privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்வைஃபேஸ்புக் பார்வைதி இந்து-வை லந்து செய்யும் ஃபேஸ்புக் கருவாட்டுக் கவிதைகள்!

தி இந்து-வை லந்து செய்யும் ஃபேஸ்புக் கருவாட்டுக் கவிதைகள்!

-

ஃபேஸ்புக் கருவாட்டுக் கவிதைகள்

தமிழச்சி பேஸ்புக்கில்

கோயம்பேடு காய்கறிச் சந்தையில் விதிகளை மீறி கருவாடு விற்பனை நடப்பதாகவும் சைவம் சாப்பிடுகிறவர்கள் மார்க்கெட்டுக்கு வரும்போது கருவாடு நாற்றத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை என்றும் பார்ப்பன பத்திரிகை ‘தி இந்து’ செய்தி வெளியிட்டதை முன்னிட்டு போலிஸ் கோயம்பேடு காய்கறி சந்தையில் திடீரென ரெய்டு நடத்தி 18 கடைகளில் கருவாடு விற்றதை கண்டுபிடித்து பறிமுதல் செய்திருக்கிறது.

சைவமும் அசைவமும் மேற்கத்திய நாடுகளில் தனிமனிதனின் விருப்பு / வெறுப்பு சார்ந்தவை. ஆனால் இந்திய சமூகத்தில் அரசியல் குறியீடுகள். சைவம் சாப்பிடும் சிறுபான்மையினர் அசைவம் சாப்பிடும் பெரும்பான்மையினரை அருவெறுப்பாக பார்த்து தங்கள் ஆச்சாரத்தை உயர்த்திப் பிடிக்கும் பார்ப்பனீய மைய அதிகாரத்தை ஓர் பத்திரிகை வெளிப்படுத்துகிறது.

செம்மீன்‘மொழி’ திரைப்படத்தில் ஓர் காட்சிவரும். தெரு பாடகன் ஆர்மோனிய பெட்டியை தட்டி அவர் பிழைப்புக்கு ஏதோ பாடிக் கொண்டிருப்பார். ஹீரோ, ‘டாய் ஒழுங்கா சுதி போடுடா’ என்று அடித்து அடித்து இசை ஞானத்தை வெளிப்படுத்துவார்.

உழைக்கும் எளிய மக்களிடம் அதிகாரம் இப்படித்தான் அதட்டிப் பேசும். ‘தி இந்து’வின் கருவாட்டு சமாச்சாரமும் இப்படித்தான்.

– தமிழச்சி

21/08/2014

கருத்துக்கள்

Krishna Kumar Appu

அடங்கப்பா!! டேய் பக்கிகளா!! கோயம்பேடு மார்கெட்ல அழுகிப்போன காய்கறில வராத நாத்தமாய்யா கருவாட்டால வந்துட போகுது.. மார்கெட்டுகுள்ள நுழைந்ததும் எந்த நாத்தம் முதல்ல அடிக்கும்.. காய்கறி நாத்தமா? கருவாட்டு நாத்தமா? அங்க கருவாட்டுக் கடை எல்லாம் இருக்கும்னு இந்த இஸ்யூ வந்த அப்புறம் தான்யா எனகெல்லாம் தெரியும். நிறைய பேரோட அறச்சீற்றம் இதுல எங்க ஜாதி வந்துச்சுன்னு தான்? இங்க லைக் போட்டுருக்க எத்தன பேர் நான் வெஜ் சாப்டுவிங்க? எத்தன பேர் சாப்ட மாட்டிங்க? பெரும்பாலானவங்க சாப்டுறவங்க தான். அங்க காய்கறி வாங்க போற பெரும்பான்மையானவங்க நான் வெஜிடேரியன்தான். ஆனா நடவடிக்கை எடுத்தது பிராமணர்கள் சொன்னதால. வெறும் சொற்ப அளவில் இருக்க அவங்க சொல்லி நம்மாளுங்க கடைய காலி பண்றாங்கன்னா, இங்க அதிகாரம் யாருகிட்ட இருக்கு? யார் சொன்னா உடனே நடக்குது? கொஞ்சம் யோசிங்க மக்களே!! நாம எங்க எந்த கடைய வைக்கனும்னு அவன் அதிகாரம் பண்றான் நாமளும் சாரி நீங்களும் அதுக்கு ஒத்து ஊதுங்க.. நமக்கு அடிமைகளா இருந்து தானே பழக்கம்.

Neyveli Shajahan

முதலில், இந்தியாவில் ஒருவரும் சைவம் கிடையாது, நீங்கள் சைவம் என்றால் பால் கூட குடிக்கக்கூடாது, பால் என்பது பசுவின், ஆட்டின், ஒட்டகத்தின் ரத்தத்தில் ஒரு பாதி. பால் என்பது ரத்தம், நீங்கள் ரத்தத்தை குடித்து கொண்டு சைவம் பேசக்கூடாது, நீங்கள் சைவம் என்றால் எந்த சைவக் குழந்தையும் தாய்ப்பாலைக் கூட குடிக்கக்கூடாது

இரண்டாவது, தாவரங்களுக்கும் உயிர் இருக்கிறது, நீங்கள் சைவம் என்றால் எந்த தாவரத்தையும் சாப்பிடக்கூடாது

மூன்றாவது, வானத்தையும் பூமியையும் படைத்த இறைவன் ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற விலங்குகளையும், பறவைகளையும், மீன்களையும், தாவரங்களையும் மனிதன் சாப்பிடுவதற்கு அனுமதி அளித்து உள்ளான். இறைவன் சைவம் அசைவம் சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் மனிதனின் பற்களை கோர பற்களையும் கடைவாய்ப் பற்களையும் படைத்து உள்ளான். உலகில் வாழும் மனிதனுக்கு இதில் எந்த உணவு கிடைக்கிறதோ எந்த உணவு உடலுக்கு ஏற்கிறதோ அந்த உணவை அவன் தாராளமாக சாப்பிடலாம், இறைவன் அனுமதி கொடுத்ததை தானாக தடுத்து கொள்ள எவருக்கும் உரிமை இல்லை.

நான்காவது, சைவம் எங்கிருந்து வந்தது என்றால் மனிதர்களாகவே புதிதாக இயற்க்கைக்கு மாற்றமாக தானாக உருவாக்கி கொண்டார்கள், இதனால் தாங்கள் மட்டும் அவதிப்படுவதும் மட்டுமல்லாமல், பிற மக்களுக்கும் தொல்லை கொடுப்பதை ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாது. இவர்கள் செயல் தொடர்ந்தால் இவர்களை சமுதாயத்தை விட்டே துரத்த வேண்டி இருக்கும்

ஐந்தாவது, இறைவனின் எந்த வேதமும் சைவம் மட்டும் சாப்பிட சொல்லவில்லை, அசைவம் சாப்பிடுவதை பாவம் என்று சொல்லவில்லை. இறைவனின் பார்வையில் சைவம் சாப்பிடுபவனும் அசைவம் சாப்பிடுபவனும் சமம் தான். இறைவன், பைபிள் மற்றும் குரானில் பன்றியை மட்டும் சாப்பிடக்கூடாது என்று சொல்லி உள்ளான். இந்த பிராமினர்களும் மாட்டை சாப்பிட்டவர்கள் தான் நினைவில் கொள்ளுங்கள்,

Krishna Kumar Appu

ஒரு கிலோ திருக்கைக் கருவாட்டுல 158 மில்லிகிராம் Copper இருக்கு, 1469 மில்லிகிராம் Zync இருக்கு, 2303 மில்லிகிராம் Arsenic இருக்கு, 151 மில்லிகிராம் Selenium இருக்கு, இதுல இருக்குற Peptides ரத்தத்துல சர்க்கரை அளவ கட்டுப்படுத்துது, ரத்த உயர் அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கிற மாரடைப்பைத் தடுக்கிற ஏகப்பட்ட அமினோ அமிலங்களின் அற்புத உணவு கருவாடு. அவன் ரெண்டு நாள் உருட்டி தின்ற தயிர் சோத்த விட ஒரு வேளை நாம சாப்டுற கருவாட்டுல சத்து அதிகம் தான்.

Cuddalore Port Mohammed Ghouse

மீன் விற்ற காசு நாறாது என ஓர் பொன்மொழி அறிந்திருக்கிறோம். காய்ந்து சருகாய் கிடக்கும் கருவாட்டினால் மற்றும் அதன் நெடியினால் சுகாதாரக்கேடு எதுவுமே இல்லை. எலி செத்த துர்நாற்றம் அல்ல… இயற்கையாய் வீசும் கருவாட்டு வாசம்! சமையல் வாயுவின் வாசனையுங்கூட பெரும்பான்மையோர்க்கு பிடிப்பதில்லை! பொதுவிடங்களில் புகை பிடிக்கக்கூடாதென கூறுவதில் கட்டளை இடுவதில் சுகாதார நுணுக்கம் அடங்கியிருக்கிறது. வயிற்றைக் குமட்டும் சாராயவாடையில்லா வீதிகளாய் தமிழகத்தை மாற்றவேண்டும் என எவருக்கும் தோன்றவில்லை!

Parthiban Sa

கருவாடுகளை வீதியில் விற்காமல் வேறு எங்கு விற்பது? நாற்றம் அடிக்கிறது என்றால் சந்தைக்கு வரக்கூடாது , அப்படி நாற்றம் அடிக்கிறது என்பவர்கள் கழிவறையில் மலம் கழிக்கும் போது நற்றம் எடுக்கிறது என்று அவர்கள் போகவே கூடாது இதுபோன்று சிறு சிறு தொழிலாளிகளை இப்படி தொழில் நடத்தவிடாமல் தடுத்து மோர், போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு கேட்டை திறந்து சலாம் போடும் வேலைதான் இது

தூ…

Play On Movies

புகார் கொடுத்தவன் அப்படி டாஸ்மாக் எடுக்கக் சொல்லட்டும் அத போலிஸ் வந்து எடுக்கட்டும் பாப்போம் …..அவனுக்கு சூ…. கிழிஞ்சிடும் ..இதெல்லாம் சும்மா வெளி வேஷம்

Mohamed Farook Sikkandar

உணவுகளில் எல்லோரும் அவர்களுக்கு விருப்பம் உள்ளதை உண்கிறார்கள் சைவம்தான் சாப்பிடவேண்டும், அசைவம்தான் சாப்பிடவேண்டும் என்று யாரும் யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது. அசைவம் உண்போருக்கு சில வகை அதிலே பிடிப்பதில்லை, அதே போல சைவம் உண்பவர்களும்.

ஒரு முறை நபிகள் நாயகத்திற்க்கு விருந்தில் உடும்பு இறைச்சி வழங்கப்பட்டது. ஆனால் அதை அவர்கள் சாப்பிடவில்லை. அதைக்கண்ட தோழர்கள் சாப்பிடாமல் தவிர்த்தனர். உடனே, நபிகள் நாயகம் எனக்கு அது விருப்பம் இல்லை, நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள் எனக்கூறினார்கள்

Prince Blessy Clement

சைவம் சாப்பிடும் சிறுபான்மையினர் அசைவம் சாப்பிடும் பெரும்பான்மையினரை அருவெறுப்பாக பார்த்து தங்கள் ஆச்சாரத்தை உயர்த்திப் பிடிக்கும் பார்ப்பனீய மைய அதிகாரத்தை ஓர் பத்திரிகை வெளிப்படுத்துகிறது.

Tamil Selvan
நான்வெஜ் பிரியர்களுக்கு அது துர்நாற்றமாகத் தெரியாது, ஆனால் வெஜ் பிரியர்களுக்கு கண்டிப்பாக அது அப்படித்தான் இருக்கும். காய்கறிகளின் வாசனை யாரையும் முகம் சுளிக்கவைக்கப் போவதில்லை. ஆனால் மீன், கருவாடு, பிற மாமிச வகைகள் அப்படி அல்ல. இருந்தாலும் பொது இடங்களில் சில சவுகரியங்களும் அசவுகரியங்களும் இருக்கத்தான் செய்யும். அதை சகித்துக்கொண்டுதான் ஆகவேண்டும், வேறுவழியில்லை. ஒரு சாராருக்காக அதை மாற்ற முற்படுவது முறையில்லைதான்!

Hemanathan Kumar
பழ மார்கெட்டில் கூட துர்நாற்றம் வருகிறது. பிரச்சனை துர்நாற்றமா , கருவாடா ??? துர்நாற்றம் என்றால் காய்கனி கழிவுகளாலும் வரும்.

Bhagavathsingh Gurusamy

ஏன் எங்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முட்டை போண்டா விற்பதை நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் தடுத்து எச்சரித்தார்.

Dhanush Nippa
இல்லாதவன அடிக்கனும்னும்னா வந்துருவாங்களே வரிஞ்சி கெட்டிக்குட்டு..

Ajai Akilan
இந்த லட்சணத்துல கருவாடுகாரர்களின் நகரத்துக்கு 375 வது ஆண்டு விழாவாம்

Mahavishnu Chandrasekaran
சந்தைக்கு வந்த காய்கள் அந்த கருவாடு சாப்பிட்டவனுடைய வியர்வையில் வந்தை மறந்துட்டாங்களே!

Abdul Hakkim
அனைத்து உணவுப்பொருட்களும் கிடைக்க்கூடிய இடம் தான் சந்தை அங்கு வரும் வாசம் நமக்கு பிடிக்கவில்லை என்றால் மூடிக்கொண்டு செல்ல வேண்டியதுதான் மூக்கை. அடுத்த மனிதனின் பொழப்பில் மண்னை அள்ளி போடக்கூடாது.

Parthiban Sa
இவர்கள் சொல்வதை பார்த்தால் கருவாடு நாற்றம் அடிக்கும் பொருள்தான். நாற்றம் அடிக்கு கையில் பயணிக்கும் ரூபாய் நோட்டுகளை தொட மாட்டார்களா,? இவர்களுக்குத் தனியாக ரூபாய் நோட்டுகளை அடிக்க சொல்வார்கள் போல இருக்கே ,

முகவை சதாம்
நாத்தமடிச்ச மூக்க முடிக்கிட்டு போய் காய்கறி வாங்க வேன்டியது தானே…? சென்னை உள்ள கூவத்தை விடவா கருவாடு நாறுது..?

Shan Shanmuga Sundaram
பெரியார் இல்லாத இவனுகளுக்கு அதப்பு ஏறிபோச்சு

Veera Vel
இந்திய நாட்டில் வியாபாரம் செய்வது இந்தியர்களின் அடிப்படை உரிமை. கருவாடு விற்கக்கூடாது என்று ஒரு சட்டமும் இல்லை . மீனவர்களும் மனிதர்கள்தான் . பார்ப்பனர் மட்டும் மனிதன் இல்லை

Lyakath Durai
ரிலையன்ஸ் மோர் போன்ற சூப்பர் மார்க்கெட்டுக்குள்ளே மீன் கோழி இன்னும் பல பிரிட்ஜிக்குள் வைத்து விற்பதை பார்த்து இருக்கிறேன்.

Zakir Upt
மேல் சாதியோ..கீழ் சாதியோ…,மனிதன் இறந்தால் ஒரு நாளைக்கு மேல் வீட்டில் வைத்திருக்க முடியாது….! மனிதனின் வாடையை விட, கருவாட்டின் வாடை பெரிதல்ல..!

Vrforu Kumar
இந்திய நாடு சுதந்திர நாடு.இந்துவும் முசல்மனும், கிரிஸ்துவும் இணைந்து வாழும் நாடு..கருவாட்டை வைத்து பிரிவினை விதைக்காதே நீ ஓடு..

பரிமளராசன் பேஸ்புக்கில்

கோயம்பேடு சந்தை

”கருவாடு நமக்கு சொல்லும் பாடம்”

கோயம்பேட்டுல காய்கறி வாங்கறதுலயே 98 பேர் எங்காளு, 2 பேர்தான் அவாளு ! அப்புறம் என்ன நொன்னைக்குடா அங்க கருவாடு விக்ககூடாதுன்னு 2 பேர், 98 பேருக்கு உத்தரவு போடறீங்க? உத்தரவு போட எப்படி முடியுது?

அடேய் அம்பிகளா, நீங்க கோயம்பேடு மார்கெட்டுல ஏதாவது கடைவெச்சு வியாபாரம் செய்யறீங்களா? ஒரே ஒரு காய்கறி கடைய ஒரு பூணூல் வெச்சிருப்பானா? ஒரே ஒரு கருவாட்டு கடைய ஒரு பூணூல் வெச்சிருப்பானா? கடையும் உங்களுது இல்ல. வாங்கறதுலயும் நீங்க 100க்கு 2 பேர்தான்.

ஆனா ஒட்டு மொத்த கோயம்பேட்டுக்கும் அத்தாரிட்டி போல எப்படி பேச முடியுது?98 பேர் விரும்பும் கருவாட்டு கடையை 2 பேரால் எப்படி தூக்க முடிகிறது?

அதிகார வர்கம்,ஆளும் வர்கம்,ஊடகம்,நீதி பரிபாலனம் அணைத்தும் பூணூலுக்கு ஆதரவாகவும்,98 பேருக்கு எதிராகவும் இருக்கிறது என்கிற உண்மையை கருவாடு நமக்கு உணர்த்துகிறது.

கருத்துக்கள்

Mohamed Sulthan

எலெக்‌ஷன் கமிஷன், அசைவம் கொண்டுவந்தால் அசவுகரியமாக இருக்கும், அதனால் அதற்கு தடை என்று ஆணையிட்டபோதே சரியான முறையில் செயல்பட்டிருக்க வேண்டும். எனக்கு பருப்பும், நெய்யும் அழற்சி என்பதால் பருப்புக்கும் நெய்யுக்கும் தடை போடலாமா? அசைவத்தை விரும்பாதவர்கள் வெகு சிலர், அவர்களுக்காக அசைவம் உண்பவர்களை தடுப்பது தனிமனித சுதந்திரத்தை நேரடியாக பாதிக்கக்கூடிய ஒன்று. இது சமூகத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்கும்.

Parameshwaran Sivananainthan

இப்படித்தான் உத்தரவு போட்டு போ்டடு…சாமானிய மக்களை போராடத்தூண்டுகிறார்கள்…புரட்சி்பபாதைக்கு தள்ளுகிறார்கள்…உழைக்கும் மக்கள் மீது அவர்களுக்கு அவ்வளவு வெறுப்பு. கருவாடுக்கு கூப்பாடு போடுபவர்கள் தெருவுக்கு தெரு மது ஆறாக ஓடுகிறதே…அதற்கு உத்தரவு போடுவார்களா?

Vel Tharma

ஒரு இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றிய ஒரு பாகிஸ்தானியன் சொன்னான், இந்திய மக்களாட்சி என்பது பார்ப்பன மக்களின் ஆட்சி என்று இது ஏன் உங்களுக்குத் தெரியவில்லை?

Thatha Peer Mohamed

கருவாட்டில் இவ்வளவு தத்துவங்களா? நாளைக்கு எங்க வீட்ல கருவாட்டு குழம்புதான். இப்பவே நாக்கு ஊருது

பேஸ்புக்கில் வலையுலகம் ஹைதர் அலி

இரமேஸ்வரம் பாம்பன் பாலம் போயிருந்தபோது உழைக்கும் மீனவ மக்கள் கருவாடு காயப் போட்டு இருந்ததை எனது மகன் படம் பிடித்தது. ஆஹா வாசனை அப்படி தூக்கியது பக்கத்தில் நிற்கும்போது

கருவாடு

பாம்பன் பாலத்தை கடக்கிற சைவ பிரியர்களுக்கு தொந்தரவாக இருக்கிறது என அங்கும் தடை விதிக்க முயற்சி பண்ணினாலும் பண்ணுவாய்ங்க !

பேஸ்புக்கில் கி. நடராசன்
இதெல்லாம் ரொம்ப ஓவர்… நாற்றம் குடலை பிடுக்கும் பன்னி பீயை எருவாக போட்டுத்தான் கத்தரி, மிளகாய், பூசணி, தக்காளி , துளசி எல்லாம் நல்லா விளையும்… இதெல்லாம் ஒரு பிரச்சனை என்று எழுதிரானுங்க… மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிகாய், வாழைப்பழங்கள் சட்ட விரோதமாய் விற்கப்படுகிறது.. இந்த அதிகாரிகள் என்ன கழட்டினார்கள் …. இது சைவம்..அசைவம் பிரச்சனை அல்ல…சாதி கொழுப்பெடுத்த அவாள் திமிர்…

பேஸ்புக்கில் டான் அசோக் Don Ashok ‏

அசைவ உணவு சாப்பிடுகிறவனுக்கு வீடு கொடுக்க மாட்டீர்கள். அலுவலகத்தில் அசைவ உணவு சாப்பிடுகின்றவனுக்கு உண்ண இடம் கொடுக்க மாட்டீர்கள். பொது இடத்தில் கருவாடு விற்பனைக்கு இடம் கொடுக்க மாட்டீர்கள். 4% மக்களுக்காக 96% மக்களின் உரிமை பறிக்கப்படும் நாடு அநேகமாக உலகிலேயே இதுவாகத்தான் இருக்கும்.

கருத்துக்கள்:

வேல்குமார் வா

கருவாட்டை சந்தைல விக்காம பின்ன லலிதா ஜுவல்லரிலயா விப்பாங்க

UmamaheshVaran Lao Tsu

இதை எல்லாம் சொன்னபோது அந்த 96%சேர்ந்த சில அரைவேக்காட்டு ஆசாமிகள் “பார்ப்பனீயம் இருக்கிறது என்பது பொய்யான ஒரு கூச்சல் “என்றார்கள். அவர்களுக்கு மவுண்ட் ரோடு மகா விஷ்ணு செருப்பால் அடித்து ஆமாம்யா பார்ப்பனீயம் இன்னும் இருக்கு என்று புரியவைத்திருப்பார் என்று நம்புகிறேன் .

கருவாடு karuvadu_en