privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்சுரா, சோம லித்வேனிய மது மத்ய சுவாகா...

சுரா, சோம லித்வேனிய மது மத்ய சுவாகா…

-

“இந்துமதம் ‘தொன்மையானது’, அதை யாராலும் அழிக்கமுடியாது, காலத்திற்கேற்றவாறு தன்னை புதுப்பித்துக்கொள்ளும் திறன் உள்ளது” என்று அடிக்கடி அசரீரீ முழங்கும் ஆர்.எஸ்.எஸ். அம்பிகளுக்கு ஒரு உற்சாகமூட்டும் புது செய்தி வந்திருக்கிறது.

லித்துவேனிய தேன் மது”ரிக் வேதத்தில் சொல்லப்பட்ட சூப்பர் தேன் மது லிதுவேனியாவிலிருந்து இந்தியாவுக்கு மீண்டும் வருகிறது” (தினகரன் செய்தி. 3.12.2013) என்பதுதான் அது. பால்டிக் நாடுகளுடன் வர்த்தகத் தொடர்பு வைத்திருக்கும் இந்தியன் பால்டிக் சேம்பர் ஆஃப் காமர்ஸ் சார்பில் ஜனவரியில் டெல்லி உணவுக் கண்காட்சியில் இதன் அறிமுகம் செய்யவிருக்கிறதாம். உலகத்துக்கே ஊத்திக் கொடுத்த இந்து மதத்தின், தேன் மது மீதான  பேட்டண்ட் உரிமையை லிதுவேனிய மது தர்ம கம்பெனி ஸ்டாக்லிஸ்கஸ், பிரிட்டிஷ் ராணி எலிசபெத்திடம் இருந்து 1969 -ல் பெற்றுக் கொண்டதாம். பாரம்பரி இந்து மரபு மதுவில் சிறிதளவு ஆல்கஹால் கலந்து அந்த சாதனையை  நிகழ்த்தியிருக்கிறது.

தேசிய மது மீதான காப்புரிமையை அன்னிய நிறுவனம் பறித்துக்கொண்ட தேசிய அவமானத்தை தீர்க்க மோடி பிரிட்டிஷூக்கு எதிராக ‘பொங்குவதற்கு’ ஆர்.எஸ்.எஸ். அம்பிகள் ஒரு போதை யாத்திரை நடத்தினாலும் நடத்தலாம். இல்லை இந்து மதத்தின் சகிப்புத்தன்மை காரணமாக ரிக் வேத பார்மூலாவுடன் குறைந்த பட்சம் ஆல்கஹால் கலக்கும் லிதுவேனியக் கம்பெனியை இந்து தர்மத்தோடு கலந்து குஜராத்தில் ஒளிரக் கூப்பிட்டாலும் கூப்பிடலாம். ரிக்வேதத்தின் இந்தத் தேன் மதுவுக்கு ஒரிஜினல் பிராண்ட் மாடலாக இருந்த ரிஷிகள் அபாஸ்ய ஆங்கிரசன், கவி பார்கவன், வசு பாரத்வாஜன் இந்த காலத்தில் இல்லா விட்டால் என்ன, இருக்கவே இருக்கிறார் ரீல் மாடல் மோடி!

பார்ப்பனர்கள் பாலையும், முட்டையையும் சைவத்தில் சேர்த்து வெகு நாளாயிற்று, அசுவமேதயாகம், ஆட்டுக்குட்டி யாகம், பசு வேள்வியெல்லாம் நகரத்து பாஸ்ட் புட்களில் பாரம்பர்யப்படி நடக்கிறது. பாரம்பர்ய ரிக் வேத தேன் மது மட்டும் கசக்கவா போகிறது. நீ அடிச்சாதான் தண்ணி! அவா ஊத்துனா ஜலம்! வேதங்கள் மட்டுமல்ல, சாணக்கியனின் ”அர்த்த சாஸ்த்திரமும்” சாராயத்தை ஓட விட்டு ‘ரெவின்யு’ பார்க்கலாம் என்பதை அரசனுக்கு ஓதுகிறது. அவாளின், வேதங்களின் சாஸ்த்திரங்களின் பாஸ் மார்க்குக்கு முன் டாஸ்மாக் எம்மாத்திரம்? தண்ணியை போட்டு விட்டு ஒரு குடும்பத்தை அடிப்பவனை ரவுடிகள் என்கிறோம், சோமத்தை ஊத்திக் கொண்டு குலத்தையே (அசுர குலத்தை) அழித்தவர்கள் ரிஷிகள். ‘காம சோமான்னு’ வேலை பார்க்கத் தெரிந்த பெரியவாளுக்கு முன்னே சூத்திர அப்பு, கதிரவன் எம்மாத்திரம்?

“நீ அடிச்சா தெரு போதை, அவா அடிச்சா தெய்வீக போதை, கஞ்சா இழுப்பதில் கூடவா நால் வர்ண வாடை!” இப்படியெல்லாம் பேசுவது வேதத்தையும், இந்து தர்மத்தையும் இழிவுபடுத்துவது என்று யாராவது உருகினால், ரிக் வேதத்தின் பத்து மண்டலங்களையும் படிக்காதவர்கள் என்று அர்த்தம். அதாவது மதுவை ஏற்காதவர்கள் வேதத்தையே ஏற்காதவர்கள், மறுப்பவர்கள் என்ற ‘பழி’ வந்து சேரும். தேன் மதுவை விடவும் காட்டமான சுரா, சோம பானங்களை தயாரித்து அந்த காலத்திலேயே ‘இந்து மதத்துக்கு’ ஒரு கிளர்ச்சியூட்டியவர்கள் வேதாதி ரிஷிகள்.

ரிக்வேதம் மண்டலம் 1 -ல் 7-ம் சூக்தத்தில் ”சோமத்தை பருகி இந்திரனுடைய வயிறு கடல்போல் பரவுகிறது” என்கிறது. 9 – வது பிரிவு சூக்தம் 2 -ல் ”ஊக்கமளிப்பதும், உற்சாகமளிப்பதுமான இந்த சோமத்தை இந்திரனுக்கு அளியுங்கள்” என்று சியர்ஸ் போடுகிறது. மண்டலம் 8 சூக்தம் 9 -ல் ”சோமனே, நீ பல பாண்டங்களில் வைக்கப்பட்டிருக்கிறாய், பகல் வேள்வியில் பாலோடும், மாலை வேள்வியில் தயிரோடும் கலக்கப்படுகிறாய், நீ தீரனுக்கு மிக்க மதமளிக்கும் பானமாயிருக்கிறாய்” என்று மிக்சிங் மேட்டரோடு வழிகிறது. மண்டலம் 9 -ல், பிரிவு 67 – சூக்தம் 3 -ல் சோமரசம் பசுமை நிற செடியிலிட்டு, கற்களால் பிழியப்பட்டு, ஆட்டுத் தோலில் வடிகட்டப்பட்டு, பாலோடு பாய்வதை ஃபுல் போதையில் வருணிக்கிறது. ரிக்வேதம் முழுக்கவே, பல மண்டலங்களில் சாராயம் காய்ச்சுவதை ஒரு தொழிலாகவே செய்யும் அவாள் பாஷையில் புனித வேள்வி செய்முறையும், செடிகளை நசுக்கி சாறெடுக்கும் கற்களின் ஓசை மந்திர ஒலியாய் காதை அடைக்கிறது.

ரிக் வேத ரிஷிகள் தொடங்கி, ‘ஏத்திவிடப்பா, தூக்கிவிடப்பா’ என்று தனி கிளாசில் தனக்கேற்றமாதிரி ஆண்டவனைத் தேடும் ஐயப்ப சாமிகள் வரை இந்து மதத்தில் போதையும் ஒரு பூஜைதான் என்பதோடு, பார்ப்பன இந்து மதமே ஒரு போதைதான் என்பதும் ‘நிதானமாக’ சிந்தித்தால் யாராலும் மறுக்க முடியாது. குடி குடியை கெடுக்கும் என்று போர்டை போட்டுக் கொண்டு டாஸ்மாக்கும் சீரியலும் ஒடிக்கொண்டிருக்கும் போது வேதங்களுக்கும் அப்படியொரு போர்டை போட்டு விட்டால் போதுமா? இதையெல்லாம் கேட்கும் போது கோபம் வரத்தான் செய்யும், வரட்டும் சொல்பவர்கள் மீது அல்ல, குடிகாரர்களின் மதமாக இந்துமதத்தை சுதி ஏற்றும் வேதங்களின் மீது!

– துரை.சண்முகம்

மேலும் படிக்க