privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்முசுலீம்கள் தீபாவளி இனிப்பு சாப்பிடலாமா ? படங்கள்

முசுலீம்கள் தீபாவளி இனிப்பு சாப்பிடலாமா ? படங்கள்

-

மற்ற மதத்தவர்களை விட முசுலீம்கள் மட்டும் தமது மதத்தை அதி தீவிரமாக கடைபிடிப்பவர்கள் என்ற கருத்து பொதுவில் வலுவாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதுவே இந்துமதவெறியர்களது மூலதனமாகவும் செயலாற்றுகிறது. இசுலாமிய கடுங்கோட்பாட்டு அடிப்படைவாத இயக்கங்களும் இத்தகைய கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாகவே செயல்படுபகின்றன. மற்றவரது பண்பாடு, வழிபாடு, பண்டிகைகளை முசுலீம்கள் வெறுக்கிறார்கள் என்பதாக ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரம் செய்கிறது. 

இவை உண்மையல்ல என்பதை நடைமுறை மூலம் நிரூபிக்க விரும்பினோம். தீபாவளி அதற்கு பொருத்தமான நேரம். இதோ சென்னை வாழ் இசுலாமிய மக்கள் பேசுவதைப் பாருங்கள். இடையே ஓரிரு கிறித்தவ, ‘இந்து’க்களும் கூட உண்டு.  உழைக்கும் மக்களிடையே மதவெறிக்கும், மதவாதத்திற்கும் வேலை இல்லை என்பதை அவர்கள் வாயாலேயே கேளுங்கள்!

ஆனால் வாடகை வீடுகள் முசுலீம்களுக்கு இல்லை என்று உறுதியாக இருக்கும் பார்ப்பன – ஆதிக்க சாதி இந்துக்களும் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்றால் மதவெறியும், மதவேறுபாடும் யாரிடம் இருக்கிறது?

– வினவு

அலிப் உசேன்
அலிப் உசேன், வயது 14: “லச்சுமி பட்டாசு வெடிச்சேன். ஈஸ்வரி ஆண்டி ஜாங்கிரி, பொங்கல், பழமெல்லாம் கொடுத்தாங்க. அவங்க செஞ்சா நமக்கு, நம்ம செஞ்சா அவங்களுக்கு….”
சாதிக்
சாதிக், வயது 45, பூஜை பொருட்களை விற்பவர்: “பிரண்ட்ஷிப்தான் சார் முக்கியம். மனசு தான் காரணம். மத்தபடி தீபாவளி பலகாரம் சாப்டறதுல பிரச்சினையில்லை. இந்த தொழில் செய்றதுல என்ன தப்பு சார்? நான் திருடுறனா இல்ல பொய் சொல்றனா? இந்த தொழில்ல முதலீடு கம்மி. ஜமாத்துல கூட கற்பூரம், குங்குமம், திருஷ்டிக் கயிறு விற்க கூடாதுங்குறாங்க. வெறுமன தேங்காயும், வெத்தலையும் வித்தா யாரு வருவாங்க? பக்கத்துல பூஜை கடை வைச்சிருக்குறவரும் டிஎன்டிஜேவுல இருக்குறவரோட தம்பிதான். போரூருக்கு பக்கத்துல அந்த டிஎன்டிஜே பாயும் இதே மாதிரி கடை வெச்சிருக்கார். நமக்கு ஒரு சட்டம், அவங்களுக்கு ஒரு சட்டம்.”

 

ரியாஸ்
ரியாஸ், வயது 34, ஆட்டோ டிரைவர்: “அண்ணன் தம்பியா பழகுறோம். அதனால தீபாவளி, கிறிஸ்மஸ் எல்லாம் வாங்குவோம் சார். தர்காவுக்கு நான் போக மாட்டேன், போறவங்கள தடுக்க மாட்டேன்.”
முஜீப்
முஜீப், வயது 32, அல் அமீன் மட்டன் ஸ்டால்: “நாங்க கொடுத்தா அவங்களும், அவங்க கொடுத்தா நாங்களும் சாப்பிடுறது காலங்காலமா நடக்குது. இது ஒரு சந்தோசமான நாள் சார். இப்பத்தான் பக்கத்து வீட்ல கறி வாங்கிட்டு போனாங்க. அங்க இருந்து எங்க வீட்டுக்கு பணியாரம் வந்திருக்கும். அத சாப்பிட்டா ஹரம்னு சொன்னா அதான் தப்பு. இப்போ நானே பிரியாணி தர்றேன். ருசியே இல்லாட்டி கூட பாய் நம்ம மதிச்சு தர்றாருனு வாங்கி சாப்பிடுவீங்க. இது பரஸ்பரம் இருக்கணும்.”

 

கலாவதி
ஆர். கலாவதி, வயது 45, வருமான வரித்துறையில் வேலை, இந்துவாக இருந்து கிறிஸ்தவராக மதம் மாறியவர்: “மனசுதான் சார் காரணம். எல்லோருக்கு ரத்தம் செவப்புதானே? நான் இங்கயே பொறந்து வளந்தவ. வேண்டாம் வேண்டாம்னாலும் கூப்பிட்டு கொடுப்பாங்க. நாங்களும் கிறிஸ்துமசு அப்போ கேக்கும், பிரியாணியும் கொடுப்போம். சாமிக்கு படைக்கறதுக்கு முன்னாலயே தனியா எடுத்ததுன்னு சொல்லித் தருவாங்க. உறவுதான முக்கியம்?”
பார்த்திபன்
பார்த்திபன், வயது 25, ஏர்செல் மார்க்கெட்டிங் வேலை: “அப்பா இறந்துட்டாரு. ஆனா அவரோட பிரண்டு சுல்தான் டெய்லர் அண்ணனுக்கு காலைல ஸ்வீட்ஸ் பாக்ஸ் கொடுத்தேன். என்னோட பெஸ்டு பிரண்டு முகமது யாக்கோப். அவங்க வீட்டு கிச்சன் வரை போய் வருவேன். மாமா, மச்சானுதான் பேசிக்குவோம். அவனுக்கு நாங்க வச்சிருக்க பேரு கெளவி”
ஜாபர் நிசா
ஜாஃபர் நிசா, வயது 50, பூ வியாபாரம்: “நம்ம கஸ்டமரு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பாக்சு தந்தாங்க. ஆனா கற்பூரம் ஏத்தி பூஜ பண்ணிருந்தா சாப்பிட மாட்டோம். அவங்களும் அப்படி தர மாட்டாங்க இல்லியா”
ஜாஹீர் உசேன்
ஜாஹிர் உசேன், 21, மெக்கானிக்கல் டிப்ளமோ: “போன வருசம் தந்தாங்க. இந்த வருசம் வரல. ஏன்னா ஊருக்கு போயிட்டாங்க. போன வருசம் லட்டு, அதிரசம், சுண்டல் எல்லாம் வந்துச்சு. வெடியெல்லாம் சின்ன வயசுல போட்டேன். இப்போ இன்ட்ரஸ்டு இல்லை. எனக்கு திக் பிரண்டு சக்தி சரவணன், மாமா மச்சானுதான் கூப்பிட்டுக்குவோம். மத்த மத பண்டிகை பலகாரங்கள சாப்பிடுறதெல்லாம் ஹரமில்லை சார். நாங்க கொடுத்தா அவங்க சாமிய வேண்டிட்டு சாப்பிட போறாங்க. அவங்க கொடுத்தா எங்க சாமிய வேண்டிட்டு சாப்பிடுவோம். அவ்ளோதான்.”
ஹீரின் பேகம்

ஹரின் பேகம், வயது 40, பார்ப்பனர் வீட்டில் சமையல் வேலை, அருகில் அவரது குடும்ப நண்பர் கஸ்தூரி, வயது 58, துணை நடிகை: பேகம் – “அவங்க கொடுத்தா நாங்களும், நாங்க கொடுத்தா அவங்களும் சாப்பிடுறோம். அன்பா தர்றாங்க சார். எல்லாரையும் போல நானும் புள்ளக்கு மாச மாசம் சீட்டுப் கட்டி 1000 ரூபாய்க்கு பட்டாசு வாங்கி கொடுத்தேன். அல்லாரும் வெடிக்கைல எம் புள்ள மட்டும் மூஞ்சிய பாத்துக்கிட்டிருக்க வேணாம்னுதான். சாமிக்கு படைச்சதையே தந்தா சாப்பிட கூடாது தான். ஆனா பிஸ்மில்லா னு சொல்லிட்டு சாப்பிடலாம். தப்பில்லை.”

 

 

 

 

 

முகமது இப்ராஹிம்
முகமது இப்ராஹிம், வயது 50, லிப்ட் டெக்னீசியன், ஹீரின் பேகத்தின் கணவர்: “சாப்பாட்டுல என்ன சார் இருக்கு? வந்தா விடக் கூடாது. அநியாயமா சம்பாதிக்கிறதுதான் தப்பு”

 

ஜீனத்
ஜீனத், வயது 40: “நாங்க முசுலீம்தான். என்னோட வூட்டல இருக்குற சரசாகிட்ட இருந்து அதிரசம், முறுக்கு வந்துச்சு. மதிங்கிற குடும்ப நண்பர் ஸ்வீட் பாக்ஸ் கொடுத்தாரு. பூசை பண்ணி சாப்பிட கூடாது தான். ஆனா எம்மதமும் சம்மதம்னு இருந்தா சாப்பிடலாம். நான் சாப்பிடுவேன். அப்பிடி பாத்தா என் வீட்ட இந்துக்களுக்கு வாடகைக்கே விடக் கூடாது. அதெல்லாம் முடியுமா. சின்ன விசயத்த பெரிசாக்குறாங்க. எல்லாத்துக்குமே மனசு தான் காரணம்.”

 

பஷீர் அகமது
பஷீர் அகமது, வயது 52, மளிகைக்கடை  5 வருசத்துக்கு முன்னாடி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துல சேந்தேன். பக்கத்து வீட்டுக்காரங்க கொடுக்கும் தீபாவளி பலகாரங்களை நான் சாப்பிடறதில்லை. கற்பூரம் காட்டியதை நான் தொடமாட்டேன். ஆனா முன்ன இந்து பிரன்ட்ஸ்ங்கக்கூட ஒரே கிளாஸுலதான் குடிப்பேன். நாகூர் தர்க்காவுக்கு முன்ன போனேன். இப்ப இல்ல. ஆனா என் பொண்ட்டாட்டி கூப்புட்டதால…. இப்ப போனேன். ஊர்ல்ல இருந்து தம்பிங்க வந்தா அவங்ககூட.. தர்க்காவுக்கு போவேன், இல்லனா அவங்க கோவிச்சுக்குவாங்க. தவ்ஹீத் ஜமாத்துல சேந்தாலும் நான் சூனியத்தை நம்புறேன். அவருக்கு (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர்) யார்னா சூன்யம் வைச்சா..அப்ப.. தெரியும்! தவ்ஹீத் ஜமாத் ஐ நிர்வாகிங்க கூட வரதட்சணைக் கொடுத்துதான் கல்யாணம் பண்ணாங்க!

 

muslim woman

– புகைப்படங்கள், நேர்காணல் – வினவு செய்தியாளர்கள்.

  1. அழகோ அழகு..!!

    சிறப்பானதொரு ரிப்போர்ட்டை எடுத்திருக்கும் வினவு தள நண்பர்களுக்கு நன்றி. இப்பத்தான் நம்ம இலியாஸ் பாய் இனிப்புப் பலகாரங்கள் கொண்டாந்து கொடுத்தாப்ல. அவங்க வீட்டுக்கு வந்த தீபாவளி ஸ்வீட்ஸ். அவரும் எங்களோட சேர்ந்து சாப்பிட்டாரு. மக்கள் வேறுபாடு பார்ப்பதில்லை; அது எல்லோருக்குமே தெரியும்.

    ஆர்.எஸ்.எஸும் டி.என்.டி.ஜேவும் ஒண்ணு; அறியாதவன் வாயில மண்ணு!

  2. ” ஹரின் பேகம், வயது 40, பார்ப்பனர் வீட்டில் சமையல் வேலை” – பார்ப்பனர் வீட்டில் முஸ்லிம் சகோதரிக்கு எப்படி வேலை கிடைத்தது. அப்ப வினவுல வர்ற பார்ப்பன எதிர்ப்பு செய்தி எல்லாம் கப்ஸாவா?

    • “ஆனால் வாடகை வீடுகள் முசுலீம்களுக்கு இல்லை என்று உறுதியாக இருக்கும் பார்ப்பன – ஆதிக்க சாதி இந்துக்களும் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்றால் மதவெறியும், மதவேறுபாடும் யாரிடம் இருக்கிறது?”

      • Thiru Vinavu avarkale thangalathu veetu samayalarai varai vanthu velai paarka anumathithu, manithaabimaana adipadayil thangalathu veetu inippukal mattrum pattasulkalai vazhankiya paarpanargalai Mathaveri kondavargal endru solvathai sirithu kooda etru kolla mudiyaathatgaaga ullathu!

      • அய்யா விணவு நல்லா வக்கனையாதான் பேசுறீங்க நான் போட்ட பின்னூட்டத்தை ஏன் வெளியிட வில்லை அதில் யாரை தாக்கி இருந்தேன் //கருத்து மாறுபட்டை ஆணித்தரமாகவோ, ஏன் கோபமாகக் கூட சொல்லலாம். ஆனால் எல்லா விவாதத்திலும் கருத்தற்ற தனிநபர் தாக்குதல், வசைச்சொற்கள், அநாகரீக மொழிகளை தவிர்க்க வேண்டும். அத்தகைய பின்னூட்டங்கள் பகுதி அளவிலோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்
        வினவு பெயரில் வரும் பின்னூட்டங்களைத் தவிர மற்றவர்களின் கருத்துக்கு அவரவரே பொறுப்பு. அது வினவு கருத்தாக புரிந்து கொள்ள வேண்டாம்
        ஆரோக்கியமான விவாதங்களை வளர்க்கும் பொருட்டே இந்த கொள்கை முடிவுகள். அனைவரும் புரிந்துணர்வுடன் ஆதரிக்குமாறு கோருகிறோம்.//
        இந்த மூன்று விவரங்களில் எதை மீறி இருந்தேன் என்பதை தெளிவு படுத்துவீர்களா…

    • Very True. The Videos of Zakir Naik was introduced by one Muslim guy to the rest of my Muslim friends at my office. It spread easily like a Virus and corrupted every one.
      They no longer even took Thirupati Prasadam (Laddu) which they use to take previously.

        • இராமன் ,ஹிந்து சமுகத்திலேயே அதன் மக்களிடம் இருந்தே, தீட்டு என்று சமைத்த உணவை கூலியாக வாங்காமல், சமைக்காத அரிசி பருப்பை வாங்கி செல்லும் சவுண்டி பார்ப்பானும் ,கல்யானம் ,புது மனை பூகு விழாவுக்கு பூசை போடும் பார்ப்பானும் இருப்பதை நீர் மறந்தது எந்த விதமான சவுகரியம் கருதி ஐயா ??????? ,

            • இப்படி பேசி வாலை சுருட்டிக்கொண்டு ஓடினா எப்படி இராமன் ? எனக்கு பதில் எழுதி பாருங்க! வினவு பர்மிட் செய்யாமலா போக போவுது ?

    • ராமன் இன்னுமா இந்த லட்டு கள்ளப்பரப்புரையை கைவிடவில்லை.இதற்கு ஏற்கனவே வாணக்காரய்யா பதிவில் அளித்த விளக்கம்.
      தமிழகத்தில் நிலவும் மத நல்லிணக்கத்தை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக அழகாக எடுத்துக் காட்டுகிறது கட்டுரை.பொறுக்குமா மதவெறியர்களுக்கு.பாய்ந்து வந்து குதறுகிறார்கள் முசுலிம்களை.

      கடவுள் மறுப்பாளன் என்று சொல்லிக்கொண்டே அப்பட்டமான பார்ப்பனிய இந்து மதவெறி நஞ்சை கக்குகிறார் ராமன்.நாங்க லட்டு குடுத்தா அவன் திங்க மாட்டேங்குறான் என்று ரெம்பவே உணர்ச்சிவசப் பட்டு சினம் கொள்கிறார்.இதற்கு முன்னா என்பவர் தகுந்த விளக்கம் அளித்திருக்கிறார்.ஒரே தெய்வ வழிபாட்டை கொள்கையாக கொண்ட முசுலிம்கள் பிறிதொரு தெய்வ பிரசாதத்தை உண்ண வேண்டும் என எதிர்பார்ப்பது என்ன வகை நியாயம்.

      அதே சமயம் இந்து மதத்தார் மீதும் அவர்கள் நம்பிக்கை மீதும் வெறுப்பு கொண்டு முசுலிம்கள் இதை செய்யவில்லை.இந்து மத நண்பர்கள் வீடுகளிலும் திருமண வைபவங்களிலும் முசுலிம்கள் விருந்துண்டு மகிழ்வதை கண்கூடாக காணலாம்.நான் ஆண்டுதோறும் தீபாவளி அன்று எனது நண்பர் மிண்ட் சாமியின் தாயாரின் கைப்பக்குவத்தில் உருவான பதார்த்தங்களை குறிப்பாக அதிரசத்தை விரும்பி உண்பதை வழக்கமாக கொண்டிருக்கிறேன்.

      ”மற்ற மத மக்களின் கலாசார பழக்க வழக்கங்களை மதித்து , அதன் பொருட்டு மற்றவர்களிடம் பாரபட்சம் காட்டாமல் இருப்பது” என்ற நெறிமுறையை இந்து முசுலிம் கிருத்துவ மக்கள் கடைப்பிடிக்கவே செய்கிறார்கள்.உங்கள் சிந்தனை ரெம்பவே பெருக்கெடுத்து ஓடுவதால் உங்களால் அதை உணர முடியல போல.

      கிருத்துவர்களும் தலித்களும் பன்றி இறைச்சி உண்கிறார்கள் என்பதற்காக முசுலிம்கள் அவர்களை வெறுத்து ஒதுக்கவில்லை.அவர்கள் கடைகளில் பொருள் வாங்காதேன்னு சொல்றதில்லை.அவர்களுக்கு வீடு தர மாட்டோம்னு முசுலிம்கள் சொல்றதில்ல.அவுக வீடுகள்ல குடியிருக்க மாட்டோம்னு சொல்றதில்ல.சென்னை போன்ற நகரங்களின் எந்த ஒரு சேரியை எடுத்துக்கிட்டாலும் கிருத்துவ இந்து தலித் மக்களுடன் முசுலிம்கள் சேர்ந்து வாழ்வதை காணலாம்.முசுலிம்கள் இல்லாத ஒரு சேரி கூட சென்னையில் இருக்காது.
      ஆண்டுதோறும் திருப்பதி குடை கவுனி தாண்டும் திருவிழா அன்று வட சென்னை நகரமெங்கும் அன்னதான நிகழ்ச்சிகள் வீதிதோறும் நடக்கின்றன.அதற்காக நன்கொடை வசூலிக்கும் அன்பர்களை கேட்டுப் பாருங்கள்.ஒரு தெருவில் கூட நன்கொடையில் முசுலிம்களின் பங்களிப்பு இல்லாமல் இருக்காது.

      மசூதிகளில் தொழுகை நேரம் என்றால் அவற்றை கடந்து செல்லும் இந்து மத பக்தி ஊர்வலங்களில் செல்லும் இந்து சகோதரர்கள் இசைக்கருவிகளை இசைப்பதில்லை.மசூதிகளின் வாயிலில் காலை மாலை தொழுகை நேரங்களில் குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்ய சொல்லி இந்து மத தாய்மார்கள் குவிகிறார்கள்.மசூதிகளுக்கு அருகில் கடை வைத்திருக்கும் இந்து மத சகோதரர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு துறக்க பள்ளிக்கு பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு செய்கிறார்கள்.சென்னையில் ஒவ்வொரு பள்ளியிலும் காய்ச்சப்படும் நோன்பு கஞ்சியை இந்து,கிருத்துவ சகோதரர்கள் ஆர்வத்துடன் கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்கள்.

      கிருத்துவ மத நிறுவனங்கள் நடத்தும் சில பள்ளிகளில் கூட [ஆண்டு முழுவதும் இல்லன்னாலும்] சில சமயம் வெள்ளி கிழமை சிறப்பு தொழுகைக்கு போய் வர முசுலிம் மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் விடுப்பு தருவதும் உண்டு.

      இப்படியான நிகழ்வுகள்தான் ”மற்ற மத மக்களின் கலாசார பழக்க வழக்கங்களை மதித்து , அதன் பொருட்டு மற்றவர்களிடம் பாரபட்சம் காட்டாமல் இருப்பது”

      அதை விடுத்து லட்டு தின்னால்தான் நல்லிணக்கம் என்று பிதற்றாதீர்கள்.இந்து மத நம்பிக்கைபடி தெய்வத்துக்கு படைக்கப்பட்ட உணவை உண்பது புண்ணியம்.அதுவும் ஒரு வழிபாடு.அதனால்தான் தெய்வ பிரசாதத்தை கோவிலுக்கு வெளியே பல கிலோ மீட்டருக்கு அப்பால் கொண்டு வந்து கொடுத்தாலும் இரு கரம் ஏந்தி அதை வாங்கி பவ்யமாக உண்கிறார்கள் இந்து மத சகோதரர்கள்.

      ஆக ஒரு இந்து மத வழிபாட்டை முசுலிம்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் அதை செய்யலன்னா மத நல்லிணக்கம் இல்லைன்னு சொல்றதும் கடைந்தெடுத்த பித்தலாட்டம்.

      https://www.vinavu.com/2013/12/31/vanakkarayya-short-story/#comment-122322

        • ராமனோட ”இனப் ரிப்ளை” இதுதான்.

          https://www.vinavu.com/2013/12/31/vanakkarayya-short-story/#comment-122388

          அதற்கு கொடுத்த விளக்கம்.

          முசுலிம்கள் திருப்பதி லட்டை உண்ண முடியாது என நான் அளித்த விளக்கத்திற்கு ஒரு வரி கூட மறுப்பு சொல்ல முடியவில்லை உங்களால்.ஆனால் அது தவறு என்று பெரிய நாட்டாமை மாதிரி தீர்ப்பு சொல்கிறீர்கள்.அறிவாளியே திருப்பதி குடைக்கு நன்கொடை கொடுக்கும் அதே முசுலிம் சகோதரர்கள்தான் திருப்பதி லட்டை ஏற்க மறுக்கிறார்கள்.அதே சமயம் நோன்பு துறக்க கஞ்சி காய்ச்ச இந்து சகோதரர்கள் நன்கொடை கொடுத்தால் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறார்கள்.

          தன்னளவில் ஒரு செயலை செய்ய மறுப்பதே மதவெறியாக உங்களுக்கு தெரிகிறது என்றால் நீங்கள் சிந்தனை சிகரம்தான்.நாங்கள் மதவெறியர்களா இல்லையா என்பதை எங்கள் கருத்துக்களை படிப்பவர்கள் முடிவு செய்யட்டும்.உங்களை போன்ற கடவுள் மறுப்பாளர் வேடத்தில் நடமாடும் பார்ப்பன இந்து மத வெறியர்களிடமிருந்து சான்றிதழ் தேவையில்லை.

          \\என்னை திசை திருப்ப முடியாது //

          வேணாம்யா.உங்க திசையிலேயே இருந்துக்கங்க.இந்த பக்கம் வந்து உங்க மதவெறி நோயை மத்தவங்களுக்கும் பரப்பிற போறீங்க.

        • \\I cant waste my time listening to your how muslims are best//

          அதைத்தான் கட்டுரையும் சொல்கிறது.இதை மட்டும் படிக்கவும் மறுமொழி எழுதவும் தங்களின் பொன்னான நேரத்தை செலவிடுவது எப்படி.காரணத்தை நான் சொல்லவா.

          முசுலிம்களும் இந்துக்களும் சமூக நல்லிணக்கத்துடன் வாழ்வது குறித்த செய்திகளை கண்டாலே உங்களை போன்றவர்களுக்கு ”டாப் டு பாட்டம் பத்த்த்திண்டு எரியறது”. அதுனால அந்த பதிவுகளின் மீது முசுலிம் எதிர்ப்பு வெறியை கழிஞ்சு வைக்க வந்துர்றீங்க.

          • பொங்கலை ஆண்டவனுக்கு படைக்காமல், தனியாக எடுத்து வைத்து தனது மத சடங்குகளை புறம் தள்ளி சக மனிதனின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து , ஒரு படி மேலே சென்று , மத நல்லிணக்கத்தில் தனது பங்கை ஆற்றியவன் இந்து .

            கொடுக்கப்பட்ட உணவை ஆசீர்வதிக்கப்பட்டதா இல்லையா என்று மனம் முழுவதும் மதம் நிறைத்து ஆராய்ந்து ஏற்று கொள்பவன் முஸ்லிம் . சக மனிதனின் பண்பாட்டிற்கு மதிப்பளைக்காதவன் . ஹோட்டலில் சாபிடுவது மாதிரி …

            ஹலால் உணவு என்று இந்துக்கள் புறம் தள்ள மாட்டார்கள் . எல்லாவற்றிற்கும் மதத்தை வைத்து கொண்டு முடிவு எடுக்கும் நிலை அவர்களுக்கு இல்லை

            நீங்கள் பக்கம் பக்கமாக எழுதினாலும் இது மறுக்க முடியாத உண்மை .

            நான் குறிப்பிட்ட லட்டு கதையை இன்னொரு முறை படித்து _____ . ______ மது குடிப்பது ஹராமாக தெரியவில்லை ஆனால் லட்டு சாபிட்டால் ஆளாவுக்கு கோவம் வரும் …
            மத வெறியை பிரித்து பார்க்க முடியாத அளவிற்கு , அது இயல்பானது தான் என்று உங்கள் மனதில் தோன்றும் அளவிற்கு தான் உள்ளது

            • \\பொங்கலை ஆண்டவனுக்கு படைக்காமல்…………….தனது பங்கை ஆற்றியவன் இந்து .//

              உண்மை.இந்து சகோதரர்கள் அண்டை வீட்டு முசுலிம்களின் மத உணர்வுகளை மதித்து நடந்து கொள்கிறார்கள்.அதுதான் சரியானது, நண்பர்கள் எந்த மத நம்பிக்கைகளை கொண்டிருந்தாலும் நமது விருப்பபடி உண்ண வேண்டும் பருக வேண்டும் என எதிர்பார்க்க கூடாது.முடியாது இல்லையா.

              ராமனின் நண்பர் ஒருவர் மாட்டுக்கறி பிரியாணியை விரும்பி உண்பவராக இருந்தாலும் அதை அவருக்கு பரிசாக கொடுத்து அனுப்ப மாட்டார்.ராமனின் உணர்வுகளை புரிந்து அவ்வாறு நடந்து கொள்வார்.அது போன்றுதான் இந்து நண்பர்கள் முசுலிம் நண்பர்களிடம் நடந்து கொள்கிறார்கள்.

              \\கொடுக்கப்பட்ட உணவை ஆசீர்வதிக்கப்பட்டதா இல்லையா என்று //

              இதென்னய்யா வம்பா இருக்கு.யார் எதை குடுத்தாலும் வாங்கி தின்றே ஆகணுமா.ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.முசுலிம்கள் ஒரே இறைவன் என்ற [ஏகத்துவ] கொள்கை உடையவர்கள். பிற தெய்வ வழிபாடு அவர்களுக்கு ஏற்புடையது அல்ல.அப்படி பிற தெய்வங்களுக்கு படைக்கப்பட்ட உணவை,தெய்வீக தன்மை கொண்டதாக இந்துக்கள் கருதும் உணவை, எந்த உணவை உண்பது ஒரு புண்ணிய செயல் என கருதுகுரார்களோ அந்த உணவை முசுலிம்களும் உண்டால் அந்த வழிபாட்டை அவர்களும் ஏற்று செய்கிறார்கள் என்பதுதானே பொருள்.அதனால் அந்த உணவை முசுலிம்கள் உண்பது இயலாத ஒன்றாக உள்ளது.இது மத வெறி அல்ல,மத உணர்வு.

              இதை மத வெறி கொள்ளாத இந்து சகோதரர்கள் புரிந்து நடந்து கொள்கிறார்கள்.அவர்களுக்கு அதில் பிரச்னை ஏதுமில்லை.உங்களுக்கு இது பிரச்னையாக தெரிகிறது என்றால் கோளாறு உங்களிடம்தான் இருக்கிறது.

              ………… முஸ்லிம் . சக மனிதனின் பண்பாட்டிற்கு மதிப்பளைக்காதவன் . ஹோட்டலில் சாபிடுவது மாதிரி //

              சக மனிதனின் பண்பாட்டை மதிப்பது வேறு.அதையே பின்பற்றுவது வேறு.

              \\ஹலால் உணவு என்று இந்துக்கள் புறம் தள்ள மாட்டார்கள் . எல்லாவற்றிற்கும் மதத்தை வைத்து கொண்டு முடிவு எடுக்கும் நிலை அவர்களுக்கு இல்லை//

              உண்மை.இந்துக்கள் பல தெய்வ வழிபாட்டுக்கு சொந்தக்காரர்கள்.அதனால் ”பிஸ்மில்லா ” என்று சொல்லி அறுக்கப்பட்ட [இவ்வளவுதான் ஹலால் உணவு எனபது ] ஆட்டு இறைச்சியையோ,மாட்டு இறைச்சியையோ சாப்பிடுவதில் அவர்களுக்கு பிரச்னை இல்லை.இந்த இரண்டையுமே சாப்பிடாத உங்களுக்கு இதில் என்ன பிரச்னை.முசுலிம்கள் தங்களுடைய செயல்களை பொறுத்தவரை தங்களின் மதத்தை பின்பற்றி நடந்தால் அதில் என்ன தவறு.திருப்பதி லட்டை முசுலிம்கள் தின்னே ஆகணும்னு நீங்க அடம் பிடிக்கிற மாதிரி மற்றவர்களை தங்களுடைய மத நம்பிக்கைகளின்படி நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதுதான் தவறு.

              \\மது குடிப்பது ஹராமாக தெரியவில்லை //

              மது அருந்துவது ஹராம்தான்.இல்லையென்று யார் சொன்னது.மது அருந்தி போதையில் திளைப்பவன் உண்மையான முசுலிம் இல்லை.ஒரு பாவ செயலை செய்பவன் அந்த செயலை விட்டு நீங்கும் வரை,அந்த செயலை செய்து கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன் முசுலிம் இல்லை என்பதுதான் இசுலாமிய நெறி.

              \\லட்டு சாபிட்டால் ஆளாவுக்கு கோவம் வரும் …
              மத வெறியை பிரித்து பார்க்க முடியாத அளவிற்கு , அது இயல்பானது தான் என்று உங்கள் மனதில் தோன்றும் அளவிற்கு தான் உள்ளது//

              மீண்டும் சொல்கிறேன்.தன்னளவில் ஒரு செயலை செய்யாமல் இருப்பது மத வெறி ஆகாது.
              இது புரியவில்லை என்று சொன்னால் ஒன்று செய்யலாம்.உங்களுக்கு ஒரு தட்டு மாட்டுக்கறி பிரியாணியும்,முழு ஆட்டு ஈரல் வறுவலும் தருகிறேன்.அதை நீங்கள் உண்டால் திருப்பதி லட்டு திங்காத முசுலிம்கள் மதவெறியர்கள் என ஏற்கலாம்.உண்ண மறுத்தால் லட்டு திங்காத முசுலிம்கள் மதவெறியர்கள் இல்லை என கொள்ளலாம்.

              • //இது புரியவில்லை என்று சொன்னால் ஒன்று செய்யலாம்.உங்களுக்கு ஒரு தட்டு மாட்டுக்கறி பிரியாணியும்,முழு ஆட்டு ஈரல் வறுவலும் தருகிறேன்.அதை நீங்கள் உண்டால் திருப்பதி லட்டு திங்காத முசுலிம்கள் மதவெறியர்கள் என ஏற்கலாம்//

                ____ புரியாது . இருந்தாலும் மத்த வினவு வாசகர்களுக்கு புரியணும் என்பதற்காக எழுதுகிறேன் .

                அதாவது இசுலாமியருக்கு பன்றிக்கறி கொடுத்து சாப்பிடு என்று ஒருவர் சொன்னால் , அது கொடுத்தவரின் பிழை. அதற்கு பெயர் மத சகிப்புத்தன்மை அல்ல ,மத துவேசம்.

                ஆனால் அவர் விரும்பி சாப்பிடும் உணவு ஒன்றை தரும் பொழுது , உணவு என்று பார்க்காமல் , மதத்தை முன்னிறுத்தி சிந்திப்பவன் மதவாதி . சைவ உணவில் தீட்டு பார்க்கும் பார்பனனுக்கும் இதற்கும் எந்த விதமான வேறுபாடும் இல்லை .

                என்னுடைய மதம் சொல்லுது சாமி சொல்லுது என்று பசும்தொல் போர்த்திகொண்டால் யாருக்கும் தெரியாமல் போய்விடுமா

                பின்குறிப்பு : ஆட்டுகால் வறுவலை தனியாக எடுத்து வைக்கவும் . எனது குடும்பத்தில் மற்றவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்

                • \\ஆனால் அவர் விரும்பி சாப்பிடும் உணவு ஒன்றை தரும் பொழுது //

                  பன்றி இறைச்சி கூட பலருக்கு விருப்பமான உணவாக இருக்கிறது.

                  \\____ புரியாது //

                  மட்டுறுத்தலில் அடிபடும் அளவுக்கு கீழ்த்தரமான சொற்களால் எதிர்வாதம் செய்பவர்களை குறிக்கிறார்..அந்த அளவுக்கு ஆத்திரம் கண்ணை மறைக்கிறது.ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு அல்லவா.அதனால்தான் யாருக்கு புரிய வேண்டும் என்று சொல்கிறேன் என்பது கூட அவருக்கு விளங்கவில்லை.

                  \\ஆட்டுகால் வறுவலை தனியாக எடுத்து வைக்கவும் . எனது குடும்பத்தில் மற்றவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள் //

                  மாட்டுக்கறி பிரியாணியும் ஆட்டு ஈரலும் சேர்த்துதான் தருவதாக சொன்னேன்.பிரியாணிதான் முதன்மை உணவு,ஈரல் தொடுகறி தான்.ராமன் மாட்டுக்கறி பிரியாணியை புறக்கணிப்பது ஏனோ.இவரும் இவரு குடும்பமும் மட்டும் ஒருவர் விரும்பி சாப்பிடும் உணவு ஒன்றை தரும் பொழுது தங்கள் கொள்கைக்கு மாற்றமாக இருந்தால் உண்ண மறுப்பார்களாம்.பாய்ங்க மட்டும் இவர் குடுக்குறத தங்கள் கொள்கையை பத்தி யோசிக்காம சாப்புடணுமாம்.நல்லா இருக்குய்யா உங்க நியாயம்.ஓகோ, இதுதான் சாதிக்கொரு நீதியோ.

                  • //பன்றி இறைச்சி கூட பலருக்கு விருப்பமான உணவாக இருக்கிறது.
                    //

                    Here I refer receiving party. Not the person who gives.

                    \\____ புரியாது //

                    By the way , I dint use any derogatory word .I had used the word “you”. Vinavu wants respectful You.

                    //ராமன் மாட்டுக்கறி பிரியாணியை புறக்கணிப்பது ஏனோ//

                    I am a vegetarian. But You see my family beleives in relegion.They beleive If you eat meat on saturday, god will take your eye kind of stories.

                    You will never get the point.I dont expect any religious people will do. They are cant seem to think outside their religion box.I am sorry for you thippu

                    • \\ I dint use any derogatory word …. wants respectful You.//

                      நான் உங்களை போங்க வாங்க என்று அழைக்கும்போது நீங்கள் மட்டும் ”நீ” என அழைக்க தலைப்பட்டது ஆத்திரத்தின் வெளிப்பாடுதானே.அதுக்குத்தா உங்க இங்கிலிபிசு இருக்கே.நிறைய ”அறிவாளிகள்” ஆங்கிலத்தில் எழுதுவதே எதிராளிகளை போங்க வாங்க என்று அழைக்க விருப்பமில்லாததால்தானே.

                      \\ But You see my family beleives in relegion.They beleive If you eat meat on saturday, god will take your eye kind of stories.//

                      உங்க குடும்பத்தினரின் மத நம்பிக்கைகளை,உணர்வுகளை மதித்து மாட்டுக்கறி பிரியாணியை அவர்கள் உண்ண வேண்டாம் என விலக்கு அளிக்கும் நீங்கள் முசுலிம்களின் மத நம்பிக்கைகளை,உணர்வுகளை மதித்து திருப்பதி லட்டிலிருந்து விலக்கு அளிக்க மறுப்பதற்கு காரணம் என்ன.அதுதான் உங்கள் நெஞ்சில் தங்கியிருக்கும் முசுலிம் எதிர்ப்பு நஞ்சு..

                      பி.கு.

                      மேலும் இந்த விவாதத்தை ‘வளவளன்னு இழுக்க விருப்பமில்லை.இதற்கு ஒரு பின்னூட்டத்தை போட்டு நீங்களே வெற்றி அடைந்து கொள்ளுங்கள்.

                    • பார்பனர்கள் எல்லாம் தன் ஹிந்து மத வேதங்களின் அடிப்படையில் தான் அசைவ உணவு சாபிடாம இருக்கா ! என்ற எளிய உண்மை கூட “பாட்டாளி வர்க்கம்” என்ற போர்வைக்குள் பூகுந்து பேசும் இராமனுக்கு வகுப்பு தான் எடுக்கனும் போல !இஸ்லாமியர்கள் திருப்பதி லட்டு சாப்பிடாததற்கு காரணம் அவர் மதம் தான் என்று திப்பு ஒத்துகிட்டார்! அது போல பார்பனர்கள் அசைவ உணவு சாபிடாம இருக்க காரணம் ஹிந்து மத வேதங்களின் அடிப்படை தான் என்று ஒத்துக்க பாட்டாளி வர்க்க முகமூடி இராமருக்கு என்ன தயக்கம் ?

                • //அதாவது இசுலாமியருக்கு பன்றிக்கறி கொடுத்து சாப்பிடு என்று ஒருவர் சொன்னால் , அது கொடுத்தவரின் பிழை. அதற்கு பெயர் மத சகிப்புத்தன்மை அல்ல ,மத துவேசம்.//

                  //என்னுடைய மதம் சொல்லுது சாமி சொல்லுது என்று பசும்தொல் போர்த்திகொண்டால் யாருக்கும் தெரியாமல் போய்விடுமா//

                  மிகவும் நெத்தியடியான பதில்….. இந்து மத தெய்வங்களுக்கு படைத்த உணவை சாப்பிட்டால் தங்களுடைய மத உணர்வு பாதிக்கும் என்று கூறும் அயிந்து அறிவு அறிவிலிகள் இசுலாத்தில் மட்டுமல்ல கிறித்துவத்திலும் பலர் இருக்கிறார்கள். இந்து மத தெய்வங்களுக்கு படைத்த உணவை உண்பதால் இவர்களுக்கு என்ன வந்து விடப்போகிறது. எத்தனையோ முறை என் தோழர்கள் பலர் திருப்பதி சென்று வரும் பொழுது எனக்கும் லட்டு கொடுப்பார்கள். இதனை வருடங்களாக அதனை அன்போடு சாப்பிட்டு வருகிறேன் எனக்கென்ன சாக்காடா வந்துவிட்டது? இப்படி பேசுவதெல்லாம் முதிர்சியற்ற புத்தியை தான் காட்டுகிறது!!!!!

                  • \\அயிந்து அறிவு அறிவிலிகள் //

                    என்ன ஒரு நாகரீகம்.இந்த அளவுக்கு நாகரீகத்தில் சிறக்காத காரணத்தால் உங்களுடன் விவாதிக்க இயலாமைக்கு வருந்துகிறேன்.

                    • என்னப்பா மறுபடியும் மறுபடியும் புரியாதமாதிரி நடிக்கிறீங்க …

                      சைவ உணவு சாபிடரவருக்கு சைவ உணவை அண்டை வீட்டார் தருகின்ற பொது மத காரணம் சொல்பவன் மத வியாதி கொண்டவன்

                      கோழி சாபிடுபவன் பக்கத்துக்கு வீட்டுக்காரன் கொடுத்த கோழி , தன மதப்படி வெட்டப்பட்டு இருக்கிறதா என்று சிந்திப்பது அயோக்கியத்தனம்

                      ஆனால் பாம்பு சாபிடாதவனை , எங்க மதத்துல பாம்பு பிரியாணிதான் சார் நீங்களும் சாப்பிடனும் என்று எதிர்பார்ப்பதுவும் அயோக்கியத்தனம் தான்

                      பார்பான் பக்கத்துக்கு வீட்டுக்காரன் கொடுத்த பொங்கலை தீட்டு என்று சொல்லும்போது இந்த அயோக்கியத்தனம் அப்பட்டமாக தெரிகிறது . நீங்கள் அதே அயோக்கியத்தனத்தை செய்து விட்டு நல்லவர்கள் என்கின்ற பட்டம் வேண்டும் என்கிறீர்கள் .

                      எல்லா மதமும் பொய் தான் சார் அதுல எது நல்ல பொய் என்று சிந்திக்கவில்லை . எந்த பொய் மக்களை அதிகம் தனிமை படுத்துகிறது என்றுதான் பார்த்தேன் .

                      அதிலே வினவு கூறுவது போல பாட்டாளி வர்க்கம் நிதர்சனத்தை உணர்ந்து இருக்கிறது . கோவிலில் கற்பூரம் விற்பவர் ஹராமா இல்லையா என்று சிந்தப்பது இல்லை .

                      இதே பசியோடு இருந்தால் மாட்டுக்கறியோ பன்றிகறியோ ஹலாலோ கோசரோ என்று சிந்திக்க இடம் இல்லை ….

  3. ஹாஹாஹாஹா

    முஸ்லீம்கள் நல்லவர்கள், இந்துக்கள்தான் கெட்டவர்கள். சபாஷ் வினவு.

    • பெருமாள் தேவன்

      இந்துக்கள் முஸ்லீம்கள் நல்லவர்கள்தன் ஆன இந்த TNTJ & RSS மதவெறிகள் இயக்கம்தன் கெட்டவர்கள்

      உங்களமாதிரி

      • தமிழ் என்று பெயர் வைத்திருக்கும்போதே நீங்க ரொம்ப நல்லவர்னு தெரிஞ்சுக்கிட்டேன்.

  4. பார்பனர்களில் சிலர் அனைத்து சமூக மக்களிடமும் அன்புடன் பழகுவது உண்மையே எனது தந்தை ஆசிரியராக பணியாற்றிய பள்ளியில ஆசிரியையாக பணியாற்றிய ஒரு பார்ப்பண ஆசிரியையும் எங்கள் வீட்டாருன் அன்புடன் பழகுவார்கள் எங்கள் வீட்டில் வந்து உணவுவகைகளை சாப்பிடுவது மட்டும் அல்லாமல் அவர்கள் செய்த உணவு வகைகளையும் எங்களுக்கு கொடுத்து அன்புடன் பழகி இருக்கிறார்கள், ஆனால் இசுலாமியர்கள் மட்டுமே நல்லவர்கள் அவர்கள் மட்டுமே சாதி மதம் பாராமல் நட்புணர்வுடன் பழகுகிறார்கள் என்று வினவு வலிந்து நிறுவ முயல்வது ஏன் என்று தெரியவில்லை ஆனால் நடைமுறை உண்மை வேறாகத்தான் இருக்கிறது பெரும்பான்மை முசுலீம்கள் மற்றவர்கள் தரும் உணவை உண்பதை கராம் என்றுதான் நினைக்கிறார்கள் பெருநகரங்களில் அருகருகே வசிப்பதால் பண்டிகை சமய்ங்களில் ஒருவர் உணவை மறவர்கள் பரிமாறிக்கொள்வதா இசுலாமியர்கள் மட்டும் சகிப்பு தன்மை உடையவர்கள் என்று சொல்லுவது ஏற்ப்புடையது அல்ல இசுலாமியர்களிலும் மத வெறியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்னதான் நீங்க சொன்னாலும் இசுலாமியர்களில் சிலர் எதோ நட்புடன் குடுக்கிறார்கள் நாங்கள் பக்கத்து வீடு என்பதால்// ஜாஃபர் நிசா, வயது 50, பூ வியாபாரம்: “நம்ம கஸ்டமரு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பாக்சு தந்தாங்க. ஆனா கற்பூரம் ஏத்தி பூஜ பண்ணிருந்தா சாப்பிட மாட்டோம். அவங்களும் அப்படி தர மாட்டாங்க// ஷீர் அகமது, வயது 52, மளிகைக்கடை 5 வருசத்துக்கு முன்னாடி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துல சேந்தேன். பக்கத்து வீட்டுக்காரங்க கொடுக்கும் தீபாவளி பலகாரங்களை நான் சாப்பிடறதில்லை. கற்பூரம் காட்டியதை நான் தொடமாட்டேன்//என்றுதான் சொல்லி இருக்கிறார்கள் உழைக்கும் மக்களிடமே மதம் இந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது அதோடு மட்டும் அல்லாமல் நகரங்களில் அருகருகே குடியிருக்கும் மனிதர்களிடமே பாகுபாட்டை இசுலாம் உண்டாக்கி இருக்கிறது என்றால் இசுலாமியர்கள் மட்டும் தனித்து வசிக்கும் இடங்களில் மதம் எந்த அளவிற்க்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்று இல்லை எனவே எதோ இசுலாமியர்கள் மட்டும்தான் சகிப்பு தன்மை உடையவர்கள் என்று சொல்லி ஏன் ஏமாற்ற வேண்டும்…

    • ஒரு பார்ப்பண ஆசிரியையும் எங்கள் வீட்டாருன் அன்புடன் பழகுவார்கள் எங்கள் வீட்டில் வந்து உணவுவகைகளை சாப்பிடுவது மட்டும் அல்லாமல் அவர்கள் செய்த உணவு வகைகளையும் எங்களுக்கு கொடுத்து அன்புடன் பழகி இருக்கிறார்கள்,

      __________ p.joseph அவர்களே,

      ஒரு பார்ப்பண உங்க விட்டுல சாப்பிட்டார் நாம்பிட்டேன் , வினவு சொல்வது போல் முஸ்லிம் அமைப்புகளும் அவர்களுக்கு சில அடிபொடிகள் இருக்கிறர்கள் அனால் அனைத்து முஸ்லிகளும் அவர்களை அதரிப்பது இல்லை

      காத்தர் நாட்டில் வடநாட்டு இந்து பூஜைசெய்த இனிப்புகளை முஸ்லிம் அரபி உட்பட சாப்புடுகிறன்

      அனால் அல்லேலியா கிறுத்துவன் மட்டும் தன் சாப்பிடமட்டன்

      முதல நீங்க சாப்பிடுவிங்கள __________ p.joseph ,

      • நான் சாப்பிடுவேன் தமிழ் ,நீங்க நம்பனும்றதுக்காக நான் எதையும் சொல்லல பாஸ் உண்மையத்தான் சொன்னேன் உங்கள் பார்வையில் நான் மதவெறியனாக தெரிகிறேன் என்ன செய்ய ….

    • ஜோசப்,

      சிலர் நம்மிடம் அன்பாக பழகுகிறார்கள் என்பதை எதை வைத்து முடிவு செய்கிறீர்கள். கொங்கு மாவட்டங்களில் வாழும் மக்கள் எல்லோரிடமும் மரியாதையுடன் பழகுவார்கள் என்பது பொதுவான கருத்து. ஆனால் இதை எதை வைத்து முடிவு செய்வீர்கள். அங்கே உள்ள தாழ்த்தப்பட்ட மக்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதை வைத்து தான் நாம் முடிவு செய்ய முடியும்.

      பிறப்பின் அடிப்படையில் அமைந்த சமுதாயக் கட்டுமானத்தை , மனதளவிலும் தொழில்முறையிலும் ஏற்றுக் கொள்ளும் ஒருவன், அதன் அடையாளங்களைத் களையாமலேயே பிறரிடம் அன்பாகப் பழக முடியுமா. அப்படி ஒருவன் பழகினால் அது போலியானது. தலித் சமுதாயத்தை சேர்ந்த அமைச்சர்கள்/அதிகாரிகள் கோவிலுக்கு வந்து போனவுடன் கோவிலைக் கழுவித் தீட்டு கழிப்பதைப் போன்றது.

      கட்டுரையில் இசுலாமிய மக்களைக் குறிப்பாக காட்டுவதன் நோக்கம் தங்களுக்குப் புரிந்தும் அதை ஏற்றுக் கொள்ள தயங்குகிறீர்கள். ஒட்டு மொத்த இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட சிறுபான்மையினரைப் பற்றி உருவாக்கப்பட்ட பிம்பமானது தவறானது என்றும் உண்மையில் அம்மக்கள் இந்துக்களிடம் சாதரணமாக தான் பழகுகிறார்கள் எனவும் இக்கட்டுரை தகுந்த ஆதாரத்தைக் கொடுக்கிறது.

      அதுமட்டுமல்லாமல் , கட்டுரையில் கற்பூரம் காட்டியதை சாப்பிட மாட்டேன் என்று அனைவரும் கூறவில்லையே. ஓரிருவர் கூறினாலும் அதில் என்னக் குற்றத்தை கண்டுபிடித்தீர்கள். தனது சொந்த மதத்தை சேர்ந்த மக்களை தீண்டத்தகாதவர்கள் என்று சேரிக்குள் தள்ளிய பார்ப்பனியத்தை விட வேறு மதத்தை சேர்ந்தவர் என்ற போதிலும் வேறுபாடு பார்க்காமல் பழகும் இவர்கள் சகிப்புத் தன்மை வாய்ந்தவர்கள் தாம்.

      மீண்டும் ஒன்றை வழியுறித்துக் கூற விரும்புகிறேன். இங்கே இசுலாமியர்கள் மட்டுமே சகிப்புத் தன்மை வாய்ந்தவர்கள் என்று எங்கும் கூறவில்லை. இசுலாமியர்களைப் பற்றிப் பொதுபுத்தியில் உருவாக்கப்பட்டுள்ள பிம்பம் தவறு என்றுப் பொட்டில் அறைந்தாற் போல் இக்கட்டுரை எடுத்துக் காட்டுகிறது. அதற்க்கு பதில் சொல்ல வக்கத்து போய் இப்படி இசுலாமிய மக்களை எதிர்த்து ஆவதென்ன?

      நன்றி.

  5. எல்லா மதங்களிலும் சகிப்புத்தன்மை உடையவர்களும் உள்ளார்கள், சகிப்புத்தன்மை இல்லாதவர்களும் உள்ளார்கள். எல்லா சாதிகளிலும் மற்ற சாதியினரை அரவணைத்து செல்பவர்களும் உள்ளார்கள், சாதிவெறி பித்து பிடித்தவார்களும் உள்ளார்கள். இதனால் இந்த குறிப்பிட்ட மதத்தவர் எல்லாம் இப்படித்தான் என்று stereotype செய்வது தவறு.

  6. இந்து சகோதர்கள் வீட்டிலிருந்து வரும் பலகாரங்கள், உணவு பொருட்களை முஸ்லீம்கள் தாரளாமாக சாப்பிடுவார்கள். படையல் செய்த மற்றும் பூசையில் வைக்கப்பட்ட உணவுகளை தவிர, இது முஸ்லீம்களுடன் பழகும் இந்து குடும்பங்களுக்கு நன்றாகத் தெரியும், அவர்களும் குடுக்க மாட்டார்கள்.

    • [1]தமிழ் நாட்டில் விதைக்கபட்ட பெரும்பாலான விதைகள் இயற்க்கைக்கு பொங்கல் அன்று படையல் செய்ய பட்டு தான் சந்தைக்கு வருகின்றது ஐயா ! அதை தான் இஸ்லாமிய சகோதரர்கள் காசு கொடுத்து வாங்கி உண்கின்றனர்.

      [2]ஹலால் செய்யபட்ட கோழி ,ஆடுகளை தான் ஹிந்துக்களும் காசு கொடுத்து வாங்கி உண்கின்றேம்.

      படையலில் , மந்திரிபதில் எல்லாம் பேதம் பார்க்க முடியாது பாய் !

      பேதம் பார்த்தா குஜராத் சமுகம் போன்று தமிழ் சமூகமும் மத ரீதியாக பிளவு பட்டு போகும் பாய்! தேவையா நமக்கு?

  7. ஐயா வினவு,

    இதே மாதிரி வேறு ஒரு பிரிவினர் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு, உண்மையில் அவர்கள் நல்லவர்களாக இருக்க வாய்ப்பிருக்கிறதா?

    • பெருமாள்,

      சாதி, மதம், மொழி இன்னபிற அடையாளங்களை முன்னிறுத்துவதற்காக தனது அடையாளம் தவிர மற்றவற்றை அல்லது தனது அடையாளத்தை உயர்த்தும் பொருட்டு அல்லது ஆதிக்கம் செய்யும் பொருட்டு ‘எதிர்’ அடையாளங்களை உருவாக்கி அல்லது கற்பிதம் செய்து கொண்டு பேசும் போதே பிரச்சினை வருகிறது.உண்மையில் இந்த உலகில் வர்க்க ரீதியான அடையாளமே ஒரு நபரை அவரது ஆளுமையை சமூக இருப்பை தீர்மானிக்கிறது. இதனால் மற்ற அடையாளங்கள் இல்லை என்பதல்ல. ஆனால் அந்த அடையாளங்களின் ஜனநாயகக் கூறு அல்லது ஒடுக்கப்படுவதற்கு எதிரான உரிமை உணர்வு என்பதற்கேற்ப அவையும் முன்னிலை அடையலாம். இதன்றி ஆதிக்கம் செய்யும் அடையாளமே பிரச்சினைகளை வன்மத்தை ஏற்படுத்துகிறது.

      ஒரு பிரிவினர் நல்லவரா, கெட்டவரா என்று அவர்களது வர்க்கம் தவிர்த்த இதர மரபு ரீதியான அடையாளத்தை வைத்து முட்டும் முடிவு செய்தால் முருகன் ஜியை வைத்து முக்குலத்தோர் அனைவரும் சாதிவெறியர்கள் என்ற தவறான முடிவை செய்ய வேண்டியிருக்கும். ஆனால் தேவர் சாதி மக்களில் ஆகப் பெரும்பான்மையினர் உழைக்கும் மக்கள்தான். அவர்களிடம் இருக்கும் சாதிவெறியர்களோ சிறுபான்மையினர்தான். இந்த சிறுபான்மையிர்தான் கந்து வட்டி, கட்டப் பஞ்சாயத்து, தொழில்கள், ரியல் எஸ்டேட், சொத்து, அரசியல் கட்சிகள் என்று தமது சொத்துக்களை பெருக்கவும், காக்கவும் சாதிவெறியை கையிலெடுக்கிறார்கள். உழைத்து வாழும் இதர தேவர் சாதி மக்களும் சமயத்தில் இந்த சதிக்கு பலியாகிறார்கள். அதை கண்டிக்கும் போது இன்னொரு புறம் உழைக்கும் மக்கள் என்ற வகையில் அவர்களது உரிமைகளையும், போராட்ட உணர்வையும், மற்ற மக்களோடு சேர்ந்து போராட வேண்டிய தேவையையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். அதனால்தான் தேவர் சாதி உழைக்கும் மக்கள் எமது விமரிசனங்களை கவனிக்கிறார்கள், சில நேரங்கள் கோபம் வந்தாலும் பல நேரம் எங்களோடு நெருங்கவே விரும்புகிறார்கள். இப்படித்தான் இந்த உறவும், விமரிசனமும் ஒரு போராட்டமாக இருக்கிறது.

      ஆகவே பெருமாள் தனது பெயரில் உள்ள ‘தேவனை’ கைவிட்டுவிட்டு உழைக்கும் மக்களோடு இரண்டறக் கலக்க வேண்டும் என்பதே எமது அவா.ஒருக்கால் இன்று நீங்கள் இதை மறுத்தாலும் நாளையே நீங்கள் மாறுவீர்கள், மாறவேண்டும் என்பதே உண்மை. அதன் அறிகுறிதான் தொடர்ந்து நீங்கள் வினவை படிப்பது.

      இந்தக் புகைப்படக் கட்டுரையில் முசுலீம் உழைக்கும் மக்கள் எவ்வளவு யதார்த்தமாக நேசத்துடன் இருக்கிறார்கள், இவர்களைப் போய் எப்படி மதவெறியர்களாக சித்தரிக்கிறார்கள் என்ற ஆதங்கம் ஏற்பட வேண்டும். அது உங்களிடம் கொஞ்சம் ஆரம்ப நிலையில் இருக்கிறது. அதிகப்படுத்த வேண்டியது எங்களது பணி. அதற்கு ஒத்துழைக்க வேண்டியது உங்களது கடமை.

      நல்லதே நடக்கும். நம்புங்கள்!

  8. உங்கள் வகையறா ஆரம்பத்திலிருந்தே இத தான் சொல்றது.. இந்துக்கள் வெறியர்கள் – நீங்கள் மத அடிப்படையில் ஒன்று சேராதீர்கள் (உங்க அடிப்படையே தப்பு) அப்படின்னு பாய்களுக்கு சாம்பிராணி தூவுறீங்க..

    சாதார பொதுமக்கள் எந்தவித மத வேறுபாடும் பார்ப்பதில்லை.. இந்த பதிவின் மூலம் நீங்களே ப்ரூவ்பண்ணிட்டீங்க.. அவர்களை உங்கள் வழிக்கு கொண்டுவருவது கஷ்டம்.. நீங்க வேணுமினா இஸ்லாமிய மத தலைவர்களுக்கு அறிவுரை சொல்லி பார்க்கலாமே

  9. ஹாஹாஹாஹா

    வினவு சார்,

    நீங்க சொல்றபடியே நான் என் பெயரில் உள்ள “தேவனை” விட்டுவிடுகிறேன். அதேபோல நீங்கள் சொல்லும் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் தங்கள் பெயர்களில் உள்ள மத அடையாளங்களை கைவிடுவார்களா? நாங்கள் அடையாளத்தை துறந்து விட மேற்படி மக்கள் மட்டும் தங்கள் அடையாளங்களை தக்க வைத்துக் கொண்டால் அது சமூக கேடுகளை ஏற்படுத்தாதா?

    எப்படியோ கம்யூனிஸ ஆட்சியை ஏற்படுத்தி விட துடிக்கிறீர்கள். உங்கள் மனப்பால் குறித்து தமிழக மக்கள் ஒருபோதும் கவலைப்பட மாட்டார்கள்.

    • பெருமாள்,

      முசுலீம்களோ இல்லை கிறித்தவர்களோ தங்களது பெயர்களோடு முசுலீம்,கிறித்தவர் என்று – ஜோசப் கிறித்தவர், சலீம் முசுலீம் என்றெல்லாம் – வைப்பதில்லை! சரி,விடுங்கள் தீபாவளி காலமதலால் உங்களுக்கு கொஞ்சம் தள்ளுபடி கொடுத்து அவர்கள் அப்படி அடையாளத்தோடு வைப்பதாகவே வைத்துக் கொள்வோம். அப்போதும் நீங்கள் தேவன் பெயரை விட்டொழித்தே ஆக வேண்டும். ஏனெனில் நீங்கள் மல சலம் கழிக்கும் போது நீங்கள்தானே கால் கழுவ வேண்டும்? அதற்கு மற்றவரெல்லாம் கழுவியிருக்கிறார்களா என்று கேட்பது எந்த ஊர் நியாயம் அய்யா? அடுத்து நீங்கள் கால் கழுவிவிட்டு, மற்றவர் கால்கழுவாமல் விட்டால் சமூக கேடுகளை ஏற்படுத்தாதா என்று கேட்கிறீர்கள்! நல்ல கேள்விதான். அப்போதும் கூட நீங்கள் சேம் சைடு கோல்தான் போடுகிறீர்கள். பாருங்கள் முன்னர் மூன்று பேர் கால் கழுவ வில்லை. இப்போது இரண்டு பேர் மட்டும் கழுவவில்லை. இது நிச்சயம் முன்னேற்றம்தானே? கழுவுமய்யா, உள்ளத்தை கழுவுமய்யா!

      அடுத்து நாங்கள் கம்யூனிச ஆட்சியை ஏற்படுத்த துடிப்பது குறித்து தமிழக மக்கள் ஒரு போதும் கவலைப்படமாட்டார்கள் என்று சாபம் போட்டு விட்டு அதற்கு நேரெதிராக நீங்களே கவலைப்பட்டு அதை இங்கே மறுமொழி போட வேண்டிய அவசியம் என்ன? ஒரு வேளை அந்த மக்கள் கூட்டத்தில் பெருமாள் இல்லையா? எனில் தாங்கள் எந்த கூட்டத்தில் இருக்கிறீர்கள்? எது எப்படியோ அந்த கூட்டத்திலிருந்து உங்களை காப்பாற்றி மக்கள் கூட்டத்தில் இணைக்க வேண்டிய வரலாற்றுக் கடமை எங்களுக்கு இருக்கிறது. அதை மறுக்காமல் ஏற்கும் வீரம் உங்களுக்கு இருக்கிறதா?

      • இலக்கண தவறு வினவு !

        கழுவும் + ஐயா = கழுவுமையா [ம் + ஐ = மை ]

        அல்லது

        கழுவும் + அய்யா = அழுவுமய்யா [ம் + அ = ம ]

        என்று பிழை நீக்கிக்கொள்ளலாம் அல்லவா வினவு ?

      • வினவு இரண்டாம் முறையை தான் சரியாக கையாண்டு உள்ளது.
        கழுவும் + அய்யா = கழுவுமய்யா [ம் + அ = ம ]

        சரியாக தான் எழுதியுள்ளது .

        நன்றி ,நன்று.

        I am really very sorry for my careless mistake of observation

        //கழுவுமய்யா, உள்ளத்தை கழுவுமய்யா!//

      • வினவு,
        ஜாதி மத ரீதியாக மக்கள் பிளவுபட்டுக் கிடப்பதைப் புரிஞ்சிக்க முடியுது. இந்த ஜாதி மதம்ங்கிறது தங்களுக்கான அடையாளம்னும் அதை நாம விட்டுட்டா அதை வச்சிக்கிட்டிருக்கற அடுத்தவன் நம்மை ஏறி மிதிச்சிட்டு போயிருவான்னு நினைக்கிறதையும் புரிஞ்சிக்க முடியுது. உதாரணமா இந்து மதம் அழிஞ்சிட்டா அத்தனை பேரையும் முஸ்லீமாவோ கிறிஸ்துவனாவோ மாத்திருவாங்கங்கறதால் இருக்கலாம். அப்படி அவங்க நினைக்கிறதுல தப்பில்லையே?? ஆக இந்து மதத்தை அழிக்கும்போது கூடவே இஸ்லாமிய மதம், கிருத்துவ மதம், புத்த மதம் போன்ற அனைத்தையுமே அழிச்சாகணுமே? சரிதானே?

      • // ஜோசப் கிறித்தவர், சலீம் முசுலீம் என்றெல்லாம் – வைப்பதில்லை! //

        ஹாஹாஹா இல்லாட்டி ஜோசப் என்ன மதம், சலீம் என்ன மதம் என்று தெரியாதாக்கும். ஒருவேளை நிறக்குருடு மாதிரி பெயர்க்குருடும் ஏற்படுமோ?

      • // அதற்கு மற்றவரெல்லாம் கழுவியிருக்கிறார்களா என்று கேட்பது எந்த ஊர் நியாயம் அய்யா? –//

        வினவு சார்,

        மக்களுக்கு ஒரு விதிமுறை என்றால் அது எல்லாருக்கும் பொருந்தத்தானே வேண்டும். எங்களை நீங்கள் கழுவச் சொல்வதால்தான், நீங்கள் எல்லாரையும் கழுவச் சொல்கிறீர்களா என்று கேட்கிறோம்.

        உங்கள் வாதத்தில் உள்ள நியாயத்தை வாசகர்கள் புரிந்துகொள்வார். அதுபோதும் எனக்கு. நான் தேவன் என்ற பெயரை விட்டுவிடுகிறேன். முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் பெயர்களில் உள்ள தங்கள் மதங்களை விட்டு விட வேண்டும்.

        இல்லை அவர்கள் வைத்துக் கொண்டால் பிரச்சனை இல்லை என்று நீங்கள் வாதம் செய்தால் அதில் உள்ள வித்தியாசத்தையும் வாசர்கள் புரிந்துகொள்வார்கள்.

        • //ஹாஹாஹா இல்லாட்டி ஜோசப் என்ன மதம், சலீம் என்ன மதம் என்று தெரியாதாக்கும். ஒருவேளை நிறக்குருடு மாதிரி பெயர்க்குருடும் ஏற்படுமோ?//

          என்னத்த சொல்றது இப்படி உளறினால். பெருமாள்னு சொல்லும்போது மட்டும் தெரியாலையா உம்மோட மதம் என்ன மதம்னு ஐயா.

          நீங்கள் முதல்ல சாதிய விட்டு வெளிய வாங்க பின்னால மததத்யும் விடலாம்.

          தமிழ்ல நெறைய நல்ல பேரு இருக்கும் போது மதம் சார்ந்த பெயர் உமக்கு இருக்கும் போது அது மத்தவங்களுக்கு இருக்க கூடாதா ஐயா?

          • ஐயா அறிவாளி,

            அதைத்தான் நானும் சொல்றேன். சாதி அடையாளத்தோட, மத அடையாளத்தையும் கைவிடலாமே செய்வார்களா, செய்வீர்களா?

            தமிழ்ல உள்ள நிறைய பெயர்களை கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் வைத்துக் கொள்வதை எது தடுக்கிறது?

            உளறல் நல்லா இருந்தா பதில் சொல்லுங்க.

            • பெயரில் மத அடையாளத்தை விட வேண்டும் என்று கூவும் பெருமாளு , பெருமாள் என்ன நம்ம ஹிந்து சாமி பெயர் இல்லையா ? ஒரு நாகரிகமான தமிழன் தன் பெயரில் மத அடையாளம் இருந்தாலும் , அதனுடன் சாதியை சேத்துக்க மாட்டான்.ஆனா நீரு சாதியையும் சேத்து வைத்து கொண்டு அடுத்தவனை பார்த்து மத அடையாளத்தை விட்டுவிடு என்று கூவுவது ஏன் ஐயா ? ஜோசப் ,ஜமால் இந்த பெயர் எல்லாம் எந்த சாதியையும் உணர்த்தாத போது நீர் மட்டும் சாதியை பெயருடன் பெருமையாக வைத்து கொள்ளவது ஏன் ?

              • இஸ்லாமிலும், கிருத்துவத்திலும் சாதிகள் கிடையாதா தமிழ் தாகம்?

                • சரவெடி,

                  பெருமாளு கிட்ட நான் எழுபும் கேள்விகளில் வந்து எதிர் கேள்வி போடுவது நல்லா தான் இருக்கு சரவெடி. நானும் தகவலை கோரும் உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல கடமை பட்டு தான் உள்ளேன். ஆனால் பெருமாளிடம் நான் கேட்ட கேள்விக்கு முதலில் பதில் சொல்லலாமே நீங்க.

                  @@@’ஜோசப் ,ஜமால் இந்த பெயர் எல்லாம் எந்த சாதியையும் உணர்த்தாத போது நீர் மட்டும் சாதியை பெயருடன் பெருமையாக வைத்து கொள்ளவது ஏன் ?’

                  @@@’ஒரு நாகரிகமான தமிழன் தன் பெயரில் மத அடையாளம் இருந்தாலும் , அதனுடன் சாதியை சேத்துக்க மாட்டான்.ஆனா நீரு சாதியையும் சேத்து வைத்து கொண்டு அடுத்தவனை பார்த்து மத அடையாளத்தை விட்டுவிடு என்று கூவுவது ஏன் ஐயா ?’

                  இதுக்கு பதில் சொன்னீங்க என்றால் உங்க கேள்விக்கும் பதில் தானா உங்களிடம் இருந்தே வருமே ! முயறசி பண்ணுங்க ,முடியாவிட்டால் நான் பதில் அளிக்கின்றேன்

                  • ஹும்… ஒரு பேச்சுக்குக் கூட பிற மதங்களின் ஜாதிப் பாகுபாடுகளும் களையப்பட வேண்டியதுதான்னு ஒரு வரிகூட வரமாட்டேங்குதே. அவ்ளவு கஷ்டமா இருக்குதா என்ன 🙁

                    • சர வெடிக்கு ஒரு சின்ன பயம் ; எங்க பெருமாளுகிட்ட நான் கேட்ட என் கேள்விக்கு இவர் பதில்சொன்னா செம் சைடு கோல் ஆகிடுமே என்ற பயம் ; அதனால் தான் பெருமாளுக்கு நான் எழுப்பும் கேள்விகளை முழுங்கி ஏப்பம் விட்டு விட்டு , “இஸ்லாமிலும், கிருத்துவத்திலும் சாதிகள் கிடையாதா தமிழ் தாகம்?” என்ற கேள்வியை எழுப்புறாரு !

                      நான் தான் பதில் சொல்ல தயாரா இருக்கேன்,அதுக்கு முன் நீங்க முயற்சி செய்ங்க என்று கூறும் போதே இவருக்கு மூக்கு மேல் வியர்த்து கிட்டு ,முந்திரி கொட்டை மாதிரி ,இந்த விவாதத்தின் தொடக்கத்தின் போதே ….. “ஒரு பேச்சுக்குக் கூட பிற மதங்களின் ஜாதிப் பாகுபாடுகளும் களையப்பட வேண்டியதுதான்னு ஒரு வரிகூட வரமாட்டேங்குதே. அவ்ளவு கஷ்டமா இருக்குதா என்ன ” என்று ஏதோ நானு மாற்று மதத்தவருக்கு ஆதரவா இருப்பது போல பேசுறாருசர வெடி !

                      பெருமாளுகிட்ட நான் கேட்ட கேள்வியில் எதிர் கேள்வி போடுவதற்கு [ சரவெடிக்கு ] இவருக்கு உரிமை உள்ள போது ,பெருமாளுகிட்ட நான் கேட்ட என் கேள்விக்கு பதில் சொல்லும் கடமை இவருக்கு[சரவெடிக்கு] இருக்கு இல்லையா ?

                      சரி இவருக்கு வெளக்க உரை கொடுப்போம் !

                      ’ஒரு நாகரிகமான *1தமிழன் தன் பெயரில் மத அடையாளம் இருந்தாலும் , அதனுடன் *2சாதியை சேத்துக்க மாட்டான்.ஆனா நீரு சாதியையும் சேத்து வைத்து கொண்டு அடுத்தவனை பார்த்து மத அடையாளத்தை விட்டுவிடு என்று கூவுவது ஏன் ஐயா ?’

                      இதுக்கு பொருள் என்ன ?

                      *1தமிழன் –>என்றால் தமிழ் பேசும் ஹிந்து ,முஸ்லிம் ,கிருஸ்துவ மதத்தவர்
                      [ஏன் சரவெடிக்கு தமிழ் பேசும் முஸ்லிம் ,கிருஸ்துவ மதத்தவர் எல்லாம் தமிழர் இல்லை என்று தோனுதோ ? ] தமிழ் பேசும் ஹிந்து ,முஸ்லிம் ,கிருஸ்துவ மதத்தவர் எல்லாம் தமிழர் என்பதை மறுகின்றாறோ சரவெடி?

                      *2சாதியை சேத்துக்க மாட்டான் –>என்றால் என்ன பொருள் ? நாகரிகமான தமிழன் [தமிழ் பேசும் ஹிந்து ,முஸ்லிம் ,கிருஸ்துவ ] சாதியை சேத்துக்க மாட்டான் என்று தானே பொருள் வருது !

                    • ஹா..ஹா… தமிழ் தாகம். உங்க பதிலை ரசித்தேன். ஒரு சிறு கரெக்‌ஷன். நாகரிகமுள்ள தமிழன்னு சொல்றதுக்குப் பதிலா நாகரிகமுள்ள மனுஷன்னு வச்சிக்கலாம். எதுக்கு இந்து, முஸ்லீம் கிருத்துவத்தை ஒரு பத்து கோடிப்பேர் பரப்பளவுக்குள்ள முடக்கி வச்சுப் பார்க்கணும். ஆக அனைத்து மதங்களிலும் இருக்கும் சாதிப் பிரிவினைகள் ஒழிக்கப்ட வேண்டியது சரியே என்று ஏற்றமைக்கு நன்றி 🙂

                      பெருமாள் கிட்ட நீங்க கேட்டதுக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்ல. ஏன்னா அவரே சொல்லிட்டாரு அவரு சாதிய அவரு வுட்டுர்றாராம். அதையே நானும் வழிமொழிகிறேன். வாங்க உலக மக்கள் எல்லாம் அவரவருக்கு திணிக்கப்பட்ட சாதி மதம் அத்தனையும் ஒழிச்சிட்டு சந்தோசமா இருக்கலாம்.

            • //உங்கள் வாதத்தில் உள்ள நியாயத்தை வாசகர்கள் புரிந்துகொள்வார். அதுபோதும் எனக்கு. நான் தேவன் என்ற பெயரை விட்டுவிடுகிறேன். முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் பெயர்களில் உள்ள தங்கள் மதங்களை விட்டு விட வேண்டும்.//

              அவர்கள் மதங்களை விட்டால் நீங்கள் சாதியை விடுவீர்கள், என்னவிதமான பினாத்தல் இது.

              அய்யா மீண்டும் முதல்ல இருந்து உங்கள மாதிரி ஆட்களுக்கு விளக்குவதற்குள் நாக்கு தள்ளுது.

              என்ன விட்டுடுங்க.

  10. @ வினவு

    //இந்தக் புகைப்படக் கட்டுரையில் முசுலீம் உழைக்கும் மக்கள் எவ்வளவு யதார்த்தமாக நேசத்துடன் இருக்கிறார்கள், இவர்களைப் போய் எப்படி மதவெறியர்களாக சித்தரிக்கிறார்கள் என்ற ஆதங்கம் ஏற்பட வேண்டும்//

    இப்படி எல்லாம் பேச உங்களுக்கு எப்படி தான் மனசு வருகின்றதோ தெரியவில்லை. __________ என் மறுமொழிகளை வெளியிட்டு என் கேள்விகளுக்கு பதில் சொல்லும் வீரம் உங்களிடம் இருக்கிறதா? என் கருத்து சுதந்திரத்தை பறிக்காமல் இருக்கும் நாணயம் உங்களிடம் இருக்கிறதா?

  11. வினவின் கேள்வி என்ன?
    முசுலீம்கள் தீபாவளி இனிப்பு சாப்பிடலாமா ?
    இதற்கு சில முசுலீம்கள் இனிப்பு சாப்பிடும் படம் போட்டு,பதில் அளிப்பது சரியல்ல !!!
    முசுலீம்கள் ஒரு செயலை செய்யலாமா இல்லையா(ஹராமா,ஹலாலா) என குரான் ,ஹதிதில் தான் தேட வேண்டும்.
    அதாவது அவர்கள் பிரிவு முல்லா (அல்லா சொல்வதாக) கொடுக்கும் விளக்கம் மட்டுமே (அவர்களுக்கு)சரியானது.
    இழிவான பிறவிகளான (quran 8.55)காஃபிர்களுடன் முசுலீம்களின் பாதுகாப்பு கருதி மட்டுமே நட்பு பாராட்டலாம்(quran3.28) என ஏக இறைவன் குரானில் வசனம் இறக்கிய பிறகு,அதனை மீறுபவர்கள் பெயர்தாங்கிகள்,அல்லது தாக்கியா செய்கிறார்கள்.
    பிற தெய்வங்களுக்கு படைக்கப் படாத எதையும் சாப்பிடலாம் என்பதும் தாக்கியாதான்,
    அல்லாவின் பெயர் சொல்லாத எதையும் சாப்பிடாதே என்பதே குரான் வசனம் 6.121!!!
    இப்படி சொல்லும் வேதம், மதம் தேவையில்லை என வெளிவருவதுதான் நல்ல மனிதனுக்கு அழகு. மனிதனுக்கு மதம் தேவை இல்லை!!!

  12. திரு வினவு அவர்களே,

    இந்து, கிறிஸ்தவர், முஸ்லீம் என எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும் அல்லது எந்தவொரு சாதியை எடுத்துக் கொண்டாலும் பெரும்பான்மை மக்கள் நல்லவர்களாகவே இருப்பார்கள். சிறு எண்ணிக்கையிலான நபர்களே தவறு செய்பவர்களாக, குற்றம் செய்பவர்களாக இருப்பார்கள்.

    அந்த சிறு எண்ணிக்கையிலானோருக்காக அந்த ஒட்டுமொத்த மக்கள் மீது குற்றம் சாட்டக் கூடாது. ஆனால் உங்களைப் போன்ற கற்றறிந்த அறிஞர்கள் ஒட்டுமொத்தமாக தேவர் சாதிவெறி, வன்னிய சாதி வெறி, கவுண்டர் சாதிவெறி, இந்து தீவிரவாதம், முஸ்லீம் தீவிரவாதம் என்று எழுதுவதைக் கண்டு வாசகர்கள் உங்கள் நோக்கத்தைப் புரிந்துகொள்ளலாம்.

    இதில் உள்ள நியாயம் உங்களைப் பார்த்து சிரிக்கும். வாழ்க உங்கள் சமுதாயச் சேவை.

  13. நான் பார்த்தவரைக்கும் பழகிய வரைக்கும் பாய்ங்க பழக இனிமையானவர்கள்.

    நான் சின்ன பையனா இருக்குறப்ப, எங்கள் ஊர் தேவமாரு,நாடக்கமாரு மாறி யாரா இருந்தாலும், அது உழைக்கும் மக்களாக இருந்தாலும் எங்கள் வீட்டு விசேசங்களில் மதியம் சாப்பிடவரமாட்டார்கள்.ஏனென்றால் மதியம் எங்கள் வீட்டில் தாயாரிக்கப்பட்ட மதிய சாப்பாடு தான் இருக்கும்.

    அப்பாவின் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் ஆதிக்க சாதியினர் மாலை வேளையில் டீ பார்ட்டி என்ற பெயரில் , எங்கள் வீட்டில் சமைக்காத, வெளியில் கடையில் வாங்கிய உணவுவகைகளை( மிச்சர், லட்டு, கடையில் வாங்கப்பட்ட டீ, கலர்) சாப்பிட்டு போவார்கள். அதே மாலை வேளையில் மறுவீடு என்ற பெயரில் வீட்டில் சமைத்த உணவுகளை கொண்ட விருந்தும் நடக்கும். அதில் சாப்பிட மாட்டார்கள். இப்பொழுது நிலைமை சற்று மாறியிருக்கிறது.

    ஆனால் அப்போதே எங்கள் வீட்டு அருகில் வசித்த பள்ளி ஆசிரியர் ஒரு பாய்(பெயர் நினைவில்லை) அந்த வீட்டு ஹக்கிம் அண்ணன்,அன்வர் அண்ணன், பீமா(பெயர் முழுமையாக நினைவில்லை) அக்கா, அவங்க அம்மா எல்லாரும் ரொம்ப இயல்பா பழகுவாங்க.வீட்டில் சமைத்த உணவை பந்தியில உக்காந்து சாப்பிடுவாங்க.ரொம்ப இயல்பா அவங்க வீட்டுக்கு நான் போறதும் விளையாடுறது அவங்க வருவதும் இருக்கும்

    டிரான்ஸ்பர் ஆகி போயிட்டாங்க.அன்வர் அண்ணன் கூலி வேலைக்கு துபாய் போயிட்டாருனு கேள்விபட்டேன்.
    இந்த பதிவை பார்க்கும் போது அவர்கள் நினைவுக்கு வருகிறார்கள்.நன்றி வினவு.

    இது போலவே நான் பாத்த பாய்ங்க எல்லாருமே பழக இனிமையானவர்கள் தான்.

  14. இராமன் ,

    ஹிந்து மதத்தில் உள்ள பார்பனர்கள் :

    @@@ தன் பார்பன சாதி மேன்மையை காரணம் காட்டி, …….

    ########## தன் மதத்தை சார்ந்த பிற சாதியினர் கொடுக்கும் எந்த சைவ உணவையும் உட்கொள்வது இல்லை [அது ஹிந்து கடவுளுக்கு படைக்க பட்டு இருந்தாலும்,படைக்க படாவிட்டாலும் ] சாதி அடிப்படையில் …..!

    ########## பிற மதத்தவர் கொடுக்கும் எந்த சைவ உணவையும் உட்கொள்வது இல்லை [அது ஹிந்து அல்லாதவேறு கடவுளுக்கு படைக்க பட்டு இருந்தாலும்,படைக்க படாவிட்டாலும் ] [மத அடிப்படையில் ]

    ########## தன் மதத்தை சார்ந்த பிற சாதியினர் கொடுக்கும் அசைவ உணவையும் உட்கொள்வது இல்லை [தன் ஹிந்து மத வேதங்களின் அடிப்படையில்]

    ########## பிற மதத்தவர் கொடுக்கும் எந்த அசைவ உணவையும் உட்கொள்வது இல்லை [மத அடிப்படையில் ]

    முஸ்லிம் மதத்தவர் :

    ##########பிற மதத்தவர் கொடுக்கும் ,படைக்க பட்ட உணவு பொருள்களை உட் கொள்வது இல்லை[இஸ்லாமிய மத அடிப்படையில் ]

    ##########பிற மதத்தவர் கொடுக்கும் ,படைக்கபடாத உணவு பொருள்களை உட் கொள்வது உண்டு [மத நல்லிணக்க அடிப்படையில் ]

    Conclusion :

    [a]அடுத்தவர் கொடுக்கும் உணவுடன் உறவாட பார்பனர்களுக்கு சாதியும் ,மதமும் இரண்டுமே தடையாக உள்ளது.

    [b]அடுத்தவர் கொடுக்கும் உணவுடன் உறவாட இஸ்லாமியருக்கு அவர்கள் மதம் மட்டும் தடையாக உள்ளது.

    எனவே இராமன் போன்ற முற்போக்கு முகமூடிகள் , முதலில் நம் ஹிந்து மதத்தில் உள்ள பார்பன சனாதனவாதிகளை நோக்கி அல்லவா கீழ் கண்ட முறையில் கேள்வி எழுப்பிவிட்டு

    **** சனாதன பார்பனர்களே ,மாற்று சாதியினர் ,மாற்று மதத்தவர் கொடுக்கும் உணவை உண்டால் என்ன தவறு என்று கேள்வி எழுப்ப வேண்டும் ?

    ****அதன் பின் அல்லவா இஸ்லாமியருடன் ஹிந்து கடவுளுக்கு படைத்த உணவை உண்டால் என்ன தவறு என்று கேள்வி எழுப்ப வேண்டும் ?

    இது இராமனுக்கு புரிந்தா சரி !

    • இதுக்கு எத்தன ‘அவாள்’ கிட்ட அய்யா ஆராய்ச்சி பண்ணினீங்க? சில கிறுக்கு பொறம்போக்குகள் பண்றத இந்து மதத்தில் உள்ள எல்லாரும் பண்றாங்க, இல்ல ஒரு சில கிருகனுங்க பண்றதுதான் அவன் சாதில இருக்கற எல்லாரும் பண்றது அப்படின்னு எப்படி உங்களால நாக்கு கூசாம சொல்ல முடியுது? முஸ்லிம்கள் எல்லாரும் கெட்டவங்க இல்ல, அது சில கிருகனுங்க பிரச்சாரம்னு தெளிவா புரியுது உங்களுக்கு. அதே லாஜிக் ஏன் இந்துக்கள் கிட்ட காணாம போய்டுது? பெரும்பாலான ஐய்யர் அல்லது அய்யங்கார் பழக நல்லவங்க. ஒரு சில கிறுக்கனுங்க இன்னும் சாதி பிடிப்போட இருகான். எல்லா பிரிவுலயும் அது போல இருகாங்க. ஒரு சிலரை வெச்சு எல்லாரையும் ஒரே கூண்டில் அடைப்பதை விடுங்க.

      அப்புறம் இந்த பார்பனர்கள் என்ற வார்த்தையை விடுங்கள். அவன் என்னவோ அதை சொல்லுங்கள். சாதி வெறியன் என்று. பார்பனன், பாப்பான், அவா, அம்பி இது எல்லாம் வேண்டாம். சாதி வெறியனும், அம்பியும் ஒன்று அல்ல. அம்பிகளிலும் பெரும்பாலனோர் நல்லவங்க தான். தர்காவில் மந்திரிக்க, இல்ல சர்ச்க்கு போக, இல்ல ரம்ஜான் நோன்பு கஞ்சி குடிக்க, இல்ல அவசரம்னா உதவி பண்ணவோ இங்க யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. முஸ்லிம்கள் பழக இனிமையானவர்கள் அப்படின்னு சொல்ல இவளோ வாதாட்றீங்க. அதே உண்மை அய்யர் அல்லது அய்யங்கார்க்கு பொருந்தும்னு உங்களுக்கு ஏன் கொஞ்சம் கூட தோணல? எல்லா மேல்சாதி மக்களும் சாதி வெறி கொண்டவர்கள் என்பது தான் உங்கள் அடிப்படை கருத்தா? கொஞ்சம் யோசிங்க!

      பி.கு: வேதம் எல்லாம் ஒண்ணும் நீ சைவமா இருன்னு சொல்லல. ஒரு சிலர் அசைவம் சாப்பிடாமல் இருப்பது அவர் அவர் குடும்ப வழக்கம். எங்கள் குல தெய்வ திருவிழாவில் பலி பூஜை ரொம்ப பிரபலம். ஆனா எங்க குடும்பத்துல பொங்க வெக்கரதோட சரி. கருப்பசாமி, மதுரைவீரன்க்கு சுருட்டும், சரக்கும் உண்டு. ஆனா பலி கிடையாது. அது எங்க குடும்ப வழக்கம். இதுக்கும் என் சாதிக்கும் எந்த சம்பந்தம்மும் இல்லை. அய்யர் மற்றும் அய்யங்கார் பரம்பரையா சைவமா இருந்துட்டாங்க. அதே மாதிரி சைவம் மட்டும் சாப்பிடற சாதிகளும் உண்டு. எல்லாம் அவர் அவர் வழக்கம் மற்றும் வளர்ப்பு. இதுல வேதம், சாதி, மதம் எல்லாத்துக்கும் இடம் இல்லை.

      • சந்துரு ,ஒரு பார்ப்பனன் நல்ல மனிதனாக இருக்க முடியுமா? என்ற உங்கள் கேள்விக்கு செவப்பு மற்றும் தென்றல் ஆகியவர்கள் கொடுத்த பதில் மறந்து விட்டதா ? அவர்கள் இருவருடைய பதிலும் உங்களுக்க்கு உடன்பாடு தானே ? ஏன் கேட்கிறேன் என்றால் அவர்கள் இருவருடைய பதிலுக்கும் நீங்கள் எந்த மறுப்பும் தெரிவிகாமல் September 1, 2014 at 12:24 pm முதல் நீண்ட அமைதி காக்கின்றீர்!

        https://www.vinavu.com/2014/08/28/hindu-spiritual-fair-experiences-5/

        • அவர்கள் பதிலில் எனக்கு உடன்பாடு இல்லை தான் சார். ஒத்து கொள்கிறேன். சில முஸ்லிம் தீவிரவாதிகளை காரணம் காட்டி, இந்த முஸ்லிம் மதமே இப்படி தான் என்று சொல்வது போல அவர்கள் பதில் இருந்தது. இதே நிலைமை பல நேர் விவாதங்களில் எனக்கு ஏற்பட்டது.

          ////நடுவில் இந்து மதம் அடைந்த கேவலமான நிலைமையை நினைத்து வெட்கி,//
          இந்து மதம் என்று தனித்து ஒன்றோ அதற்க்கு என ஒரு தனித்துவமான ஒரு மத நூலோ, தனித்துவமான கலாச்சாரமோ,பண்பாடோ கிடையா. அதனால் நடுவில் இந்து மதம் \\அடைந்த கேவலமான நிலைமையை\\ போன்ற கருத்துக்கள் பொருளற்றவை. //

          இது திரு சிவப்பு சொன்னா பதிலின் ஒரு பகுதி.

          //“நடுவில் இந்துமதம் அடைந்த கேவலமான நிலை” என்பது தவறானதும் வரலாற்றுத் திரிபுமாகும். உழைக்கிற மக்களின் வழிபாடுகள் இந்துமதத்திற்குள் வராது. எனவே நாம் ஒன்றைப் பகுத்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்று கருதுகிறேன். ஆதிமுதலே இந்துமதத்தின் கொள்கைகள் மக்களுக்கு விரோதமானவை. நாமே இந்து என்றாலும் நம்மை இந்துவாக ஏற்கமாட்டார்கள். ஏனெனில் இந்துமதத்தின் அடிப்படைத் தத்துவமே வருணம் ஆகும்.//

          இது திரு தென்றலின் பதிலில் ஒரு பகுதி.

          இதே வார்த்தைகளை சில நண்பர்களிடம் கேட்டு உள்ளேன். அது வரை நன்றாக சென்று கொண்டு இருந்த விவாதம், கடைசியில் அவர்கள் என்னை RSS கையால் என்றோ, அல்லது சப்பை கட்டு கட்டுகிறேன் என்றோ, இல்லை நீயும் ஒரு பார்பனன் தான் அதான் இப்படி பேசற என்று சொல்வதிலோ முடிந்தது. ரொம்ப தடவ இத பட்டுட்டேன் சார். அதுனால வெறுத்து போய் தான், ஒரு நண்பரின் பரிந்துரையின் பேரில் இங்கு வந்தேன். இங்கயும் அதே கருத்துக்களை பார்த்த பிறகு, இன்னும் விளக்கம் தந்து திரும்ப புண் பட எனக்கு மனம் இல்லை. அதனால் தான் அதை அப்படியே விட்டு விட்டேன். நீங்கள் கேட்பதால் நான் இங்கு விளக்கம் தருகிறேன்.

          இந்து மதத்தின் அடிப்படை நூல் வேதம் என்பது நம் எல்லாருக்கும் தெரியும் என நம்புகிறேன். நான் இந்து மதம் காலபோக்கில் பல மாறுதல்களை அடைந்து, பல வழிகளில் வளர்ந்தும், தேயுந்தும் வந்தாலும் வேதம் என்பது இன்றும் இந்து வழிபாட்டில் ஒரு முக்கிய பங்கு என்பதால் அதை அடிப்படை என்கிறேன். வேதத்தில் வர்ணம் பற்றி பேசுவது ஒரே இடத்தில் மட்டும் தான். அதுவும் பின்னால் வந்த இடை சொருகல் என்பது இன்று பரவலாக ஏற்கப்பட்ட உண்மை. அப்போ வேதத்துல இந்த சாதி பிரச்சனை இல்லை. வேதம் நீங்க கடவுள் இல்லன்னு சொல்றத கூட எதுக்குது. மனு, புராணங்கள் இயற்றப்பட்ட குப்தர்கள் கூட வைசியர்கள் தான். அப்போ எழுதப்பட்ட சீன யாத்ரிகர்கள் நூல்கள் கூட சாதி கட்டுப்பாடு எல்லாம் சொல்லல. மக்கள் என்ன சாப்டாங்க, தின வாழ்கை எப்படி இருந்தது என்று சொல்லும் புத்தகத்தில் சாதி பத்தி ஒண்ணும் இல்லை. முஸ்லிம் ஆட்சியில் பெரும்பாலும் பிராமணர்களுக்கு இந்த சலுகையும் இல்லை. கோயிலில் வேலை பார்த்தால் படை எடுக்கும் போது சாவு அநேகமாக நிச்சயம். சோமநாதர் கோவில் வரலாறு ஒரு உதாரணம். பக்தி இலக்கிய காலத்தில் கூட சில பிரச்சனைகள் இருந்தாலும், இப்போ இருக்கற இந்த கேவலமான நிலை இல்லை. சாதி யாரையும் கட்டுபடுத்தவில்லை. ஜாதி பெயர்ப்பு எல்லாம் சாதாரணம்தான். சூத்திர மன்னர்கள் கூட இருந்து உள்ளனர். ஒரு சில கிறுக்கர்கள் அப்போவும் கிறுக்குதனம் பண்ணாலும், மக்கள் எந்த வேறுபாடும் இல்லாமல் இருந்து வந்தனர்.

          வெள்ளைக்காரன் வந்தபோ மக்களை சுலபமா பிரிக்க கையாண்ட வழிகளில் ஒன்று தான் சாதி படி சலுகைகள். நிறைய சம்பாதிச்ச பணக்காரன் எனக்கு இன்னும் பணம் வேணும், அத தக்க வைக்க அரசாங்கம் சலுகை தர நெருக்குவது போல தான். எல்லா அறிஞர்களாலும் சாதி பற்றிய ஆராய்ச்சியில் authority ஆக ஏற்றுகொள்ளபட்ட dirk இதை தன் புத்தகங்களில் தெளிவாக விளக்குகிறார். தன்னுடன் இணைந்த இந்திய மக்களுக்கு சலுகைகள் தர, இந்த சாதி மக்களுக்கு இந்த சலுகைகள் என்று அறிவிக்கும் போது, அந்த சலுகைக்கு ஆசை பட்டு உடனே நான் இந்த சாதி, எனக்கும் அதே சலுகை வேண்டும் என மக்கள் ஓடிபோய் கேட்டதன் விளைவுதான் சாதி இப்படி ஊறி போய் இருப்பது.

          இது இன்று ஆராய்ச்சியில், அறிஞர்களால் ஏற்றுகொள்ளபட்ட உண்மை. இந்து மதத்தின் சாராம்சமே சாதி தான் என வாதிடுவது சுத்த முட்டாள்தனம். கி.மு. 1000 முதல் நம்மால் இந்து மதத்தின் evolutionஐ நம்மால் பார்க்க முடியும். இந்த காலத்தில் கண்டிப்பாக சாதி பேதத்தில் இழைக்கப்பட்ட கொடுமைகளை உதாரணம் காட்டி, பார் அப்போவே சாதி வெறி இருந்தது என்று சொல்லவும் முடியும். அனால் அது முஸ்லிம் தீவிரவாதிகளை காட்டி எல்லா முஸ்லிம்களும் இப்படி தான் என்று சொல்வது அல்லது ஹிட்லரின் ஜெர்மனி தான் ஜெர்மனி என்று சொல்வதற்கு ஒப்பாகும். இந்து மதமே இங்கு தப்பில் இல்லை. எல்லா அய்யரும், அல்லது அய்யங்காரும், இல்ல மேல்சாதியினரும் தப்பில் இல்லை. சில காலிகளை கை காட்டி, அது தான் எல்லாரும் என்று சொல்வது மிக பெரும் தவறு. இந்த இந்து மதம் மற்றும் பார்பனர்கள் தான் இன்று நிலவும் சாதி கேடுக்கு ஒரே காரணம் என்பது மிகவும் தவறான கருத்து.
          கடந்த இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகள் எப்படி இருந்ததோ அப்படி தான் இந்தியா 3000 ஆண்டுகளாக இருந்தது என்பது அந்த கருத்தின் அடிப்படை. இது எவளோ அப்பட்டமான பொய் என்று நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

          • //வேதம் நீங்க கடவுள் இல்லன்னு சொல்றத கூட எதுக்குது//

            இதில் ஏதுக்குது என்பது தட்டச்சு பிழையின் காரணமாக எதுக்குது என்று வந்து விட்டது. வேதத்தில் கடவுள் இல்லை, கடவுள் வழி பாடு தேவை இல்லை என்பதும் ஒரு ஏற்றுகொள்ளபட்ட , அங்கீகரிக்கப்பட்ட தத்துவம் என்பதாக இதை எடுத்து கொள்ளவும்.

            • சந்துரு,

              %%% வெள்ளை யானை படித்திர்களா ? அதில் சென்னை காஞ்சி மாவட்ட தலித் மக்கள் வெள்ளையன் ஆட்சியில் உண்ண உணவின்றி குலையுயிராக நாயிக்கு உணவான உண்மை உமக்கு தெரியும். தலித் மக்கள் பணம் பண்ண சாதி படி சலுகைகள் கேட்டார்கலா? அல்லது ஒரு வேலை சோத்துக்கு வழிகேட்டார்களா ?என்பதும் புரியும்! சுமுகத்தின் விளிம்பு நிலை மக்களான தலித் மற்றும் பழங்க்குடி மக்கள் சாதி படி உரிமைகள் கேட்பது கூட உமக்கு தவறாக தெரிவது வக்கிரமாக தெரியவில்லையா ?

              &&& எதோ ஒரு கால கட்டத்தில் சாதி தலைவிரித்தாடி இருந்தால் சரி அது வேதத்தின் மீதான இடை சொருகலால் ந்டந்தாதாக நம்ப சிறிது இடம் இருக்கு ! ஆனால் தெடர்சியாக 2000 ஆண்டுகளாக சாதிய கொடுமையும் ,சாதிய புறக்கணிப்பும் ஹிந்து மதத்தின் பெயரில் நிகழும் போது அதனை மறுத்து பேசுவது உமக்கே கூறுகேட்ட கிறுக்கு தனமாக இல்லையா ?

              தொடரும்

            • சந்துரு,

              @@@என்ன Mr இப்படி பசப்புரிங்க? வேதத்தை எழுதிய பார்பனர்களே அசைவ உணவை மிருக உணர்வுக்கு உரியது என்று கூறி அதனை தீண்டா உணவாக தவிர்க்கும் போது ,ஏன் இப்படி பசப்பல் ,பொய் ,மோசடியான பின்னுட்டத்தை ஈடுகின்றிர்கள் ? //நான் சாதிக்கு அந்த விளக்கத்தை தரவில்லை.என்றும் தரவும் மாட்டேன். நான் அந்த விளக்கத்தை தந்தது சில மக்கள் சைவ உணவு பழக்கத்துக்கு மட்டுமே. இது வேதத்தில் உள்ளது என்று அவன் விளக்கம் தந்தால் அது அவன் நம்பிக்கை சம்பந்தபட்ட விசயம். //

              @@@அப்படி என்றால் சாதிவெறி பார்பனர்களை முஸ்லிம் கடும் கோட்பாட்டுவாதிகளான போகோ ஹராம் என்னும் நைஜீரிய தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டு உள்ளீர்கள் அப்படிதானே ? மிக்க நன்றி ! ஹிந்து மதத்தில் உள்ள பெரும்பான்மை மக்கள் நல்லவர்களாகவும் இருப்பது போல ,முஸ்லிம்களின் பெரும்பான்மை மக்கள் நல்லவர்கள் தான் அல்லவா ? //எனக்கு இதுல தான் சார் அச்சிர்யம்! உங்கள் அனுபவத்தில் பல இந்துக்கள் சாதி வெறி கொண்டு இருப்பதால், அதுவே இந்து மதம் என்று முடிவு செய்து விட்டர்கள். //

              @@@ கோவில்கள் தான் சாதிய கட்டமைப்பின் உச்சமாக இருபதை மோசடியாக மறப்பது யார் வசதிக்காக mr ? ஆலைய நூழைவு போராட்டங்களும் ,கருவறை நூழைவு போராட்டங்களும் , நடந்தது எதற்காக ? சிதம்பரம் நடராசர் கோவில் இன்னும் தமிழ் மொழியை மறுப்பது ஏன் ? அனைத்து மக்களும் ஆகம கோவில்களில் அர்சகர் ஆக விடாமல் நந்தியாக நீர்பது யார் ? சாதிவெறி பார்பனர்கள் தானே ? //இந்து மதத்தின் சாரமே தனி மனித ஒழுக்கம் தான். நீ கோவிலுக்கு போனால் தான் ஆண்டவனிடம் செல்ல முடியும் என்றோ, இல்ல கீழ சாதிக்காரனை அடகினால்தான் உனக்கு புண்ணியம் என்றோ இந்து மதம் சொல்லவில்லை!//

              தொடரும்

              • //வேதத்தை எழுதிய பார்பனர்களே அசைவ உணவை மிருக உணர்வுக்கு உரியது என்று கூறி அதனை தீண்டா உணவாக தவிர்க்கும் போது ,ஏன் இப்படி பசப்பல் ,பொய் ,மோசடியான பின்னுட்டத்தை ஈடுகின்றிர்கள் ?//

                அவன் தன் முடிவுக்கு என்ன காரணம் வேணா சொல்லிட்டு போட்டுமே சார். அதை அவன் நம்ம மேல திணிக்காத வரை எந்த பிரச்சனையும் இல்லையே. நான் மதம் சொல்லுவதால் (எந்த உயிரையும் இம்சிக்காதே) அசைவம் உண்ணமாட்டேன் என்று சொல்வதற்கும், பன்றி கறி அசுத்தமானது என்று என் மதநூல் சொல்லி இருக்கு, அதுனால நான் அதை உண்ண மாட்டேன் என்று சொல்வதும், இல்லை திருக்குறளில் சொல்லியது போல நான் கள் (சாராயம்) குடிக்க மாட்டேன் என்பதோ ரொம்ப வித்யாசம் இல்லை. இரண்டுமே அவர் தனி மனித நம்பிக்கை சார்ந்த விசயம்.

                இதையே அவன் இது கீழ் சாதி உணவு என்பதால் அசைவம் சாப்பிட மாட்டேன், இல்ல கள் சூதிரன் குடிப்பது, அதனால் குடிக்க மாட்டேன் என்று சொன்னால் அடிச்சு துரத்துங்க, இல்ல தூக்குல கூட போடுங்க. அதல்லாம் வெறி பிடிச்ச மிருகம். மனிதன் அல்ல.அத செய்யறதுக்கு முன்னாடி இந்த வேத பத்திய காட்டுங்க:

                Those who eat flesh uncooked, and those who eat the bleeding
                flesh of men,
                Feeders on babes unborn, long-haired, far from this place we
                banish these.

                (லிங்க்: http://www.sacred-texts.com/hin/av/av08006.htm. பகுதி 6, பாடல் 23).

                அதுவும் பத்தலன்னு சொன்னா இந்த மனு சாஸ்திர பத்தியையும் காட்டுங்க:

                There is no sin in eating meat, in spirituous liquor, and in carnal intercourse, for that is the natural way of created beings, but abstention brings great rewards.

                அப்புறம் அவனை அடிச்சு ஊர விட்டு தொரதுங்க. கீழ சாதி உணவுன்னு நான் மாமிசம் சாப்பிட மாட்டேன்னு சொன்னா அவன் சாதி வெறியன். ஆனா என் குடும்ப பழக்கம் அது; எங்க வீட்ல அசைவம் கிடையாது, அது எனக்கு பழகி போச்சு என்றோ, இல்ல என்னை மாதிரி தலைய வெட்டும் போது ஆடு, கோழி துடிகறத பாத்து, சிக்கன் மட்டன் பாத்தா அது துடிச்சது தான் கண்ணுக்கு முன்னால நிக்குது; அதனால எனக்கு அசைவம் வேண்டாம்ன்னு சொல்றவன எதுவம் சொல்லாதீங்க.

                //அப்படி என்றால் சாதிவெறி பார்பனர்களை முஸ்லிம் கடும் கோட்பாட்டுவாதிகளான போகோ ஹராம் என்னும் நைஜீரிய தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டு உள்ளீர்கள் அப்படிதானே ? //

                அமாம் சார். என் பார்வையில் இருவரும் ஒன்று தான். மிருகங்கள். திருத்த முயற்சி பண்ணலாம். இல்ல கொன்னும் போடலாம். அது செய்பவரின் விருப்பம். நான் திருத்த முயற்சி செய்கிறேன். நீங்க என்ன விருப்பமோ அதை பண்ணலாம். என் மனமார்ந்த ஆதரவு உண்டு.

                நான் சொல்றதெல்லாம் ஒண்ணே ஒண்ணு தான் சார். நீங்க எப்படி போகோ ஹராமின் செயலுக்கு இஸ்லாத்தை காரணமாக கூற மாட்டீர்களோ, அதே போல சாதி வெறியனின் செயலுக்கு இந்து மதத்தை காரணம் கூற வேண்டாம். இரண்டு இடத்திலும் மனிதன் தான் பிரச்சனை. மதம் அல்ல. குப்பையையும், குப்பை போட்ரவனையும் சுத்தம் பண்ணிட்டா போதும். வீட்டை கொளுத்த வேண்டாம். சாதி வெறியனையும், அடக்குமுறை வாதியையும், முதாளிதுவத்தையும் அழிச்சிட்டா போதும்.இந்து மதத்தையோ, இஸ்லாத்த்யோ இல்ல அமெரிக்காவையோ அழிக்க வேண்டாம்.

          • சந்துரு,

            ஹிந்து மதத்தில் உள்ள சாதிய படிநிலைக்கும், அதனால் தலித் மற்றும் பழங்குடிமக்கள் இன்றும் துயர் அடைவதற்கும் காரணம் ஹிந்து மத மனுதர்ம வருணாசிர கொள்கைகளும் ,வேத வியாக்கானங்களும் தான் என்ற தியரி தவறு என்று கூற எப்படி முயன்றாலும் அது உம்மால் முடியாது சந்துரு! ஏன் தெரியுமா ?உமது பின்னுட்டம் முழுவதுமே ஹிந்து மனுதர்ம வருணாசிர கொள்கைகள் மேலும் ,வேத வியாக்கானங்களை அடிப்படையாக கொண்டும தான் கட்டமைக்க பட்டு உள்ளன என்ற விடயத்தை உங்கள் கருத்துக்கள் முலமே நிறுவ போகின்றேன்.

            &&&வேதங்கள் தான் ஹிந்து மதத்தின் அடிப்படை என்று நிருபிக்க என்னமா முயற்சிக்கின்றிர்கள் சந்துரு! கடினபட தெவையே இல்லை நண்பரே ! நாங்க என்ன இல்லை என்றா கூறுகின்றேம் ? அது தான் உண்மை ! ஆம் பார்பனர்களை கொண்டு ,பார்பன்ர்களுக்காக ,பார்பனர்களால் எழுத பட்டது தான் வேத வியாக்கானங்கள். //இந்து மதத்தின் அடிப்படை நூல் வேதம் என்பது நம் எல்லாருக்கும் தெரியும் என நம்புகிறேன்//

            &&&இல்லை என்றா சொல்கின்றோம். ஆம் வேதம் தான் பார்பனர்களின் வ்ழிப்பாட்டில் முதலிடம் வகிக்கின்றது என்பது ஆணித்தரமான உண்மை தான்.
            //வேதம் என்பது இன்றும் இந்து வழிபாட்டில் ஒரு முக்கிய பங்கு என்பதால் அதை அடிப்படை என்கிறேன்//

            &&& கால அரசியல் சூழலுக்கு ஏற்ப வேதத்தில் வர்ணம் என்பது இடை சொருகல் தான் என்று கூற நீர் முயன்றாலும், மகாபாரதத்தில் கட்டைவிரல் இழந்த வேடனும் ,சிதம்பரம் நடராஜர் கோவிலில் எரித்து கொள்ள பட்ட நந்தனும் உம் கனவில் வந்து உம்மிடம் ஞாயம் கேட்கவா போகின்றார்கள் ?//வேதத்தில் வர்ணம் பற்றி பேசுவது ஒரே இடத்தில் மட்டும் தான். அதுவும் பின்னால் வந்த இடை சொருகல் என்பது இன்று பரவலாக ஏற்கப்பட்ட உண்மை//

            $$$$ எங்க அப்பன் குதிருக்குள் இல்லை ! பார்பனர்களும் ,பார்பன சார்பு ராசாக்களும் சாதியை வேதத்தின் அடிப்படையில் கட்டமைக்காமல் பின்பு புத்தர் அல்லவா சாதிகளை படைத்தார் என்று சொல்ல வருகின்றிர்களா ? //அப்போ வேதத்துல இந்த சாதி பிரச்சனை இல்லை. //

            %%%% சாதியை பற்றிய,அதன் வேர்களை பற்றிய நிசம் இதுவா ? சிரிப்பு தான் வருகின்றது ,//பக்தி இலக்கிய காலத்தில் கூட சில பிரச்சனைகள் இருந்தாலும், இப்போ இருக்கற இந்த கேவலமான நிலை இல்லை. சாதி யாரையும் கட்டுபடுத்தவில்லை. ஜாதி பெயர்ப்பு எல்லாம் சாதாரணம்தான். சூத்திர மன்னர்கள் கூட இருந்து உள்ளனர். ஒரு சில கிறுக்கர்கள் அப்போவும் கிறுக்குதனம் பண்ணாலும், மக்கள் எந்த வேறுபாடும் இல்லாமல் இருந்து வந்தனர்.//

            தொடரும்

            • அற்புதம் சார். மிகவும் அற்புதம். நான் சொன்னதை முழுசா படிச்சு, அது தப்புன்னு சொன்னா அதுக்கு அதாரம் காட்டுவதை விட்டுட்டு, இபப்டி நடந்து இருக்கு, இதுக்கு என்ன சொல்ற அப்படின்னு கேக்குறீங்க. தீவிரவாதியை காட்டி, அவன் செயலை காட்டி இஸ்லாத்தை குறை கூறுவது போல, சில பொறம்போக்குகள கை காட்டி, இதான் இந்து மதம் என்கிறீர்கள். இதே இந்து மதத்தில் இருந்து மக்களுக்கு நல்லது செய்தவன் எல்லாம் உங்க கண்ணுக்கு தெரிவதே இல்லை. அதே என்னை போன்றோர் இந்து மதம் சாதியை ஆதரிப்பது இல்லை. அது சிலரின் சுயநலத்தில் பிற்பாடு இந்து மதத்தில் புகுத்த பட்ட ஒன்று, 3000 வருசமா இப்படியே இல்லை இந்து மதம். பிற்காலத்தில் காலிகளின் அட்டகாசம் காரணமாக அது இப்படி அசிங்கபடுதபடுகிறது. இந்த அசிங்கம் இந்து மதம் இல்லை அப்படின்னு நாங்க ஆதார பூர்வமா சொன்னாலும், நீங்க “இல்லை! இந்த அசிங்கம் தான் இந்து மதம் அப்படின்னு” சொல்லிகிட்டே இருகீங்க! சாதி அசிங்கம் என்று நான் மறுக்கல சார். ஆனா சாதி தான் இந்து மதமே, அதன் அடிப்படை கொள்கையே அப்படின்னு நீங்க சொல்றதை நான் ஆதார பூர்வமா இல்லன்னு சொல்றேன். என் கேள்வி ரொம்ப சிம்பிள் சார். இடைசொருகலாக வந்த ஒரு விசயம், எப்படி அடிப்படை தத்துவம் ஆகும்? நீங்க கட்டடத்தை அடித்தளம் என்கீர்கள். நான் இல்லை, அது கட்டிடம் தான், எவனோ கட்டியது, அடித்தளம் இது என்று காட்டினாலும் நீங்க இல்லைன்னு சாதிக்கீரங்க!

              //அப்போ வேதத்துல இந்த சாதி பிரச்சனை இல்லை//

              இது இன்று இந்து மத ஆராய்ச்சி மூலம் நிரூபிகபட்ட உண்மை! (நீங்க மறுத்தாலும்). ஏகலைவன சுட்டி காட்டும் நீங்க வால்மீகிய என் பாக்க மறுக்குறீர்கள்? அதே வேடுவன் தானே வால்மீகியும்? அவர் எழுதுன ராமாயணம் இந்து மதத்தின் அடிப்படை நூலாக இருப்பது தெரியாது. ஏகலைவனை நடத்தியது தான் இந்து மதத்தின் விளைவு என்று நீங்க சொன்னா, அப்போ வால்மீகி எழுதுன ராமாயணம் ஒதுகிட்டதற்கான விளக்கம்?

              // கால அரசியல் சூழலுக்கு ஏற்ப வேதத்தில் வர்ணம் என்பது இடை சொருகல் தான் என்று கூற நீர் முயன்றாலும்//

              நான் சொல்லல சாமி. ஆதாரம் சொல்லுது. காலா காலமா இப்போ இருக்கற மாதிரி நிலைமை இல்லை. வேதம் அடிப்படை அப்படின்னு ஒத்துகர நீங்க, வேதத்துல வர்ணாஸ்ரமத்தை புகுத்தும் சுலோகம் (புருஷ சுக்தம் அப்படிங்கற பகுதி. நால்வகை சாதி புருஷனின் நான்கு பாகங்களில் தோன்றியது என்று சொல்லும் பகுதி) பின்னால இடை சொருகளாக வந்தது என்று நிரூபிக்கப்பட்ட உண்மையை பொய் என்று சொல்கீர்கள். இது அம்பேத்கர் அவர்களும் ஒத்துகொண்ட உண்மை (அவருடைய எழுத்து இப்போது கைவசம் இல்லை. இருப்பது திரு. ஜப்பார் எழுதிய Historiography and Writing Postcolonial India என்னும் நூல்தான். இதில் பக்கம் 149-150). அம்பேத்கர் உண்மைன்னு ஒதுகொண்டதை தாங்கள் மறுத்தால் தயவுசெய்து ஆதாரம் காட்டவும் (பத்திரிக்கை எழுத்துகள் அல்ல, peer review journalஇல் ஏற்றுகொள்ளபட்ட ஆதாரம் கட்டுங்க). அம்பேத்கர் பத்தலனா இதையும் வெச்சுகோங்க

              இது திரு.மாக்ஸ் முல்லர் எழுதிய நூல்: https://archive.org/stream/historyofancient00mluoft#page/570/mode/2up.

              இது திரு. ஹென்றி தாமஸ் எழுதியது:
              https://archive.org/stream/miscellaneouses00unkngoog#page/n324/mode/2up

              நால்வர்ணம் என்பது வேதத்தில் பின்னால் திணிக்க பட்டது என்பதற்கு இந்த ஆதாரம் போதுமா? இல்ல இன்னும் வேணுமா?

              //சிதம்பரம் நடராஜர் கோவிலில் எரித்து கொள்ள பட்ட நந்தனும் உம் கனவில் வந்து உம்மிடம் ஞாயம் கேட்கவா போகின்றார்கள்//

              கேக்கறாங்க சார். அதுனால தான் நான் சாதி இந்து மதத்தின் அடிப்படை இல்லை. அது பிற்பாடு சிலரின் சுயநலத்துக்காக இந்து மதத்தின் மீது திணிக்க பட்டதுன்னு புரிய வெக்க இவளோ வாதிடுகிறேன். என்னால் முடிந்த வரை இந்த உண்மையை எல்லா மக்களுக்கும் சொல்லியும் வருகிறேன். கடந்த சில நூற்றாண்டுகளாக மனிதனின் சுயநலத்தினால் மாற்றப்பட்டு, இப்படி மக்களை சாதி பேதத்தால் பிரிப்பது அல்ல இந்து மதம் என்பது தான் உண்மை நிலை. பிற்பாடு புகுத்தப்பட்ட கொள்கைகள், அடிப்படை தத்துவம் ஆகாது!

              உங்களுக்கு சுலபமா புரியும்படியா சொல்றேன். இஸ்லாத்தின் அடிப்படை அன்பு. ஆண்டவனிடமும், மக்களிடமும் தூய்மையான அன்பு செலுத்து என்பது இஸ்லாம். பின்னால வந்த சிலர் அதை கொண்டு மத்த மதத்தை அடக்க, மத்த மதத்து ஆளை துன்புறுத்த அதை உபயோக படுத்தினால் அது யாருடைய தவறு என்பீர்கள்? அந்த மனிதனுடைய தவறா? அல்லது இஸ்லாத்தின் தவறா? மனிதனை விட்டு விட்டு இஸ்லாத்தை சாடுபவனை நீங்க என்னன்னு சொல்வீங்க?

              ஒண்ணு தெளிவா புரிஞ்சுகோங்க சார். தலித்துகளின் நிலைமைக்கும், துயருக்கும் சாதி காரணம் என்பதை நான் மறுக்கவில்லை. அனால் சாதி தான் இந்து மதத்தின் அடிப்படை என்பதை நான் ஆதார பூர்வமாக இல்லை என்று கூறுகிறேன். சமூகத்தை தன் லாபத்திற்காக, தன் கட்டுபாட்டில் வெயத்துகொள்ள சில காலிகாளால் இந்து மதத்தில் புகுத்த பட்டது இந்த சாதி என்பது தான் உண்மை. தன்னை இஸ்லாமியன், இஸ்லாத்தை காப்பவன் என்று கூறிக்கொண்டு மக்களை கொள்கிறானே தீவிரவாதி, அவனை போல! இந்த தீவிரவாத விளக்கத்தை நீங்கள் எப்படி இஸ்லாத்தின் அடிப்படை என்று கூற மாட்டீர்களோ அதே போல தான் சாதி அடக்குமுறை இந்து மதத்தின் அடிப்படை அல்ல. வேதங்கள் வர்ணத்தை பற்றி கூறவும் இல்லை. பின்னால் புகுத்தப்பட்ட அதை தூக்கி எறிந்து விடலாம். கான்செர் கட்டிய வெட்டிட்டா போதும் சார். ஆளையே கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. கான்செர் கட்டிய வெட்டிட்டு, வைத்தியம் பாத்தாலே ஆள் சரியாகிடுவான்.

              இதுக்கு மேலயும் வருணம், சாதி தான் வேதத்தின் அடிப்படை கொள்கை என்று நீங்க சொன்னா என்ன சொல்றதுன்னு தெரியல!

      • \\முஸ்லிம்கள் பழக இனிமையானவர்கள் அப்படின்னு சொல்ல இவளோ வாதாட்றீங்க. அதே உண்மை அய்யர் அல்லது அய்யங்கார்க்கு பொருந்தும்னு உங்களுக்கு ஏன் கொஞ்சம் கூட தோணல?\\

        கொஞ்சம் நடைமுறைக்கு நேர்ல வரணும். அய்யங்கார்களிடம் அய்யர் படும் பாடு நீங்கள் கேள்விப்பட்டதேயில்லையா? என் பேட்ச்மேட் அய்யர். அவரது அம்மா சமையல் வேலைபார்க்கிறவர். தினுமும் காலை நான்கு மணிக்கே அய்யாங்கர் வீட்டுக்கு சமைக்கச் செல்ல வேண்டும். அப்படி சமைக்கிற பொழுது முழுதாக நனைந்து கொண்டு ஈரப்புடவையுடன் தான் அடுப்பே பற்றவைக்க வேண்டும். இருபதுவருடங்கள் தக்காட்டியவர், உடல்நிலை காரணமாக முடியாது என்ற சொன்ன பொழுது அய்யாங்கர் குடும்பம் வேறு சமையல்காரரைத்தான் தேடியதே தவிர இவருக்கு வேலை இல்லை. இதே பதிவில் ஒரு முசுலீமுக்கு பிராமின் வீட்டிலே வேலை கிடைக்குதுன்னு படிக்கிற பொழுது அய்யங்கார் வீட்டில் ஆச்சாரம் இல்லாத அய்யருக்கு இடம் கிடையாது என்பதுதான் சனாதனம்.

        அய்யருக்கு வருவோம். அதே என் பேட்ச் மேட்டின் மனைவி என் பேட்ச் மேட்டிடம் சொல்கிறாள் இப்படி; சூத்திராளோட நோக்கு என்ன பேச்சு வேண்டி கிடக்கு? அய்யங்காருக்கு கீழ் அய்யர்; அய்யருக்கு கீழ் சூத்திராள்! பேஷான இந்து மதம்!

        என்னுடைய துறைப் பேராசியரின் வீட்டிற்கு சென்றிருந்தேன்! காபி தனி டம்ளரில்! என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும் என்பதால் மானம் ரோசம் கருதி நாங்கள் காப்பி குடிப்பதில்லை என்று சொல்லிவிடுவோம். அங்கேயும் சில நல்ல மனிதர்கள் எல்லாம் இருக்கத்தான் செய்தார்கள்; நம்ம வெங்கடேசன் மாதிரி; ஆனா நமக்கு எதுக்கு வம்பு என்று இவரைப்போன்றவர்கள் அமைதியாகிவிடுவது உண்டு. பொணம் கூடதான் அமைதியாயிருக்கும். அதனால அமைதி என்பது நியாயமான கோரிக்கையே அல்ல. அதனால் தான் என் துறைப்பேராசியர் வீட்டில் இருக்கிற நபர்கள் நன்றாக பழகினாலும் அவர்கள் எல்லையை தாண்டமாட்டார்கள். அப்படியானால் நன்றாக பழகுதல் என்றால் என்ன?

        என் சமூகத்திற்கு வருவோம். என் உறவினர் என்று சொல்கிறவர்கள் எல்லாம் அப்பட்டமான சாதிவெறியர்கள். என் அண்ணனுக்கு திருமணம் நடந்தது. பெண்வீட்டார் வீட்டு வேலைக்கு வந்த தலித்தை நடத்திய விதத்தை வழக்காக பதிந்தால் அவர்களையெல்லாம் சாகும்வரை தூக்கில்போட வேண்டும். வீட்டு ஓட்டில் சொருகியிருந்த தட்டை எடுத்து இட்லியை போட்டார்கள்!

        எங்கம்மா சிறுவயதில் இருந்த பொழுது தலித் நண்பரிடம் சேர்ந்து பழகி சோறு போட்டு சாப்பிட்டார்களாம். அதைப்பார்த்த என் பாட்டி ஈவு இரக்கமின்றி நாயைப்போட்டு அடிப்பது போல என் அம்மாவை அடித்தார்களாம். ஏதோ அந்தக்காலம் என்று சொல்கிற பொழுது 2015இல் தான் ஓட்டில் சொருகிய தட்டில் இட்லியைப்போட்டது என் சமூகம்.

        இதைவிட என் சித்திகாரி ஒருத்தி எங்கள் வீட்டிற்கு வந்த பத்திரிக்கையை எடுத்துப்பார்த்துவிட்டு கேட்டாள் இப்படி; “என்ன சாதிபேரே போடல! தரைப்பட கோஷ்டியா இருக்குமோ?” தரைப்படை என்றால் எந்தப்பொது நிகழ்ச்சி என்றாலும் தலித்துகள் மண்ணுல உக்காரணும். அதைத்தான் அப்படிச் சுட்டிக்காட்டுகிறார்.

        என் சமூகத்தில் நல்லவன் என்று ஒருத்தனைக் கைகாட்ட முடியாது. இதில் வர்க்க அளவில் ஏழைகளாக இருந்தவர்களை மட்டும் தான் சாதிவெறியிலிருந்து அசைக்க முடிந்தது. என் தாயார் 13 வருடம் சித்தாள் வேலை பார்த்தவர்; துன்பம் வந்த பொழுது எங்களுக்கு உறுதுணையாக இருந்தது எங்கள் சாதியைச் சராத எங்கள் பக்கத்துவீட்டு பல சாதிகளே தவிர ஒருத்தன் கூட ஏன் குரங்கு என்று நாங்கள் விழுந்துகிடந்தபொழுது தூக்கவில்லை. அதைத்தான் நாங்கள் வர்க்கமாக அணிதிரள்வது என்று சொல்கிறோம். அதைவிடுத்து ஒவ்வொருவருக்கும் ஒரு பழக்கம் என்று சாதிக்கு புதுவியாக்கனம் கொடுப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்பதை சந்துருவின் பார்வைக்கு வைக்கிறேன்.

        சாதி இந்துக்கள் என்று சொல்கிற எங்கள் வீட்டில் மாட்டுக்கறி வாங்கி உண்போம். ஆனால் கள்ளர் சாதியைச் சேர்ந்த என் வகுப்பு நண்பன் மாட்டுக்கறி தின்பதில்லை. காரணம் மாடு புனிதம் என்பதல்ல; மாட்டுக்கறி தலித்துகள் திங்கறது என்ற காரணம் மட்டுமே. ஆனால் தலித்துகளிலே பறையர்கள் மாட்டுக்கறி தின்பதால் அது இழிவானது என்று சொல்கிற பள்ளர்களும் இருக்கிறார்கள். இத்துணை இழிவுகளை வைத்துக்கொண்டு அதை பழக்கம் என்று சுருக்குவதும் இந்துமதத்தை மதம் என்பதன் அடிப்படையில் பிறமதத்தோடும் ஒப்பிடுவதும் மனிதத்தன்மையற்ற செயல். ஏனெனில் மனிதனை மதிப்பதற்கு இந்துமதத்தில் ஒரு மயிரும் கிடையாது.

        ஆக சமத்துவத்தைத் தேட வேண்டுமானால், பழக்கம் என்று சால்ஜாப்பு சொல்லக்கூடாது. ஜனநாயகமாக மக்கள் சேர்ந்துவாழ்கிற இடங்களையெல்லாம் நாம் கண்டுகொள்வது மட்டுமின்றி தான் சார்ந்த சமூகத்தின் அழுக்குகளை கண்டிக்க முன்வர வேண்டும். ஆனால் இதே நடுத்தரவர்க்க கோஷ்டிகளுக்கு வர்க்கம் என்று சொன்னால் கம்யுனிச அரிப்புவந்துவிடும். சந்துரு அவர்கள் இவ்வாதத்திலே நியாயம் இருப்பதை உணர்ந்தால் வர்க்க ரீதியாக அய்யர்களை அணிதிரட்ட வருவாரா?

        • வருடக்கணக்கில் தட்டச்சு பிழை. 2014 என்று இருக்க வேண்டும். 2015 என்று இருக்கிறது. திருத்தி வாசித்து கருக்காக பதில் சொல்லவும் சந்துரு.

          • //தலித்துகளிலே பறையர்கள் மாட்டுக்கறி தின்பதால் அது இழிவானது என்று சொல்கிற பள்ளர்களும் இருக்கிறார்கள்.// உண்மைதான் இதத்தான் நானும் ஒரு பின்னூட்டத்துல சொன்னேன் ஆன என்னையும் பார்ப்பண அம்பி சாதி வெறியர் என்று சொல்லிவிட்டார்கள் சரி அத விடுங்க ,உங்களுக்கு இசுலாம் அஸ்கர் அலி என்ற இன்சினியர் மூலம் அறிமுகமானதாக சொல்லுகிறீர்கள் எனக்கும் கல்லூரியில் படிக்கும் போது இசுலாமிய மாணவர் மூலம் அறிமுகமானது இசுலாமிய அறிமுக கூட்டத்திற்க்கு பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்றார் கிறிஸ்த்தவ பாதிரி போல அங்கி அணிந்து குல்லா வைத்த ஒரு மத போதகர் இசுலாம் இனிமையானது சமத்துவத்தை பாதுகாக்கும் ஒரு மதம் என்றார் இசுலாமிய மந்திரங்கள அரபியில் பாடி விளக்கம் குடுத்தார்கள் எந்த கேள்வினாலும் கேளுங்க அதுக்கு இசுலாத்தில் பதில் இருக்கிறது என்றார்கள் குரான் புத்தகத்தையும் குடுத்தார்கள் இலவசமாக ,குரான் புத்தகத்த படிச்சிட்டு அடுத்த பயான்ல இந்த கேள்விய நான் கேட்டேன் “அய்யா குரானின் ஆர்மப்த்துலயே இது கடவுள் அருளியது மாற்றம் இல்லாதது பாமரனுக்கும் புரியும் படித்த பன்டிதர்கலையும் கவர்ந்தது என்று போட்டு இருக்கீங்க அனா ஒவ்வொறு அதிகாரத்துக்கு முன்னாடியும் பின்னாடியும் அதுக்கு விளக்கமுனு அந்த அதிகாரத்த விட அதிக பக்கங்களில் விளக்கம் குடுத்து இருக்கீஙகளே ஏன்” அப்பிடினு கேட்டேன் அவரும் ஒரு இசுலாமிய மந்திரத்த ஓதிட்டு இது எந்த இடத்துல குரானுல இருக்குனு பக்கத்துல இருந்த உதவியாளர்ட கேட்டு பதில் சொன்னாறு நான் கேட்டதுக்கும் அவரு சொன்ன பதிலுக்கும் சம்மந்தமே இல்லை,அடுத்து என்னை இசுலாமிய கூட்டத்துக்கு அழைத்து சென்ற நண்பரும் நீங்க குரான பொருமையா படிங்கனு சொல்லிட்டாறு அடுத்து அந்த கூட்டத்துக்கே போகல அனா இனையத்துல இசுலாம பத்தி முன்னால் முஸிலீம்களின் கருத்துகளை படித்த பின்பு இசுலாம் என்பது மனிதர்களை பிரித்து வன்முறையை தூண்டும் மார்க்கம் என்பதை தெரிந்து கொண்டேன் ,இசுலாமியர்கள் நல்லவர்களே அதை மறுக்கவே முடியாது ஆனால் _______இசுலாத்தை விட்டு விலகுவது அவ்வளவு எளிது அல்ல “என்னுடன் பணியாற்றிய நண்பர் தனிப்பட்ட முறையில் இசுலாமை தாக்கி பேசுவார் அனாலும் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு செல்லுவார் ஏன் இப்பிடி இருக்கீங்க என்று கேட்ட போது சும்மா இருங்க சார் ஜிம்மா தொழுகைக்கு கூட போகலனா ஜமாத்த விட்டு தள்ளி வச்சுருவானுக அப்புறம் ஏகப்பட்ட கஸ்டம் அதுக்கு இந்த வெள்ளிக்கிழம கஸ்டப்படுரது எவ்வளவோ தேவலை அப்பிடினாறு”மத்த மதத்துகாரன விட இசுலாமியர்கள் கம்மூனிஸ்டாவோ நாத்திகனாவோ மாறுறது கஸ்டம் அனா தென்றலும் வினவும் இசுலாமியர்கள் நல்லவர்கள் என்று சொல்லுவதால் இசுலாமும் நல்ல மதம்தான் என்று புரிந்து கொள்ளுவார்கள் அதனாலதான் திப்புவும் ஜாகிறும் தங்களிம் மதம் சிறந்தது என்று பேசுகிறார்கள் ,தாழ்த்தப்பட்ட மக்கள் இசுலாமிற்கு மாற விடாமல் என்னால் இயன்றதை செய்கிறேன் நண்பர் உனிவர்புட்டியும் இசுலாமிய மதத்தை பொருமையுடன் விளக்கி அம்பலப்படுத்துகிறார் ஆர் எஸ் எஸ் என்னும் மத வெறி இயக்கம் இசுலாமிய்ர்கள் இந்தியாவில் அதிகாமிகி விடுவார்களோ என்று கவலைப்படுகிறது அதைத்தான் உனிவர்புட்டியும் வழி மொழிகிறார் என்கிறீர்கள் அனாலும் அதில் உண்மை இல்லாமல் இல்லை ____

        • உங்கள் அனுபவத்திற்கு நான் வருந்துகிறேன் சார். உங்க கூட படிச்சவர் கிட்ட நீங்க பட்ட பாடு கொடுமை தான். அந்த அய்யர் உங்களை அப்படி நடத்தியதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன்.

          //அதைவிடுத்து ஒவ்வொருவருக்கும் ஒரு பழக்கம் என்று சாதிக்கு புதுவியாக்கனம் கொடுப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்பதை சந்துருவின் பார்வைக்கு வைக்கிறேன்.//

          நான் சாதிக்கு அந்த விளக்கத்தை தரவில்லை.என்றும் தரவும் மாட்டேன். நான் அந்த விளக்கத்தை தந்தது சில மக்கள் சைவ உணவு பழக்கத்துக்கு மட்டுமே. இது வேதத்தில் உள்ளது என்று அவன் விளக்கம் தந்தால் அது அவன் நம்பிக்கை சம்பந்தபட்ட விசயம். முஸ்லிம்கள் குரானில் சொல்லப்பட்டது என்பதால் நாங்கள் பன்றி உண்ணமாட்டோம் என்பது போல. அனால் அதற்க்கு அவன் இது கீழ் சாதிக்காரன் சாப்பிடுவது, அதனால் சாப்பிட மாட்டேன் என்று சொன்னால் அது அயோக்யத்தனம். கடைந்து எடுத்த சாதி வெறி! மதத்தின் பெயரால் ஏற்படும் தனி மனித முடிவையும், அவன் மேல் சாதி என்னும் திமிரால் ஆடும் ஆட்டத்தையும் ஒன்றாக கருத வேண்டாம். என் மதம் என்னை பன்றி சாப்பிட கூடாது என்று சொல்கிறது, அதனால் நான் பன்றி உண்ண மாட்டேன் என்பது வேறு. பன்றி காபிர்களின் உணவு, அதனால் உண்ண மாட்டேன் என்பதும் இரு வேறு நிலைப்பாடு. ஒன்று தன்னை மட்டும் சம்பந்தப்பட்ட சுய முடிவு. அதனால் யாருக்கும் பிரச்சனை இல்லை. இரண்டாவதாக சொன்னது வெறி. அழிக்கப்பட வேண்டிய ஒன்று.

          //இந்துமதத்தை மதம் என்பதன் அடிப்படையில் பிறமதத்தோடும் ஒப்பிடுவதும் மனிதத்தன்மையற்ற செயல். ஏனெனில் மனிதனை மதிப்பதற்கு இந்துமதத்தில் ஒரு மயிரும் கிடையாது//

          எனக்கு இதுல தான் சார் அச்சிர்யம்! உங்கள் அனுபவத்தில் பல இந்துக்கள் சாதி வெறி கொண்டு இருப்பதால், அதுவே இந்து மதம் என்று முடிவு செய்து விட்டர்கள். நீங்கள் அய்யர், அய்யங்கார், உங்கள் சுற்றத்தினர் ஆகியோரிடம் சந்தித்த சாதி வெறியை கூறினீர்கள். அதை நீங்கள் அனைத்து மக்களிடமும், ஒரு படி மேலாக இந்து மதத்தின் மேலும் பூசுவது தான் எனக்கு பிரச்சனை. கேவலமான மனிதர்கள் எல்லா இடங்களில் இருகாங்க! முஹம்மது உபயோக படுதியதனால் ஒரு பல் துலக்கும் கருவியை உபயோகிக்கும் அளவுக்கு இஸ்லாத்தின் மீது பற்று கொண்ட ஒருவன் தான், போகோ ஹராம் என்னும் நைஜீரிய தீவிரவாத இயக்கத்தின் தலைவன். பள்ளி சிறுமியரை கடத்தி விற்றவன். அதே குரான் அடிப்படை தான், நபிகள் நாயகுதுக்கும். இருவருக்கும் உள்ள வேறுபாடு அவர்கள் மனம் மற்றும் அறிவு தான். இதில் இஸ்லாத்தின் தவறு என்ன?

          இந்து மதத்தின் சாரமே தனி மனித ஒழுக்கம் தான். நீ கோவிலுக்கு போனால் தான் ஆண்டவனிடம் செல்ல முடியும் என்றோ, இல்ல கீழ சாதிக்காரனை அடகினால்தான் உனக்கு புண்ணியம் என்றோ இந்து மதம் சொல்லவில்லை! உன் வாழ்க்கைக்கு நீயே பொறுப்பு! உன் கடமையை செய், அனைவருக்கும் உதவு, நீ கடவுள் இல்லைன்னு கூட சொல்லு! ஆனா உனக்கு சமூகத்தில் கடமை இருக்கு, அதை ஒழுங்கா பண்ணு, நீ நல்லா இருப்பே என்கிறது இந்து மதம். பிரமம் தான் எல்லாத்துலயும் இருக்கு! அனைத்தும் கடவுளே என்பது இந்து மதம்! இதை விட அனைவரும் சமம் என்பதை எப்படி சார் சொல்ல முடியும்! எல்லாரும் மனிதர் என்று கூட சொல்லவில்லை, எல்லாரும் கடவுள் என்கிறது! இதை தான் தாங்கள் மனிதனை மதிக்க ஒரு மயிரும் இல்லாத மதம் என்று சாடுகீர்கள். மனிதன் பாவப்பட்டவன், ஏவாள் செய்த பாவத்தால் நீ பிறக்கிறாய். ஏசுவை ஏற்றுகொல்வதன் மூலம் மட்டுமே நீ பாவத்தை போக்க முடியும். நீ எவளோ நல்ல வாழ்கை வாழ்ந்தாலும், புத்தானவே இருந்தாலும், ஏசுவை ஏற்பதே நீ இறப்பில் சொர்க்கம் செல்லும் வழி என்பதை விட நீ சக உயிர்களை எப்படி நடத்துகிறாயோ அதுவே உன் விதியை தீர்மானிக்கும் என்று சொல்லும் இந்து மதம், மனிதனை மதிக்கும் மதமாக எனக்கு தோன்றுகிறது.

          இதில் சாதியை கலந்தது, தன் சுயநலத்துக்காக கதையை மாற்றி எழுதியது எல்லாம் அவனவன் செய்த அயோக்யத்தனம். இதே இந்து மதத்தை வெய்து தான் திலகர் மக்களை ஒன்று திரட்டினார், ராஜா ராம் மோகன் ராய், சுவாமி தயானந்த சரஸ்வதி போன்றோர் சமூக மாற்றங்களை கொண்டு வந்தனர். இதன் மூலம் தான் பல தமிழ் இல்லகிய பொக்கிஷங்கள் (சிலபத்திகாரம் உட்பட)நமக்கு கிடைத்தது. உலகத்தில் எல்லாம் மாறுவது. மாற்றுபவன் மனிதன். கடந்த 200-300 வருசத்துல வந்துதான் இந்து மதம் இல்ல. 3000 வருசமா அது தன்னை மாற்றி கொண்டுள்ளது. சில சமயம் அது வளர்ந்தது, சில சமயம் அது தேய்ந்தது. இப்போ அதுக்கு நோய் வந்துருக்கு. அதுக்காக அதை அழித்தே ஆக வேண்டும் என்பது இல்ல.வைத்தியம் பாத்து சரி பண்ணிடலாம். என்ன கொஞ்சம் பொறுமை வேணும்.அடகப்பட்டவனுக்கு இது கோவத்தை தரும். நியமான கோவம் அது. ஆனா இப்படி அழுசுட்டே போனா கொஞ்ச நாள்ள ஒண்ணும் மிஞ்சாது. அழிப்பை விட வைத்தியம் சிறந்தது.

          அணு சக்திய வெச்சு மின்சாரம் எடுக்கலாம் இல்ல உலகத்த அழிக்கலாம். உலகத்தை அழித்ததனால் அணு சக்தி ஆயுதம் மட்டும் அல்ல! ஆக்குவதும், அழிப்பதும் யார் கையில் அது இருக்கிறது என்பதை பொருத்தது. நீங்கள் இந்து மதம் இந்த கொடுமைக்கு எல்லாம் காரணம், அதனால் அது அழிக்கப்பட வேண்டும் என்கிறீர்கள். நான் சற்று மாற்று கருத்து உடையவன். உலகத்தில் முழுமையாக நல்லது அல்லது தீமை என்பது எதுவும் இல்லை. இந்து மதம் இல்லை என்றால் வேற காரணம் காட்டி அடக்குமுறை செய்பவன் அதை செய்து கொண்டே இருப்பான். இதை அழிக்க ஒரே வழி மக்கள் சிந்தனையை மாற்றுவது மட்டும் தான் என்பதே என் வாதம்.

          • இந்து மதத்தின் சாரமே தனிமனித ஒழுக்கம் என்கிறீர்கள்.

            சுயமரியாதை, தன்மானம் உள்ள யாரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் ஒழுக்கத்தைப் போதிப்பதற்கு இந்துமதம் என்றில்லை இன்னபிற மதங்களுக்கும் என்ன தகுதி இருக்கிறது? என்ன அவசியம் இருக்கிறது? உழைத்துவாழ்கிற எந்த மக்கள் ஒழுக்கம் கெட்டவர்களாக இருந்தார்கள்?

            ஒரு மதம் தன் மக்களை ஒழுக்கம் கெட்டவர்களாக பார்க்குமேயானால் அதன் யோக்கியதை என்ன? இரண்டாவது கடமையைச் சுட்டுகிறது என்று சொல்கிறீர்கள். உரிமைகள் இருந்தால் தானே கடமைகள் பற்றி பேசமுடியும். உழைத்து வாழ்கிற மக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு எந்த இந்து டெக்ஸ்டிலாவது ஒருவரியாவது இருக்கிறதா?

            \\உன் வாழ்க்கைக்கு நீயே பொறுப்பு! உன் கடமையை செய், அனைவருக்கும் உதவு, நீ கடவுள் இல்லைன்னு கூட சொல்லு! ஆனா உனக்கு சமூகத்தில் கடமை இருக்கு, அதை ஒழுங்கா பண்ணு, நீ நல்லா இருப்பே என்கிறது இந்து மதம். பிரமம் தான் எல்லாத்துலயும் இருக்கு! அனைத்தும் கடவுளே என்பது இந்து மதம்!\\

            மேற்கண்ட நீங்கள் சுட்டிக்காட்டுகிற வசனம் பகவத் கீதையாகும். இதைவிட சூழ்ச்சியான நயவஞ்சகமான வெறித்தன்மை கொண்ட கருத்து வேறெங்கும் இருக்க இயலாது. இவ்வசனங்கள் கிருஷ்ணன் அருச்சனிடம் உரைத்தது. போர்க்களத்திலே தன் சொந்தபந்தங்களையே கொல்ல வேண்டும் என்று அர்ச்சுனன் இனக்குழுச் சமூகத்தின் விழுமியங்கள் காரணமாக தயங்கி நிற்கிற பொழுது கிருஷ்ணன் உன் தயக்கம் தவறானது என்றும் பிரம்மம் எல்லாத்திலேயும் உண்டு; நீ பார்ப்பது வெறும் உயிர் மட்டுமே என்று குலகுரு பீஷ்மரைக் கொல்லச் சொல்கிறான். துரோணாச்சாரியாரைக் கொல்லச் சொல்கிறான்; கர்ணனைச் சொல்கிறான். காரணமே இல்லாமல் மனித உயிரைக்கொல்வதற்கு பெயர் கடமையாம். நயவஞ்சமாக சொன்னப்பட்ட கருத்துக்கள் விழுமியங்களாம். என்ன சார் இது?

            இனக்குழு சமூகத்திற்கே உரிய காரணங்களான ஈகை இரக்கத்தோடு அருச்சனுன் ஒரு கணம் யோசிக்கிறானே அதுதான் விழுமியங்கள். இந்து மதத்திற்கு அங்கு அவசியமே கிடையாது! பிச்சையெடுத்தாவது பொண்டாட்டிக்கு டீயும் பன்னும் வாங்கித்தருகிற கணவனுக்கு இல்லாத விழுயங்களா நீங்கள் சுட்டிக்காட்டுகிற பிரம்மத்தில் இருக்கிறது? இதெல்லாம் ரொம்ப அயோக்கியத்தனமாக இல்லையா சார்!

            • இவ்வளவு தானா உங்க புரிதல்? நீங்க மதங்களை புரிந்து கொள்ள எடுத்த முயற்சி இவளோ தானா? மொதல்ல போய் நீங்க சாடுகிற புத்தகங்களையும் கருத்துகளையும் படிங்க சார். அப்புறம் பேசுங்க.

              //சுயமரியாதை, தன்மானம் உள்ள யாரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் ஒழுக்கத்தைப் போதிப்பதற்கு இந்துமதம் என்றில்லை இன்னபிற மதங்களுக்கும் என்ன தகுதி இருக்கிறது? என்ன அவசியம் இருக்கிறது? உழைத்துவாழ்கிற எந்த மக்கள் ஒழுக்கம் கெட்டவர்களாக இருந்தார்கள்?//

              இதை ஏன் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்று விளக்க வேண்டுகிறேன். ஒழுக்கத்தை போதிக்க மதத்திற்கு என்ன தகுதி என்று கேட்கிறீர்கள். மதம் தன் மக்களை ஒழுக்கம் கெட்டவர்களாக பார்கிறது என்று நான் சொல்லவில்லையே! அது உங்கள் inference. சிவில், கிரிமினல் சட்டங்கள் போல மதமும் மனிதனை வழி நடத்தி செல்ல ஒரு வரையறுக்கப்பட்ட ஒரு கோட்பாடு. சட்டம் இல்லாட்டி இப்போ இருக்கற பல உரிமை மக்களுக்கு இருக்காது சார். அப்போ சட்டம் மக்களை ஒழுக்கம் கெட்டவனாக பார்கிறது என்பது சரியா? மனிதன் ஒழுக்கம் கெட்டவன் என்று அது சொல்லவதில்லை. மனிதன் எப்போதுமே சுயநலம் இல்லாமல் இருப்பது இல்லை. அப்படி தன் நலத்துக்காக மத்தவனை துன்புறுத்தினால் என்ன செய்ய வேண்டும் என்பது சட்டம். அப்படி நீ ஏன் செய்ய கூடாது என்று சொல்வது மதம். மனிதன் சுயநலம் இல்லாம இருந்தா இன்னைக்கு உலகத்துல எந்த பிரச்சனையுமே இல்லை. ஆனா அப்படியா சார் இருக்கு? உழைக்கும் மக்களை அடிச்சு புடுங்க எந்த மதமும் சொல்வதில்லை. அப்படி செய்யாதே என்று தான் சொல்கிறது. எல்லா மக்களும் சேர்ந்தது தான் சமூகம். ஒண்ணு இல்லைனாலும் மொத்த சமூகமும் அழிந்து விடும் என்பது தான் வேதம் சொல்லும் உண்மை. ஒவ்வருவருக்கும் கடமையை அது அளிப்பது இதன் அடிப்படியில்தான். பிரமச்சாரி, க்ரிஹஸ்தான், வனப்ரசதன், சன்யாசி என்று பகுத்து நீ ஒவ்வாரு நிலையிலும் செய்ய வேண்டிய கடமை இது. நீ சுயநலமாக இருக்கல் ஆகாது, சமூகத்தில் ஒரு நல்ல அங்கமாக இருக்க வேண்டியது இப்படி, அது உன் கடமை என்று சொல்கிறது. இப்போ நீங்க சொல்ற உழைக்கும் மக்களின் உரிமைக்காக போராடுவதும், ஒரு சாராரை அடக்கி, உழைப்பை கொள்ளை அடித்து வாழ்வது தவறு என்று சொல்வது இந்து மதம். இது தான் தனி மனித ஒழுக்கம், சமூக கடமை என்று சொல்கிறது. போய் படிச்சு பாருங்க. நீங்கள் சொல்லும் பறிக்க பட்ட உரிமை சில காலிகளின் கைவரிசை. எய்தவனை விட்டுட்டு அம்பை ஏன் நோகிறீர்கள்? மதம் உரிமையை மறுக்கவில்லை! அதை காட்டி சில மனித மிருகங்கள் உரிமையை மறுத்தன! அது மனிதனின் தவறே தவிர, மதத்தின் தவறு அல்ல!

              //காரணமே இல்லாமல் மனித உயிரைக்கொல்வதற்கு பெயர் கடமையாம். நயவஞ்சமாக சொன்னப்பட்ட கருத்துக்கள் விழுமியங்களாம். என்ன சார் இது?//

              எப்படி சார் இப்படி உங்களால பேச முடியுது? பாண்டவருக்கு சேர வேண்டிய உரிமையை மறுத்த பிறகு, அதை பெற போராட வேண்டிய நிலைமைக்கு தள்ளபட்டார்கள். உரிமையை மறுத்தவன் உன் சொந்தமாகவே இருந்தாலும் அவனை எதிர்க்க தயங்காதே என்று சொல்வது எப்படி சார் நயவஞ்சகம்? உங்க கூட பிறந்தவன் சாதி வெறி புடிச்சு ஆடினால் அவனை என்ன ஏது என்று கேட்க மாடீர்களா? இல்ல நீங்க உழைச்சு சம்பாதிச்ச சொத்த ஏமாத்தி புடுங்கினா போனா போகுது அப்படின்னு விட்டுடுவீங்களா? கோர்ட்டில் கேஸ் போடவோ இல்ல அவர்கள்கிட்ட சண்டை போடவோ மாட்டீர்கள்? தயக்கம் வந்தாலும் என் உரிமை எனக்கு வேண்டும்னு சொல்ல மாட்டீர்கள்? இத நீங்க சொன்னா சரி, கீதை சொன்னா அது நயவஞ்சகமா?

              //பிச்சையெடுத்தாவது பொண்டாட்டிக்கு டீயும் பன்னும் வாங்கித்தருகிற கணவனுக்கு இல்லாத விழுயங்களா நீங்கள் சுட்டிக்காட்டுகிற பிரம்மத்தில் இருக்கிறது?//

              நீங்க சொல்றது உண்மை தான் சார். இந்த இடத்தில் மதம் தேவை இல்லை. அதற்க்கு வேலையும் இல்லை. ஆனா கஷ்ட படும்போது பொண்டாடியை விட்டு ஓடறவனும் இருக்கானே சார்! என்னால இதுக்கு மேல முடியாது, என் குடும்பம் எப்படியோ போகட்டும் , நான் தப்பிக்க வேண்டும் என்று ஒருவன் நினைத்தால் அது சரி என்று சொல்வீர்களா? அப்படி சுயநலம் தலைதூக்கும் போது தான் அங்கே மனிதமும், மதமும் தேவை. ஒருவரின் நியாயம் அடுத்தவனுக்கு பொருந்துவது இல்லை. ஒரு முதலாளிக்கு லாபம்தான் முக்கியம், என் தொழிலாளி எப்படி போனாலும் பரவாயில்லை என்பது அவனை பொறுத்த வரை சரின்னு வாதிடுவான். ஆனா எல்லாரும் ஒண்ணு, தொழிலாளிகள் இல்லேன்னா நீ இல்லை அப்படின்னு சொல்லுவதன் மற்றுமொரு வடிவம்தான் அனைத்து உயிர்களும் பிரமம் என்பது. நீ அனைத்தையும் நம்பித்தான் வாழ்கிறாய், அவை அனைத்தையும் எப்போதும் பாதுகாக்க வேண்டியது உன் கடமை என்பதை ரெண்டே வரியில் சொல்கிறது. நீங்கள் சொல்வது போல மனிதன் மனிதனாக இருக்கும் போது மதம், தத்துவம் எதுவும் தேவை இல்லை. அவன் சுயநலம் கொண்ட மிருகமாக மாறும்போது அவனை இழுத்து பிடிக்கும் கயிறு தான் மதம். சிலர் அந்த கயிறை கொண்டு மக்களை அடிப்பது, பிடிதிருப்பவன் தவறே அன்றி, கயிறின் தவறு அல்ல. அவனக்கு இது இல்லாட்டி இன்னொரு கயிறு. கயித்தை அறுப்பதை விட்டு, அவனை நல்ல வழிக்கு கொண்டு வருவதுதான் நாம் செய்ய வேண்டியது.எல்லாரும் சக மனிதனை மனிதனாக மதித்தால் மதம், தத்துவம், கம்முநிசம் எதற்கும் வேலை இல்லை.

          • \\ உங்கள் அனுபவத்தில் பல இந்துக்கள் சாதி வெறி கொண்டு இருப்பதால், அதுவே இந்து மதம் என்று முடிவு செய்து விட்டர்கள். நீங்கள் அய்யர், அய்யங்கார், உங்கள் சுற்றத்தினர் ஆகியோரிடம் சந்தித்த சாதி வெறியை கூறினீர்கள். அதை நீங்கள் அனைத்து மக்களிடமும், ஒரு படி மேலாக இந்து மதத்தின் மேலும் பூசுவது தான் எனக்கு பிரச்சனை. கேவலமான மனிதர்கள் எல்லா இடங்களில் இருகாங்க!\\

            இல்லை. இதுதவறான புரிதல். நாமெல்லாம் இந்துக்கள் என்ற பட்டியில் அடைக்கப்பட்டிருக்கிறோமோ தவிர, இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் இந்து பார்ப்பனீயம் சொல்கிற கலாச்சாரத்தைப் பின்பற்றுவதில்லை. பெரும்பாலான மக்கள் வழிவழியாய் வணங்குகிற சிறு தெய்வ வழிபாட்டிற்கும், இந்துமதம் கற்பிக்கிற வேத புராணங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. உண்மையில் மக்களின் இந்த பழக்கவழக்கங்கள் எல்லாம் எதிர்கலாச்சாரமாக சித்தரிக்கிறது இந்து-பார்ப்பனீயம்.

            முப்பதுமுக்கோடி தேவர்கள் எல்லாம் கையாலாகதவர்கள். நம்மை ஆண்ட சிறு குறு நில மன்னர்கள் எல்லாம் நீங்கள் சொல்வதைப்போல சூத்திர சத்திரியர்கள் தான். ஆனால் அவர்கள் எல்லாம் அரக்கர்களாக சித்தரிக்கப்படுவதுடன் எல்லாப் போரிலும் தோற்கடிக்கப்பட்டவர்களாக, நீச பாசை பேசுகிறவர்களாக, நிறத்தால் பிரிக்கப்பட்டவர்களாக காட்டுகிறது இந்து மதத்தின் விழுமியங்கள். இதை ஒரு இந்து உணர்கிற பொழுது பார்ப்பனிய மதம் எதேச்சதிகாரமானது என்பதை உணரவே செய்வார்.

            சனாதனமும் சாதிவெறியும் தான் இந்து மதம். இதைத்தவிர்த்த உழைக்கிற மக்களின் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் இந்துமதம் சொல்கிற கடமை, ஒழுக்கம், பிரம்மம் என்பதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. திண்ணை தூங்கிகளின் கலாச்சாரம் எப்படி அய்யனார் சாமி கும்பிடுகிற மானுமுள்ள மக்களின் கலாச்சாரத்திற்கு தலைமையேற்க முடியும் சந்துரு? அதனால் உங்கள் வசதிக்கேற்ப புரிந்துகொள்வதை விடுத்து, உள்ளதை உள்ளபடி புரிந்துகொள்ளுங்கள். நான் சொல்வது தவறு என்றால் சுட்டிக்காட்டுங்கள். நமக்கு இங்கு வினையாற்றுதல் தான் தேவையே தவிர வெற்று சமரசங்கள் அல்ல.

            • நான் புராணம் சொன்னா கதை எல்லாம் உண்மைன்னு வாதிடவில்லை சார். நீங்க சொல்ற அதே சிறுதெய்வங்களில் ஒன்றான மாரியம்மனை ரிஷி பத்தினின்னு சொல்லுது சார் இந்து மதம். சிறு தெய்வ வழிபாட்டை எதிர்க்கும், அதை அழிக்க வேண்டும் என்று எந்த இந்து நூலாவது சொல்லிருந்தால் அதை நான் இது வரை படித்தது இல்லை. அப்படி எதாவது இருந்தா தயவுசெய்து காட்ட வேண்டுகிறேன்.

              நீங்க சொல்ற மாதிரி குறுநில மன்னர்களை எல்லாரையும் அரக்கர்களாக சித்தரிக்கவில்லை.அரக்கனாக இருந்தாலும் அவன் அரக்கன் என்பதால் எந்த அசுரனையும் எந்த கடவுளும் கொன்றதாக இந்து மதம் சொல்லவில்லை. தவறு செய்து, அட்டூழியம் செய்ததால் அவர்கள் கொல்லப்பட்டனார் என்று தான் சொல்கிறது. ஒரு அரக்கனாக இருந்தாலும், நல்ல மன்னன் என்பதால் ஓணம் கொண்டாடுவதும் இதே இந்து மதம் தான். (இது அனைத்தும் மக்களுக்கு வாழ்கை கோட்பாடுகளை சொல்ல எழுத பட்ட கற்பனை கதை என்பது என் பார்வை).தமிழ் கடவுள் முருகனும் தான் அரக்கர்களை அழித்ததாக கந்த புராணம் சொல்லுது. தமிழன் எழுதிய கந்த புராணம்! இதுவும் பார்பனர் சதியா? தொல்காப்பியம் தன் குருவாக அகத்தியரை சொல்கிறது. முதல் சங்கத்தின் தலைவராக சிவனை சொல்கிறது. கடல் கொண்ட போது நூல்களை முருகன் காப்பாற்றியதாக சொல்கிறது. இதுவும் பார்பன சதியா? இந்து மதம் பிராமணிய வழிபாடு மட்டும் அல்ல சார். அது கலவை சாதம். அதில் உங்களுக்கு வேண்டியதை நீங்கள் உண்ணலாம். இதை தான் உண்ண வேண்டும் என்று இந்து மதம் கட்டாய படுத்தவில்லை. தன் கடவுள் பெரிது என்று நினைக்கும் மனிதன் செய்வது அது.

              //சனாதனமும் சாதிவெறியும் தான் இந்து மதம். இதைத்தவிர்த்த உழைக்கிற மக்களின் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் இந்துமதம் சொல்கிற கடமை, ஒழுக்கம், பிரம்மம் என்பதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. திண்ணை தூங்கிகளின் கலாச்சாரம் எப்படி அய்யனார் சாமி கும்பிடுகிற மானுமுள்ள மக்களின் கலாச்சாரத்திற்கு தலைமையேற்க முடியும் சந்துரு? //

              சனாதனத்தை தாங்கள் ஏன் எதிர்கீர்கள் என்று தெரிந்தால் தேவலை. மீண்டும் சொல்கிறேன். சாதி வெறி இந்து மதம் அல்ல! இடையில் வந்த சொருகல் அது. சுய லாபத்துக்காக ஏற்படுத்தப்பட்ட இடைசொருகல். அவ்வளவே! இந்த சனாதன தர்மம் புத்த மதத்துலயும் இருக்கு சார். புத்தர், “வெறுப்பை அழிப்பது வெறுப்பு அல்ல. அன்பும், நல்லெண்ணமும் தான். இதுவே சனாதன தர்மம் ” என்கிறார் (Na hi varena verani, sammantidha kudacanari/ Averena ca sammanti, esa dhammo sanantano,”). இந்து மதம் அய்யனார் சாமி கும்பிடுபவனின் கலாச்சாரம் என்றோ அல்லது அதற்கு தலைமை என்றோ நான் சொல்லவில்லை. நீங்கள் இந்துவாக இருந்து கொண்டு அய்யனாரையும் கும்பிடலாம், அல்லாவையும் வணங்கலாம். மற்ற மதங்களை போல இந்து மதத்திற்கு ஒரு கடவுள் தூதுவர், ஒரு தத்துவம், ஒரு கோட்பாடு என்ற கட்டுப்பாடு இல்லை. சைவம், வைணவம், சக்தி வழிபாடு, த்வைதம், அத்வைதம், முன்னோர் வழிபாடு, சிறு தெய்வ வழிபாடு எல்லாம் இதே இந்து மதத்தின் பிரிவு தான். இதை பற்றி நான் இங்கு சொல்வதை விட திரு. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் The Hindu View of Life என்னும் நூல் மிக தெளிவாக விளக்கும். சுருக்கமா சொன்னா இந்து மதம் ஒரு கடல் சார். அதில் கலக்கும் பிராமணியம் என்றும் ஒரு ஆறு மட்டுமே இந்து மதம் என்று நீங்கள் வாதிடுகீர்கள். பிராமணீயம் தான் இந்து மதம், அதனால் அதை எதிர்கிறேன் என்று சொல்வது என் கண்ணுக்கு எட்டிய வரை தான் உலகம் என்று வாதிடுவதை போன்றது. நீங்கள் தத்துவத்தையும் கடவுள் வழிபாட்டையும் ஒன்றாக அணுகுகுரீர்கள்.

              இந்து மதம் மற்ற எல்லா மதத்தையும் ஏற்று கொள்கிறது. நீங்கள் எந்த பாதையை வேண்டுமானாலும் பின் பற்றலாம். எல்லா பாதையும் முடிவில் ஒரு இறைவனை சேரும் என்பது இதன் அடிப்படை சாராம்சம். அதனால் தான் தைவதம், அத்வைதம், சைவம், வைணவம் எல்லாம் இந்து மதத்தில் பிரச்சனை இருக்கு. மற்ற மதங்களை போல என் வழி மட்டுமே ஆண்டவனை சேரும் வழி என்று இந்து மதம் சொல்லவில்லை. இந்த வழிகள் எல்லாம் இருக்கிறது. அனைத்தும் ஒரு இலக்கை நோக்கி செல்லும். எது வேண்டுமோ அதை பின்பற்று. அனால் அனைத்தும் பிரமம், அனைத்தும் ஒன்றே என்னும் உண்மையை ஏற்துக்கொள் என்பது தான் இந்து மதத்தில் இது வரை மாறாமல் இருக்கும், யாராலும் மாற்று கூற முடியாத அடித்தளம்.

              பார்பனிய வழக்கம் மட்டுமே இந்து மதம் அல்ல. இதை நான் சொல்வதால் என் வசதிக்காக நான் புரிந்து கொள்வதாக எடுத்துகொள்ள வேண்டாம். இந்து மதம் அய்யனார் வழிபடும் மக்களின் கலாச்சாரத்தின் தலைமை இல்லை. அய்யனார் வழிபட்டாலும், ஆஞ்சநேயர் வழிபட்டாலும் அனைத்து உயிர்களும் ஒன்று தான் என்று நீ ஏற்பது போதுமானது என்பதே இந்து மதம். இதில் சில காலிகள் தங்கள் சுயநலத்துக்காக வேறு மாதிரி சொல்வது, தீவிரவாதிகள் தங்கள் செயலுக்கு தங்கள் புனித நூலை காரணம் காட்டுவது போல தான். அவன் சொல்வதை எப்படி நீங்கள் ஏற்க மாட்டீர்களோ, அதே போல் நீங்கள் இந்து மதத்தில் எந்த விசயத்தையும் ஏற்பதும், ஏற்காததும் உங்கள் விசயம். அனால் ஒன்று மட்டும் நினைவில் வெய்க்க வேண்டுகிறேன். இந்து மதம் என்பது பார்பனம் அல்ல. நிச்சயமாக அல்ல.அது எந்த கலாச்சாரத்துக்கும் எதிரியோ அல்லது மேற்பட்டதோ அல்ல. நீ என்ன வழி முறையில் வேண்டுமானாலும் வழிபடு அல்லது கடவுள் என்று ஒன்று இல்லை என்று கூட கூறு. ஆனால் எல்லா உயிர்களும் ஒரு இடத்தில் இருந்து தான் வந்தது, உன் வாழ்கையின் குறிக்கோள் இந்த உண்மையை உணர்வது தான். அதற்காக உன் சமூக கடமையை மறக்காதே. நீ சமூகத்தில் உன் பங்கை ஆற்றி கொண்டே, இந்த உண்மையை உணர எந்த வழியை வேண்டுமானாலும் பின் பற்றலாம் என்று கூறுவதே இந்து மதம். இதற்க்கு மாற்றாக எவன் என்ன கூறினாலும் அவன் தன் சுய பார்வையை இந்து மதத்தின் மீது திணிக்கிறான்.

              • சாதி வெறி இடைச் செருகல் என்று சொல்லி வேதத்தைத் தூக்கிப் பிடிக்கிறீர்கள். வேதம் மக்களின் வாழ்க்கையில் என்ன மாதிரியான விளைவுகளைத் தோற்றுவித்தது என்று சொல்லவேண்டும்.

                சுவற்றுப் பல்லி கூட தன் உணவிற்கு பல இடங்களில் அலைந்துதிரிந்து பூச்சிகளைப்பிடித்து உழைத்துவாழ்கிறது. ஆனால் மடப்பள்ளி சாம்பலே உயர்வு என்று சொல்கிற சர்வபள்ளிபோன்றவர்கள் பலகொடூரங்களை மறைத்துவிட்டு வேதம் வேதம் என்று பித்தலாட்டம் பாடுகிறார்கள். இராதா கிருஷ்ணனின் முகத்திரை அம்பேத்காரால் அக்குவேறாக ஆணிவேறாக கிழிக்கப்பட்டிருக்கின்றன ((நூல்; சாதியை ஒழிப்பது எப்படி? மற்றும் இந்துயிசத்தின் தத்துவம்). எப்படி வேதம் ஒன்றுக்கும் உதவாத நூலோ அதே போன்றது இராதகிருஷ்ணனின் தத்துவ நூல்கள். அவை பயனற்றவை மட்டுமல்ல; மனித சமூகத்தின் இழிவை நியாயப்படுத்துபவை. சனநாயகத்தை விரும்புகிற எவர் ஒருவரும் இதைக் கேள்விக்கு உட்படுத்துவர்.

                இந்துமதத்தின் தத்துவங்கள் என்று எழுதிய கொடூரங்கள் எல்லாம் கேள்வி கேட்பாரின்றி அவர்கள் சார்ந்த சாதி காரணமாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதே இந்துமதத்தை காந்திசம் என்ற பெயரில் காந்தி வாந்திஎடுத்ததையெல்லாம் அம்பேத்கர் சுட்டிக்காட்டியபொழுது பாரிய எதிர்ப்புகளை எதிர்கொண்டார். அவ்வெதிர்ப்புகளை முறியடிக்கிற பொழுது அம்பேத்கர் இப்படி எழுதினார்; “நாய்கள் குரைத்தாலும் வணிகவண்டிகள் தொடர்ந்து முன் செல்லவேண்டும்”

                இன்றைக்கும் அதே நிலைமைதான் நிலவுகிறது. இந்துச் சமூகத்தின் பல உறுப்புகள் அழுகிநாறுகிற பொழுது, ஒரு கூட்டம் மட்டும் வேதம் சிறந்தது; வேதப்பாரம்பரியம், வேதத்தத்துவம் என்று கூச்சலிடுகின்றன. இதில் ஒரு நபராக சந்துரு போன்றவர்கள் இருக்கிற பொழுது, அவர்களிடத்திலே உண்மைகளை எடுத்துச்சொல்ல வேண்டியது அவசிமாகிறது.
                தத்துவத்தை விவாதத்தில் வைக்கவிரும்புகிறவர் அம்பேத்கர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில்சொல்லவேண்டும். “இந்துயிசத்தின் தத்துவம்” என்ற நூலில் இந்துமதத்தின் சனநாயகமற்ற தன்மை, வன்முறையையே ஆதாரமாகக் கொண்டு செயல்படுகிற அமைப்பு விளக்கப்பட்டிருகிறது. உபநிடதங்கள் மக்களின் வாழ்க்கையில் என்னமாதிரியான தாக்கம் செலுத்தப்பட்டிருக்கிறது என்பது விரிவாகவிளக்கப்பட்டிருக்கிறது. அதை சந்துரு போன்ற வாசகர்கள் வாசிக்கவேண்டும்.

                இந்திய வரலாற்றில் நெய் ஊற்றித்தின்றதற்காக தலித்துகள் கொடூரமாகத்தாக்கப்பட்டிருக்கிறார்கள். பட்டாடை அணிந்தற்காக தாக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கவஸ்திரம் அணிவது தடைசெய்யப்பட்டிருக்கிறது. இவ்வளவு நடக்கிற பொழுது, இதையெல்லாம் கண்டிக்கிற அளவிற்கு, தவறு என்று சொல்கிற அளவிற்கு வேதம் ஒரு போதும் நித்ய சாட்சியாக என்றைக்கும் இந்திய சமூகத்தில் இருந்ததே கிடையாது.

                கிருத்தவனுக்கு பைபிள் இருக்கிறது, இசுலாமியனுக்கு குரான் இருக்கிறது என்று சொல்வதைப்போல இந்துவிற்கு வேதம் இருக்கிறது என்று சொல்வது அயோக்கியத்தனமானது. ஏனெனில் ஒரு புத்தகம் பறைசாற்றுகிற விழுமியங்கள் அதைப்பின்பற்றுகிற மக்களின் வாழ்க்கை முறையிலிருந்து நம்மால் இனம்காணமுடியும். ஆனால் ஓர் இந்துவின் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துவது ஸ்மிருதிகள் மற்றும் மனுச் சட்டம் மட்டுமே. ஆதிக்கசாதிகள் வேதோக்தா முறையில் வாழவேண்டும் என்பதும் பிற சாதிஇந்துக்கள் புரோணாக்தா முறையில் வாழவேண்டும் என்பதும் ஸ்மிருதிகளின் கட்டளை. அதுதான் இன்றுவரை நடத்தைவிதிகள்.

                சான்றாக பார்ப்பனர் உபநயம் செய்வது அவருக்குவிதிக்கப்பட்ட சட்டம். ஆனால் இந்துவின் பிறசாதிகளுக்கு புரோணாக்தா விதியின் படி உபநயம் கிடையாது. ஒரு சூத்திரனுக்கு புரோணாக்தா விதிப்படி திருமணம் செய்கிற உரிமையோ, இறுதிச் சடங்கு செய்கிற உரிமையோ கிடையாது. அவ்வாறான தருணங்களில் எல்லாம் அவன் பூணுல் அணிந்து பார்ப்பானாக கணநேரம் மாறிக்கொள்ள வேண்டும் என்கிறது புரோணாக்தா.

                1. ஒரு சமூகத்தின் மக்கள் இவ்வாறு தெளிவாகப்பிரிக்கப்பட்டு, இன்று வரை அதுவே விதியாக இருக்கிறபொழுது, இதெல்லாம் இடைச்செருகல்கள்; ஆனால் வேதம் அப்படி சொல்லவில்லை; இந்துப்பாரம்பரியம் சிறப்பானது என்று சொல்வதன் மூலமாக தாங்கள் வலிறுத்தவிரும்புகிற பார்வை என்ன?

                2. ஒரு காலத்தில் இந்துக்களுக்கென்று சிறந்த பாரம்பரியம் இருந்ததாகவும், சாதிவந்தபிறகு அவையெல்லாம் சீர்கெட்டுவிட்டன என்று சொல்ல வருகிறீர்களா?

                3. வரலாற்றில் வேதம் எதைபதிவு செய்திருக்கிறது?

                என்பதைச் சொல்லுங்கள். நானும் இதுகுறித்து பதிவிடுகிறேன்.

                • //1. ஒரு சமூகத்தின் மக்கள் இவ்வாறு தெளிவாகப்பிரிக்கப்பட்டு, இன்று வரை அதுவே விதியாக இருக்கிறபொழுது, இதெல்லாம் இடைச்செருகல்கள்; ஆனால் வேதம் அப்படி சொல்லவில்லை; இந்துப்பாரம்பரியம் சிறப்பானது என்று சொல்வதன் மூலமாக தாங்கள் வலிறுத்தவிரும்புகிற பார்வை என்ன?//

                  எப்படி சொல்ற எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு, நல்ல விசயம் மட்டும் எடுத்துக்கலாம். இந்து மதத்தில் நல்ல விசயம் நெறைய இருக்கு (கெட்டதோட சேத்து), கெட்டதை ஒழிக்க பாடுப்ட்ற சமயத்தில் நல்லதையும் நாலு பேருக்கு சொல்லலாம் என்ற நப்பாசை தான் சார். எல்லாம் மனிதன் உருவாக்கியது தானே. அவனவன் வசதிக்கு ஏத்த மாதிரி சில இடங்களை மாத்திட்டான். அதுனால எனக்கு எல்லாத்தையும் தூக்கி எரிய மனசு இல்லை சார். நான் பைபிள், குரானையும் படிச்சு இருக்கேன். அதுலயும் சமூகத்துக்கு ஒவ்வாதது இருக்கு. உதாரணம் (தமிழ் மொழிபெயர்ப்பு என்னிடம் pdf வடிவில் தான் உள்ளது. வலையில் தேட சிறிது நேரம் இல்லை. மன்னிக்கவும்):

                  அடிமை செய்ய வேண்டியது பற்றி Genesis 16:8

                  And he said “Hagar, Sarai’s slave girl, where have you come from and where are you going?” She answered, “I’m running away from Sarai, my mistress.” The angel of the Lord said to her, “Go back to your mistress and submit to ill treatment at her hands.”

                  கஷ்டத்தில் இருக்கும்போது மக்களை உண்ண அனுமதி தரும் Deut. 28:53

                  Then because of the dire straits to which you will be reduced when your enemy besieges you, you will eat your own children, the flesh of your sons and daughters whom the Lord has given you.

                  ஊனமுற்றோர் கடவுளின் சபையை சேரமுடியாது என்று சொல்லும் Deut. 23:1

                  No man whose testicles have been crushed or whose organ has been cut off may become a member of the Assembly of God.

                  எந்த சமூகத்திலும் பொருந்தாத சில:

                  Luke 14:26 “If anyone comes to me and does not hate his own father and mother and wife and children and brothers and sisters, yes, and even his own life, he cannot be my disciple.”

                  Timothy 2:12 “I permit no woman to teach or have authority over a man. She has to keep silent”

                  Peter 2:18 “Slaves, accept the authority of your masters with all deference. Not only those who are kind and gentle but also those who are harsh”

                  இதை எல்லாம் வெய்து நாம் மொத்த பைபிள், அல்லது கிறிஸ்துவ மதத்தையோ தூக்கி எரியவில்லயே! கெட்டதை தூக்கி போட்டுட்டு நல்லதை எடுதுகல? அதையே இந்து மதத்திலும் செய்வோம். சாதி, வர்ணம் போன்றவற்றை தூக்கி போட்டுட்டு, கர்ணனின் நட்பு, ராமன் தன் தந்தை வார்த்தையை மதித்தது, ஏகலைவனின் விடா முயற்சி (அவன் கட்டை வெரலை துரோணர் கேட்டதை தப்புன்னு காட்டி, இப்படி எந்த குருவும் கேட்க கூடாது என்பதற்கு ஒதாரணம்), அடுத்தவன் பொண்டாட்டிய, குடும்பத்த எதாவது பண்ணுனா இராவணன், கௌரவர் கதி தான், உனக்கு உரிமை மறுக்கபட்டால் தெய்ரியமா போராடு (உன் குடும்பமா இருந்தாலும்) கடவுள் உன் பக்கம் இருப்பான் (மகாபாரத யுத்தமே அது தானே), அநியாயத்தை பார்த்து கொண்டு சும்மா இருகாத (சபைல துரோணர், பீஷ்மர் மாதிரி), அப்படி இருந்தா நீ எவளோ பெரிய ஆளா இருந்தாலும் அழிவாய் அப்படின்னு நம்ம வாழ்கை முறை, கடை பிடிக்க வேண்டிய நெறி சொல்லிகுடுபோம். இது மனிதம் தான். ஆனா மக்களுக்கு மனிதத்தை நேரடியா சொல்றதை விட, மதம் மூலமா சொன்னா சீக்கிரம் ஏற்துகுவான். அப்புறம் போக போக அப்படியே மதத்தை கொஞ்சம் கொஞ்சமா கொறச்சுட்டு வந்தோம் நா, மனிதம் தான் இருக்கும். நம்ம இலக்கும் அது தானே.

                  //ஒரு காலத்தில் இந்துக்களுக்கென்று சிறந்த பாரம்பரியம் இருந்ததாகவும், சாதிவந்தபிறகு அவையெல்லாம் சீர்கெட்டுவிட்டன என்று சொல்ல வருகிறீர்களா?//

                  நமக்கு என்று ஒரு பாரம்பரியம் இருந்தது. நாமும் நல்லவர்களாக, மேற்பட்ட சமூகமாக இருந்தோம். அதுனால தானே அத்துனை படை எடுப்பு. நாம மனிதன நம்ம சுய லாபத்துக்காக சிலர் பிரிச்சதை தட்டி கேக்காம விட்டதால் என்ன நெலமைல இருக்கோம்னு காட்ட ஆசை படறேன். மாற்றம் கண்டிப்பா வரும். நமக்கு இப்போ அது ஆதாயம் என்பதால் சமூகத்தை முன்னிறுத்தாமல் அந்த மாற்றத்தை ஏற்று கொண்டால் என்ன நிலையில் வந்து நிற்போம் என்பதன் ஒரு பாடமாக சாதியை காட்ட வேண்டும் என்கிறேன். என்ன செய்ய கூடாது, குறுகிய கால லாபத்துக்காக இல்ல தன் நிலையை தக்க வைக்க எதாவது பண்ணுனா அது எப்படி சமூகத்தையே அழித்து விடும்னு காட்டுவதற்கு என்னை பொறுத்த வரை சாதி சிறந்த ஒதாரணம். இதை மறக்காமல், பாடமாக ஏற்க வேண்டும் என்கிறேன்.மக்களில் ஒரு சாராரை தன் சுய லாபத்துக்காக வேறு ஒரு சாரார் ஒடுக்கினால் (முதலாளியோ இல்லை சாதி ஏற்பாலரோ) என்பதற்கு மற்றும் ஒரு உதாரணம் தான் சாதி என்பதை புரிய வெய்க்க வேண்டும்.

                  //வரலாற்றில் வேதம் எதைபதிவு செய்திருக்கிறது?//

                  இதற்க்கு விளக்கம் தர எனக்கு சில புத்தகங்கள் தேவை. கைவசம் இல்லாத காரணத்தால் சிறு விளக்கம் மட்டும். அந்த காலத்தில் மக்களின் வாழ்கை முறை, பழக்க வழக்கம், அவர்கள் இருந்த இடம், நிலம் எப்படி இருந்தது, அவர்களின் உலகம் எப்படி, அது என் மாறியது, எப்படி மாறியது, எதனால் மாறியது, காலத்தின் போக்குக்கு அந்த மக்கள் தம்மை எப்படி மாற்றி கொண்டனர் என்பதற்கு எல்லாம் நமக்கு விடை தர உதவும் முக்கிய எழுத்துகளில் ஒன்று வேதங்கள். மகாபாரதம் பாண்டிய மன்னனை பேசுவதன் மூலம் எப்படி நாம் பாண்டியர்களின் இருப்பை நிரூபிக்க உதவும் ஒரு கருவியாக பாரதம் இருக்கிறதோ அதே போல நம் சிந்தனை, ஆதி பழக்கங்கள், நாம என்ன உண்டோம், எப்படி வாழ்ந்தோம் என்பதை சொல்லும் ஒரு வரலாற்று நூலாக வேதங்கள் வரலாறில் முக்கிய இடம் வகிக்கின்றன.

              • \\ நீ என்ன வழி முறையில் வேண்டுமானாலும் வழிபடு அல்லது கடவுள் என்று ஒன்று இல்லை என்று கூட கூறு. ஆனால் எல்லா உயிர்களும் ஒரு இடத்தில் இருந்து தான் வந்தது, உன் வாழ்கையின் குறிக்கோள் இந்த உண்மையை உணர்வது தான். அதற்காக உன் சமூக கடமையை மறக்காதே.\\

                இதைக்காரணம் காட்டித்தான் தலித்துகள் பீ அள்ள வைக்கப்பட்டிருக்கிறார்கள். மோடியும் தலித்துகள் தங்கள் சமூகக் கடமைகளை மறக்காதவர்கள் என்று புகழ்ந்திருக்கிறார். அப்படிப் புகழ்வதன் மூலமாக ஒரு சமூகத்து மக்களை மோடி மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்துத்துவமே மதத்தை வேதத்தைக் காரணம் காட்டி நியாயப்படுத்துகின்றனர்.

                மத நம்பிக்கை உள்ள ஒரு தலித் விதியின் காரணமாக இவ்வேலையைச் செய்யவைக்கப்படுகிறார். இந்துமதத்தின் அப்பட்டமான சுரண்டலை இவ்வேதக்கருத்து பறைசாற்றுகிறது. இரயில் தண்டவாளங்களில் கட்டியாக கட்டியாக கூறூபோட்டு இருக்கும் பீயை மனிதர்களைக் கொண்டு அகற்றுவதற்கு இவ்வேதக் கருத்துக்கள் பயன்பட்டுவருகின்றன என்பதுதான் நிதர்சனம்.

                • //இதைக்காரணம் காட்டித்தான் தலித்துகள் பீ அள்ள வைக்கப்பட்டிருக்கிறார்கள். மோடியும் தலித்துகள் தங்கள் சமூகக் கடமைகளை மறக்காதவர்கள் என்று புகழ்ந்திருக்கிறார். அப்படிப் புகழ்வதன் மூலமாக ஒரு சமூகத்து மக்களை மோடி மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்துத்துவமே மதத்தை வேதத்தைக் காரணம் காட்டி நியாயப்படுத்துகின்றனர்.//

                  உண்மை தான் சார். காலத்துக்கு ஏத்ததை மட்டும் வைத்து கொண்டு, வேண்டாததை தூக்கி போடடதால் வந்த வினை. பைபிள்ஐ காரணம் காட்டி ஆப்பரிக்க அடிமைமுறையை சரி என்றதோ, இல்லை குரானை காரணம் காட்டி பெண்களை அடிமைபடுதுவதோ அந்த பைபிள் அல்லது குரான் வாசகங்களின் நோக்கம் அல்ல. அவனுக்கு அந்த காலத்துல அது சரி. ரோமில் இருந்ததால் அவனுக்கு அடிமை முறை தப்பா தெரியல. ஆனா இன்னைக்கு அதே நிலைமை இல்லையே! இப்பயும் அது சரி என்று சொல்பவனை நாம என்ன பண்றோம்? போடா கிறுக்கா என்று அவனை சமூகத்தை விட்டு ஒதுக்கி வெக்கல? நாம மதத்தை குத்தம் சொல்லல, அதை தவறாக உபயோகிக்கும் மனிதனை தான் நாம் அழிக்கிறோம். தப்பு பண்றவன் சொல்லற சப்பைக்கட்டு தான் அது. அதுக்கு குடுக்க வேண்டிய மரியாதை அவ்வளவே!

                  காலமாற்றத்துக்கு ஏத்தா மாதிரி நாம அந்த பைபிள், குரான் வாசகத்தை ஒதுகிட்டோம். ஆனா பைபிள் கூறும் நல்ல கருத்துகளை இன்றும் ஏற்கிறோம். அதையே இங்கயும் பண்ணலாம் சார். கெட்டதை தூக்கி எரிஞ்சுடுவோம். நல்லதை மட்டும் ஏற்று கொள்வோம். தப்பே இல்ல. அவன் தன் சுயலாபத்துக்காக பிடித்துக்கொண்டு இருக்கும் விழுதை வெட்டி விடுவோம். மரம் நமக்கு பயன் தரும். தேவை இல்லாத விழுதை வெட்டுவது சுலபம். விழுதை வெட்டினா வைத்தியம் போதும் என்னும் போது மரத்தை வெட்ட அரிவாளை ஓங்க வேண்டாம். அப்புறம் விழுது தனி மரமாக வேர் விடும். விழுதை வெட்டுவதே சரி.

                  • ஹிந்து பார்பன மதத்தில் சாதி கொடுமை இருக்கு / தலித் மக்கள் பெருமளவு பாதிக்க பட்டு இருகாங்க என்பததை நீங்கள் உணர மோடியின் கருத்து தேவைபடுது அல்லவா ? எப்படி இருபினும் உண்மையை உணர்ந்தால் சரி !

                  • சந்துரு,, ஹிந்து பார்பன மதத்தில் சாதி கொடுமை இருக்கு / தலித் மக்கள் பெருமளவு பாதிக்க பட்டு இருகாங்க என்பததை நீங்கள் உணர மோடியின் கருத்து தேவைபடுது அல்லவா ? எப்படி இருபினும் உண்மையை உணர்ந்தால் சரி ! அது சரி .., மோடியின் சாதி வெறியை அப்பல படுத்தும் போது அவர் மீது ஒரு கருத்தையும் வைக்காமல் சர் என்று ஆப்பிரிக்காவுக்கும் ,சவுதிக்கும் ,ஐரோப்பாவுக்கும் flight ஏறி செல்வதன் நோக்கம் என்னவோ ? நீர் ஆரம்பித்த இவ் விவாதம் பார்பனர்களையும் ,பார்பன ஹிந்து மதத்தையும் பற்றியது என்பது உமக்கு மறந்து விட்டதா ? அல்லது இதுவும் உமது வழக்காமான குமுத ஆறு வித்தியாசம் போன்ற விவாதத்தில் இருந்து வழுக்கும் தொழில் நுட்பமா ? அல்லது மோடியை காப்பாற்ற எடுக்கும் கருத்து வடிவமா ? அல்லது நேரடியாக பதில் கூறினால் same side கோல்விழும் என்ற பயமா ? சாதிவெறியர்களை பற்றிய உமது கருத்து திருத்துவது அல்லது —– இவருக்கும் பொருந்துமா ?

                    • //மோடியின் சாதி வெறியை அப்பல படுத்தும் போது அவர் மீது ஒரு கருத்தையும் வைக்காமல் சர் என்று ஆப்பிரிக்காவுக்கும் ,சவுதிக்கும் ,ஐரோப்பாவுக்கும் flight ஏறி செல்வதன் நோக்கம் என்னவோ ?//

                      நோக்கம் எல்லாம் நழுவ இல்லை சார். என் பார்வை, என் முயற்சி வெற்றிபெறும், அது சரியான வழி என நான் காண்பிக்க தந்த எடுத்துகாட்டு தான் மார்டின் லூதர் கிங். பைபிள்ஐ காட்டி அடிமைமுறையை சரி என்றவனை அதே பைபிள்ஐ வைத்து கிங் மாற்றினார். அதே போல இந்து மதத்தில் ஒரு பகுதியான பார்பனியத்தை வைத்து தவறு செய்பவனை நான் அதே இந்து மதத்தின் த்வைதம், அத்வைதம், பக்தி மார்க்கம் போன்றவற்றை வைத்து திருத்த முயல்கிறேன். இதை தெளிவா சொல்லாடி என்னையும் rss கைப்பாவை என்று சொல்லிடுவீங்க என்பதால்தான் flight ஏற வேண்டிய அவசியம்.

                      //சாதிவெறியர்களை பற்றிய உமது கருத்து திருத்துவது அல்லது —– இவருக்கும் பொருந்துமா ?//

                      ஆளுக்கு ஏத்தா மாதிரி தீர்ப்ப மாத்தறது எல்லாம் கெடயாது சார். என் சொந்தமா இருந்தாலும், துரோணரா இருந்தாலும்,மோடியா இருந்தாலும் ஒரே கருத்து தான். நான் அவர்களை திருத்த முயற்சி பண்ணுவேன். ஒடுக்கப்பட்டவர் அவர்களுக்கு வேற தண்டனை தர விரும்பினாலும், என் முழு ஆதரவு உண்டு. இதில் தங்களுக்கு சந்தேகமே வேண்டாம்.

                      //ஹிந்து பார்பன மதத்தில் சாதி கொடுமை இருக்கு / தலித் மக்கள் பெருமளவு பாதிக்க பட்டு இருகாங்க என்பததை நீங்கள் உணர மோடியின் கருத்து தேவைபடுது அல்லவா ? //

                      இதுக்கு எனக்கு எந்த ஆளோட கருத்தும் வேண்டாம் சார். தருமபுரிகாரன் நான். நேர்லயே பாத்துருக்கேன். தட்டி கேட்டு அடிபட்டும் இருக்கேன்.

                      என்னோட கருத்த இங்க சொல்றேன் சார். பார்பனம் என்பது இந்து மதத்தின் ஒரு கிளை. நோய் வந்த கிளை. கிளையை வெட்டி விட்டால் போதுமானது. அந்த பார்பனதுக்கு, அதன் அடக்குமுறைக்கு நீங்க தலித்துகள், ஏகலய்வன் போன்றோரை சான்றாக காட்டுகீர்கள். நான் ஏற்று கொள்கிறேன். அப்போது இருந்தே அடக்குமுறை இருந்தது என்பதற்கான ஆதாரம் அது. அதே சமயம், இந்து மதமும் சாதி அடக்குமுறையை தவறு என காட்டி, அடக்கபட்டவர்களை முன்னிருத்தி உள்ளது என்பதற்கு நான் தரும் உதாரணம் தான் வால்மீகியும், நந்தனாரும். இருவரும் சாதி கடவுளுக்கு இல்லை, பக்திக்கு இல்லை, பார்பனதுக்கு மட்டும் தான் என்பதற்கு மறுக்க முடியாத சான்று. அன்னில இருந்தே போராட்டம் இருந்து வருகிறது, அன்னைகே இதை தப்ப்னு சொல்லிருகாங்க என்பதற்கான எனது ஆதாரம் அவர்கள்.

                      //சந்துரு, என்ன ஒரே தடுமாற்றமாக இருக்கு எழுத்திலும் ,வார்த்தைகளிலும் , வாகியத்திலும் ? //
                      //சாதியத்தின் மூலம் பெரும்பான்மை ஹிந்து மக்களின் மனித உரிமைகளே மறுக்க படும் போது அதன் மூலம் வேறு நன்மைகள் கிடைத்தாலும் அதனால் மக்களுக்கு என்ன நன்மை என்று என் மனசாட்சி கேள்வி எழுப்பு கின்றது ஐயா !//

                      தடுமாற்றம் எல்லாம் ஒன்னுமே இல்லை சார். என் நிலைப்பாடு ரொம்ப தெளிவானது. இந்து மதத்தின் அடிப்படை சாதி இல்லை, சாதி என்பது தேவை இல்லாத ஒரு கிளை என்பது தான் என் கருத்து. கிளையை வெட்ட என் ழுழு சம்மதம் உண்டு. சாதியை பத்தி பேசற, சாதி சரி என்கிற எல்லாத்தையும் இந்து மதத்தில் இருந்து வெட்டி விடலாம். அது மட்டும் போதுமானது. முழு இந்து மதத்தையும் அழிக்க வேண்டாம். தீவிரவாதி செய்யும் செயலால் நாம மொத்த இஸ்லாத்தையும் தூக்கி போட்டுவிடவில்லை. அந்த கெட்டதை மட்டும் வெட்டிட்டு, நல்லதை எடுத்து கொள்கிறோம். அதையே இங்கயும் செய்யலாம். எனக்கு துரோணர், பார்பனரின் சாதியத்தை எடுத்து வெளியே எறிந்தால் போதுமானது. கூட சேத்து கர்ணனையும், ஏகலைவனையும், ஹனுமாரையும் தூக்கி போட வேண்டாம். எனக்கு மனு சாஸ்திரத்தை, புருஷ சுக்ததை தூக்கி போட்டுட்டா போதும். தேவாரத்தையும், ஆண்டாள் பாசுரத்தையும், மீரா பாடலையும் தூக்கி போட வேண்டாம். இவை சாதியை எந்த விதத்திலும் நியாயம் என்று சொல்வதில்லை. ஆனா இவையும் இந்து மதத்தின் ஒரு பகுதிதான். தீயதை மட்டும் தீயில் கொளுத்துவோம், நல்லதை நம்மோடு வைத்துகொள்வோம். நான் சொல்ல விரும்புவது எல்லாம் இது தான்.

              • புராணம் சொன்ன கதையெல்லாம் உண்மையென்று வாதிடவரவில்லை என்று சொல்கிறீர்கள். எதிர் காலச்சாரத்தைப் புராணங்கள் மக்கள் மீது வம்படியாக இருத்துகின்றன என்பதற்கு தாங்கள் ஒருபதிலையும் சொல்லவில்லை. மாறாக ஓணம் பண்டிகையை இந்துமதம் கொண்டாடுகிறது என்று சொல்கிறீர்கள். ஒருவனைக் கொன்றுவிட்டு கருமாதி வைத்து கறியும் சோறும் உண்ணுவதற்கு ஒப்பான செயல் இது.

                மாபலி என்று மட்டுமில்லை; நரகாசுரன் ஏன் கொல்லப்படுகிறான்; அது ஏன் தேவர்களுக்கு மட்டும் அடிக்கடி பிரச்சனை வருகிறது? தேவர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் ஏன் மக்களைப் பிரதிபலிக்கவில்லை? ஆனால் நம் முன்னோர்களை அப்படியே அச்சு அசலாக பிரதிபலிக்கிற அரக்கர்கள் ஏன் இழிவுபடுத்துகின்றனர்? கர்ணனைக்கொல்வதற்கோ அல்லது மாபலியைக் கொல்வதற்கோ அந்தணர்கள் ஏன் வேடம் அணிந்து வருகிறார்கள்? என்பதற்கெல்லாம் பதிலே கிடையாது. ஏனெனில் இந்துமதம் பாசிசத்தால் கட்டமைக்கப்பட்டது. சனநாயகத்தன்மையற்றது.

                அரக்கனுக்கும்-தேவனுக்கும் சண்டையிடுகிற பொழுதெல்லாம் தேவனைக்காப்பாற்ற கடவுளர்கள் வருகிறார்கள். கடவுளர்களே பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் பல இடங்களில் பரிந்துபேசுகிறார்.

                மன்னன் மேகநாதனின் மகன் பலிக்கு, மாலி, மால்யவன் மற்றும் சுமாலி போன்ற அரக்கர்கள் தேவர்களிடம் போரிட்ட பொழுது இவர்களுக்கு வெற்றிக்கனியை வழங்கினான் என்ற ஒற்றைக்காரணத்திற்காக மட்டுமே பிரம்மஹத்தி தோசம் பிடிக்கிறது. அதாவது பார்ப்பனர்களை பகைக்கிறவர்களிடம் நட்பு பாராட்டுகிறவர்களுக்கும் பிரம்மஹத்தி தோசம்பிடிக்கும் என்றால் இந்துத்துவம் எத்துணை வன்முறையால் கட்டமைக்கப்பட்டிருக்கவேண்டும்? இதைவிட ஒரு ஏதேச்சதிகாரம் வேறு மதத்தில் இருக்க முடியுமா? இதைப்போக்கும் பொருட்டு தான் பலியை ஆட்கொண்டு எழுந்தருளுகிறார் கல்யாணபெருமாள். திருவிடந்தையின் தலபுராணம் இது (ஆதாரம்: தமிழ் ஹிந்து; ஆன்மீக சோதி பகுதி). இது என்ன வகையான நீதி?

                இந்திரனுக்கே கூட ஒருகட்டத்தில் பிரம்மஹத்தி தோசம் பிடிக்கிறது. அவன் பூலோகத்தில் வந்து தன் தோசத்தின் பகுதியை நான்காகப்பிரித்து, பூமா தேவிக்கு ஒன்று, பிறகு சில பெண்களுக்கு ஒன்று, மரத்திற்கு ஒன்று என்று கொடுக்கிறான். இன்னொரு பகுதி எதற்கு என்று தெரியவில்லை. மரத்தில் கோந்துவடிவதற்கு காரணம் இந்திரனின் பிரம்மஹத்தி தோசம்தான். அதன்பொருட்டுதான் பார்ப்பனர்கள் (நாமக் கோஷ்டி) பெருங்காயம் சேர்ப்பதில்லை. உயர்சாதி இந்துக்கள் விசேச நாட்களில் பெருங்காயம் சேர்ப்பதில்லை.

                பெண்களுக்கு மாதவிடாய் வருவது, பிரம்மஹத்தி தோசத்தின் மற்றொரு பகுதி (ஆதாரம்; தத்தோத்சாரியார்). இதெல்லாம் எந்த மதத்திலும் இல்லாத மனிதர்களை இழிவுபடுத்துகிற, அருவெறுக்கத்தக்க கலாச்சாரங்கள். இன்றும் இவைகோலோச்சுகின்றன என்கிற பொழுது புராணங்கள் உருவாக்குகிற எதிர்கலாச்சாரத்தை ஒருவர் எளிதில் புறந்தள்ளமுடியாது. பாசிசம் வலுவாக வேரூன்றுவதற்கு இவையெல்லாம் இன்று வரை மக்கள் மீது கொடியமுறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதிலிருந்து நாம் சொல்லவருவது என்னவென்றால் புராணங்கள், இதிகாசங்கள் எல்லாம் ஒரு கூட்டத்தை உயர்வுபடுத்தி பிறமக்களை அவர்களின் கீழ் அடிமைப்படுத்தப்படுவதற்குதான். பார்ப்பனிய கலாச்சாரம் மட்டும் தான் இந்துக்கலாச்சாரமாக இன்று வரை இருந்துவருகிறது. இதைவிடுத்து அனைத்தையும் இந்துமதம் அனுமதிக்கிறது என்பது அப்பட்டமான புளுகு வேலையாகும்.

                இதை எதிர்த்தவர்கள் எல்லாம் அரக்கர்களாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதை இனங்கண்டு, இதையெல்லாம் தூக்கிஎறிய வேண்டுமே தவிர, இதையும் ஓணம், மோட்சம் என்று நியாயப்படுத்துவது என்னவகையான நீதி என்பதை சந்துரு விளக்க வேண்டும்.

                • நீங்கள் கூறிய இந்திரனின் தோஷத்தை பிரித்து தரும் கதையை நான் இது வரை கேட்டது இல்லை. அதனால் அதற்க்கு விளக்கம் தர முடியாது. மன்னிக்கவும்.

                  இந்து மதம் எல்லாத்தையும் அனுமதிக்கிறது என்று நான் புளுகினால் என்னால் அதற்க்கு ஆதாரம் காட்ட முடியாது அல்லவா? அப்படி நான் ஆதாரம், இந்து மத நூல்களில் இருந்தே காட்டி விட்டால், நீங்க என்ன சொல்வீங்க?

                  தன் தப்புக்கு ஒருத்தன் தன் புனித நூலில் இருந்து ஒரு பத்தியை ஆதாரமா காட்டறான். இதை வெச்சு தான் நான் என் செயலை நியாய படுத்தறேன். இந்த புத்தகத்தில், இந்த பகுதி தான் என் செயலுக்கு காரணம். கடவுள் என்னை இத செய்ய சொல்லி பனித்து இருக்கிறார். அதனால் அதை செய்கிறேன் என்கிறான். அவனும் நான் சொல்றது தான் சரி, என் மதத்தில் இருக்கும் மற்றவர் சொல்வது தவறு என்று சாதிப்பான். அதே மத நூலில் அவனுக்கு ஒவ்வாததை யாருக்கும் சொல்ல மாட்டான். காட்டுனாலும் ஏத்துக்க மாட்டான். அதுனால அது இல்லன்னு ஆகிடாது சார்.

                  ஒரு சாம்பிள்க்கு இஸ்லாத்தை எடுத்து கொள்வோம். எல்லா படை எடுப்பும், கோவில் இடிப்பும், தீவிரவாதமும் காபிர்களுக்கு எதிரான புனித போர் என்று தான் அதை செய்தவன் சொல்வான். அந்த பத்தி படி, இந்த செயலை செய்பவன் எல்லாம் கடவுளின் கட்டளையை செய்பவன். கடவுள் தனக்கு இட்ட கடமையில் ஒன்றாக அதை கருதி செய்கிறான். காபிர்களை அடிமைபடுத்து, அவனை இஸ்லாத்துக்கு மாற்று என்பது அவன் கடமை என்று செய்கிறான். அதே இஸ்லாம் மற்றவரிடம் அன்பாக இரு, மது அருந்தாதே, பெண்களை மதி என்று சொல்வதெல்லாம், இந்த கிறுக்கன் அதை செய்யாததால் புளுகு ஆகி விடுமா? காபிர்களுக்கு எதிராக போராடு என்று சொல்லும் அதே குரான் தான் இதையும் சொல்கிறது. இஸ்லாத்தை மட்டும் உண்மையான மதம் என்று தூக்கி பிடிபதால், அது சொல்லும் மற்ற நல்லவை எல்லாம் புளுக ஆகி விடுமா?

                  //இதைவிடுத்து அனைத்தையும் இந்துமதம் அனுமதிக்கிறது என்பது அப்பட்டமான புளுகு வேலையாகும்.//

                  தப்பு செய்யறவன் தன் தப்பை கற்பிக்க கட்டுவது மட்டுமே அந்த மதத்தின் சாரம் என்று சொல்கிறீர்கள். கண்ண தொறந்து பாருங்க. உங்க வாதத்துக்கும், rss முஸ்லிம்களுக்கு எதிராக செய்யும் பிரச்சாரத்துக்கும் கடுகளவும் வித்யாசம் இல்லை.

                  இப்படி நீங்க பார்பனீய கலாச்சாரம் மட்டுமே இந்து மதம் என்று சாதிபதன் மூலம் தேவாரம், திருவாசகம், ஆண்டாள், மீரா, விவேகனந்தர், அதி சங்கரர், பக்தி மார்க்கம் எல்லாத்தையும் ஒதுக்கி தள்ளுறீங்க. இவங்க யாரும் பார்பன சாதி பிரிவையோ, வர்ணத்தையோ ஆதரிக்கவில்லை. அவர்கள் இந்து மதத்தின் சாரமாக சொல்வது ஒருவரிடம் இருந்து ஒருவர் மாறுபட்டது. மீராவும், ஆண்டாளும், நாயன்மார்களும், ஆழ்வார்களும் இறைவனிடம் பக்தி செலுத்துவது போதும், அந்த பக்திக்கு சாதி, மத, வர்ண, சமூக அந்தஸ்து, பால், என்ற எந்த பாகுபாடும் இல்லை என்பதை ஆணித்தரமாக நிருபித்து உள்ளனர்.

                  சம்க்ஹ்யா, த்வைதம் (உலகில் எல்லாம் இரண்டு என்னும் பார்வை), அத்வைதம் (உலகில் எல்லாத்துக்கும் ஒன்று தான் மூலம் என்பது), பக்தி மார்க்கம், நியாய மார்க்கம் (உண்மை தேடல்), வைசேஷிகம் (உலகில் எல்லாம் ஒரு சில மூலக்கூறுகளில் இருந்து உருவானது), நம்ம தமிழகத்தின் சைவம், வைணவம் எல்லாம் இந்து மதத்தின் பகுதிகள். இதில் எதுவும் சாதி முறையை மருந்துக்கு கூட தொடுவது இல்லை. எல்லாத்தையும் அனுமதிக்காத இந்து மதம் என்று நீங்க சொல்லும் புத்தகத்தில் ஒன்றான பெரிய புராணத்தில் தான் நந்தனாரை, சிதம்பரம் கருவறைக்குள் பார்பனரை கொண்டு அழைத்து வர செய்ததன் மூலம், சாதி வெறி தவறு, சாதியால் மனிதனை பிரிப்பது தவறு என்று இறைவன் மூலமாக சாதி வெறி தவறு என்று சொல்லப்பட்டுள்ளது.

                  இவ்ளோ திட்டுற ராமர் தான் எந்த வேறுபாடும் இல்லாம குகன், விபீஷணன், சுக்ரீவன், ஹனுமான் எல்லாரையும் தன் சகோதரன்னு சொல்றாரு. இதை விட சாதி வேண்டாம் என்பதை எளிமையா சொல்ல முடியாது.

                  இந்து மதம் எல்லாரையும் ஒன்றாக நடத்த சொல்கிறது. இப்படி இருன்னு எடுத்தும் காட்டுது மட்டும் இல்ல, கண்மூடி தனமா இருந்தா என்ன ஆகும்னும் சொல்லுது. ஏகலய்வனின் கட்டை விரலை கேட்ட துரோணரை தலைல தூக்கி வெச்சு கொண்டாடல. கட்டை விரல கேட்ட உடனே அவரக்கு என்னமோ தேவர்கள் பூமாரி எல்லாம் பொழியல. உள்ளதை உள்ளபடி தோல் உரிச்சு காட்டியது. ஒருத்தன் இந்த சாதி மேல பற்று வெச்சுட்டா என்ன ஆகும், அதுவும் அவன் ஒரு தலைமை பொறுப்பில் இருந்தா என்ன ஆகும் என்பதே இந்த நிகழ்வு. துரோணர் தப்பையும் பண்ணிட்டு, அதுக்கு நான் தர்மத்தை காக்கிறேன்னு சாக்கு சொன்னா மாதிரி தான் மத்தவனும் சொல்லுவான் என்பதற்கான எடுத்துகாட்டு. ஒரு தலைமை பொறுப்பில் இருப்பவன் எப்படி இருக்க கூடாது என்பதற்கான எடுத்துகாட்டு. இதை தப்புன்னு சொன்னா தர்மரும் சூதாடியத, சூதினால் வரும் கஷ்டத்தை சொல்றது. ஒரு நிகழ்ச்சிய மட்டும் பாக்காதீங்க, அதன் மூலமா என்ன சொல்லி இருக்குன்னு பாருங்க. துரோணர் கட்டை விரலை கேட்டதை அவர் நியாய படுத்தினார். ஆனா அது சரி என்று பாரதம் சொல்லவில்லை. மனிதன் செய்த தவறை காட்டுது. அவ்வளவே. இதே பாடம் தான் திரௌபதிக்கு சபையில் நடந்த நிகழ்வுக்கும். நடக்கறது தப்புன்னு எல்லாருக்கும் தெரியும். தடுத்து இருந்தா பாரத போர் வந்தே இருக்காது. ஆனா தப்பை தட்டி கேக்காம உட்டதால வேரோட அழிஞ்சாங்க. திரௌபதிக்கு நடந்தை வெச்சு பொண்ணை பொருளா உகயோகிப்பவனும் இருக்கான், அப்படி ஆகிடுமோனு பயந்து வாலை சுருட்டிட்டு இருப்பவனும் இருக்கான். நிகழ்ச்சி ஒண்ணு தான், அதுல இருந்து கத்துக்கற பாடம் மக்களை பொருத்து மாறுது.

                  இங்க பிரச்னை வேதம், புராணம் எல்லாம் மக்களால் எழுதப்பட்டது, அது பிரபலமா இருக்கறது என்பதால் அது மட்டுமே இந்து மதம் இல்லை என்ற புரிதல் இல்லாமல் இருப்பது தான். அந்த கதைல வர்ற எல்லாரும் மனுசங்க தான். ராமன் கடவுளின் அவதாரம்னு சொன்னாலும் மனிதனா வந்த பிறகு அவரும் பாசம், கோபம், இயலாமை, தவிப்பு, பிரிவு, கஷ்டம் எல்லாத்தையும் அனுபவிக்கறார். ராமரை அவளோ பெருசா கொண்டாடறதுக்கு காரணம் அவர் சந்தர்பத்துக்கு ஏத்த மாதிரி தன் சரி, தவறை மாற்றிக்கொள்ளவில்லை.எந்த கஷ்டமும் இல்லாதபோ எவன் வேணாலும் நல்லவனா இருக்கலாம். கஷ்டம் வரும்போது தான் ஒருத்தனின் உண்மையான நல்லதனம் வெளிய வரும். அப்பா சொன்னதால காட்டுக்கு போறார், வானர கூட்டத்தை வைத்து ஒரு பேரரசனை வென்று தன் மனைவியை மீட்டு வரார், அவள் நல்லவன்னு சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் நிருபிச்ச பிறகும் மக்கள் ஒத்துக்கவில்லை என்பதால் மக்களுக்கு தான் தன் முதல் கடமை என்று (தனக்கும், தன் குடும்பத்துக்கும் நேரும் கஷ்டத்தை பொருட்படுத்தாமல்)தன் மனைவியை காட்டுக்கு அனுபறார். அவர் அப்பன் பேச்சை கேக்காம ராஜா ஆகி இருக்கலாம், இல்ல மனைவிய விட்டுட்டு வேற பொண்ண கல்யாணம் பண்ணி இருக்கலாம், இல்ல மக்கள் என்ன வேணா பேசுவாங்க, என் குடும்பம் தான் முக்கியம்ன்னு இருந்து இருக்கலாம். ஆனா இது எல்லாம் செய்யாம தனக்கு என்ன கஷ்டம் வந்தாலும் தன் கடமை என்னவோ அதை செய்ததால் தான் அவருக்கு மரியாதை. இதை தான் இன்றைய அரசியல்வாதிகளிடம் எதிர்பார்கிறோம். குடும்பத்த விட்டு மக்களை முன் நிறுத்தி அரசாங்கம் நடத்து என்று. இதன் சார் ராம ராஜ்யம். மக்களின் நலனை முன்னிறுத்தி நடத்தும் அரசு.

              • மாரியம்மனை ரிசி பத்தினி என்று சொல்கிறது இந்து மதம் என்கிறீர்கள். சிறுதெய்வ வழிபாட்டில் ரிசி பத்தினி என்ற பதமே இழிவான ஒன்று. பெரும்பாலான சிறுதெய்வங்கள் சுயம் சார்ந்தவை. இந்துமதம் ஒரு பெண் திருமணம் செய்யாவிட்டால் அவளுக்கு மோட்சம் கிடையாது என்ற கொடுங்கோன்மையையும் ரிசி பத்தினி என்று அழைப்பதையும் எப்படி புரிந்துகொள்ள முடியும்?

                சிறு தெய்வ வழிபாட்டில் அத்துணை காவல் தெய்வங்களும் மக்கள் பிரதிநிதிகள். சொந்த நலன்களைத் துறந்தவர்கள். கணவனிடம் அடிமையாக இருந்து கூத்தியாளை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு தன்மானம் சுயமரியாதையற்ற திருப்பதியின் முதல்மனைவி அலுமேலுவைப்போன்றோ கிருஷ்ணனின் பாமாவைப்போன்ற இருப்பவர்கள் அல்லர். கால் அமுக்கிவிடும் பிரம்மனின் மனைவியும் அல்லர்.

                இது ஒருபுறமிருக்க, சிறுதெய்வங்கள் பார்ப்பனிய இந்துமதத்திற்கு துஷ்ட தேவதைகளாகும். தமிழ்நாட்டில் அம்மை நோய்க்கு மாரியம்மாவும் கர்நாடகத்தில் மைசம்மாவும் துஷ்ட தேவைதைகளாகக் காட்டப்படுகின்றனர். ஆனால் இதே மாரியம்மாவும் மைசம்மாவும் பல சூத்திரசாதிகளுக்கு குலதெய்வமாகும். மாரியம்மனுக்கு என்ற சொந்த வாழ்க்கை கிடையாது. சொத்து பத்து கிடையாது. மதுரை மீனாட்சி மாதிரி வைர ஒட்டிகையோ மூக்குத்தியோ கிடையாது. ஆக மாரியம்மனை இந்துமதத்தின் கீழ் இருத்துவது தெய்வத்தை மட்டும் பார்ப்பனியத்தின் கீழ் அடிமைப்படுத்துவது அல்ல; அதை வணங்குகிற மக்களையும் அடிமைப்படுத்துகிற செயலாகும்.

          • எதிர்தரப்பையும் விவாதிப்போம். எப்படி ஒரு இந்துவிற்கு பார்ப்பனியம் நெருக்கடி தருகிறதோ அதேபோல இசுலாமியர்களுக்கும் மதஅடிப்படைவாதிகளிடம் இருந்து சொல்லொணாத் துயரங்கள் தொடர்ச்சியாக வருகின்றன. ஆர் எஸ் எஸ்ஸைப்போலவே வஹாபிய வெறியர்கள் மக்களைப் பிரித்தாள்வதில் கனஜோராக வேலை செய்துவருகின்றனர்.

            பல்வேறு அரபு நாடுகளில் தேசியம் வலுப்பெற்ற பொழுது அதை முறியடிப்பதற்காக கொண்டுவரப்பட்டதுதான் வஹாபியம். அரபு தேசியத்தை வலியுறுத்தி நாசர் பின்னுக்குத் தள்ளப்பட்டு மதத்தின் பக்கம் இசுலாமியர்கள் தள்ளப்பட்டனர். சவூதியின் பெரும்பான்மைப் பணம் அன்றிலிருந்து இன்றுவரை மதஅடிப்படைவாதத்தைப் புகுத்தும் பொருட்டு பல பிரித்தாளும் சூழ்ச்சிகள் கைகொள்ளப்பட்டன.

            மெட்ராஸ் என்பதன் பெயர்காரணமெ மதராசாக்கள் நிறைந்த ஊர் என்பதுதான். ஆனால் மதராசாக்கள் நிறைந்த காலத்திலேயே இசுலாமிய மக்களுக்கு துன்பங்கள் இந்தளவு வந்ததில்லை. ஆனால் இன்றைக்கு வஹாபிய கொள்கை பேசுகிறவர்கள் தர்காவுக்குப் போகாதே, மந்திரிக்கக் கூடாது; இசை கேட்பது சாத்தானை ஊக்குவிக்கக் கூடியது. சந்தனக் கூடு நிகழ்ச்சி மூடநம்பிக்கையாகும். குல்லா போடாமல் மசூதிக்கு வருகிறவர்களுக்கு பைன் மற்றும் எச்சரிக்கை, கருப்புக் கயிறு, தாயத்து கட்டக் கூடாது, ஹலால் காரணமாக அசைவ ஓட்டல்களில் சாப்பிடக் கூடாது, அதுபோக சுன்னத் ஜமாத்தும் தவ்ஹீத் ஜமாத்தும் இரத்தக்களறி உண்டாக்கும் அளவிற்கு பள்ளிவாசல்களிலேயே சண்டைபோடுவது என்று இன்று இசுலாமியர்கள் சந்திக்கிற பிரச்சனைகள் அதிகம்.

            ஆர் எஸ் எஸ் போன்ற இந்துவெறியர்கள் இதுபோன்ற இசுலாமியர்கள் பிரச்சனைகளை கையில் எடுப்பதில்லை. அதாவது தலித்துகள் பிரச்சனையை கையில் எடுக்காதைப்போன்று; ஆனால் இசுலாமியனை பொதுப்புத்தியில் வரையறுத்து கலவரங்களைக் கட்டவிழ்த்துவிடுகின்றன ஆர் எஸ் எஸ் கூட்டங்கள். அதன் நச்சுப்பிரச்சாரங்களுக்கு பலியானவர்கள் தான் உங்களைபோன்ற நபர்கள். நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் இசுலாமியர்கள் சந்திக்கிற பிரச்சனைகளாக நான் பட்டியலிட்டதில் உங்களுக்கு எத்துணை தெரியும்?
            ஆக புரட்சிகர இயக்கங்கள் இரண்டு மதவெறிக்கூட்டங்களையும் தனிமைப்படுத்தி அம்பலப்படுத்த முழுமூச்சோடு தன்னை ஈடுபடுத்திக்கொள்கின்றன. அதற்கு இதுபோன்ற பதிவுகள் நமக்கு பெரும் உதவி புரிகின்றன.

            முசுலீம் இந்துவிற்கு எதிராவனவன் என்று ஆர் எஸ் எஸ் நச்சுப்பிரச்சாரம் செய்கிற பொழுது இதுபோன்ற பதிவுகள் அவர்களின் முகத்திரையை கிழிக்கின்றன. அதே சமயத்தில் இசுலாமியர்களின் உள்முரண்பாடுகளை வஹாபியத்தையும் வெளிச்சம்போட்டு காட்டுகின்றன. இதுபோன்ற தருணங்களில் உங்களைப்போன்றவர்கள் நியாயப்படி நீங்கள் சார்ந்திருக்கிற சமூகத்ரை சாடுவதுடன் இந்தப்போராட்டங்களில் கைகோர்த்திருக்க வேண்டும். ஆனால் எதுவும் புரியாதவர் போல ஆர் எஸ் எஸ் காலிகள் எப்படி விசயங்களை கருப்பு-வெள்ளையாக பார்ப்பார்களோ அதோ போல நீங்கள் இந்து-முசுலீம் என்ற இருமையிலேயே இருக்கிறீர்கள். எருமை கூட உங்களை மன்னிக்காது!

            • //ஆனால் எதுவும் புரியாதவர் போல ஆர் எஸ் எஸ் காலிகள் எப்படி விசயங்களை கருப்பு-வெள்ளையாக பார்ப்பார்களோ அதோ போல நீங்கள் இந்து-முசுலீம் என்ற இருமையிலேயே இருக்கிறீர்கள். எருமை கூட உங்களை மன்னிக்காது!//

              நான் இப்போ சார் இதை சொன்னேன்? நான் இங்க சொன்னதோட அடிப்படயே எல்லாரும் ஒண்ணு தான் என்பது தானே சார். எந்த பிரிவும் தேவை இல்லை, மனிதனை எதன் கொண்டும் பிரிக்க கூடாது. சக மனிதனை மனிதனாக மதித்து, நட்பு பாராட்டி வாழ வேண்டும் என்று தானே நான் சொல்லிருக்கேன்? rss சொல்வது போல முஸ்லிம் இந்து மதத்தின் எதிரி அல்ல. பார்பனீயம், சாதி எல்லாம் தவறானது. இந்து மதம் எல்லாரையும் ஒன்று என்று தான் இங்கு நான் கூறி உள்ளேன். நீ யாராக இருந்தாலும் நீ என் சகோதரன்/சகோதரி என்பது தான் நான் சொன்னது.

              நான் இவளோ நேரம் இந்து மத view மட்டுமே பேசியதால், நான் rss பிரச்சாரத்தின் பலி கடாவா? நான் தந்த உதாரணம் எல்லாம் முஸ்லிம் மதவெறி போல இந்து மதவெரியாளர் எப்படி இந்து மதத்தை தன் லாபத்துக்காக உபயோக படுத்துகிறான் என்பதற்கான எடுத்துகாட்டு. இங்க நம்ம பேச்சு இந்து மதத்தை பற்றி சென்றதால், நான் மத்த மத பிரச்சனையை பேச வில்லை. அதனால் என்னமோ நான் rss கைக்கூலி எல்லாம் இல்ல சார். எல்லா மதத்துலயும் மதவெறியர்களால் மக்கள் பிரச்சனை சந்திக்கிறார்கள். நான் எல்லா மத வெறியையும் எதிர்கிறேன் சார்.

              எனக்கு ஓர் முஸ்லிம் திருப்தி லட்டு சாப்பிடாது இருப்பது எல்லாம் பிரச்சனை இல்லை. அவரை பொறுத்த வரை அது ஹராம். அவர் சாப்பிடவில்லை. ஆனால் அதற்க்கு இது என் நம்பிக்கை, வேறு தெய்வத்துக்கு அர்பணித்த உணவை நான் உண்ண மாட்டேன் (தெய்வத்துக்கு அர்பநிக்கபட்டதால்)என்று சொல்வது அவரின் மத நம்பிக்கை. ஆனால் அதற்க்கு என் மதம் மட்டும் தான் உண்மையான மதம். நீ வேறு மதத்தை சேர்ந்தவன் என்பதால் நீ தரும் உணவை ஏற்க மாட்டேன் என்று சொல்வது மத வெறி. இதை அழிக்க வேண்டும்.

              நீங்க சொல்ற மாதிரி பார்பனர் வேற எந்த ஜாதி அல்லது மதத்தின் சைவ உணவையோ ஏற்காமல் நான் பார்த்தது இல்லை சார். rebecca mary அவர்களும் இது தான் தன் அனுபவம் என்று பதிவு எண் 18ல் கூறி உள்ளார். உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் மட்டுமே எல்லா அய்யர் அல்லது அய்யங்காரின் வழக்கம் அல்ல சார். இதை தான் தங்களின் சுய அனுபவத்தை மொத்த சமுதாயத்தின் மேலும் பூசுவது என்றேன். நீங்க சொல்வது மாதிரி எல்லா அய்யர், அய்யங்காரும் சாதி வெறி கொண்டவர்கள் தான் என்றால், எனக்கும், என் நண்பர் மற்றும் உறவினர், மூன்றாம் மனிதரான rebecca அவர்களின் இனிமையான அனுபவங்கள் எப்படி சார் வந்தது? முஸ்லிம்கள் பன்றி தவிர்ப்பது (குரான் கூறி இருபதால்) சரி என்று நீங்கள் சொல்லும் போது, அய்யர், அய்யங்கார் நாங்க அசைவம் சாப்பிட கூடாது என்பது எங்கள் வழக்கம் என்று சொல்வது தவறா? அவர்கள் அசைவம் உண்பவர்கள் இந்துக்கள் அல்ல என்று சொன்னால் அது தவறு. நான் அசைவம் உண்ண மாட்டேன் என்பது அவரின் விருப்பம், எங்கள் பரம்பரை பழக்கம் அது என்பது தவறல்ல. அனால் அசைவம் கீழ் சாதிக்காரன் உண்பது, அதனால் உண்ண மாட்டேன் என்று சொல்வது தவறு. இதை தவறு என்று நீங்கள் கருதினால் ஏன் என்று விளக்கம் தருமாறு கேட்டு கொள்கிறேன்.

              பி.கு: வேதம் அசைவம் உண்ண கூடாது என்று சொல்லவில்லை. அது பெளத்த, ஜைன மதங்களின் popularity மூலம் இந்து மதத்தில், சமூகத்தில் ஏற்பட்ட மாற்றம்.

              • சுய அனுபவத்தை மொத்த சமுதாயத்தின் மீது பூசுவது நானல்ல. நீங்களும் ரெபேக்காவும் தான். எனது பின்னூட்டத்தில் நான் சார்ந்த சாதியின் சாதி வெறியை அம்பலப்படுத்தியிருக்கிறேன். உங்களைப்போன்று என் சாதியிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லவில்லை. என் சமூகத்தில் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்றால் அதன் பொருள் அவர்கள் சாதியின் எல்லையைக் கடந்திருக்கிறார்கள் மற்றும் கடக்க தயாராக இருக்கிறார்கள் என்பதாகும். மேலும் அவர்களிடத்தில் போராட முடியும் என்பதாகும்.

                ஆனால் நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? சாதி வெறி தவறு; ஆனால் அதற்காக ஒட்டுமொத்த சாதியையுமா குற்றம் சொல்வது என்று தவறாக புரிந்துகொள்வதோடு மட்டுமின்றி, எங்கெல்லாம் நாம் சாதி மதத்தைத் துறந்து இணைந்துகொள்ள வாய்ப்பிருக்கிறதோ அதன் வழிகளை எல்லாம் அடைத்துவிட்டு நீங்கள் சுட்டிக்காட்டுகிற நல் உள்ளங்களை சாதியின் கீழேயே இருத்துகிறீர்கள்.

                இதை மற்றொமொரு உதாரணத்தின் மூலமாக சுட்டிக்காட்டவிழைகிறேன். என் சாதியில் விளக்குவைத்த பிறகு வெத்திலைக்கு சுண்ணாம்பு கூட தரமாட்டார்கள். ஆனால் ஒரு சமயம் என் குடும்ப உறுப்பினர் தீடிரென்று சுகவீனப்பட்டபொழுது பணத்திற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நட்ட நாடு ராத்திரியில் அடுத்த வீட்டுக்கதவை தட்டி பணம் கேட்டோம். பணம் கேட்ட குடும்பமும் ஒன்றும் பணக்காரர்கள் கிடையாது. சாதியப்படிநிலையில் கீழ் உள்ளவர்கள் தான். அவரும் பால் ஊற்றி சம்பாதிப்பவர். விடிந்தால் பால் கலெக்சனை கூட்டுறவில் கட்டவேண்டும். சில்லறைகளுக்கு மத்தியில் சில நூறுகளைக் கொடுத்தார். மனிதம் என்று வருகிற பொழுது பார்ப்பனியம் அறிமுகப்படுத்திய ஸ்ரீதேவியை தூக்கி எறியமுடிகிறது. இதே மனிதம் கருத்தை தாங்களும் வலியுறுத்தி இருக்கிறீர்கள். எங்கெல்லாம் மனிதர்களால் இணைந்துகொள்கிறார்களோ அங்கெல்லாம் பார்ப்பனியம் ஈவு இரக்கமின்றி உதறப்படுகிறது. நேயத்தின் கீழ் இணைந்துகொள்கிறோம் என்பது இதுதான். ஆனால் நீங்கள் மனிதத்தைச் சுட்டிக்காட்டினாலும் கூட பார்ப்பனியம் பல சந்தர்ப்பங்களில் இறக்கிவைக்கப்படுகிறது என்பதில் தலையைக் கொடுக்க விரும்ப மாட்டேன் என்கிறீர்கள். வேதமோ, மதமோ ஒரு கலாச்சரமாக இருக்கவே வாய்ப்பில்லை என்ற தருணங்கள் நிறுவப்படுகிற பொழுது நீங்கள் அதே மனிதர்களை சம்பந்தமேயில்லாமல் மதத்தின் கீழும் சாதியின் கீழும் இருத்துகிறீர்கள். அதனால் தான் அய்யர்களில் நல்லவர்களே இல்லையா என்று சொல்லமுடிகிறதே தவிர அய்யர்கள் தன் சாதி இழிவை கடக்கமுன்வர வேண்டும் என்று சொல்லமுடிவதில்லை. மாறாக அவர்களை பாதிக்கப்பட்டவர்கள் போல் காட்டுகிறீர்கள். இந்த மனநிலை காரணமாகத்தான் செயந்திரேன் அயோக்கியன் என்று தெரிந்தும் தன் சொந்த சாதியில் ஒருவரே ஆடிட்டர் சங்கர் ராமன் ரத்த வெள்ளத்தில் கிடக்கிறார் என்று தெரிந்தும் ஒருவரது மனதையும் இச்செயல் கிஞ்சித்தும் அசைத்துப்பார்க்கவில்லை. இது ஒரு வகையான பிழைப்புவாதமாகும்.

                இதையும் சேர்த்து பரிசிலீயுங்கள். இந்து ஆன்மீகக் கண்காட்சி என்று ஒரு அசிங்கம் நம் முன் கண்ணே நடந்ததே. நீங்கள் என்னவகையான் எதிர்வினையாற்றினீர்கள்? இந்து என்பதைக் கண்காட்சிப்படுத்த பலவகையான சாதி ஸ்டால்களின் கூத்தை நாம் கண்டோம். உங்களைப்போன்றவர்கள் விவாதிக்கிற சில நேர்மையான நோக்கங்களுக்கு எதிர்பதமாக ஆன்மீகக் கண்காட்சி சாதிப்பிடிப்பினை வலியுறுத்தியது.

                1. ஆர் எஸ் எஸ் காலிகள் விழா அரங்கை சுத்தப்படுத்தவில்லை. தலித்துகள் தான் கூட்டிப்பெருக்கினார்கள் என்பதையும் பார்த்தோம்.

                2. பிராமணர் நலச்சங்கம் வந்த பார்வையாளர்களை அய்யரா? அய்யங்காரா? என்று நேரிடையாக கேட்டது.

                3. குருமூர்த்தி சாதிப்பொருளாதாரத்தின் வலிமை என்று பல செமினார்களை எடுத்துக்கொண்டிருந்தார்.

                4. ஆன்மிகக் கண்காட்சியிலேயே இசுலாமியர்களுக்கு எதிரான வன்மப் பிரச்சாரங்களும் கட்டவிழ்த்துவிடப்பட்டன.

                எதிர்த்திசையில் இவ்வளவு விசயங்கள் நடக்கிற பொழுது நாம் எங்கெல்லாம் சனநாயகத்தைச் சுட்டிக்காட்ட முடியுமோ அதை இதைப்போன்ற பதிவுகளின் மூலமாக போராடுகிறோம். ஆக நியாயப்படி பார்த்தால் இந்தப்பதிவின் மூலமாக மனிதநல்லிணக்கத்தைக் கண்டுகொள்கிற நாம் அதை மேலும் வலுப்படுத்தும் விதமாக அதைச் சீர்குலைக்கிற இசுலாமிய மதவெறிக்கும் இந்துப்ப்பார்ப்பனியத்திற்கும் பாடைகட்ட முன்வந்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் எதிர்மாறாலான வேலையைச் செய்துகொண்டிருக்கிறீர்கள். அது நீங்கள் சுட்டிக்காட்டுகிற மனிதத்திற்கே விரோதமானது.

                • //மேலும் வலுப்படுத்தும் விதமாக அதைச் சீர்குலைக்கிற இசுலாமிய மதவெறிக்கும் இந்துப்ப்பார்ப்பனியத்திற்கும் பாடைகட்ட முன்வந்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் எதிர்மாறாலான வேலையைச் செய்துகொண்டிருக்கிறீர்கள். அது நீங்கள் சுட்டிக்காட்டுகிற மனிதத்திற்கே விரோதமானது.//

                  இதை செய்ய வேண்டாம்ன்னு நான் சொல்லவே இல்லை சார். பார்பனதுக்கும், சாதி வெறிக்கும், பிரிவினைவாதத்துக்கும் பாடை கட்ட நானும் முயற்சி செய்து கொண்டு தான் இருகிறேன். நீங்க சொல்ற மாதிரி எல்லா சாதியிலும் இருக்கும் நல்லவர்கள் சாதி என்னும் வேறுபாட்டை கடந்தவர். ஆனா பலருக்கு மதத்தை விட மனசு இருக்காது. தீபாவளி கொண்டாடுவர்; ஆனா ரம்சானுக்கு நோம்பு இருக்க மாட்டார்கள். சாதியில் இருந்து வெளியே வந்தர்வர்தான்.

                  //ஆனால் நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? சாதி வெறி தவறு; ஆனால் அதற்காக ஒட்டுமொத்த சாதியையுமா குற்றம் சொல்வது என்று தவறாக புரிந்துகொள்வதோடு மட்டுமின்றி, எங்கெல்லாம் நாம் சாதி மதத்தைத் துறந்து இணைந்துகொள்ள வாய்ப்பிருக்கிறதோ அதன் வழிகளை எல்லாம் அடைத்துவிட்டு நீங்கள் சுட்டிக்காட்டுகிற நல் உள்ளங்களை சாதியின் கீழேயே இருத்துகிறீர்கள்.//

                  இல்லை. இப்படி தாங்கள் புரிந்து கொண்டு இருந்தால் அதற்க்கு நான் ஒரு விதத்தில் பொறுப்பாளி. என் நிலையை சரியாக விளக்காமல் போனதனால். அதற்காக மன்னிப்பு கோருகிறேன்.

                  நான் சாதி என்னும் கட்டமைப்பை அழித்து விட வேண்டும் என்பதில் ஆணித்தரமாக உள்ளவன். இந்து மதத்தில் மட்டும் அல்ல, எல்லா மதத்தில் இருக்கும் சாதி கட்டமைப்பை அழிக்க வேண்டும் என்பவன். அப்போதுதான் உண்மையான சாதியின்மை இருக்கும். இதில் நாம் இருவரும், அனைவரும் ஒத்து போகிறோம். நம் அனைவரின் லட்சியம் இது.

                  என் ஆசையின் இன்னும் ஒரு பகுதி தான் நான் அனைவருக்கும் புரிய வெய்க்க விரும்பும் இந்த உண்மை:

                  “இந்து மதத்தின் சாரம் சாதி அல்ல, சாதிக்கும் இந்து மதத்தின் சாரத்துக்கும் கடுகளவும் பொருத்தம் இல்லை. இந்த பார்பனீயம் இந்து மதத்தின் சாரமோ, நம் கலாச்சாரமோ இல்லை, மனிதத்தை அடிபடையாக கொண்ட மதம் இது, நீ இறைவனிடம் செய்ய வேண்டியது எல்லாம் தூய பக்தி மட்டுமே, அது இறைவனிடத்திலும், உன் சக மனிதனிடமும் இருக்க வேண்டியது. இந்து மதம் சொல்லும் தர்மம் யாகம் வளர்பதோ, மற்றவரை கோவிலில் அனுமதிக்காதே என்று சொல்வதோ அல்ல. தாய் தந்தையரை மதி, உழைத்து, அடுத்தவனுக்கு உதவி வாழ்கையை நடத்து. உன் வசதிக்காக அடுத்த எந்த உயிரையும் இம்சிக்காதே, மக்களை, சமூகத்தை தாங்கி பிடி, சமூகத்தை முன்னிறுத்தி வாழ். காதல், காமம், இல்வாழ்கை எல்லாம் மனிதனின் வாழ்வில் பிரிக்க முடியாத அங்கம், நீ இல்வாழ்க்கையில் இருந்து கொண்டே இறைவனை அடையலாம் என்று சொன்ன முதல் மதம், இந்த இந்து மதம். எவ்வளவு ஆற்றல் இருந்தாலும், பலம் இருந்தாலும் தவறு செய்தால் அழிவாய் என்பதையும் ஆணித்தரமாக சொல்கிறது. நீ கடவுள் இல்லை என்று தாராளமாக கூறலாம். ஆனால் மனிதனை அல்லது வேறு ஒரு உயிரை சுயநலத்துக்காக இம்சிக்க உனக்கு உரிமை இல்லை என்பதை சொல்லும் ஒரே மதம் இந்த இந்து மதம் தான். நீ இந்து மதத்தின் எந்த தத்துவத்தை வேண்டுமானாலும் பின் பற்றலாம். ஆனால் இந்து மதத்தை காரணமாக சொல்லி மனிதனை கேவல படுத்தாதே. அப்படி இருக்கும் சில கருத்துக்கள் தன் சுயலாபத்துக்காக சிலர் ஜோடித்தவை. தூக்கி எறியப்பட வேண்டியவை. அப்படி செய்தால் உனக்கு இந்து என்றோ, மனிதன் என்றோ சொல்லிகொள்ளும் உரிமை இல்லை”.

                  இப்போது உங்களுக்கு என் பார்வை என்ன என்பது புரிந்து இருக்கும் என்று நினைக்கிறன். என்னை பொறுத்தவரை மக்களை சாதி என்னும் சகதியில் இருந்து வெளியே கொண்டு வர இப்போதைக்கு இந்து மதத்தை (நான் மேற்கூறிய விளக்கத்தை இந்து மதம் என்பதாக கொண்டு) பயன்படுத்தலாம். மனிதம் மேலோங்கும் போது அங்கே எந்த ஒருமைபடுத்தும் கருவியும் தேவை இல்லாமல் போய் விடுகிறது. ஆனா அது இல்லாத இந்த நிலைமையில், மக்களை ஒன்று படுத்த, அவர்களை மனிதம் என்னும் பாதைக்கு அழைத்து செல்ல ஒரு கருவி நமக்கு தேவை. அது கம்முநிசம் ஆக இருக்கலாம், தேச பற்றாக இருக்கலாம், ஏன் ஒரு பாடலாக கூட இருக்கலாம். இந்து மதம் ஏற்கனவே நல்ல ஆழ சென்று இருபதால் நான் அதை (விவேகனந்தர், ராஜா ராம் மோகன் ராய், திலகர் போல) மக்களை ஒன்று சேர்க்க ஒரு கருவியாக உபயோகிக்க விழைகிறேன்.

  15. என் அளவில் எந்த பிராம்மணர்களும் அது போல் சாதி வெறியுடனோ, மதவெறியுடனோ என்னிடம் நடந்துக்கொண்டது இல்லை. நான் என் பிராமண நண்பர்கள் வீடுகளுக்கு பல முறை சென்று கிறித்துமஸ் இனிப்புகளை கொடுத்து இருக்கிறேன், என் தோழிகள் ஆகட்டும் அல்லது அவர்களின் பெற்றோர்கள் ஆகட்டும் என்றுமே என் மனம் புண்படும் படி நடந்து கொண்டதே இல்லை. நான் கொடுத்த உணவுகளை என் கண் முன்பே மகிழ்ச்சியோடு சாப்பிட்டும் இருக்கிறார்கள். “இது உங்கள் கடவுளுக்கு வைத்து பிரார்த்தனை செய்து படைக்கப்பட்ட உணவு ஆகையால் இது வேண்டாம்” என்று இது வரை ஒரு முறை கூட மனம் நோகும் படி பேசியது கிடையாது. இது என் அனுபவம்!!!

  16. எங்களவா ஒரு சிலர் இப்படி இருக்கதாலதான் சேரி பசங்க கொட்டம் போடுறா. காஞ்சி பெரியவா பொன்ராதாகிருஷ்ணனுக்கு கொடுத்த இடத்த நம்மவா பாத்து தெரிஞ்சிக்கனும்.

    அது அதுக்கு ஒரு தராதரம் இருக்கு.சேரி இருக்குறவா நம்ம கடவுளுக்கு படைச்சத கூட நான் தொடமாட்டேன்.

  17. இராமன் ,நீங்க நம்ம விவாதத்தை தெடருங்க !சந்துரு எளிமையான நல்லவரு ,எனவே நம்ம விவாதத்தை திசை திருப்ப மாட்டாரு ! இம் இப்ப சொல்லுங்க , என் பின்னுட்டம் 17ல் நான் சொன்னது சரிதானே ? எஸ்கேப் ஆகாம பதில் சொல்லுங்க இராமன்.

    • ஐய்யா விரிவுரையாலரே !

      உங்களுக்கு 20000 feet view /context என்றால் என்ன என்பதே புரிவது இல்லை . இந்த ஒரு காரணத்தினாலேயே நான் உங்களுக்கு பதில் அளிப்பது இல்லை . உங்கள் புது அவதாரத்திற்கு ஒரு முறை புரிய வைக்க விரும்புகிறேன் .

      மதம் சரியா தவறா , ஒருவன் தன்னுடைய வீட்டில் அல்லது மதத்திற்குள் எப்படி நடந்து கொள்கிறான் என்பதை பற்றிய கட்டுரையோ விவாதமோ அல்ல

      மதம் என்னும் பொய்யை , தனி மனித/சமூக அடையாளத்தை தாண்டிஅண்டை அயலார் என்னும் இடத்திற்குள் செல்லும் போது எப்படி நடந்து கொள்கிறான் . அங்கும் மதத்தை கட்டிக்கொண்டு அழுகிறானா அல்லது நேசக்கரம் நீட்டுகிரானா என்பதுதான் கட்டுரை .

      இதில் எந்த பொய் (மதம் ) மக்களை கட்டுக்குள் வைக்க முயலுகிறது என்பதுதான் விவாதம் .

      உங்களுக்கு சிந்தனை குவிப்பு இல்லை அல்லது ஓரிரு வார்த்தைகளை மேய்ந்து விட்டு உடனே பொது புத்தியில் இருந்து இதுதான் சொல்லி இருப்பான் நாம இப்படி சொல்லி இவனை வழிக்கு கொண்டுவரலாம் என்று அங்கே விவாதத்திற்கு சம்பந்தம் இல்லாததை அவசர கோலத்தில் அள்ளி தெளிகிரீர்கள் . இது வடிவேல் கொண்டாய் போல எத்துனை அவதாரம் எடுத்தாலும் காட்டி கொடுகிறது . சற்றே மனதை அமைதி படுத்தி தெளிவாக உங்கள் கருத்துகளை எடுத்து வையுங்களேன் . உங்கள் புது அவதாரம் வெற்றி யடையும் .வாழ்த்துக்கள் …

      • இராமன்,

        உங்கள் பின்னுட்டத்தில் உள்ள வீண் பேச்சுகளை தவிர்த்து பார்த்தால் இன்னும் நீர் விவாதத்துக்கே வரவில்லை இராமன். பார்பனர்கள் தம் மதத்துக்குள் எப்படி வேண்டுமானாலும் சாதிய மேலாதிக்கத்துடன் நடந்து கொள்ளலாம் என்று நீர் வாக்கு மூலம் அளித்தமைக்கு மிக்க நன்றி.// மதம் சரியா தவறா , ஒருவன் தன்னுடைய வீட்டில் அல்லது மதத்திற்குள் எப்படி நடந்து கொள்கிறான் என்பதை பற்றிய கட்டுரையோ விவாதமோ அல்ல//

        மதம் என்ற தனி மனித/சமூக அடையாளத்தை தாண்டிஅண்டை அயலார் என்னும் இடத்திற்குள் செல்லும் போது பார்பனர்கள் எப்படி நடந்து கொள்கிறான் என்பதை தானே அடுக்கிஉள்ளேன் . மீண்டும் அடுக்கட்டுமா ?

        #####பிற மதத்தவர் கொடுக்கும் எந்த சைவ உணவையும் உட்கொள்வது இல்லை [அது ஹிந்து அல்லாதவேறு கடவுளுக்கு படைக்க பட்டு இருந்தாலும்,படைக்க படாவிட்டாலும் ] [மத அடிப்படையில் ]

        ##### பிற மதத்தவர் கொடுக்கும் எந்த அசைவ உணவையும் உட்கொள்வது இல்லை [மத அடிப்படையில் ]

        இந்த கருத்துக்களை நேரடியாக மறுக்க முடியாமல் உம்மை தடுப்பது எது தெரியுமா ? ஒரு பக்கம் உமது தற்போதைய முற்போக்கு வேடம் ,ஆனால் மனது முழுவதும் உள்ள சனாதன தர்மம் அல்லவா தடுக்கின்றது ! [ஒருபக்கம் வேடம் மறுபக்கம் உண்மை முகம். ]காட்சி முடீந்தால் வேடம் கலையும் அல்லவா ? அதற்கான தருணத்தையும், சூழலையும் ஏற்படுத்தி கொடுத்து உமது உண்மை முகத்தை வினவு வாசகர்களுக்கு காட்டவே வந்து உள்ளேன் !

        ^ திப்புவிடம் ஏன் திருப்பதி லட்டு சாப்பிட வில்லை என்றுநீர் சத்தியாவேசம் செய்யும் போது கூட, நாம் ஏன் பார்பன வேத மதத்தின் அடிப்படையில் அசைவம் உன்னாமல் அடுத்தவரை பார்த்து இந்த கேள்வி எழுப்பு கின்றோம் என்ற தர்க்க வினா உம் மனதில் எழாமல் இருந்தமைக்கு காரணம் என்ன இராமன் ?

        ^ ஹிந்து மதம் அனைவருக்கும் ஒன்றே என்றால் பெரும்பான்மை ஹிந்துக்கள் அசைவம் உண்பதும் சிறுபான்மை பார்பன ஹிந்துக்கள் அசைவம் உண்ணாமல் இருப்பதும் ஏன் ?

        ^ ஹிந்து மத வேதம் அசைவம் உண்ணகூடாது என்று பார்பனர்களுக்கு கூறுவது தானே காரணம் ? அப்படி என்றால் அசைவம் உண்ணும் ஹிந்துக்கள் எல்லாம் ஹிந்துக்கள் இல்லையா ?

          • பதில் பேசாமல் விலகி செல்வதன் மூலம் வினவில் அம்பலபட்டு, எதிர் கருத்து இன்றி அம்மனமாக நிற்கின்றிர்கள் இராமன் ! வாழ்த்துக்கள் !

  18. தொடர்ச்சி…
    இசுலாமிய தீவிரவாதத்துக்கு அமெரிக்க ஏகாதியபத்தியம் காரணம் என்கிறீர்கள் உண்மைதான் _________ நீங்க(கம்மூனிஸ்டுகள்)ஏகாதிபத்தியத்தை அம்பலப்படுத்துங்கள் அதன் கோர முகத்தை வெளிப்படுத்துங்கள் நான் விவரம் தெரியாத மழலை என்று ஒரு பின்னூட்டத்தில் சொல்லி இருக்கிறீர்கள் உன்மைதான் கம்மூனிசத்தை பொருத்த வரையில் எனக்கு குழந்தையின் அறிவுதான் உள்ளது கம்மூனிசம்னா எல்லோரையும் பொருளாதர சாதி ,மதம் ,படுச்சவன் படிக்காதவன் அப்பிடினு பிரிக்காம எல்லோரும் சமம்னு பார்க்குற தத்துவம் என்ற அளவில்தான் இருக்கிறது அதனால் எனக்கு ஏகாதிபத்தியத்த பத்தி பேசற அறிவு இல்லை ஆனால் இசுலாம் என்பது தீமையானது என்ற அறிவு இருக்கிறது எனது தாழ்த்தப்பட்ட சகோதரர்களை இசுலாம் இனிமையானது சம்த்துவமானது என்று ஏமாற்றி மதம் மாற்றி அவர்களது அடையாளத்த மாற்றி தொப்பியும் தாடியும் வைக்கச்சொல்லும் இசுலாமை விளக்கி அது தீமையானது என்பதை அவர்களுக்கு புரிய வைக்கும் கடமை உள்ளதுஎன்வே இசுலாமின் தீமைகளை வீளக்குபவேன் என்னை மத வெறியன் என்று அழைத்தாலும் பரவா இல்லை….

  19. முஸ்லிம்கள் தீபாவளி இனிப்பை சாப்பிடலாமா? கூடாதா? என்று விவாதிக்கும் முன்பு நீங்களே பதிவு செய்த இந்த கட்டுரையை படியுங்கள் https://www.vinavu.com/2014/10/21/periyar-on-diwali/, இந்தியர்களே குறிப்பாக திராவிடர்கள் கொண்டாட கூடாத ஒரு பண்டிகைக்கு இனிப்பு தான் சுழியோ.

  20. சந்துரு,

    @@@ வேடன் ஏகலைவனுக்கு வெட்ட பட்ட விரல்கள் எதன் அடிப்படையில் mr ? என்ன சொல்லி வெட்டினார்கள் என்று உமது மனதுள் சீந்தித்து பாருமையா ! சாதியம் எடைசொருகள் என்றால் மகா பாரத கலத்திலேயே சாதி கொடுமையால விரல் வெட்டு பட்டது ஏன் ?/ ஆமாம் பாரதத்தை விவாதித்தா ராமாயனத்துக்கு தாவுவது ஏன் ? உம்மிடம் பதில் இல்லை என்றால் இப்படி தான் தாவுவிர்கல்லா ?/இது இன்று இந்து மத ஆராய்ச்சி மூலம் நிரூபிகபட்ட உண்மை! (நீங்க மறுத்தாலும்). ஏகலைவன சுட்டி காட்டும் நீங்க வால்மீகிய என் பாக்க மறுக்குறீர்கள்? அதே வேடுவன் தானே வால்மீகியும்? அவர் எழுதுன ராமாயணம் இந்து மதத்தின் அடிப்படை நூலாக இருப்பது தெரியாது. ஏகலைவனை நடத்தியது தான் இந்து மதத்தின் விளைவு என்று நீங்க சொன்னா, அப்போ வால்மீகி எழுதுன ராமாயணம் ஒதுகிட்டதற்கான விளக்கம்?//

    @@@
    வேடன் ஏகலைவன் காலத்தில் தெடங்கிய சாதிய கொடுமை இன்றும் தொடருதே ஏன் என்று சிந்திக்க உம்மை தடுப்பது எது Mr ? இந்த சாதி வெறிக்கு எதிராகவும் அன்று புத்தன் முதல் இன்று பெரியார் வரை போராடியது ஏன் என்று சிந்திக்க உம்மை தடுப்பது எது Mr ? //நான் சொல்லல சாமி. ஆதாரம் சொல்லுது. காலா காலமா இப்போ இருக்கற மாதிரி நிலைமைஇல்லை. ///

    தொடரும்

    • //ஆமாம் பாரதத்தை விவாதித்தா ராமாயனத்துக்கு தாவுவது ஏன் ? உம்மிடம் பதில் இல்லை என்றால் இப்படி தான் தாவுவிர்கல்லா//

      துரோணர் குடுத்த விளக்கத்தை பாரதம் சொன்னதே சரியான முடிவு என்று ஏற்றுகொள்ளவில்லை. நான் இதை சற்று வேறு பார்வையில் பார்கிறேன். ஒரு உயர் பொறுப்பில் இருப்பவனுக்கு சாதி பற்று வந்து விட்டால் அவன் தான் செய்யும் தவறுக்கு எப்படி நியாயம் கற்பிப்பான் என்பதன் எடுத்துகாட்டாக நான் பார்கிறேன். அரசியல்வாதி தன் ஊழலுக்கு சப்பை கட்டு கட்டுவது போல துரோணர் செய்கிறார். அவன் எதிரி நாட்டு இளவரசனாக இருந்தாலும், துரோணர் சொன்னது சப்பை கட்டுதான். சாதி பற்று வந்து விட்டால் துரோணர் போன்றவர் கூட எப்படி மாறுவார்கள் என்பதன் எடுத்துகாட்டாக இதை பார்கிறேன். துரோணர் செய்தது சரி என்று பாரத்தில் சொல்லி இருந்தால் நீங்க பாரத்தை சாடுவதை நான் ஏற்பேன். ஆனா இந்த இடத்தில் சாட வேண்டியது துரோணரின் சாதி பற்றை மட்டுமே.

      //வேடன் ஏகலைவன் காலத்தில் தெடங்கிய சாதிய கொடுமை இன்றும் தொடருதே ஏன் என்று சிந்திக்க உம்மை தடுப்பது எது Mr ?//

      இந்த வெறி தொடர்வதன் காரணம் என்னை பொறுத்த வரை மனிதர் தான். தன் சுயலாபத்துக்காக மேல் சாதி என்னும் அந்தஸ்தை விட்டு கொடுக்க முடியாத மனித மிருங்கங்கள் தான். இந்து மதம் சாதிய பிரிவை ஏற்கவில்லை என்பதற்கு நான் தரும் ஒரு உதாரணமே வால்மீகி. அப்போ இருந்த பிரச்சனை தான் இப்போவும். சாதியை காட்டி சிலர் தன் செயலுக்கு சப்பைக்கட்டு கட்டி கொண்டேதான் இருகின்றனர். ஆனா வால்மீகியை வெச்சு ராமாயணம் எழுதி, நந்தனாரை தில்லை கர்பக்ர்ஹதுக்குள் பார்பனரை வெச்சே கொண்டு வர வெச்சி சாதி மனிதனின் வெறி தான், இந்து மதத்தின் சத்தியம் அல்ல அது என்று இதே இந்து மதம் கட்டிக்கிட்டு தான் இருக்கு. கொஞ்சம் தேடி பாருங்க, நல்லதும் கண்ணுக்கு தெரியும். சாதி ஒரு தவறு என்றால் இந்து மதத்தில் எத்தனையோ நல்லதும் இருக்கு. எனக்கு கெட்டதை மட்டும் தூக்கி எரிஞ்சா போதும் சார். கூட சேத்து நல்லதை தூக்கி எரிய மனசு இல்லை.

      • சந்துரு, குமுதத்தில் ஆறு வித்தியாசங்கள் போல இருக்குது ஐயா உமது பதில்! பாரதத்தில் ஒரு வேடன் ,ராமயனத்தில் ஒரு வேடன் என்ற ஒப்புமையுடன் பேசும் உமக்கு பார்பன மதத்தில் ஆண்டு ஆண்டு காலமா வரும் சாதிய பேதங்கள் அவற்றால் வாழ்வு இழந்த பழங்குடி மக்கள் ,அவர்களின் துயரங்கள் இன்னும் தொடருவது எல்லாம் உமக்கு காரணாமாக தெரிவது சாதிவெறி பிடித்த மனிதர்கள் மட்டும் தான் ஆனால் பார்பன ஹிந்து மதம் இல்லை என்று தெரிவதற்கு வேறு ஒரு நோக்கமும் இருக்கிறது அய்யா. வேறு ஒன்றும் இல்லை தருண் விஜய் என்ற போலியின் clone அல்லவா நீர் ! __ துரோனாச்சாரியார் என்ற பார்பனருக்கு சாதிவெறி வந்தாக நீர் கூறுவதன் மூலம் சாதியம் பாரதத்தில் இருந்தே தெடருகின்றது என்பதை ஒத்துகொண்டதற்கு மிக்க நன்றி.வேடன் ஏகலைவன் தன் விரலை இழந்தது சாதிவெறியின் ஒரு சிறு குறியிட்டு மட்டும் தான். அந்த வேட்டுவ ஏகலைவனுக்கு பின் ஒரு சமுகம் இருந்ததை கற்பனை செய்து பாருமையா ! ஏதோ ஒரு ஏகலைவன் மட்டும் வதைக்க பட்டு இருந்தால் கூட நீர் அட்வகேட் செய்யும் பார்பனர்களையும் ,பார்பன ஹிந்து மதத்தையும் மன்னிக்கலாம்.ஆனால் பாரதகாலத்தில்ஏகலைவன் சமுகதை போன்றே பல ஹிந்திய பழஇனக்குடி சமுகங்கள் அல்லவா சாதியத்தால் வதைக்க பட்டன. அவர்களின் உரிமைகள் முடக்க பட்டன. மேலும் துரோனாச்சாரியார் என்ற பார்பனர் என்ன சொல்லி விரல் சேதம் செய்தான்! சீந்தித்து பாருமையா!

        “துரோனாச்சாரியார் வில் வித்தை கற்று தர மறுத்ததின் காரணம்.ஏகலைவன் சத்ரியன் இல்லை என்பதற்காக.”

        “ஏகலைவன் விரல் போனதற்கு காரணம் சூத்திரன் என்பதற்காக.”

        அப்படியே பாரத காட்சியை மறந்து விட்டு திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு வாருமையா !அங்கு வாழ்ந்த நம்பூதிரிகள் அல்லாத மக்கள் புலையர்,சாணார் ,வாணியர் போன்றவர்களின் நிலை எப்படி இருதது தெரியுமா ? அவர்கள் வீட்டு பெண்கள் மேலாடை அணியாமல் இருக்கவேண்டும் என்பது தான் பார்பன நம்பூதிரிகள் வைத்த சட்டம். இதனை போராடி வென்றனர் அந்த சாதி கொடுமையில் இருந்த மக்கள்.

        “உன் வீட்டு பெண்களுக்கும் இன் நிலை இருந்தால்” என்ற சூழ் நிலையை உருவக படுத்திக்கொண்டு பதில் போடுமையா !

      • சந்துரு, என்ன ஒரே தடுமாற்றமாக இருக்கு எழுத்திலும் ,வார்த்தைகளிலும் , வாகியத்திலும் ? மனசாட்சியுடன் உங்கள் விரல்களுக்கு ஏற்பட தடுமாற்றமா ? நல்லது ? ஒரு எளிய நல்லவருக்கு-உங்களுக்கு இது போன்று ஏற்படுவது இயல்பு தான் ! தொடரட்டும் உங்கள் மனசாட்சியின் பணி ! ஒரு விடயம் மட்டும் புரிகின்றது ! “ஹிந்து மதத்தில் உள்ள சாதி ஒரு தவறு என்றால் இந்து மதத்தில் எத்தனையோ பிற நல்லதும் இருக்கு! “என்று உங்கள் மனசாட்சியின் குரல் மட்டும் கேட்கின்றது. சாதியத்தின் மூலம் பெரும்பான்மை ஹிந்து மக்களின் மனித உரிமைகளே மறுக்க படும் போது அதன் மூலம் வேறு நன்மைகள் கிடைத்தாலும் அதனால் மக்களுக்கு என்ன நன்மை என்று என் மனசாட்சி கேள்வி எழுப்பு கின்றது ஐயா ! //ஆனா வால்மீகியை வெச்சு ராமாயணம் எழுதி, நந்தனாரை தில்லை கர்பக்ர்ஹதுக்குள் பார்பனரை வெச்சே கொண்டு வர வெச்சி சாதி மனிதனின் வெறி தான், இந்து மதத்தின் சத்தியம் அல்ல அது என்று இதே இந்து மதம் கட்டிக்கிட்டு தான் இருக்கு. கொஞ்சம் தேடி பாருங்க, நல்லதும் கண்ணுக்கு தெரியும். சாதி ஒரு தவறு என்றால் இந்து மதத்தில் எத்தனையோ நல்லதும் இருக்கு. எனக்கு கெட்டதை மட்டும் தூக்கி எரிஞ்சா போதும் சார். கூட சேத்து நல்லதை தூக்கி எரிய மனசு இல்லை.//

  21. சந்துரு, நீங்க அடிக்கடி சொல்லும் சாதிவெறி கிறுக்கு பசங்க யாருனு பார்ப்போமா ?

    %%% பெரியார் அவர்கள் 1922 இல் நடைபெற்ற சென்னை மாகான காங்கிரஸ் மாநாட்டில் ,மதுரை முதலான கோவில்களில் தீண்டாமையை ஒழிக்கும் பணியை மேற்கொள்வதற்கு ஒரு தீர்மாநத்தை கொண்டுவந்தார் ! அதை எதிர்த்தது யார் தெரியுமா ? காங்கிரஸ்சில் இருந்த சாதிவெறி பார்பனர்கள் [சாதிவெறி கிறுக்கு பசங்க]

    %%%பார்பன வேதத்தின் புகலிடமான கேரளத்தில் தீண்டாமை என்பது நம்புதிரிகளால்[கேரளத்து பார்பன்ர்கல்லால் ] கட்டமைக்க பட்டு இருந்தது. தீண்டாமை என்பது தொட்டால் தீட்டு ,கண்டால் தீட்டு,கிட்டே வந்தால் தீட்டு என்ற மூன்று கொடிய வடிவத்தில் 1930வரை கொடிகட்டி பறந்தது. கேரள காங்கிரஸ் கமிட்டி 1934 மார்ச் 30 அன்று வைக்கத்தில் தீண்டாமை ஒழிப்பு போராட்டைத்தை தெடங்கியது .இதில் யார் சாதிவெறி கிறுக்கு பசங்க?நம்புதிரிகள் தானே ?

    தொடரும்

  22. சந்துரு, நீங்க அடிக்கடி சொல்லும் சாதிவெறி கிறுக்கு பசங்க யாருனு பார்ப்போமா ?

    1990களின் தொடக்கத்தில் மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற அமைப்பு திருவரங்கம் பெருமாள் கோவிலில் கருவறை நுழைவு போராட்டம் நடத்தினாங்க. அவங்கள அசீங்க படுத்த கோவிலுக்கு தீட்டு கழித்தது யாரு தெரியுமா ? அதே பார்பன கிறுக்கு சாதிவெறி பசங்க

    இன்றும் கூட மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற அமைப்பு சிதம்பரம் நடராஜர் கோவில் உள் தமிழ்-தேவாரம் பாட போராடுது ! அதை கோர்ட்டிலும் ,அரசு அதிகாரத்தை கொண்டும் எதிர்த்து நிற்பது யார் தெரியுமா ? தமிழ் நாட்டில் உள்ள பாப்பார பசங்க! [சாதிவெறி கிறுக்கு பசங்க]

    தொடரும்

    • தமிழ் தாகம் என்ற வாசகரை வினவு தளமே (கமன்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ) மோடி மஸ்தான் மாறி அவங்க ஆட்களே அவங்களுக்கு சப்போர்ட் பன்றமாறி ஒரு செட்டப்பா இருக்கலாம் போல இருக்குது எங்க பாத்தாலும் தமிழ் தாகம், தமிழ் தாகம்னு இருக்குப்பா அந்த ஆளுக்கு கொஞ்சம் தண்ணி குடுங்கப்பா பிளீஸ்…

  23. சந்துரு, பார்பனிய ஹிந்து மதத்தில் சாதி கொடுமை ஒரு கிளையாக இருந்தால் அதனை கன்சர் கட்டி என்று நினைத்து வெட்டி எரீந்து மிச்சத்தை காப்பாத்த முனையலாம். தப்பு இல்லை. ஆனா பாரூங்க .., சாதியம் தான் பார்பனிய ஹிந்து மதத்தின் வேராக 3000 ஆண்டுகளாக ரொம்ப ஸ்ட்ரோங்காக இருக்குங்க ! ஏன் என்றால் அதனை உருவாக்கியதே ஆரிய வந்தேரி பார்பனர்கள் தானையா ! பார்பனர்கள் அல்லாத நமக்கு என்று ஏதாவது வழிபாடு இருக்க என்று சிந்தித்தா கிடக்கும் பதில் என்ன என்றால் சிறுதெய்வ வழிபாடு தான். ஆகம விதிகள் அற்ற சிறு தெயவத்தை ஆகம விதிகளுடன் கூடிய கடவுளுடன் ஒப்புமை செய்து பாருமையா ! அனைவரும் அர்சகர் ஆகலாம் என்ற மனித உரிமை ,மனித நேயம் எங்கு உள்ளது ? ஆகம பெரு தெய்வத்திடமா அல்லது இந்திய மக்களின் மாற்று வழிபாட்டு முறையான சிறுதெய்வ வழிபாட்டிலா ?

    ஆனாலும் பாரூங்க இந்த ஹிந்து முன்னணியும் ,RSS வெறியர்களும் கிராம சிறுதெய்வ கோவில் பூசாரிகளை ஒன்று திரட்டி அவர்களையும் பார்பன மயம் ஆக்க மாநாடு எல்லாம் போடுது. இது போல தானே சிறுதினை மலரொடு,மறி[ஆட்டு கிடாய்] அறுத்து” உண்டு வாழ்ந்த திருமுருகாற்றுப்படை அசைவ முருகன் பார்பனர்களால் குட முழுக்கு சிகிச்சை மூலம் சைவனாக மாற்றப்பட்டான் பழனியிலும் மற்ற ஆறுபடை வீடுகளிலும்.

    ஆதாரம் :

    திருமுருகாற்றுப்படை 6 – பழமுதிர்சோலை

    சிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து //ஆட்டுக் கிடாயை அறுத்து,

    வாரணக்கொடியொடு வயிற்பட நிறீஇ

    ஊர்ஊர் கொண்ட சீர்கெழு விழவினும்

    ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்….

    //என்னோட கருத்த இங்க சொல்றேன் சார். பார்பனம் என்பது இந்து மதத்தின் ஒரு கிளை.//

  24. பார்பன – ஆகம கோவில்கள் அதே நிலையில் பார்பனிய வர்ணத்துடன் இருக்கும் வரையில் அங்கு பார்பனர் அல்லாதவருக்கு என்னையா வேலை ? முதலில் அனைவரும் அர்சகர் ஆகவேண்டும் ,அடுத்தது அனைத்து கோவில்களிலும் வழிபாடு பெரும்பான்மை மக்கள் பயன்பாட்டில் உள்ள மொழியில் ,தமிழ் மொழியில் இருக்க வேண்டும். அவை இரண்டும் நிறைவேறும் வரையில் பார்பனிய ஹிந்து மதம் பாசிச தன்மைகளை கொண்டு மேலும் மேலும் மக்களை அரசியல் ,கலாச்சார தளங்களில் வதைக்குமே தவிர வாழ விடாது.

  25. RSs கையால் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் சொலுரீங்க! சரி நம்பறோம்! ஆமாம் அம்மா RSS ,அதன் பல பிள்ளைகள் -கிளைகள் ,இன்று சாதிவெறியுடன் வரும் மோடி . அவர்களை எல்லாம் திருத்த என்ன செயல் திட்டம் வைத்து உள்ளீர்கள் ? ஏன் என்றால் வினவு தளமும் அப்படி பட்ட முயற்சியில் தம்மை ஆள்படுத்தி கொள்வதாலே எல்லாலும் ஒருங்க்கினைந்து போராடினா தப்பே இல்லை !//இதை தெளிவா சொல்லாடி என்னையும் rss கைப்பாவை என்று சொல்லிடுவீங்க என்பதால்தான் flight ஏற வேண்டிய அவசியம்.//

  26. திரு தமிழ் தாகம் அவர்களுக்கு,

    //சாதியம் தான் பார்பனிய ஹிந்து மதத்தின் வேராக 3000 ஆண்டுகளாக ரொம்ப ஸ்ட்ரோங்காக இருக்குங்க ! //

    பலமாக இருக்கிறது என்பதை நான் ஒத்துக்கறேன். ஆனா ஆணி வேர் எல்லாம் இல்லை. திரும்பவும் சொல்றேன் சார். ஆழமா இருப்பதாலோ, இல்லை அனைவருக்கும் தெரிந்து இருப்பதால ஆணி வேர் ஆகாது. misconception என்றால் தங்களுக்கு என்ன என்று தெரியும் என்று நினைக்கிறன். மேற்கு நாடுகளில் கம்யூனிஸ்ட் என்றால் கெட்டவன் என்பது பரவலான கருத்து. கருத்து ஆழமா வேர் உன்றி விட்டதால் இதுவும் உண்மை ஆகுமா? எல்லா அய்யரும் சாதி வெறியன் என்பது இங்கயும் வேர் ஊன்றி விட்டது. அதுனால அய்யர்களில் சுத்தம்மா நல்லவர்கள் இல்லை என்பீர்களா?

    எனக்கு இன்னும் சில கேள்விகளும் உள்ளன. அதற்க்கும் பதில் தருமாறு கேட்கிறேன்.நீங்க சொன்ன ரெண்டு விசயத்தையும் நெறைவேதிட்டா (அனைவரும் அர்ச்சகர், தமிழ் அர்ச்சனை) கோவில் வழிபாட்டில் எந்த பிரச்சனையும் உங்களுக்கு இல்லை என்பது சரியா? இல்லை வந்தேறி மதம் என்பதால் கோவில் வழிபாடே வேண்டாம் என்பீர்களா? தாங்கள் பார்பனர்களில் (இங்கு அய்யர் மற்றும் அய்யங்கார், அல்லது மொத்தமாக மேல்சாதி மக்கள் என பொருள் கொள்ளவும்) எதிர்ப்பது அனைவரையுமா?

    தாங்கள் ஆட்டு கிடாய் பலியை பற்றி கூறியதால் மற்றும் ஒன்றும் கேட்க விழைகிறேன். இன்றைய சைவ உணவு பழக்கத்துக்கு இந்து மதம் தான் காரணம் என்பது தாங்கள் கூறுவதா? முருகனை திருமுருகாற்றுப்படையில் கூறி உள்ள படி தான் நாம் வழி பட வேண்டும், பின்னால் வந்த வேற எந்த வழிபாட்டு முறையும் வேண்டாம் என்பது உங்கள் கருத்து என்பது சரியா?

    • சந்துரு, பார்பன சனாதனம் ஆழமாக தான் இருக்கு ஆனா கிளையாக தான் இருக்கு என்று கூறும் போது ,அதனை வெட்டி எறியும் படியும் நீர் கூறும்போது தேன் ஒழுகுவது போலத்தான் இருக்கு ! அதற்கு அடுத்ததாக நீர் கேட்கும் கேள்விகள் தான் என் முகத்தில் விதவிதமான பார்பனிய ஆசிட் உற்றுவது போல இருக்கே ! சரி வலியை பொருத்துக்கொண்டு ஒவொன்றா பார்ப்போமா ?

      கேள்வி :நீங்க சொன்ன ரெண்டு விசயத்தையும் நெறைவேதிட்டா (அனைவரும் அர்ச்சகர், தமிழ் அர்ச்சனை) கோவில் வழிபாட்டில் எந்த பிரச்சனையும் உங்களுக்கு இல்லை என்பது சரியா?

      பதில் : இவைகள் இரண்டுமே தான்[அனைவரும் அர்ச்சகர், தமிழ் அர்ச்சனை] அடிப்படையான தமிழ் நாட்டின் பெரும்பான்மை ஹந்து மக்களுக்கு தேவையான மாறுதல்கள். பார்பனிய ஹிந்து கிளையை சும்மாச்சுக்கும் பேச்சுக்கு வெட்டி எறிய சொல்லும் நீர், அதற்கான ஆரம்ப வேலைகளான மாற்றங்களை (அனைவரும் அர்ச்சகர், தமிழ் அர்ச்சனை) நான் கோரும் போது அதற்கு ஆதரவு தராமல் எதிர் கேள்வி போடுவதன் மர்மம் என்ன ? அனைவரும் அர்சகர் ஆவது , தமிழ் அர்ச்சனை இவற்றால் உமக்கு என்ன கேடு விளைகின்றது ? முதலில் ஆகம கோவில்களில் ஆகமத்தை நீக்குவது என்பது (அனைவரும் அர்ச்சகர், தமிழ் அர்ச்சனை) ஆகிய மாற்றங்கள் மூலமாக தான் சாத்தியம் ஆகிறது . இந்த முதன்மையான இரு மாற்றங்கள் மூலம் தான் பார்பன சனாதனம் வெட்டி எரியபடும் என்ற எளிய உண்மை கூட உமக்கு புரியாமைக்கு காரணம் என்ன சந்துரு ? இறைவனை என் மொழியில் நானே அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கூறுவதில் தான் பார்பன சனாதன சாதி வெறியை வெட்டி எரியும் வேலை ஆரம்பிக்கின்றது என்பதை நீர் உணர்ததாக தெரியவில்லை

      தொடரும்

  27. சந்துரு கேள்வி :இல்லை வந்தேறி மதம் என்பதால் கோவில் வழிபாடே வேண்டாம் என்பீர்களா? தாங்கள் பார்பனர்களில் (இங்கு அய்யர் மற்றும் அய்யங்கார், அல்லது மொத்தமாக மேல்சாதி மக்கள் என பொருள் கொள்ளவும்) எதிர்ப்பது அனைவரையுமா?

    பதில் : வந்தேரி பார்பனர்களின் ஆகம விதிகள் படி நடக்கும் சமஸ்கிருத கோவில் வழிபாடுகள் தான் மனித உரிமைக்கு எதிராகவும் , சாதியத்தை வலியுறுத்துவதாகவும் , பெரும்பான்மை ஹிந்து மக்களை இழிவு படுத்துவதாக உள்ளது. இதனை ஆதரிக்கும் எவருமே [அய்யர் மற்றும் அய்யங்கார் மற்றும சந்துரு அக்கியவரும் , இன்ன பிறரும் பார்பன சாதியத்தின் கொடியை உயர்தி பிடிக்கும் கேடு கெட்டவர்களே ! எனவே ஆகமத்தை நிலைநிறுத்தும், ஆதரிக்கும் , சொம்பு அடிக்கும் அடிவருடிகள் அனைவரையுமே எதிர்கின்றேன் ! நீர் எப்படி சந்துரு?

    தொடரும்

  28. சந்துரு கேள்வி : தாங்கள் ஆட்டு கிடாய் பலியை பற்றி கூறியதால் மற்றும் ஒன்றும் கேட்க விழைகிறேன். இன்றைய சைவ உணவு பழக்கத்துக்கு இந்து மதம் தான் காரணம் என்பது தாங்கள் கூறுவதா? முருகனை திருமுருகாற்றுப்படையில் கூறி உள்ள படி தான் நாம் வழி பட வேண்டும், பின்னால் வந்த வேற எந்த வழிபாட்டு முறையும் வேண்டாம் என்பது உங்கள் கருத்து என்பது சரியா?

    பதில் : ஆட்டு கிடாய் படையலை தடை செய்ததும் , பார்பன தெய்வம் அல்லாதா தமிழ்-முருகனை குட முழுக்கு சிகிச்சை மூலம் பார்பன சுப்பரமணிய சாமியாகியதும் யாரு சந்துரு? பார்பனர்களும் அவர்களின் ஆகம வேதமும் தான் என்ற எளிய உண்மை உமது மண்டையில் உரைக்க இன்னும் எத்துனை நாளாகுமோ ? சிறு தெய்வம் என்றால் சிறுமையான தெய்வம் அல்ல சந்துரு ! அவை பாரம்பரிய தமிழர் வணங்கும் தெய்வங்கள்.அவை ஆகமத்தை நோக்குவதும் கிடையாது.விரும்புவதும் கிடையாது. அதே அடிப்படையில் தான் முருகனும் தமிழர் ஆகம விதிகள் இன்றி வணங்கும் தெய்வம். என் முருகனுக்கு என் தமிழர் வழக்கப்படி ஆகம விதிகள் இன்றி வணங்கும் நிலையின் மீது கேள்வி எழுப்பும் உமது நிலை rss ஹிந்து முன்னணி சார்பு நிலையில் தான் உள்ளது சந்துரு ! பின்னால் வந்த ஆகம வழிபாட்டு முறையில் வணங்க வேண்டும் என்ற உங்கள் கருத்து பார்பனர்களுக்கும்,ஆகம விதிகளுக்கும் வேண்டுமானால் சரியாக இருக்கும்.இது தான் உங்கள் நிலையா ? ஆகம விதிகள் படிதான் தமிழ்-முருகனை வணங்க வேண்டும் என்ற உங்கள் நிலை அராஜகமாக்வும் ,பெரும்பான்மை தமிழர்களுக்கு எதிரானதாகவும் , மனித உரிமைக்கு எதிராகவும் இருப்பதை நீர் உணராமல் இருக்க காரணம் என்ன சந்துரு? பார்பன சார்பு தன்மை இன்றி வேறு என்ன ?

  29. அனைத்தையும் அறிந்த தமிழ் தாகம் அவர்களுக்கு,

    நான் சொல்லாத கருத்துக்களை சொன்னதாக தாங்கள் நினைத்து கொள்வதன் நோக்கம் என்னவோ? நான் கெட்ட கேள்விகள் அனைத்தும் உங்கள் கருத்தை நான் தவறாக புரிந்து கொள்ளவில்லை என்பதை confirm செய்ய நான் கேட்டவை. உங்க கருத்தை சரியாக புரிந்து கொள்ள சில follow up கேள்விகள் கேட்டல் அது //நீர் கேட்கும் கேள்விகள் தான் என் முகத்தில் விதவிதமான பார்பனிய ஆசிட் உற்றுவது போல// இருந்தால் நான் பொறுப்பு இல்ல.

    // அனைவரும் அர்சகர் ஆவது , தமிழ் அர்ச்சனை இவற்றால் உமக்கு என்ன கேடு விளைகின்றது ? //

    கேடு வெளையுது, எனக்கு புடிக்கல என்று நான் சொன்னதாக ஒரு ஆதாரத்தை காட்டுங்கள் பார்க்கலாம்? இந்த விவாதத்தில் மட்டும் இல்ல, முழு வலையையும் தாங்கள் தேடலுக்கு உட்படுத்துங்கள். நான் சொல்லி இருபது எல்லாம் எனக்கு சாதி வேண்டாம், பிரிவுகள் வேண்டாம், எல்லா மத வெறியனுக்கும் (துரோணர், மோடி உட்பட) ஒரே தண்டனை என்பது தான். ஒரு இடத்தில் நான் தமிழ் அர்ச்சனை வேண்டாம், அனைத்து சாதி மக்களும் அர்ச்சகர் ஆவதில் எனக்கு விருப்பம் இல்லை அப்படின்னு சொல்லி இருந்தா, உங்ககிட்ட நேர்ல வந்து செருப்பு அடி கூட வாங்க நான் தயார் சார். அப்படி உங்களால கண்டு பிடிக்க முடியாட்டி, இப்படி தப்பு தப்பா நினைத்ததற்கு மன்னிப்பாவது கேட்க முடியுமா உங்களால்?

    என் பார்வையை இந்த விசயத்தில் நான் தெளிவாக கூறி விட்டேன் என்று நினைத்தால் நான் அதை தொடவில்லை. உங்களுக்காக இன்னும் ஒரு முறை சொல்கிறேன். எனக்கு அனைத்து சாதி அர்ச்சகர், தமிழ் அர்ச்சனை என்ற விசயத்தில் எந்த எதிர்ப்பும் இல்லை. எப்போதோ செய்து இருக்க வேண்டிய விசயம் இது. இப்போவே ரொம்ப லேட். யார் வேண்டுமானாலும் (வேற்று மதத்தவர் உட்பட)வேதம் கற்கலாம் என்பது என் பார்வை. வேதம் மட்டும் அல்ல, இந்து மதத்தின் எல்லா நூல்களையும் எல்லாரும் படிக்க வேண்டும் என்பதும் என் விருப்பம்.

    //என் முருகனுக்கு என் தமிழர் வழக்கப்படி ஆகம விதிகள் இன்றி வணங்கும் நிலையின் மீது கேள்வி எழுப்பும் உமது நிலை rss ஹிந்து முன்னணி சார்பு நிலையில் தான் உள்ளது சந்துரு ! பின்னால் வந்த ஆகம வழிபாட்டு முறையில் வணங்க வேண்டும் என்ற உங்கள் கருத்து பார்பனர்களுக்கும்,ஆகம விதிகளுக்கும் வேண்டுமானால் சரியாக இருக்கும்.இது தான் உங்கள் நிலையா ? ஆகம விதிகள் படிதான் தமிழ்-முருகனை வணங்க வேண்டும் என்ற உங்கள் நிலை அராஜகமாக்வும் ,பெரும்பான்மை தமிழர்களுக்கு எதிரானதாகவும் , மனித உரிமைக்கு எதிராகவும் இருப்பதை நீர் உணராமல் இருக்க காரணம் என்ன சந்துரு? //

    இது தான் நிலையா என்று கேட்டு விட்டு, என் பதிலுக்கு கூட காத்து இராமல் அடுத்த வரியில் என்னை மத வெறியன் ஆக்கிய தங்கள் நோக்கம் என்ன? நீங்கள் மீண்டும் கண்டதை கற்பனை செய்யாமல் இருக்க தெளிவாக என் நிலைபாட்டை கூறி விடுகிறேன். கடவுளை உங்களுக்கு எப்படி விருப்பமோ அப்படி வணங்கி கொள்ளுங்கள். என்னால் பலி கொடுக்க முடியாது. அந்த ஆடோ, கோழியோ துடிப்பதை என்னால் பார்க்க முடியாது. என் பக்திக்காக இன்னும் ஒரு உயிரை பலி கொடுத்து என் கடவுளை பார்த்தால் அந்த துடிப்பு மட்டுமே என் கண் முன் நிற்கிறது. அதை பார்த்து விட்டு என் தெய்வத்தை என்னால் மன சாந்தியுடன் வழிபட முடியவில்லை. அதனால் தான், என் குல தெய்வத்தை இன்றும் பொங்கல் வைத்து வழி படுகிறேன்.அதனால் நீங்கள் பலி கொடுபதற்க்கு எனக்கு உடன்பாடு இல்லை என கொள்ள வேண்டாம். நீங்க எப்படி வேண்டுமானாலும் வழி படுங்கள்.

    என் நிலைபாட்டை தெய்வக்கிய பிறகு, என் கேள்வியை மீண்டும் கேட்கிறேன். முருகனை திருமுருகாற்றுப்படையில் கூறி உள்ள படி தான் நாம் வழி பட வேண்டும், பின்னால் வந்த வேற எந்த வழிபாட்டு முறையும் வேண்டாம் என்பது உங்கள் கருத்தா?

    • மேற்படி பதிவில், கேட்ட கேள்விகள் என்பது கெட்ட கேள்விகள் என்று பிழையின் காரணமாக பதிவாகி உள்ளது. கேட்ட கேள்விகள் என்று திருத்தி படிக்கவும்.

    • மிஸ்டர் சந்துரு ஏன் கோவப்படுறீங்க செந்தில்குமரன் அலைஸ் சரவணன் அலைஸ் தமிழ்தாகம் அலைஸ்…………, கொஞ்சம் ஆர்வக்கோளாரு ஆசாமிதான் ,குழப்பவாதிதான் ,ஆனா நல்லவருதான் இப்ப —- அப்பிடின்ற நிலைப்பாட்டை எடுத்தி இருக்கிறார் பின்னாடி அதுவும் மாறும் …. ஏன்பா யாருப்பா அங்க தமிழ் கொஞம் தாகமா இருக்காம் தண்ணி கொண்டு வந்து குடுப்பா…

      • ஏன் இப்படி வெற்று கூச்சல் Mr PJ ? முதலில் வினவின் பினாமி என்று என்னை கூவினிர்கள் இப்போது செந்தில் குமரன் ,சரவணன் ஆகியவர்களின் பினாமி என்கின்றிர்கள்.எது உண்மை ? எது உமது concious mind கருத்து என்று தெளிவாக கூறுமையா !

  30. ______

    நானோ அல்லது சந்துருவோ இறைவனை எப்படி வணங்குவது என்பது இங்கு விவாத கரு பொருள் அல்ல. ஆதி தமிழ் சமுகத்தில் இறைவன் வணங்கபட்ட ஆகம முறைகள் அற்ற நிலையில் இருந்து பார்பனர்களால் ஆகம முறைக்கு மாற்றபட்டது தவறு என்று கூறுகின்றேன். கோவில்கள் ஆகம விதிகள் மூலம் பார்பன மயம் [மையம் ] ஆக்க பட்டது தவறு என்று கூறுகின்றேன். மேலும் தமிழ் வழிபாட்டு முறை படி அறுக்கப்படும் கோழியோ அல்லது வெட்ட படும் ஆடோ வீண் அடிக்கபடுவது இல்லை . மனிதர்களும்,மிச்சத்தை மற்ற உயிரினமும்[நாய் ,எறும்பு] உண்பதால் அதில் ஒன்றும் தவறு இல்லை. இறைவனை வணங்கும் பார்பன ஆகம முறைகள் தான் தீயில் நெய் போன்ற உணவு பொருட்களை போட்டு வீண் அடிப்பது மனிதனுக்கு உணவு தட்டுபாட்டை உருவாகுகின்றன. இவை எல்லாம் உமது கண்களுக்கு தெரியாமைக்கு காரணம் பார்பன சார்பு இன்றி வேறு என்னவாக இருக்க முடியும். பார்பனிய அராஜகத்துக்கு எதிராகஆகமத்தின் சாதிவெறிக்கு எதிராக நான் வலி குரல் எழுபூம் போது இத்துனை கேள்விகளை வினவுக்கு வந்து கேட்கும் நீர் உண்மையிலேயே வினவில் சாதிவெறியுடனும், ஆகமத்தை உயர்தி பேசி சக மனிதனை தாழ்த்தும் வெறியர்களை நோக்கி கேள்வி எழுப்பியது உண்டா ? கோவில்களில் ஆகம விதிகள் வேண்டும் என்று கோரும் ஹரிகுமார் ,இராமன் போன்றவர்களை நோக்கி திரும்பாத மர்மம் என்ன ?

  31. சந்துரு, என் கருத்துக்கள் அனைத்தும் தெளிவாகவே உள்ளன.அதில் உமக்கு உடன்பாடுதானா அல்லது இல்லையா என்று கூறுவதை கேட்கின்றேன் …….

  32. //நானோ அல்லது சந்துருவோ இறைவனை எப்படி வணங்குவது என்பது இங்கு விவாத கரு பொருள் அல்ல.//

    சமூகம் என்பது மக்களால் ஆனது. நானும் அதுல ஒருத்தன் தான். என்ன சமூகத்துல இருந்து ஒதுக்க நீ யார்?

    //கோவில்கள் ஆகம விதிகள் மூலம் பார்பன மயம் [மையம் ] ஆக்க பட்டது தவறு என்று கூறுகின்றேன்..இவை எல்லாம் உமது கண்களுக்கு தெரியாமைக்கு காரணம் பார்பன சார்பு இன்றி வேறு என்னவாக இருக்க முடியும். //

    உங்களுக்கு படிக்க தெரியுமா இல்ல தெரியாதா? நீங்க பார்பன மரபை நீக்கும் என கூறிய தமிழ் வழி வழிபாடு, அனைத்து சாதி மக்களும் அர்ச்சகர் ஆவது என்பதற்கு எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என தெளிவாக கூறி விட்டேன். வேணும்னா எழுதி கை எழுத்து போட்டும் தரேன். என் கேள்விக்கு நீங்க பதில் கூறவில்லை என்பதையும் நினைவு படுத்துகிறேன். மீண்டும் என் கேள்வி. நீங்கள் கூறியது போல ஆகம விதி, சைவ வழிபாட்டை நீக்கி விட்டால் நானும் முருகனை வணங்க ஆடுகிடாய் அறுத்து தான் வழி பட வேண்டுமா? ஆகம வழிகளை நீக்கிவிட்ட பிறகு, நான் என் முருகனை வழி பட என்ன என்ன வழிகளை நீங்கள் ஏற்றுகொள்வீர்கள் என்று தெளிவாக கூறவும். அனைத்து வழிகளையும் சொல்லவும்.

    //கோவில்களில் ஆகம விதிகள் வேண்டும் என்று கோரும் ஹரிகுமார் ,இராமன் போன்றவர்களை நோக்கி திரும்பாத மர்மம் என்ன ?//

    முயலுக்கு மூணு காலுன்னு சாதிகறவன் கிட்ட நாலு காலுன்னு வாதாடினா அவன் நம்ப போறது இல்லை. எனக்கு அதில் நேரம் விரயம் செய்ய இப்போதைக்கு நேரம் இல்லை. அதை விட அறிவு இருக்கறவன் கிட்ட உண்மைய விளக்குவது சுலபம். மொதல்ல reasonable மக்களை மாத்திட்டு, அதுக்கு அப்புறம் unreasonable மக்களிடம் செல்லலாம் என்பது என் வழி.

  33. சந்துரு, இந்த விவாதம் நம் தமிழ் சமுகம் பார்பனிய சனாதனத்தால் எப்படி பாதிக்க பட்டு உள்ளது பற்றியது தான்.அதன் மீது நாம் இருவரும் நம் கருத்துகளை வைக்கும் போது சமுக நலனை பிரதிபலிக்க வேண்டுமே தவிர தனிபட்ட விருப்பங்களை பற்றி விவாதிக்க கூடாது அல்லவா ? உமது விருப்பம்/பழக்கம் பற்றி நான் எதற்கு விவாதிக்க வேண்டும். சமுகத்தை பற்றி விவாதிக்கின்றோம் என்னும் போதே சத்தியாவேச கேள்வியை “என்ன சமூகத்துல இருந்து ஒதுக்க நீ யார்?” என்ற கேள்வியை எழுப்பூம் சந்துருவுக்கு ஆண்டு ஆண்டு காலமாக பார்பனியத்தால் ஒதுக்கபட்டு இருக்கும் தலித் மற்றும் பழங்குடி சமுக மக்களின் வலிகள் புரியாமல் இருப்பது தான் எனக்கு வேதனை அளிக்கின்றது !
    //சமூகம் என்பது மக்களால் ஆனது. நானும் அதுல ஒருத்தன் தான். என்ன சமூகத்துல இருந்து ஒதுக்க நீ யார்?//

  34. சந்துரு,

    சக மனிதரை இழிவு படுத்தும் ஹிந்து மத ஆகம விதிகளை நீக்குவது பற்றி பேசும் போது , தமிழ் முருகனை -இறைவனை வழி பட மனிதர்கள் பின்பற்றும் வேறு முறைகள் என்று பார்த்தால், சந்துருவுக்கு விருப்பமான மாற்று முறைகளை [ஆகம விதிகளை நீக்கிய] கையாண்டு கொள்வதில் நான் எப்படி குறுக்கே வரமுடியும். ?வழிபாட்டு முறையில் ஆகம நியதிகள் மனிதரை இழிவு படுத்துவதால் அதனை முழுமையாக நீக்க வேண்டும் என்று இப்போதும் கோருகிறேன். மனிதரை இழிவு படுத்தாத எம் முறையை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் கையாண்டு கொள்வதில் நான் எப்படி குறுக்கே நிற்க முடியும் ? ஆனால் ஆறு படை வீ டுகளில் இன்றைய நிலை என்ன ? ஆகம விதிகள் தானே பார்பனனை சங்கிலியால் பிணைத்து வைத்து உள்ளன!

  35. சந்துரு,

    பார்பனர்களில் நல்லவர்கள் இருக்க முடியாதா என்று உம்மால் தொடங்கபட்ட இவ் விவாதம் யாருக்கு ஆதரவானது என்று யாரால் தான் உணரமுடியாது ? மக்களின் எதிரி யார் என்பது தெரிந்தும் அவர்களை கண்டும் காணாமல் இருப்பது என்ற நிலை தான் இன்றைய சந்துரு போன்றோரின்-நடுத்தர வர்கத்தின் இயல்பாய் மாறியது எமக்கு மிக்க வேதனை அளிக்கின்றது.

  36. @சந்துரு

    //சாதி பற்று வந்து விட்டால் துரோணர் போன்றவர் கூட எப்படி மாறுவார்கள் என்பதன் எடுத்துகாட்டாக இதை பார்கிறேன். துரோணர் செய்தது சரி என்று பாரத்தில் சொல்லி இருந்தால் நீங்க பாரத்தை சாடுவதை நான் ஏற்பேன். ஆனா இந்த இடத்தில் சாட வேண்டியது துரோணரின் சாதி பற்றை மட்டுமே. //

    துரோணரின் சாதி பற்று என்றால் , அவர் பிராமணர்களுக்கு மட்டும் கல்வி கற்று கொடுத்து இருப்பவராக இருந்து இருக்க வேண்டும்

    ஏகலைவன் கதையில் துரோணர் மட்டும் வில்லனாக தெரிய வைக்க படுகிறார் .

    முதலில் ஏகலைவனுக்கு பள்ளியில் அனுமதி மறுக்கபடுகிறது . அது சத்திரியர்கள் படிக்கும் பள்ளி அங்கே வேறு சாதியினரை சேர்த்தால் சத்திரியர்கள் பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்ப மாட்டார்கள் . வாழ்வாதாரத்திற்கு சத்திரியர்களை அண்டி பிழைக்கும் துரோனரால் மாற்று முடிவு எடுக்க முடியாது .

    இந்த ஆதிக்க சாதியினரின் மறைமுக பொருளாதார நெருக்கடி மிகவும் நுட்பமாக பார்த்தால் தான் தெரியும் .

    அடுத்து சத்திரியர்களுக்கு பார்பனர்கள் கல்வி கற்று தந்ததாக வருகிறது. அப்படியானால் இந்த சத்திரிய சாதிகள் எதன் அடிப்படையில் கல்வி இடஒதுக்கீடு கேட்கிறார்கள்

    இரண்டாவது ஏகலைவனின் கட்டை விரல் பிடுங்கபடுகிறது . ஏகலைவனை விட முயற்சி செய்து தனது திறமையை உயர்த்த முடியாத ஆதிக்கசாதி அர்ஜுனன், தனது குருவிடம் குறை கூறுகிறான் . தனது கல்வி திறத்தால் ஏகலைவனை விட நன்றாக அம்பு எய்ய சொல்லி தர கையாலாகாதா துரோணர் , சூழ்ச்சி செய்து ஏகலைவனின் கட்டை விரலை பறிக்கிறார் .

    இதிலும் ஆதிக்க சாதியும் பார்பனர்களும் கூட்டு களவாணிகள் எனபது தான் உண்மை .

    If Brahmins ar law makers, Other upper castes are Law implementors. Both has to go hand in hand to make it mainstream.

    • அதுமட்டுமல்ல; பார்ப்பனியத்தின் சூழ்ச்சியும் நயவஞ்சகமுமே துரோணாச்சாரியையே கொல்கிறது. எப்படி காஞ்சி செயந்திரேன் ஆடிட்டர் சங்கராமனை கொலை செய்தாரோ; அதுபோல; கதை இதுதான்.

      கிருஷ்ணனின் சூழ்ச்சிப்படி அர்ச்சுனன் எதிர்தரப்பில் நிற்கிற துரோணரைக்கொல்ல வேண்டும். ஆனால் துரோணரோ ராஜகுரு. அருச்சுனனின் பலவீனங்கள் அத்துபடி. ஆனால் கிருஷ்ணன் ஒரு புரளியைக்கிளப்புகிறான். போரிலே துரோணரின் மகன் அசுவத்மா இறந்துவிட்டான் என்று அள்ளிப்போடுகிறான். பதைபதைக்கிற துரோணன் அனைவரிடமும் இதை உறுதிப்படுத்த விழைகிறான். அனைவரும் அப்படியே சொல்லவே தருமனிடம் கேட்கிறார் துரோணர். என் மகன் இறந்தது உண்மையா என்று? ஏனெனில் தருமன் பொய்யே சொல்லமாட்டான்!!! ஆனால் தருமன் தந்திரத்துடன் பொய் சொல்கிறான். அதாவது அவன் சொல்வது உண்மையாகவும் இருக்கவேண்டும்; அதே சமயம் பொய்யாகவும் இருக்க வேண்டும். போரிலே யானை இறக்கிறது. யானைக்கும் அசுவத்மா என்ற பெயர் உண்டு. துரோணர் இதைக் கேட்டு நிலைகுலைகிற சமயத்தில் அர்ச்சுனன் அம்பெய்தி கொல்கிறான். தந்திர சூழ்ச்சி பார்ப்பன பயங்கரவாதத்தின் முதன்மையான கூறுகள். ஏனெனில் துரோணரே அப்படித்தான் கொல்லப்படுகிறார். (தோழர் ஒருவர் பகிர்ந்தது)

  37. @தமிழ்-தாகம் ( Avatar-4)

    //கோவில்களில் ஆகம விதிகள் வேண்டும் என்று கோரும் ஹரிகுமார் ,இராமன் போன்றவர்களை நோக்கி திரும்பாத மர்மம் என்ன ? //

    விரிவுரையாலரே , நான் எப்போது அப்படி சொன்னேன் . நீங்களாக எதையாவது கற்பனை பண்ணிக்கொண்டு , அடுத்தவர்களை தீயவர்களாக காட்டி நல்லவனாக முயலவேண்டாம் .

Leave a Reply to தமிழ்-தாகம் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க