privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ஈழ அகதிகளுக்கு உரிமை கோரி திருச்சியில் பிரச்சாரம் !

ஈழ அகதிகளுக்கு உரிமை கோரி திருச்சியில் பிரச்சாரம் !

-

சிறப்பு அகதிமுகாம் எனும் முள்வேலிக்குள் சிறைவைக்கப் பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்!
அனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்கு!

எனும் தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம் திருச்சி நகர் முழுவதும் ஏப்ரல் 27ம் தேதி 12 இடங்களில் பெண்கள் விடுதலை முன்னணி, சார்பாக நடத்தப்பட்டது.

பெண் தோழர்கள் 20 பேர் அளவில் குழந்தைகளுடன் வேன் மூலம் பிரச்சாரம் செய்தனர், ஒவ்வொரு இடத்திலும் பெண் தோழரின் பறை முழக்கம், அரசியல் முழக்கம், பாடல்கள், பேச்சு என செய்யப்பட்டது.

மக்கள் ஒவ்வொரு இடத்திலும் 50 , 100 பேர் எனும் அளவில் கூடி நின்று ஆதரவளித்தனர், நிதியும் கொடுத்து உதவினர், மக்களில் சிலர் நம்மையே சாகடிக்கிற அரசியல் வாதிகள், ஈழத் தமிழர்களுக்கு என்ன கிழிக்க போறங்க என ஆதங்கப்பட்டனர், மே 1 போராட்ட அறை கூவலுடன் பெண் தோழர்கள் பேசினர். ஈழத்தில் லட்சக்கணக்கில் அழிக்கப்பட்ட தமிழ் மக்கள், இன்று உயிருடன் கொல்லப்படும் அவலம், முகாம்களில் அவர்கள் படும் வேதனை, தனிச்சிறைகளில் குடும்பம், பிள்ளையை விட்டு தனிமைப் பட்டிருக்கும் கொடுமை, இதையெல்லாம் சரி செய்ய வக்கில்லாத இந்திய அரசையும் தமிழக அரசையும் கண்டித்தும் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை கோரியும், கௌரவமான வேலைவாய்ப்பு, இருப்பிடம் போன்றவை அமைத்துக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் கூறி பேசினர்.

வேனின் முன்பும் பின்பும் முழக்கங்கள் அடங்கிய பேனர்கள் கட்டப் பட்டிருந்தது மக்கள் மத்தியில் கூடுதலாக பிரச்சாரம் ஆனது, தெருமுனைப் பிரச்சாரத்தின் விளம்பரமாக அந்தந்த பகுதிகளில் சுவரொட்டிகள் விரிவாக ஒட்டப்பட்டது.


(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்)
தகவல் : பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி.