பாலாஜி அண்ணா தளர்ந்து போயிருந்தார். நாற்பத்தி ஏழு வயதுக்கு அவர் கண்களின் கீழே வளையமிட்டிருந்த கருமையும், முகமெங்கும் இருந்த சுருக்கங்களும் பார்க்க என்னவோ போல் இருந்தது. முன்னைப் போல் துறுதுறுவென்று அலைபாயும் கண்கள் இல்லை. பத்துப் பண்ணிரண்டு வருடங்களுக்கு முன் எந்த நேரமும் நெருக்கிய புருவங்களோடு நம் கண்களை அவர் ஊடுருவிப் பார்த்தால் பசித்த புலியை நேரிட்டுச் சந்தித்தது போல் இருக்கும்.
“ஏய்… சரியாச் சொல்லு. பொய் சொல்லக் கூடாது. நீ கோஸ்ட் அடிக்கும் போது ப்ரைமரி ஹார்ட் டிஸ்கையும் செகண்டரி ஹார்ட் டிஸ்கையும் சரியாத் தானே செலக்ட் பண்ணினே? அப்புறம் எப்படிடா டேட்டா லாஸ் ஆச்சி. உண்மைய ஒத்துகிட்டா என்னால காப்பாத்த முடியும்… இல்லாட்டா வேலை போயிடும் பரவாயில்லையா?” உணர்ச்சிகளற்ற அவரது இன்றைய முகம் முன்பு ஒரு காலத்தில் நான் செய்த தவறை மறைக்க முயற்சித்த போது அனல் கக்கியது நினைவுக்கு வந்தது.
பாலாஜி சார் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட பாலாஜி அண்ணா நான் பொறியியல் படித்து கணினி பழுது பார்க்கும் நிறுவனம் ஒன்றில் முதன்முதலாக வேலைக்குச் சேர்ந்த போது எனது தொழில்நுட்ப பயிற்சியாளராக இருந்தார். கணினித் தொழில்நுட்பத்தில் ஆனா ஆவன்னா சொல்லிக் கொடுத்த ஆசான்.
நாவல் நெட்வேர் என்கிற கணினி இயங்குதளத்தை(Operating system) இன்றைய ஐ.டி தலைமுறையினர் அனேகமாக மறந்திருப்பார்கள். அந்த இயங்குதளத்தில் புழக்கத்தில் இருந்த நாவல் டைரக்டரி சர்வீஸ் (NDS) என்ற நுட்பத்தில் பாலாஜி நிபுணர். பின்னர் அதே தொழில்நுட்பத்தை நாவல் நிறுவனத்திடமிருந்து விலைக்கு வாங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் 2000 இயங்குதளத்திலிருந்து ஆக்டிவ் டைரக்டரி சர்வீஸ் (ADS) என்ற பெயரில் சந்தைப்படுத்தி நாவலை ஒழித்ததோடு சர்வர் மார்க்கெட் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டது.
இந்தப் போக்கு துவங்கிய இரண்டாயிரமாவது ஆண்டுகளின் துவக்க காலத்தில் பாலாஜி எங்கள் கண்களுக்கு அசகாய சூரராக தெரிந்தார். அப்போது தான் பல வங்கிகள் தமது சேவையை கோர் பாங்கிங் (Core Banking) என்று சொல்லப்படும் மையப்படுத்தப்பட்ட கணினி வலைப் பின்னலுக்குள் கொண்டு வரத் துவங்கியிருந்தன. அந்த பிராஜக்டுக்காக விண்டோஸ் இயங்குதளத்திலும் ஆக்டிவ் டைரக்டரியிலும் எங்களுக்கு பயிற்சி அளித்தார் பாலாஜி.
ஓரிரு ஆண்டுகளில் (2004 ஜனவரி என்பதாக நினைவு) ஐ.பி.எம் நிறுவனத்திடமிருந்து பாலாஜிக்கு கூடுதல் சம்பளத்துடன் வேலைக்கான அழைப்பு வந்தது. ஐ.பி.எம் வேலையை ஏற்று பெங்களூர் சென்றவரிடம் இருந்து அதன் பின்னர் பெரிய அளவில் தகவல்கள் ஏதும் வரவில்லை. அவ்வப் போது பொதுவான நண்பர்களிடமிருந்து சில தகவல்களைக் கேள்விப் பட்டு வந்தேன். ஒவ்வொரு முறை அவரைக் குறித்துக் கேள்விப் படும் போதும் அவர் வெவ்வேறு நிறுவனங்களில் வேலை செய்வதாக அறிந்து கொள்ள முடிந்தது. சுமார் பத்தாண்டுகளுக்குப் பின் சென்ற வாரம் எதேச்சையாக தேனீர் கடை ஒன்றில் வைத்து தான் அவரை நேரில் பார்த்தேன்.
”இப்போதைக்கு வேலை எதுவும் இல்லைடா.. ஆறு மாசமாச்சி. தேடிகிட்டு இருக்கேன், பார்க்கலாம். உனக்கு ஏதாவது லீட் தெரிஞ்சா சொல்லேன்”
ஆச்சர்யமாக இருந்தது.
“அட… உங்களுக்கேவா வேலை இல்லை? சும்மா தமாஸ் பண்ணாதீங்க பாஸ்.”
”உனக்கு கேட்க தமாசா இருந்தாலும் அது தான்பா உண்மை.”
”இல்லையே, நான் அப்பப்ப கேள்விப்பட்ட வரைக்கும் நீங்க அடிக்கடி கம்பெனி மாறிகிட்டே இருந்தீங்க… ஒவ்வொரு தடவை கம்பெனி மாறும் போதும் நல்ல சம்பளத்துக்கு மாறியிருக்கீங்க… அப்புறம் எப்படி வேலை போகிற நிலைமைக்கு வந்தீங்க?”
”உண்மைய சொல்லப் போனா… நான் ஒரு பிரமிட் மேல ஏறிகிட்டு இருந்தேன்.. நீ பிரமிட் பார்த்திக்கே இல்ல? அதுக்கு மேலே போகப் போக உயரம் அதிகமாகிட்டே இருக்கும்.. அதே நேரம் இடம் குறைஞ்சிகிட்டே இருக்கும்.. புரியுதா?”
“புரியலையே பாஸ்”
”இப்ப டி.சி.எஸ்ஸோ காக்னிசண்டோ இல்ல இது மாதிரி எந்த கம்பெனியா இருந்தாலும் எடுத்துக்க. அவனுக்கு கீழ் மட்டத்துல ஒரு ஆயிரம் எல்-1 ரிசோர்ஸ் (L1 – resource – முதல் கட்ட தொழில்நுட்ப அறிவுள்ள ஆற்றல்கள் அல்லது மனித வளங்கள்) தேவைப்பட்டால் அதில் 40 சதவீதம் தான் எல்-2 ரிசோர்ஸ் தேவை. அதாவது 400 பேர். அதுக்கு மேல எல் – 3 ரிசோர்ஸ் ஒரு 40 பேர் தேவை. அதுக்கும் மேல எஸ்.எம்.இ (SME – Subject Matter Experts / துறை சார் வல்லுனர்) ஒன்னோ ரெண்டோ பேர் தான் தேவை. ஒரு இன்ஜினியர் குறிப்பிட்ட ஒரு ஸ்கில் செட்ல (Skill set) எல்-1ல துவங்கி எஸ்.எம்.இயா முடிய சுமாரா எட்டுலேர்ந்து பத்து வருசம் ஆகும்… அது தான் அவனோட கேரியர் கிராஃப். அதுக்குப் பின்னே மேனேஜ்மெண்டுக்கு போகலாம்.. இல்லேன்னா ப்ரீசேல்ஸா (pre-sales – விற்பனைக்குத் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குபவர்) போகலாம்.. முடியலைன்னா பிரமிடோட உச்சிலேர்ந்து கீழ விழுந்து தான் ஆகனும், என்னை மாதிரி”
”சரி பாஸ் நீங்க எல் – 2லயோ எல்- 3லயோ கொஞ்சம் வருசத்தை இழுத்து அடிச்சிருக்கலாமே…?”
“செய்திருக்கலாம்.. ஆனா அப்ரெய்சல் அவ்வளவா எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொரு வருசமும் ஒரு குரோத் காட்டியாகனும் இல்ல? நான் நம்ம கம்பெனியில இருந்து போன கொஞ்ச நாள்ல கல்யாணம் ஆச்சி.. ரெண்டு பசங்க. அவங்க படிப்பு… பொண்டாட்டியோட செலவு.. வீடு வாங்கினது.. கார் வாங்கினது.. இப்படி கமிட்மெண்டுக்கு மேல கமிட்மெண்டா சேர்ந்து கிட்டே போகுதில்லே? அதை ஈடுகட்டனும்னா நான் அடுத்த கட்டத்துக்கும் அடுத்த கம்பெனிக்கும் மாறித்தானே ஆகனும்?”
”அதான் நிறைய கம்பெனிகள் இருக்கே? ஒவ்வொரு லெவலுக்கும் நாலஞ்சி கம்பெனி மாறினாலே வருசத்த ஓட்டிடலாமே?”
“இல்லடா.. ஒரே லெவல்லே இருந்து இன்னொரு கம்பெனிக்கு ஜம்ப் ஆனா சம்பளத்துல அந்தளவுக்கு ஹைக்(Hike – உயர்வு) இருக்காது. ஒரு குறிப்பிட்ட ஸ்கில் செட் உள்ள ஒரு ரிசோர்சுக்கு இவ்வளவு தான் சம்பளம்னு ஒரு ஸ்டேண்டர்ட் இருக்கில்லே… அது எல்லா கம்பெனி ஹெச்.ஆருக்கும் (HR – Human resources / நிறுவனங்களுக்கு வேலைக்கு ஆள் எடுக்கும், சம்பளம் நிர்ணயம் செய்யும் வேலையைச் செய்யும் மனித வளத் துறை) இந்த ஸ்டேண்டர்ட் என்னான்னு தெரியும் இல்ல?”
”சரி, நீங்க மேனேஜ்மெண்ட் லைன்ல போக முயற்சி செய்யலையா?”
“அதுக்கு தனியா ஐ.டி.ஐ.எல், பி.எம்.பி, சிக்ஸிக்மான்னு தனியா படிக்கனும். டெக்னிக்கலா படிக்கறது வேற இது வேற.. எனக்கு செட் ஆகலை. அதுவுமில்லாம மேனேஜ்மெண்ட் சைட்ல போக என்னோட சுபாவமும் ஒத்துக்காது. அப்படியும் வேற வழியில்லாம பிராஜக்ட் மேனேஜர் வேலைக்கு நாலஞ்சி இண்டர்வ்யூ போய் பார்த்தேன்… தேர்வாகலை.”
”ஆன் சைட் போக ஏதும் முயற்சி செய்யலையா?”
”உனக்கே தெரியுமே… இங்க அப்பாவுக்கு வயசாயிடிச்சி. நான் மட்டும் தான் ஒரே பிள்ளை. இந்த நிலைமைல அவரை அங்கே கூட்டிப் போகவும் முடியாது விட்டுட்டு போகவும் முடியாது..”
”சரி என்ன செய்யலாம்னு இருக்கீங்க?”
”இன்னும் முடிவு செய்யலை. வீட்டு லோனுக்கு தவணை கட்டி நாலு மாசமாச்சி. காரை விக்க முடிவு பண்ணிட்டேன். அந்தக் காசை வச்சி கொஞ்ச நாள் ஓட்டலாம். வீட்டை என்ன செய்யறதுன்னு தெரியலை. பசங்க ரெண்டு பேரும் படிக்கிறாங்க. இந்த வருசம் முடிய இன்னும் அஞ்சாறு மாசம் இருக்கு. அது வரைக்கு முயற்சி செய்து பார்த்துட்டு வீட்டையும் வித்துட்டு ஊருக்கே போகலாமான்னு ஒரு யோசனை இருக்கு. பாக்கி இருக்கிற லோன் போக ஏழெட்டு லட்சம் கிடைக்கலாம். வர்ற காசுல ஊர்ல போயி ஏதாவது சின்னதா பிசினஸ் செய்யலாம்னு நினைக்கிறேன்…”
”அவ்வளவு தானா?”
”……..” நீண்ட மௌனம் ஒன்றே பதிலாக வந்தது.
“ம்?” உறைந்து போயிருந்தவரை லேசாக உசுப்பினேன்.
“ஆங், அவ்வளவு தாண்டா. திரும்பி நின்னு யோசிச்சிப் பாத்தா ஈரோட்லேர்ந்து இருபத்தி மூணு வயசுல எப்படி கிளம்பினேனோ அப்படியே திரும்பிப் போறேன். என்ன சாதிச்சோம்னு நெனைச்சி நெனைச்சி பார்த்தாலும் ஒன்னும் தோன மாட்டேங்குது. ரொம்ப யோசிச்சா டிப்ரஷன்ல விழுந்திடுவேனோன்னு பயமா இருக்கு… சரி, உன் நெம்பர் குடு… பின்னாடி பார்க்கலாம்”
பாலாஜி அண்ணா சென்று விட்டார். ஐ.டி வாழ்க்கையின் நிலையாமை பணிப் பாதுகாப்பின்மை குறித்தெல்லாம் முன்பே தெரிந்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை செவுளில் அறைந்து உணர்த்திச் சென்றார் பாலாஜி. காலையில் துவங்கி மாலையில் முடிவுரும் பட்டாம்பூச்சின் வாழ்க்கை போல் ஐ.டி துறையின் வாழ்க்கை ஓரிரு பத்தாண்டுகளிலேயே முடிவுக்கு வருவதை அங்கும் இங்கும் கேள்விப்பட்டிருந்தாலும் அணுக்கமான ஒருவரின் முடிவை முதன் முறையாக நேரில் காண்கிறேன்.
சரியாக அந்த சந்தர்பத்தில் கழிவறையில் பயன்படுத்திய பின் தூக்கியெறியப்படும் மலம் துடைக்கும் காகிதம் போல் அருவறுப்பாக உணர்ந்தேன். சொந்த வாழ்க்கையை மறந்து பிறந்து வளர்ந்த சமூகத்தை மறந்து சமூக கடமைகளை மறந்து எவனோ ஒரு அமெரிக்கனுக்கு உழைத்துத் தேய்ந்து இளமையைத் தொலைத்த பின் தூக்கியெறியப்படும் அவலம் எனக்குத் தொழில் சொல்லிக் கொடுத்த ஆசானுக்கு மட்டுமே விதிக்கப்பட்டதா என்ன? – யோசிக்கிறேன். நீங்களும் யோசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
– சுகுமாரன்.
நேரடியாக உணர முடியக் கூடிய கட்டுரை.
// அவ்வளவு தானா?
முட்டித் தள்ளி முந்தி ஓட முயலும் எலிப்பந்தயம். நடுவில் தூக்கி எறியப்படாமல் எல்லாம் சுபமாய் முடிந்தால் கூட, முடிவில் “அவ்வளவுதானா” என்ற கேள்வி எஞ்சி நிற்குமோ என ஆயாசம் வருகிறது. மற்றவர், சமூகம் என்ற பெரிய வார்த்தைகளை கூட விடுங்கள். நமக்கு இனியதையாவது செய்து கொண்டோமா என்ற கேள்வி நிற்கக் கூடும். பழங்கால, தற்கால உரைகளை ஒப்பிட்டு நாலாயிரத்தை நிதானமாய் படிக்க ஆசை. பந்தயத்தில் அதற்கெல்லாம் இடம் இல்லை. மற்ற எலிகள் நிற்காமல் ஓடுகின்றன, நாம் மட்டும் நின்று நிதானிக்க முடியாது.
மிகவும் நேர்மையாக திரு சுகுமாரன் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை இது.பன்னாட்டு கணினி நிருவனங்கள் use and through கொள்கைபடி மனித வளத்தை பயன்படுத்தினாலும் , நாமும்[s/w eng] அதிக அளவில் பணத்தை சேமித்து வைக்கவும் , சம்பாரிக்கும் பணத்தை சிக்கனாமாக செலவு செய்யவும் கற்று இருக்க வேண்டுமா இல்லையா ?நான் தனியார் கல்லூரியில் பணியாற்றி தற்போது எமது ஒரு வயது குழந்தையை பராமரிக்கும் நோக்கில் வேலையை விட்டு விலகியுள்ளேன். தனியார் கல்லூரியில் கொடுக்கப்படும் குறைந்த சம்பளம் பற்றி நான் கூற தேவை இல்லை என்று நினைக்கின்றேன். மாத சம்பளம் Rs 3000 த்தில் தொடங்கிய எனது கணினி ஆசிரியர் பணி இப்போது 12 ஆண்டுகளுக்கு பின் Rs 16,500 ல் முற்று பெற்று உள்ளது.முதல் சம்பளத்தில் Rs 300 [10%] சேமிக்க தொடங்கிய நான் எனது இருதி சம்பளத்தில் Rs 6,500 [39%] வரை சேமிக்க முயன்று உள்ளேன்.சென்னை புற நகர் பகுதியில் வாழும் நான் போடும் பட்ஜெட்[ three person-husband,wife ,child ] மிகவும் எளிமையானது
Rent : 4,000
EB : 500
Internet 500
rise 500
மளிகை 1200
பால் 600
காய்கறி 700
Seasonticket 350
Gas 500
restaurant 400
Nonveg 500
மெடிசன் 1000
டிரஸ் 1000
miscellaneous 1000
Total Rs 12,750
மீதி பணத்தை வருங்காலத்துக்கு சேமிக்க வேண்டியது தானே ?
கணவன் ,மனைவி இருவருமே LICயில் இன்சூரன்ஸ் செய்து உள்ளோம்.
//கணவன் ,மனைவி இருவருமே LICயில் இன்சூரன்ஸ் செய்து உள்ளோம்//
Only Term insurance are real insurance. Other endowment polcies are neither insurance nor investment.
And insurance is required only for the bread winner if your spouse is not working , you have to reconsider .
Hope you have made a right choice.
I am humbled by your life style.
கணணி துறை என்று மட்டுமல்ல. சந்தையியலில் (Marketing) அப்படிதான் இருக்கிறது வாழ்க்கை. சந்தை வீழ்ச்சியடைந்திருக்கு இந்த காலக்கட்டத்தில் இந்த நிறுவனங்கள் மாறும் வேலை நடந்து கொண்டிருக்கும். புதிய இடம் தாக்குப் பிடிப்பது 5 அ 6 மாதங்கள் மீண்டும் வேறு இடம். 50 கடந்துவிட்டால் அதோகதிதான்.
வீடு கார் என்று மற்றவர்கள் செய்வதையை பார்த்து தானும் செய்து மாட்டி கொள்கிறார்கள் . பத்து வருடத்தில் பிரமிடின் உச்சியை தொட்டவரால் குறைந்த பட்சம் ஒரு நாற்பது லட்சம் சேமித்து இருக்க முடியாதா ? இன்றைக்கு நாற்பது லட்சத்தில் பத்து சதவீட்தம் அதாவது நான்கு லட்சம் வட்டி மட்டும் வரும் . அடுத்த மாதத்தை பற்றி கவலை இல்லாமல் சற்றே பயம் இல்லாமல் தள்ளலாம் .
அவரை rich dad poor dad என்னும் நூலை படிக்க சொல்லுங்கள். வீடு கட்டி வாடகை விட்டு சம்பாதியுங்கள் என்கின்ற கருத்தை தவிர நூலின் கரு நன்றாக இருக்கும்
என்னுடைய நண்பர் இப்படி வேலை இழந்த பொது , சப்பானிய மொழியை கற்று கொண்டார். இப்போது சப்பானில் நல்ல பணியில் இருக்கிறார் .
ஆகவே நண்பரை இது போன்ற பந்தய எலிகளின் நேரம் ஒதுக்க முடியாத இடங்களில், தனது நேரத்தை ஒதுக்கி திறமையை பெருக்கலாம் . ஆறு மாதங்கள் வீணாக்கி விட்டார் . இப்போது ஆரம்பித்தாலும் பயன் உண்டு
// சொந்த வாழ்க்கையை மறந்து பிறந்து வளர்ந்த சமூகத்தை மறந்து சமூக கடமைகளை மறந்து எவனோ ஒரு அமெரிக்கனுக்கு உழைத்துத் தேய்ந்து இளமையைத் தொலைத்த பின் தூக்கியெறியப்படும் அவலம் எனக்குத் தொழில் சொல்லிக் கொடுத்த ஆசானுக்கு மட்டுமே விதிக்கப்பட்டதா என்ன? //
உலக உயரினம் அனைத்தும் அந்த அடிப்படையில் தான் படைக்கப்பட்டு இருகின்றன .
நான், எனது , எனது இன்பம் , எனது வெற்றி என்னும் அடிப்படையில் தான் அணைத்து மிருகங்களும் சிந்திகின்றன . அதனால் தான் முதலீட்டு தத்துவம் இயற்கையின் விதிப்படி இயங்குவது இயல்பானது .
அமெரிக்கன் வேலை கொடுக்கவில்லை என்றால் என்ன ஆகி இருக்கும் ? அவருடைய சாதியில் உள்ள பெரியவரை சார்ந்து, சாதி சார்ந்த சமூகத்தில் வேலை வாங்கி , அந்த நன்றி கடனுக்காக சாதியை தூக்கி பிடித்து கொண்டு பிழைப்புவாதம் செய்து கொண்டு இருக்கவேண்டியது தான் .
இன்று ஐடி துறையில் பணியாற்றும் ஏழை,நடுத்தரக் குடும்ப பின்னனியுள்ள இளைஞர்களுக்கு இந்தக் கட்டுரை ஒரு தெளிவான விழிதிறக்கும் (eye opener) கட்டுரை..
வாரம் முழுதும் உழைத்து சேர்க்கும் பணத்தை வார இறுதியில் வீணாக்கும் கலாச்சாரம் சேமிப்பைக் கரைப்பதோடு, சமூகத்தின் எதார்த்தங்களிலிருந்து விலக்கி ஒரு நிரந்தரமற்ற மாய உலக கனவில் ஆழ்த்துகிறது..
வேகமாக மாறிக்கொண்டே இருக்கும் தொழில் நுட்பங்கள் மேலே செல்ல வழியின்றி நிற்கும் பாலாஜி போன்றவர்களின் அனுபவ அறிவையும் கடந்த காலத்தின் தொழில்நுட்ப அறிவையும் செல்லாக் காசாக்குவதால் மீண்டும் தொடங்கிய இடத்திலேயே நடுத்தர வயதில் தூக்கி எறியப்படுகிறார்கள்.. இவர்களது அனுபவ அறிவை பயன்படுத்திக்கொள்ளக்கூடிய, லாப நோக்கற்ற கல்வி,அடிப்படைத் தொழில் நுட்ப அறிவளிக்கும் மக்கள் நலக் கட்டுமானங்கள் எதுவும் அப்போது மிஞ்சியிருப்பதுமில்லை..
நானே பயந்து போய் கிடக்கேன்… நீங்க வேற வெந்த புண்ணுல வெரல விட்டுக்கிட்டு…
விவசாயத்தில் இருந்து, ஜ.டி. துறை வரை எல்லாவற்றிலும் ஏற்ற தாழ்வு உண்டு… வினவு தன்னுடைய கற்பனை கதையை அவுத்துவிட்டு, ஏதோ உலக பொருளாதார மேதையை போல ஒரு கட்டுரையை எழுதிவிட்டதாக நினைக்கிறது, அதற்கு சில பன்னாடைகளும் பதில் எழுதுகின்றன…..
Vinavu is publishing the views only if they support their main ideology: bashing the brahmins, hindus, multi-national companies, capitalism and capitalists.
Vinavu supports: Labour movements, muslims and agitations against corruption and atrocities against weaker section.
Any views against this, even if they contain verifiable facts and figures are simply thrown into dustbin and not published. This is simply atrocious. Vinavu should note that efforts are taken, to collect and verify the data, by us before writing our views.
Coming to the matter in question, it is not mentioned how he conducted his life during his green period. How much did he save for the future? His good and bad habits? Did he not anticipate the ups and downs in IT field even after the Y2K incident. You cannot simply blame the industry or multi-national company for that matter.
Presently the society respects only those in the IT field, as it is remunerative. All along in the history of mankind, only those with strength (physical and financial) are in high position. It is human nature that people would take up a job offering good salary (IT job) and not a job (service to the poor etc) with lower salary. Because money is strength and in the present day society money only is respected. One fellow passenger in a train told that their group (people who goes for walking together) doesn’t give respect to those who don’t take OATS in their food. This is the cultural (degradation) change.
No one will give their daughter in marriage to an agriculturist rather than an employee (even if he is a scavenger) in an IT company. The values are set only by the society. We should learn to live with the society.
Marxism failed all over the world (large scale production of everything for the American companies are only in China). Because, they did not understand the ground realities. In communist countries atrocities and corruptions are done by high ranking officers and communist comrades. Since there are no media (other than the censored one by the communist government), what really happened will not come out to the public.
Marxism did not anticipate IT industry. Here the capital is only the brain. Bill Gates was not a millionaire to start his business.
You see the growth of assets (in their own names, spouses and binamis) of the communist MLAs and MPs who dedicate their lives for the welfare of the poor labour. Many trade union leaders settle a deal with the employer when there is a dispute between employer and employee.
This is the ground reality. Anything without considering the reality cannot survive.
“You see the growth of assets (in their own names, spouses and binamis) of the communist MLAs and MPs who dedicate their lives for the welfare of the poor labour. Many trade union leaders settle a deal with the employer when there is a dispute between employer and employee”-
ONE CAN PRACTICE COMMUNISM ONLY IN COMUNIST COUNTRY,in other countries the communists can only PREACH the communism.
இந்த மு. சமூகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடு ஓடு என ஓடி இப்பொழுது சரிந்து, சொந்த ஊருக்கு பொட்டியை கட்டும் பாலாஜி அண்ணன் பிரச்சனையா என்ன?
பாலாஜி அண்ணனின் வாழ்க்கை குறித்த பரிசீலனை என்பது, முதலாளித்துவ சமூகத்தின் பரிசீலனையாக பார்க்கவேண்டும். சம்பாதி. சம்பாதிப்பதற்கும் மேல் கடன் வாங்கு. வீட்டை கட்டு. கார் வாங்கு. பொருட்களை வாங்கி குவி! என மு.உலகம் நிதானிக்க விடாமல் ஓடு ஓடு என விரட்டிக்கொண்டே இருக்கிறது!
அதைப் பரிசீலித்து, மாற்று சமூகம் குறித்த பரிசீலனை செய்வது தான் சரி! அதைவிட்டு விட்டு, சிக்கனமாக வாழ கற்றுக்கொள்ளவேண்டும் என்பதெல்லாம் தனிநபர் தீர்வு. அது பயன்படாது!
ஒரு அமெரிக்கனுக்கு உழைத்துத் தேய்ந்து இளமையைத் தொலைத்த பின் தூக்கியெறியப்படும் –
ONE CAN NOT PRESERVE THE YOUTH FOR EVER.HE EARNED 230 TIMES MORE THAN AVERAGE INDIAN IN HIS 23 YEARS.ONLY PROBLEM WITH BALAJI is that HE EARNED BUT NOT PROPERLY SAVED RATHER HE HELPED HIS NEAR AND DEAR WITH HIS EARNINGS.
கொஞ்சம் மெல்ல யோசியுங்கள் குருத்து அய்யா ! HCL நிறுவனத்தில் வேலை செய்யும் என் நண்பன் US க்கு சென்ற போது அவனுக்கு HCL நிறுவனம் கொடுக்கும் daily exp amount[சம்பளம் தனி] அய் 1 வருடம் சேமித்தவன் சென்னை திரும்பியவுடன் அவனின் daily exp amount சேமிப்பு மூலம் apparent வாங்குவதற்க்கு தேவையான பணத்தில் 35% கொடுக்க முடிந்தது. எளிமையான வாழ்வு என்பதும்,சேமிப்பு என்பதும் எச் சமுகத்துக்கும் தேவையான ஓன்று தானே ? இந்தியாவில் சோசியலிச சமுகம் கட்டமைக்கபடும் போதும் குடி ,சிகரெட் ,போன்ற அவசியமற்ற வாய்ப்புகள் இல்லாமலா போய்விட போகின்றது ? கட்டுக்குள் வேண்டுமானால் இவை [குடி ,சிகரெட்] இருக்குமே தவிர முழுவதும் தடை செய்ய படாது அல்லவா ? நான் அறிந்தவரையில் முன்னாள் USSR மற்றும் இன்னால் Republic of China (ROC) ஆகியவற்றில் இவை இரண்டுமே முழுமையாக தடை செய்ய படவில்லை. அப்படி இருக்கும் போது தனிமனிதன் தானே தன்னை இந்த போதை பழக்கங்களில் இருந்து காத்துக்கொள்ள வேண்டும் ? அதன் மூலம் தானே உடல் ,மன நலத்தையும் , சேமிப்பையும் வலுபடுத்திக்கொள்ள முடியும் ? சோசியலிச வடகொரிய அதிபர் 24 மணிநேரமும் மது போதையில் இருக்கும் விடயம் தெரியாத உங்களுக்கு ?
குருத்து,
சேமிப்பு என்பது பொதுநல பொதுவுடமைச் சமூகத்தில் தேவையுமில்லை. சாத்தியமுமில்லை.
ஆனால் சிக்கனம் என்பது தனிநபருக்கும் பொருந்தும், பொதுவுடமைச்சமூகத்துக்கும் பொருந்தும்.
சிக்கனம் என்று தனி நபர் பேசும் போது அது சேமிப்பாகத்தானே மாறும் ? எனவே எச் சமுத்துக்கும் [captilist அண்ட் socialist ] சேமிப்பு என்பது தவிர்க்க இயலாதது. [மார்சிய அடிபடையில் மேலும் உபரி பற்றி பேசுவோம் ]
I am surviving for last 15yrs…we need to change our CV every time as per every requirement some time.. also during middle age we need to move to product companies especially for ppl who choose technical ladder.. ppl in technical lader cant survive in consulting/service companies due to heavy stupid politics.. end of the day be smart to save something..
you work for 10 years-15 years . then you could be out.
i am trying to understand why no reaction.
either all of these people are from fairly comfortable background, with family having property.
or they are able to other jobs..for lesser salary but still able to manage life..
my question is why is no one thinking of questioning management and collectivising.
is it because they feel collectivising is hopeless.
REAL SOLUTION IS COLLECTIVE BARGAINING FOR BASIC HUMAN RIGHTS.
LOOK AT HOUSE MAIDS, they have COLLECTIVISIED in Bangalore.
They have Sunday holiday.
IT employees working sometimes from home on Sunday without extra pay.
i think the culprit is a strong middle class mindset.
if they actively write about their problems …
very soon they can get some rights..
first they should think they deserve a life after working for 15 years.
maybe in the short run things may look hopeless within company as eveybody is individual
they should join young groups common to all companies in large numbers and collectivise and write and voice..
hoewever as this is a voiciferous section they will win rights easily than the others who are trampled
Here is the truth. One cannot outsource the maid jobs to some other country but software jobs can be. Wise people know it.
this is funny. you have nothing to loose but your job. and anyways you are loosing it. so whats the big deal if your job moves to another country raman. whats the wisdom here!!
Loosing a job is painful for individual but he may get a job in similar business
But if there are no corporates to provide job in your country , then what?
You spoil the job opportunity for yourself,other employees and millions of people who are getting educated in that field.