privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்! மே நாளில் டிஜிபி அலுவலகம் முற்றுகை!

ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்! மே நாளில் டிஜிபி அலுவலகம் முற்றுகை!

-

ஈழத்தமிழ் அகதிகள்
ஈழத்தமிழ் அகதிகள் முகாமில்  ஒரு குடும்பம்

‘சிறப்பு அகதி முகாம்’ எனும் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்!
அனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்கு!!

என்ற முழக்கத்துடன்

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

ஆகிய புரட்சிகர இயக்கங்கள் இம்மாதம் முழுவதும் தமிழகமெங்கும் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளவிருக்கின்றன.

ஈழ அகதிகள் அவர்களுக்கான அகதி முகாம்களில் எவ்வாறு இரண்டாந்தர குடிமக்களாக கூட நடத்தப்படுவதில்லை என்பதையும்

  • சிறப்பு முகாம்களில் அவர்கள் ஒரு குற்றப் பரம்பரையினர் போல சிறை வைக்கப்பட்டு அடக்கி ஒடுக்கப்படுவதையும்
  • கியூ பிரிவு போலிசால் எந்த நேரமும் கண்காணிக்கப்படுவதையும்,
  • சிவில் மனித உரிமைகள் மறுக்கப்பட்டு அடக்கி ஒடுக்கப்படுவதையும்,

அம்பலப்படுத்துவதோடு, இந்த அடக்குமுறைச் செயல்களிலிருந்து ஈழத்தமிழ் அகதிகளை விடுவிக்க கோரியும்

பேருந்து, ரயில், குடியிருப்பு பகுதிகளிலும், தொழிற்சாலை வாயில்களிலும், மக்கள் கூடுமிடங்களிலும் சுவரெழுத்து மூலமும் இலட்சக்கணக்கான துண்டறிக்கைகள், சிறு வெளியிடுகள், நூல்கள், பாடல், கலைநிகழ்ச்சி, வீதி நாடகம், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள்,என விரிவாக இந்த பிரச்சார இயக்கம் மக்களிடையே கொண்டு செல்லப்படுகிறது.

மே நாள் அன்று சென்னையில், உயர்நீதிமன்றத்தின் அருகில் காலை பத்து மணிக்கு துவங்கும் துவங்கும் பேரணி இறுதியில் போலீசு டிஜிபி அலுவலகம் முற்றுகை  செய்யும் போராட்டமாக நடக்க உள்ளது. இந்த பேரணி-முற்றுகை போராட்டத்தில் தமிழகம் முழுவதிலுமுள்ள தோழர்கள், மக்கள், மாணவர்கள் கலந்துகொள்கின்றனர்.

தமிழின பிழைப்புவாதிகள் ஈழத்தாய் என ஏற்றிப் போற்றும் ஜெயலலிதாவின் ஈழத்தமிழர் விரோதப் போக்கையும் ஜெ உள்ளிட்ட ஓட்டுப் பொறுக்கிகள் ஈழத்தமிழர்க்காக வடிப்பது நீலிக்கண்ணீரே என்பதையும் உணர்ந்து ஈழத்தமிழரின் உரிமைகளை மீட்டெடுக்க மக்கள் போராட்டங்களே தீர்வு என்பதை மக்களுக்கு வலியுறுத்தும் விதமாக இந்த பிரச்சார இயக்கம் நடத்தப்படவுள்ளது.

முழக்கங்கள்

  • சிறப்பு அகதி முகாம் எனும் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்!
  • அனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்கு!
  • ஈழத்தமிழ் அகதிகள் மீதான போலீசு கண்காணிப்பு கட்டுப்பாடுகளை நீக்கு!
    கவுரவமான வேலைவாய்ப்பு, குடியிருப்பு வழங்கு!

தகவல் :
ம.க.இ.க., பு.ஜ.தொ.மு.,பு.மா.இ.மு., பெ.வி.மு.