அன்பார்ந்த பெற்றோர்களே ! வணக்கம்
ஜெர்மனி, ஜப்பான், சீனா போன்ற பெரும்பான்மையான நாடுகளில் தாய்மொழியில்தான் அனைவரும் கல்வி கற்கிறார்கள். கல்வியை பொதுப் பள்ளிகள் மூலமாக அந்த நாடுகளின் அரசுதான் முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. அருகமை பள்ளி முறை – அதாவது நம்ம ஊர் ரேஷன் கடை போன்று அந்தந்தப் பகுதியில் வாழும் மக்கள் தங்கள் பிள்ளைகளை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்த்து கல்வி கற்கும் அருகாமை பள்ளி முறைதான் இன்றளவும் நடைமுறையில் உள்ளது.
10, +2 தேர்வு முடிவுகளை, 100% தேர்ச்சி, மாநிலத்தில் முதலிடம், மூன்றாவது இடம் என நாள்தோறும் பத்திரிகையில் வரும் தனியார் பள்ளிகளின் விளம்பரங்கள் ஆடித் தள்ளுபடிக்கு வரும் வீட்டு உபயோக பொருட்களின் விளம்பரத்திலிருந்து எந்த வகையில் வேறுபட்டது? மாணவர்களுக்கு கல்வியை கற்பிப்பதற்கு பதிலாக, கல்வியையும், மாணவர்களையும் விற்பனை சரக்காக்கி, பயன்படுத்தி தூக்கி எறியும் பொருளாக மாற்றுவதை நாம் அனுமதிக்க முடியுமா?
உங்களுக்கு தெரியுமா? அரசுப் பள்ளி மாணவர்கள் சுமார் 1 கோடியே 35 லட்சம். தனியார் பள்ளி மாணவர்கள் சுமார் 27 லட்சம். அரசுப் பள்ளிகள் மொத்தம் 56,573, தனியார் மெட்ரிக் பள்ளிகள் சுமார் 16,000. ஆனால் அரசுப் பள்ளிகளின் சாதனை மறைக்கப்பட்டு தனியார் பள்ளிகளை தவிர வேறு இல்லை என்பது போல் திட்டமிட்டு விளம்பரம் செய்கிறார்கள். இதன் நோக்கம் அரசுப் பள்ளிகளை முடமாக்கி கல்வி வியாபாரத்தை விரிவுபடுத்துவதன்றி வேறு என்ன? இதற்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள் துணை போகிறார்கள்.
‘மார்க் எடுக்கும் மாணவர்கள் அறிவாளிகள், தேர்ச்சி பெறாத மாணவர்கள் முட்டாள்கள் அல்லது படிக்க முடியாதவர்கள்’ என்ற தவறான கருத்து இன்றைய கல்விமுறையில் உருவாக்கப்படுகிறது. இது களையப்பட வேண்டும். வகுப்பறை என்பது ஒரு தலைமுறை மாணவர்கள் தம் சிந்தனையை உருவாக்கிக் கொள்ளும் உயரிய இடம். அதற்கு மனிதநேயம் சார்ந்த வகுப்பறை சூழல் வேண்டும். கட்டிடங்கள் கல்வியை கற்பிக்காது. ஒரு தலைமுறையை உருவாக்குகிறோம் என்ற பொறுப்புணர்வு உள்ள ஆசிரியர் சமூகத்தால்தான் சரியான கல்வியை கற்பிக்க முடியும்.
அனைவருக்கும் இலவச கல்வி உரிமை என்பது அரசியலமைப்பு சட்டத்தில் அடிப்படை உரிமையாக உள்ளது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து பள்ளிகளின் தரம் உயர்த்த போராடாமல் கட்டணக் கொள்ளையடிக்கும் தனியார் ஆங்கிலவழி பள்ளிகளில் சேர்த்து விட்டு கட்டண சுமையை வாழ்நாள் முழுவதும் தங்கள் தோளில் சுமப்பது ஏன்?
ஆங்கில வழியில் தனியார் பள்ளியில் படித்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். இலட்சக் கணக்கில் சம்பாதிக்க முடியும் என்ற மூட நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறார்கள்.
கன்னடம், தெலுங்கு போன்று ஆங்கிலமும் ஒரு மொழி. அமெரிக்காவில் ஆங்கிலம் பேசிதான் பிச்சை எடுக்கிறான். ஆனால் ஆங்கில வழியில் படித்து மம்மி,டாடி என்றால் தான் அறிவாளிகள் என்ற, விஞ்ஞானத்திற்கு புறம்பான கருத்து மக்கள் மீது ஆழமாக பல்வேறு வடிவங்களில் வியாபார நோக்கில் மூளைச்சலவை செய்யப்படுகிறது.
இதனால் தங்கள் பிள்ளைகளை ஏ.டி.எம் மெஷினாக மாற்றுவதற்கு பெற்றோர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் பித்து பிடித்து ஓடுகிறார்கள். மாணவர்களை மார்க் எடுக்கும் எந்திரமாக்கி பிராய்லர் கோழியாக மாற்றும் தனியார் பள்ளியில் தள்ளும் கொடுமை இங்குதான் நடக்கிறது.
தனியார் பள்ளி தரம் என போகும் பெற்றோர் மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்விக்கு அரசு கல்லூரிகளுக்கு வருவது ஏன்? பச்சமுத்து உடையார், சண்முகம் முதலியார், ஜே.பி.ஆர் சாராய உடையார் என தனியார் நடத்தும் கல்லூரிகளுக்குப் போகாமல் இருப்பது ஏன்?
ஆங்கில வழியில் படித்து விட்டா திருவள்ளுவர் 1330 குறள் படைத்தார். தாய்மொழியில் படித்தவர்கள், சிந்தித்தவர்கள்தான் உலகின் தலைசிறந்த அறிவாளிகளாக, விஞ்ஞானிகளாக இருக்கிறார்கள். அரசுப் பள்ளியில் படித்தவர்கள் இன்றைக்கு பல துறைகளில் உயர்பதவி வகிக்கிறார்கள்.
பெற்றோர்களாகிய நாம் சங்கமாக இணைந்து போராடினால் அனைவருக்கும் தரமான இலவச கல்வியை, ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை பெற முடியும்.
கல்வி உரிமைக்காக தொடர்ந்து போராட எமது பெற்றோர் சங்கத்தில் இணையுங்கள். உங்கள் ஊரில் பெற்றோர் சங்க கிளையை உடனே துவங்க முயற்சியுங்கள். அனைத்திற்கும் நாங்கள் உதவ எப்போதும் தயாராக இருக்கிறோம்.
நம் பிள்ளைகளுக்கு நாம் போராடாமல் யார் போராடுவார்கள்.
தொடர்ந்து போராடி வருகிறோம். நிதிச்சுமை எங்களை பெருமளவில் அழுத்துகிறது. நீங்கள் கொடுக்கும் சிறு தொகை கூட பல போராட்டங்களை உயிர்ப்பிக்கும்.
நிதி தாருங்கள், மாநாட்டுக்கு வாருங்கள், நன்றி.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு
7.6.2014, சனி
விருத்தாசலம்
மாநாடு – பேரணி
மக்கள் மன்றம், ஜங்ஷன் ரோடு
பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சி
வானொலித்திடல், விருத்தாச்சலம்
மாநாடு
7-6-2014 சனி, மக்கள் மன்றம், விருத்தாசலம்.
காலை அமர்வு – 10 மணி
தலைமை
திரு வெ வெங்கடேசன், மாவட்ட தலைவர்,
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
விருத்தாசலம்
வரவேற்புரை
திரு ச. செந்தாமரைக்கந்தன், மாவட்ட செயலாளர்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
விருத்தாசலம்
அரசுப் பள்ளிகளோடு தனியார் பள்ளிகளை ஒப்பிட முடியாது!
பேராசிரியர் ந.சி.சந்திரசேகரன், முதல்வர் (ஓய்வு)
கந்தசாமிகண்டர் கல்லூரி,
நாமக்கல்
இலவச கல்வியின் கழுத்து நெரிக்கும் தீர்ப்புகள்!
வழக்கறிஞர் ச. மீனாட்சி, உயர்நீதிமன்றம், சென்னை
மனித உரிமை பாதுகாப்பு மையம்
ஆங்கிலவழி கல்வி சொர்க்கத்துக்கு போகும் குறுக்கு வழியா?
உதவிப் பேராசிரியர் ஆ இளங்கோவன்,
விலங்கியல் துறை, அண்ணாமலை பல்கலைக் கழகம்,
சிதம்பரம்
கல்வி கொள்ளையர்களாக அதிகாரிகளும், அரசியல்வாதிகளும்!
தோழர் த கணேசன், மாநில அமைப்பாளர்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு
விவாத அரங்கம்
மதிய அமர்வு 2.30 மணி
அரசுப் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்கள் பங்குபெறும்
மாணவர்களுக்காக பள்ளிக் கூடங்களா?
பள்ளிக் கூடங்களுக்காக மாணவர்களா?
தலைமை
பொறியாளர் த.குணசேகரன், மாவட்டத் தலைவர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
விருத்தாசலம்
ஒருங்கிணைப்பு
திரு சி.எஸ்.பி.ரவிக்குமார்,
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
கொள்ளிடம்
பரிசளிப்பு நிகழ்ச்சி
பேச்சுப்போட்டி
விடுதலைப் போரின் வீரமரபு
ஓவியப்போட்டி
டாஸ்மாக் – சீரழிவு
திருக்குறள் ஒப்புவித்தல்
கல்வி, ஒழுக்கம் அதிகாரம்
போட்டிகள் ஒருங்கிணைப்பு
திரு க. செல்வக்குமார், திரு ஆ. செல்வம்,
திரு ப. தீபக்குமார், திரு ரா.குமார், மனித உரிமை பாதுகாப்பு மையம்,
திரு. வா. அன்பழகன், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், விருத்தாசலம்
பேரணி மாலை 5 மணி
துவங்குமிடம்
திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி, விருத்தாசலம்
துவக்கி வைப்பவர்
திரு.வி சோமசுந்தரம், தலைவர், விருத்தாசலம்
தமிழ்நாடு செராமிக் & ரெப்ராக்டரீஸ் மேனுபேக்சரர் அசோசியேசன்
பொதுக்கூட்டம்
மாலை 6 மணி, வானொலித்திடல், விருத்தாசலம்
நம் பிள்ளைக்காக நாம் போராடாமல் யார் போராடுவது?
தலைமை
வழக்கறிஞர் ரெ புஷ்பதேவன், மாவட்டச் செயலாளர்
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
விருத்தாசலம்
முன்னிலை
வழக்கறிஞர் சி.செந்தில், துணைச்செயலாளர்
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
சிதம்பரம்
திரு.ஜி.ராமகிருஷ்ணன், நகர தலைவர்,
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
சிதம்பரம்
திரு மு.முஜிப்பூர் ரஹ்மான், நகர செயலாளர்,
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
சிதம்பரம்
திரு கோ. தமிழரசன், தலைமை ஆசிரியர் (ஓய்வு), தலைவர்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், சேத்தியாதோப்பு
உரையாற்றுவோர்
துரை.சண்முகம்,
மக்கள் கலை இலக்கிய கழகம், சென்னை
இமயம்,
எழுத்தாளர், விருத்தாசலம்
கோ பாக்கியராஜ், தலைமை ஆசிரியர்,
அரசு நடுநிலை பள்ளி, இலங்கியனூர்,
மாநிலத் தலைவர், ஆதி திராவிட ஆதிவாசிகள் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கம்
வழக்கறிஞர் சி.ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர்
மனித உரிமை பாதுகாப்பு மையம்.
மக்கள் கலை இலக்கியக் கழக மையக் கலைக் குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெறும்
நன்றியுரை
வழக்கறிஞர் ச. செந்தில்குமார்,
இணைச்செயலாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம், கடலூர்.
தொடர்புக்கு:
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் – கடலூர் மாவட்டம் – 9345067646
மனித உரிமை பாதுகாப்பு மையம், கடலூர் மாவட்டம் 9360061121