ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைத்துவிட்டதாக கிடைத்த தவறான செய்தியை நம்பி அ.தி.மு.க. வினர் அராஜகம்
காளையார் கோவில் – அக்டோபர் 08, 2014
ஊழல் தடுப்பு சட்டத்தில் கீழ் தண்டிக்கப்பட்டு கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைத்துவிட்டதாக கிடைத்த தவறான தகவலின் பேரில் காளையார்கோவில் அ.தி.முக.வினர் ஒன்றிய பெருந்தலைவர் ஆரோக்கியசாமி, மகளிர் அணி ஜாக்குலின்அலெக்ஸ் தலைமையில் பட்டாசு வெடித்தபோது காளீஸ்வரர் இரட்டை ராஜகோபுரங்களில் தீ பற்றி எரிந்தது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க மருது சகோதரர்களால் கட்டப்பட்டது காளீஸ்வரர் கோவில் ராஜகோபுரம். இது மதுரை மீனாட்சி கோவில் கோபுரத்திற்கு இணையாக மக்களால் பார்க்கப்படுகிறது. கடந்த 1997-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதற்கு பின்பு ஒரு வருடத்திற்கு முன்பு கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்வதற்காக வர்ணம் பூசும் பணி நடைபெற்றுவந்தது. அதற்காக இரண்டு ராஜகோபுரங்களிலும் சாரம் கட்டி வைத்திருந்தனர்.
சம்பவத்தன்று அ.தி.மு.க.வினரின் ஒரு பகுதியினர் தங்கள் தலைவருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதாக கிடைத்த தவறான தகவலின் பேரில் வெடி வெடித்து கொண்டாடினர். அப்போது இரவில் வாணவேடிக்கைக்காக வெடிக்கப்படும் வெடிகளை பகலில் ராஜகோபுரத்தின் அருகில் வெடித்தனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கோபுரத்தின் மீது பட்டுவிடும் என தடுத்ததையும் மீறி வெடி வெடித்ததில் பட்டாசு தீப்பொறி பெரிய ராஜகோபுர சாரத்தில் உள்ள தென்னங்கீற்றில் பட்டதில், முதலில் பெரிய கோபுரத்தில் தீப்பற்றியது. பின்னர் சின்ன கோபுரத்தில் தீ பரவியது. சில நிமிடங்களில் இரண்டு ராஜகோபுரங்களில் உள்ள தென்னங்கீற்றுகள் தீ அணைப்பு துறையினர் வருவதற்குள் இரண்டு கோபுரங்களிலும் முழுமையாக பற்றி எரிந்து விட்டது.
மழை பெய்து தீ மேலும் அருகிலுள்ள கடைகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. தீ பற்றியதில் வர்ணம் பூச்சு நிறம் மாறியது. சிற்பங்கள் சேதமடைந்தது. கோபுரத்தில் இருந்த புறாக்கள் தீயில் கருகின. யானை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டது. சப்பரம் சேதமடைந்துவிட்டது.
பொதுமக்கள் கொதித்தெழுந்து பஸ் மறியல் மற்றும் கடை அடைப்பு செய்தனர். இது திட்டமிட்ட சதி என்று காளையார்கோவில் காவல் நிலையத்தில் புகார் செய்யதனர்.
இது குறித்து காளையார்கோவில் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து காளையார்கோவிலைச் சேர்ந்த ஏடகநாதன் மகன் முத்துமருதுபாண்டியன், ஊத்துப்பட்டியை சேர்ந்த நாச்சியப்பன் மகன் சேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் கைது செய்தனர்.
இன்று கடை அடைப்பு நடத்தி, இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி பகுதி மக்களால் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுவருகிறது.
தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காளையார் கோவில்
“வரலாற்றுச் சிறப்பு மிக்க மருது சகோதரர்களால் கட்டப்பட்டது காளீஸ்வரர் கோவில் ராஜகோபுரம். இது மதுரை மீனாட்சி கோவில் கோபுரத்திற்கு இணையாக மக்களால் பார்க்கப்படுகிறது. கடந்த 1997-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதற்கு பின்பு ஒரு வருடத்திற்கு முன்பு கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்வதற்காக வர்ணம் பூசும் பணி நடைபெற்றுவந்தது. அதற்காக இரண்டு ராஜகோபுரங்களிலும் சாரம் கட்டி வைத்திருந்தனர்”.
அடடே ,,,,,வினவில் இந்து கோவிலைப்பற்றி இப்படி கருத்துக்களா?
(ஆதிக்க சாதியினரது திமிராலும் ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணீராலும் இரத்தத்தினாலும் கட்டப்பட்டது இக்கோயில். இந்துக்களின் மூடதனதிர்க்கு நிகரான மதுரை மீனாட்சி கோவில் கோபுரதிற்கு இணையான ஒரு அடிமை சின்னம் இக்கோவில் கோபுரம் ,,,,,, என்றல்லவா வழக்கமாக கோவில்களைப்பற்றி வினவில் வரும்)
ம்ம்ம்ம்ம்.
நமது நடவடிக்கைகளை நமது எதிரிகள்தான் தீர்மானிக்க வைக்கிறார்கள் என்பது எவ்வளவு நிதர்சனமான உண்மை?
நான் சிவன் ஆவேன் .
தமிழ் மீது பற்றும் , தமிழ்ர் மீது அன்பும் கொண்ட என்போன்றவர்கள் மிகவும் துயறுரும் தருணம் இது. ஆம் காளையர்கோவில் கோவில் அதிமுக ரவுடி பயல்களால் எரிக்கபட்ட நிகழ்வை கேள்வியுற்று மிகவும் மனம் வருத்தம் அடைந்தேன். ஒரு நாசகார சக்தி ஜெயவிற்காக இதுக்கள்[அதிமுக ரவுடி பயல்கள்] ஆடும் ஆட்டம் ,அதனை கண்டும் காணாமல் இருக்கும் அடிமை தமிழர் மன உணர்வுகள் எம்மை மிகவும் வருத்தம் அடைய செய்கின்றது.
பகுத்தறிவு தலைவர் பெரியாரோ , வர்க்க போராட்டத்தை முன்னெடுக்கும் மக்கள் கம்யுனுஸ்டுகளே நினைத்து கூட பார்க்காத இழிசெயலை [கோவிலை கொளுத்தும் செயலை ] செய்யும் அதிமுக ரவுடிபயல்கல் செய்யும் இச் செயலை கண்டு………..
ஆம், நான் சிவன் ஆவேன் .
//அ.தி.முக.வினர் ஒன்றிய பெருந்தலைவர் ஆரோக்கியசாமி, மகளிர் அணி ஜாக்குலின்அலெக்ஸ் தலைமையில் பட்டாசு வெடித்தபோது காளீஸ்வரர் இரட்டை ராஜகோபுரங்களில் தீ பற்றி எரிந்தது….//
அதென்ன அவர்களின் பெயர்களை குறிப்பிட்டு சொல்லி இருக்கிறீர்கள். ஓஹோ.. கிறித்துவர்கள் இந்த ஜெயா சிறைக்கு சென்ற நிகழ்வை பயன்படுத்திக் கொண்டு, வேண்டும் என்றே சதித் தனமாக செய்திருப்பார்களோ என்பது வினவின் எண்ணமோ? இல்லை என்றால் பெயரை குறிப்பிட வேண்டிய அவசியமென்ன.
மகாராஷ்டிரத்தில் கோட்டைகள் எப்படி அன்னிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான அரணாக, மாவீரன் சிவாஜியால் பயன்படுத்தப்பட்டதோ, அவ்வாறே ஆபத்காலங்களில், மன்னரும்,பிரதானிகளும் பதுஙகிக்கொள்ளவும், கஜானாவை ரகசியமாக பாதுகாக்கவும் ஆன ஏற்பாடுதான், கோவில்களாகும்! அங்கு மன்னர்களின் பொக்கிஷங்கள் பாதாள அறைகளில் பதுக்கப்பட்டிருக்கும்! கஜினி இடித்த சோமனாதபுரம் கோவிலாகட்டும், மற்ற இந்து கோவிலாகட்டும், எல்லவற்றிலும் ஏராளாமான பொக்கிஷங்கள், (எல்லாம் ஊரை கொள்ளையடித்து சேர்க்கபட்டவைதான்), மறைத்து வைக்கப்பட்டிருப்பதை ஒற்றர்கள் மூலம் அறிந்தே இசுலாமியர்களும், அலெக்ஸான்டரும் இந்தியாவின் மேல் படையெடுத்தனர்! தஞ்சை நாயக்கர் ஆட்சி வீழ்ந்ததும், மராட்டியர் தஞ்சை மற்றும் சுற்றுப்புற கோவில்களையெல்லாம் ஆராய்ந்தனர்!இன்னும் பல கொவில்களில் புதையல் இருப்பதாக அந்தந்த ஊர் மக்கள் பேசிவருகின்றனர்! புராதன கோவில்கள் அனைத்தையும் அரசு சொத்தாக அறிவிக்க கோருவது அதன் அடிப்படையில்தான்!
காளையார் கோவிலும் அப்படித்தான்! அது பொது சொத்து! அரசு சொத்து!
மன்னர்களின் சொத்து அரசு சொத்து தானே!
நாளை ஜெயாவின் சொத்துகளும் அரசு சொத்தாக அறிவிக்கபடலாம்! எல்லாம் வல்ல சு.சாமி செயல்!
மருது பாண்டியர்கள் மற்ற மன்னர்களைப் போல் அல்லர்.வெள்ளையர்களை எதிர்த்துப் போராடி வீர மரணத்தைத் தழுவியவர்கள்.சின்ன மருதுவின் பிரகடனம் நட்டுப் பற்றின் அழியாத ஆவணம்.காளையார் கோவில் சேது பகுதியில் வாழ்ந்த பிற்படுத்தப்பட்ட[சூத்திர சாதி] மக்களின் கோவிலாக அமைந்தது காளையார் கோவில்.மீனாட்சி கோவிலில் அவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படாததால் எழுப்பப்பட்ட கோவில்.சொர்ணகாளீஸ்வரர் என்று சிவன் அழைக்கப்படுகிறார்.சிறு தெய்வ வழிபாட்டு முறையிலிருந்து வளர்ந்து வந்துள்ளது.அந்த வகையில் அது உழைக்கும் மக்களின் கோவில்.ஆகம விதிப்படி கட்டப்பட்ட மீனாட்சி கோவிலுக்கு இணையானது.அதனால் இன்றளவும் அது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.கோவில் தீக்கிரையானதற்கு அதிமுகவினரே காரணம்.சம்பவம் நடந்த உடனேயே மக்கள் அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.வலது கம்யூனிஸ்ட் கட்சி எம் எல் ஏ குணசேகரன் தலையிட்டு மறு நாள் உண்ணாவிரதம் இருக்கலாம் என்று கூறி மக்களின் ஆத்திரத்தை மடை மாற்றிவிட்டிருக்கிறார்.கோவிலை முழுவதுமாக் சரி செய்து தருவதாக அதிமுக மாவட்டச் செயலாளர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.ஆனால் குணசேகரன் எம்.எல்.ஏ.’அம்மா’விசுவாசத்தைக் காட்டுவதற்காக, ”இது ஒரு விபத்து தான்.எனவே சேதத்தை அரசு,மாவட்ட நிர்வாகம்,அற நிலையத்துறை,தேவஸ்தானம் நான்கும் இணைந்து சீர் செய்யலாம்” என்று கட்டைப் பஞ்சாயத்து செய்திருக்கிறார்.அதிமுக மாவட்ட செயலாளர் தாமாக முன்வந்தது சரியானது.அவர்கள் தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும்.ஓர் இரவில் என்ன பேரம் நடைபெற்றதோ அந்தக் காளீஸ்வரருக்கே வெளிச்சம்.அதிமுக காலிகள் சட்டவிரோதமாக போலீசின் துணையுடன் நடத்துகின்ற அட்டூழியங்களை எதிர்க்கத் துப்பில்லாவிட்டாலும் செய்த தவறுக்குப் பரிகாரம் செய்யவும் விடாமல் மழுங்கடித்திருகிறார் இந்த குருவுக்கு மிஞ்சிய சீடன்.[குரு:தாபா]
This may be the ‘trick’ of ‘hindu’ parties for cultivating hindu votes against ADMK.