privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்பெண்களுக்கு எதிரான வன்முறை - தமிழகம் தழுவிய போராட்டம்!

பெண்களுக்கு எதிரான வன்முறை – தமிழகம் தழுவிய போராட்டம்!

-

1. கரூர் சிவகிரியில் நடைபெற்ற அரங்கக் கூட்டம்

பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறைகளை கண்டித்து பிப்ரவரி 24ம் தேதி சிவகிரி பாலவிநாயகர் திருமண மண்டபத்தில் யில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில் நடைபெற்ற அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

தலைமை :தோழர் கோவிந்தசாமி
வரவேற்புரை : தோழர் புஸ்பராஜ், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
சிறப்புரை : தோழர் வாஞ்சிநாதன், மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை
நன்றியுரை : தோழர் இராஜா, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி

இக்கூட்டத்தில் பகுதி உழைக்கும் மக்கள் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில் கரூர் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெற்றது. காட்சி விளக்கப்படமும் தயாரித்து வைக்கப்பட்டிருந்தது.

தகவல் : பு.ஜ.தொ.மு.

[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

2. நல்லம்பள்ளி தெருமுனைக் கூட்டம்

தருமபுரி மாவட்ட விவசாயிகள் விடுதலை முன்னணி பிப்ரவரி 25ம் தேதி மாலை 5 மணிக்கு நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் ‘பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம்’ என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் நடத்தியது.

தலைமை : தோழர் ராமலிங்கம், விவசாயிகள் விடுதலை முன்னணி
கண்டன உரை:
தோழர் கோபிநாத், வட்டச் செயலாளர், விவசாயிகள் விடுதலை முன்னணிதோழர் பழனியம்மாள், விவசாயிகள் விடுதலை முன்னணி
தோழர்கள் செல்வராஜ், கீதா, முத்துக்குமார், மாயாண்டி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

தகவல் : புதிய ஜனநாயகம் செய்தியாளர், தருமபுரி

[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

3. மனித உரிமை பாதுகாப்பு மையம் திருநெல்வேலியில் நடத்திய கருத்தரங்கம்

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான கருத்தரங்கம் மனித உரிமை பாதுகாப்பு மையத்தால் திருநெல்வெலி ஏ. டி. எம். எஸ் அரங்கத்தில் வைத்து 23.02.2013-ம் தேதி மாலை நடைபெற்றது. கருத்தரங்கில் சுமார் 60 பேர் கலந்து கொண்டனர். கருத்தரங்கிற்கு திருநெல்வெலி மாவட்ட அமைப்பாளர் தோழர் செ. தங்கபாண்டியன், வழக்குரைஞர் தலைமை தாங்கினார்.

கருத்தரங்கில் பேசிய தோழர் இராமச்சந்திரன், தூத்துக்குடி கிளை செயலாளர் பெண்களை போகப் பொருளாக பாவிக்கும் சமூக சிந்தனையை சட்டத்தால் தடுக்கமுடியாது என்பதாலேயே இவ்வாறு தலைப்பிட்டுள்ளோம் என்று உதாரணங்களுடன் பேசினார். பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் போலீஸ் இராணுவத்தை தண்டிக்கக் கூடாது என்பதற்காகவே பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் போலீஸ், இராணுவத்தை சிவில் சட்டத்தின் மூலம் தண்டிக்க வேண்டும் எனும் பரிந்துரை உட்பட வர்மா கமிசனின் எந்த ஒரு பரிந்துரையையும் அரசு ஏற்கவில்லை என்று பேசினார்.

அடுத்தாக பேசிய தோழர் லயனல் அந்தோணிராஜ், மதுரை மாவட்ட கிளை செயலர் மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு எவ்வாறு ஏனைய மனித உரிமை அமைப்புகளிலிருந்து வேறுபட்டுள்ளது என்றும் குறிப்பிட்ட அரசியல் திசையில் செயல்படுகிறது என்றும் மனித உரிமை பாதுகாப்புமையம் ஏற்று மக்களை திரட்டியும் நீதிமன்றத்திலும் வென்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க சிதம்பரம் கோவில் போராட்டம் முதல் சமச்சீர் கல்வி போராட்டம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்று கருணாநிதி இயற்றிய சட்டத்திற்கு மதுரை பட்டர்கள் உச்சநீதிமன்றத்தில் பெற்ற தடை ஆணையை எதிர்த்து போராட்டம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு எஸ். பி. பிரேம் குமாரை எதிர்த்து நல்லனாமனுடன் நடத்திய போராட்டம், நீதிமன்றத்தில் வழக்கு உள்ளிட்ட குறிப்பான போராட்டங்கள் அனுபவங்களை எளிதாக விளக்கினார்.

அடுத்ததாக பேசிய தோழர் காளியப்பன் ம.க.இ.க இணைப் பொது செயலாளர் காரைக்கால் மாணவி வினோதினி மீது ஏவப்பட்ட வன்கொடுமை பற்றியும், இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் பெண்களை ஆண்களுக்கு அடிமையானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளன என்றும் பெரும்பாலும் பாலியல் வன்கொடுமை குடும்ப உறவினர் மூலமே நடைபெறுகிறது, பெண்கள் தங்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமையை வெளியே கூறினால் தங்களுக்கு அவமானம் என்று கருதி வெளியே கூறாமல் தன்னை தாழ்த்திக் கொள்கின்றனர், ஆனால் அவ்வாறு அல்லாமல் தனக்கு ஏற்பட்ட கொடுமை வேறு பெண்களுக்கு நடக்கக்கூடாது, இது ஒரு சமூகப்பிரச்சினை என்பதை புரிந்து கொண்டு குற்றம் புரிந்த நபர் மீது புகார் கொடுக்கவேண்டும், அப்போது தான் இதை தடுக்க முடியும். மேலும் ஒரு சோசலிச சமூகத்தை நோக்கிய நமது பாதை தான் இதற்கு நிரந்தர தீர்வு என்று பேசினார்.

இறுதியாக வழக்குரைஞர் அப்துல் ஜப்பார், நெல்லை ம.உ.பா உறுப்பினர் நன்றி தெரிவித்தார்.

தகவல்
செ. தங்கபாண்டியன், அமைப்பாளர்,
திருநெல்வேலி மாவட்டம்
மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

தருமபுரி

[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

4. பி.அக்ரகாரத்திலும், இண்டூரிலும் தெருமுனைக்கூட்டம்

பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணமா மது ஆபாசங்களை தடை செய் என்ற தலைப்பில் என்ற தலைப்பில் தெருமுனைக்கூடம் நடந்தது.

நாள் : 27.02.2013
தலைமை
: தோழர் சிவா, வட்டக்குழு உறுப்பினர், விவசாயிகள் விடுதலை முன்னணி
உரை : தோழர் பிரகாஷ், தோழர் பழனியம்மாள், தோழர் வனிதா

தோழர்கள் கோபிநாத், தோழர் குயில் ஆகியோல் கலந்து கொண்டனர்.

தகவல் : புதிய ஜனநாயகம் செய்தியாளர், தருமபுரி

 

 

5. திருமங்கலம் பொதுக்கூட்டம்

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம்!

என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திருமங்கலம் பகுதி அமைப்பாளர் தோழர் வீரணன் தலைமை உரையும் தோழர் ஆசை வி.வி.மு அவர்கள் சிற்றுரையும்,  தோழர் சி.ராஜூ மாநில அமைப்பாளர் மனித உரிமை பாதுகாப்பு மையம் அவர்கள் சிறப்புரையும் ஆற்றினார்கள்.

சிறப்புரைக்குப்பின் தோழர் வீரணன் திருமங்கலம் பகுதி அமைப்பாளர் அவர்களின் மகன் மணமகன் ராஜாவிற்கும் மணமகள் ஜோதிலட்சுமிக்கும் பொதுக்கூட்ட மேடையில் சீர்திருத்தத் திருமணம் தோழர் சி.ராஜூ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இத்திருமணத்திற்கு தோழர் மோகன் வி.வி.மு அமைப்பாளர் தேனி மாவட்டம்,  உசிலை வி.வி.மு செயலர் தோழர் குருசாமி, திரு மு.சி.சோ.முருகன், தி.மு.க திருமங்கலம் மற்றும் பெ.லெட்சுமணன் தி.மு.க திருமங்கலம் ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இறுதியில் ம.க.இ.க வின் புரட்சிகரக் கலைநிகழ்ச்சி எழுச்சியூட்டும் படி அமைந்தது.

தகவல் : வி.வி.மு.
[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

6. பென்னாகரம் பொதுக்கூட்டம்

01.03.2013 அன்று மாலை 6 மணிக்கு பென்னாகரம் டெம்போ ஸ்டேண்ட் அருகில் நடைபெற்றது.

தலைமை: தோழர் சிவா, வட்டக் குழு உறுப்பினர், விவசாயிகள் விடுதலை முன்னணி
உரை : தோழர் வனிதா, தோழர் பழனியம்மாள், தோழர் பிரகாஷ்,
சிறப்புரை
: தோழர் காளியப்பன், மாநில இணைச்செயலாளர், மக்கள் கலை இலக்கிய கழகம்

தோழர் காளியப்பன் தன் உரையில்

“இரண்டு நாளைக்கு முன்பு பென்னாகரம் அருகே 8 வயது லோகேஷ் என்ற சிறுவன் தனியார் பள்ளி வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியாளியுள்ளான். இன்று மாலை இண்டூர் அருகே ஜெயம் பொறியியல் கல்லூரி பேருந்தும் வெங்கடேஷ்வரா கலை அறிவியல் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதி 8 பேர் வரை உயிரிழந்ததாக சொல்கிறார்கள். ஒரு தனியார் பள்ளி – கல்லூரியின் லாபவெறிக்காக பெற்றோர்கள் தங்களின் அன்புச் செல்வங்களை இழந்து வருவது தினசரி நடக்கிறது.

அதே போலத்தான் பத்திரிகை, டிவி, சினிமா, இன்டர்நெட் முதலாளிகளின் லாபவெறிக்காக விளம்பரங்களில் பெண்களை ஆபாசமாக காட்டி வருகிறனர். முதலாளிகள் சமூகத்தை சீரழிப்பதன் மூலம் வாழ்ந்து வருகிறார்கள்.” என்று விளக்கினார்

இறுதியில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

ஏன்னா நா ஒரு ஆம்பள
திண்ண தட்ட கழுவ மாட்டேன்
தண்ணி மொண்டு குடிக்க மாட்டேன்
படுத்த பாய சுருட்ட மாட்டேன்
உடுத்த துணிய துவைக்க மாட்டேன்
ஏன்னா நா ஒரு ஆம்பள

என்ற பாடல் ஆணாதிக்கத் திமிரை சாடியது.

தகவல் : புதிய ஜனநாயகம் செய்தியாளர், தருமபுரி
[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

7. சிவகங்கை

பெண்கள் மீதான வன்கொடுமைக்கு முடிவு கட்டுவோம்!
ஆணாதிக்கத் திமிரை ஒழிப்போம்!
மனித மதிப்பீடுகளை மழுங்கடிக்கும் மறுகாலனியாக்க கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்!

27 ஆம் தேதி மாலை 5 மணிக்கு சிவகங்கை அரண்மனை வாசலில் பிரச்சாரக்கூட்டம் தொடங்கியது. புஜதொமு தோழர் கணேசன் தலைமை தாங்க தோழர்கள் தோழர் மோகன், தோழர் ஆனந்த், தோழர் குருசாமிமயில்வாகனன் ஆகியோர் உரையாற்றினார்கள். முடங்காதே! முடங்காதே! பெண்ணினமே முடங்காதே! / திருப்பி அடி! திருப்பி அடி! ஆணாதிக்கப் பொறுக்கிகளைப் பெண்ணினமே திருப்பியடி! என்று பகுதியை அதிரவைத்தன முழக்கங்கள். ஆங்காங்கே நின்று சற்று நேரமே கேட்டுக்கொண்டிருந்த சில பெண்களின் முகத்தில் தோன்றியது வியப்புணர்வு!

மறுநாள் 28 ஆம் தேதி மாலை 6 மணிக்கு அரசு போக்குவரத்துப் பணிமனையின் எதிரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்திற்கு புஜதொமு தோழர் சுரேஷ் கண்ணன் தலமை தாங்கினார். தோழர் கணேசன், தோழர் ஆனந்த், தோழர் குருசாமிமயில்வாகனன் ஆகியோர் உரையாற்றினர்.

நிகழ்ச்சி முடிந்ததும் கூட்டத்தைக் கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் சொன்னார், “இருந்தாலும் நீங்களும் ஆம்பிளைகளா இருந்துக்கிட்டு இப்பிடி ஆம்பிளைகளையே ரொம்பத் தாக்கிப் பேசக்கூடாது.” இன்னொருவர் சொன்னார், “ப.சிதம்பரத்தின் 2013 பொருளாதார ஆய்வறிக்கையிலிருந்து துவங்கி அது இன்றைய ஆணாதிக்கப்பொறுக்கித்தனத்தின் அடிப்படையாக எப்படி இருக்கிறது என்பதை விளக்கிய தோழர்களின் உரை மிகவும் புதிது.”

banner-1

தகவல் : பு.ஜ.தொ.மு.
[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க