பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு முடிவு கட்டுவோம்!
ஆணாதிக்க திமிரை ஒழிப்போம்!
மனித மதிப்பீடுகளை மழுங்கடிக்கும் மறுகாலணியாக்க கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்!
என்கிற தலைப்பில் சிந்தாமணி அண்ணாசிலை அருகில் காலை 10.30 மணி அளவில் விண்ணதிரும் பறை முழக்கத்துடனும், பெண் தோழர்களின் அரசியல் முழக்கத்துடனும் ஆர்ப்பாட்டம் துவங்கியது.
தலைமை உரையாற்றிய பெ.வி.மு தலைவர் தோழர்.நிர்மலா மார்ச்-8 பெண்கள் தினத்தை போராட்ட தினமாக கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும், பெ.வி.மு, திருச்சியில் எடுத்த போராட்டங்கள் பற்றியும் அதில் சில வகையான, கம்பியூட்டர் எஞ்சினியர் லியாகத் அலியின் ஆபாச பொறுக்கித் தனத்தை கண்டித்தும், வரதட்சணைக் கொடுமைக் கெதிராகவும், பேருந்தில் பெண்களை இழிவுபடுத்தும் ஓட்டுனர், நடத்துனரின் ஆணாதிக்க பொறுக்கி தனத்திற்கு எதிராகவும், 4 வயது சிறுமியை பாலியல் வன்முறைக் குள்ளாக்கிய காமப் பொறுக்கியை கண்டித்து போராட்டம் நடத்திய பெண்கள் விடுதலை முன்னணியின் செயல்பாடு பற்றியும் விளக்கி பேசினார்.
கண்டன உரையாற்றிய பெ.வி.மு தோழர் மலர், ஆரம்ப காலங்களில் பெண் என்பவள் மதிப்புக்குரியவளாக கருதப்பட்டாள், தனிச் சொத்துடைமை வந்த பின்னரே, ஆணாதிக்கம் வந்தது, மார்ச்-8 என்பது போராட வேண்டிய ஒரு தினம், ஆனால் இன்று கோல போட்டி, சமையல் போட்டி என போராட்ட நாளை சிதைக்க கூடிய வகையில் தான் நடத்துகின்றனர். இந்த தினத்தை கொண்டாடும் வகையில் பெண்கள் இல்லை, ஏனெனில் மறுகாலனியாக்க விளைவால் பாலியல் சுரண்டல், உழைப்பு சுரண்டல், உரிமையை மறுக்கும் ஆணாதிக்க சுரண்டல் என பல்வேறு சுரண்டல்களால் சிக்குண்டு கிடக்கின்றனர், அவர்களுடைய போராட்ட குணமென்பது கூடங்குளம், முல்லை பெரியாறு சம்பவங்களில் கண்கூடாக பார்க்க முடிகிறது, ஆனாலும் இந்த போர்க்குணம் மழுங்கடிக்கப்படும் விதமாக டிவி சீரியல்கலும் நுகர்வு வெறியும் திட்டமிட்டு புகுத்தப்படுகிறது. இதிலிருந்து மாறி பெண்கள் அமைப்பாக திரள வேண்டியதன் அவசியம் பற்றியும் பேசினார்.
இறுதியில் சிறப்புரையாற்றிய ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் சிறப்பு தலைவர் தோழர்.தர்மராஜ் பெண்கள் தினமான மார்ச்-8 இந்த தினத்தை கடைப்பிடிக்க வேண்டிய சூழ்நிலையிலா பெண்கள் இருக்கிறார்கள். டெல்லி பாலியல் வன்முறை பற்றிய பிரச்சினையில் ஆண்கள் சும்மா இருந்தாலும் பெண்களின் உடை நடை ஆண்களின் உணர்ச்சியை தூண்டும் விதமாக உள்ளது, பெண்களின் உடை சரியில்லை போய் தொடலாம் எனும் உரிமையை யார் கொடுத்தது. இப்படி சொல்வது ஆண்களின் ‘கெத்து’ அல்ல பொறுக்கிதனம், எனக்கு கிடைகலன்னா யாருக்கும் கிடைக்கக் கூடாதென்கிற ஆணாதிக்க திமிர், சமூகம் முழுமைக்கும் இதுதான் ஆதிக்கம் செய்கிறது. கருணாநிதி, அண்ணா இருவரும் பெண்களைப் பற்றி இழிவாக பேசியவர்களே, முல்லை பெரியாறு, கூடங்குளம் போராட்ட மக்கள் அடக்கக் கூடிய இந்த அரசால் காமப் பொறுக்கிகளை அடக்கமுடியாதா? அடக்க கூடாது என வளர விடுவதே அரசுதான், இந்த சமூக அமைப்பே அநீதியானது இதை மாற்றியமைப்பதன் மூலம் பெண்களுக்கான விடுதலை கிடைக்கும் என உணர்த்தினார்.
இடையிடையே ம.க.இ.க மையக் கலைக்குழுவினரின் எழுச்சிமிகு பாடல்கள் பாடப்பட்டன. பெண்கள், தோழர்கள் 100 பேர் அளவில் கலந்து கொண்டனர்.
[படங்களை பெரிதாக பார்க்க படத்தின் மீது அழுத்தவும்]
செய்தி: பெ.வி.மு.திருச்சி
இதை மார்ச் 8 அன்று நடத்தாமல், இப்பொழுது ஏன் நடத்துகிறீர்கள் ?
இருந்தாலும் போராட்டத்திற்கு வாழ்த்துகள்!
மார்ச்-8 அன்றே நடந்ததுதான். வினவில்தான் தாமதம்.
எந்தன் பகுதி எது நடந்தாலும் வரவே மாட்டேங்கது???????????
நான் வெளியிட்ட கருத்து இதில் பதிவாகவில்லை!!! இதற்குப் பெயர்தான் “மதசார்ப்பின்மை”. முஸ்லீம்களைப் பற்றி கருத்து தெரிவித்தால் அதனை வெளியிடுவதில்லை!!!! ஐயோ பாவம் வினவு!!!!!!!!!!! பெண்களுக்கு சுதந்திரம் வேண்டுமாம்!! என்ன சுதந்திரம் ? சஸ்பென்ஸ்!!!