தமிழ்நாடு சட்டசபையில் “ ஆமாம் நான் பாப்பாத்தி”யென்று பகிரங்கமாக பெருமையுடன் அறிவித்தவர் ஜெயலலிதா. சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளியென்று பெங்களூருவில் உள்ள பாரப்பன அக்கிரஹாரா என்று அழைக்கப்படும் பார்ப்பன அக்கிரஹாரத்தில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தீர்ப்பின் போது அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிலையில் தனது பாதுகாப்பு பிரச்சினைகளை முன்வைத்து ஜெயா தரப்பில் சுட்டிக்காட்டியதன் பேரில் தான் பார்ப்பன அக்கிரஹாரத்தில் அமைந்துள்ள கருநாடக சிறை வளாகத்திற்குள் சிறப்பு நீதிமன்றம் இடம் மாற்றப்பட்டது. தமிழினவாதிகளால் “ஈழத்தாய்” என்று போற்றப்பட்ட ஜெயலலிதா தனது உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் பாப்பாத்தியின் பெருமையையும், பாதுகாப்பையும் பார்ப்பன அக்ரஹாரம் ‘பாதுகாக்க’வே செய்திருக்கிறது.
மூன்று நீதிமன்றங்களையும், 14 நீதிபதிகளையும், எண்ணற்ற அரசு வழக்கறிஞர்களையும், கணக்கற்ற வாய்தாக்களையும் தாண்டி வானத்து நட்சத்திரங்களையும் விஞ்சும் கோப்புகளையும், ஏழு கடல்களை நிறைக்கும் மசியையும் விழுங்கி சட்டத்தின் சகல சந்து பொந்துகளிலும் புகுந்து புறப்பட்ட பின் – உலகம் உருண்டை என்கிற உண்மையை ‘புதிதாக’ உரைத்துள்ளது நீதிமன்றம்.
ஆனால், இந்த உண்மையை 7-9-1995 அன்றே ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் முன்னிலையில் முன்னறிவித்தார் ஜெயலலிதா. அந்த தேதியில் தான் அவரது வளர்ப்புக் கோயில் மாடான சுதாகரனின் திருமணம் நடந்தேறியது. ஜெயாவின் அந்த முதலாம் ஆட்சியே தமிழக அரசியலில் திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளின் பொற்காலத்தை துவங்கி வைத்தது. ஜெயா சசி கும்பல் முழு தமிழகத்தை மொட்டை அடித்து பழனி படிக்கட்டு ஆண்டிகளோடு உட்காரவைத்ததும், அதற்கு துணையாக பெரும் ரவுடிகளைக் கொண்ட தளபதிகளின் கூட்டம் நின்றதும் வரலாறு.
”நான் அடித்தது இத்தனை தான், உன்னால் ஆனதைப் பார்த்துக் கொள்” என்று இந்தியாவின் பெருமை மிகு போலி ஜனநாயகத்தின் மூஞ்சியில் ஜெயா கும்பல் பீச்சாங்கையை வைத்து ஏறக்குறைய 19 ஆண்டுகள் கடந்து விட்டது.
ஜெயா ஆட்சி தூக்கியெறியப்பட்ட பிறகு சுப்ரமணி சாமியால் தொடரப்பட்ட வழக்கை பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்திரவிட்ட பின் அவ்வழக்கின் மீதான விசாரணை தி.மு.க அரசின் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு பதினெட்டு ஆண்டுகள் கழித்து இன்று தீர்ப்பை வழங்கியுள்ளது நீதிமன்றம்.
இந்த இடைப்பட்ட காலத்தில் மேலும் இரண்டு முறை ஆட்சியில் அமர்ந்து விட்ட ஜெயா கும்பலின் சொத்துக்கள் மிடாஸ் முதலாக தமிழகமெங்கும் பரவியிருக்கும் சாம்ராஜ்யத்தில் பல ஆயிரம் கோடிகளாக வளர்ந்திருக்கின்றன. இப்போது, முதல் ஆட்சியில் ரூ 66 கோடி சொத்து சேர்த்தார்கள் என்று தீர்ப்பு சொல்லியிருக்கிறது நீதித்துறை. இதுதான் சட்டம் ஆற்றிய கடமையின் லட்சணம்.
இன்றைக்கு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் படி 1991-96 காலகட்டத்தில் ஜெயா அடித்த கொள்ளைகளுக்கான குற்றவாளி என்றால், இந்தக் குற்றவாளி இடைப்பட்ட காலத்தில் சுமார் எட்டாண்டுகள் அதிகாரத்தில் அமர வாய்ப்பளிக்கும் விதமாக வழக்கை நத்தையின் வேகத்தில் நகர அனுமதித்த நீதிமன்றத்தை யார் தண்டிக்கப் போகிறார்கள்?
ஜெயாவுக்கு ரூ 100 கோடியும், சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு ரூ 10 கோடியும் அபராதம் விதித்திருக்கிற நீதித்துறை இந்த கும்பலின் பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை தொடர்ந்து வைத்திருக்க ஆசி அளித்திருக்கிறது.
தற்போது வெளியாகியிருக்கும் மொக்கைத் தீர்ப்பும் அத்தனை சுலபத்தில் கிடைத்து விடவில்லை. 2001-ல் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஜெயா வழக்கை நீர்த்துப் போகச் செய்ய ஏற்கனவே கொசுவலை போல் கணக்கில்லாத பொத்தல்களோடு கிழிந்து கந்தலாகித் தொங்கிக் கொண்டிருந்த சட்டத்தில் புதிய ஓட்டைகளைக் கண்டுபிடித்து இந்தியாவின் அரசியல் சட்டத்தை அன்றாடம் கேலி செய்து வாய்தா ராணியென்ற சாதனை படைத்தார்.
வாய்தா ராணியின் அஸ்திரங்களை வெல்லும் அரசியல் உறுதியோ இல்லை தார்மீக நெறியோ திமுகவிடம் இல்லை. அரசியல் ரீதியில் காலாவதியாகிப் போய் நின்ற தி.மு.கவிடம் ஜெயாவை எதிர்ப்பதற்கு இறுதியாக எஞ்சிய ஒரே ஆயுதம் இந்த வழக்கு ஒன்று தான் என்பதைத் தாண்டி திமுக பலவீனமான நிலையிலேயே இந்த வழக்கை எதிர்கொண்டது.
கருணாநிதி தலைமையிலான திமுக கட்சி, ஆளும் தரகு முதலாளிகளின் கிளப்பில் சேர்ந்து விட்டாலும் முதலாளித்துவ ஊடகங்களுக்கு அது பெரிய விசயமில்லை. ஏனெனில் திமுக உருவாகி வந்த திராவிட பாரம்பரியத்தின் மீதான பார்ப்பனிய வன்மத்தை அவர்கள் இன்றைக்கும் மறக்கவில்லை. நேரெதிராக ஜெயா கும்பல் இத்தனை பகிரங்கமாக ஊழல் செய்து பேயாட்சி செய்தாலும் அவரை ஒரு குற்றவாளியென்றோ, தண்டிக்கப்பட வேண்டுமென்றோ ஊடகங்களும், பார்ப்பனிய அறிவு ஜீவிகளும் கோரியதே இல்லை. கூடவே மறுகாலனியாக்கம் கோரும் பாசிச மற்றும் பாப்புலிச ஆட்சிக்கு பொருத்தமான நபராக ஜெயாவை ஆளும் வர்க்கங்கள் கருதின. மோடியும் கூட இப்படித்தான் அரியணை ஏற்றப்பட்டார்.
அதனால்தான் இந்த நெடிய 18 ஆண்டுகளில் மத்தியில் காங்கிரசு அல்லது பாரதிய ஜனதா யார் ஆண்டாலும் ஜெயா கும்பலின் செல்வாக்கு குறைந்து விடவில்லை. இந்த பின்புலத்தில்தான் அரசியல் சட்ட புத்தகத்தை ஒவ்வொரு காகிதமாக கிழித்து கழிவறையில் தொங்க விட்டு அழகு பார்த்தார் ‘அம்மா’.
தனது ரத கஜ துரக பதாதிகள் துணையோடு ஜெயா கடந்த பதினெட்டாண்டுகளாக உலகம் ஒரு சதுரம் என்பதை நிரூபிக்க முயன்று வந்தார். என்றாலும், மறுக்கவே முடியாத உண்மையான ’உலகம் உருண்டை’ தான் என்பதை நீதிமன்றம் வேறு வழியின்றி இந்த தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதே நேரம் இந்த தீர்ப்பு உலகம் சதுரமாகவும் இருப்பதற்குரிய நியாயத்தை முற்றிலும் மறுத்து விடவில்லை. ஜெயா, சசி கும்பலின் சொத்துக்கள் பறிமுதல் செய்ய முடியாது என்பதோடு, ஓபி வகைப்பட்ட பொம்மைகளை முதல்வர் பதவியில் அமர்த்தி போயஸ் தோட்டத்து ரிமோட்டே கட்டுப்படுத்தும் என்ற யதார்த்தத்தை இந்த தீர்ப்பு தடுக்கப் போவதில்லை.
எனினும் ஜெயா கும்பல் இறுதி நேரத்தில் மோடி ஆட்சியின் சகல ஆசிகளுடன் இந்த வழக்கிலிருந்து வெளியே வர முயற்சி செய்தது. அந்த நம்பிக்கையில்தான் அதிமுக கும்பல் சிவகாசி வெடிகளோடு பெங்களூருவுக்கு படையெடுத்தது. ஆனால் சட்டப்படியே என்ன போங்காட்டம் ஆடினாலும் ஜெயா கும்பலை முற்றிலும் விடுவித்து விட முடியாது என்ற நிலையும் உருவாகி இருந்தது. மேலும் ஊழல் வழக்குகளில் இத்தகைய ஓரிரண்டு நம்பிக்கையை காட்டினால்தான் ஆளும் வர்க்கம் ஊழலுக்கு எதிரான மக்களின் நம்பிக்கையை தக்க வைக்கவும் முடியும்.
என்றாலும் ஜெயாவுக்கு ஆதரவாக ஒரு மாபெரும் சென்டிமெண்ட் அலையை ஏற்படுத்த அதே ஆளும் வர்க்கமும், ஊடகங்களும் முயலாமல் இல்லை. அம்மாவை கடைசி வரை காப்பாற்ற முயன்ற பாஜக கும்பல் இந்த வழக்கின் பெருமை திமுகவிற்கு செல்வதை கடுப்புடன் பார்க்கிறது.
ஜெயாவின் மேல் சொத்துக் குவிப்பு வழக்கை முதலில் தொடுத்த சுப்பிரமணியன் சுவாமி, டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் கருத்து சொல்லும் போது தீர்ப்பு இப்படித்தான் இருக்குமென்று முன்பே தெரியுமென தனக்குத்தானே பாராட்டிக் கொள்கிறார். மாமா சாமி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் போது அம்மா கட்சி மகளிர் அணி அளித்த வரலாற்று சிறப்புமிக்க வரவேற்பை தமிழகம் மட்டுமல்ல சாமியும் மறந்திருக்க மாட்டார். ஆனாலும் ஒரு தெருவோர விபச்சார தரகனுக்கு ரோசம், மானம், வெட்கம், சுயமரியாதை என்று ஏதாவது இருக்குமா என்ன?
பார்ப்பனிய பங்காளிகளான சாமி மற்றும் மாமிக்கு ஏற்பட்டிருந்த முரண்பாடு தற்காலிகமானதே. அதனால்தான் சாமியும் இந்த 18 ஆண்டுகளில் தான் போட்ட வழக்கின் மீது அம்மா கும்பல் வாய்தாக்களின் பேரில் சிறுநீர் கழித்த போதும் அதை பன்னீர் என்று உச்சிமோந்து அதிமுகவின் கூட்டணியிலேயே ஓட்டுக் கேட்டார். இந்த தரங்கெட்ட தரகன் இன்று எச்சிலொழுக நான்தான் கிழிச்சேன் என்று ஊளையிட்டாலும் அப்படி ஒரு பெருமையை பாஜகவோ இல்லை மோடியோ விரும்பவில்லை.
கடைசி வரை போயஸ் தோட்டத்தின் வாசலில் ராப்பிச்சைக்காரனைப் போல் நின்ற பொன்னாரை அம்மா பீச்சாங்காலால் எத்தி விட்ட பின் வேறு வழியின்றித் தான் காவி கோஷ்டியினர் பூணூலை உருவிக் கொண்டு பெருமாள் கோயில் உண்ட கட்டியாவது கிடைக்காதா என்று கேப்டனிடம் ராப்பிச்சை கேட்டார்கள். ‘உத்தமர்’ வாஜ்பாயின் தலைமையில் பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவர்கள் அனைவரும் சென்னை வரும்போதெல்லாம் போயஸ் தோட்டத்து அம்மனிடம் ஆசி வாங்கிச் சென்றதையும் வரலாறு பதிந்து வைத்திருக்கிறது.
அம்மாவை பகைத்துக் கொண்டால் திருநெல்வேலி ஊரே காணாமல் போய்விடும் என்பது சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காவிகள் கற்றுக் கொண்ட பாடம்.
காவி கும்பலே வெட்கப்படுமளவுக்கு ‘பாட்டாளிகளின்’ கட்சியான தாபா கட்சியும், காரத் கட்சியும் போயஸ் தோட்டத்திற்கு 5 வருடத்திற்கு ஒரு முறை விரதம் இருந்து பாதயாத்திரை போய் கால், அரை சீட்டு பஞ்சாமிருதம் வாங்கியதும் கூட வரலாற்றின் பக்கங்களில் சிரிப்பதற்காக விட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த பிச்சை பஞ்சாமிர்தமும் கடைசி தேர்தலில் கிடைக்கவில்லை எனும் போது ஆதித்யா சேனலில் வடிவேலுவின் டிஆர்பி ரேட்டிங்கை தாபாவின் டிஆர்பி ரேட்டிங் தகர்த்தெறிந்தது.
தாபா கட்சியின் தேசிய செயலரான டி.ராஜா, பெங்களூரு தீர்ப்பை ஒட்டி தந்தி டி.வி நிருபரிடம் திருவாய் மலர்ந்ததை பார்த்தால் புத்தரே கொடு வாளினை எடுத்துக் கொண்டு தாபா கட்சி ஆபிசுக்கு சென்று விடுவார்.
அதாவது பதினெட்டாண்டு காலம் வழக்கு நடந்தது, வேறு வேறு மாநிலங்களுக்குப் போனது, வேறு வேறு நீதி மன்றங்களுக்கு மாறியது, மேல் முறையீடுகள் நடந்தது என்றெல்லாம் பீடிகை போட்ட டி.ராஜா, தற்போது சட்டம் தனது கடமையைச் செய்துள்ளது என்று யாருக்கும் தெரியாத உண்மையை போட்டு உடைத்தார். டி.ராஜாவிடம் தொடர்ந்து பேசிய தந்தி நிருபர், தீர்ப்பின் விளைவாக ஏற்படவுள்ள அரசியல் அணிசேர்க்கையின் மாற்றங்கள், எதிர்கால கூட்டணிக் கணக்கு வழக்குகள் குறித்த கேள்விக்கு சட்டென உள்ளே புகுந்த டி.ராஜா “ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டவர் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்பது தனது கருத்தல்ல என்றும், அது சட்டத்தின் கருத்து” என்றாரே பார்க்கலாம்.
“அடிச்சாலும் புடிச்சாலும் அண்ணன் தம்பி நீயும் நானுண்டா” என்ற கோலிவுட்டின் கோமாளி ஸ்டார் ரஜினிகாந்தின் தத்துவத்தின் படி டி ராஜாவின் வார்த்தையை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது அம்மாவை தண்டிக்க வேண்டுமென்று தாபா கட்சி கோரவில்லை, கோரியதில்லை, கோரப்போவதில்லை. அடுத்த தேர்தலில் பஞ்சாமிர்தம் கிடைக்காது என்றாலும் அதன் மணம் வீசும் காலி டப்பாவாவது கிடைக்க வேண்டுமென்ற ஆதங்கமே டி ராஜாவின் வாயில் அத்தனை எச்சரிக்கையுடன் வெளிப்படுகிறது.
தொலைக்காட்சி விவாதங்களில் – தங்கள் சொந்த குடும்ப தொலைக்காட்சிகளில் நடக்கும் பாதுகாப்பான விவாதங்களில் கூட – கருத்து சொல்லும் தி.மு.கவினரோ தங்களது அரசியல் ஆதாயத்துக்காகக் கூட இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் துப்பற்றவர்களாக நிற்கிறார்கள். அவ்வாறு பயன்படுத்திக் கொள்வதை அவர்கள் தலையின் மேல் தொங்கிக் கொண்டிருக்கும் 2ஜி வழக்கே தட்டி வைப்பது ஒரு புறமிருக்கட்டும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுகவை குப்பறத் தள்ளி வெற்றிபெற்றிருக்கும் ஜெயாவை எதிர்த்து நிற்கும் தார்மீக நெறியோ, அரசியல் கடப்பாடோ, மக்கள் நலனோ கருணாநிதி கட்சிக்கு இல்லை. அதனால்தான் தாக்குதல் நிலையில் இந்த தீர்ப்பை கொண்டாட முடியாததோடு, தற்காப்பு நிலையில் கூட அவர்களால் பேசவோ, நடமாடவோ முடியவில்லை.
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயா கும்பலின் சார்பில் அதிமுக ரவுடிகள் தமிழகம் முழுவதும் திமுக அலுவலகங்களை தாக்கி, கருணாநிதி கொடும்பாவிகளை எரிக்கிறார்கள். நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி வழக்கு போட்டவனை நீதிமன்றத்திலேயே போட்டு கதற கதற அடிப்பதை எங்கேயாவது பார்க்க முடியுமா?
தி.மு.க சார்பு ஊடகங்களான சன் மற்றும் கலைஞர் தொலைகாட்சியினர் நெருப்புக் கோழி பூமிக்குள் தலையைப் புதைத்துக் கொள்வதைப் போல சொத்துக் குவிப்பு வழக்கின் அலுப்பூட்டும் வரலாற்று விவரங்களில் தங்களது மூளைகளைப் புதைத்துக் கொண்டிருக்கின்றனர். பாதுகாப்பான புதைப்புதான்.
திமுகவின் செய்தி ஊடகங்களுக்கு எதிர்வரிசையில் நடுநிலை வரிசையாக ஃபிலிம் காட்டும் ஊடகங்களின் யோக்கியதை என்ன?
அம்மாவின் பிய்ந்த செருப்புகளாக அணிவகுக்கும் புதிய தலைமுறை தந்தி தொலைக்காட்சியினரோ தமிழின் ‘ங’ எழுத்தே நாணிக் கோணும் அளவுக்கு வளைந்து நெளிகிறார்கள். பாரிவேந்தர் மற்றும் சிவந்தி வகையறா மறத்தமிழன்களின் மானங்கெட்டத்தனத்தை விரிவாக எழுத விரல் கூசுவதால் ஒரு சில தெறிப்புகளை மட்டும் பார்க்கலாம்.
ஜெயலலிதா மீதான் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டதாக ஆங்கில சேனல்களில் செய்தி வெளியாகிக்கொண்டிருக்கும் போது தந்தி டிவியின் ரங்கராஜ் பாண்டேவோ, அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தான் அவ்வாறு தெரிவிக்கின்றன என்று ஆரம்பித்து பின்னர் ”குற்றம் நிரூபிக்கப்பட்டடதாக நீதிமன்ற வளாகத்தில் பேசிக்கொள்கிறார்கள்” என நகர்ந்து இனி சொல்லியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் வந்த பின் “குற்றம் நிரூபிக்கப்பட்டிருப்பதாக பிடிஐ செய்தி தெரிவிக்கிறது” என்று நெளிந்தார்.
இந்த பதிவு எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் போது அதிமுக காலிகள் தமிழகம் முழுவதும் வன்முறையை கட்டவிழ்த்துள்ளனர். பேருந்துகள் கொளுத்தப்பட்டுள்ளன. கடைகளை அடைக்கச்சொல்லி வன்முறைசெய்கிறார்கள் அதிமுக குண்டர்கள். தந்தி டிவியின் ரங்கராஜ் பாண்டேவோ தமிழகமெங்கும் ”அதிமுகவினர் போராட்டம்”,” “மக்கள் தங்களாகவே நடமாட்டத்தைக் குறைத்துக் கொண்டனர்”, என்று கூறி வன்முறை கும்பலை நியாயப்படுத்துகிறார். புதிய தலைமுறையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் அய்யநாதன் வன்முறையில் ஈடுபடுகிறவர்கள் அதிமுகவினரின் போர்வையில் காலித்தனம் செய்யும் சமூகவிரோதிகளாகவும் இருக்ககூடும் என்று ஈழத்தாயின் தவப்புதல்வர்களுக்கு நற்சான்றிதழ் கொடுக்கிறார்.
18 நெடிய ஆண்டுகளில் நைந்து போன சட்டத்தின் உதவியுடன் ஜெயா கும்பலை தண்டிக்க முடியாது, சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியாது, அதிமுக எனும் பாசிச கட்சியை தடை செய்ய முடியாது என்பதையெல்லாம் இந்த தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது. அதனால்தான் ஜெயா கும்பல் தமிழகம் முழுவதும் நடத்தி வரும் வன்முறை வெறியாட்டங்களை இதே சட்டமும், சட்ட ஒழுங்கும் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது.
சட்டப்படி பாசிச ஜெயா கும்பலை தண்டிக்க முடியாது என்றும், இந்த கும்பலின் சொத்துக்களை மக்கள் பறிமுதல் செய்து தண்டிக்க வேண்டுமென்றும் மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்புகள் 96-ம் ஆண்டில் போராட்டம் நடத்தின. தமிழகமெங்கும் அதிமுக ரவுடிகளோடு எமது தோழர்கள் மோதினார்கள். பெருநகரங்களெங்கும் அதிமுகவின் பொறுக்கி தளபதிகளின் பெயரை பொதுச் சுவர்களில் எழுதி மக்களை தட்டி எழுப்ப முயன்றோம். இதன் முத்தாய்ப்பாக ஜெயா-சசி கும்பலுக்கு சொந்தமான தஞ்சை வினோதகன் மருத்துவமனையை கைப்பற்றும் போராட்டம் நடைபெற்று பல தோழர்கள் தடியடி பட்டு சிறை வைக்கப்பட்டனர்.
இந்த வகைப்பட்ட போராட்டங்களின் தேவை இன்றைக்கும் இருக்கிறது என்பதை இந்த தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது.
நன்றி! காலம் நேரம் பார்க்காமல் சிறப்பு கட்டுரை வெளியிட்டதற்கு…..
மிக நீண்டதாக கட்டுரை இருக்கிறது. இன்னும் சற்று குறைத்து கருப்பொருளை விட்டு விலகாமல் செய்தீர்களானால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
//புதிய தலைமுறையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் அய்யநாதன் வன்முறையில் ஈடுபடுகிறவர்கள் அதிமுகவினரின் போர்வையில் காலித்தனம் செய்யும் சமூகவிரோதிகளாகவும் இருக்ககூடும் என்று ஈழத்தாயின் தவப்புதல்வர்களுக்கு நற்சான்றிதழ் கொடுக்கிறார்.//இ ப்பிடி சொல்ல அய்யனாதன் என்பவர் அறியா குழந்தையா, சில இடங்களில் போலிஸே போக்குவரத்தை நிறுத்தி ஜெயா அரசுக்கு தன் விசுவாத்தை காட்டியது அதிமுக பொருக்கிகள் கிடைக்கும் காசுக்காக கூச்சலிடுகிறது போலிஸும் கண்டுக்காம விடுது ஜெயா சசி கும்பலுக்கு 120 கோடி அபராதம் எல்லாம் சும்மா ஜுஜுபி 25 நாள் போதும் அந்த பணத்த கொள்ளை அடிக்க……..
இந்தத் தீர்ப்பை எப்படிப் புரிந்து கொள்வது என்று குழம்பியவர்களுக்கு, தெளிவு ஏற்படுத்தும்வண்ணம் எழுதப்பட்ட அருமையான கட்டுரை.
//சட்டப்படி பாசிச ஜெயா கும்பலை தண்டிக்க முடியாது என்றும், இந்த கும்பலின் சொத்துக்களை மக்கள் பறிமுதல் செய்து தண்டிக்க வேண்டுமென்றும் மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்புகள் 96-ம் ஆண்டில் போராட்டம் நடத்தின. தமிழகமெங்கும் அதிமுக ரவுடிகளோடு எமது தோழர்கள் மோதினார்கள். பெருநகரங்களெங்கும் அதிமுகவின் பொறுக்கி தளபதிகளின் பெயரை பொதுச் சுவர்களில் எழுதி மக்களை தட்டி எழுப்ப முயன்றோம். இதன் முத்தாய்ப்பாக ஜெயா-சசி கும்பலுக்கு சொந்தமான தஞ்சை வினோதகன் மருத்துவமனையை கைப்பற்றும் போராட்டம் நடைபெற்று பல தோழர்கள் தடியடி பட்டு சிறை வைக்கப்பட்டனர்.//
வினவு தோழர்களே,
96-ல் பாசிச ஜெயாவிற்கெதிரான ம.க.இ.க. தோழர்களின் போர்க்குணமிக்க போராட்டங்களைப் பற்றிய பதிவுகளையோ, பு.ஜ, பு.க கட்டுரைகளையோ வாய்ப்பிருந்தால் வெளியிடவும்.
நன்றி.
சரியான கட்டுரை. ஒரு சந்தேகம், ஒரு பார்ப்பன பாசிஸ்ட் ஜெயாவை, அவர்களுக்கென்றே சேவை செய்யும் நீதிமன்றம் எப்படி தண்டிக்க முடிந்தது.
குஜராத் படுகொலையைத் தண்டிக்காத நீதிமன்றமும், இந்த விசயத்தில் இப்படி நடந்துகொண்டதை எப்படி புரிந்து கொள்வது?
அருமையான கேள்வி,
1958ல் டிடி கிருஷ்னமாச்சாரி செய்த ஊழல், சஞஜய் காந்தியின் கிஸ்ஸா-குர்ஸி-கா கேஸ், ரஜிவின் போப்ர்ஸ், ஹ்கேல் பகத், டைட்லர் சீக்கியர்களை படு கொலை செய்தது, நரசிம்மராவின் ஹர்ஷத் மேதா கேஸ், மோதிஜியின் உலக ப்ரபல கோத்ரா படு கொலை, ஜெயேந்த்ர ஸரஸ்வதியின் சங்கர் ராமனின் கொலை மற்றும் பல ஊழல்களும், படு கொலைகளும் ஒன்னுமே செய்யாத நீதித்துரை ஏன் கீழ் சாதிக்கும், பெண்களுக்கு மட்டும் ஜெயில் தண்டனை கொடுக்கிரது என்பதே சரியான கேள்வி.
சிந்தனையை துண்டும் கேள்வி…
ஒருவேளை இவற்றிற்காக இருக்கலாம், சங்கராச்சாரியை கைது செய்தது, வாஜ்பாயி அரசை கவிழ்த்தது, பாப்பத்தியாக இருந்தாலும் தமிழகத்தில் பாஜகவை நிர்மூலமாக்கியது, நீதிபதிகளையே கேவலப்படுத்தியது என பட்டியல் நீளமாக இருக்கிறது.
கூடுதலாக இன்னொரு காரணமும் இருக்கலாம்.ஜெயா வேறு வழிகளை முயற்சி செய்யாமல் தடுக்க ரவி சங்கர் பிரசாத்தை அனுப்பி நம்பிக்கை ஊட்டிய பா,ஜ,க,கடைசியில் அவரை கை விட்டு இருக்கிறது.நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து அரியானாவில் மராட்டியத்தில் தனது பழைய பங்காளிகளை கழட்டி விட்டு தனது தனி செல்வாக்கின் கீழ் அம்மாநிலங்களை கொண்டு வர முயல்வது போல் தமிழகத்திலும் முயற்சிக்கிறது பா.,ஜ,க,
தமிழக மக்கள் தி,மு,க ,அ.தி,மு,க என்று மாற்றி மாற்றி வாக்களித்து பழகி விட்டார்கள்.பா,ஜ,க, தனது முயற்சியில் வெற்றி பெற இந்த இரண்டு கட்சிகளில் ஒன்றை அரசியல் அரங்கிலிருந்து அப்புறப்படுத்தியாக வேண்டும். ஒப்பீட்டளவில் தி,மு,க,வின் வாக்கு வங்கியை கைப்பற்றுவதை விட அ.தி,மு,க வின் வாக்கு வங்கியை கைப்பற்றுவது பா.,ஜ,க, வுக்கு எளிது.அதற்கான நல்வாய்ப்பாக வந்ததுதான் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு.
பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள்
சரியான சந்தேகம் பாஸ்!
chance less article….excellent really excellent …yaar sir eluthanathu ..intha vaaru vaarainga…
/ஜெயாவுக்கு ரூ 100 கோடியும், சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு ரூ 10 கோடியும் அபராதம் விதித்திருக்கிற நீதித்துறை இந்த கும்பலின் பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை தொடர்ந்து வைத்திருக்க ஆசி அளித்திருக்கிறது./
பறிமுதல் செய்யப்படுவதாக தீர்ப்பு விவரம் உள்ளது! சரி பார்க்கவும்! அடுத்து வருமானவரி வழக்கிலும் இந்த தீர்ப்பின் தாக்கம் எதிர் பார்க்கலாம்! பாரத திருநாட்டில் ஒரு நீதிபதியாவது பணபலம், அதிகார பலம் இவற்றுக்கு அஞ்சாமல் இருக்கிறாரே! அதை பாராட்டி இருக்கலாம்! அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பின் வந்த, மக்க்ளுக்குநீதிமன்றங்களின் மேல்நம்பிக்கை உண்டாக்கும், வரலாறு படைத்த தீர்ப்பை பாராட்டியிருக்கலாம்!
உண்மைதான் .மைக்கேல் டி குன் கா பணத்திற்கும் மசியவில்லை, மிரட்டலுக்கும் பயப்படவில்லை.விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய மிக சிறுபான்மையாக இருக்கும் நேர்மையான நீதிபதிகளில் ஒருவராகத் தெரிகிறார்.உயர்நீதி ,உச்சநீதி மன்றங்களில் இவரைப் போன்றவர்கள் இருக்கவேண்டும்.
//ஊழல் வழக்குகளில் இத்தகைய ஓரிரண்டு நம்பிக்கையை காட்டினால்தான் ஆளும் வர்க்கம் ஊழலுக்கு எதிரான மக்களின் நம்பிக்கையை தக்க வைக்கவும் முடியும்.//
இனிமேல் நம்பிக்கை வைக்க என்ன இருக்கிறது? அம்மா உயர்நீதி மன்றத்திலோ, உச்சநீதி மன்றத்திலோ தடையாணை பெற்றுவிடக்கூடும்! ஆனால் அந்த பிழைக்கத் தெரியாத நீதிபதியைத்தான் அய்யொ பாவம் என் கிறார்கள்! அதிமுக வினர் தங்கள் வன்முறையின் மூலமே தீர்ப்புக்கு நல்ல பப்ளிசிடி கொடுத்தார்கள்!
தக்க தருணத்தில் தந்த தகவலுக்கு நன்றி. புதிய தலைமுறை தொலைகாட்சியில் நேற்று முழு நாள் நடைபெற்ற விவாதத்திலும் இன்று காலை ஒலிபரப்பிய புதுப்புது அர்த்தங்கள் நிகழ்சிசியிலும் – அய்யநாதனும் ஹெச் ராஜாவும் தொலைக்காட்சியில் நடிக்க வந்துள்ள கதாப்பாத்திரங்கள் போன்றே தமது நடிப்பபை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஒரு கல்யாண கதகேளு ….. எனும் மகஇக பாடல் இணைத்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும் .
அருமையான அலசல். பதிவு அருமை !
இந்த தீர்ப்பு வரவேற்க வேண்டிய ஒன்று என்பட்தில் சந்தேகம் இல்லை ஆனால் ஒரு குற்றவாளி இந்த 18 ஆண்களில் சுதந்திரமாக செயல்படவும் தமிழக முதல்வராகவும் இருக்க முடிந்தது ஆனால் குற்றம் செய்யாத (குற்றம்நிருபிக்ககபடவில்லை என்று விடுதலை செய்யப்பட்ட) அப்பாவிகளை விசாரணை என்ற பெயரில் பல ஆண்டுகள் ஜெயிலில் அடைத்து சித்திரவதை செய்து அவர்களின் இளமைக்காலம் முழுவதையும் அழித்த கயவர்களை என்ன செய்வது?
இது தான் (இந்)தீய அரசியல்…
மிகச் சிறப்பான பார்வை. அரசியலை எப்படி அணுக வேண்டும் என்ற தெளிவான விளக்கம். மிக நன்று. கோபம் பல இடங்களில் தெரித்தாலும் நியாயமானதாகவே படுகிறது. கட்டுரையின் சாரம் நம் சனநாயகத்தின் கேவலத்தை பறைசாற்றுவதாக உள்ளது. காத்திரமான கட்டுரை.
very good article.
தீர்ப்பை வரவேறேக என்ன உள்ளது உழைகை்கும் மக்களின் வாழ்வை கேளே்வி குறியாக்கியவர் வெறெும் இலஞ்ச வழக்குகாக விசாருனை செயெது மாபெரெும் வரலாற்றையைா படைதை்தார்கள் அம்மையைாரால் வாழ்விழந்த பல லட்சம் மக்கள் உண்ண உணவினறி அம்மாா உணவகத்தில் திரண்ட கூட்டத்தை பார்தாலே தெரெியும் சாதனை இதற்கி எந்த நீதி மன்றம் தீர்ப்பு வழங்கு்ம்?
/…அப்பாவிகளை விசாரணை என்ற பெயரில் பல ஆண்டுகள் ஜெயிலில் அடைத்து சித்திரவதை செய்து அவர்களின் இளமைக்காலம் முழுவதையும் அழித்த கயவர்களை என்ன செய்வது?…/
நல்லம்மநாயுடு போன்ற நேர்மையான விசாரணை அதிகாரிகளும்,நீதிபதி குன் கா போன்ற,நேர்மையும் துணிச்சலும் பெற்றவர்கள் சிலரே! அம்மாவின் பணபலமும், அதிகாரபலமும் , அக்கிரகார பலமும் இவர்களிடம் எடுபடவில்லை! அரசு வக்கீல் எப்படி வழிக்கு வந்தார், எப்படி அதிக பட்ச தண்டனையை கோரினார் என்பது புதிர்! சுரங்க ஊழல் வழக்கிற்கு அடுத்து நீதித்துறைக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு இது! தீர்ப்பிற்கு பிறகு தமிழ்னாட்டில், சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட தவறிய காவல்துறை ஆளும் கட்சி ரவுடிகளின் ஏவல் துறையானது அம்பலப்பட்டு போனது!
இது ஒரு மொக்கையான தீர்ப்புதான்.கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுக்கணக்கில் சேர்க்க வேண்டும். குற்றவாளிகள் நால்வரைத் தவிர சசிகலா கணவன் நடராசன்,உள்ளிட்ட மன்னார்குடி மாபியா கும்பலில் உள்ள அனைவரையும் விசாரித்து கொள்ளை அடித்து குவித்து வைத்துள்ள சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். ஜெயாவின் ஆலோசகரும்,டுபாக்கூர் கம்பெனிகளின் இயக்குனராக செயல்பட்ட துக்ளக் சோவையும் விசாரிக்க வேண்டும்.ஒரு குற்றவாளி ஆட்சியில் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் மீளாய்வு செய்து தேவையற்றதை நீக்க வேண்டும்.டான்சி வழக்கில் மனசாட்சி படி பரிகாரம் தேடிக்கொள்ள சொன்ன பஞசகச்ச மன்றத்தில் மோடியின் துணையுடன் மீண்டுவருவார் என நம்பலாம்.
இந்த பதிவு தத்துவார்த்த நோக்கில் சரியான திசையில் அலசப்பட்டுள்ளது.ஆனால் யதார்த்தத்தை கருத்தில் கொண்டல்ல.நிலவுகின்ற சட்ட அமைப்பில் உள்ள குறைகளை சுட்டி இது முழுமையான தீர்ப்பல்ல என்பதை விளக்கி ஒரு முழுமையான மக்கள் ஆட்சியில் தவறு செய்தவர்கள் இவ்வாறெல்லாம் தண்டிக்கப் படவேண்டும் என்கிற அளவில் எழுதப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.முதலில் நிலவுகின்ற சட்ட அமைப்பில்,அதனூடே நிலவும் ஊழல் முறைகேடுகளில் சிக்கித் திணறும் ஒரு நீதிமன்ற சூழலில்,சகல அதிகாரம் பெற்ற ஒரு நபருக்கு எதிராக இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதியை ஒரு வரி பாராட்டலாம்.அதனால் வினவின் தரத்திற்கு குறைவு எதுவும் வந்து விடாது.நாம் விரும்பும் படியெல்லாம் “சட்டத்தின் உதவியுடன் ஜெயா கும்பலை தண்டிக்க முடியாது, சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியாது, அதிமுக எனும் பாசிச கட்சியை தடை செய்ய முடியாது” என்பதால் தான் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு மட்டும் எழுதப் பட்டுள்ள சட்டத்தின் படி தண்டனை அறிவித்துள்ளார் நீதிபதி. இது தான் நீங்கள் குறிப்பிடும் மொக்கை தீர்ப்பு அவருடைய யதார்த்தத்தில் சாத்தியம். நான் படித்து தெரிந்து கொண்டவரையிலும் அவர் சட்டத்தின் மொழியில் எழுதிய தீர்ப்புகளை மேல் நிலை நீதிமன்றங்களில் மாற்ற இயலாது என்பதே. அந்த வகையில் இந்த தீர்ப்பும் அப்பீலிலும் உடைக்க இயலாமல் இருக்கட்டும்.இன்னொரு முரணாக நான் கருதுவது இரண்டு சட்ட வெற்றிகளை இரு வேறு விதமாக பார்க்கிற பார்வை.தில்லைக் கோயிலை தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப் பட்ட வழக்கின் தீர்ப்பு வந்த போது ” தமிழுக்கென்று உயிரையும் கொடுப்போமென வெற்றுச் சவுடால் அடிக்கும் திராவிட, தமிழினவாதிகள் இத்தனை ஆண்டுகள் செய்ய முடியாத செயலை புரட்சிகரக் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் செய்திருக்கிறோம். கம்பீரமாக இந்த வெற்றியை அனைவருக்கும் அறிவித்து கொண்டாடுமாறு தோழர்களையும்,பதிவர்களையும்,வாசகர்களையும் கேட்டுக் கொள்கிறோம்” என்றெல்லாம் பரவசத்துடன் எழுதியது போல எழுத முடியாதது ஏன்? முன்னது உங்களால் ஈட்டப் பட்ட வெற்றி. இது அப்படியல்ல என்பது தவிர என்ன வித்தியாசம்?முன்னதில் எப்படி ம உ பா மையம் மூன்றாவது தரப்பாக இருந்து அரசு தரப்பை வலுப்படுத்தி அந்த தீர்ப்பின் வெற்றியில் பெரும்பங்கு வகித்ததோ அதே விதமாக இந்த வழக்கிலும் தி மு க மூன்றாவது தரப்பாக இருந்து அரசு தரப்பை வலுப்படுத்தி இருக்கிறது. தி மு க தனது அரசியல் எதிரியை ஒழிக்க காட்டிய உறுதியை சமச்சீர் கல்வி,தில்லை கோவில் வழக்கு போன்ற மக்கள் பிரச்சினைகளில் காட்ட வில்லை என குறைபட்டுக் கொள்ளலாமே தவிர இந்த வழக்கில் அவர்கள் பங்கை குறைத்து மதிப்பிட முடியாது. அவர்களின் தார்மீக தகுதி(அவ்வளவு நல்லவங்களா அவங்க?!) மற்றும் வாக்காளர்களின் மன ஓட்டமறிந்து இந்த வெற்றியை அவர்கள் வெளிப்படையாக கொண்டாட முடியவில்லை என்பதே சரி.
Well said Rajan !
2002 குஜராத் படுகொலையையும், இந்துத்துவப் பார்ப்பன பாசிசத்தையும் எதிர்த்து மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புரட்சிகர அமைப்புகள் இணைந்து தஞ்சையில் 2003 ஆம் நடத்திய “பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்” டில் பார்ப்பன பாசிஸ்டு ஜெயலலிதாவை எதிர்த்து ம.க.இ.க மையக்கலைக்குழு தோழர்கள் பாடிய பாடல்.
நிச்சயமாக இந்த தீர்ப்பின் அடிபடையில் ‘கருணாநிதி & மோடியின்’ கூடு சதி உள்ளது.
இனி கொஞ்சம் கொஞ்சமாக உண்மை தெரிய வரும்.
இந்தியாவில் உள்ள பத்திரிக்கைகள் எல்லாம் மோடி & கோ கையில் உள்ளதால், உண்மை உலகுக்கு தெரிய சற்று காலம் செல்லும்.
தீர்ப்பு சொல்லும் செய்தி: இதுவரை அரசியல் வாதிகள் யாரும் ஊழலே செய்யவில்லை என்பதே. சிவில் வழக்கில் இது கொஞசம் ஓவெர் அடாவடி. 176000 கோடி என்னவாயிற்று. நிலக்கரி ஊழல் என்னவானது. தவறு செய்வது மனித இயல்பு. திருந்திய நல்லவனையும் சட்டம் தண்டிக்கக் கூடும். கட்டுரை எழுதியவருக்கு என்ன கோபமோ? சிலநேரம் நம்முடைய இயலாமை மற்றவரை இகழத் தூண்டும். நாம் கட்டுப் படுத்திக் கொள்ள வேண்டும் என்பது என் கருத்து.
2002 குஜராத் படுகொலையையும், இந்துத்துவப் பார்ப்பன பாசிசத்தையும் எதிர்த்து மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புரட்சிகர அமைப்புகள் இணைந்து தஞ்சையில் 2003 ஆம் நடத்திய “பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்” டில் பார்ப்பன பாசிஸ்டு ஜெயலலிதாவை எதிர்த்து ம.க.இ.க மையக்கலைக்குழு தோழர்கள் பாடிய பாடல்
ஜெயலலிதா அடிப்படையில் ஒரு பெண். அதுவும் சினிமாவில் ”கவர்ச்சிக்கன்னி” யாக வலம் வந்த ஒரு பெண். அவரது தனிப்பட்ட வாழ்க்கை சோகங்களும் துரோகங்களும் நிறைந்த ஒன்று. தன் சொந்த வாழ்க்கையில் யார் யாரையோ நம்பி மோசம் போனவர். தனக்கென கணவன், குழந்தைகள், குடும்பம் என எதுவும் வாய்க்கப்பெறாத துரதிர்ஷடசாலி. ஆணாதிக்கம் மிகுந்த இந்திய சமூகத்தில் இம்மாதிரியான பெண்கள் (என்ன தான் பார்ப்பன சாதியை சேர்ந்தவராக இருந்தாலும்) பொதுவாழ்க்கையில் மேலே வருவது மிகவும் கடினம். பல வகையில் பலரிடம் அவமானப்பட்டும் சீரழிந்தும் தீர வேண்டும். தன் மீது எத்தனையோ பேர் புழுதி வாரி தூற்றியிருப்பதாகவும் தான் நெருப்பாற்றில் நீந்தி வந்ததாகவும் இவரே பலமுறை கூறியிருக்கிறார். இவற்றால் ஏற்படும் விரக்தியும் ஆத்திரமும் தான் பொது வாழ்க்கையில் ஜெயலலிதா நடத்தி வரும் தான் என்னும் அடாவடி ஆணவ அரசியல், ஊழல் மற்றும் அராஜகங்களுக்கு முக்கிய காரணம். உயர் மட்டங்களில் இருக்கும் அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினர், ஊடகத்துறையினர் உட்பட பலரின் பகையையும் தன் குண இயல்பால் எளிதாக தேடிக்கொண்டவர் இவர். இருந்தாலும் தமிழகத்தில் வாழும் அனைத்து தரப்பு மக்களிடமும் பரவலாக ஜெயலலிதா மீது இப்போதும், இத்தனை நடந்த பின்னரும், பரிவு உண்டு. தாழ்த்தப்பட்ட மக்கள் கூட ஜெயலலிதாவை ”சீரழிந்த பொம்பளை” யாகத்தான் இப்போதும் கருதுகிறார்கள். அதனால் தான் ஓட்டு போட்டு தொலைப்போம் என இந்த அம்மையாருக்கு ஓட்டு போடுகிறார்கள். இந்த இரண்டரை ஆண்டுகளாக நடக்கும் இவர் ஆட்சியில் முன்பு போல் பெரிய அளவில் ஊழலும் அராஜகமும் நடந்ததாக தெரியவில்லை.
தீர்ப்பளித்த நீதிபதி ஜான் குன்கா நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர். நேர்மையாகவும் தைரியமாகவும் தீர்ப்பளித்திருக்கிறார். இது இந்திய அரசியல் மற்றும் நீதித்துறை சூழ்நிலையில் அரிதானது. ஆனால் ஜெயலலிதாவுக்கு இரண்டாண்டுகள் மட்டும் சிறை தண்டனை கொடுத்திருக்கலாம். எம்.எல்.ஏ பதவி கூட போகும் அளவுக்கு நான்காண்டுகள் கொடுத்திருக்க தேவையில்லை. முதல்வர் பதவியில் இருக்கும் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் என்பதே பெரிய அடி தான். பெரிய அவமானமும் கூட. சசிக்கலாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வேண்டுமானால் அதிக ஆண்டுகள் தண்டனை வழங்கி இருக்கலாம். ஜெயலலிதாவுக்கே நான்கு ஆண்டுகள் என்றால் கருநாநிதி கும்பலுக்கு எத்தனை ஆண்டுகள் கொடுத்தால் தகும்?. அவர்களுடைய குடும்ப அராஜகமும் ஊழல்களும் இவர்களுடையதை விட பல மடங்கு அதிகம். சர்க்காரியா காலத்திலிருந்து நடந்து வருபவை. அதுவும் விஞ்ஞான முறைப்படி வேறு. அதற்கு நாற்பது ஆண்டுகள் தண்டனை கொடுத்தாலும் போதாது.
ஜெயலலிதாவுக்கு கிடைத்த சிறைவாசத்தின் பின்னணியில் காவிரி நதிநீர் சார்ந்த அரசியலும் இருப்பதாக கருதுவதற்கு இடமுண்டு. கர்நாடகத்தில் இப்போது தசரா விடுமுறை காலம். காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினையில் கர்நாடக அரசியல்வாதிகளை ஜெயலலிதா மாதிரி வெறுப்பேற்றிய தமிழக அரசியல்வாதி யாரும் இல்லை. மேலும் தமிழகத்தில் திராவிட கட்சிகளை ஒட்டு மொத்தமாக ஒழித்துக்கட்டி தேசியக்கட்சிகளை திணிக்க இந்திய அளவில் சதி நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.
////ஜெயலலிதாவுக்கே நான்கு ஆண்டுகள் என்றால் கருநாநிதி கும்பலுக்கு எத்தனை ஆண்டுகள் கொடுத்தால் தகும்///
இதையெல்லாம் வினவுவிடம் கேட்காதீர்கள். கருணாநிதிக்கு வினவு மிகவும் வேண்டியவர். அதனால்தான் கருணாநிதியின் குடும்பத்தைப்பற்றி எதுவும் எழுதுவதில்லை. எதனை லட்சம் கோடி சொத்துக்கள் கருணாநிதி மற்றும் இவரின் குடும்பத்திற்கு உள்ளது எனபதை உலக அளவில் பெரிய ஆடிட்டர் கூட கணக்கிடமுடியாது. யாராவது சோற்றுக்கு இல்லாத பார்பனன் கிடைத்துவிட்டால் விளாசி தள்ளுவார்கள்.
Kalaingar family members and relation and DMK members relations are staying in usa and other forein countries with all facilities. and sorry to say they are all with out any legal income. how is it? who sponsor them???
இது ஜெயாவின் சட்டவிரொதமாக குவிக்கப்பட்ட சொத்து பற்றிய வழக்கு-அதற்கான தீர்ப்பு பற்றிய கட்டுரை! இதில் கருணானிதியை ஏன் இழுக்க வேண்டும்? 2ஜி பற்றி ஏற்கனவே வினவு கவர் செய்திருக்கிறது! ஒரு குற்றவாளி தண்டிக்கப்பட்டிருக்கிறார், நாட்ராயனுக்கு வயிற்றெரிச்சல் வரக்காரணமென்ன?
கருணானிதியின் மீது எந்த வழக்கும்நிலுவையில் இல்லை.அவரின் கட்சிக் காரர்கள், அவரின் குடும்பத்தினரின் மீது வழக்குநீதி மன்றத்தில்நிலுவையில் உள்ளது.இன்னும் குற்றவாழியென்று அறிவிக்கப் படவில்லை.அப்படி அறிவிக்கும் போது அவர்கள் பற்றி எழுதலாம்.அவர்கள் சொத்து பற்றி எழுதலாம்.அதை விடுத்து கற்பனையாக அவர்களை விமரிசிப்பது,உங்களது வக்கிறமான உயர் சாதிய மன்ப் பான்மையே. ஜெயலலிதாவின் மீது வருமான வரித்துறை வழக்கும் உள்ளது.கருணானிதியின் வருமான வரித் துறை வழக்கும் இல்லை.கருணானிதிக்கு பரம் விரோதிகளான பார்ப்பனர்களின் ஆதிக்கம்நிரைந்த வருமான வரித் துறை அவரைச் சும்மா விட்டிருக்குமா? கருணானிதியின் உறவினரின் சொத்துப் பற்றி உஙளால் கற்பனையாகத்தான் பேச முடிகிறது.அதிகாரப் பூர்வமாக அறிவிப்பு வரும் வரை காத்திருக்கலாமே.ஆனால் ஜெயாவின் மீது குற்றமும் சுமத்தப் பட்டு, தீர்ப்பு வந்தநிலையிலும் அவரைஅப் புனிதவதியாக காட்டநினைப்பது,கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பது போல், குற்றவாளிகளே, குற்றவாழிகளைக் காமுறுவர்.
இந்த தமிழ்த்தேசியர்கள் தொல்லை தாங்க முடியவில்லை. காவிரி பிரச்சினையில் அம்மா உறுதியுடன் போராடியதால் பழிவாங்கப்பட்டார் என்று கூசாமல் பொய் பேசித் திரிகிறார்கள். காவிரிக்கும், பெங்களூருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. காவிரி பிரச்சினை மைசூர், மாண்டியா பகுதி மக்களின் பிரச்சினை மட்டுமே.
ஜெயலலிதா முந்தைய காலம் போல இப்போது இல்லை என்பதும் தவறானது. முதல் ஐந்தாண்டு ஆட்சியிலிருந்து கடந்து போன இந்த பதினைந்து வருடங்களில் அவரிடம் தெரியும் முதிர்ச்சி தனது அடிப்படை குணத்தை மாற்றாமல் அதிகாரத்தில் நிலைத்திருப்பது குறித்த பக்குவ அறிவு தான். அவர் மாறவில்லை. முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு என்று அவ்வப்போது அவர் தனது குணத்தை காட்டிக் கொண்டு தான் இருக்கிறார்.
இந்துத்துவ சக்திகள் முதலில் திமுகவை வீழ்த்தி அந்த இடத்தை கைப்பற்ற துடித்துக் கொண்டிருந்தன. ஜெயலலிதா சிக்கியதை அடுத்து இப்போது புதிய கோணத்தில் சிந்திக்கின்றன. தமிழகத்தின் புதிய அரசியல் மாற்றம் பா.ஜ.கவுக்கு உதவும் என்று வெளிப்படையாகவே ஹெச். ராஜா ‘புதிய தலைமுறையில்’ தெரிவித்தது நினைவு கூரத்தக்கது.
கனிமொழி, அ. ராசா வழக்குக்கும் ஜெயலலிதா தண்டனை பெற்ற வழக்குக்கும் அடிப்படை வித்தியாசம் உண்டு. இந்திய ஆளும்வர்க்கத்தின் பெரும் கொள்ளைக்கு உதவும் வகையில் ஏற்கனவே இருந்த இந்திய ஆட்சி நிர்வாகத்தை குறிப்பிட்ட கார்ப்பரேட்களுக்கு சலுகை காட்டியதன் பலனை கொண்டது, முந்தையது. ஜெயலலிதா மீதான வழக்கு ஒரு கார்ப்பரேட் கொள்ளைக்காரியாக தானே வடிவமெடுத்து முழு பங்கையும் சுருட்டிக் கொண்டது.
ஜெயலலிதா பற்றிய சாதகமான பாத்திர ஆய்வை ஒவ்வொரு குற்றவாளிக்கும் வழங்க முடியும். அரசியலுக்கு அவர் வராமலிருந்தால் இந்த சாதகப் பார்வைக்கு பாத்திரமானவராக இருக்க முடியும். மக்களிடம் அவருக்கு மகத்தான அனுதாப அலை பொங்கியிருப்பதாக உடனடியாக சொல்ல முடியாது.
@S. Periyasamy, Every thief has a reason or sympathy. As you’ve said Jaya as female might have been ill-treated by the male dominant society. Some one will now say Karunanidhi as a poor youngster or an OBC was ill-treated by the Brahminic hegemony of his times, this led his family to financial mal practices like the 2G, WILL YOU ACCEPT IT ????
Periyasamy Sir, Please stop such stories and be atomic in your views on corruption. Tell everyone… Is Jays is corrupt ???
YES or NO
வழக்கு ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு தொடர்புடையது.காவிரிநதிநீர் தாவாவை இணைத்தது ஒரு உள ஊனமே.ஏதோ ஜெயாவின் செல்வாக்கை ஒடுக்கிவிட்டால் காவிரி தாவா அவர்கள் பக்கம் சாய்ந்துவிடும் என்று அவர்கள்நம்பினார்கள் என்றால், அது வடிகட்டின முட்டாள்தனம்.காரணம் காவிரி தீர்வுக்கு ஜெயலலிதா எந்த அடிப்படைச் செயலையும் செய்யவில்லை.இந்த தாவா கருணானிதியின் காலத்தில்(1971) ஆரம்பித்தது.அப்பொழுது பல்வேறு பேச்சுவார்த்தைகள்நடந்தும் பலனளிக்கவில்லை.தமிழகம் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.பிரதமர் இந்திரா அவர்கள், தானே முன்னின்று தாவவைத் தீர்த்து விடுகிறேன்” என்று கூறி,”வழக்கைத் திரும்பப் பெறக் கூறியதால், கருணானிதி திரும்பப் பெற்றார்.அதன் பின் இந்திராவுக்கும் கருணானிதிக்கும் 1975 இல் அவசர காலப் பிரகடனத்தில் பகைமை மூண்டதால்,கருணானிதிக்கும் இந்திராவிற்கும் உள்ள உறவு துண்டிக்கப் பட்டது.அதனால் காவிரிநீர் தாவவை, அது தமிழக மக்களின் பிரச்சனையென்று பார்க்காது இந்திர கிடப்பில் போட்டார்.அப்பொழுது கருணானிதியின் அரசியல்? எதிரியான எம்ஜியாரும் இந்திராவும் கை கோர்த்தனர்.இருவருக்கும் கருணானிதி ஒழிப்புதான் தலையானதாக இருந்ததே ஒழிய காவிரிநதிநீர் தாவா அல்ல.இப்படித்தான்நதிநீர் தாவாநீர்த்துப் போனது.அதன் பின் எம்ஜியாரும் எந்த முயற்சியும் செய்யவில்லை.தமிழக காங்கிரசார், எம்ஜியாருடன் தேன்நிலவு கொண்டாடிக் கொண்டிருந்தனர்.எம்ஜியாரின் காலத்தில் காவிரிநதிநீர் தாவாவிற்கு அவர் துரும்பைக் கோடக் கிள்ளிப் போடவில்லை.மனம்நொந்து போன காவிரி விவசாயிகள், உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதையும் எம்ஜியார் இறக்கும் வரை சட்டை செய்யவில்லை. 1989 இல் ஆட்சிக்கு வந்த கருணானிதி தமிழக அரசையும் கட்சி சேர்த்து உச்சநீதிமன்றத்தில் வாதாடினார்.வி.பி. சிங் பிரதமராக இருக்கும் போது,கருணானிதி முதல்வராக இருக்கும் போது காவிரிநீர் தீர்ப்பாயம் 1990 இல் அமைக்கப் பட்டது.தீர்ப்பாயத்தின் தீர்ப்பை கர்னாடகா அமுல் படுத்தாதநிலையில், அதன் பின் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா,வாஜ்பாய் அவர்களுடன் கூட்டணி அமைத்து மைய்ய அரசிலும் பங்கு பெற்றார்.அந்த வாய்ப்பைப் பயன் படுத்தாது,வாஜ்பாய் அவர்களின் காலை வாரியும், அவர் ஆட்சிக் கலைப்புக்குக் காரணமுமாயினார்.அதைத் தொடர்ந்து தமிழகத்தில் தி.மு.க.-பி.ஜே.பி கோட்டணி அமைந்து, மத்தியில் பிஜேபி ஆட்சியில் திமுக பங்கு பெற்றது.அதன் பலனாக காவிரிநதிநீர் ஆணயம் 1999 இல் கருணானிதி முதல்வராகவும், வாஜ்பாய் பிரதமராகவும் இருக்கும் பொழுது அமைக்கப் பட்டது.2001 இல் ஜெயாவின் ஆட்சி.காவிரிநதிநீர் ஆணயத்தின் அண்கு முறையில் தேக்கநிலை.2006 இல் கருணானிதி திரும்பவும் முதல்வர்.2007 இல் கருணானிதி காவிரிநதிநீர் ஆணையத்தின்நிரந்தர ஆணையைப்ப் பெற்றுக் கொடுத்தார்.தமிழகத்துக்கு 57% என்ற ஆணை பெறப் பட்டது.அந்த ஒப்பந்தம் கருணானிதியின் துரோக ஒப்பந்தம் என்றும், காவிரிநதிநீர் ஆணயம் பல்லில்லா ஆணையம் என்றும், அது மதிக்கப் படக் கூடாது என்றும் ஜெயலலிதா கொந்தளித்தார்.அந்த தீர்ப்பு பல்வேறு கர்னாடக அரசு தொடுத்த வழக்காலும், சட்டச் சிக்கலாலும் மைய சட்ட இலாகாவால் அரசு இதளில் வெளியிடப் படவில்லை.இதனிடையில் 2011 இல் மறு படியும் ஜெயாவின் ஆட்சி.எந்தநிரந்தர ஆணையை ஜெயா துரோக ஒப்பந்தம் என்றும், எந்த ஆணையத்தை பல்லில்லா ஆணையம் என்று ஜெயா விமரிசித்தாரோ அந்த ஒப்பந்தத்தை அரசு இதழில் வெளியிட வேண்டும் என்றும் வரிந்து கட்டினார்.காரணம் அந்த ஆணயம் இவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்,சட்டச் சிக்கல்கள் முடிந்தநிலையில் வெளி வந்து விடும் என்றநிலையில்,தாந்தான் எல்லா தீர்வுக்கும் காரணம் என்று காட்டிக் கொள்வதற்காக அந்த துரோக ஒப்பந்தத்தை(அவரின் பார்வையில்) அரசு இதழில் வெளியிட உச்சநீதி மன்றத்தைநாடினார்.இப்படிப் பட்ட ஜெயாதான் காவிரி தந்த கலைச் செல்வியாக்கப் பட்டுள்ளார்.
அருமையான கட்டுரை ,,,, வளரட்டும் உங்கள் அர்பணிப்பு பணி,,,
Please avoid casteist word Pappan-Papathi which resembles Germany s anti Semitic Racist propaganda.The early communists who sacrificed their middle caste comforts and languishing in colonial Indias jails were Comrades P.C Roy,PSR RAO,DANGE,RANA DEVE,Namboodri Pad, ….and the list is long.As other communities do not prefer to be called as ______(Muslims)Paraiyar,Maravan,Chanan. Pls avoid caste and ethnicity in your Essays. Also Iam not Pappan or Pro Pappan
இது முடியாதநிலை.அந்த பொதுவுடமை வாதிகள் ஏன் தங்களது பெயர்களோடு சாதிய அடயாளத்தை இணைத்துக் கொண்டனர்.அதை அவர்கள் துறந்திருக்கலாமே.அந்த பிராமண சாதிய அடயாளங்கள் தங்களை பெருமைப் படுத்துகின்றன என்பதால்தானே.மற்றவர்கள் சாதிய அடையாளங்கள் சிறுமைப் படுத்தப் படுவதால்தான்,அவர்கள் அதைத் துறக்கும்நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள்.இன்று ஜெயலலிதா தண்டனைக்கு உள்ளாகியிருக்கிறார்.ஆனால் அவர் உயர் சாதி பார்ப்பனராக இருப்பதால், அவரின் சாதி சார்ந்த ஊடகங்கள் அவரைப் புனிதப் படுத்த எல்லா வழியிலும் முயல்கின்றன.இன்று இந்திய குடியரசு அமைப்பில் உள்ள 4 தூண்களிலும்,பெரிய சாதிய லாபி பார்ப்பன லாபிதான்.இன்று பாப்பனர்கள் அல்லாதாரும் பார்ப்பனீய சிந்தனையோடு வாழ்வது அவர்களின் செய்கைக்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளது.அதன் வெளிப்ப்பாடுதான் இன்று தமிழகத்தில் ஜெயாவிற்க்கு ஆதரவான போராட்டஙளும் பிரச்சாரஙளும்.
I wanted to know the real backround of this issue.Thanks for vinavu for giving such a correct information (Nadunilai)
இதில் நடக்கப்போகும் நாடகங்கள் இன்னும் இருக்கிறது.பொறுத்திருந்து பாருங்கள் மோடி வித்தையை!!
visvanath had exposed modi’s participation in this judgement.wait and see the supreme courts result begining from bail for miss Jaya madam. then who is behind???
1. ‘கருணாநிதி & மோடியின்’ கூடு சதி உள்ளது-கிருஷ்ணன் !
2. தீர்ப்பு சொல்லும் செய்தி: இதுவரை அரசியல் வாதிகள் யாரும் ஊழலே செய்யவில்லை என்பதே. சிவில் வழக்கில் இது கொஞசம் ஓவெர் அடாவடி. 176000 கோடி என்னவாயிற்றுஸ்-சிவா
இவர்களுக்கு என்ன ஆயிற்று? அம்மையாரின் சொத்துக்கள் (கண்டறியப்பட்டவை மட்டும்)நியாயமாக சம்பாதிக்கபட்டவை தான் என் கிறாரா? அல்லது கருணானிதியின் 1,76,000 கோடி (கற்பனைக்கு அவ்வளவுதான் எட்டியது?) ஊழல் விசாரித்து தண்டனை அளித்த பிறகுதான் பாப்பாத்தியம்மாளை தண்டிக்கவேண்டும் என் கிறாரா?
18 வருடங்களும், 90 நீதிஅரசர்களின் பொன்னான நேரமும் ஆயிரகண்க்கான வாய்தாக்களால் வீணடிக்கப்பட்டதும், தான் சொல்பவர்தான் விசாரிக்க வேண்டும், குற்றம் சுமத்தும் அரசு தரப்புக்கும் , தான் சொல்கிறவர்தான் வழக்குரைஞராக இருக்கவேண்டும் என்றெல்லாம் உச்சனீதிமன்றம் வரை சென்று திசைதிருப்புதல் செய்யப்பட்ட வழக்கில் இப்போதாவது தீர்ப்பு வழங்கப்பட்டதே! அதை வரவேற்க வேண்டாமா! 100 கோடி ரூபா அபராதம் அதிகம் என கூப்பாடு போடுகின்றனர்; கணக்கில் வராத 56.5 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டபின் எஞ்சியுள்ள 43.5 கோடிதான் உண்மையான அபராதம் ஆகும்!
லல்லு முதலியவர்கள் தண்டிக்கபடும்போது கெக்கலி செய்த அம்பிகள், அதே மெளறையில் அம்மையார் தண்டிக்கப்படும்போது ஒப்பாரி வைப்பது ஏன்?
சட்டத்தையும் மதிப்பதில்லை, தர்மத்தையும் கடைபிடிப்பதில்லை (அவா தர்மம் கொள்ளையடிப்பது தானோ?) வன்முறையையும் , அதிகார துஷ்பிரயோகத்தாலுமே பிழைக்க இன்னும் எத்தனை நாட் கள் தான் முடியும்? எத்தனை காலம்தான் ஏமாறுவார் இந்தநாட்டிலே?
கட்டுரை மீதான எனது மேலான கருத்து பின்பு. இப்போது ஜெ தரப்புக்கு ஆதரவாக நெறைய யோசிச்சு கண்டு பிடிச்ச ஒரு லா பாயிண்ட்.
இன்னாரிடமிருந்து லஞ்சம் வாங்கினார் என நிரூபிக்கப் படவில்லை. பொத்தாம் பொதுவாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்பது தான் வழக்கு. பணம் என்பது பகுத்தறிவு ஒப்புக்கொள்ளும் வகைகளில் தான் கிடைக்க வேண்டும் என்பது அவசியமில்லை. வீட்டில் குபேர பூஜை செய்த போது தங்கக் காசு கொட்டியதாக வாதாடலாம். இதை நீதிமன்றம் ஏற்க மறுத்தால் மத நம்பிக்கை, ஆர்டிகிள் 25, மத சுதந்திரம் என்ற ரீதியில் வழக்கை நகர்த்தலாம். உச்சநீதிமன்ற முழு அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க வேண்டும் எனலாம். பின்பு, ராமர் பாலம் போல, இதை மொத்தமாக ஒரு மத ரீதியான விஷயமாக மாற்றி விடலாம். மற்றதை ஆர் எஸ் எஸ் வகையாறாக்கள் பார்துக்க் கொள்வார்கள்.
it is a good legal point. they have not proved from whom they have received the money. they have not proved beyond doubt. is jays was a papor before coming to power, like KALAINGAR. SHE has earned moner from various sources in cinema for more than 25 years as heroin, more over jath malani who is a leading lawyer and politician had objected the judgment.
கட்டுரை உருவாக்க வேண்டிய தாக்கம் திசை மாறிவிட்டது.
/மற்றதை ஆர் எஸ் எஸ் வகையாறாக்கள் பார்துக்க் கொள்வார்கள்./
அவ்வளவு அவனம்பிக்கையா வெங்கடேசன்? அப்ப இன்னொரு முன்னாள்நீதியரசர் கவர்னர் ஆகிராரா? எனக்கென்னவோ அது சாத்தியமல்ல என்று தோன்றுகிறது! ‘குற்றம்நிரூபிக்கப்படவில்லை’ போன்ற ஒரு வரி தீர்ப்புகள் இனி சாத்தியமில்லை! அயொத்திதனமான கற்பனை வளமிகுந்த நீதியரசர்களை தேடி பிடிக்கவேண்டுமே!
கவலை வேண்டாம்! சிம்லா நீதிமன்றத்துக்கு மாற்றப்படத்தக்க நீதியரசர்கள் பலர் இருக்கிறார்கள்!
நான் தயார்!நீதி மன்றத்தில் தராசு இருக்குமாமே! வாதியோ, பிரதிவாதியோ யார் வெயிட்டாக கவனிக்கிரார் என்று சீர்தூக்கி பார்த்து நீதி வழங்கினால் போச்சு! இருக்கவே இருக்கார் மனமது இட்லிகடை மாமா, அவரே என்ன தீர்ப்பு சொல்லவேண்டும் என எழுதி கொடுத்து விடுவாரே!
/வீட்டில் குபேர பூஜை செய்த போது தங்கக் காசு கொட்டியதாக வாதாடலாம்/
குபேர பூஜையில் கொட்டினாலும் வருமான வரி கட்டி சொத்து கணக்கு காட்டியிருக்க வேண்டும்! மும்பை விபசாரிகளுக்கும்கூட வருமானவரி ரைடு நடந்து நோட்டிசு அனுப்பட்டது தெரியுமா?
குபேர பூஜையில் கொட்டும் காசுக்கு வருமான வரி உண்டா என்பது விவாதத்துக்கு உரியது. அப்படிபார்த்தால், பூஜையை ஏற்று அதற்கு பிரதி பலனாக காசு கொட்டி அருளிய குபேரனிடம் சர்விஸ் டேக்ஸ் வாங்க வேண்டி வருமல்லவா 🙂
வாராவதியில் குந்திக்கொண்டு யோசித்ததில் இந்த குபேர பூஜை விஷயம் சுவாரஸ்யமாக படுகிறது. மகன் தந்தையிடம் இருந்து பெரும் பணம், மனைவி கணவனிடம் இருந்து பெரும் பணம் போன்றவை வருமானம் என்ற வரையறைக்குள் அடங்காது. கடவுள்-பக்தன் என்ற உறவும் இவ்வாறானதே. எனவே குபேரன் தரும் பணத்துக்கு வருமானவரி கட்ட வேண்டியதில்லை. வேண்டுமானால், குபேரனுக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது, அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாரா என வழக்கு போடலாம். ஆனால், இங்கே 80G பிரிவு அவருக்கு சாதகமாக துணைக்கு வரும்.
/மகன் தந்தையிடம் இருந்து பெரும் பணம், மனைவி கணவனிடம் இருந்து பெரும் பணம் போன்றவை வருமானம் என்ற வரையறைக்குள் அடங்காது./ அது கிfப்ட் வரம்புக்குள் இருந்தால் மட்டுமே! உறவினரல்லாத கடவுள்-பக்தன் கிfப்ட் வரி விதிக்கப்படவேண்டியதே! அதிலும், கடவுள் பூனூல் போட்டிருக்க பக்தன் சூத்திரனானால் நிச்சயம் வரி உண்டு! மாரியாத்தா, காளியாத்தா கடவுள் என்றால் சமாளிக்கலாம்!
ரத்த சொந்தங்கள் தரும் பரிசுகளுக்கு கிப்ட் டேக்ஸ் கிடையாது. உதாரணமாக, வாரிசுரிமைப் படி தந்தையிடமிருந்து மகனுக்கு வரும் சொத்து, சீதனமாக மகள் பெரும் பரிசுகள் போன்றவை வருமானம் ஆகமாட்டா. இதற்கு வரம்புகள் ஏதுமில்லை (http://profit.ndtv.com/news/your-money/article-tax-implications-on-giving-or-receiving-gifts-384598).
கடவுள்-பக்தன் உறவு ரத்த சொந்தமா என்பது விவாதத்துக்கு உரியது. கடவுள் தந்தை, தாய் என எல்லாமாய் இருக்கிறார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். “எம்பிரான் எந்தை, என்னுடைச் சுற்றம்” என திருமங்கை மன்னன் திருத்தஞ்சைமாமணிக்கோவில் திருமாலை பாடுகிறார். கிறுத்துவத்தில் கூட “பரலோகத்தில் இருக்கும் பரம பிதாவே” என உறவு கொண்டாடும் வழக்கம் உண்டு. சர்வம் கல்விதம் பிரம்மம் எனும் போது, நான் யாரிடம் இருந்தாவது பணம் பெற்றால், கொடுத்தவரும், கொடுப்பவரும் எல்லாம் நானே என்றாகி, எனக்கு நானே கொடுத்துக்கொள்ளும் பணம் எப்படி வருமானம் ஆகும் என்ற தீவிர தத்துவக் கேள்வியும் எழும்!
ஒன்று கவனித்தீர்களா? நான் கணித்த படி, ஊழல் என்பது இரண்டாம் பட்சமாகி, கிப்ட் டாக்ஸ் பற்றி பேச்சு வந்துவிட்டது. எந்தெந்த கடவுளிடம் இருந்து பணம் பெற்றால் வரி கட்ட வேண்டும், எந்தெந்த கடவுளிடம் இருந்து பணம் பெற்றால் பெற்றால் வரி கட்ட தேவையில்லை என விவாதம் திசை மாறி ஒரு மார்கமாக போய்க் கொண்டிருக்கிறது. இப்படி வேதாந்த, தர்ம சாஸ்திர அடிப்படையில் வழக்கை நடத்தாமல், குரு குறிப்பிடும் காளான் வளர்ப்பு, வீடியோ கேசட் என வழக்கை நடத்தியதில் மாட்டிக் கொண்டார்கள்.
அஜாதசத்ரு, இந்த திசையிலான விவாதத்தை தொடர்ந்து நடத்த விருப்பம் இருந்தாலும், யாராவது கல்லெடுத்து அடிப்பார்களோ என பயமாய் இருக்கிறது ஐயா 🙂
அக்கா சசிகலா சாதாரண ஆள் இல்லையாம்.250 ஏக்கர் நிலமும் இரண்டு மெடிக்கல் சாப்பும் வைத்திருந்தாராம்.காளான் பயிர் செய்து அதன் லாபத்தை அக்கா ஜெயில் லலிதாவுக்கு கடன் கொடுத்தாரம்.இது நீதிமன்றத்தில் சசி அக்கா வருமானம் வந்தவிதம் பற்றி தாக்கல் செய்துள்ள மனுவில் உள்ளதாம்.கணவர் நடராசன் மாநில செய்தி மக்கள் தொடர்பு துறையில் பி.ஆர்.ஓ வாக இருந்தவர்.அதுவும் கருனாநிதி புண்ணியத்தில்.சசியோ வீடுவீடாக வீடியோ கேசட் வாடகைக்கு விட்டு சம்பாதித்தவர்.ஜெயாவின் உதவி இல்லாமல் இத்தனை கோடிகள் சாத்தியமே இல்லை.
பதிவில்வினவு தீர்ப்பைபற்றி விலாவரியாக விவரித்திருக்கலாம்.சிந்தித்து முடிவெடுப்பதை மக்களிடம் விட்டுவிட்டிருக்கலாம்.அதைவிடுத்து இப்படிதான் சிந்திக்கவேண்டும், இப்படிதான் அர்த்தம்கொள்ள வேண்டும் என்று கழகங்கள் கட்டாயபடுதுவதுபோல அமைந்து உள்ளது கட்டுரையின் குறை. தனது நோக்கை தவறவிட்டுவிட்டது கட்டுரை.
“………இதன் முத்தாய்ப்பாக ஜெயா-சசி கும்பலுக்கு சொந்தமான தஞ்சை வினோதகன் மருத்துவமனையை கைப்பற்றும் போராட்டம் நடைபெற்று பல தோழர்கள் தடியடி பட்டு சிறை வைக்கப்பட்டனர்”………….போராட்டம் சரி………மருத்துவமனையை கைப்பற்றும் போராட்டமா?எந்த சட்டத்தில் உள்ளது தாங்கள் குறிப்பிடும் உரிமை?இந்நிலையில் மற்றவர்களின் வன்முறையை வினவு கண்டிப்பது சிரிப்பைதான் வரவழைக்கிறது.
தங்கள் தளத்தில் வெளியான “ஜெயா உண்மையில் தண்டிக்கப்பட்டாரா?” என்ற சிறப்புக் கட்டுரையை நேற்று காலையிலும் இன்றும் வாசித்தேன். நேற்று வாசித்தபொழுது, ஜெயாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை தி.மு.க.தான் தொடர்ந்தது என்ற பொருள்தரும்படி, ”அதைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த கருணாநிதியின் தி.மு.க. அரசால் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களைக் குவித்தார் என வழக்குத் தொடரப்பட்டு. . . ” என எழுதியிருந்தீர்கள். இன்று காலை அக்கட்டுரையை வாசித்தபொழுது, அப்பகுதி திருத்தப்பட்டு, ”சுப்பிரமணிய சுவாமியால் தொடரப்பட்ட வழக்கைப் பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட பின் விசாரணை தி.மு.க. அரசின் இலஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது” எனத் திருத்தியுள்ளீர்கள். இத்திருத்தம் அவசியமானதுதான். ஆனால், இத்திருத்தத்தை எந்தவிதமான சுயவிமர்சனமும் இன்று வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
ஏனென்றால், சொத்துக் குவிப்பு வழக்கை தி.மு.க. அரசுதான் தொடுத்தது என்ற உங்களின் முதல் கருத்து அரசியல்ரீதியில் பிழையான ஒன்று. இந்த வழக்கை சுப்பிரமணிய சுவாமிதான் தொடுத்தார் என்பது உலகம் உருண்டையானது என்பதைப் போன்ற எளிய உண்மை. இதனைக் கட்டுரையாளரும் வெளியிட்ட வினவும் கவனிக்கத் தவறியிருக்கிறதென்றால், இந்த வழக்கை நீங்களும் பத்தோடு பதினொன்றாகக் கவனித்து வந்திருக்கிறீர்கள் எனப் பொருள் கொள்ள முடியும். மேலும், தீர்ப்பு வெளிவந்த நாளில் இவ்வழக்கு குறித்து நடந்த தொலைக்காட்சி விவாதங்களில் இந்த உண்மையைச் சிலர் கூறியிருக்கின்றனர். அதைக்கூட கவனிக்காமல், இந்த வழக்கை தி.மு.க.தான் தொடுத்ததாக இன்று வரையில் அ.தி.மு.க. முன்வைத்து வரும் வாதத்தையே நீங்களும் வழிமொழிந்திருந்தது பாரதூரமான பிழையாகும். இந்தப் பிழை இந்தக் கோணத்தில் அணுகப்பட்டிருந்தால் நீங்கள் சுயவிமர்சனம் செய்து கொண்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.
இதுவொருபுறமிருக்க, நேற்று காலை வரையில் பின்னூட்டம் இட்ட வாசகர்களும் இந்த முக்கியமான பிழையைச் சுட்டிக் காட்டாமல்விட்டதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடிய விசயமல்ல.
மேலும், உங்களது கட்டுரையில், ”இன்றைக்கு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் படி 1991-96 காலகட்டத்தில் ஜெயா அடித்த கொள்ளைகளுக்கான குற்றவாளி என்றால், இந்தக் குற்றவாளி இடைப்பட்ட காலத்தில் சுமார் எட்டாண்டுகள் அதிகாரத்தில் அமர வாய்ப்பளிக்கும் விதமாக வழக்கை நத்தையின் வேகத்தில் நகர அனுமதித்த நீதிமன்றத்தை யார் தண்டிக்கப் போகிறார்கள்?” என்ற வினாவை எழுப்பியிருக்கிறீர்கள். இந்தக் கேள்வி நியாயமானது என்றாலும், தீர்ப்பு வெளிவந்த கட்டத்தை வைத்துப் பார்க்கையில் மிகவும் பொதுவான விமர்சனமாகவே தெரிகிறது.
ஏனென்றால், 2001-06 மற்றும் 2011 காலங்களில் தமிழக மக்கள்தான் ஜெயாவை மீண்டும் அரியணயில் அமர வைத்தனர். குறிப்பாக, 2011 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில்தான் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் பவானி சிங், ஜெயா 91-96 காலக்கட்டத்தில் சட்டவிரோதமாக குவித்த சொத்துக்களின் பட்டியலை விவரித்தார். தி.மு.க. தனது பிரச்சாரம் நெடுகிலும் இச்சொத்துக் குவிப்பை திரும்ப திரும்ப சுட்டிக் காட்டி வந்தது. ஊழல், குடும்ப ஆட்சி ஆகியவற்றுக்காகத்தான் தமிழக மக்கள் தி.மு.க.வைத் தோற்கடித்தார்கள் என்பது உண்மையானால், ஜெயாவின் ஊழல், சசிகலாவின் குடும்பத்தின் பிடியில் அ.தி.மு.க.வும் தமிழக ஆட்சியும் சிக்கியிருந்ததை எப்படி மறந்து போனார்கள் என்பது கடும் விமர்சனத்திற்குரியது. நாதஸ்வரம் நெடுந்தொடரில் நேற்று நடந்தது என்ன, அதற்கு முன்பு நடந்தது என்ன என்பதையெல்லாம் நினைவில் வைத்துக் கொண்டு அல்லது யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்வதில் அதீத அக்கறை காட்டும் தமிழக மக்கள்,- உழைக்கும் மக்களையும் சேர்த்துதான் சொல்கிறேன் – ஜெயா விசயத்தில் இத்தனை ஞாபகமறதியாக இருப்பதை நாம் மன்னிக்கும் மனநிலையில் எடுத்துக் கொள்ளக்கூடாது. தீர்ப்பு வெளிவந்த நாளில்கூட, இப்படிபட்ட கிரிமினல் பேர்வழிக்கா நாம் ஓட்டு போட்டோம் என்ற குற்ற உணர்வு தமிழக மக்களிடம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இதனை இடித்துரைக்கும் விதத்தில் இந்தக் கட்டுரை ஓரிடத்திலாவது பேசியிருக்க வேண்டும். அப்படியில்லை என்பது என்னை மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது. முடிந்தால், அந்தக் கோணத்தில் ஒரு கட்டுரை எழுதுங்கள்.
இந்தக் கட்டுரை சட்டப்படி ஜெயாவைத் தண்டிக்க முடியாது என்ற பொதுவான கோணத்தில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதுதான் என்றாலும், இன்று, குறிப்பாக தமிழக மக்களின் அரசியல் பாமரத்தனம் சகித்துக்கொள்ளத்தக்க முடியாதவாறு உள்ள இன்றைய நிலையில் இந்த ஊழல் வழக்கையும், மற்றைய ஊழல் வழக்கையும் அரசியல்ரீதியில் பிரித்துக்காண வேண்டும் என்றவாறு இந்த வழக்கில் பதினெட்டு காலமாக ஜெயா கும்பலும் அவருக்கு ஆதரவான பார்ப்பனக் கும்பலும் நடத்திய சதிராட்டங்கள் அனைத்தையும் தமிழக மக்களின் மண்டையில் உறைக்கும்படி எழுத வேண்டும். அதில், 2ஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் நடந்துகொண்டதையும், சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் பாப்பாத்தி ஜெயாவிற்கு ஆதரவாக நடந்துகொண்டதையும் அம்பலப்படுத்த வேண்டும்.
இந்த வழக்கை நினைவுகூறும்பொழுது சிலரின் பெயரைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அதில் முக்கியமானவர் அரசு வழக்குரைஞராகப் பணியாற்றி, பின் பார்ப்பனக் கும்பலின் அவதூறு பிரச்சாரம் காரணமாக அப்பதவியை விட்டு விலகிய வழக்குரைஞர் ஆச்சார்யா. இரண்டாவதாக, இவ்வழக்கில் கடைசியாக நியமிக்கப்பட்ட நீதிபதி குன்ஹாவும், வழக்கை இழுத்தடிக்க ஜெயா கும்பல் இறுதிக்கட்ட முயற்சிகளை அவர் முறியடித்ததும். இவற்றோடு, என்னதான் தி.மு.க. அரசியல்ரீதியில் பலவீனமாக இருந்தாலும், இந்த வழக்கை உயிரோடு வைத்திருக்க இரண்டு கட்டங்களில் தலையீடு செய்தது. ஒன்று, வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றும்படி கோரி அன்பழகன் தொடுத்த வழக்கு. மற்றொன்று அரசு வழக்குரைஞர் பவானி சிங்கும், நீதிபதி பாலகிருஷ்ணனும் குற்றவாளிகளான ஜெயா கும்பலுக்கு ஆதரவாக நடந்து கொண்டதை எதிர்த்து கர்நாடகா உயர் நீதிமன்றத்திலும், பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் நடத்திய சட்டப் போராட்டங்கள். இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு, தி.மு.க.வின் 2ஜி ஊழல் இதைவிட பிரம்மாண்டமானது என்ற பார்ப்பன ஊடகங்களின் பிரச்சாரம் தமிழகத்தில் கோலோச்சும்படி நாமும் விட்டுவிட்டால், அது பாரதூரமான தவறாகிவிடும்.
பாசிச பேய் ஜெயாவுக்கு உலுத்துபோன சட்ட விதிகளின்படி குற்றத்துடன் ஒப்பிடுகையில் மிக சாதாரண தண்டனையே வழங்கப்பட்டுள்ள்து.அதற்குள் நீதியரசர் ( அழைக்க தகுதிவாய்ந்தவர் )குன் காவை மனநோயாளி என்றும்,காட்டுமிராண்டி தனமான தீர்ப்பு என்றும் அ.தி.மு.க அடிமைகள் கூறிவருகின்றனர். பணத்துக்காக கீரனூர் முன்சீப் கோர்ட்வரை வந்து காம கழிசடை பிரேமாநந்தாவுக்காக வாதாடிய ராம்ஜெத்மலானி அபராதம் 100 கோடி விதிக்க சட்டத்தில் இடமில்லை என்கிறார்.சாதாரண அரசு ஊழியர் லஞ்சம் வாங்கினால் அது நிருபிக்கப்பட்டால் மூன்றாண்டு முதல் ஏழு ஆண்டுவரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது.ஆனால் அரசமைப்பு சட்டத்தின் படி நேர்மையாகவும்,விசுவாசமாகவும் நடந்து கொள்வேன் என்று கூறி பதவிபிரமாணம் எடுத்துக்கொண்டவர் ஊழலில் பிடிபடும் போது கடும் தண்டனை வழங்கவேண்டும்.சிருதாவூர்,கொடநாடு என வாங்கிகுவித்திருக்கும் சொத்துக்கள் அவருடையது இல்லை என்றால் ஆவணங்களின் அடிப்படையில் நிரூபிக்கவேண்டும்.அவருக்கு சொந்தமானது என்றால் அவை எப்படி யாரிடமிருந்து எந்த பணத்திலிருந்து வாங்கப்பட்டது என்பதை நீதிமன்றத்தில் தெரிவித்து நேர்மையாக வழக்கை எதிர் கொண்டிருக்க வேண்டும்.மக்களே சலிப்படையும் வரை பார்ப்பன நீதிமன்றத் துணையுடன் 160 முறை வாய்தா வாங்கி போங்காட்டம் ஆடியிருக்க கூடாது.இன்னும் சில மேதாவிகள் 2 ஜி வழக்கில் 1.76,000 கோடியை சுருட்டியவர்களை விட்டுவிட்டு வெறும் 65.00 கோடிக்கு இவ்வளவு தண்டனையா என்கின்றனர்.பொது வாழ்வில் நேர்மையற்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற விசயத்திலிருந்து நழுவுகின்றனர்.வெறும் 65.00 கோடிக்கான ஊழல் வழக்கை 18 ஆண்டுகள் இழுத்தடிக்க முடியுமானால் 1.76 ஆயிரம் கோடி வழக்கை 1800 ஆண்டுகள் இழுத்தடிக்க முடியாதா?ஒரு வேளை பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு இது சாத்தியமில்லையா?
This is why Maoists fails to get people support. First of all they don’t know who is the enemy..They rise the sward (gun..) against all and loose the war. You idiots, do you think that the verdict is written by Saiko Kunha but it was written by Modi Masthan. It is a well played bureaucratic drama…While the whole world has masthan wave tamil land is the only place where black defeats saffron. These Maoists want to claims that they are the real intellectuals then they have to support lalitha for the time being and they can oppose her later. If not masthan will enter in to tamil land and you guys will be sucked up. Be careful…
டேய் முட்டாக் கம்முனாட்டி… என்னடா சொல்ல வர்ற… பாசிச ஜெயான்னு சொல்லும் உம் மூளையில பாசி புடிச்சிருக்கு… யார்றா பாசிஸ்டு…? கம்முனாட்டி ராஸ்கல்… நாங்கள் தமிழர்கள்… நீங்கள் கம்யூனிஸ்டுகள்… முசோலினி என்ற பாசிஸ்டுகளின் ஏஜென்டுகள்… கம்முனாட்டி ராஸ்கல்ஸ்… உங் கட்டுரையில ஏதாவது புரியுதா? என்ன சொல்ல வர்ற… மறுபடியும் வாசிச்சு பாருடா… எதுல ஆரம்பிச்சு எதுல முடிச்ச… எடுத்துக்கொண்ட தலைப்பு என்ன? கொடுக்கப்பட்ட முடிவு என்ன? கம்முனாட்டி கம்முனாட்டி…..
அட வெங்காயமே கட்டுரைய எழுதினவரும் தமிழன் படிச்ச மக்கலும் தமிழர்கள் வெனும்னா போய் செவத்துல முட்டுங்க கருனாடக ஜயாவுக்காக ,இல்ல தீர்ப்பு எழுதுன ஜட்ஜயாவது திட்டுங்கப்பா அவரும் கருனாடகம்தானாம் இல்ல மத்திய மோடி அரசயாவது திட்டுப்பா அத விட்டுட்டு வாங்குன காசுக்கும் போட்ட பிஸ்கட்டுக்கும் எஜமானனுக்காக நாய்தான் குலைக்கும் அனா நீங்க அப்பிடியா கழகமே கோவில் அம்மாவே தெய்வம் இல்லயா கொஞ்சம் பொருமயா வாசுச்சு பாருங்கபா ……
mr. vengayam well said . we know communists. they did not get permission from china or russia.
தனக்கெதிராக தீர்ப்பு சொன்ன நீதிபதியின் மருமகன் மீது கஞ்சா கேசு,நடராசனுக்கு வேண்டப்பட்ட இளம் பெண் செரீனா மீது கஞசா கேசு,முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் மீதும் கஞ்சா கேசு, வைகோ,சுப.வீ போன்றவர்களுக்கு பொடாவில் 18 மாத சிறை. பூண்டி கலைவாணனை நீதிமன்றம் விடுவித்த பின் சிறை வாசலிலேயே வேறு வழக்கில் கைது. எதிர் கட்சி காரன் மீதும்,ஜால்ரா போடாத பத்திரிக்கைகள்,தொலைகாட்சி செய்தி வாசிப்பாள்ர் மீது கூட வழக்கு.பார்வையற்ற இளைஞர்கள் போராடிய போது அடித்து உதைத்து வனாந்திரத்தில் கொண்டு போய் இறக்கிவிட்ட கொடுமை.இன்னும் ஏராளம் .தனிமனித துதிபாடிக்கொண்டு பொறுக்கி அரசியல் எனும் மலக்குட்டையில் மிதக்கும் பன்றிகளுக்கு புரியாது.
முதல் வரியே பல்லிளிக்குதே…
//தமிழ்நாடு சட்டசபையில் “ ஆமாம் நான் பாப்பாத்தி”யென்று பகிரங்கமாக பெருமையுடன் அறிவித்தவர் ஜெயலலிதா.//
அறிவித்தல் என்பது எப்படி சரியாகும். பதில் என்பது தான் சரி! ‘நீ பாப்பாத்தி தானே, நீ பாப்பாத்தி தானே…’ என்று திரும்ப திரும்ப கேட்டால் ‘ஆமாம் நான் பாப்பாத்தி தான். அதனால் என்ன?’ என்று சொல்வது அறிவித்தக் ஆகாது. பதில்.
அறிவித்தல் என்பதும் சரியல்ல, பதில் என்பதும் சரியல்ல! புலம்பல் என்பதே சரி! அவரைநோக்கி கேட் கப்பட்ட எந்த கேள்விக்கு பதிலிறுத்திருக்கிரார்? சட்ட சபையிலும் 110 தானே!
சொத்து வழக்கு: சொத்துக் குவிப்பு வழக்கு என்ற சொல்லையே
தவிர்த்து விட்டு , சொத்து வழக்கு என்றே குறிப்பிடும்
தந்தி தொலைக்காட்சியின் ரங்கராஜ் பாண்டேயைக்
கண்டிக்க மறந்தது ஏன்?திரு பாண்டே தமது ஜெயா விசுவாசத்தைக்
காட்ட வேண்டும் எனில், அவர் தீக்குளித்து விசுவாசத்தை நிரூபிக்கட்டும்.
ஆனால் தமிழை தீக்குளிக்க வைப்பது கண்டிக்கத் தக்கது.
அந்த தினவாந்தி கன்றாவியை யாராவது பார்க்கிரார்களா என்ன? பச்சை தமிழன் ஆதித்தனாரின் பாசறையிலிருந்து இப்படி ஒரு டீ வி யா? ஏதாவது வடனாட்டு நிறுவனத்துக்கு விற்றுவிட்டார்களா?
சொத்துக் குவிப்பு வழக்கை சொத்து வழக்கு என மடைமாற்றும் தந்திடிவி யின் பாண்டே ஆத்தா ஜெயா திமுக காரர்கள் மீது போட்ட நில அபகரிப்பு வழக்கை நில வழக்கு என குறிப்பிட்டு நேர்மையை நிரூபிக்க வேண்டும்.இல்லையென்றால் அரசு விளம்பரத்திற்காக தந்தி டிவி சோரம் போனது மீண்டும் உறுதிசெய்யப்படும்.
A Convicted criminal’s name can be a brand for Government products? Amma Water, Sugar etc?
சீனு சார் யாரும் அந்த அம்மாவ நீ பாப்பாத்தி தானே நீ பாப்பாத்தி தானேனுலாம் கேட்கல. அங்க ஒன்னும் போட்டி நடைபெர்ல. உங்க அம்மாதா சொன்னாங்க. நா பாப்பாத்தி தானூ. இப்ப இது பிரச்சனை இல்ல. கோடி கோடியா கொல்லையடிச்சிருக்கிரது தான் பிரச்சனை. அத பாரூங்க சார்.வந்துடிங்க பல்லுலிக்குது அப்படி இப்படினு………..
சொத்துப் பட்டியல்……..
http://epaper.dinakaran.com/index.php?rt=index/frontpage/20140928/05
Still we have not moved from the feudal mindset. Still innocent house wives and working class men have so much sympathy for Jaya. The reason is 1)she is a woman, 2)she is fair, 3)she was close to MGR etc. They deny to accept that she is a corrupt politician.
Today we are discussing all this from a different platform, But there is another platform(vast majority) of our own public which is yet to come out of individual fanfare or personality workshop. This population is the reason for bringing leaders like NTR, MGR, Jaya etc. This arrest will bring more sympathy to this corrupt women.
Can someone here spell out any formula to change this innocent people and ??
இங்கு மக்களுகக்கு அம்மையார் அடிக்கும் கொள்ளை ஊர் அறிந்த உண்மை கொள்ளை அடிக்கும் இவர்களை தண்டிக்க முடியாது என்பதே பொது புத்தியாக உள்ளனர்.அதனால் தான் பிர்போக்கான இந்த சமூம் பார்பநிய தன்மையுடன் 65 கோடி கொள்ளை அடித்த அம்மமாவை தண்டித்தவுடன் அப்பாவித்தனத்துடன் பல லட்சம் கோடி கொள்ளை அடித்தவர்களளின் தண்டனை ஆண்டுகளை கணக்கிடும் கணக்கியலறிஞர்களாகின்றனர் பார்பப்பன அடிமைகள். ஆனால் நாம் இவர்களின் அறியாமையை(பார்பப்பன அடிமைத்தனம்)போக்கி அதாவது இந்த அமைப்பபில் இவர்கள் வழங்கும் நீதி போலி என்பதை உணர்த்தி மக்களுக்கான புதிய ஜனநாயகத்தில் மட்டுமே சாத்தியம் என்பதை நிருவ வேண்டும். குற்றத்தை தங்கள் உரிமையாக நிலைநாட்டும் அ(ராக)தி.மு.கா(ளிகளை) மக்கள் முன் அம்பலப்படுத்து வேண்டும். நன்றி.
முன்பொரு முறை தானாகவே பெரியார் திடலுக்கு வந்து , வீரமணியிடம் அய்ந்து லட்ச ரூபாய் திராவிடர் கழகத்திற்கு நன் கொடையளித்து, நான் பெரியாரின் சிஷ்யை என்று கூறிக்கொண்டவர்! பாவம் என்ன சோதனையோ, தற்போது மீண்டும் தான் பாப்பாத்திதான் என்று அடிக்கடி (டெல்லி நீதி மன்றங்களின் தயவுக்காக?) கூறிக்கொள்கிரார்! அதானாலோ என்னவோ பார்பனர்களின் பச்சாத்தாபம் பொங்குகிறது!
பெரியாரின் பொன் மொழிகளை ஊருக்கு ஊர், பெரியார் தூண் அமைத்து கல்லில் செதுக்கி வைத்த எம் ஜி யார் வாரிசாக, புதுசா கட்டிக்கொண்டு வந்தவர், அ தி மு க தன் வசமான பின், தற்போதுதன்ந்ஜாபகம் வந்தாற்போல நான் பாப்பாத்திதான் என்று அலறுகிரார்! எல்லாம் கருனானிதியின் சதி? ஊழல் வழக்கின் உக்கிரம்?
ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டிய ஒரு தருணம்
காவிரி நீர் விவகாரத்தில் டெல்டா பகுதியில் பயிர்கள் கருகி கொண்டிருந்த நேரத்தில் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும்
சம்பந்தப்பட்ட மாநில அரசால் அந்த உத்தரவு மதிக்கப்படவில்லை..
ஆனால் மாற்று ஏற்ப்பாடு கூட செய்ய நேரம் கொடுக்காமல் தமிழ் நாட்டின் நிர்வாக தலைவரான முதல்வரை கைது செய்து முதல்வர் பதவியை பறிக்கும் இடத்தில மட்டும் மிக அவசரமாக இந்திய அரசியலமைப்பு சட்டம் மதிக்கபடுகிறது
//மாற்று ஏற்ப்பாடு கூட செய்ய நேரம் கொடுக்காமல் தமிழ் நாட்டின் நிர்வாக தலைவரான முதல்வரை கைது செய்து முதல்வர் பதவியை பறிக்கும் இடத்தில மட்டும் மிக அவசரமாக இந்திய அரசியலமைப்பு சட்டம் மதிக்கபடுகிறது//
அப்சல் குருவின் கருணை மடனுவை பிரதமர்நிராகரித்ததாகக் கூறி அப்சல் குருவை தூக்கில் போட்டனரே (கொலை செய்தனரே) அப்பொழுது இந்திய அரசியலமைப்பு சட்டம் என்ன ஆனது?
மக்கள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ளாததற்கு, அவர்களுக்கு இந்த தண்டனை போலும்! வேண்டியது தான்! செய்வீர்களா? செய்வீர்களா? செய்வீர்களா? செய்வீர்களா? செய்வீர்களா?
மாற்று ஏற்பாடு செய்வதற்கு, தெரிந்தே குற்றமிழைத்தவருக்கு, 18 ஆண்டுகள் போதவில்லையோ?
’சடவோட மாமியா ஏழு ஆப்பை[அகப்பை] கழி தின்னாளாம்’ என்று ஒரு பழமொழி உண்டு.அது போல் இன்று அமைச்சர்கள் எல்லாரும் கண்ணீர் விட்டுக் கதறி அழுது பதவி ஏற்றுக் கொண்டார்கள். [ஆளுனர் மாளிகையில் கண்ணீர் வெள்ளம்!]ஜெயலலிதா மீது கருணாநிதி பொய் வழக்குப் போட்டுவிட்டாராம்.ஒரு பொய்யை வெல்ல 18 ஆண்டுகள் அறப்போர் நடத்திய வீரத்தாய் கடைசியில் தோற்றுவிட்டார்.தருமத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வி விட்டது.பாவம் லட்டு பட்டாசுடன் வந்ததோடு மட்டுமல்லாமல் அதை வினியோகித்து,கொளுத்தியும் விட்டார்கள்.அம்மா மீது அவ்வளவு நம்பிக்கை.எப்படியும் நீதியை விலைக்கு வாங்கிவிடுவார்.அதில் அவர் ஒரிஜினல் வீராங்கணை அல்லவா?கண்ணீர் விட்டுக் கதறி அழுதவர்கள் எதை நினைத்து அழுதார்கள்?மக்களுக்காக ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கிற ஒரு தலைவி நீதியை நிலைநாட்ட சிறைக்குப் போகக்கூடாதா?எங்கே போய்விட்டார் சிறைக்குத் தானே?அழுதவர்களின் கவலைஎல்லாம் அதுவல்ல.இதுவரை அம்மா பெயரைச் சொல்லிக்கொண்டு ஜம் என்று ஓடிக்கொண்டிருந்த பிழைப்பை எண்ணித்தான்.அரசின் சில இலவச நலத் திட்டங்களால் பயன் அடைந்த சிலபேர் வேண்டுமானால் இரக்கப் பட்டிருக்கலாம்.ஆனால் அதிமுக ரவுடிகள் செய்த அத்துமீறிய அராஜகங்கள்,அதற்குத் துணை நின்ற போலீசு, நியாயப்படுத்திய ஊடகங்கள் இவையெல்லாம் ஒரு குற்றவாளிக்கு ஆதரவாக அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு நடத்திய அட்டூழியங்கள்தான்.அவர்களாகவே எல்லாவற்றையும் செய்துவிட்டு மக்கள் செய்ததாகச் சொல்லிக் கொண்டார்கள்.மதுரையில் சில அதிமுககாரர்கள் 27ம் தேதி இரவு கடை வைத்து வியாபாரம் நடத்தினார்கள்.பேருந்து இயக்கத்தை அவர்களே நிறுத்திவிட்டர்கள்.இதனால் அவதிப்பட்ட பொதுமக்கள் ஏராளம்.அதிமுகவினர் ரகளை செய்வார்கள் என்று பயந்தே பலர் கடைகளை அடைத்துவிட்டனர். நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.இன்று உண்ணாவிரதப் போராட்டம். நாளை அறிவிக்கப்படாத பந்த்.மதுரை கீழமாசி வீதியில் கடைவைத்திருக்கும் வியாபாரி ஒருவர் செல் போனில் பேசுகிறார்.எதற்காக கடை அடைக்க வேண்டும் என்று வாதிடுகிறார்.ஏதோ நியாயமான பிரச்சினைக்காக போராட்டம் நடத்தினாலும் பரவாயில்லை. நீதிமன்றம் குற்றவாளி என்று சொல்லியிருக்கிற ஒருவருக்காக ஏன் கடைஅடைப்பு செய்ய வேண்டும்.மறு முனையிலிருந்து பதில் வருகிறது: மதுரை மேயர்,வியாபாரிகள் சங்கத் தலைவர்களிடம் கூப்பிட்டுச் சொல்கிறார். வேறு வழி இல்லை.இப்படித்தான் ஓட்டல், திரையரங்கு,அரசு தனியார் பேருந்துகள் மற்றும் பல்வேறு சங்கங்கள் எல்லாவற்றுக்கும் சொல்லப் பட்டிருக்கிறது.பள்ளிக்கூடங்களுக்கு என்ன கட்டளையோ தெரியவில்லை.இதைத்தான் மக்களின் ஆதரவு என்று சொல்கிறார்கள். காவல்துறை அம்மாவின் செல்லப்பிள்ளை.டூட்டியில் குடித்து டூட்டியில் செத்த போலீசுக்கு 5 லட்சம்.பாலியல் வல்லுறவில் கொல்லப் பட்டவருக்கு ஒரு லட்சம் வழங்குகிற கருணைத் தாய் அல்லவா?காவல்துறை அரண் போல நின்று நாளை பந்த் மக்களால் நிறைவேற்றப்படும்.சரியன கட்டுரை தான்.
.
சாகிற வேளையிலே ‘நாராயணா’ என்றானாம், ஒரு சண்டாளப்பார்ப்பன்! (சன்டாளன்=தாயை புணர்ந்தவன்). உடனே சாட்சாத் பரம்பொருள் அவனது சகல பாவங்களையும் மன்னித்து , வைகுண்ட பத்வி அறுளி, உடனே ஸ்பெஷல் விம்மானத்தை அனுப்பி வைத்தாராம்! என்னே பார்ப்பன நீதி! அது போன்ற நீதியை ஏன் சாமியும், மோடியும் தர ஏற்பாடு செய்யவில்லை? சங்கராச்சாரியாரை கொளைப்பழியிலிருந்து விடுவித்தாயிற்று, தனக்கும் அதுபோல விடுதலை வேண்டும் என மேல் முறையீடு செய்யலாம்!தண்டணை என்பது திருந்துவதற்குத்தான், திருந்தினார்களா என்பது , காலிகளை ஏவிவிட்டு பொது மக்களை மிரட்டி, இவரைத்தவிர யாரும் தமிழ்னாட்டு இ.வா க்களை ஆள முடியாது என்று அவா ஊடகஙள் செய்யும் பம்மாத்தை பார்த்தால் தெரிகிறதே!
அணைய இருந்த ஈசன் கோவில் விளக்கு திரியை தற்செயலாக தூண்டி எரியச் செய்து, அந்த புண்ணியத்தின் காரணமாக மறு ஜென்மத்தில் மகாபலி சக்ரவர்த்தியாக பிறந்த எலியும் பார்ப்பன எலியாக இருக்குமோ? புலிக்குக் பயந்து வில்வ மரத்தின் மீது பதுங்கி இருந்து, தூக்கம் வராமல் இருக்க இலைகள் கிள்ளிப் போட்டு, அவை தற்செயலாக கீழே இருந்த சிவலிங்கத்தின் மீது விழ, அதுவே பெரிய வழிபாடாக கருதப்பட்டு சிவலோகப் பிராப்தி கிடைக்கபெற்ற திருவைகாவூர் வேடனும் பார்ப்பனனோ? அஜாமிளன் வைகுண்ட பதவி பெற்றது அவன் பார்ப்பான் என்பதால் அல்ல, “பெற்ற தாயினும் ஆயின செய்யும்” நாராயண மந்திரத்தை உச்சரித்ததனாலேயே.
அய்யா வெங்கடேசன் ! இதை சொல்லத்தான் மீண்டும் வருவேன் என்று என்னை கள்த்தில் தனியே தவிக்கவிட்டு சென்றீரோ? எல்லா புளுகு மூட்டைகளும், இந்த புரோகித கும்பல் ஆதிக்கத்தை நிலை நிறுத்தவே!
“பெற்ற தாயினும் ஆயின செய்யும்” நாராயண மந்திரத்தை உச்சரித்ததனாலேயே வைகுந்த பதவியே கிடைக்கு மென்றால், கேவலம் சி எம் பதவி போனது ஏனோ? கிண்டலடிக்காதீர்கள் வெங்கடேசன், பாவம் ஜெயலலிதா, என்ன இருந்தாலும் பெண் அல்லவோ?
That issue different. This issue different. Will back on that issue later.
வெங்கட் , உங்க நிலை ரொம்ம்ப ரொம்ம்ம்ம்ப பரிதாபமாக இருக்குங்க!
அஜாசத்ரு,
அஜாமிளன் கதை சாதி ரீதியானது என்ற உங்கள் கூற்றுக்கு மறுப்பு சொன்னால், முதலில் மறுப்பை ஏற்கிறீரா, இல்லையா என சொல்ல வேண்டும். அதை விட்டு இதெல்லாமே கப்சா என அடுத்த கிளைக்கு தாவப்படாது.
பக்தியின் பெருமையை சொல்லவந்த கதைகள் இவை. அந்த அளவில் தான் பக்தர்கள் இவற்றை அணுகிறார்கள். யாரும், “ஓம் நமோ நாராயணா” என சொல்லிவிட்டு, வைகுந்தத்தில் இருந்து பல்லக்கு வந்ததா என எட்டிப் பார்ப்பதில்லை! இவ்வாறு எல்லாவற்றையும் “பகுத்தறிவு” கொண்டு குடலாப்ரேஷன் செய்து கொண்டு இருப்பதால் தான், உங்கள் தரப்பை யாரும் கண்டு கொள்ளாமல், ஸ்ரீரங்கத்தில் தரிசன கியூ சில மணி நேரமும், திருமலையில் பல மணிநேரமும் ஆகிறது!
அய்யா வெங்கடேசன் !
/அஜாமிளன் கதை சாதி ரீதியானது என்ற உங்கள் கூற்றுக்கு மறுப்பு சொன்னால், முதலில் மறுப்பை ஏற்கிறீரா, இல்லையா என சொல்ல வேண்டும். அதை விட்டு இதெல்லாமே கப்சா என அடுத்த கிளைக்கு தாவப்படாது../
என் கூற்றுக்கு மறுப்பு, உங்கள் பார்பன புளுகு மூட்டை அல்ல! அடியார்கள் அஜாமிளானாக இருந்தாலும்,நந்தனாக இருந்தாலும் அது பார்பார புளுகுதானே! இந்த பார்பன தந்திரங்களை கையாண்டுதானே பக்தியை வளர்க்கிறீர்! எம் மக்கள் மூடபக்தராய் இருப்பது எமக்கு வருத்தம்தான் !
/உங்கள் தரப்பை யாரும் கண்டு கொள்ளாமல், ஸ்ரீரங்கத்தில் தரிசன கியூ சில மணி நேரமும், திருமலையில் பல மணிநேரமும் ஆகிறது!./
உங்கள் காட்டில் மழை பெய்கிறது! அதனால் தான் இந்த பாமரக்கூட்டம் திருந்தக்கூடாது என பக்தி சேற்றில் புதைக்கிறீர்கள்! பகுத்தறிவை கண்டால் உங்களுக்கெல்லாம் பற்றிகொண்டு வருவது இயல்பே! பிழைப்பு விஷயமன்றோ!
பக்தியை நான் யார் மீதும் திணிக்கவில்லை. விருப்பமுள்ளோர், யாம் பெற்ற இன்பம் பெறட்டும். எனது பிழைப்பு பக்தி சார்ந்ததன்று. நிஜமான பகுத்தறிவு சார்ந்தது.
புளுகு மூட்டையில் கூட சாதியை சொல்லி புளுகியது யார்? அஜமிளனை சுவர்க்கதிற்கு அனுப்பிய கதையும்,நந்தனை சொர்க்கத்துக்கு அனுப்பிய புண்ணிய கதையையும் கொஞ்சம் சாதி ரீதியாகவும் ஆராயலாமே! இந்த ஆராய்ச்சியில் இறங்கினால், வெங்கடேசனைத்தவிர, மனசாட்சியுள்ள வேறு யாரும் பக்தராய் இருக்க மாட்டார்கள்!
கொஞ்சம் பகுத்தறிவு இருந்தால் போதும்.. மனுதர்ம பார்ப்பானின் புளுகு மூட்டைகள் என்றால் தன் சாதிக்கார பார்ப்பானை தாயை புணர்ந்தவனாகவும், நந்தனை நாயனாராகவும் காட்ட பார்ப்பானுக்கு பயித்தியமா..?!!! 2ஜி காய்ச்சலில் சகட்டுமேனிக்கு உளறிக்கொண்டு விவாதத்தை திசை திருப்பாதீர்கள் அய்யாஜி..
/தன் சாதிக்கார பார்ப்பானை தாயை புணர்ந்தவனாகவும், நந்தனை நாயனாராகவும் காட்ட பார்ப்பானுக்கு பயித்தியமா..?!!! /
யார் கண்டது அய்யனே! எனக்கும் அதுதான் விளங்கவில்லை! பாகவதம் தெளிவாக சொல்கிறதே!
ஜெயாவின் சொத்து குவிப்பு தீர்ப்பு பற்றிய விவாதத்தை,நீங்கள் மட்டும் 2G குற்றசாட்டு விவாதமாக திசைதிருப்பலாமாக்கும்! இதுவும் ஒரு பார்ப்பன உத்தியன்றோ!
// எனக்கும் அதுதான் விளங்கவில்லை! //
விளங்கவில்லை என்பதால்தான் அதில் சாதியைக் கொண்டுவந்து சொருவுனீங்களா அய்யா..?!
வெங்கடேசன் அவர்களே,
கதையில் வரும் பாத்திரம் பார்ப்பனனா இல்லையா என்பதை பற்றி பேசவில்லை. கதையே பார்ப்பனன் உருவாக்கிய புளுகு மூட்டை என்பதை பற்றி தான் பேசுகிறோம்.
தங்களுக்கு ஏற்றார்போல புளுகு மூட்டைகளை அள்ளி விட்டு அதை சாத்திரம் வேதம் என்று கதை கட்டிவிடுகிறார்கள். நாமும் அவற்றை நம்புகிறோம்.
விளக்கு திரியை தற்செயலாக தூண்டிய எலிக்கு புண்ணியம் கிடைக்கும், ஆனால் கடவுளை வேண்டி தவமிருக்கும் சம்பூகனை அந்த கடவுள் அவதாரம் என கூறப்படும் இராமேனே கொல்வானாம். அடுத்தவன் மனைவியின் மேல் ஆசை வைத்த இந்திரன் தேவேந்திரனாக வணங்கப்ப்டுவானாம், அதே தவறு செய்த இராவணன் கொள்ளப்படுவானாம்.
துர்வாச முனிக்கு பணிவிடை செய்ததால் அவர் பன்னிரண்டு வயது சிறுமி குந்திக்கு குழந்தை வரம் கொடுத்தாராம். அசராம் பாபு பாணியில் துர்வாசன் செய்த தவறு ஒரு சிறுமியை கர்ப்பம் தரிக்க வைத்தது. ஆனால் இந்து கடவுள் வரம் என்று ஒரு கதை கட்டி விட்டார்கள். இந்த கதைகளை பற்றி பேசினால் இந்த பக்கம் பத்தாது.
18 வருடம் கழித்து நியாயமான ஒரு தீர்ப்பு கிடைத்துள்ளது.
இதற்கு கருணாநிதி, சோனியா, ராஜபக்சே, கர்நாடகா, காவிரி என்று சரம் சரமாக ரீல் விடுகிறார்கள். போஸ்டர் ஓட்டுகிறார்கள். இதையும் நம்புகிறீர்களா வெங்கடேசன்??
2G வழக்கில் அலைவரிசியை ஏலத்தில் விடாமல் முன்பிருந்த பாஜக ஆட்சியில் நடைமுறையில் இருந்த அதே முறையை பின்பற்றியதால் அரசுக்கு வருமான வாய்ப்பு குறைந்துள்ளதாகவும் அதனை ஏலத்தில் விட்டிருந்தால் அதிக விலைக்கு விற்கப்பட்டு இருக்கும் என்றும் அதிக விலைக்கு ஏலத்தில் விட்டால் யூகமாக ஒரு தொகையை முடிவு செய்து 1,75,000 கோடி அரசுக்கு இலாபமாக இருந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த தொகையே யூகமாக கொடுக்கப்பட்ட தொகை தானே. ஒருவேளை அதிக விலைக்கு அலைவரிசை விற்கப்பட்டிருந்தால் அதனை அதிக விலைக்கு வாங்கியவர்கள் அந்த தொகையை மக்கள் தலையில் தானே கட்டியிருப்பார்கள்?
அஜாதசத்ருவின் மறுமொழி 46.1 படித்துப் பாருங்கள். அஜாமிளன் கதையை ஜாதி ரீதியில் தான் விமர்சனம் செய்கிறார். அதற்கான மறுமொழி அது.
இந்து மதம் என்பதனுள் பலவித கருத்தக்கள் அடங்கியுள்ளன. எல்லாவற்றையும் ஏற்கவேண்டும் என்றோ, எல்லாவற்றையும் நிராகரிக்க வேண்டும் என்பதோ இல்லை.
யமுனை ஆற்றின் இக்கரையில் கண்ணனும், மறு கரையில் துர்வாசரும் இருந்தனர். துர்வாசருக்கு உணவு கொண்டு செல்ல வந்த பெண்கள் சிலர் வெள்ளமோடும் ஆற்றை எப்படி கடப்பது என தயங்கினர். அதற்கு கண்ணன், “கண்ணன் ஒரு நித்ய பிரமசாரியானால் ஆறு வழி விடட்டும்” என சொல்ல, அவ்வாறே ஆறு வழி விட்டது. மறுகரையை அவர்கள் அடைந்தபின் துர்வாசருக்கு வயிறு முட்ட உணவளித்தனர். ஆற்றை கடந்து திரும்பி செல்ல வேண்டுமல்லவா? துர்வாசர், “நான் இன்று ஏகாதசி உபவாசம் இருந்தது உணமையானால் ஆறு வழி விடட்டும்” என சொல்ல ஆறு வழி விட்டது. கண்ணன் தன் மனத்தில் காமம் இல்லாதவன். துர்வாசர் அனைத்தும் கண்ணனுக்கே என வாழ்ந்தவர். அவர் உண்டதும் கண்ணனையே அடைந்தது. மனமே பிரதானம். “மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்”.
இதுவும் துர்வாசர் பற்றிய கதை தான். நமக்கு எது தேவையோ அதை எடுத்துக் கொள்ளலாம். எல்லாவற்றையும் ஏற்க வேண்டும் என்ற வேத வாக்கு ஏதுமில்லை.
உடனே ஆறு எப்படி வழி விடும், டர்புலன்ட் ஃபுளோ என்றெல்லாம் “பகுத்தறிவு” காட்டாதீர்கள். அவற்றை பற்றி பேச வேண்டுமானால், தனியாகப் பேசுவோம்.
அஜாமிளன், 2G, ஜெயா எல்லாத்தையும் எதுக்கு மிக்ஸ் பண்றீங்க? 2G பற்றி நான் கேட்ட கேள்விகளுக்கு அந்த மறுமொழியில் பதில் சொல்லுங்கள்.
// இதையும் நம்புகிறீர்களா வெங்கடேசன்?
நம்பவில்லை. ஜெயவிற்கு கிடைத்தது நியாயமான தண்டனை. மற்றவர் சூழ்சிகளினால் வந்ததல்ல அது.
சண்டாளன் என்ற வார்த்தையை இதுவரை திராவிட இன பழங்க்குடி மக்கள் மீது சுமத்தி இருந்திர்கள். இப்போது உங்கள் பார்பனிய கருத்தியல் வரலாற்று அடிப்படையில் உங்கள் பார்பனர்கள் மீது அவர் சுமத்துகின்றார். அதனை எதிகொள்ளாமல் ஏன் இந்த பூலம்பல் வெங்கட் !
//அஜாதசத்ருவின் மறுமொழி 46.1 படித்துப் பாருங்கள். அஜாமிளன் கதையை ஜாதி ரீதியில் தான் விமர்சனம் செய்கிறார். அதற்கான மறுமொழி அது. //
அவர் எப்படி சொல்வார்? சீமத் பாகவத புத்தகம் தேடிக்கொண்டிருப்பார்! நெட்டில் ஆர் எஸ் எஸ் வெர்சன் தானே இருக்கும்? அம்பிகளும் செர்ந்து தேடுவதாக வதந்தி!
/இந்து மதம் என்பதனுள் பலவித கருத்தக்கள் அடங்கியுள்ளன. எல்லாவற்றையும் ஏற்கவேண்டும் என்றோ, எல்லாவற்றையும் நிராகரிக்க வேண்டும் என்பதோ இல்லை./2G பற்றி நான் கேட்ட கேள்விகளுக்கு அந்த மறுமொழியில் பதில் சொல்லுங்கள்.
உண்மைதான்!நல்லதை மட்டுமே பார்த்து அவற்றை பேணலாம்! தீயவற்றை, குறைந்த பட்சம், ஒப்புகொண்டு கண்டிக்கலாம் தானே! இந்துத்வா வாதிகளிடம் அந்த மனப்பாங்கை எதிர்பார்க்கலாமா? வோட்டுக்காக மட்டுமே இந்தூ என்ற போர்வை ஏன்?
/அஜாமிளன், 2G, ஜெயா எல்லாத்தையும் எதுக்கு மிக்ஸ் பண்றீங்க? 2G பற்றி நான் கேட்ட கேள்விகளுக்கு அந்த மறுமொழியில் பதில் சொல்லுங்கள்./
அஜாமிளான்,நந்தனார், வள்ளலார், ஆள்வார்கள்,நாயன்மார்கள் கதை எல்லாவற்றிலும் பார்பனீயம்/சாதியம் நுழைந்துள்ளது ! 2-G வழக்கை இழுத்தது நீங்கள் தானே: அதன் விசாரணை முடிந்து, தண்டனை அளிக்கப்பட்டால், தானே உண்மை வெளிவரும்! அதிகார பூர்வமாக! அதுவரை பொறும் பிள்ளாய்!
//2G வழக்கில் அலைவரிசியை ஏலத்தில் விடாமல் முன்பிருந்த பாஜக ஆட்சியில் நடைமுறையில் இருந்த அதே முறையை பின்பற்றியதால் அரசுக்கு வருமான வாய்ப்பு குறைந்துள்ளதாகவும் அதனை ஏலத்தில் விட்டிருந்தால் அதிக விலைக்கு விற்கப்பட்டு இருக்கும் என்றும் அதிக விலைக்கு ஏலத்தில் விட்டால் யூகமாக ஒரு தொகையை முடிவு செய்து 1,75,000 கோடி அரசுக்கு இலாபமாக இருந்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. //
பாஜக ஆட்சியை பின்பற்றுவதில் ஒற்றுமை இருந்தாலும், இடைப்பட்ட ஆண்டுகளில் செல்பேசி பயன்பாடும் அதன் பரவலும் பலமடங்கு அதிகரித்து லாபகரமான முதலீட்டுக்கு போட்டியை ஏற்படுத்தியிருந்தது என்பதும் ஊகமா..?!
// இந்த தொகையே யூகமாக கொடுக்கப்பட்ட தொகை தானே. //
சி.ஏ.ஜி. அறிக்கையின் ஊகம் என்பது அஜாதசத்ரு அய்யாவின் மூளையில் உதிக்கும் கற்பனை போன்றதல்ல.. எக்ஸ்ட்ராபோலேசன் என்பது அறிவியல் பூர்வமான கணக்கீட்டு முறையே..
// ஒருவேளை அதிக விலைக்கு அலைவரிசை விற்கப்பட்டிருந்தால் அதனை அதிக விலைக்கு வாங்கியவர்கள் அந்த தொகையை மக்கள் தலையில் தானே கட்டியிருப்பார்கள்?//
அரசுக்கு கொடுக்கவேண்டிய ஏலத் தொகையில் ஒரு பகுதி ஏலம் தவிர்க்கப்பட்டதால் யார் யாருக்கு திருப்பி விடப்பட்டது, ராசா அண்ட் கோ.வுக்கு மட்டும்தானா, இல்லை முழு ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும் பங்கு பிரிக்கப்பட்டதா, எவ்வளவு போனது, அதன் சுமையை யார் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் கணக்கில் சேராதா..?! எல்லாம் ஊகம் என்று மறுதலித்தால் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று முழுப்பொறுப்பையும் ராசாவின் தலையில் போடுவதாகாதா..?!
65 கோடிக்கு ஜெ-வுக்கு 4 வருடம் என்றால் பல்லாயிரம் கோடிக்கு என்ன கிடைக்கும்..? இப்போதே சி.ஏ.ஜி. அறிக்கை ஒரு பார்ப்பன சதி என்று துண்டு போட்டு வைக்கிறார் அஜாதசத்ரு.. அப்போதுதான் வினவு முழுவதும் லபோதிபோ என்று கூப்பாடு போட வசதியாயிருக்கும்..
//எக்ஸ்ட்ராபோலேசன் என்பது அறிவியல் பூர்வமான கணக்கீட்டு முறையே..// எந்த ஊரிலய்யா எக்ஸ்ட்ராபோலேசன் அறிவியல் பூர்வமான கணக்கீட்டு முறை? சி வி சி வழிகாட்டு நெறிகளீன் படி அந்த முறையில் ஜாஸ்டீபிகேசன் செய்யக்கூடாது! அது ஒப்புக்கொள்ளப்பட்ட மதிப்பீடு முறை அல்ல!
//எக்ஸ்ட்ராபோலேசன்:// எந்த ஊரிலய்யா எக்ஸ்ட்ராபோலேசன் அறிவியல் பூர்வமான கணக்கீட்டு முறை? சி வி சி வழிகாட்டு நெறிகளீன் படி அந்த முறையில் ஜாஸ்டீபிகேசன் செய்யக்கூடாது! அது ஒப்புக்கொள்ளப்பட்ட மதிப்பீடு முறை அல்ல! அறுவது கோடிக்கு பதினெட்டு வருடம் இழுத்தடிப்பு; 1,76,000 எத்தனை வருடம் இழுத்தடிக்கலாம்-இது எக்ஸ்ட்ராபொலசன்!
// எந்த ஊரிலய்யா எக்ஸ்ட்ராபோலேசன் அறிவியல் பூர்வமான கணக்கீட்டு முறை? //
ஹி..ஹீ.. சுத்தமா சூனியம்தானா..
// சி வி சி வழிகாட்டு நெறிகளீன் படி அந்த முறையில் ஜாஸ்டீபிகேசன் செய்யக்கூடாது! //
அந்த வழிகாட்டு நெறிகளை முழுமையாக காட்டுங்கள் பார்க்கலாம்.. உங்களது தில்லுமுல்லு எக்ஸ்ட்ராபோலேசன்களுடன் கூடிய பம்மாத்து ஜஸ்டிபிகேசன்களை தனது முறையான சரியான எக்ஸ்ட்ராபோலேசன்களுடன் ஒப்பிட்டு கேள்வி கேட்பதுதான் தணிக்கைத் துறையின் வேலை..
// அது ஒப்புக்கொள்ளப்பட்ட மதிப்பீடு முறை அல்ல! //
யாரால்.. உங்களாலா..?!
இங்கே ”அறுவது கோடிக்கு பதினெட்டு வருடம் இழுத்தடிப்பு; 1,76,000 எத்தனை வருடம் இழுத்தடிக்கலாம்-இது எக்ஸ்ட்ராபொலசன்!” என எக்ஸ்ட்ராபோலேசன் என்ற பெயரில் நீங்கள் அடிக்கும் இது போன்ற கூத்துகள்தான் ஒப்புகொள்ளப்படுவதில்லை..
/….தனது முறையான சரியான எக்ஸ்ட்ராபோலேசன்களுடன் ஒப்பிட்டு கேள்வி கேட்பதுதான் தணிக்கைத் துறையின் வேலை../
இது முறையான தணிக்கை முறை அல்ல என்பதை ரிபோர்ட் தயாரித்த அதிகாரியை வற்புறுத்தியே ராய் திருத்தி எழுதி வாங்கினார் என்பது , அந்த அதிகாரியே அளித்த சாட்சியம்!
விரிவான விசாரணையில் உண்மை வெளிவரும்!
https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=3&cad=rja&uact=8&ved=0CC0QFjAC&url=http%3A%2F%2Fcvc.nic.in%2FCOMMON%2520IRREGULARITIES.pdf&ei=WMYwVOfeJ8WSuASQ7oKABg&usg=AFQjCNHxR5ptBIkTwydGpwVF5vQhUxBb9w
para 6.0 common irregularities – Estimates
“5.0 Estimated Rates
It was observed that the estimated rates are being worked out in an
unprofessional and perfunctory manner, at times by extrapolating the price of
the lowest capacity equipment or by applying a uniform yearly compounded
escalation over the prices of similar equipment purchased few years ago.
Consequently, the inflated estimated rates prepared by the Organizations
resulted in acceptance and payment of higher prices to the firms.
• As the estimated rate is a vital element in establishing the reasonableness
of prices, it is important that the same is worked out in a realistic and objective
manner on the basis of prevailing market rates, last purchase prices, economic
indices for the raw material/labour, other input costs, IEEMA formula, wherever
applicable and assessment based on intrinsic value etc.”
http://cvc.gov.in/vscvc/purguide.pdf
இதில் எங்கே எக்ஸ்ட்ராபோலேட் செய்யக்கூடாது என்றிருக்கிறது..? எப்படி செய்யக்கூடாது என்றுதானே மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.. மேலும் IEEMA formula-வே சரியான கூறுகளுடன் எக்ஸ்ட்ராபோலேட் செய்யும் சூத்திரம்தான் அய்யா..
//மேலும் ஈஏஏMஆ fஒர்முல-வே சரியான கூறுகளுடன் எக்ஸ்ட்ராபோலேட் செய்யும் சூத்திரம்தான் அய்யா..//
சி ஏ ஜி எந்தா சூத்திரத்தின்படி எக்ஸ்ட்ராபோலேட் செய்தார் அய்யா! ஆதாரத்துடன் விளக்குங்களேன்! பிரம சூத்திரமோ?
எந்த சூத்திரம் என்றாலும் அது உங்களைப் பொறுத்த வரையில் பிரம சூத்திரமாகிவிடுமே அய்யாஜி..
அம்பி! அவ்வளவு தானா! சரக்கு திர்ந்துவிட்டதா?
இந்த கட்டுரையில் வெறும் வசவுகள் மட்டுமே நிறைதுள்ளது.பார்ப்பன ஜெயாவை பார்ப்பன சு.சாமி ஏன் வழக்கு தொடுத்தார்?பார்ப்பனர்களுக்குள்ளும் அதிகாரப்போட்டியா?ஆளும்வர்க்க கட்சியின் தலைவியை ஆளும்வர்க்கம் தண்டித்ததர்க்கு சரியான காரணம் என்ன?
இதுபோன்ற ஒருதீர்ப்பையாவது 2ஜி வழக்கில் கேட்டுப்பெறும் போராட்டத்தை ம.க.இ.க.நடத்துமா!
ஜெயலலிதா ஆட்சியின்போது தாமிரபரணி ஆற்றுக்காக போராடிய ம.க.இ.க.,தி.மு.க.ஆட்சியின்போது என்போராடவில்லை.
உங்கள் பார்ப்பன பனியா அரசியல் என்னசொல்கிறது.
Shanmugasundaram உங்கள் பார்பன அடிமைத்ததை விடுத்து கட்டுரைய வாசிக்கவும்.
இங்கு பேசு பொருள் வழங்கப்படாத வாப்நீதியைப் பற்றியும். அதை வன்முறையாக மாற்றும் அதிமுகவைப் பற்றியும் தான்.
நன்றி.
இந்த கட்டுரையில் வெறும் வசவுகள் மட்டுமே நிறைதுள்ளது உண்மைதான்! மலை முழுங்கி மகாதேவி, பார்ப்பன அகங்காரத்தின் அடையாளம், ஒரு திமிர்பிடித்த ரவுடி கும்பலின் தலைவி, 18 ஆண்டுகால,இழ்த்தடிப்பிற்கு பின் தண்டிக்கப்பட்டு புதியநீதி சகாப்தம் தொடங்கியுள்ளது! இந்திராவை எமெர்ஜென்சி கொடுமைகளுக்கு ஆக அரசியல் புறக்கணிப்பு செய்ததை போல ஜயாவிற்கும் நடக்கும்! பார்பனநியாயம் பேசும் ஜால்ராக்களுக்கும் வயிற்றெரிச்சல் காரர்களுக்கும் தந்தி, மலர் இதழ்கள் உள்ளனவே!
ஊர் அறிந்த கொள்ளையை ஊர் அறிய வன்முறையாக மறுக்கும் நீதியே அம்மா உணர்த்தும் உலகம் சதுரம் எனும் தத்துவம்.
பத்தி பத்தியாக எழுதப்பட வேண்டிய இந்த சரித்திரம், என்ன காரணத்தாலோ, ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டிய இந்த வரலாறு, பக்கம் பக்கமாக ஊடகங்கள் எழுத வேண்டும். ஆனால், கனத்த மவுனம் காக்கின்றன!!!!
ஜெயலலிதாவின் வழக்கு குறித்து எழுதாவிட்டால் ஜெயலலிதா காப்பாற்றப்படுவார் என்பது போன்ற பொய்யான நம்பிக்கையின் அடிப்படையில் இந்த ஊடகங்கள் மவுனம் காக்கின்றன. ஜெயலலிதாவின் 91 ஆட்சியிலும், 2001 ஆட்சியிலும், பல்வேறு ஊழல்கள் வெளி வந்ததற்கான ஒரே காரணம் ஊடகங்களின் அற்புதமான பணிதான். ஆனால், 2011 ஆட்சியில் ஊடகங்கள் மிக மிக மோசமான துரோகத்தை தமிழகத்துக்கு செய்து கொண்டிருக்கின்றன. ஊடகங்களின் மவுனம், இந்த ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து”
எங்கட தலைவி சீக்கிரம் விடுதலை ஆவார்.அதற்கு எங்கட தலைவர் சைமன் தோளில் டாங்கிகளை சுமந்து போராடுவார்.
இவ்வழக்கின் தீர்ப்பின் மீதன்றி, வினவு பார்வையின் மீது இரண்டு விமர்சனங்கள்.
1. இன்றைய இந்திய சூழலில், பதவியில் இருக்கும் ஒரு மாநில முதல்வர் தண்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்க விஷயம்தான். “இதெல்லாம் ஒரு மேட்டரா” என ஒதுக்கிவிட முடியாது. சரி, நீங்கள் என்ன தண்டனை விதிக்க வேண்டும் என பரிந்துரைக்கிறீர்கள்? துரிதமாக விசாரணை நடந்து, நீங்கள் பரிந்துரைக்கும் தண்டனையை இவ்வளவு அதிகாரமுள்ள பதவியில் உள்ள வேறு யார் இதுவரை பெற்று இருக்கிறார்கள்? அவ்வாறு இல்லையாயின், ஒரு மாநில முதல்வர் இத்தண்டனை பெறுவது முக்கியத்துவம் வாய்ந்தது இல்லையா? இருக்கும் சூழ்நிலை தான் ஒரு நிகழ்வின் முக்கியத்துவத்தை தீர்மானிக்கும். ஒலிம்பிக்சில் அமெரிக்கா, சீனா நூறு-இருநூறு பதக்கங்கள் பெறுகின்றன என்பதற்காக, இந்தியா பத்து பதக்கம் வாங்கினால், அந்நிகழ்வை இகழ்ந்து புறந்தள்ளிவிட முடியாது.
2. 2G வழக்கை முதலாளித்துவ ஊழல் என விரித்து பேசி, அதில் முக்கிய புள்ளியாக இருந்த ஆ. ராஜாவை “கமிஷன் ஏஜன்ட்” என சுருக்கினீர்கள். ஜெயா இவ்வளவு சொத்து வாங்க, முறையற்ற வகையில், பணம் கொடுத்தோர், சாதாரண மனிதர்களாக இருக்க முடியாது. ஆதாயத்தின் மீது கண்வைத்த முதலாளிகளாகவே இருக்க முடியும். எனில், முன்னதை முதாளித்துவ ஊழல் என்றும், பின்னதை தனிமனித ஊழலாகவும் எப்படி சுருக்கிப் பார்க்கிறீர்கள்? முன்னவர் வெறும் கமிஷன் ஏஜன்ட் ஆகவும், பின்னவர் மாபெரும் ஊழல்வாதியும் ஆனது எங்கனம்? என்னளவில் இருவரும் ஒன்றே. ஆனால், வினவு ராஜாவை மறைத்துவிட்டு, ஜெயாவை முன்னே தள்ளுகிறது. துக்ளக் ஜெயாவை மறைத்துவிட்டு, ராஜாவை முன்னே தள்ளுகிறது. இரண்டுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? நான் ஊன்றிப் படிக்கும் இரண்டு பத்திரிகைகளும் இவ்வாறு சார்பு நிலை எடுப்பதில் எனக்கு வருத்தம்.
Venkatesan,
//முன்னவர் வெறும் கமிஷன் ஏஜன்ட் ஆகவும், பின்னவர் மாபெரும் ஊழல்வாதியும் ஆனது எங்கனம்? என்னளவில் இருவரும் ஒன்றே.//
ராசா மற்றவர்களால் பயன்படுத்தப்பட்டவர் (Use & throw). ஜெயா அப்படியில்லை. முன்னவர் கைது செய்யப்படும் போது எந்த கூத்துக்களும் நடக்காததையும் பின்னவர் கைதின் போது நடந்த நடக்கும் நடக்கப்போகும் கூத்துக்களும் பார்த்தேனும் சிறு வித்யாசத்தையேனும் கண்டுபிடிக்க முயற்சி செய்யவும். உன்மையில் இநத இரு படங்களுக்கும் இடையே 6 வித்தியாசம் இருக்கிறது.
வெங்கடேசன்,
ஆ. ராசா சம்பந்தப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஊழலும், ஜெயா-சசி ஊழலும் அடிப்படையில் வேறுவேறானவை. இந்தியாவின் பெருமுதலாளித்துவ நிறுவனங்களான டாடா, பிர்லா, ரிலையன்ஸ் ஆகியவையே முந்தையதின் முதன்மை குற்றவாளிகள். இவற்றுக்கு துணைபோகும் வகையில் இருந்தது ஆ. ராசா அல்ல; இந்திய அரசின் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கொள்கை. அதற்கு அடுத்த நிலையில் மன்மோகன், ப.சி ஆகியோர். அதற்கும் அடுத்த நிலையில் தான் ஆ. ராசா. எனவே ஸ்பெக்ட்ரம் கொள்ளையின் குற்றப்பங்கில் ஆ. ராசா A1 அல்ல. A4 அல்லது A5 தான். ஆனால், ஆ. ராசாவை முன்னிலைப்படுத்தி முதலாளித்துவக் கொள்ளை நலனுக்கு ஆதரவான இந்திய அரசின் கொள்கையையும், இந்தியப் பெருமுதலாளிகளுக்கு எதிரான மக்களின் ஆவேசத்தையும் திசைதிருப்பும் திருப்பணியை தேசிய ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் செய்தன. ஆ.ராசாவுக்கு 2ஜியில் பங்கு உள்ளதை விட மேலதிகமாக ப. சிதம்பரத்துக்கு உண்டு. சிதம்பரத்துக்கு எதிராகவும் வினவு இந்த பிரச்சினையில் பெரிதாக எழுதவில்லை. ‘ஆ. ராசாவுக்கு ஆதரவாக வினவு செயல்பட்டது’ போல ப.சிக்கு ஆதரவாகவும் வினவு செயல்பட்டது என்று சொல்ல வருகிறீர்களா?
ஜெயலலிதா வழக்கு சற்றே வேறானது. தனது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி ஊர் சொத்தையும், மக்கள் பணத்தையும் ஒரு கும்பல் மிரட்டி பறித்துக் கொண்டது இது. நீதிபதி குன்காவின் வார்த்தைகளில், It’s a heady mix of power and wealth’. துக்ளக்கையும், வினவையும் நீங்கள் படிப்பதால் நடுநிலையாளர் ஆகி விடமுடியாது. பிரச்சினையின் சமூகவியல் பார்வையை உள்வாங்கிக் கொண்டு வினையாற்றுவதில் அது இருக்கிறது.
அஜாதசத்ரு அவர்களும் , கற்றது கையளவு அவர்களும் நடந்தது ஊழலே அல்ல, உலக நன்மை என்கின்றனர். மாறாக நீங்கள் இது ஊழல் எனச் சொன்னதே உண்மை என நினைக்கிறேன்.
சு சாமி எவ்வளவு முயன்றும் சிதம்பரத்தை ஏன் வழக்கில் சேர்க்க வைக்க முடியவில்லை? மன்மோகன் சிங் இந்த சுண்டல் விநியோக முறைக்கு எதிராக எழுதிய அரசுக் குறிப்புகள் வெளியாயினவே. இந்த முறைகேட்டிற்கு துணை போனதற்காக மன்மோகன் சிங்கிற்கு என்ன லாபம் கிடைத்தது? ராஜா எதற்காக இந்த முறைகேட்டுக்கு ஒப்புக்கொண்டார்? அதனால் அவருக்கு கிடைத்த பிரதிபலன் என்ன? இந்த ஊழலினால் அரசுக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டது என நீங்கள் கருதுகிறீர்கள்? ராஜாவிற்கு இன்ட சுண்டல் முறையினால் அரசுக்கு நஷ்டம் ஏற்படும் என தெரிந்திருந்தது என நினைக்கிறீர்களா? அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்துவதற்கும், ஊர் சொத்தை அபகரிப்பதற்கும் என்ன வித்தியாசம்?
// இந்திய அரசின் கொள்கையையும், இந்தியப் பெருமுதலாளிகளுக்கு எதிரான மக்களின் ஆவேசத்தையும் //
மக்கள் எப்போது ஆவேசம் அடைந்துள்ளனர்? நிலக்கரி ஊழலில் என்ன ஆவேசம் ஏற்பட்டது?
//இந்த ஊழலினால் அரசுக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டது என நீங்கள் கருதுகிறீர்கள்? ராஜாவிற்கு இன்ட சுண்டல் முறையினால் அரசுக்கு நஷ்டம் ஏற்படும் என தெரிந்திருந்தது என நினைக்கிறீர்களா? அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்துவதற்கும், ஊர் சொத்தை அபகரிப்பதற்கும் என்ன வித்தியாசம்?//
இதன்படி பார்த்தால் அரசின் கொள்கைகள் அனைத்துமே அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தும் திட்டங்கள்தான். ஒவ்வொரு திட்டமும் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கான வழிகளை ஏற்படுத்தி கொடுப்பதுதான். அதனால் ராசாவை ஜெயாவுடன் ஒப்பிடுவதே ஒரு முறைகேடுதான்.
ராசாவை இங்கு யோக்கிய சிகாமணியாக குறிப்பிடவில்லை. ஆனால் அதே சமயம் ராசாவை ஒப்பிடுவதின் மூலம் ஜெயாவின் குற்றத்தன்மையின் வீரியத்தை குறைத்து மதிப்பிடுவதற்கே உதவும்.
/மக்கள் எப்போது ஆவேசம் அடைந்துள்ளனர்? நிலக்கரி ஊழலில் என்ன ஆவேசம் ஏற்பட்டது?/
மக்கள் எப்போதய்யா ஆவேசப்பட்டார்கள்? அதிமுக குண்டர்களின் ஆவேசத்தைதான் டீ வீயில் பார்த்தோமே! ஒருவேளை அம்பியும், வெங்கடேசனும் கூட ஆவேசப்பட்டார்களோ? இலங்கைத்தமிழன் செத்தாலும் சரி, இந்திய தமிழன் தோற்றாலும் சரி மக்கள் ஸ்டெடியாக,நமக்கேன் என்று, ‘ராமன் ஆண்டாலென்ன, ராவணன் ஆண்டாலென்ன’ என்றுதானே இருப்பர்!
ஐயா வெங்கடேசன்,
சுப்பிரமணியன் அலைக்கற்றை வழக்கில் நேர்மையான நோக்கத்தில் தான் தலையிடுகிறார் என்று அப்பாவித்தனமாக நம்புவதை பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. சிதம்பரத்துக்கும் காவிப் படைக்கும் அவர் அதிகாரத்தில் இருக்கும் போதே இருள் ஒப்பந்தங்கள் ஏற்பட்டதுண்டு. குறிப்பாக, ஆர்.எஸ்.எஸின் குண்டு வைப்பு அவதாரத்தை மறைக்க அவர் துணை போனார். அலைக்கற்றை ஒதுக்கீடு, விலை நிர்ணயம் ஆகியவற்றில் நிதியமைச்சக ஒப்புதல் இருந்தது.
மன்மோகன்சிங் சில கடிதங்கள் மூலம் ஆ. ராசாவை கேட்டுக் கொண்டதாக வெளியானவை மன்மோகன் சிங் இந்த பிரச்சினையில் கடைபிடித்த தந்திரம். ஒரு பக்கம் கடிதங்கள் எழுதிக் கொண்டே மற்றொரு பக்கம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதற்கு முழு ஒப்புதலையும் வழங்கினார். மன்மோகன் சிங்கின் கடிதங்கள் சில தொழில்நுட்ப தவறுகளை நேர் செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டதே அன்றி வேறல்ல. பிரதமருக்கு தெரியாமல், அவர் அனுமதி அளிக்காமல் சுயமாக அலைக்கற்றை ஒதுக்கீடை தான் மேற்கொள்ளவில்லை என்று ஆ. ராசா திரும்பதிரும்ப சொன்னதை வசதியாக மறந்து விட்டீர்கள்.
மட்டுமல்லாமல், இந்த பிரச்சினை தொடர்பாக அமைக்கப்பட்ட PAC விசாரணை ஆ. ராசாவின் கருத்து என்ன என்று கேட்காமலே முடிந்தது. தனது கருத்தை கேளுங்கள் என்று பலமுறை திமுக கேட்டுக் கொண்ட பிறகும் ஆ. ராசா வாக்குமூலம் பெறப்படாதது ஏன்?
ஆ. ராசாவுக்கு அலைக்கற்றை ஊழலில் சம்பந்தமில்லை என்று வாதிடுவது எனது நோக்கமல்ல. திமுகவிற்கே அந்த துணிவு இல்லை. பிறகு ஏன் இந்த வாதங்கள் வைக்கப்படுகின்றன என்பதற்கு அந்த யு.பி.ஏ 2 காலச்சூழலை நாம் கவனிக்க வேண்டும். அது என்ன?
அலைக்கற்றை ஊழல் ஒரு பக்கம் வெடித்துக் கிளம்பிய போது மக்களின் கவனம் ஊழல் கார்ப்பரேட் முதலைகள் மீது குவிவதற்கு எதிராக போர்ட் பவுண்டேசன் துணையுடன் ஊழல் எதிர்ப்பு இயக்கம் ஷங்கர் படத்தின் பிரம்மாண்டத்தை மிஞ்சும் வண்ணம் மேலெழுந்தன. அன்னா ஹசாரே, கேஜ்ரிவால், மனிஷ் சிசோடியா ஆகியோர் திடீரென ஊடக கவனத்தை பெற்று அரசியல்வாதிகள் அனைவரும் ஊழல்வாதிகள் என்று பலூன்களை ஊதி பெருக்கி விட்டனர்.
மக்களுக்கு நேரடியாக பரிச்சயம் இல்லாத கார்ப்பரேட் முதலைகளின் முகத்தை மறைத்து அரசியல்வாதிகளை மட்டுமே வில்லனாக சித்தரித்தன கார்ப்பரேட் ஊடகங்கள். பெருமுதலாளிகள்-அதிகாரவர்க்கம்- அரசியல்வாதிகள்- கார்ப்பரேட் ஊடகங்கள் என்று கேடான ஒரு புதிய பிணைப்பு உருவானது. மறுகாலனியாதிக்கம் உருவாக்கிய இந்த புதிய கொள்ளை ஒருங்கிணைப்பு ஏதேனும் ஒரு கொள்ளையில் அம்பலப்படும் போது பழியை அரசியல்வாதிகள் மீது மட்டும் சுமத்தி விட்டு மற்ற பிரிவுகள் தப்பிப்பதை செய்கின்றன.
இங்கு தான் ஆ. ராசாவின் தோளில் ஒரு லட்சத்து எழுபத்தெட்டாயிரம் கோடி ஊழலின் பாரத்தை மொத்தமாக கட்டி விட்டனர். எனினும் அது இயேசு சுமந்த சிலுவை அல்ல; இரக்கப்படுவதற்கு. முதன்மை குற்றவாளிகள் தப்பிப்பது மட்டுமல்லாமல் அவர்கள் மேலும் தமது சுரண்டலை ஒவ்வொரு துறையாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் போது ஆ. ராசாவுடன் நமது அறக்கோபத்தை முடித்து விடுவது எப்படி சரி?
இதில், நீங்கள் மதிப்பு வைத்திருக்கும் சோ. ராமசாமியிடம் வருகிறேன். இந்த பார்ப்பனக் கிழம் ஜெயலலிதாவின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சியின் போது ஜெயா ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். ஊதாரித்தனமாக நடத்தப்பட்ட ஜெ. வளர்ப்புமகன் திருமணத்தை கடுமையாக விமர்சித்தார். 96 தேர்தலில் திமுகவை ஆதரித்தார். அதன் பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவை ஆதரித்தார். பிறகு அதிமுக தலைவி ஜெயலலிதாவை திடீரென சந்தித்தார். அப்போது அவர் சொன்னது என்ன தெரியுமா? தண்ணீரை விடவும் ரத்தம் அடர்த்தியானது (Blood is thicker than water) என்றார். ஜெயா சசிகலா கும்பலை 2011-ல் துரத்திய போது மிடாஸின் இயக்குனர் ஆனார். இந்த பார்ப்பன அற்பம் நடத்தும் பத்திரிக்கையை படித்துக் கொண்டு அவர் பாடிய அறம் வினவில் இல்லை என்று அங்கலாய்க்கிறீர்களே, வெங்கடேசன்.
யூ டூ வெங்கடேசன்? அம்மா செய்தது அடாவடி ஊழல்! 2G ஊதிபெருக்கப்பட்ட பலூன்! சுக்ராம் புண்ணியத்தில் ஒருநிமிடத்திற்கு ஆறு ரூபாய் வரை கொள்ளையடித்த அம்பானியும், டாடா வும், மாறனால் ஒருநிமிடத்திற்கு அறுவது காசுகளுக்கு செல்பொன் கட்டணம் குறைக்கப்பட்ட ஆத்திரத்தில், பொறி வைத்து ராஜாவையும், கனியையும் சிக்க வைத்தனர்! கற்பனையாக 1,76,000 என்று பார்பன அதிகாரிகள் கூறினாலும், அது கற்பனையான இழப்பு தான்; பொதுமக்கள் அடைந்த பயனை கணக்கிட்டால் பலலட்சங்கள் , டாடா, அம்பானி கொள்ளையர்களிடமிருந்து மீட் கப்பட்டது தெரியவரும்! கலைஞர் டீவிக்கு 200 கோடி கடன் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது, ஊழலாகாது! பார்பன ஊடகங்களே கோயபல்ஸ் பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றுகின்றனர்! ‘நமது எம் ஜி யார்’ பத்திரிகை 1300 கோடி லாபம் சம்பாதித்தது நம்ப முடிகிறதா? உங்களை அறிவு ஜீவி என்றல்லவாநினைத்திருந்தேன்? கடசியில் ஒரு அம்மா ஜால்ரா தான் என காட்டி விட்டீரே!
தமிழனுக்கு எப்பொழுதும் மானம் பெரியது. ஊழலும் அது போலத்தான்.
எப்பொழுதும் அம்மா அதாவது வெண்நிற ஆடை அம்மா தேவையில்லாத கூட்டைத் தவிர்தே வந்திருக்கிறா..
அடுத்த சினிமா நடிகர் விஜயகாந் எதிர்கட்சியாக வந்த போதும் அதற்குரிய கண்ணியம் வழங்கப்பட வில்லை. அவர்களுடைய சினிமாபாணி டயலக் எல்லாவற்றையும் விட்டு விடுவோம்.
எங்கோ எப்பவோ வாசித்ததாகவோ கேட்டதாகவோ ஒரு ஞாபகம்.
சாதாரண ஆசியர் பதவிக்கு ஒரு எம்.எல்.ஏயிடம் ஒருவர் வேண்டுகோள் விடுகிறார் நான் உங்ககட்சிக்கா பாடுபட்டவன் என சொல்ல… நானும் இந்த பதவிக்கு கோடிக்கணக்கில் செலவழித்துதான் வந்தேன் போட்ட முதலை எப்படி ஐயா திருப்பி எடுப்பது என்பது மாதிரி எம்.எல்.ஏ கேட்பார்.
இப்படித்தான் இருக்கிறது இந்திய-தமிழ்நாட்டு அரசியல்.
எங்கேபார்த்தாலும் இனித்திடும் காட்சி என்பது போல எங்கே பார்த்தலும் ஊழல் மயம்.
கலைஞர் கருணாதியுடன் அம்மா கூட்டுவைத்திருப்பாரே ஆனால் இந்த நான்கு வருட சிறைவாசம் அவமானம் இவருக்கு கிட்டியிராது.
எல்லா ஆலோசணைகளையும் இந்த மலைவிழுங்கி மகாதேவன் சொல்லியிருப்பார் “அகப்படாமல் எப்படி பதுக்குவது” என்பது பற்றி.
பலநீதிபதிகளை கண்டு 18 வருடங்கள் இழுபட்ட வழக்கு நரேந்திரமோடி அவர்களால் தான் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இது சினிமாவேறு அரசியல்வேறு என்பதை நினைவு படுத்துமா?
இல்லை நரேந்திரமோடியின் சித்துவிளையாட்டு இந்தியஅரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.அது வரை எடுத்ததுக்கெல்லாம் பிராமணீயம் மோசம் செய்து விட்டு போன்ற கூச்சலை எழுப்பாதிருப்போம் ஆகா.
அஜாதசத்ரு,
இது அம்மா ஜால்ரா அல்ல. வினவின் திமுக சார்பு நிலை பற்றிய விமர்சனம் மட்டுமே.
“நமது எம்ஜியார்” பத்திரிகை மூலம் ரூ 14 கோடி கிடைத்ததாக சொல்ல, இந்த சந்தா எல்லாம் வழக்கு காலத்தின் போது போலியாக உருவாக்கப்பட்டவை என கூறி நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. “நமது எம்ஜியார்” மட்டுமல்ல, முரசொலி, சங்கொலி, தகர டப்பா ஒலி போன்றவற்றையும், எந்த ஒரு புத்தகக் கடையிலும் கண்டதில்லை. கழகக் கண்மணிகள் தவிர வேறு யாரும் இவற்றை சீண்டுவதில்லை போலும். இவற்றின் மூலம், சந்தா கிடைத்தாலும், எல்லா பணமும் தபால் செலவுக்கே சரியாகப் போய் விடும். நான் நேற்று பிறந்த விடலைப் பையன் இல்லை. அம்மா முதல் ஆட்சிக் காலத்தில் அம்மாவின் பேரணி கடந்து செல்ல வழி விட்டு பல மணி நேரம் ரோட்டோரம் ஒதுங்கி நின்றவன். இவர்கள் அடித்த கொட்டமெல்லாம் மறந்து விடவில்லை. இந்த வழக்கின் தீர்ப்பின் மீது எனக்கு எந்த விமர்சனம் இல்லை. ஒழுங்காக வழக்கு நடந்தால், மேல் முறையீட்டிலும் தப்பிக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். அதில் எனக்கு விசனமும் இல்லை.
——————————————————————————–
உங்களுக்கு விருப்பமில்லாத விஷயத்தை வெளியே சொன்னதால், சிவிசி அதிகாரிகள் “பார்ப்பனர்கள்” ஆகி விட்டார்கள். ஜெயா வழக்கு நீதிபதியை “கன்னட கிருத்தவ மதவெறி குருடன்” என சாணி வாரி அடிக்கும் இந்து மகா சபா ஆசாமிகளுக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு? சிவிசி அறிக்கையில் என்ன குறை கண்டீர் என்பது பற்றி மட்டுமல்லவா பேச வேண்டும்? நிலக்கரி ஊழல் பற்றிய அறிக்கையும் பார்ப்பனீய நோக்கோடுதான் வெளியிட்டார்களா? நீதிமன்றம் ஏன் 2G ஒதுக்கீடுகள், நிலக்கரி ஒதுக்கீடுகள் இரண்டையும் ரத்து செய்தது?
“200 கோடி கடன் வெளிப்படையானது” என தன்னெஞ்சறிந்து பொய் சொல்கிறீர்களே! கடன் வாங்க வேறு ஆள் கிடைக்கவில்லையா? முன்பே கடன் கொடுத்தவர்களுக்கு, பிற்பாடு 2G வழக்கில் சம்பந்தம் உண்டானது தற்செயலா? கலைஞர் டிவி தொடங்கியபோது வெளியே வராத இந்த கடன் பற்றிய செய்தி, 2G வெளியே வந்தபின் தெரிந்தது எவ்வாறு? கடன் வாங்கியதற்காகவா கனிமொழியை ஜாமீன் கொடுக்காமல் ஆறு மாதம் சிறையில் வைத்தது நீதிமன்றம்?
——————————————————————————–
மக்களுக்கு சல்லிசாக செல்போன் பேச வேண்டும் என்ற உலக நன்மை கருதியா ஏலம் விடாமல் இருந்தார்கள்? இந்த உலக நன்மை பற்றி யார் யார் எல்லாம் கூடி முடிவெடுத்தார்கள்? வெளிப்படையான விவாதம் நடந்ததா? பாராளுமன்றத்தில் பேசப்பட்டதா? ஒதுக்கீடு பெற்ற உப்புமா கம்பெனிகள், அரசுக்கு செலுத்திய தொகையை விட பல மடங்கு தமது கம்பெனி பங்குகளை விற்றதன் மூலம் பெற்றது உலக நன்மையா? தயாநிதிமாறன் காலத்திலேயே செல்போன் கட்டணம் குறைந்தபின், 2G ஸ்பெக்ட்ரம் சல்லிசாக எதற்கு விற்றார்கள்? 2G ஒதுக்கீட்டு முன் இருந்த செல்போன் கட்டணம், அதற்கு பின் இருந்த செல்போன் கட்டணம் ஒப்பீடு செய்ய முடியுமா? உலக நன்மை கருதி செய்யப்பட்ட 2G ஒதுக்கீடுகளை நீதிமன்றம் ஏன் ரத்து செய்தது?
2G உலக நன்மைக்கானது என்றும் சொல்கிறீர்கள்? மறுபுறம் ராஜாவை பொறி வைத்து பிடித்தார்கள் என்றும் சொல்கிறீர்கள்? எது உண்மை? யார், எவ்வாறு ராஜாவை பொறி வைத்து பிடித்தார்கள் என விளக்க முடியுமா? உங்கள் கருத்துப்படி, மாறன் காலத்துக்கு முன் செல்போன் முதலாளிகள் நிறைய லாபம் பார்த்தனர். அவரது காலத்தில் லாபம் குறைந்தது. எனவே பழிவாங்க முடிவு செய்தனர். ராஜாவை அணுகி, அவரை ஏமாற்றி 2G ஸ்பெக்டரத்தை காஞ்சிப் பேரருளாளன் கோவில் புளியோதரை போல வினியோகிக்க சம்மதிக்க வைத்தனர். அவரோ, இது உலக நன்மை என்று கருதி, இந்தத் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டார். மேலும், ஒதுக்கீடு தொடர்பான தேதிகளில் தகிடுதத்தம் செய்யவும் ஒப்புக்கொண்டார். பின்னர், இந்த முதலாளிகள் சிவிசியை அணுகி, மாபெரும் ஊழல் என்று அறிக்கை தர வைத்தனர். பார்ப்பனர்களான அவர்களும் ஒப்புக் கொண்டார்கள். ராஜா மாட்டிக்கொண்டார். இதற்கு இடையே கலைஞர் டிவி தொடங்க 200 கோடி தேவைப்பட்டது. அதை இதே முதலாளிகளிடம் கடனாகப் பெற்றனர். இதை காரணம் காட்டி ராஜாவையும், கனிமொழியையும் சிறைக்கு அனுப்பினர். முடிவாக பார்ப்பன உச்சநீதிமன்றத்தை அணுகி தமக்கு கிடைத்த ஒதுக்கீடுகளை ரத்து செய்து கொண்டனர். சன் டிவி சீரியல் பார்ப்பது போல் உள்ளது. சரி, இந்த கூற்றுகளை தகுந்த ஆதாரங்களோடு நிரூபிக்க வேண்டுகிறேன்.
அஜாதசத்ருவை முன்வைத்து எழுதிய சுவிசேஷம் முற்றும். வினவுவை முன்வைத்த சுவிசேஷம் மறுபடி நேரம் கிடைக்கும்போது தனியாக எழுத திட்டம்.
/வினவின் திமுக சார்பு நிலை பற்றிய விமர்சனம் மட்டுமே./
வெங்கடேசன்! வினவின் தி மு க சார்புநிலை என்று எதை கருதுகிறீர்கள்?
கீழ்கோர்ட், ஸ்பெஷல் கோர்ட், அய்கோர்ட், சுப்ரீம் கோர்ட் (இன்னும் அரசியல் சாசன பென்ச் பாக்கியுள்ளது, அப்புறம் செல்லலாம் என் இருப்பார்கள்!) என 18 வருட காலம், இழுத்தடித்த அம்மாவின் ‘திறமை’, தற்போது செல்லாததாகி, நீதி ஒருவாறு மூச்சு வந்து எழுந்து நிற்பதை வினவு வாசகர்கள் நன்றாக எதிரொலிப்பதால் உங்களுக்கென்ன வினவின் மேல் வயிற்றெரிச்சல்?
2G வழக்கை வின்வு விமரிசிக்க தயங்கியதில்லையே! அப்போது ஊத மறந்த சங்கை இப்போது ஊதுவதேன்? இது தான், நீங்கள் எத்தனை தொப்பியிருந்தாலும் , மனசாட்சியற்ற சாதாரண அம்மா ஜால்ராதான் என நிரூபிக்கிறதே!
/மறுபடி நேரம் கிடைக்கும்போது தனியாக எழுத திட்டம்.. / மீண்டும் வருக!
//வெங்கடேசன்! வினவின் தி மு க சார்புநிலை என்று எதை கருதுகிறீர்கள்?//
இது அவர்களது பழக்கதோசம். அதிமுக இல்லைன்னா திமுகன்னு மக்கள் ஆதரிப்பதில்லையா அந்த பழக்கதோசம்.
வெங்கடேசன் உங்கள் குமுறல் ஜெயா பாசத்தாலா? அல்லது பார்ப்பன பாசத்தாலா?
/உங்களுக்கு விருப்பமில்லாத விஷயத்தை வெளியே சொன்னதால், சிவிசி அதிகாரிகள் “பார்ப்பனர்கள்” ஆகி விட்டார்கள்./
இதில் எனது விருப்பம் என்ன இருக்கிறது? அதான், எக்ஸ்ட்ராபொலடெட், கற்பனையாகநீட்டிக்கப்பட்டது என்பதை, அதை தயாரித்த அதிகாரியிடமிருந்து அறிக்கையை துறைதலைவர் திருத்தி வாங்கினார் என்பது சாட்சியமாக பதிவு செய்யப்பட்டுள்ளதே!
மீண்டும் சொல்கிறேன், இது லட்சக்கணக்கான கோடி ஊழல் என்று தேர்தல் சமயத்தில் விளம்பரம் செய்ய வசதியாக டில்லியில் உருவான ஒரு பார்ப்பன கூட்டு சதியே!
/கலைஞர் டிவி தொடங்கியபோது வெளியே வராத இந்த கடன் பற்றிய செய்தி, 2G வெளியே வந்தபின் தெரிந்தது எவ்வாறு? /
பார்பன மீடியாக்கள் தங்களுக்கு எப்போது சதகமோ அப்போது தான் விளம்பரப்படுத்துவார்கள்!நீங்களும் இப்போது தானே குதிக்கிறிர்! அம்மாவுக்கு ஆபத்து வந்தபின்!
/கடன் வாங்கியதற்காகவா கனிமொழியை ஜாமீன் கொடுக்காமல் ஆறு மாதம் சிறையில் வைத்தது நீதிமன்றம்?/
கனிமொழியை வைத்தது நீதிமன்றக்காவலில் தான்! முன்பு அம்மாவை காவலில் வைத்தது போல! தணடனை காவல் அல்ல! அம்மாவையும், நீதிமன்றம் நினைத்தால் ஆறுமாதம் பிணை தராமல் காவலில் வைக்க முடியும் ! பாப்பாத்திக்கு என்று தனி சட்டம் இருப்பதாக தெரியவில்லை!
சாதாரணமாக அறிவு ஜீவி போல பின்னூட்டமிடும் நீஙகள், இப்படி அரற்றுவது ஏனோ?
//மீண்டும் சொல்கிறேன், இது லட்சக்கணக்கான கோடி ஊழல் என்று தேர்தல் சமயத்தில் விளம்பரம் செய்ய வசதியாக டில்லியில் உருவான ஒரு பார்ப்பன கூட்டு சதியே!
//
ha ha ….funny guy..
yes funny guy……….but not a foolish guy!
நான் கேட்ட கேள்விகளில் பாதிக்கு சால்ஜாப்பு சொல்லியாயிற்று. மீதிக்கும் இதே பாணியில் பதில் சொல்லி விடுங்கள. ராஜாவை பொறிவைத்து பிடித்ததாக சொன்னீர்களே. அந்த, பொறி வைப்பு படலத்தையும் விளக்கி விடுங்கள். எலிப்பொறிக்குள் ராஜாவை ஈர்க்க என்ன வடை வைத்தார்கள் என அறிய ஆவல். உங்கள் விளக்கத்தின் நடுநடுவே, “அம்மா ஜால்ரா”, “குடுமி” என மானே தேனே போட்டுக் கொள்ளுங்கள்.
/ராஜாவை பொறிவைத்து பிடித்ததாக சொன்னீர்களே. அந்த, பொறி வைப்பு படலத்தையும் விளக்கி விடுங்கள். எலிப்பொறிக்குள் ராஜாவை ஈர்க்க என்ன வடை வைத்தார்கள் என அறிய ஆவல்./
என்ன வடை என்பதுதானே நீரா ராடியா டேப்புகள்! அதை வெளியிட்டால் டாடாவின் குட்டு உடையுமாம்! ஆகவே, டாடா வின், பிரைவசியை காக்க நீதிமன்றம் வெளியிடாமல் உள்ளது! ஆனால் அம்பிகள் ஆளுக்கொரு வெர்சன் வெளியிட்டு வருகிரார்கள்! (பார்பன) பத்திரிகை சுதந்திரமல்லவா! பாவம் குடிமகனுக்குத்தான் எந்த சுதந்திரமும் இல்லை! வெங்கடேசன்! நீங்கள் எப்போதுமே இப்படித்தானா? இப்பொது தானா?
// ஆனால் அம்பிகள் ஆளுக்கொரு வெர்சன் வெளியிட்டு வருகிரார்கள்! //
அய்யா,
சவுக்கு, தமிழ்நாட்டு ஜுலியன் அசாஞ்சே போன்ற பெயர்களையாவது கேள்விப்பட்டதுண்டா..?!
“வாங்கடா, வந்து பாருங்கடா, இதுதாண்டா அட்ரஸு. வண்டு முருகன், கைதி நெம்பர்- 7402 , பரப்பன அக்கிரகாரா ஜெயில், பெங்களூரு” ன்னு சொல்லி, வம்பிழுக்கிறாரு. அம்மாவுக்கு வெயிட்டா எதுனா வாங்கிக் கொடுக்காம வுடமாட்டாரு போல!ஜெத்மலானி. பெரிய்ய வக்கீல்
வெங்கடேசன் வினவுக்கு எழுதிய சுவிசேஷம்.
சசிகலா வீடியோ காசட் விற்றுக் கொண்டிருந்த அதே தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் மாறன் சகோதரர்களும் வீடியோ காசட் விற்றுக் கொண்டு இருந்தனர். 25 ஆண்டுகளுக்கு பிறகு, மாபெரும் டிவி நெட்வொர்க், விமான சேவை, திரைப்பட தயாரிப்புகள் என தூள் கிளப்புகின்றனர். வினவு அடிக்கடி சுட்டிக்காட்டும் அடானியின் சொத்து மதிப்பு $7 பில்லியன். அனில் அம்பானியின் சொத்து மதிப்பு $6 பில்லியன். கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு $2 பில்லியன். இவர்களின் வெள்ளைக் கணக்குகள் இவை (http://www.forbes.com/india-billionaires/list/#tab:overall). இந்தியாவின் முதல் ஐம்பது பணக்காரர்களில் மாறன் இடம் பெறுகிறார்.
இவ்வளவு சொத்தும் நேர்மையாக வந்தது தானா?
அம்பானி போன்ற பெருமுதலாளிகள் யார் அரசாள வேண்டும் என தீர்மானித்து, அரசை ஆட்டிப் படைக்கிறார்கள் என்பது வினவின் கருத்து. எனினும் வெளிப்பார்வைக்கு இரண்டும் வேறாகவே தெரிகின்றன. பரமாத்மாவாகிய முதலாளிகளின் அதிகாரத்துக்கு உட்பட்டு இயங்கும் ஜீவாத்மா அரசு என்ற த்வைத நிலை எனச் சொல்லலாம். அந்நிலையிலேயே முதலாளிகள் பெருங்கொள்ளை அடிக்கின்றனர். எனில், மாறன் விஷயத்திலோ, முதலாளியாகிய பரமாத்மாவும், அரசாகிய ஜீவாத்மாவும் ஒன்றாகிய அத்வைத நிலை. இதில் கொள்ளைக்கு சாத்தியக் கூறுகள் அதிகமல்லவா? ஓர் சோறு பதமாக தயாநிதி மாறன் தன வீட்டில் முறைகேடாக அமைத்துக்கொண்ட டெலிபோன் இணைப்பு பற்றிய குற்றச்சாட்டுகள்.
சரி, எல்லாம் நியாயமாகவே வந்த சொத்து என வைத்துக்கொள்வோம். வினவு கூறும் சித்தாந்தப்படி, ஒரு தனி மனிதனாலோ, குடும்பத்தாலோ தன் உழைப்பின் மூலமாக இவ்வளவு பணம் ஈட்ட முடியுமா? சுரண்டல் மூலம் மட்டும் தானே இவ்வளவு பணம் குவிக்க முடியும்? மற்ற பெருமுதலாளிகள் பற்றி நிறையப் பேசிவிட்டு, தமிழ்நாட்டின் முதல் பெருமுதலாளியான மாறன் பற்றி வினவு எவ்வளவு பேசியுள்ளது? இவர்களின் வளர்ச்சியின் பின்புலம் பற்றியும், அதில் திமுக அரசுக்கு தொடர்பு இருந்ததா என்பது பற்றியும் மையப் பொருளாகக் கொண்டு எத்தனை கட்டுரைகள் வெளியாகி உள்ளன?
இப்போது தண்டனை பெற்று இருக்கும் கும்பல், இனி தண்டனை பெறப் போகும் கும்பல் இரண்டும் மோசமானவை என்று நான் கருதுகிறேன். முதல் கும்பலை மட்டும் விமர்சித்து விட்டு, இரண்டாம் கும்பலை கவனிக்காமல் இருக்கிறார்கள். “சேட்டை தன் மடியகத்து செல்வம் பார்த்திருக்கின்றாரே” என்பதே என் குற்றச்சாட்டு, ஆதங்கம்.
பணிச்சுமைக்கிடையே முடிந்த அளவு தொடர்ந்து விவாதிக்க முயல்கிறேன். சுக்தேவ் (52.2) போல நன்முறையில் பதில் அளித்தால் நலம். நன்றி.
“எனவே ஸ்பெக்ட்ரம் கொள்ளையின் குற்றப்பங்கில் ஆ. ராசா A1 அல்ல. A4 அல்லது A5 தான்”……………….
இப்படி கூறுவதற்கு கொஞ்சம்கூட சங்கோஜமாக இல்லையா நண்பரே?
தன்மானம்,பெரியாரிசம் என்றெல்லாம் கூவிகொண்டு கடைசியில் நான் நம்பெர் ஒன் பிராடு அல்ல பிராடு நம்பர் நாலோ ஐந்தோதான் என பிரகடன படுத்திக்கொள்ள எப்படி முடிகிறது?
“நான்பிராடு நம்பெர் ஒன்னோ? பத்தோ? என்மீதான குற்றசாட்டுகள் விலகும்வரை பொதுவாழ்வில் நான் எந்த பதவிக்கும் போட்டியிடப்போவது இல்லை” என திரு ராசா கூறியிருந்தால் கூட ஒரு குறைந்த பட்ச மரியாதையாவது மிஞ்சி இருக்கும்.
அதற்கெலாம் முத்தாய்பாக “சிலரின் சுயநலத்துக்காக அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் செய்ய முயற்சிக்கிறார்கள் என்னையும் அந்த தவறுக்கு உடந்தையாக இருக்க சொல்லுகிறார்கள்,அதற்கு நான் ஒருபோதும் உடன்பட மாட்டேன் ,இதனால் எனது பதவி பறிபோனாலும் பரவாயில்லை ” என அவர் கூறி இருந்தால் கூட அவரது நேர்மையை நம்பலாம்.ஆனால் அதையும் செய்யவில்லை.
பிறகு எந்த அடிப்படையில் அவரை நம்புவது?
பார்ப்பன சதி பார்ப்பன சதி என்றால் ,,,,,,,உண்மையில் மற்றவர்களை விட பார்ப்பனர்களை அதிகம் புரிந்துவைத்திருப்பதாக கூறி கொள்ளும் இயக்கத்தை சார்ந்தவர்தான் திரு ராசா.அவரது கருத்தில் உண்மையிருப்பதாக அவர் கருதி இருந்தால் நாம் பேசுவது வெறும் மேடை பேச்சிற்காக மட்டுமல்ல என அவர் தெளிவாக இருந்திருந்தால் பார்பனர்கள்மீது மிகுந்த எச்சரிக்கை உணர்வு இயல்பாகவே இருந்திருக்குமல்லவா?கடைசியில் தன்னை காத்துகொள்ளவேனும் அவர் எச்சரிக்கையாக இருந்திருப்பாரல்லவா? எதோ நம்பி கெட்டவர் போல பிதற்றுதல் ஏன்?
டாட்டாவும் ரிலையன்சும் மட்டுமல்ல நம்மில் பலரும் அவர்கள் செய்த தவறை செய்ய தயாராக இருப்பதையும் செய்துகொண்டு இருப்பதையும் நாம் கண்குடாக பார்க்கிறோம்?குறுக்குவழியில் முயற்சிப்பது பலரும் செய்வது.ஆனால் பொறுப்பில் உள்ள ஒரு மந்திரி அதற்க்கு எப்படி சம்மதித்தார்?பின்னர் எதற்காக தனது தவறை மறைத்து பிறர் மீதுமட்டும் பழி போடுகிறார்?
வேலுமணி,
A5 குற்றம் புரியவில்லை என்று சொல்லவில்லை. அலைக்கற்றை ஊழலில் AI, A2, A3, A4 எல்லாம் தண்டிக்கப்படாமல் இருக்க, A5 மட்டுமே குற்றத்தின் தண்டனையையும், பழியையும், அவமானத்தையும் சுமந்து வருகிறார் என்று மட்டும் தான் சொன்னேன். ஜெ. வழக்கில் இளவரிசிக்கு மட்டும் தண்டனை வழங்கினால் அப்பவும் இந்த நியாயத்தை பேசியிருப்பேன். நான் விளங்கிக் கொண்டது வரையில் சொத்துக்குவிப்பு வழக்கின் இளவரசி போன்று தான் அலைக்கற்றை வழக்கில் அ. ராசா.
ஊழல் அமைப்பின் தவிர்க்க இயலா குற்றவாளியை எண்ணெய் கொப்பரையில் தள்ளி பஜ்ஜி மாதிரி வறுக்கும் இயக்குநர் ஷங்கரின் நீதி பேசுகிறீர்கள். அது மனுநீதிக்கு நெருக்கமானது. எம்முடையது சமூக நீதி.
முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலிதா மீதான ஊழல்வழக்கில் நான்கு பேருக்கு தண்டனை வழங்கிவிட்டார்கள்.
சரி.
அனைத்து குற்றங்களும் இந்த நான்கு பேர் மட்டுமே செய்தார்களா?
இவர்களை தாண்டிஅமைச்சர்கள் சட்ட மன்ற உறுப்பினர்கள்,கட்சிகாரர்கள் அதிகாரிகள்,மற்றும் லஞ்சம் கொடுத்தவர்கள் இவர்கள் மீது எந்த நடவடிக்கைகளும் இல்லையா?
நிலக்கரி ஒதுக்கீட்டில் முறையாக வழங்கப்படாத ஒப்பந்தங்கள் ரத்து செய்யபட்டதுபோல இவர்களது ஊழல் வழக்கிலும் ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவர்மீதும் வழக்கு பதிந்து விசாரணை நடைபெற வேண்டும்.அவர்கள் மீது தவறு கண்டறியப்பட்டால் அவர்களுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.இதுவே ஊழலுக்கு எதிராக எடுக்கப்படும் முழுமையான நடவடிக்கையாக இருக்கும்.
பொதுமக்களிலிருந்து பிரதமமந்திரிவரை யார் வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும்(சட்டத்திற்கு புறம்பானது உட்பட ) ஆசைப்படலாம்.
ஆனால் அவற்றை சட்டநியதிகளுக்கு உட்பட்டு நிறைவேற்றி தரும் பொறுப்பு அதிகாரிகள் கையில் தான் உள்ளது.
எனவே ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்றால் நிச்சயம் தவறிழைத்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
இதுவரையிலும் எந்த ஒரு அரசு அதிகாரியும் தவறு செய்ய சொல்லி தான் நிர்பந்தப்படுத்தபட்டதாக புகாரோ கருத்தோ சொல்லவில்லை.
மேலும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாக வங்கிகணக்கில் பண பரிவர்த்தனை இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரி அதுபற்றி விளக்கம் கோரவோ வருமான வரித்துறையினரின் கவனத்திற்கு கொண்டுசெல்லவோ செய்யவேண்டும்.இந்நிலையில் அவாறு செய்தார்களா? என்பதுபற்றி எந்த தகவலும் இல்லை.
எனவே தவறுகளுக்கு அவர்களும் உடந்தையே.
எனவே லஞ்சம் கொடுத்தவர்,வாங்கியவர்,உடந்தையாக இருந்த ஆட்சியாளர்கள்,அதிகாரிகள் அனைவர் மீதும் விசாரணை நடத்தி குற்றம் நிருபணமானால் தண்டனை வழங்கப்படவேண்டும்.
ஒரு வெடிகுண்டு விபத்து விசாரணையில், தெரிந்தோ தெரியாமலோ வெடிமருந்து விற்றவர்,எதற்கு என்றே தெரியாவிட்டாலும் அவர்களை ஏற்றிக்கொண்டுவந்த வாகன ஒட்டி மற்றும் வாகன உரிமையாளர்,தீவிரவாதிகளுக்கு (அவர்கள் தீவிரவாதிகள் என தெரியாமல் )வீடு வாடகைக்கு கொடுத்த வீட்டு உரிமையாளர் இவர்கள் விசாரணைக்கு உட்படுத்தபடுகையில் ஊழல் வழக்கில் மட்டும் ஏன் சம்பந்தப்பட்டவர்கள் அனைவர்மீதும் விசாரணை மற்றும் தண்டனை நடவடிக்கைகள் வருவதில்லை?
எதற்கு என்றே தெரியாமல் பேட்டரி வாங்கி கொடுத்ததற்காக ஒருவரை சிறையில் அடைத்து கொடுமைபடுத்துகிறார்கள் என உரிமை குரல் எழுப்பும் பலரில் ஒருவர் கூட இவ்விசயத்தை குறிப்பிடாதது வருத்தமே.
ஒருவேளை ஜெயாதான் எதிரி என முடிவெடுத்ததால் அதை தாண்டி யோசிக்க முடியவில்லையோ?