முகப்புகட்சிகள்காங்கிரஸ்கஜினி முகமது : கல்வெட்டு உண்மைகள் ! பாடநூல் புரட்டுகள் !

கஜினி முகமது : கல்வெட்டு உண்மைகள் ! பாடநூல் புரட்டுகள் !

-

பாபர் மசூதியை இடிக்கத் தனது ரதயாத்திரையை குஜராத்திலுள்ள சோமநாதபுரத்திலிருந்துதான் துவங்கினார் அத்வானி. அயோத்திக்கு பாபர்; சோமநாதபுரத்திற்கு கஜினி. அயோத்தியில் ராமர் கோயில் எதையும் பாபர் இடிக்கவில்லை என்பது பல வரலாற்று ஆசிரியர்களாலும் தொல்பொருள் ஆய்வாளர்களாலும் தெளிவாக நிரூபிக்கப்பட்டுவிட்டது.

ஆனால் சோமநாதபுரத்தின் விசயம் அப்படி அல்ல. சோமநாதபுரம் கோயிலை கஜினி முகமது கொள்ளையிட்ட செய்தி நீண்ட நாட்களாகவே நமது வரலாற்றுப் பாட நூல்களில் இடம் பெற்று வருகிறது.

இந்தியாவில் இந்து – முசுலீம் முரண்பாட்டின் துவக்கமே கஜினியின் இந்தப் படையெடுப்புதான் என இன்று பாரதிய ஜனதா கும்பல் செய்து வரும் பிரச்சாரத்திற்கு உறுதியான அடித்தளத்தை வழங்குகின்றன நமது பாடநூல்கள்.

கஜினி படையெடுப்பு
கஜினி படையெடுப்பு

அப்படியானால் கஜினி முகமது சோமநாதபுரத்தின் மீது படையெடுத்ததும் கொள்ளையடித்ததும் பொய்யா? இல்லை, மறுக்க முடியாத உணமை.

ஆனால் கஜினி படையெடுத்தபோது சோமநாதபுரத்தில் வாழ்ந்துவந்த முசுலீம்களும் அவனை எதிர்த்துப் போரிட்டு மடிந்தார்கள் என்பதும், அதேபோல கஜினி முகமதுவின் தலைநகரமான கஜினியில் பெரும் செல்வந்தர்களாகப் பல இந்து வர்த்தகர்கள் இருந்தனர் என்பதும், ‘இந்துக்’ கோயிலைக் கொள்ளையடித்த அந்த ‘இசுலாமிய’ மன்னன்தனது நாட்டின் ‘இந்து’ வர்த்தகர்களைக் கொள்ளையடிக்கவில்லை என்பதும் நமது பாடநூல்கள் குறிப்பிடாத உணமை.

கத்தியவாரை (குஜராத்) ஆண்டு வந்த சோலங்கி மீது கஜினி முகமது படையெடுத்த அதே கால கட்டத்தில் தான், தெற்கே சோழ நாட்டிலிருந்து இராசேந்திர சோழன் சாளுக்கியர்கள் மீது படையெடுத்தான். இராசேந்திர சோழனின் படையெடுப்பை இந்தியா மீதான படையெடுப்பென்றோ, இந்து மன்னர்களுக்கிடையிலான மோதல் என்றோ குறிப்பிடாத வரலாற்றுப் பாடநூல் கஜினி முகமது எனும் ‘இசுலாமிய’ மன்னன் ‘இந்தியா’ மீது படையெடுத்ததாகக் குறிப்பிடுவதை ஒப்பு நோக்க வேண்டும்.

ஒரு நாடு என்ற பொருளில் இந்தியா என்று நாம் இன்றைக்கு அழைக்கின்ற புவிப்பரப்பு சுமார் 50(தற்போது 65 ஆண்டுகள்) ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது. கஜினி முகமதுவின் காலத்திலோ, அதற்கு முன்னரோ இந்தப் புவிப்பரப்பு ஒரே ஆட்சியின் கீழ் ஒரு நாடாக எப்போதும் இருந்ததில்லை.

ஏன், 1947 ஆகஸ்டு 15-ம் தேதியன்று காஷ்மீரும், ஆந்திரத்தின் பெரும் பகுதியும், பல வடகிழக்கு மாநிலங்களும் இந்திய யூனியனில் இல்லை. எழுபதுகளுக்கு முன்னர் சிக்கிம் இந்தியாவில் இல்லை. அவ்வாறிருக்கும் போது 20-ம் நூற்றாண்டில் உருவாகவிருக்கும் இந்தியா மீது 11-ம் நூற்றாண்டிலேயே கஜினிமுகமது எப்படிப் படையெடுக்க முடியும்?

இவ்வாறு பேசுவதே தேசத் துரோகம் என்று ஆர்.எஸ்.எஸ். காரர்கள் குமுறுவார்கள். அகண்ட பாரதத்திற்கு அவர்கள் வரைந்துள்ள எல்லைக் கோட்டின்படி ஆப்கானிஸ்தானமும் இந்தியாவில் அடக்கம். அந்தக் கணக்கின்படி பார்த்தால் இராசேந்திர சோழனைப் போல கஜினி முகமதுவும் ஒரு இந்தியன். ஒரு இந்தியன், எப்படி இந்தியாவின் மீது படையெடுக்க முடியும்?

இது வேடிக்கையான வாதமோ, குதர்க்கவாதமோ அல்ல. இந்து தேசியக் கண்ணோட்டத்திலிருந்து நமக்குக் கற்பிக்கப்படும் வரலாற்றை விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து புரிந்து கொள்ளும் முயற்சி.

பிரபல வரலாற்றாய்வாளர் ரோமில்லா தபார் பம்பாய் பல்கலைக் கழகத்தில் இவ்வாண்டு நிகழ்த்திய டி.டி. கோசாம்பி நினைவுச் சொற்பொழிவில் சோமநாதபுரம் படையெடுப்பு குறித்த புதிய வரலாற்றுத் தரவுகளை வெளியிட்டுள்ளார். ‘செமினார்’ ஆங்கில மாத இதழில் வெளியான அந்தக் கட்டுரையை ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்படுகிறது.

***

சோமநாதபுரம் – அரேபியர்களுடன் இருந்த கடல் வர்த்தகத் தொடர்பு காரணமாக செல்வச் செழிப்புடன் விளங்கிய துறைமுக நகரம். இந்த அராபிய வர்த்தகத் தொடர்பு பல நூற்றாண்டுகள் முந்தையது. அரேபிய வர்த்தகர்கள், மாலுமிகளில் பலர் இங்கேயே திருமண உறவு ஏற்படுத்திக் கொண்டு மேற்குக் கடற்கரை ஓரமாக நிரந்தரமாகவே தங்கி விட்டனர். கி.பி 8, 9 நூற்றாண்டைச் சேர்ந்த ராட்டிரகூட ஆட்சியில் கடலோரப் பகுதிகளில் தாஜிக்கிஸ்தானைச் சேர்ந்த முசுலீம்கள் ஆளுநர்களாகக் கூடப் பணியாற்றியிருக்கின்றனர். அதே போல கஜினி நகரத்தில் இந்து வியாபாரிகள் செல்வாக்குடன் இருந்திருக்கின்றனர்.

சோமநாதபுரம் கடற்கரை
சோமநாதபுரம் கடற்கரை (இன்று)

சோமநாதபுரம் கோயில் அத்தனை செல்வச் செழிப்புள்ளதாக விளங்கச் சில காரணங்கள் இருந்தன. கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் யாத்திரை வரி வசூலிக்கப்பட்டது. (ஜஸியா எனும் யாத்திரை வரி முசுலீம் மன்னர்களால் இந்து யாத்தீகர்களிடம் வசூலிக்கப்பட்டதாக மட்டுமே கூறுகிறது பாடநூல்). இதில் கிடைத்த பெரும் வருவாயைக் கொண்டு அரேபியக் குதிரை இறக்குமதி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தது கோயில் நிர்வாகம்.

கோயில் நிர்வாகத்திற்கும், சோலங்கி ஆட்சிக்கும் அன்றைக்குப் பெரும் சவாலாக இருந்தவர்கள் கோயிலுக்கு வரும் பக்தர்களைக் கொள்ளையடித்த குறுநில மன்னர்கள்தான். யாதவர்கள், சுடாசாமர்கள், அபிரர்கள் என்று அழைக்கப்பட்ட அந்தக் குறுநில மன்னர்கள் வர்த்தகர்களையும் பக்தர்களையும் வழிமறித்து அவர்கள் கொண்டுவரும் காணிக்கைகளை வழிப்பறி செய்தனர். இவர்களைச் சமாளிப்பதுதான் சோலங்கி அரசின் தலையாய பணியாக இருந்தது.

இந்தப் பின்புலத்தில் கி.பி 1025-ம் ஆண்டு நடந்தது கஜினியின் படையெடுப்பு. அது குறித்த வெவ்வேறு வரலாற்று ஆதாரங்களை இனிக் காண்போம்.

துருக்கிய – பாரசீகக் குறிப்புகள்:

ன்னர்களின் வீரபராக்கிரமங்களை மிகைப்படுத்திக் கூறும் எல்லா இலக்கியங்களுக்கும் உள்ள தன்மை இவற்றிலும் உண்டு. கீழை இசுலாமிய உலகின் குறிப்பிடத்தக்க கவிஞரான பரூக்கி சிஸ்தானி என்பவர் கஜினியின் படையெடுப்பைப் பற்றி விவரிக்கிறார்.

சிஸ்தானியின் கூற்றுப்படி சோமநாதபுரத்தில் கஜினியால் உடைப்பக்கட்ட சிலை இந்துக் கடவுள் அல்ல; இசுலாம் தோன்றுவதற்கு முன் அரேபியாவில் வழிப்பட்டு வந்த வாத், உஸ்ஸா, மானத் என்ற பெண் தெய்வங்களில் ஒன்றான மானத் என்ற பெண் கடவுளின் சிலை.

உருவ வழிபாட்டை எதிர்த்த முகமது நபி இச்சிலைகளை உடைத்தெறியுமாறு ஆணையிட்டதாகவும் மற்ற இரண்டு கடவுள்களின் சிலையும் உடைக்கப்பட்டு விட்டதாகவும், மானத்தின் சிலை மட்டும் குஜராத்திற்கு ரகசியமாகக் கடத்தி வரப்பட்டு விட்டதாகவும் கூறுகிறார் சிஸ்தானி.

‘’சு-மானத்’ என்றால் ’’மானத் கடவுளின் உறைவிடம்’’ என்று பொருள். இந்தச் சிலையை உடைத்ததன் மூலம் நிறைவேற்றப்படாமலிருந்த ஒரு இசுலாமியக் கடமையை கஜினி நிறைவேற்றிவிட்டார்’’ என்று அவர் எழுதுகிறார்.

மன்னனைக் ‘குளிப்பாட்டுவதற்கு’ வழக்கமாக அரசவைப் புலவர்கள் புனையும் கதைதான் இது என்றும், பல்வேறு இசுலாமிய மன்னர்களைக் காட்டிலும் தன்னை ஒரு மதக்கடமையை நிறைவேற்றிய மாவீரனாகச் சித்தரித்துக் கொள்ள கஜினி செய்த முயற்சி என்றும் கூறி வரலாற்றாசிரியர்கள் இந்தக் கதையை நிராகரிக்கின்றனர்.

கஜினியின் அரசவையில் இருந்த அல் பரூனி எனும் அறிஞர் இந்தியாவின்பல பகுதிகளிலும் சுற்றுப் பயணம் செய்து கிதாப் உல் ஹிந்த் எனும் வரலாற்று நூலை எழுதியவர். அவர் இத்தகைய கட்டுக் கதைகள் எதையும் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கஜினி பேரரசு
கஜினி பேரரசு

இவை ஒரு புறமிருக்க சன்னி பிரிவு முசுலீமான கஜினி, ஷியா மற்றும் இசுமாயிலி பிரிவு முசுலீம்கள் 50,000 பேரை இசுலாமிய மார்க்கத்துக்கு விரோதமானவர்கள் என்று கூறிக் கொலை செய்தான் என்றும் துருக்கிய – பாரசீக வரலாற்றுக் குறிப்புகள் கூறிகின்றன.

இன்னொரு சம்பவமும் நடதுள்ளது. மூல்தான் நகரிலிருந்த இந்துக் கோயிலொன்றை இசுமாயிலி முசுலீம்கள் தாக்கியிருக்கின்றனர். அதற்குப் பதிலடியாக இசுமாயிலி முஸ்லீம்களைத் தாக்கியது மட்டுமின்றி அவர்களது மசூதியையும் இழுத்து மூடியிருக்கிறான் கஜினி.

சோமநாதபுரத்தின் மீதான தாக்குதல், ஷியா மற்றும் இசுமாயிலி பிரிவு முசுலீம்கள் மீதான தாக்குதல் ஆகியவற்றை மதக் கடமையை நிறைவேற்றும் செயல்களாக அன்று இசுலாமிய உலகத்திடம் (கலீபாவிடம்) கஜினி சித்தரித்திருக்கலாம். எனினும் அடிப்படை உண்மை அதுவல்ல.

இந்தியாவின் பல்வேறு அரசுகளுடன் நடைபெற்ற குதிரை வர்த்தகத்தில் அரேபியாவுடன் கஜினி (ஆப்கான்) போட்டியிட்டுக் கொண்டிருந்தது. சோமநாதபுரத்தின் போரா முஸ்லீம் மற்றும் இந்து வணிகர்கள் மூலமாகவும், சிந்து மாகாணத்தின் (மூல்தான்) இசுமாயிலி, ஷியா வியாபாரிகள் மூலமாகவும் நடைபெற்ற இந்த வர்த்தகத்தைத் தடுப்பதன் மூலம்தான் கஜினியின் வர்த்தகம் பெருகும் என்பது யதார்த்த நிலையாக இருந்தது.

வர்த்தகத்திற்கான யுத்தம் மதப் போர்வை போர்த்திக் கொண்டது இப்படித்தான் நடந்திருக்க வேண்டும்.

சமண நூல்களின் குறிப்புகள்:

இனி, அக்காலத்தில் நாடெங்கும் செல்வாக்குடன் திகழ்ந்த சமண மத்ததினரின் குறிப்புகளைக் காண்போம். கோயில்களை அழித்து முனிவர்களையும் பார்ப்பனர்களையும் துன்புறுத்துகின்ற ராட்சதர்களுக்கெதிராக சாளுக்கிய மன்னன் போர் தொடுத்ததை 12-ம் நூற்றாண்டின் சமண நூல் குறிப்பிடுகிறது.

ஆனால் ஒரு நூற்றாண்டுக்கு முன் நடந்த கஜினியின் படையெடுப்பு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இதே சாளுக்கிய மன்னன் காம்பே பகுதியில் முசுலீம்களுக்கு ஒரு மசூதி கட்டிக் கொடுத்திருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சாளுக்கிய மன்னன் குமாரபாலன் என்பவன் சாகாவரம் பெற விரும்பிய கதையை இன்னொரு சமண நூல் கூறுகிறது:

கஜினி முகமது
கஜினி முகமது

சோமநாதபுரத்திலுள்ள மரத்தினாலான பாழடைந்த கோயிலை கற்கோயிலாக மாற்றிக் கட்டினால் சாகாவரம் பெறலாமென அவனது அமைச்சன் கூறிய யோசனையை மன்னன் அமல்படுத்துகிறான். சமண மதத்தைச் சார்ந்த அந்த அமைச்சன் தனது மதத்தின் வலிமையை மன்னனுக்குப் புரிய வைக்க சமண முனிவர் ஒருவரை அழைத்து வந்தான். சோமநாதபுரம் கோயிலுக்கு வந்த அந்த முனிவர் தனது தவ வலிமையினால் ‘சிவபெருமானை’ அழைத்தவுடனே சிவன் மன்னனுக்குக் காட்சியளித்தாராம். சிவனையே சொடுக்கு போட்டு வரவழைக்கும் அந்த முனிவரின் தவ வலிமையை வியந்த மன்னன், உடனே சைவத்திலிருந்து சமணத்திற்கு மாறினான் எனவும் அந்நூல் குறிப்பிடுகிறது.

கஜினி முகமதுவின் படையெடுப்புக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின் எழுதப்பட்ட இந்நூலிலும் படையெடுப்பு பற்றி எந்தத் தகவலும் இல்லை.

11-ம் நூற்றாண்டில் (அதாவது கஜினி முகமதுவின் படையெடுப்பின் போது) வாழ்ந்த மால்வா அரசவையின் சமணக் கவிஞர் தனபாலன் என்பவர் சோமநாதபுரம் படையெடுப்பைக் குறிப்பிடுகிறார். ஆனால் சிலை உடைப்பு பற்றி ஏதும் இல்லை. மாறாக மகாவீரரின் சிலைகளை கஜினி முகமதுவால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதை விரிவாகக் கூறுவதன் மூலம் சைவத்தைக் காட்டிலும் சமணத்தின் மேன்மையை வலியுறுத்துகிறார்.

சைவத்திற்கு எதிராகக் கடுமையாக மோதிக் கொண்டிருந்த சமணர்கள், ‘’தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத சிவபெருமானைப்’’ பற்றி எழுதாமல் இருக்க வேண்டிய அவசியம் என்ன?

சோமநாதபுரத்தின் சமஸ்கிருதக் கல்வெட்டுகள்:

12, 13-ம் நூற்றாண்டில் சமஸ்கிருதக் கல்வெட்டுக்கள், கோயிலை உள்ளூர் குறுநில மன்னர்கள் கொள்ளையிட்டதைப் பற்றியே கூறுகின்றன.

ஆனால் 100 ஆண்டுகளுக்கு முந்தைய கஜினி முகமதுவின் படையெடுப்பைப் பற்றி ஒரு கல்வெட்டும் இல்லை.

கல்வெட்டைக் காண்பவர்கள் ‘’சிவனுக்கே இந்தக் கதியா’’ என்று நம்பிக்கையிழந்து விடுவார்கள் என்ற சங்கடமா? அப்படியானால் உள்ளூர் மன்னர்கள் கோயிலைத் தாக்கியதை மட்டும் ஏன் குறிப்பிட வேண்டும்? அல்லது கோயிலைக் கொள்ளையடிப்பது என்பது அடிக்கடி நடக்கக்கூடிய சாதாரண விசயமாக இருந்ததா? – என்ற பல கேள்விகளை இக்கல்வெட்டுகள் கிளப்புகின்றன.

1264-ம் ஆண்டின் இன்னொரு கோயில் கல்வெட்டு மிக முக்கியமானது. சமஸ்கிருதத்திலும் அராபிய மொழியிலும் பொறிக்கப்பட்டுள்ள இந்தக் கல்வெட்டு, ஹார்மூஸ் நகரைச் சேர்ந்த ஒரு முசுலீம் வியாபாரிக்கு மசூதி கட்டுவதற்காக சோமநாதபுரத்திலேயே நிலம் விற்பனை செய்யப்பட்டது பற்றியதாகும்.

கோஜா நூருதீன் பெரூஸ் என்ற வியாபாரிக்கு ஸ்ரீசாதா என்ற உள்ளூர் மன்னன் அனுமதியுடன் செய்த இந்த நிலவிற்பனைக்கு இரண்டு உள்ளூராட்சி அமைப்புகளும் அங்கீகாரம் அளித்துள்ளன.

சோமநாதபுரம் கோயிலின் அர்ச்சகர் வீரபத்ரனின் தலைமையில் வர்த்தகர்கள், அதிகாரிகள், உள்ளூர்ப் பிரமுகர்கள் அடங்கிய ‘பஞ்சகுலா’ என்ற பஞ்சாயத்து ஒரு உள்ளூர் அமைப்பு.

கப்பல் முதலாளிகள், கைவினைஞர்கள், மாலுமிகள், மதகுருமார்கள் ஆகியோரடங்கிய ‘ஜமாதா’ என்ற ஜமாத் இரண்டாவது அமைப்பு. இந்த ஜமாத்தின் உறுப்பினர்களாக வாணிபர்கள், கொத்தனார்கள், முசல்மான் குதிரை லாயக்காரர்கள் ஆகியோரும் அவர்களது சாதியின் பெயரால் குறிப்பிடப்படுகிறார்கள். இவர்கள் இசுலாத்திற்கு மாறிய உள்ளூர் சேவைச் சாதியினராக இருக்கக்கூடும்.

மசூதிக்கான நிலம் யார் யாரிடமிருந்தெல்லாம் விலைக்கு வாங்கப்பட்டது என்ற பட்டியல் தெளிவாக உள்ளது. அதில் பெரும்பகுதி நிலம் சோமநாதபுரம் கோயிலுக்குச் சொந்தமானது என்பதும், அதை விற்பனை செய்தவர் கோயிலின் தலைமை அர்ச்சகரான பார்ப்பனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மொத்தக் கல்வெட்டையும் பரிசீலிக்கும் போது, எவ்வித நிர்jfபந்தமுமின்றி மிகச் சுமுகமாகவே இந்த விற்பனை நடந்துள்ளதென தெரிகிறது.

கஜினி முகமதுவின் படையெடுப்பு நடைபெற்று சுமார் இருநூறே ஆண்டுகளில் அந்தக் கோயில் நிலத்தையே மசூதிக்கு விற்க அர்ச்சகர்களும், ‘இந்து’ வியாபாரிகளும் எப்படிச் சம்மதித்தனர்? 1000 ஆண்டுகளாக இந்தியா முழுவதிலுமுள்ள இந்துக்களின் நினைவில் கல்வெட்டாகப் பதிந்து அவமான உணர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் என்று பாரதீய ஜனதா கூறுகிறதே, அந்த கஜினியின் படையெடுப்பை அதே சோமநாதபுரத்தைச் சேர்ந்த அர்ச்சகர்கள் மறந்தது எப்படி? அதுவும் இருநூறே ஆண்டுகளில்!

ஞாபக மறதியா? அல்லது பலநூறு படையெடுப்புகளில் அதுவும் ஒன்று என்பதால் நினைவில் வைத்துக் கொள்ளும் அளவு முக்கியமானல்ல என்பதாலா?

அல்லது தங்களுடன் “சுமூகமான வர்த்தக உறவு கொண்டிருந்த அரேபியர்கள் வேறு, ஆக்கிரமித்த துருக்கியர்கள் வேறு; இருவரும் இசுலாமிய மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இவர்களிருவரையும் ‘முசல்மான்கள்’ என்று ஒரே மாதிரியாகக் கருத முடியாது’’ என எண்ணினார்களா – இந்தக் காரணம்தான் அடிப்படையானதாகத் தெரிகிறது.

அதுமட்டுமல்ல, குதிரை வர்த்தகத்திற்குப் பெயர்போன ஹார்மஸ் நகர முசுலீம் வியாபாரிக்குத்தான் நிலம் விற்கப்பட்டிருக்கிறது. எனவே வர்த்தக நலன் இதில் பெரும்பங்கு ஆற்றியிருக்கக் கூடும். கோயில் நிர்வாகிகள் கோயில் பணத்தில் குதிரை வர்த்தகம் செய்து கணிசமாக லாபம் ஈட்டியிருக்கக் கூடும் என்பதும் இந்தப் ‘பெருந்தன்மைக்கு’க் காரணமாக இருந்திருக்கலாம்.

‘அர்ச்சகர்களின் பெருந்தன்மை’

இந்திய மன்னர்களுடன் நடைபெற்ற குதிரை வர்த்தகம் அரேபியா, சிந்து பகுதிகளைச் சேர்ந்த ஷியா, இசுமாயிலி பிரிவு முஸ்லீம் வியாபாரிகள் கையில் இருந்தது. இந்த வர்த்தக வழியைத் தடுத்து, ஆப்கான் மூலம் வர்த்தகம் செய்ய வைப்பதன் மூலம் தனது அரசின் செல்வாக்கை பெருக்குவதே கஜினி முகமதுவின் நோக்கம். வர்த்தகத்திற்கான யுத்தம் மதப் போர்வை அணிந்தது இப்படித்தான்.

அதேபோல கஜினி முகமது சோமநாதபுரதிதன் மீது படையெடுத்து 200 ஆண்டுகளுக்குள், அந்த கோயில் நிலத்தையே மசூதி கட்டுவதற்காக விற்றிருக்கிறார்கள் கோயில் அர்ச்சகர்கள். இவர்களும் குதிரை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததுதான் இந்தப் ‘பெருந்தன்மை’க்கு காரணமாக  இருக்கும்.

சோமநாதபுரத்திலேயே காணப்படும் 15-ம் நூற்றாண்டின் கல்வெட்டொன்று இவை அனைத்தையும் புரிந்து கொள்வதற்கான திறவுகோலாகப் பயன்படுகிறது.

சமஸ்கிருத மொழியில் உள்ள அக்கல்வெட்டு ‘’பிஸ்மில்லா ரஹ்மானி ரஹீம்’’ என்ற இசுலாமிய வாழ்த்துச் சொல்லுடன் தொடங்குகிறது. ‘’போராபரீத்’’ என்பவருடைய அராபிய வம்சாவளியை விவரமாகக் கூறி துருக்கியர்களால் (கஜினி) சோமநாதபுரம் தாக்கப் பட்டபோது அதை எதிர்த்து உள்ளூர் மன்னன் பிரம்ம தேவன் சார்பாக போரா பரீத் போரிட்டு மடிந்ததாகவும், அவரது நினைவாக அந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

படையெடுப்புக்கு ஆளான சோமநாதபுரம் நகரைச் சேர்ந்தவர்களே கஜினியின் படையெடுப்பைப் பற்றி அப்போதும், அதையடுத்த சில நூற்றாண்டுகளிலும் எத்தகைய கருத்தும் கண்ணோட்டமும் கொண்டிருந்தார்கள் என்பதை நாம் கண்டோம். அப்படியானால் இந்த ‘’ஆயிரம் ஆண்டு அவமானம்’’ என்ற கதை எப்போது உருவானது? இந்தக் கதையின் முதல் ஆசிரியர்கள் வெள்ளையர்கள்.

பிரிட்டிஷ் காமன்ஸ் அவை விவாதம்:

“சோமநாதபுரத்தின் மீது படையெடுத்த கஜினி முகமது அந்தக் கோயிலின் சந்தனமரக் கதவுகளை கொண்டு சென்று விட்டான். ஆப்கானிஸ்தானத்தில் உள்ள பிரிட்டிஷ் ராணுவம் கஜினிக்குச் சென்று அங்கிருந்து அந்தக் கதவைக் கொண்டு வந்து இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று 1842-ல் அறிவித்தார் லார்டு எல்லன்பரோ.

(1857-ல் நடைபெற்ற முதல் சுதந்திரப் போருக்கு 15 ஆண்டுகள் முன்னர்தான் அந்த விவகாரம் தொடங்குகிறது என்பதையும், இந்து-முசுலீம் மன்னர்களையும் மக்களையும் பிளவுபடுத்துவது அன்றைய கிழக்கிந்தியக் கம்பெனியின் வாழ்வுக்கே அவசியமானதாக இருந்தது என்பதையும் வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.)

ஆப்கானை வெல்ல முடியாத பிரிட்டன் இக்கதவுகளைக் கொண்டு வருவதன் மூலம் ஆப்கான் மீதான தனது மேலாண்மையைக் காட்டலாம்; அதே நேரத்தில் இந்துக்களையும் கவர முடியும் என்பது இந்நடவடிக்கையின் நோக்கம்.

இந்நடவடிக்கையை ஆட்சேபித்த காமன்ஸ் அவையின் எதிர்த் தரப்பினர், “இது முசுலீம்களின் எதிர்ப்பைச் சம்பாதிப்பதில் முடியும்; மேலும் லிங்க வழிபாடு போன்ற காட்டுமிராண்டித்தனமான நம்பிக்கைகளுக்கு நாம் துணை போவதாக அமையும்” என்று கூறினர்.

இந்த எதிர்ப்பை முறியடிக்க எல்லன் பரோவின் ஆதரவாளர்கள் கீழ்க்கண்டவாறு வாதிட்டார்கள்:

“முசுலீம் மன்னர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட அந்த நாடு, அந்தத் துன்புறுத்தும் நினைவுகளால் ஆயிரம் ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறது. இந்துஸ்தானத்தின் மீதான மிக மோசமான ஆக்கிரமிப்பின் சின்னமாக அந்தச் சந்தனக் கதவுகள் இந்துக்களின் நினைவில் பதிந்திருக்கின்றன. எனவே இந்நடவடிக்கை அவர்களுக்குப் பெரும் ஆறுதலாக இருக்கும்” என்றனர்.

கஜினியின் படையெடுப்பு – கொள்ளைக்கு ஆதாரமாக அவர்கள் காட்டிய நூல் பிரிஷ்டா என்ற பாரசீகக் கவிஞன் 17-ம் நூற்றாண்டில் எழுதியது. 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் அது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது.

11-ம் நூற்றாண்டில் சிஸ்தானி எழுதியதைக் காட்டிலும் பிரிஷ்டாவின் கட்டுக்கதை மிகக் கவர்ச்சிகரமானது. சோமநாதபுரத்தில் மிகப் பிரம்மாண்டமான கடவுள் சிலை இருந்ததாகவும், அதன் வயிற்றைத் தன்னுடைய வாளால் கஜினி முகமது கிழித்தவுடன் அதிலிருந்து தங்கமும் நகையும் கொட்டத் தொடங்கியதாகவும் புராணப் புளுகுகள் கணக்கில் அளக்கிறார் பிரிஷ்டா.

ஒரு வழியாக இந்த ‘’வரலாற்று ஆதாரத்தை’’ வைத்துக் கொண்டு கஜினியிலிருந்து இரண்டு கதவுகளைத் தூக்கிக் கொண்டு வந்தது பிரிட்டிஷ் ராணுவம். வந்தபின் பார்த்தால் அவை எகிப்தியக் கதவுகள். அதற்கும் சோமநாதபுரத்திற்கும் சம்பந்தமில்லை. எனவே அவை ஆக்ரா கோட்டையில் வைக்கப்பட்டன. ‘இந்துக்களின் நினைவில் பதிந்த அந்த சந்தனக் கதவுகளை’ இப்போது கரையான்கள் தின்று கொண்டிருக்கும்.

காங்கிரசும் கஜினி முகமதுவும்:

இந்திய தேசிய விடுதலை இயக்கம் மறைமுகமாக முன்வைத்த இந்து தேசிய அரசியல் சோமநாதபுரம் விவகாரத்தைப் பெரிதாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது.

குஜராத்தைச் சேரந்த கே.எம்.முன்ஷி சோமநாதபுரம் கோயிலை திரும்பக் கட்டுவதை தேசிய இயக்கத்தின் கடமையாக முன்னிறுத்தினார். இவர் கல்கி பாணியிலான ‘வரலாற்று’ நாவல்கள் எழுதிக் கொண்டிருந்தவர். முசுலீம் எதிர்ப்பு இந்து தேசியத்தை பிரச்சாரம் செய்த பங்கிம் சந்திரரின் ஆனந்தமடம் நாவலைப் படித்து, அதன் தாக்கத்தில் அதே பாணியில் “ஜெய சோமநாதா’’ எனும் நாவலை இவர் 1927-ல் எழுதி வெளியிட்டார். “சோமநாதா – அழிவில்லா ஆலயம்” என்ற இவரது இன்னொரு நூல் 1843-ல் பிரிட்டிஷ் காமன்ஸ் அவையில் நடைபெற்ற விவாதக் குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளது.

“இசுலாமிய ஆக்கிரமிப்புக்கு முந்தைய ஆரியப் பெருமிதத்தை மீட்பதே நமது லட்சியம்” என்று பகிரங்கமாகப் பேசி வந்த முன்ஷி மத்திய அமைச்சரும் ஆனார். ஆட்சிக்கு வந்தவுடனே முதல் வேலையாக இந்திய அரசாங்கம் சோமநாதபுரம் கோயிலைக் கட்டி 1951-ல் ஜனாதிபதி ராசேந்திர பிரசாத்தை வைத்துக் குடமுழுக்கு நடத்தியது.

“இந்திய அரசாங்கம் இதுவரை செய்த, செயது கொண்டிருக்கிற அனைத்துப் பணிகளைக் காட்டிலும் இந்தக் கோயிலைக் கட்டியதுதான் முக்கியமானது; ஏனென்றால் இது ஒட்டுமொத்த இந்தியாவையும் மனம் குளிரச் செய்யும்” என்றார் அமைச்சர் முன்ஷி.

இப்படியாக ஒரு வரலாற்றுப் புரட்டு மதரீதியாகப் புனிதப்படுத்தப்பட்டதுடன், “அரசு அங்கீகாரம் பெற்றது” என்ற முத்திரையும் அதன்மீது இடப்பட்டு விட்டது.

பாடநூல் புரட்டு!

மெட்ரிகுலேசன் பாடத்திட்டத்தின் வரலாற்றுப் பாடநூலிலிருந்து சில வரிகளைக் கீழே தருகிறோம். ரோமிலா தபாரின் ஆ்ய்வுடன் இதனைப் பொருத்திப் பார்க்கவும்.

“கஜினி முகமது ஒரு முஸ்லீம் வெறியன். சோமநாதபுரத்தில் அவன் சிவபெருமான் சிலையைத் துண்டு துண்டாக உடைத்தான்; குவியல் குவியலாக வைரங்களையும், நகைகளையும் கொள்ளையடித்தான். ஏராளமான பேரைப் படுகொலை செய்தான்”

“கஜினி முகமதுவிம் படையெடுப்பின் விளைவாக பஞ்சாப், முஸ்லீம்களின் கைக்குப் போய் விட்டது, இந்திய நாடிடன் பொருளாதார, இராணுவ வல்லமைக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.”

‘மதவெறியன்’, பஞ்சாப் போன கதை இவையெல்லாம் பிரிஷ்டாவின் கட்டுக் கதையையும், முன்ஷியின் நாவலையும் வைத்து எழுதப்பட்டவை. இந்த ‘வரலாற்றை’ப் படித்த படிப்பாளிகள் மதவெறிக்கு ஆளாவதில் என்ன வியப்பு!

***

ராளமான நூல்கள் மற்றும் கல்வெட்டுகளை ஆதாரம் காட்டி இந்த ஆய்வுரையை நிகழ்த்தியிருக்கிறார் ரோமில்லா தபார். ஆனால் எந்தக் கோயிலை பாதுகாப்பதற்காக ஒரு முசுலீம் உயிர் துறந்தாரெனக் கல்வெட்டு இருக்கிறதோ அதே கோயிலிலிருந்து முசுலீம் மக்களுக்கெதிரான நாடு தழுவிய கலவரத்தைத் துவக்கி வைக்கிறார் அத்வானி.

இத்தகைய வரலாற்றுப் புரட்டு என்பது இந்துமத வெறியர்களால் மட்டும் செய்யப்படுவதல்ல. தத்தம் அரசியல் தேவைக்கு ஏற்ப இசுலாமிய, கிறித்தவ மதவெறியர்களும், இன வெறியர்களும், சாதி வெறியர்களும் இதையே தான் செய்கிறார்கள். கட்டபொம்மன் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த மன்னன் அல்ல – கொள்ளைக்காரத் தெலுங்கன் எனகிறது ஒரு தமிழின வெறிப் பத்திரிகை; ஏதோ ஒரு குறுநில மன்னனாக இருந்திருக்கக் கூடிய பெரும் பிடுகு முத்தரையர் சாதி அரசியலின் தேவை காரணமாக சென்னை நகர முச்சந்தியில் உருவிய வாளுடன் நிறுத்தி வைக்கப்படுகிறார்; கான்சாகிபுவா மருதநாயகமா என்ற தகராறு கமலஹாசனுடைய படத்தின் வசூலுக்கு வலிமை சேர்க்கிறது. வரலாற்றின் பெயரால் சாதி, மத, இனவாதிகள் நடத்தும் இந்த மோதலை முறியடிக்க வேண்டுமானால் நமக்குத் தேவை வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கண்ணோட்டம். அந்தக் கண்ணோட்டமிருந்தால் நாம் கஜினியையும் புரிந்து கொள்ளலாம்; கார்கிலையும் புரிந்து கொள்ளலாம்.

மன்னனின் பெருந்தன்மை

கஜினி முகமதுவால் தோற்கடிக்கப்பட்ட ஆனந்த பாலன் என்றும் மன்னன் கஜினி முகமதுவுக்கு எழுதிய ஒரு கடிதத்தை அல்பரூனி தனது நூலில் மேற்கோள்  காட்டுகிறார்.

“உங்களுக்கெதிராகத் துருக்கியர்கள்  கலகம் செய்வதாக அறிந்தேன். நீங்கள் விரும்பினால் 500 குதிரைப் படையினர், 10,000 காலாட்படையினர், 100 யானைகளுடன் நான் உங்கள் உதவிக்கு வருகிறேன். அல்லது இரண்டு பங்குப் படையுடன் என் மகனை அனுப்புகிறேன்.  ஏனென்றால் நான் உங்களால் தோற்கடிக்கப்பட்டவன், நீங்கள் வேறொருவனால் தோற்கடிக்கப்படுவதை நான் விரும்பவில்லை”

முஸ்லீம் மக்களை ‘பாபரின் வாரிசுகள்’ என்று கூறும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் ஆனந்தபாலனின் வாரிசுகள் யார் என்று நமக்கு அடையாளம் காட்டுவார்களா?

– அஜித்
___________________________________
புதிய கலாச்சாரம் – ஆகஸ்டு 1999
___________________________________

  1. கஜினியைப் போல சிறந்த அரசர் கிடையாது. சோமநாத புரத்தின் மீது கொண்ட அளவு கடந்த அன்பினால்தான் அவர் 17 முறை விஜயம் செய்தார்.

    • Gurumani Madi
      வன்மையாக கண்டிக்கிறோம்
      வினவு என்ற தளத்தில் நீங்கள் கஜ்னி என்ற மன்னன் நல்லவன் பாட நூல்களில் கூறுவதுபோல் இஸ்லாமிய வெரியன் அல்ல என்பதை நிரூபிக்க பல வரலாறுகளை சுட்டி காட்டிய நீங்கள் (அது உண்மையா என்பது வேறு விசயம்) ” ஏதோ ஒரு குறுநில மன்னனாக இருந்திருக்கக் கூடிய பெரும் பிடுகு முத்தரையர்” என்று ஐயப்பாடோடு குறிப்பிட்டுள்ளீர்கள் அப்படியென்றால் உங்களுக்கு வரலாறு தெரியவில்லை என்று தானே அர்த்தம் எந்த சான்றுமே இல்லாமல் எப்ப்டி பேரரசரை பற்றி தவறாக எழுதியுள்ளீர்கள் இதே போன்றுதான் உங்கள் எழுத்து முழுவதுமே புனையப்பட்ட ஆதாரமுடையது. அதுவும்” சென்னை நகர முச்சந்தியில்”என்று குறிப்பிட்டுள்ளீர்கள்,(சென்னையில் பேரரசருக்கு சிலை இல்லை) இப்படி நிகழ்காலம் பற்றி கூட தெரியாத நீங்கள் கடந்தகால வரலாறு பற்றி எழுதியுள்ளீர்கள், அதுமற்றுமின்றி “சாதி அரசியலின் தேவை காரணமாக”தான் சிலை வைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளீர்கள்ஒன்று புரிந்து கொள்ளுங்கள் அனைத்து சாதிகளும்,மதங்களும் தனது தலைவர்களை சுதந்திர போராட்ட தியாகி,விடுதலை வீரர்( சுதந்திர போராட்டத்தில் இவர்களின் பங்கே தேடித்தான் பார்கவேண்டும்) என்ற போர்வையிலேயே சிலை வைக்கப்பட்டுள்ளது ஆனால் எம் மன்னவருக்கு எம் குலம் வணங்க சிலை வடிக்கப்பட்டுள்ளது இது எம் முன்னோர் வழிபாடு எமது அரச குல வரலாற்று சான்று அதை நீங்கள் சாதி அரசியலுக்காக என்று பார்த்தால் இங்குள்ள அனைவருமே அரசியலுக்காக தனது சாதி மதம் சார்ந்து இருக்கக்கூடியவர்கள் தான் என் நீங்கள் இவ்வளவு கூச்சல் போடுகிறீர்களே அதுவும் அரசியல் காரணத்திற்காகத்தான் என்பதை உலகம் அறியாமல் இல்லை. இன்றைக்கு எத்தனையோ சாதிகளும்,மதங்களும் தன்னை வரலாற்றில் மிகை படுத்திகொள வரலாறு தேடி அலைகிறது வரலாற்றை புனைகிறது ஆனால் எமது சமூக வரலாறுகள் பல எங்களுக்கு அந்த தேவை இல்லை ஆனால் அவைகள் வீணர்களால் மரைகபதுல்லந. உண்மை வரலாறு வெளிப்படும் ஒருநாள்……..இங்கு ஒன்றை குறிப்பிடுகிறேன் எம்மன்னர் எம் குலதெய்வம் அரசாண்ட காலத்தில் கஜினி அல்ல வேறு எந்த கழுதையும் அரசியலில் கிடையாது… எங்களது வரலாறு மறைக்கப்பட்டாலும் பரவாயில்லை ஆனால் இது போன்ற திரிப்புகளை வன்மையாக கண்டிக்கிறோம்……..
      குரு. மணிகண்டன்

  2. பார்பானீயம் தன இருப்பை இந்தியாவில் தக்க வைத்துக்கொள்ள இது போன்ற வரலாற்று திரிபுகளை செய்து இஸ்லாமிற்கு எதிரான பொய்யான கருத்தியலை ஏற்படுத்தி அதை நன்றாக பயன்படுத்திக்கொள்கிறது. இப்படி ஒரு யுக்தியை அவர்கள் கையாளவில்லை என்றால் தன்னுடைய பெரும்பான்மை இந்து மக்களிடையே பார்பானியம் அம்பலப்பட்டுவிடும் என்பதை பார்பனர்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள். ஏனென்றால் இந்திய நெடிய வரலாற்றில் பார்பானியம் இந்திய பெரும்பான்மை மக்களுக்கு வர்ணங்களாக, ஜாதிகளாக பல கொடுமைகளை காலம் காலமாக செய்து வந்திருக்கிறது. இன்றும் செய்துக்கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் உள்ள பெரும்பான்மை இந்து மக்கள் விழித்து எழுந்து பார்பாநியத்திற்கு எதிராக திரும்பாமல் இருக்கவும், (பெரும்பான்மை இந்துக்களின் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற) இந்து மக்களின் தலைமை பொறுப்பை பார்பானியம் இழக்காமல் இருக்கவும் தொடர்ந்து இஸ்லாமிய எதிர்புணர்வை கச்சிதமாக இந்து மக்களிடையே விதைக்கப்படுகிறது. சோமநாத படை எடுப்பு திரிப்பு, பாபர் மசூதி வரலாற்று திரிப்பு, இஸ்மாயில் என்ற பெயரில் ஒரு பார்பான் காந்தியை கொன்றது, நாடு முழுவதும் குண்டு வைத்து தன மக்களையே கொன்று அந்த பலியை இஸ்லாமியர்கள் மீது சுமத்துவது, பாகிஸ்தான் கொடியை அரசு அலுவலகங்களில் ஏற்றுவது, கோயிலில் மாட்டு கறியை வீசுவது என்று இஸ்லாமியர்களுக்கு எதிரான பல பல யுக்திகள் செயல்படுத்துவதை பார்பானியம் தொடந்துக்கொண்டேதான் இருக்கிறது. இந்த சோமநாதபுர படை எடுப்பு இஸ்லாமிய எதிர்ப்பின் முதல் விதையாக மாணவ பருவத்திலையே விதைககபடுகிறது. இதை பற்றிய உண்மையை அலசும் வினவின் இந்த கட்டுரைக்கு பாராட்டுக்கள்.

    • “நாடு முழுவதும் குண்டு வைத்து தன மக்களையே கொன்று அந்த பலியை இஸ்லாமியர்கள் மீது சுமத்துவது”

      Yes you’re right, even those who are planting bombs in Pakistan and Afghanistan are Hindus.

      • Yes the GODRA train carnage ,the copartment of KARSEVAKS put on fire by Hindu consiprators,which was disclosed by Lallu prasad(than Railway Minister) appointed commission of enquiry.But subsequently this was denied by other enquiry committies by both Congress/BJP brahmins intruders in all offices/enquiry committee/police force/judiciary and all places.ther by Modi got clean chit in politics.

  3. சோம்நாத் என்றுதான் ஒரு ஊர் குஜராத்தில் உள்ளது. அதுதான் இங்கு குறிப்பிடப்படும் சோமநாதபுரமா?

  4. பாமரன் சொல்வது உண்மை தான் என்று தோன்றுகிறது .இந்தியாவில் கி.பி.32 க்குப்பிறகு கிறிஸ்துவர்கள் வந்தார்கள். கி பி 700 வந்தார்கள். இங்கு உள்ள கோயில்கள் பள்ளிகள் முதலியன அவர்கள் ஆளும் போது தான் வந்தது. இஸ்லாமியர்களின் மதக் கொள்கைகளை அறிந்து இங்குள்ள மக்கள் மதம் மாறினார்கள். இந்து மதத்தில் இரண்டு பிரிவுகள் தான். பார்ப்பனர் சுரண்டுவார். பிறர் அடிமைகள் (மன்னிக்கவும்: இது இஸ்லாத்தில் இறைவன் அங்கீகரித்துள்ள அடிமை அன்று). எவ்வளவு ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இந்த நாடு இருக்கிறது என்றும் இங்கு கலாசாரம் இருந்தது என்றும், வேதம்,இதிகாச, புராணம் என்று கடந்த சில ஆண்டுகளிலே எழுதிவிட்டு மூவாயிரம், நாலாயிரம் ஆண்டு என்று முழு உலகையே ஏமாற்றியிருக்கிறார்கள்!

  5. இந்த கட்டுரை மூலமா நீங்க என்ன சொல்ல வரீங்கனு உங்களுக்காது புரியுதா மி்ஸ்டர்?

  6. //வந்தபின் பார்த்தால் அவை எகிப்தியக் கதவுகள்.//

    எகிப்திய கதவுகள் கஸ்னிக்குப் போக முடிந்த போது அதைவிட கால் பங்கு தொலைவேயுள்ள குஜராத்திலிருந்து கதவுகள் கஸ்னிக்குப் போக முடிந்திருக்காதா. குஜராத் கதவுகள் கஸ்னியில் இல்லையென்றால் அவை வழியிலேயே எரிந்து போயிருக்கலாம் அல்லது எகிப்திற்கேக்கூட போயிருக்கலாம். We can never know.

  7. தாலிபான்கள் என்றொரு வெறிக்கும்பல் பாமியான் புத்தர் சிலைகளை தகர்த்ததை உடனடியாக கல்வெட்டு, செப்பேடு, கவிதை, கட்டுரை, வரலாற்று நூல் என சகல விதங்களிலும் உடனடியாக பதிவு செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன். இல்லாவிட்டால் எதிர்கால வரலாற்று ஆய்வாளர்கள் சந்தேகம் கிளப்புவார்கள். இது எல்லாருக்கும் தெரிந்த சேதி தானே என அசிரத்தையாக இருந்து விடாதீர்கள்.

    சமணர்களை சைவர்கள் கழுவேற்றினர் என்பதற்கு சமண நூல்களில் ஏதேனும் ஆதாரம் உள்ளதா? அல்லது சைவத்தின் மீது குற்றம் சொல்வதானால் இதெல்லாம் தேவை இல்லையா?

    • ஆமா வெங்கடேசன், 2002 கலவரத்த பத்தி தெகல்கா சிசிடிவி காமராவுல புடிச்சு போட்டு ஆதாரம் காமிச்சாலும், பாபர் மசூதி இடிக்கிறங்களோட பேச்ச கோப்ரா ஃபோஸ்ட் வீடியோவுல காட்டியும் நிகழ்கால ‘வரலாத்து ஆய்வாளரு’ங்க அசரல, அவங்களோட ஆய்வுங்கள மதிக்கிற உங்கள மாதிரி ஆளுங்களும் ஒத்துக்கல, என்ன பண்றது? அதிகாரம் இருக்குறவன் எழுதுற வரலாறும், அதிகாரத்த தலையுலயும், வாழ்க்கையுலயும் சுமக்குறவங்க அதுக்கு ஒத்தூதர வரைக்கும் ஒன்னியும் பண்ண முடியாது!
      வெங்கடேசன் மாதிரி அறிஞருங்க இப்படி கேள்வி கேப்பாருன்னு தெரிஞ்சா 11-ம் நூற்றாண்டுல இருந்த கஜினி முகமது இப்படி கொள்ளையடிக்காம சுத்த பத்த்மா இருந்துருப்பான்னு தோணுது! ஆனா கோவிலுல சொத்த சேத்து வச்ச ‘அம்பி’ மாறுங்க அப்படி இருப்பாங்கெளாங்கணு நம்மால உத்ரவாதம் கொடுக்க முடியலேயே!

  8. இந்த இஸ்லாமிய மன்னர்களை ஏதோ சுத்த சன்மார்க்க சுண்டெலிகள் போல் சித்தரிக்க முயல்கிறீர்கள். இந்தியாவில் கட்டப்பட்ட மூத்த மசூதிகளில் ஒன்றான குத்துப் மினார் வளாகத்தில் உள்ள மசூதி எவ்வாறு கட்டப்பட்டது? 27 இந்து-ஜைன மத கோவில்களை இடித்து அங்கிருந்து தூண்களை கொண்டு வந்து கட்டியதாக அம்மசூதி வாயிலில் இந்தியத் தொல்லியல் துறை அமைத்து வைத்துள்ள கல் அறிவிப்பு பலகை கூறுகிறது. சந்தேகமாய் இருந்தால் உள்ளே சென்று தூண்களை பாருங்கள். தவம் செய்யும் நிலையில் கடவுளர் அல்லது முனிவர்கள் சிற்பங்களை இன்றும் காணலாம். ஒரு மசூதியில் சிலைகளுக்கு என்ன வேலை? (ஆமாம், இந்த தவ்ஹீத் ஜமாத் ஆசாமிகள் இதை எல்லாம் ஆட்சேபிக்க மாட்டார்களா?)

    பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தின் கீழே பழைய இந்து அல்லது பவுத்த அல்லது ஜைன சமய கோவிலின் இடிபாடு உள்ளது என தொல்லியல் துறை அலகாபாத் நீதிமன்றத்தில் கூறி உள்ளது. இதை அந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகளில் ஒருவரான எஸ் யு கான் ஏற்கிறார். மசூதி கட்ட வேறு இடம் கிடைக்கவில்லையா? பாபர் மசூதியின் கீழ் என்ன உள்ளது என்பது விவாதத்திற்குரியது. ஆனால், தொல்லியல் துறை அதன் கீழ் பிற சமய கோவிலின் இடிபாடு உள்ளதாக கூறுகிறது. இந்த விஷயத்தை பாபர் மசூதி பற்றி பேசும் எந்தக் கட்டுரையிலாவது வினவு குறிப்பிட்டுள்ளதா?

    இந்து மத எதிர்ப்பு என வரும் போது, எந்த ஒரு அறிவியல்-வரலாற்று ஆராய்ச்சிக்கும் மிக முக்கிய அடிப்படை கொள்கையான “திறந்த மனம்” (open mind) என்பதை வினவு துறந்து விடுகிறது. எனவே இது போன்ற கட்டுரைகளின் நம்பகத்தன்மை குறைந்து விடுகிறது.

  9. வினவுவின் புரட்டுகள்..!
    புதிய புரட்டு வரலாறு படைக்கும் வீணர்களின் கூட்டத்தின் வினவுதளம் “கஜினி முகமது : கல்வெட்டு உண்மைகள் ! பாட நூல் புரட்டுகள் !” என்ற தலைப்பில் எதோ பிதற்றியுள்ளது, அது RSSக்கு எதிரான எழுதப்பட்ட எதோ ஒரு கதை (கட்டூரை என்றுதான் சொல்லுவார்கள்), அந்த கதைக்கு நாம் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை, ஆனால் அதில் தேவையே இல்லாமல் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பற்றி இப்படி எழுதியிருக்கிறார்கள்
    // ஏதோ ஒரு குறுநில மன்னனாக இருந்திருக்கக் கூடிய பெரும்பிடுகு முத்தரையர் சாதி அரசியலின் தேவை காரணமாக சென்னை நகர முச்சந்தியில் உருவிய வாளுடன் நிறுத்தி வைக்கப்படுகிறார் //
    எழுதப்பட்ட தலைப்பிற்க்கும், இந்த வாசகத்திற்க்கும் எந்த தொடர்பும் இல்லை (சென்னை நகரை சுற்றி காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பெரும் எண்ணிக்கையில் வசித்தாலும் சென்னையில் சிலை இல்லை என்பதுதான் உண்மை, இதுதான் வினவு புரட்டுவின் தொடக்கம்) ஆனால் வலிந்து திணிக்கப்பட்டு தனது வன்மத்தை, அரசியல் உரிமை மறுக்கப்பட்டு இன்று கையறு நிலையில் இருக்கும் முத்தரையர்கள் குறித்து எழுதி தனது அறிப்பை தீர்த்துக்கொள்கிறது வினவு.
    இந்த கட்டூரையின் சாரம்சம் RSS போன்ற இயக்கங்கள் இன்று வரலாற்றை மாற்றிப்பேச முனைகிறது என்பதாக இருக்கிறது, இதற்காக பலதரப்பட்ட தரவுகளையும் மேற்கோள் காட்டி எழுதப்பட்ட இந்த கட்டூரையில் இன்று இந்த இயக்கங்கள் சொல்லும் வரலாறு உண்மையில்லை என்பதாக இருக்கிறது, இவர்களின் இந்த நீண்ட கட்டூரையில் எதையோ நிறுபிக்க முயன்று அதற்காக ஆயிரமாயிரம் ஆதரங்களை காண்பித்து இதுதான் என்று சொல்ல முற்படுபவர்கள்.
    அதே கட்டூரையின் ஒரே ஒரு வரியில் தங்கள் புரட்டு சிந்தாந்ததில் தோற்றுப்போய் இருக்கிறார்கள், இவர்கள் சொல்லியிருக்கும் மொத்தமும் கட்டுக்கதையாகவே இருக்க முடியும் என்பதற்க்கு இவர்கள் முத்தரையர் குறித்து எழுதி இருக்கும் ஒரே வரி போதுமானதாக இருக்கும், முத்தரையர் மன்னர்கள் கடைசி காலங்களில் சிறு நிலப்பரப்பை ஆண்டது உண்மையானதுதான், ஆனால் அதற்க்கும் முன்பாக சேர, சோழ, பாண்டிய நாடுகளை அதாவது முத்தரைகளை ஆண்டவர்கள் என்பதுதான் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மை, ஆனால் இவ்வளவு வன்மத்தோடு இவர்கள் இப்படி எழுத எந்த வரலாற்றை ஆதாரமாக கொண்டார்கள் ? இவ்வளவு தீர்க்கமாக கஜினி முகமதுவிற்க்கு கட்டூரை எழுதிய அஜித் எனும் எழுத்தாளர், இதற்க்காக திரட்டி சொன்ன ஒராயிரம் ஆதாரங்கள் போன்று எதேனும் ஒரு ஆதாரத்தை குறிப்பிட்டு தனியே கட்டூரை எழுதும் திராணி இருக்கிறதா..?
    யாரோ தவறாக எழுதிய வரலாற்றை வைத்து “எதோ ஒரு குறு நில மன்னன்” என்று எழுதும் இவர்கள் எழுதி இருக்கும் இந்த நீண்ட நெடிய கட்டூரையின் உண்மைதன்மையை பச்சையாய் காட்டிக்கொடுக்கிறது.
    வினவு தளத்தினரே, உங்கள் தளத்தை ஆர்வமாக வாசிப்பவர்களை முட்டாளாக கருதி இதுபோன்ற பிதற்றல்களை, ஒரு சார்பு நிலை எழுத்தை கட்டூரை என்று வெளியிட்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்காக என்று உண்டியல் குலுக்கி மஞ்சள் குளித்து மகிழ்ந்து வாழாமல் உண்மையாய் எழுத முயலுங்கள்.

    – சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
    ஒருங்கிணைப்பாளர்
    இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

    http://illamsingam.blogspot.ae/2014/06/blog-post_4.html

  10. முஸ்லீம்களுக்குப் பயத்தில் அல்லது அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக, அல்லது TNTJகாரர்களின் கோபத்தைத் தணிக்க வரலாற்றையே மாற்றி எழுத வினவு தளத்தினர் துணிந்து விட்டனர் போலிருக்கிறது . திப்புசுல்தான், யாரையும் அவர்களது விருப்பத்துக்கு மாறாக மதம் மாற்றவில்லை அவனைப் போல் ஒரு இந்திய மன்னனே கிடையாதென்று கூடப் பிதற்றினார்கள் சிலர். இப்பொழுது என்னடாவென்றால் கஜினி முகம்மதுவை அறுபத்துநான்காவது நாயனாராக ஏற்றுக் கொள்ளச் சைவத் தமிழர்களைத் தூண்டுமளவுக்கு அவனை சன்மார்க்கனாக்கி விட்டார்கள் என்பதை பார்க்க சிரிப்பு வருகிறது. இப்படியே போனால் எல்லா முஸ்லீம் மன்னர்களும் இந்தியாவுக்கு தியானம் செய்யவும், இந்துமதத்தைக் காக்கவும் தான் தான் வந்தார்கள், அதை விட அவர்கள் எந்த அழிவையும் செய்யவில்லை என்று கூட எழுதத் தொடங்கி விடுவார்கள் போலிருக்கிறது. வரலாற்றைக் கற்க விரும்புகிறவர்கள் அல்லது கஜினி முகம்மது போன்ற முஸ்லீம் மன்னர்களின் ஆட்சியைப் பற்றி அறிய விரும்புகிறவர்கள் எவருமே வினவில் வெளிவரும் கட்டுரைகளில் மட்டும் தங்கியிருக்காமல் வேறு நடுநிலையான ஆதாரங்களைப் படித்துப் பார்க்கும் வகையில் தென்னாடுடைய சிவன் வினவு வாசகர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுப்பார் என நம்புவோம். 🙂

    //இந்த இஸ்லாமிய மன்னர்களை ஏதோ சுத்த சன்மார்க்க சுண்டெலிகள் போல் சித்தரிக்க முயல்கிறீர்கள். //

    • வியாசன் அவர்களுக்கு,

      உங்களது சொந்தக் கதையை நிறுத்திவிட்டு, கட்டுரை நேரடியாக கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.

      தில்லையில் (சொத்துக்கான சண்டையில் மற்றும் சாதிவெறியில்) தீட்சிதர்களை புரட்சிகர அமைப்புகள் அம்பலப்படுத்துவதை ஆதரிக்கிற வியாசன், கஜினியின் படையெடுப்பிற்கு முன்னரே சோம்நாத் கோயிலின் சொத்துக்களை பார்ப்பனர்கள் சூறையாடியிருக்கிறார்கள் என்பதை எப்படி பார்க்கிறார்? மதவெறிக்கு தூபம் போடுகிற ஆர் எஸ் எஸ்ஸின் புரட்டிற்கும் உங்களது கருத்திற்கும் என்ன வித்தியாசம்?

  11. சரிப்பா . இதுக்கு மொதல்ல பதில சொல்லுங்க கருத்து கந்தசாமிகளா.

    கேள்வி-1
    ————-
    //ஏன், 1947 ஆகஸ்டு 15-ம் தேதியன்று காஷ்மீரும், ஆந்திரத்தின் பெரும் பகுதியும், பல வடகிழக்கு மாநிலங்களும் இந்திய யூனியனில் இல்லை. எழுபதுகளுக்கு முன்னர் சிக்கிம் இந்தியாவில் இல்லை. அவ்வாறிருக்கும் போது 20-ம் நூற்றாண்டில் உருவாகவிருக்கும் இந்தியா மீது 11-ம் நூற்றாண்டிலேயே கஜினிமுகமது எப்படிப் படையெடுக்க முடியும்?//

    கேள்வி-2
    ————–
    //கத்தியவாரை (குஜராத்) ஆண்டு வந்த சோலங்கி மீது கஜினி முகமது படையெடுத்த அதே கால கட்டத்தில் தான், தெற்கே சோழ நாட்டிலிருந்து இராசேந்திர சோழன் சாளுக்கியர்கள் மீது படையெடுத்தான். இராசேந்திர சோழனின் படையெடுப்பை இந்தியா மீதான படையெடுப்பென்றோ, இந்து மன்னர்களுக்கிடையிலான மோதல் என்றோ குறிப்பிடாத வரலாற்றுப் பாடநூல் கஜினி முகமது எனும் ‘இசுலாமிய’ மன்னன் ‘இந்தியா’ மீது படையெடுத்ததாகக் குறிப்பிடுவதை ஒப்பு நோக்க வேண்டும்.//

    • என்ற பெயரில் ஒரு நாட்டை வேண்டுமானால் ஆங்கிலேயர்கள் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்தனர் என்று கூறலாமே தவிர, அவர்களுக்கு முன்னர் இந்தியா இருக்கவில்லை என்பது வெறும் அபத்தம். ஆட்சியாளர்களும், மொழியும் வெவ்வேறாக இருந்தாலும், காஸ்மீரிலிருந்து கதிர்காமம் வரை ஒரே மதமும் கலாச்சாரமும் பண்பாடும் அந்த நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களை இணைத்தன என்ற உண்மையை யாரும் மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாது. அதனால் தான் காசிக்குப் போய்விட்டு ராமேஸ்வரம் போனால் தான் யாத்திரை முழுமையடையும் என்று இன்றும் நம்பப்படுகிறது. உதாரணமாக தமிழ்நாட்டிலிருந்து வடக்குக்கு படையெடுத்துப் போன ராஜேந்திர சோழனுக்கும், சாளுக்கியர்களுக்கும் கங்கை நதி புனிதமானது. தெற்கிலிருந்து வடக்கிற்குப் படையெடுத்துப் போன ராஜேந்திர சோழன், கஜினி முகமதைப் போல் அங்குள்ள கோயிலகளை அழிக்கவில்லை, மாறாக அங்குள்ள கங்கை நதியின் நீரைக் கலசங்களில் நிரப்பி தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து சாளுக்கியரும் வணங்கும் அதே தெய்வத்துக்குக் கோயில்கட்டி முழுக்காட்டினான். அது தான் ராஜேந்திர சோழனுக்கும், கஜினி முகமதுவுக்குமுள்ள வேறுபாடு, அதனால் தான் இராசேந்திர சோழனின் படையெடுப்பை இந்தியா மீதான படையெடுப்பென்றோ, இந்து மன்னர்களுக்கிடையிலான மோதல் என்றோ வரலாற்றுப் பாடநூல்கள் குறிப்ப்பிடுவதில்லை, அது இந்திய மன்னர்களுக்கிடையேயான மோதல் மட்டுமே.

      ஆப்கானிஸ்தான் பண்டைய இந்தியாவின் அங்கமாக இருந்த போதிலும் அது இஸ்லாமிய துருக்கிய, பாரசீக ஆட்சியாளர்களின் ஆட்சியின் கீழ் வந்த பின்னர், அது இந்திய கலாச்சாரத்தை இழந்து விட்டது. அது மட்டுமல்ல, கஜினி முகமது ஆப்கானியர் அல்ல அவன் ஒரு துருக்கியைச் சேர்ந்த துலுக்கன். துருக்கியை இந்தியாவின் அங்கமாக யாரும் எப்பொழுதும் கருதியதில்லை.

      • //காஸ்மீரிலிருந்து கதிர்காமம் வரை ஒரே மதமும் கலாச்சாரமும் பண்பாடும் அந்த நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களை இணைத்தன என்ற உண்மையை யாரும் மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாது. // WHy consider only relgion NOT language… How come Vishu and madasamy become same GOD ??? Its a myth that all INDIA had sam religion… Even the constitution define HIndUISM as “whoever is not a christian, muslim, sikh or jain is HINDU” the reason is if they naem each and every religion existed it wilneed a sepearte book 🙂

        • so if continuos land and same religion were present then it is a single nation.. so all of Europe and Russian combined are same country after 50 years from now ??

          • They already have a EU which is a monetary union with a Central Bank just like our Reserve Bank.Everyone is fighting to get into the EU,including Turkey which is not even in Europe.

            And secondly,what works for them may not work for us and vice versa,so this works for us and hence will continue to do so.

        • மொழிகள் வேறுபட்டிருந்தாலும் ஐரோப்பிய நாடுகள் அனைத்தையும், கிறித்தவ மதமும், அந்த மத அடிப்படையிலான பண்பாடும் ஒருங்கிணைக்கின்றன. கத்தோலிக்கர்கள், Orthodox, லூதரன், மெதடிஸ்ட் இப்படி பல பிரிவுகள் இருந்தாலும் அவையெல்லாம் கிறித்தவ நாடுகள். அந்த அடிப்படையில் ஐரோப்பியர்கள் அனைவரிடமும் ஒற்றுமையுண்டு. அதே போல் கதிர்காமம் தொடக்கம் காஷ்மீர் வரை என்ன தான் வேறுபாடுகள் இருந்தாலும், இந்து மதத்தின் அடிப்படையில், மொழிக்கும், நிறத்துக்கும் அப்பாற்பட்ட ஒரு எழுதப்படாத ஒற்றுமையும், எல்லோருக்கும் பொதுவானதன்மையும், எல்லோரையும் இணைக்கும் ஒரு இழையுமிருப்பதை யாரும் மறுக்க முடியாது. உதாரணமாக, புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கும்
          வட இந்தியர்களுக்கும் மொழி, தோற்றம், என்பவற்றில் அவ்வளவு ஒற்றுமை கிடையாது. ஆனால் இப்பொழுது பல வட இந்தியர்களுடன் நண்பர்களாக பழகும் வாய்ப்புக் கிடைப்பதால் மொழி, இன வேறுபாடிருந்தாலும், அவர்களின் வீடுகளுக்குப் போகும் போது, அவர்களின் திருமண, கலாச்சார நிகழ்சசிகளில் பங்குபற்றும் போது எங்களுக்கும் அவர்களுக்கும் பெரிய வேறுபாடிருப்பதாகத் தெரியவில்லை. அங்கு தான் இந்துமத அடிப்படையிலான அந்த பொதுவான இழை எங்களையும், அவர்களையும் ஒருவகையில் இணைக்கிறது என்பதை உணரக் கூடியதாக இருக்கிறது. இது என்னுடைய தனிப்பட்ட அனுபவமாகக் கூட இருக்கலாம். அதற்காக வட இந்தியர்கள் எல்லாம் தமிழர்களின் நண்பர்கள் என்று நான் கருத்துக் கூறவில்லை. 🙂

          • //அவர்களின் வீடுகளுக்குப் போகும் போது, அவர்களின் திருமண, கலாச்சார நிகழ்சசிகளில் பங்குபற்றும் போது எங்களுக்கும் அவர்களுக்கும் பெரிய வேறுபாடிருப்பதாகத் தெரியவில்லை.// then u have NOT attended much of the marriages.. The only common thing will be tie of Thalii.. Even christian marriages now they tie thali… so can we say christianity is also our own religion after 50 years ???

            Boss iam not saying u shud not have friendship or close relation with N Indians.. Even i work of an MNC me too have many North Indian friends.. Here the question did INDIA as a country existed before british came here. ?? Historically the answer is NO… We are born as INDIANS(since we r born after british came here) and we will live as INDIANS and DIE as INDIANS.. Iam fine with the above but just to promote a religion please don’t try to Falsify History 🙂

            • //அடிப்படையிலான பண்பாடும் ஒருங்கிணைக்கின்றன. கத்தோலிக்கர்கள், Orthodox, லூதரன், மெதடிஸ்ட் இப்படி பல பிரிவுகள் இருந்தாலும் அவையெல்லாம் கிறித்தவ நாடுகள். அந்த அடிப்படையில் ஐரோப்பியர்கள் அனைவரிடமும் ஒற்றுமையுண்டு///

              Living in peace and harmony and having same nation are two different things… EVne they fought fierocious wars among themselves in the past.. Now live in peace the reason is NOT religion.. If the reason for peace is religion.. Both the world wars wud NOT have happened because most of the belligrents are christians 🙂 :)….

      • //என்ற பெயரில் ஒரு நாட்டை வேண்டுமானால் ஆங்கிலேயர்கள் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்தனர் என்று கூறலாமே தவிர, அவர்களுக்கு முன்னர் இந்தியா இருக்கவில்லை என்பது வெறும் அபத்தம். ஆட்சியாளர்களும், மொழியும் வெவ்வேறாக இருந்தாலும், காஸ்மீரிலிருந்து கதிர்காமம் வரை ஒரே மதமும் கலாச்சாரமும் பண்பாடும் அந்த நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களை இணைத்தன என்ற உண்மையை யாரும் மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாது//

        இது என்ன புதுசா ஒரு கதைய சொல்றீங்க . இந்திய, பாகிஸ்தான் , பங்களாதேஷ் என்ற நாடுகள் 100 ஆண்டுகளுக்கு முன்னர் கிடையாது . காஷ்மீரிலிருந்து கதிர்காமாம் வரை ஒரே மத கலாசார ??? உங்களது புரட்டுக்கு அளவே இல்லையா ? அப்போ தமிழர்கள் வணங்கி கொண்டு இருந்த சிறு தெய்வ வழிபாடுகள் ஹிந்து மதத்தை சார்ந்தவையா? அப்படி எனில் அதை ஏன் பிராமணர்கள் அங்கீகரிப்பதில்லை ?

        தேசியம் என்ற சொல்லாடலே 1800 ஆண்டுகளில் தான் உலகில் சூடு பிடித்தது . 1900 காலத்தின் போது தான் ஆசியா கண்டத்தில் தேசியம் என்ற சிந்தனை உருவானது . உண்மை இப்படி இருக்க இல்லாத இந்திய மீது எப்படி கஜினி படை எடுக்க முடியும் ?

        கவனிக்க:இங்கு கூறுவது இந்திய என்ற சொல்லாடலே

        • ///இது என்ன புதுசா ஒரு கதைய சொல்றீங்க . இந்திய, பாகிஸ்தான் , பங்களாதேஷ் என்ற நாடுகள் 100 ஆண்டுகளுக்கு முன்னர் கிடையாது. காஷ்மீரிலிருந்து கதிர்காமாம் வரை ஒரே மத கலாசார ??? உங்களது புரட்டுக்கு அளவே இல்லையா ? ///

          நூறாண்டுகளுக்கு முன்பு இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் என்ற பெயர் தான் கிடையாதே தவிர இன்று காணப்படுகின்ற அதே மொழி, கலாச்சார, மதங்களைச் சேர்ந்த மக்கள் தான் இந்த மூன்று நாடுகளின் நிலப்பரப்புகளிலும் வாழ்ந்தனர். அதனால் ஆங்கிலேயர் வந்து, அவர்கள் வாழ்ந்த நிலப்பரப்புக்கு புதுப்பெயர் இடும்வரை அந்த நிலப்பரப்பில் மக்களே வாழவில்லை, அவர்களின் மொழி வேறுபட்டாலும் கூட , மத, கலாச்சார ஒற்றுமை அங்கு வாழ்ந்த பெரும்பான்மை மக்களிடம் இருக்கவில்லை என்று எந்த முட்டாளும் கூற மாட்டான். காஸ்மீரிலிருந்து கதிர்காமம் வரை வாழ்ந்த, இன்றும் அங்கு வாழ்கின்ற பெரும்பான்மை மக்களை இந்துமத அல்லது இந்தியாவில் உருவாகிய இந்துமதத்தின் கிளை மதங்களின் அடிப்படையிலான கலாச்சாரம் ஒன்றிணைத்தது/ஒன்றிணைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது விட்டால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்.

          //அப்போ தமிழர்கள் வணங்கி கொண்டு இருந்த சிறு தெய்வ வழிபாடுகள் ஹிந்து மதத்தை சார்ந்தவையா? அப்படி எனில் அதை ஏன் பிராமணர்கள் அங்கீகரிப்பதில்லை?///

          தமிழர்களின் சிறுதெய்வ வழிபாடு, இந்தியாவில் உருவாகிய இந்து மதத்தைச் சேர்ந்ததல்லாமல், மத்திய கிழக்கு மதமாகிய இஸ்லாத்தைச் சேர்ந்ததாகுமா? சைவமும் சிவ வழிபாடும் தமிழர்களிடமிருந்து உருவாகியது. சிவன் தென்னாட்டுக் கடவுள். சிவனும், தமிழர்களின் சிறுதெய்வங்களும் கூட தமிழர்களின் ஆசீவகத்தின் அங்கம் தான். பிராமணர்கள் அங்கீகரிப்பது தான் இந்துமதம் என்று உங்களைப் போன்றவர்கள் முட்டாள் தனமாகக் கருதினால் அதற்கு நான் என்ன செய்ய முடியும். இப்படித் தான் கடவுளை வணங்க வேண்டும் அல்லது இந்தப் புத்தகத்தின் படி தான் ஒழுக வேண்டும் அல்லது ஆயத்தொல்லா வந்து பாட்வா அறிவித்து விடுவார் என்பதெல்லாம் இந்துமதத்தில் கிடையாது. இந்துமதம் தனிமனித சுதந்திரத்தை மதிக்கிறது. எந்த இந்துவுக்கும் யாருடைய அங்கீகாரமும் தேவையில்லை. உதாரணமாக இலங்கையில் உலகப்புகழ பெற்ற கதிர்காமத்தில் முருகனுக்குப் பூசை செய்பவர்கள் பிராமணர்கள் அல்ல, வேடர்கள். அங்கு பிராமணியம் கிடையாது. யாழ்ப்பாணத்தில் செல்வசன்னதியில் பூசை செய்கிறவர்கள் மீனவர்கள், பிராமணர்கள் அல்ல. அந்தக் கோயில்களில் வழிபடும் இலங்கை இந்துக்கள், இந்தியாவிலுள்ள உங்களைப் போன்றவர்களைப் போல், பிராமணர்களின் அங்கீகரத்துக்காக அழுவதில்லை. தமிழ்நாட்டில் பிரச்சனையே இது தான், இந்துமதம் என்றால் பிராமணீயம் என்ற மாயை பகுத்தறிவு வாதிகளால் திட்டமிட்டு மக்களின் மனத்தில் புகுத்தப்பட்டிருக்கிறது. அதனால் தான் தமிழர்கள் தமது முன்னோர்களின் கோயில்களைப் பிராமணர்களின் கைகளில் ஒப்படைத்து விட்டு, வெளியில் நின்று கூச்சலிடுகிறார்கள்.

          ///உண்மை இப்படி இருக்க இல்லாத இந்திய மீது எப்படி கஜினி படை எடுக்க முடியும்?// கவனிக்க:இங்கு கூறுவது இந்திய என்ற சொல்லாடலே//

          “இந்திய” என்ற சொற்றாடலை உங்களால் ஏற்றுகொள்ள முடியாது விட்டால், கஜினி முகம்மது பாரத’ நாட்டின் மீது படைஎடுத்தான் என்று திருத்திக் கொள்ளுங்கள். அதில் தவறொன்றுமில்லை, உங்களின் ஆசையைக் கெடுப்பானேன். ஆனால் அப்பொழுது இந்தியா என்ற நாடு கிடையாது. அதனால் கஜினி படையெடுக்கவுமில்லை, சோம்நாத் கோயிலைக் கொள்ளையடிக்கவுமில்லை, என்று வரலாற்றையே திரித்து உளறினால் தான் நீங்கள் உண்மையில் நீங்கள் ஏதோ serious stuff ஐப் புகைத்துக் கொண்டு பதிலெழுதுகிறீர்கள் போலிருக்கிறது என்று மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள். 🙂

          • VIYASAN,

            காஸ்மீரிலிருந்து “—கொழும்பு—-” வரை வாழ்ந்த, இன்றும் அங்கு வாழ்கின்ற பெரும்பான்மை மக்களை இந்துமத அல்லது இந்தியாவில் உருவாகிய இந்துமதத்தின் கிளை மதங்களின் அடிப்படையிலான கலாச்சாரம் ஒன்றிணைத்தது/ஒன்றிணைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது விட்டால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்.

            என்று கூறினால் சரி தானே ?

            • SARAVANAN,

              கொழும்பு மேல்மாகாணத்தில் இருக்கிறது, கதிர்காமம் தென்னிலங்கையின் அடியில், அதாவது கொழும்பை விட இன்னும் கீழேயுள்ளது. முழு இலங்கையுயைம் உள்ளடக்குவதற்காகத் தான் கதிர்காமம் என்று குறிப்பிட்டேன். 🙂

              • வியாசன் அவர்களுக்கு,

                முழு இலங்கையையும் உள்ளடக்குவதற்கு கதிர்காமத்தை குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

                தோழர் சரவணன் ஒரு வகையான புரிதலை முன்வைக்கிறார் இப்படி; “இந்துமதத்தின் கிளை மதங்களின் அடிப்படையிலான கலாச்சாரம் ஒன்றிணைத்தது/ஒன்றிணைக்கிறது”

                இது ஒரு புறம் இருக்க, இந்து மத வழிபாடு இலங்கையில் சாதிவெறியை உள்ளடக்கியதாகவே இருக்கிறது என்று கலை அவர்கள் ஒரு கட்டுரையை ஆறுமுக நாவலரை வைத்து எழுதியிருக்கிறார்.

                கலை குறிப்பிடும் ஆறுமுகநாவலரின் கீழ்கண்ட பகுதிக்கு தங்களது கருத்து என்னவென்று கூற முடியுமா? (http://kalaiy.blogspot.com/2014/04/blog-post_29.html)

                //சண்டாளருடைய நிழல் படினும், இழிந்த சாதியாரும் புறச்சமயிகளும், வியாதியாளரும், சனன மரணா செளசமுடையவரும், நாய், கழுதை, பன்றி, கழுகு, கோழி முதலியவைகளும் தீண்டினும், எலும்பு, சீலை முதலியவற்றை மிதிக்கினும், க்ஷெளரஞ் செய்து கொள்ளினும், சுற்றத்தார் இறக்கக் கேட்கினும், துச்சொப்பனங் காணினும், பிணப் புகை படினும், சுடுகாட்டிற் போகினும், சர்த்தி செய்யினும் உடுத்த வஸ்திரத்துடனே ஸ்நானஞ் செய்வது ஆவசியம்.//

                //தீண்டலினாலே எவ்வெப்பொழுது குற்றமில்லை?

                சிவதரிசனத்திலும், திருவிழாவிலும், யாகத்திலும், விவாகத்திலும், தீர்த்த யாத்திரையிலும், வீடு அக்கினி பற்றி எரியுங் காலத்திலும், தேச கலகத்திலும், சன நெருக்கத் தீண்டலினாலே குற்றமில்லை.//

                ஆக என் புரிதலின்படி இந்துமதம் அனைவருக்கும் ஒன்றாக இருக்கவில்லை. இது யாரையும் ஒருங்கிணைக்கவில்லை.

                நீங்கள் கூறும் இக்கருத்து முற்றிலும் புரட்டாகும்;

                \\இப்படித் தான் கடவுளை வணங்க வேண்டும் அல்லது இந்தப் புத்தகத்தின் படி தான் ஒழுக வேண்டும் அல்லது ஆயத்தொல்லா வந்து பாட்வா அறிவித்து விடுவார் என்பதெல்லாம் இந்துமதத்தில் கிடையாது. இந்துமதம் தனிமனித சுதந்திரத்தை மதிக்கிறது. எந்த இந்துவுக்கும் யாருடைய அங்கீகாரமும் தேவையில்லை. உதாரணமாக இலங்கையில் உலகப்புகழ பெற்ற கதிர்காமத்தில் முருகனுக்குப் பூசை செய்பவர்கள் பிராமணர்கள் அல்ல, வேடர்கள். அங்கு பிராமணியம் கிடையாது. யாழ்ப்பாணத்தில் செல்வசன்னதியில் பூசை செய்கிறவர்கள் மீனவர்கள், பிராமணர்கள் அல்ல. அந்தக் கோயில்களில் வழிபடும் இலங்கை இந்துக்கள், இந்தியாவிலுள்ள உங்களைப் போன்றவர்களைப் போல், பிராமணர்களின் அங்கீகரத்துக்காக அழுவதில்லை. தமிழ்நாட்டில் பிரச்சனையே இது தான், இந்துமதம் என்றால் பிராமணீயம் என்ற மாயை பகுத்தறிவு வாதிகளால் திட்டமிட்டு மக்களின் மனத்தில் புகுத்தப்பட்டிருக்கிறது. அதனால் தான் தமிழர்கள் தமது முன்னோர்களின் கோயில்களைப் பிராமணர்களின் கைகளில் ஒப்படைத்து விட்டு, வெளியில் நின்று கூச்சலிடுகிறார்கள்.\\

              • Thanks VIYASAN!

                I am very much thankful for your explanation about SriLanka map!

                [1]So based on the uniqueness of Hindu religion and its branches that exist in India and Srilanka……..,

                Are you trying for creating a unified broad India[country] that will include Srilanka too?

                [2]If not what for You are stressing this following matter?

                “காஸ்மீரிலிருந்து கதிர்காமம் வரை வாழ்ந்த, இன்றும் அங்கு வாழ்கின்ற பெரும்பான்மை மக்களை இந்துமத அல்லது இந்தியாவில் உருவாகிய இந்துமதத்தின் கிளை மதங்களின் அடிப்படையிலான கலாச்சாரம் ஒன்றிணைத்தது/ஒன்றிணைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது விட்டால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்.”

              • viyasan,

                [1]உங்கள் முந்தைய கருத்தீன் படி “தெலுங்கர்கள்-வந்தேரிகள்-வடகர்கள் ” கொள்கைகள் எல்லாம் வழக்கு அழீந்து விட்டதா ?

                [2]உங்கள் தமிழ் இனம் ,தமிழ் மொழி பற்று எல்லாம் நீர்த்து விட்டதா ?

                [3]இந்துமதத்தின் கிளை மதங்களின் அடிப்படையிலான கலாச்சாரம் ஒன்றிணைத்தது/ஒன்றிணைக்கிறது என்று திடிர் என்று கூறுவது ஏன் வியாசன் ?

                [4]தமிழ் இனம் ,தமிழ் மொழி பற்று எல்லாம் போன மாதம் , இந்துமதப்பற்று இந்த மாதமா ?

                viyasan://“காஸ்மீரிலிருந்து கதிர்காமம் வரை வாழ்ந்த, இன்றும் அங்கு வாழ்கின்ற பெரும்பான்மை மக்களை இந்துமத அல்லது இந்தியாவில் உருவாகிய இந்துமதத்தின் கிளை மதங்களின் அடிப்படையிலான கலாச்சாரம் ஒன்றிணைத்தது/ஒன்றிணைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது விட்டால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்.”//

                • தோழர் சரவணன்,

                  வியாசன் அவர்களின் கருத்தை உங்களது கருத்தாக புரிந்துகொண்டுவிட்டேன். பிழைக்கு மன்னிக்கவும்.

                  \\தோழர் சரவணன் ஒரு வகையான புரிதலை முன்வைக்கிறார் இப்படி; “இந்துமதத்தின் கிளை மதங்களின் அடிப்படையிலான கலாச்சாரம் ஒன்றிணைத்தது/ஒன்றிணைக்கிறது”\\

                  • திரு.தென்றல்,

                    வினவில் கருத்துச் சுதந்திரம் என்பதெல்லாம் வெறும் பம்மாத்து தான். 🙂 நான் எழுதிய பதில்(நேற்றுக் கூட) வெளியிடப்படவில்லை, இது முதல் முறையல்ல. இவ்வளவுக்கும் என்னிடம் ஆதரமில்லாமல் நான் எதையும் குறிப்பிடுவதில்லை. பார்ப்பனர்களை அல்லது இந்துமதத்தை தாக்கி எழுதும் பதிவுகளை மட்டும் தான் வெளியிடுவார்கள் போலிருக்கிறது. அதனால் எதற்காக நான் மினக்கெட்டு உங்களுக்குப் பதிலெழுதி எனது நேரத்தை வீணாக்க வேண்டுமென்று தோன்றுகிறது.

                    • திரு வியாசன் எழுதி வினவு வெளியிடாத அந்த ‘ஆதாரப்’ பூர்வமான வரலாற்று உண்மை, கஜினி முகமது ஒரினிச் சேர்க்கையாளர் என்பதே. கட்டுரை எதைப் பற்றி பேசுகிறது, எதை விவாதிப்பது என்பது தெரியாத போது இத்தகைய ஆசுவாசங்கள் தேவைப்படுகிறது. ஆனால் மேலை நாடுகளில் கூட ஒருவர் ஒரினச்சேர்க்கையாளர் என்று அவரே அறிவிப்பதுதான் மரபாகவும், நாகரீகமாகவும் கருதப்படுகிறது. அவர் சார்பில் மற்றவர் பேசுவது அடிப்படை உரிமையை மறுப்பதாகவும் கருதப்படுகிறது. அவ்வகையில் வியாசன் அவர்கள் அவரே ஒரு ஓரினச் சேர்க்கையாளராக இருக்கும் பட்சத்தில் அறிவிப்பதில் தவறில்லை. 1000 வருடங்கள் பின்னோக்கிச் சென்று கஜினி முகமதுவின் பாலியல் நிலை குறித்தெல்லாம் கவலைப்படத் தேவையில்லை.

                    • நான் எழுதிய பதிலில் ஏன் கஜினி முகம்மது ஓரினச்சேர்க்கையாளர் என்பதைக் குறிப்பிட்டேன் என்றதற்கான விளக்கமும் இருக்கும் போது, அதை வெளியிடாமல், இவ்வளவு நீண்ட விளக்கம் அளிப்பது தான் வினவின் கருத்துச் சுதந்திரமா? நான் வெற்றிவேல் என்பவரின் கருத்துக்குத் தான் எனது பதிலையளித்திருந்தேன். அதனால் நான் கஜினி முகம்மது ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்ற உண்மையைக் குறிப்பிட்டதற்கான காரணம் அந்தப் பதிலில் உண்டு. என்னுடைய பதிலை வெளியிடுவீர்கள் என நம்புகிறேன். நன்றி. 🙂

                    • //1000 வருடங்கள் முன்னோக்கிச் சென்று கஜினி முகமதுவின் பாலியல் நிலை குறித்தெல்லாம் கவலைப்படத் தேவையில்லை.//

                      வினவு ஒப்புக்கொள்ளாத படியால் அதை கஜினி முகம்மதுவின் ஓரினச் சேர்க்கை வாழ்க்கையையும், அவனது காதலன் மாலிக் ஆயாசையும் பற்றி எழுதிய வரலாற்றாசிரியர்கள் முட்டாள்கள். இணையத்தில் அதைப் பற்றியுள்ள எழுத்துக்கள் எல்லாம் அகற்றப்பட வேண்டும் அப்படித் தானே. 1000 வருடங்கள் முன்னோக்கிச் சென்று கஜினி முகமதுவின் பாலியல் நிலை குறித்தெல்லாம் கவலைப்படத் தேவையில்லை, ஆனால் 1000 வருடங்கள் பின்னோக்கிச் சென்று ராஜ ராஜ சோழனையும், தேவதாசிகளையும் பற்றியெல்லாம் பேசலாம், வசைபாடலாம், அதைப் பற்றிக் கவலைப்படலாம். 🙂

                      //Maḥmūd was the first to carry the banner of Islam into the heart of India. To some Muslim writers he was a great champion of his faith, an inspired leader endowed with supernatural powers. //

                      இஸ்லாத்தில் இவ்வளவு ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்ட கஜினி முகம்மது ஒரு ஓரினச்சேர்க்கையாளராக இருந்திருக்கிறார். ஆனால் இஸ்லாத்தில் ஓரினச் சேர்க்கையும், ஆணை ஆண் காதலிப்பதும், தடை செய்யப்பட்டது மட்டுமல்ல, ஹராமும் கூட. அதனால் கஜினி முகம்மது, உண்மையில் இஸ்லாத்தின் விதிகளின் படி ஒழுகியவர் அல்ல என்பது தான் நான் கூறிய கருத்தாகும். அதற்கு கஜினி முகம்மதுவே திரும்பி வந்து அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று கூறுவது தான் நாகரீகம், மரபு என்றெல்லாம் கதை விடும் வினவு நிர்வாகத்தை பார்க்கச் சிரிப்புத் தான் வருகிறது. 🙂

                    • வினவு இசுலாமிய இணையதளம் போலவே பேசுது தென்றல் அவர்களுக்கு நான் ஒரு பதில் குடுத்து இருந்தேன் அது ஏன் வரலனு தெரியல வர்க்கப்பார்வைனு வரும் போது அது என்னயா இசுலமிய வர்க்கப்பார்வை வர்க்கம்னாலே உழைக்கும் வர்க்கம் முதலாலி வர்க்கம்தானே அல்லது நடுதர வர்க்கம் ஏழைகள் பணகார வர்க்கம்தானே இருக்கனும் அதுல முசுலீம் இந்து கிறிஸ்தவனு பிரிச்சு பார்க்கலாமனு கேட்டேன் முசுலீம்களுக்கு வீடு தர மாட்ரான் மத்தவங்க நடத்துற நிறுவணங்களில் வேலை தற மாட்ரானு எழுதுற வினவு அத இசுலாமியர்களுக்கு ஏன் பொருத்தி பார்க்க மாட்டுது வினவு இசுலாமியர்கள் வசிக்கும் தெருக்களில் ஒரு இந்துக்கு வீடு வாடகைக்கு பார்த்து தருமா இப்பவாது இத வெளியிடுமா தெரியல

                    • So vinavu readers will get a great escape from him[viyasan] very soon!. 🙂

                      //அதனால் எதற்காக நான் மினக்கெட்டு உங்களுக்குப் பதிலெழுதி எனது நேரத்தை வீணாக்க வேண்டுமென்று தோன்றுகிறது.//

                    • வியாஜன், சேம் சைடு கோல போடுறதுல மதுரை ஆதினம் கூட உங்கள விஞ்ச முடியாது.
                      ராஜராஜ சோழன், தேவதாசிங்கள நீங்க வசை பாடுனா, பதிலுக்கு நானும் கஜினி முகமது ஓரினச்சேர்க்கைன்னு வஜை பாடுவேன்னு ஒத்துக்கிட்டதுக்கு நன்னி. பெறவு ஒரினச் சேர்க்கை ஹராம்னு இசுலாம் சொல்லுதுன்னு சொல்லிட்டு, இதை வசைன்னு நினைச்சு நீங்க போட்டத பாத்தா யாழ்ப்பாணத்து வேளாளனவுகளுக்கும் இது ஹராம்னு ஆகுதே! ஓரினச் சேர்க்கையை யாழ் சைவைம் ஹராம்னு அருவெறுப்பா பாக்குதுன்னு, இத உங்க கனடாவுல சொல்லிப் பாரும், வெளக்குமாறு பிஞ்சிரும்!
                      அடிக்கிறது சேம்சைடு கோலுன்னாலும், வீராப்புக்கு ஒன்னும் குறைச்சலில்ல!
                      கஜினியை திட்டறதா நினைச்சிட்டு, நீங்க அம்மணமா ஆடுறத பாத்தா ரெண்டு மாசம் உக்காந்து சிரிக்கலாம், ரொம்ப நன்னிங்கோ!

                    • இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு “முற்போக்கு” இணையத்தளத்தில், ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்குப் படையெடுத்து, கோயில்களைக் கொள்ளையடித்த ஒரு படையெடுப்பாளரின் பாலியல் விருப்பு, வெறுப்புகளை அவனைப் பற்றிய விவாதத்தில் பேசியதற்காக, அந்த தளத்தின் நிர்வாகிகள் உணர்ச்சிவசப்பட்டு, கருத்து தெரிவித்தவரின் பாலியல் விருப்பு வெறுப்புக்களை அறிவிக்குமாறு கூறும், அதாவது தனிப்பட்ட தாக்குதல் நடத்தும் நிர்வாகிகளைக் கொண்ட தளம் எவ்வாறு ஒரு நடுநிலையான கருத்துச் சுதந்திரத்தை மதிக்கும் தளமாக இருக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. இதற்குப் பெயர் தான் ‘முற்போக்கு’ போலிருக்கிறது. 🙂

                      ஓரினச்சேர்க்கை என்பது தவறு அல்லது தவறல்ல என்று வாதாடுவதோ அல்லது அதைப் பற்றித் தீர்ப்புக் கூறுவதோ என்னுடைய நோக்கமல்ல. நான் எதற்காக கஜினி முகம்மத்தில் ஓரினச் சேர்க்கை பாலியல் விருப்பைக் குறிப்பிட்டேன் என்பதற்கான காரணத்தை நான் எனது முதல் பதிலிலேயே குறிப்பிட்டு விட்டேன். பொது வாழ்க்கைக்கு வந்தவர்களின், குறிப்பாக பழைய அரசர்களின் வரலாற்றைப் பற்றிப் பேசும் போது யாரும் அவர்களைப் பற்றி, அவர்களின் பாலியல் விருப்பு வெறுப்பு உட்பட, எதையும் மறைப்பதில்லை. வரலாற்றில் நடந்த எதையும் மறைப்பதோ அல்லது வண்ணம் பூசி மழுப்புவதோ உண்மையான வரலாறாகாது. உதாரணமாக, இங்கிலாந்தின் புகழ் பெற்ற அரசியாகிய முதலாம் எலிசபெத்தை, அவர் ஒரு ஆண் அல்லது லெஸ்பியன் என்றெல்லாம் கூட. வரலாற்று வகுப்பறைகளில் விவாதங்கள், கலந்துரையாடல்கள் நடத்தப்படுவதுண்டு. ஆனால் கஜினி முகம்மதுவின் வரலாற்றைப் பேசும் போது மட்டும், அவரது பாலியல் நிலை குறித்துக் கவலைப்படத் தேவையில்லையாம். அது எந்த வகையில் நியாயம் என்று எனக்குத் தெரியவில்லை.

                      இந்த லட்சணத்தில் நான் escape ஆகப் போகிறேன் என்றும் சிலர் உளறுவதைப் பார்க்க எங்கே போய் முட்டிக் கொள்வதென்று தெரியவில்லை. அப்படி எனது கருத்தைத் தெரிவிக்கப் பயந்து போய் escape ஆகும் நிலையில் நானில்லை. ஆனால் எனது பதில்கள் வெளியிடப்படுமா அல்லது இனியும் இங்கு பங்கு பற்ற வேண்டுமா என்று தான் சிந்திக்கிறேன். 🙂

                      //அவ்வகையில் வியாசன் அவர்கள் அவரே ஒரு ஓரினச் சேர்க்கையாளராக இருக்கும் பட்சத்தில் அறிவிப்பதில் தவறில்லை///

                    • Viyasan,

                      Fools mind and angry man minds will not work properly like yours.

                      See my comment and your replay!

                      I SAID Vinavu readers are going to escape from you !

                      But U understand that you are going to escape from vinavu!

                      Viyasan! R U fool or angry man? or Both?

                      //Mycomment: So vinavu readers will get a great escape from him[viyasan] very soon!.//

                      viyasan://இந்த லட்சணத்தில் நான் escape ஆகப் போகிறேன் என்றும் சிலர் உளறுவதைப் பார்க்க எங்கே போய் முட்டிக் கொள்வதென்று தெரியவில்லை. அப்படி எனது கருத்தைத் தெரிவிக்கப் பயந்து போய் escape ஆகும் நிலையில் நானில்லை. ஆனால் எனது பதில்கள் வெளியிடப்படுமா அல்லது இனியும் இங்கு பங்கு பற்ற வேண்டுமா என்று தான் சிந்திக்கிறேன்//

                    • I am familiar with the comments of Senthilkumaran. I know what kind of remarks he usually makes, I only saw the word ‘escape’ and didn’t read the whole sentence. 🙂

                    • Viyasan,

                      So that I am asking you that whether Are you fool or angry man or BOTH ???? 🙂

                      viyasan://I am familiar with the comments of Senthilkumaran. I know what kind of remarks he usually makes, I only saw the word ‘escape’ and didn’t read the whole sentence.//

  12. பார்ப்பணியத்தை பார்ப்பணர்கள் புகழலாம் ஆனால் அவர்கள் அழிக்க துடிக்கம் அடிமைகளே புகழ்வதுதான் இங்கு வேடிக்கையாக இருக்கின்றது…. அடேய் பாமரா பிராமணன் உன்னை முதலில் ஒரு மணிதனாக மதிக்கட்டும் பிறகு நீ அவனை புகழலாம்….

  13. திரு. தென்றல்.

    தீட்சிதர்கள் தில்லைக் கோயிலில் சொத்துக்களை சூறையாடுவது மட்டுமல்ல, பல இந்துக் கோயில்களில், கிறித்தவ தேவாலயங்களில், ஏன் பள்ளிவாசல்களில் கூட பூசாரிகளால், மதகுருமார்களால், வக்பு வாரியங்களால் இக்காலத்தில் கூட கணக்குக் காட்டாமல் பணம் கையாடப்படுகிறது, சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன. அதனால் அக்காலத்தில் செல்வங்களால் நிறைந்து கிடந்த சோம்நாத் கோயிலில் அங்கிருந்த பூசாரிகள்/ பார்ப்பனர்கள் அங்குள்ள செல்வங்களை சூறையாடியிருக்க மாட்டார்கள் என்று யாருமே நிச்சயமாகக் கூறவும் முடியாது அப்படி யாரும் வாதாடவும் மாட்டார்கள். ஆனால் இந்துக்களாகிய பார்ப்பனர்கள் இந்துக்களின் சோம்நாத் கோயிலில் பணத்தை சூறையாடியதை அல்லது ஊழல் நடந்ததை, அல்லது சிற்றரசர்கள் யாத்திரீகர்களைக் கொள்ளையடித்ததை ஆதாரம் காட்டி, ஒரு முறையல்ல பதினேழுமுறை இந்தியாவுக்குப் படைஎடுத்துக் கொள்ளையடித்த கஜினி முகமதை அவர்களுடன் ஒப்பிட்டு, அவனும் அந்த இந்துப் பூசாரிகள் மாதிரித் தான் கோயிலில் பணத்தைக் கையாடினானே தவிர அவனுக்கு கோயிலை அழிக்கும் எண்ணமோ, அல்லது கொள்ளையடிக்கும் நோக்கமோ இல்லை எல்லாம் வெறும் கட்டுக்கதை என்பது போன்று, வரலாற்றைத் திரிக்க சிலர் முனைவது வெறும் அபத்தம் என்பது தான் எனது கருத்தாகும்.

    1. உதாரணமாக நியூயோர்க்கில் நாலாயிரத்துக்கும் அதிகமான அமெரிக்கர்களை முஸ்லீம்கள் துடிக்க துடிக்க நெருப்பில் எரித்துக் கொன்று பின்னரும் கூட, மன்ஹாட்டனில் பள்ளிவாசல் கட்ட அமெரிக்கர்கள் அனுமதித்தது மட்டுமல்ல, அங்கு பல பள்ளிவாசல்கள் இயங்குகின்றன. அமெரிக்காவில் பல முன்னாள் கிறித்தவக் கோயில்களையே முஸ்லீம்கள் வாங்கி பள்ளிவாசலாக மாற்றியுமுள்ளார்கள். அதனுடன் ஒப்பிடும் போது, பொறுமைக்கும், சகிப்புத் தன்மைக்கும் பெயர் போன இந்துக்கள், சோம்நாத் கோயில் இடிக்கப்பட்டு 200 ஆண்டுகளின் பின்னர், சோம்நாத் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் சிலவற்றை, மத நல்லிணக்கம் பேணுவதற்காக, அல்லது அங்கு வர்த்தகம் புரிந்த இஸ்லாமியர்களின் வேண்டுகோளுக்கிணங்க கொடுத்திருப்பதை, கஜினிமுகம்மது சோம்நாத் கோயிலைக் அழிக்கவில்லை அல்லது கொள்ளையடிக்கவில்லை என்பதற்கு ஆதராமாகக் கொள்ளலாம் என்று வாதாடுவது நகைப்புக்குரியது மட்டுமல்ல முட்டாள் தனமானதும் கூட.

    2. மதுரை மீனாட்சியம்மன் கோயிலைக் கூடத் தான் மாலிக்கபூர் கொள்ளையடித்தான், ஆனால் மதுரை மீனாட்சியம்மன் அண்மையிலேயே பள்ளிவாசல் இருக்கிறதே, அதையும் இந்துக்கள் அனுமதித்திருக்கிறார்கள் தானே. அதனால் மாலிக்கபூர் மதுரையைச் சூறையாடவில்லை என்று வாதாட முடியுமா?

    3. இலங்கையில் போத்துக்கேயர்கள் யாழ்ப்பாணத்தில் மட்டும் 500 க்கு மேற்பட்ட இந்துக் கோயில்களை அழித்துச் செல்வங்களையும், நகைகளையும் சூறையாடினர். அந்தக் கோயில்களின் கற்களைக் கொண்டு யாழ்ப்பாணக் கோட்டையைக் கட்டினர், ஆனால் இன்றும் பல கிறித்தவக் கோயில்கள், இந்துக் கோயில்களின் வளவுகளுக்குள்ளேயே உள்ளன. பல தமிழ் இந்துக்கள் இரண்டு கோயில்களுக்கும் சென்று வணங்குகின்றனர். அதை ஆதாரம் காட்டி போத்துக்கேயர்கள் யாழ்ப்பாணத்தில் இந்துக் கோயில்களை அழிக்கவில்லை, கொள்ளையடிக்கவில்லை என்று கூற முடியுமா?

    அதிலும் வேடிக்கை என்னவென்றால் துலுக்கனாகிய கஜினி முகம்மதை நல்லவனாகக் காட்டுவதில் இனத்தால் தமிழர்களாகிய தமிழ்நாட்டு முஸ்லீம்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை. அப்படியானால் துலுக்கர்கள் (Turks) இவர்களுக்கு என்ன மாமனா, மச்சானா? 🙂

  14. இந்த கட்டுரையை எதிர்த்து வாதிடுபவர்கள் இக்கட்டுரை எழுப்பக்கூடிய மூலக்கேள்விக்கு பதில் சொன்னால் தேவலை. அதாவது

    அன்றைய நாட்களில் கோயில்கள்தான் மன்னர்களின் செழ்வங்களை பதுக்கி வைக்கும் இடமாகவும் கோயில்கள்தான் செல்வங்களின் உறைவிடங்களாக இருந்துள்ளது. எனவே படையெடுத்த மன்னர்கள் அனைவரும் மத வித்தியாசமன்றி கோயில்களை கொள்ளையடித்துள்ளனர். உதாரணத்திற்கு சிரீரங்கப்பட்டிணத்தை சோழ மன்னர்கள் பல தடைவைகள் கொள்ளையடித்துள்ளனர். இவையெல்லாம் அன்றைய மன்னர்களுக்கு அந்நிய நாட்டின் கோயில்களை கொள்ளையடித்து தன் நாட்டிற்கு கொண்டுவருவது சத்திரிய தர்மமாகவே இருந்ததுள்ளது. யதார்த்தம் இவ்வாறாக இருக்க கஜினி சோமநாதர் கோயிலை கொள்ளயடித்ததை மட்டும் ஊதிப்பெருக்கி இஷ்லாமியர்களுக்கு எதிராக இந்து மத வெறியை பட்டை தீட்ட முயற்சிப்பது எவ்வாறு ஏற்றுகொள்ள முடியும்?

    சிலர் என்னவோ இந்த கட்டுரை என்ன சொல்ல வருகிறது என்றே புடியாதது போல தம்முடைய பூனூலை மறைத்து மறைத்துக்கொள்கின்றனர்

    • குத்துப் மினார் வளாகத்தில் உள்ள மசூதியில் உள்ள இந்து-ஜைன மத கோவில் தூண்கள், அவை விலை உயர்ந்த பொக்கிஷங்கள் என்பதால்தான் கோவில்களை இடித்து திருடப்பட்டனவா?

      சமீபத்தில் உ பி யில் இரண்டு தலித் சிறுமிகள் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு, மரத்தில் தொங்கவிடப்பட்டனர். இந்நிகழ்வு வெறும் காமவெறியினால் நடந்தது என கூறுவீர்களா, அல்லது ஆதிக்க ஜாதிவெறி காரணமா? முன்பே பல முறை தலித் ஆண்கள், தலித் பெண்களை பலாத்காரம் செய்வது நடந்திருக்கிறது என்பதை இங்கே இணைத்து பேசுவீர்களா?

      எந்த சோழ மன்னன் எப்போது ஸ்ரீரங்கப்பட்டன ஆலயத்தை சூறையாடினான் என ஆதாரத்தோடு கூற முடியுமா?

      ஏதோ ஒரு யுகத்தில் ஏதோ ஒரு வெறி பிடித்த மன்னன் சோமநாத் கோவிலை இடித்தான் என்பதற்காக, இன்றைய இஸ்லாமிய சகோதரர்களை குற்றவாளிகளாக சித்தரிக்க முயல்வது கொடூரம். மறுபுறம் இந்த மன்னன் ரொம்ப நல்லவன், அவன் சோம்நாத் கோவிலுக்கு வந்ததே தேவாரம் பாடத்தான் என்ற ரீதியில் எழுதுவதும் தவறுதான்.

      இங்கே பூணூலை மறைத்துக் கொண்டு எழுதுவோர், நீங்கள் உசுப்பி விட்டதால் ஆக்ரோஷமாகி, தங்கள் பூணூலை வெளிப்படையாக காட்டும் பட்சத்தில், சுன்னத் செய்துள்ள தாங்கள் அதை வெளிப்படையாக காட்ட வேண்டி வருமே என்பது பற்றி சிந்தித்து இருக்கிறீரா (Just a joke 🙂

    • 1453 இல் துலுக்க அரசன் Mehmed II, Constantinople ஐக் கைப்பற்றியதும், இஸ்தான்புல்லில், இன்றுமுள்ள கிறித்தவ தேவாலயமாகிய Hagia Sophia வைக் கொள்ளையடித்தது மட்டுமன்றி, அதைப் பள்ளிவாசலாகவும் மாற்றினான். அவனது பரம்பரையில் வந்த கஜினிமுகம்மதும், ஏனைய முகலாயர்களும் இந்துக் கோயில்களைக் கொள்ளையடித்தது மட்டுமல்ல, அவற்றில் பலவற்றை பள்ளிவாசல்களாகவும் மாற்றினர் என்பது வரலாற்று உண்மை. இந்துக்களின் புனிதத்திலும் புனிதமாகிய (Holiest of Holy) காசி விசுவநாதரின் புராதன கோயில் கூட இன்றும் பள்ளிவாசலாகத் தானிருக்கிறது. எந்த மறுப்புவாதத்தாலும் அவற்றை எல்லாம் நியாயப் படுத்த முடியாது.

      வரலாற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு, அதற்காக இக்காலத்திலும் பழிவாங்கத் துடிக்காமல் நாம் சகிப்புத் தனமையுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டுமே தவிர, முகலாயர்கள் இந்துக்களை மதம் கட்டாயமாக மதம் மாற்றவில்லை, அல்லது கோயில்களைக் கொள்ளையடிக்கவில்லை அல்லது, இந்துமன்னர்களும் கோயில்களைத் தாக்கினார்கள் அதே போல் முஸ்லீம் தான் மன்னர்களும் தாக்கினார்கள், அவர்களுக்கும் இந்துமதத்தை அழிக்கும் நோக்கமில்லை என்று வாதாடுவதைஎல்லாம் பார்க்க சிரிப்புத் தான் வருகிறது.

      இந்து மன்னர்கள் தமது நாட்டைப் பெரிதாகும் நோக்கில் தமது எதிரிகளைத் தாக்கிய போது கோயில்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டதுண்டு பின்னர் அவர்கள் அந்த நாட்டைக் கைப்பற்றியதும், அந்தக் கோயில்களைப் புனரமைத்து முன்பிருந்ததை விட பெரியளவில் திருத்தி அமைத்ததுடன், நகைகளையும், செல்வங்களையும் தானம் அளித்தார்கள். அதையும் முஸ்லீம் படையெடுப்பாளர்கள் கோயில்களை அழித்தததையும், கொள்ளையடித்ததையும், அவற்றைப் பள்ளிவாசல்களாக மாற்றியதையும் ஒப்பிடுவது போன்ற விதண்டாவாதம் வேறெதுவுமிருக்க முடியாது.

      • திருத்தம்: //அவனது பரம்பரையில் வந்த கஜினிமுகம்மதும், //

        கஜினி முகம்மதுவின் துலுக்க அரசர்களின் பரம்பரையில் வந்த Mehmed II என்று வாசிக்கவும். வசனப்பிழைக்கு வருந்துகிறேன். 🙂

  15. திரு வியாசன் அவர்களே,

    இன்னும் திரித்து புரட்டுவதிலேயே குறியாய் இருக்கிறீர்கள். சோம்நாத் கோயிலில் பார்ப்பனர்கள் கொள்ளையடித்ததை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களேயானால் பாடநூல் எவ்வாறு இருந்திருக்க வேண்டும்? கட்டுரை எழுப்புகிற கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

    இருதரப்பையும் கொள்ளையடித்ததை பதிவு செய்திருக்கவேண்டுமில்லையா? எங்கே போயிற்று நடுநிலைமை?

    கட்டுரை கஜினி கொள்ளையடித்தான் என்பதை ஆரம்பித்திலேயே பதிவு செய்திருக்கிறது இப்படி. “அப்படியானால் கஜினி முகமது சோமநாதபுரத்தின் மீது படையெடுத்ததும் கொள்ளையடித்ததும் பொய்யா? இல்லை, மறுக்க முடியாத உண்மை.”

    கொஞ்சம் இசுலாமிய மதவெறியைத் தணித்துவிட்டு கட்டுரையை வாசிக்கலாம் இல்லையா?

    இன்னும் ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் தலைப்புகள் எப்படி அப்பட்டமாக இருக்கிறது என்று நோக்குங்கள்;

    ஆரியர்கள் வருகை!
    இசுலாமியர்கள் படையெடுப்பு!!

    அவிங்க வந்தாங்களாம்! இவிங்க படையெடுத்தாங்களாம்!
    அடேங்கப்பா! ஆர் எஸ் எஸ் களின் அழுகுணி ஆட்டம் தாங்கமுடியவில்லை!!

    • Hi Thendral,

      //ஆரியர்கள் வருகை!
      இசுலாமியர்கள் படையெடுப்பு!!//

      அதிகாரம் ஆரியர்களின் கையில் இருப்பதால் இப்படித்தான் பதிவாகும். இசுலாமியர்களின் கையில் இருக்கும் இடங்களில் இது இடம் மாறியிருக்கும்.

      Having said that, Aryans’ invasion may not have happened with a spe