனார்கள் வரிசையில்தானே வருகிறார்கள்? அது என்ன நேரம் வந்தால் வருகிறோம் என்று எளக்காரமாக எழுதுகிறீர்கள? எங்களது நேரம் எவ்வளவு முக்கியத்துவதம் வாய்ந்தது தெரியுமா? உங்களைப் போன்ற அப்பாவிகளை ஏதாவது நல்வழிப்படுத்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுக்காக அவசர, முக்கிய வேலைகளை தள்ளிவிட்டு சந்திக்கலாம் என்றால் அது எவ்வளவு பெரிய வாய்ப்பு? அந்த வாய்ப்பை ஏன் இழக்கிறீர்கள? திரும்பவம் சொல்கிறோம், நீங்கள் எங்களை வந்து சந்தித்தால்தான் உங்களது வாழ்க்கையில் மிகப்பெரிய நல்ல திருப்பம் நடக்கும், அதை கெடுத்துக் கொள்ளாதீர்கள். வாருங்கள், மீண்டும் அழைக்கிறோம்.

              • எங்கள் இடத்திற்கு வருவது பயமாக இருந்தால் உங்களது இடத்தை தெரிவியுங்கள். சிங்கிளாகவே உங்களை பண்படுத்தும் வேலையினை நிறைவேற்றும் பொருட்டு வருகிறோம்.

                • ஐயா வினவு,

                  எங்களுக்கு பயம் எல்லாம் கிடையாது. உங்கள் அலுவலகத்தில் வைத்தே சந்திக்கலாம்.

                  ஆனால் முதலில் நீங்கள் இப்படி ஒட்டுமொத்தமாக தேவர் சாதி வெறி என்று எழுதுவதை நிறுத்த வேண்டும். அதற்கு ஒப்புக்கொண்டால் சந்திக்கலாம். அதற்கு பிறகு நீங்கள் உங்கள் கருத்துக்களை நீங்கள் சொல்லுங்கள் எங்கள் கருத்துக்களை நாங்கள் சொல்கிறோம்.

                  எந்த விஷயங்களில் ஒத்துப்போகிறோம் என்று பார்ப்போம்.

                  தயவுசெய்து நெறிப்படுத்துகிறோம், பண்படுத்துகிறோம் என்ற வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள்.

                  அது உங்களையும் எங்களையும் மேலும் பிரிக்கும்.

                  எந்த விஷயம் குறித்தும் பேச நாங்கள் தயார். நீங்கள் தயாரா என்று சொல்லுங்கள்.

                  • திரு மதுரை வீரன், திரு தியாகு, திரு மேகநாதன்,

                    மற்றும் இந்த விவாதத்தில் பங்கேற்க சொந்தங்கள் அனைவரும்,

                    வினவுவின் இந்த முன்மொழிவு பற்றிய தங்களது கருத்துக்களை தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்.

                  • தேவர் சாதிவெறி மட்டுமல்ல, வன்னிய சாதிவெறி, கவுண்டர் சாதிவெறி, பார்ப்பன சாதி வெறி என்று எல்லா சாதிவெறிகளையும் எதிர்த்து நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறோம். இந்த வெறிகள் அந்தந்த சாதிகளில் உள்ள மிகச்சிலர் மட்டும்தான் சாதி சங்கம் என்ற பெயரில் வைத்து தொழில் செய்கிறார்கள். ஆகவே ஒருவர் அந்த சாதியில் பிறந்தவர் என்பதாலேயே அவரை சாதிவெறியர் என்று நாங்கள் கூறுவதில்லை. மேலும் உங்களுக்கும் எங்களுக்கும் இருக்கும் வேறுபாடு சாதி குறித்து. அதில் எது சரி, யார் சரி என்பது விவாதத்தின் மூலம்தான் தெரிய வரும். பேசுவதற்கு முன்பேயே கருத்துக்களுக்கு தடை போடுவது எப்படி சரி? நீங்கள் தேவர் சாதி பெருமிதம், கௌரவம், புகழ் குறித்து பேசும் போது, போது நாங்கள் பேசுவதற்கும், எழுதுவதற்கும் நீங்கள் மட்டும் விதி போட்டால் எப்படி பெருமாள் சரி?

                    எங்களுக்கு வரலாறு தெரியாது, பிழைப்புவாதிகள், கிட்டத்தட சனியன்கள், சாதிவெறியர்கள் என்றெல்லாம் வசைபாடியிருக்கிறீர்கள். அதையெல்லாம் வாபஸ் வாங்கினால்தான் பேசுவோம் என்று நாங்கள் கூறவில்லையே? பிறகு தேவர் சாதிவெறி என்று எழுதக்கூடாது என்று நீங்கள் மட்டும் நிபந்தனை போடுவது சரியா?

                    • ஐயா வினவு,

                      நீங்கள் உங்களை மட்டுமல்ல மற்ற சாதிகளையும் பேசியுள்ளோம் என்ற வாதத்தை ஏற்க முடியாது.

                      நான், சனியன் என்று குறிப்பட்டது என்னைத்தான் உங்களையல்ல. சமூக நோக்கம் இல்லாமல் சமூகங்களிடையே மோதல்களை ஏற்படுத்தும் வகையில் எழுதும்போது அதை பிழைப்பு வாதம் என்றே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் சாதிவெறி என்று ஒட்டுமொத்த தேவர்களையும் குற்றம் சாட்டும்போது உங்களைக் குற்றம்சாட்டுவதில் என்ன தவறு?

                      நீங்கள் சொல்லும் சந்திப்பு என்பது எதற்காக? வெறும் வெட்டிப் பொழுதுபோக்குக்காகவா? இல்லை உண்மையிலேயே சமூக அக்கறையில்தானா என்று தெளிவுபடுத்துங்கள்.

                      எங்களை ரோட்டில் போகும் ஒரு சாதிவெறியன் என்று நினைத்தால் அதனை மாற்றிக் கொள்ளுங்கள். முதலில் நான் யார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

                      அறிமுகம்

                      பெயர் – பெருமாள் தேவன்

                      பிறந்த தேதி – 25-05-1972

                      ஊர் – தேவதானப்பட்டி, பெரியகுளம் (வட்டம்), தேனி (மாவட்டம்)

                      கல்வி – பட்டம் (அரசியல் அறிவியல் – முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி, உசிலம்பட்டி)

                      பேச, படிக்க, எழுத அறிந்த மொழிகள் – தமிழ், ஆங்கிலம், இந்தி

                      பணி வகித்தது – நிருபர், துணை ஆசிரியர், பொறுப்பாசிரியர் (மராத்திய முரசு, தினபூமி,1995-2002)

                      தற்போது – தன்னிச்சையான தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்

                      வகித்த பொறுப்பு – தலைவர், சயான் கோலிவாடா, மும்பை பிரிவு தலைவர், சிட்டிஸன் ஃபோரம் மஹாராஷ்டிரா (பொதுநல அமைப்பு)

                      களப்பணி – ரத்ததான முகாம், பான் கார்டு முகாம், வாக்காளர் அட்டை பெற உதவி

                      அணித் தலைவர், மும்பை சயான் மருத்துவமனையில் சுகாதார விழிப்புணர்வு முகாம்,நான்கு மாதங்கள், (எந்தவொரு பொதுநல அமைப்பினாலும், இந்த மருத்துவமனையில் ஒரு வாரத்திற்கு மேல் களப்பணி செய்ய இயலவில்லை)

                      வகித்த அரசியல் பதவி – பொதுச் செயலாளர், மஹாராஷ்டிரா மாநில இந்திய ஜனநாயக கட்சி

                      குடும்பம் – மனைவி, 2 ஆண் குழந்தைகள்

                      பிடித்த விஷயங்கள் – அரசியல், ஆன்மீகம், பொருளாதாரம்

                      பிடித்த விளையாட்டு – சதுரங்கம்

                      கைவந்த கலை – ஓவியம் வரைதல் (இப்போது நேரம் ஒதுக்க முடியாத காரணத்தால் முயற்சிப்பது இல்லை)

                      பிடிக்காத விஷயங்கள் – வறுமை, அசுத்தம், அநாகரீகம்

                      வசிப்பிடம் – மும்பை

                      மொபைல் – 09833753808

                      apthevan@gmail.com
                      ap_thevan34@rediffmail.com
                      ap_thevan2003@yahoo.co.in

                      Skype Id: apthevan

                      http://perumalthevan.blogspot.in

              • என்ன வினவு சார்,

                ஜோக் அடிக்கிறீங்க. பயமா? அது எங்க ரத்தத்துலயே கிடையாது.

                உங்கள் அழைப்பை நாங்கள் ஏற்க வேண்டுமானால் நீங்கள் எங்கள் கோரிக்கைகளை ஏற்க வேண்டும். அதற்கு தயார் என்றால் சந்தித்துப் பேசலாம்.

                எளக்காரம் எல்லாம் கிடையாது. நாங்கள் உங்கள் கட்டுரையில் பதிவு செய்கிறோம் என்பதை வைத்து நாங்கள் வேலை இல்லாதவர்கள் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?

                நீங்கள் எங்கள் கோரிக்கைகளை ஏற்பதாக இருந்தால் சொல்லுங்கள். எங்கள் உறவுகளிடம் பேசிவிட்டு சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறேன்.

                • உங்கள் ரத்தத்தில் மட்டுமல்ல, சிந்தனையிலும் பயம் வந்து விட்டது. இல்லையென்றால் உறவுகளிடம் சொல்லி சந்திப்பதாக எதற்கு டபாய்க்க வேண்டும்? ஆக வினவு தோழர்களை தனியாக சந்திப்பதற்கு உங்களுக்கு பயம் இருக்கிறது. அதனால் உறவுகளிடம் சொல்லி இனோவா கார், இருபது பேர் என்று செட்டப்பாக சந்திக்க மட்டும் விரும்புகிறீர்கள். எங்கள் கோரிக்கைகளை நீங்கள் ஏற்றால்தான் நாங்கள் உங்களை சந்திக்கிறோம் என்று நாங்கள் சொல்லாத போது நீங்கள் மட்டும் உங்கள் கோரிக்கைகளை ஏற்றால்தால்தான் சந்திப்போம் என்று கோர முடியாதல்லவா? ஐயா, நீங்கள் சாதி குறித்து ஒரு அபிப்பிராயம் அது தப்பானது என்றாலும் வைத்திருக்கிறீர்கள், நாங்கள் சாதியை மறுத்து ஒரு கருத்து வைத்திருக்கிறோம். இரண்டில் எது சரி என்பதை பேசித்தானே முடிவெடுக்க முடியும்? அதை பேச வாருங்கள் ஏன்றால் ஏனய்யா டிமிக்கி கொடுக்கிறீர்கள்? இவ்வளவுதானா உங்களது வீரம்? ஒருவேளை உங்கள் கருத்தால் எங்களை வென்று காட்டிவிட்டால் உங்களுக்கு அது நல்லதுதானே? இத்தனைக்கும் வரலாறு, புவியியல், இயற்பியல், பொருளாதாரம், கணக்கு, பிணக்கு என்று எல்லா சப்ஜக்ட்டுகளிலும் முனைவர் பட்டம் பெற்று இந்த உலகிலேயே நம்பர் ஒன் அறிவாளி நீங்கள்தானே, பின்னும் ஏன் பயம்? வாங்களய்யா சந்திப்போம்.

                  • ஐயா வினவு,

                    நீங்கள் எங்களைப் பற்றி ஒட்டுமொத்தமாக இழிவாக அவமானப்படுத்தி எழுதுவீர்கள். அதையே சரி என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும்போது எதற்காக சந்திக்க வேண்டும்?

                    நாங்கள் மக்கள் சாதியில் இருப்பதை ஏற்றுக் கொள்கிறோம். அதேபோல சாதியில் இருந்து வெளியேறுவதையும் ஏற்றுக் கொள்கிறோம். அது அவரவர் விருப்பம். ஆனால் வெளியில் ஒன்று பேசி உள்ளே ஒன்றாக இருக்கக் கூடாது.

                    நீங்கள் சாதி மறுப்பாளர்கள் என்றால் நீங்கள் சாதியிலிருந்து வெளியேறிவிட்டீர்கள் என்று நிரூபியுங்கள். சாதி கெட்டது என்றால் நிரூபியுங்கள்.

                    ஆனால் இந்த வாதத்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் எங்களை நெறிப்படுத்தவும் பண்படுத்தவும் போவதாகவும் சொல்கிறீர்கள்.

                    அப்படியென்றால் நாங்கள் முட்டாளாக இருக்கிறோம் என்று சொல்வதாகத்தான் பொருள். எங்களுக்கு உங்கள் போதனை தேவையில்லை.

                    முடிந்தால் வாக்குவாதம் செய்து பாருங்கள். வாக்குவாதத்தை எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த வாக்குவாதத்தில் நாங்கள் பங்கேற்க வேண்டுமானால் நீங்கள் எங்களை மதிக்க வேண்டும். அதற்கு இனி தேவர் சாதிவெறி என்று எழுதமாட்டோம் என்று வாக்குறுதி தரவேண்டும். அப்படி இல்லை என்றால் சந்திப்போம் வேண்டாம். போதனையும் வேண்டாம். உங்கள் அறிவு உங்களுக்கு. எங்கள் அறிவு எங்களுக்கு.

                    நீங்கள் ஒரு ஊடகத்தை பொறுப்போடு நடத்த வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். வேறொன்றும் எங்களுக்குத் தேவையில்லை.

                    • ஐயா, பெருமாள் நாங்கள் நக்சலைட்டு கட்சியைச் சேர்ந்தவர்கள். நாட்டு மக்களின் விடுதலைக்காக எங்கள் வாழ்க்கையை கொடுத்து விட்டு போரடி வருபவர்கள். சாதி, மொழி, மதம், இனம் போன்ற பாகுபாடுகளெல்லாம் எங்களுக்கு இல்லை. அந்த பாகுபாடுகள் மக்களை பிரிப்பதற்கு ஆளும் வர்க்கம் பயன்படுத்து வருகிறது. அதற்கு பலியாக கூடாது என்றுதான் பிரச்சாரம் செய்கிறோம். உங்கள் மறுமொழிகளில் எங்களைப் பற்றி எத்தனை வசவுகள், இழிமொழிகள், கிண்டல்கள்,கெட்ட வார்த்தைகள்? அவற்றில் சில வெளியிடவில்லை. இத்தனை பேசிய உங்களை இதெல்லாம் வாபஸ் வாங்கினால்தான் சந்திப்போம் என்று சொன்னோமா? இப்போது உண்மையில் ஒருவரை அவமதிப்பது யார்? எங்களை முட்டாள்கள், சாதிவெறியர்கள் என்று நீங்கள் பேசுவதற்கு நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால் உங்களை நாங்கள் பண்படுத்துகிறோம் என்று சொன்னால் உங்களுக்கு கோபம் வருகிறது. எனில் இங்கே நியாயம் யாரிடம் இருக்கிறது? கண்டிஷன் போடாமல் சந்தித்து பேச வாருங்கள் என்று அழைத்தால் ஏதோ இந்தியா பாக்கிஸ்தான் பேச்சு வார்த்தை போல ஆகிவிடுகிறதே?

                    • பெருமாளு, ஒட்டு மொத்த தேவர் சாதி மக்களுக்கும் நீங்களோ இல்லை வாண்டையரோ, சேதுராமனோ, தார்பாய் முருகனோ யாரும் அத்தாரிட்டி இல்லை. அத்தகைய பதவிகளை நாங்களும் சரி, தேவர் சாதி மக்களும் வழங்கவில்லை. அதனால் நீங்களே தேவர்சாதி மக்களுக்கு தலைவராக நியமித்துக் கொண்டு பேசுவது தவறு. மேலும் தேவர் சாதியில் உள்ள உழைக்கும் மக்களுக்கு நாங்கள்தான் பிரதிநிதி. நக்சலைட்டுகள் என்ற முறையில் தேவர் சாதி உழைக்கும் மக்களுக்கும், ஏழைகளுக்கும் விடிவைத் தரப்போவது நாங்கள்தான். நீங்கள் அல்ல. தேவர் சாதியில் உள்ள திடீர் பணக்காரர்கள், சுயநிதி கல்லூரி முதலாளிகள், கந்து வட்டி, கட்டைப்பஞ்சாயத்து கேடிகள் இவர்கள்தான் சாதிவெறியை தூண்டிவிட்டு குளிர்காய்கிறார்கள். இவர்களை எங்கள் தலைமையில் தேவர் சாதி உழைக்கும் மக்களே அடித்து விரட்டுவார்கள். ஆகவே சாதிவெறிக்கு எதிர்காலம் இல்லை. இதெல்லாம் உண்மைதானா என்று தெரியவேண்டுமென்றால் நேரில் பேச வாருங்கள்!

                    • ஐயா வினவு,

                      எனது வலைப்பூவில் தமிழ்தேசிய அரசியலமைப்புச் சட்டம் முன்னோட்டம். தமிழர்களுக்கான சாதி மத கொள்கை என்று இரண்டு கட்டுரைகள் எழுதியுள்ளேன். நேரம் இருந்தால் அவற்றைப் படித்துப் பாருங்கள். அதன் பின்னர் என்னை அழையுங்கள் அல்லது உங்களை நான் அழைக்கிறேன். அதன் பிறகு ஒட்டுமொத்த தமிழரின் நலம் குறித்துப் பேசலாம்.

                    • //நாங்கள் நக்சலைட்டு கட்சியைச் சேர்ந்தவர்கள். நாட்டு மக்களின் விடுதலைக்காக எங்கள் வாழ்க்கையை கொடுத்து விட்டு போரடி வருபவர்கள். சாதி, மொழி, மதம், இனம் போன்ற பாகுபாடுகளெல்லாம் எங்களுக்கு இல்லை. அந்த பாகுபாடுகள் மக்களை பிரிப்பதற்கு ஆளும் வர்க்கம் பயன்படுத்து வருகிறது. அதற்கு பலியாக கூடாது என்றுதான் பிரச்சாரம் செய்கிறோம்.//

                      அப்படியானல் நீங்கள் ஜனநாயகத்திற்கு எதிரானவர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா? நீங்கள் பாகுபாடு இல்லாத சமுதாயத்தை எப்படி உருவாக்குவீர்கள்? உங்கள் கொள்கை என்ன? நீங்கள் அனைத்து மக்களையும் சமமாக நடத்துவீர்கள் என்று என்ன உத்தரவாதம்?

                      நான் ஜனநாயகத்தில் நம்பிக்கை உடையவன். எதைச் செய்தாலும் செய்யும் முன் மக்களிடம் கூறி அவர்களது ஆதரவைப் பெற்றுத்தான் செய்ய வேண்டும் என்று நினைப்பவன். ரகசியத் திட்டங்கள், பூடகமான, மறைபொருளான இயக்கங்கள் கருத்துக்களால் மக்களுக்கு சிறப்பாக எதையும் செய்ய முடியாது.

                      எனவே அடிப்படையிலேயே உங்களுக்கும் எங்களுக்கும் வேறுபாடு உள்ளது.

                  • @வினவு

                    உங்களுக்கு வீரம் இருக்கும் எனில் சொல்லுங்கள் நான் தனியாக வருகிறேன்.. நீங்கள் கும்பலாக இருந்தாலிம் சரி கூட்டமாக இருந்தாலும் சரி..

                    கடைசியா கும்பலா நல்ல குடிச்சிக்கோ…சாப்பிட்டுக்கோ…_________________

                    நான் பாக்குற நாள்தான் உன் கும்பலுக்கு கடைசி நாளா இருக்கும்.

          • //தொலைபேசியில் அழைத்து உறுதி செய்துவிட்டு வரவும். எங்களை நேரில் சந்தித்தால் உங்கள் வாழ்க்கையில் வியக்கத்தக்க அளவில் மாற்றங்கள் நடக்கும். நம்புங்கள்!///

            ஆமாம் வியக்கதக்க மாற்றம் நடக்குமா?..
            பரலோகத்தில் இருந்து பரமபிதா வருவாரா..?

            ஏற்கணவே எங்க ஆளுங்க உங்க கட்சியில் சேர்ந்து வீட்டுக்குள் போகமுடியாம கெடக்குறாங்க..நாங்க உங்க கூட சேர்ந்தா..ஊருக்குள்ள போகமுடியாது…

            Already i knew your office…

            (எடிட் செய்யப்பட்டது)

  35. சாதி வெறி பற்றி பேசும் வினவே, தலித்கள் என்றைக்காவது தங்கள் சாதியை விட்டு வெளியேறுவார்களா? இல்லை, அவர்கள் மட்டும் தங்கள் சாதியை சான்றிதழில் பத்திரப்படுத்திக் கொண்டு மற்றவர்களை சாதியை விட்டு வெளியேறச் சொல்வார்களா?

  36. //நீங்கள் சொல்லுவது போல் மற்ற சாதிக்கும் “குற்றபரம்பரை சட்டடம் ” இருக்குமெனில் அவர்களுக்கு ஏன் அந்த சலுகை வழங்கப்படவில்லை.

    அவர்களுக்கும் செய்திருக்கிறார்கள். //

    @பெருமாள் தேவன் எந்த சாதிக்கு கள்ளர் சீர்திருத்த நலவாரியம் முலம் சலுகை கிடைக்கிறது என்பதை தெளிவுபடுத்தமுடியுமா

    • //தலித் என்றால் சாதி வெறி இல்லையாம். தேவர்கள் என்றால் சாதி வெறியாம். நல்லா இருக்குய்யா உங்க நியாயம்.// ஆஹா …இதுவல்லவோ அறிவு.
      தலித் என்று ஒதுக்கி வைத்து வன்கொடுமைகள் செய்யும் போது அதை எப்படிப்பா சொல்லுவது.மனிதர்கள் என்பதற்காக தேவர்கள் சாதி வெறியை காட்டினார்கள் என்று சொல்லலாமா?
      //தலித்கள் என்றைக்காவது தங்கள் சாதியை விட்டு வெளியேறுவார்களா?// சீரியஸா கேக்குறேன், உனக்கு மூளை என்ன முதுகுல இருக்கா?
      இவளோ நாள் சாதியை காட்டிதானே கொடுமை செய்தீர்கள். இன்னைக்கு திடிருன்னு நான் தலித் இல்லைன்னு சொல்ல சொன்னா பிறகு எப்படி நியாயம் கிடைக்க செய்ய முடியும்.?
      மொதல்ல வெறி பிடித்த நீ உன் பேரில் இருக்கும் சாதியை எடு பிறகு கேள்வியெல்லாம் கேக்கலாம்.

  37. சீர்மரபினர் வாரியம் என்பது கைரேகை சட்டத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து சாதிகளுக்கும் உரியது..
    தாழ்த்தப்பட்டவர்களில் ஒரு பிரிவான “காலாடி” இனமும் இதில் அடக்கம்..முத்திரையர்,முக்குலத்தோர்,தெலுங்குபட்டி செட்டிகள் ,ஆதிதமிழர்,நாயக்கர்கள்,கவுண்டர்கள் மற்றும் பலர்

    இதில் முக்குலத்தோரில் பிரமலைக்கள்ளர்கள்..இராமநாதபுரம் மறவர் மற்றும் அகமுடையார்கள் மட்டுமே இச்சட்டத்தால் பாதிப்புக்கு உள்ளார்னார்கள்

    கவுண்டரில் ஊராளிக் கவுண்டர்கள் மட்டும் பாதிக்கப்பட்டார்கள்

    ஆதி தமிழர் எனும் குறவர் (அரசங்க பட்டியல் இப்படித்தான் சொல்லு) முழு பிரிவுகளும் பாதிக்கப்பட்டது.

  38. //எந்த சாதிக்கு கள்ளர் சீர்திருத்த நலவாரியம் முலம் சலுகை கிடைக்கிறது என்பதை தெளிவுபடுத்தமுடியுமா//

    கள்ளர் பள்ளிகளில் எல்லாச் சாதியினரும் படிக்கிறார்கள்.

  39. ஒரு தலித் தனது உரிமைக்காகப் போராடினால் அது உரிமைப் போராட்டம். ஒரு தேவர் தனது உரிமைக்காகப் போராடினால் அது சாதி வெறி. – ஹிஹிஹி நாங்கதான் முற்போக்கு பத்திரிகையாளர்.

    • திரு பெருமாள் அவர்களே, 2000 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் இடம், புதைக்கும் இடம் போன்றவற்றில் ஓதுக்கி வைக்க பட்டிருக்கும் எங்களுக்கு உரிமை வேண்டும் என கேட்கிறோம்., ஆனால் நீங்கள் எந்த உரிமை உங்களிடம் இல்லை என்று கருதுகிறேர்கள். எந்த உரிமை காக போரடுகிறேர்கள்
      இந்த மறுமொழி தங்களை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் (ஹி ஹி ஹி என்று மறுமொழி கூறினாலும் மன்னிப்பு கேட்பது எனது கடமை, மனிபதும் மன்னிக்காமல் இருப்பது தங்கள் உரிமை)

  40. ஆனால் ஒரு விஷயத்துல இந்த தலித் இணையங்களை பாராட்டலாம். இவர்களின் செயல்களால்தான் இன்றைக்கு தேவர்கள் மத்தியில் எழுச்சியும் விழிப்புணர்வும் ஏற்பட்டு வருகிறது. அதற்கு தேவர்கள் வினவு போன்ற தளங்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

  41. தமிழகத்தில் இன்று தலித்களின் சாதிவெறியை கண்டு பொறுக்காமல்தான் தலித் அல்லாதோர் கூட்டமைப்பு உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. வாழ்க தலித் முற்போக்கு ஆசாமிகள்.

  42. தேவர் என்பது பட்டம் இது மக்களின் செயற்பாடுகளை பொருத்து அல்லது உயர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு அவர்களை கௌரவிக்கும் பொருட்டு அவர்களுக்கு சூட்டபடுகிறது . இந்த பட்டம் எந்த சாதிக்கும் சொந்தமானது அல்ல .ஆகவே தேவர் என்ற பட்டதை சாதிய பெயராக பயன்படுத்தபடுவதை தடை செய்யவேண்டும்.

  43. //சரி தேவர் என்ற சாதிப் பெயரை தடை செய்வீர்கள், தலித் என்ற சாதிப் பெயரை தடை செய்வீர்களா? ஹாஹாஹா என்ன ஒரு முற்போக்குச் சிந்தனை?//

    Yarum dalith enkira solladalai aatharikkavillai.

    • அப்போ முதலில் தலித் என்ற சொல்லுக்கு தடை வாங்குங்க. அப்புறமா தேவரை தடை செய்வோம்.

  44. //ஹாஹாஹா என்ன ஒரு முற்போக்குச் சிந்தனை?//

    நீங்க மட்டும் முற்போக்கா சிந்திப்பீங்க, நாங்க சிந்திக்கக் கூடாதா?

    • ஐயா, பெருமாளு, நீங்க சாமி படத்தில் வரும் பெருமாள் பிச்சை போலவே பேசுகிறீர்களே, உண்மையிலேயே நீங்கள் அவர்தானா?

      • @வினவு

        பழைய காதல் படங்களில் ஒரு காதல் கிறுக்கன் இருப்பான்..கதையின் இடையில் நடுவில் வந்து நாலு தத்துவம் சொல்வான் அதுப்போல் இருக்கிறது உங்கள் கருத்து..ஆமாம் அந்த காதல் கிறுக்கன் தான் வினவு என்ற பெயரில் எழுதுவதா..?

      • ஒருவிதத்துல நானும் அவரும் ஒண்ணுதான். அவரு சனியன் சகடை.

        நானும் அப்படித்தான் பிடிச்சா அவ்வளவு சீக்கிரத்துல விடமாட்டேன். அது உங்களுக்கும் புரியும் பாருங்க.

  45. //தேவர் என்பது பட்டம் இது மக்களின் செயற்பாடுகளை பொருத்து அல்லது உயர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு அவர்களை கௌரவிக்கும் பொருட்டு அவர்களுக்கு சூட்டபடுகிறது . இந்த பட்டம் எந்த சாதிக்கும் சொந்தமானது அல்ல .ஆகவே தேவர் என்ற பட்டதை சாதிய பெயராக பயன்படுத்தபடுவதை தடை செய்யவேண்டும்.//

    ஐயா பகுத்தறிவாளி, தேவர் என்பது இப்போதும் சாதி கிடையாதுதான். இல்லாத ஒரு சாதியை எதற்காக தடை செய்ய வேண்டும். அதேபோல தலித் என்ற சாதிப் பெயரை ஏன் தடை செய்யக் கூடாது?

    அதுவும் ஒரு சாதி வெறிக்கு வித்திடவே செய்கிறது. தலித் என்ற சாதிக்கு தடை விதித்தால் தேவர் என்ற பெயருக்கும் தடை விதிக்கலாம்.

    • எல்லோரும் புரிந்துக்கொள்ளுங்கள்…

      60 ஆண்டு காலமாகதான் சாதிப்பட்டியிலின் படி நாங்கள் மறவ்ர்,கள்ளர்,அகமுடையார்..ஆனால் 100000000 ஆண்டு காலமாக நாங்கள் தேவர்…

      • அமீபா காலத்தில் தேவரும் இல்லை, தேங்காயும் இல்லை. முட்டாள்தனத்திற்கு ஒரு அளவே இல்லையா? அதுதானே முட்டாள்தனம் என்று வந்த பிறகு அதில் ஏன் அளவு?

        • தியாகு கூறியிருப்பது 100 மில்லியன் (10 கோடி) ஆண்டுகளுக்கு முன்னால். அதாவது cretaceous யுகம். இது அமீபா காலம் அல்ல. இந்த யுகத்தில் தான் டைனசார்கள் கோலோச்சின. மனித இனம் தோன்றி இரண்டு லட்சம் ஆண்டுகள் ஆகின்றன. தேங்காய் Arecaceae என்று அழைக்கப் படும் பனை குடும்பத்தை சார்ந்தது. இது தோன்றி 80 மில்லியன் ஆண்டுகள் ஆகிறது. இதைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புவோர் இங்கிருந்து தொடங்கலாம்.

          http://en.wikipedia.org/wiki/Timeline_of_human_evolution

          http://en.wikipedia.org/wiki/Arecaceae

          http://en.wikipedia.org/wiki/Cretaceous

          • வினவும், வெங்கடேஷனும் ரொம்பத்தான் அறிவியல் ஆராய்ச்சி பண்றாங்க. ஆமாம். நீங்க சொல்ற அந்த உயிரினங்களை யார் தோற்றுவித்தது? அதற்கு முன்னால் என்ன இருந்தது? இந்த அண்டசராசரங்கள் எவ்வாறு தோன்றின? நல்லா மூளையை கசக்கிப் பார்த்து பதில் சொல்லுங்க.

            இல்லை, யாருமே இல்லாம, எதுவுமே இல்லாம ஒரு பொருள் உருவாகி விடும் என்று விஞ்ஞானம் சொல்கிறதா என்றும் சொல்லுங்க..

            ஹாஹாஹா, பெரிய விஞ்ஞானிகளா இருக்கிறாங்களே?

  46. //தலித் என்று ஒதுக்கி வைத்து வன்கொடுமைகள் செய்யும் போது அதை எப்படிப்பா சொல்லுவது.மனிதர்கள் என்பதற்காக தேவர்கள் சாதி வெறியை காட்டினார்கள் என்று சொல்லலாமா?//

    அப்போ தலித் என்ற சாதி இருக்கும் வரை தேவர் என்ற சாதியும் இருக்கத்தானே செய்யும்?

    அதேபோல வன்கொடுமைச் சட்டத்தை பழிவாங்கப் பயன்படுத்துவது மட்டும் எந்த ஊர் நியாயமாகும்?

  47. // சீரியஸா கேக்குறேன், உனக்கு மூளை என்ன முதுகுல இருக்கா?
    இவளோ நாள் சாதியை காட்டிதானே கொடுமை செய்தீர்கள். இன்னைக்கு திடிருன்னு நான் தலித் இல்லைன்னு சொல்ல சொன்னா பிறகு எப்படி நியாயம் கிடைக்க செய்ய முடியும்.?
    மொதல்ல வெறி பிடித்த நீ உன் பேரில் இருக்கும் சாதியை எடு பிறகு கேள்வியெல்லாம் கேக்கலாம்.//

    சேசே எனக்கெல்லாம் மூளை இருக்குமா என்ன? அது தலித்களுக்கே உள்ள தனியுரிமை.

    அப்போ என்ன ஆணி புடுங்கவா சாதி வெறி என்று கூச்சலிடுகிறீர்கள்? சாதி இவ்வளவு காலமும் இருந்தது, இப்போதும் இருக்கிறது, இனிமேலும் இருக்கும். வெறி எல்லாச் சாதிகளுக்கும் இருக்கிறது. தலித்கள் உட்பட.

    நீங்க முதல்ல தலித்ல இருந்து வெளியேறிட்டீங்களானு நிரூபிங்க. அப்புறமா எங்க பேரைப் பத்தி பேசலாம்.

  48. //Yarum dalith enkira solladalai aatharikkavillai.//

    அப்போ அதை விட்டு விட வேண்டியதுதானே?

  49. வினவுல எங்கேயாவது தலித் சாதி வெறி என்று ஏதாவது கட்டுரை எழுதப்பட்டிருக்கிறதா? இல்லை. தலித்களிடம் சாதி வெறியே இல்லை. அவர்களின் சாதி வெறி நிகழ்வுகள் எதுவும் வினவுக்கு தெரியாதா?

  50. மறவர்,மள்ளர் கள்ளர் நன்கு சிந்திக்கவேண்டிய நேரமிது.தமிழ் நாட்டில் சாதிய மோதல்களை தொண்ணூறு வீதமும் தூண்டுவது மத்திய மாநில அரசுகளின் உளவுப் பிரிவினர் தான். இச்சமுக அப்பாவிமக்கள் யாரும்பலியாக வேண்டாம்.தயவு செய்து இச்சசமூக அறிவு மிக்கவர்கள் பரஸ்பரம் புரிந்துணர்வுகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.சாதித் தலைவர்கள் தான் இப்போ இருக்கிறார்கள்.இவர்கள் மத்தியிலிருந்து மக்கள் தலைவர்கள் உருவாக வேண்டும்.

    • நீங்க உங்க பங்குக்கு சிந்தியுங்க, நாங்க எங்க பங்குக்கு சிந்திக்கிறோம். நீங்க உங்கள் தலைவர்களை உருவாக்குங்கள், நாங்கள் எங்கள் தலைவர்களை உருவாக்குகிறோம். ஆனால் இதுக்கெல்லாம் வினவுகாரங்க ஒத்துக்குவாங்களா?

  51. சாதிப் பெயர் பற்றி பேசும் பகுத்தறிவாளர்கள், பீம்ராவை பீம்ராவ் என்றே அழைக்கலாமே, அவரை அம்பேத்கர் என்று அழைக்க வேண்டிய அவசியம் என்ன?

    அதேபோல ராமசாமியை ராமசாமி என்றே அழைக்கலாமே, அவருக்கு ஏன் பெரியார் என்ற பட்டம் தேவைப்படுகிறது?

    இவர்களுக்கு மட்டும் பட்டம் தேவைப்படுமாம். மற்றவர்களுக்கு பட்டம் இருக்கக் கூடாதாம்.

    தேவன் என்ற பட்டம் என் பாட்டன் முப்பாட்டன் வாங்கிய பட்டம். உங்க பாட்டன் முப்பாட்டனுக்கு பட்டம் எதுவும் கிடைக்கவில்லை என்றால் அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. அல்லது உங்கள் பாட்டன் முப்பாட்டனின் பட்டத்தை பயன்படுத்துவதை நீங்கள் இழிவாக நினைத்தால் அதற்காகவும் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.

    உங்கள் தாழ்வு மனப்பான்மையை போக்க வேண்டுமானால் நீங்கள்தான் வைத்தியம் பார்த்துக் கொள்ள வேண்டும். எங்கள் பட்டத்தை ஒழித்தால்தான் உங்கள் தாழ்வு மனப்பான்மை போகும் என்றால் அது எவ்வளவு அறிவுப்பூர்வமான செயல் என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

  52. ஆனா, ஒண்ணு மட்டும் சொல்றேன் வினவு போன்ற இணையங்கள் இவ்வாறு எழுதுவது எங்களை ஒன்று சேர்க்க உதவும்.

    அதனால் நீங்கள் உங்கள் சாதிவெறியைக் காட்டி எழுதிக் கொண்டே இருங்கள். அதுதான் எங்களுக்கு மிகவும் உதவும். எனவே தேவர்கள் அனைவரும் வினவு போன்ற இணையங்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்க வேண்டும்.

  53. //மறவர்,மள்ளர் கள்ளர் நன்கு சிந்திக்கவேண்டிய நேரமிது.தமிழ் நாட்டில் சாதிய மோதல்களை தொண்ணூறு வீதமும் தூண்டுவது மத்திய மாநில அரசுகளின் உளவுப் பிரிவினர் தான்.//

    போன குருபூஜையில் பெட்ரோல் குண்டு வீசியதும் மத்திய அரசின் சதி என்கிறீர்களா?

  54. // இச்சமுக அப்பாவிமக்கள் யாரும்பலியாக வேண்டாம்.தயவு செய்து இச்சசமூக அறிவு மிக்கவர்கள் பரஸ்பரம் புரிந்துணர்வுகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.சாதித் தலைவர்கள் தான் இப்போ இருக்கிறார்கள்.இவர்கள் மத்தியிலிருந்து மக்கள் தலைவர்கள் உருவாக வேண்டும்.//

    வினவு, கீற்று போன்ற படித்த தலித் எழுத்தாளர்கள் சாதி துவேஷத்தை தூண்டும் வகையில் எழுதும்போது அப்பாவி மக்களை என்னவென்று சொல்வது?

  55. //சாதி கட்டமைப்பில் பெரும்பாண்மை மக்களை ஆதிக்கம் செய்யும் சாதி எது? அச்சுறுத்தும் சாதி எது? அச்சாதிகளை ஆதிக்க சாதி என்றோ அதில் ஈடுபடுபவர்களை ஆதிக்க சாதிவெறியர்கள் என்றோ என சொன்னால் அதில் என்ன தவறு இருக்க முடியும்.//

    தலித்களின் கருத்தின்படி அவர்கள் மட்டுமே நீதிமான்கள். பெரும்பான்மை சாதிகளான தேவர், வன்னியர், கவுண்டர், முதலியார், நாயக்கர், உடையார் போன்ற மற்ற அனைத்துச் சாதிகளும் சாதி வெறி பிடித்தவர்கள்.

    சாதி வெறி என்று சொல்லியே சிறுபான்மை தலித்கள் பெரும்பான்மை சாதியினரை அடக்கி ஆண்டுவிடலாம் என்று மனப்பால் குடித்தால் அது மேலும் சாதிய மோதல்களுக்கு வழிவகுக்குமே தவிர வேறு ஒண்றையும் செய்யாது.

  56. –//அட கொன்யா… கள்ளர், மறவர், அகமுடையார் இப்படி ஒன்றாக மாறுபட்ட 3 சாதிகளையும் சேர்த்தால் 50 லட்சம் கூட வராதுயா…//

    இதை எந்த அரசியல்வாதிகிட்டேயாவது சொல்லிப் பாருங்கள் உண்மை தெரியும்.

  57. Mr.தியாகு,15.1.1.1 இல் உங்க ஒதிக்கீட்டிற்கும் எங்க ஒதிக்கீட்டிற்கும் நிறைய வித்தியாசம் உண்டு என்று சொல்லி குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் பேசியிருக்கிறீர்கள்? இட ஒதுக்கீடே சமுகத்தில் பின் தங்கியவர்களுக்குத்தான். உயர் ஜாதி என்று தனக்குத்தானே சொல்லும் நீங்கள் ஏன் இட ஒதுக்கிட்டை பெறுகிறீர்கள்? இது போக சலுகை பற்றிய உங்களது லிஸ்டை பார்த்து உங்கள் அறியாமையை நினைத்து சிரிப்புதான் வருகிறது? நீங்கள் சொன்ன இந்த லிஸ்டை பொது பிரிவில் உள்ள ஒருவர் சொல்லியிருந்தால் பரவாயில்லை? ஆனால் தாழ்த்தபட்ட ஜாதிக்கு இரண்டு என்றால் உங்களுக்கு ஒன்று என்ற ரீதியில் அனைத்தையும் பெற்றுக்கொண்டிருக்கிற நீங்கள் இந்த சலுகையெல்லாம் பற்றி பேசலாமா? நீங்கள் சொன்ன பட்டியலில் உள்ள வயது, மதிப்பெண் போன்றவற்றில் உள்ள சலுகை உங்களுக்கும் உள்ளது? பதவி உயர்வில் ஓதிக்கிடு இன்னும் சட்டமே இயற்றப்படவில்லை? நீங்கள் தினமும் உங்கள் மூளையை அப்டேட் செய்யுங்கள்? எங்களை பொருத்தவரை எங்கள் இனத்திற்கு தேவேந்திரர் என்று பெயர் மாற்றம் செய்வதையே விரும்புகிறோம்? அதனால் தாழ்த்தப்பட்டோருக்கான சலுகையை நாங்கள் இழப்பதை பற்றி வருத்தப்படவில்லை? இது வெறும் பேச்சு இல்லை ? இப்போது கூட எங்கள் மக்கள் இதை நிருபித்துக்கொண்டு இருக்கிறார்கள்? எங்கள் இனத்தில் கிறிஸ்தவ மக்களுக்கு (கிராமங்களில் தேவேந்திர மக்களோ இல்லை தாழ்த்தப்பட்ட பிற ஜாதியை சார்ந்தவர்களோ இந்து, கிறிஸ்தவர் என்று தனியாக இல்லை) தாழ்த்தப்பட்டோருக்குரிய எந்த சலுகையும் கிடையாது அதற்காக அவர்கள் எங்கள் ஜாதியை விட்டு போய்விட்டார்களா, இல்லை சாதி சான்றிதழில் எங்கள் ஜாதி பெயர் இல்லாமல் பெறுகிறார்களா? இன்னும் சொல்லப்போனால் எங்கள் இனத்தில் கிறிஸ்தவர்கள்தான் நிறையப்பேர் உள்ளனர்? எங்கள் சமுதாயம் முன்னேறுவதற்கு அதிக்கப்படியான பங்களிப்பை கொடுத்தவர்களும் அவர்கள்தான். உங்கள் இனத்தவர்கள் நம்மை எதிர்க்க யாருமே இல்லை என்ற இறுமாப்பில் கொக்கரித்தபோது உங்களுக்கு முதல் அடி கொடுத்து நாங்கள்தான் என்பது மறுக்கமுடியாத உண்மை? இன்று வினவு தளத்தில் உங்கள் விளக்கங்களை பக்கம் பக்கமாக மாய்ந்து மாய்ந்து கொடுக்கிறீர்களே இந்த நிலைமைக்கு நீங்கள் வந்ததுதான் எங்கள் சமுதாயத்திற்கு கிடைத்த வெற்றி? ஒரு வகையில் உங்களுக்கு நாங்கள் நிறைய கடமை பட்டுள்ளோம்? எங்கள் சமுதாயம் எவ்வளவு முன்னேறியுள்ளது என்பதற்கு வினவு தளத்தில் உங்களுக்கு கிடைத்த எதிர்ப்புகள் நீங்கள் புரிந்து கொள்ள போதும் என்று நினைக்கிறேன்? உங்களின் ஜாதி வெறியே எங்களின் வளர்ச்சிக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்தது என்றால் அது மிகை இல்லை? இன்று எத்தனையோ துறைகளில் நாங்கள் கணிசமான அளவிற்கு உயர்ந்திர்க்கிறோம் அதற்கு உங்களை போன்ற ஜாதி மக்கள்தான் காரணம்? உங்கள் இனத்தவர்களை நாங்கள் மதிப்பு மிக்க எதிரிகளாகவே நினைக்கிறோம்? யாருக்கும் வளைந்து கொடுக்காமல் எங்கள் இன மக்கள் முன்னேற்றத்திற்காக எத்தனையோ பேரை நாங்கள் இழந்திருக்கிறோம்? ஜாதிகள் ஒழிந்து சமத்துவம் ஏற்படவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்? மனிதர்களில் இவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன் என்று யாரும் கிடையாது? இதற்கு மாற்று கருத்துக்கொண்டவர்களை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை? உங்கள் சமுதாயத்திற்கும், உங்களுக்கும், தேவேந்திரர்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்?

  58. //ஐயா, பெருமாளு, நீங்க சாமி படத்தில் வரும் பெருமாள் பிச்சை போலவே பேசுகிறீர்களே, உண்மையிலேயே நீங்கள் அவர்தானா?//

    வினவுக்குத்தான் எல்லாம் தெரியுமா? இது தெரியாதா என்ன?

  59. ஐயா, வினவு, என்னோட மற்ற கேள்விகளுக்குப் பதில் இல்லையே?

  60. இனிமேல் தேவர்,தேவேந்திரர்கள் சமாதானதிற்காகவும் தமிழ் ஒருமைப்பாட்டிற்காகவும் சிந்திக்கும் நேரம் வந்துவிட்டது.

  61. –//இனிமேல் தேவர்,தேவேந்திரர்கள் சமாதானதிற்காகவும் தமிழ் ஒருமைப்பாட்டிற்காகவும் சிந்திக்கும் நேரம் வந்துவிட்டது.//

    இரு தரப்பிலும் சரியான, பொறுப்பான தலைமைகள் இருந்தால்தான் அது சாத்தியமாகும்.

    • –//இனிமேல் தேவர்,தேவேந்திரர்கள் சமாதானதிற்காகவும் தமிழ் ஒருமைப்பாட்டிற்காகவும் சிந்திக்கும் நேரம் வந்துவிட்டது.//

      இரு தரப்பிலும் சரியான, பொறுப்பான தலைமைகள் இருந்தால்தான் அது சாத்தியமாகும்.

      நிச்சயமாக.நிச்சயமாக.

      இந்த இரண்டு சமூகங்களுக்கிடையிலும் நிரந்தர சமாதானத்துக்காக உண்மையாய் பாடுபடுவதே என்னுடைய நோக்கம்.நான் யாழ்ப்பாணத்தை சார்ந்தவன்.என்னுடைய இந்த முயற்சி பெரிய வெற்றியளிக்கும்.நான் பக்கம் சாராமல் பாடுபடுவேன்.

  62. ஐயா வினவு அவர்களே,

    நீங்கள் தலித் ஆதரவாளரா?

    தேவர் ஆதரவாளரா?

    இல்லை, நடுநிலைமையாளரா?

  63. ஐயா, வினவு என்ன என்னோட மற்ற கேள்விகளுக்குப் பதில் இல்லையே?

    சரி யோசித்துப் பார்த்து போடுங்கள்.

  64. வினவு சார்,

    அரசாங்கம் எடுத்த சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை ஏன் வெளியிடாமல் இருக்கு? அதைப் பத்தி ஒரு கட்டுரை எழுதுங்களேன். முடிஞ்சா அந்த விவரம் கிடைச்சா போடுங்க நல்லா இருக்கும்.

  65. //? இட ஒதுக்கீடே சமுகத்தில் பின் தங்கியவர்களுக்குத்தான். உயர் ஜாதி என்று தனக்குத்தானே சொல்லும் நீங்கள் ஏன் இட ஒதுக்கிட்டை பெறுகிறீர்கள்?//

    ஐயா, துரை நாங்கள் ஒன்றும் உயர்ந்த சாதி என்று சொல்லிக்கொள்ளவில்லையே.

  66. // அதனால் தாழ்த்தப்பட்டோருக்கான சலுகையை நாங்கள் இழப்பதை பற்றி வருத்தப்படவில்லை? இது வெறும் பேச்சு இல்லை ? இப்போது கூட எங்கள் மக்கள் இதை நிருபித்துக்கொண்டு இருக்கிறார்கள்? எங்கள் இனத்தில் கிறிஸ்தவ மக்களுக்கு (கிராமங்களில் தேவேந்திர மக்களோ இல்லை தாழ்த்தப்பட்ட பிற ஜாதியை சார்ந்தவர்களோ இந்து, கிறிஸ்தவர் என்று தனியாக இல்லை) தாழ்த்தப்பட்டோருக்குரிய எந்த சலுகையும் கிடையாது அதற்காக அவர்கள் எங்கள் ஜாதியை விட்டு போய்விட்டார்களா, இல்லை சாதி சான்றிதழில் எங்கள் ஜாதி பெயர் இல்லாமல் பெறுகிறார்களா?//

    உங்கள் சாதியை பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.

  67. –//இன்று வினவு தளத்தில் உங்கள் விளக்கங்களை பக்கம் பக்கமாக மாய்ந்து மாய்ந்து கொடுக்கிறீர்களே இந்த நிலைமைக்கு நீங்கள் வந்ததுதான் எங்கள் சமுதாயத்திற்கு கிடைத்த வெற்றி? //

    அப்போ வினவு உங்கள் சாதிக்கான இணையதளம் என்பதை ஒப்புக்கிறீர்களா? இதை வினவுவும் ஒப்புக்கொள்கிறதா?

  68. // ஜாதிகள் ஒழிந்து சமத்துவம் ஏற்படவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்?//

    உங்கள் விருப்பத்தை ஏன் மற்றவர்கள் மீது திணிக்க விரும்புகிறீர்கள்? சாதிகளை ஒழிக்க வேண்டுமா, வேண்டாமா என்று வாக்கெடுப்பு நடத்த நீங்கள்தான் தயாரா? அல்லது வேறு யாராவது தயாராக இருக்கிறார்களா?

    // மனிதர்களில் இவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன் என்று யாரும் கிடையாது? இதற்கு மாற்று கருத்துக்கொண்டவர்களை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை?//

    அப்படி நாங்கள் எப்போதும் சொல்லிக் கொண்டதில்லை. உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று எவனோ சொன்னான் அதை நீங்கள் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

    ஆமா தெரியாமத்தான் கேட்கிறேன். உங்களுக்கு முற்றுப்புள்ளிக்கும் கேள்விக்குறிக்கும் வித்தியாசம் தெரியாதா? இல்லை, உங்கள் கம்ப்யூட்டரில் முற்றுப்புள்ளி பட்டன் இல்லையா?

  69. ஐயா, வினவு அவர்களே, தலித்கள் தங்கள் சாதியில் இருந்துகொண்டே மற்ற சாதிகளை ஒழிக்க விரும்புவது சரியா? நீங்க படிச்சவங்க, நியாயமானவங்க ஒரு நியாயத்தைச் சொல்லுங்க.

    அப்படி உண்மையிலேயே தலித்கள் சாதியை ஒழிக்க விரும்புகிறார்கள் என்றால் இதுவரை எத்தனை தலித்கள் தங்கள் சாதியிலிருந்து வெளியேறி இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?

  70. //ஒரு குறிப்பிட்ட சாதித்தலைவரோட ஜெயந்தி விழாவுக்கு நம்ம முதலமைச்சரே நேரில் ஆஜராகிறார்கள். ( //

    உங்க சாதித் தலைவர் விழாவில் கலந்துக்கிட்டா அப்புறம் ஒண்ணும் சொல்ல மாட்டீங்கதானே?

  71. //அமீபா காலத்தில் தேவரும் இல்லை, தேங்காயும் இல்லை. முட்டாள்தனத்திற்கு ஒரு அளவே இல்லையா? அதுதானே முட்டாள்தனம் என்று வந்த பிறகு அதில் ஏன் அளவு?//

    எது முட்டாள்தனம்? சாதியில் இருப்பதா? தலித்கள் சாதியை விட்டு வெளியேறி விட்டார்களா? அல்லது என்றைக்காவது வெளியேறி விடுவார்களா? இல்லை உங்களைப் போன்ற முற்போக்கு முகமூடிகள்தான் அவர்களை சாதியிலிருந்து வெளியேற விடுவீர்களா?

  72. நிறைய கமெண்ட்களை மாடரேசன்ல வைச்சிருக்கிறீங்க. யோசிச்சுப் பார்த்து ரிலீஸ் பண்ணுங்க.

  73. ஐயா வினவு அவர்களே,

    தலித்களிடம் சாதி வெறி இருக்கா? இல்லையா?

    அப்படி இருந்தால் அதை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்?

    சாதி ஒழிப்பு பற்றி வினவுவின் கருத்து என்ன?

    வினவுவின் உரிமையாளர் தன் சாதியிலிருந்து வெளியேறிவிட்டாரா?

  74. @FOR ALL மன்னர் பரம்பரை குருப்..

    மன்னர் பரம்பரையில் வந்த உங்கள் சாதி ஏன் MBC எனப்படும் Most Backward Class யின் கீழ் வருகிறது. உங்கள் மன்னர் பரம்பரை பிராமின்களை விட உயர்ந்த சாதியாக அல்லவா இருக்கவேண்டும். அராசாங்கம் உங்களை MBC என அழைப்பது உங்கள் மன்னர் வம்சத்தைக்கே அவமானம் இல்லையா..

    • @கல்நெஞ்சம்

      சாதிப்பட்டியல் என்பது சுதந்திர இந்தியாவில்தான் அதற்கு முன்பு எந்த பட்டியலும் இல்லை..

      சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் வாழ்வு முன்னெற்றத்திற்காக அம்பெத்கர் அவர்களால் கிடைத்தே இந்த சலுகை அதற்கு பின் ஓட்டு இந்தியாவில் வெள்ளையனால் பாதிக்கப்பட்ட சமூகத்திற்காக சலுகை என கண்துடைப்பு செய்யப்பட்டது அதன்பின்பு அரசியல் கட்சிகள் பெருத்த இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் தொகை கொண்ட சாதிக்கும் சலுகை என அது வள்ர்ந்து போயிற்று..! அவ்வாளவே!

      எதையும் ஆராய்ந்து பதிவது உங்கள் சிந்திக்கும் திறனையும் ஆய்வு ஆற்றலையும் காட்டும் இல்லையெனில் மொக்கை பதிவாகும்…கல்நெஞ்சம் என்பது கருத்து சொல்வதிலா..?

      • @ஆர்.தியாகு
        அப்படியா.. பின்னர் எதற்கு ஆங்கில அரசும் அம்பேத்கார் சட்ட வடிவும் எந்த காரணத்திற்காக மன்னர் பரம்பரையில் வந்த உங்கள் இனத்தை MBC எனப்படும் Most Backward Class என்னும் பிரிவில் சேர்த்தது ஏன்?லட்ச லட்ச வருடங்களாக மன்னர்களின் பரம்பரை சட்டென ஓரு சட்டத்தினால் Most backward class ஆக மாறியதன் மர்மம் என்ன..?மன்னர் பரம்பரை சாதியை Forward Class என்றல்லவா அரசாங்கம் அறிவித்திருக்க வேண்டும். ஏழை மற்றும் பணக்கார பிராமீனே Froward class ல் வரும் போது, லட்ச லட்ச ஆண்டுகளாய் மன்னர் பரம்பரை சாதியை என Forward class அழைக்காமல் MBC என அழைக்க எப்படி உங்கள் ரோஷக்கார ராச பரம்பரைக்கு வந்தது.

        • @கல்நெஞ்சம்

          மீண்டும் என் பதிவை படிக்கவும்..எதையும் நன்றாக படித்துவிட்டு எதிர் பதிவு இடுங்கள்..ஓட்டு இந்தியாவில் வெள்ளையனால் பாதிக்கப்பட்ட சமூகத்திற்காக சலுகை என கண்துடைப்பு செய்யப்பட்டது.

          அதிலும் பழைய மதுரை இராமநாதபுர மாவட்டங்கள்தான் வாழும் தேவர்களுக்கு மட்டுமே.

          எங்களில் உள்ள ஏழை மக்களும் வாழவேண்டுமென்று எம் அரசியல் தலைவர்களால் வாங்கப்பட்டதே BC..

          தாழ்த்தப்பட்டவர்கள் பெருபான்மை மக்களாக இல்லாவிட்டால் உங்களுக்கும் அல்வாதான் கிடைத்திருக்கும்..உதாதரணமாக..அம்பட்டர்,வண்ணாண் சாதிகளுக்கு கிடைத்ததை போல

          ராஜாஸ்தானில் உள்ள ராஜப்பரை B.C க்குள்தான் வருகிறார்கள்..

          எங்களுக்கு கண்துடைப்பு உங்களுக்கு பெரும் அன்பளிப்பு.

          • @ஆர்.தியாகு மீண்டும் படிக்கவும்

            //ஏழை மற்றும் பணக்கார பிராமீனே Froward class ல் வரும் போது, லட்ச லட்ச ஆண்டுகளாய் மன்னர் பரம்பரை சாதியை என Forward class அழைக்காமல் MBC என அழைக்க எப்படி உங்கள் ரோஷக்கார ராச பரம்பரைக்கு வந்தது.//
            மீண்டும் என் பதிவை படிக்கவும்..எதையும் நன்றாக படித்துவிட்டு எதிர் பதிவு இடுங்கள்..

            ராஜஸ்தானின் ராஜப்பரை விடுங்கள். .உங்கள் மன்னர் பரம்பரைக்கு எதற்கு கண்துடைப்பு தேவை. உங்கள் மன்னர் பரம்பரை சாதி பிராமணர்களை விட கம்மியாக உள்ளதே அதாவது BC or MBC.. என் இனம் FC அதாவது Forward class.

            • @ஆர்.தியாகு
              என்னப்பா பதிலே காணும். வழக்கமான உங்கள் ரசப் பரம்பரையின் வாரிசு அட்டவனைகளுடன் பதில் செல்லுவிங்கனு எதிர்பார்த்தேன்..

            • @ கல்நெஞ்சம்

              சாதி பட்டியல் என்பது ஆதாமும் ஏவாலும் கொண்டு வந்ததில்லை..கொஞ்சம் நன்றாக சிந்தித்துப்பாருங்கள்..இந்தியா என்று இந்தியர்கள் கையில் வந்ததோ அன்றுதான் சாதிப்பட்டியல்..

              இநத தமிழ் மண்னை நாங்கள் ஆண்டபோது பி.சி பட்டியலில் இருந்தோமா..? நாங்கள் இரண்டாம் குடியாக இருந்தோமா..மன்னர் காலத்திலயோ வெள்ளையன் ஆட்சியிலோ.அப்படி ஒரு பட்டியல் என ஓன்று இருந்ததா..? அதுவும் சுதந்திரம் பெற்று 20 வருடம் கழித்தே எங்களின் கோரிக்கையின் படி பி.சி பெற்றோம்.

              வன்னியர்கள் பெரும் போராட்டாங்களும் நடத்தி பெரும் உயிர் இழப்பு நடந்த பின்னே அவர்களை எம்.பி.சி கோட்டாவை வாங்க முடிந்தது..பெரும்பான்மை மக்களாக நாங்கள் இல்லாவிடில் அந்த கண்துடைப்பு கோட்டாவும் கிடைத்திருக்காது

              போராடாமல் சமூகத்தில் தாழ்த நிலையில் இருப்பவர்களை பொருளாதார ரீதியாகவும்..சமூக ரீதியாகவும் மேம்பட அரசாங்கமே தந்ததுதான் எஸ்.சி கோட்டா..

              கொஞ்சம்நூலகம் பக்கம் சென்று எந்த எந்த சாதிக்கு எப்போழுது கோட்டா கிடைத்தது எந்த வருடம் கிடைத்தது என படியுங்கள் உண்மை அறியலாம்.

              ஓன்று சமூகத்தில் தாழ்ந்தநிலையில் இருப்பவர்கள்..மற்றொன்று விடுதலைப் போராட்டத்தில் சமூகம் என அரசங்காம் இரு பிரிவுப்படுத்தி கோட்டா கொடுத்ததை அறியலாம்..

              விடுதலை போரில் உயிர்விட்ட எம்குல மன்னர்கள் தளபதிகள் வீரர்கள் தவிர மேலும் நேதாஜியின் ஜ.என்.ஏ படையில் உயிர் துறந்த என்குல வீரர்களின் பட்டியலை மேற்குவங்க மாநிலத்தில் நேதாஜி மிஷின் அமைப்பு பாதுகாத்துவருகிறது..தேசத்திற்காய் பெரும் உயிர்களை நீத்த இனம் என்ற உரிமையில் விடுதலை இந்தியாவில் நாங்கள் சலுகை கேட்டோம்..பி.சி என கண்துடைப்பு செய்யப்படுகிறது..செய்யப்படுக்கொண்டிருக்கிறது.

              இன்னொன்று நீங்கள் அறீவீர்களா..? தமிழக அரசு சாதி பட்டியலில் இல்லாத வேறு மாநில சாதிகள் F.C கோட்டாவில்தான் வரும் அதற்காக அது உயர்ந்த சாதி என பொருள் கிடையாது..தமிழக அரசு சாதிப்பட்டியலில் இல்லாத சாதிக்கு இங்கு கோட்டா கிடையாது என்று அர்த்தம்.

              • ///விடுதலை போரில் உயிர்விட்ட எம்குல மன்னர்கள் தளபதிகள் வீரர்கள் தவிர மேலும் நேதாஜியின் ஜ.என்.ஏ படையில் உயிர் துறந்த என்குல வீரர்களின் பட்டியலை மேற்குவங்க மாநிலத்தில் நேதாஜி மிஷின் அமைப்பு பாதுகாத்துவருகிறது..தேசத்திற்காய் பெரும் உயிர்களை நீத்த இனம் என்ற உரிமையில் விடுதலை இந்தியாவில் நாங்கள் சலுகை கேட்டோம்..பி.சி என கண்துடைப்பு செய்யப்படுகிறது..செய்யப்படுக்கொண்டிருக்கிறது////
                @ஆர்.தியாகு @பெருமாள் தேவன்
                இந்த நாட்டிற்காக உயிர் நீர்த்த மன்னர்கள் தளபதிகள் வீரர்கள் மற்றும் ஜ.என்.ஏ வாரிசுகளே… கண்துடைப்பு பற்றி கேட்கவில்லை..நான் கேட்ட கேள்வி…உங்கள் மன்னர் பரம்பரை சாதி பிராமணர்களை FC விட கம்மியாக உள்ளதே அதாவது BC or MBC என்று
                ..:::ஏழை::: மற்றும் :::பணக்கார::: POOR and RICH பிராமீனே Froward class ல் வரும் போது, லட்ச லட்ச ஆண்டுகளாய் மன்னர் பரம்பரை சாதியை என Forward class அழைக்காமல் MBC என அழைக்க எப்படி உங்கள் ரோஷக்கார ராச பரம்பரைக்கு வந்தது.

                தமிழ்நாட்டில் உள்ள என் சாதி FORWARD CLASS (பெயர் சொல்ல விரும்பியது இல்லை விருப்பபட்டதும் இல்லை ஆனால் முள்ளை முள்ளால் தானே எடுக்க வேண்டும்)…. ஆனால் மன்னர்கள் தளபதிகள் வீரர்கள் மற்றும் லட்ச லட்ச வருடங்கள் ஆண்ட சாதி உங்கள் சாதி வெறும் 50 ஆண்டுகளில் backward class அது எப்படி… பிராமணர்களை விட அப்படி என்ன உயர்ந்த சாதி….

                • @ கல்நெஞ்சம்

                  அடடடா..அப்பப்பப்பா… உங்க அறிவு மெய் சிலிர்க்க வைக்குது..

                  ஆறு ரூபாய் அறு ரூபாய் என சொன்னதை சொல்லிக்கிட்டே இருக்காம…

                  தமிழ் தெரியலைனா நல்லா தெரின்ஞ்வங்க கிட்ட..பிண்ணுட்டம் 75.1.1.1.1.2 படியுங்கள்..

                  சாதிப்பட்டியல் என்பது சமூக அந்தஸ்து அல்ல.. உங்கள் மூளையை புளிப் போட்டு விளக்குங்கள் அதன் பின் பளீர் என்று சிந்திக்கும்..

            • ஐயா பஹூத்தறிவாளி கல்நெஞ்சம்,

              சலுகை சமூக நிலையை வைத்து அளிக்கப்பட்டதே ஒழிய உயர்வு தாழ்வு என்று வைத்துக் கொடுக்கப்பட்டதல்ல. அந்த அடிப்படையில்தான் ஒரே சாதியைச் சேர்ந்த ஒரு பிரிவினருக்குச் சலுகை கிடைக்கவும் மற்றொரு பிரிவினருக்கு சலுகை கிடைக்காமலும் இருக்கிறது.

              • @பெருமாள் தேவன்

                ///சலுகை சமூக நிலையை வைத்து அளிக்கப்பட்டதே ஒழிய உயர்வு தாழ்வு என்று வைத்துக் கொடுக்கப்பட்டதல்ல//

                சமூக நிலையை வைத்தா உங்கள் சாதி உயர்ந்த சாதி எனப்பிரிக்கப்பட்டத???

                • @கல்நெஞ்சம்

                  அவரவர் செய்யும் வினையின்(செயலின்) படியே சமூக நிலை உருவானது..நாடு ஆண்டோம் !மக்களை காத்தோம்! போர் புரிந்தோம்! அறம் செய்தோம்! இந்த நிலையே சமூக உயர்ந்த நிலை அதை நாங்கள் செய்தோம்..ஆக அமூக நிலையை வைத்து நாங்கள் உயர்ந்த சாதி என போற்றப்பட்டோம்..

                  • நீ நாட ஆண்டாலும் காட ஆண்டாலும் காலையில எந்திருச்சா பீ தான பேலுவ. நாடு காடெல்லாம் நாறிப்போகாம அருவெருப்பு பாக்காம உம் பீயெல்லாம் அப்புறப்படுத்துனானே அது சமூகத்தின் உயர்ந்த நிலையா? அடுத்தவன் உழைப்ப (பண்ணையடிமை) சாப்பிட்டும், போர் என்ற பெயரில் கொள்ளையிட்டும், பெண்டாண்டதும் சமூகத்தின் உயர்ந்த நிலையா?

                    • ஐயா சந்தானம்,

                      ஆகா, என்ன அறிவுப்பூர்வமான கேள்வி.

                      ஆமா, நான் தெரியாமத்தான் கேட்கிறேன். பஹூத்தறிவாளர்கள் என்றால் பீ, மலம், வெங்காயம், வெண்ணெய் என்றுதான் பேச வேண்டுமா?

                      நீங்க எங்க பீயைப் பத்தி பேசுறது இருக்கட்டும். உங்களை முதலில் சுத்தம் செய்து கொண்டு வாருங்கள். நீங்க நல்லா இருந்திருந்தா உங்களை ஏன் ஒதுக்கி வைக்கிறாங்க?

                      பெருசா பேச வந்துட்டாரு.

                    • சரி நாங்க அடிமைப்படுத்தினோம், நீங்க ஏன் அடிமையா இருந்தீங்க? அதுவும் ஒரு வருஷம் ரெண்டு வருஷமா 2000 வருஷமாம் (இது உங்க கணக்குத்தான்). ஏன் இதை எதிர்த்துப் போராடணும்னு உங்களுக்குத் தோணல. இல்ல, அதுவே பழகிப் போனதா?

                      ஆமா, போர் செஞ்சா நாங்க எங்க வீட்டுக்கு மட்டும்தானே போர் செஞ்சோம்? உங்களை மாதிரி பண்ணை வேலை செய்தவங்களுக்கும் சேர்த்துத்தான் போர் செய்தோம்.

                      பெண்டாண்டதைப் பற்றி பேச விரும்பவில்லை.

                      உங்களுக்கும் உங்க சமூகத்துக்கும் சேர்த்துத்தான் போர் செய்தோம். நாங்கள் எங்கள் வேலையைச் செய்தோம். நீங்கள் உங்கள் (பண்ணை) வேலைகளைச் செய்தீர்கள்.

                      நீங்களும் அன்றைக்கே உயிரைத் துச்சமென மதித்து போருக்குச் சென்றிருந்தால் நீங்களும் போர்ப் பரம்பரை ஆகியிருக்கலாம். ஏன் ஆண்டபரம்பரை என்று கூட சொல்லிக் கொள்ளலாம்.

                      அன்னைக்கு பத்திரமா பாதுகாப்பா இருந்துட்டு இன்னைக்கு வந்து பேசுறீங்களே?

                      உங்கள் அறிவை மெச்சுகிறேன்.

                • நாங்கள் உயர்ந்த சாதி என்று யார் சொன்னது? நீங்களா கற்பனை செய்துக்கிட்டா அதுக்கு நாங்க பொறுப்பல்ல.

                  • பகுத்தறிவாளன்னா பேல மாட்டானய்யா. என்னய்யா இது அநியாயமா இருக்கு, பீய பீன்னுதானே சொல்லனும். பீன்னு சொல்வதற்கே அருவெறுப்பாகின்றாயே பெருமாளு, எந்தவித அருவெறுப்புமின்றி அனைவரின் பீயையும் சுத்தபடுத்தினோமே எங்களின் மன உளைச்சலை என்றைக்காவது நீ அனுபவித்து இருக்கின்றாயா?

                    எங்களுடைய சொந்த உழைப்பைக் கொண்டு நாங்கள் பொருளாதார ரீதியில் முன்னேறுவதைக் கூட பொறுக்க முடியாமல், இவர்கள் முன்னேறிவிட்டால் அடிமைத் தொழிலுக்கு ஆள் கிடைக்கமாட்டான் என 2013 ல் கூட வெறியாட்டம் போடுகிறீர்களே 2000 வருசம் என்னவெல்லாம் செய்திருப்பீர்கள் எங்களை?

                    எங்களுக்காகவா போர் செய்தீர்கள். உங்களுடைய சொத்தை பாதுகாத்துக் கொள்ளத்தானே போர் செய்தீர்கள். ஹே அடிமை வேலை செய்வதற்கு ஒங்கூட இருந்தா என்ன? வர்றவன் கூட இருந்தா என்ன. எங்களுக்கு எல்லாம் ஒன்னுதான்.

                    ஏன் பெண்டாண்டதைப் பற்றிப் பேச வெட்கமா இருக்கா. உனக்கு பீ அள்ளிய கையால் சாப்பிட அருவெறுப்பா இருக்கு, பெண்டாள மட்டும் அருவெறுப்பு இல்லையோ!

                    • Not all dalit castes are thotti,only thotti people can complain about that.

                      devendra kula vellalars are not thotti.

                    • ஐயா பஹூத்தறிவாளி சந்தானம்,

                      நாங்கள் வீட்டில் கக்கூஸ் கட்டி வாழ்ந்தது கிடையாது. அப்படி எவன் வாழ்ந்தானோ அவன்தான் உங்களை பீயை அள்ள வைத்தான், சுமக்க வைத்தான்.

                      பேண்டவனை விட்டுவிட்டு பீயை வெட்டும் கதையாக உங்களை அப்படிச் செய்ய வைத்தவர்களை அறியாமல் எங்களை சாடுகிறீர்களே, உங்கள் அறியாமையை என் செய்வது?

                      சரி, உங்களை அடிமையாக வைத்திருந்தார்கள், உங்கள் பெண்களை பெண்டாண்டார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அதற்காகத்தான் இப்போது நீங்கள் அவர்களை அடிமைப்படுத்தி அவர்களது பெண்களை பெண்டாள விரும்புகிறீர்களா?

                      நல்லா இருக்குய்யா உங்க நியாயம், அப்படினா இந்தியாக்காரன் இங்கிலாந்துக்காரனை அடிமைப்படுத்தி இருக்கணும்.

                    • ஐயா பஹூத்தறிவாளி சந்தானம்,

                      உங்கள் பெண்களை பெண்டாண்டார்கள் என்ற காரணத்திற்காகத்தான் கலப்புத் திருமணம் என்ற பெயரில் தேவர், வன்னியர், கவுண்டர் வீட்டுப் பெண்களை தேடிப்பிடித்து ஏமாற்றி காதலிக்கும் ரகசியத் திட்டத்தை நடத்தி வருகிறீர்களோ?

  75. ஐயா,

    கல்நெஞ்சம் நாங்க மன்னர் பரம்பரை என்றால் நாங்கள் உயர்ந்த சாதி என்று பொருள் இல்லை. நாங்கள் யாருக்கும் தாழ்ந்த சாதியில்லை என்பதுதான் பொருள். அதோடு பிற்காலத்தில் வந்த ஆட்சியாளர்கள் எங்களிடம் இருந்தவற்றை பறித்துக் கொண்டார்கள்.

    சமூக நிலையில் நீங்கள் தாழ்ந்த நிலையில் இருப்பதாக யார் முடிவுசெய்தார்களோ அதே பகுத்தறிவாளர்கள்தான் நாங்களும் தாழ்ந்த நிலையில் இருப்பதாக முடிவு செய்தார்கள். இது அவர்களை கேட்க வேண்டிய கேள்வி.

    எம்பிசி என்பது எங்களுக்கு கேவலமானது என்றால் தலித் என்பது உங்களுக்கு கேவலமானது என்றுதான் பொருள் தருகிறீர்கள். இந்த இட ஒதுக்கீட்டை நாங்கள் இழக்கத் தயார் நீங்கள் இழக்கத் தயாரா?

    • பெருமாள் சாமி நீங்கள் ஆண்ட பரம்பரை என்பதை கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்கள். தமிழ்நாட்டில் இருக்கும் ‘2’ கோடி தேவர் குடும்பங்களும் ஆண்ட பரம்பரை என்றால் இங்கே 2 கோடி மன்னர்கள் வாழையடி வாழையாக ஆண்டனர் என்று பொருளாகிறது. எனில் இந்த மன்னர்களுக்கு காவல் காத்து, கழிப்பறையை சுத்தம் செய்து, சமையல் செய்து, அந்தப்புரத்தில் பணிவிடை பார்த்து, நாடு முழுக்க விவசாயம் செய்து இன்ன பிற வேலைகளை யார் பார்த்தார்கள்? மற்ற சாதி மக்களா? அப்படிப் பார்த்தாலும் இந்த இரண்டு கோடியோடு ஒப்பிடும் போது மற்ற சாதிகள் இலட்சங்களில்தானே உள்ளது. இரண்டு கோடி மன்னர்களுக்கு இலட்சங்களில் இருப்போர் சேவை செய்ய முடியுமா? இல்லை 2 கோடி மன்னர்களும் சுழல் முறையில் வேலை பார்த்தார்களா?

      • அந்தக் காலத்தில் தமிழ் நாட்டில் ஒரு ஆயிரம் கிராமங்கள் இருந்தாலே அதிகம். இந்த ஆயிரம் கிராமங்களை இரண்டு கோடி தேவர் மன்னர்கள் ஆண்டால் ஒரு தேவர் மன்ன்னுக்கு எத்தனை கிராமம் கிடைக்கும்? அல்லது ஒரு கிராமம் எத்தனை தேவர் மன்னரால் ஆளப்பட்டிருக்கும்! அப்படிப்பார்த்தால் ஒரு குடும்த்திற்கு ஒரு மன்னர் என்று வைத்தாலும் ஆள் பற்றாதே? என்ன செய்தார்கள்? அல்லது தலைக்கு ஒரு மன்னன், வாயிக்கு ஒரு மன்னன், வயிற்றுக்கு ஒரு மன்னன், முதுகு சொறிந்து விட ஒரு மன்னன் என்று பிரித்துக் கொடுத்திருப்பார்களோ? பெருமாள் சாமியின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.

        • வினவு ஆண்டபெருமை பேசியவர்கள் வீண் பெருமை பேசுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

          நீங்கள் உங்கள் பெருமைகளை கொஞ்சம் அள்ளிவிடுங்கள் பார்ப்போம்.

      • @வினவு

        எனக்கு ஒரு நிமிடம் மெய்சிலிர்த்துவிட்டது உஙகள் ஆய்வு பார்த்து..

        நாங்கள் இந்த மண்னை ஆண்டபோது தமிழர்கள் ஆறு கோடி பேர் இங்கு இருந்தார்களா..? அன்றைய தேவர் மக்கள் தொகை 2 கோடியா..? (உங்க கணக்கு வாத்தியார் வாங்கிய சம்பளத்திற்கு சரியாக பாடம் சொலி தரவில்லை போலும்)

        260 ஆண்டுகளுக்கு முன்பு தனிச்சையாய் தமிழன் என்று திமிர் மேலோங்க ஆட்சி புரிந்தது என் பாட்டானார்கள் அவனின் பரம்பரையே இன்று 2 கோடியாய் தளைத்து வளர்ந்து இருக்கிறது.

        • 250 வருடங்களுக்கு முன்னர் சென்னையில் ஆற்காடு நவாப், தஞ்சையில் சரபோஜி, புதுக்கோட்டையில் தொண்டைமான், எட்டயபுரத்தில் எட்டப்பன் முதலானோர் ஆண்டு வந்தார். ஆக உங்களது 2 கோடி தேவர்களும் இவர்களது வாரிசுகளா? ஒரு உண்மை தெரியுமா? இந்த மன்னர்கள் அனைவரும் துரோகிகள், பிறகு உங்களது இஷ்டம். தேவையென்றால் பாட்டானார்களை மாற்ற முடியாது என்பதை நினைவில் கொள்க

          • தமிழகத்தை ஆண்ட சேரசோழபாண்டியர்கள் முதல்,பிற்காலத்தில் தேவர் பாளையக்காரர்கள் வரை தேவரினத்தவர்கள் வாரிசுகள் நாங்கள்.

            இன்று தமிழர்களை கொண்று குவிக்க உதவிய சீனா.கம்னியூட்ஸ்கள்.இவர்களின் அடிபொடிகள் நீங்கள்..! இந்தியாவின் மீது சீனா போர் தொடுத்தபோது உங்கள் நிலையை கண்டு இன்னும் வரலாறு ரூம் போட்டுதாம் சிரித்துக்கொண்டிருக்கிறது..அப்படிப்பட்ட துரோகைகளின் வாரிசுகள் நீங்கள்..நாங்கள் சேரசோழபாண்டிய..மருதிவர்..வேலுநாச்சி..ஈழவேந்தன் சங்கிலிதேவன்..சேதுபதிகள்..புலிதேவன்..வெள்ளையதேவன்..பரம்பரையினர்..நீங்கள் இஷ்டப்பட்டாலும் எங்கள் பாட்டணார்களை மாற்றமுடியாது.

          • வினவு,

            பூலித்தேவன், மருது பாண்டியர், வேலுநாச்சியார் போன்றோரை வசதியாக மறந்து விடுகிறீரே?

            உங்களுக்கு என்ன செலக்டிவ் அம்னீசியாவா?

            • அந்த விடுதலை வேங்கைகள் சாதிகளை கடந்து மக்களையும் மண்ணின் விடுதலையையும் நேசித்த அதற்காக உயிரையும் தியாகம் செய்த மாவீரர்கள் மருது பாண்டியர்களை காட்டிக் கொடுத்த கௌரி வல்லப உடையணத்தேவன் உங்க ஆண்ட பரம்பரைல சேத்தியா இல்லையா பெருமாளு.

              துரோகத்துக்கு பரிசா வெள்ளைக்காரன் அந்த உடையணத்தேவனை சிவகங்கை ஜமீன்தாரா ஆக்கினான்.அவன் வாரிசுகள்தான் இன்னி வரைக்கும் ஜமீன் சொத்துக்களை அனுபவிக்கிறாங்க.சிவகங்கை தேவஸ்தானம் அதை சேர்ந்த 108 கோயில் 22 கட்டளை 20 சத்திரம் நகரின் மையத்தில் அரண்மனை அதை அரசாங்க ஆபிசஸ்கலூகு வாடகை வருமானம் கோட்டையை சுத்தி கடைகள் நகருக்கு வெளியே பங்களா இன்னும் ஏராளமான நிலபுலன் இப்படி மஞ்ச குளிக்கும் துரோக பரம்பரை என் சாதிக்காரன் அதுனால நானும் ஆண்ட பரம்பரையின்னு பெருமைப்பட உங்களால் முடிகிறதா.

              உங்கள் பதிலை பார்த்து விட்டு உங்கள் இனம் காத்த வீரர்கள் புதுக்கோட்டை தொண்டைமான் இன்னபிற துரோகிகளை கழுவி ஊத்த வாரேன்.

              • @வேங்கையன்

                மனதில் விரல் விட்டு மனசாட்சி என்று ஓன்று நெஞ்சுக்கூட்டுக்குள் உள்ளதா என்று தேடிப்பார்த்தபின்பு பதில் சொல்லுங்கள்…

                இந்த உடையணத்தேவனை நாங்கள் கொண்டாடுகிறோமா..? அவனுக்கா நாங்கள் வீரவணக்க நாளும் குருபூசைகளும் நடத்துகிறோம்.

                நாங்கள் யாரை கொண்டாடுகிறோம்.. சகமக்களுக்காக தலையை மயிரென பிய்த்து எறிந்த மருதுவைக்கொண்டாடுகிறோம்

                54 வயதில்.. குதிரை ஏறி..வாள் ஏந்தி..எதிரிகளை கொன்று வீரதமிழ் பெண் வெலு நாச்சியாரை கொண்டாடுகிறோம்..மலம் கழிக்கும் காடாயாய் இருந்தது வேலு நாச்சியார் அதற்கு இந்த உடையணந்தேவன் வம்சமே காரணம்..

                முக்குலத்தோரே… உடையணத்தேவனையும்..புதுக்கோட்டை தொண்டைமானையும் தூரோகிகள் என காட்டிக்கொடுத்தவர்கள் இல்லாவிடில் தொண்டைமானை வரலாற்றில் ஓட ஓட விரட்டியிருப்போமா..?

                • ரெம்பத்தான் புத்திசாலித்தனம்னு நெனப்பா..நீங்க மருது பாண்டியர்களை கொண்டாடுறீங்களா உடயணனை கொண்டாடுறீங்களா என்றா கேட்டேன்.நா கேட்டது 150 வருஷமா சிவகங்கை ஜமீனை ஆண்ட இப்பவும் அதன் சொத்துக்களை அனுபவிக்கும் துரோக கும்பல் உங்க ஆண்ட பரம்பரையில சேருமா சேராதா.அதுக்கு என்ன பதில்.

                  \\முக்குலத்தோரே… உடையணத்தேவனையும்..புதுக்கோட்டை தொண்டைமானையும் தூரோகிகள் என காட்டிக்கொடுத்தவர்கள் இல்லாவிடில் தொண்டைமானை வரலாற்றில் ஓட ஓட விரட்டியிருப்போமா..?//

                  தொண்டமானை வெரட்டுனீங்கலா.இதென்ன புது காமடி.வெரட்டுன வரலாற கொஞ்சம் சொல்ல முடியுமா.

                  சிவகங்கை தேவச்தானத்துல வேலை கேட்டும் புதுக்கோட்டை மன்னர் பரம்பரை நடத்தும் கல்வி நிறுவனங்களிலும் வேலை கேட்டும் உங்க ஆண்ட பரம்பரை அந்த துரோக கும்பலிடம் கக்கத்தில் துண்டை இடுக்கிக் கொண்டு கூழை கும்பிடு போடுதே அதுதான் ஓட ஓட விரட்டுவதா.

                  • @வேங்கையன்

                    //சிவகங்கை தேவச்தானத்துல வேலை கேட்டும் புதுக்கோட்டை மன்னர் பரம்பரை நடத்தும் கல்வி நிறுவனங்களிலும் வேலை கேட்டும் உங்க ஆண்ட பரம்பரை அந்த துரோக கும்பலிடம் கக்கத்தில் துண்டை இடுக்கிக் கொண்டு கூழை கும்பிடு போடுதே அதுதான் ஓட ஓட விரட்டுவதா.//

                    புதுக்கோட்டை மன்னர் பரம்பரை நடத்தும் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டவர்களும் படிக்கிறார்கள்..வேலை செய்கிறார்கள்..சிவகங்கை தேவஸ்தான கல்வி நிறுவனங்களிலும் தாழ்த்தப்பட்டவர்களும் படிக்கிறார்கள்..வேலை செய்கிறார்கள்..

                    துரோக குப்பலோடு இருப்பவனும் துரோகித்தான் அப்ப்டிப்பார்த்தால் தாழ்த்தப்பட்டவர்களும் துரோகித்தான்.கோட்டா தருகிறார்கள் என்றதும் கொட்டாவிவிட்டுக்கொண்டு ஓடுபவர்கள் தூரோகிகளா இல்லையா என்பதை நீங்களே முடியு செய்யுங்கள்..

                    மருதுப்பாண்டியர்களின் 7 வருட போர் வரலாற்றை ஆய்வு செய்திருந்தால் உங்களுக்கு தொண்டைமான் பட்ட இன்னல்கள் அறிந்திருக்கும்..

                    சேதுபதிகளின் தளபதி மயிலப்பன் எப்படி வெள்ளையனுக்கு தோஸ்த்தாக இருந்த தொண்டைமானை விரட்டினான் என்று வரலாறு தெரிந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும்..

                    இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள்..!

                    ஈழமக்களை காட்டிக்கொடுத்த “கருணா” தமிழன் என்பதால்..தமிழர் என்ற பெயரில் …சிங்களவனுக்கு வக்கலத்துவாக்கும் சூனா சாமியையும் ..தமிழர் பெருமையோடு சேர்ர்த்துக்கொள்ளலாமா..?

    • இரண்டு கோடி மன்னர்கள் ஒரே நேரத்தில் ஆண்டு வந்த போது ஏதோ சில சிறு பிள்ளைகள் இவர்களை துரத்தி விட்டு ஆட்சியை பறித்துக் கொண்டார்கள் என்று சொன்னால் நீங்களே சேம் சைடு கோல் போடுவது போலல்லவா இருக்கிறது. இரண்டு கோடி தேவர் மன்னர்களும் கோழைகள் என்பதை நீங்களே ஓத்துக் கொள்கிறீர்கள்.

      • @வினவு

        சேம் சைடு கோல் என கால்பந்து கணக்கெல்லாம் சொல்கிறீர்கள்.

        எதற்கும் பிண்ணுட்டம் 76.1.2 -ஜ பார்க்கவும்

    • //ஐயா,கல்நெஞ்சம் நாங்க மன்னர் பரம்பரை என்றால் நாங்கள் உயர்ந்த சாதி என்று பொருள் இல்லை. நாங்கள் யாருக்கும் தாழ்ந்த சாதியில்லை என்பதுதான் பொருள்.//

      சரிப்பா பெருமாளு…
      நீங்க உயர்ந்த சாதியும் இல்ல தாழ்ந்த சாதியும் இல்ல எனக் கூறுவது புரியவில்லை.. பிராமணர்கள் யூதர்கள் ஆரியர்களை என தங்களை உயர்ந்த சாதி எனக் கூறிக்கொள்ளும் லிஸ்டல உங்க மன்னர் பரம்பரை பேரைத் தேடிபார்தேன்.. உங்க லட்ச லட்ச வருட பாரம்பரிய ராச பரம்பரை பெயரு அங்க இல்லப்பா…

      • தம்பி கல்நெஞ்சம்,

        உள்ளூர்ல தேடிப்பார்த்தயா வெளியூர்ல தேடிப்பார்த்தயா?

        யூதனைப் பத்தி உங்க ஊர்ல கல்வெட்டு இருக்கா?

        • உன் மன்னர் பரம்பரைக்கு மட்டும் Special கல்வெட்டு இருக்குதா…

          • ஆம்மாம் கல்நெஞ்சம்,

            எங்கள் மன்னர் பரம்பரைக்கு ஸ்பெஷல் கல்வெட்டு இருக்கிறது அதுதான் தமிழ்மன்னர்கள் கல்வெட்டு..

            நீங்கள் நாயக்கர்கள் கல்வெட்டிலும்..சுல்தான்கள் கல்வெட்டிலும்..வெள்ளையர்கள் கல்வெட்டிலும்..தேடினால் எப்படி..?

            தமிழ் வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை என்றால் தமிழகராதியை பார்க்க வேண்டும் ..அதை விட்டுவிட்டு தமிழவார்த்தையின் அர்த்தத்தை ஆங்கில அகராதியிலும்…பிரஞ்ச் அகராதிலும்..தெலுகு அகராதிலும்..அரபிய அகராதிலும் தேடிவிட்டு..ஜயகோ இந்த தமிழ்வார்த்தைக்கு அர்த்தமே இல்லை அதனால் இது தமிழே அல்ல என முடியுசெய்தால் எப்படி..?

            உங்க வீட்டு முகவரியை ஏன் ஆப்பிரிக்காவில் தேடிப்பார்த்துவிட்டு இப்படி ஒரு ஊரே இல்லை என சொல்வீர்களா..?

          • ஐயா கல்நெஞ்சம்,

            தொல்லியல் பிரிவுல கேட்டுத் தெரிஞ்சுக்கங்க. நாங்க சொன்னா உங்களுக்கு அதுவும் பொய்யாத் தெரியும்.

  76. ஐயா,

    வினவு அவர்களே,

    தேவர் சாதிவெறி என்று சொல்லும் நீங்கள் அதற்கான அளவுகோலாக எதை வைத்திருக்கிறீர்கள்?

    100க்கு 100 தேவரும் சாதிவெறியோடு இருப்பதையா?

    அல்லது 80% அல்லது 60% அல்லது 40% தேவர்கள் சாதிவெறியோடு இருப்பதை தேவர் சாதிவெறி என்று குறிப்பிடுகிறீர்களா?

    இதேபோல தலித் சாதிவெறியை எப்படி வகைப்படுத்துவீர்கள்?

    • பெருமாள் சாமி, உங்களிடம் ஒரே கேள்வி…. நீங்கள் தேவர் சாதியில் இருப்பதனால், அந்த சாதி பெருமை பேசுவதனால் உங்களுக்கு கிடைத்திருக்கும் நன்மைகள், ஆதாயங்கள், சலுகைகள், என்னவென்று கூறமுடியுமா?

      • @ வினவு

        ***நீங்கள் தேவர் சாதியில் இருப்பதனால், அந்த சாதி பெருமை பேசுவதனால் உங்களுக்கு கிடைத்திருக்கும் நன்மைகள், ஆதாயங்கள், சலுகைகள், என்னவென்று கூறமுடியுமா?***

        என் தகப்பனார் இராணுவத்தில் மேஜராக இருந்தார் என்று ஒரு மகன் சொல்வதனால் என்ன நன்மை கிடைக்குமோ அது.

        என் சகோதரந்தான் இந்த பகுதிக்கு தார் சாலை வர இந்த கிராமம் முன்னேற காரணம் என்று அவன் உடன் பிறந்தவன் சொல்வதனால் என்ன ஆதாயம் கிடைக்குமோ அது.

        பாக்கிஸ்தான் ரானுவத்தோடு சண்டையிட்டு இறந்துப்போனவன் என் குடும்பத்தை சேர்ந்தவன் என சொல்லும் போது என்ன சலுகை கிடைகுமோ அது.

        • நீங்கள் சொன்ன இராணவ மேஜர், தார் சாலை போடுவது, பாக் போரில் இறந்தது எல்லாம் எனக்குத் தெரிந்து ஒரு பறையர் குடும்பத்தில் கூட இருக்கிறது. பிறகு ஏன் நீங்கள் உங்களை ஒரு பறையர் என பெருமைப்படக்கூடாது? அதென்ன தார் சாலை போடுவது தேவருக்கு மட்டும் உள்ள ரைட்டா?

          • அப்படி பறையர் பள்ளர் குடும்பத்தில் அரசாண்ட மன்னனை காட்டுங்கள்..? காட்டினால் அவர்களும் பெருமை பேசட்டும் யார் தடுத்தது?

            நாடு காத்த பெருமை!
            நாடு ஆண்ட பெருமை! எங்களது..
            நாங்கள் பெருமைப்பட இருக்கிறது படுகிறோம்..

    • தேவர் சாதி வெறிக்கு பல அளவுகோல் இருக்கிறது. அதில் ஒன்று. ஒரு அருந்ததி இன இளைஞரும் ஒரு தேவர் இன பெண்ணும் உயிருக்குயிராக காதலிக்கிறார்கள். அவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்த போது பெருமாள் சாமி தலைமையில் அணிதிரண்ட தேவர் படை அவர்களை கொல்வதற்கு தமிழ்நாடு முழுக்க வெறியுடன் அலைகிறது. இதுதான் தேவர் சாதி வெறி!

      • @ வினவு

        பெண் கடத்தலை காதல் என்ற சொன்னால் கொண்டவன் அணிதிரளத் தான் செய்வான்..

        ஒரு பெண்ணோ அல்லது ஆண்ணோ இனம் மாறி திருமணம் செய்யும் போது அவன் அல்லது அவள் உறவினர்கள்தான் வந்து கேட்ப்பார்கள் அதற்காக அதை ஒரே சாதிக்காரர்கள் வந்துவிட்டார்கள் என சொன்னால் எத்தனை முட்டாள்தனம்..

        உங்கள் பார்வை, அதை சாதிக் கூட்டம் என்கிறது. பொதுப் பார்வை அது அவர்களின் உறவினர்கள் என்கிறது…பார்வையில் சுத்தம் வேண்டும்! குருடன் கண்களுக்கு எல்லாம் இருள்தான்

        ஆமாம் தருமபுரி..கொங்கு பக்கம் அணிதிரளுவதும் தேவர்கள் தானா..?

        இன்னும் மரங்களும் கயிறும் கற்கலும் இருக்கத்தான் செய்கின்றன..

        • சாதி மாறி காதலித்தால் கொலை செய்து விட்டு தற்கொலை என்று செட்டப் செய்வோம் என்பதை இப்படி சுற்றி வளைத்து பேச வேண்டாம். தில் இருந்தால் நீங்கள் உங்கள் சாதி அணி எத்தனை பேரை இப்படிக் கொன்றிருக்கிறது என்று பட்டியலை கொடுங்கள், உள்ளே தூக்கி வைத்து சட்டப்படி தண்டிக்கும் வேலையினை செய்கிறோம்.

          • உங்களுக்குதான் எந்த சேரி பையன் எந்த பெண்ணைக் காதலிக்கிறான்..எந்த சேரி பெண் எந்த பையனை காதலிக்கிறாள் என்ற பட்டியல் இருக்கிறதே… அறிவிருந்தால் கண்டுபிடியுங்கள்..
            அதுவும் இல்லை என்றால்.. இதை தா! அதை தா! என ஏகாதிபத்தியம் செய்யவேண்டாம்..

            • கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டிணம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், விருதுநகர், விழுப்புரம் ஆகிய 18 மாவட்டங்களில் 94 பெண்கள் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டு தங்களது கணவராலும், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றப்பட்ட ஆண்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் தலித் பெண்கள் 77 (82 சதவீதம்) பேரும், சாதி இந்துப் பெண்கள் 17 (18 சதவீதம்) பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

              சாதி இந்துப் பெண்களை சாதிமறுப்புத் திருமணம் மற்றும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக குற்றம்சாட்டப்பட்ட 17 சம்பவங்களில் 13 பேர் சாதி இந்துக்களே உள்ளனர். மற்ற 4 நபர்கள் தலித்துகளாக இருக்கின்றனர். ஆகவே 94 வழக்குகளில் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டு சாதி இந்து கணவராலும், ஏமாற்றப்பட்ட ஆண்களாலும் பாதிக்கப்பட்ட 96.4 சதவீத்தினர் தலித் பெண்கள். மற்ற 3.6 சதவீதத்தினர் இதர பெண்கள்.

              http://keetru.com/index.php?option=com_content&view=article&id=23166:-76-&catid=1:articles&Itemid=264

              • ஐயா சீனிவாசன்,

                சாதி மறுப்புத் திருமணத்தால் தலித்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் நீங்கள்தானே அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்? அப்புறம் எதற்காக சாதி மறுப்புத் திருமணம் என்று குதிக்கிறீர்கள்? அதாவது உங்கள் பெண்கள் எப்படிப் போனாலும் பரவாயில்லை. உயர்ந்த சாதிப் பெண்களை திருமணம் முடிக்க வேண்டும் என்ற உங்கள் உயர்ந்த எண்ணம்தானே?

                வாழ்க உங்கள் சாதி மறுப்புத் திருமணம்.. ஹாஹாஹா

    • உங்கள் தொகுதியில் எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் நற்பண்புகளுடன் ஒரு பள்ளர் சாதி வேட்பாளர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்த உலகில் உள்ள எல்லா கெட்ட பழக்கங்கள், கந்து வட்டி, கள்ளச் சாராயம், கட்டைப் பஞ்சாயத்து தகுதிகளுடன் ஒரு தேவர் சாதி வேட்பாளர் போட்டியிடுகிறார். இது ஒரு எடுத்துக்காட்டுக்காக மட்டும் சொல்கிறோம். தேர்தல் அன்று பெருமாள் சாமி வாக்குச்சாவடிக்கு சென்று என்ன இருந்தாலும் நம்ம சாதிக்காரன்தாம்லே நமக்கு உறவுமுறை என்று தேவர் வேட்பாளருக்கு ஓட்டுப் போட்டால் இதுதான் தேவர் சாதி வெறி!

      • @வினவு

        எடுத்துக்காட்டாக..

        தேவ்ர்கள் மக்கள் முழுவதுமாக ஆதரித்த கட்சி அ.தி.மு.க என்பது யாவரும் அறிந்த ஓன்று
        திருச்சியில் பாராளுமன்ற தொகுதியில் முக்குலத்தோர் ஓட்டுக்கள் பெரும்பான்மை அப்படியிருந்தும் அங்கு 2001-ல் ஜெயலலிதா தலித் எழில்மலையை வேட்பாளாராக அறிவித்தார் (இவ்வளவுக்கும் அது பொது தொகுதி) ஆனால் முக்குலத்தோர் வாக்கு வங்கியை மட்டுமே அ.தி,மு.க நம்பியது தலித் எழில்மலை திருச்சியில் வெற்றிப்பெற்று பாராளுமன்றம் போனார் இது சரித்திரம்.

        ஆமாம் தோழர்களே..ஒரு ஆயிரம் ரூபாய் கேள்வி….
        எந்த கட்சிதான் பொது தொகுதியில் தலித் வேட்பாளர்களை நிறுத்துகிறது?????
        தனித் தொகுதியில்தான் தலித்களும் நிற்கிறார்கள்…

        தனித் தொகுதியை நீக்கிவிட்டு வந்து திரு.பெருமாள் தேவன் அவர்களை கேள்வி கேளுங்கள்..?

        பொதுத் தொகுதியில் ஒரு தலித் நிற்க வைக்கமுடியாமல்..வீணான கேள்விகள் கேட்டு அறிவை வீங்க வைக்க வேண்டாம்!

    • மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தேவர் சாதி சங்கத் தலைவர் சேதுராமனால் நடத்தப்படுகிறது. இங்கே சும்மா வயிற்று வலி என்று போனாலே இரண்டு வராம் தங்க வைத்து நான்கு இலட்சம் ரூபாயை ஆட்டையை போடுகிறார்கள். இதில் தேவர் சாதி மக்களுக்கு மட்டும் இரண்டு ரூபாய் தள்ளுபடி செய்து மூன்று இலட்சத்து 99 ஆயிரத்து, 998 ரூபாய் வசூலிக்கிறார்கள். இருப்பினும் என்ன இருந்தாலும் நம்ம சமுதாயம்டே என்று பெருமாள் சாமி தனது பல்வலிக்காக சேர்ந்து 20,000 ரூபாய் மொய் எழுதுகிறார். இதுவும் தேவர் சாதி வெறிதான், என்ன கொஞ்சம் ஏமாளித்தனமான டைப்!

      • @ வினவு

        நீங்கள் சொன்ன உண்மையில் ஒரு திருத்தம்..

        தேவர் சாதி என்றால் 1000 ரூபாய் பில்லை 2000 மாக காட்டி ..அதன்பின் 1000 குறைத்து விட்டோம் என அசல் பில்லான 1000 ரூபாய் கட்டவைப்பார்கள்…இது சாதி வெறியல்ல …வியாபர தந்திர வெறி!

    • ஜெயலலிதாவின் உடன் பிறவாத் தோழியாக சசிகலா இருப்பதால் அதிமுகவை நம்ம சாதிக்கட்சி என்று நினைக்கும் தேவர் சாதியினர் ஜெயலலிதா சுற்றுப்பிரயாணம் வரும்போதெல்லாம் எண்ணெய் போட்டு வளர்த்த முறுக்கு மீசையை சுருக்கி வைத்துவிட்டு நெடுசாண்கிடையாக காலில் விழுகிறார்கள். சிலர் ஜெயலலிதா நடந்த பாதையில் மாரியாத்தாவுக்கு நேர்ந்து விட்டு மண்சோறு சாப்பிடுகிறார்கள். இதுவும் கூட தேவர் சாதி வெறிதான். இது கொஞ்சம் அடிமைத்தன டைப்

      • @வினவு

        இந்த உண்மையிலும் ஒரு திருத்தம்

        அ.தி.மு.க வில் இருக்கும் தேவர் இனத்தை சேர்ந்தவன் அதிமுக காரனாகத்தான் இருக்கிறான் ஒரு தேவர் சாதிக்காரனாக இருக்கவில்லை…தேசப்பற்றுமிக்கவனாகவும் இருக்கவில்லை..

        தேசப்பற்றுமிக்க ஒரு தேவர் சாதிக்காரன் இருப்பானெனில் அவன் நேதாஜியின் உண்மையான பார்வர்ட் பிளாக் இயக்கத்தில் இருக்கவேண்டும் (இப்போது இருப்பது போலி பார்வர்ட் பிளாக்)

        எவனோ ஜெயலலிதா விசுவாசி அவள் காலில் விழுந்துதான் என்றால் அவன் அதிமுக நாயாகத்தான் இருப்பான் ..தேவர் சாதிவெறியில் அவனில்லை உங்கள் அவதானிப்பு மிகவும் தவறு

        • @ஆர்.தியாகு

          தமிழ்நாட்டின் ஆதிக்க சாதி அதிக மக்கள் கொண்ட மன்னர் பரம்பரை சாதி என கூறிக்கொள்ளும்
          ஏன் உங்கள் பார்வட் பிளாக் கட்சி டெப்பாசிட் கூட பெறமுடியவில்லை.. அம்மா தாத்தா கால்களில் வீழ்ந்து கிடைக்கிறீங்க..
          ரோஷக்கார மன்னர் பரம்பரை அடிமையாகவா இருக்கீறிங்க ஏன் பாஸ்…

          இப்பவே மற்றவங்களுக்கு (அம்மா தாத்தா )அடிமையா இருக்குது உங்க மன்னர் பரம்பரை.. அந்த காலத்திலும் இந்த மன்னர் பரம்பரை மற்ற மன்னர்களுக்கும் அடிமை ஊழியம்தான..

    • பூனைக்கண் புவனேஸ்வரி நம்ம சாதி ஆளுதான் என்பதால் சேதுராமன் மகளிர் அணித் தலைவியாக்குகிறார். இந்நிலையில் அவர் திக் விஜயம் செய்யும் போத பெருமாள் சாமி, முக்குலத்தோர் வீராங்கனையே, கண்ணகித் தாயே, சீதைக்கு அக்காவே, திரௌவபதிக்கு தங்கையே, தமிழச்சியே, என்று பிரிம்மாண்டமாக பிளக்ஸ் வைத்து தனது ஊரில் அமர்க்களப்டுத்துகிறார். இதுவும் தேவர் சாதிவெறியே. ஆனாலும் இது கொஞ்சம் ஜொள்ளு டைப்.

      • @ வினவு

        வியாபரி சேதுராமனை பற்றி முந்தைய பதிவுகளில் தெளிவாக சொல்லிவிட்டேன்..கருனாதியைப் போல் வப்பாட்டிக்கும் வப்பாட்டி மகளுக்கும் கட்சியில் இடம் ஓதிக்கீடு செய்யும் சேதுராமன் உண்மையில் தேவர் சாதி பற்று இருந்தால்..பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இறந்துப்போன பெரும் காயங்கள் பட்ட இளைஞர்களை ஏன் காணவரவேயில்லை…அவனுக்கு உண்மையில் தேவர் சாதி பற்று இருக்குமெனில் ஏன் சிறு கணடணம் கூட தெரிவிக்கவில்லை..????

        இதற்கு பதில் சொல்லுங்கள் தோழர்களே..நெஞ்சில் ஈரமிருக்குமெனில்…

        ஒரு தா.பாண்டியன்,ராமகிருஷ்ணன்,பிரகாஷ் காரத் இவர்களை வைத்து கார்லல் மார்கஸ்..லெனின்..குவேரா போன்றவர்களையும் அவர்களை பின்பற்றும் மக்களையும் நான் கணித்து..இவர்கள் இப்படித்தான் பாருங்கள் பாண்டியனை காரத்தை டி.ராஜாவை என ஒருவன் சொல்வான் எனில் அவன் எத்தனை பெரிய முட்டாள்..

        வெறும் அதிமுக-காரனையும் சசிகலாவையும் சேதுராமனையும் வைத்து ‘ஜயகோ தேவர் சமூகத்தை பாருங்கள்’ என சொன்னால் அவனும் முட்டாள் தானே தோழர்களே..????

        இப்போது நீங்களே சொல்லுங்கள் உங்கள் பதிவு முட்டாளுக்கு உரியதா என்று..!

      • அதே போல தலித் நடிகர், நடிகை இல்லையா? அவர்களுக்கும் பேனர் ஃப்ளெக்ஸ் வைக்கப்படுவது இல்லையா? ஒவ்வொரு சாதிக்காரரும் தங்கள் சாதிகளை தூக்கிப் பிடிக்கிறார்கள். தலித்கள் தங்கள் சாதிகளை தூக்கிப் பிடிக்கிறார்கள். அப்போ அது தலித் சாதிவெறிதானே?

    • தேவர் சாதியில் பிறந்த மக்கள் அனைவரையும் நாங்கள் சாதி வெறியர்களாக கூறவில்லை. யாரெல்லாம் சாதி வெறியுடன் பேசி, எழுதி, இயங்கி வருகிறார்களோ அவர்களைத்தான் சாதி வெறியர்கள் என்று கூறுகிறோம். அதே நேரம் இத்தகைய சாதி வெறியர்களை தேவர் சாதி மக்கள் அம்பல்படுத்தி தனிமைப்படுத்தவில்லை என்றால் அந்த சாதி வெறியர்களுக்கு பிற தேவரின மக்கள் மறைமுக ஆதரவு தந்ததாகவே கருதப்படும்.

      • அதே போல தலித் மக்களின் சாதிவெறியையும் கருதலாம் அல்லவா?

        நீங்கள் இவ்வாறு எழுதுவதன் மூலம் தலித் சாதிவெறிக்கு துணைபோகிறீர்கள் என்றே நாங்கள் கருதுகிறோம்.

  77. @வினவு

    பாவம் இன்னும் சிறுபிள்ளையாகவே உள்ளீர்கள்…

    ஒரு பேனரும் ஒரு போஸ்டரும் போதும்..எவனும் சாதி சங்கத்திற்கு தலைவன் ஆகிவிடுவான் இதுவே தமிழகத்தின் நிலை…

    அதை எதற்காக செய்கிறான்..? ஒரு எம்.எல்.ஏ சீட் கிடைக்குமென்றும்…ஒரு எம்.பி ஆகிவிட முடியாதா என்றும் செய்கிறான் என்பது இதற்கு சாட்சிகள்…

    உதாரணம்:-
    மூவேந்தர்கள் முன்னேற்ற கட்சி
    கொங்கு முனேற்றகழகம் இன்னும் பலபல….

    இவன் எதெனும் சாதிக்காக கலவரம் செயதவனா.?.சாதிக்காக பெரும் கொலைகள் செய்தவனா..?
    சாதிக்காக சிறைக்கு சென்றவனா என்ற கேள்விக்கு விடையை நீங்களே சொல்லுங்கள்…

  78. intha vinavu valaithalam oru saathikaka nadathapadukirathu enpathu unmai thevar makkal mattum thaan saathi veri enpathu mutrilum poi , ungaluku ninaivu irukiratha ambedkar satta kalooriyil nadathathu enna , itharku enna solla poringa

  79. //ஜெயலலிதாவின் உடன் பிறவாத் தோழியாக சசிகலா இருப்பதால் அதிமுகவை நம்ம சாதிக்கட்சி என்று நினைக்கும் தேவர் சாதியினர் ஜெயலலிதா சுற்றுப்பிரயாணம் வரும்போதெல்லாம் எண்ணெய் போட்டு வளர்த்த முறுக்கு மீசையை சுருக்கி வைத்துவிட்டு நெடுசாண்கிடையாக காலில் விழுகிறார்கள். சிலர் ஜெயலலிதா நடந்த பாதையில் மாரியாத்தாவுக்கு நேர்ந்து விட்டு மண்சோறு சாப்பிடுகிறார்கள். இதுவும் கூட தேவர் சாதி வெறிதான். இது கொஞ்சம் அடிமைத்தன டைப்//

    சசிக்கலா எந்த சாதிச் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறார்? அவரை யார் தேவர்களின் தலைவியாக கருதுகிறார்கள்? அவரை ஜெயலலிதா ஒதுக்கியபோது யாராவது தீக்குளித்தார்களா என்ன? எல்லாச் சாதியிலும் மடையர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்கள்தான் தேவர்கள் என்று நீங்கள் தீர்மானத்திற்கு வந்தால், ஐயோ பாவம் உங்களை நம்பும் தலித்கள்.

  80. //மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தேவர் சாதி சங்கத் தலைவர் சேதுராமனால் நடத்தப்படுகிறது. இங்கே சும்மா வயிற்று வலி என்று போனாலே இரண்டு வராம் தங்க வைத்து நான்கு இலட்சம் ரூபாயை ஆட்டையை போடுகிறார்கள்.//

    ஐயா வினவு, அதேபோல நாடார் மக்கள் நடத்தும் தொழில் நிறுவனங்களையும் அவற்றின் கொள்ளைகளையும் எழுதுங்கள். எல்லா சாதிக்காரரும் கொள்ளையடிப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதற்கு அந்த ராமசாமி நாயக்கர் உருவாக்கித் தந்த திராவிடக் கொள்கைள்தான் காரணமே ஒழியத் தேவர்கள் இல்லை.

    சேதுராமன் தான் தேவர்களுக்காக கட்சி நடத்தவில்லை என்றும் அறிவித்திருக்கிறார் அதையும் எடுத்துப் போடுங்கள்.

    // இதில் தேவர் சாதி மக்களுக்கு மட்டும் இரண்டு ரூபாய் தள்ளுபடி செய்து மூன்று இலட்சத்து 99 ஆயிரத்து, 998 ரூபாய் வசூலிக்கிறார்கள். இருப்பினும் என்ன இருந்தாலும் நம்ம சமுதாயம்டே என்று பெருமாள் சாமி தனது பல்வலிக்காக சேர்ந்து 20,000 ரூபாய் மொய் எழுதுகிறார். இதுவும் தேவர் சாதி வெறிதான், என்ன கொஞ்சம் ஏமாளித்தனமான டைப்!//

    நீங்க புத்திசாலியா இருக்கிறப்ப நான் ஏமாளியாகத்தான் இருக்க முடியும். தலித்கள் வியாபாரத்திற்கு வருந்து பெரும் பதவிகளில் வந்து செய்யும் ஊழல்களையும் மோசடிகளையும் நீங்கள் ஏற்றுக் கொள்விர்களா? ஏன்னா தலித் என்றாலே அவர் உத்தமராகத்தான் இருப்பார். மற்ற சாதிக்காரர்கள் குறிப்பாக தேவர்கள் கொள்ளைக்காரர்களாக இருப்பார்கள். நல்லா இருக்குய்ய உங்க சாதிப்பாசம்.

  81. //உங்கள் தொகுதியில் எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் நற்பண்புகளுடன் ஒரு பள்ளர் சாதி வேட்பாளர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்த உலகில் உள்ள எல்லா கெட்ட பழக்கங்கள், கந்து வட்டி, கள்ளச் சாராயம், கட்டைப் பஞ்சாயத்து தகுதிகளுடன் ஒரு தேவர் சாதி வேட்பாளர் போட்டியிடுகிறார்.//

    அப்போ இந்த மாதிரி சாதி பார்த்து வேட்பாளை நியமித்துச் சென்றாரே அவரையும் சாதி வெறியர் என்று சொல்லலாம்தானே?

    ஆமாம் உங்க ஃபார்முலாவை ஏன் எந்தக் கட்சிக்காரரும் பின்பற்ற மாட்டேன்கிறார்கள். அதுவும் ராமசாமி படத்தை போட்டுக்கொள்பவர்கள். அந்த மர்மம் என்ன? ஒருவேளை அவங்களும் சாதிவெறி பிடிச்ச ஆசாமிகளாக இருப்பார்களோ?

    // இது ஒரு எடுத்துக்காட்டுக்காக மட்டும் சொல்கிறோம். தேர்தல் அன்று பெருமாள் சாமி வாக்குச்சாவடிக்கு சென்று என்ன இருந்தாலும் நம்ம சாதிக்காரன்தாம்லே நமக்கு உறவுமுறை என்று தேவர் வேட்பாளருக்கு ஓட்டுப் போட்டால் இதுதான் தேவர் சாதி வெறி!//

    அதே மாதிரி ஒரு நல்ல தேவர் போட்டியிடும்போது ஒரு கெட்ட பள்ளர் எதிர்த்துப் போட்டியிட்டால் பள்ளர்கள் தேவர் வேட்பாளருக்கு ஓட்டுப்போடுவார்களா?

  82. //தேவர் சாதி வெறிக்கு பல அளவுகோல் இருக்கிறது. அதில் ஒன்று. ஒரு அருந்ததி இன இளைஞரும் ஒரு தேவர் இன பெண்ணும் உயிருக்குயிராக காதலிக்கிறார்கள். அவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்த போது பெருமாள் சாமி தலைமையில் அணிதிரண்ட தேவர் படை அவர்களை கொல்வதற்கு தமிழ்நாடு முழுக்க வெறியுடன் அலைகிறது. இதுதான் தேவர் சாதி வெறி!//

    வினவு நீங்க இந்த அளவு முற்போக்கா இருப்பீங்கனு நினைக்கல.

    எந்த சாதிக்காரர் தன் பெண்ணை வேற்றுச் சாதிக்காரருக்கு கொடுக்கத் தயாராக இருக்கிறார்? ஒரு தாழ்த்தப்பட்டவர் தன் பெண்ணை வேற்றுச் சாதிக்காரருக்கு கொடுக்கத் தயாராக இருக்காதபோது தலித்களை யார் ஏற்றுக் கொள்வார்கள்? நகரங்களில் உட்கார்ந்துகொண்டு கற்பனை கனவு காணாதீர்கள்.

    ஒருவரை மனிதராகவே மதிக்கலயாம். பெண் கேட்டால் பூஜையா செய்வார்கள். அப்புறமாக குடிசையை எரித்துவிட்டார்கள் என்று கூப்பாடு வேற. நல்லா இருக்குய்யா உங்க சாதிச் சேவை.

  83. தேவர்கள் சாதி வெறியர்கள் என்றால் உங்கள் பதில்கள் நீங்கள் யார் என்று காட்டுகின்றன.

    வாழ்த்துக்கள் தலித் சாதிவெறிக்கு.

  84. //பெருமாள் சாமி, உங்களிடம் ஒரே கேள்வி…. நீங்கள் தேவர் சாதியில் இருப்பதனால், அந்த சாதி பெருமை பேசுவதனால் உங்களுக்கு கிடைத்திருக்கும் நன்மைகள், ஆதாயங்கள், சலுகைகள், என்னவென்று கூறமுடியுமா?//

    வினவு உங்களை மாதிரி ஒன்றுமே இல்லாத தலித்கள் சாதி வெறி பிடிச்சு அலையும்போது நாங்கள் எங்கள் சாதிப் பெருமை பேசுவதில் என்ன தவறு?

    நீங்கள் ஆதாயங்கள், சலுகைகளுக்காக சாதியை பிடித்து தொங்குகிறீங்கள். நாங்கள் எங்கள் பெருமைகளுக்காக சாதியில் இருக்கிறோம். நீங்கள் இரட்டை வேடம் போடுகிறீர்கள். நாங்கள் அப்படி நடிப்பதில்லை.

  85. //250 வருடங்களுக்கு முன்னர் சென்னையில் ஆற்காடு நவாப், தஞ்சையில் சரபோஜி, புதுக்கோட்டையில் தொண்டைமான், எட்டயபுரத்தில் எட்டப்பன் முதலானோர் ஆண்டு வந்தார். ஆக உங்களது 2 கோடி தேவர்களும் இவர்களது வாரிசுகளா? ஒரு உண்மை தெரியுமா? இந்த மன்னர்கள் அனைவரும் துரோகிகள், பிறகு உங்களது இஷ்டம். தேவையென்றால் பாட்டானார்களை மாற்ற முடியாது என்பதை நினைவில் கொள்க//

    அம்பேத்கரும், பெரியாரும் கூடத்தான் வெள்ளையனுக்கு வால் பிடித்த துரோகிகள்.

  86. //பெருமாள் சாமி நீங்கள் ஆண்ட பரம்பரை என்பதை கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்கள்.//

    ஆட்சியாளர்களாகவும், போர்வீரர்களாகவும் இருந்தவர்கள்.

    // தமிழ்நாட்டில் இருக்கும் ’2′ கோடி தேவர் குடும்பங்களும் ஆண்ட பரம்பரை என்றால் இங்கே 2 கோடி மன்னர்கள் வாழையடி வாழையாக ஆண்டனர் என்று பொருளாகிறது.//

    அப்படி பொருள் கொள்வது உங்கள் விருப்பம்.

    // எனில் இந்த மன்னர்களுக்கு காவல் காத்து, கழிப்பறையை சுத்தம் செய்து, சமையல் செய்து, அந்தப்புரத்தில் பணிவிடை பார்த்து, நாடு முழுக்க விவசாயம் செய்து இன்ன பிற வேலைகளை யார் பார்த்தார்கள்? மற்ற சாதி மக்களா?//

    அதை அவர்களைக் கேளுங்கள்.

    // அப்படிப் பார்த்தாலும் இந்த இரண்டு கோடியோடு ஒப்பிடும் போது மற்ற சாதிகள் இலட்சங்களில்தானே உள்ளது. இரண்டு கோடி மன்னர்களுக்கு இலட்சங்களில் இருப்போர் சேவை செய்ய முடியுமா? இல்லை 2 கோடி மன்னர்களும் சுழல் முறையில் வேலை பார்த்தார்களா?//

    இரண்டுகோடிப்பேரும் மன்னர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது உங்கள் பகுத்தறிவைக் காட்டுகிறது.

  87. வினவு,

    இன்னும் நான் எழுப்பிய கேள்விகளில் பாதிக்குக் கூட பதில் சொல்லவில்லை.

    ஹாஹாஹஹா நல்லா ரூம்போட்டு யோசிச்சு பதில் போடுங்க.

  88. தேவர்கள் ஆண்டபரம்பரை என்பது ஒருபுறம் இருக்க,
    அவர்கள் முழுவதும் போர்ப்பரம்பரை ஆவார்கள். அவர்கள் போர் செய்வதை தங்கள் தொழிலாகக் கொண்டவர்கள்.

  89. //நீங்கள் சொன்ன இராணவ மேஜர், தார் சாலை போடுவது, பாக் போரில் இறந்தது எல்லாம் எனக்குத் தெரிந்து ஒரு பறையர் குடும்பத்தில் கூட இருக்கிறது. பிறகு ஏன் நீங்கள் உங்களை ஒரு பறையர் என பெருமைப்படக்கூடாது?//

    இது ஒரு பறையரைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வி. உங்களைப் போன்றவர்கள்தான் அவர்களின் சாதிப் பெயரை மறைக்கச் சொல்லி அவர்கள் உண்மையிலேயே தாழ்த்தப்பட்டவர்கள் என்பதற்கு சான்றிதழ் கொடுத்தவர்கள்.

  90. //சாதி மாறி காதலித்தால் கொலை செய்து விட்டு தற்கொலை என்று செட்டப் செய்வோம் என்பதை இப்படி சுற்றி வளைத்து பேச வேண்டாம். தில் இருந்தால் நீங்கள் உங்கள் சாதி அணி எத்தனை பேரை இப்படிக் கொன்றிருக்கிறது என்று பட்டியலை கொடுங்கள், உள்ளே தூக்கி வைத்து சட்டப்படி தண்டிக்கும் வேலையினை செய்கிறோம்.//

    இதுபோல தலித்கள் ஒருபோதும் செய்யவே இல்லையா? முதலில் அவர்களை தண்டித்து நீங்கள் நீதிமான்கள்தான் என்பதை நிரூபியுங்களேன்.

  91. வினவு சார்,

    சாதி ஒழிப்பு, மத ஒழிப்பு பற்றியோ அல்லது அதிலிருந்து வெளியேறுவது பற்றியோ பேச மறுக்கிறீர்களே? அப்புறம் தலித்களும் சாதியை விட்டு வெளியேறுவது பற்றி பேச வேண்டியிருக்கும் என்ற பயம்தானே?

    உங்க சாதிப் பாசத்தை பாராட்டுறேன்.

  92. வினவு சார்,

    உங்களுக்குப் பிடிச்ச கேள்விக்கு மட்டும் பதில் போடுறீங்க பாருங்க. அதுல உங்கள் ஊடக தர்மத்தை வியக்கிறேன். ஹாஹாஹா

  93. @பெருமாள் தேவன்

    “வினவு” விவரமான ஆளுனு என் தோழன் சொன்னான்..பயபுள்ள பொய் சொல்லிட்டான் போலயிருக்கு

    மொக்கையா பதில் பதிவிடுகிறார்கள்… எனக்கு சுவாரசியம் போச்சி…ஹாஹாஹா

  94. குடிதாங்கியின்’ அவலநிலை

    காதல் மற்றும் கலப்புத் திருமணங்கள் குறித்து ராமதாசு பேசும்போது “நான் காதலை எதிர்க்கவில்லை” என்றும், “ஏதுமறியா பெண்களைத் திட்டமிட்டுக் கடத்தி, பலாத்காரப்படுத்தி, கல்யாணம் செய்வது, பேரம்பேசி பணம் பறிப்பது என்பதை விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தை சேர்ந்த சிலர் ஒரு செயலாகவே செய்துவருகின்றனர். இதனால் வன்னியப் பெண்களின் வாழ்க்கை நாசமாக்கப்படுகிறது. இந்த நாடகக் காதலை ஏற்க முடியாது” என்றும் அவர் கூறுகிறார். இராமதாசு, தூய்மையான காதல்பற்றிப் பேசி கலப்புத் திருமணங்களை மட்டும் எதிர்க்கவில்லை. தங்களது சாதிக்குள்ளேயே ஏழை, பணக்காரர்களுக்கு இடையே வளர்ந்துவரும் காதலையும் எதிர்க்கிறார். உண்மையில் சாதிக்குள் பெற்றோர்களால் செய்யப்படும் ஏற்பாட்டுத் திருமணங்கள் பெண்களுக்கு தூக்கு கயிராகவே மாறியுள்ளது. வரதட்சணை கேட்டுக் கொடுக்க முடியாததால் எத்தனை பெண்களின் உயிர் பறிபோகிறது. பெண்களை பணம் காய்க்கும் மரமாக மாற்றும் ஏற்பாட்டுத் திருமணங்கள்தான் வன்னிய சாதிப் பெண்களுக்கும் தூக்குக் கயிறாக மாறியுள்ளது. காதல் மறுப்பு மூலம் இந்த சாதிய உள்முரண்பாடுகளை மூடிமறைக்கிறார் இராமதாசு.

    ஒருங்கிணைந்த வெள்ளாளக் கவுண்டர்கள் பேரவை மாநில அமைப்பின் தலைவர் மணிகண்டன் காதல் மணம், கலப்பு மணத்தை எதிர்த்துப் பேசும்போது, “கவுண்டர் சமுதாயத்துக்குன்னு ஒரு பெரிய பாரம்பரியமும் மரியாதையும் கலாச்சாரமும் இருக்குதுங்க. ஆனால் காதல் மற்றும் கலப்புத் திருமணத்தில் எங்க சமுதாய அடையாளம் அநியாயத்துக்கு அழிஞ்சுபோகுது. இந்தச் சீரழிவை தடுத்து நிறுத்தியே ஆகனும்” என்று கூறுகிறார்.

    உண்மையில் நிலப்பிரபுத்துவ சாதியப் பண்பாட்டின் பாரம்பரியப் பண்பாடு என்பது மிகவும் கேவலமானது. மடங்கள், கோவில்கள், மாடவீதிகளில் தேவதாசியை உருவாக்கியது என்ன பாரம்பரியம்? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது வன்புணர்ச்சியில் ஈடுபட்டு படுகொலைகள் புரிந்தது எந்தப் பண்பாடு? விதவைகளுக்கு மறுமணத்தை மறுத்து அவர்களை காமக்கிழத்திகளாக மாற்றிக்கொள்ளும் சாதியப் பண்பாடு என்ன புனிதமானது? இன்றும் கோவில்களும் மடங்களும் காமவெறிக் கூடாரங்களாக மாறி நிலப்பிரபுத்துவ பண்பாடு நாற்றமெடுக்கிறதே இதுதான் இவர்கள் சொல்லும் பண்பாடு! பாரம்பரியம், பண்பாடு என்று கூறிக்கொண்டு காதலையும், கலப்பு மணங்களையும் மறுக்கும் இந்தக் காட்டுமிராண்டிகளை வளரும் தலைமுறை ஏற்கப் போவதில்லை. வளர்ந்துவரும் பொருளாதார நிலைமைகள், நகர்மயமாதல், போக்குவரத்து, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அனைத்தும் காதலையும், கலப்புத் திருமணத்தையும் வளர்த்துக்கொண்டே செல்லும். இந்தச் சாதி வெறிச் சண்டாளர்களின் கனவு நொறுங்கும்.

  95. தியாகு சார்,

    வினவு போன்ற முற்போக்கு முகமூடிகளின் வேலையே சாதிக் கலவரத்தை மூட்டுவதுதான். இவர்களுடைய நோக்கம் சாதிகளிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதோ அல்லது அவர்களின் பிரச்சனையை தீர்த்து வைப்பதோ கிடையாது. அவர்களின் பிரச்சனையில் எண்ணெய் ஊற்றி தீயை வளர்த்து வயிறு வளர்க்கும் திராவிடக் கொழுந்துகள்.

    தேவர்கள் என்றாலே முட்டாள்கள் என்பதுதான் இவர்களின் பிரச்சாரம்.

    முகநூலில் வாதம் செய்யும் ஒரு சாதாரண தலித் நண்பருக்கு உள்ள முதிர்ச்சி கூட இல்லாத இந்த வினவு ஆசிரியரை நினைத்தால் இந்த இணையத்தின் வாசகர்கள்தான் பாவம்.

    இவர்கள் எத்தனைக் காலம்தான் இப்படி சாதிவெறி பேசி காலத்தை ஓட்டுகிறார்கள் என்று பார்ப்போம்.

    • //இவர்கள் எத்தனைக் காலம்தான் இப்படி சாதிவெறி பேசி காலத்தை ஓட்டுகிறார்கள் என்று பார்ப்போம்.///

      அப்ப நீங்க பேசியது என்ன? உலகப் பொருளாதரமா… அமீபா டைனேசரஸ் என புகழ் பாடியது நீங்களதனே..நீங்கள்தான் இதுவரை மன்னர் பரம்பரையின் வாரிசுகளாக பண்ணிய கருத்துகளை படித்துப்பாருங்கள் சாதி வெறி யாருக்கு உள்ளது என்று

      எனக்கு தெரிந்தவரை நாய்களுக்குத்தான் உண்டு சாதி…

      • கல்நெஞ்சம்,

        உங்கள் வார்த்தைகளில் நீங்கள் எவ்வளவு வெறி கொண்டிருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. அப்புறம் எப்படி நீங்கள் மற்றவர்களை வெறி கொண்டவர்கள் என்று சொல்ல முடியும்? நீங்களும் அவர்களும் ஒரே பிரிவில் வருவீர்கள்.

    • திரு பெருமாள் தேவன் அவர்கள்
      மள்ளர் குலத்தவரை தலித் என்று குறிப்பிட்டதற்ற்காக வினவு இணையத்திற்ற்கு எனது கண்டனத்தை இங்கே தெரிவித்திருந்தேன்.வினவு என்ற ஜனநாயக பண்பு கொண்ட தளம் இருந்ததனால் தான் நாம் எல்லோரும் இங்கே பிரச்சனை சம்பந்தமாக விவாதிக்க முடிந்தது.எம்முடைய மள்ளர் /பள்ளர் சமூகத்தை யாரும் தலித் என்ற வட்டத்திற்ற்குள் சேர்க்கவோ அப்படி அழைக்கவோ கூடாது.பட்டியல் இனத்தில் இன்னும் இருப்பதனால் அழைக்கிறீர்களா? நரிக்குறவர் பி சி ,எம்பிசி ஆகிய பிரிவில் உள்ளார்கள்.அப்பிரிவில் நீங்களும் இருப்பதனால் நாங்கள் உங்களை நரிக்குறவர் என்று அழைக்கலாமா?

      • குமரன் பத்மநாதன் அவர்களே,

        நீங்கள் உங்களை தலித் என்று அடையாளப் படுத்திக் கொள்வதும், மள்ளர் என்று அடையாளப் படுத்திக் கொள்வதும் உங்கள் விருப்பம். அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை.

        இந்த சலுகை விவகாரமே அவரவர் சமூக நிலையை வைத்துதான் பிரிக்கப்பட்டுள்ளது. தலித் என்றால் ஒருவர் என்றோ, எம்பிசி என்றால் அவர்கள் அனைவரும் ஒன்று என்றோ அர்த்தமில்லை. அதையே நீங்கள் சொல்கிறீர்கள்.

        அப்படி இருக்கும்போது எப்படி எங்களை நீங்கள் நரிக்குறவர்களுடன் சேர்க்க முடியும்?

        நீங்கள் தலித்கள் இல்லை என்றால் தலித்கள் என்று சொல்லிக் கொள்ளும் பறையர்களும், அருந்ததியர்களும் அந்த பிரிவில் வருவார்கள்.

        இன்னும் மள்ளர்கள் எல்லாரும் தங்களை தலித் அல்லாதவர் என்று கருதுவதாக எனக்குத் தெரியவில்லை.

        யாரெல்லாம் தங்களை தலித் என்று அடையாளப் படுத்திக் கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் நான் வைக்கும் கேள்வி, நீங்கள் தலித் இல்லை என்றால் எனது கேள்வியைக் கண்டுகொள்ளத் தேவையில்லை.

      • @kumaran pathmanathan

        அப்படி என்றால் உங்களை விட நரிக்குறவர்கள் உயர்ந்த சாதி அல்லவா..? நரிகுறவன் இளைஞனுக்கு உங்கள் பெண்களை கட்டி கொடுக்கலாமே..கலப்பு திருமணம் என்பது உங்களில் சாத்தியம் தானே..?

        நரிக்குறவர்களை சம்பந்தியாக்கி பாசி ஊசி மணி போன்றவைகளை விற்று நீங்களிம் வியாபார சாதியாகலாமே..? சிந்தியுங்கள்!

  96. வினவு சாதியற்று செயல்படுகிறதா? நிச்சயமாக இல்லை.

    பெண் போலீசிடம் ஆபாசமாக நடந்துகொண்ட தலித்துகள் போலீசாரால் சுடப்பட்டால் அதற்கு தேவர்களின் சாதி வெறி காரணம்! இதத்தான் பாவம் ஒரு இடம் பழி ஒரு இடம்னு சொல்லுவாங்க.

    அதேசமயம் தேவர் ஜெயந்திக்கு சென்றுவிட்டு வந்த அப்பாவி இளைஞர்கள் மீது குண்டு வீசிய ஜாதிவெறியன்கள் பள்ளர் அதாவது வினவின் பார்வையில் தலித் என்பதாலேயே அவர்கள் செய்தது நியாயம்.

    ஒருவரின் செயல்களை வைத்து நியாய அநியாயங்களைக் கண்டறிவதற்குப் பெயர்தான் நடுநிலைமை. அறிவுஜீவித்தனம். அதை விட்டுவிட்டு ஜாதியின் அடிப்படையில் மட்டுமே ஒருவர் என்ன செய்தாலும் தவறு. இன்னொருவர் என்ன செய்தாலும் சரி என்பது மற்றுமொரு மனுநீதி.

    தலித்துகள் தவறு செய்யும்போது திராவிட இயக்கங்களோ இடதுசாரி இயக்கங்களோ அறிவுஜீவிகளோ அவர்கள் செய்தது தவறு என்று உண்மையை சொல்லி இருந்தால் ஜாதியற்ற சமூகத்தை நாங்கள் நம்புவோம். ஆனால் இவர்கள் கள்ள மெளனம் காத்தனர். அரசியல் கட்சிகளோ சட்டமோ அறிவுஜீவிகளோ தலித் அல்லாதவர்கள் பாதிக்கப்படும்போது துணை நிற்கவில்லை என்றால் நிச்சயம் அவர்கள் அவர்களின் ஜாதி அமைப்பிடமே சென்று சேர வேண்டும். இந்த நிலையை உருவாக்கி வளர்த்தெடுக்கும் வினவு போன்ற அமைப்புகளே இன்று ஜாதி உணர்வும் வெறியும் எல்லா பக்கமும் பற்றி எரிவதற்குக் காரணம்.

    தர்பமபுரிக்கு தவ்வி தவ்வி குதிச்சவங்க பெட்ரோல் குண்டுக்கு பேச கூட இல்லை. இதுதான் ஜாதிக்கொரு நீதி சொல்லும் நயவஞ்சகத்தனம்.

  97. ஆண்ட பரம்பரைன்னு பீத்திக்கிற தேவர் சாதி ”அறிவாளிகளே”.

    தேவர் இன மக்கள் தமிழ் நாட்டில் திருச்சிலேர்ந்து திருநெல்வேலி வரையிலும்தான் வாழ்கிறார்கள்.இந்த பகுதி சோழ நாடாகவும் பாண்டிய நாடாவும் இருந்திருக்கு.அப்படிப்பாத்தா இரண்டு மன்னர்கள்தா இருந்துருக்காங்க.அவங்களுக்கு கீழ குறுநில மன்னர்கள் இருந்தார்கள் என்று வச்சுக்கிட்டாலும் அவுங்க பூரா தேவர்ன்னே வச்சுக்கிட்டாலும் அண்ணன் தம்பி சித்தப்பா அப்புறம் கூத்தியாளுக்கு பொறந்தது இப்படி கிளை பரப்பினாலும் சில ஆயிரம் பேர் மன்னர் பரம்பரைன்னு சொல்லிக்கலாம்.கோடிக்கணக்குல சொன்னா அதுல லாஜிக் இல்லையே.

    ஆண்ட பரம்பரைல ஊருக்கு இரண்டு மூணு பேர்தான் பணக்காரானாவும் பண்ணயாராவும் இருக்கான்.மீதி எல்லாம் காலம் காலமா துண்டு துக்கடா நிலத்துல விவசாயம் பாக்குதே அது எப்படி.

    ஆடு களவாங்க போகும் பெருமையை ஆடு கத்தாம இருக்க எப்படி சங்கை ஒதுக்கணும்னு உங்க ஆளுகளே எழுதி புஸ்தகமா வந்துருக்கு.போய் வாங்கி படிங்கய்யா.அப்புறம் தெரியும் களவாணி பரம்பரைக்கு ஆண்ட பரம்பரைன்னு பீத்த பெருமை தேவையான்னு.

    ஆண்ட பரம்பரையா வாட்ச் மேன் பரம்பரையான்னு எழுத்தாளர் சு. வெங்கடேசனால் எழுதப்பட்ட சாகித்ய அகாடமி பரிசு வாங்குன காவல் கோட்டம் நாவலை படித்து பாத்தால் தெரிந்து விடும்.

    • பஹூத்தறிவாளி வேங்கையன்,

      உங்கள் வார்த்தை நாகரீகமே நீங்கள் எவ்வளவு சிறந்த அறிவாளி என்று காட்டுகிறது.

      நாங்கள் ஆண்டபரம்பரை என்று சொல்லிக் கொள்வது உங்களுக்கு ஏன் உறுத்துகிறது?

      ஏனென்றால் நாங்கள் ஆண்ட பரம்பரை என்றால் நீங்கள் அடிமை பரம்பரை என்று சொல்ல வேண்டியிருக்கும் என்பதாலா?

      முக்குலத்தோரில் கள்ளர் எதிரிகளின் செல்வங்களை கவரும் படையாக இருந்து வந்தார்கள். இதெல்லாம் அடிமை பரம்பரைக்கு எங்கே தெரியப்போகிறது?

      உங்களுக்கு ஏதாவது பரம்பரை பெருமை இருந்தால்தானே உங்களால் பீற்றிக் கொள்ள முடியும்? இருந்தாலும் உங்கள் பாட்டன் முப்பாட்டனிடம் கேட்டுப் பார்த்து அதைப் பீற்ற ஆரம்பியுங்கள். அதை விடுத்து எங்களை குறை சொல்வதால் உங்களுக்கு ஒரு பெருமையும் சேரப் போவதில்லை.

      • வேணாம்யா எங்களுக்கு பரம்பரை பெருமை.எங்கப்பன் குதிரை ஓட்டினார்.அதுனால என்குண்டி காய்ச்சிருக்குன்னு சொல்றதுல என்ன பெருமை இருக்கு.நீங்க குதிரை ஓட்டுறீங்களா என்பதுதான் கேள்வி.

        என் வார்த்தைகள்ல எது நாகரீகம் இல்லன்னு குறிப்பிட்டு சொல்லணும்.நா உண்மையத்தா எழுதிருக்கேன்.அது உங்கள உறுத்துது போல.அதத்தான் நேரடியா சொல்ல முடியாம நாகரீகம் இல்லன்னு சொல்றீங்க.

        நாயக்கர் கிராமத்துல பூந்து ஆடு களவாங்குரதுக்கு பேரு எதிரிகளின் செல்வங்களை கவருவதா.நல்லா இருக்குய்யா உங்க வாதம்.உங்க ஊருக்கு பக்கத்து ஊருல ஆடு மாடு மெச்சு பொழக்கிரவன் எதிரியா.இன்னொன்னு தெரியுமா பெருமாளு ஆட்டுக்கு சங்க ஒழுங்கா ஒதுக்காம அது கத்துனதுல அல்லது வயித்து போக்குல நடு ராத்திரில கம்மாக்கரைக்கு போயிட்டு வந்த ஒருத்தர் பாத்துட்டதுல மாட்டிக்கிட்டு உங்க வீர வம்சத்த நாயக்கம்மாரு சங்கறுத்த சமாச்சாரம்லா இன்னிக்கும் ராம்நாடு மாவட்டத்துல சிரிப்பா சிரிக்குது.

        நீங்கள் ஆண்டபரம்பரை என்று சொல்லிக் கொள்வது எங்களுக்கு உறுத்தலாக இல்லை. வருத்தமாத்தான் இருக்கு.இப்படி உசுப்பேத்தி தேவர் இன ஏழைகளை தலித்களோடு மொத விட்டு சுயநிதி கல்லூரி கந்துவட்டி சாதிசங்க பணக்கார அரசியல்வாதி தேவமார் மஞ்ச குளிக்கிறார்கள். உண்மைலேயே உங்களுக்கு உங்கள் இன மக்கள் முன்னேற்றத்தில் அக்கறை இருந்தால் ஏழைகளை ஆண்டபரம்பரை என்று சாதி வெறிஎத்துவதை விட்டோழியுங்கள்.அவர்களை படித்து முன்னேறி பிழைக்க விடுங்கள்.

        • @வேங்கையன்

          ஒரு உதாரணத்திற்கு உங்கள் தந்தை ஒரு சீர்த்திருத்த எழுத்தாளர் என வைத்துக்கொள்வோம் பிற்காலத்தில் உங்கள் வாரிசுகள் அதை “என் தாத்தா கமிஷனுக்கு பத்திரம் எழுதும் ஒரு எழுத்தாளர்” என் சொல்வார்களா..?

          ஆம்மய்யா…விடுதைபுலிகள் சிங்கள ராணுவத்தின் ஆயுங்களை கைப்பற்றியது உங்கள் பாணியில் திருட்டுத்தான்.

          பாக்கிஸ்தானின் தீரவாதிகள் ஆயுதத்தை இந்திய இராணுவன் கப்பற்றியதும் உங்கள் பாணியில் திருட்டுத்தான்..

          எதிர் நாட்டு நாயக்கர்களின் படையின் அநிரைகளை தேவர்கள் கைப்பற்றியதும் உங்கள் பாணியில் திருட்டுத்தான்..

          அன்று வெள்ளையர்கள்க்கு ஊழியம் செய்த பாளையக்காரர்களின் ஆயுதங்களை தேவர்கள் கைப்பர்றியதும் உங்கள் பாணியில் திருட்டுத்தான்..

          இப்போது சிங்களவன் விடுதலைப்புலிகள் எங்கள் ஆயுதத்தை திருடிவிட்டார்கள் என் சொல்வான்..
          பாக்கிஸ்தான் எங்கள் ஆயுதங்கள் இந்தியா திருடிவிட்டது என சொல்வான்
          நாயக்க மன்னர்கள் எங்கள் அநிரைகளை தமிழ் மன்னர்கள் திருடிவிட்டான் என சொல்லுவான்..

          இப்போது நீங்கள் யார் என்று சிந்தியுங்கள்..நீங்கள் எந்த பக்கத்தை சார்ந்தவர் என நீங்களே சிந்தியுங்கள்… உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

        • ஐயா,

          பஹூத்தறிவாளி வேங்கையன்.

          ஒருத்தருக்கு வேலையே திருட்டு. அதற்காக அவருக்கு சம்பளமும் தரப்படுகிறது. அந்த வேலை போய்விட்ட பின்னர் என்ன செய்வார்? தன் வேலையை தொடர்ந்து செய்வார்.

          எங்கள் பாட்டனும் முப்பாட்டனும் கள்வர்களாக இருந்தவர்கள். அதன் பின்ன அரசாங்ககள் மாறவும் திருடினார்கள். மறுக்கவில்லை. அவர்கள் ஆடுகளைத் திருடினார்கள், மாடுகளைத் திருடினார்கள். இன்னும் ஏன்? முருங்கைக் காய், வாழைத் தார், தேங்காய் என்று கிடைத்தை எல்லாம் திருடினார்கள். (ஆனால் பெரியார் பெயரைச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் போலத் லட்சம் கோடிகள் திருடவில்லை.)

          அவர்களுக்குத் தெரிந்த வேலை அது ஒன்றுதான். நாங்கள் அதை இழிவாக நினைக்கவில்லை. இன்று காலம் மாறிவிட்டது. இன்று நீங்கள் என் கேள்விகளுக்கு பதில் போடுகிறீர்கள். அதுதான் இன்றைய நிலை.

          கந்து வட்டி எந்த சாதிக்காரர் செய்யவில்லை. சாதியைக் காட்டி சலுகை வாங்கி அரசுப் பணியில் உள்ள தலித்கள் கந்து வட்டிக்கு கொடுப்பதில்லையா?

          என்னமோ நாங்கள் மட்டும் படிக்கவில்லை என்று அங்கலாய்த்துக் கொள்கிறீர்கள். உங்களை நினைத்தால் பாவமாக உள்ளது.

          அரசாங்கம் அத்தனை உதவியையும் கொடுத்தும் உங்கள் தலித் சகோதரன் எத்தனை பேர் படிக்கவில்லை என்று பாருங்கள்.

          எங்கள் ஆட்கள் படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இல்லையென்றால் உங்களை கேள்விகளால் திணறடிக்க முடியுமா என்ன? இன்னும் வருவார்கள். அப்போது உங்கள் போலி முற்போக்குவாதிகள் பின்னங்கால் பிடறியில்பட ஓடுவார்கள். அப்போது தெரியும் யார் படித்தவர்கள் யார் படிக்காதவர்கள் என்று.

          இருந்தாலும் உங்கள் கரிசனத்திற்கு நன்றி.

          • ம்ம்ம்

            உங்கள் தலித் மக்கள் அனைவரும் படித்து விட்டார்கள் என்றால் அப்புறம் உங்களுக்கு எதுக்கு விழிப்புணர்வு போராட்டம் எல்லாம். எல்லாம் அவர்களே பார்த்துக்கொள்ளலாம் அல்லவா?

            எல்லாரும் படித்துவிட்டால் சலுகை கூட வேண்டாம் என்று சொல்லிவிடலாம்.

            என்ன செய்வீர்களா?

    • அப்ப..நாகப்பட்டினம் எல்லையிலிருந்து..இராமேஸ்வரம் எல்லைவரை உள்ள முக்குலத்தோர்கள் எந்த கணக்குல வருவாங்க..?

      திருச்ச்சியிலுருந்து திருநெல்வேலிவரை தான் இவருக்கு தமிழ்நாடுபோல..

      சு. வெங்கடேசனால் எழுதப்பட்ட சாகித்ய அகாடமி பரிசு வாங்குன காவல் கோட்டம் முதலில் நீங்கள் படியுங்கள்..அதில் அந்நியரை எதிர்த்து எங்களில் ஒரு பகுதி சகோதரர்களாகிய தமிழ் மண்ணின் மைந்தர்கள் போராட்டம் புரியும்…

      தான் ஆண்டபோதும் எதிரி இந்த மண்ணை ஆண்டபோதும் நித மக்களை உன் பாட்டனையும் சேர்த்தே காத்து நின்னவன் முக்குலத்தோன்

  98. @பெருமாள் தேவன்,தியாகு:

    அவங்க பொழப்ப பார்க்க விடுங்க,பாவம் சோத்துக்கே கஷ்டம் போல.

    • அப்படி விட, விடத்தான் இவர்கள் இப்படி எழுதுகிறார்கள். இதையே நாமும் செய்தால் என்ன ஆகும்? அதனால் இவர்கள் நிறுத்தும் வரை நாமும் தொடர்ந்து எழுத வேண்டியதுதான்.

  99. 77.1.1.1.1 அப்படி பறையர் பள்ளர் குடும்பத்தில் அரசாண்ட மன்னனை காட்டுங்கள்..? காட்டினால் அவர்களும் பெருமை பேசட்டும் யார் தடுத்தது?

    தேவேந்திரர் இனத்தில் அரசாண்ட மன்னனை நாங்கள் காண்பிப்பது இருக்கட்டும், எந்த ஆதரமுமே இல்லாமல், வாழ்ந்து மறைந்த அரசர்களை எல்லாம் உங்கள் ஜாதி என்று சொல்லிவிட்டால் உங்கள் இனத்தில் மன்னர்கள் இருந்தார்கள் என்று அர்த்தமா? புலித்தேவன் என்ற மன்னன் மட்டும்தான் உங்கள் இனத்தை சார்ந்தவர் என்று அறிய முடிகிறது? அதுவும் இவர் கடந்த நூற்றாண்டை சார்ந்தவர் என்பதால், அதுவும் இவர் கள்ளரா, மறவரா, அகமுடையாரா என்று தெரியவில்லை? எத்தனை மன்னனை வேண்டுமானாலும் உங்கள் இனத்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளுங்கள் மறைந்த மன்னர்கள் எல்லோரும் உங்களிடம் கேட்கவா போகிறார்கள்? கடந்த காலங்களில் இருந்த உங்கள் ஜமீன் என்பவர்கள் யார் தெரியுமா? சோத்துக்கே வழி இல்லாமல் ஒரு நாளைக்கு ஒரு வேளை, இரண்டுவேளை உழைத்து சாப்பிடும் மக்கள் இருக்கும் ஒரு பத்து ஊரை சேர்த்துக்கொண்டு, அந்த மக்களை அடக்கி அவர்களிடம் இருந்து பிடுங்கி தின்பவர்கள்தான் இந்த ஜமீன்? இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஜாதி ஒன்றுதான், தொழிலும் ஒன்றுதான் முதலில் செய்தது வழிப்பறி? இரண்டாவது செய்தது வரி என்ற கொள்ளை? உழைப்பவனுக்கு எந்த நாட்டில் மரியாதை கிடைத்தது? வட்டிக்கு விடுகிறவர்கள், கமிஷன் வேலை செய்கிறவர்கள் இவர்கள்தான் எங்கள் ஜாதியை போல் வருமா என்று பெருமை பேசுகிறார்கள்? நாங்கள் எந்த நாட்டையும் ஆளவில்லை? எங்களது தொழில் விவசாயம்தான்? யாருக்கும் நாங்கள் அடிமை இல்லை? யாரும் எங்களுக்கு அடிமை இல்லை?

    • //வட்டிக்கு விடுகிறவர்கள், கமிஷன் வேலை செய்கிறவர்கள் இவர்கள்தான் எங்கள் ஜாதியை போல் வருமா என்று பெருமை பேசுகிறார்கள்? //

      அதிமுக சசிகலா ஆட்சி என்றும் தேவர் ஆட்சி என்றும் வர்ணிக்கும் உங்களுக்கு கடந்த ஜெ ஆட்சியில் தான் வட்டிக்கு விடுவது தடை செய்யப்பட்டது.. வட்டிக்கு விடும் சாதிகள் கணக்கை எடுத்தால் முக்குலத்தோர் அதில் மிக சிறுபான்மையோர்..

      // சோத்துக்கே வழி இல்லாமல் ஒரு நாளைக்கு ஒரு வேளை, இரண்டுவேளை உழைத்து சாப்பிடும் மக்கள் இருக்கும் ஒரு பத்து ஊரை சேர்த்துக்கொண்டு, அந்த மக்களை அடக்கி அவர்களிடம் இருந்து பிடுங்கி தின்பவர்கள்தான் இந்த ஜமீன்? //

      பான் கார்ட்டு வாங்கியாச்சா..? இந்திய அரசாங்கத்திற்கு வரிக்கட்டவில்லையெனில் அபராதம் கட்டவேண்டும் ரைடு வரும் வாரண்டு வரும் சிறை தண்டனை வரை கிடைக்கும்..
      அதனால் இந்திய அரசாங்கம் மக்களிடம் வரி என்ற பெயரில் பணத்தை பிடுங்கி திண்கிறது, மக்களை பணம் தர சொல்லி மிரட்டுகிறது என சொல்லமுடியுமா..?

      அந்த வரி பணத்தில்தான் உங்களை போன்ற தாழ்த்தப்பட்டவர்களுக்கு உதவிதொகையும்..மக்களுக்கான வசதிகளும்..வேலை செய்பவர்களுக்கு ஊதியமும் கொடுக்கமுடிகிறது..

      //புலித்தேவன் என்ற மன்னன் மட்டும்தான் உங்கள் இனத்தை சார்ந்தவர் என்று அறிய முடிகிறது? //

      அன்றைய மன்னர்கள் எந்த குலத்தவர் என்பது எல்லா கல்வெட்டுகளிலும் உள்ளன..இப்போது எல்லாம் வெறும் பொய்யுரைகள் கொண்ட புத்தகத்தை உங்கள் பகுதியில் பார்ப்பதால் இந்த குழப்பம் போலும்

  100. ஐயா பகத்,

    எந்த சாதிக்காரனும் தன் பெண்ணை ஒன்றுமில்லாதவனுக்கு கொடுக்க விரும்புவதில்லை. நீங்கள் ஏதோ பரோபகாரி மாதிரி பேசுகிறீர்கள். எத்தனை தலித்கள் தங்கள் பெண்களை நரிக்குறவர்களுக்கு மணமுடித்து கொடுக்க விரும்புகிறார்கள்? இல்லை. தெருவோரம் வசிப்போருக்கு மணமுடித்துக் கொடுப்பார்கள். இதெல்லாம் பேச்சுக்கு வேண்டுமானால் நல்லா இருக்கும். மாப்பிள்ளையை பெண்ணுக்குப் பிடிக்காவிட்டால் விவாகரத்து செய்துகொள்வார்கள். அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்.

  101. காதல் திருமணத்தை ஆதரிக்கிற தலித்கள் ஏன் அப்படியே ஒட்டுமொத்தமாக பஸ் ஏறிப்போய் கர்நாடகாப் பெண்களை காதலிக்கக் கூடாது? இல்லை ஆந்திரா, கேரளாப் பெண்களை காதலித்து திருமணம் செய்துகொண்டால் அவர்களுடன் நமக்குள்ள பிரச்சனையும் தீர்ந்துவிடும். காதலிப்போர் செய்வார்களா?

    அதை சிங்களப் பெண்களை காதலித்து திருமணம் செய்துகொண்டால் சிங்களன் தமிழர்களை ஒன்றும் செய்யமாட்டான், செய்வார்களா? முடிந்தால் சீனா, அமெரிக்கா போய் காதலித்தீர்கள் என்றால் வெள்ளைத் தோல்காரிகளும் கிடைப்பார்கள் நிறைய பணமும் கிடைக்கும் செய்வீர்களா? இல்லை. தேவர், கவுண்டர், வன்னியப் பெண்களைத்தான் காதலிப்போம் என்று அடம்பிடிப்பீர்களா?

  102. ஐயா பகுத்தறிவு பகத்,

    தமிழ்நாட்டுல தேவதாசி முறையை மடங்கள் உருவாக்கின, சரி உலகம் முழுவதும் விபச்சாரத்தை இதே மடங்கள்தான் உருவாக்கினவா? விபச்சாரம் உலகின் பழமையான தொழில் என்பது உங்கள் பகுத்தறிவுக்குத் தெரியாதா?

  103. //? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது வன்புணர்ச்சியில் ஈடுபட்டு படுகொலைகள் புரிந்தது எந்தப் பண்பாடு? விதவைகளுக்கு மறுமணத்தை மறுத்து அவர்களை காமக்கிழத்திகளாக மாற்றிக்கொள்ளும் சாதியப் பண்பாடு என்ன புனிதமானது? இன்றும் கோவில்களும் மடங்களும் காமவெறிக் கூடாரங்களாக மாறி நிலப்பிரபுத்துவ பண்பாடு நாற்றமெடுக்கிறதே இதுதான் இவர்கள் சொல்லும் பண்பாடு! பாரம்பரியம், பண்பாடு என்று கூறிக்கொண்டு காதலையும், கலப்பு மணங்களையும் மறுக்கும் இந்தக் காட்டுமிராண்டிகளை வளரும் தலைமுறை ஏற்கப் போவதில்லை. //

    ஐயா,

    அறிவாளி சாதியையும், மதத்தையும் ஒழிக்க முடியுமா? அப்படி எத்தனை பகுத்தறிவாளிகள் சாதி, மதத்தை விட்டு வெளியே வந்திருக்கிறார்கள். நமக்கு சலுகை வாங்க மட்டும் சாதி வேணும். வேறு ஒருவருக்கு எதற்காவது சாதி தேவைப்பட்டால் அது முட்டடாள்தனம். சாதியை வைச்சு வியாபாரம் செய்றது நீங்களா? அவங்களா?

    என்னமோ உலகத்தில் இருக்கிற அத்தனை மதங்களும் உத்தம மதங்கள் என்ற ரீதியில் பேசுகிறீர்கள். கிறிஸ்தவம், புத்தம், இஸ்லாமிய மதங்கள் உள்ள நாடுகளில் குற்றங்கள்தான் நடப்பதில்லையா, இல்லை விபச்சாரம்தான் இல்லையா? உங்கள் அறிவை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.

    வாழ்க பகுத்தறிவு.

  104. தலித்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அடிமையாக இருந்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. அதற்காக மற்றவர்களை அடிமையாக்க முயற்சிப்பது எந்தவிதத்தில் நியாயம். உங்களுக்கு பண்பாடோ, பெருமைகளோ இல்லை என்றால் மற்றவர்களின் பண்பாட்டையும் பெருமையையும் ஏன் குறை கூற வேண்டும்.

    இது ஒரு நொண்டி கால் உள்ளவனையும் நொண்டியாக நடக்கச் சொல்வதைப் போன்றது. உங்களுக்கு புகட்டப்பட்ட பகுத்தறிவை நினைத்தால் பாவமாக உள்ளது. உங்களால் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சாதியை விட்டு வெளிய வரமுடியாது. வினவு போன்ற ஊடகங்கள் உங்கள் சாதிவெறிக்கு தீனி போட்டு வளர்த்து தங்கள் சாதிப்பணியை அயராமல் செய்து வரும்.

  105. சாதி ஒழிப்பு போராளிகளுக்கான தகுதிகள்

    1. சாதி ஒழிப்பு என்பது என்ன? அதற்கான சாத்தியக் கூறுகள் என்ன? அது மத ஒழிப்புடன் தொடர்பு கொண்டதுதானா? அதற்கான காலக்கெடு என்ன? அதில் யாருக்கு என்ன பங்கு உண்டு? போன்றவற்றை தெளிவாக வரையறுத்து ஒரு வெள்ளை காகிதத்தில் பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிரதியை இணையத்தில் போட வேண்டும்.

    2. தனது சான்றிதழில் சாதி பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை ஸ்கேன் செய்து இணையத்தில் போட வேண்டும். அவ்வாறு இல்லை என்றால், ஒரு 100 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் தான், சாதி – மதங்களிலிருந்து வெளியேறிவிட்டதாக அறிவித்து நோட்டரி செய்து அதை ஸ்கேன் செய்து இணையத்தில் போட வேண்டும்.

    3. சாதியில் இருந்து வெளியேற முடியாதவர்களை இழிவாக பேசுவதால் முதலில் இவர்கள் தங்களிடம் என்னென்ன தீய பழக்கங்கள் இருந்தன/ இருக்கின்றன. அவற்றை எப்படி/ எத்தனை காலத்திற்குள் விட்டார்கள்/ விட திட்டமிட்டுள்ளார்கள் என்பதை அறிவித்து அதனை நிரூபித்துக் காட்ட வேண்டும்.

    4. இவர்கள் தங்கள் உறவினர்கள்/ நண்பர்களிடம் சாதி ஒழிப்புக் கருத்துக்களை கூறி அதற்கு என்ன விதமான பதில் கிடைத்தது? அவர்கள் எத்தனை காலத்திற்குள் மாறத் தயார்/ எத்தனை பேர் மாறியுள்ளனர் என்று அறிவிக்க வேண்டும்.

    5. தங்களது சொந்த ஊரில், தாங்கள் குடியிருக்கும் தெருவில் சாதி ஒழிப்பு பிரச்சார கூட்டத்தை நடத்த வேண்டும். அந்த கூட்டத்திற்கு யார் யார் வந்தார்கள்? அவர்களது கருத்து என்ன என்று தெரிவிக்க வேண்டும். இதுபோல ஒரு வருடத்தில் எத்தனை கூட்டங்களை நடத்தினார்கள் என்றும் அவற்றின் பலன் என்னவென்றும் தெரிவிக்க வேண்டும்.

    6. அவ்வாறு சாதியிலிருந்து வெளியேறும் நபர்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படுகிறதா? அந்த பிரச்சனைகளை இவர்கள் எவ்வாறு தீர்த்து வைத்தார்கள் என்று தெரிவிக்க வேண்டும்.

    7. தனது ஊரில் தனது பகுதியில் சாதியின் பெயரால் என்னென்ன அவலங்கள் நடக்கின்றன? அவற்றை தடுக்க என்னென்ன நடவடிக்கை எடுத்தார், அதற்காக அங்குள்ள மக்களை சந்தித்து பேசினாரா? அதற்கு என்ன பலன் கிடைத்ததா என்று தெரிவிக்க வேண்டும்.

    8. தனது உறவினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் ஏதாவது சாதிக் கொடுமைக்கு ஆளாகுகிறார்களா? இல்லை ஆளாக்கப்படுகிறார்களா? என்பதை கண்டறிந்து அவருக்கு உதவி செய்கிறாரா என்பது பற்றி விவரிக்க வேண்டும்.

    9. ஒரு அமைப்பு – கட்சியில் உள்ளவர்கள், தனது – கட்சியின் தலைவர் சாதி பற்றி என்ன கருத்துக் கொண்டுள்ளார், அதனை சரியாக கடைப்பிடிக்கிறாரா? என்று பார்த்து அதை தெரிவிக்க வேண்டும். தனது அமைப்பு – தலைவர் அவ்வாறு இல்லாத போது என்ன செய்தார் என்பதை விவரிக்க வேண்டும்.

    10. சாதி பற்றிய அரசின் கொள்கை என்ன? அரசாங்கம் சாதியை ஒழிக்க விரும்புகிறதா? அப்படியானால் அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பதை அவ்வப்போது அரசாங்கத்திற்கு கடிதமாக எழுதி அனுப்ப வேண்டும். அதற்கான பிரதிகளை இணையத்தில் போட வேண்டும்.

    11. இந்தியாவில் இருக்கும்போது தமிழகத்தில் மட்டும் சாதியை ஒழித்து விடலாமா, அதற்கு இந்திய சட்டங்கள் தடையாக இருந்தால் என்ன செய்வார் அல்லது வடமாநிலங்களில் சாதி ஒழிப்பை எவ்வாறு பரப்புவார் என்று விளக்க வேண்டும்.

    வேறு ஏதாவது தகுதிகள் இருக்க வேண்டும் என்று கருதினால் நண்பர்கள் அவற்றை சேர்க்கவும்.

    இதில் ஒன்றைக் கூட செய்ய முடியாதவர்கள் தயவு செய்து சாதி ஒழிப்பு பற்றி பேசாதீர்கள்.

  106. திரு வினவு அவர்களே,

    இந்த கட்டுரையின் மூலம் தேவர்கள் அல்லது தலித்கள் மத்தியில் என்ன விதமான மாற்றத்தைக் கொண்டு வர முயற்சிக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா? அல்லது எந்தவிதமான வெறியை வளர்க்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?

  107. வினவுக்கு என் பெயரை பெருமாள் தேவன் என்று சொல்லக் கூட கஷ்டமாக இக்கிறது. என்ன ஒரு முற்போக்குத் தனம்?

  108. தேவர்,மள்ளர்/பள்ளர்,கள்ளர்,பறையர்,மறவர் ,இந்த மக்களுக்குள் அன்றாடம் உழைக்கும் அப்பாவிகளே அதிகம். அவர்களுக்குள் சமரசமும் சமாதானமும் வரட்டும்.அவங்களை வாழவிடுங்கப்பா.உலகம் அழியும் தருவாய்க்கு கொண்டுவரப்பட்டு விட்டது.வன்முறையின் வலி அதிகம் உணர்ந்தவங்க இலங்கை தமிழர்களாகிய நாங்கள்.தமிழ்நாட்டுத் தமிழரின் ஒற்றுமையே இலங்கை தமிழரைக் காக்க வல்லது.அடுத்து டாஸ் மாக் ஒழிக்கப்படவேண்டும்.மது இந்த மக்களை விட்டே ஒழிக்கப்படவேண்டும்.செய்வீர்களா?

    • குமரன் பத்மநாதன்,

      நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் நீங்கள் சாதிவெறியர்கள் என்று குற்றம்சாட்டிக் கொண்டே நீயும் வந்து ஈழத்தமிழர்களுக்காக போராடு என்று சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா? ஒரு இனக்குழு மீதே வைக்கும் குற்றச்சாட்டு, அவர்களை இழிவு படுத்தும் செயல் அல்லவா?

      வினவு போன்ற இணையங்கள் இப்படி செயல்படும்போது தேவர்களிலும் இதே போன்ற வேலைகளை செய்யதால் என்ன ஆகும்?

      இப்படி சாதி வெறி பற்றி பேசும் எழுத்தாளர்கள் எத்தனை ஊர்களில் உள்ள தீண்டாமைப் பிரச்சனையை ஒழிக்க முயற்சி செய்கிறார்கள்?

      இவர்கள் எழுதும் விதம் சாதிவெறியில் மேலும் எண்ணெய் ஊற்றுவதுபோலத்தான் உள்ளதே தவிர, சாதிவெறியை தணிப்பதாக இல்லை.

      அதிலும் படித்த தலித்கள் இந்த மாதிரி சாதி துவேஷத்தை தூண்டுவதையும், அதை ஊக்குவிக்கும் விதமாக தலித் இணையங்கள் அவற்றை வெளியிடுவதையும் எப்படி மெச்சிக்கொள்ள முடியும்?

      தீண்டாமை, சாதி வெறி என்பது கண்டிக்க வேண்டிய செயலே ஆனால் எப்படி கண்டிப்பது? ஒட்டுமொத்தமாக ஒரு இனக்குழுவை கண்டிக்கலாமா? அது சரியாகுமா?

      இதையெல்லாம் கேட்டால் இந்த வினவு ஆசிரியர் பதில் சொல்ல மறுக்கிறார். அவ்வளவு சமூக அக்கறை அவருக்கு.

      தமிழரின், ஈழத்தமிழரின் பிரச்சனைகளில் எத்தனை அக்கறை உங்களுக்கு உள்ளதோ அத்தனை எங்களுக்கும் உள்ளது. ஆனால் எங்களை அவமதித்து அந்த அவமானத்தை நாங்கள் ஏற்றுக் கொண்டு உங்களோடு வந்து சேர வேண்டும் என்று எதிர்பார்த்தால் அது போன்ற ஒரு நப்பாசை இருக்காது. அது என்றும் பலிக்கவும் பலிக்காது.

      தமிழக சாதிப் பிரச்சனைகளை சரியாக அணுகும் வரை அவற்றை தீர்க்க முடியாது வெறுமனே ஆதிக்கசாதி, சாதி வெறி என்று திட்டுவதால் மட்டும் இந்தப் பிரச்சனைகளைப் போக்கி விட முடியாது. எல்லாச் சாதிகளிடையேயும் இணக்கம் ஏற்பட்டால்தான் அவர்களைக் கொண்டு அந்தப் பிரச்சனைகளை தீர்க்க முடியும்.

      அதை விட்டுவிட்டு சாதிவெறியை, துவேஷத்தை தூண்டுவது போல எழுதினால் அதற்கு பதிலாக எழுத எத்தனை நேரம் ஆகிவிடும். அதையெல்லாம் சமூக பொறுப்புள்ளவர்கள் சிந்திப்பார்கள். வினவு எப்படி என்று தெரியவில்லை.

      நன்றி.

    • @kumaran pathmanathan

      நீங்கள் “அந்நியன்” படம் சமீபத்தில் பார்த்திர்களா என்ன? Multi Personality பிரச்சனை உங்களுக்கு இருக்கும் என நினைக்கிறேன் ஏனெனில் திடீர் என்று தேவர்களை திட்டுகிறீர்..திடீர் என்று தமிழர்கள் நாம் என்கிறீர் நல்ல மருத்துவரை பாருங்கள் உங்கள் தமிழில் ஈழவாசனையே இல்லை.. பரமக்குடி தமிழ்வாசமே உள்ளது.

  109. யார் யார் வன்முறையில் ஈடுப்பட்டது என்று கூட தெரியாமல் கட்டுரை எழுத கிளம்பிட்டாங்கே அல்லக்கைகள்
    உன் பக்கத்தில் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் நீ எங்கள் தேவர் இனத்தை பற்றி அவதூரு பரப்புவதை நிறுத்தவில்லை. டேய் வினவுத்தள முடியாண்டி , உன்னை ஒருநாள் செருப்பால அடிச்சு உன் முகத்தில் சாணியை கரைச்சு ஊத்தாமல் விட மாட்டேன்.

  110. தேவர் தலித்களுக்கு எதிராகத்தானே இருந்தார்?

    பதில் – சிலர் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக, வேறு பல நோக்கங்களுக்காக தேவரின் வரலாற்றை மாற்றி எழுதி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

    அவர்கள் தேவர் தலித்களுக்கு எதிரியாக இருந்தார். இம்மானுவேலை கொலை செய்ய காரணமாக இருந்தார். அவர் சாதி வெறி பிடித்தவர். இன்னும் பலவாறு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

    இதை நம்பும் அப்பாவி தலித்களும் அப்பாவி தேவர்களும் தாங்கள் ஒருவருக்கொருவர் எதிரிகள் என்றே நம்பி வருகின்றனர். அதனால் பல மோதல்களும் நடந்து வருகின்றன.

    உண்மையில் தேவர் வாழ்ந்த காலத்தில் 80% தலித்களின் ஆதரவு அவருக்கு இருந்தது. ஃபார்வேர்டு பிளாக் கட்சியில் தலித்கள் உட்பட பல்வேறு சாதிகளை சேர்ந்தோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

    முதுகுளத்தூர் கலவரத்திற்கு முன்னரும் பின்னரும் ஃபார்வேடு பிளாக் கட்சியே அங்கு வெற்றி பெற்றது.

    தேவர் சாதிவெறியர் என்ற பிரச்சாரத்தை துவக்கி வைத்தது நேருவும் காமராஜரும். ஆனால் அவர்களது பிரச்சாரம் அப்போது வெற்றி பெறவில்லை.

    அவர்களது பிரச்சாரத்தை வெற்றி பெறச் செய்தவர்கள் படித்த தலித்கள் என்பதுதான் வேதனையான விஷயம்.

    ஆனால் வரலாற்றை என்றைக்கும் மறைக்க முடியாது உண்மைகள் வெளிவரும்போது அனைவரும் புரிந்துகொள்வர்

  111. சவுக்கு ,வினவு ,கீற்று போன்ற சில தளங்களில் தேவர் இனத்தை ஜாதி வெறியர்கள் போலவும் ,தேவர் அய்யாவை தவறாகவும் சித்தரித்து பல கட்டுரைகள் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இருக்கிறது. இதை நடத்துபவர்கள் என்ன ஜாதி என்றும் ,இவர்களின் நோக்கமும் எங்களுக்கு தெரியாமல் இல்லை .ஆனால் தாங்கள் ஏதோ நாட்டை திருத்த வந்த கடவுள்கள் போல எழுதுறாங்க. டேய் உங்க எழுத்துகளில் கூட உங்கள் ஜாதிய வன்மம், உங்கள் ஜாதியை உயர்த்தும் எண்ணமும் மேலோங்கித்தான் இருக்கு. இந்த பதிவுகளுக்கு ஆதாரத்தோடு விளக்கம் அளித்தாலும் அதை உடனே நீக்குரிங்க. இப்படி எங்களை தாக்கி நீங்கள் எழுதும் பொய் மூட்டைகளை நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை .அதே சமயத்தில் நீங்கள் யார் ,என்ன ஜாதி என்பதை கட்டுரையின் கீழேயே குறுப்பிடலாமே. அடுத்த ஜாதிக்காரனை ஒழிக்க நினைக்கும் உங்களுக்கு ஏன்டா தமிழன் என்ற போர்வை ??
    தன் ஜாதியை மனதில் வைத்துக்கொண்டு அடுத்த ஜாதியை திட்டுவதுதானே இப்போ பகுத்தறிவு . உங்களுக்கு திராணி இருந்தால் உங்கள் புகைப்படம்,உங்கள் ஜாதி இதெல்லாம் வெளியிட்டு இனி எங்களை தாக்கி கட்டுரை எழுதுங்கடா ??
    வீரம் பேசுபவனுக்கு எதுக்குடா முகமூடி ??

    • மேகநாதன்,

      கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எட்டுநாளைக்குத்தான்.

      கோபப்படாதீங்க. நாசூக்கான வார்த்தைகளில் நறுக்கென்று கேளுங்கள்.

      கொஞ்சமாவது சூடு சொரணை இருக்கா என்று பார்ப்போம்.

  112. சாதியை ஒழிக்க போராடுபவரா நீங்கள்?

    01. உங்களின் சாதியின் மூலம் கிடைத்த இட ஒடுக்கீட்டால்,
    நீங்கள் அனுபவிக்கும் சலுகைகளை வேண்டாமென ஒதுக்க முடியுமா?

    02. சாதியின் அடிப்படையில் கிடைக்க பெற்ற அரசு பணியில் இருந்தால், அந்த வேலையை துறக்க தயாரா?

    03. தலித் என்று அடையாளப்படும் (பள்ளர் – பறையர் – சக்கிலியர்) போன்ற சாதிகளுக்குள் உள்ள பாகுபாட்டை ஒழிக்க எதாவது நடவடிக்கை எடுத்துள்ளீர்களா?

    04. உங்களது சாதி சான்றிதழை கிழித்தெறிந்து விட்டு, நான் சாதி அடையாளம் இல்லாதவன் என்று அடையாளப்பட முடியுமா?

    05. உங்கள் குழந்தை உட்பட குடும்பத்தினர் யாரும் இனி வரும் காலங்களில் சாதியினால் கிடைக்க போகும் சலுகைகளை நிராகரித்து விட போகிறார்களா?

    06. இதுவரை, உங்களது சாதியினால் கிடைக்கப் பெற்ற (நேரடி – மறைமுக) அனைத்து வித சலுகைகளை தூக்கி எறிய முடியுமா?

    # உங்களது முதுகில் தேங்கி கிடக்கும் அழுக்கை கழுவ முற்படுங்கள்; அப்பறமாக, ஊரை திருத்தலாம். அதன் பிறகு, ஊரில் உள்ளவர்களை வசை சொற்களால், கழுவி – கழுவி ஊற்றலாம்.

    – இரா.ச.இமலாதித்தன்

    • ஹாஹாஹா

      ரோசம் வந்து இதையெல்லாம் செய்துவிடப் போகிறார்கள்.

      • ரோஷம் டன் கணக்கில் வைத்திருக்கும் ஆண்ட பரம்பரைகளே ரோஷ பட்டு உங்கள் பாட்டன் பூட்டனின் அருமை பெருமைக்கு பங்கம் விளைவிக்கும் BC, MBC இட ஓதுக்கீடு வேண்டாம் என்று உதற வேண்டாம், தயவு செய்து உதற வேண்டாம்.,
        நீங்கள் எப்போதும் போல் சுய பெருமை பேசிக்கொண்டும் மற்றவரை தரம் தாழ்த்தி இழிவு படுத்திக்கொண்டும், தலித் அல்லாதோர் பேரவை ஆரம்பித்து கொண்டும், மனிதனை மனிதனாக பார்க்காமல் இருந்து கொண்டும், சேரிகளை கொளுத்தி கொண்டும் இருக்கு மாரு கேட்டு கொள்கிறேன்.

        “ஜாதி பெருமை பேசுவதையே முழு வேலையாக வைத்துக்கொண்டு, எப்போது பார்த்தாலும் ஆண்ட பரம்பரை அது, இது சொல்லிக்கொண்டு இருப்பவர்களுக்கு எதற்கு இட ஒதிக்கீடு? ஆண்ட பரம்பரை எதற்கு MBC என்ற கோட்டாவின் மூலம் அரசாங்கத்திடம் நிற்கவேண்டும்?” This is taken from some other comments / source

        நாங்கள் ஆண்ட பரம்பரை இல்லை அதனால் எங்களுக்கு குடுத்திருக்கும் இட ஒதுக்கீடு 18% போதும். ஆனால் ஆண்ட பரம்பரைகளுக்கு 51% இட ஒதுக்கீடு எதற்கு என்று தூக்கி எரிய வேண்டாம்.

        “தமிழ் நாட்டில் கல்வி வேலைவைப்பில் 69 சதம் இட ஒதுக்கீட்டில் 18 சதம் தான் தலித்களுக்கு ஐயா மீதம் உள்ள 51 சதம் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு தான் அளிக்கப்படுகிறது சார்.51ஐ விட்டு விட்டு 18மேலேயே என் கொலைவெறியில் இருக்கிறீர்கள்?” This is taken from some other comments / source

        • //ரோஷம் டன் கணக்கில் வைத்திருக்கும் ஆண்ட பரம்பரைகளே ரோஷ பட்டு உங்கள் பாட்டன் பூட்டனின் அருமை பெருமைக்கு பங்கம் விளைவிக்கும் BC, MBC இட ஓதுக்கீடு வேண்டாம் என்று உதற வேண்டாம், தயவு செய்து உதற வேண்டாம்.,//

          வல்லவமாறன்,
          நீங்க அந்த சலுகைகளை உதறினால் நாங்களும் உதறத் தயார். உண்மையில் தலித்கள் தாங்கள் தாழ்த்தப்பட்டோராக இருக்க விரும்பாவிட்டால் முதலில் தலித் என்ற அந்தச் சாதியிலிருந்து வெளியேறுங்கள். அதற்குப் பின் சாதி வெறி பற்றி பேசலாம். தலித்தாக இருந்துகொண்டு அதைச் சொல்லியே சலுகை வாங்கிக் கொண்டு மற்றவர்களை சாதி பற்றி பேசாதீர்கள்.

          //நீங்கள் எப்போதும் போல் சுய பெருமை பேசிக்கொண்டும் மற்றவரை தரம் தாழ்த்தி இழிவு படுத்திக்கொண்டும், தலித் அல்லாதோர் பேரவை ஆரம்பித்து கொண்டும், மனிதனை மனிதனாக பார்க்காமல் இருந்து கொண்டும், சேரிகளை கொளுத்தி கொண்டும் இருக்கு மாரு கேட்டு கொள்கிறேன்.//

          தலித்களை இந்த நிலைக்கு கொண்டு சென்ற உங்கள் முற்போக்குத் தலைவர்களை நினைத்து வருத்தப்படுங்கள். இவர்கள் ஒருபோதும் தலித்களை மற்ற மக்களுடன் இணக்கமாக்க மாட்டார்கள். சாதி தீயை வளர்த்து குளிர் காய்வார்கள். இவர்களின் பதவிக்கு சாதி வெறி தேவை. அதை கச்சிதமாக வளர்த்து வருவார்கள்.

          //“ஜாதி பெருமை பேசுவதையே முழு வேலையாக வைத்துக்கொண்டு, எப்போது பார்த்தாலும் ஆண்ட பரம்பரை அது, இது சொல்லிக்கொண்டு இருப்பவர்களுக்கு எதற்கு இட ஒதிக்கீடு? ஆண்ட பரம்பரை எதற்கு MBC என்ற கோட்டாவின் மூலம் அரசாங்கத்திடம் நிற்கவேண்டும்?”//

          நாங்கள் யாரிடமும் பிச்சை எடுக்கவில்லை. உங்களுக்கு எந்த தலைவர்கள் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதலோடு சலுகைகளை பெற்றுத் தந்தார்களோ, அதே தலைவர்கள் வாங்கிக் கொடுத்ததுதான் எங்களுக்குக் கிடைத்த சலுகைகள். அது சரியா தவறா என்று உங்கள் அந்த பஹூத்தறிவுத் தலைவர்களிடம் கேட்டு முடிவு செய்யுங்கள்.

          அதுசரி, நாங்கதான் சாதிப் பெருமை பேசுகிறோம். நீங்கள் எதுக்கு தலித் என்று சொல்லிக் கொண்டு சாதிப் பெயரை தாங்கித் திரிகிறீர்கள்? என்றைக்கு உங்கள் தலித் சாதியத்தை ஒழிப்பீர்கள்? உங்களுக்கு உங்கள் சாதிப் பெருமை பெரிதாகத் தெரியும்போது எங்களுக்கு எங்கள் சாதிப் பெருமை பெரிதாகத்தானே தெரியும்.

          //நாங்கள் ஆண்ட பரம்பரை இல்லை அதனால் எங்களுக்கு குடுத்திருக்கும் இட ஒதுக்கீடு 18% போதும். ஆனால் ஆண்ட பரம்பரைகளுக்கு 51% இட ஒதுக்கீடு எதற்கு என்று தூக்கி எரிய வேண்டாம்.//

          நீங்கள் உண்மையில் சாதியை வெறுக்கிறீர்கள் என்றால் உங்கள் சாதியிலிருந்து வெளியேறி உங்கள் சலுகைகளை தூக்கி எறியுங்கள். அதற்குப் பின்னும் நாங்கள் அதை தூக்கி எறிகிறோமா இல்லையா என்று பாருங்கள்.

          //“தமிழ் நாட்டில் கல்வி வேலைவைப்பில் 69 சதம் இட ஒதுக்கீட்டில் 18 சதம் தான் தலித்களுக்கு ஐயா மீதம் உள்ள 51 சதம் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு தான் அளிக்கப்படுகிறது சார்.51ஐ விட்டு விட்டு 18மேலேயே என் கொலைவெறியில் இருக்கிறீர்கள்?”//

          கொலைவெறி உங்களுக்கா எங்களுக்கா? அப்படி இல்லாமலா தேவர் சாதி வெறி என்று எழுதுவீர்கள்? இதுதான் தலித் சாதிவெறி.

          • தாழ்த்தப்பட்டவங்க வீட்ல இருந்து உங்க மகனுக்கு பெண் எடுபீங்கள ? — அதெல்லாம் முடியாதுங்க அவங்க “எங்கள விட” கீழ் ஜாதில

            தாழ்த்தப்பட்டவங்க வீட்ல உங்க பெண்ணை குடுப்பீங்களா — அய்யயோ அதெல்லாம் முடியாது அவங்க “எங்கள விட” கீழ் ஜாதி

            தாழ்த்தப்பட்டவங்கள கோவிலுக்கு உள்ள விடுவீங்களா — அதெல்லாம் முடியாதுங்க அவங்க கீழ் ஜாதில

            தாழ்த்தப்பட்டவங்கள உங்க வீட்டு உள்ள விடுவீங்களா — அதெல்லாம் முடியாதுங்க அவங்க கீழ் ஜாதில

            தாழ்த்தப்பட்டவங்கள ஊருக்குள்ள உங்களோட ஒன்னா சமமா வாழ விடுவீங்களா — அதெல்லாம் முடியாதுங்க அவங்க கீழ் ஜாதில அவங்க ஊருக்கு ஒதுக்குபுறமா சேரில தான் வாழனும்.

            சரிங்க கடைசியா ஒன்று தாழ்த்தப்பட்டவங்கள செத்த பிறகு உங்களோட இடுகாடுலயே புதைக்க/ எரிக்க விடுவீங்களா — அய்யயோ அதெல்லாம் முடியவே முடியாது அவங்க “எங்கள விட” கீழ் ஜாதி அவங்க தனி இடுகாடுல தான் புதைக்கணும்.

            தாழ்த்தப்பட்டவங்களுக்கு இடஒதுக்கீடு பற்றி என்ன நினைகிறீங்க — அது எப்படிங்க ஞாயம் அவங்களுக்கு மட்டும் சலுகைகளா. எல்லாருக்கும் சமமா தான் இருக்கனும் இப்படி பிரிக்க கூடாது.

            செத்த பிறகு கூட எங்கள சமமா நினைக்க மாட்டாங்களாம் ஆனா இடஒதுக்கீடுக்கு எதிரா பக்கம் பக்கமா சமத்துவம் பேசுவாங்கலாம்.

    • திரு மேகநாதன் அவர்களே நீங்கள் கூறிய அனைத்தும் செய்தால்
      1. தங்களது ஆண்ட பரம்பரை (இது எப்படி வந்தது என்று எனக்கு தெரியவில்லை சில மறுமொழிகளை மேற்கோள் கட்டி இதை இந்த சொல்லை பயன் படுத்தி இருக்கிறேன்) பெருமை பேசுவதை நிறுத்தி விடுவீர்களா
      2. மற்றவரை கேவலமாக நினைக்கும் உங்களின் பிற்போக்கான என்னத்தை நிறுத்தி விடுவீர்களா
      3. இபோது தொடங்கி இருக்கும் தலித் அல்லாதோர் பேரவையில் இருக்கும் சாதிகளுக்குள் உள்ள பாகுபாட்டை (உதாரணம் : தேவர்க்கு வன்னியன் கீழ்) ஒழிக்க எதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா.
      4. உங்களுக்கு இது வரை கிடைத்த சலுகை களை தூக்கி எரிய தயார் ஆகி விடுவீர்களா (BC, MBC ரெசெர்வடிஒன்)
      5. //சாதியின் அடிப்படையில் கிடைக்க பெற்ற அரசு பணியில் இருந்தால், அந்த வேலையை துறக்க தயாரா// இதே அடிப்படையில் தங்கள் சமூகதிருக்கும் அரசு பனி வழங்க படுகின்றது..

      நீங்கள் கூறிய அனைத்து சலுகைகளும் உங்களுக்கும் இருகின்றது என்பதை மறந்து பேச வேண்டாம்.

      இத்தனை சலுகை இருந்தும் மனிதனாக பார்க்கின்ற மனம் இன்னும் வரவில்லை தங்களுக்கு., இது இல்லை என்றல் எண்களின் நிலைமை என்ன என்று நினைக்கவே மிகவும் கஷ்டமாக இருக்கின்றது.

      இந்த மறுமொழியில் எதாவது விஷயம் தங்களின் மனதை புண் படுத்தியிருந்தால் மன்னிகவும்

      • //1. தங்களது ஆண்ட பரம்பரை (இது எப்படி வந்தது என்று எனக்கு தெரியவில்லை சில மறுமொழிகளை மேற்கோள் கட்டி இதை இந்த சொல்லை பயன் படுத்தி இருக்கிறேன்) பெருமை பேசுவதை நிறுத்தி விடுவீர்களா//

        எங்கள் பரம்பரையைப் பற்றி உங்களுக்கு என்ன கவலை?

        //2. மற்றவரை கேவலமாக நினைக்கும் உங்களின் பிற்போக்கான என்னத்தை நிறுத்தி விடுவீர்களா//

        உங்களை நாங்கள் எதற்காக கேவலமாக நினைக்க வேண்டும்? நீங்களும் உங்களை பெருமையாகவே நினைத்துக் கொள்ளுங்கள.

        //3. இபோது தொடங்கி இருக்கும் தலித் அல்லாதோர் பேரவையில் இருக்கும் சாதிகளுக்குள் உள்ள பாகுபாட்டை (உதாரணம் : தேவர்க்கு வன்னியன் கீழ்) ஒழிக்க எதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா.//

        சாதிப் பாகுபாடு என்பது விரல்களுக்கு இடையே உள்ள வேறுபாடு மாதிரி. அதை ஒழிக்கத் தேவையில்லை. ஒவ்வொரு விரலுக்கும் ஒரு முக்கியத்துவம் உள்ளது.

        //4. உங்களுக்கு இது வரை கிடைத்த சலுகை களை தூக்கி எரிய தயார் ஆகி விடுவீர்களா (BC, MBC ரெசெர்வடிஒன்)//

        எல்லாச் சாதிகளும் தங்கள் சலுகைகளை தூக்கி எறிந்தால் எங்களுக்கும் எந்தச் சலுகையும் தேவையில்லை.

        //5. //சாதியின் அடிப்படையில் கிடைக்க பெற்ற அரசு பணியில் இருந்தால், அந்த வேலையை துறக்க தயாரா// இதே அடிப்படையில் தங்கள் சமூகதிருக்கும் அரசு பனி வழங்க படுகின்றது..//

        நீங்கள் துறக்கும்போது நாங்களும் துறந்துவிடுவோம்.

        //நீங்கள் கூறிய அனைத்து சலுகைகளும் உங்களுக்கும் இருகின்றது என்பதை மறந்து பேச வேண்டாம்.//

        அந்த மண்ணாங்கட்டிச் சலுகைதான் வேண்டாம் என்கிறோம்.

        //இத்தனை சலுகை இருந்தும் மனிதனாக பார்க்கின்ற மனம் இன்னும் வரவில்லை தங்களுக்கு., இது இல்லை என்றல் எண்களின் நிலைமை என்ன என்று நினைக்கவே மிகவும் கஷ்டமாக இருக்கின்றது.//

        படித்த உங்களைப் (வினவு) போன்றோருக்கு ஒரு இனக்குழுவையே இழிவாக பேசும் இவ்வளவு பெரிய மனம் இருக்கும்போது நாங்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள்தானே?

        //இந்த மறுமொழியில் எதாவது விஷயம் தங்களின் மனதை புண் படுத்தியிருந்தால் மன்னிகவும்//

        திரும்பவும் பாருங்க. ஹாஹாஹாஹா

  113. வினவு போன்ற முற்போக்கு முகமூடிகளின் பிரச்சாரத்தின் நோக்கம் என்னவென்றால்,

    1. தேவர்கள் தங்களை சாதிவெறியர் என்று ஒப்புக்கொள்ள வேண்டும்.
    2. தேவர்கள் தங்களை குற்றப்பரம்பரையினர் என்று ஒப்புக் கொள்ள வேண்டும்.
    3. தேவர்கள் தங்களை முட்டாள்கள் என்று ஒப்புக் கொள்ள வேண்டும்.
    4. தேவர்கள் தங்களை தாழ்ந்த சாதியினர் என்று ஒப்புக் கொள்ள வேண்டும்.
    5. தேவர்கள் தங்கள் வசமுள்ள நிலம், சொத்து, அதிகாரம் எல்லாவற்றையும் இவர்களிடம் அளித்துவிட்டு இவர்களுக்கு அடிமை சேவகம் செய்ய வேண்டும்.

    அப்படி இருந்தால் இவர்கள் தேவர்களையும் வன்னியர் கவுண்டர் போன்றோரையும் கைக்குள் போட்டு ஆட்சி செய்வார்கள்.

    இதுதான் இவர்களது நப்பாசை. மற்றபடி சாதிவெறி, சாதி ஒழிப்பு, இந்து மத ஒழிப்பு போன்ற பேச்செல்லாம் கண் துடைப்பு.

    • திரு பெருமாள் அவர்களே நீங்கள் கூறிய எதுவும் வேண்டாம் எங்களயும் சக மனிதனாக பார்த்தல் போதும்.,

      உங்கள் தெருவில் இருக்கும் மிருகதிற்கு இருக்கும் மரியாதை கூட ஓரு தலித்இற்கு குடுக்க வேண்டாம் என நினைக்கும் உங்களின் ஆதிக்க எண்ணம் வேண்டாம் என்கிறோம்.

      தங்களின் ஆதிக்க எண்ணத்திற்கு அடித்தளமாக இருக்கும் ஜாதிய பெருமை தங்களுக்கு இருக்கட்டும் அதற்காக மற்றவரை சிறுமை படுத்தும் எண்ணம் வேண்டாம் என்கிறோம்.

      ஆண்ட பரம்பரை யாக இருக்கட்டும் அதற்காக ஓரு குடியரசு நாட்டில் இன்னும் ஆண்டு (அடிமை படுத்தி) கொண்டே இருப்போம் (2 கோடி தேவர், 3 கோடி வன்னியர் மற்றும் இதர ஆண்ட பரம்பரைகள்: கணக்கு இடிக்கிறது என்று வருத்த பட வேண்டாம், இதுவும் தங்களை போன்ற ஆதிக்க பெருமை பேசும் சில பதிவுகளில் எடுக்க பட்டது) என்னும் எண்ணம் வேண்டாம் என்கின்றோம்.

      இந்த மறுமொழியில் எதாவது விஷயம் தங்களின் மனதை புண் படுத்தியிருந்தால் மனிக்கவும்.

      இது ஓரு ஆசை மட்டுமே “எங்களிலும் இரத்தம் தன் இருக்கிறது,எல்லோரும் மனிதன் என்று தாங்கள் மற்றும் தங்களை போன்றவர்கள் நினைக்க வேண்டும்”

      • //திரு பெருமாள் அவர்களே நீங்கள் கூறிய எதுவும் வேண்டாம் எங்களயும் சக மனிதனாக பார்த்தல் போதும்.,//

        என்னவோ நாங்கள் மட்டும்தான் உங்களை தெருவுக்குள் நுழைய விடாதது போல பேசுகிறீர்கள்? மற்ற சாதியெல்லாம் உங்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டார்களா? எங்கள் தெருவில் உங்களை நுழைய விடுவது நீங்கள் நடந்துகொள்வதைப் பொறுத்து உள்ளது.

        நீங்கள் எங்களை கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் என்று பேசுவீர்கள். உங்களுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வரவேற்க வேண்டுமா?

        //உங்கள் தெருவில் இருக்கும் மிருகதிற்கு இருக்கும் மரியாதை கூட ஓரு தலித்இற்கு குடுக்க வேண்டாம் என நினைக்கும் உங்களின் ஆதிக்க எண்ணம் வேண்டாம் என்கிறோம்.//

        தலித்கள் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களுக்கான மரியாதை கிடைக்கும். அது தலித்களுக்கு மட்டுமல்ல யாராக இருந்தாலும் அதுதான். உலகின் எந்த மூலையாக இருந்தாலும் அதுதான்.

        //தங்களின் ஆதிக்க எண்ணத்திற்கு அடித்தளமாக இருக்கும் ஜாதிய பெருமை தங்களுக்கு இருக்கட்டும் அதற்காக மற்றவரை சிறுமை படுத்தும் எண்ணம் வேண்டாம் என்கிறோம்.//

        உங்களை யார் சிறுமைப் படுத்தினார்கள். நாங்கள் பெருமை பேசினால் அது உங்களை சிறுமைப் படுத்துவதாக நீங்கள் நினைத்தால், உங்கள் தாழ்வு மனப்பான்மைக்கு ஐயோ.

        //ஆண்ட பரம்பரை யாக இருக்கட்டும் அதற்காக ஓரு குடியரசு நாட்டில் இன்னும் ஆண்டு (அடிமை படுத்தி) கொண்டே இருப்போம் (2 கோடி தேவர், 3 கோடி வன்னியர் மற்றும் இதர ஆண்ட பரம்பரைகள்: கணக்கு இடிக்கிறது என்று வருத்த பட வேண்டாம், இதுவும் தங்களை போன்ற ஆதிக்க பெருமை பேசும் சில பதிவுகளில் எடுக்க பட்டது) என்னும் எண்ணம் வேண்டாம் என்கின்றோம்.//

        அரசாங்கம் எடுத்த சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டால் இந்த குழப்பம் தீர்ந்து விடும்.

        //இந்த மறுமொழியில் எதாவது விஷயம் தங்களின் மனதை புண் படுத்தியிருந்தால் மனிக்கவும்.//

        ஹாஹாஹா

        //இது ஓரு ஆசை மட்டுமே “எங்களிலும் இரத்தம் தன் இருக்கிறது,எல்லோரும் மனிதன் என்று தாங்கள் மற்றும் தங்களை போன்றவர்கள் நினைக்க வேண்டும்”//

        உங்களை சக மனிதர்களாகத்தான் நாங்கள் நடத்தி வந்தோம். அந்த மகராஜன் காமராஜர் செஞ்ச புண்ணியத்துல நீங்க எங்கள் எதிரியாகி நிற்கிறீர்கள். நீங்கள் எங்களை எதிரியாக கருதும்போது உங்கள் எண்ணத்திற்கு மதிப்பளிக்க வேண்டியது எங்கள் கடமையே.

        நீங்கள் உங்கள் கருத்துக்கள்தான் சரி என்று நினைத்தால் நாங்கள் எங்கள் கருத்துக்கள்தான் சரி என்று நினைப்போம்.

    • இதையெல்லாம் நாங்கள் உங்களிடம் கேட்கவில்லை. நீங்கள் மனித நேயம் மிகைத்த மனிதனாக இருங்கள் என்று தான் கேட்கிறோம்.

      • தமிழ் எங்கள் மனித நேயத்திற்கு உங்களிடம் சான்றிதழ் வாங்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

        நீங்கள் மனிதர்களாக இருந்தால் எல்லாரும் மனிதர்களாகத்தான் இருப்பார்கள்.

  114. @கல்நெஞ்சம்
    @குமரன் பத்மநாபம்
    @துரை
    @சீனிவாசன்
    @வினவு

    உங்களுக்கு எல்லாம் ஒரு கேள்வி.

    ஒருவன் மனிதகழிவை கையால் அள்ளி அந்த இடத்தை சுத்தப்படுத்துகிறான். அதுவும் அரசாங்க வேலை “மனித கழிவை கையால் சுத்தம் செய்வது”

    அப்படிபட்ட ஒருவன் கையால் தன் விரலால் பழைய சோற்றை அள்ளி உங்கள் தட்டில் வைக்கிறான் .அந்த உணவை அருவருப்பம் இல்லாமல்..உண்ணுவீர்களா..அல்லது மனித கழிவை அள்ளிய கைகள் என முகம் சுழிப்பீர்களா..?

    முதலில் அந்த உணவை மனமகிழ உண்ணுங்கள் அதற்கு பின்பு முற்போக்கு பற்றி பேசுங்கள்..
    நாங்கள் எம்குல பெருமை பேசுவதை விடுகிறோம்..

    • உங்களது மலத்தை நீங்களே அள்ளிகொள்ளவேண்டியது தானே, அதற்கு வேறு ஓருவன் வேண்டும் என்ன ஞாயம் இது… உங்களை போன்ற ஓரு சக மனிதன் இருக்கும் இடத்தில் பிறந்ததற்காக வருத்த படுகிறேன்

  115. ‘தேவர் மகன்’ என்ற திரைப்படத்தில் இடம் பெறும் பாடலொன்றில் “தெக்கு தெசையாண்ட மன்னரினம் தான் ஹோய்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தேவர் குலம் மன்னர் பரம்பரை தான் என்பதை ஐயந்திரிபற நிரூபிக்கறது. மேலும் ஹோய்சள மன்னர்களுக்கும் தேவரின மன்னர்களுக்கும் கொடுக்கல்-வாங்கல் இருந்தது என்பதை “ஹோய்” என்ற சொல்லால் குறிப்பாக உணர்த்துகிறார் இந்த பாடலாசிரியர். இந்துப் புராணங்களின் படி தெற்கு திசைக்கு அதிபதி யமன். ஒரே சமயத்தில் யமனும், தேவர் குலமும் தெற்கு திசையை ஆட்சி செய்தது ஆச்சர்யம் தருகிறது. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த சண்டையில் தேவர் குலத்தவர் பங்கு பெற்றனரா என்பதும் ஆராய்ச்சிக்கு உரியது.

    நன்றி: “தேவரினம்: ஓர் ஆராய்ச்சி”. ஆசிரியர்: அர. இல. டம்பாச்சாரியார்.

    • வெங்கடேசன் அவர்களே,

      தேவர் மகன் பாடலுக்கு முன்பே பல பாடல்கள் வந்துள்ளன. அதெல்லாம் உங்களுக்கு எங்கே தெரியப் போகிறது?

      அதுசரி நாங்க ஆண்ட பரம்பரை என்று பீற்றிக் கொள்கிறோம். அது பைத்தியக்காரத் தனம் என்றே வைத்துக் கொள்வோம்.

      உங்கள் பரம்பரை என்ன? உங்கள் பெருமை என்ன? அதைப் பாட்டா எழுதிப் படிங்களேன். உங்களை யார் தடுத்தது?

      உங்க பெருமை என்னனு உங்க பாட்டன் முப்பாட்டன் கிட்டே கேளுங்க. கேட்டுப் பார்த்து அதைப் பாட்டா பாடுங்க.

      அதை விட்டு விட்டு எங்கள் பெருமை பொய் என்று சொல்வதால் உங்கள் பெருமை உயர்ந்து விடாது.

  116. @Venkatesan

    எப்போது ஏர்வாடியில் இருந்து வந்திங்கீங்க…ஆசிரியர்: அர. இல. டம்பாச்சாரியார் எப்படி இருக்கிறார்..? உங்களுக்கு அவர் அறிவு புகட்டிய ஆசான்னாச்சே..இப்படி அவர விட்டுவிட்டு வரலாமா..? ஹோய்சள மன்னரின் கடைசி வாரிசு நீங்கள்..சொல்லி அனுப்பியிருந்தால்..கோசவர்களை வைத்து ஒரு வரவேற்பு கொடுத்திருக்கலாம்.

  117. @தியாகு

    போன வாரம் தான் நானும் என் ஆசானும் ஏர்வாடிலேர்ந்து வெளில வந்தோம். ஏர்வாடில ஒரு பழக்கம் உண்டு. ரெண்டு பேர வெளில உட்டா ரெண்டு பேர உள்ள இழுப்பாங்க. மேல இருக்கற கமண்ட் எல்லாம் படிச்சிட்டு உங்களையும், பெருமாள் தேவனையும் தேடிட்டு இருக்காங்க.

    • வெங்கடேசன்,

      முடிஞ்சா கேள்விகளுக்குப் பதிலைப் போடுங்க. யார் ஏர்வாடில இருந்து வந்ததுனு வாசகர்கள் முடிவு செய்யட்டும்.

  118. என்ன வினவு சார்,

    உங்க பஹூத்தறிவுக் கோஷ்டி ரூம் போட்டு யோசிக்குதா? நல்லா யோசிச்சுட்டு வாங்க.

    உங்கள் உங்கள் ஊடக தர்மத்தையும் எங்கள் வினாக்களுக்குப் பதில் தரும் தன்மையையும் உங்கள் வாசகர்கள் தெரிந்துகொள்ளட்டும்.

    நீங்கள் ஜெயித்துவிட்டால் நாங்கள் சாதி வெறியர்கள் என்பதை ஒப்புக் கொள்கிறோம்.

    எங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லாவிட்டால்… உங்கள் வாசகர்களே முடிவு செய்யட்டும்.

  119. ஊடகம் என்றால் நடுநிலையோடுதானே இருக்க வேண்டும்?

    நாங்கள் எங்கள் சாதியின் நியாயத்தை சொன்னால், அல்லது தலித்களின் சாதி வெறி பற்றி கட்டுரை எழுதித் தந்தால் போடுவீர்களா?

    உங்கள் நட்டநடு சென்டர் நிலையையும் பார்ப்போமே.

  120. ஐயா வினவு,

    நீங்க எங்க கேள்விகளுக்கு பதில் எல்லாம் அளிக்க வேண்டாம். எங்கள் பின்னூட்டங்களை மட்டும் போட்டுக் கொண்டே போங்க. உங்கள் வாசர்களே உண்மை எதுவென்று முடிவுசெய்து கொள்ளட்டும்.

  121. ஏன்யா வினவு ஐம்பது நல்ல கமாண்ட் போட்டேன். ஏன் அதை நீங்க அனுமதிக்கவில்லை. உங்கள் முகத்திரை கிழிவதாலா ??
    என்ன பொழப்பு உங்க பொழப்பு

  122. கள்ளர்,மறவர் சமூகத்தை மேலும் இழிவானவர் என எண்ண வைக்கும் நபர் முக்குலத்து எலி மேகநாதன் தான்.இந்த நபரின் எழுத்து நாறும் மலம் போலுள்ளது.ஆனானப்பட்ட தேவர் சமூகத்து ஆடுகள் எல்லாம் உணவு கேட்டு அழும்போது,இந்த நொண்டி ஆடு ஏன் இப்படி அழுகிறது?

  123. ஆண்ட பரம்பரை, ஆண்ட பரம்பரை என்று அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் அறிவுச் சுடர்களே!!! நான்கு தலைமுறைக்கு முன்பு உங்கள் பாட்டனின் தகப்பன் என்னவாக இருந்தார் என்பதை உங்களால் ஆணித்தரமாக கூறமுடியுமா? நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன் — எங்கே? எப்போது? எப்படி? கலப்பு ஏற்பட்டிருக்கும் என்று வரையறுத்துச் சொல்லமுடியாத அளவிற்கு மாறிப்போயிருக்கும்.
    வரும் கோடைகாலங்களில் குண்டி கழுவ கூட் தண்ணீர் இல்லாத அளவிற்கு வறட்சியாக இருக்கும் போலிருக்கிறது. அதைப்பற்றி விவாதியுங்கள். (உங்களின் இந்த வெத்து வேட்டு சாதி வீராப்பு, அந்த மலத்தை விட மிகவும் நாற்றமடிக்கிறது.)

    • பஹூத்தறிவாளி தமிழ் அவர்களே,

      நான்கு தலைமுறைக்கு முன்பல்ல, நாற்பது தலைமுறைக்கு முன்பும் எங்கள் பாட்டன் முப்பாட்டன் அப்படியேதான். என்னுடைய வரலாறை தெரிந்துகொள்ள வேண்டுமானால் இந்த பக்கத்திற்குச் சென்று பார்க்கலாம். இதில் ஏழு தலைமுறை வரை எழுதப்பட்டுள்ளது. http://perumalthevan.blogspot.in/2012/12/blog-post_27.html

      • (உங்களின் இந்த வெத்து வேட்டு சாதி வீராப்பு, அந்த மலத்தை விட மிகவும் நாற்றமடிக்கிறது.)

          • நாங்கள் கழிவையெல்லாம் அவ்வப்போது வெளியில் தள்ளிவிட்டுவிடுவோம். உங்களைப் போல் அதையே அசைபோட்டுக் கொண்டிருக்கமாட்டோம்.

            • உங்க ஆளுகதான் அதை நிறையத்தடவை பேசுறாங்க. ஏன்னா நீங்க எல்லாம் பெரியார் வாரிசுக இல்லையா?

              அப்போ அசை போடுறதும் நீங்கதான். உங்களை மலம் அள்ள வச்சானே அந்த புண்ணியவான், அவனைச் சொல்லணும். இது உங்களை இவ்வளவு ஆழமா பாதிக்கும்னு பாவம் அவன் நினைச்சுப் பார்த்திருக்க மாட்டான். நீங்களும்தான்.

              • “Whoever compels any person, on the ground of “untouchability”, to do any scavenging or sweeping or to remove any carcass or to flay any animal or to remove the umbilical cord or to do any other job of a similar nature, shall be deemed to have enforced a disability arising out of “untouchability'” – The Protection of Civil Rights (PCR)

                The above comment of you shows how you see a dalith and the entire community.
                please also do refer your comment 116.1.1

                You can be proud of your ancestors and your caste, please do not forget to treat a human being as human.

        • செய்ய்யும் தொழிலே அவனவனுக்கு சிந்தனையில் இருக்கும்…மலம் அள்ளுபவனுக்கு மலத்தை பற்றிய சிந்தனை மட்டுமே…

          நாங்கள் உயிர் கொடுக்கும் உணவு ….நீங்கள் அதன் கழிவான மலம் அதான் …மலத்தை பற்றியே சிந்தனை

          • ஆ..மார்களே!!!
            நீங்கள் உங்கள் துணியை துவைத்து போடுவதில்லையா? உங்களுக்கு நீங்களே முடியை மழித்துக் கொள்வதில்லையா? உங்கள் வீட்டு கழிப்பறையை நீங்கள் சுத்தம் செய்வதில்லையா? இப்போது சொல்லுங்கள் நீங்கள் யாரென்று? இப்போது எல்லா நாயும் எல்லாத் தொழிலும் செய்கிறது. அமிர்தமேயானாலும் உள்ளே போய்விட்டு வெளியில் வரவில்லையென்றால் அது நோய். அப்படி வெளியில் வந்ததை சாப்பாட்டு இலையில் வைத்துக்கொண்டே உணவையும் சாப்பிடுவோம் என்று நீங்கள் அடம் பிடிக்கிறீர்களே அதைத்தான் தவறு என்கிறோம். நான் சாப்பிடும் இலையில் வைத்துக் கொண்டும் சாப்பிடுவேன். உணவிற்கு அதை தொட்டுக்கொண்டும் சாப்பிடுவேன் என்று நீங்கள் அடம் பிடித்தால் அது உங்கள் இஷ்டம்.

        • ஐயா, அறிவாளி தமிழ்,

          அந்த சாதி நாத்தம் அடிக்குதுனா, அதுல இருந்து வெளியே வரவேண்டியதுதானே? ஏன் அதுலயே ஒட்டிக்கிட்டு இருக்கீங்க?

  124. நாகரீகமற்ற பேச்சு. எது அவர்களுக்கு அதிக பரிச்சயமோ அதை பற்றிதான் அதிகம் பேசுவார்கள். வீர வரலாற்றுக்கு பதில் சொல்ல தெரியாதவனின் வீன் பேச்சு.

  125. ஏன்யா வினவு ஐம்பது நல்ல கமாண்ட் போட்டேன். ஏன் அதை நீங்க அனுமதிக்கவில்லை. உங்கள் முகத்திரை கிழிவதாலா ??
    என்ன பொழப்பு உங்க பொழப்பு

  126. மற்ற எல்லாச் சாதிக்காரங்களும் சாதியை விட்டு வாங்கனா வந்துருவாங்க. ஆனா தலித்களால் மட்டும் ஒருக்காலத்திலும் சாதியை விட்டு வெளியே வர முடியாது. அதுக்கு காரணம் என்னனா, அவங்களோ அறிவாளித் தலைவர்கள் அவர்களை சாதியில் முடிந்து வைத்துவிட்டு சென்றிருப்பதுதான்.

    பாவம், இவர்கள் சாதி பற்றியும் சாதி வெறி பற்றியும் பேசுவதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை.

  127. @வினவு

    ///பெருமாளு, ஒட்டு மொத்த தேவர் சாதி மக்களுக்கும் நீங்களோ இல்லை வாண்டையரோ, சேதுராமனோ, தார்பாய் முருகனோ யாரும் அத்தாரிட்டி இல்லை. அத்தகைய பதவிகளை நாங்களும் சரி, தேவர் சாதி மக்களும் வழங்கவில்லை. அதனால் நீங்களே தேவர்சாதி மக்களுக்கு தலைவராக நியமித்துக் கொண்டு பேசுவது தவறு///

    இதான் பாஸ் நாங்களும் சொல்றோம்.
    நீங்கதானே அரசியல் வியாபரிகளை பற்றி.. சொல்லி தேவர்சாதிக்காரங்கனு.. பைப்பியக்காரன் சுவற்றில் கிறுக்குனு மாதிரி.. கிறுக்கிகிட்டு இருக்கீங்க..

  128. நான் எலியா இல்லை புலியா என்று நேரில் வந்து பார்த்தால் தானே தெரியும் . வாரியளா

  129. இவர்கள் பூலித்தேவன், மருது பாண்டியர், வேலுநாச்சியார் வம்சமாம.
    அப்படியா பரங்கியர்களை எதிர்த்த எப்பேற்பட்ட வீரம் .
    எங்க அப்படியே தாமிரபரணியை கோக கோலாவிடமிருந்து மீட்க வாருங்கள் பார்க்கலாம்

    • உங்க தலைமையில் நாங்கள் வந்து போராடணும் அப்படித்தானே?

      • நீங்களெ தலைமை தாங்குங்கள் ஏன்னா நீங்கள் தனே பூலித்தேவன், மருது பாண்டியர், வேலுநாச்சியார் வம்சம். நீங்களே பார்வார்ட் ப்லாக் முலமாகவோ இல்லை மூவேந்தர் முன்னேற்ற கழகம் மூலமாகவோ இல்லை தனியாகவோ மக்களை அணி திரட்டுங்கள்.நாங்களும் வருகிறோம்

    • //எங்க அப்படியே தாமிரபரணியை கோக கோலாவிடமிருந்து மீட்க வாருங்கள் பார்க்கலாம்//

      என்னமோ நீ அதை மீட்டுகொண்டிருப்பது போலவும்,நாங்க இடையில் சேர்ந்து கொள்ள பயப்படுவது போலவும் இருக்கிறது உன் எழுத்து. முக்குலம் முன்னெடுத்த போராட்டங்கள் தான் உலகம் பேசவைத்தவை. எஜமானர்கள் ஆட்சியில் நீதியை உண்மை பேச வைத்தவர்கள் நாங்கள். இன்று உன் போன்ற தரம் கெட்டவர்களின் நுழைவால் அதுவும் பொய் பேசி திரிகிறது. சமுதாயத்திற்கு நாகரீகம் சொல்லித்தர தெரியாதவனுக்கு நடுசபையில் என்ன பேச்சு.

      • பிரச்சாரம் பண்ண வந்தப்ப ஒரு பையல காணாம் இப்ப வந்து ///நீ அதை மீட்டுகொண்டிருப்பது போலவும் /// என்று கிண்டல் வேறு

  130. பாவம், வினவு ஆசிரியருக்கு நம்ம பதிவுகளை படித்து வேண்டாததை வெட்டிவிட்டு போடவே நேரம் போதாது போலிருக்கிறது.

  131. திருவாளர் வேங்கையன்,

    //அந்த விடுதலை வேங்கைகள் சாதிகளை கடந்து மக்களையும் மண்ணின் விடுதலையையும் நேசித்த அதற்காக உயிரையும் தியாகம் செய்த மாவீரர்கள் மருது பாண்டியர்களை காட்டிக் கொடுத்த கௌரி வல்லப உடையணத்தேவன் உங்க ஆண்ட பரம்பரைல சேத்தியா இல்லையா பெருமாளு.//

    எங்க சாதியில நல்லவனும் இருக்கிறான் கெட்டவனும் இருக்கிறான்னுதான் நாங்கள் வாதம் செய்து கொண்டிருக்கிறோம். அதனாலதான் எல்லாரையும் ஒட்டுமொத்தமா தேவர் சாதிவெறி என்று எழுதாதீர்கள் என்று கண்டித்துக் கொண்டிருக்கிறோம்.

    ஆனால் நீங்கள்தான் (கீற்று, வினவு, சவுக்கு) தலித்கள் எல்லாரும் உத்தம புத்திரர்கள், தேவர் எல்லாரும் சாதிவெறி பிடித்தவர்கள் என்று எழுதி வருகிறீர்கள்.

    எல்லாச் சாதியிலும் நல்லவனும் இருப்பான் கெட்டவனும் இருப்பான். பெரும்பான்மை மக்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம். ஆனால் நீங்கள் உங்கள் தேவைக்கேற்ப ஒரு சாதியை (தலித்) நல்ல சாதியாகவும் மற்றொரு சாதியை(தேவர்) கெட்ட சாதியாகவும் காட்டி உங்கள் பிழைப்பை நடத்துகிறீர்கள்.

    எங்கள் சாதியில் இருக்கும் தீயவர்களை/ குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி அதற்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுக்க வேண்டும் என்றுதான் நாங்கள் சொல்கிறோம்.

    ஆனால் அதற்கு நீங்கள் தயாராக இல்லை என்பதுதான் வேடிக்கை. ஏனென்றால் உங்கள் கருத்தின்படி தலித் என்றால் அவர் உத்தமர்.

    ஹாஹாஹா

    நியாயம் பேச வந்துவிட்டார்.
    நீங்க என்ன கழுவி ஊத்துறது? உங்களை விட நாங்க நல்லாவே கழுவி ஊத்துவோம். அவன் எங்க சாதிக்காரனா வேற சாதிக்காரனானு பார்க்க மாட்டோம்.

    அந்த துணிச்சல் உங்களுக்கு இருக்கிறதா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

    • தேவர் சாதியினர் அனைவரும் சாதி வெறி பிடித்தவர்கள் என்று யாரும் சொல்லல.ஆனால் மேலவளவுல முருகேசனை வெட்டிக் கொன்ற மிருகங்களை,ஊஞ்சனையில் தாழ்த்தப்பட்ட மக்களை வேட்டையாடிய மிருகங்களை,கண்டதேவியில தேர் வடத்தை பள்ளு பறைஎல்லாம் தொட கூடாதுன்னு ஆட்டம் போடுற அயோக்கியனுங்களை இன்னிக்கும் மதுரை ராமநாதபுரம் சிவகங்கை மாவட்டங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனிக்குவளையில்தான் டீ கொடுக்கனுனு வெறியாட்டம் போடும் அயோக்கியனுங்களை சாதி வெறியர்கள் என்று சொல்வதில் என்ன தப்பு.

      இப்ப கேள்வி என்னன்னா 150 வருஷமா சிவகங்கை ஜமீனை ஆண்ட இப்பவும் அதன் சொத்துக்களை அனுபவிக்கும் துரோக கும்பல் உங்க ஆண்ட பரம்பரையில சேருமா சேராதா.அதுக்கு என்ன பதில்.

      நீங்க கழுவி ஊத்துற லட்சணத்த தனியன் கிறவர் போட்ட கமண்டுல தெரியுது.
      \\இன்றும் இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டையில் அவர்கள் ஆரம்பித்த கல்லூரிகள் தான் கம்பீரமாய் அவர்களின் பெயரை உச்சரித்துக் கொண்டிருக்கிறது,//
      நூறு இருநூறு வருசத்துக்கும் மேல மக்களை சுரண்டிக் கொழுத்த கும்பல் கொஞ்சம் செலவு பண்ணி கல்லூரி கட்டிட்டா யோக்கியனா.அப்படி பாத்தா வெள்ளைக்காரன் நூத்துக் கணக்குல பள்ளி கல்லூரி கட்டிருக்கானே.அவனும் யோக்கியம்தானா.

  132. //ஒட்டுமொத்தமா தேவர் சாதிவெறி என்று எழுதாதீர்கள் என்று கண்டித்துக் கொண்டிருக்கிறோம். //

    பலமுறை வினவு தெளிவுபடுத்தியிருக்கிறது. எல்லா சாதிகளிலும் மதங்களிலும் நல்லவர்களான உழைக்கும் மக்களும் இருக்கிறார்கள், பெருமாளு போன்ற சாதி…..களும் இருக்கிறர்கள் என்று. உழைக்கும் மக்களை அணிதிரட்டி சாதி வெறியர்களை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவதுதான் எங்கள் நோக்கம் என்று. எத்தனை தடவைதான் எழுதுவது, பேசுவது. rss யை எழுதினால் நீ ஏன் முஸ்லீம்களை எழுதுவதில்லை, முஸ்லீம்களை பற்றி எழுதினால் நீ ஏன் இந்துக்களை பற்றி எழுதுவதில்லை, தேவர் சாதி வெறியை எழுதினால் நீ ஏன் தலித்துகளை எழுதுவதில்லை, தலித்துகளைப் பற்றி எழுதினால் நீ ஏன் வன்னியரைப் பற்றி எழுதுவதில்லை, வன்னியரைப் பற்றி எழுதினால் நீ ஏன் பார்ப்பனரைப் பற்றி எழுதுவதில்லை, பார்ப்பனரைப் பற்றி எழுதினால் நீ ஏன் சீனாவைப் பற்றி எழுதுவதில்லை என பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்பதே பொழப்பா போச்சு.

  133. ஐயா வல்லவமாறன்,

    2000 ஆண்டுகளாக தலித்கள் தங்கள் பிணங்களை புதைக்காமலும் எரிக்காமலும் என்ன செய்து வருகிறார்கள்? ஜொராஸ்டியர்களைப் போல கழுகுகளுக்கு உணவாக்குகிறார்களா என்ன?

    நீங்கள் உங்கள் உரிமைகளுக்காக போராடுகிறீர்கள். நாங்கள் எங்கள் உரிமைகள் பறிக்கப்படுவதை எதிர்த்துப் போராடுகிறோம். அதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம்.

    எங்கள் உரிமைகளை பறிப்பதில்தான் உங்கள் உரிமை உள்ளது என்ற மறைமுக பிரச்சாரத்தை முற்போக்கு முகமூடிகள் மேற்கொண்டு வருகிறார்கள். அதன் பலன்தான் இதுபோன்ற கட்டுரைகள்.

    அதை எதிர்த்துத்தான் போராடுகிறோம்.

    • //நீங்கள் உங்கள் உரிமைகளுக்காக போராடுகிறீர்கள்// இந்த சமூகத்தில் மனிதனாக வாழும் உரிமைக்க போராடுகிறோம். நாங்களும் மனிதர்களாக மதிக்க பட வேண்டும் என்று போராடுகிறோம், தலித் என்றாலும் வீடு வாடகை குடுக்கும் நிலைமை வர வேண்டும் என்று போராடுகிறோம்.

      //நாங்கள் எங்கள் உரிமைகள் பறிக்கப்படுவதை எதிர்த்துப் போராடுகிறோம்// இந்த சமூகத்தில் எந்த உரிமை தங்களிடம் பறிக்க படுகிறது என்று நீங்கள் கருதுகிறேர்கள் என்று புரிய வில்லை. “தாங்கள் என்றால் அணைத்து அதிக்க சாதி ஹிந்துக்கள் (தலித் அல்லாதோர் பேரவையை சேர்ந்தவர்கள்)”

      தங்களின் எந்த உரிமை பறிக்க பட்டு எங்களிடம் குடுக்க படுகின்றது என்று புரிய வில்லை – இதை ஓரு விளக்கமாக கேட்க வில்லை. எதை குறிப்பிட்டு சொன்னிர்கள் என்று புரிய வில்லை.

      இந்த மறுமொழி தங்களை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் (ஹி ஹி ஹி என்று மறுமொழி கூறினாலும் மன்னிப்பு கேட்பது எனது கடமை, மனிபதும் மன்னிக்காமல் இருப்பது தங்கள் உரிமை. பிழை இருப்பின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எனது பெற்றோர்கள் சொல்லிகுடுதர்கள், எனது பட்டன் பூட்டன் பற்றி எனக்கு தெரியாது)

      என்னை வசை பாடினாலும் சிறிது நாகரிகத்துடன் (whether in this forum or to any other friends of you) வசை பாடுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

  134. ஐயா பஹூத்தறிவாளி சந்தானம்,

    ஒட்டுமொத்தமாக சாதிவெறி பற்றி எழுதும் வினவு தலித் சாதிவெறி பற்றி ஏதாவது கட்டுரை எழுதியுள்ளதா, இல்லையா? இல்லை தலித்களுக்கு சாதிவெறியே இல்லையா? அதுபோன்ற சம்பவங்களும் நடக்கவில்லையா? அப்படி எழுதாதபோது நாங்கள் எல்லாரையும் அப்படித்தான் எழுதுகிறோம் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

    அதேபோல ஒரு தலித்தின் செயலை வைத்து ஒட்டுமொத்தமாக எல்லாத் தலித்களையும் பேசினால் வினவு ஏற்றுக் கொள்ளுமா? அதெல்லாம் சரி. வினவுக்காக நீங்க ஏன் வக்காலத்து வாங்குறீங்க? நீங்க வினவுல வேலை பார்க்கிறீங்களா? இல்லை உங்களுக்கு ஆதரவளிப்பதற்காக வினவுக்காக பேசுகிறீர்களா? இல்லை நீங்கள் சொல்வதை வினவு ஏற்றுக் கொள்ளுமா?

    • பெருமாள் என்ன சொல்கிறார் என்றால் ” நாங்கள் சாதி வெறி உள்ளவர்கள்தான். சாதி வெறி பிடித்து பல குற்றங்களை செய்தவர்கள்தான். அதிலெல்லாம் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் எங்களை மட்டும் விமரிசிக்கும் வினவு தலித் மக்களின் சாதிவெறி குறித்து மட்டும் ஏன் விமரிசப்பதில்லை”.

      நல்லது, ஒருவழியாக நீங்கள் சாதி வெறியர்கள்தான், குற்றவாளிகள்தான் என்பதை ஒத்துக் கொண்டதற்கு நன்றி. என்னென்ன குற்றம் செய்தீர்கள் என்பதை பட்டியிலிடுங்கள், ஜனநாயக முறைப்படி தண்டனை வாங்கித் தரும் வழியைப் பார்ப்போம்.

  135. ஐயா பஹூத்தறிவாளி வினவு,

    நீங்க நாங்க செய்ற குற்றங்களை கண்டுபிடிச்சு தண்டனை வாங்கிக் கொடுங்க. அதேபோல மதுரையில பெட்ரோல் குண்டு வீசினாங்களே தலித்கள். அவர்களைக் கண்டுபிடிச்சும் தண்டனை வாங்கிக் கொடுங்க. பாதை தெரியாம போன மூன்று பேரை கல்லால் அடித்துக் கொன்றார்களே அவர்களைக் கண்டுபிடிச்சும் தண்டனை வாங்கிக் கொடுங்க.

    அதை விட்டுவிட்டு வெறுமனே தேவர் சாதிவெறி, சாதிவெறி என்று எழுதினால் அதனால் ஒரு சமூக நன்மையும் ஏற்படாது. மாறாக அது தலித்களுக்கும் தேவர்களுக்கும் மோதலை ஏற்படுத்தும். நாங்கள் அதையேதான் செய்வோம் என்று சொன்னீர்களானால் தாராளமாக செய்யுங்கள்.

    உங்களுக்கு சிறந்த நான்காவது தூண் பட்டம் வாங்கித் தருகிறோம்.

    • பெருமாளு, மதுரையிலோ இல்லை மணப்பாறையிலோ, மாங்காட்டிலோ, மணற்மேல் குறிச்சியிலோ எங்கள் மாதிரி சாதாரண ஆளுங்க இன்றும் போய் வருகிறார்கள். யாரும் குண்டு வீசுவதில்லை. உங்களை மட்டும் தெரிவு செய்து குண்டு வீசக் காரணம் என்ன? என்ன தப்பு செய்தீர்கள்?

  136. ஐயா நாகராஜ்,

    நாங்க போராட்டம் நடத்துறப்ப சொல்லி அனுப்புறோம், மறக்காம வந்துருங்க.

    • பெருமாளுக்கு ஒரு பகிரங்க சவால்!

      மக்கள் விரோதி ஜெயலலிதாவை பாசிச ஜெயலலிதா என்று பல்வேறு இடங்களில் எழுதி, பேசி, ஆர்ப்பாட்டம் செய்து நாங்கள் கண்டித்திருக்கிறோம். நீங்கள், அல்லது உங்களது முக்குலத்து சிங்கம், புலி,நரி,புளி, எள், புல் எந்த நபராவது பாசிச ஜெயலலிதாவை கண்டிக்கிறோம் என்று பிளக்ஸ் பேனரை முகவரியோடு போயஸ் தோட்டத்தில் வேண்டாம், அடையாறு கூவம் கரை அருகிலாவது வைப்பதற்கு தைரியம்,துணிவு, தில்,வீரம் உண்டா?
      இதை செய்தால் உங்கள் பரம்பரை முறுக்கு மீசை வளர்த்து மிடுக்கு காட்டிய பரம்பரை என்று ஏற்கிறோம். இல்லையேல் ஒட்டு மீசை காட்டிய வெத்து வேட்டு கோமாளிகள் என்ற பட்டத்தை தருகிறோம். சவாலுக்கு தயாரா?

  137. ஹாஹாஹா

    தலித்கள் போட்டால் அந்த கமென்ட் உடனே அப்படியே வருது. தேவர்கள் போட்டால் நிதானமாக படிச்சு, வெட்டிக் கழித்து வெளியிடுகிறது, வினவு.

    ஆகா, என்ன ஊடகத் தர்மம்?

  138. //பெருமாளு, மதுரையிலோ இல்லை மணப்பாறையிலோ, மாங்காட்டிலோ, மணற்மேல் குறிச்சியிலோ எங்கள் மாதிரி சாதாரண ஆளுங்கள இன்றும் போய் வருகிறார்கள். யாரும் குண்டு வீசுவதில்லை. உங்களை மட்டும் தெரிவு செய்து குண்டு வீசக் காரணம் என்ன? என்ன தப்பு செய்தீர்கள்?//

    சரியா சொன்னீங்க வினவு சார், அப்போ அவர்கள் மீது குண்டு வீசினது சரிதான்னு சொல்றீங்க, அப்படித்தானே?

    இதே கேள்வியை நான் திருப்பிக் கேட்கலாமா? தலித்கள் என்ன தப்புச் செய்கிறார்களோ, அதனால்தான் அவர்கள் அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்கள்?

    ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம். இதற்குப் பெயர்தான் தலித் சாதிவெறி.

    வாழ்த்துக்கள்.

    • கேள்விக்கு பதில் இல்லையே, உங்கள் மீது எதற்காக குண்டு வீசினார்கள்? காரணமே இல்லாமல் தீபாவளி பட்டாசு போட்டார்கள், அந்த வழியில் அது தெரியாமல் நாங்கள் சென்றதால் அடிபட்டு விட்டது என்று சொல்ல வருகிறீர்களா?

  139. //மக்கள் விரோதி ஜெயலலிதாவை பாசிச ஜெயலலிதா என்று பல்வேறு இடங்களில் எழுதி, பேசி, ஆர்ப்பாட்டம் செய்து நாங்கள் கண்டித்திருக்கிறோம். நீங்கள், அல்லது உங்களது முக்குலத்து சிங்கம், புலி,நரி,புளி, எள், புல் எந்த நபராவது பாசிச ஜெயலலிதாவை கண்டிக்கிறோம் என்று பிளக்ஸ் பேனரை முகவரியோடு போயஸ் தோட்டத்தில் வேண்டாம், அடையாறு கூவம் கரை அருகிலாவது வைப்பதற்கு தைரியம்,துணிவு, தில்,வீரம்
    உண்டா?
    இதை செய்தால் உங்கள் பரம்பரை முறுக்கு மீசை வளர்த்து மிடுக்கு காட்டிய பரம்பரை என்று ஏற்கிறோம். இல்லையேல் ஒட்டு மீசை காட்டிய வெத்து வேட்டு கோமாளிகள் என்ற பட்டத்தை தருகிறோம். சவாலுக்கு தயாரா?//

    ஐயா வினவு,

    உங்க சவாலை வேறு யாரிடமாவது விடுங்க. உங்கள் அபிலாஷைக்கெல்லாம் நாங்கள் போராட முடியாது. நேரம் வரும்போது எங்க எதிர்ப்பைக் காட்டுவோம். அது ஜெயலலிதாவாக இருந்தாலும் சரி. எந்தக் கொம்பனாக இருந்தாலும் சரி.

    நாங்கள் யாரையும் பார்க்க மாட்டோம். நாங்கள் செய்யும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

    அதுவரை நீங்கள் எங்களை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அழைப்பதால் நாங்கள் அப்படி ஆகிவிட மாட்டோம்.

    சவால் விடுக்க ஆசைப்பட்டால், நானும் ஒரு சவால் விடுக்கிறேன். நீங்கள் தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துக் காட்டுங்கள். அல்லது குறைந்தது ஆட்சியைக் கலைத்துக் காட்டுங்கள்.

    எங்களுக்கு அம்மாவும் டம்மிதான், ஐயாவும் டம்மிதான். நேரம் வரும்போது அதை நிரூபிப்போம்.

    • பெருமாளு அம்மா டம்மி என்பதை ஒரு பிளக்ஸ் பேனர் வைத்து அண்ணாசாலையில் வெளியிட வேண்டும். செலவைக்கூட நாங்கள் ஏற்கிறோம். இல்லையேல் நீங்களும் டம்மி என்பதை ஒத்துக் கொள்வதாக பொருள்! ஒரு டம்மி இன்னொரு டம்மியைப் பார்த்து சவால் விடுமா? சிரிக்க முடியவில்லை, அழுகையாக வருகிறது

    • நேரம் வரும் போது எதிர்ப்பைக் காட்டுகிறோம் என்று சொல்லும் பெருமாள் ஐயா, இங்கு என்ன முகூர்த்தத்திற்கு பந்தக்காலா போடுகிறோம். ஜெயலலிதாவை எதிர்ப்பதற்கு பயமாக இருக்கிறது, எதிர்த்தால் எங்களது நேரம் சரியாக இருக்காது என்று உண்மையை ஒத்துக் கொண்டால் யாரும் உங்களை பார்த்து கேலி செய்யக்கூடாது என்று வாசகர்களுக்கு ஒரு கோரிக்கை விடுவித்தால் போச்சு.

      அடுத்து நீங்கள் பதிலுக்கு ஒரு சவால் விடுத்திருக்கிறீர்கள். தமிழகத்தில் ஆட்சியை மாற்றிக் காண்பித்து, ஆட்சியைப் பிடித்து காட்டுங்கள் என்று எங்களுக்கு நீங்கள் விட்ட சவால் இருக்கட்டும். முதலில் சவால் என்பது என்ன? நாங்கள் ஒரு விசயத்தை செய்திருக்கிறோம் உங்களால் முடியுமா என்று கேட்பதுதான் சவால். அந்த வகையில் தமிழக மக்களின் தாலியை அறுக்கும் பாசிச ஜெயலலிதாவை தொடர்ந்த்து வெளிப்படையாக நாங்கள் எதிர்த்திருக்கிறோம். இதற்காக தடியடி, சிறை, வழக்கு என்று ஏராளமான அடக்குமுறைகளை சந்தித்திருக்கிறோம். அதன்படி உங்களது முக்குலத்து சாதி சங்கம் நடத்தும் காமடி பீசுகள் ஜெயலலிதாவை எதிர்க்க முடியுமா என்று கேட்டால் இதுதான் சவால். முடியவில்லை என்றால் சவாலில் தோற்றுப் போனதாக அர்த்தம். அல்லது தமிழகத்தில் நீங்கள் ஆட்சியை மாற்றிக் காண்பித்து விட்டு எங்களிடம் கேட்டால் இது சவால். அது வரை உங்களது சவால்கள் வரலாற்றில் சவடால்கள் என்றே அழைக்கப்டும். சம்மதமா?

  140. //கேள்விக்கு பதில் இல்லையே, உங்கள் மீது எதற்காக குண்டு வீசினார்கள்? காரணமே இல்லாமல் தீபாவளி பட்டாசு போட்டார்கள் என்று சொல்ல வருகிறீர்களா?//

    நீங்கள்தான் சொல்லுங்கள், அந்த காரணத்தை தெரிந்துகொள்கிறோம்.

    உங்கள் கேள்வி எப்படி இருக்கிறது தெரியுமா? ராஜபக்சே ஏன் தமிழ் மக்களை குண்டுவீசிக் கொன்றான், தமிழ் மக்கள் ஏதாவது செய்திருப்பார்கள், காரணம் இல்லாமலா கொன்றிருப்பான் என்பது போல உள்ளது.

    நல்லா வருவீங்க..

    • பெருமாளு ராஜபக்சே தலைமையலான சிங்கள இராணுவம் தமிழ் மக்கள் அரசியல் ரீதியில் உரிமைகளை கேட்க்கூடாது என்ற காரணத்தை வைத்துத்தான் கொல்கிறது. இந்த இனப்படுகொலைக்கு காரணம் இல்லை என்று சொன்ன முதல் அறிவாளி முக்குலத்து சிங்கம் நீங்கள்தான். இந்த உலகில் எல்லா வன்முறைக்கும் காரணம் உள்ளது. கேள்வி என்னவென்றால் உங்கள் சிங்கங்கள் குண்டு வீச்சில் ஆளானதற்கு என்ன காரணம் என்றுதானே கேட்கிறோம். காரணத்தை மறைப்பதிலிருந்தே நீங்கள்தான் தவறு செய்திருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது.

  141. //பெருமாளு அம்மா டம்மி என்பதை ஒரு பிளக்ஸ் பேனர் வைத்து அண்ணாசாலையில் வெளியிட வேண்டும். செலவைக்கூட நாங்கள் ஏற்கிறோம். இல்லையேல் நீங்களும் டம்மி என்பதை ஒத்துக் கொள்வதாக பொருள்! ஒரு டம்மி இன்னொரு டம்மியைப் பார்த்து சவால் விடுமா? சிரிக்க முடியவில்லை, அழுகையாக வருகிறது//

    வினவு
    நீங்கதான் நக்சலைட்டுகள் ஆச்சே ஆட்சியை கவிழ்க்க வேண்டியதுதானே? எதற்காக ஒன்றுக்கும் உதவாத டம்மிகளான எங்களிடம் சவால் விடுக்கிறீர்கள்?

    சிரிப்பு வந்தா சிரிங்க, அழுகை வந்தா அழுங்க. அதை அடக்கி மட்டும் வைக்காதீங்க. உடம்புக்கு நல்லது இல்லை.

    • //எதற்காக ஒன்றுக்கும் உதவாத டம்மிகளான எங்களிடம் சவால் விடுக்கிறீர்கள்//

      appo inimel un peru premal thevan illa… perumal dummythan…

      oru vazhiya othukkitaruppa!

  142. //பெருமாளு ராஜபக்சே தலைமையலான சிங்கள இராணுவம் தமிழ் மக்கள் அரசியல் ரீதியில் உரிமைகளை கேட்க்கூடாது என்ற காரணத்தை வைத்துத்தான் கொல்கிறது. இந்த இனப்படுகொலைக்கு காரணம் இல்லை என்று சொன்ன முதல் அறிவாளி முக்குலத்து சிங்கம் நீங்கள்தான். இந்த உலகில் எல்லா வன்முறைக்கும் காரணம் உள்ளது. கேள்வி என்னவென்றால் உங்கள் சிங்கங்கள் குண்டு வீச்சில் ஆளானதற்கு என்ன காரணம் என்றுதானே
    கேட்கிறோம். காரணத்தை மறைப்பதிலிருந்தே நீங்கள்தான் தவறு செய்திருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது.//

    வினவு உங்களைப் போன்றவர்கள் தலித் சாதிவெறியை ஊக்குவிப்பதுதான் பெட்ரோல் குண்டுவீச்சுக்கு காரணம். இன்னும் இதேபோல எழுதிக் கொண்டிருந்தால் இன்னும் குண்டு வீச்சுக்கள் அதிகரிக்கலாம். அதைத்தானே நீங்கள் விரும்புகிறீர்கள்? அதற்கு எதற்கு. முற்போக்கு முகமூடி?

    அதோடு நியூட்டனின் மூன்றாம் விதியையும் நினைவில் கொள்ள வேண்டும்.

  143. //அடுத்து நீங்கள் பதிலுக்கு ஒரு சவால் விடுத்திருக்கிறீர்கள். தமிழகத்தில் ஆட்சியை மாற்றிக் காண்பித்து, ஆட்சியைப் பிடித்து காட்டுங்கள் என்று எங்களுக்கு நீங்கள் விட்ட சவால் இருக்கட்டும். முதலில் சவால் என்பது என்ன? நாங்கள் ஒரு விசயத்தை செய்திருக்கிறோம் உங்களால் முடியுமா என்று கேட்பதுதான் சவால். அந்த வகையில் தமிழக மக்களின் தாலியை அறுக்கும் பாசிச ஜெயலலிதாவை தொடர்ந்த
    ்து வெளிப்படையாக நாங்கள் எதிர்த்திருக்கிறோம். இதற்காக தடியடி, சிறை, வழக்கு என்று ஏராளமான அடக்குமுறைகளை சந்தித்திருக்கிறோம். அதன்படி உங்களது முக்குலத்து சாதி சங்கம் நடத்தும் காமடி பீசுகள் ஜெயலலிதாவை எதிர்க்க முடியுமா என்று கேட்டால் இதுதான் சவால்.//

    ஐயா வினவு,

    தேவர் மக்கள் எல்லா திராவிடக் கட்சிகளையும் தூக்கி எறிய ஆரம்பித்து விட்டார்கள். அதேபோல உங்களைப் போன்ற சாதிவெறி பிரச்சாரக் கும்பலையும் அடையாளம் கண்டு கொண்டார்கள்.

    சிறை செல்வதையும், அடக்குமுறையையும் பற்றி பேசுகிறீர்கள். தமிழகத்தில் அதிகமான ரத்தம் சிந்தியவர்கள், உயிர்த்தியாகம் செய்தவர்கள் என்றால் அது முக்குலத்தோர்தான். என்றைக்கும் உயிர்க்கொடைக்கும், ரத்தம் சிந்தவும் தயங்காதவர்கள் முக்குலத்தோர். அதைத்தான் வரலாறு சொல்கிறது.

    நேரம் வரும்போது அதைத் திரும்பவும் செய்வார்கள். அப்போது உங்கள் திராவிட, கம்யுனிஸ, தலித் சாதிவெறி ஆட்டங்கள் ஒடுங்கிவிடும்.

  144. –//பெருமாளு ராஜபக்சே தலைமையலான சிங்கள இராணுவம் தமிழ் மக்கள் அரசியல் ரீதியில் உரிமைகளை கேட்க்கூடாது என்ற காரணத்தை வைத்துத்தான் கொல்கிறது. இந்த இனப்படுகொலைக்கு காரணம் இல்லை என்று சொன்ன முதல் அறிவாளி முக்குலத்து சிங்கம் நீங்கள்தான்.//

    ஐயா வினவு,

    தேவர்கள் எந்த உரிமைகளை கேட்டார்கள் என்பதற்காக கொல்லப்பட்டார்கள்?

    இனப் படுகொலைக்கு காரணம் இருப்பதால் அது சரி என்கிறீர்களா?

    இனப்படுகொலையும் தேவர்கள் கொல்லப்படுவதும் சரி என்கிறீர்களா?

  145. வினவு சார்,

    நீங்க இப்படியே எழுதுங்க. அதுதான் எங்களுக்கு உதவும். தயவுசெய்து நீங்க உங்க நடையை மாத்திக்காதீங்க. தேவர் சாதிவெறி என்றே தொடர்ந்து எழுதுங்கள். இன்னும் நிறைய தேவர்கள் எங்கள் பக்கம் ஒன்று சேருவார்கள்.

    நீங்க நிறுத்திவிட்டா, அப்புறம் அவங்க ஒண்ணு சேரமாட்டாங்க.

    அதனால தொடருங்க.

  146. ஐயா வினவு,

    குறிச்சு வைச்சுக்கங்க. அதிமுகவுக்கு ஆப்படிக்கப் போறது எங்க ஆளுங்கதான். பார்த்துக்கிட்டே இருங்க என்ன நடக்குதுனு.

  147. ஆதாரம்:
    http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175.pdf
    http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175-suppl.pdf

    எமது கருத்துக்கள்:
    * இன்று அனைவரும் தமிழர் என்று சொல்லி கொண்டாலும், யார் தமிழர் என்று அறிய இந்த ஆய்வு உதவும் என்று நம்புகிறோம்.

    * நாயுடு,ரெட்டியார் போன்ற வடுக சாதிகளுடன் நெருங்கிய தொடர்புள்ள கள்ளர் சாதியினர் தங்களை ‘களப்பிரர்'(வடுகர்) வழித் தோன்றல்கள் என்று கூறிக் கொள்வதும், பிற்காலத்தில் அவர்கள் முருக வழிபாடு செய்யத் தொடங்கியதால் அவர்களும் தமிழர்களே என்று தேவநேய பாவாணர் கூறியவையும் சரியே என்பது இதில் இருந்து விளங்கும்.

    * முக்குலத்தொருக்கும், மூவேந்தருக்கும் தொடர்பு உண்டு என்ற கருத்து கேள்விக் குறியாகிவிடும்.

    * வடக்கே வன்னியன், தெற்க்கே தேவேந்திரன் என்ற அரசியல் அறைகூவல், அதையும் தாண்டி மரபணு ரீதியில் வலுப்பெற இந்த ஆய்வு உதவும்.

    * தங்களுக்கு சிறிதும் தொடர்பற்ற முக்குலத்தோரையும் ‘சத்ரியர்’ என்று நட்பு பாராட்டும் ஒரு சில ‘வன்னியரின்’ நிலை கேள்வி குறியாகும்.

    * ஒடுக்கப்பட்டவர் என்ற வர்க்க ஒற்றுமை மட்டுமே பள்ளருக்கும், பறையருக்கும் உண்டு என்பதும், ஆனால் அதே பறையர்கள் மரபணு அடிப்படையில் முக்குலத்தோர் உள்ளிட்ட வடுக மரபணுக்களுடனே சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் இதில் இருந்து புலனாகும்.

    * இன்று மள்ளர்களாகிய பள்ளர்கள், தங்களின் வரலாறை மீட்டெடுக்கும் முயற்சியில் கை கோர்க்கும் ‘வேல்முருகன் வன்னியர், சீமான் நாடார், இயக்குனர் மணிவண்ணன் கள்ளர், ஈழ புலவர் காசி ஆனந்தன், புதுக் கோட்டை பாவாணன், கொங்கு மண்டல உ.தனி அரசு கவுண்டர்’ போன்ற தமிழ் பெரும் மக்கள், மீண்டும் இந்த மண்ணில் தமிழர் ஆட்சி நிறுவ இந்த கட்டுரை ஒரு சிறு துரும்பை கிள்ளி போடும்.

    * தாழ்ந்த சாதி, உயர்ந்த சாதி என்ற பத்தாம் பசலி பேதம் களைந்து, முக்குலத்தோர் உட்பட பலரும் தமிழராய் இணையும் காலம் கனியும்.

  148. //* நாயுடு,ரெட்டியார் போன்ற வடுக சாதிகளுடன் நெருங்கிய தொடர்புள்ள கள்ளர் சாதியினர் தங்களை ‘களப்பிரர்'(வடுகர்) வழித் தோன்றல்கள் என்று கூறிக் கொள்வதும், பிற்காலத்தில் அவர்கள் முருக வழிபாடு செய்யத் தொடங்கியதால் அவர்களும் தமிழர்களே என்று தேவநேய பாவாணர் கூறியவையும் சரியே என்பது இதில் இருந்து விளங்கும்.//

    இப்படி தேவநேய பாவாணர் சொல்லி இருக்கிறாரா? இல்லை உங்கள் திரிப்பா?

  149. //வடக்கே வன்னியன், தெற்க்கே தேவேந்திரன் என்ற அரசியல் அறைகூவல், அதையும் தாண்டி மரபணு ரீதியில் வலுப்பெற இந்த ஆய்வு உதவும்.//

    கிச்சு கிச்சு மூட்டி சிரிக்கவைக்காதிங்க… 1980ஹளின் முடிவில் ம்ருத்துவர் இராமதாஸ் “தெற்கே தேவர் வடக்கே வன்னியர்” என இட்ட கோசமும்..நீயும் நானும் ஓன்றா என கிளம்பிய எதிர்ப்பே பின்னாளில் ஜான்பாண்டியனை தனது கட்சியில் பொதுச்செயலாளர் ஆக்கியதும் பின் நீக்கியதும் பொதுசனம் அறிந்ததே..!

    ஒரு மனுசம் உயிருடன் இருக்கும்போதே அவர் சொன்ன வசனத்தையும் வரலாறையும் மாற்றிச்சொன்னால் எப்படி…

    திரிப்புநில வேந்தன் என்று பெயர் வைத்துக்கொள்ளுங்கள்.

  150. ஏம்ப்பா வினவு,
    இப்பத்தான் முக்குலத்தோர் மூணு செஞ்சுரி கமண்ட் போட்டு முடிச்சாங்க (?). அதுக்குள்ள அத்வைதத்துக்குள்ள எறங்கி அடுத்த கச்சேரிய ஆரம்பிச்சுட்ட. கொஞ்சம் கேப் கொடுக்க கூடாதா? சரி, அத்வைத கமண்ட் பாக்ஸ் மூடி இருக்கு. தெறந்து உடு. தாரை தப்பட்டை கிழிந்து தொங்கட்டும்.

  151. அத்வைதத்திற்கு அர்த்தம் தெரியாதவங்க எல்லாம் அதைப் பற்றி கவிதை எழுதுறாங்க. பங்குச் சந்தைக்கும் இந்து மதத்திற்கும் என்ன சம்பந்தம்?

    பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே நீயே கேள்.

    • perumal kallan, unakku rendukkum ulla thodarbu theriyalainu sollu. illainu sollatha…

      lakshmi, kuberan, vengadachalapathi etc nu panam kudukura saami unga mathathulathan irukku. athrypola kaasa mithicha atha thottu kumbdrathu ana dalithukala eri mithikarathum unga mathathulathan irukku.

      Parama Pitha enna soldraruna, oruvan panathirkkum iraivanukkum orey neraththil oozhiyam seiya mudiyathunu.

        • apart from necessary properties and fund to run the institution of Church, all other fund should be used to serve people. Vatican’s stance on this is really shameful. But again, I am not attacking the art/architecture part, be it Taj Mahal or Meenakshi temple or Sistine chapel. But golden crown for pope, their extravagant lifestyle etc should go. New pope Francis seems to have reduced this. But have to wait and see his progress before coming to a conclusion.

  152. வேங்கையா இருங்க,

    உங்க கேள்விகளுக்கு வந்து பதில் போடுறேன்.

  153. Atlast you guys showing your moderate face which abuse everone all the time. I knew it and that why Im simply reading your useless words always instead of replying & blame myself worthless timepass.

    Hope all will fine else ruin.

    God bless you or urself bless all.

  154. அடுத்த முறை ஜெயந்திகளுக்கு அல்லது அத்தினங்களுக்கு எந்த வன்முறையும் இருக்காதென்பது என் அபிப்பிராயம்.மோதவிட்டு இலாபமடையும் நரிகளுக்கு இனித் தோல்வியே.இப்படி ஒரு விவாதமேடைக்கு சமூகங்கள் வந்து விவாதிக்கும் போது தான் இருக்கின்ற பகை தணியும் அல்லது இல்லாது போகும்.இக்கட்டுரை மூலம்,வாசகர் எழுதிய கருத்துக்கள் மூலம் பகைமையின் மூர்க்கம் குறைந்திருக்கிறது.அது இனி தேவையும் இல்லாதது. இனி தமிழ் நாட்டில் தமிழர் ராஜ்யத்தைக் கட்டிஎழுப்புங்கள்.வினாவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

  155. //தாழ்த்தப்பட்டவங்களுக்கு இடஒதுக்கீடு பற்றி என்ன நினைகிறீங்க — அது எப்படிங்க ஞாயம் அவங்களுக்கு மட்டும் சலுகைகளா. எல்லாருக்கும் சமமா தான் இருக்கனும் இப்படி பிரிக்க கூடாது.//

    வல்லவமாறன்,

    தலித்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பது அனைத்துச் சாதிகளும்தான். ஏதோ தேவர்கள் மட்டும்தான் அப்படி நடத்துவதைப் போல சொல்கிறீர்கள்.

  156. //அந்த விடுதலை வேங்கைகள் சாதிகளை கடந்து மக்களையும் மண்ணின் விடுதலையையும் நேசித்த அதற்காக உயிரையும் தியாகம் செய்த மாவீரர்கள் மருது பாண்டியர்களை காட்டிக் கொடுத்த கௌரி வல்லப உடையணத்தேவன் உங்க ஆண்ட பரம்பரைல சேத்தியா இல்லையா பெருமாளு.//

    வேங்கையன்,

    ஒருத்தன் நல்லவனா இருந்தாலும் கெட்டவனா இருந்தாலும். ஆட்சி செய்தவன் ஆண்டவன்தான். அவன் பரம்பரையும் ஆண்ட பரம்பரைதான். இன்னமும் அவர்கள் ஆட்சி செய்வதாக நீங்களே சொல்கிறீர்களே?

  157. //அப்படி வெளியில் வந்ததை சாப்பாட்டு இலையில�¯
    வைத்துக்கொண்டே உணவையும் சாப்பிடுவோம் என்று நீங்கள் அடம் பிடிக்கிறீர்களே அதைத்தான் தவறு என்கிறோம். நான் சாப்பிடும் இலையில் வைத்துக் கொண்டும் சாப்பிடுவேன். உணவிற்கு அதை தொட்டுக்கொண்டும் சாப்பிடுவேன் என்று நீங்கள் அடம் பிடித்தால் அது உங்கள் இஷ்டம்.//

    ஐயா தமிழ்,

    முதலில் மலத்தை விட்டு வெளியே வாருங்கள்.

    • அய்யா பெ. தே.

      நான் சொன்னது உங்களுக்குத் தான். நீங்கள் தந்த பிளாக் ஸ்பாட்டில் நீங்கள் மெத்தபடித்தவர், வீராதி வீரர், சூராதி சூரர் என்று எழுதியிருக்கிறீர்கள். இதுகூட உங்களுக்கு புரியவில்லையா? நான் உங்களை அதைவிட்டு வெளியில் வாருங்கள் என்று சொல்கிறேன். நீங்களோ அதிலேயே புரண்டு கொண்டு என்னை வெளியில் வாருங்கள் என்று சொல்கிறீர்கள்.

  158. //திரு பெருமாள் அவர்களே, 2000 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் இடம், புதைக்கும் இடம் போன்றவற்றில் ஓதுக்கி வைக்க பட்டிருக்கும் எங்களுக்கு உரிமை வேண்டும் என கேட்கிறோம்.//

    வல்லவமாறன்,

    ஏதோ நாங்கள்தான் உங்கள் உரிமைகளைப் பறித்து வைத்துக் கொண்டிருப்பது போல பேசுகிறீர்கள். நீங்கள் உங்கள் உரிமைகளுக்காக தாராளமாக போராடலாம். அதில் தப்பில்லை.

    ஆனால் எங்களை எதிர்த்துப் போராடுவதுதான் உங்கள் உரிமை என்று நினைத்தால் நாங்களும் உங்களை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும்.

  159. //”Whoever compels any person, on the ground of “untouchability”, to do any scavenging or sweeping or to remove any carcass or to flay any animal or to remove the umbilical cord or to do any other job of a similar nature, shall be deemed to have enforced a disability arising out of “untouchability'” – The Protection of Civil Rights (PCR)//

    வல்லவமாறன்,

    அதை மலத்தை அள்ள வைத்தவர்களிடம் சொல்லுங்கள்.

    அதோடு இந்த வன்கொடுமைச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை பற்றி கொஞ்சம் பேசுங்கள்.

  160. //பலமுறை வினவு தெளிவுபடுத்தியிருக்கிறது. எல்லா சாதிகளிலும் மதங்களிலும் நல்லவர்களான உழைக்கும் மக்களும் இருக்கிறார்கள், பெருமாளு போன்ற சாதி…..களும் இருக்கிறர்கள் என்று. உழைக்கும் மக்களை அணிதிரட்டி சாதி வெறியர்களை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவதுதான் எங்கள் நோக்கம் என்று. எத்தனை தடவைதான் எழுதுவது,//

    பஹூத்தறிவாளி சந்தானம்,

    அதாவது தலித் சாதிவெறி இருந்தாலும் நாங்கள் எழுத மாட்டோம். மற்றபடி மற்ற சாதிகளை ஒட்டுமொத்தமாக எழுதுவோம். என்று அடம்பிடித்தால் நாங்கள் ஒன்றும் சொல்லப் போவதில்லை.

    ஆனால் அதற்கான பலனையும் அறுவடை செய்தே ஆக வேண்டும்.

  161. //பெருமாள் என்ன சொல்கிறார் என்றால் ” நாங்கள் சாதி வெறி உள்ளவர்கள்தான். சாதி வெறி பிடித்து பல குற்றங்களை செய்தவர்கள்தான். அதிலெல்லாம் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் எங்களை மட்டும் விமரிசிக்கும் வினவு தலித் மக்களின் சாதிவெறி குறித்து மட்டும் ஏன் விமரிசப்பதில்லை”.

    நல்லது, ஒருவழியாக நீங்கள் சாதி வெறியர்கள்தான், குற்றவாளிகள்தான் என்பதை ஒத்துக் கொண்டதற்கு நன்றி. என்னென்ன குற்றம் செய்தீர்கள் என்பதை பட்டியிலிடுங்கள், ஜனநாயக முறைப்படி தண்டனை வாங்கித் தரும் வழியைப் பார்ப்போம்.//

    ஐயா வினவு

    தலித்கள் எல்லாரும் உத்தமபுத்திரர்கள் என்பதுதான் உங்கள் நிலை. நல்லா நடத்துங்க.

  162. //பெருமாளு, மதுரையிலோ இல்லை மணப்பாறையிலோ, மாங்காட்டிலோ, மணற்மேல் குறிச்சியிலோ எங்கள் மாதிரி சாதாரண ஆளுங்கள இன்றும் போய் வருகிறார்கள். யாரும் குண்டு வீசுவதில்லை. உங்களை மட்டும் தெரிவு செய்து குண்டு வீசக் காரணம் என்ன? என்ன தப்பு செய்தீர்கள்?//

    ஐயா வினவு,

    இதற்குப் பெயர்தான் தலித் சாதிவெறி

  163. வல்லவமாறன்,

    //இந்த சமூகத்தில் மனிதனாக வாழும் உரிமைக்க போராடுகிறோம். நாங்களும் மனிதர்களாக மதிக்க பட வேண்டும் என்று போராடுகிறோம், தலித் என்றாலும் வீடு வாடகை குடுக்கும் நிலைமை வர வேண்டும் என்று போராடுகிறோம்.//

    நல்லா போராடுங்க.

    //இந்த சமூகத்தில் எந்த உரிமை தங்களிடம் பறிக்க படுகிறது என்று நீங்கள் கருதுகிறேர்கள் என்று புரிய வில்லை. “தாங்கள் என்றால் அணைத்து அதிக்க சாதி ஹிந்துக்கள் (தலித் அல்லாதோர் பேரவையை சேர்ந்தவர்கள்)”//

    எங்களைப் பற்றி தவறாக பிரச்சாரம் செய்வதே எங்கள் கௌரவத்தை பறிப்பதாக இல்லையா? இந்த மாதிரி விஷமப் பிரச்சாரம் சமுதாயத்திற்கு நன்மை செய்யுமா?

    //தங்களின் எந்த உரிமை பறிக்க பட்டு எங்களிடம் குடுக்க படுகின்றது என்று புரிய வில்லை – இதை ஓரு விளக்கமாக கேட்க வில்லை. எதை குறிப்பிட்டு சொன்னிர்கள் என்று புரிய வில்லை.//

    எங்கள் உரிமை பறிக்கப்பட்டு உங்களிடம் கொடுக்கப்படுவதாகக் சொல்லவில்லை. எங்களை தலித்களின் எதிரிகள் என்று சித்தரிப்பதன் மூலம் வினவு போன்றோர் வயிறு வளர்க்கலாம். மேலும் சாதிக் கலவரங்களை உருவாக்கலாம். சாதிவெறியை அதிகரிக்கலாம்.

    //என்னை வசை பாடினாலும் சிறிது நாகரிகத்துடன் (whether in this forum or to any other friends of you) வசை பாடுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.//

    நான் என்ன வசை பாடினதாகச் சொல்கிறீர்கள்?

  164. //ரெம்பத்தான் புத்திசாலித்தனம்னு நெனப்பா..நீங்க மருது பாண்டியர்களை கொண்டாடுறீங்களா உடயணனை கொண்டாடுறீங்களா என்றா கேட்டேன்.நா கேட்டது 150 வருஷமா சிவகங்கை ஜமீனை ஆண்ட இப்பவும் அதன் சொத்துக்களை அனுபவிக்கும் துரோக கும்பல் உங்க ஆண்ட பரம்பரையில சேருமா சேராதா.அதுக்கு என்ன பதில்.//

    வேங்கையன்,

    அவங்களும் ஆண்ட பரம்பரைகள்தான். இன்னமும் ஆட்சி செய்து வருகிறார்களே? ஆட்சி செய்பவர்கள் நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் இருக்கலாம். இருந்தாலும் அவர்கள் ஆண்டவர்களே.

    நல்லவர்களை உலகம் கொண்டாடும். கெட்டவர்களை கொண்டாடாது.

  165. //தேவர் சாதியினர் அனைவரும் சாதி வெறி பிடித்தவர்கள் என்று யாரும் சொல்லல.ஆனால் மேலவளவுல முருகேசனை வெட்டிக் கொன்ற மிருகங்களை,ஊஞ்சனையில் தாழ்த்தப்பட்ட மக்களை வேட்டையாடிய மிருகங்களை,கண்டதேவியில தேர் வடத்தை பள்ளு பறைஎல்லாம் தொட கூடாதுன்னு ஆட்டம் போடுற அயோக்கியனுங்களை இன்னிக்கும் மதுரை ராமநாதபுரம் சிவகங்கை மாவட்டங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனிக்குவளையில்தான
    டீ கொடுக்கனுனு வெறியாட்டம் போடும் அயோக்கியனுங்களை சாதி வெறியர்கள் என்று சொல்வதில் என்ன தப்பு.//

    வேங்கையன் நிச்சயமாக அவர்கள் எல்லாரும் சாதிவெறியர்கள்தான். அவர்கள் காட்டும் தீண்டாமை வெறியை எழுத்தில் காட்டுவதும் சாதிவெறியே.

    அதைத்தான் வினவும் நீங்களும் செய்து வருகிறீர்கள்.

    • //வேங்கையன் நிச்சயமாக அவர்கள் எல்லாரும் சாதிவெறியர்கள்தான். அவர்கள் காட்டும் தீண்டாமை வெறியை எழுத்தில் காட்டுவதும் சாதிவெறியே// எழுத்தில் காட்டாமல்.,
      நீங்கள் உங்களது blog, website, etc., வில் இதை போல் தீண்டாமை கொடுமை பதிவு செய்து இருக்கின்றேர்கள..
      சும்மா எதாவது reply பண்ணனும் என்பதற்கு எதாவது உளற வேண்டாம்….
      உங்க reply அனைத்திலும் உள்ள சாராம்சம் “நீங்க செய்ய வேண்டியது தானே, நீங்க செஞ்ச நாங்களும் செய்றோம், என் பட்டன் முப்ப்டன் பெருமை என்ன வென்று தெரியுமா, நாங்க மட்டுமா தீண்டாமை செய்றோம், மத்தவன கேக்க மாட்டேங்க நாங்க செஞ்ச மட்டும் தேவர் சாதி வெறி நு எழுதுவேங்க, எங்களோட ரத்தம் என்ன ரதம் தெரியுமா , நல்ல போராடுங்க (என்ற எகத்தாளம்), மக்களே ஓன்னு சேருங்க நம்ம பட்டன் முப்பாட்டன், etc., etc., , இட ஒதுக்க்கீடு உங்களுக்கு எதுக்கு ( இட ஒதுக்க்கீடு தொடர்பான உங்களது பார்வை உங்களது மறு மொழிகள் அனைத்திலும் பார்த்தால் தெரியும், இதற்கும் எதாவது ஹி ஹி ஹி போன்ற மறுமொழி வரும் என்று எதிர்பார்கிறேன்).

      கடைசி வரைக்கும் நீங்க எதாவது ஓரு தலித்தை மனுஷனா பார்போம் என்று சும்மா விளையாட்டுக்கு கூட சொல்லவில்லை என்பது ஓரு புறம் இருக்கட்டும்.

      நீங்க உங்க ஜாதிய பத்தி பெருமை படுறது ஓன்னும் தப்பு இல்லை, அதுக்காக தலித் என்றல் மனுஷனே இல்லை (என்பது போன்ற வாதங்கள்) என்ற நினைப்பு சரியா என்று நீங்கள் படித்த படிப்பின் கண் கொண்டு (ஜாதிய கண்ணை ஓரு 10 விநாடி மறைத்து ) பாருங்கள் please

      என்னை வசை பாடினாலும் சிறிது நாகரிகத்துடன் (whether in this forum or to any other friends of you) வசை பாடுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். ( உங்களது மறு மொழி அனைத்திலும் மனிதத்துவம் கீலோங்கி கோபம் மேலோங்கி நிற்கிறது, ஏகதாள மறுமொழிகளின் தாக்கம் அதிகபடியாக உள்ளது. அதனால் தான் இந்த மறுமொழி பதிவு செய்தேன்)

      இந்த மறுமொழி தங்களை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் (ஹி ஹி ஹி என்று மறுமொழி கூறினாலும் மன்னிப்பு கேட்பது எனது கடமை, மனிபதும் மன்னிக்காமல் இருப்பது தங்கள் உரிமை. பிழை இருப்பின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எனது பெற்றோர்கள் சொல்லிகுடுதர்கள், எனது பட்டன் பூட்டன் பற்றி எனக்கு தெரியாது)

    • பெருமாளு

      //ரெம்பத்தான் புத்திசாலித்தனம்னு நெனப்பா..நீங்க மருது பாண்டியர்களை கொண்டாடுறீங்களா உடயணனை கொண்டாடுறீங்களா என்றா கேட்டேன்.நா கேட்டது 150 வருஷமா சிவகங்கை ஜமீனை ஆண்ட இப்பவும் அதன் சொத்துக்களை அனுபவிக்கும் துரோக கும்பல் உங்க ஆண்ட பரம்பரையில சேருமா சேராதா.அதுக்கு என்ன பதில்.//

      இந்த கேள்விக்கு உங்கள் பதில்

      \\அவங்களும் ஆண்ட பரம்பரைகள்தான். இன்னமும் ஆட்சி செய்து வருகிறார்களே? ஆட்சி செய்பவர்கள் நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் இருக்கலாம். இருந்தாலும் அவர்கள் ஆண்டவர்களே.//

      //தேவர் சாதியினர் அனைவரும் சாதி வெறி பிடித்தவர்கள் என்று யாரும் சொல்லல.ஆனால் மேலவளவுல முருகேசனை வெட்டிக் கொன்ற மிருகங்களை,ஊஞ்சனையில் தாழ்த்தப்பட்ட மக்களை வேட்டையாடிய மிருகங்களை,கண்டதேவியில தேர் வடத்தை பள்ளு பறைஎல்லாம் தொட கூடாதுன்னு ஆட்டம் போடுற அயோக்கியனுங்களை இன்னிக்கும் மதுரை ராமநாதபுரம் சிவகங்கை மாவட்டங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனிக்குவளையில்தான
      டீ கொடுக்கனுனு வெறியாட்டம் போடும் அயோக்கியனுங்களை சாதி வெறியர்கள் என்று சொல்வதில் என்ன தப்பு.//

      இந்த கேள்விக்கு உங்கள் பதில்

      வேங்கையன் நிச்சயமாக அவர்கள் எல்லாரும் சாதிவெறியர்கள்தான். அவர்கள் காட்டும் தீண்டாமை வெறியை எழுத்தில் காட்டுவதும் சாதிவெறியே.

      நல்லது.சாதி அபிமானத்தை மீறி இன்னும் உங்கள் மனதில் நியாய உணர்ச்சி இருக்கிறது நன்றி. ஆண்ட பரம்பரையிலும் அயோக்கியர்களும் துரோகிகளும் இடம் பெறுகிறார்கள்.நீங்களே சொல்றீங்க ஆகவே ஆண்ட பரம்பரை என்று பெத்த பெருமை பேசுவதில் அர்த்தமே இல்லை,தேவர் சாதியிலும் வெறியர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களின் தீண்டாமையை எதிர்த்து போராட வேண்டியது மற்ற தேவர் சாதியினருக்கு கடமை.ஆகவே உங்கள் இடத்தை ஒழுங்கமைத்து விட்டு தேவர் சாதி வெறி என எழுதாதேன்னு எங்களுக்கு ஆணையிடலாம். அது வரை அதற்கு உங்களிடம் உரிமை இல்லை.
      அப்புறம் ஒரு விவரப் பிழை.சிவகங்கை புதுக்கோட்டை ராமநாதபுரம் துரோக கும்பல் இன்னமும் ஆட்சி செய்து வருவதாக கற்பனை உலகில் சஞ்சரிக்க வேணாம்.அவர்கள் ஆட்சி வெள்ளைக்காரன் காலத்தோட முடிஞ்சு போச்சு.இப்படியான வீண் கற்பனைகள்தான் உங்களை ஆண்ட பரம்பரை மயக்கத்தில் ஆழ்த்தி மூளையை மழுங்கடிக்கிறது.

  166. //உங்க கட்சியில் மலசிக்கல் மாத்திரை இருந்தால் உங்கள் தோழர்களுக்கு வாங்கி கொடுங்கள்..
    பாவம் அவர்கள் “மலம்” ‘மலம்’ என கூக்குரல் இடுவதை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.//

    தியாகு,

    மலத்தைப் பற்றி பேசாவிட்டால் அவர் பகுத்தறிவாளர் ஆக முடியாது.

  167. //@HisFeet
    Comment:
    perumal kallan, unakku rendukkum ulla thodarbu theriyalainu sollu. illainu sollatha…

    lakshmi, kuberan, vengadachalapathi etc nu panam kudukura saami unga mathathulathan irukku. athrypola kaasa mithicha atha thottu kumbdrathu ana dalithukala eri mithikarathum unga mathathulathan irukku.

    Parama Pitha enna soldraruna, oruvan panathirkkum iraivanukkum orey neraththil oozhiyam seiya mudiyathunu.//

    ஐயா அவன்பாதம்,

    முதல்ல இந்து மதம்னா என்ன? அது என்ன சொன்னது என்று தெரிந்து கொண்டு பேசுங்கள்.

    எவனோ எதுவோ சொன்னான்னு நீங்களும் அதைச் சொல்லாதீங்க.

    இந்து மதம் தலித்தை ஏறி மிதிக்கவும் சொல்லல. ஏறாம மிதிக்கவும் சொல்லல.

    மனு சொன்னதற்கெல்லாம் இந்து மதம் பொறுப்பாகாது. மனுவை நீங்கள் தலையில் தூக்கி வைத்தால் அதற்கும் இந்து மதம் பொறுப்பாகாது.

  168. //@HisFeet
    Comment:
    //எதற்காக ஒன்றுக்கும் உதவாத டம்மிகளான எங்களிடம் சவால் விடுக்கிறீர்கள்//

    appo inimel un peru premal thevan illa… perumal dummythan…

    oru vazhiya othukkitaruppa!//

    ஐயா அவன்பாதம்,

    தேவன்ற பேருல அவ்வளவு வெறினு சொல்லுங்க.

  169. //@HisFeet
    Comment:
    apart from necessary properties and fund to run the institution of Church, all other fund should be used to serve people. Vatican’s stance on this is really shameful. But again, I am not attacking the art/architecture part, be it Taj Mahal or Meenakshi temple or Sistine chapel. But golden crown for pope, their extravagant lifestyle etc should go. New pope Francis seems to have reduced this. But have to wait and see his progress before coming to a conclusion.//

    ஹாஹாஹா

    அவன்பாதம் பெரிய கலாரசிகரா இருப்பாரு போலிருக்காரு. ஆனாலும் கிறிஸ்தவ போப்பிடம் ரொம்பத்தான் எதிர்பார்க்கிறாரு.

  170. //அடுத்த முறை ஜெயந்திகளுக்கு அல்லது அத்தினங்களுக்கு எந்த வன்முறையும் இருக்காதென்பது என் அபிப்பிராயம்.மோதவிட்டு இலாபமடையும் நரிகளுக்கு இனித் தோல்வியே.இப்படி ஒரு விவாதமேடைக்கு சமூகங்கள் வந்து விவாதிக்கும் போது தான் இருக்கின்ற பகை தணியும் அல்லது இல்லாது போகும்.இக்கட்டுரை மூலம்,வாசகர் எழுதிய கருத்துக்கள் மூலம் பகைமையின் மூர்க்கம் குறைந்திருக்கிறது.அது இனி தேவை
    யும் இல்லாதது. இனி தமிழ் நாட்டில் தமிழர் ராஜ்யத்தைக் கட்டிஎழுப்புங்கள்.வினாவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.//

    ஐயா குமரன் பத்மநாதன்,

    நீங்கள் குழப்பத்தில் இருக்கிறீர்கள். ஒருபக்கம் குருபூஜை அமைதியாக நடக்கட்டும் என்கிறீர்கள். அதேவேளையில் தேவர் சாதிவெறியர் என்று கட்டுரை எழுதிய வினவுவை பாராட்டுகிறீர்கள்.

    இதுபோன்ற கட்டுரைகள் எழுதினால் மோசமான சமூக மோதல்கள் தொடரும். ஒருபோதும் நிற்காது.

    அதற்காக கச்சிதமாக வேலை செய்து வரும் இந்த இணையங்களை பாராட்ட வேண்டும்.

  171. ஐயா வினவு,

    நீங்க சொன்னமாதிரியே,

    நாங்கள் சாதிவெறியர்கள் என்று நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள். அதை அனைத்து சாதி மக்களும் நம்பி விட்டார்கள். நாங்களும் ஒப்புக்கொண்டோம்.

    நீங்கள் தண்டனை வாங்கித்தர முயற்சிக்கிறீர்கள். ஆனால் முடியவில்லை.

    அப்போது என்றால் என்ன செய்வீர்கள்?

  172. ஐயா வேங்கையன்,

    //எழுத்தில் காட்டாமல்.,
    நீங்கள் உங்களது blog, website, etc., வில் இதை போல் தீண்டாமை கொடுமை பதிவு செய்து இருக்கின்றேர்கள..//

    தாரளமாக காட்டுங்கள். அதுதான் உங்கள் தலித் வெறியை காட்டுகிறது. நான் சொல்வது அமைப்பு ரீதியான எழுத்துக்களை மட்டும். படித்த தலித்கள் ஒன்று சேர்ந்து ஒரு சமுதாயத்திற்கு எதிராக பரப்பப்படும் திட்டமிட்ட துவேஷத்தைப் பற்றி.

    மற்றபடி சில்லறைகளாக ஆயிரக்கணக்கில் எழுதும் தலித்களைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை.

    //சும்மா எதாவது reply பண்ணனும் என்பதற்கு எதாவது உளற வேண்டாம்….
    உங்க reply அனைத்திலும் உள்ள சாராம்சம் “நீங்க செய்ய வேண்டியது தானே, நீங்க செஞ்ச நாங்களும் செய்றோம், என் பட்டன் முப்ப்டன் பெருமை என்ன வென்று தெரியுமா, நாங்க மட்டுமா தீண்டாமை செய்றோம், மத்தவன கேக்க மாட்டேங்க நாங்க செஞ்ச மட்டும் தேவர் சாதி வெறி நு எழுதுவேங்க, எங்களோட ரத்தம் என்ன ரதம் தெரியுமா , நல்ல போராடுங்க (என்ற எகத்தாளம்), மக்களே ஓன்னு சேருங்க நம்ம பட்டன் முப்பாட்டன், etc., etc//

    அதாவது எங்கள் பெருமைகள் உங்களுக்கு சாதிவெறியாகத் தெரிகின்றன என்று சொல்லுங்கள்.

    // ., , இட ஒதுக்க்கீடு உங்களுக்கு எதுக்கு ( இட ஒதுக்க்கீடு தொடர்பான உங்களது பார்வை உங்களது மறு மொழிகள் அனைத்திலும் பார்த்தால் தெரியும், இதற்கும் எதாவது ஹி ஹி ஹி போன்ற மறுமொழி வரும் என்று எதிர்பார்கிறேன்).//

    இட ஒதுக்கீட்டை சாதி அடிப்படையில் பெறும் நீங்கள் அதே சாதிக்கெதிராக கச்சை கட்டுவதுதான் ஆச்சரியம். உண்மையில் உங்களுக்கு நன்மை செய்யும் சாதிக் கட்டமைப்பை நீங்கள் தலையில் தூக்கி வைத்து ஆட வேண்டும். ஆனால் இரட்டை வேடம் போடும் நீங்கள் ஒருபக்கம் சாதியின் பெயரால் சலுகை பெற்றுக் கொண்டே மறுபுறம் சாதியைச் சாடுகிறீர்கள். முற்போக்குவாதிகளின் செயல்கள் இதுவே. வாழ்க.

    //கடைசி வரைக்கும் நீங்க எதாவது ஓரு தலித்தை மனுஷனா பார்போம் என்று சும்மா விளையாட்டுக்கு கூட சொல்லவில்லை என்பது ஓரு புறம் இருக்கட்டும்.//

    உங்களுக்கு என்ன தெரியும்? ஏராளமான தலித்களும் தேவர்களும் சகோதரர்களாக, நண்பர்களாக பழகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களையும் பிரிக்கும் வேலையைத்தான் நீங்கள் கனகச்சிதமாக செய்கிறீர்கள்.

    //நீங்க உங்க ஜாதிய பத்தி பெருமை படுறது ஓன்னும் தப்பு இல்லை, அதுக்காக தலித் என்றல் மனுஷனே இல்லை (என்பது போன்ற வாதங்கள்) என்ற நினைப்பு சரியா என்று நீங்கள் படித்த படிப்பின் கண் கொண்டு (ஜாதிய கண்ணை ஓரு 10 விநாடி மறைத்து ) பாருங்கள் please//

    தலித் மனிதனே இல்லை என்று நான் ஒருபோதும் சொன்னதில்லை. ஆனால் பெரும்பான்மை சமுதாயம் அந்த நிலையில்தான் தலித்களை வைத்துள்ளது என்பதை அடிக்கடி குறிப்பிடுகிறேன்.

    //என்னை வசை பாடினாலும் சிறிது நாகரிகத்துடன் (whether in this forum or to any other friends of you) வசை பாடுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். ( உங்களது மறு மொழி அனைத்திலும் மனிதத்துவம் கீலோங்கி கோபம் மேலோங்கி நிற்கிறது, ஏகதாள மறுமொழிகளின் தாக்கம் அதிகபடியாக உள்ளது. அதனால் தான் இந்த மறுமொழி பதிவு செய்தேன்)//

    பகுத்தறிவு என்ற பெயரில் முட்டாள்தனங்களை மேற்கொள்ளும் கோபம் வரத்தான் செய்யும்.

    //இந்த மறுமொழி தங்களை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் (ஹி ஹி ஹி என்று மறுமொழி கூறினாலும் மன்னிப்பு கேட்பது எனது கடமை, மனிபதும் மன்னிக்காமல் இருப்பது தங்கள் உரிமை. பிழை இருப்பின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எனது பெற்றோர்கள் சொல்லிகுடுதர்கள், எனது பட்டன் பூட்டன் பற்றி எனக்கு தெரியாது)//

    எங்கள் பாட்டன் முப்பாட்டன் பகைவனை போர்முனையில் சந்திக்கும் குணத்தையும், எதற்கும் அஞ்சாத துணிவையும், குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனையை ஏற்கும் பக்குவத்தையும், கடமை தவறும்போது உயிர் நீத்தலையும் கற்றுக் கொடுத்துள்ளனர்.

  173. ஏதோ, தேவர்கள்தான் தலித்களை அடிமைப் படுத்தி வைத்திருந்ததாகவும்,
    அவர்களின் பெண்களை பாலியல் அடிமைகளாக நடத்தி வந்ததாகவும், தேவர்களை எதிரியாக சித்தரித்து பிரச்சாரம் செய்யும் முற்போக்குத் தலித்கள், அவர்களை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு ரகசியத் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். காலப்போக்கில் அவை அம்பலத்திற்கு வரும்.

    தலித்களின் பிரச்சாரத்திற்கு தேவர்கள் பொறுப்பாக மாட்டார்கள். அதேவேளையில் தேவர்கள் பாதிக்கப்படும்போது அதனை தடுக்க தக்க முயற்சிகளைச் செய்வார்கள். இதுபோன்ற பிரச்சாரங்கள் பெரும் சமூக மோதல்களுக்கு வழிவகுக்கும். அதில் வினவுக்கும் பங்கு உண்டு. வாழ்க வினவுவின் சேவை.

  174. //தாரளமாக காட்டுங்கள். அதுதான் உங்கள் தலித் வெறியை காட்டுகிறது. நான் சொல்வது அமைப்பு ரீதியான எழுத்துக்களை மட்டும். படித்த தலித்கள் ஒன்று சேர்ந்து ஒரு சமுதாயத்திற்கு எதிராக பரப்பப்படும் திட்டமிட்ட துவேஷத்தைப் பற்றி. மற்றபடி சில்லறைகளாக ஆயிரக்கணக்கில் எழுதும் தலித்களைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை//
    இது என்னக்கு சத்தியமாக புரியவில்லை. எத்தனயோ தீண்டாமை கொடுமை (உங்கள் பார்வயில் “எங்களை போன்ற அதிக்க ஜாதியின் உரிமை”) நடந்து உள்ளது நடந்து கொண்டு இருகின்றது, (அதை தங்களை போன்ற எண்ணம் கொண்ட சிலர் பெருமையாக பேசிக்கொண்டும் ஆதரித்து கொண்டும் இருகின்றனர்) அந்த கொடுமை பற்றி எதாவது எழுதி உள்ளீர்களா (நீங்கள் பத்திரிகை யாளர் என்று நீங்களே சொன்னதாய் ஞாபகம்). இதற்கு நீங்கள் எழுத போகும் மறு மொழி “நாங்க மட்டுமா தீண்டாமை செய்றோம், மத்தவன கேக்க மாட்டேங்க நாங்க செஞ்ச மட்டும் தேவர் சாதி வெறி நு எழுதுவேங்க”.
    இதே கொடுமை அல்லது போலியாக யாராவது வன்கொடுமை சட்டத்தை தவறாக பயன்படுத்தி இருந்தால் இல்லை எதாவது தலித் மனித நேயம் அற்று (தீண்டாமை) எதாவது செய்திருந்தால் தங்கள் கண்டனத்தை பதிவு செய்வதற்கு முழு உரிமையும் உள்ளது (ஜன நாயக நாட்டில்) ஏன் என்றல் நீங்களும் ஓரு பத்திரிக்கை யாளர் (நீங்களே சொன்னதை ஞாபகம்).
    அதற்காக தீண்டாமை கொடுமை யாராவது செய்திருந்து அதை ஊடகங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதை “அவர்கள் காட்டும் தீண்டாமை வெறியை எழுத்தில் காட்டுவதும் சாதிவெறியே” என்று சொன்னால் நீங்கள் உண்மையாகவே பத்திரிகையாளர்!
    நீங்களும் தீண்டாமை கொடுமையை ஆதரிப்பவராக உணர முடிகிறது.
    உங்களது மறு மொழி 166 “நல்ல போராடுங்க” இதற்கு என்ன அர்த்தம் என்று நீங்கள் சொல்ல முடயுமா – இதில் வேறு “தலித் மனிதனே இல்லை என்று நான் ஒருபோதும் சொன்னதில்லை”. மனிதாக மதிக்க வேண்டும் என்று போராடுகிறோம் என்று சொன்னால் – “நல்ல போராடுங்க” என்று மறு மொழி போடும் நீங்கள், பள்ளி, கல்லூரி, வேலை செயும் இடம் இவற்றில் எந்த அளவிற்கு தீண்டாமை நிலை நாட்டி இருப்பெர்கள் என்று புரிகிறது.
    உங்களது பாணியில் ” படித்த ஆதிக்க ஜாதியினர் சேர்ந்து ஒரு சமுதாயத்திற்கு எதிராக பரப்பப்படும் திட்டமிட்ட துவேஷத்தைப் பற்றி நீங்களும் தான் எழுதிறேங்க” (ஆதிக்க ஜாதியினர் சேர்ந்து “தலித் அல்லாதோர் பாதுகாப்பு பேரவை நிறுவி உள்ளீர்கள், நான் குறிபிடுவது உங்கள் பெர்யருக்கு பின்னால் அடையாளமாக காட்ட பட்டிருக்கும் இருக்கும் சமூகம் மட்டும் இல்லை, இல்லை என்றல் உங்களது வழக்கமான மறுமொழி “நாங்க மட்டுமா செய்றோம்” பதிவு செய்து விடுவர்கள்). நானும் சில ஊடகங்களில் பார்த்திருக்கிறேன் சில பேர் மிகவும் மற்ற ஜாதியினரை தரம் தாழ்த்தி பதிவு செய்கின்றனர்.

    //அதாவது எங்கள் பெருமைகள் உங்களுக்கு சாதிவெறியாகத் தெரிகின்றன என்று சொல்லுங்கள்// எந்த பதிவில் உங்களது ஜாதி பெருமை சாதி வெறியாக காட்ட பட்டுள்ளது என்று புரியவில்லை. பெருமை பேசுவதற்கு எல்லோருக்கும் உரிமை இருகின்றது. உங்களது அணைத்து பதிவுகளிலும் உள்ள சாராம்சம் என்ன என்று நீங்கள் படித்த படிப்பின் ( ) கண் கொண்டு (ஜாதிய கண்ணை ஓரு 10 விநாடி மறைத்து ) பாருங்கள் ப்ளீஸ். நீங்கள் உங்கள் இனத்தை பற்றி பெருமை கொள்ளுங்கள் அதில் எந்த ஜாதிய வெறியும் தெரிய வில்லை அதற்காக அதே ஜாதியை வைத்து மனிதனை மனிதன் கேவலமாக பார்க்க வேண்டும் என்ற சிந்தனை ஓட்டம் தப்பு என்று கூறுகிறேன். தையவு செய்து மனிதனாக பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

    //உங்களுக்கு என்ன தெரியும்? ஏராளமான தலித்களும் தேவர்களும் சகோதரர்களாக, நண்பர்களாக பழகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களையும் பிரிக்கும் வேலையைத்தான் நீங்கள் கனகச்சிதமாக செய்கிறீர்கள்//
    இத்தனை பின்னூட்டங்களில் நீங்கள் ஓரு முறை கூட அப்படி விளையாட்டுக்கு கூட சொல்லியதாய் நான் பார்கவில்லை அப்படி சொல்லி இருந்தால் இந்த கருத்திருக்கு நான் மனிப்பு கேட்டு கொள்ளுகிறேன். உங்களின் பின்னூட்டங்கள் புரிய வைக்கின்றது எந்த அளவிற்கு நீங்கள் (பெருமாள் தேவன்) நண்பர்களாய் பழகி உள்ளார் என்று. எனக்கு தெரிந்து “பசும்பொன்” ஐயா தனது சொத்துகளை தலித் இனத்தில் இருக்கும் ஓருவருக்கு குடுத்தார் என்று கேள்வி பட்டு உள்ளேன். எனது தனிப்பட கருத்து ” பசும்பொன்” ஐயா விடம் உள்ள சில தேசிய சிந்தனை இப்போது உள்ள எத்தனை “பெருமாள் தேவன், தியாகு, etc., விடம் உள்ளது என்று தெரிய வில்லை). எந்த வகையில் பிரிவனை ஏற்படுத்த படுகின்றது என்று புரிய வில்லை. மனிதனை மனிதனாக பார்க்க வேண்டும் என்றால் பிரிவினை ஏற்படுத்துவது என்ற பொருள் “நீங்கள் சொல்லி தான் தெரிகிறது”
    //தலித் மனிதனே இல்லை என்று நான் ஒருபோதும் சொன்னதில்லை. ஆனால் பெரும்பான்மை சமுதாயம் அந்த நிலையில்தான் தலித்களை வைத்துள்ளது என்பதை அடிக்கடி குறிப்பிடுகிறேன்//
    அதை மீட்க போராடுகிறோம் என்று சொன்னால் நீங்கள் குடுத்திருக்கும் மறுமொழி 161 ஓரு சான்று. Some one should feel ashamed of being a human like this. உங்களது சிந்தனை நீங்கள் இட்டிருக்கும் மறு மொழிகளில் நன்றாக புரிகிறது.
    //இட ஒதுக்கீட்டை சாதி அடிப்படையில் பெறும் நீங்கள் அதே சாதிக்கெதிராக கச்சை கட்டுவதுதான் ஆச்சரியம். உண்மையில் உங்களுக்கு நன்மை செய்யும் சாதிக் கட்டமைப்பை நீங்கள் தலையில் தூக்கி வைத்து ஆட வேண்டும். ஆனால் இரட்டை வேடம் போடும் நீங்கள் ஒருபக்கம் சாதியின் பெயரால் சலுகை பெற்றுக் கொண்டே மறுபுறம் சாதியைச் சாடுகிறீர்கள். முற்போக்குவாதிகளின் செயல்கள் இதுவே. வாழ்க//

    இது எனது தனிப்பட்ட கருத்து – சாதிக்கு எதிரி கச்சை கட்டுவது எனது நோக்கம் அல்ல. அதே சாதியின் பெயரால் நீங்கள் (ஆதிக்க ஜாதியினர் அனைவரும்) அவிழ்த்து விடும் கொடுமைக்கு எதிராய் கருத்தை பதிவு செய்கிறேன். உங்களுக்கு உங்க பாட்டன் பூட்டன் பெரிய சொத்து, எனக்கு இபொழுது படித்திருக்கும் படிப்பு எனக்கு பெருசு. நான் படித்திருக்கும் படிப்பு எனக்கு இட ஒதுக்க்கீடு மூலம் கிடைத்தது. அதே ஒதுக்க்கீடு மூலம் கிடைக்க பெற்றதை நீங்கள் கொச்சை படுத்தும் பொழுது. இட ஒதுக்க்கீடு எங்களுக்கு குடுத்து பெரிய தப்பு என்பது போல் பின்னூட்டம் இடும் உங்களுக்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். தங்களது அணைத்து மறுமொழியிலும் உள்ள சாராம்சம் இது தான் “இட ஒதுக்க்கீடு உங்களுக்கு எதுக்கு ( இட ஒதுக்க்கீடு தொடர்பான உங்களது பார்வை உங்களது மறு மொழிகள் அனைத்திலும் பார்த்தால் தெரியும், இதற்கும் எதாவது ஹி ஹி ஹி போன்ற மறுமொழி வரும் என்று எதிர்பார்கிறேன்)

    //பகுத்தறிவு என்ற பெயரில் முட்டாள்தனங்களை மேற்கொள்ளும் கோபம் வரத்தான் செய்யும்.//
    உதாரணம் :
    “மதுரையில் 13 கிராமங்கள் திண்டுகல்லில் 24 கிராமங்கள் சிவகங்கயையில் 15 கிராமங்கள் என 213 கிராமங்கலில் நிலவும் தீண்டாமை பாகுபாடுகளை எவிடன்ஸ் அமைப்பு ஆய்வு செய்ததுஇதில் 104 கிராமங்களில் இரட்டை குவளை இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.சில கிராமங்களில் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு கண்ணாடி குவளையும் தாழ்தப்பட்ட மக்களுக்குசில்வர் குவளையும், பிளாஸ்டிக் கப்பும் கொடுக்கபடுகிறது தென்தமிழகத்தில் 97 கிராமங்களில் பொது பாதையில் ஆதிதிராவிடர் சடலத்தை எடுத்து செல்ல முடியாது 153 கிராமங்களில் மாற்று சாதியினர் குடியிருப்பு வழியாக எடுத்து செல்ல முடியாதுஆதி திராவிடர் சுடுகாட்டில் தண்ணீர, மின்சாரம், கொட்டகை என எந்த அடிப்படை வசதியும் கிடையாது சலூன் கடைகளில் கூட பாகுபாடு பார்க்கபடுகிறது 142 கிராமங்களில் ஆதிதிராவிடர்களுக்குமுடி வெட்ட கூடாது என்று தடை உள்ளது சில கிராமங்களில் முடிவெட்டும் கருவி இரண்டு செட் வைத்துகொண்டு அதில் ஒன்றை ஆதிதிராவிடர்களுக்கு பயன்படுத்துகின்றனர்இது போல ரோசன் கடை மருத்துவமனை சாவடிகள் என அனைத்து இடங்களிலும் பாகுபாடு தொடர்கிறது 45 ஆதி திராவிட ஊராட்சி தலைவர்கள் வன்கொடுமைக்கும், சித்ரவதைக்கும் ஆளாகி உள்ளனர்”
    இதை போன்ற கொடுமை இன்றும் நடந்து கொண்டிருக்கோம் போது பகுத்தறிவு பேசினால் தங்களை போன்ற (மிகவும் அதிகபடியாக மனிதநேயம் மிக்க பத்திரிக்கையாளருக்கு) கோவம் வர தானே செயும்.

    //எங்கள் பாட்டன் முப்பாட்டன் பகைவனை போர்முனையில் சந்திக்கும் குணத்தையும், எதற்கும் அஞ்சாத துணிவையும், குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனையை ஏற்கும் பக்குவத்தையும், கடமை தவறும்போது உயிர் நீத்தலையும் கற்றுக் கொடுத்துள்ளனர்.//

    உங்க பாட்டன் பூட்டன் உங்களுக்கு எல்லாம் கத்து குடுத்திருக்காங்க ரொம்ப நல்ல விஷயம், எனக்கு எனது பெற்றோர் (பாட்டன் பூட்டன் பத்தி தெரியாது அது இப்போதைக்கு அவசியம் இல்லை) மரியாதை கத்து குடுத்திருக்காங்க. அதனால் மீண்டும் ஓரு முறை “இந்த மறுமொழி தங்களை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் (ஹி ஹி ஹி என்று மறுமொழி கூறினாலும் மன்னிப்பு கேட்பது எனது கடமை, மனிபதும் மன்னிக்காமல் இருப்பது தங்கள் உரிமை”

  175. Maruthanila venthan
    April 2, 2013 at 6:10 pm
    Permalink 150
    ஆதாரம்:
    http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175.pdf
    http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175-suppl.pdf

    கள்ளர்கள் முந்தைய காலத்தில் ஆடு , மாடு, செல்வங்களை திருடினார்கள். இப்பொழுது அவர்கள் எல்லா தமிழ் சமூகத்துக்கும் சொந்தமான தேவர் என்ற பட்டதை திருடுகிறார்கள் .

    திருடனா பார்த்து திருந்தா விட்டா திருட்டை ஒழிக்க முடியாது

    அறிவுஜீவிகள் ஏன் கமெண்ட் 150 பற்றி விரிவாக பேசவில்லை , மறுப்பு இல்லை . ஏனா உங்களிடம் உண்மைகள் இல்லை

  176. // இதுகூட உங்களுக்கு புரியவில்லையா? நான் உங்களை அதைவிட்டு வெளியில் வாருங்கள் என்று சொல்கிறேன். நீங்களோ அதிலேயே புரண்டு கொண்டு என்னை வெளியில் வாருங்கள் என்று சொல்கிறீர்கள்.//

    ஐயா பகுத்தறிவாளி தமிழ்,

    உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் நீங்கள்தான் முதலில் வெளியேறிக் காட்ட வேண்டும். அதைவிட்டு உங்கள் கருத்தை அடுத்தவர்கள் மீது திணிக்கக் கூடாது. அடுத்தவர் வெளியேறுவதும் வெளியேறாததும் அவர்கள் விருப்பம்.

    முதலில் தலித் மக்களால் சாதியை விட்டு வெளியேற முடியுமா என்று பாருங்கள். அவர்களால் ஒருக்காலத்திலும் சாதியை விட்டு வெளியேற முடியாது. ஏனெனில் உங்கள் பகுத்தறிவுத் தலைவர்கள் அவர்களுக்கு நன்மை செய்வதாக நினைத்துக் கொண்டு அவர்களை சாதியில் முடிந்து வைத்திருக்கிறார்கள்.

    அந்த முடிச்சை அவிழ்ப்பது மிகக் கடினம். முடிந்தால் அவிழ்த்துப் பாருங்கள். ஆண்டுக்கு ஒரு 100 தலித்களையாவது சாதியை விட்டு வெளியேற்றிக் காட்டுங்கள். அதன் பிறகு மற்ற சாதியினரைப் பற்றிப் பேசலாம்.

    இன்னொரு விஷயம் சாதி உங்களுக்குத்தான் அசிங்கம். மற்ற 80 சதவீதம் பேருக்கு அசிங்கம் இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். அதனால் உங்கள் விருப்பத்தை அவர்கள் மீது திணிக்காதீர்கள். அது உங்களுக்குத்தான் கேடு.

  177. //கள்ளர்கள் முந்தைய காலத்தில் ஆடு , மாடு, செல்வங்களை திருடினார்கள். இப்பொழுது அவர்கள் எல்லா தமிழ் சமூகத்துக்கும் சொந்தமான தேவர் என்ற பட்டதை திருடுகிறார்கள் .//

    ஐயா கொற்கைப் பாண்டியரே,

    தேவர் பட்டம் எல்லாத் தமிழர்களுக்கும் சொந்தமானது என்றால் ஏன் உங்களுக்கு அந்த பட்டம் கிடைக்கவில்லை. இல்லை உங்கள் பாட்டன் முப்பாட்டன் அந்த பட்டம் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்களா?

    அதுக்கான ஆதாரம் இருந்தால் எடுத்துப் போடுங்கள்.

  178. 150 வது கமென்ட்க்கான பதில்

    //* இன்று அனைவரும் தமிழர் என்று சொல்லி கொண்டாலும், யார் தமிழர் என்று அறிய இந்த ஆய்வு உதவும் என்று நம்புகிறோம்.//

    எந்த ஆய்வு?

    //* நாயுடு,ரெட்டியார் போன்ற வடுக சாதிகளுடன் நெருங்கிய தொடர்புள்ள கள்ளர் சாதியினர் தங்களை ‘களப்பிரர்’(வடுகர்) வழித் தோன்றல்கள் என்று கூறிக் கொள்வதும், பிற்காலத்தில் அவர்கள் முருக வழிபாடு செய்யத் தொடங்கியதால் அவர்களும் தமிழர்களே என்று தேவநேய பாவாணர் கூறியவையும் சரியே என்பது இதில் இருந்து விளங்கும்.//

    தேவநேயப் பாவாணர் தமிழ் அறிஞர் என்றுதான் கேள்விப் பட்டேன். அவர் சமூகத்தைப் பற்றி ஆய்வு செய்திருந்தால் அது பற்றியும் மறு ஆய்வு செய்வோம். அவர் அடிப்படையில் ஒரு கிறிஸ்தவர் என்பதும் அவர் தலித் ஆக இருக்க வாய்ப்புள்ளது என்பதும் கருத்தில் கொள்ளப்படும்.

    //* முக்குலத்தொருக்கும், மூவேந்தருக்கும் தொடர்பு உண்டு என்ற கருத்து கேள்விக் குறியாகிவிடும்.//

    சரி, மூவேந்தர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்?

    //* வடக்கே வன்னியன், தெற்க்கே தேவேந்திரன் என்ற அரசியல் அறைகூவல், அதையும் தாண்டி மரபணு ரீதியில் வலுப்பெற இந்த ஆய்வு உதவும்.//

    கள்ளர் ஒருவரின் மரபணுதான் ஆப்பிரிக்கரின் மரபணுவுடன் ஒத்துப்போகிறது என்று அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதை தியாகுவும் குறிப்பிட்டுள்ளார்.

    //* தங்களுக்கு சிறிதும் தொடர்பற்ற முக்குலத்தோரையும் ‘சத்ரியர்’ என்று நட்பு பாராட்டும் ஒரு சில ‘வன்னியரின்’ நிலை கேள்வி குறியாகும்.//

    சத்திரியர் என்பது குணம், சாதி அல்ல. ஆனால் திருட்டுத் திராவிடர்கள் குணத்தை சாதி என்று சொன்ன மனுவைப் பிடித்துத் தொங்கினால் யாரும் பொறுப்பாக முடியாது. வீரன் வீரனோடுதான் சேருவான்.

    //* ஒடுக்கப்பட்டவர் என்ற வர்க்க ஒற்றுமை மட்டுமே பள்ளருக்கும், பறையருக்கும் உண்டு என்பதும், ஆனால் அதே பறையர்கள் மரபணு அடிப்படையில் முக்குலத்தோர் உள்ளிட்ட வடுக மரபணுக்களுடனே சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் இதில் இருந்து புலனாகும்.//

    பள்ளர்கள் தங்களை தலித்கள் என்று சொல்லிக்கொள்ள விரும்பவில்லை. இன அடிப்படையில் தலித்களின் மரபணுவும் முக்குலத்தோரின் மரபணுவும் ஒத்துப் போவதில் ஆச்சரியமில்லை. ஆனால் இனக்குழு அடிப்படையில் தலித்கள் அடிமைகளாக இருந்து வந்தார்கள் என்பதை நீங்கள்தான் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறீர்கள். அதை நானும் சொல்லத் தேவையில்லை என்று கருதுகிறேன்.

    //* இன்று மள்ளர்களாகிய பள்ளர்கள், தங்களின் வரலாறை மீட்டெடுக்கும் முயற்சியில் கை கோர்க்கும் ‘வேல்முருகன் வன்னியர், சீமான் நாடார், இயக்குனர் மணிவண்ணன் கள்ளர், ஈழ புலவர் காசி ஆனந்தன், புதுக் கோட்டை பாவாணன், கொங்கு மண்டல உ.தனி அரசு கவுண்டர்’ போன்ற தமிழ் பெரும் மக்கள், மீண்டும் இந்த மண்ணில் தமிழர் ஆட்சி நிறுவ இந்த கட்டுரை ஒரு சிறு துரும்பை கிள்ளி போடும்.//

    கட்டுக்கதைகள் நீண்ட காலத்திற்கு நிலைபெறாது.

    //* தாழ்ந்த சாதி, உயர்ந்த சாதி என்ற பத்தாம் பசலி பேதம் களைந்து, முக்குலத்தோர் உட்பட பலரும் தமிழராய் இணையும் காலம் கனியும்.//

    நீங்கள் தலித்தாக பேசுகிறீர்களா? தமிழராக பேசுகிறீர்களா?

    • “கள்ளர் ஒருவரின் மரபணுதான் ஆப்பிரிக்கரின் மரபணுவுடன் ஒத்துப்போகிறது என்று அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதை தியாகுவும் குறிப்பிட்டுள்ளார்.”

      அப்படின்னா, இங்கே உள்ள ஆதிக்கப்பரம்பரை எல்லாம் ஆப்ரிக்காகாரன் தெளிச்சிட்டுப் போனதுல முளைத்த காளான்கள் தானா?

  179. ஐயா பகுத்தறிவாளி வல்லவமாறன்,

    //எத்தனயோ தீண்டாமை கொடுமை (உங்கள் பார்வயில் “எங்களை போன்ற அதிக்க ஜாதியின் உரிமை”) நடந்து உள்ளது நடந்து கொண்டு இருகின்றது, (அதை தங்களை போன்ற எண்ணம் கொண்ட சிலர் பெருமையாக பேசிக்கொண்டும் ஆதரித்து கொண்டும் இருகின்றனர்) அந்த கொடுமை பற்றி எதாவது எழுதி உள்ளீர்களா (நீங்கள் பத்திரிகை யாளர் என்று நீங்களே சொன்னதாய் ஞாபகம்).//

    தீண்டாமை இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அதை ஆதிக்க சாதிகளில் இருப்பவர்களால்தான் ஒழிக்க முடியுமே தவிர சாதியை ஒழிப்போம் என்று கோஷமிடும் வேடதாரிகளால் ஒருக்காலும் ஒழிக்க முடியாது என்பதை நான் திரும்பத் திரும்ப கூறி வருகிறேன்.

    //இதற்கு நீங்கள் எழுத போகும் மறு மொழி “நாங்க மட்டுமா தீண்டாமை செய்றோம், மத்தவன கேக்க மாட்டேங்க நாங்க செஞ்ச மட்டும் தேவர் சாதி வெறி நு எழுதுவேங்க”.//

    எங்கள் பகுதியில் உள்ள தீண்டாமையை எங்களால்தான் ஒழிக்க முடியும். அதை நேரம் வரும்போது செய்து காட்டுவோம். உங்களை மாதிரி போலிக் கூச்சலிட மாட்டோம்.

    //இதே கொடுமை அல்லது போலியாக யாராவது வன்கொடுமை சட்டத்தை தவறாக பயன்படுத்தி இருந்தால் இல்லை எதாவது தலித் மனித நேயம் அற்று (தீண்டாமை) எதாவது செய்திருந்தால் தங்கள் கண்டனத்தை பதிவு செய்வதற்கு முழு உரிமையும் உள்ளது (ஜன நாயக நாட்டில்) ஏன் என்றல் நீங்களும் ஓரு பத்திரிக்கை யாளர் (நீங்களே சொன்னதை ஞாபகம்).//

    நான் முன்னாள் பத்திரிகையாளன் என்று தெளிவாக எழுதி இருக்கிறேன். தேவை வரும்போது அனைத்து கெடுமைகளையும் போலித்தனத்தையும் கண்டிப்பாகச் சுட்டிக் காட்டுவேன். ஆனால் ஒருபோதும் உங்களைப் போல தலித் சாதிவெறி என்று சாதித் துவேஷத்தை தூண்டும் வகையில் எழுத மாட்டேன்.

    //அதற்காக தீண்டாமை கொடுமை யாராவது செய்திருந்து அதை ஊடகங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதை “அவர்கள் காட்டும் தீண்டாமை வெறியை எழுத்தில் காட்டுவதும் சாதிவெறியே” என்று சொன்னால் நீங்கள் உண்மையாகவே பத்திரிகையாளர்!//

    சாதி கெட்டது என்று நம்பிக்கொண்டிருக்கும் முற்போக்கு ஆசாமிகள் வன்கொடுமைச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை வெளிக் கொண்டு வர விரும்புவதில்லை. ஆனால் அந்த உண்மை எப்படியும் வெளி வந்தே ஆகும்.

    //நீங்களும் தீண்டாமை கொடுமையை ஆதரிப்பவராக உணர முடிகிறது.//

    ஆதிக்க சாதிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் ஒருக்காலும் தீண்டாமையை ஒழிக்க முடியாது. ஆனால் ஆதிக்க சாதிகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக திட்டும் உங்களால் அல்லது சாதியில் இருப்பவர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்ற தீர்மானத்தில் உள்ள உங்களால் ஒருக்காலும் அவர்களின் உதவியை நாட முடியாது. வெறும் சட்டத்தை மட்டும் வைத்தே தீண்டாமையை ஒழித்து விடுவோம் என்று நீங்கள் சொன்னால் உங்கள் வழிமுறைக்குப் பாராட்டுக்கள்.

    //உங்களது மறு மொழி 166 “நல்ல போராடுங்க” இதற்கு என்ன அர்த்தம் என்று நீங்கள் சொல்ல முடயுமா – இதில் வேறு “தலித் மனிதனே இல்லை என்று நான் ஒருபோதும் சொன்னதில்லை”. மனிதாக மதிக்க வேண்டும் என்று போராடுகிறோம் என்று சொன்னால் – “நல்ல போராடுங்க” என்று மறு மொழி போடும் நீங்கள், பள்ளி, கல்லூரி, வேலை செயும் இடம் இவற்றில் எந்த அளவிற்கு தீண்டாமை நிலை நாட்டி இருப்பெர்கள் என்று புரிகிறது.//

    ஹாஹாஹா நான் தலித் சாதிவெறியை பலமுறை நேரடியாகப் பார்த்தவன். முத்துராமலிங்கத் தேவரின் பெயரில் 3 கல்லூரிகள் உள்ளன. அங்கு ஒவ்வொரு ஆண்டும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நூற்றுக் கணக்கான தலித் மாணவர்கள் படித்து வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

    உண்மையில் தேவர் சாதிவெறி பற்றி சாடும் நீங்கள் அந்த கல்லூரிகளில் தலித் மாணவர்கள் படிக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுக்க வேண்டும். அல்லது சாதிவெறி நிலவுகிறது என்றால் அங்கு ஒரு தலித் மாணவரும் படிக்க முடியாத நிலை இருக்க வேண்டும். எது உண்மை என்று அங்கு பயிலும் மாணவர்களுக்குத் தெரியும்.

    //உங்களது பாணியில் ” படித்த ஆதிக்க ஜாதியினர் சேர்ந்து ஒரு சமுதாயத்திற்கு எதிராக பரப்பப்படும் திட்டமிட்ட துவேஷத்தைப் பற்றி நீங்களும் தான் எழுதிறேங்க” (ஆதிக்க ஜாதியினர் சேர்ந்து “தலித் அல்லாதோர் பாதுகாப்பு பேரவை நிறுவி உள்ளீர்கள், நான் குறிபிடுவது உங்கள் பெர்யருக்கு பின்னால் அடையாளமாக காட்ட பட்டிருக்கும் இருக்கும் சமூகம் மட்டும் இல்லை, இல்லை என்றல் உங்களது வழக்கம
    ான மறுமொழி “நாங்க மட்டுமா செய்றோம்” பதிவு செய்து விடுவர்கள்). நானும் சில ஊடகங்களில் பார்த்திருக்கிறேன் சில பேர் மிகவும் மற்ற ஜாதியினரை தரம் தாழ்த்தி பதிவு செய்கின்றனர்.//

    துணைப்பெயர் உங்களுக்குத்தான் கெட்டது. எங்களுக்கு அல்ல. நாங்கள் எல்லாச் சாதியினரையும் சரியாக மதித்து நடத்துகிறோம். தலித்கள் தங்களை தலித்களாக கருதிக்கொண்டே மற்றவர்களை சாதியை விட்டு வெளியேறச் சொல்கிறார்கள். இது அபத்தம்.

    //எந்த பதிவில் உங்களது ஜாதி பெருமை சாதி வெறியாக காட்ட பட்டுள்ளது என்று புரியவில்லை. பெருமை பேசுவதற்கு எல்லோருக்கும் உரிமை இருகின்றது. உங்களது அணைத்து பதிவுகளிலும் உள்ள சாராம்சம் என்ன என்று நீங்கள் படித்த படிப்பின் ( ) கண் கொண்டு (ஜாதிய கண்ணை ஓரு 10 விநாடி மறைத்து ) பாருங்கள் ப்ளீஸ்.//

    நான் ஒரு இடத்திலும் சாதிப் பெருமை பேசித் திரியவில்லை. இப்போதும் ஆண்ட சாதியினர் என்று பேசும் எந்த தேவரும் மற்றவர்கள் எங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லையே?

    //நீங்கள் உங்கள் இனத்தை பற்றி பெருமை கொள்ளுங்கள் அதில் எந்த ஜாதிய வெறியும் தெரிய வில்லை அதற்காக அதே ஜாதியை வைத்து மனிதனை மனிதன் கேவலமாக பார்க்க வேண்டும் என்ற சிந்தனை ஓட்டம் தப்பு என்று கூறுகிறேன். தையவு செய்து மனிதனாக பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்.//

    நாங்கள் எல்லாச் சாதியினரையும் சமமாகத்தான் பார்க்கிறோம்.

    //இத்தனை பின்னூட்டங்களில் நீங்கள் ஓரு முறை கூட அப்படி விளையாட்டுக்கு கூட சொல்லியதாய் நான் பார்கவில்லை அப்படி சொல்லி இருந்தால் இந்த கருத்திருக்கு நான் மனிப்பு கேட்டு கொள்ளுகிறேன். உங்களின் பின்னூட்டங்கள் புரிய வைக்கின்றது எந்த அளவிற்கு நீங்கள் (பெருமாள் தேவன்) நண்பர்களாய் பழகி உள்ளார் என்று. எனக்கு தெரிந்து “பசும்பொன்” ஐயா தனது சொத்துகளை தலித் இனத்தில் இருக்கும் à ��ருவருக்கு குடுத்தார் என்று கேள்வி பட்டு உள்ளேன்.//

    எங்களுக்கு தலித்களுடன் தொடர்பே இல்லை என்உறு நினைத்தால் ஐயோ பாவம்.

    //எனது தனிப்பட கருத்து ” பசும்பொன்” ஐயா விடம் உள்ள சில தேசிய சிந்தனை இப்போது உள்ள எத்தனை “பெருமாள் தேவன், தியாகு, etc., விடம் உள்ளது என்று தெரிய வில்லை). எந்த வகையில் பிரிவனை ஏற்படுத்த படுகின்றது என்று புரிய வில்லை. மனிதனை மனிதனாக பார்க்க வேண்டும் என்றால் பிரிவினை ஏற்படுத்துவது என்ற பொருள் “நீங்கள் சொல்லி தான் தெரிகிறது”//

    ஹாஹாஹா அதனால்தான் அவருக்கு முழு மரியாதை செய்கிறீர்கள் போலும். அவர் அளவுக்கு எங்களால் இருக்க முடியாது. ஆனால் எங்களால் அந்தளவு பெருந்தன்மையாக இருக்க முடியாது. ஏனெனில் அவருக்கே அந்த பழிச்சொல் கிடைத்தபோது நாங்கள் ஒன்றும் காந்தி என்ற பட்டத்தை எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே சாதி வெறியர்கள் என்ற பட்டம் எங்களுக்கு கிடைத்து விட்டது. அதைப் பற்றி கவலையில்லை. வல்லவன் வாழ்வான். நாங்கள் எங்கள் உரிமைகளை, பாதுகாப்பை இழந்து வாழ முடியாது. மற்றவர் அளிக்கும் மரியாதையை நாங்களும் திருப்பி அளிப்போம்.

    //அதை மீட்க போராடுகிறோம் என்று சொன்னால் நீங்கள் குடுத்திருக்கும் மறுமொழி 161 ஓரு சான்று. Some one should feel ashamed of being a human like this. உங்களது சிந்தனை நீங்கள் இட்டிருக்கும் மறு மொழிகளில் நன்றாக புரிகிறது.//

    நான் பேசிக் கொண்டிருப்பது எல்லாம் உங்களைப் போன்ற முற்போக்குத் தலித்களை மட்டுமே. எங்களுடன் இருக்கும் தலித்களுக்கு எங்களைப் பற்றி நன்றாகத் தெரியும். அதை நாங்கள் சொல்லிக் காட்டத் தேவையில்லை. எந்த சமூகமும் தனித்து வாழ முடியாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

    //இது எனது தனிப்பட்ட கருத்து – சாதிக்கு எதிரி கச்சை கட்டுவது எனது நோக்கம் அல்ல. அதே சாதியின் பெயரால் நீங்கள் (ஆதிக்க ஜாதியினர் அனைவரும்) அவிழ்த்து விடும் கொடுமைக்கு எதிராய் கருத்தை பதிவு செய்கிறேன்.//

    சாதி ஒழிப்பு என்று தலித்கள் தவிர வேறு யாரும் பேசுவது கிடையாது. அப்படிப் பேசும்போது அடிப்படையிலேயே அந்த கொள்கை தவறாகிவிடுகிறது. சாதி கெட்டது இல்லை என்று நிலை வரும்போதுதான் அவர்களால் மற்ற சமூகத்தினருடன் இணைந்து செயலாற்ற முடியும்.

    //உங்களுக்கு உங்க பாட்டன் பூட்டன் பெரிய சொத்து, எனக்கு இபொழுது படித்திருக்கும் படிப்பு எனக்கு பெருசு. நான் படித்திருக்கும் படிப்பு எனக்கு இட ஒதுக்க்கீடு மூலம் கிடைத்தது. அதே ஒதுக்க்கீடு மூலம் கிடைக்க பெற்றதை நீங்கள் கொச்சை படுத்தும் பொழுது. இட ஒதுக்க்கீடு எங்களுக்கு குடுத்து பெரிய தப்பு என்பது போல் பின்னூட்டம் இடும் உங்களுக்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.//

    இடஒதுக்கீடு தவறானது என்று ஒருபோதும் நான் குறிப்பிட்டது இல்லை. அதை சாதியின் பெயரால் வாங்கிக் கொண்டு அதே சாதியை பழிப்பதுதான் தவறு என்று நான் மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டி வருகிறேன். ஆனால் தலித்கள் பொருளாதார அடிப்படையில் சலுகை பெற அஞ்சுகிறார்கள். அதற்கு காரணம் அவர்களது சலுகையை மற்றவர்களும் பகிர்ந்து கொள்வார்கள் என்ற அச்சமே. இந்த நிலையில் இருக்கும் வரை தலித்களால் ஒருக்காலும் தலித் என்ற முத்திரையிலிருந்து வெளியே வரமுடியாது. மற்றவர்களை சாதியிலிருந்து வெளியேறச் சொல்லும் உரிமையும் அவர்களுக்கு இல்லை.

    // தங்களது அணைத்து மறுமொழியிலும் உள்ள சாராம்சம் இது தான் “இட ஒதுக்க்கீடு உங்களுக்கு எதுக்கு ( இட ஒதுக்க்கீடு தொடர்பான உங்களது பார்வை உங்களது மறு மொழிகள் அனைத்திலும் பார்தால் தெரியும், இதற்கும் எதாவது ஹி ஹி ஹி போன்ற மறுமொழி வரும் என்று எதிர்பார்கிறேன்)//

    இட ஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையில் பெறாத வரை சாதி வேறுபாடு, சாதி ஒழிப்பு பற்றி பேச தலித்களுக்கு தகுதி இல்லை. இடஒதுக்கீடு தவறு இல்லை. ஆனால் அதை சாதியின் பெயரால் கொடுக்கப்படுவதுதான் தவறு. சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு பெறுவது சரி என்றால் மற்றவர்கள் சாதியில் இருப்பதும் சரியே. சாதியால் ஏற்படும் தீண்டாமையை ஒழிக்க அனைத்துச் சாதிகளும் முயன்றால்தான் ஒழிக்க முடியும். ஆனால் ஆதிக்க சாதிகளை அழிக்க முனையும் தலித்களுக்கு யாரும் உதவ முன் வரமாட்டார்கள். சாதி ஒழிப்பு என்றாலே ஆதிக்க சாதிகளை ஒழிப்பதுதான் என்று பிரச்சாரம் செய்து வருபவர்களும் இதற்கு காரணம்.

    //”மதுரையில் 13 கிராமங்கள் திண்டுகல்லில் 24 கிராமங்கள் சிவகங்கயையில் 15 கிராமங்கள் என 213 கிராமங்கலில் நிலவும் தீண்டாமை பாகுபாடுகளை எவிடன்ஸ் அமைப்பு ஆய்வு செய்ததுஇதில் 104 கிராமங்களில் இரட்டை குவளை இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.சில கிராமங்களில் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு கண்ணாடி குவளையும் தாழ்தப்பட்ட மக்களுக்குசில்வர் குவளையும், பிளாஸ்டிக் கப்பும் கொடுக்படுகிறது தென்தமிழகத்தில் 97 கிராமங்களில் பொது பாதையில் ஆதிதிராவிடர் சடலத்தை எடுத்து செல்ல முடியாது 153 கிராமங்களில் மாற்று சாதியினர் குடியிருப்பு வழியாக எடுத்து செல்ல முடியாதுஆதி திராவிடர் சுடுகாட்டில் தண்ணீர, மின்சாரம், கொட்டகை என எந்த அடிப்படை வசதியும் கிடையாது சலூன் கடைகளில் கூட பாகுபாடு பார்க்கபடுகிறது 142 கிராமங்களில் ஆதிதிராவிடர்களுக்குமுடி வெட்ட கூடாது �®
    �ன்று தடை உள்ளது சில கிராமங்களில் முடிவெட்டும் கருவி இரண்டு செட் வைத்துகொண்டு அதில் ஒன்றை ஆதிதிராவிடர்களுக்கு பயன்படுத்துகின்றனர்இது போல ரோசன் கடை மருத்துவமனை சாவடிகள் என அனைத்து இடங்களிலும் பாகுபாடு தொடர்கிறது 45 ஆதி திராவிட ஊராட்சி தலைவர்கள் வன்கொடுமைக்கும், சித்ரவதைக்கும் ஆளாகி உள்ளனர்”
    இதை போன்ற கொடுமை இன்றும் நடந்து கொண்டிருக்கோம் போது பகுத்தறிவு பேசினால் தங்களை போன்ற (மிகவும் அதிகபடியாக மனிதநேயம் மிக்க பத்திரிக்கையாளருக்கு) கோவம் வர தானே செயும்.//

    இதற்காக எத்தனை பகுத்தறிவாளி அமைப்புகள் மக்கள் அந்த ஊர் மக்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அல்லது அந்தப் பிரச்சனைகளை தீர்க்க முயன்று வருகிறார்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு ஆதிக்க சாதிவெறி என்று எழுதினால் மட்டும் இந்த பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிடுமா? பிரச்சனையை தீர்க்க முயற்சிக்காமலே மக்களை திட்டுபவர்களை என்ன செய்ய முடியும்?

    //உங்க பாட்டன் பூட்டன் உங்களுக்கு எல்லாம் கத்து குடுத்திருக்காங்க ரொம்ப நல்ல விஷயம், எனக்கு எனது பெற்றோர் (பாட்டன் பூட்டன் பத்தி தெரியாது அது இப்போதைக்கு அவசியம் இல்லை)//

    அதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.

    // மரியாதை கத்து குடுத்திருக்காங்க. அதனால் மீண்டும் ஓரு முறை “இந்த மறுமொழி தங்களை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் (ஹி ஹி ஹி என்று மறுமொழி கூறினாலும் மன்னிப்பு கேட்பது எனது கடமை, மனிபதும் மன்னிக்காம இருப்பது தங்கள் உரிமை”//

    மரியாதை, நாகரீகம், இங்கிதம் முதலான அனைத்துப் பண்புகளையும் எங்களுக்கு எங்கள் பாட்டன் முப்பாட்டன் கொடுத்துச் சென்றிருக்கிறார்கள். மன்னிப்பு என்பது தேவைப்பட்டால் மட்டுமே கேட்கப்படும். திரும்பத் திரும்பக் கேட்டால் அது மன்னிப்பும் கிடையாது.

    செய்த குற்றத்தைப் பொறுத்து மட்டுமே மன்னிப்புக் கேட்கப்படும். கடமை தவறினால் என்றால் உயிரை மாய்த்துக் கொள்ளும் மான்பு எங்களுக்குள்ளது.

    உயிர் எங்களுக்கு துச்சம், மானம்தான் எங்களுக்கு முக்கியம்.

    • //தீண்டாமை இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அதை ஆதிக்க சாதிகளில் இருப்பவர்களால்தான் ஒழிக்க முடியுமே தவிர சாதியை ஒழிப்போம் என்று கோஷமிடும் வேடதாரிகளால் ஒருக்காலும் ஒழிக்க முடியாது என்பதை நான் திரும்பத் திரும்ப கூறி வருகிறேன்//
      இந்த காலத்திலும் சாதியின் பெயரை சொல்லி தீண்டாமை செய்ய வேண்டாம் என்று சொன்னால் சாதி ஒழிப்பு கோசம் ஆகிவிடுமோ. சாதி ஓழிப்பு எங்களது நோக்கம் இல்லை. சாதி பெயர் சொல்லி தங்களை போன்றவர்கள் காலம் காலமாய் நடத்தி வரும் கொடுமை நிறுத்துங்கள் என்று கேட்டால் வேடதாரி.. அப்படி ஆனால் வெறும் சாதிய பெருமை மட்டுமே பேசிக்கொண்டு சாதியத்தின் பேரில் நடத்த படும் கொடுமைக்கு துணை நிற்கும் அனைவரும் வேடதாரி. போராட்டம் பண்ணியதால் தான் சுதந்திரம் கிடைத்து என்று மறந்து விட கூடாது. சாதியம் பேணி தீண்டாமை ஒழிப்போம் என சொல்லும் உங்களை போன்றவரகளை வேடதாரிகளின் அரசன் (ஆண்ட பரம்பரை)
      //எங்கள் பகுதியில் உள்ள தீண்டாமையை எங்களால்தான் ஒழிக்க முடியும். அதை நேரம் வரும்போது செய்து காட்டுவோம். உங்களை மாதிரி போலிக் கூச்சலிட மாட்டோம்//
      நல்ல / சுப யோகா நேரம் பார்துகொண்டிகிறேர்கள் போல இருகின்றது. 2000 வருஷத்துக்கு மேல இருக்கிற கொடுமை நல்ல நேரம் பார்த்து தீர்த்து வைக்கும் அண்ணன் (மனிக்கவும் – ஓரு தலித் என்னை எப்படி அண்ணன் என்று கூறுவது என்று கோப பட வேண்டாம்) மற்றும் அண்ணனை போன்ற நல்ல (!!!) உள்ளம் படைத்தவர்களால் தீண்டாமை ஒழிய போகின்றது என்பதை பெருமையுடன் (கூரிகொல்லுகிரேன்).

      //நான் முன்னாள் பத்திரிகையாளன் என்று தெளிவாக எழுதி இருக்கிறேன். தேவை வரும்போது அனைத்து கெடுமைகளையும் போலித்தனத்தையும் கண்டிப்பாகச் சுட்டிக் காட்டுவேன். ஆனால் ஒருபோதும் உங்களைப் போல தலித் சாதிவெறி என்று சாதித் துவேஷத்தை தூண்டும் வகையில் எழுத மாட்டேன்//

      நீங்கள் சாதி வெறி என்று எழுதி துவேசம் பரப்புங்கள் பரப்பாமல் போங்கள், அந்த தேவை எப்போது வந்தாலும் உங்களை போன்ற நல்ல (!!!) உள்ளம் படைத்தவர்களால் தீண்டாமை செய்ய படுவதை மறக்காமல் எழுதவும். இபோழுதும் நடந்து கொண்டிருக்கின்றது அதை முன்னால் பத்திரிகையாளர் திரு பெருமாள் அவர்கள் நிறைய (!) எழுதி உள்ளார்கள் என்று நினைகிறேன் (ஆச்சர்ய குறி).

      //சாதி கெட்டது என்று நம்பிக்கொண்டிருக்கும் முற்போக்கு ஆசாமிகள் வன்கொடுமைச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை வெளிக் கொண்டு வர விரும்புவதில்லை. ஆனால் அந்த உண்மை எப்படியும் வெளி வந்தே ஆகும்//

      “அதற்காக தீண்டாமை கொடுமை யாராவது செய்திருந்து அதை ஊடகங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதை “அவர்கள் காட்டும் தீண்டாமை வெறியை எழுத்தில் காட்டுவதும் சாதிவெறியே” என்று சொன்னால் நீங்கள் உண்மையாகவே பத்திரிகையாளர்” நீங்கள் கூறியிருக்கும் மறுமொழி இதற்கு தானா என்று புரிய வில்லை.”அவர்கள் காட்டும் தீண்டாமை” என்று சொல்லதேர்கள் “நாங்கள் கட்டும் தீண்டாமை” என்று சொல்லுங்கள். சாதி கேட்டது இல்லை நல்லது என்பது விவாதம் இல்லை சாதியின் பெயரால் உங்களை போன்ற நல்ல (!!!) உள்ளம் படைத்தவர்களால் செய்ய படும் கொடுமை கெட்டது என்று விவாதிக்கிறேன்.

      //ஆதிக்க சாதிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் ஒருக்காலும் தீண்டாமையை ஒழிக்க முடியாது. ஆனால் ஆதிக்க சாதிகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக திட்டும் உங்களால் அல்லது சாதியில் இருப்பவர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்ற தீர்மானத்தில் உள்ள உங்களால் ஒருக்காலும் அவர்களின் உதவியை நாட முடியாது. வெறும் சட்டத்தை மட்டும் வைத்தே தீண்டாமையை ஒழித்து விடுவோம் என்று நீங்கள் சொன்னால் உங்கள் வழிமுறைக்குப் பாராட்டுக்கள்//

      உங்களை போன்ற நல்ல (!!!) உள்ளம் படைத்தவர்கள் இருக்கும் வரை தீண்டாமை அகற்ற முடியாது. நீங்கள் தீண்டாமை கடை பிடிக்கும் உங்களை போன்ற ஓருவரை நீங்கள் நல்லவர் என்று பராட்டுவீர்களோ, வெளிநாடுகளில் வேலை பார்க்கும் உங்கள் சக ஆதிக்க சாதியினர் வெள்ளைகரனிடம் வேலை பார்க்கும் போழ்து அவன் தீண்டாமை (normally the foreginers (including arabi, europeans) treat indians very badly) போன்ற செயல்களில் ஈடு படும் பொழுது அவனை நல்லவன் என்று புகழ் பாடு வீர்கள் என்று நினைகிறேன்.
      நீங்க செய்யாத (தீண்டாமை) ஓரு விஷயத்தை செய்ததாக சொன்னால் போங்க வேண்டியது ஞாயம் தான். தீண்டாமை என்னும் பேய் உங்கல் ஓவ்வொரு வருடன் உள்ளது. அதை இந்த காலத்திலும் செயாதேர்கள் என்று சொன்னால் என்னிடம் மண்டி போட்டு கேள் என்னை தீண்டாமை கொடுமைக்கு உள்ளக்கதேர்கள் என்று கேட்க சொல்லுகிறேர்கள். இந்தியா ஜனநாயக நாடு என்று நினைத்திருந்தேன் (முன்னால் பத்திரிக்கை யாளர் கூறிய பிறகு சட்டப்படி போராடினால் வேளைக்கு ஆகாது என்று.
      தீண்டாமை பேய் உங்கள் மனதில் உள்ளது. அதை விரட்ட உங்கள் ஜாதி என்னும் உந்து சக்தி தடுகின்றது. இது தான் நிதர்சன உண்மை. நீங்கள் எந்த விதமாக மறுமொழி கூறினாலும் உங்களால் (உங்களை போன்றவர்களால் – எனக்கு நிறைய தேவர் இன நண்பர்கள் உள்ளார்கள், அவர்கள் யாரிடமும் பார்க்காத இந்த வெறி உங்கள் பின்னோடங்களில் தெரிகின்றது) அந்த உந்து சக்தியை கடந்து உங்களில் இருக்கும் பேயை விரட்ட முடியாது. உந்து சக்தியை கட்டு படுத்த மட்டும் முடியும் உந்து சக்தியை நீக்க கூடாது (முடியாது). யாரையும் கெட்டவர்களாக சித்தரித்து ஓரு பயனும் இல்லை. நல்லவை கெட்டவை இரண்டும் இருப்பது தன் உலகம். சாதியை கெட்டவர்களாக சித்தரிக்க வில்லை. அதில் உங்களை போன்ற சில நல்ல (!!!) உள்ளம் படைத்த சிலரின் செயல் பாடுகள் வேதனை அளிக்கின்றது. இதை நீங்கள் எப்படி எடுத்தாலும் எனக்கு பரவாஇல்லை.
      நான் முற்போக்கு வாதியும் கிடையாது , பிற்போக்கு வாதியும் கிடையாது. மனிதன் மட்டுமே. உங்களை போன்ற ஆதிக்க ஜாதியினரை பழித்து இல்லை புறம் சொல்லி எனக்கு ஓன்னும் பிரயோஜனம் இல்லை. எங்களை போன்ற தலித்துகளை கேவல படுத்துவதால் நீங்கள் பெரிய அரசனும் இல்லை.

      //உங்களது மறு மொழி 166 “நல்ல போராடுங்க” இதற்கு என்ன அர்த்தம் என்று நீங்கள் சொல்ல முடயுமா – இதில் வேறு “தலித் மனிதனே இல்லை என்று நான் ஒருபோதும் சொன்னதில்லை”. மனிதாக மதிக்க வேண்டும் என்று போராடுகிறோம் என்று சொன்னால் – “நல்ல போராடுங்க” என்று மறு மொழி போடும் நீங்கள், பள்ளி, கல்லூரி, வேலை செயும் இடம் இவற்றில் எந்த அளவிற்கு தீண்டாமை நிலை நாட்டி இருப்பெர்கள் என்று புரிகிறது.//

      திரு பெருமாள், இந்த பின்னூடத்திற்கும் நீங்கள் அளித்திருக்கும் மறுமொழிக்கும் (ஹாஹாஹா நான் தலித் சாதிவெறியை பலமுறை நேரடியாகப் பார்த்தவன். முத்துராமலிங்கத் தேவரின் பெயரில் 3 கல்லூரிகள் உள்ளன. அங்கு ஒவ்வொரு ஆண்டும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நூற்றுக் கணக்கான தலித் மாணவர்கள் படித்து வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்) என்ன சமபந்தம் என்று புரிய வில்லை.ஓரு வேலை நீங்கள் தான் அந்த மூன்று கல்லூரிகளுக்கும் தாளாளர் ஓஹ. நான் உங்களது மறுமொழி பத்தி சொன்ன நீங்க எங்கையோ இருக்கிற காலேஜ் பத்தி பேசறேங்க.

      ஓரு வேல பொதுவா சொன்னத இருந்தாலும் “//”மதுரையில் 13 கிராமங்கள் திண்டுகல்லில் 24 கிராமங்கள் சிவகங்கயையில் 15 கிராமங்கள் என 213 கிராமங்கலில் நிலவும் தீண்டாமை பாகுபாடுகளை எவிடன்ஸ் அமைப்பு ஆய்வு செய்ததுஇதில் 104 கிராமங்களில் இரட்டை குவளை இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.சில கிராமங்களில் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு கண்ணாடி குவளையும் தாழ்தப்பட்ட மக்களுக்குசில்வர் குவளையும், பிளாஸ்டிக் கப்பும் கொடுக்படுகிறது தென்தமிழகத்தில் 97 கிராமங்களில் பொது பாதையில் ஆதிதிராவிடர் சடலத்தை எடுத்து செல்ல முடியாது 153 கிராமங்களில் மாற்று சாதியினர் குடியிருப்பு வழியாக எடுத்து செல்ல முடியாதுஆதி திராவிடர் சுடுகாட்டில் தண்ணீர, மின்சாரம், கொட்டகை என எந்த அடிப்படை வசதியும் கிடையாது சலூன் கடைகளில் கூட பாகுபாடு பார்க்கபடுகிறது 142 கிராமங்களில் ஆதிதிராவிடர்களுக்குமுடி வெட்ட கூடாது �®என்று தடை உள்ளது சில கிராமங்களில் முடிவெட்டும் கருவி இரண்டு செட் வைத்துகொண்டு அதில் ஒன்றை ஆதிதிராவிடர்களுக்கு பயன்படுத்துகின்றனர்இது போல ரோசன் கடை மருத்துவமனை சாவடிகள் என அனைத்து இடங்களிலும் பாகுபாடு தொடர்கிறது 45 ஆதி திராவிட ஊராட்சி தலைவர்கள் வன்கொடுமைக்கும், சித்ரவதைக்கும் ஆளாகி உள்ளனர்”// இதற்கு நீங்கள் அளித்த பின்னோட்டம்

      //இதற்காக எத்தனை பகுத்தறிவாளி அமைப்புகள் மக்கள் அந்த ஊர் மக்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அல்லது அந்தப் பிரச்சனைகளை தீர்க்க முயன்று வருகிறார்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு ஆதிக்க சாதிவெறி என்று எழுதினால் மட்டும் இந்த பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிடுமா? பிரச்சனையை தீர்க்க முயற்சிக்காமலே மக்களை திட்டுபவர்களை என்ன செய்ய முடியும்// அபபவும் வந்து உங்க கிட்ட (உங்களை போன்ற ஆதிக்க ஜாதி என்னும் பேய் பிடித்த) வந்து பேச்சு வார்த்தை நடத்தனும்.
      இப்பவும் சொல்லறேன் நீங்க (திரு பெருமாள்) மனுஷன மனுஷனா பார்க்கிற மனிதன் இலலை.

      //இட ஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையில் பெறாத வரை சாதி வேறுபாடு, சாதி ஒழிப்பு பற்றி பேச தலித்களுக்கு தகுதி இல்லை. இடஒதுக்கீடு தவறு இல்லை. ஆனால் அதை சாதியின் பெயரால் கொடுக்கப்படுவதுதான் தவறு. சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு பெறுவது சரி என்றால் மற்றவர்கள் சாதியில் இருப்பதும் சரியே. சாதியால் ஏற்படும் தீண்டாமையை ஒழிக்க அனைத்துச் சாதிகளும் முயன்றால்தான் ஒழிக்க முடியும். ஆனால் ஆதிக்க சாதிகளை அழிக்க முனையும் தலித்களுக்கு யாரும் உதவ முன் வரமாட்டார்கள். சாதி ஒழிப்பு என்றாலே ஆதிக்க சாதிகளை ஒழிப்பதுதான் என்று பிரச்சாரம் செய்து வருபவர்களும் இதற்கு காரணம்//

      பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கேடு குடுத்தால் மட்டும் சமமா நடதிருவேங்கள என்ன திரு பெருமாள். கண்டிப்பா இலலை (முதலில் நீங்க வாங்க அப்பறம் பார்க்கலாம் என்று வெட்டி பந்தா உடதேங்க ப்ளீஸ் எது சாத்தியமோ அதை சொல்லுங்கள் this is only a public forum so please interact accordingly Mr.Ex Pressman). உதாரணம் : இவ்வளவு சலுகை குடுத்த பிறகும் படிக்கும் சிறுவர்கள் உட்பட ஊர் தெருவுக்குள் போக வேண்டுமானால் செருப்பை கழட்டி விட்டு தான் போகணும் கோவை அருகே. சும்மா பொருளாதார அடிப்படையில் இட ஓதுக்கீடு என்பது உங்களை போன்றவர்களின் “கேவலம் இவனுங்க எல்லாம் எனக்கு மேலே வாராத” என்னும் என்ன ஓட்டம். இத்தனைக்கும் இட ஒதுக்க்கீடு பெரும் ஆண்ட பரம்பரைகளும் உண்டு. ஓரு பொதுவான விவாதம் நீங்கள் கூறுங்கள் எத்தனை பன்னகார தேவர் இன மக்கள் இப்போது உங்களுக்கு குடுக்க படும் இட ஒதுக்க்கீடு வேண்டாம் என்று உதறி உள்ளார்கள். நியாயமாக பின்னோட்டம் இடுங்கள். (நீங்களும் பொருளாதார அளவில் முன்னேறி உள்ளீர்கள் என்று நினைகிறேன்)
      நான் எனக்கு பிறக்க போகும் குழந்தைக்கு ஜாதியின் பெயரால் வழங்க படும் சலுகை வேண்டாம் என கூற உள்ளேன் (எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை) ஏன் என்றால் இன்னும் எத்தனயோ தலித் இன்னும் பொருளாதாரதில் (சமூகதில் உள்ள தாழ்வு நிலை என்றும் உங்களை போன்ற எண்ணம் கொண்ட மனிதர்கள் (!) இருக்கும் வரை மாறப்போவது) தாழ்ந்த நிலையில் உள்ளனன்ர் அவர்களுக்கு வழி விட வேண்டும். இது முற்றிலும் எனது கருத்தாக பதிவு செய்கிறேன் ப்ளீஸ் இதுக்கும் எதாவது ஓரு (வழக்கம் போல) ஏகதாளம் பேசிகிட்டு இருக்கதேங்க.
      //அதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்// தெரிஞ்சு என்ன பண்ணலாம். இதை போல ஓரு பொது விவாத மேடையில் பெருமை பேசலாம். பொதுவாக north indians தமிழ் தான் பழைய மொழி என்றால் ஒத்துக்க மாட்டங்க அவங்களுக்கு சமஸ்க்ரிதம் பழைய மொழி. அவங்க அவங்களுக்கு அவங்களோட பெருமை முக்கியம் அதற்காக மற்ற எல்லோரும் கேவலம் நு நெனைக்கும் உங்களை போன்றவர்களை என்ன சொல்லுவது. உங்களோட வரலாறு எனக்கு தெரியனுமுன்னு அவசியம் இல்லை, “வேலை செய்ய முடியறவன் வேலைய செஞ்சிக்கிட்டிருப்பான். வேலை செய்ய முடியாதவன் பெருமை பேசிக்கிட்டிருப்பான்” நான் உங்களின் பாரம்பரியத்தை தப்பு சொல்ல வில்லை ப்ளீஸ் நீங்கள் அந்த கண்ணோட்டத்தில் எடுக்க வேண்டாம்.
      //மரியாதை, நாகரீகம், இங்கிதம் முதலான அனைத்துப் பண்புகளையும் எங்களுக்கு எங்கள் பாட்டன் முப்பாட்டன் கொடுத்துச் சென்றிருக்கிறார்கள். மன்னிப்பு என்பது தேவைப்பட்டால் மட்டுமே கேட்கப்படும். திரும்பத் திரும்பக் கேட்டால் அது மன்னிப்பும் கிடையாது//
      மரியாதை, நாகரீகம், இங்கிதம் – உங்களது பின்னோட்டங்கள் வெளிபடுத்துகிறது (சொக்க தங்கம் படத்தில் வரும் ஓரு காட்சி ஞாபகம் வருகிறது)

      please do know that i am fellow human being. i am not a Marxist or communist. The facts and reality can be spoken by any one. it is not required to be Marxist or communist.

      Any way once again i am asking sorry if my view hurts you or it is against your view…

      please post your view., i am not going to reply for your comments once again i am tired of replying with a human without the nature of a normal human

  180. முற்போக்கு தலித் நண்பர்களுக்கு,

    சாதி கெட்டது என்று தலித்கள் சொன்னால் தலித்கள் முதலில் அதிலிருந்து வெளியேறி அதை கெட்டது என்று நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களின் பிரச்சாரமும் திராவிடர்களின் பிரச்சாரத்தைப் போல பொய்யானதே.

    சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு பெறுவது சரி என்றால் மற்றவர்கள் மற்ற விஷயங்களுக்காக சாதியில் இருப்பது சரியே.

    சாதிக் கொடுமைகள் தவறு. அதனை சாதியில் இருப்பவர்களின் ஒத்துழைப்போடுதான் போக்க முடியும். சாதியில் இருப்பவர்களை குறைசொல்லும் முற்போக்கு முகமூடிகளால் ஒருபோதும் அவற்றை போக்க முடியாது.

    எல்லாச் சாதியினரும் இணைந்து வாழ்வதே தமிழினம். உங்கள் விருப்பத்திற்காக சாதியை ஒழிப்போம் என்று பேசினால் அது ஒருக்காலும் தமிழர்களை ஒன்று சேர்க்காது. அதற்கு இது போன்ற கட்டுரைகள் உதவியாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

  181. எது எப்படியோ சுதந்திரத்திற்கு பிறகு நாட்டில் உள்ள தனிப்பட்டவர்களின் வளர்ச்சி மற்றும் மாறுதல்கள் என்று பார்க்கும்போது மற்றவர்களை விட தாழ்த்தப்பட்ட மக்களே முதலில் உள்ளார்கள். தேவர் இனத்தவர்களின் ஜாதி பெருமை, அதிகாரங்கள், ஆணவங்கள் அடங்கியுள்ளது (அடக்கப்பட்டது). உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இவர்கள் அவ்வப்போது மலரும் நினைவுகளுக்கு செல்ல அடிக்கடி சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்து கொண்டிருக்கும் வினவு தளத்திற்கு இவர்கள் நன்றி சொல்ல கடமை பட்டவர்கள். மற்றபடி இவர்களுடையே ஜாதி பெருமையை எவன் வேலை வெட்டி இல்லாமல் காது கொடுத்து கேட்டு கொண்டிருப்பான். தென் மாவட்டங்களில் இவர்கள் யாரையாவது ஏய் என்றால் என்னடா என்று திருப்பி கேட்கும் நிலையில்தான் மற்றவர்கள் உள்ளார்கள். வட மாவட்டங்களை பொருத்தவரை இவர்களின் ஜாதி உளறலை யாரும் சட்டை பண்ணுவதில்லை? வட மாவட்டங்களில் எல்லா மக்களோடும் இவர்கள் பத்தோடு பதினொன்றாகத்தான் இருந்து ஆக வேண்டும் வேறு வழி இல்லை. அரசியல் ரீதியாக பார்த்தாலும் கூட தாழ்த்தபட்ட மக்களுக்காக ஒரு கிர்ஷ்ணசாமி சட்டசபையில் குரல் கொடுப்பார் , பார்லிமென்டில் ஒரு திருமாவளவன் குரல் கொடுப்பார், ஆனால் இவர்களுக்கு இவர்களேதான் குரல் கொடுத்து கொண்டிருக்கவேண்டும். தேவர் கட்சி என்று சொல்லப்படும் அதிமுக கட்சியின் தலைவர் ஜெயலலிதா அவர்கள் கூட தேவர் இனத்தவர்களுக்கு கொடுக்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் ஆபத்து என்று உணர்ந்து எல்லா ஜாதியினருக்கும் சம அங்கீகாரம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்? ஆக மதிப்பிற்குரிய தேவர் இனத்தவர்களே நீங்கள் முக்கி, முக்கி ஜாதி பெருமை பேசிக்கொண்டே இருங்கள் , நாங்கள் முன்னேறிக்கொண்டே இருக்கிறோம், இன்னும் விளக்கம் வேண்டு என்றால் முயல், ஆமை கதைகளை உங்கள் வீட்டு சிறுவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

  182. நண்பர் தியாகு & பெருமாள் தேவன்,

    இரட்டைக் குவளை டீக்கடைகளில் பார்ப்பனர்களோ, உங்கள் சாதியைச் சேர்ந்த வசதியுள்ளவர்களோ வந்து தேநீர் குடிப்பதில்லை.. வறட்டு மேட்டிமை அடிப்படையில் அவர்கள் உங்களை ஒதுக்கும் போது, நீங்கள் ஏன் சிலரை ஒதுக்க வேண்டும்..?! இதனால் கிடைப்பது உங்களுக்குத் திருப்தி.. ஒதுக்கப்பட்டவர்களுக்கு அவமானம்.. உங்களைப் போன்ற படித்தவர்கள் இது போன்ற பாகுபாடுகளுக்கு எதிரான கருத்தாக்கத்தை முன்னெடுக்கலாமே..

    தேவர்கள் ஆண்ட பரம்பரையாக மட்டும் பெருமை பேசாது, தமிழகத்தின் இனக்குழுக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த, பிற சாதியினரை மதிப்புடன் அரவணைத்து தலைமை குணத்தையும் காட்டலாமே.. குறிப்பாக, தென் தமிழகத்தின் பெரும்பான்மை வகுப்பினரான தேவர்களும், தேவேந்திரர்களும் சகோதரத்துவத்துடன் ஒன்றுபடாமல் தமிழர் ஒற்றுமை சாத்தியமில்லை.. வரலாற்றுப் பகையை மறந்து, பிற இனக் குழுக்களை ஒன்றுபடுத்தும் வலிமை உங்களுக்கு உண்டு.. சிந்தித்துப் பார்க்கவும்.. நன்றி..

  183. பெருமாள் கள்ளனுக்கு ஆங்கிலம் தெரியாது போல . தெரிந்திருந்தால் DNA அடிப்படையில் தமிழகத்தில் எந்த சாதி முத்த சாதி யாரெல்லாம் தமிழ் சாதி என்று தெரிந்திருக்கும். பாண்டியன் சோழன் சேரன் பள்ளர்களின் முப்பாட்டன். கள்ளனினி முப்பாட்டன் இல்லை . இதற்க்கு இன்றும் மன்னர்களால் கட்டப்பட்ட பல கோவில்களும் முதல் மரியாதை பள்ளர்களுக்கே கள்ளனுக்கு இல்லை .

    மேலும் உங்கள் சமுக தளங்களில் வன்னியர்களை திட்டுவதும் பொது தளங்களில் வன்னியர்கள் எங்கள் நண்பர்கள் என்று சொல்லுவது நகைப்பிற்குரியது

    மேலும் வன்னியர்கள் பள்ளரின் சொந்தகாரர்கள் என்றும் வன்னியர்கள் உங்கள் பட்டங்களை திருடுகிறார்கள் என்றும் உங்கள் சமுக வலைதளங்களில் என்லுதி இருகிறிர்கள் என்பதை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்

    http://www.thevarthalam.com/thevar/?p=2585

    • @கொற்கை பாண்டியன்

      Dr.Spencer Wells (Genetic Scentist) எழுதிய மரபணு ஆய்வு சோதனை புத்தகம்(Bookname: Deep Ancester,Chapter5,Page no:116)) ஆங்கிலத்தில் எழுதியது..2010-ஆம் ஆண்டு முக்குலத்தோர் மரபணு ஆதிக்குடியின் கலப்பில்லாத மரபணூ என அவர்கள் அறிவித்ததும் ஆங்கிலத்தில்தான்..

      இப்போது உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்தால் படித்துவிட்டு வந்து பதில் பதியுங்கள்.

  184. கள்ளர் குல மன்னன் பொன்னன் விஜயாலய வன்னியன்
    Posted on 02/02/2013 by குவைத் பாண்டியன்
    (கள்ளர் புகழை களவாடும் வன்னியர்(பள்ளி))
    http://www.thevarthalam.com/thevar/?p=2585

    எழுதியது கள்ளர்

  185. ஐயா அம்பி,

    //இரட்டைக் குவளை டீக்கடைகளில் பார்ப்பனர்களோ, உங்கள் சாதியைச் சேர்ந்த வசதியுள்ளவர்களோ வந்து தேநீர் குடிப்பதில்லை.. வறட்டு மேட்டிமை அடிப்படையில் அவர்கள் உங்களை ஒதுக்கும் போது, நீங்கள் ஏன் சிலரை ஒதுக்க வேண்டும்..?! இதனால் கிடைப்பது உங்களுக்குத் திருப்தி.. ஒதுக்கப்பட்டவர்களுக்கு அவமானம்.. உங்களைப் போன்ற படித்தவர்கள் இது போன்ற பாகுபாடுகளுக்கு எதிரான கருத்தாக்கத்தை முன்னெடுக்கலாமே..//

    நிச்சயமாக எடுப்போம். ஆனால் வினவு போன்றவர்கள் அவற்றை தொடர வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள் போல.

    //தேவர்கள் ஆண்ட பரம்பரையாக மட்டும் பெருமை பேசாது, தமிழகத்தின் இனக்குழுக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த, பிற சாதியினரை மதிப்புடன் அரவணைத்து தலைமை குணத்தையும் காட்டலாமே.. குறிப்பாக, தென் தமிழகத்தின் பெரும்பான்மை வகுப்பினரான தேவர்களும், தேவேந்திரர்களும் சகோதரத்துவத்துடன் ஒன்றுபடாமல் தமிழர் ஒற்றுமை சாத்தியமில்லை.. வரலாற்றுப் பகையை மறந்து, பிற இனக் குழுக்களை ஒன்றுபடுதும் வலிமை உங்களுக்கு உண்டு.. சிந்தித்துப் பார்க்கவும்.. நன்றி..//

    நிச்சயமாக செய்யலாம். ஆனால் காமராஜர் செய்த புண்ணியம் பள்ளர்களை எங்களின் எதிரியாகச் சித்தரித்தது. அதையே இன்று படித்த தலித்கள் பிடித்துத் தொங்குகிறார்கள்.

    முதலில் தேவர்கள் தலித்களுக்கு எதிரிகள் அல்ல என்பதை நம்பினால் இதுபோன்ற அவதூறு பிரச்சாரங்களை நிறுத்தினால் சாதி நல்லிணக்கம் குறித்துப் பேச வாய்ப்புகள் ஏற்படலாம்.

    • ///தேவர்கள் ஆண்ட பரம்பரையாக மட்டும் பெருமை பேசாது, தமிழகத்தின் இனக்குழுக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த, பிற சாதியினரை மதிப்புடன் அரவணைத்து தலைமை குணத்தையும் காட்டலாமே.. ///
      ஹி ஹி ஹி ஹி ஹி ஹி

  186. ஐயா துரை,

    //எது எப்படியோ சுதந்திரத்திற்கு பிறகு நாட்டில் உள்ள தனிப்பட்டவர்களின் வளர்ச்சி மற்றும் மாறுதல்கள் என்று பார்க்கும்போது மற்றவர்களை விட தாழ்த்தப்பட்ட மக்களே முதலில் உள்ளார்கள். தேவர் இனத்தவர்களின் ஜாதி பெருமை, அதிகாரங்கள், ஆணவங்கள் அடங்கியுள்ளது (அடக்கப்பட்டது.//

    அடக்கினது நீங்கதானே? அப்போ தலித்கள்தான் ஆட்சி செய்கிறார்கள் என்று சொல்லுங்கள். அதாவது தலித் அடிமை, கொடுமை என்று பேசப்படுவதெல்லாம் உண்மை என்று சொல்கிறீர்கள். எங்களை மட்டும் அடக்கினீர்களா? இல்லை வேறு சாதிகளையும் அடக்கி விட்டீர்களா?

    சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்துவதால்தான் இன்று தலித் அல்லாதோர் கூட்டமைப்பு உருவாகியுள்ளது. இந்த நாகரீக காலத்தில் இப்படி ஒரு அமைப்பு ஏற்படுவதற்கு இன்றைய ஆட்சியாளர்களும் தலித்களும்தான் வேதனைப் படவேண்டும். அதை விடுத்து கரிக்கொட்டையால் சுவற்றில் எழுதுவது போல எழுதி அதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தால் அதற்கு யாரும் பொறுப்பாக மாட்டார்கள். சமூக அக்கறை கொண்டவர்களுக்கு இதன் ஆழம் புரியும். நீங்கள் தலித் பெருமை பேசித் திரிகிறீர்கள்.

    // உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இவர்கள் அவ்வப்போது மலரும் நினைவுகளுக்கு செல்ல அடிக்கடி சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்து கொண்டிருக்கும் வினவு தளத்திற்கு இவர்கள் நன்றி சொல்ல கடமை பட்டவர்கள்.//

    வினவு மாதிரி தலித்களின் சாதிவெறியை போட்டுடைக்க மற்றொரு இணையம் வராதா என்ன?

    // மற்றபடி இவர்களுடையே ஜாதி பெருமையை எவன் வேலை வெட்டி இல்லாமல் காது கொடுத்து கேட்டு கொண்டிருப்பான். தென் மாவட்டங்களில் இவர்கள் யாரையாவது ஏய் என்றால் என்னடா என்று திருப்பி கேட்கும் நிலையில்தான் மற்றவர்கள் உள்ளார்கள். வட மாவட்டங்களை பொருத்தவரை இவர்களின் ஜாதி உளறலை யாரும் சடடை பண்ணுவதில்லை?//

    ஆமாம் வட மாவட்டங்களில் எங்களை யாரும் சட்டை செய்வதில்லை. ஆனால் தமிழ்நாடு முழுவதும் உங்களுக்குத்தான் முதல்மரியாதை. வாங்கி மகிழுங்கள்.

    // வட மாவட்டங்களில் எல்லா மக்களோடும் இவர்கள் பத்தோடு பதினொன்றாகத்தான் இருந்து ஆக வேண்டும் வேறு வழி இல்லை. அரசியல் ரீதியாக பார்த்தாலும் கூட தாழ்த்தபட்ட மக்களுக்காக ஒரு கிர்ஷ்ணசாமி சட்டசபையில் குரல் கொடுப்பார் , பார்லிமென்டில் ஒரு திருமாவளவன் குரல் கொடுப்பார்,//
    பாவம் பள்ளர்கள் தாங்கள் தலித்கள் அல்ல என்று சொல்வதை இவர் கேட்கவில்லை போலும். அப்படி குரல் கொடுக்கும் உங்கள் தலைவர்களால் ஏன் இணைந்து போராட முடியவில்லை. இதுவே தலித்களின் போலித்தனத்தைக் காட்டுகிறது அல்லவா?

    // ஆனால் இவர்களுக்கு இவர்களேதான் குரல் கொடுத்து கொண்டிருக்கவேண்டும். தேவர் கட்சி என்று சொப்படும் அதிமுக கட்சியின் தலைவர் ஜெயலலிதா அவர்கள் கூட தேவர் இனத்தவர்களுக்கு கொடுக்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் ஆபத்து என்று உணர்ந்து எல்லா ஜாதியினருக்கும் சம அங்கீகாரம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்?//

    அப்போ ஜெயலலிதாவுக்கும் ஒரு பாராட்டுவிழாவை நடத்திருங்க. திருமாவளவனும், கிருஷ்ணசாமியும் தேவர்களைப் போல காலில் விழுந்து வணங்கட்டும்.

    // ஆக மதிப்பிற்குரிய தேவர் இனத்தவர்களே நீங்கள் முக்கி, முக்கி ஜாதி பெருமை பேசிக்கொண்டே இருங்கள் , நாங்கள் முன்னேறிக்கொண்டே இருக்கிறோம், இன்னும் விளக்கம் வேண்டு எà
    ��்றால் முயல், ஆமை கதைகளை உங்கள் வீட்டு சிறுவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.//

    முன்னேறுபவன் எதற்கு புறணி பேச வேண்டும். உண்மையாக நீங்கள் முன்னேறி விட்டால் எதற்காக மற்றவர்களை பார்க்க வேண்டும். தலித்கள் நாடார்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. அதை முதலில் கற்றுக் கொள்ளுங்கள்.

    தேவரைச் சீண்டுவதுதான் எங்கள் பொழுது போக்கு என்றால் தாராளமாக சீண்டுங்கள். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

  187. ஐயா கொற்கை பாண்டியன்

    //கள்ளர் குல மன்னன் பொன்னன் விஜயாலய வன்னியன்
    Posted on 02/02/2013 by குவைத் பாண்டியன்
    (கள்ளர் புகழை களவாடும் வன்னியர்(பள்ளி))
    http://www.thevarthalam.com/thevar/?p=2585//

    பொறுமையாக அந்தக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.

  188. ஐயா கொற்கை பாண்டியன்,

    //பெருமாள் கள்ளனுக்கு ஆங்கிலம் தெரியாது போல . தெரிந்திருந்தால் DNA அடிப்படையில் தமிழகத்தில் எந்த சாதி முத்த சாதி யாரெல்லாம் தமிழ் சாதி என்று தெரிந்திருக்கும். பாண்டியன் சோழன் சேரன் பள்ளர்களின் முப்பாட்டன்.//

    ஆமாம். கள்ளனுக்கு ஆங்கிலம் தெரியுமா? தலித்களுக்குத்தான் உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளும் தெரியும்.

    // கள்ளனினி முப்பாட்டன் இல்லை . இதற்க்கு இன்றும் மன்னர்களால் கட்டப்பட்ட பல கோவில்களும் முதல் மரியாதை பள்ளர்களுக்கே கள்ளனுக்கு இல்லை .//

    தாராளமாக வாங்கிட்டுப் போங்க. அது எங்களுக்குத் தேவையும் இல்லை. இப்போது நீங்கள்தான் உங்களை உயர்ந்த சாதி என்று நிரூபிக்க முயற்சிக்கிறீர்களே ஒழிய, நாங்கள் அல்ல என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.

    //மேலும் உங்கள் சமுக தளங்களில் வன்னியர்களை திட்டுவதும் பொது தளங்களில் வன்னியர்கள் எங்கள் நண்பர்கள் என்று சொல்லுவது நகைப்பிற்குரியது//

    வன்னியர் எங்களைப் போன்றவர்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். எங்கே அவர்களும் இவர்களும் ஒன்று சேர்ந்து விடுவார்களோ என்று அச்சம்தான் தலித்களுக்கு ஏற்படுகிறது. அதுதான் இந்தக் கவலை.

    //மேலும் வன்னியர்கள் பள்ளரின் சொந்தகாரர்கள் என்றும் வன்னியர்கள் உங்கள் பட்டங்களை திருடுகிறார்கள் என்றும் உங்கள் சமுக வலைதளங்களில் என்லுதி இருகிறிர்கள் என்பதை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்//

    அதெல்லாம் ஆய்வுக்குரியது.

  189. தேவர்தளத்தின் கட்டுரைகளை உதவிக்கு அழைக்கும் வரை தலித்களை பாராட்டலாம்.

  190. அனைத்துத் தமிழர்களும் தங்கள் விருப்பப்படி நடக்க வேண்டும் என்று தேவர்கள் விரும்பினால் அது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

    அதுபோல அனைத்துத் தமிழர்களும் தங்கள் விருப்பப்படி நடக்க வேண்டும் என்று தலித்கள் விரும்பினால் அது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

    ஆனால் இதை தலித்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. தங்கள் விருப்பத்தை மக்கள் மீது திணிப்பதே அவர்களின் செயல்.

  191. தாங்கள் விரும்பும் விஷயங்களை மற்ற பெரும்பான்மை மக்கள் விரும்புகிறார்களா இல்லை என்பதை அறியக் கூட தலித்கள் தயாராக இல்லை என்பதுதான் உண்மை.

    • there are so much difference in between you people (perumbanmai makkal), please do clarify whether the wishes in between you people are similar. by the way you want to say you people are majority and we should go as per your wish.
      if that is the case you people don’t have any rights to speak about the atrocities done by singaleese to our fellow tamilian. vice versa for dalith and (majority non dalith)against tamils and singaleese in srilanka
      so please do not act in the eelam issue.

  192. // @HisFeet

    Mr Peumal Dummy, sethupona muthuramalingathidam neega ethirpaakureenga! uyiroda irukara Pope-idam naanga ethir paakarom//

    ஐயா அவன்பாதம்,

    அப்போ நீங்கள் கிறிஸ்தவர்கள் என்று பேசுங்கள்,

    தலித்கள் என்று பேசாதீர்கள். உங்களுக்கு திருச்சபை பல பரிசுகளைத் தரும். இரண்டும் கெட்டானாக இருக்காதீர்கள்.

  193. //there are so much difference in between you people (perumbanmai makkal), please do clarify whether the wishes in between you people are similar. by the way you want to say you people are majority and we should go as per your wish.
    if that is the case you people don’t have any rights to speak about the atrocities done by singaleese to our fellow tamilian. vice versa for dalith and (majority non dalith)against tamils and singaleese in srilanka
    so please do not act in the eelam issue.//

    ஐயா வல்லவமாறன்,

    சிங்களர்கள் போலத்தான் பெரும்பான்மை மக்கள் தலித்களை நடத்துகிறார்கள் என்கிறீர்களா?

    இங்கு பெரும்பான்மை மக்கள் தலித்கள் மீது எதையும் திணிக்கவில்லை. மாறாக தலித்கள்தான் பெரும்பான்மை மக்கள் மீது தங்கள் கருத்தை திணிக்க விரும்புகிறார்கள்.

    சாதி ஒழிப்பு விஷயத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தினால் பெரும்பான்மை மக்கள் எதை விரும்புகிறார்கள் என்று அறிந்துகொள்ளலாம். அதை நடத்த முடியுமா?

    • A post in FB.,

      நீங்கள் தமிழர்களாய் வீதிகளில் திரண்டு போராடும் போது எனக்கான இடத்தை தேடிக்கொண்டே இருக்கிறேன் ….தமிழனின் மானம் காக்கவும் உரிமை மீட்கவும் கோஷங்கள் எழுப்பியபடி நீங்கள் ஊர்வலம் போவதை நீங்கள் எரித்த எங்கள் குடிசையின் வாசலில் நின்றபடி பார்த்து கொண்டுதான் இருக்கிறேன் …இதே மாதிரி கும்பலாய் வந்துதானே எங்கள் வீட்டை எரித்தீர்கள் …..அந்த கணத்தில் நாங்கள் தமிழில்தானே கதறி அழுதோம் ……நீங்கள் சிதைத்த எங்கள் சகோதரிகளும் அழுது துடித்ததும் நீங்கள் முழக்கமிடும் இதே மொழியில்தான்……சிங்களவனுக்கும் உங்களுக்கும் பேதம் இருப்பதாய் எங்களுக்கு தெரியவில்லை . உங்கள் சொந்த ஊரில் எங்களை ஏற்று கொள்ளாத உங்களை எந்த நீதி மன்றத்தில் நிறுத்தி விசாரித்து தண்டிப்பது? …..வீசி நடக்கும் உங்கள் கைகளை உங்கள் நாசிக்கு அருகில் வைத்து பாருங்கள்…..நீங்கள் அள்ளி திணித்த……பீ……வாடை தெரியும் …..இந்த கொடுமைகளை கொடியவன் ராஜபக்சே கூட செய்ததது இல்லை….அந்த நாற்றமடிக்கும் உங்கள் கைகளில்தான் சுதந்திர தமிழீழ பதாகை இருக்கிறது …….எங்களை தினம் வதைக்கும் உங்களிடமிருந்து எப்போது விடுதலை கிடைக்கும் ?……சிறுவன் கொலை , பெண்கள் கற்பழிப்பு , சரணடைந்த அப்பாவிகள் படுகொலைகள்கண்டிப்பான தண்டனைக்குரிய குற்றங்கள்தான்…..உ­ங்கள் முழக்கங்கள் சாதி வெறியர்களால் புலைப்பாடியில் மின்சாரம் பாய்ச்சி படுகொலை செய்யப்பட்ட தலித் சிறுவர்களின் படுகொலைக்கும் , சாதி இந்துக்களால் வன்புணர்ச்சிக்கு ஆளாகி மடிந்த சேரி பெண்களுக்குமான நீதியை சேர்த்து, உரத்து முழங்கட்டும்…..காரணமற்ற வகையில் தலித் என்பதாலேயே உங்களால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட அல்லது படுகொலை செய்யப்பட்ட எங்கள் சகோதரனின் சாவிற்கும் ஐ.நா.நீதி வழங்க வேண்டும்…….உங்களை விட எங்களால் வலியை , ஒடுக்குமுறையை சரியாய் புரிந்து கொள்ளமுடியும்…….எனினும் நீங்கள் ஒடுக்குமுறையை விடப்போவதும் இல்லை ….நாங்களும் உங்களை உலக அரங்கில் அம்பலபடுத்தாமல் விடப்போவதும் இல்லை …..ராஜபக்சே போல் நீங்களும் யார் காலை பிடித்தாவது கெஞ்சி பிழைக்கும் காலம் வரலாம் ….. யார் கண்டது? பிக்குகளிடம் உங்கள் வீரத்தை காட்டும் கோழைகளே அப்பாவிகளிடம்மோதுவது வீரம் இல்லை என்பதுகூட உங்களுக்கு தெரியவில்லை…..அடித்தவனை அடிக்காமல் பிரான்சுக்கும் லண்டனுக்கும் போனது ஏன்? உங்களின் வெறிக்கு இந்தியாவில் சாதி என்றும் இலங்கையில் தமிழ் தேசிய உணர்வென்றும் பெயரோ? உங்கள் நியாயங்கள் எப்போதுமே சந்தேகத்திற்குகிடமானவை….

  194. பெரிய கமென்ட்களுக்கு மெள்ளத்தான் பதில் போடுவேன். ஓடிவிட்டதாக நினைக்க வேண்டாம்.

  195. கொற்கை பாண்டியன்,

    உங்களுக்கு என்னை பெருமாள் கள்ளன் என்று அழைப்பதுதான் பிடித்திருக்கிறது என்றால் தாராளமாக அழைக்கலாம். பெருமாள் கள்ளனுக்கும் பெருமாள் தேவனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

  196. நாங்கள் உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில் போடுகிறோம். நீங்கள் லாவகமாக எங்கள் கேள்விகளைத் தாண்டிச் செல்கிறீர்கள்.

    இதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம்.

  197. வல்லவமாறன்,

    //இந்த காலத்திலும் சாதியின் பெயரை சொல்லி தீண்டாமை செய்ய வேண்டாம் என்று சொன்னால் சாதி ஒழிப்பு கோசம் ஆகிவிடுமோ. சாதி ஓழிப்பு எங்களது நோக்கம் இல்லை.//

    அப்படியானால் நீங்கள் சாதியை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதோடு சாதிப் பெருமையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    // சாதி பெயர் சொல்லி தங்களை போன்றவர்கள் காலம் காலமாய் நடத்தி வரும் கொடுமை நிறுத்துங்கள் என்று கேட்டால் வேடதாரி..//

    சாதிப் பெயரைச் சொன்னால் எதற்காக கலவரம் ஏற்படுகிறது? சாதி ஒன்றுக்கு நல்லது ஒன்றுக்கு கெட்டது என்று சொல்லும்போது அது வேடம் இல்லாமல் வேறு என்ன?

    // அப்படி ஆனால் வெறும் சாதிய பெருமை மட்டுமே பேசிக்கொண்டு சாதியத்தின் பேரில் நடத்த படும் கொடுமைக்கு துணை நிற்கும் அனைவரும் வேடதாரி.//

    சாதிப் பெருமை இருக்கப் போய்த்தானே பேசுகிறார்கள். உண்மையை பேசுவது எப்படி வேடமாகும்? இல்லாததைப் பேசும்போதுதான் வேடமாகும்.

    // போராட்டம் பண்ணியதால் தான் சுதந்திரம் கிடைத்து என்று மறந்து விட கூடாது. சாதியம் பேணி தீண்டாமை ஒழிப்போம் என சொல்லும் உங்களை போன்றவரகளை வேடதாரிகளின் அரசன் (ஆண்ட பரம்பரை)//

    தீண்டாமையையே ஒழிக்க முடியாதவர்கள் சாதியை ஒழிப்பார்கள் என்று சொன்னால் நம்ப வேண்டுமாம். சாதியில் இருப்பவர்கள் தீண்டாமையை ஒழிக்க முடியும் என்றால் முடியாதாம். ஹாஹாஹா

    //நல்ல / சுப யோகா நேரம் பார்துகொண்டிகிறேர்கள் போல இருகின்றது. 2000 வருஷத்துக்கு மேல இருக்கிற கொடுமை நல்ல நேரம் பார்த்து தீர்த்து வைக்கும் அண்ணன் (மனிக்கவும் – ஓரு தலித் என்னை எப்படி அண்ணன் என்று கூறுவது என்று கோப பட வேண்டாம்) மற்றும் அண்ணனை போன்ற நல்ல (!!!) உள்ளம் படைத்தவர்களால் தீண்டாமை ஒழிய போகின்றது என்பதை பெருமையுடன் (கூரிகொல்லுகிரேன்).//

    கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
    குத்தொக்க சீர்த்த இடத்து

    இதை நான் சொல்லவில்லை. ஐயன் வள்ளுவர் சொன்னது.

    //நீங்கள் சாதி வெறி என்று எழுதி துவேசம் பரப்புங்கள் பரப்பாமல் போங்கள், அந்த தேவை எப்போது வந்தாலும் உங்களை போன்ற நல்ல (!!!) உள்ளம் படைத்தவர்களால் தீண்டாமை செய்ய படுவதை மறக்காமல் எழுதவும். இபோழுதும் நடந்து கொண்டிருக்கின்றது அதை முன்னால் பத்திரிகையாளர் திரு பெருமாள் அவர்கள் நிறைய (!) எழுதி உள்ளார்கள் என்று நினைகிறேன் (ஆச்சர்ய குறி).//

    சாதித் துவேஷத்தை யார் எழுதுகிறார்கள் என்று தெரியும் பொறுத்திருந்து பாருங்கள். நான் எழுதப் போகிறேன் என்றுதான் சொன்னேன். எழுதி இருப்பதாக சொல்லவில்லை.

    //”அதற்காக தீண்டாமை கொடுமை யாராவது செய்திருந்து அதை ஊடகங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதை “அவர்கள் காட்டும் தீண்டாமை வெறியை எழுத்தில் காட்டுவதும் சாதிவெறியே” என்று சொன்னால் நீங்கள் உண்மையாகவே பத்திரிகையாளர்” நீங்கள் கூறியிருக்கும் மறுமொழி இதற்கு தானா என்று புரிய வில்லை.”அவர்கள் காட்டும் தீண்டாமை” என்று சொல்லதேர்கள் “நாங்கள் கட்டும் தீண்டாமை” என்று சொல்லுங்கள்//

    சாதி என்ற பெயரில் அராஜகம் செய்தாலும் சாதிவெறிதான். எழுதினாலும் சாதிவெறிதான்.

    // . சாதி கேட்டது இல்லை நல்லது என்பது விவாதம் இல்லை சாதியின் பெயரால் உங்களை போன்ற நல்ல (!!!) உள்ளம் படைத்தவர்களால் செய்ய படும் கொடுமை கெட்டது என்று விவாதிக்கிறேன்.//

    சாதி நல்லது என்றால் அடுத்த கட்டத்திற்கு வந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். அதில் உள்ள கெட்டதை மட்டும் பேசுங்கள் எல்லாத்தையும் பேசுவது நீதி ஆகாது.

    //உங்களை போன்ற நல்ல (!!!) உள்ளம் படைத்தவர்கள் இருக்கும் வரை தீண்டாமை அகற்ற முடியாது. நீங்கள் தீண்டாமை கடை பிடிக்கும் உங்களை போன்ற ஓருவரை நீங்கள் நல்லவர் என்று பராட்டுவீர்களோ, வெளிநாடுகளில் வேலை பார்க்கும் உங்கள் சக ஆதிக்க சாதியினர் வெள்ளைகரனிடம் வேலை பார்க்கும் போழ்து அவன் தீண்டாமை (normally the foreginers (including arabi, europeans) treat indians very badly) போன்ற செயல்களில் ஈடு படும் பொழுது அவனை நல்லவன் என்று புழ் பாடு வீர்கள் என்று நினைகிறேன்.//

    தீண்டாமையை கடைப்பிடிப்பவர்களை நான் நல்லவர்கள் என்று சொன்னேனா? ஆச்சரியக் குறி உங்களுக்கு பிடித்த குறியென்று நினைக்கிறேன்.

    //நீங்க செய்யாத (தீண்டாமை) ஓரு விஷயத்தை செய்ததாக சொன்னால் போங்க வேண்டியது ஞாயம் தான். தீண்டாமை என்னும் பேய் உங்கல் ஓவ்வொரு வருடன் உள்ளது. அதை இந்த காலத்திலும் செயாதேர்கள் என்று சொன்னால் என்னிடம் மண்டி போட்டு கேள் என்னை தீண்டாமை கொடுமைக்கு உள்ளக்கதேர்கள் என்று கேட்க சொல்லுகிறேர்கள். இந்தியா ஜனநாயக நாடு என்று நினைத்திருந்தேன் (முன்னால் பத்திரிக்கை யாளர் கூறிய பிறகு சட்டப்படி போராடினால் வேளைக்கு ஆகாது என்று.//

    நீங்களே உத்தரவிடும் நிலையிலிருந்து உத்தரவிடுங்கள் என்றுதான் சொல்கிறேன். சட்டம் இருக்கிறபோது பேனா எதற்கு? நேரடியாக சட்டத்தை வைத்தே போராடலாமே? எதற்கு விஷம பிரச்சாரம்?

    //தீண்டாமை பேய் உங்கள் மனதில் உள்ளது. அதை விரட்ட உங்கள் ஜாதி என்னும் உந்து சக்தி தடுகின்றது. இது தான் நிதர்சன உண்மை. நீங்கள் எந்த விதமாக மறுமொழி கூறினாலும் உங்களால் (உங்களை போன்றவர்களால் – எனக்கு நிறைய தேவர் இன நண்பர்கள் உள்ளார்கள். அவர்கள் யாரிடமும் பார்க்காத இந்த வெறி உங்கள் பின்னோடங்களில் தெரிகின்றது) அந்த உந்து சக்தியை கடந்து உங்களில் இருக்கும் பேயை விரட்ட முடியது.//

    நிச்சயமாக நானும் எனது தலித் நண்பர்களிடம் இந்த அளவு சாதிவெறியைப் பார்த்தது கிடையாது. ஆனால் இதுபோன்ற விஷமப் பிரச்சாரம் தலித்களை எங்கே கொண்டு சேர்க்கும் என்பதை என்னால் நன்றாக உணர்ந்துகொள்ள முடிகிறது. நன்றாக நடத்துங்கள்.

    // உந்து சக்தியை கட்டு படுத்த மட்டும் முடியும் உந்து சக்தியை நீக்க கூடாது (முடியாது). யாரையும் கெட்டவர்களாக சித்தரித்து ஓரு பயனும் இல்லை. நல்லவை கெட்டவை இரண்டும் இருப்பது தன் உலகம். சாதியை கெட்டவர்களாக சித்தரிக்க வில்லை. அதில் உங்களை போன்ற சில நல்ல (!!!) உள்ளம் படைத்த சிலரின் செயல் பாடுகள் வேதனை அளிக்கின்றது. இதை நீங்கள் எப்படி எடுத்தாலும் எனக்கு பரவாஇல்லை.//

    உங்களுக்கும் அதேதான்.

    //நான் முற்போக்கு வாதியும் கிடையாது , பிற்போக்கு வாதியும் கிடையாது. மனிதன் மட்டுமே. உங்களை போன்ற ஆதிக்க ஜாதியினரை பழித்து இல்லை புறம் சொல்லி எனக்கு ஓன்னும் பிரயோஜனம் இல்லை. எங்களை போன்ற தலித்துகளை கேவல படுத்துவதால் நீங்கள் பெரிய அரசனும் இல்லை.//

    அதைத்தான் நீங்கள் செய்து வருகிறீர்கள். நான் பிற்போக்குவாதி. யதார்த்தவாதி.

    //திரு பெருமாள், இந்த பின்னூடத்திற்கும் நீங்கள் அளித்திருக்கும் மறுமொழிக்கும் (ஹாஹாஹா நான் தலித் சாதிவெறியை பலமுறை நேரடியாகப் பார்த்தவன். முத்துராமலிங்கத் தேவரின் பெயரில் 3 கல்லூரிகள் உள்ளன. அங்கு ஒவ்வொரு ஆண்டும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நூற்றுக் கணக்கான தலித் மாணவர்கள் படித்து வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்) என்ன சமபந்தம் என்று புரிய வில்லை.ஓரு வேலை நீங்ள் தான் அந்த மூன்று கல்லூரிகளுக்கும் தாளாளர் ஓஹ. நான் உங்களது மறுமொழி பத்தி சொன்ன நீங்க எங்கையோ இருக்கிற காலேஜ் பத்தி பேசறேங்க.//

    ஆமாம். தேவர்கள் எல்லாரும் சாதிவெறி பிடித்தவர்களாக இருந்தால் இந்த கல்லூரிகளில் ஒரு தலித்தாவது படிக்க முடியுமா? அதனால்தான் கேட்டேன்.

    // அபபவும் வந்து உங்க கிட்ட (உங்களை போன்ற ஆதிக்க ஜாதி என்னும் பேய் பிடித்த) வந்து பேச்சு வார்த்தை நடத்தனும். இப்பவும் சொல்லறேன் நீங்க (திரு பெருமாள்) மனுஷன மனுஷனா பார்க்கிற மனிதன் இலலை.//

    சரி, சரி, இத்தாலிக்காரன், அமெரிக்காகாரன்கிட்டே பேச்சுவார்த்தை நடத்துங்கள் அவன் உங்களுக்கு நன்மை செய்வான்.

    //பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கேடு குடுத்தால் மட்டும் சமமா நடதிருவேங்கள என்ன திரு பெருமாள். கண்டிப்பா இலலை (முதலில் நீங்க வாங்க அப்பறம் பார்க்கலாம் என்று வெட்டி பந்தா உடதேங்க ப்ளீஸ் எது சாத்தியமோ அதை சொல்லுங்கள் this is only a public forum so please interact accordingly Mr.Ex Pressman). உதாரணம் : இவ்வளவு சலுகை குடுத்த பிறகும் படிக்கும் சிறுவர்கள் உட்பட ஊர் தெருவுக்குள் போக வேண்டுமானால் செருப்பை கழட்டி விட்தான் போகணும் கோவை அருகே.//

    ஐயா அறிவாளி அந்த ஊர்க்காரனை எல்லாம் திட்டினால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும் என்றால் நன்றாகத் திட்டுங்கள். உண்மையில் தலித்களின் நோக்கம் தீண்டாமையை போக்குவது இல்லை. அதை வைத்து பிழைப்பு நடத்துவது. அதைப் போக்குவதாக இருந்தால் என்றைக்கோ போக்கியிருக்கலாம்.

    // சும்மா பொருளாதார அடிப்படையில் இட ஓதுக்கீடு என்பது உங்களை போன்றவர்களின் “கேவலம் இவனுங்க எல்லாம் எனக்கு மேலே வாராத” என்னும் என்ன ஓட்டம். இத்தனைக்கும் இட ஒதுக்க்கீடு பெரும் ஆண்ட பரம்பரைகளும் உண்டு. ஓரு பொதுவான விவாதம் நீங்கள் கூறுங்கள் எத்தனை பன்னகார தேவர் இன மக்கள் இப்போது உங்களுக்கு குடுக்க படும் இட ஒதுக்க்கீடு வேண்டாம் என்று உதறி உள்ளாகள். நியாயமாக பின்னோட்டம் இடுங்கள். (நீங்களும் பொருளாதார அளவில் முன்னேறி உள்ளீர்கள் என்று நினைகிறேன்)//

    ஐயா பஹூத்தறிவாளி,

    தேவர்கள்தான் சாதி அமைப்பை ஏற்றுக் கொள்கிறார்களே? அதன்படி அவர்களுக்கு கிடைக்கும் சலுகையை அவர்கள் ஏன் ஒதுக்க வேண்டும். நீங்கள்தான் சாதி இல்லை, மதம் இல்லை என்று பிதற்றித் திரிகிறீர்கள். நீங்கள்தான் சாதி அடிப்படையில் கொடுக்கப்படும் சலுகையை தூக்கி எறிந்து சாதிக் கட்டமைப்பை உடைக்க வேண்டும். அவர்களுக்கும் சொத்து இருக்கா, இல்லையா என்று பார்த்துதான் சலுகை தருகிறார்கள்.

    //நான் எனக்கு பிறக்க போகும் குழந்தைக்கு ஜாதியின் பெயரால் வழங்க படும் சலுகை வேண்டாம் என கூற உள்ளேன் (எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை) ஏன் என்றால் இன்னும் எத்தனயோ தலித் இன்னும் பொருளாதாரதில் (சமூகதில் உள்ள தாழ்வு நிலை என்றும் உங்களை போன்ற எண்ணம் கொண்ட மனிதர்கள் (!) இருக்கும் வரை மாறப்போவது) தாழ்ந்த நிலையில் உள்ளனன்ர் அவர்களுக்கு வழி விட வேண்டும். இது முற்றிலும் எனது கருத்தாக பதிவு செய்கிறேன் ப்ளீஸ் இதுக்கும் எதாவது ஓரு (வழக்கம் போல) ஏகதாளம் பேசிகிட்டு இருக்கதேங்க.//

    நீங்கள் எகத்தாளமாக பேசுவது உங்களுக்குத் தெரியாது நாங்கள் பேசினால் கப்புனு பிடிச்சிக்கிறீங்களே எப்படி? அதற்கு முன்னால் நீங்கள் உங்கள் சாதியை விட்டு வெளியேறிவிட்டீர்களா என்பதை நிரூபியுங்கள்.

    // தெரிஞ்சு என்ன பண்ணலாம்.//
    தெரிஞ்சாத்தான் ஞானம் பிறக்கும்.

    // இதை போல ஓரு பொது விவாத மேடையில் பெருமை பேசலாம். பொதுவாக north indians தமிழ் தான் பழைய மொழி என்றால் ஒத்துக்க மாட்டங்க அவங்களுக்கு சமஸ்க்ரிதம் பழைய மொழி.//

    வடஇந்தியர்களின் பழைய மொழி சமஸ்கிருதம் கிடையாது. சமஸ்கிருதம் ஒருபோதும் பேச்சு மொழியாக இருந்தது கிடையாது. 2500 ஆண்டுகளுக்கு முன்னர் புத்தர் பயன்படுத்தியது பாலி, மகாவீரர் பயன்படுத்தியது பிராகிருதம். அதற்கும் முன்னால் என்ன மொழிகள் இருந்தன என்று யாருக்கும் தெரியாது.

    // அவங்க அவங்களுக்கு அவங்களோட பெருமை முக்கியம் அதற்காக மற்ற எல்லோரும் கேவலம் நு நெனைக்கும் உங்களை போன்றவர்களை என்ன சொல்லுவது. உங்களோட வரலாறு எனக்கு தெரியனுமுன்னு அவசயம் இல்லை, “வேலை செய்ய முடியறவன் வேலைய செஞ்சிக்கிட்டிருப்பான். வேலை செய்ய முடியாதவன் பெருமை பேசிக்கிட்டிருப்பான்” நான் உங்களின் பாரம்பரியத்தை தப்பு சொல்ல வில்லை ப்ளீஸ் நீங்கள் அந்த கண்ணோட்டத்தில் எடுக்க வேண்டாம்.//

    என்னோட பெருமையை நீங்க தெரிஞ்சுக்க வேண்டாம். உங்க பெருமை என்னனு தெரிஞ்சுக்கத்தான் சொல்றேன். தனது பெருமை எவனுக்குத் தெரியாதோ அவன்தான் அடிமையாக இருப்பான். சுதந்திரமானவன் சாதனை படைப்பான்.

    //மரியாதை, நாகரீகம், இங்கிதம் – உங்களது பின்னோட்டங்கள் வெளிபடுத்துகிறது (சொக்க தங்கம் படத்தில் வரும் ஓரு காட்சி ஞாபகம் வருகிறது)//

    இன்னும் நிறையப் படங்கள் உங்களுக்கு ஞாபகம் வரலாம். அதற்கு நான் பொறுப்பல்ல.

    //please do know that i am fellow human being. i am not a Marxist or communist. The facts and reality can be spoken by any one. it is not required to be Marxist or communist.//

    I don’t bother about it.

    //Any way once again i am asking sorry if my view hurts you or it is against your view…//

    I will talk loudly even my point hurts somebody and I stick to truth. Truth always be bitter and hurts.

    //please post your view., i am not going to reply for your comments once again i am tired of replying with a human without the nature of a normal human//

    I will follow until the last comment.

    Thanks for accepting I am a abnormal human being. It was told even to great personalities.

  198. ஐயா வேங்கையன்,

    –////ரெம்பத்தான் புத்திசாலித்தனம்னு நெனப்பா..நீங்க மருது பாண்டியர்களை கொண்டாடுறீங்களா உடயணனை கொண்டாடுறீங்களா என்றா கேட்டேன்.நா கேட்டது 150 வருஷமா சிவகங்கை ஜமீனை ஆண்ட இப்பவும் அதன் சொத்துக்களை அனுபவிக்கும் துரோக கும்பல் உங்க ஆண்ட பரம்பரையில சேருமா சேராதா.அதுக்கு என்ன பதில்.//

    இந்த கேள்விக்கு உங்கள் பதில்//

    இந்த கேள்விக்கு ஏற்கனவே பதில் அளித்துவிட்டேன். வினவு அதை போடவில்லை என்று கருதுகிறேன்.

    ஆட்சியாளர் நல்லவராக இருந்தாலும் கெட்டவராக இருந்தாலும் ஆட்சியாளர்தான். அந்த வகையில் நல்லவரா இருந்தாலும் கெட்டவரா இருந்தாலும் ஆண்டபரம்பரை ஆண்ட பரம்பரைதான்.

    ஆனால் நல்லவரை உலகம் பாராட்டும். கெட்டவரை கண்டுகொள்ளாது.

  199. என்ன வினவு,

    என்னோட கமென்ட்களைப் போடுவதற்கு கஷ்டமாக இருக்கிறதா?

    ஏகப்பட்ட கமென்ட்களை ஏன் ஏப்பம் விடுகிறீர்?

  200. அய்யா பெருமாளு, இத்தனை கமெண்ட் போட்டு உங்க சாதி பெருமையை நிலைநாட்டுவதற்குப் பதில், எதாவது உருப்படியா வேலை செஞ்சு இருந்தன்னா, அதுல கிடைத்திருக்கூடிய வருமானத்தை வைச்சு பிள்ளை குட்டியை படிக்க வைச்சு இருக்கலாம். குறைந்த பட்சம் ஒரு கட்டிங்காவது வாங்கி அடிச்சிட்டு குப்புற கவுந்து படுத்து இருக்கலாம்

  201. //vijayabaskar

    அய்யா பெருமாளு, இத்தனை கமெண்ட் போட்டு உங்க சாதி பெருமையை நிலைநாட்டுவதற்குப் பதில், எதாவது உருப்படியா வேலை செஞ்சு இருந்தன்னா, அதுல கிடைத்திருக்கூடிய வருமானத்தை வைச்சு பிள்ளை குட்டியை படிக்க வைச்சு இருக்கலாம். குறைந்த பட்சம் ஒரு கட்டிங்காவது வாங்கி அடிச்சிட்டு குப்புற கவுந்து படுத்து இருக்கலாம்//

    ஹாஹாஹா

    ஐயா விஜய்பாஸ்கர்,

    உங்க கஷ்டம் எனக்குப் புரியுது. ஒரு கள்ளன் வந்து இவ்வளவு கமெண்ட் போட்டுக்கிட்டு இருக்கிறானே என்றுதானே கவலைப்படுகிறீர்கள்?

    இன்னும் நிறையபேரு வெளிய வராம இருக்கிறாங்க. அவங்க எல்லாம் வந்தா உங்க இரட்டை வேடம் எடுபடாது.

    நாங்க எங்க வேலையை பார்த்துக்கிட்டுத்தான் இருக்கிறோம். நீங்க உங்க வேலையை பாருங்க.

  202. –//Vallavamaran
    Comment:
    Dear Vinavu Please post the below article which was posted in keetru.com. please do post the same which has the replies for the most of comments given.

    http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22863:2013-02-05-06-55-43&catid=1:articles&Itemid=264//

    ஹாஹாஹா

    கீற்று பெரிய அண்ணன், வினவு சின்னத்தம்பி.

  203. // @HisFeet

    @Perumal Dummy, I am not a Dalit. I am a Christian. My forefathers are outcasts. I am telling why they left hinduism.//

    ஐயா அவன்பாதம்,

    உங்கள் முன்னோர்கள் அவுட்கேஸ்ட் என்றால் என்ன அர்த்தம்? வேற்றுக் கிரகத்திலிருந்து வந்தவர்களா? அவர்கள் எதற்காக இந்து மதத்தை கைவிட்டார்கள். கிறிஸ்தவ மதத்தில் என்ன பெற்றார்கள்?

    நீங்கள் தலித் இல்லை என்றால் நியாயத்தின் பக்கம் நின்று தலித்களுக்கு ஆதரவாக பேசுகிறீர்களா? அல்லது விட்டகுறை தொட்ட குறையால் பேசுகிறீர்களா?

  204. TAMIL PEOPLE HAS THE SCIENTIFIC HISTORY FOR OVER 60000 YEARS

    A team of Indian scientists have discovered genetic evidence that tribal villagers living in Tamil Nadu were among the first migrants from Africa to settle down in India.

    Geneticists led by Prof Ramaswamy Pitchappan of Madurai Kamaraj University have found out that the marker gene in the group of people from a small village Jyothimanickam near Madurai matched those of the first settlers in India. The findings point to the fact that the villagers are among the direct descendants of the first settlers.

    Pitchappan who conducted the research in collaboration with Oxford Research University found that DNA of Virumandi Andithevar, a 30-year-old systems administrator from the village, matched M130, the chromosome marker, which gives proof that the first human migration into India took place around 70,000 years ago.

    “The M130 is the oldest marker in India and there is no other marker older than that for India. The DNA samples from, Virumandi and others were found to have this marker and we were able to deduce that they were among the first human settlers in India, who obviously spread from Africa,” Pitchappan who is Prof Emeritus at the Madurai Kamraj University told PTI.

    The findings will be aired on Discovery Television, where historian Michael Wood will narrate the story of the world’s most ancient civilization in the six part series ‘The Story of India’ beginning on April 16.

    Modern Faces give clues to Ancient Migration

    http://www.abroadintheyard.com/modern-faces-ancient-migration/

    http://www.springgrovemnheritagecenter.org/spencer-wells-on-how-dna-reveals-our-history/

    http://news.nationalgeographic.com/news/2002/12/photogalleries/journey_of_man/photo2.html

    Spencer Wells on How DNA Reveals our History

    http://www.springgrovemnheritagecenter.org/spencer-wells-on-how-dna-reveals-our-history/

  205. ஐயா வேங்கையன்,

    //நல்லது.சாதி அபிமானத்தை மீறி இன்னும் உங்கள் மனதில் நியாய உணர்ச்சி இருக்கிறது நன்றி. ஆண்ட பரம்பரையிலும் அயோக்கியர்களும் துரோகிகளும் இடம் பெறுகிறார்கள்.நீங்களே சொல்றீங்க ஆகவே ஆண்ட பரம்பரை என்று பெத்த பெருமை பேசுவதில் அர்த்தமே இல்லை,தேவர் சாதியிலும் வெறியர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களின் தீண்டாமையை எதிர்த்து போராட வேண்டியது மற்ற தேவர் சாதியினருக்கு கடமை.//

    ஆண்டவன் ஆண்டவன்தானே? அந்த பெருமை பேசுவதில் என்ன தவறு?

    தீண்டாமையை எதிர்த்துப் போராட வேண்டியது எங்கள் கடமைதான். ஆனால் எங்களை ஒட்டுமொத்தமாக சாதிவெறியர்கள் என்று ஏசுவோருக்ககாக நாங்கள் எதற்காக நாங்கள் தீண்டாமையை பற்றி யோசிக்க வேண்டும். எங்கள் அருமை தெரிந்து வந்தால் அது பற்றி யோசிப்போம். இல்லாவிட்டால் நீங்களே ஒழித்துக் கொள்ளுங்கள்.

    //ஆகவே உங்கள் இடத்தை ஒழுங்கமைத்து விட்டு தேவர் சாதி வெறி என எழுதாதேன்னு எங்களுக்கு ஆணையிடலாம். அது வரை அதற்கு உங்களிடம் உரிமை இல்லை.//

    அதேபோல தலித் சாதி வெறி இல்லாத போது நீங்கள் தேவர் சாதிவெறி பற்றி எழுதலாம் அல்லவா?

    //அப்புறம் ஒரு விவரப் பிழை.சிவகங்கை புதுக்கோட்டை ராமநாதபுரம் துரோக கும்பல் இன்னமும் ஆட்சி செய்து வருவதாக கற்பனை உலகில் சஞ்சரிக்க வேணாம்.அவர்கள் ஆட்சி வெள்ளைக்காரன் காலத்தோட முடிஞ்சு போச்சு.இப்படியான வீண் கற்பனைகள்தான் உங்களை ஆண்ட பரம்பரை மயக்கத்தில் ஆழ்த்தி மூளையை மழுங்கடிக்கிறது.//

    நல்லது. நாங்கள் தெளிவாகத்தான் இருக்கிறோம். இன்னைக்கு உள்ள தேவர் எம்எல்ஏக்கள் (அவர்கள் எந்த கட்சியில் இருந்தாலும)எத்தனை பேர் என்றும் தலித் எம்எல்ஏக்கள் எத்தனை பேர் என்றும் நீங்களே கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். ஆக, இன்றும் நாங்கள் ஆண்ட பரம்பரையாகத்தான் இருக்கிறோம்.

    • // ஆண்டவன் ஆண்டவன்தானே? அந்த பெருமை பேசுவதில் என்ன தவறு? //

      இந்த ஏகாதிபத்திய உலகமயக் காலகட்டத்தில் சாதி, மதம், இனம் , மொழி என வேறுபாடின்றி அனைத்து உழைக்கும் மக்களும் உள்நாட்டு, பன்னாட்டு முதலாளிகளால் சுரண்டப்படுகிறார்கள்.

      விலைவாசி உயர்வு, விவசாய விளைபொருட்களுக்குப் போதிய விலையின்மை, வேலையிலாத் திண்டாட்டம், பணிப்பாதுகாப்பின்மை, தனியார் பள்ளி, கல்லூரிகளில் அதிக கட்டணத்தால் கல்வி வியாபாரமயமாக்கப்பட்டிருப்பது, கார்ப்பரேட் சீரழிவுக் கலாச்சாரத்தால் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் இவையெல்லாம் மக்களின் அன்றாடப் பிரச்சனைகளில் முக்கியமானவை.

      பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் பிரச்சினையாக (தேவர் சாதி உழைக்கும் மக்கள் உள்ளிட்டு) இருக்கும் இவையனைத்தையும் எதிர்த்துப் போராடுவதற்கு எந்த வகையில் இந்தச் சாதிப் பெருமை உதவும்?

      கீழ்க்காணும் கேள்விகளுக்கு ஆதிக்க சாதிப்பெருமை பேசுபவர்கள் பதிலளிக்க வேண்டுகிறோம்.

      ஆதிக்க சாதி பெருமை பேசும் உழைப்பாளி மக்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்:

      1. ஆதிக்க சாதியை சேர்ந்த ஒரு பேருந்து முதலாளி தனது சாதி மக்களுக்கு சலுகைக் கட்டணம் பயணத்தை அனுமதிப்பாரா ?

      2. ஆதிக்க சாதியை சேர்ந்த மற்றும் முதலாளிகளின் வீட்டுப் பெண்ணுக்கோ அல்லது பையனுக்கோ அதே சாதியில் உள்ள கூலி விவசாயியை, ஏழையை, தொழிலாளியை திருமணம் செய்து கொடுப்பாரா ? அல்லது தெரியாமல் காதலித்துவிட்டால் தான் சேர்த்துவைப்பாரா ?

      3. ஆதிக்க சாதியை சேர்ந்த பண்ணையார் தனது சாதியை சேர்ந்த கூலி விவசாயிக்கு அதிக கூலி கொடுப்பாரா ? கொடுக்கிறாரா ?

      4.தொழிற்சாலையில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த முதலாளி, நிர்வாக அதிகாரி போன்றோர் தனது சாதிக்கார தொழிலாளி என்பாதால் சலுகைக் காட்டுவாரா ? அதிக சம்பளம் கொடுப்பாரா ? சங்கம் கட்ட அனுமதிப்பாரா ?

      5. ஆதிக்க சாதியைச் சேர்ந்த் பள்ளி, கல்லூரி முதலாளிகள் அதே சாதியில் உள்ள மாணவனுக்கு இலவசமாக கல்வி வழங்குவாரா ? குறைந்தபட்சம் அய்யோ பாவம் என்று அதிக கட்டணம் வசூலிக்காமல் கல்வி கொடுப்பாரா ?

      6. ஆதிக்க சாதிக்காரர் வைத்திருக்கும் மளிகை கடையில் எங்க சாதிக்காரனுக்கு மட்டும் தான் பொருள் விற்பனை என அறிவிக்கத் தயாரா ? அதையும் சலுகை விலையில் வழங்கத் தயாரா ?

      7. ஆதிக்க சாதியில் பிறந்து வரதட்சணை கொடுக்க முடியாமல் திருமணம் ஆகாமல் நொந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான உழைப்பாளி பெண்களுக்கு வரதட்சணை இல்லாமல் வாழ்க்கை தரவேண்டும் என்று அதே சாதி இளைஞர்களை வலியுறுத்த ஆதிக்க சாதிச்சங்கங்கள் தயாரா ?

      8. நான் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் எங்கள் சாதிக்காரன் தயாரித்தால் மட்டுமே பயன்படுத்துவேன் என்று ஆதிக்க சாதி வெறியர்கள் கூறத் தயாரா ?

      9. ஆதிக்க சாதி பெருமை பேசி திரியும் ஒருவர் பேருந்தில் ஏறும்போது தாழ்த்தப்பட்டவர் வண்டி ஓட்டுகிறார் என்றால் ஏறாமல் விட்டுவிடுவாரா ? அதிகாரி தாழ்த்தப்பட்டவர் என்றால் கூழைகும்பிடு போடாமல் இருப்பாரா ?

      10. ஆதிக்க சாதிக்காரர் உபயோகிக்கும் ரூபாய் நோட்டை இதற்கு முன் தாழ்த்தபட்ட ஒருவர் கையில் இருந்து வாங்கி இருந்தால் இவர் அதை கீழே போட்டுவிடுவாரா?

      11. தொழிலாளியாக ஆலைக்குள் நுழையும்போது, பேருந்தில் ஏறும்போது சாதி குறுக்கே வருகிறதா ? அங்கே சாதி பெருமையை பேச முடியாதது ஏன் ?

      12. ஆதிக்க சாதிக்காரர்கள் தனது சாதிக்கு மனு இட்ட கட்டளைகளை, பழக்க வழக்கங்களை அப்படியே கடைபிடிக்க முடியுமா ? முடியவில்லை என்றால் காரணம் என்ன ?

      13. ஆதிக்க சாதிக்காரர்கள் என்றால் காவிரித் தண்ணீர் உடனடியாகவோ, மின்சாரம் தடையில்லாமலோ கிடைத்து விடுகிறதா?

      14. அன்றாடம் ஆயிரம் வேலைகளில் வர்க்கமாக ஒன்றுபட்டு நிற்கின்ற உழைப்பாளிகளை சாதியாக பிளப்பதால் ஆதாயமடைவது முதலாளிகள்தான் என்பது தெரியவில்லையா ? ஆதிக்க சாதியில் பிறந்து அரும்பாடுபடும் தொழிலாளி தனது உரிமையை கேட்க சங்கம் கட்டுவதை தடுக்கும் முதலாளிகளின் வீடுகளை ஆட்களை திரட்டி இடிப்பதற்கு ரோஷம் வராததன் மர்ம்ம் என்ன ?

      15. சாதி வெறியை தூண்டிவிட்டு துப்பாக்கி சூடு, சிறைவாசம், வழக்குகளுக்கு ஆளாகிய உங்களின் நிலையும் , இதனால் ஆதாயம் அடைந்து சொத்து சேர்த்துள்ள தலைவர்களின் யோக்கியதையும் தெரியுமா ?

      கட்டுரைக்கான இணைப்பு: ஆதிக்க சாதி பெருமை பேசும் உழைப்பாளி மக்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்…
      https://www.vinavu.com/2012/12/19/questions-to-cast-minded-people/

  206. @வினவு

    இந்த பிண்ணுட்ட பெட்டியையும் மூடிவிட்டு மீண்டும் இந்த “ஆண்ட”ப்பரம்பரைகளைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுவோம் என குறிபிடுங்கள்..வழக்கமா..இது தானே நடக்குது.முடிந்தால் உண்மையை எழுதுங்கள்.

    இன்னும் ஓருமுறை எங்களைப் பற்றிய பொய்யான தகவலோடு கட்டுரை வருமெனில்.. கடும் கண்டங்களை மீண்டும் மீண்டும் பதிவோம்… உங்களை போன்ற போலி கம்னியூஸ்ட்கள் முகமூடிகளை கிழிப்போம்..! சீழ்பிடித்தவாதிகள்..முற்போக்குபேதிகளின் முகமூடிமட்டுமல்ல வேட்டியும் சேர்ந்து கிழியும்

    கைரேகை சட்டத்தின் போதே விரலை வெட்டிக்கொண்டவர்கள் நாங்கள்… விரல்களை வெட்டிக்கொண்ட எங்களுக்கு தவறாக எழுதும் விரல்களை வெட்டவும் தெரியும்…!

    மீண்டும் முக்குலோத்தோர் 250 வருடங்களுக்கு முன்னால் நடத்திய போரை நடத்தைனோமானல்..தென்மாநிலங்கள் முழுவதும் வானத்தில் கழுகுகள் பறக்க..மண்ணில நரிகளுக்கும்.. நாய்களுக்கும் மனித மாமிசமே உணவாகும்.

    • அய்யய்யோ ! எல்லாரும் பயந்திடுங்க, இல்லேன்னா தியாகு அண்ணன் இது மாதிரி ஏதாச்சும் கழிஞ்சுகிட்டே இருப்பாரு….

  207. வல்லவமாறன்,

    //நீங்கள் தமிழர்களாய் வீதிகளில் திரண்டு போராடும் போது எனக்கான இடத்தை தேடிக்கொண்டே இருக்கிறேன் ….//

    நாங்களும் இந்த இரட்டை வேடத் தமிழர்களிடமிருந்து ஒதுங்கி இருக்கவே ஆசைப்படுகிறோம்.

    //தமிழனின் மானம் காக்கவும் உரிமை மீட்கவும் கோஷங்கள் எழுப்பியபடி நீங்கள் ஊர்வலம் போவதை நீங்கள் எரித்த எங்கள் குடிசையின் வாசலில் நின்றபடி பார்த்து கொண்டுதான் இருக்கிறேன் …இதே மாதிரி கும்பலாய் வந்துதானே எங்கள் வீட்டை எரித்தீர்கள் …..அந்த கணத்தில் நாங்கள் தமிழில்தானே கதறிஅழுதோம் ……நீங்கள் சிதைத்த எங்கள் சகோதரிகளும் அழுது துடித்ததும் நீங்கள் முழக்கமிடும் இதே மொழியில்தான்……சிங்களவனுக்கும் உங்களுக்கும் பேதம் இருப்பதாய் எங்களுக்கு தெரியவில்லை. உங்கள் சொந்த ஊரில் எங்களை ஏற்று கொள்ளாத உங்களை எந்த நீதி மன்றத்தில் நிறுத்தி விசாரித்து தண்டிப்பது?//

    இப்போதுதான் வினவு மற்றும் தலித் தலைவர்கள் வன்முறைக்கு வன்முறை என்று சொல்கிறார்களே. அதையே கடைப்பிடிக்கலாமே. அவர்கள் உங்கள் குடிசைகளை கொளுத்தினால் நீங்கள் அவர்கள் குடிசைகளை கொளுத்துங்கள். உங்கள் பகுதிக்குள் வந்துவிட்டால் அடித்தே கொல்லுங்கள். அவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசுங்கள். அதுவே அவர்களுக்குச் சரியான தண்டனையாக இருக்கும். அப்புறம் அவர்களும் அப்படியே செய்வார்கள். யாராவது மிஞ்சி இருந்தால் அவர்கள் இருந்து விட்டுப் போகட்டும்.

    // …..வீசி நடக்கும் உங்கள் கைகளை உங்கள் நாசிக்கு அருகில் வைத்து பாருங்கள்…..நீங்கள் அள்ள திணித்த……பீ……வாடை தெரியும் …..இந்த கொடுமைகளை கொடியவன் ராஜபக்சே கூட செய்ததது இல்லை….அந்த நாற்றமடிக்கும் உங்கள் கைகளில்தான் சுதந்திர தமிழீழ பதாகை இருக்கிறது ……. எங்களை தினம் வதைக்கும் உங்களிடமிருந்து எப்போது விடுதலை கிடைக்கும் ?……சிறுவன் கொலை , பெண்கள் கற்பழிப்பு , சரணடைந்த அப்பாவிகள் படுகொலைகள் கண்டிப்பான தண்டனைக்குரிய குற்றங்கள்தான்…..//

    முற்போக்கு தலைவர்கள் எல்லாம் உங்களுக்குத்தான் ஆதரவளிக்கிறார்கள். சட்டங்கள் உங்களுக்குத்தான் ஆதரவளிக்கின்றன. காவல் நிலையங்களும் நீங்கள் என்றால் உடனே நடவடிக்கை எடுக்கிறார்கள். நீதி மன்றமும் விரைந்து விசாரிக்கிறது. அவர்களை வைத்தே இவர்களை சமாளிக்கலாமே?

    // உ­ங்கள் முழக்கங்கள் சாதி வெறியர்களால் புலைப்பாடியில் மின்சாரம் பாய்ச்சி படுகொலை செய்யப்பட்ட தலித் சிறுவர்களின் படுகொலைக்கும், சாதி இந்துக்களால் வன்புணர்ச்சிக்கு ஆளாகி மடிந்த சேரி பெண்களுக்குமான நீதியை சேர்த்து, உரத்து முழங்கட்டும்…..காரணமற்ற வகையில் தலித் என்பதாலேயே உங்களால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட அல்லது படுகொலை செய்யப்பட்ட எங்கள் சகோதரனின் சாவிற்கும் ஐ.நா.நீதி வழங்க வேண்ம்…….//

    பத்திரிகைகளும் உங்களுக்குத்தான் சாதகமாக உள்ளன. நீங்கள் சம்பந்தப்பட்ட செய்தி என்றால் உடனே வெளியிடுகின்றன. ஆதிக்க சாதியென்றால் அவர்களின் செய்தியை சேகரிப்பது கூட இல்லை. சட்டத்தின் ஆதரவோடு தலித்கள் செய்யும் அட்டூழியங்கள் வெளிச்சத்திற்கு வராமலே போய்விடுகின்றன. அதனால்தான் தலித் அல்லாதோர் கூட்டமைப்பு உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    //உங்களை விட எங்களால் வலியை , ஒடுக்குமுறையை சரியாய் புரிந்து கொள்ளமுடியும்…….எனினும் நீங்கள் ஒடுக்குமுறையை விடப்போவதும் இல்லை ….நாங்களும் உங்களை உலக அரங்கில் அம்பலபடுத்தாமல் விடப்போவதும் இல்லை …..//

    நன்றாக அம்பலப்படுத்துங்கள். அப்போது தலித்கள் செய்யும் அட்டூழியங்கள் குறித்தும் அம்பலப்படுத்துங்கள். யார் யாருக்கு என்னென்ன தண்டனை கிடைக்கணுமோ, அது கிடைக்கட்டும்.

    // ராஜபக்சே போல் நீங்களும் யார் காலை பிடித்தாவது கெஞ்சி பிழைக்கும் காலம் வரலாம் ….. யார் கண்டது? பிக்குகளிடம் உங்கள் வீரத்தை காட்டும் கோழைகளே அப்பாவிகளிடம்மோதுவது வà
    ��ரம் இல்லை என்பதுகூட உங்களுக்கு தெரியவில்லை…. அடித்தவனை அடிக்காமல் பிரான்சுக்கும் லண்டனுக்கும் போனது ஏன்? உங்களின் வெறிக்கு இந்தியாவில் சாதி என்றும் இலங்கையில் தமிழ் தேசிய உணர்வென்றும் பெயரோ? உங்கள் நியாயங்கள் எப்போதுமே சந்தேகத்திற்குகிடமானவை….//

    ஹாஹாஹா ஆமாம் எங்கள் நியாயங்கள் சந்தேகத்திற்டமானவை. உங்கள் நியாயங்கள் நம்புவதற்குரியவை. அந்த நம்பிக்கையை அப்படி நிலைநிறுத்துங்கள்.

  208. தீண்டப்படாதவன் பேசுகின்றேன்!

    http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22863:2013-02-05-06-55-43&catid=1:articles&Itemid=264

    சாதி ஏன் ஒழிய வேண்டும்?

    http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22535:2013-01-03-08-00-59&catid=1:articles&Itemid=264

    கீற்றுவின் இந்த இரண்டு கட்டுரைகளுக்கும் அதிலேயே பதில் போட்டிருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் அங்கே சென்று படித்துப் பார்த்துக்கொள்ளலாம்.

  209. தீண்டப்படாதவன் பேசுகின்றேன்!

    ஒரு வழியா கீற்று என் கமென்ட்களை ரிலீஸ் செய்து விட்டது. இப்போது சென்ற படிப்பவர்கள் படித்துக்கொள்ளலாம்.

    http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22863:2013-02-05-06-55-43&catid=1:articles&Itemid=264

    சாதி ஏன் ஒழிய வேண்டும்?

    http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22535:2013-01-03-08-00-59&catid=1:articles&Itemid=264

    கீற்றுவின் இந்த இரண்டு கட்டுரைகளுக்கும் அதிலேயே பதில் போட்டிருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் அங்கே சென்று படித்துப் பார்த்துக்கொள்ளலாம்.

  210. சாதி… சில குறிப்புகள்!
    http://nadaivandi.blogspot.in/2009/10/blog-post_30.html

    மேற்கண்ட கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது சில உதாரணங்கள் தான்.

    ஆதிக்க சாதிவெறியைத் தோலுரிக்கும் கட்டுரைகள்:

    1. பெண்களை காதலித்து ஏமாற்றுபவர்களில் 96 சதவீதத்தினர் சாதி இந்துக்க‌ளே!
    http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=23166&Itemid=139

    2. சாதி இந்துக்களால் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட தலித் – பழங்குடியினப் பெண்கள்
    http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=21947&Itemid=139

    3. தமிழகத்தில் அதிகரிக்கும் தலித் குடியிருப்புகள் மீதான தாக்குதல்கள்
    http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=21946&Itemid=139

    4. தமிழகத்தில் அதிகரிக்கும் கௌரவக் கொலைகள்
    http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=19965&Itemid=139

    5. தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை – ஆய்வு முடிவுகள்
    http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=19882&Itemid=139

    6. தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் மீதான பாகுபாடுகள்
    http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=19355&Itemid=139

    7. தமிழ்த்தேசத்தில் சேரித்தமிழர்களின் நிலை!
    http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=18614&Itemid=139

    இவையெல்லாம் நம் சமுதாயத்தில் நிகழ்ந்த, நிகழந்து கொண்டிருக்கின்ற தலித் மக்களுக்கு எதிரான சாதி வெறியாட்டங்கள்.
    இக்கொடுமைகளுக்கு மனசாட்சி உள்ள, சனநாயக உணர்வுள்ள ஒவ்வொருவரும் பதிலளிக்க வேண்டும்.

    இக்கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் கொடுமைகளில் பெரும்பாலானவை தேவர்சாதி வெறியர்களாலும், வன்னியசாதி வெறியர்களளாலும் நிகழ்த்தபட்டவை, நிகழ்த்தப்படுபவை.

    இங்கு ஆண்ட பரம்பரை, மோண்ட பரம்பரை என்று ஆதிக்கசாதிப் பெருமை பேசுபவர்கள் இதற்கெலாம் பதில் சொல்ல வேண்டும். இக்கட்டுரைகள் கீற்று இணைய தளத்தில் வெளியானவை. அது தலித் இணைய தளம் ( ஆதிக்க சாதி வெறியை எதிர்ப்பவர்கள் அனைவரும் தலித்துகளாகத் தான் இருப்பார்கள் என்ற சிறு பிள்ளைத்தனமான சிந்தனையின் வெளிப்பாடு தான் கீற்றையும், வினவையும் தலித் இணைய தளம் என்று முத்திரை குத்தச் சொல்கிறது. மற்றபடி வினவும், கீற்றும் தலித்துகளால் நடத்தப்படும் இணைய தளம் அல்ல. தலித் தலைவர்களின் பிழைப்புவாதத்தை அம்பலப்படுத்தும் கட்டுரைகள் இரண்டு தளத்திலும் வந்திருக்கின்றன. சாதி பகுத்தறிவை மறைத்து விடுகிறது ). அதிலுள்ள கட்டுரைகளைப் படிக்க மாட்டேன் என்று கூறுவது உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கும் அறிவீனமான செயலன்றி வேறில்லை.

    தலித்துகளுக்குக் கொடுக்கப்படும் இட ஒதுக்கீட்டைப் பற்றிப் பேசும் நேர்மையான எவனும் இக்கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள கொடுமைகளுக்கு பதில் கூறிவிட்டுப் பேசவும்.

  211. //இந்த ஏகாதிபத்திய உலகமயக் காலகட்டத்தில் சாதி, மதம், இனம் , மொழி என வேறுபாடின்றி அனைத்து உழைக்கும் மக்களும் உள்நாட்டு, பன்னாட்டு முதலாளிகளால் சுரண்டப்படுகிறார்கள்.

    விலைவாசி உயர்வு, விவசாய விளைபொருட்களுக்குப் போதிய விலையின்மை, வேலையிலாத் திண்டாட்டம், பணிப்பாதுகாப்பின்மை, தனியார் பள்ளி, கல்லூரிகளில் அதிக கட்டணத்தால் கல்வி வியாபாரமயமாக்கப்பட்டிருப்பது, கார்ப்பரேட் சீரழிவுக் கலாச்சாரத்தால் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் இவையெல்லாம் மக்களின் அன்றாடப் பிரச்சனைகளில் முக்கியமானவை.

    இதற்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம்?

    பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் பிரச்சினையாக (தேவர் சாதி உழைக்கும் மக்கள் உள்ளிட்டு) இருக்கும் இவையனைத்தையும் எதிர்த்துப் போராடுவதற்கு எந்த வகையில் இந்தச் சாதிப் பெருமை உதவும்?//

    இவற்றுக்கு உதவவில்லை என்ற காரணத்தால்தான் சாதிப் பெருமை பேசக் கூடாது என்கிறீர்களா?

    //கீழ்க்காணும் கேள்விகளுக்கு ஆதிக்க சாதிப்பெருமை பேசுபவர்கள் பதிலளிக்க வேண்டுகிறோம்.

    ஆதிக்க சாதி பெருமை பேசும் உழைப்பாளி மக்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்:

    1. ஆதிக்க சாதியை சேர்ந்த ஒரு பேருந்து முதலாளி தனது சாதி மக்களுக்கு சலுகைக் கட்டணம் பயணத்தை அனுமதிப்பாரா ?//

    பொருளாதாரத்தையும் சாதியையும் ஏன் இணைக்கிறீர்கள்? அதையே அடிமை சாதியோ, அல்லது உழைக்கும் வர்க்கமோ செய்வதில்லையே?

    //2. ஆதிக்க சாதியை சேர்ந்த மற்றும் முதலாளிகளின் வீட்டுப் பெண்ணுக்கோ அல்லது பையனுக்கோ அதே சாதியில் உள்ள கூலி விவசாயியை, ஏழையை, தொழிலாளியை திருமணம் செய்து கொடுப்பாரா ? அல்லது தெரியாமல் காதலித்துவிட்டால் தான் சேர்த்துவைப்பாரா ?//

    செய்யமாட்டார்கள். அதனால்தான் சொல்கிறோம் தராதரம் பார்த்துத்தான் குடும்பங்களை அமைக்க வேண்டும் என்று. இதை வர்க்கங்களும், கம்யூனிஸ்ட்களும் கூட செய்ய மாட்டார்கள் என்பதே நிச்சயம்.

    //3. ஆதிக்க சாதியை சேர்ந்த பண்ணையார் தனது சாதியை சேர்ந்த கூலி விவசாயிக்கு அதிக கூலி கொடுப்பாரா ? கொடுக்கிறாரா ?//

    நியாயமான கூலி கிடைத்தால் அவர் வேலைக்குப் போவார். இல்லாவிட்டால் போகமாட்டார். யாரையும் வேலைக்கு வா என்று நிர்பந்திக்க முடியாது.

    //4.தொழிற்சாலையில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த முதலாளி, நிர்வாக அதிகாரி போன்றோர் தனது சாதிக்கார தொழிலாளி என்பாதால் சலுகைக் காட்டுவாரா ? அதிக சம்பளம் கொடுப்பாரா ? சங்கம் கட்ட அனுமதிப்பாரா ?//

    நீங்கள் கம்யூனிஸ்ட் கருத்தாதிக்கத்தில் இருக்கிறீர்கள். அதனால்தான் சாதியையும் பொருளாதாரத்தையும் கலந்து பார்க்கிறீர்கள். இதையெல்லாம் கவனிக்க அரசாங்கம் என்றை ஒன்றை உருவாக்கியிருக்கிறோம். இதையெல்லாம் கவனிக்காவிட்டால் அரசாங்கம் எதற்கு ஆணிபுடுங்கவா இருக்கு? சட்டம் எதற்கு?

    //5. ஆதிக்க சாதியைச் சேர்ந்த் பள்ளி, கல்லூரி முதலாளிகள் அதே சாதியில் உள்ள மாணவனுக்கு இலவசமாக கல்வி வழங்குவாரா ? குறைந்தபட்சம் அய்யோ பாவம் என்று அதிக கட்டணம் வசூலிக்காமல் கல்வி கொடுப்பாரா ?//

    ஒரு தலித் நடத்தும் கல்லூரிக்கும் இது பொருந்தும். எந்த சாதிக்காரரும் சலுகை தருவதில்லை. ஆனால் அரசாங்கத்திடம் சலுகை வாங்கும் ஆட்கள் இந்தக் கேள்வியை கேட்பதுதான் ஆச்சரியம்.

    தொடரும்…

  212. //6. ஆதிக்க சாதிக்காரர் வைத்திருக்கும் மளிகை கடையில் எங்க சாதிக்காரனுக்கு மட்டும் தான் பொருள் விற்பனை என அறிவிக்கத் தயாரா ? அதையும் சலுகை விலையில் வழங்கத் தயாரா ?//

    இதை இப்படியும் கேட்கலாம், ஆதிக்க சாதிக்கார்களிடம் எந்தவித கொடுக்கல் வாங்கலும் செய்யாமல் இருக்க முற்போக்குவாதிகள் அரசியல் கட்சிகள் தயாரா?

    அரசியல் கட்சிகளில் இருப்பவர்கள் சாதியில் இருப்பவர்களை வேட்பாளர்களாக நியமிக்க மாட்டோம், சாதியில் இருப்பவர்களின் வாக்கு எங்களுக்குத் தேவையில்லை என்று அறிவிக்கத் தயாரா?

    //7. ஆதிக்க சாதியில் பிறந்து வரதட்சணை கொடுக்க முடியாமல் திருமணம் ஆகாமல் நொந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான உழைப்பாளி பெண்களுக்கு வரதட்சணை இல்லாமல் வாழ்க்கை தரவேண்டும் என்று அதே சாதி இளைஞர்களை வலியுறுத்த ஆதிக்க சாதிச்சங்கங்கள் தயாரா ?//

    நிச்சயமாக செய்யலாம். இது சரியான கருத்து ஏற்கத் தக்கதே.

    //8. நான் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் எங்கள் சாதிக்காரன் தயாரித்தால் மட்டுமே பயன்படுத்துவேன் என்று ஆதிக்க சாதி வெறியர்கள் கூறத் தயாரா ?//

    அதேபோல ஒவ்வொரு தயாரிப்பாளரும், தங்களது பொருட்களை தங்கள் சாதிக்காரன் மட்டும்தான் வாங்க வேண்டும் என்று அறிவிப்பாரா? பொருளாதாரத்தை ஏன் சாதியோடு முடிச்சுப் போடுகிறீர்கள்?

    //9. ஆதிக்க சாதி பெருமை பேசி திரியும் ஒருவர் பேருந்தில் ஏறும்போது தாழ்த்தப்பட்டவர் வண்டி ஓட்டுகிறார் என்றால் ஏறாமல் விட்டுவிடுவாரா ? அதிகாரி தாழ்த்தப்பட்டவர் என்றால் கூழைகும்பிடு போடாமல் இருப்பாரா ?//

    அதேகேள்வியை ஆதிக்க சாதிக்காரரை வைத்துக் கேட்டுப்பாருங்கள். ஆதிக்கசாதிக்காரர் வாகனம் ஓட்டினால் அடிமைச் சாதியினர் ஏறமாட்டார்களா? ஆதிக்கசாதியினர் அதிகாரியாக வந்தால் அவருக்கு கும்பிடு போடமாட்டோம் என்று அடிமைசாதிகள் அறிவிக்கத் தயாரா?

    //10. ஆதிக்க சாதிக்காரர் உபயோகிக்கும் ரூபாய் நோட்டை இதற்கு முன் தாழ்த்தபட்ட ஒருவர் கையில் இருந்து வாங்கி இருந்தால் இவர் அதை கீழே போட்டுவிடுவாரா?//

    ஆதிக்க சாதிக்காரர் உபயோகிக்கும் ரூபாய் நோட்டை இதற்கு முன் அடிமை சாதியினர் ஒருவர் அதை வாங்க மறுப்பாரா, இல்லை எனக்குத் தேவையில்லை என்று அறிவிக்க முடியுமா?

    //11. தொழிலாளியாக ஆலைக்குள் நுழையும்போது, பேருந்தில் ஏறும்போது சாதி குறுக்கே வருகிறதா ? அங்கே சாதி பெருமையை பேச முடியாதது ஏன் ?//

    சாதி திருமணத்திற்குத்தான் பயன்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன? ஒரே சாதியில் தராதரம் பார்த்துத்தான் பெண் கொடுப்பார்கள், பெண் எடுப்பார்கள். இதை ஏன் தொழிலாளி முதலாளியுடன் ஒப்பிடுகிறீர்கள்?

    //12. ஆதிக்க சாதிக்காரர்கள் தனது சாதிக்கு மனு இட்ட கட்டளைகளை, பழக்க வழக்கங்களை அப்படியே கடைபிடிக்க முடியுமா ? முடியவில்லை என்றால் காரணம் என்ன ?//

    மனு சாதியை திரித்துச் சொன்னான். ஒரு வகையில் மனுவும் பெரியாரும் ஒன்றுதான். அவர் திரித்துச் சொன்னார். இவர் அழிக்கச் சொன்னார். இருவரும் ஒரே வேலையைச் செய்தனர். மனுவுக்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தமில்லை. அவனை இன்று தூக்கிக் கொண்டு அலைபவர்கள் தலித்கள் மட்டுமே.

    //13. ஆதிக்க சாதிக்காரர்கள் என்றால் காவிரித் தண்ணீர் உடனடியாகவோ, மின்சாரம் தடையில்லாமலோ கிடைத்து விடுகிறதா?//

    சாதி இல்லை என்று சொல்லி அரசியலுக்கு வந்தவர்களிடம் நீங்கள் இந்த கேள்வியைக் கேட்கலாமே? நீங்கள் சொல்வது உண்மையானால் சாதி இல்லை என்று சொன்னவர்களால் இதையெல்லாம் செய்திருக்க முடியுமே?

    //14. அன்றாடம் ஆயிரம் வேலைகளில் வர்க்கமாக ஒன்றுபட்டு நிற்கின்ற உழைப்பாளிகளை சாதியாக பிளப்பதால் ஆதாயமடைவது முதலாளிகள்தான் என்பது தெரியவில்லையா ? ஆதிக்க சாதியில் பிறந்து அரும்பாடுபடும் தொழிலாளி தனது உரிமையை கேட்க சங்கம் கட்டுவதை தடுக்கும் முதலாளிகளின் வீடுகளை ஆட்களை திரட்டி இடிப்பதற்கு ரோஷம் வராததன் மர்ம்ம் என்ன ?//

    தொழிலாளி – முதலாளி என்பது வேறு, ஆதிக்கசாதி – அடிமை சாதி என்பது வேறு. அந்த பிரச்சனையில் சாதியை கலக்க வேண்டாம். முதலாளி சரியில்லை என்றால் தொழிலாளி அந்த முதலாளியிடம் வேலை செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. மேலும் சட்டம், அரசாங்கம், போலீஸ் என்பதெல்லாம் எதற்காக இருக்கிறது?

    //15. சாதி வெறியை தூண்டிவிட்டு துப்பாக்கி சூடு, சிறைவாசம், வழக்குகளுக்கு ஆளாகிய உங்களின் நிலையும் , இதனால் ஆதாயம் அடைந்து சொத்து சேர்த்துள்ள தலைவர்களின் யோக்கியதையும் தெரியுமா ?//

    தலித்களும், வினவு போன்ற இணையங்களும் இதைத்தானே செய்கின்றன? தலித்களுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதியா? சாதித் தலைவர்கள் அப்படிச் சொத்துச் சேர்த்திருக்கிறார்கள், கருணாநிதி போன்றவர்கள் எப்படிச் சொத்துச் சேர்த்தார்கள்? அப்படிச் சொத்துச் சேர்த்தால் பரவாயில்லை. கள்ள மார்க்கெட், கலப்படம், கொள்ளை லாபம் வைத்து சம்பாதிப்பவர்களை ஏற்றுக் கொள்வீர்களா?

    நீங்கள் முதலாளி தொளிலாளி பிரச்சனையில் மூழ்கி இருக்கிறீர்கள். அதை விட்டு வெளியே வாருங்கள்.

  213. இங்கு பின்னூட்டமிட்டுள்ள பெருமாள் தேவன் என்ற தேவர்சாதி வெறியர் ( யாரையும் முத்திரை குத்துவது எமது நோக்கமல்ல என்றாலும், இவரின் பின்னூட்டங்களில் வெளிப்படுவது அப்பட்டமான சாதிவெறி என்பதால் ” தேவர்சாதி வெறியர் ” என்ற பதத்தைப் பயன்படுத்துகிறோம். ) ” தலித் சாதி வெறி ” என்ற பதத்தைப் பல முறை பயன்படுத்தியிருக்கிறார்.

    தலித் என்பது சாதி அல்ல. ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்.

    மேலும் பெருமாள் தேவன் என்பவர் வினவின் அரசியல் என்ன ? அவர்களின் செயல்பாடுகள் என்ன ? அவர்களின் கொள்கை என்ன ? என்பதைப் பற்றி ஒரு மண்ணும் தெரியாமல் ” தேவர் சாதி வெறியைக் கண்டிக்கும் நீ, தலித் சாதி வெறியைக் கண்டிக்க மறுப்பதேன் ? ” என்றவாறு வினவை ஏதோ தலித்திய அமைப்பு என்று நினைத்துக் கொண்டு முட்டாள் தனமாகக் கேட்கிறார்.

    தலித் மக்களைத் தவறாக வழி நடத்தும் பிழைப்புவாதத் தலித் தலைவர்களை ( திருமாவளவன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலைவர்கள் ) வினவு பலமுறை விமர்சித்துள்ளது. தலித் தலைவர்களின் நோக்கம் சாதியை ஒழிப்பதல்ல, மாறாகச் சாதியை வைத்துப் பிழைப்பு நடத்துவது தான் என்பதை வினவு சார்ந்த அமைப்புகள் பலமுறை பேசியிருக்கின்றன, எழுதியிருக்கின்றன. இவையெல்லாம் சாதிவெறிக் கண் கொண்டு விசயங்களைப் பார்க்கும் மூடர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. தெரிந்தாலும் அதைப் பரிசீலிக்கும் நேர்மையில்லை.

    வினவு என்பது அனைத்து சாதி உழைக்கும் மக்களுக்கும் குரல் கொடுக்கும் ஒரு புரட்சிகர அமைப்பு. வினவில் பல்வேறு தலைப்புகளில் உள்ள கட்டுரைகளைப் படித்தாலே அது புரியும். அதையெல்லாம் படிக்காது அனைத்தையும் சாதிவெறிக் கண்ணோட்டத்துடன் பார்த்தால் உண்மை புரியாது.

    எல்லாம் தனியாராகிக் கொண்டிருக்கும் இந்த ஏகாதிபத்திய உலகமயக் காலகட்டத்தில் நிலப்பிரபுத்துவப் பிற்போக்குத்தனத்துடன் ஆண்ட பரம்பரைப் பெருமை பேசுவது முட்டாள்தனமானது, கேவலமானது, அயோக்கியத்தனமானது.

    இந்த ஆண்ட(மன்னர்)பரம்பரைப் பெருமை பேசும் புடுங்கிகள் இன்று கோயில் கருவறைக்குள் நுழைய முடியவில்லையே ஏன்?
    அனைத்து சாதியினரும் அர்ச்சராக்க வேண்டும் என்று வினவு சார்ந்த அமைப்புகள் தான் குரல் கொடுக்கின்றன.

    தேவர் சாதி விவசாயிகளுக்கும், தொழிலாளிகளுக்கும், மாணவர்களுக்கும், பெண்களுக்கும் உள்ள பிரச்சனைகளை எதிர்த்து இந்த சாதிவெறி பேசும் புடுங்கிகள், சாதிச் சங்கங்கள் என்றாவது குரல் கொடுத்ததுண்டா? அனைத்துப் பிரச்சனைகளுக்கும் புரட்சிகர அமைப்பு என்கின்ற வகையில் வினவு சார்ந்த அமைப்புகள் குரல் கொடுக்கின்றன. குரல் கொடுப்பது மட்டுமின்றி தங்கள் போர்க்குணமிக்க போராட்டங்கள் மூலம் ஆளும்வர்க்கத்தை அஞ்சி நடுங்கச் செய்கின்றன.

    உழைக்கும் மக்களுக்காகப் போராடுபவர்கள் என்ற வகையில், அவர்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் தேவர், வன்னிய சாதி வெறியை எதிர்க்கிறார்கள்.

    ஆதிக்க சாதியைச் சார்ந்த அனைவரும் சாதி வெறியர்கள் என்று வினவு கூறவில்லை. ஆதிக்க சாதி வெறியை அனைவரும் ஆதரிப்பதில்லை, ஆனால் அதை எதிர்த்துக் குரல் எழுப்பாதவகையில் மறைமுகமாக அதை ஆதரிக்கின்றனர். அதை எதிர்த்துக் குரல் எழுப்புங்கள் என்றுதான் கூறுகிறோம். தேவர்சாதியின் பெயரைப் பயன்படுத்தி தேவர்சாதி வெறியர்கள் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தினால் அச்சாதியைச் சார்ந்த மனிதாபிமானமுள்ள, ஜனநாயக உணர்வுள்ள மக்கள் அதை எதிர்க்க வேண்டும். இது தேவர் சாதிக்கு மட்டுமல்ல, அனைத்து சாதிக்கும் பொருந்தும்.

    ஆதிக்க சாதியாகவோ, மேல்தட்டு வர்க்கமாகவோ பிறப்பது தவறில்லை. ஆனால் கடைசி வரை ஆதிக்க சாதியாகவும், மேல்தட்டு வர்க்கமாகவும் இருக்க விருப்பப்படுவதுதான் தவறு. உயர்ந்த சாதி உயர்ந்த சாதியாகவே இருப்பதனால் தான் தாழ்ந்த சாதி தாழ்ந்த சாதியாக இருக்கிறது. பணக்காரன் பணக்காரனாகவே இருப்பதனால் தான் ஏழை ஏழையாகவே இருக்கின்றான். மேல்சாதி – கீழ்சாதி என்ற வேறுபாட்டை ஒழிக்காமல் சாதியில்லா சமத்துவ சமுதாயம் படைக்க முடியாது. அதே போல் பணக்காரன் – ஏழை என்ற வேறுபாட்டை ஒழிக்காமல் வர்க்கமற்ற சமுதாயம் படைக்க முடியாது. ( ஒரு புரிதலுக்காக சாதியையும் , வர்க்கத்தையும் தனித்தனியாக எழுதியிருக்கின்றேன். மற்றபடி வர்க்க இணைவில் தான் சாதி ஒழிப்பு சாத்தியம் )

    ஆதிக்க சாதியாகப் பிறந்த சமத்துவத்தை விரும்பும், சனநாயக உணர்வுள்ள ஒரு மனிதன் தன் சாதியினர் கடந்த காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைத்த கொடுமைகளை நினைத்து மனம் வருந்த வேண்டும். அது மட்டுமில்லாமல் நிகழ்காலத்தில் தன் சாதியினரின் சாதி வெறிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். இது உட்சாதி வேறுபாடு பார்க்கும் தலித் மக்களுக்கும் பொருந்தும்.

    சுயசாதி அபிமானம் இல்லாதவர்களால் மட்டுமே இந்த சாதிப் பிரச்சனைகளைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும். அதற்கு சமத்துவத்தை விரும்பும் ஒவ்வொருவரும் தன் சொந்த சாதிக்கெதிராகக் (சாதி மனப்பான்மைக்கெதிராக) கலகம் செய்ய வேண்டும். அப்படிச் செய்பவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் தொடர்ந்து அப்படிச் செய்வதானால் இந்தச் சாதி வெறியர்களை எளிமையாக அம்பலப்படுத்த முடியும்.

  214. இங்கு பின்னூட்டமிட்டுள்ள பெருமாள் தேவன் என்ற தேவர்சாதி வெறியர் ( யாரையும் முத்திரை குத்துவது எமது நோக்கமல்ல என்றாலும், இவரின் பின்னூட்டங்களில் வெளிப்படுவது அப்பட்டமான சாதிவெறி என்பதால் ” தேவர்சாதி வெறியர் ” என்ற பதத்தைப் பயன்படுத்துகிறோம். ) ” தலித் சாதி வெறி ” என்ற பதத்தைப் பல முறை பயன்படுத்தியிருக்கிறார்.

    தலித் என்பது சாதி அல்ல. ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்.
    http://en.wikipedia.org/wiki/Dalit

    மேலும் பெருமாள் தேவன் என்பவர் வினவின் அரசியல் என்ன ? அவர்களின் செயல்பாடுகள் என்ன ? அவர்களின் கொள்கை என்ன ? என்பதைப் பற்றி ஒரு மண்ணும் தெரியாமல் ” தேவர் சாதி வெறியைக் கண்டிக்கும் நீ, தலித் சாதி வெறியைக் கண்டிக்க மறுப்பதேன் ? ” என்றவாறு வினவை ஏதோ தலித்திய அமைப்பு என்று நினைத்துக் கொண்டு முட்டாள் தனமாகக் கேட்கிறார்.

    தலித் மக்களைத் தவறாக வழி நடத்தும் பிழைப்புவாதத் தலித் தலைவர்களை ( திருமாவளவன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலைவர்கள் ) வினவு பலமுறை விமர்சித்துள்ளது. தலித் தலைவர்களின் நோக்கம் சாதியை ஒழிப்பதல்ல, மாறாகச் சாதியை வைத்துப் பிழைப்பு நடத்துவது தான் என்பதை வினவு சார்ந்த அமைப்புகள் பலமுறை பேசியிருக்கின்றன, எழுதியிருக்கின்றன. இவையெல்லாம் சாதிவெறிக் கண் கொண்டு விசயங்களைப் பார்க்கும் மூடர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. தெரிந்தாலும் அதைப் பரிசீலிக்கும் நேர்மையில்லை.

    அடையாள அரசியல் சாதியையும் தீண்டாமையையும் ஒழிக்குமா?
    https://www.vinavu.com/2013/01/17/identity-politics-not-a-solution/

    வினவு என்பது அனைத்து சாதி உழைக்கும் மக்களுக்கும் குரல் கொடுக்கும் ஒரு புரட்சிகர அமைப்பு. வினவில் பல்வேறு தலைப்புகளில் உள்ள கட்டுரைகளைப் படித்தாலே அது புரியும். அதையெல்லாம் படிக்காது அனைத்தையும் சாதிவெறிக் கண்ணோட்டத்துடன் பார்த்தால் உண்மை புரியாது.
    https://www.vinavu.com/category/us/

    எல்லாம் தனியாராகிக் கொண்டிருக்கும் இந்த ஏகாதிபத்திய உலகமயக் காலகட்டத்தில் நிலப்பிரபுத்துவப் பிற்போக்குத்தனத்துடன் ஆண்ட பரம்பரைப் பெருமை பேசுவது முட்டாள்தனமானது, கேவலமானது, அயோக்கியத்தனமானது. மன்னர் பரம்பரை என்று பீற்றுவது பார்ப்பனிய அடிமைத் தனத்தை எண்ணிப் பெருமைப்படுவதுதான்.

    இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!!
    https://www.vinavu.com/2011/01/05/raja-raja-cholan/

    இந்த ஆண்ட(மன்னர்)பரம்பரைப் பெருமை பேசும் புடுங்கிகள் இன்று கோயில் கருவறைக்குள் நுழைய முடியவில்லையே ஏன்?
    அனைத்து சாதியினரும் அர்ச்சராக்க வேண்டும் என்று வினவு சார்ந்த அமைப்புகள் தான் குரல் கொடுக்கின்றன.

    அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம் – நூல் வெளியீடு!
    https://www.vinavu.com/2013/04/08/archagar-book-release/

    தேவர் சாதி விவசாயிகளுக்கும், தொழிலாளிகளுக்கும், மாணவர்களுக்கும், பெண்களுக்கும் உள்ள பிரச்சனைகளை எதிர்த்து இந்த சாதிவெறி பேசும் புடுங்கிகள், சாதிச் சங்கங்கள் என்றாவது குரல் கொடுத்ததுண்டா? அனைத்துப் பிரச்சனைகளுக்கும் புரட்சிகர அமைப்பு என்கின்ற வகையில் வினவு சார்ந்த அமைப்புகள் குரல் கொடுக்கின்றன. குரல் கொடுப்பது மட்டுமின்றி தங்கள் போர்க்குணமிக்க போராட்டங்கள் மூலம் ஆளும்வர்க்கத்தை அஞ்சி நடுங்கச் செய்கின்றன.

    உழைக்கும் மக்களுக்காகப் போராடுபவர்கள் என்ற வகையில், அவர்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் தேவர், வன்னிய சாதி வெறியை எதிர்க்கிறார்கள்.

    ஆதிக்க சாதியைச் சார்ந்த அனைவரும் சாதி வெறியர்கள் என்று வினவு கூறவில்லை. ஆதிக்க சாதி வெறியை அனைவரும் ஆதரிப்பதில்லை, ஆனால் அதை எதிர்த்துக் குரல் எழுப்பாதவகையில் மறைமுகமாக அதை ஆதரிக்கின்றனர். அதை எதிர்த்துக் குரல் எழுப்புங்கள் என்றுதான் கூறுகிறோம். தேவர்சாதியின் பெயரைப் பயன்படுத்தி தேவர்சாதி வெறியர்கள் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தினால் அச்சாதியைச் சார்ந்த மனிதாபிமானமுள்ள, ஜனநாயக உணர்வுள்ள மக்கள் அதை எதிர்க்க வேண்டும். இது தேவர் சாதிக்கு மட்டுமல்ல, அனைத்து சாதிக்கும் பொருந்தும்.

    ஆதிக்க சாதியாகவோ, மேல்தட்டு வர்க்கமாகவோ பிறப்பது தவறில்லை. ஆனால் கடைசி வரை ஆதிக்க சாதியாகவும், மேல்தட்டு வர்க்கமாகவும் இருக்க விருப்பப்படுவதுதான் தவறு. உயர்ந்த சாதி உயர்ந்த சாதியாகவே இருப்பதனால் தான் தாழ்ந்த சாதி தாழ்ந்த சாதியாக இருக்கிறது. பணக்காரன் பணக்காரனாகவே இருப்பதனால் தான் ஏழை ஏழையாகவே இருக்கின்றான். மேல்சாதி – கீழ்சாதி என்ற வேறுபாட்டை ஒழிக்காமல் சாதியில்லா சமத்துவ சமுதாயம் படைக்க முடியாது. அதே போல் பணக்காரன் – ஏழை என்ற வேறுபாட்டை ஒழிக்காமல் வர்க்கமற்ற சமுதாயம் படைக்க முடியாது. ( ஒரு புரிதலுக்காக சாதியையும் , வர்க்கத்தையும் தனித்தனியாக எழுதியிருக்கின்றேன். மற்றபடி வர்க்க இணைவில் தான் சாதி ஒழிப்பு சாத்தியம் )

    ஆதிக்க சாதியாகப் பிறந்த சமத்துவத்தை விரும்பும், சனநாயக உணர்வுள்ள ஒரு மனிதன் தன் சாதியினர் கடந்த காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைத்த கொடுமைகளை நினைத்து மனம் வருந்த வேண்டும். அது மட்டுமில்லாமல் நிகழ்காலத்தில் தன் சாதியினரின் சாதி வெறிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். இது உட்சாதி வேறுபாடு பார்க்கும் தலித் மக்களுக்கும் பொருந்தும்.

    சுயசாதி அபிமானம் இல்லாதவர்களால் மட்டுமே இந்த சாதிப் பிரச்சனைகளைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும். அதற்கு சமத்துவத்தை விரும்பும் ஒவ்வொருவரும் தன் சொந்த சாதிக்கெதிராகக் (சாதி மனப்பான்மைக்கெதிராக) கலகம் செய்ய வேண்டும். அப்படிச் செய்பவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் தொடர்ந்து அப்படிச் செய்வதானால் இந்தச் சாதி வெறியர்களை எளிமையாக அம்பலப்படுத்த முடியும்.

  215. //ஆதிக்க சாதிவெறியைத் தோலுரிக்கும் கட்டுரைகள்://

    ஐயா பகத்து,

    இதுல அடிமைசாதி வெறிபற்றிய கட்டுரை எது என்று மட்டும் காட்டுங்கள். இல்லை என்றால் அடிமை சாதிகள் சாதிவெறியாட்டங்களில் ஈடுபடுவதே இல்லை என்று சொல்கிறீர்களா? எங்காவது வன்கொடுமைச் சட்டம் பழிவாங்குதலுக்காக பயன்படுத்துவதைப் பற்றி கட்டுரை எழுதி இருக்கிறீர்களா?

  216. //இங்கு பின்னூட்டமிட்டுள்ள பெருமாள் தேவன் என்ற தேவர்சாதி வெறியர் ( யாரையும் முத்திரை குத்துவது எமது நோக்கமல்ல என்றாலும், இவரின் பின்னூட்டங்களில் வெளிப்படுவது அப்பட்டமான சாதிவெறி என்பதால் ” தேவர்சாதி வெறியர் ” என்ற பதத்தைப் பயன்படுத்துகிறோம். ) ” தலித் சாதி வெறி ” என்ற பதத்தைப் பல முறை பயன்படுத்தியிருக்கிறார்.//

    ஓ நீங்களும் வினவு ஆசிரியரா? சரி, சரி,

    நீங்க சொல்ற அதே சாதி வெறி பத்திதானே நானும் பேசுறேன். நீங்க என்ன எனக்கு மனிதர்குல மாணிக்கம் என்று பட்டமா கொடுக்கப் போகிறீர்கள்?

    ஒட்டுமொத்தமாக ஒரு இனக்குழுவைப் பற்றி எழுதும் வினவு சொல்கிறது நான் சாதி வெறியனாம். என் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியதா இவர்கள் எனக்கு பட்டம் அளிக்கிறார்கள். ஹாஹாஹா

    நான் ஒத்துக்கிறேன், நான் சாதி வெறியன்தான். நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா? அதுதானே பிரச்சனை.

  217. //தலித் என்பது சாதி அல்ல. ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்.//

    தேவர் என்பதும் சாதி இல்லை. அது நாட்டுக்காக பல தியாகங்களை செய்த முக்குலத்திற்கான பட்டம்.

  218. //மேலும் பெருமாள் தேவன் என்பவர் வினவின் அரசியல் என்ன ? அவர்களின் செயல்பாடுகள் என்ன ? அவர்களின் கொள்கை என்ன ? என்பதைப் பற்றி ஒரு மண்ணும் தெரியாமல் ” தேவர் சாதி வெறியைக் கண்டிக்கும் நீ, தலித் சாதி வெறியைக் கண்டிக்க மறுப்பதேன் ? ” என்றவாறு வினவை ஏதோ தலித்திய அமைப்பு என்று நினைத்துக் கொண்டு முட்டாள் தனமாகக் கேட்கிறார்.//

    சரி நான் முட்டாள்தனமாக கேட்கிறேன், நீங்கள் அறிவுப் பூர்வமாக பதில் சொல்லுங்கள்.

    வினவின் அரசியல் என்ன ? அவர்களின் செயல்பாடுகள் என்ன ? அவர்களின் கொள்கை என்ன ?

    உங்க கொண்டையை மறைக்க முடியவில்லையே வினவு? ஹாஹாஹா

    ஆதிக்க சாதியினரை ஒழித்துக் கட்டுவதுதான் உங்கள் அரசியலா, கொள்கையா?

  219. வினவு நாங்கள் பாரம்பரியம் மிக்கவர்கள்,

    எதையும் வாங்கிக் கொண்டு சும்மா இருந்தால் அது எங்களுக்கு அழகல்ல.

    எனக்கு “சாதிவெறியன்“ என்று நீங்கள் அளித்த பட்டத்தை நான் அப்படியே மனமுவந்து ஏற்றுக் கொள்கிறேன்.

    பதிலுக்கு எங்கள் தரப்பில் “சாதிவெறி இணையம்“ என்ற பட்டத்தை உங்களுக்குத் தருகிறேன்.

    பண்பாளர்களான நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

  220. //தலித் மக்களைத் தவறாக வழி நடத்தும் பிழைப்புவாதத் தலித் தலைவர்களை ( திருமாவளவன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலைவர்கள் ) வினவு பலமுறை விமர்சித்துள்ளது. தலித் தலைவர்களின் நோக்கம் சாதியை ஒழிப்பதல்ல, மாறாகச் சாதியை வைத்துப் பிழைப்பு நடத்துவது தான் என்பதை வினவு சார்ந்த அமைப்புகள் பலமுறை பேசியிருக்கின்றன, எழுதியிருக்கின்றன. இவையெல்லாம் சாதிவெறிக் கண் கொண்டு விசயங்களைப் பார்க்கும் மூடர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. தெரிந்தாலும் அதைப் பரிசீலிக்கும் நேர்மையில்லை.//

    அதாவது தலித்களை வைத்து அரசியல் நடத்தினால் அது பிழைப்புவாதம், தேவர்கள் அரசியல் செய்தால் அது சாதிவெறி அப்படித்தானே?

    நல்லா இருக்கு, நல்லா இருக்கு.

    நாங்க மூடர்கள்தான், நீங்கள் அறிவாளிகள் என்பதுதான் நன்றாகத் தெரிகிறதே?

  221. //வினவு என்பது அனைத்து சாதி உழைக்கும் மக்களுக்கும் குரல் கொடுக்கும் ஒரு புரட்சிகர அமைப்பு. வினவில் பல்வேறு தலைப்புகளில் உள்ள கட்டுரைகளைப் படித்தாலே அது புரியும். அதையெல்லாம் படிக்காது அனைத்தையும் சாதிவெறிக் கண்ணோட்டத்துடன் பார்த்தால் உண்மை புரியாது.//

    அதான் குருபூஜைக்கு சென்று வந்தவர்கள் தாக்கப்பட்டது பற்றித்தான் பொன்னால் பொறிக்கப்பட வேண்டிய கருத்தை தெரிவித்தீர்களே? உங்கள் சாதி நடுநிலைமையை சொல்ல அந்த ஒரு பதிலே போதுமானது. ஹாஹாஹா

    நீங்கள் கம்யூனிஸ்ட்களாக இருக்கலாம், மாவோயிஸ்ட்களாக இருக்கலாம். உங்கள் பருப்பு தமிழகத்தில் வேகாது. சாதிகளை வைத்து வேக வைக்கப்பார்த்தால் அது விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும்.

  222. //எல்லாம் தனியாராகிக் கொண்டிருக்கும் இந்த ஏகாதிபத்திய உலகமயக் காலகட்டத்தில் நிலப்பிரபுத்துவப் பிற்போக்குத்தனத்துடன் ஆண்ட பரம்பரைப் பெருமை பேசுவது முட்டாள்தனமானது, கேவலமானது, அயோக்கியத்தனமானது.//

    அதேபோல கம்யூனிஸ மயமாக்குவதும் முட்டாள்தனமானது, கேவலமானது, அயோக்கியத்தனமானது. அதை ஒருக்காலும் ஏற்க முடியாது.

    //இந்த ஆண்ட(மன்னர்)பரம்பரைப் பெருமை பேசும் புடுங்கிகள் இன்று கோயில் கருவறைக்குள் நுழைய முடியவில்லையே ஏன்?//

    அது எங்களுக்குத் தேவையில்லாத வேலை. உங்களுக்கு விருப்பம் இருந்தால் செய்துகொள்ளுங்கள்.

    //அனைத்து சாதியினரும் அர்ச்சராக்க வேண்டும் என்று வினவு சார்ந்த அமைப்புகள் தான் குரல் கொடுக்கின்றன.//

    அப்போ அனைத்துச் சாதிகளையும் ஏற்றுக் கொள்கிறீர்களா? சாதி ஒழிப்பு என்பது போலித்தனம் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா? உங்கள் கோரிக்கை இதைத்தான் நிரூபிக்கிறது.

    //தேவர் சாதி விவசாயிகளுக்கும், தொழிலாளிகளுக்கும், மாணவர்களுக்கும், பெண்களுக்கும் உள்ள பிரச்சனைகளை எதிர்த்து இந்த சாதிவெறி பேசும் புடுங்கிகள், சாதிச் சங்கங்கள் என்றாவது குரல் கொடுத்ததுண்டா?//

    அதை நீங்கள் செய்ததுண்டா? தேவை ஏற்பட்டால் அவர்கள் செய்வார்கள்.

    // அனைத்துப் பிரச்சனைகளுக்கும் புரட்சிகர அமைப்பு என்கின்ற வகையில் வினவு சார்ந்த அமைப்புகள் குரல் கொடுக்கின்றன. குரல் கொடுப்பது மட்டுமின்றி தங்கள் போர்க்குணமிக்க போராட்டங்கள் மூலம் ஆளும்வர்க்கத்தை அஞ்சி நடுங்கச் செய்கின்றன.//

    அப்படியா? ஐயோ, பயமா இருக்கு….

    //உழைக்கும் மக்களுக்காகப் போராடுபவர்கள் என்ற வகையில், அவர்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் தேவர், வன்னிய சாதி வெறியை எதிர்க்கிறார்கள்.//

    அப்போ நீங்க தேவர், வன்னியர்களுக்குப் பிரதிநிதி கிடையாது, அப்படித்தானே?

    //ஆதிக்க சாதியைச் சார்ந்த அனைவரும் சாதி வெறியர்கள் என்று வினவு கூறவில்லை.//

    இதைத்தான் நீங்கள் அழுத்தமாக பதிவு செய்து வருகிறீர்கள். அதற்குத்தான் நங்கள் இங்கே கண்டனங்கள் தெரிவித்து வருகிறோம்.

    // ஆதிக்க சாதி வெறியை அனைவரும் ஆதரிப்பதில்லை,//

    அதேபோல அடிமை சாதிவெறியையும் யாரும் ஆதரிப்பதில்லை.

    // ஆனால் அதை எதிர்த்துக் குரல் எழுப்பாதவகையில் மறைமுகமாக அதை ஆதரிக்கின்றனர்.//

    தலித் சாதிவெறி விஷயத்திலும் நீங்கள் இதையே செய்கிறீர்கள்.

    //அதை எதிர்த்துக் குரல் எழுப்புங்கள் என்றுதான் கூறுகிறோம். தேவர்சாதியின் பெயரைப் பயன்படுத்தி தேவர்சாதி வெறியர்கள் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தினால் அச்சாதியைச் சார்ந்த மனிதாபிமானமுள்ள, ஜனநாயக உணர்வுள்ள மக்கள் அதை எதிர்க்க வேண்டும். இது தேவர் சாதிக்கு மட்டுமல்ல, அனைத்து சாதிக்கும் பொருந்தும்.//

    அப்படி நீங்கள் யாருக்காவது கோரிக்கை விடுத்திருக்கிறீர்களா? அப்படி நீங்கள் விடுத்த கோரிக்கையை எந்த சாதியினராவது மறுத்திருக்கிறார்களா? அப்படி செய்யாமல் அவர்கள் செய்யவில்லை, அல்லது செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்? தலித்கள் வாயைத் திறந்தாலே ஆதிக்க சாதிகளை திட்டத்தான் வாயைத் திறக்கிறார்கள். அவர்களுக்காக காரணமில்லாமல் யார் முன் வருவார்கள்?

    //ஆதிக்க சாதியாகவோ, மேல்தட்டு வர்க்கமாகவோ பிறப்பது தவறில்லை. ஆனால் கடைசி வரை ஆதிக்க சாதியாகவும், மேல்தட்டு வர்க்கமாகவும் இருக்க விருப்பப்படுவதுதான் தவறு.//

    தாழ்த்தப்பட்டவராக, பிற்படுத்தப்பட்டவராக பிறப்பது தவறில்லை. ஆனால் கடைசி வரை தாழ்த்தப்பட்டவராக, பிற்படுத்தப்பட்டவராக இருக்க விருப்பப்படுவதுதான் தவறு.

    // உயர்ந்த சாதி உயர்ந்த சாதியாகவே இருப்பதனால் தான் தாழ்ந்த சாதி தாழ்ந்த சாதியாக இருக்கிறது.//

    தாழ்ந்த சாதி, தாழ்ந்த சாதியாகவே இருப்பதனால் தான் தாழ்ந்த சாதி தாழ்ந்த சாதியாக இருக்கிறது.

    //பணக்காரன் பணக்காரனாகவே இருப்பதனால் தான் ஏழை ஏழையாகவே இருக்கின்றான்.//

    ஏழைகளுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் ஏழைகளாகவே இருக்கிறார்கள். மேலும் கம்யூனிஸ்ட்கள் ஒருக்காலத்திலும் ஏழைகளை பணக்காரர்களாக அனுமதிக்க மாட்டார்கள். ஏனெனில் பின்னர் அவர்களால் அரசியல் செய்ய முடியாது.

    // மேல்சாதி – கீழ்சாதி என்ற வேறுபாட்டை ஒழிக்காமல் சாதியில்லா சமத்துவ சமுதாயம் படைக்க முடியாது.//

    இதை எப்படி ஒழிப்பீர்கள்? மூட்டைப் பூச்சி மருந்தை அடித்தா?

    // அதே போல் பணக்காரன் – ஏழை என்ற வேறுபாட்டை ஒழிக்காமல் வர்க்கமற்ற சமுதாயம் படைக்க முடியாது.//

    இது கம்யூனிஸ சித்தாந்தம். இதற்கும் தமிழர்களுக்கும் தொடர்பில்லை. தமிழ் மக்கள் ஒருபோதும் இதை விரும்பியதும் கிடையாது. உங்களுக்குப் பிடித்திருந்தால் கம்யூனிஸ நாடுகளுக்குச் சென்றுவிடலாம்.

    // ( ஒரு புரிதலுக்காக சாதியையும் , வர்க்கத்தையும் தனித்தனியாக எழுதியிருக்கின்றேன். மற்றபடி வர்க்க இணைவில் தான் சாதி ஒழிப்பு சாத்தியம் )//

    வர்க்கம் என்ற ஒன்று இல்லை. வாய்ப்புக் கிடைத்தவனெல்லாம் பணக்காரன் ஆகிறான். வர்க்கம் என்பது உண்மையானல் வாய்ப்புக் கிடைக்கும்போது ஒரு ஏழை பணக்காரன் ஆகக் கூடாது. அந்த வகையில் உங்கள் சித்தாந்தம் போலியாகிவிடுகிறது.

    //ஆதிக்க சாதியாகப் பிறந்த சமத்துவத்தை விரும்பும், சனநாயக உணர்வுள்ள ஒரு மனிதன் தன் சாதியினர் கடந்த காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைத்த கொடுமைகளை நினைத்து மனம் வருந்த வேண்டும்.//
    ஆனால் அவர்களை அதற்காக அடிமைப்படுத்த வேண்டும் என்பது போன்ற உங்கள் பிரச்சாரம் ஒருபோதும் மக்களுக்குப் பயன்படாது. மாறாக மக்களிடையே மேலும் துவேஷத்தையும் பகைமையையும் வளர்க்கும். அதைத்தான் கடந்த 50 ஆண்டுகால ஆட்சியாளர்கள் செய்துள்ளனர். நீங்களும் அதை எழுத்தில் செய்து வருகிறீர்கள். தேவர்கள் ஒருபோதும் தலித்களுக்கு எதிரியாக இருந்தது கிடையாது. ஆனால் அந்த மகராஜன் காமராஜர் செய்த வினை இன்று உங்களை எங்களுக்கு எதிராக திருப்பியுள்ளது. அதையே நீங்கள் தொடர்ந்து பரப்பி வருகிறீர்கள்.

    // அது மட்டுமில்லாமல் நிகழ்காலத்தில் தன் சாதியினரின் சாதி வெறிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். இது உட்சாதி வேறுபாடு பார்க்கும் தலித் மக்களுக்கும் பொருந்தும்.//

    அதை முதலில் சரி செய்யுங்கள். அதன் பின் ஆதிக்க சாதியிடம் வாருங்கள்.

    //சுயசாதி அபிமானம் இல்லாதவர்களால் மட்டுமே இந்த சாதிப் பிரச்சனைகளைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.//

    சுய சாதி அபிமானத்தில் இன்று தலித்கள் பிராமணர்களுக்கு இணையாக இருக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தான போக்கு. அதற்குத்தான் நீங்கள் எரிபொருள் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

    // அதற்கு சமத்துவத்தை விரும்பும் ஒவ்வொருவரும் தன் சொந்த சாதிக்கெதிராகக் (சாதி மனப்பான்மைக்கெதிராக) கலகம் செய்ய வேண்டும்.//

    சாதியுடன் இணைந்தே பல வேலைகளைச் செய்ய முடியுமே தவிர சாதிக்கு எதிராக கலகம் செய்தால் அது சமூகத்தை அழிக்கும்.

    // அப்படிச் செய்பவர்கள் பலர் இருக்கின்றனர்.//

    சிலர் இருக்கிறார்கள். அவர்களால் கலத்தை மட்டுமே ஏற்படுத்த முடியும். சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. அந்த பட்டியலில் உங்களுக்கும் இடம் உண்டு. உங்கள் பாணியில் சொன்னால் எனக்கும் இடம் உண்டு.

    // அவர்கள் தொடர்ந்து அப்படிச் செய்வதானால் இந்தச் சாதி வெறியர்களை எளிமையாக அம்பலப்படுத்த முடியும்.//

    சமூகத்தை புரியாதவர்கள் பேசும் பேச்சு. இதைச்சரியான அணுகுமுறையில் எடுத்துச் சென்றால் இது ஒரு பிரச்சனையே கிடையாது. அதற்கு அதிகாரம் வேண்டும். அது உங்களிடம் இல்லை.

    சாதிவெறியன் என்ற பட்டத்தை கொடுத்ததற்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    • “தாழ்ந்த சாதி, தாழ்ந்த சாதியாகவே இருப்பதனால் தான் தாழ்ந்த சாதி தாழ்ந்த சாதியாக இருக்கிறது.”

      மதுரை பக்கம் வெயில் அதிகமா இருக்கா? இல்லை நீங்கள் எப்போதுமே இப்படித்தானா?

  223. ஐயா வினவு,

    வினவுவோட நோக்கம் என்ன? கொள்கை என்ன? அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது பற்றிய விவரத்தை எங்கயேயாவது இணைப்பு இருந்தா கொடுங்க நான் படிச்சுப் பார்த்துத் தெரிஞ்சுக்கிறேன்.

  224. வினவுக்கு உண்மையிலேயே சமூக அக்கறை இருந்தா,

    அது அனைத்து சமூகத்திடையேயும் என்ன விதமான ஒற்றுமையை ஏற்படுத்தும்? அதற்கான என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பது பற்றிய விவரங்களைப் போடுங்கள், நாங்களும் தெரிஞ்சுக்கிறோம்.

  225. வினவுக்கு ஒரு சவால்,

    நீங்கள் ஒட்டுமொத்தமாக வன்னியர், தேவர், கவுண்டர் சாதிவெறியை கண்டிப்பவர்களாக இருந்தால், அந்த சாதிகள் உங்கள் இயக்கத்திற்கு எதிரிகள் என்று அறிவியுங்கள்.

    அவர்களை ஒழிப்பதுதான் உங்கள் நோக்கம் என்று அறிவித்து பின்னர் ஒழித்துக் காட்டுங்கள். என்ன அறிவிப்பீர்களா?

  226. என்ன வினவு சார், திருவாளர் பகத்துக்கான என்னோட பதில்களை ரிலீஸ் பண்ணிவிடுறீங்களா? இல்லை திரும்ப பதில் போடவா?

Leave a Reply to amanushya puthiri பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க