Monday, February 17, 2025
முகப்புவாழ்க்கைஅனுபவம்அப்பார்ட்மெண்ட் பிராமணர்கள் – ஒரு கடிதம்

அப்பார்ட்மெண்ட் பிராமணர்கள் – ஒரு கடிதம்

-

blorebrahmincolonyஅன்பு வினவு நண்பர்களுக்கு,

வணக்கம்.

என்னை நினைவிருக்கிறதா? ஐந்தாண்டுகளுக்கு முன்பு நானும் ஒரு கட்டுரை அனுப்பினேன். அதில் மகளிர் தினம் பற்றி என் அனுபவங்கள் எழுதியிருந்தேன். தனிப்பட்ட விவரங்களை வெளியிடாமல் அதை மாற்றி எழுத கேட்டிருந்தீர்கள். அப்போது அதெல்லாம் எனக்குத் தெரியவில்லை. பிறகு நிறைய கற்றுக் கொண்டேன்.

இந்த ஆண்டுகளில் பெண் என்ற வரம்பைத் தாண்டி சுயமா வாழவும், போராடவும் நிறைய கற்றுக் கொண்டேன். கிடைக்கும் நேரத்தில் இணையத்தில் இருப்பேன், உங்க கட்டுரைங்களும் படிப்பேன்.

சமீபத்தில் பூர்வாசிரம பிராமணர் கடிதம் படித்தேன். அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் கலந்து ரசித்தேன். இந்த மாதிரி சமூகத்தில் ஒரு நண்பர் மாறி வந்து கலப்பு திருமணமெல்லாம் செய்ஞ்சாருன்னா நம்பவே முடியலை, வாழ்த்துக்கள்! அத்தோடு உங்கள மாதிரி தீவிர கொள்கைக்காரர்களோடு அவர் இணைந்திருப்பது இன்னும் மகிழ்ச்சி. சரி அதிர்ச்சி எதற்கு என்று கேக்குறீங்களா?
அதுக்குத்தான் இந்த கடிதம்.

கணவருக்கு சிறுசேரி ஐ.டி நிறுவனமொன்றில் வேலை. எனக்கு தி.நகர் தனியார் பள்ளியில் ஆசிரியர் வேலை. அப்போது எங்கள் குழந்தைக்கு வயது நான்கு. அடுத்த வருடம் அவனை ஒரு பள்ளியில் சேர்க்கணும். இதெல்லாம் யோசித்து ஒரு ஏரியாவில் வாடகை வீடு பார்த்து குடி போனோம். இதெல்லாம் மூணு வருடத்துக்கு முன்பு உள்ள நிலை.

அது பார்க்க ரொம்ப அழகான அப்பார்ட்மெண்ட். சிங்கிள் பெட் ரூம் என்றாலும் வெளியே டு வீலர் பார்க்கிங், குழந்தைகள் விளையாட வசதி, காற்றோட்டமான குடியிருப்பு, எங்க பட்ஜெட்டுக்கு ஏத்த வாடகைன்னு எல்லாம் பொருந்தி வந்தது.

எங்களுக்கு பூர்வீகம் தென்மாவட்டம். அங்க இருக்கும் மக்கள் மாதிரி அன்னியோன்யமாய் இல்லாட்டாலும் இங்கேயும் ஓரளவுக்கு நல்லாத்தான் பழகுவாங்கன்னு எதிர்பார்த்தேன். ஆரம்பத்தில் அப்பார்ட்மெண்ட் பெண்கள் சினேகமாக சிரிச்சாங்க. என்ன ஏதுன்னு பொதுவா பேசிக்குவாங்க. சரி நல்லாத்தான் போகுதுன்னு நினைச்சேன். ஆனா அது கொஞ்ச நாளைக்குத்தான்.

எங்கள் அப்பார்ட்மெண்டில் 30 வீடுங்க, மூன்று ஃபுளோரில் இருக்கு. தரை தளத்துல முகப்பு கேட்டுக்கு உள்புறம் அழகான குரோட்டன்ஸ் செடியெல்லாம் நிறைய வச்சருந்தாங்க. ஒரு நாள் நான் ஸ்கூலுக்கு கிளம்பிய போது எதிர்த்த வீட்டு அம்மா நிறுத்தி கேட்டார்.

brahmin“பூச்செடி நன்னா வளரணுமுன்னு, மீன் கழுவுன தண்ணியெல்லாம் ஊத்றேளாமே”!?”

எனக்கு தூக்கி வாரிப் போட்டது. மீன் கழுவன தண்ணியை சிங்குல ஊத்தாம பூச்செடிக்கு ஏன் ஊத்தப்போறேன்?

“யார் சொன்னாங்க மேடம்” திருப்பிக் கேட்டேன்.

பக்கத்து வூட்டு மாமிதான்ன்னு அந்த அம்மா சொன்னாங்க. சரி அவுங்ககிட்ட கேக்குறேன்னு எரிச்சலுடன் சட்டுனு திரும்பினேன். உடனே அந்த அம்மா இல்லையில்லை அப்படி சட்டுபுட்டுன்னு கேக்காதீங்கோ, சும்மா இட்டுக்கட்டி சொன்னதாக்கும், மீன் தண்ணியெல்லாம் அங்க ஊத்தக் கூடாதுன்னு சொல்ல வந்தேன்னு சொன்னாங்க.

இப்படியெல்லாமா மனிதர்கள் இருப்பாங்க! இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னே அப்ப புரியல. கொஞ்ச நாட்களல்ல நான் நிறைய புரிஞ்சுகிட்டேன்.

அங்க இருக்குறவங்க யார், என்ன சாதின்னு ஆரம்பத்துல தெரியாது. அது தேவையுமில்லை. என்னென்ன வெலை பார்க்குறாங்கன்னு மட்டும்தான் தெரியும். பக்கத்து வீட்டு குழந்தைகள் என் குழந்தையோட விளையாட வீட்டுக்கு வருவாங்க. ஆனா அந்த அப்பார்ட்மெண்டுல என்னமோ கண்ணுக்குத் தெரியாத பிரிவினை, என்னண்ணு சொல்லத் தெரியாத ஒரு அலர்ஜி இதையெல்லாம் நானே கொஞ்ச நாள்ல உணர்ந்தேன். கணவருக்கும் இதே மாதிரி சில அனுபவங்கள்.

அப்பார்ட்மெண்டுல 20 வீடுகள்ள பிராமிண்ஸ் இருந்தாங்க. ஐஞ்சு வீடு நான்-பிராமின்ஸ், மூன்று வீடுகள்ள கத்தோலிக்ஸ், இரண்டுல நார்த் இன்டியன்ஸ் இருந்தாங்க. எங்க வீட்டுல ஜீசஸ், மாதா படங்கள பார்த்துட்டு ஆரம்பத்திலேயே நாங்க இன்னாருன்னு அவங்க கண்டு பிடிச்சிருப்பாங்க போல. மதம் மட்டுமில்ல, சாதியும் அவுங்களுக்கு முக்கியமில்லையா?

தூத்துக்குடியா, தூத்துக்குடியில எங்க-ன்னு ஆரம்பிச்சு தெரு, டோர் நம்பர் வரைக்கும் போவாங்க. இதுதான் நோக்கமான்னு தெரிஞ்சாச்சு, பிறகு எதுக்கு தயக்கம்? நான் மீனவர் சமுதாயம், கணவர் நாடார்னு ஒரே போடா போட்டுருவேன். இப்ப நடுத்தர வர்க்கமா மாறினாலும் ஒரு மீனவச்சிக்கு இருக்கும் சுயமரியாதை எங்கிட்ட நிறையவே இருக்குன்னு நினைக்கிறேன்.
அவங்களுக்கு கருவாட்டு சாதி பிடிக்காதுன்னாலும் எங்களோட மாறிப்போன வர்க்கம் காரணமா சகிச்சுக்கிட்டாங்க போல. இது மேலும் எனக்கு அறுவெறுப்பை உண்டாக்கிச்சு.

பிராமின்ஸ் வீடுகள்ள இருக்கும் குழந்தைங்க எங்க வீட்டுக்கு எப்பவாச்சும் வருவாங்க, சாக்லேட், பாக்கட் சிப்ஸ் கொடுத்தா சாப்பிடுவாங்க. பரவாயில்லயே நல்லாத்தானே பழகுறாங்கன்னு ஆரம்பத்துல நினைச்சேன். பிறகு பார்த்தா அவங்க பேக்டு ( உறை போட்ட) உணவு மட்டும்தான் சாப்பிடுவாங்க, வடை, பணியாரம்முனு இதர பதார்த்தங்கள கொடுத்தா நாசுக்கா தவிர்ப்பாங்க. ஒருநாள் ஏன் என்னென்னு கேட்டப்பிறகுதான் சொன்னாங்க. நம்ம கைபட்ட பதார்த்தம் அவங்களுக்கு தீட்டாம். அதே மாதிரி தண்ணியும் குடிக்க மாட்டாங்க. இதெல்லாம் அந்த குழந்தைங்க சரளமா செய்யுறதப் பாத்து எனக்கு இன்னும் அதிர்ச்சி. எப்படியெல்லாம் டிரெயினிங் கொடுத்துருக்காங்க!

மாசத்துக்கு ரெண்டு நாளாவாது முழு அப்பார்ட்மெண்டையும் கழுவி ஊத்துவாங்க. ஏதோ பிரதோஷம், இன்னும் வாய்க்குள் நுழையாத சடங்கு சாஸ்திரமுன்னு சொல்லி தண்ணி இல்லாத ஊருல வெள்ளமா ஊத்துவாங்க. காலைல ஸ்கூலுக்கு கிளம்பும் போது இவங்க ஊத்துண தண்ணியல விழாம கவனமாக பாத்துப் போகணும். மற்றவர்களுக்கு இப்படி இடையூறு செய்யுறமேன்னு கொஞ்சம் கூட நினைக்கமாட்டாங்க.

rentஇவங்க வீட்டுல வேலை செய்யுற பெண்கள் 50, அறுபது வயசானாலும் ஏன்டி, போடின்னுதான் கூப்பிடுவாங்க. கொடுமை என்னண்ணா அவங்க பசங்களும் அப்படித்தான் கூப்பிடுவாங்க. காலையில் வேலைக்கு வந்தா அப்பார்ட்மெண்ட் வெளி கேட்டுக்கு பக்கத்துல செருப்பை கழட்டிவிட்டுத்தான் இந்த பெண்கள் வரணும். இவங்க சமையலறையில அந்த பெண்கள் நுழைய கூடாது. பாத்திரங்களையெல்லாம் குளியலறையில்தான் கழுவணும். பழையது, மிஞ்சனதெல்லாம் யூஸ் அண்ட் த்ரோ டப்பாக்களில்தான் கொடுப்பாங்க.

அவங்க குழந்தைங்க எங்க வீட்டுக்கு வர மாதிரி (அதுலயும் நிறைய கட்டுப்பாடு) என் குழந்தை அவங்க வீட்டுக்கு போக மாட்டான். இது குழந்தை தன்மையிலேயே அவனே தெரிஞ்சிக்கிட்ட விசயம்கிறதால பல நாட்கள் நான் உடைஞ்சு போயிருக்கேன். குழந்தைங்கள விடுங்க, நாங்களே ஒரு ஆத்திர அவசரத்துக்கு அவங்க வீட்டுக்கு போயி மணிய அழுத்துனா வீட்டு ஜனங்க அத்தன பேரும் வாசலை மறிச்சுக்கிட்டு என்ன, என்னன்னு கேப்பாங்க. எதா இருந்தாலும் வாசலிலேயே பேசி முடிச்சிக்கலாம், வீட்டுக்குள்ள என்ன வேலைங்குற மாதிரி இருக்கும்.

வீட்டுக்கு யார் வந்தாலும் வாங்க, உக்காருங்கன்னு சொல்லி பழகுனவங்களுக்கு இது ரொம்ப நெருடலா இருக்கும். ஒரு முறை நான் சொன்ன நான் – பிராமின் குடும்பத்துல ஒருத்தங்க பொங்கலுக்கு அப்பார்ட்மெண்ட் பார்க்கிங் ஏரியாவுல ஒரு ஓரத்துல கோலமெல்லாம் போட்டு, அடுப்பு மூட்டி பொங்கல் சமைச்சாங்க. பொங்கலோ பொங்கல்னு குழந்தைகள் கும்மாளமும் வேடிக்கையுமா இருந்தது. பிறகு ஆளுக்கொரு இலையில பொங்கல கொடுத்து சாப்பிடச் சொன்னாங்க. பிராமண குழந்தைங்க அவங்களுக்கு கொடுக்கப்பட்ட இன்ஸட்ரக்சனை மறந்துட்டாங்களான்னு தெரியல, சாப்பிட்டாங்க. என்ன இருந்தாலும் குழந்தைங்க இல்லையா!

பிறகென்ன நான்கைந்து வீடுகள்ள கதவ சாத்திட்டு அடி உதை, எதுக்கு சாப்பிட்டேன்னு! பொங்கல் போட்ட அந்த பெண் அவ எனக்கும் தோழிதான், இத கேட்டு அவங்கிட்ட போய் சண்டை போட்டா! நீங்க குழந்தைங்கள ஆச்சாரமா வளர்க்கிறதா இருந்தா வீட்டுக்குள்ள பூட்டி வச்சு வளருங்க, எங்க்கிட்ட வந்தா இப்படித்தான் பொங்கல கொடுப்போம், அதை மறைச்ச வைச்சு சாப்பிடுற பழக்கம் எங்களுக்கு இல்லேன்னா.

கத்தோலிக்ஸ் பொதுவா பொட்டு, பூவெல்லாம் வைப்பாங்க. எனக்கு அது விருப்பமில்லேன்னாலும் எப்பவாச்சும் வைப்பேன். அப்ப முறைச்சு பாப்பாங்க. ஒரு நாள் தலை குளிச்சிட்டு சாம்பிராணி போட்டேன். உடனே வெளிய வந்து நீங்களெல்லாம் சாம்பிராணி போடுவேளான்னு கேட்டாங்க. வந்த புதிசில் என் கணவர் வேட்டியுடன் சென்ற போது நீங்களெல்லாம் வேட்டி கட்டுவேளான்னு கேட்டாங்க. அவரோ நாங்க மட்டும்தான் வேட்டி கட்டி பழக்கமுணு சொன்னாரு.

இது மாதிரி சின்ன விசயங்கள் நிறைய இருக்கு. எதுக்கு சொல்றேன்னா இதெல்லாம் அவங்களுக்கு பாத்தியப்பட்ட சமாச்சாரங்கள்னு ஒரு நினைப்பு. குங்கும பொட்டு வைக்காதது, வகிடெடுத்து பொட்டு வைக்காதது, மஞ்சள் பூசி குளிக்காதது இதெல்லாம் அவங்க கருத்துப்படி ஒழுக்கமில்லாத பெண்களோட குணம்.

அந்த பிராமின் வீடுகள்ள ஒருத்தரு ஏதோ சில கோவில்கள்ல ஐயரா இருக்காரம். அவரு செல்போன், பைக்குனு அல்ட்ரா மாடர்னா இருந்தாலும் வீட்டு பெண்கள் பீரியட்ஸ்னா அபார்ட்மென்ட் தரை தளத்துல ஒரு சேரைப் போட்டு உக்காருவாங்க. ஒரு பெண்ணா எனக்கு அது பயங்கர கூச்சமாவும், வெறுப்பாவும் இருக்கும். மூணு வேளையும் ஓட்டல் சாப்பாடு வாங்கி கொடுப்பாங்க. வீட்டுல எதாவது துணிமணி கேட்டாங்கன்னா கொடியில இருந்து கம்பு வைச்சு எடுத்துக் கொடுப்பாங்க. இதெல்லாம் 21-ம் நூற்றாண்டுல சென்னையில ஒரு நவீன குடியிருப்புல நடக்குது!

kanchiபிராமின் வீட்டு பசங்க எல்லாம் சிபிஎஸ்இ பள்ளிக்கூடத்துலதான் படிக்கிறாங்க. என்னோட பையனை ஸ்டேட் போர்டு பள்ளிக்கூடத்துல அதுவும் சாதாரண மக்கள் படிக்கும் பள்ளின்னு கேட்டு தெரிஞ்சிகிட்டு நாசுக்கா ஆனா ரொம்ப கீழா பேசுவாங்க. அங்க படிக்கிற பிள்ளைங்களெல்லாம் மக்காச்சே, சிபிஎஸ்இ இல்லேன்னா பியூச்சர் பாழாச்சே, மத்த படிப்பெல்லாம் வேஸ்ட்டாச்சேன்னு இதுதான் அல்டிமேட் உண்மை போல பேசுவாங்க. அதே மாதிரி வெளிய போனா உடுப்பி, கிராண்ட் ஸ்வீட்ஸ், கிருஷ்ணா ஸ்வீட்ஸ்ன்னு ரொம்ப ஆச்சாரமான சைவக் கடையா பாத்துத்தான் சாப்பிடுவாங்க!

இதன் மறுபுறமும் உண்டு. தள்ளு வண்டியில் வரும் கடைக்காரர்களிடம் இவர்கள் பேரம் பேசும் சித்ரவதைய தனியா சொல்லணும். பத்து ரூபாய்க்கு ஐந்து விதமான காய் வாங்கி அதில் ஐம்பது காசு மிச்சம் பிடிக்க பிளான் பண்ணுவாங்க. காய்க்காரரிடம் வத்தலும், தொத்தலுமாய் இருக்கே, என்னா இவளோ ரேட்டு என்று ஆரம்பித்து நாலணா, எட்டணாவுக்க்கு உலக அரசியலே பேசுவாங்க. மற்றவர்களிடம் சாதாரணமாக பேசும் அந்த வியாபாரிகள் இவர்களை மட்டும் ஜன்ம எதிரி போல நடத்துவாங்க. ஆனால் அவர்களுக்கிடையே தினமும் வியாபாரம் நடந்துதான் வருகிறது.

எங்கள் அப்பார்ட்மெண்ட் பிராமணர்கள் மின்வாரியம், தலைமைச் செயலகம், இன்சூரன்சுன்னு பல அரசு, தனியார் துறைகளில் நல்ல சம்பளத்துடன் வாழ்றவங்கதான். ஆனா பாத்தீங்கன்னா ரேசன் பொருட்கள் ஒன்று விடாமல் வாங்கி வருவாங்க. அதில் பொங்கல் இலவச வேட்டி, சேலை, மளிகை பொருட்கள் கூட அடக்கம். நாங்களெல்லாம் ரேசன் கடைகளில்தான் கால்வயிற்று கஞ்சியுடன் வளர்ந்து ஆளானவங்கதான். ஆனா இன்னைக்கு ஒரு நடுத்தர வர்க்க வாழ்வு கிடைத்ததும், வறுமைக் கோடுக்கு கீழே இருக்கும் மக்களின் பங்கை நாம எடுக்க கூடாதுங்கிறதெல்லாம் யோசிக்காமலே செய்கிறோம். அவங்களோ எந்த குற்ற உணர்வும் அடையறதில்லை.

இவங்களோட ஆச்சார அனுஷ்டாங்களாவது உண்மையான்னு பார்த்தால் அது இன்னும் போலியா இருக்கும். ஒரு வீட்டில் கையில் ஏதோ ஜபமாலை வைத்துக் கொண்டு எதிரில் குட்டி ஹோமம் மாதிரி ஒன்றில் (நெருப்பு கிடையாது) ஏதோ எடுத்து போட்டு கொண்டிருப்பார் ஒருவர். எதிரில் ஷேர் மார்கெட் சானல் ஓடிக் கொண்டிருக்கும். அதுல ஷேர் விலைகளை பாத்துகிட்டு இங்கே மந்திரம் ஓதிகிட்டு………எப்படி இது?

எங்களைப் போன்ற பின்தங்கிய சமூகத்தின் முதல் தலைமுறை அறியாத பங்கு மார்கெட்டெல்லாம் அவர்களுக்கு அத்துப்பிடி. இதர வருமானங்களை இதற்கென்றே ஒதுக்கி பணம் சேர்க்கிறார்கள். அதில் கோவில் பூசாரியாக இருக்கும் ஐயரும் உண்டு. பிராமண வீட்டு பெண்கள் பகலில் எல்லா சேனலிலும் சீரியல் பாப்பாங்க. கைகளில் இருக்கும் நோட்டுக்களில் ராம மந்திரமோ ஏதோ ஒன்றோ எழுதிக் கொண்டே இருப்பார்கள். இதுல எது உண்மை?

Kalady Avani Avittamகோடைகாலத்தில் தண்ணீரில்லை, தினமும் ஒரு குடிநீர் லாரி நிரப்ப வேண்டும் என்று ஆயிரம் ரூபாய் சேர்த்து மெயின்டெனன்சுக்கு மொத்தம் 2000 ரூபாய் வாங்கினார்கள். என் கணவர் யதேச்சையாக வாச்மேனிடம் தினமும் லாரி வருகிறாதா என்று கேட்டு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் வருகிறது என்று அவர் சொன்னார். அவருக்கு பிறகு வந்த புது வாச்மேனோ குடிநீர் லாரி வாரத்துக்கு ஒரு தடவைதான் வருகிறது என்றார். ஆத்திரமடைந்த கணவர் அங்கேயே இவர்களை திட்டி விட்டு சென்றார். அடுத்த நாள் அந்த வீட்டு பெண்கள் என்னிடம் வந்து குழந்தைங்க ஸ்கூலுக்கு போகும் போது திட்ட வேண்டாமென கேட்டுக் கொண்டார்கள். இது என்னன்னு சொல்ல?

அந்த அப்பார்ட்மெண்ட் அசோசியேசன் தலைவர், செயலர், பொருளாளர் எல்லாம் இவங்கதான். அனேகமா பிரமாணரல்லாதோரிடம் மட்டும்தான் அவங்க அதிக பணம் வசூலிக்கிறாங்க. அதை வைத்து அப்பார்ட்மெண்ட் கிளீனிங் இதர செலவு என்று அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்களை இலவசமாக வேலை செய்ய வைக்கிறாங்க. இந்த டெக்னிக்கெல்லாம் எங்கேயும் பாக்கவே முடியாது.

இப்போது என் குழந்தை இந்த சூழலில் ஒன்ற முடியாமல் தனியா தவிக்கிறான். அவனோட உலகில் இது ஒரு பொதுவிதி போல புரிந்து கொள்ளப்படுது. பிராமண வீட்டு குழந்தைகள் மற்ற குழந்தைகள் போல ஏதாவது கெட்ட வார்த்தை பேசினாலும் அதில் பெரிய வித்தியாசம் இருக்கு. மற்றவர்கள் பேசுவது பிடிவாதம், அடம், சேட்டை என்று மட்டும் போகும். இவர்களோ தங்களது ஏசுதலில் ஒரு போலிஸ்காரரது தோரணையோடு அதிகாரமாக திட்டுவாங்க. அதாவது மற்ற குழந்தைகளெல்லாம் இவர்களை விட கீழே என்பதா அந்த தொனி இருக்கும்.

முக்கியமான ஒன்று உண்டு. இந்த குடியிருப்பில் பிராமண உரிமையாளர்கள் வீடு விற்றாலோ, வாடகைக்கு விட்டாலோ அது பிராமணர்களுக்கு மட்டும்தான். ஏழெட்டு பிராமணரல்லாதோருக்கு சொந்தமான வீடுகளில் மட்டும் எங்களைப் போன்றோரை குடி வைக்கிறாங்க.

உங்கள் கட்டுரையில் கிழக்கு புத்தக பத்ரி, எழுத்தாளர் ஜெயமோகன் கட்டுரைகளை சேர்த்திருந்தீர்கள். அதையும் படித்தேன். என்ன தோணுதுன்னா இவங்களெல்லாம் எங்கேயாச்சும் ஒரு பிராமண குடும்பத்தையாவது நேரில் பார்த்தோ இல்லை பழகியோ பாத்திருப்பாங்களோன்னு சந்தேகமா இருக்கு.

எங்க அப்பார்ட்மெண்ட விடுங்க. கணவர் வேலைபார்க்கும் சிறுசேரி ஐடி கம்பெனிய எடுத்துக்கங்க. இங்க மேனேஜர் லெவலில் இருக்கிறவங்கள்ல 90 சதவீதம் பிராமணருங்கதான். இதெல்லாம் எப்படி மத்தவங்களுக்கு தெரியும்?

ஆவணி அவிட்டம்முனு ஒரு நாளில்தான் பிராமணர்கள் பூணூல் மாத்துறாங்களாம். அதுக்கு அவங்க அத்தனை பேரும் விடுமுறை எடுப்பாங்களாம். அப்படி எடுக்கும் போது உங்களுக்கும் அவிட்டமான்னு சக பிராமண மனிதர்களை அடையாளம் கண்டு கொள்றாங்க. போலவே மத்த டெக்கிசுக்கும் நம்ம ஆபிசுல, டீம்ல யாரு பிராமின், நான் பிராமின்கிறது தெரிஞ்சு போகும்.

இப்படி சொல்லலாம்ணு தோணுது. பிராமணர்கள் மத்த சாதிக்காரங்கிட்ட என்ன சாதின்னு கேட்டு தெரிஞ்சுக்குவாங்க, பிராமணங்க மட்டும் என்ன சாதின்னு அவங்களே சொல்லுவாங்க.

கணவரு ஆபிசில் ஒரு பிரமாண பெண் மேனேஜர் ஆன்சைட்டுக்கு போன கணவருடன் சேர அமெரிக்கா போறாங்க. அங்க சைவ உணவு சரவண பவன் எங்க இருக்கமுணு பாத்து வீடு பார்க்கிறாங்க. அதிலயும் கருப்பர்கள் இல்லாத வெள்ளையினத்தவர் மட்டும் வாழும் குடியிருப்பா பாத்து போறாங்க. இதுக்காக அவங்க டீமே ஒரு நாள் இணையத்துல கூகிள்ள தேடிப் பாத்தாங்களாம்.

பிரதமரா மோடி ஜெயிச்சதோ, முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைச்சதோ இந்த ஐ.டி துறை பிராமணர்கள் பகிரங்கமாக ஆபிசுல கூடி கொண்டாடியிருக்காங்க. என் கணவர மாதிரி ஆளுங்களெல்லாம் வினவு கட்டுரைகளை கூட திருட்டுத்தனமா படிக்க வேண்டிய நிலையை இதோடு ஒப்பிட்டு பார்க்கிறேன்.

பிறகு ஆபிசில இருக்கும் பிராமணர்களோட பாடி லேங்குவேஜ், கம்யூனிகேசன், அப்ரைசில் ரேட்டிங் எல்லாமே ரொம்ப நுட்பமா அவங்களோட குணத்தை காட்டுற மாதிரி இருக்கும். அதையெல்லாம் சொல்லி புரிய வைக்கிறது ரொம்ப சிரமம். இதனால எல்லா பிராமணருங்களும் இப்படித்தான்னு சொல்லலை. ஆனா அவங்க கண்டிப்பா விதி விலக்காத்தான் இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

DSC_0055பிரமாணரல்லாதோருகிட்ட சாதி உணர்வு நிச்சயமா இருக்கு. இல்லேங்கல. எங்க அப்பார்ட்மென்டிலேயே அவங்க கூட நான் எஸ்சியான்னு கண்டு பிடிக்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க. மீனவர்னு தெரிஞ்சப்பிறகு பெரிய பாதிப்பில்லேன்னு விட்டுட்டாங்க போல. ஆனா அவங்கிட்ட இருக்குற சாதி உணர்வு ரொம்ப வெளிப்படையானது, கொஞ்சம் வெள்ளேந்தியாவும் இருக்கும். அதாவது கொஞ்சம் பேசி கூட மாத்த முடியும். ஆனா பிராமின்ஸ்கிட்ட இருக்கும் சாதி உணர்வுங்கிறது ஒரு ஆடிட்டர் பேலன்ஸ் ஷீட் போட்டு பைனான்ஸ் நிலைமைய கண்டுபிடிக்கிற மாதிரி ரொம்ப ஆழமா இருக்கும்.

எங்க மாவட்டங்கள்ல் இருக்கும் அரிவாளத் தூக்குறவங்க ஒரு கணம்தான் மிருகமாக இருக்காங்க. இவங்களோ அரிவாளையும் தூக்குறதில்ல, ஆனா ஆயுசு பூராவும் ஏதோ ஒரு சாஃப்ட் வேரை வச்சு மத்தவங்களை துன்புறுத்துறாங்க. அது என்ன, எப்படின்னெல்லாம் என்னால விரிச்சு சொல்ல முடியல.

சரி, வினவு, ஒரு போராட்ட குணம் கொண்ட மீனவப் பெண்ணான நானே இப்ப ரொம்ப களைச்சு போயிட்டேன். இனியும் இங்க குடியிருக்க மனமில்லை. கணவர் மீன் வாங்க செல்லும் போது நல்ல சாளை மீனா, சுறா மீனா, ஆந்திரா நண்டா பாத்து வாங்குங்கன்னு கத்திகிட்டே சொல்லுவேன். ஏம்மா அப்படி கத்தி அவங்கள வம்புக்கு இழுக்குறேன்னு அவர் கேட்பார். அதெல்லாம் அடிபட்ட ஒருத்தியோட சின்ன சின்ன எதிர்ப்புகள்தான். ஆனா அதெல்லாம் நம்ம மனக்காயங்கள குணமாக்காது.

வேற வழி? இப்ப வேறு வீடு பார்த்துட்டு போகப் போறோம். ஆனா ஒரு கண்டிசன் உண்டு. அந்த அப்பார்ட்மெண்டுல மெஜாரட்டியா பிராமின்ஸ் இருக்க கூடாது.

இவங்க கிட்ட நாடோ, அதிகாரமோ இருந்தா எப்படி இருக்குமுணு என் கணவர் அடிக்கடி சொல்வார்! அத நினைக்கவே பீதியா இருக்கு.

அன்புடன்
மாலா

குறிப்பு: இந்த கடிதம் வெளியிடத் தகுந்ததுன்னா வெளியிடுங்க. பிறகு இந்த கிறிஸ்மசுக்கு உங்களை விருந்துண்ண அழைக்கிறோம். உங்களுக்கு மதம் இல்லேன்னாலும் இன்னைக்கு சர்ச் மாறியிருந்தாலும் ஆரம்பத்துல ஏசுநாதரும் ஏழைகளுக்காக பாடுபட்டவருன்னு ஏத்துக்கிவீங்கள்ல? எனக்கு ஏசுநாதரும் வேணும், பெரியாரும் வேணும். என் குழந்தை படிக்கிற மிஷனரி பள்ளியில அவன் இந்த வருடம் மாறுவேடப் போட்டியில பெரியார் வேஷத்தோடதான் போனான். தாடி வச்சா தாகூரான்னு என் காது படவே அவங்க பேசுனாங்க. எனக்கு என்ன தோணுதுன்னா பெரியாரோ உங்கள மாதிரி கட்சிங்களோ இருந்தாதான் ஜீசஸ் பாதுகாப்பா இருப்பாருன்னு தோணுது. இந்த அப்பார்ட்மெண்டுல இதுதான் கடைசி கிறிஸ்மஸ்!

(ஊர், பெயர், அடையாளங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன – வினவு)

  1. நான் பணியாற்றிய கல்லூரியின் முதல்வர் ஒரு பிராமணர் ஒரு முறை எனது இந்து நண்பரோடு திருப்பதி சென்று வந்தேன் அங்க குடுத்த லட்டு பிரசாத்தை முதவவருக்கு குடுக்கும்படி எடுத்துக்கொண்டு போனேன் சார் திருப்பதி போயிட்டு வந்தேன் லட்டு பிரசாதம் எடுத்துக்குங்க சார்னு சொன்னேன் அவரு லட்ட எடுத்துக்காம உங்களையெல்லாம் கோவிலுக்குள்ளர விடுறாங்களானு கேட்டாறு எனக்கு சிரிக்கிறதா அழுகிறதானு தெரியல அப்புறம் பக்கத்துல இருந்த மற்றொரு ஆசிரியர் முதல்வரிடம் எல்லாரும் திருப்பதி போகலாம் அங்க எந்த தடையும் இல்லனார் இதுல இருந்து என்ன தெரியுதுனா வசைதியான பிராமனன் யாரும் திருப்பதிக்கோ பழனிக்கோ போறது அவ்வளவா இல்ல போல ,நம்ம ஆளுகதேன் கடன் வாங்கி கஸ்டப்பட்டு போறான் போல இருக்கு ,பிராமனர் அவர்கள் சொல்லுற கடவுள நம்பலயா இல்ல பிராமணன் கடவுளுக்கு மேலன்ற ஆணவமா அட லூசுகளா செத்துப்போனா அந்த மீன விட நாறிப்போற சாதாரண மனுசந்தான்டா நீங்க அனாலும் சாதி மதம் பாக்காம பழகுற நல்ல ப்ராமனர்களும் இருக்கத்தான் செய்யுறாங்க ,அப்பார்ட்மென்ட் பிராமணனை இந்த பணத்திமுருதான் அப்பிடி செய்ய வைக்குது பணத்திமுறால மந்தவங்களை மதிக்காத பிராமணர்களைப்போலவே நடந்து கொள்கிற சூத்திரர் என்ற மாற்று சாதியினரும் உள்ளனர் அவிங்க இவிங்கட்ட பழகினா 2 பேர் கொழுப்பும் தன்னால அடங்கிடும் இல்ல பத்து நாள் ப்ட்டினி போட்டு கேப்ப கூலும் கருவாட்டு குழம்பும் குடுத்து பாருங்க எப்பிடி சாப்பிடுறான்னு வயிறு காஞ்சாதான் இவனுகளுக்கு கொழுப்பு அடங்கும்

    • நம்ம ஆளுகதேன் கடன் வாங்கி கஸ்டப்பட்டு போறான் போல இருக்கு ,பிராமனர் அவர்கள் சொல்லுற கடவுள நம்பலயா?

      இது உண்மைதான்.நீங்களும் உங்க ஆளுகளை கோவிலுக்கு போகவேண்டாம் என்று கற்ப்பியுங்கள்.

      • அதென்ன உங்க ஆளுக நீங்க பிராமணரா, பிராமணர்- உங்க ஆளுக ஏன்யா எப்பதான் இந்த தூவேசத்த கைவிடுறதா உத்தேசம்

        • நீங்கள்தான் நம்ம ஆளூக,எஙக ஆளூக என்று உங்கள் பின்னூட்டதில் குறிப்பிட்டிருக்கிறீகள்.
          உண்மையான விவாதம்-
          நீங்கள் கடவுள்மறுப்பையும்
          கோவிலுக்கு செல்ல வேண்டாம் என்பதையும் கற்ப்பியுங்கள்

  2. கணவர் மீன் வாங்க செல்லும் போது நல்ல சாளை மீனா, சுறா மீனா, ஆந்திரா நண்டா பாத்து வாங்குங்கன்னு கத்திகிட்டே சொல்லுவேன். ஏம்மா அப்படி கத்தி அவங்கள வம்புக்கு இழுக்குறேன்னு அவர் கேட்பார். அதெல்லாம் அடிபட்ட ஒருத்தியோட சின்ன சின்ன எதிர்ப்புகள்தான். ஆனா அதெல்லாம் நம்ம மனக்காயங்கள குணமாக்காது.// 🙂

  3. This is ridiculous… I saw same kind of article few days ago.
    When you have rights to eat non veg, people have rights to deny that too…
    Same incident happened for me too.. Let me explain. One day in my office one of my colleague offered me some food (not snacks. If it is snacks, we can keep it and have it later) as soon as I came back from lunch. So, I told him that I was full and could not eat. Just note that, I used to go to his home and had food (cooked in his house) many times. Immediately, they asked me some stupid questions like don’t I eat at their house made items etc. etc., Then I tried to reply those guys about my visiting to his house. But, nobody allowed me to talk further. Here, where is the Veg and Non veg problems came? Why always these Non Veg people target Veg people with this kind of stupid questions.
    If you like fish smell, Beef smell, how can you expect me to enjoy the same?
    I know, immediately people will jump and write many things about Vegetarians. Those people should read my lines properly “Just note that, I used to go to his home and had food many times.”

    • இதற்கு பார்ப்பான் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை.
      இந்த அம்மனியும் பெரும்பான்மையக இருக்கும் கூட்டத்தில் இருந்தால் இவர்களும் இப்படிதான் இருப்பார்கள்.
      சுத்தமாக இருப்பது தவறா?
      இந்த நடைமுரறைகள் எல்லாம் பார்ப்பனிடர்களிடம் பெரும்பாலும் மாறிவிட்டது.
      அவர்கள் நிலை நீங்கள் பொறாமை படும் அளவுக்கு இல்லை.
      தங்களை சற்று பாதுகாத்துகொள்ளவே அவர்கள் பாடாய் பாடு படுகிறார்கள்.

    • உண்மைக்கு விளக்கமும் பதிலயும் சொல்லலாம் ஆனால் பொய்க்கு பதிலளித்தால் அந்த பொய் உண்மையாகிவிடும் தோழரே.

      எனக்கு தெரிந்த எந்த பிராமணனும் பிறர் எந்த ஜாதி என்று தெரிந்து கொள்வதில் ஆர்வாம் காட்டியதுமில்லை விருப்பபடுதும் இல்லை. அவர்களை பொறுத்த வரையில் நீ பிராமணன் அல்லது பிராமணன் இல்லை அவ்வளவு தான். பிறர் என்ன ஜாதி என்று பார்த்த கணமே தெரிஞ்சிக்க துடிப்பது நாம் தான்.

      Vinavil செய்திகளுக்கு பஞ்சம் ஏற்படும் பொழுது அல்லது பாத்திரம் காலியாகும் பொழுது அவர்கள் கையில் எடுத்து கொள்ளும் ஆயுதம் பிராமணனை அசிங்க படுத்துவது மற்றும் ஜோடிக்கப்பட்ட கதைகளால் வசை பாடுவது

      ஒவ்வரு இனவெறி தாக்குதல் நடப்பதற்கு முன்னரும் இது போன்ற விஷமத்தனமான கட்டுரைகளும், வெறியூட்டும் சிந்தனைகளும் சில விஷ செடிகளால் பரப்ப படும்.. eg) Talibans teaching and their cowardly attacks, VHP did before Godhra riots, Boko haram, Somolia & Rwana genocide (against Tutsis), Hitlers preachings, All Communist aka Dictator rule. My humble request to all my Brahmin friends is not to respond to these racist articles.

      தமிழகத்தையும் மக்களையும், தமிழையும் தாங்கள் தான் பாதுகாக்கின்றோம் என்று மற்றவர்களை நம்ப வைத்து கொண்டிருக்கிறது இந்த கருப்பு மற்றும் செவப்பு சட்டைகள். உண்மையில் பிராமணர்கள் தமிழிற்கு ஆற்றிய பணியில் 1% கூட இந்த கருப்பு கம்முநிச்டுகள் செய்ததில்லை என்பதை யாராலும் மறுக்க முடியாது. இது வரை வரலாற்றில் உலகெங்கும் உள்ள அணைத்து கம்யூனிஸ்ட் அரசுகளை பார்த்தாலே உங்களுக்கு புரியும் அவர்கள் ஆட்சியில் மக்கள் அனைவரும் அடிமைகளாகவும் சுகந்திரம் பரிக்கபட்டவர்கலாகும் இருந்தார்கள் என்று.

      This is my last comment in this racist site and I don’t think I will ever get back to this posion again. Thanks

      • Ilango appadi enna seithu vittrekal neengalum ungal biramana samuthayamum intha samuthayathirku konjam vilakki koora mudiyuma?

        appdi neengal ethuvum seith kilithuvidavillai enru ennal nirubikka mudiyum….. etho neengal matum than samuthaya akkarai ulalvarkal pol nadikka vendam…. ithu ponra neriya utharanam ennal tharamudiyum unamiya ungalal onru thara mudiyuma….

        anaithilum saathi aathikka veri piditha samuthayam ethu enru ennal nirubikka mudiyum athu illai enru ungalal nirubikka mudiyuma?

  4. சாதிய துவேஷம். கட்டுரை ஐ சுவாரஸ்யமாக சொல்லிருகிறார். தென் மாவட்டங்களில், குறிப்பாக தூத்துக்குடி போன்ற ஊர்களில் மக்கள் சாதிய வாரியாக ஒன்று கூடி வாழ்கிறார்கள். எனவே, பெரும்பாலும் பிரச்சினைகள் இல்லை. அனால், சென்னை போன்ற நகரங்களில் வேலை வாய்ப்பிற்காக பல பகுதிகளில் இருந்தும் செல்லும் மக்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ வேண்டிய சூழல் இருக்கிறது. இங்கே, கட்டுரையாளர் சந்தித்திருக்கும் பிரச்சனைகளை பலரும் தினமும் சந்தித்துக்க் கொண்டுதானிருகின்றனர். சாதியத் தீண்டாமைக் கொடுமைகள் நமது தேசத்தில் காலங்காலமாக இருந்து வருகின்றது. இதனை எளிதில் வேரறுக்கச் செய்வதென்பது அத்தனை சுலபமானதல்ல. இக் கொடுமைகளை அரங்கேற்றிய பெருமை(?) இந்து பிராமணர்களையே சாரும். .”அது அவர்கள் ரத்தத்திலேயே ஊறியது” என்றார் டாக்டர் அம்பேத்கர். “உயர் சாதியினர் தங்களை கீழே போட்டு மிதிக்கின்ற போது, மிதிபடுபவர்கள் பெரும்பாலும் வருந்துவதில்லை. ஏனெனில், தாங்கள் மிதிப்பதற்கும் தமக்கு கீழே ஒரு சாதி இருக்கிறது என்பதினால்” என்பார் அம்பேத்கர். தந்தை பெரியார் பார்பன எதிர்ப்பை முன்னிருத்தியே தமது போராடகளத்தை வடிவமைத்தார். இங்கே, இது பற்றி விளக்கமாக எழுத வேண்டுமென்றல் பங்கங்கள் போய் கொண்டே இருக்கும்.

  5. இப்படிப்பட்ட பார்ப்பனர்களும் இருக்கிறார்கள். இப்படி இல்லாத பார்ப்பனர்களும் இருக்கிறார்கள். பின்னவர் பற்றி கட்டுரை எதுவும் எழுதப்படுவதில்லை. பரவாயில்லை.

  6. தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்து மீனவ சமுதாய மக்களிடம் பழகி வளர்ந்த எனக்கு சகோதரியின் ஆதங்கம் மிக நன்றாக விளங்குகிறது.
    பழிகினால் மொத மக்களும் ஒருதாய் வயிற்றில் பிறந்தோம் என்று என்ன வைக்கும் பரந்த மனப்பான்மை உழைக்கும் மக்களிடம் தான் இருக்கிறது.

    வெள்ளையனே வெளியேறு என்பது போல இந்த கொள்ளையர்களை வெளியேற்ற வேண்டும் போல் தெரிகிறது, உங்களை இந்த குடியிருப்பில் இருந்து வெளியேற்ற பார்பனர்கள் போட்ட திட்டம் வெற்றி பெற்றது என்பது தான் கவலையான உண்மை

  7. அவங்க சொல்றது சரிதான்..மனிதனால் ஏற்படுத்தப்பட்டு பிரிக்கப்பட்ட நம் சொந்தங்களுக்கே இவ்வளவு பிரச்சினைகள் என்றால்…தாழ்த்தப்பட்ட மக்களின் துயரை நினைத்து பார்க்கவே முடியல.
    பிராமணர்களில் 99 % பேர் இப்படிதான் இருக்காங்க…ஆனால் அவர்களில் நல்லவர்களும் இருக்கவே செய்றாங்க..
    என்கூட வேலை பார்க்கும் என் மேனேஜர் பிராமின் தான் ஆனால் நல்ல மனுஷன். சாதி பேதம் பார்க்கவும் மாட்டாரு அதை பற்றி பேசவும் மாட்டாரு
    சகமனிதனா மதிச்சி பேசுவாரு வீட்டிற்கு கூட்டிட்டு போவாரு.
    ஆனால் பிராமினை தவிர்த்து மற்ற நம் தமிழ்நாட்டு சாதிகள் இருக்குறாங்களே இவங்கதான் நிறைய சாதி வித்தியாசம் பார்க்குறாங்க.
    ஈT கம்பெனில பார்த்தா நீ என்ன சாதி,நான் என்ன சாதி என்றுதான் சாதி பார்த்து பேசுறாங்க.( பிராமினை தவிர்த்துதான் சொல்றேன்)
    நாங்க நாடார்,நாங்க தேவர் நு கூட்டமா சுத்துவாங்க.
    ஆனால் இன்னும் நான் கேள்விப்பட்டதில்லை நான் தாழ்த்தபட்டவன் என்று சொல்லி எவனையும்,எல்லாம் நம் முன்னோர்கள் செய்த மனிதனுக்கு பயன்படாத உருப்படி இல்லாத விசயங்களின் விளைவுதான் இவை.
    ஆடி அடங்கும் வாழ்க்கையில்தான் எத்தனை வித்தியாசங்களை மனதின் பார்க்கிறான்.

  8. hello, One day, when I was on the train going to airport from Toronto, I happened to meet a Tamil lady, immediately I asked her are you Tamil ?. She replied Yes, I’am Tamil, from India and Bramin. I was shocked and speechless. These people, they live and work in a different country, work with and under different ethnicity, but when they identify other south asians immediately they wanted to show that they are not normal. Thank you.

      • Mr. Harikumar, Bramin is an identity? Hahahahahah. First of all, you have to read and understand my writings. Still I believe, Caste system is an evil system. Where is that inferiority complex comes from ? Did I said that she harmed me? In Canada only south Asians, mostly Indians shamelessly talks about their caste. Harikumar you should come out of the pot. It will lead to a more civilized world than you currently living in.

        • I live in a very civilized world myself and i dont need your advice.your post was very simple enough to understand and i did so in full.

          you dont know anything about me,i come in general category,i dont need or have any caste certificate like other people,you should tell those who hold community certificate about this and not me.

          • Hello Mr. Harrikumar, please read my last posting. I said you to come out of the pot that you are currently living in. In your term it`s called very civilized world. This world (not yours) is so amazing and soooooooooooooo big. So kindly come out of your so called very civilized world to live in a very real big world.

      • //she mentioned her identity,why do u have an inferiority complex because of that?// That means Being Brahmin is superiority complex is what Harikumar wants to say. Wow what a confession

        • Thank you Angnaani. My question is whether we can talk to the other people than the south Asians like this? This superior mentality could be applied to the other westerners especially to the whites ? What a foolishness.

  9. பிராமணன் அடி வாங்கும் போது மட்டும் எல்லாரையும் செட்டு சேர்த்துக்குவான். எல்லாரையும் ஒன்னாப் பார்த்து, சமமா நடத்துனா இப்பிடி ஆகுமா. ஆனா பெரும்பாலும் தோழர்.மாலா சொல்லுர மாதிரிதான் இருக்காங்க, அதுல சந்தேகமே வேண்டாம். இவன் கொழுப்ப அடக்கனும்னா மத்த சாதி, மதத்து மக்கள் கிட்டஒரு தெளிவு இருக்கனும். அவனவன் சாதியா செட்டு சேர நினைக்கறதே அவனோட வெற்றி தான் சொல்லனும், எவ்வளவோ தடையை தாண்டி வாழ்க்கை, நகரத்தில எல்லாரையும் வெரட்டிக்கிட்டு இருக்கு, இதுல உழைக்கிற மனுசனா ஒன்னுசேராம நமக்கு விடிவு இல்ல.மத்தபடி இங்க அவாளுக்கு ஆதரவா வர ஒவ்வொரு குரலுக்கும் அவன் விட்ர பீலாவுக்கும் பதில் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை, ஏன்னா அவா எல்லாம் கடைஞ்செடுத்த காரியவாதிங்க…குத்தத்த ஒத்துக்கவும் மாட்டானுங்க, குட்டைய நல்லா குழப்புவானுங்க…அடி பட்ட நாய் அப்படித்தான் கத்தும். நமக்குநிறைய வேலை இருக்கு, கண்டுக்காம வாங்க,… போகலாம்.

  10. இந்த சகோதரியின் அனுபவத்தைப் படிக்க வேதனையாகத் தான் இருக்கிறது. ஆனால் ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் போலவே, எல்லாக் கதைகளுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு என்பதையும் மறந்து விடக் கூடாது.

    பல்வேறு உணவுப்பழக்க வழக்கங்கள், மத, கலாச்சார வேறுபாடுகள் உள்ள மக்கள் வாழும் அபார்ட்மெண்ட் தொகுதிகளில் வாழும் போது, நாங்கள் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளத் தான் வேண்டும். வெளிநாடுகளில் நாங்கள் (ஈழத்தமிழர்கள்) கூட, கறுப்பர்கள் அதிகமுள்ள கட்டிடங்களில், அவர்கள் வாழும் பகுதிகளில் வாழ்வதை விரும்புவதில்லை. குறிப்பாக, அப்பார்ட்மென்ட் பில்டிங்குகளில் ஒவ்வொருவரின் உணவுப் பழக்க வழக்கங்களும், அவர்களின் சமையலிலிருந்து வெளிவரும் மணங்களும், அந்தக் கட்டிடத்தில் நல்ல காற்றோட்டமில்லாது விட்டால் எந்தளவுக்கு மற்றவர்களுக்கு அருவருப்பையும், தொந்தரவையும் உண்டாக்குவது மட்டுமல்ல, அவர்களின் வாழ்க்கையையும் நரகமாக்குமென்பதையும் நான் நேரில் அனுபவித்திருக்கிறேன். அதை விட இந்தச் சகோதரி என்னடாவென்றால் வேண்டுமென்றே மீனும், நண்டும் வாங்கி வரச் சொல்லிச் சமைப்பாவாம். தமிழ்நாட்டு அபார்ட்மெண்ட் பில்டிங்குகளில் வாழ்ந்து கொண்டு, மீனும், நண்டும் சமைத்தால், அந்த மணம் Hallway ஐ விட்டுப் பல மாதங்களுக்கு வெளியேறாது என்பது நிச்சயம். மற்றவர்களின் உடையில் கூட அந்த மணம் பிடித்துக் கொள்ளும். நான் கூட இந்த சகோதரி வாழும் குடியிருப்பில் வசித்தால், குளித்து விட்டுக் கோயிலுக்குப் போகலாம் என்று வெளியே வரும் போது, இவரது ஆந்திர நண்டுப் பொரியலும், சாளையும், சுறாக்குழம்பின் வாசனையும் வந்து எனது வேட்டியில் ஒட்டிக் கொண்டால், எனக்கும் தான் பொல்லாத எரிச்சல் வரும், கோயிலுக்குப் போகும் உணர்வையே அது கெடுத்து விடும், இவ்வளவுக்கும் எனக்கு பொரித்த நண்டென்றால் நல்ல விருப்பம்.

    இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், மற்றவர்களின் விருப்பு, வெறுப்புகளை மதித்து அதற்கேற்றவாறு adjust பண்ணிக் கொள்ளத் தெரியாதவர்கள் ஒருபோதும் பல்வேறு, உணவுப்பழக்கங்களையும், மதங்களையும் கொண்ட மக்களுடன் அபார்ட்மெண்ட் பில்டிங்குகளில் வாழ முடியாது. குறைந்த பட்சம் தமிழ்நாட்டிலுள்ள கட்டிடங்கள் எல்லாம் வெளிநாட்டு நவீன குடியிருப்புகள் போலவே மற்றவர்கள் சமைக்கும் உணவுகளின் மணம், வெளியே போகாத வகையில், அப்படியே இழுத்து மேலே வெளியேற்றும் காற்றோட்டவசதிகளுடன் அமைக்கும் வரை, வெளிநாடுகளில் போல பக்கத்து அப்பார்ட்மெண்டில் யார் இருக்கிறார் என்பதே தெரியாமல், வாழலாம் என்ற நிலை ஏற்படும் வரை, அசைவ உணவை மட்டும் உண்ணுகிறவர்கள் வாழும் குடியிருப்புக்குத் தான் இடம் பெயர வேண்டும் என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

    பார்ப்பானர்கள் சாதிவெறி பிடித்தவர்களே அல்ல என்று அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதல்ல எனது நோக்கம். ஆனால் பார்ப்பனர்கள் பெரும்பான்மையாக வாழும் குடியிருப்புக்குக் குடியேறும் போதே, பெரியாரிய ஈடுபாட்டாலும்,, அவர் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற சாதியுணர்வினாலும், பல தடைகளை எல்லாம் மீறி ஒரு உயர்ந்த இடத்துக்கு வந்ததால் ஏற்பட்ட பெருமிதத்தினால் உருவாகிய Entitlement உணர்வுடன் மட்டுமன்றி, ஒருவகையான Defensive mood உடன் இந்தச் சகோதரி அங்கே குடிபெயர்ந்ததால், அவரால் அங்கு வாழ்பவர்களுடன் சமாளித்துப் போகவும், உண்மையான நட்புக்கரங்களை நீட்டவும் முடியவில்லை அல்லது அவர்களின் ஒவ்வொரு செயலையும், சாதியுடன் இணைத்து ஒருவித சந்தேகக் கண்ணுடன் நடந்திருக்கலாம் என்று கூட வாதாடலாம். இப்படியான அனுபவம் வெளிநாடுகளில் வெள்ளையர்கள் பெரும்பான்மை ஐரோப்பியர்களும், ஆசியர்களும் சேர்ந்து வாழும் பகுதிகளில், அப்பார்ட்மெண்ட் பில்டிங்குகளில் கூட ஏற்படலாம். ஆனால் தமிழ்நாட்டில் சாதி என்று இன்னொரு dimension உம் உண்டு, அந்த தடையையும் கடக்க வேண்டும் அது தான் அங்குள்ள பிரச்சனை.

    தமிழ்நாட்டில் நகரங்களிலுள்ள பார்ப்பனர்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்களா அல்லது கிராமங்களிலும் இவ்வாறு சாதிவெறியுடன் நடந்து கொள்கிறார்களா என்று சந்தேகமாக இருக்கிறது. என்னுடைய அனுபவத்தில் கிராமங்களில் பார்ப்பனர்கள் மிகவும் மரியாதையுடன் நடந்து கொள்கிறார்கள் என்று தான் தோன்றுகிறது. நான் போன கிராமங்களில் உள்ள கோயில்களின் பார்ப்பனர்களில் பலர் என்னை அவர்களின் வீடுகளுக்கு அழைத்து உணவருந்துமாறு வற்புறுத்தியது மட்டுமன்றி, அவர்களின் வற்புறுத்தலால், சிலரது வீடுகளில் உணவருந்தியுமுள்ளேன். தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் எல்லோருமே சராசரி தமிழர்களை விடப் பணக்காரர்கள் என்று நினைத்தது எவ்வளளவு தவறு என்பதை அங்கே நேரில் உணர்ந்திருக்கிறேன். அவர்களின் வீட்டிலிருந்த ஒரேயொரு பிளாஸ்டிக் கதிரையை எனக்கு உட்காரத் தந்து விட்டு, அவர்கள் நிலத்தில் உட்கார்ந்து என்னிடம் பேசியிருக்கிறார்கள். நான் ஒரு பிராமணனில்லை என்பதும் அவர்களுக்கும் தெரியும். இவ்வளவுக்கும் அவர்களை விட நான் மிகவும் வயதில் குறைந்தவன் (எனது தந்தையின் வயதை ஒத்தவர்கள் அவர்கள்). எனக்கே அது ஒரு மாதிரியாக, கஷ்டமாக இருந்தது.

    • அய்யா வியாசன் நீங்க பிராமனர் இல்லாவிட்டாலும் பிராமனியத்தை அப்படியே கடை பிடிக்கிறீர் மேட்டுகுடி திமிரை மனதாற ஆதரிக்கிறீர் அது எப்பிடியய்யா மனம் வேட்டியில் ஒட்டும் சரி ஒட்டுமுனே வச்சுக்குவோம் ஆட வெட்டி படையல் போடுற எங்க ஆளுக கோவிலுகெல்லாம் போக மாட்டீறா, போனா அந்த சாமிகள கும்பிட்டா உம்ம கவுரவம் குறஞ்சுடுமுனுதான நினைக்கீறுதான எனக்கு தெரிஞ்ச இந்து நண்பர் கொடி மரம் உள்ள கோவிலுக்கு போகும்போது கவுச்சி சாப்பிடாம போகனும் அனா நாட்டுப்புற கோவிலுக்கு கவுச்சி சாப்பிட்டு போகலானுவாரு இதைதான்யா பிராமனியம் அப்பிடிங்குறாக அப்புறம் ஆகம விதி பிராமனன் தான் புசை பன்னனுமுனு சொல்லிட்டு வந்து நிப்பீரு உங்கள மாறி ஆளுகளத்தான் பெரியார் சுய மரியாத அற்றவர்கள்னு சொல்லுறாறு கொஞ்சம் சிந்திச்சு பாரும்வே அப்பதான் புரியும்…

      • “ஒரு முறை எனது இந்து நண்பரோடு திருப்பதி சென்று வந்தேன்”

        “எனக்கு தெரிஞ்ச இந்து நண்பர் கொடி மரம் உள்ள கோவிலுக்கு போகும்போது…..”

        ஏன் இந்த நண்பன் என்ற போர்வை-
        நீங்கள் நேரடியாகவே ஜாதி இந்து என்றோ அல்லது தலித் இந்து என்றோ களத்தில் இறங்கி விவாதம் செய்யுங்கள்

      • அண்ணா ஜோசப், நான் ஒன்றும் பிராமணீயத்தை ஆதரிக்கவுமில்லை, உங்களைப் போல், பிராமணர் சம்பந்தப்பட்ட எல்லா விடயங்களையும் எதிர்க்கவுமில்லை. பல்வேறு உணவுப்பழக்க வழக்கங்கள், மத, கலாச்சார வேறுபாடுகள் கொண்ட மக்கள் வாழும் குடியிருப்புகளில் வாழவேண்டிய தேவையேற்படும் போது அல்லது அப்படியான குடியிருப்புகளைத் தேர்ந்தெடுக்கும் போது, திறந்த மனதுடன், எங்களின் உணவுப்பழக்கம், நடையுடை பாவனைகளில், சுற்றாடலுக்கேற்றவாறு மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள நாங்கள் தயாராக இருக்க வேண்டும். அதை நாங்கள் பல இடங்களில் செய்கிறோம் ஆனால் பார்ப்பனர்கள் என்று வரும்போது மட்டும் சில தமிழ்நாட்டுத் தமிழர்கள் கொஞ்சம் அதிகமாக அடம்பிடிக்கிறார்கள் போல் தெரிகிறது என்பது தான் எனது கருத்தே தவிர, நான் பார்ப்பனீயத்தையோ அல்லது பெரியாரியத்தையோ ஆதரிக்கவில்லை.

        சுற்றாடலில் உள்ள எந்த மணமும், சரியான காற்றோட்ட வசதியில்லாது விட்டால், எமது ஆடைகளில் ஒட்டிக் கொள்ளும், அது எங்களுக்குத் தெரியாது அந்த மணத்துக்கு நாங்கள் பழக்கப்பட்டு விடுவோம், ஆனால் மற்றவர்களால் அந்த மணத்தை உணர முடியும். வெளிநாடுகளில் பல வெள்ளையர்கள், தெற்காசியர்களைக் குறிப்பாக, இந்தியர்களின் (இலங்கையர் உட்பட) ஆடைகளில் அவர்களின் உணவு வகைகள் மணப்பதாக முறைப்பாடு செய்வதன் காரணம் இது தான். அவர்களின் உணவு வகைகளை விட, எங்களின் உணவுகளில் வாசனைகள் (சரக்கு வகைகள்) அதிகம் என்பதும் ஒரு காரணமாகும். ஆடுவெட்டிப் படையல் போடுற கோயிலுக்கும் போவேன். அங்கே என்னுடைய வேட்டியில் ஆட்டிறைச்சி மணம் மட்டுமல்ல, வேண்டுமானால் என்னுடைய தலையில் ஆட்டு இரத்தத்தைக் கூட எடுத்துத் தெளித்துக் கொள்வேன். ஆனால் ஆடு வெட்டிப் படையல் போடாத கோயிலுக்குப் போகும் போது, நண்டுக்கறி மணக்காமல் போக விரும்புகிறேன், அது எப்படிப் பார்ப்பனீயத்தை ஆதரிப்பதாகும் என்பதை நீங்கள் தான் சிந்தித்துப் பார்த்து விளக்க வேண்டும்.

    • நகரத்தில் வாழும் இடை நிலை சாதிகளும் இப்படி தான் மற்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினாரை நடுத்தவர்.

      அதை பற்றி கடிதம் எழுத யாரும் முனைவதில்லை.

      இதை எல்லாம் விட பெரிய காமெடீ, தேவர் இன பணம் வசதி படைத்தவர்கள் மற்ற இதை நிலை சாதிகளை கூட மதிக்கமாட்டார்கள்.

    • In spite of being criticized for his high profile views on food habits of other people and his observations on their lifestyle etc in the past,Mr.Vyasan never corrects himself.In this comment also,does he mean that the essay writer has reached this particular apartment(UYARNTHA IDAM)after several struggles?What he means by UYARNTHA IDAM?To live in an apartment dominated by Brahmins?The essay writer has not cited one single incident but quotes many incidents starting with the query by a Brahmin lady asking her whether she used the water used to clean fish on the plants.Brahmanism means superiority complex and not mixing with other people.Instead of criticizing this aloofness of Brahmins,this man blames the victim.

  11. “எனக்கு தெரிந்த எந்த பிராமணனும் பிறர் எந்த ஜாதி என்று தெரிந்து கொள்வதில் ஆர்வாம் காட்டியதுமில்லை விருப்பபடுதும் இல்லை. அவர்களை பொறுத்த வரையில் நீ பிராமணன் அல்லது பிராமணன் இல்லை அவ்வளவு தான். பிறர் என்ன ஜாதி என்று பார்த்த கணமே தெரிஞ்சிக்க துடிப்பது நாம் தான்”உண்மை தான்.பார்ப்பனர்கள் தன் முன்னால் செட்டியார் நின்றாலும் சரி தேவர் என்றாலும் தாழ்த்தப்பட்டவர் நின்றாலும் ஒரே பார்வை தான். ஆனால் அதே ஆதிக்க சாதியாக இருக்கிற ஒரு நபர் தன் முன் நிற்கிற மனிதன் தன் சாதியா, தனக்கு நிகரான சாதியா, கீழா,மேலா என்கிற ஒரு அவஸ்தையுடன் தான் அணுகுவார்கள். தனக்கு நிகரான சாதியாக யாரையும் கருதிக் கொள்ள அவர்களால் இயலாது என்பது வேறு.பார்ப்பனர்கள் தமக்குள் ஒதுங்கிக் கொள்ளும் பாவனையில் தமது ‘மேன்மை’யை நிறுவிக்கொள்வர் என்றால் ஆதிக்க சாதியாக இருக்கிற ஒரு நபர் அதை ஒரு திமிரான,சற்று வெளிப்படையான குறிப்புகளின் வழியாக நிலைநிறுத்திக் கொள்வதே வழக்கம்.இந்த விஷயத்தில் யார் மோசம் என்பது பாதிக்கப்படுபவரின் மனநிலையை பொறுத்தது.

  12. இந்த கட்டுரையில் இரண்டாவது படம் அரை மொட்டை பிராமன பைய்யன் சினிமா மற்றும் டி,வி மாடல்.
    இந்த மாதிரி பிராமனர்கள் மிகவும் குறைந்த எண்னிக்கையில் உள்ளவர்கள்.
    பாவபட்ட பிராமனர்கள்.
    ஒன்லி மாடெர்ன் பிராமனர்கள் உங்களுடைய எதிரிகள்.

  13. இன்று தான் பதிவைப் பார்த்தேன். ஒரு பார்ப்பானின் பதில்/பின்னோட்டம்.என்னுடன் என் குடும்பம் பார்ப்பனர் அல்லாதவர்,ஒதுக்கப்பட்ட ஜாதியினர் முஸ்லீம், கிருஸ்துவர்கள் வீடுகளில் பல முறை உணவு உண்டிருக்கிறோம். எஙகள் வீட்டில் பலரும் தங்கியிருக்கிறார்கள்; உணவு உண்டிருக்கிறார்கள். தென் தமிழகத்தைச் சேர்ண்தவர்கள். பல ஜாதியினர் வசிக்கும் சிற்றூரில் பிறப்பு; வளர்ப்பு.. என்த விதத்திலும் ஜாதி வேற்றுமை மனப்பான்மை இருக்கக்கூடாது என்று மீண்டும் மீண்டும் படித்து, கற்பிக்கப்பட்டு நடைமுறையில் இயல்பாக வளர்ன்தவர்கள். என் தம்பி குடும்பமும் இதே போல்.. அறுபதுகளில் பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை அடி என்று சுவர் முழுதும் எழுதப்பட்ட காரைக்குடியில் கல்லூரிப் படிப்பு. பிற மானிலங்களிலும் தமிழ்னாட்டிலும் பணி. சில பார்ப்பன வழக்கங்கள் வீட்டுக்குள் மட்டும். அதன் சுவடு வீட்டின் படி தாண்டும் போது மறன்து கூட வராது. அபார்ட்மென்டுகளில் பல ஊர்களில் வசித்திருகிறேன். அடுத்த வீட்டில் மீன், கறி சமைக்கும் போது பொறுத்துக்கொள்ள இயல்பாகவே பழகியவர்கள். நாஙகள் விருன்தில் மற்றும் ஐரோப்பா சுற்றிப்பார்க்க சென்ற போது உண்ணும் போது பக்கத்து நார்காலியில் அமர்ன்து அசைவம் சாப்பிடுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்பவர்கள். இதே தமிழகத்தில் பிறன்து வளர்ன்து வாழ்பவர்கள். வானத்தில் இருன்து குதித்து வரவில்லை. எங்களைப்போல் பலப்பல குடும்பங்கள் உள்ளன. முடிக்கும் முன் ஒன்றே ஒன்று: தமிழகத்தில் ஜாதிகள் ஒழியாமல் இன்னும் நீடிக்க, உண்மையில் வேற்றுமை மனப்பான்மை அதிகரிக்க பார்ப்பனர்களை விட பிற ஆதிக்க சாதிகளே காரணம் என்பது மறுக்க முடியாதது.
    This is new software I am using for the first time; hence mistakes in typing naan, serndha, etc. Kindly excuse me.

  14. p.joseph://அவரு லட்ட எடுத்துக்காம உங்களையெல்லாம் கோவிலுக்குள்ளர விடுறாங்களானு கேட்டாறு//

    அவர் கேட்டது: நீங்கள் இன்து அல்லவே உங்களை இன்து கோயில்களில் உள்ளே அனுமதிக்கிறார்களா என்ற பொருளில் இருக்கலாம்

    • உண்மையாக இருக்கலாம் விக்னானி அசைவம் சாப்பிடுற அன்னிக்கி எங்க வீட்டிலயே 3 முறை எக்ஸ்ட்ராவ பாத்திரத்த கழுவுறோம் கழுவிட்டா சுத்தமாயிடும் சாதி வெறி தூவேசம் உங்கள மாறி எல்லா ப்ராமனர்கிட்டயிருந்தும் முற்றிலும் விடை பெற்று விட வில்லை ஐ ஐ டி மாறி கல்லூரிகளில் அது வேறு மாறி நடைமுறைபடுத்தப்படுகிறது நண்பர் ஒருவர் சிஎஸ் ஐ ஆர் தேர்வில் வெற்றி பெற்று ஐ ஐ டி யில் ஆய்வு படிப்புக்காக போனபோது அவர் தாழ்த்தப்பட்ட கிறிஸ்துவர் என்பதால் ஆய்வு படிப்புக்கு வழிகாட்டி அதாவது கைடாக யாரும் இவரை எடுத்துக்கொள்ளாமல் பத்து நாள் அலைய விட்டார்களாம் இதை எப்பிடி எடுத்துக்கிறதுனு தெரியல ,அப்புறம் சுய சாதி அபிமானம் அப்பிடீங்கிறது எல்லார்கிட்டயும் இருக்கிறதுதான் கம்மூனிஸ்டுக எல்லாம் சுய சாதி அபிமாந்த்த கைவிட்டு விட்டார்களா என்பது என் கேள்வி எங்க ஊரில கிறிஸ்மஸ் அன்னிக்கு நிதி வசுலிக்க போன கம்மூனிஸ்டுகள் பேசிக்கொண்டது எஸ் சி தெருவுல நிதி எஸ் சி தோழர் 2 பேரும் மேல சாதி தொழர் 2 பேரும் போங்க அப்பிடினு அய்யோ இதுதான்யா கம்மூனிஸ்டு வினவுட்ட கேட்டா அவிங்க மக்கிய கம்மூனிஸ்டு போலி கம்மூனிஸ்டுனு சொல்லிறுவாங்க சாதிக்கலவரமுனு வரும் போது அந்தந்த சாதிய சார்ந்த தோழர்கள் அந்தந்த சாதிக்காரன சப்போர்ட் பன்னுவாங்க எல்லார்கிட்டயும் சாதி உணர்வு இருக்கு அனா அடுத்தவனுக்கு அநீதி நடந்தா அநீதி பன்னவன் நம்ம சாதிக்காரன் அப்பிடீனு உணர்வுல அவனுக்கு சப்போர்ட் பண்ணா அதுதான் சாதி வெறி இது பிராமனர்கள் முதல் தாழ்த்தப்பட்டவர் வரை எல்லார்கிட்டயும் இருக்கு இதுக்கு மேல தேவை இல்லாம அடுத்தவன கர்ட் பன்ற சீப்பான சாதி வெறி இருக்கு பாருங்க அதுதான் இங்க சொல்லற விசயம்
      இத எல்லா சாதிக்காரனும் பன்றான் பிராமினும் பன்றான் அப்பிடினு சப்போர்ட் பன்னக்கூடாது இந்த விசயத்துல பாருங்க அவங்க நடந்துகிட்டது சரிதான் நீ வேண்டுமென்றால் வேற இட்த்துக்கு போ அப்பிடினு சொல்லுறது சரியா தெரியல …

  15. ////எங்க அப்பார்ட்மென்டிலேயே அவங்க கூட நான் எஸ்சியான்னு கண்டு பிடிக்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க. மீனவர்னு தெரிஞ்சப்பிறகு பெரிய பாதிப்பில்லேன்னு விட்டுட்டாங்க போல. ////////……………ungalukuu sema nakkalungaa….softa pootuu thaakitingaa…..best of luck

  16. பார்ப்பனர்களின் பேச்சு, பழக்க வழக்கங்கள் பற்றி இவ்வளவு எழுதுகிறோமே, வேறு ஜாதிகளின் பழக்க வழக்கங்கள் பற்றி ஒரு வரி எழுத யாருக்கேனும் துணிவு உள்ளதா? வடிவேலு சொல்வது போல, பார்ப்பன்ர்கள் தான் ரெம்ப நல்லவங்க; எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க.

  17. சைவ கடையா பார்த்து சாப்பிடு…..சின்ன திருத்தம்….
    சீர் மிகு சென்னை மாநகரில், திண்டுகல் தலப்பாகட்டியும்,
    ஆம்புர் பிரியாணி கடைகளும் “அவாளுக்கு” பிடித்த விசயம்தான்

  18. நாம் முதலில் நமது பழக்க வழக்கங்களையும், மற்றவர்களோடு நமது அணுகு முறைகளையும் நேர்மையாகவும், உண்மையாகவும் சுய பரிசோதனை செய்து பார்க்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

    அதன் பின் தான் பிராமணர்களை விமர்சிக்கும் உரிமை நமக்கு வரும்.

    நாம் நல்ல உடை அணிந்து பேருந்தில் செல்லும் போது, தூசியோடு, அழுக்கான யாராவது அருகில் அமர்ந்தால் நாம் சந்தோசம் அடைகிறோமா?

    மாமிசம் சாப்பிடுபவர்களைப் பற்றி அவர்கள் ஒரு சில அனுமானங்களை வைத்திருக்கலாம். மாமிசம் சாப்பிடுபவர்கள் மூர்க்கமானவர்கள் என்று அவர்கள் நினைக்கலாம் அல்லவா. ஆகவே அவர்கள் நம்மிடம் இருந்து ஒதுங்கி இருக்க நினைக்கலாம்.

    மற்ற ஜாதியரில் உள்ள மாமிசம் சாப்பிடாதவர்கள், மாமிசம் சாப்பிடுபவர்கள் வீட்டில் தண்ணீர் அருந்தவோ, சாப்பிடவோ தயங்குகிறார்களா இல்லையா?

    நாம் எல்லோரையும் நமது சமையல் அறை வரை அனுமதிக்கிறோமா?

    நாம் ஒரு சிலரை, நமக்கு வேண்டாதவரை வாசலிலேயே அனுப்பி வைப்பதில்லையா? ஏன் எல்லோரையும் வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டும்? ஒரு சில உறவினர்களையும், நண்பர்களையும் வீட்டுக்குள் அனுமதித்தற்காக நாம் பின்னர் வருந்தியதில்லையா?

    நம்மிடையே உள்ள எல்லா ஜாதியருடைய பழக்க வழக்கங்களையும் நாம் ஏற்றுக்கொள்கிறோமா?

    அவர்களை குறை சொல்லும் முன் நம்மை நாம் சுய பரிசோதனை செய்து கொள்ளுவது நலம் என்று நினைக்கிறேன். (நான் குறிப்பிடுவது பெருவாரியானவர்களை).

  19. Respected Madam Mala,

    Your article is very nice, very much hallucinatory situation is being projected with lot of exaggeration.

    நான் ஒரு nonBrahmin ஆத்துல duplex house மாடி ரூம்ல குடி இருந்தேன் .பட்ட கஷ்டம் தெரியுமா ? பொங்கலுக்கு வேண்டாம்னாலும் சாப்டே ஆகணும். சரின்னு சாப்டுவேன். அதுவாது விருந்தோம்பல்னு சொல்லலாம். நீங்க ஏன் சினிமா போறது இல்ல. every weekend எதுக்கு கோவில் கோவிலா போறீங்க? இந்த வயசுலேயே எப்டி BP ? நீங்க தான் EB கட்றீங்க அதுக்காக எப்பவும் AC ஓடிகிட்டே இருக்கணுமா? (இதுல ஒரு unitku 4 ருபீஸ் மெட்ராஸ்ல மட்டும் தான் இந்த கொடுமை) .

    ஏன் கார்கு driver நீங்களே ஓட்டலாமே ? இந்த வயசுலேயே ஏன் உங்களுக்கு BP, எலாம் கேட்டு ஆகிடும் .

    உங்களுக்கே ஒரு complex அதான் ஊதி பெருசு பண்ணி உங்க childa பெரியவா neighour சண்டெல முடிஞ்சு தனியா ஆக்கி வைத்து இருக்கேள். .my advise is you stay there only..if you shift my guess is more or less same issues you will find, irrespective of the majority being christians or brahmins.

    • Hilarious 😀
      1. A feast for you shows they accept you as part of their friends circle. You, not liking to be part of their celebration shows your ‘brahmin’ ego.
      2. About Cinema – oru curiosity dhaan nu ninaikaren.
      3. About your visits to temple – again a curiosity.
      4. About BP – again a part of you being accepted into their circle. A concerned question, probably, of their tenant. What if you get a cardiac arrest suddenly and they know nothing of your BP.
      5. EB bill – its good to be conservative of resources
      6. Car Driver – I assume you are young. So again a curiosity of why a youngster needs a driver.

  20. //நாம் நல்ல உடை அணிந்து பேருந்தில் செல்லும் போது, தூசியோடு, அழுக்கான யாராவது அருகில் அமர்ந்தால் நாம் சந்தோசம் அடைகிறோமா?//

    தூசி படியற அளவு உழைத்தவரை மதிக்கத் தெரியாமல், அவர் அழுக்கு உடையை மாற்ற முடியாத அந்த நிலையைக் கண்டு இரங்கத் தெரியாமல் இப்படி வெறுப்பதுதான் இயல்பு என்றால் ஏதோ பெரிய கோளாறு இருப்பதகாகத்தான் படுகிறது.

    • அவர்களே,

      ஏன் உணர்ச்சி வசப்படுகிறீர்கள். தூசி படியற அளவு உழைத்தவரை மதிக்க வில்லை என்றும் இரங்க வில்லை என்றும் எப்படி முடிவு செய்தீர்கள்?

      கவலை எல்லாம் நமது துணி அழுக்காகி விடும் என்பது தான். அழுக்கோடு அலுவலகம் போக முடியாது அல்லவா? அலுவலக நாகரிகம் கடைப்பிடிக்க வேண்டியதுள்ளது அல்லவா?

    • கோளாறு யாருக்கு?
      நானும் சுத்தமாக இருக்க மாட்டேன்,நீங்களும் சுத்தமாக இருக்க தேவையில்லை என்கிறீர்களா.

  21. பிராமணர்கள் ஓட்டல் போனா கூட சைவம் சாப்பிடுறாங்க அது பார்பண திமிறு என்று சொல்லுறமே அசைவம் சாப்பிடற நாம எத்தனை பேர் சைனீஸ் , ஜப்பான் , தாய்லாந்து போன்ற நாடுகளில் சமைக்கிற பாம்பு ,பல்லி , கரப்பான் பூச்சி போன்ற உணவுகளை அருவருப்பு இல்லாமல் சாப்பிட வேணாம் சாப்பிடறவங்க பக்கத்துலயாவது உட்கார முடியுமா ? அது நமக்கு அருவருப்பு அதுபோல் பிராமணர்களுக்கு அசைவம் மீது அருவருப்பு. குறையை மட்டுமே கண்டுபிடிக்க வேண்டுமானால் எல்லோர் மீதும் கண்டுபிடிக்கலாம் ஆனால் அது குறிபிட்ட பிரிவினரை மட்டும் என்றால் நிச்சயமாக அது ஏதோ நோய்க்கூறு வெறுப்பே தவிர வேறென்றும் இல்லை.

  22. தமிழ்நாட்டில் சாதிவெறி பிராமணர்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் இருக்கிறது என்பது இந்தக் கட்டுரையைப் படித்தபின் தெளிவாகிறது! எங்களுடைய பழக்க வழக்கங்களையோ, தனித்துவங்களையோ பேண விரும்பினால், எங்களைப் போன்றவர்கள் இருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்து அவர்களுடன் கூடிவாழ்வதே தகுந்தது. அதைத்தான் இந்த அப்பார்ட்மெண்டில் பிராமணர்கள் செய்கிறார்கள். அவர்களின் பழக்க வழக்கங்களில் குறை கண்டுபிடிப்பது எமது பலவீனத்தையே காட்டுகிறது. எங்களைப் போன்றவர்கள் வாழுமிடத்தில் நாம் வாழவேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பிரச்சனைகள் வருவது சாதாரணமானது. இதில் ஒருவர் உயர்ந்தவர், மற்றவர் தாழ்ந்தவர் என்ற பேச்சு அவசியமற்றது. அது தாழ்வு மனப்பான்மையின் விளைவு.

  23. மேடம், உஙகள் கோபம் சரிதான். ஆனால், உங்கள் பின்புலம் பற்றி உங்களிடமே சற்று பெருமிதம் உள்ளதாகத் தெரிகிறது. அது ஆபத்தானது.

  24. The article is published with vested interest. I don’t know, why you you feel bad, when someone is expressing their preferences in decent or polite way. I just want to ask the author, in which school, their kids are studying. Should be a good convent school? Why not in Government school.

    This type of complaints prevails every where. a) A village student goes to chennai, he always feels he is ill treated. But all village students coming out with flying colours. b) In Army school, the common complaint is officers kids are given with preferred treatments. c) All female actress complaints, she is ill-treated but all are coming out with awards and huge crores of monies.

    What I want to say is complaining is the easy way to hide your own issues. Here in TN, Brahmins are the soft targets. Hence you can do all stories like Apartment Story, Villa Story etc.. For all such stories, even you will have strong supports from popular Brahmin figures also. Because, in TN, writting against Brahmins will have huge support.

    I also like to remind to the author, Veda Vyasar , who complied all four vedas, who also wrote mahabharata is from fisherman community only.

  25. வியாசன் அப்படித்தான் பார்பனர்களுக்கு குடை பிடிப்பார். யாழ்ப்பாணத்தில் இவரது சாதியான வெள்ளாளர் சாதி தான் உயர்ந்த சாதிதான். பார்பனர்கள் கடை பிடிக்கும் அனைத்து பழக்கங்களையும் மற்ற இந்துக்களிடம் இவர்களும் கடைபிடிப்பார்களாம். இனம் இனத்தோடு சேருகிறது. 🙂

    • பார்ப்பனருக்கு மட்டுமல்ல யாருக்குமே குடை பிடிக்கும் பழக்கம் எனக்குக் கிடையாது என்பது இங்கு எல்லோருக்கும் தெரியும். அதனால் தான் அவாள் கூட வினவில் என்னோடு கூட்டுச் சேரவிரும்புவதில்லை, ஏனென்றால் எந்த நேரம் குப்புற விழுத்துவேன் என்று சொல்ல முடியாதாம். தமிழர்களும், சிங்களவர்களும் அடிபட்டுக் கொண்டால் காக்காமாருக்குக் கொண்டாட்டம் என்பார்கள் இலங்கையில், அது போல இங்கும் சிண்டு முடிந்து விடப் பார்க்கிறார் சகோ. சுவனப்பிரியன்.. 🙂

    • saringa suvanapriyan neenga unga suvanathai pathi kavalapadunga. Mudalil neenga shiavum muslim thanu othukittu mathavanga pathi pesalam. Ungalal othukolla mudiavittal mudikittu irukkalam

  26. //இவங்க வீட்டுல வேலை செய்யுற பெண்கள் 50, அறுபது வயசானாலும் ஏன்டி, போடின்னுதான்
    கூப்பிடுவாங்க. கொடுமை என்னண்ணா அவங்க பசங்களும் அப்படித்தான் கூப்பிடுவாங்க.//
    //அல்ட்ரா மாடர்னா இருந்தாலும் வீட்டு பெண்கள் பீரியட்ஸ்னா அபார்ட்மென்ட் தரை தளத்துல ஒரு
    சேரைப் போட்டு உக்காருவாங்க. ஒரு பெண்ணா எனக்கு அது பயங்கர கூச்சமாவும், வெறுப்பாவும் இருக்கும். மூணு வேளையும் ஓட்டல் சாப்பாடு வாங்கி கொடுப்பாங்க. வீட்டுல எதாவது துணிமணி கேட்டாங்கன்னா கொடியில இருந்து கம்பு வைச்சு எடுத்துக் கொடுப்பாங்க.
    இதெல்லாம் 21-ம் நூற்றாண்டுல சென்னையில ஒரு நவீன குடியிருப்புல நடக்குது!//

    இதர்க்கு எல்லாம் ஒரு யோக்கியனும் பதில் எழுத மாட்டான், வேற எந்த மக்கள் இது போல செய்கிறார்கள்
    தூத்துக்குடி மாவட்டத்துல வயசுக்கு அதிகமானவர்களை யார் என்றாலும் ஒருமையில் அழைத்தால் வீட்டில் பெற்றோர்கள் வாயை உடைத்து விடுவார்கள். இது அடுத்தவர்களை கேவலப்படுத்துவதும் தங்களை தாங்களே தேர்ந்து எடுக்கப்பட்ட மேன்மக்கள் என்று நினைப்பதை தவிர வேறு என்ன?

  27. K ஷண்முகம் ஐயா,

    சுத்தமாக இருப்பதெல்லாம் எல்லோருக்கும் பொதுவானதும் இயல்பானதும் தான். சுத்தமாக இருந்தால் , இருந்துவிட்டு போங்கள். கூடுதல் சுத்தமாக இருக்கிறோம், ஆச்சாரம் என்று பெயர் வைத்துக் கொண்டு செய்யும் அநாகரீகங்களும், போடும் கூச்சலும்தான் பிரச்சனை. பெரும்பாலும் அதெல்லாம் போலித்தனமான சுத்தமாகவும் இருக்கிறது.

    இந்த கட்டுரையில் அந்த தோழி அபார்ட்மெண்ட் தரைதளத்தில் சேர் போட்டு உக்கார வைப்பதைப் பற்றி பேசி இருந்தார். இது என்ன சுத்தம்? சரியான போக்கிரித்தனமாக இருக்கிறது. என் தோழி ஒருவர், அவர் வீட்டுக் கதவைத் திறந்தால் நெடுஞ்சாலைத்தான். அங்கேயாவது அபார்ட்மெண்டோடு முடிந்துவிடும். மூன்று நாளும் கதவைத் திறந்து வெளில உட்கார வைத்துவிடுவார்கள். போற வர வெறும் பயல்கள் எல்லாம் அர்த்தம் பொதிந்த சிரிப்பு சிரித்துவிட்டு போவதைப் பார்த்து ரொம்ப நாள் மனம் உடைந்திருக்கிறாள். இதற்கு பெயர் சுத்தமா? சுத்தமே கைகொட்டி சிரித்துவிடும்.

    இன்னொரு நண்பர் சொல்லி இருந்தபடி, நம்ம ஊர் ரோட்டுல நடக்குறப்ப ஒட்டாத தூசி, பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்களிடமிருந்துதான் ஒட்டும் என்றால், அது கேட்க வேடிக்கையாக இருக்கிறது.

    தீண்டாமை கடைப்பிடிக்கிறோம், பெண்ணடிமைத்தனம் பேணுகிறோம் என்றெல்லாம் வெளிப்படையாக சொல்ல பயந்து சுத்தத்தின் பின்னால் எதுக்கு ஒளியனும்? நேர்மையாக இதுதான் விஷயம் என்று சொல்லிவிடலாம் அதற்கு.

    • சிதி அவர்களே,

      “இன்னொரு நண்பர் சொல்லி இருந்தபடி, நம்ம ஊர் ரோட்டுல நடக்குறப்ப ஒட்டாத தூசி, பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்களிடமிருந்துதான் ஒட்டும் என்றால், அது கேட்க வேடிக்கையாக இருக்கிறது.”

      கட்டங்காலையில், டாஸ்மாக்கில் புரண்டு எழுந்து வரும் நாயகனோடு பஸ்ஸில் பயணிக்கநேரும் போது உங்களுக்குப் புரியலாம். அல்லது புரியாதது போல் பாவனை செய்யலாம்.

      ஆச்சாரம் என்பதெல்லாம் சுத்தமாக இருக்கத் தான். அவர்கள் ஆச்சாரமாக இருப்பதைப் பார்த்து நீங்கள் தான் கூச்சலைப் போடுகிறீர்கள்.நீங்கள் செய்வதைப் பார்த்து உங்கள் இனத்தவரே விமர்சனம் செய்தால் உங்களுக்கு வருத்தம் வரும் அல்லவா?

      பெண்ணடிமைத் தனம் இஸ்லாமில் எவ்வளவு இருக்கிறது என்று உற்று கவனியுங்கள். அதை முடிந்தால் விமர்சனம் செய்யுங்கள் பார்க்கலாம்.

  28. பார்ப்பணியமும் சுத்தமும் ஒன்று என ஏன் குழப்ப வேண்டும்! வெறுமனே தண்ணியைச் தெளிச்சா சுத்தம் ஆகி விடுமா.

    அன்றும் இன்றும் சாப் வெயர் கொண்டு மத்தவங்களை அடக்குவதே அவங்க தொழில். மனு தர்ம சாத்திரம் என்ற சாப்ட் வெயர் இன்றும் அவங்களை ஆள வைக்கிறது.

  29. While reading this article, my eyes are watery for this real woman heart pains,that means I am not crying,but more anger than hulk. I can feel to break the fire glasses with my bare hands kind of To abolish this attitude people. WHY? educated idiots.

  30. இதெல்லாம் சும்மா நேரம் போவதற்காக யாராவது கிளப்பி விடும் அட்ராசிட்டிகள். சுத்தமாக இருப்பதும் சில சமயங்களில் ஆசாரமாக இருப்பதும் அவசியம் என்று விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்ட செய்திகள். இட ஒதுக்கீடு, சிறுபான்மையோர், ஜாதிக்கட்சி என்று பார்ப்பனர் அல்லாதவர்கள்தான் இன்று எப்பொழுது பார்த்தாலும் நாட்டில் ஏதாவது பிரச்சினை உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். பார்ப்பனர்கள் பெரும்பான்மையினரும் பொருளாதார ரீதியாக தாழ்ந்த நிலையில்தான் உள்ளார்கள். எல்லோருடனும் நன்றாக கூடி ( அட்ஜுச்ட் )செய்து கொண்டு வாழ்கிறார்கள். ஜாதி, இட ஒதுக்கீடு என்று கூச்சல் போடுவதில்லை. தங்கள் திறமையால் வாழ்க்கையில் முன்னேற முயற்சிக்கிறார்கள். இந்த அம்மணி சொல்வது போல் சிலர் உலகில் எல்லா ஜாதி, இனங்களிலும் உள்ளனர். பிராமண ஜாதியில் மட்டுமல்ல. இந்த மாதிரி விஷயங்களெல்லாம்,நம்முடைய அணுகு முறையில் மாற்ற முடிபவையே.

  31. சமூகத்தில் எது பலிக்குமோ (ஏற்றுக்கொள்ளப்படுகிறதோ) அது தொடர்ந்து நடக்கும்.இதில் சரி, தவறு என்ற பேச்சிற்க்கே இடமில்லை.கடுமையான எதிர்ப்பு வரும் போது,இருந்த இடம் காணாமல் போகும்.இதை நிகழ்த்த கிருஷ்ணரும் வேண்டாம், ராமசாமியும் வேண்டாம்.பிராமணரும்,தலித்தும் இணைவது (மேல்நோக்கியோ அல்லது கீழ்னோக்கியோ)இடையில் உள்ள பிறசாதியினரின் சம்மதமில்லாமல் நடவாது.அதுவரை பிராமணரை காப்பாற்றுவது சாதி இந்துக்களே.இந்த உள்குத்துதான், பெரியாரின் ஆபாச,துவேஷ, வன்முறை தாக்குதலையும் மீறி பிராமணர்கள் கள்ள மவுனத்துடன் புன்னகை புரிகிறார்கள்.இதனால்தான் போலிகள் கூட ஆயிரம் பெரியார்கள் வந்தால்கூட மாற்றம் வராது என்று (வாய் தவறி) உளறுகிறார்கள்.பெரும்பான்மை மக்களின் ஆதரவு,மற்றும் விருப்பம் இல்லாமல்,நேர்மை இல்லாமல், தனிமனித அரிப்பையெல்லாம் சமூக புரட்சி இயக்கம் என்று கூறி பிழைப்புநடத்துவதும், சுய இன்பம் அனுபவிப்பதும் ஒன்றுதான்.

    • Gopalahari,

      // இதை நிகழ்த்த கிருஷ்ணரும் வேண்டாம், ராமசாமியும் வேண்டாம்//

      சரிதான். பின்னர் ஏன் பார்ப்பனர்கள் முன்னவரை அவதாரமாக்குவதையும் பின்னவரை அவதூறு செய்வதையும் வேலையாக வைத்திருக்கிறார்கள். இங்கே தான் இருக்கிறது பார்ப்பனர்களின் மோசடி.

      //பிராமணரும்,தலித்தும் இணைவது *** இடையில் உள்ள பிறசாதியினரின் சம்மதமில்லாமல் நடவாது//

      உங்கள் பெண்ணை ஒரு தலித் வரணுக்குக் கொடுக்கிறீர்கள். இதில் எங்கே பிறசாதியினர் வந்தார்கள்?
      தமிழக அரசு எல்லோரும் அர்ச்சகராகலாம் என்றபோது தடை வாங்கியது எந்த பிறசாதி? தில்லை கோயிலை அரசுடைமையாக்கியபோது தடை வாங்கியது எந்த பிறசாதி?
      கொஞ்சமேனும் பொருத்தமாக பேசக்கற்றுக்கொள்ளுங்கள். இது ஒன்றும் மந்திரம் ஒதுமிடமில்லை.

  32. எனக்கு தெரிந்த பிரமணர் தன் வீடை இன்னோரு பிரமணருக்கு தான் விற்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார். கடைசியாக இப்பொது இருக்கும் மார்கெட் விலை விட கம்மியான விலைக்கு ஒரு பிரமணர்க்கு தான் விற்றார்.

    ஓரு பொருளை அடுத்தவர்க்கு விற்க போகும் போது கூட அது தன் சாதினருக்கு தான் சேர வேன்டும் என்ற வெறி பிரமண்ர்களை மட்டுமே சாரும்.

    • //ஓரு பொருளை அடுத்தவர்க்கு விற்க போகும் போது கூட அது தன் சாதினருக்கு தான் சேர வேன்டும் என்ற வெறி பிரமண்ர்களை மட்டுமே சாரும்.//

      பிராமணர்கள் மட்டுமல்ல, எத்தனையோ புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம் இப்படியான எண்ணம் உண்டு. வெளிநாடுகளில் செட்டிலாகி விட்ட பல ஈழத்தமிழர்கள் தமது பரம்பரை வீடுகளைக் கண்டவர்களுக்கும் விற்க விரும்புவதில்லை. அவர்களின் முன்னோர்கள் காலம் காலமாக வாழ்ந்த பரம்பரை வீட்டில், காணிகளில் கண்டவர்களும் குடியேறினால், அது தமது முன்னோர்களை, அவர்களின் நினைவுகளை அவமதிப்பதாகக் கருதுகிறார்கள். நாங்கள் கூட, எங்களின் வீட்டை விற்க விரும்பாமல், வாடகை இல்லாமல், உறவினர்களை இருக்க அனுமதித்திருக்கிறோம். அதை விட, அதற்காக நாங்கள் அவர்களுக்கு உதவிகளும் செய்கிறோம். இப்படி எத்தனையோ பேர் செய்கிறார்கள். அதிலும் சிலர் வெளிப்படையாகவே, கண்டவங்களுக்கும் காணிகள், வீடுகளை விற்றால், எங்களின் அயலுக்குள் ‘எல்லோரும்’ வந்து விடுவார்கள், என்று சாதிவெறியையும் காட்டிக் கொள்வதுமுண்டு. புலம்பெயர்ந்த நாடுகளில் சாதி பார்க்காத ஈழத்தமிழர்கள் கூட, தங்களின் சொந்த ஊர், பரம்பரைவீடு என்று வரும்போது ஒன்றுக்கு, இரண்டு முறை யோசிக்கிறார்கள். ஆகவே இந்த விடயத்தில் பார்ப்பனரை மட்டும் குற்றம் கூறுவது தவறு. எல்லாச் சாதியினரும் அப்படிச் செய்கிறார்கள்.

  33. நான் ஒரு பிராமணன்….பிராமணரல்லாதவருக்குத் தான் வாடகைக்கு விட்டேன். அவரும் நல்லபடியாக இருந்தார். எந்த பிரச்சினையும் இல்லை (சென்னையில்)…..எங்களுக்கு அசைவம் கூடாது. இப்படி சொல்வதில் என்ன தவறு. என் பிராமணல்லாத நண்பர் தன் வீட்டை வாடகைக்கு விடும் முன்பு 1008 கண்டிஷன் போட்டார். குடிக்கக் கூடாது, அது இதென்று. அவர் பிராமணர் இல்லை என்பதால் எந்த பிரச்சினையும் இல்லை. வீட்டு ஓனர்னா இப்படித்தான் கராறா இருப்பாரு பெருந்தன்மையா இருக்காங்க. பிராமண ஓனர் ஒரு கண்டிஷன் போட்டாலும் லபோதிபோன்னு குதிக்கறாங்க….கொடுமைடா சாமீ….

  34. அதே போல் நான் குடியிருந்த அபார்ட்மெண்டில் (சென்னை) பிளாட் செக்கரட்டரி பிராமணரல்லாதவர். ஏகப்பட்ட கெடுபிடி செய்வார். அவரிடம் பூணல் இல்லாததால் எந்த பிரச்சினையும் இல்லை. சகோதரி மாலாவுக்கு நேர்ந்த விஷயம் கொடுமைதான். அதை தயவு செய்து பிராமணர்னா இப்படித்தான் என்று பேத்த வேண்டாம். எனக்கு இருக்கும் 100க்கு மேற்பட்ட நண்பர்களில் வெறும் 4-5 பேர் தான் பிராமணர். கிறித்துவரான நீங்கள் பிராமணர்களை காறித்துப்புவதை நிறுத்தவும். அப்படி செய்தால் இந்து மதத்தை எளிதில் சாய்த்து விடலாம் என்று நோக்கம் தானே?

  35. Whatever act one performs , do with confidence. In a metro city , people live with varied identity, tastes,preference etc . You should not expect all happenings will coincide with your own way of living.What will you do if go and live in China??
    You cannot go to a restaurant and eat as snakes and frogs will be in the menu and a very bad smell pervade inside these place. You cannot blame the chinese.The chinese make most of the consumer durables than India and their education standards are high.
    Dont bother about anyone , do your duty. In south Tamilnadu those who take aruval will be dealt with the same weapon. Hence those who show themselves smart will be overcome by a better civilized folk. For your information brahmins are not considered superior in every district of Tamilnadu

  36. சாதியத்தில் பார்ப்பனர்களுக்குநம்பிக்கையில்லை அதனால் அவர்களுக்கு எந்த உபயோகமும் இல்லை மாறாக வீண் அவப் பெயர்தான் ……..” அடேஙப்பா என்னநியாய உணர்வு அபாரம் இந்தக் கட்டுரையின் அடிப்படையே உள்ளத்தி அடியில் உள்ள சாதித் துவேஷம் தான் அது பார்ப்பனரை விட மர்ற சாதியினரிடம் தான் அதிகம் தமிழகம் தான் அதற்குநல்ல எடுத்துக் காட்டு வினவு ஒருநல்ல உதாரணம் சாதி என்று அழுகிய பிணத்தினை கட்டிக் கொண்டு மாரடிக்கும் சுயநாலக் கும்பல்

  37. நான் துபாய்ல் வேலை செய்தபோது பிராமணர் தான் எங்கள் chief Accountant 3 வருடம் vegetarian ஆக தான் இருந்தார் இங்கு உள்ள இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் வெளி நாட்டினர்களோடு ஏற்பட்ட friendship னால் மட்டன் பிரியாணி சிக்கன் பிரியாணி, இறால் பிரியாணி என்று ருசித்து சாப்பிடுகிறார் , இப்பொழுது சமைக்கவும் செய்கிறார் …. அவர் எந்த மதத்தவரையும் துவேஷமா பேசி நான் பார்த்தது இல்லை ….அவர் மகளின் நண்பன் கூட ஒரு முஸ்லிம் பையன் தான்..அவர்கள் இருவரும் ஒன்றாக வெளியே செல்வதைகூட ஒன்றும் சொல்ல மாட்டார்… நான் இங்கு (Dubai) வந்த பிறகுதான் நிறைய நல்ல விஷயங்களை கற்று கொண்டேன் என்பார்

  38. //இவங்க வீட்டுல வேலை செய்யுற பெண்கள் 50, அறுபது வயசானாலும் ஏன்டி, போடின்னுதான் கூப்பிடுவாங்க. கொடுமை என்னண்ணா அவங்க பசங்களும் அப்படித்தான் கூப்பிடுவாங்க//

    நம் பெற்றோர் நம்மிடம் கொடுத்த அளவுகோலின் படி நாம் மற்றவர்களை அளக்க முயற்சிக்கிறோம் . மீன் களவிய தண்ணீரை நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்ற அளவுகோலை கொண்டு உங்களை அவாக்கள் அளந்துள்ளர்கள் , நீங்கள் போடி என்று கூபிடுவதன் மூலம் அளந்துல்லீர்கள்

    //மாசத்துக்கு ரெண்டு நாளாவாது முழு அப்பார்ட்மெண்டையும் கழுவி ஊத்துவாங்க. ஏதோ பிரதோஷம், இன்னும் வாய்க்குள் நுழையாத சடங்கு சாஸ்திரமுன்னு சொல்லி தண்ணி இல்லாத ஊருல வெள்ளமா ஊத்துவாங்க//

    எல்லா மத வியாதிகளும் அப்படிதான் செய்கிறார்கள் . ஏன் பக்கத்துக்கு வீட்டில் ஜப வீடு அமைத்து சண்டே அன்று சத்தமாக ச்பீகர் போடத்தான் செய்தார்கள் .

    //இவங்க சமையலறையில அந்த பெண்கள் நுழைய கூடாது. பாத்திரங்களையெல்லாம் குளியலறையில்தான் கழுவணும்//

    தீண்டாமை கொடுமையால் சிறையில் இருக்க வேண்டியவர்கள்

    //குங்கும பொட்டு வைக்காதது, வகிடெடுத்து பொட்டு வைக்காதது, மஞ்சள் பூசி குளிக்காதது இதெல்லாம் அவங்க கருத்துப்படி ஒழுக்கமில்லாத பெண்களோட குணம்.//

    இதுவும் எல்லா மத வியாதிகளும் செய்வதுதான் . பிராமணர்களை மட்டும் தனித்து பார்க்க அவசியம் இல்லை

    //அவரு செல்போன், பைக்குனு அல்ட்ரா மாடர்னா இருந்தாலும் வீட்டு பெண்கள் பீரியட்ஸ்னா அபார்ட்மென்ட் தரை தளத்துல ஒரு சேரைப் போட்டு உக்காருவாங்க//

    இதற்கு காரணம் அவருடைய கஸ்டமர்கள் தான் . இப்படி இருந்தால் தான் அவரு ரொம்ப சுதபதமானவரு என்று பில்டப் கொடுக்கப்படும் . என் வீட்டிற்கு பூசைக்கு வந்த புரோகிதனை சாப்பிட சொன்ன போது , எல்லார் வீட்டிலும் சாப்பிட்டா அவருடைய சுத்தம் பொய் விடும் என்று சொன்னான். கூட்டி வந்த அல்லக்கை,(வேறு சாதி ) “நான் சொல்லலா, சார் ரொம்ப சுதமானவரு, அவரு மந்திரம் சொன்னா ரொம்ப நல்லது ” என்று எடுத்துவிட்டான்

    //வீட்டுல எதாவது துணிமணி கேட்டாங்கன்னா கொடியில இருந்து கம்பு வைச்சு எடுத்துக் கொடுப்பாங்க. இதெல்லாம் 21-ம் நூற்றாண்டுல சென்னையில ஒரு நவீன குடியிருப்புல நடக்குது!//

    இப்படி ஒரு பிராமணரை வைத்து கொண்டு எல்லோரும் இப்படி பத்தாம் பசலிகள் எனபது போல ஸ்டீரியோ ட்ய்பிங் செய்யபடுகிறது

    // பத்து ரூபாய்க்கு ஐந்து விதமான காய் வாங்கி அதில் ஐம்பது காசு மிச்சம் பிடிக்க பிளான் பண்ணுவாங்க.//

    நடுத்தர வர்க்கம் இப்படிதான் இருகிறார்கள் . இதில் பார்பனர்களை மட்டும் குறை கூறுவதில் அர்த்தம் இல்லை

    //பிராமின் வீட்டு பசங்க எல்லாம் சிபிஎஸ்இ பள்ளிக்கூடத்துலதான் படிக்கிறாங்க. என்னோட பையனை ஸ்டேட் போர்டு பள்ளிக்கூடத்துல அதுவும் சாதாரண மக்கள் படிக்கும் பள்ளின்னு கேட்டு தெரிஞ்சிகிட்டு நாசுக்கா ஆனா ரொம்ப கீழா பேசுவாங்க. //

    இது பிராமணர்கள் மட்டும் செய்வது இல்லை . நடுத்தர வர்க்கம் எல்லாமே இப்படிதான் . இது பொருளாதாரம் சார்ந்த மேட்டிமைத்தனம். இதில் பார்பனர்களை மட்டும் குறை கூறுவதில் அர்த்தம் இல்லை

    // இன்சூரன்சுன்னு பல அரசு, தனியார் துறைகளில் நல்ல சம்பளத்துடன் வாழ்றவங்கதான். ஆனா பாத்தீங்கன்னா ரேசன் பொருட்கள் ஒன்று விடாமல் வாங்கி வருவாங்க//

    இதில் பிராமணர்களை திட்டுவது இருக்கட்டும் . நான் என் எஸ் எஸ் மூலமாக ரேசன் அட்டைகளை சரி பார்க்கும் பணியில் ஈடு பட்டு இருந்தேன் . சில பெரும் விவசாயிகள் , இல்லாத ஆட்கள் பெயரில் நான்கு , ஐந்து ரேசன் கார்டுகளே வைத்து இருந்தார்கள் .அவர்கள் வீட்டு கூலி ஆட்களுக்கு போனசாக அதை கொடுத்துவிடுவார்கள்.

    //எங்களைப் போன்ற பின்தங்கிய சமூகத்தின் முதல் தலைமுறை அறியாத பங்கு மார்கெட்டெல்லாம் அவர்களுக்கு அத்துப்பிடி//

    உங்களிடமும் பணம் வந்த பிறகு ம்யூடுவல் பண்டில் போடுவதை பற்றி பேசுவீர்கள் .
    பிராமணர்களை தனித்து காட்ட அவசியம் இல்லை

    //முக்கியமான ஒன்று உண்டு. இந்த குடியிருப்பில் பிராமண உரிமையாளர்கள் வீடு விற்றாலோ, வாடகைக்கு விட்டாலோ அது பிராமணர்களுக்கு மட்டும்தான்//

    வாடகை விடுவதை புரிந்து கொள்கிறேன் . மாமிசம் சமிப்பதை விரும்பவில்லை என்று எடுத்துகொள்கிறேன் . விற்பதை சாதி வெறி எந்த அளவு ஊறி இருக்கிறது என்பதை காட்டுகிறது

    //என்ன தோணுதுன்னா இவங்களெல்லாம் எங்கேயாச்சும் ஒரு பிராமண குடும்பத்தையாவது நேரில் பார்த்தோ இல்லை பழகியோ பாத்திருப்பாங்களோன்னு சந்தேகமா இருக்கு.//

    உலகில் எல்லா விதமான மனிதகளும் சாதி மொழி இன அடையாளங்களில் இருகிறார்கள் .
    பிராமணர்கள் எல்லாம் இப்படிதான் என்பதுவும் ஒரு சாதி வெறியே

    //கணவரு ஆபிசில் ஒரு பிரமாண பெண் மேனேஜர் ஆன்சைட்டுக்கு போன கணவருடன் சேர அமெரிக்கா போறாங்க. அங்க சைவ உணவு சரவண பவன் எங்க இருக்கமுணு பாத்து வீடு பார்க்கிறாங்க. அதிலயும் கருப்பர்கள் இல்லாத வெள்ளையினத்தவர் மட்டும் வாழும் குடியிருப்பா பாத்து போறாங்க. இதுக்காக அவங்க டீமே ஒரு நாள் இணையத்துல கூகிள்ள தேடிப் பாத்தாங்களாம்.//

    இதை பிராமணர்கள் மட்டும் செய்வது இல்லை .

    //இதனால எல்லா பிராமணருங்களும் இப்படித்தான்னு சொல்லலை. ஆனா அவங்க கண்டிப்பா விதி விலக்காத்தான் இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.//

    நீங்கள் நடுநிலையாளராக காட்டி கொண்டே , அவங்க கெட்டவர்கள் என்பதை நுட்பமாக காட்டி இருக்கிறீர்கள்

    //பிரமாணரல்லாதோருகிட்ட சாதி உணர்வு நிச்சயமா இருக்கு. இல்லேங்கல. எங்க அப்பார்ட்மென்டிலேயே அவங்க கூட நான் எஸ்சியான்னு கண்டு பிடிக்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க.
    ஆனா அவங்கிட்ட இருக்குற சாதி உணர்வு ரொம்ப வெளிப்படையானது, கொஞ்சம் வெள்ளேந்தியாவும் இருக்கும்//

    உங்களுடைய பிராமண வெறுப்பு அப்பட்டமாக தெரிகிறது . அந்த வெள்ளந்திகளை பேசி மாற்றி விடலாம் என்றீர்களே , உங்கள் வாழ்நாளில் ஒரே ஒருவரை மாற்றி காட்டுங்கள்

    //ஆனா ஆயுசு பூராவும் ஏதோ ஒரு சாஃப்ட் வேரை வச்சு மத்தவங்களை துன்புறுத்துறாங்க. அது என்ன, எப்படின்னெல்லாம் என்னால விரிச்சு சொல்ல முடியல.//

    அவங்க யானை பிடிகிரவங்க , கொன்றுவிடாமல் யானையின் மனதை கட்டு படுத்தும் திறன் கொண்டவர்கள் . மற்றொன்று வேடுவ கூட்டம் .

    பிராமணர்களை தனித்து காட்டுவது என்று பார்த்தால், இவர்கள் வீட்டில் தண்ணீர் அருந்துவதை நாசூக்காக தவ்ரிப்பது , பிரமனருக்குதான் விற்பேன் எனபது , மற்ற அணைத்து கருத்துக்களுமே
    ஓரளவு மத நம்பிக்கையும் , நடுத்தர போருலாதராமும் கொண்ட மக்களின் மேட்டிமைத்தனம் என்றுதான் எடுத்து கொள்ள முடியும். புதிய இடத்தில எப்படி என்று எழுதுவீர்கள் என்று எதிர்பார்கிறேன்

  39. //ங்கள் கட்டுரையில் கிழக்கு புத்தக பத்ரி, எழுத்தாளர் ஜெயமோகன் கட்டுரைகளை சேர்த்திருந்தீர்கள். அதையும் படித்தேன். என்ன தோணுதுன்னா இவங்களெல்லாம் எங்கேயாச்சும் ஒரு பிராமண குடும்பத்தையாவது நேரில் பார்த்தோ இல்லை பழகியோ பாத்திருப்பாங்களோன்னு சந்தேகமா இருக்கு.//

    பத்ரி சேஷாத்திரி ஒரு நாகப்பட்டிணம் ஐயங்கார். அவரிடம் போய் எங்கேயாச்சும் ஒரு பிராமண குடும்பத்தையாவது நேரில் பார்த்தோ இல்லை, பழகியோ பார்த்திருப்பாரா என்பது ரோச் விக்டோரியா எங்கேயாச்சும் ஒரு பராவல்ஸ் குடும்பத்தையாவது நேரில் பார்த்தோ இல்லை பழகியோ பார்த்திருப்பாரான்னு சந்தேகமா இருக்கு என்பதைப்போல. நல்ல நகைச்சுவை. பத்ரி இப்படிப்பட்ட பிராமணர் வாழ்க்கையையைப்பற்றி எழுதவில்லை. அவர் எழுதியது: கடந்த பல பத்தாண்டுகளாக தமிழ் சமூக சூழ்நிலையில் பிராமணல்லாதோரில் ஆதிக்கத்தினால் எப்படி பிராமணர்கள் பாதிப்புள்ளாகினார்கள் என்பதுதான்.

    ஜயமோஹன் ஒரு நாகர்கோயில் நாயரோ பிள்ளையோ நானறியேன். ஆனால் பிராமணர் இல்லை. அவர் தனக்கென ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக்கொண்டு அதனால் அவருக்கு இலாபம் கிடைப்பதாகக்கருதிக் கொண்டு அந்த பிம்பத்தை விட்டு வெளிவராமலிருக்கிறார். அவர் எழுத்துக்களிலும் கருத்துக்களிலும் ஒரு போலித்தன்மையைக் காணலாம். அவரின் பிராமணச்சார்பு நிலை அவர் வாழ்க்கைக்காலத்தின் கட்டாயம். அக்கட்டாயம் மறைந்த பின் அது மாறும்.

    Roche Victoria was a fisher men community leader; a Minister under Kamaraj.

  40. மகளிர் மட்டும் என்ற திரைப்படம் வந்து வெற்றிகரமாக ஓடியது. டிவிடி போட்டுப்பார்க்கவும். அப்படத்தில் ஒரு பிராமணப்பெண் ஆபிஸ் ஸ்டெனோ; அதே ஆபிசில் துப்புரவுத்தொழிலாளியும் ஒரு பெண் (தலித்). கருவாட்டையும் மீன் குழம்பையும் ஆபிசுக்கு மதிய உணவாகக் கொண்டுவருபவள்.

    இரு பெண்கள். கலாச்சாரத்தில் மட்டுமல்ல; தொழிலிலும் கடுமையான ஏற்ற்த்தாழ்வு; இவள் படித்தவள்; ஆபிஸில் எம் டிக்குப் பி.ஏ. அவள் படிக்காத சேரிப்பெண். துப்புரவுத்தொழிலாளி.

    ஒருவரின் கலாச்சாரம் மற்றவருக்குப் பிடிக்காது. அதைச்சொல்லியும் காட்டி ஒருவருக்கொருவர் கடுப்பேத்திக்கொள்வார்கள்.

    ஆனால்-

    ஆனால் —

    இருவருக்குமிடையே இருக்கும் நட்பு ஒரு சஹோதரிகளிடம் கூட இருக்குமா எனக கேட்க வைத்துவிடுவார் இயக்குனர். அன்பையும் பாசத்தையும் அடித்தளமாக வைத்துக் கட்டப்பட்ட நட்பு அது.

    இதை நான் சொல்லக்காரணம். மதமும் கலாச்சாரமும் நம்மை மேலாகத்தான் பிரிக்கின்றன. அவற்றுக்கு கீழ், மனித நேயம் கண்டிப்பாக வாழகிறது. தூத்துக்குடி கடலில் ஆழ்கடலில் முத்துக்கள் கிடப்பது போல. நாம் மெனக்கெடவேண்டும் அதை எடுக்க. நீஙகள் முயற்சிக்கவில்லை. முயற்சியெடுத்து நெருங்கியிருந்தால், உங்கள் வாழ்க்கையில் கடைசிவரும் துணையாக அந்த அபார்ட்மெண்ட் பிராமணர்கள் இருந்திருப்பார்கள். The brahmins are most maleable to postive apporach. இதைத் தெரியாமல், மற்றவர்களை மாற்றிவிடலாம். இவர்களை மட்டும் முடியாதென்று அரைகுறையுமா எழுதித்தள்ளிவிட்டீர்கள். I am very sorry to read your essay.

    HAPPY NEW YEAR 🙂

      • நிறைய படங்களும் உண்மை நிகழ்ச்சிகளும் உண்டு. இப்போ ஒன்னு போதும்னு விட்டேன்.

    • BS,

      அந்த படத்தில்,

      துப்புரவுத்தொழிலாளியை ஸ்டெனோ முயற்சியெடுத்து நெருங்கி வந்தாரா, இல்லை ஸ்டெனோவை துப்புரவுத்தொழிலாளி முயற்சியெடுத்து நெருங்கி வந்தாரா, இல்லை இருவருமே சமஅளவில் முயற்சியெடுத்து நெருங்கி வந்தார்களா. இல்லை இருவருமே வெவ்வேறு அளவில் முயற்சியெடுத்து நெருங்கி வந்தார்களா.

      இந்த அப்பார்ட்மெண்டில்,

      20 பார்ப்பனக் குடும்பங்கள் & 1 தலித் குடும்பம்.

      இங்கே யார் எவ்வளவு முயற்சியெடுத்து நெருங்கி வந்திருக்கவேண்டும்?

      How do you say that the Paarpanars are most maleable to postive apporach’. Could you give me one example of a positive approach to be used with Paarpanars.

      • Yes, an average brahmanan is malleable to positive approach. I say average as there are exceptions even amongst Saints, aren’t they? Women are, by nature, gregarious, they like to share and show they care. Sharing, Caring and Nurturing are evolutionary traits in women. That is why you can see ever strangers, if they travel together, talk incessantly during the travel sharing even intimate family matters .But if a woman, likes this essayist, has ingrained isolation complex developed from living in a small town like Tuticorin where there are a very few Brahmins, who, too, don’t live with fisher folk or Nadars, she will continue to be feel isolated, which she will miscall, as wilful separation other cause. Further, she has laden her heart with hate-filled stories about Brahmins, thanks to reading blogs like Vinavu, which have closed her mind when it comes to living among Brahmin families. She has not come to live in the apartment with an open mind obviously.

        The first thing in living or working together with others is to have an open mind. If you have prejudices against them or a certain group of people, it will soon be manifest in your movement with them through a variety of signals, which will be caught easily by them. If they are decent people, they will avoid you and you will write such hate essays, like this one, against them, conveniently forgetting that the fault originally lies within you. To get a friend is to become one first.

        Tamil Brahmins get drawn to you if you praise them. It is rare to see one among them who does not respond to praise. (I don’t mean flattery and insincere praise). They think they are sharp in not falling in behaviour patterns. But for praise they fall easily. Everyone of us have something that can be praised. Enjoy their jokes and anecdotes; respect their unique customs and practices; and they will have a place for you. They may not like your private customs, still they will take pains to find a way to like you and practise that despite irreconcilable differences like food habits. Give leeway to people’s oddities. All of us have oddities being humans. No one is perfect: either they or you.

        The essayist, being young, should have taken the initiative to go to them by herself. Not necessary to gatecrash and lament she is not allowed. You can encounter them in places like parks, in markets, in dropping children, in the evenings etc. She could have helped the old Brahmin ladies in many ways, just as carrying their heavy vegetable bags etc. She could have share the same existencial problems and dilemmas a Chennai mother faces in bringing up her children! She has missed a great opportunity to become a better person because of her arrogance that she knows and she is better! Know and learn from others; never think yours is the last word in culture. There are many things to learn from others, and in the very people she hates, a wealth of knowledge and wisdom lies. The will offer it lovingly if they know you are eager to receive and in need. Arrogance distances people.
        She is a Christian and may know the fundamental principle Jesus has taught for inter-personal relationship – practical advice which will help build bridges and develop goodwill.
        Do not judge others, and you will not be judged. Do not condemn others, or it will all come back against you. Forgive others, and you will be forgiven. (Luke 6:37).

        If she is a true Christian, let her go to people first with open mind and with the willingness to love them. I can only hope she will learn from her bitter experiences and introspect what went wrong and do well in interpersonal relationship not only with Brahmins, but with all. She should regret in character assassination in public of a certain community. Being young, she is immature, we can say. Lets forgive her.

        • BS,

          // தப்பா கட்டுரையைப் படிக்கலாமா?//

          [I don’t know why the comment containing this quote is not currently available in the post]

          நீங்கள் அந்த படத்தை எளிமைப்படுத்தியதைப்போல நான் இந்த பதிவை எளிமைப்படுத்தியிருக்கிறேன். அந்த படத்தில் ஸ்டெனோ மற்றும் ஸ்வீப்பர் மட்டுமே உள்ளனர் என்று நீங்கள் கூறவில்லையல்லவா. மற்றவர்களும் இருக்கிறார்களல்லவா. அந்த ஸ்வீப்பரை தாங்கள் தலித் என்று வேறு அடையாளப்படுத்தியதால் நானும் அந்த அடையாளத்தையே பயன்படுத்தியிருக்கிறேன். அந்த அபார்ட்மண்டில் வேறுசிலரும் இருக்கிறார்கள். ஆனால் இந்த பதிவின் பேசுபொருள் அவர்களில்லை. அங்கே வசிக்கும் பார்ப்பனர்கள் தான். இந்த பதிவர் மற்றவர்களைப் பற்றியும் ஒரு பதிவிடலாம். ஆனால் இப்போது இது பார்ப்பனர்களைப்பற்றியது.

          // malleable to positive approach//

          எப்படி என்ற கேள்விக்கு பதில் தரவில்லை. ஆம் என்பது பதிலாகாது. பதில்தர இன்னுமொரு முயற்சி செய்து பாருங்கள். இல்லாவிட்டால் அது நீங்கள் ‘அடித்து விட்டதாக’ எடுத்துக்கொள்ளலாம்.

          As for the rest of your reply, you liken Paarpanars to deep sea pearls that need to be approached with great effort and tact and it is for others to do all the effort while the pearls would stay aloof. What a BS (BULLSHIT). You are another sample of a conceited Paarpaan. Disgusting.

            • BS,

              //She is young and small. It is she who should go to people//

              என்ன அற்பத்தனமான பதில்.

              அங்கே எல்லோரும் மாலா அவர்களை விட பெரியவர்கள் தானா?
              பார்ப்பன பெண்களும் ஆண்களும் தங்களை விட பெரியவர்களிடம் ‘நெருங்கி வர’ முயற்சிக்கிறார்களா?
              அங்கே பார்ப்பன குழந்தைகளின் நடத்தையைப் பற்றிக்கூட கூறப்பட்டிருக்கிறதே. அதற்கு என்ன பதில்?

              ஒன்றைக் கவனிக்கவும். மாலா அவர்கள் அந்த பார்ப்பன அக்கம்பக்கத்தினரிடம் குறிப்பாக எதையும் எதிர்பார்க்கவில்லை. அந்த நச்சுச்சூழலே வேண்டாம் என்று ஒட முடிவெடுத்துவிட்டார். அவர்களின் அற்பத்தனத்தை மட்டுமே எங்கள் கவனித்திற்கு கொண்டு வந்திருக்கிறார். அவற்றிற்கு பதில் சொல்ல திராணியிருந்தால் சொல்லுங்கள்.

      • என்ன காரணம் என்று தெரியவில்லை bs பொருள் இன்றி இப்படி உளறுகின்றார் :

        அப்படிப்பட்ட இரு ஆதிக்கசக்திகள் இணந்திருக்கின்றன. நாடார் தலித்தைக்கட்ட மாட்டான். அவ்வளவு சுத்தம். மீனவப்பெண்ணைக் கட்டக்காரணம் தலித்து இல்லை என்பதற்காகத்தான்.

      • Mr BS ,
        அநத அப்பர்ட்மெண்ட் பார்பனர்களை பற்றிய இந்த கட்டுரை பார்பனர்களின் சாதி வெறிக்கு எதிரான வாக்குமூலம் போன்றது. அதில் உள்ள குற்ற சாட்டுகளை மறுக்கவோ ,மறுதலித்து பேசவோ உங்களிடம் வார்த்தைகள் இல்லாமல் கற்பனையில் அத் தம்பதிகள் மீது அவர்களை பற்றிய தனிப்பட்ட வாழ்க்கையை அறியாமல் பலவாறு குற்றம் சாட்டுகின்றிர். சாதிய கலப்பு திருமணம் செய்த இவர்கள் பற்றிய உங்கள் கற்பனை கருத்துக்களை,கற்பனை குற்றசாட்டுகளை தவிர்க்கலாமே Mr BS!

        //பிராமணர்கள் அவர்கள் குழந்தைகளோடு சேரவிடாமல் மேட்டிமையோடு வளர்க்கிறார்கள் என்று சொல்லும் இவர், தன் குழந்தையை தூத்துக்குடியில் வளர்த்தால், பறைப்பையன்களோடு விடமாட்டார். அவ்வளவு ஜாதித்துவேசத்தைக் கடைபிடிக்கிறார்கள் இவர் மீனவ ஜாதியினர்.//

      • Mr BS ,

        ஒரு குறிப்பிட்ட அப்பர்ட்மெண்ட்டில் நிகழும் பார்பனர்களின் சாதிய துவேசத்தை வெளிக்காட்டும் இக்கட்டுரை பற்றி நீங்கள் பேச முடியாமல் பொதுமையாக அத் தம்பதிகள் சார்ந்த சாதிகளின் மீது குற்றம் சாட்டுவது என்பதன் மூலம் அந்த அப்பர்ட்மெண்ட் பார்பனர்கள் மீது வைக்கப்படும் நேரடியான சாதிவெறி குற்றசாட்டுகளில் இருந்து எப்படி அவர்களை விடுவிப்பிர்கள். ஒருவேலை அவர்களின்[பார்பனர்களின் ] சாதி துவேசம் சரி என்று சப்பைகட்டு கட்ட தான் உங்கள் பின்னுட்டமா ?

        • பிராமணர்கள் அங்கு சாதித்துவேசத்தைக் காட்டவில்லை. அவர்கள் அவர்கள் வாழ்க்கை முறை பிராமணரல்லாதோர் வாழ்க்கைமுறையோடு சேர்ந்து விடாமல் பாதுகாப்பதை எப்படி சாதித்துவேசமெனத் திரிக்கிறீர்கள்? கொஞ்சம் சொல்லுங்க அறிஞர் தமிழே.

          முசுலீம்கள் அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை முறையைப் பாதுகாக்கிறார்கள். ஒரே தெருவில்தான் குடியிருப்பார்கள். அத்தெருவின் முனையிலோ நடுவிலோ மசூதி கட்டிக்கொள்வார்கள். சீக்கியர்கள், ஜயினர்கள், என்று பலரும் தங்கள்தங்கள் தனித்தனி வாழ்க்கை முறைகளைப் பாதுகாக்கிறார்கள். நாயுடுககள் தம் வீடுகளில் தெலுங்குதான் பேசுகிறார்கள். சவுராட்டியர்கள் வீடுகளில் மட்டுமல்ல, பொதுவிடங்களிலும் (மதுரையில்) அவர்கள் மொழியில் சத்தமாகப் பேசிவருவதைக் கேட்கலாம். அவர்கள் பிறயினததவரோடு கலப்பு மணம் செய்வதில்லை. தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை முறையை 300 ஆண்டுகளாக இறுக்கப்பிடித்து வருகிறார்கள்.

          எல்லாரையும் விட்டுவிட்டு தமிழ்ப்பிராமணர்களை மட்டும் நிற்க வைத்துச்சுடுகிறீர்களே ஏன்? என்ன நீதியிது? சொல்லுங்க அறிஞரே சொல்லுங்க!

          • \\அவர்கள் அவர்கள் வாழ்க்கை முறை பிராமணரல்லாதோர் வாழ்க்கைமுறையோடு சேர்ந்து விடாமல் பாதுகாப்பதை எப்படி சாதித்துவேசமெனத் திரிக்கிறீர்கள்?\\

            சாதித் துவேசத்திற்கு வாழ்க்கைமுறை என்று வரையறையா? பெரியவா இதைப் பண்பாடு என்று ஷொல்லியிருக்கா! மைக்கேல் மதன காமராஜன் படத்திலேயும் இந்தப் பண்பாட்டை பார்த்திருப்பேள்! சூத்திராள் கமல் தண்ணி கஞ்சா லாஹிரி வஸ்து எல்லாம் போடுவா அதே சமயம் பார்ப்பனக் கமல் சாம்பார் வைப்பா! அவாளோடா கூட்டாளி அதாவோய் கிரேசி மோகனோட இஷ்டமித்ர பந்து கக்கத்தச் சொரிஞ்சுண்டே சாம்பார் ஊத்துனாலும் வாழ்க்கைமுறை வாழ்க்கை முறை தான்!

            சாம்பாரிலே பார்ப்பானின் வியர்வை கலந்தாலும் கலக்கலாம்; ஆனால் சூத்திராளோட வாழ்க்கை முறை கலக்கக் கூடாது என்று நினைப்பது சாதித்துவசேமா எப்படியிருக்க முடியும்? நன்னா தான் சொல்லியிருக்கேள்!

          • \\ முசுலீம்கள் அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை முறையைப் பாதுகாக்கிறார்கள். ஒரே தெருவில்தான் குடியிருப்பார்கள். அத்தெருவின் முனையிலோ நடுவிலோ மசூதி கட்டிக்கொள்வார்கள்.\\

            அடுத்த தெரு வரைக்கும் ஐஞ்சாறு வாசப்படி வெஞ்சுண்டு அக்ஹாரத்து ஆட்கள் ஸ்கொயர் சேப்பில் மீனாட்சியை சுத்தி சுத்தி வாழறச்சே சூத்திர சாதிகள் ஆத்தோரம் கரையோரம் ஒரே தெருவில் தான் வாழ முடியும். முசுலீம்கள் எங்களைப்போல் தான் வாழ்கிறார்கள். தர்காவும் பாடிகாட் மூனிஸ்வரரும் பக்கம் பக்கமாத்தான் இருக்கு! கோனார் பால்கறக்கிற இடமும் உமியள்ளி சாணிதட்டுற இடமும் அதே தர்கா முனீஸ்வரர் பக்கம் தான் ஓய்!

            \\ சீக்கியர்கள், ஜயினர்கள், என்று பலரும் தங்கள்தங்கள் தனித்தனி வாழ்க்கை முறைகளைப் பாதுகாக்கிறார்கள்.\\

            சீக்கியர்களும் ஐயினர்களும் முசுலீம்கள் அவர்கள் மதப்படி வாழ்கிறார்கள். இந்துப் பார்ப்பனியத்தில் அம்பேத்கர் சொல்வதைப்போல காட்சிப்பொருளாக வெறும் சாதியாக வாழ்கிறார்கள். அதனால் தான் இந்து என்பது மதமல்ல கொடூரங்களின் கூடாரம் என்கிறோம்.

            \\ நாயுடுககள் தம் வீடுகளில் தெலுங்குதான் பேசுகிறார்கள். \\

            நாயுடுகள் தெலுங்கு பேசுவார்கள் சரிதான். ஆனால் தெலுங்கு பேசும் கம்மா நாயுடுவும் பலிஜா நாயுடுவும் ஒன்றா? அப்சதம்பா ஸ்மிருதியை பாலோ செய்யும் தெலுங்கு பேசுபவர்கள் தங்களைப் பிராமின் என்று அழைத்துக்கொள்கிறார்கள்! இதுதாண்டா இந்துப் பார்ப்பனியம் என்ற கதையாக தெலுங்குக்குள் பார்ப்பனிய வக்கிரம் ஒன்றா? இரண்டா?

            \\ சவுராட்டியர்கள் வீடுகளில் மட்டுமல்ல, பொதுவிடங்களிலும் (மதுரையில்) அவர்கள் மொழியில் சத்தமாகப் பேசிவருவதைக் கேட்கலாம்.அவர்கள் பிறயினததவரோடு கலப்பு மணம் செய்வதில்லை. தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை முறையை 300 ஆண்டுகளாக இறுக்கப்பிடித்து வருகிறார்கள்.\\

            சவுராட்டியர்கள் ஹாய்ரா பவ்வு என்று அழைத்துக்கொண்டாலும் நாங்கள் காஸ்யப கோத்திரம் என்று சொல்லும் பார்ப்பன சவுராஷ்ட்ர கூட்டம் தறி நெய்யும் சாயத் தொழில் செய்யும் சவுராட்டியர்களுடன் மண உறவு வைத்துக்கொள்வதில்லை. சவுராஷ்ட்ராவில் தெப்பக்குளத்தில் கீரைவடை விற்கும் கூட்டமும் உண்டு! மேலமாசி வீதியில் டைமண்ட் பிசினஸ் செய்யும் கூட்டமும் உண்டு! மதுரையில் கலப்பு மணம் செய்வர்களில் சவுராஷ்ட்ராவினர் அதிகம். கிராமத்துபக்கம்; வண்டியூர் பக்கம் வந்து பார்க்கவும்!

            • வண்டியூர் மதுரைக்கு உள்ளேயே – ராஜாஜி மருத்துவமனையிலிருந்து 15யே நிமிடங்களில் போய்ச்சேருமளவுக்கு – இருக்கிறது. சவுராட்டியர்கள் தங்கள் தனித்தன்மையை இன்று வரை விட்டுக் கொடுக்கவில்லை. தங்கள் மாநாட்டுக்குக் கூட கருநாடக அமைச்சர் ஒருவரைத்தான் அழைத்தனர். ஏனெனில், முதலில் மோடியை அழைத்தார்கள். அவர் வராத காரணத்தால் கருநாடக அமைச்சரைக்கொண்டு வந்தார்கள். காரணம் தாங்கள் குஜராத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள் என்ற உணர்வைப்பாதுகாக்க. மதுரை மக்கள் அவர்களை எந்த விமர்சனமும் செய்வதில்லை.

          • நான்

            தன் குழந்தைகளை அடுத்த வீட்டு நண்பரின் குழந்தைகளுடன் பழகவிட்டு அடுத்தவரின் மாற்று கலாச்சாரத்தையும் அறிய விடுபவன். என்று கூறியதற்கு இந்த கள்ளபிராமணியின்bs பதில் என்ன ?

            கள்ளபிராமணியின் bs ன் பதில் :பிராமணர்களின் வழக்கம் ஏதோ அமெரிக்காவிலிருந்து வந்தது போல பேசுகிறீர்கள். வேறுபாடுகள் வெகு சிலவே. அதுவும் மதத்திற்காக மட்டுமே. மற்றபடி எல்லாரும் தமிழர் பழக்க வழக்கங்களைத்தான் – அதாவது ஒரே கலாச்சாரம்தான். பிராமணர்களும் மற்றவர்களும் தமிழர்களே.

            இப்போது :

            பிராமணர்கள்அவர்கள் வாழ்க்கை முறை பிராமணரல்லாதோர் வாழ்க்கைமுறையோடு சேர்ந்து விடாமல் பாதுகாப்பதை எப்படி சாதித்துவேசமெனத் திரிக்கிறீர்கள்? என்று கேட்கின்றீர் .

            சரி கள்ளபிராமணியின் bs ன் எந்த கருத்து உண்மையானது ?

            மேலும்

            [1]நாம் அனைவரும் ஹிந்துக்கள் எனில் நமக்குள் என்ன வேறுபாடு இருக்கமுடியும் கள்ளபிராமணி bs ?

            [2]எவ்வகையான வேறுபாடுகளை பார்பனியம் தனிச்சிறப்பாக பார்பனர்களுக்கு அளிக்கின்றது ?

            //அவர்கள் அவர்கள் வாழ்க்கை முறை பிராமணரல்லாதோர் வாழ்க்கைமுறையோடு சேர்ந்து விடாமல் பாதுகாப்பதை எப்படி சாதித்துவேசமெனத் திரிக்கிறீர்கள்? //

            • நீங்களும் நானும் தமிழ்தான். தமிழ்தான் தாய்மொழி. ஆனால், வீட்டுக்குள்ளே மதவழி வாழ்க்கையைக்கடைபிடித்தால்தான் அம்மதத்திலிருந்தாவர். மீனையும் ஆட்டையும் மாட்டையும் அடித்துத் தின்னுவிட்டு வீட்டுக்குள் வந்தால் விடுவார்களா? அசுத்தமான வாழ்க்கை வாழ்வோரையும் சுத்தமான வாழ்க்கை வாழ்வோரையும் ஒன்றாக்க வேண்டாம். சுத்தமா வாங்க. எல்லாரும் சேர்த்துக்குவாங்க. தமிழர் என்று போர்வை போத்தி அழுக்கை மறைக்கவேண்டாம்.

              • அடேங்கப்பா!!! ஆட்டையும் மாட்டையும் அடித்து திங்காத சுத்தகாரங்களாமே இவங்க.வேள்வி நெருப்புல போட்டு இதையெல்லாம் சாப்பிட்டால் பிரச்சனை இல்லையா?.வேள்வியை எதிர்த்து உருவான அவைதீக மதங்கள் ஏன் கொல்லாமையை வலியுறித்தியது என்று யோசியுங்கள் உங்கவா வேள்வியில் என்னத்தை போட்டு சாப்பிட்டா என்ற உண்மை புரியும்.வரலாறு முக்கியம் அமைச்சரே.

                அதர்வண வேதத்தில் பஞ்ச மகர்[பஞ்ச ஆச்சாரங்கள்]ன்னு இருக்காமே? அது என்னென்ன என்று உங்காத்து பெரியவா கிட்ட கேட்டு சொல்ல முடியுமா?

              • மீனையும் ஆட்டையும் மாட்டையும் அடித்துத் தின்னுவிட்டு வீட்டுக்குள் வந்தால் விடமாட்டிர்கள் என்றால் அதே நியாயப்படி அவிங்க வீட்டுக்கும் புது மனை புகு விழா ,திருமணம் ,கருமாதிக்கும் பாப்பான் காசு வாங்கி பஜனை பாட போகக்கூடாது அல்லவா bs அண்ணாச்சி ?காசுனு வரும்போது மட்டும் நீங்க நினைக்கும் சுத்தம் அவிங்க வீட்டில் வந்துடுமா ?

          • MR. BS,

            The apex court said to call a person as a ‘pallapayal’ in Tamil Nadu is also an offence. “Similarly, in Tamil Nadu, there is a caste called ‘parayan’ but the word ‘parayan’ is also used in a derogatory sense. The word ‘paraparayan’ is even more derogatory.

            [A bench of justices Markandeya Katju and Gyan Sudha Misra Judgement ]

            • கஜ்ஜூ காஷ‌மீரத்துக்காரர். அவருக்கு எப்படி தமிழ் இலக்கியமும் கலாச்சாரமும் தெரிகின்றன?

              //In our opinion, uses of the words ‘pallan’, ‘pallapayal’ ‘parayan’ or ‘paraparayan’ with intent to insult is highly objectionable and is also an offence under the Scheduled Cast/ Scheduled Tribe Act. It is just unacceptable in the modern age, just as the words ‘Nigger’ or ‘Negro’ are unacceptable for African-Americans today ,” the bench said.//

              Note the words WITH INTENT TO INSULT

              ஆக, பறையர், பறையனார் என்பனவெல்லாம் வித் இன் டென்ட் டு இன்சல்ட் என்றவற்றில் கீழ் வாரா.

              பறையறைந்து வாழுந்த முன்னோர்களைக்கொண்டவர்கள் பறையர்கள். உண்மைதானே? இதிலென்ன வெட்கம். இதுல யாருக்கு இன்சல்ட் …?

              பறையும் இப்போள்!

              இங்கு யாரும் பறையன் என்றெழுதவில்லை. பறையர் என்றும் பறைப்பையன்கள் என்றும்தான் எழுதினார்கள். சிறுவர்கள் என்றால பறைச்சிறுவர்கள் என்று.

              இவை இன்சல்ட்னா உங்களுக்கு என்ன பெயர்? பிராமணன் சரியா?

            • Yes you are correct //the word parayan’ is also used in a derogatory sense// ‘

              பறையன் என்றால் அவமதிப்பதாகும். தடுக்கப்படவேண்டிய ஜாதிக்குற்றம். சரியே.

              ஆனால், நான் பறையன் என்று எழுதவில்லை. பறையர் என்றுதான் எழுதினேன். நீதிமன்றம் பறையர் என்ற சொல்லை அவமதிக்கும் சொல்லாக எடுக்கவில்லை. சிறுவனுக்கும் குழந்தைக்கும் ‘இன்’ சாரியை கொடுப்பது தமிழ் இலக்கணம்.

              நாராயணன் நமக்கே பறை தருவான் என்றுதான் ஆண்டாள் பாடுகிறார். பறை என்றால் மோட்சம். முக்தி. முக்தி என்ற செல்வம்.

              நம்மாழ்வாரும் சேரிப்பெண்களே முதலாவதாக நாராயணனுக்கு உகந்தவராயினர் என்று திருக்குருங்குடி பறையர்களைப் பார்த்து பொறாமைப்படுகிறார்.

              பன்னிரு ஆழ்வார்களுக்கும் மூத்த ஆழ்வார் பறையர் குலத்திலே தோன்றியவர் மட்டுமன்று; செய்த பாவத்தினால் துயரக்கடலில் அல்லலுற்று அழுதுகொண்டிருந்த‌ஒரு பிராமணனுக்கு நாராயணன் அருளால் மோட்ச கதியையும் வழங்கினார் அப்பறையர் குலத்தில் தோன்றிய ஆழ்வார்களுக்கெல்லாம் மூத்த ஆழ்வார்: அவர் பெயர் நம்பாடுவான் ஆழ்வார்.

              வேதாந்த தேசிகரால் முனிவாஹனன் எனப் போற்றியழைக்கப்பட்டு அவர் மீது போற்றிப்பனுவலையும் எழுதினார். அந்த முனிவாஹனன் திருப்பாணாழ்வார். திருச்சியில் பறையர் பிரிவில் ஒன்றான பாணர் குலத்தில் அவதரித்தவர். இராமனுஜர் பறையர்களைத் திருக்குலத்தார் எனப்போற்றி மகிழ்ந்தார். பராசர பட்டரால் உலகுக்குச் சொல்லப்பட்ட வரலாறே நம்பாடுவான் ஆழ்வார் திவ்ய சரிதம்.

              நாராயணன் நமக்கே பிராமணம் தருவான் என்று ஆண்டாள் பாடவில்லை. நம்மாழ்வார் எல்லாருக்கும் முதலாக சேரிப்பெண்களையே இறைவன் காதலித்தான் என்கிறார்.

              பிராமணனை விட உயர்ந்தவர்கள் பறையர்கள் எனச் சொல்வது தமிழ் இந்து மதம்.

              ஆக, ஆழ்வார்களாலும் ஆச்சாரியார்களாலும் போற்றிப் புகழப்பட்ட குலமான பறையர் குலத்தில் பிறந்தது ஒரு கொடுப்பினையாக நீங்கள் கருதி வாழவேண்டும்.

              • Mr bs,

                இரு விதமான மனோநிலையில்,பிளவுபட்ட மனோநிலையில்[split personality ], பார்பனிய வெறிபிடித்த சமுக சாதி வெறி மன நோயாளிகள் வாழுகின்றார்கள் என்பதற்கு bs ன் மேல் உள்ள பின்னுட்டமே சான்று. ஒருபக்கம் முடிந்த அளவிற்கு தலித் மற்றும் பார்பனர் அல்லாத சமுகத்தில் பின்தங்கிய சாதி மக்களை வார்த்தையால் அவர்கள் சாதியை வைத்து இழிவு செய்வது ,மறுபக்கம் எதிர்ப்பு வரும் நிலையில் நாம் எல்லாம் ஒன்னு….வந்து நாமம் போட்டுக்கோ …,ராம் ராம் என்று பஜனை பாடு…. என்று பெனாத்துவது !

                இராமனுஜர் காலத்தில் தலித் மக்கள் பன்னிரு ஆழ்வார்களுக்கும் மூத்த ஆழ்வார் என்ற நிலைக்கு உயர்த்த பட்டு இருப்பது உண்மை என்றால் அதற்கு பின் அத் தலித் மக்கள் கோவிலுக்குள் நுழைய கூட முடியாத அளவிற்கு அடிமையாக்கப்பட்டது யாரால் என்று கூட எம்மால் சிந்திக்க இயலாது என்று நினைத்துகொண்டு bs இத்தகைய பின்னுட்டமிடுவது ஏன் ?

  41. //மேட்டிமைத்தனம்//

    அற்ப மனிதர்கள் தங்களை மற்ற எளிய மக்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டிக்கொள்ள பல உபயங்களைக் கையாளுகின்றனர்.

    பல சமயங்களில் இந்த உபயங்களை மற்றவர்களில் சிலர் கையாளுவதை தடை செய்யவும் செய்கிறார்கள். இந்த தடையை அமல் படுத்துவதற்கு நான்கு வழிகள் உண்டு என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்.

    அற்பர்களைப் பார்த்து வேறு அற்பர்கள் ஈர்க்கப்படுவதும் புதிய அற்பத்தனத்தை பின்பற்ற முயல்வதும் இயற்கை. இப்படியாக அற்பர்களின் கூட்டம் பெரிதாக இருக்கிறது.

  42. திருவிளையாடலில் ஒரு வசனம் வரும். சிலர் திறமையை வைத்து முன்னேறுவர். சிலர் மற்றவரின் திறமையில் தவறினை கண்டுபிடித்து முன்னேறுவர்.

    கூட இருக்கும் சக நண்பர்களிடம் சகஜமாக பேச்சு கொடுத்துக்கொண்டே மேலிடத்தில் அவர்களை பற்றி போட்டுக்கொடுத்து அடுத்த பிரமோஷனுக்கு அடித்தளம் போடுவது, மேலதிகாரியை வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுப்பது, காரியம் ஆக வேண்டும் என்றால் காலை பிடிப்பது, காரியம் முடிந்தவுடன் காலை வாரி விடுவது, இந்த குணாதிசயங்களை பல பிராமண நண்பர்களிடம் நான் நேரில் கவனித்திருக்கிறேன். பள்ளி காலத்திலிருந்தே அவர்களின் போட்டு கொடுத்து முன்னேறும் திறமையை கண்டு வந்திருக்கிறேன். அதே போல மற்றவர்கள் கடின உழைப்பில் செய்த வேலையை மிக சுலபமாக இவர்கள் செய்த வேலை என்று வாய் கூசாமல் மேலதிகாரிகளிடம் சொல்லி நல்ல பெயரை வாங்கி கொள்வதையும் கண்டுள்ளேன்.

    அந்த கால தூர்தர்ஷன் தொலைகாட்சி நாடகங்களிலும், கிரேசி மோகன் நாடகங்களிலும் அலுவலகத்தில் வேலை செய்பவர் அவரது மேலதிகாரியை வீட்டிற்கு அழைத்து விருந்தளிப்பதை சாதாரணமாக காட்டுவார்கள்.

    அதே சமயம் இதில் விதிவிலக்குகளும் உண்டு. பிராமண நண்பர்கள் எனக்கும் உண்டு. என் நெருங்கிய நண்பர்களில் சில பிராமணர்களும் உள்ளனர்.

  43. இல்லைதான் ஆனா போராடுனாலும் பட்டினி கிடக்கனுமே ,யேசுநாதர் போராட சொல்லலனு யாரு சொன்னா நீதிக்காக போராடுங்கனுதான் சொல்லிருக்காரு அனா ஜெபம் பன்னி கமிசன் வாங்குறதுதான் நீதி அப்பிடினு மாத்திட்டானுக மத வியாபாரிகள் கொஞ்சம் சாப்பாடும் கொஞ்சம் பணமும் இருக்கிற உங்களால் தொரந்து போராட முடியும் அனா 1நாள் போராட்டமுனு போனாலே சாப்பாட்டுக்கு வழி இல்லைன்றவன் எப்பிடி போராடுவான் ,கஸ்டபடுரவன் படிக்க முடியாம பள்ளிக்கூடம் போக முடியாம இருந்தப்ப கம்மூனிஸம் என்ன பன்னிச்சு படிப்பு சொல்லி குடுத்துதா இல்லையே அம்பேத்கர் சொன்னார் கற்பி ஒன்று சேர் போராடு நீங்க சொல்லுறீங்க போராடுனு மட்டும் ,கிறிஸ்தவம் கற்பிக்க மட்டும் செஞ்சுது போராட சொல்லல ,எல்லாம் இருந்தாதான் போராட முடியும் வெற்றி பெற முடியும்

  44. யார் மனிதன் ?

    [0] தன் அப்பார்ட்மென்டில் பிறருடன் சாதி ,மத ,இன வேறுபாடு இல்லாமல் பழகுபவன்.[குற்றவாளிகள்,கந்துவட்டிகாரர்கள் தவிர்த்து பிறருடன் ]

    [1]தன் சக அலுவலக தோழர்களை,அடுத்த வீட்டு நண்பரை வேறுபாடு இல்லாமல் தன் வீட்டினுள் living room வரை அனுமதித்து உணவு கொடுத்து உபசரிப்பவன்.

    [2] தன் குழந்தைகளை அடுத்த வீட்டு நண்பரின் குழந்தைகளுடன் பழகவிட்டு அடுத்தவரின் மாற்று கலாச்சாரத்தையும் அறிய விடுபவன்.

    இவை எல்லாம் இக்கட்டுரையில் சுட்டபட்டு உள்ள பார்பனர்களுக்கு பொருந்துமா ?

    • பதில்கள்:

      (0) – இங்கு சாதி, மதங்கள் தடையில்லை. அவரவர் வாழ்க்கைக்கலாச்சாரமே தடை. அக்கலாச்சாரத்துக்குப் பங்கமில்லாமல் பழக முடியும். அதற்கு எடுத்துக்காட்டுகள் கூறினேன். கட்டுரைப்பெண், அவற்றை முயற்சி செய்ய விரும்பவில்லை.

      (1) இப்படிப்பழக முதலில் அப்பெண்தான் நெருங்கியிருக்க வேண்டும். ஆனால் அவர் குற்றம் கண்டிபிடிப்பதிலேயே இருந்து விட்டார். நெருங்கிப்பழகிய பின் வீட்டிற்குள் வர எல்லாருமே சம்மதிப்பார்கள். அவர் இப்படிப்பட்ட காழ்ப்புண்ர்ச்சியோடு இருக்கிறார் என்று தெரிந்தே அவரை அழைக்க முடியுமா?

      (2) பிராமணர்களின் வழக்கம் ஏதோ அமெரிக்காவிலிருந்து வந்தது போல பேசுகிறீர்கள். வேறுபாடுகள் வெகு சிலவே. அதுவும் மதத்திற்காக மட்டுமே. மற்றபடி எல்லாரும் தமிழர் பழக்க வழக்கங்களைத்தான் – அதாவது ஒரே கலாச்சாரம்தான். பிராமணர்களும் மற்றவர்களும் தமிழர்களே.

      நான் முன்பே சொன்னதுபோல முதற்பிழை இவரிடமே.

  45. அடுக்குமாடி வாழ்க்கை இன்றைய நகர வாழ்க்கை. சென்னையில் பெருகிக்கொண்டு வருகிறது. அது நெருங்கி வாழ்வதற்கு ஒரு இடையூறு. பலபல கரணியங்களை சமூகவியலர் சொல்லி வருகிறார்கள். நகர வாழ்க்கை விரிவடைய விரிவடைய மக்கள் தனிமனிதர் உருவத்தை (individualism) அகலமாக்குகிறார்கள். இது மேற்கத்திய கலாச்சாரப்போக்கு என்பதை விட, மேலை நாடுகளில் அடுக்குமாடிக்குடியிருப்புக்கள் முதலில் வந்ததால் முதலில் அங்கு இவ்வாழ்க்கை முறை தொடங்கியது. அதாவது இவ்வாழ்க்கை முறை இடத்தின்வழி நிர்ணயக்க‌ப்படுகிறது.

    இதே சென்னையில், அடுக்கு மாடி இல்லாக்குடியிருப்புக்கள் அழியாமல்தான் இருக்கின்றன. அங்கு ஒருவருக்கொருவர் நெருங்கி வாழ்தலுண்டு. சண்டையிட்டாலும் சச்சரவுகள் எழுந்தாலும் ஒருவருக்கு ஆபத்தென்றால் அனைவரும் கூடுவர். இது நம் கிராமியக்கலாச்சாரம். இன்னும் நிலைக்கிறது. இடம்.

    தூத்துக்குடியில் இன்னும் அடுக்குமாடி வாழ்க்கை வரவில்லை. கட்டுரையாளர் தூத்துக்குடியில் இருந்து வந்து அதே அன்னியோனியத்தை எதிர்பார்க்கிறார். மேலும் அவர் பிராமணர்கள் மேல் ஒரு வெறுப்போடேயே வந்தார். இவ்வெறுப்புக்கு வினவு போன்ற தளங்கள் மட்டுமன்று: பலபல சமூக காரணங்களும் பெரியார் காலத்திலிருந்தே விதைக்கப்பட்டதால், இவரும் அப்பாதிப்புக்குள்ளாகியே தன் அடுக்குமாடி வாழ்க்கையை வாழ வந்திருக்கிறார்.

    அடுக்குமாடி வாழ்க்கை – GOOD FENCES MAKE GOOD NEIGHBOURS என்ற தியரியில் அடிப்படையில் எழுகிறது. மேலும் தம்மை குறைத்து மதிப்பிடுவார்களோ என்ற எண்ணத்தினால் டிஃபென்ஸ் மெக்கானிசம் போல பல போலி வேடங்களைப்போட்டு வாழவேண்டிய கட்டாயம்.

    நகர வாழ்க்கையின் அவலங்களுக்கு அனைவருமே அடிமைகளாக இருக்கும்போது, பிராமணர்களை மட்டும் தனித்துப்பேச காரணம் பிராமணத்துவேசம் தவிர வேறென்ன?

  46. தன் சக மனிதர்களை பார்த்து “பறைப்பையன்” என்று அழைக்கும் இந்த[Bull Shit [BS] ] சாதிவெறி ______பார்த்து தேவரடியார் பையன் அழக்க எனக்கும் உரிமை உள்ளது அல்லவா வினவு ? ஏன் அந்த சாதி வெறி_______ பின்னுட்டத்தை முழுவதும் நீக்கிவிட்டிர்கள் வினவு ?

    • பறைப்பையன் என்றால், பறையருக்குப் பிறந்த பையன் என்று அர்த்தம். பார்ப்பனப் பையன் என்று சொல்லிவிட்டுபோங்களேன். பார்ப்பனருக்குப் பிறந்த பையன் என்று அர்த்தம். எவரும் தப்பாக எடுக்க மாட்டார்கள்.

      ______

      இயேசு சொன்னார்: உன் கண்ணில் உள்ள துரும்பை அகற்றாமல் மாற்றான் கண்ணில் உள்ள தூணை அகற்ற முயலாதே. இன்னும் சொல்வார்: பிறருக்கு என்ன வழங்குகிறாயே அதுவே உனக்கும் வழங்கப்படும்.

      வள்ளுவர் சொன்னார்: பிறருக்கு இன்னா செய்யின் தனக்கின்னா தாமே வரும். ஏலே! தூத்துக்குடியில செய்றது இங்கே வந்து மாட்டிக்கிட்டில்லா 🙂

      அபார்ட்மென்ட் பிராமணர்கள் அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழ்கிறார்கள். உங்களை ஏமாற்றி பிழைக்கல. உங்ககிட்ட வந்து கெஞ்சல! உன் ஜோலியைப்பார்த்துகிட்டுப் ________. அவங்க ஜோலியை அவங்க பாத்துக்குவாங்க!

      • இவ்வளவு பேசும் மயிரு பிடுங்க்கர் Bull Shit [BS ]க்கு தலித் மக்களின் சாதிகளை வைத்து ஒருமையில் அழைப்பது சட்டப்படி தவறு என்று கூட தெரியவில்லை ! சரிசரி மசுரு பிடீங்கி திருந்த சாத்தியம் இல்லை ! தலித் மக்களிடம் நேரில் அழைத்து பார்கட்டும் அப்போது தெரியும் மயிரு பிடுங்க்கருக்கு செருப்படி கிடைக்குமா இல்லை தொடப்பகட்ட அடி கிடைக்குமா என்று ! இன்னும் ஒரு முறை அந்த வார்த்தையை மயிரு பிடுங்க்கர் வினவில் பயன் படுத்தினால் இந்த மயிரு பிடுங்க்கர் அவர்களை _________என்று தான் அழைக்க வேண்டி இருக்கும்.

        • தமிழ் அவர்களின் கருத்தை நானும் ஆதரிக்கிறேன். BS இன் வாய்க்கொழுப்பு மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது. எல்லாவற்றையும் மட்டுறுத்தல் செய்யும் வினவு, அவர் தலித் மக்களை ஒருமையில் அழைத்ததை மட்டும் ஏன் மட்டுறுத்தல் செய்யவில்லை. உதாரணமாக, இக்காலத்தில், அமெரிக்காவில், ஆபிரிக்கஅமெரிக்கர்கள் உட்பட அனைவரும் சட்டத்தின் முன்னால் சமமாக இருந்தாலும், கறுப்பினமக்களை யாரும் நீக்ரோ என்று யாரும் அழைப்பதில்லை. ஏனென்றால் அவர்கள் அடிமைகளாக இருந்த போது, நீக்ரோ என்ற வார்த்தையால் அழைக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்டனர் என்பதால் தான். ஆபிரிக்கஅமெரிக்கன் எவனையாவது, யாரும் (அதிலும் குறிப்பாக அவர்களை அடிமையாக்கி வைத்திருந்த வெள்ளையினத்தவர் யாராவது) அப்படி அழைத்தால், அப்படி அழைத்தவனின் அத்தனை பல்லையும் உடைத்துக் கையில் கொடுத்து விட்டுப் போய்க்கொண்டேயிருப்பார்கள். அதற்கும் BS இன் ‘பறைப்பையன் என்ற வார்த்தைப் பிரயோகத்துக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. அவர் இப்படி தமிழ்நாட்டில் வெளிப்படையாக பேசினால் அவரது முப்பத்திரண்டு பல்லையும் கழற்றி அவரது கையில் கொடுப்பார்களென நான் நம்புகிறேன், அல்லது அப்படியான நிலை ஏற்பட வேண்டும் அப்பொழுது தான், BS போன்றவர்களின் வாய்க்கொழுப்பு அடங்கும்.

      • வினாவுக்கு தெரியாதா இந்த வார்த்தையை தலித் மக்களை நோக்கி பயன்படுத்த கூடாது என்று ?

        பின்பு ஏன் bs கொடுக்கும் விளக்கத்தில் மீண்டும் மீண்டும் அவ்வார்த்தையை பயன்படுத்த வினவு அனுமதிக்கின்றது ?

        சரி அப்படி அனுமதிக்கும் போது Bull Shit ஐ நோக்கி நான் கூறும்”பாலியல் தொழில் செய்யும் பெண்ணின் மகனார்” என்பதையும் அனுமதிக்க வேண்டியது தானே ?

        ஏன் ஓரவஞ்சனை செய்கின்றது வினவு ?

        //”””பறைப்பையன்””” என்றால், பறையருக்குப் பிறந்த பையன் என்று அர்த்தம். பார்ப்பனப் பையன் என்று சொல்லிவிட்டுபோங்களேன். பார்ப்பனருக்குப் பிறந்த பையன் என்று அர்த்தம். எவரும் தப்பாக எடுக்க மாட்டார்கள். //

        • ஏன் என் கருத்தை வெளியிடாமல் இன்னும் ஓரவஞ்சனை செய்கின்றது வினவு ?

          • எனக்கும் படிக்க அவா. வினவு இவாளோட கருத்தை சென்சார் பண்ணாதீங்கோ. Let me how beautiful his thoughts are ! 😛

      • @ BS………………..

        //பறைப்பையன் என்றால், பறையருக்குப் பிறந்த பையன் என்று அர்த்தம். பார்ப்பனப் பையன் என்று சொல்லிவிட்டுபோங்களேன். பார்ப்பனருக்குப் பிறந்த பையன் என்று அர்த்தம். எவரும் தப்பாக எடுக்க மாட்டார்கள்.

        ______

        இயேசு சொன்னார்: உன் கண்ணில் உள்ள துரும்பை அகற்றாமல் மாற்றான் கண்ணில் உள்ள தூணை அகற்ற முயலாதே. இன்னும் சொல்வார்: பிறருக்கு என்ன வழங்குகிறாயே அதுவே உனக்கும் வழங்கப்படும்//

        முதலில் தாழ்த்தப்பட்ட மக்களை தவறாக பேசியமைக்காக நீங்கள் மன்னிப்பு கேளுங்கள். பிராம்மணர்களுக்கு நீங்கள் ஆதரவாக பேச விரும்புவது தங்களின் தனிப்பட்ட உரிமை அதற்காக தாழ்த்தப்பட்ட மக்களை தவாறாக பேச தங்களுக்கு எந்த உரிமையுமில்லை. இதை விடக் கொடுமை நீங்கள் பேசிய நயமில்லா பேச்சுக்கு ஏசுநாதரையும், திருவள்ளுவரையும் துணைக்கு அழைத்து கொண்டது? இரண்டிற்கும் சேர்த்து இப்பொழுதே மன்னிப்புக் கோருங்கள்…

        • ரெ. மேரி!

          எது தவறு என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுங்கள். மன்னிப்பு கேட்குமளவுக்கு அது ஒரு பெரிய தவறா என்று பரிசீலிக்கப்படும்.

          முதலில் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் எப்படி முடிவெடுத்தீர்கள்? //தாழ்த்தப்பட்ட// என்பது தகாத சொல். மன்னிப்புக் கேளுங்கள்.

          • BS,

            // அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் எப்படி முடிவெடுத்தீர்கள்? //தாழ்த்தப்பட்ட// என்பது தகாத சொல். //

            அவர்களுக்கு நிலங்களின் நீர்நிலைகளின் மீது இருந்த இயற்கையான உரிமையை வன்முறையின் மூலம் மறுக்கப்பட்டிருந்தார்கள். ஒரளவு வசதியான வசிப்பிடமோ, உடையோ, உணவோ, காலனியோ, அவர்களுக்கு வன்முறையின் மூலம் மறுக்கப்பட்டிருந்தன. இன்றும் இந்நிலைகள் பெருமளவு நீடிக்கின்றது. கோயில்களுக்குள் அனுமதி மறுப்பு போன்ற இன்னும் பல மறுப்புக்கள் இருந்தன. இவைகளைக் குறிக்கும் விதத்தில் ஒரு தகும் சொல்லை நீங்களே கொடுக்கவும்.

      • //இயேசு சொன்னார்: உன் கண்ணில் உள்ள துரும்பை அகற்றாமல் மாற்றான் கண்ணில் உள்ள தூணை அகற்ற முயலாதே. இன்னும் சொல்வார்: பிறருக்கு என்ன வழங்குகிறாயே அதுவே உனக்கும் வழங்கப்படும்.// அவரு சொன்னத அப்பிடியே மாத்தி சொல்லுறுறீங்களே பி எஸ் அவரு சொன்னது உன் கண்ணிலுருக்கும் உத்திரத்தை அகற்றாமல் மற்றவன் கண்ணில் இருக்கும் துரும்பை அகற்ற வழி பார்ப்பது ஏன் என்றுதான் நீங்கள் மற்றவர்களுக்கு எந்த அளவால் அளக்கிறீர்களோ அதே அளவுதான் உங்களுக்கும் அளக்கப்படும் என்றுதான் இன்னோன்னயம் சொல்லி இருக்கார் மரத்தின் தன்மை கனியில் உன்டு உங்கள் மனத்தின் தன்மை சொல்லில் உண்டு எனவே நல்ல வார்த்தை பேசுங்கள் அப்பிடினு ஆனா பறப்பயலேனு ஒரு சக மனிதன சொல்லி உங்க மனத்தின் தன்மையை வெளிக்காட்டி விட்டீர்களே உங்கள் மனத்தி தன்மை நான் அறியேன் அது இழிவு படுத்த சொல்லப்பட்டதா இல்லை போகிற போக்கில் வந்ததா என்று…

  47. You can write any nonsense about Brahmans. Can you write about Muslims and Christians. Pl write your next article if you have b.l.s. All third rate articles for cheap popularity and make money.

    • This article is written by a woman. She is one of the many readers of this blog. Not part of its management. It is based on her bitter experiences with the inmates of her apartment building, particularly the Tamil Brahmins.

      Vinavu has written many articles before criticising Muslims and Christians and other castes also.

      You can send an article to them if you have had bitter experiences with either Muslims or Christians, or any caste. I am sure they will release it. I have bitter experiences with the dalits. I am going to send an article to Vinavu.com soon 🙂 All are to be subjected to criticism. No one is perfect.

      In such circumstances, I don’t know how you view is justifiable.

      • // I have bitter experiences with the dalits. I am going to send an article to Vinavu.com soon 🙂 //

        பார்ப்பானுக்கு முன்புத்தியுமில்லை, பின்புத்தியுமில்லை என்பதை புரிந்துகொண்டுதான் பெரியார் பார்ப்பனர்களுக்கு எதிராக பிற சாதியினரை அத்தனை எளிதாக மடைமாற்றினார்..!

        //பிராமணர்கள் அவர்கள் குழந்தைகளோடு சேரவிடாமல் மேட்டிமையோடு வளர்க்கிறார்கள் என்று சொல்லும் இவர், தன் குழந்தையை தூத்துக்குடியில் வளர்த்தால், பறைப்பையன்களோடு விடமாட்டார். அவ்வளவு ஜாதித்துவேசத்தைக் கடைபிடிக்கிறார்கள் இவர் மீனவ ஜாதியினர்.//

        ’பறைப்பையன்கள்’ என்று கூறும் உரிமை பறையர் வகுப்பைச் சேர்ந்த நண்பர்களுக்கு வேண்டுமாயின் இருக்கலாம்.. பிற சாதியினர் அவ்வாறு கூறுவது முறையுமல்ல, உரிமையும் இல்லை.. எனவே, இப்படி கூறியதற்கு நீங்கள் மனப்பூர்வமாக பறையர் வகுப்பினரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, ‘தலித் குழந்தைகளோடு’ என்று மாற்றிக்கொண்டு இதையே கேள்வியாக மீண்டும் கேட்கலாம்.. உங்களுக்கு எதிராக இங்கு சாதி மறுப்பு ஆர்ப்பாட்டம் நடத்தும் நாடார்,மீனவ, வேளாள இன்ன பிற சாதிகளைச் சேர்ந்த இந்த நண்பர்கள் என்ன பதில் கூறுகிறார்கள் என்பதையும் பார்க்கலாம்..

        • தலித் என்ற சொல் மராட்டிச்சொல். மராட்டியர்களில் புத்த தலித்துகள் அதிகம். ஹரிஜன் என்ற சொல்லை அவர்கள் விரும்பவில்லை. எனவே தலித் என்று வைத்துக்கொண்டார்கள். இவர்கள் எந்த மதத்தைச்சேர்ந்தாலும் குறிக்கும் பொதுப்பெயராக.

          பறையர் என்றால் தூய தமிழ்ச்சொல். எனவே தமிழ்ச்சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அச்சொல்லைப் பயன்படுத்த தமிழர் அனைவருக்கும் உரிமையுண்டு. அச்சொல் அவச்சொல்லாக கருதினால், பள்ளரகள் ஒரு புதிய சொல்லைத் தங்களுக்குக் கொண்டதைப்போல பறையர்கள் கொண்டால், சொல்லவும். கிருஷ்ணப்பறையனார் என்று சுவர்களில் கொட்டை யெழுத்துக்களில் எழுதிப்போட்டிருக்கிறார்களே எப்படி? ஆதிதிராவிடர் சொல் பறையரை மட்டும் குறிக்காது. நிறைய ஜாதிகளை உள்ளடக்கிய சொல். ____________________________________

          அம்பிக்கு பார்ப்ப்னர் என்ற சொல்மீது விமர்சனம் ஏதுமில்லையோ?

          • BS

            // பறையர் என்றால் தூய தமிழ்ச்சொல். எனவே தமிழ்ச்சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அச்சொல்லைப் பயன்படுத்த தமிழர் அனைவருக்கும் உரிமையுண்டு.//

            ’பறைப்பையன்கள்’ என்பது தமிழ் சொல், அதை பயன்படுத்த தமிழர் அனைவருக்கும் உரிமை உண்டு என்று உரிமை கொண்டாடும் அளவுக்கு தமிழ் பாசம் இருந்தால் பறையர் குழந்தைகள் என்று கூறியிருக்கலாம்.. இது கவனக் குறைவு என்றால், “ I have bitter experiences with the dalits. I am going to send an article to Vinavu.com soon” என்றதன் மூலம் தமிழ்ப்பாசத்தையும் மீறிய பறையர் மீதான காழ்ப்புணர்ச்சிதான் தெரிகிறது.. இதைத்தான் பறையர் அல்லாத மேலடுக்கு சாதியினர் அனைவரும் ‘பறையன்’ என்று கூறும்போது வெளிப்படுத்துகிறார்கள்.. இவர்கள் இந்தப் பக்கம் பார்ப்பனன் என்று கூறும்போது அதில் பார்ப்பன சாதி மீதான துவேசம் தெரிகிறது என்றால், அந்தப் பக்கம் திரும்பி பறையன் என்று கூறும்போது அதில் சாதி துவேசத்துடன் சாதிய இழிவும் சேர்ந்துகொண்டு வழிகிறது.. இதை எதிர்கொள்ள தங்களை பறையன்,பறையனார் என்று பெருமிதத்துடன் கூறிக்கொள்ளும் சுயமரியாதை பறையர்களுக்கு இருப்பதை பிற சாதியினர் ஏற்றுக்கொள்வதாயிருந்தால் அவர்களை நடைமுறையிலும் சக சாதியாக ஏற்க வேண்டும்.. அதல்லாமல் பறையன் என்று தொடர்ந்து கூறிக்கொண்டே அழுத்துவதுதான் நடக்கிறது.. இந்தச் சூழலில் பிற சாதியினர் பறையன் என்று கூறுவதை எந்த சாக்கை முன்னிட்டும் நியாயப்படுத்த முடியாது..

            // அச்சொல் அவச்சொல்லாக கருதினால், பள்ளரகள் ஒரு புதிய சொல்லைத் தங்களுக்குக் கொண்டதைப்போல பறையர்கள் கொண்டால், சொல்லவும். கிருஷ்ணப்பறையனார் என்று சுவர்களில் கொட்டை யெழுத்துக்களில் எழுதிப்போட்டிருக்கிறார்களே எப்படி? //

            ஆற்று நீர், ஏரி நீர்ப் பாசன வயல்கள் பள்ளத்தில் இருந்தால்தான் வாய்க்கால் வழியே நீர் வயலில் பாய்ந்து தேங்கும்.. இதை வைத்தே நஞ்செய் விவசாயிகளாயிருந்த வேளாண்குடி மள்ளர்களை பள்ளர் என்றழைத்த நையாண்டியுடன் பின்னாளில் அவர்கள் நிலமிழந்த போது ஒடுக்குமுறை சார்ந்த இழிவும் சேர்ந்து கொண்டது.. இதனாலேயே பள்ளர் என்ற பட்டப்பெயரை உதறி தேவேந்திரகுல வேளாளர் என்றும், மள்ளர் என்றும் தங்களை மீட்டெடுக்கும் அவசியம் இருப்பதாக அவர்கள் உணர்கிறார்கள்.. முன்பு ஒரு விவாதத்தில் வியாசனின் வேளாள சாதிவெறி பள்ளர்களை மள்ளர்களாக ஏற்க மறுத்தது.. யாழ் வெள்ளாளருக்கு அடங்கி ’கள்ளப்பார்ப்பணிகள்’ கோவிலுக்குள்ளும், தலித் மக்கள் கோவிலுக்கு வெளியிலுமாக இருந்த பொற்காலக் கனவில் அவர் உலவுகிறார்.. பறையர் மேல் தற்போது அவருக்குள்ள பரிவைவிட தமிழக பார்ப்பனர்களை கள்ளப்பார்ப்பனிகள் என்றழைக்க விழையும் அவரது ஆதிக்கசாதி வெறிதான் இங்கும் மேலோங்கித் தெரிகிறது.. வியாசன் போன்றவர்களின் ஆசைக்கு துணைபோகிறது பறையன் என்ற தமிழ்ப்பெயரை மட்டும் காரணம் ஏதுமின்றி குறிவைக்கும் உங்களது தமிழ்ப்பாசம்..

            பறையர் தமிழகத்தில் தொல்குடிகள், தொன்மையான தங்கள் இனக்குழு பெயரை மாற்றுவதைவிட அதில் சுமத்தப்பட்ட இழிவை சாதிப் பெருமிதம் மூலம், கல்வி-ஒருங்கிணைப்பு-போராட்டங்கள் வழியே நடைமுறை வாழ்வியலில் இருந்து நீக்கும்வரை அவர்களை பிறசாதியினரும் பறையன் என்றழைப்பது சரியன்று..

            • வினவில் பார்ப்பனர்களை நியாயப்படுத்துவதிலும் அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதிலுமே காலத்தைக் கழிக்கும் அம்பி அவர்கள், ‘பறையருக்குப் பிறந்தவன் பறைப்பையன்’ என்று பச்சையாகச் சாதிவெறியைக் கக்கிய BS ஐ மற்றவர்களுக்கு முன்பே கண்டித்திருந்தால், அவரது சாதிமறுப்பு நிலைப்பாட்டுக்கு அது உறுதி சேர்த்திருக்கும். ஆனால் அதற்குப் பதிலாக, BS இன் உளறல்களை அவர் ரசித்துக் கொண்டிருக்கும் போது, அந்த உளறல்களைப் பொறுக்கமுடியாமல். யாழ்ப்பாணத்தில் ‘கள்ளப்பிராமணி’ என்று பார்ப்பனர்களை அழைப்பதை வெறும் உதாரணமாகக் காட்டி, பறையருக்குப் பிறந்தவன் பறைப்பையன் என்றால், கள்ளப்பிராமணிக்குப் பிறந்தவன் கள்ளப்பிராமணிபையனா, என்று நான் கேட்டது அம்பிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது போல் தெரிகிறது. அதனால் நான் தமிழக பார்ப்பனர்களைக் கள்ளப்பிராமணிகள் என்றழைக்க ‘விழைகிறேன்’ என்று வரிந்து கட்டிக் கொண்டு என்னுடன் சண்டைக்கு வருகிறார். தனது சாதிப்பற்றை மறைக்க எனக்கு ஆதிக்கசாதி வெறி என்று கூறும் அவரைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது.

              //முன்பு ஒரு விவாதத்தில் வியாசனின் வேளாள சாதிவெறி பள்ளர்களை மள்ளர்களாக ஏற்க மறுத்தது.///

              தமிழ்நாட்டில் தமிழ்ச் சூத்திரர்கள் சாதியடிப்படையில் ஆளுக்காள் அடிபட்டுக் கொண்டு சாவது மட்டுமன்றி, ஒவ்வொரு சாதிக்கும் ஒரு புராணக்கதையையும் இயற்றி வைத்துக் கொண்டு, அதனடிப்படையில், ஒவ்வொரு சாதியினரும் தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்று பீற்றிக் கொள்வதுடன், தமிழர்களின் முன்னோர்கள், அவர்களின் புகழ், பெருமை, வெற்றி, தோல்வி எல்லாவற்றுக்கும், சாதி, மத வேறுபாடின்றி தமிழர்கள் அனைவரும் சொந்தக்காரர்கள் என்பதை மறந்து, அவர்களையும் ஒவ்வொரு சாதிவாரியாகப் பிரிப்பதும்,சாதி லேபல் ஓட்டுவதும், சங்கத்தமிழ்ப் பாடல்களைத் திரித்து, அல்லது அவற்றுக்கு வெவ்வேறு விளக்கங்கள் கொடுத்து சாதிச் சண்டைகளை முன்னெடுப்பதும், தமிழனாகிய எனக்கு எரிச்சலையூட்டுகிறது. ஆனால் அம்பி போன்றவர்கள் அப்படியான பிளவுகளை ஆதரிப்பதற்கு உள்நோக்கங்கள் இருக்கலாம்.

              மள்ளர்களை மட்டுமல்ல, இப்படியான சாதி வெறியில் சேர, சோழ பாண்டிய, பல்லவ மன்னர்களை வன்னியர்கள், தேவர்கள், உடையார்கள், உடைந்தவர்கள் என்று சொந்தம் கொண்டாடும் ஆதிக்கசாதிகளின் காணொளிகளில், வலைப்பதிவுகளில் வெவ்வேறு பெயர்களில் போய் அவர்களைக் கேலிசெய்து, அவர்களை நக்கலடித்து, அவர்களின் பொய்களைச் சுட்டிக்காட்டியதால், பலர் என்னைத் தடை செய்துமிருக்கிறார்கள். அது மட்டுமன்றி அப்படியான செயலை எதிர்த்து எனது வலைப்பதிவில் எழுதியுமிருக்கிறேன். உதாரணமாக, வன்னியர்கள் அக்கினியிலிருந்து உருவாகவில்லை, காட்டுப்பன்றிகளிலிருந்து தான் உருவாகியவர்கள் என்று கூட நான் எனது வலைப்பதிவில் நக்கலடித்திருக்கிறேன்.

              என்னைப் பொறுத்த வரையில் ஆதிக்க சாதியினராக இருந்தாலென்ன, அடிமட்டத்திலுள்ள சாதியினராக இருந்தாலென்ன தமிழர்களைச் சாதியடிப்படையில் பிரிப்பவர்களை நான் எதிர்க்கிறேன்.

              //யாழ் வெள்ளாளருக்கு அடங்கி ’கள்ளப்பார்ப்பணிகள்’ கோவிலுக்குள்ளும், தலித் மக்கள் கோவிலுக்கு வெளியிலுமாக இருந்த பொற்காலக் கனவில் அவர் உலவுகிறார்.///

              கண்டதுக்கும் கனவு காணும் பழக்கம் எனக்குக் கிடையாது. இது ஈழத்தமிழர்களின் கற்காலமோ அல்லது பொற்காலமோ எனக்குத் தெரியாது இன்றைக்கும் ‘கள்ளப்பிராமணிகள்’ ஈழத்தமிழர்களின் கோயிலுக்குள் யாழ்ப்பாண வெள்ளாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் தான் நிற்கிறார்கள் , ஆனால் தமிழ்த் தலித்துகள் எல்லோரும் அவர்களுக்குச் சமமாக, சுதந்திரமாக கோயிலுக்குள் நிற்கிறார்கள். இந்த விடயத்தில் தமிழ்நாட்டுத் தமிழர்களை விட ஈழத்தமிழர்கள் மிகவும் புத்திசாலிகள் என்று தான் எனக்குப் படுகிறது. ஏனென்றால் ஈழத்தில் இப்படி வாய்க்கொழுப்பு நிறைந்த BS கள் யாரும் கிடையாது. 🙂

              • சாதியே தேவை இல்லாத போது அக்கினியில் பிறந்தவன் ,சாதியில் முந்தி பிறந்தவன் ,பிரம்மனின் தலையில் பிறந்தவன் என்ற சாதி புகழ் பாடும் பஜனைகள் எல்லாம் எதற்கு ? வியாசனின் கேள்வி நியாயம் தானே ? சாதியை மறந்து தமிழராய் ஓர் இனமாக ஒன்று படுவதில் என்ன தவறு கண்டார்கள் சாதி பற்றாளர்கள்

                • ஒரு விபத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியினை சேர்ந்தவருக்கு அதிக இரத்த இழப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும்போது இன்ன சாதி இரத்தம் தான் கொடுக்க வேண்டும் என்று அடம் பிடிப்பாரா?

                  நாம் உண்ணும் உணவு, நான் உடுத்தும் உடை, இவை நம்மை வந்து அடைவதற்கு எத்தனை எத்தனை சாதி மனிதர்களின் பந்கு, உழைப்பு, அடங்கியுள்ளது.

                  சாதியை மறப்போம், மதத்தை பறப்போம், மனிதராய் மாறுவோம்.

              • // வினவில் பார்ப்பனர்களை நியாயப்படுத்துவதிலும் அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதிலுமே காலத்தைக் கழிக்கும் அம்பி அவர்கள், ‘பறையருக்குப் பிறந்தவன் பறைப்பையன்’ என்று பச்சையாகச் சாதிவெறியைக் கக்கிய BS ஐ மற்றவர்களுக்கு முன்பே கண்டித்திருந்தால், அவரது சாதிமறுப்பு நிலைப்பாட்டுக்கு அது உறுதி சேர்த்திருக்கும். ஆனால் அதற்குப் பதிலாக, BS இன் உளறல்களை அவர் ரசித்துக் கொண்டிருக்கும் போது, அந்த உளறல்களைப் பொறுக்கமுடியாமல். யாழ்ப்பாணத்தில் ‘கள்ளப்பிராமணி’ என்று பார்ப்பனர்களை அழைப்பதை வெறும் உதாரணமாகக் காட்டி, பறையருக்குப் பிறந்தவன் பறைப்பையன் என்றால், கள்ளப்பிராமணிக்குப் பிறந்தவன் கள்ளப்பிராமணிபையனா, என்று நான் கேட்டது அம்பிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது போல் தெரிகிறது. //

                பார்ப்பானை ஏன் கள்ளப்பிராமணி என்று தமிழகத்தில் அழைப்பதில்லை என்ற வருத்தத்தில், நீங்கள் கள்ளப்பிராமணி என்ற பெயரை பரிந்துரை செய்தது பின்னூட்டம் 55.1-ல் (January 8, 2015 at 5:50 am).. BS-க்கு நான் அதற்கு முன்பே பதில் அளித்திருப்பது பின்னூட்டம் 54.1.1.-ல் (January 8, 2015 at 4:31 am)..

                // தமிழ்நாட்டில் தமிழ்ச் சூத்திரர்கள் சாதியடிப்படையில் ஆளுக்காள் அடிபட்டுக் கொண்டு சாவது மட்டுமன்றி, ஒவ்வொரு சாதிக்கும் ஒரு புராணக்கதையையும் இயற்றி வைத்துக் கொண்டு, அதனடிப்படையில், ஒவ்வொரு சாதியினரும் தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்று பீற்றிக் கொள்வதுடன், தமிழர்களின் முன்னோர்கள், அவர்களின் புகழ், பெருமை, வெற்றி, தோல்வி எல்லாவற்றுக்கும், சாதி, மத வேறுபாடின்றி தமிழர்கள் அனைவரும் சொந்தக்காரர்கள் என்பதை மறந்து, அவர்களையும் ஒவ்வொரு சாதிவாரியாகப் பிரிப்பதும்,சாதி லேபல் ஓட்டுவதும், சங்கத்தமிழ்ப் பாடல்களைத் திரித்து, அல்லது அவற்றுக்கு வெவ்வேறு விளக்கங்கள் கொடுத்து சாதிச் சண்டைகளை முன்னெடுப்பதும், தமிழனாகிய எனக்கு எரிச்சலையூட்டுகிறது. ஆனால் அம்பி போன்றவர்கள் அப்படியான பிளவுகளை ஆதரிப்பதற்கு உள்நோக்கங்கள் இருக்கலாம். //

                சமத்துவமும், சகோதரத்துவமும் ஏற்படாமல் தமிழ்ச் சாதிகள் முழுமையாக ஒன்று பட இயலாது.. உங்கள் எரிச்சலுக்கு காரணம் வேறு..

                // மள்ளர்களை மட்டுமல்ல, இப்படியான சாதி வெறியில் சேர, சோழ பாண்டிய, பல்லவ மன்னர்களை வன்னியர்கள், தேவர்கள், உடையார்கள், உடைந்தவர்கள் என்று சொந்தம் கொண்டாடும் ஆதிக்கசாதிகளின் காணொளிகளில், வலைப்பதிவுகளில் வெவ்வேறு பெயர்களில் போய் அவர்களைக் கேலிசெய்து, அவர்களை நக்கலடித்து, அவர்களின் பொய்களைச் சுட்டிக்காட்டியதால், பலர் என்னைத் தடை செய்துமிருக்கிறார்கள். அது மட்டுமன்றி அப்படியான செயலை எதிர்த்து எனது வலைப்பதிவில் எழுதியுமிருக்கிறேன். உதாரணமாக, வன்னியர்கள் அக்கினியிலிருந்து உருவாகவில்லை, காட்டுப்பன்றிகளிலிருந்து தான் உருவாகியவர்கள் என்று கூட நான் எனது வலைப்பதிவில் நக்கலடித்திருக்கிறேன். //

                அந்த காரணம், சைவ வெள்ளாளனை வேறு எந்த சாதிக்காரனும் ஓவர் டேக் செஞ்சுறப்படாது என்பதுதானே..!

                // என்னைப் பொறுத்த வரையில் ஆதிக்க சாதியினராக இருந்தாலென்ன, அடிமட்டத்திலுள்ள சாதியினராக இருந்தாலென்ன தமிழர்களைச் சாதியடிப்படையில் பிரிப்பவர்களை நான் எதிர்க்கிறேன். //

                தமிழர்கள் சாதியடிப்படையில் பிரியாமல் சைவ வேளாளர் தலைமையில் ஒன்று திரளவேண்டும் அல்லவா..?!

                // இன்றைக்கும் ‘கள்ளப்பிராமணிகள்’ ஈழத்தமிழர்களின் கோயிலுக்குள் யாழ்ப்பாண வெள்ளாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் தான் நிற்கிறார்கள் , ஆனால் தமிழ்த் தலித்துகள் எல்லோரும் அவர்களுக்குச் சமமாக, சுதந்திரமாக கோயிலுக்குள் நிற்கிறார்கள். //

                அங்கு எல்லாரும் யாழ் வெள்ளாளர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால்தான் சமத்துவம் வந்துவிட்டது என்கிறீர்கள்..!

                • சிண்டு முடித்து விடுவதில் உங்களை வெல்ல யாராலும் முடியாது. நீங்கள் பதிலளிக்கு முன்பே, அதாவது, தமிழ் அவர்கள் BS உடன் வாக்குவாதப்பட்டுக் கொண்டிருக்கும் போது, நீங்கள் அவரைக் கண்டிக்கவில்லை, ஏனென்றால் அவர் பார்ப்பனர்களின் சார்பில் அடித்து விளாசிக் கொண்டிருந்தார், அதாவது உங்களின் பக்கத்தில், உங்களில் ஒருவராக இருப்பதால், நீங்கள் அவரது பதில்களை ரசித்துக் கொண்டிருந்தீர்கள். நான் BS க்கு எதிராக, தமிழ் அவர்களுக்கு எனது ஆதரவைத் தெரிவித்தவுடன், நீங்களும் சும்மா, ‘நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறன், நீ அழுகிற மாதிரி அழு’ என்பது போல் சாடை மாடையாக அவரைக் கண்டித்தீர்கள், ஆனால் நான் யாழ்ப்பாணத்தில் பார்ப்பனர்களை ‘கள்ளப்பிராமணிகள்; என்பார்கள், என்பதை வெறும் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டது கூட, உங்களின் சாதிமீதுள்ள அதீத பற்றால், உங்களால் தாங்க முடியவில்லை. அதனால், நான் எப்பவோ, பள்ளர்களை, மள்ளர்கள் என்று ஏற்றுக் கொள்ளவில்லையென்று கூறி, என்னையும், BS ஐ எதிர்க்கும் தமிழ் ஏனைய தமிழர்களையும் சிண்டு முடித்து விடப் பார்த்தீர்கள். ஆனால் அது திட்டமிட்ட படி வேலை செய்யவில்லை, ஆகவே இப்பொழுது, யாழ்ப்பாண வெள்ளாளர்களையும், தமிழ்நாட்டுத் தமிழர்களையும் சிண்டு முடித்து விடப் பார்க்கிறீர்கள். ஜெயலலிதா நான் ஒரு பாப்பாத்தி என்று சட்டசபையிலேயே பீற்றிக் கொண்டார், ஆனால் இவ்வளவுக்கும் வெறும் வலைப்பதிவில் கூட நான் ஒரு யாழ். வெள்ளாளன் என்று பீற்றிக் கொண்டதாக எனக்கு நினைவில்லை.

                  தமிழ்நாட்டுத் தமிழர்களைப் போல இளிச்ச வாயர்களாக, தமது முன்னோர்கள் கட்டிய, தமிழர்களின் பாரம்பரிய கோயில்களையே பார்ப்பனர்களிடம் கையளித்து விட்டு, அவர்களுக்கு முன்னால் கைகட்டி, வாய்புதைத்து, செய்வதறியாது நிற்காமல், கள்ளப்பிராமணிகளின் குணமறிந்தோ என்னவோ, அவர்களை கருவறைக்கும், மடைப்பள்ளிக்குமிடையே மட்டும் நடையாய், நடக்க விட்டு, விட்டு கோயில் சாவி அத்தனையையும் தாங்களே வைத்துக் கொண்ட யாழ்ப்பாண வெள்ளாளர்களின் தீர்க்கதரிசனம் நிறைந்த புத்திசாலித்தனத்தைப் பார்த்து தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களுக்குக் அவர்கள் மீது கோபம் வருவதில் நியாயமுண்டு தான். 🙂

                  • Viyaasan

                    I see you talking about Yaazhpanam Saiva Vellalar in every single post of yours and explaining us how things work in Jaffna.Now you claim that you have not done anything like that,you are not the one and only yaazhpanam vellalar or tamil people have known or encountered in life.

                    BS has said nothing wrong in calling paraiyar as paraiyar,calling an african american as negro/nigger is a racial statement about his skin colour and ethnicity/calling a mallar as pallar is also a similar statement and thus pallar people call themselves devendra kula vellalar but if paraiyar people strongly feel the caste name accorded to them is humiliating,they should change it but i dont see anything humiliating in the name parai or parai adithal but i agree that it would certainly remind them of the brutal past they have encountered.

                    But as long as they dont change the name like pallars. they can’t be blaming people for using that term.

                    There may be PCR law and such things but most people will still be abusing them using that term in private conversations.

                    • To call Dalit by caste is an offense: Supreme Court [A bench of justices Markandeya Katju and Gyan Sudha Misra ]

                      Calling a Dalit by his caste with a view to insulting him or her is an offence under Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities Act), the Supreme Court has ruled, upholding the conviction of two persons in Tamil Nadu.

                      “The word ‘pallan’ no doubt denotes a specific caste, but it is also a word used in a derogatory sense to insult someone (just as in North India the word chamar denotes a specific caste but it is also used in a derogatory sense to insult someone).

                      “Even calling a person a ‘pallan’, if used with the intent to insult a member of the Scheduled Caste, is, in our opinion, an offence under Section 3(1)(x) of the Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities Act), 1989,” Justice Katju writing the judgement said

                      The apex court said to call a person as a ‘pallapayal’ in Tamil Nadu is also an offence. “Similarly, in Tamil Nadu, there is a caste called ‘parayan’ but the word ‘parayan’ is also used in a derogatory sense. The word ‘paraparayan’ is even more derogatory.

                      “In our opinion, uses of the words ‘pallan’, ‘pallapayal’ ‘parayan’ or ‘paraparayan’ with intent to insult is highly objectionable and is also an offence under the Scheduled Cast/ Scheduled Tribe Act. It is just unacceptable in the modern age, just as the words ‘Nigger’ or ‘Negro’ are unacceptable for African-Americans today ,” the bench said.

                  • Yes Viyasan,, as you said already …..

                    A bench of justices Markandeya Katju and Gyan Sudha Misra in Supreme Court of India said:

                    “In our opinion, uses of the words ‘pallan’, ‘pallapayal’ ‘parayan’ or ‘paraparayan’ with intent to insult is highly objectionable and is also an offence under the Scheduled Cast/ Scheduled Tribe Act. It is just unacceptable in the modern age, just as the words ‘Nigger’ or ‘Negro’ are unacceptable for African-Americans today ,” the bench said.

                    Thanks for your advanced information providing sense ! Good .., Keep it up! Go ahead

                  • // நீங்கள் பதிலளிக்கு முன்பே, அதாவது, தமிழ் அவர்கள் BS உடன் வாக்குவாதப்பட்டுக் கொண்டிருக்கும் போது, நீங்கள் அவரைக் கண்டிக்கவில்லை, ஏனென்றால் அவர் பார்ப்பனர்களின் சார்பில் அடித்து விளாசிக் கொண்டிருந்தார், அதாவது உங்களின் பக்கத்தில், உங்களில் ஒருவராக இருப்பதால், நீங்கள் அவரது பதில்களை ரசித்துக் கொண்டிருந்தீர்கள். நான் BS க்கு எதிராக, தமிழ் அவர்களுக்கு எனது ஆதரவைத் தெரிவித்தவுடன், நீங்களும் சும்மா, ‘நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறன், நீ அழுகிற மாதிரி அழு’ என்பது போல் சாடை மாடையாக அவரைக் கண்டித்தீர்கள்,//

                    உங்கள் பின்னூட்டம் 53.1.1.1-ஐ (January 7, 2015 at 9:12 am) பார்த்துதான் நானும் சாடை மாடையாக கண்டித்தேன் என்று கூறுவது உங்கள் கற்பனை.. வழக்கம் போல் மறுநாள் (8ம் தேதி) அதிகாலையில்தான் என்னால் பின்னூட்டம் (54.1) இட இயன்றது..

                    // யாழ்ப்பாண வெள்ளாளர்களையும், தமிழ்நாட்டுத் தமிழர்களையும் சிண்டு முடித்து விடப் பார்க்கிறீர்கள். //

                    யாழ் சைவ வெள்ளாளர்கள் அனைவருமே உங்களைப் போன்று சுயசாதி மோகம் கொண்டவர்கள் என்று நானும் கூறவில்லை.. நீங்கள் யாழ் வெள்ளாளர்களின் ஏகபோக பிரதிநிதியாக இங்கே வந்து சலம்புவதால் வரும் வினை இது.. நான் உங்களுடன்தான் உங்கள் எண்ணவோட்டங்களைப் பற்றி விவாதிக்கிறேன், தங்களைப் போன்ற சுயசாதி சார்ந்த கருத்துகள் கொண்ட யாழ் வெள்ளாளர்களைத்தான் விமர்சிக்கிறேன்..

                    // ஜெயலலிதா நான் ஒரு பாப்பாத்தி என்று சட்டசபையிலேயே பீற்றிக் கொண்டார், ஆனால் இவ்வளவுக்கும் வெறும் வலைப்பதிவில் கூட நான் ஒரு யாழ். வெள்ளாளன் என்று பீற்றிக் கொண்டதாக எனக்கு நினைவில்லை. //

                    ”கள்ளப்பிராமணிகளின் குணமறிந்தோ என்னவோ, அவர்களை கருவறைக்கும், மடைப்பள்ளிக்குமிடையே மட்டும் நடையாய், நடக்க விட்டு, விட்டு கோயில் சாவி அத்தனையையும் தாங்களே வைத்துக் கொண்ட யாழ்ப்பாண வெள்ளாளர்களின் தீர்க்கதரிசனம் நிறைந்த புத்திசாலித்தனத்தைப் பார்த்து” புளகாங்கிதம் அடைந்து கொண்டே
                    இதைக் கூறுவது நகைமுரணாகத் தெரியவில்லையா..!

                    • சுயசாதி மோகத்தைப் பற்றி நீங்கள் கூறுவது தான் வேடிக்கை, ஏனென்றால் நீங்கள் வினவில் காலத்தைக் கழிப்பதற்குக் காரணமே உங்களின் சாதியினரை நியாயப்படுத்தத் தான் என்பது உங்களின் பதில்களிலிருந்தே எல்லோருக்கும் தெரியும். உண்மையில் இந்த தளத்தில் பார்ப்பனர்கள் சம்பந்தப்பட்ட விடயங்களில் நீங்கள் முழு மூச்சாக புலம்புவது போல, ஏனைய விடயங்களைப் பற்றி அக்கறையாகப் பேசியதாக எனக்குத் தெரியவில்லை.

                      நான் ஒன்றும் யாழ்ப்பாண வெள்ளாளர்களின் பிரதிநிதியாகவோ அல்லது ஈழத்தமிழர்களின் பிரதிநிதியாகவோ இங்கு பங்குபற்றவில்லை, என்னைப்பொறுத்த வரையில் சாதிக்கு நான் எங்குமே முதலிடம் கொடுப்பதில்லை, அதை விட, இங்கு எவரும் யாழ்ப்பாண வெள்ளாளர்களுக்கு அல்லது ஈழத்தமிழர்களுக்கு எதிராக கருத்துத் தெரிவிப்பதாகவோ, அல்லது இந்த இணையத்தளத்தின், அல்லது இங்கு வெளிவரும் கட்டுரைகளின் நோக்கம் ஈழத்தமிழர்களை எதிர்ப்பதாகவோ அல்லது கண்டிப்பதாகவோ எனக்குத் தெரியவில்லை. அப்படியிருக்க நான் எதற்காக இங்கு ஈழத்தமிழர்களின் அல்லது யாழ்ப்பாண வெள்ளாளர்களின் பிரதிநிதியாக இங்கு “சலம்ப” (பிராமணித் தமிழா?) வேண்டும். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ஆனால் உங்களின் சாதிக்கண்ணுக்கு அப்படித் தான் தெரியும், அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.

                      நான் ஈழத்தமிழனாகையால், என்னுடைய பதில்களில் இலங்கை பற்றிய தகவல்கள் இடம்பெறுவது தவிர்க்க முடியாதது. ஒரு காலத்தில் பார்ப்பனர்களை விட சாதி வெறியர்களாக இருந்து, தமிழ்நாட்டுத் தமிழர்களைப் போல இழிச்சவாயர்களாக இருக்காமல், எந்தப் பிராமணியையும், தங்களுக்கு மேலே தலைதூக்க விடாமல் அடக்கி வைத்திருந்த யாழ்ப்பாண வெள்ளாளர்கள் உங்களைப் போன்ற சுயசாதிப் பிரியர்களிடமும், BS போன்ற பார்ப்பன வெறியர்களுடனும் பேசும் போது எனக்கு உதவுகிறார்கள் என்ற உண்மையை நான் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும். ஆனால் சிங்கள இனவெறி, தமிழுணர்வு, தமிழ்த்தேசிய உணர்வு என்பதால் ஏற்பட்ட விழிப்புணர்வினாலும், காலத்துக்கேற்றவாறு பெரும்பாலான யாழ்ப்பாண வெள்ளாளர்கள் தம்மை மாற்றிக் கொண்டார்கள் ஆனால் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களின் போக்கில், அவர்களின் சாதிவெறிச் சிந்தனையில், அப்படி எந்த மாற்றமும் நடந்ததாகத் தெரியவில்லை என்பதற்கு நீங்களும், BS உம் நல்ல உதாரணங்களாகும்.

                      //புளகாங்கிதம் அடைந்து கொண்டே இதைக் கூறுவது நகைமுரணாகத் தெரியவில்லையா..!///

                      தெரிந்து தான் கூறினேன், யாழ்ப்பாண வெள்ளாளர்கள், வினவில் பார்ப்பனச் சாதிவெறியர்களின் வாயை அடக்க எனக்கு உதவுகிறார்கள். 🙂

        • அம்பி ,

          பிரச்சனை பார்பனர் மற்றும் பார்பனர் அல்லாதவர் என்று கருப்பு ,வெள்ளையில் எளிமை ப்டுத்துகின்றிர். பிரச்சனை உண்மையில் பலவண்ண நிறத்தால் ஆனது ! சாதிய படிநிலையில் BS கூறுவது போன்று தான் ஒரு சாதி மற்றொரு சாதியின் மீது ஆதிக்கம் செய்கின்றது.அத்தகைய சாதிய ஆதிக்கத்தை சாதிய கலப்பு திருமணம் செய்து உள்ள இத் தம்பதிகள் மீது BS குற்றம் சாட்டுவது எப்படி பொருந்தும் ? BSன் சாதி வெறி பேச்சை ஆதிக்க சாதிகள் என்று B S குற்றம் சாட்டும் மக்கள் தானே எதிர்கின்றார்கள் [அம்பி ,வியாசன் உட்பட ] .இது நல்ல மாற்றம் தானே ? வாழ்வில் திருமணம் உட்பட எவ்விடயத்துக்கும் எனக்கு சாதி உதிர்ந்த ரோமம் அளவுக்கே பயன் பட்டதால் என்னை இக் குழுவில்[ஆதிக்க சாதி] சேர்க்க இயலாது ![நான் சாதியை எதற்கும் பயன்படுத்த வில்லை ] கம்யுனிஸ்டுகளாக தம்மை கூறிக்கொள்பவர்கள் இவ்விடயத்தில் தம் கருத்துகளை இதுவரை பதியாதது தான் என் வருத்தமாக உள்ளது !!

      • BS,

        // I have bitter experiences with the dalits. I am going to send an article to Vinavu.com//

        மாலா அவர்களுக்கு பார்ப்பன பெரும்பான்மை அபார்ட்மண்ட்டில் சூழல் நச்சுத்தன்மையாக இருந்ததை உணர்ந்து அந்த இடத்தை விட்டு ஒட முடிவெடுத்துவிட்டார்கள். அவரின் இந்த பதிவு உங்களை எக்கச்சக்கமாக கடுப்பேற்றியிருக்கிறது. அவருக்கு எதிராக எதேனும் செய்ய நினைக்கும் நீங்கள் தலித் மக்களை ஏன் இழுக்கிறீர்கள் என்று தெரியவில்லை. மாலா அவர்கள் தலித் இல்லை என்று நீங்களே அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறீர்கள். இங்கே மூன்று சமூகங்கள் இருக்கிறது என்று எளிமைப்படுத்தலாம். தலித் மக்கள், சூத்திரர்கள் (இது கலப்பினத்தவர் என்பதற்கான வார்த்தை என்றால் அது ஒரளவுக்கு சரியே என்பதால் அதையே பயன்படுத்துகிறேன்.) மற்றும் பார்ப்பனர்கள். பார்ப்பனர்களைப்பற்றிய விமர்சனம் தலித் மக்களிடமும் இருக்கிறது, சூத்திரர்களிடமும் இருக்கிறது. ஆனால் நீங்கள் தலித் மக்களை மட்டும் குறிவைக்கிறீர்கள். அவர்கள் தான் எளிய இலக்கு என்பதாலா? இதிலிருந்தும் உங்களைப்பற்றிப் புரிந்து கொள்ளலாம்.

        எப்படியோ, நீங்களும் தலித் மக்கள் பெரும்பான்மைப் பகுதியில் வாழ்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாம். இங்கேயே பின்னூட்டமாகவும் இடலாம். மீனவர்களுக்கு மத்தியில் வாழ்ந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளலாம். சூத்திரர்களுக்கு மத்தியில் வாழ்ந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளலாம்.

        தலித் மாணவவிகளுடன் தங்கள் குழந்தைகளை பழக படிக்க அனுமதிக்கும் மீனவ பெண்ணிற்கு பார்ப்பனர்களின் இந்த அற்பத்தனத்தைப்பற்றி பேச உரிமையிருக்கிறது. அவரைப் போன்று செய்யும் மற்ற எல்லோருக்கும் இந்த உரிமையிருக்கிறது. மற்றவர்களுக்குக் கண்டிப்பாக இல்லை.

  48. பையனை பையன் என்றுதான் சொல்வார்கள். எனவே பறைப்பையன் என்பதில் என்ன இழிவு என்று புரிய‌வில்லை. ஒருவேளை சிறுவன் என்று சொல்லவேண்டும் போல. பறைச்சிறுவன். பார்ப்பனர்களை //பார்ப்பனர்கள்// என்றுதான் தமிழறிஞர்கள் எழுதுகிறார்கள். அது சரியான தமிழ்ச்சொல் என பெரியவர் வியாசன அவர்களே வினவிலேயே எழுதியிருக்கின்றார்கள். பார்ப்பனச் சிட்டர்கள் என்ற ஆண்டாளின் சொற்களை எடுத்தும் காட்டியிருக்கின்றார்கள். எனவே பார்ப்பனச்சிறுவர் என்றுபலர் எழுதப்படித்திருக்கிறேன். பாரதியார் கட்டுரைகள் முழவதும் பார்ப்பனர் என்ற சொல்லையே பார்க்கலாம். அவர் அச்சொல்லை இருவிதமாகக் கையாளுவார்: 1. இழிவாக – பார்ப்பான் என்று. 2. பழந்தமிழ்ச்சொல்லாக: பார்ப்பனர் என்று.

    சங்கரன் கோயில் யானைப்பாகன் ஒரு பார்ப்பனச்சிறுவன். அந்த யானையைப்பார்க்கப்போனாராம். அப்போது அந்த பார்ப்பனச்சிறுவன் இவருக்கு ஒன்றுமே யானையைப்பற்றித் தெரியாதென்பதைப்போல நிறைய யானையைப்பற்றிச் சொன்னானாம் என்று நகைச்சுவையாக எழுதுகிறார் பாரதியார்.

    பார்ப்பனச்சிறுவன் என்பது சரியென்றால் பறைச்சிறுவன் எனபதும் சரி. ஆதி திராவிடச் சிறுவன் என்று சொல்லமுடியாது.. அச்சொல் நூற்றுக்கும் மேலான சாதிகளைக் குறிக்கும். தூத்துக்குடியில் வாழம் ஆதிதிராவிடர்களில் பறையர்களே அதிகம். அவர்களை எப்பெயரிட்டழைப்பது பெரியவர் தமிழ் அவர்களே ? பள்ளர்கள் தங்களை பள்ளர் என்று குறிப்பிட‌க்கக்கூடாது ஏன்றும், தாங்கள் தேவேந்திரகுல வேளாளர்கள் என்றும் சொல்கிறார்கள். அப்படி பறையர்கள் ஏதேனும் புதுப்பெயரை வைத்திருக்கிறார்களா?

    சென்னை மாநகரம் முழுவதும் சில சமயங்களில் சுவர்களில்< கிருஷ்ணப்பறையனார் பேசுகிறார். என்று விளம்பரப்படுத்தலைப் பார்க்கலாம். இவர் ஒரு கட்சி வைத்திருக்கிறார் என நினைக்கிறேன். பறையர்களுக்காக மட்டுமே. ஏன் அவர் தன்னை பறையனார் என்று குறிப்பிடுகிறார்? பெரியவர்களை பறையர்கள் என்றும் ஒரு தனிநபரென்றால், பறையனார் என்றும், சிறுவன் என்றால், பறைச்சிறுவன் என்பதும் சரியே எனபது என் தாழ்மையான கருத்து.

    பறையர் என்பது தூய தமிழ். பார்ப்பன‌ர் எனபதும் தூய தமிழே. தேவர், பிள்ளை, முதலி இவைகளெல்லாம் ஆதிகாலத்திலிருந்து வந்த பெயர்களல்ல. உண்மையில் இவை சாதிப்பெயர்களல்ல. மரியாதைக்குறிச்சொற்கள். பின்னர் ஜாதிகளாக உருவெடுத்தன. நாடார் என்னும் சொல் 19ம் நூற்றாண்டிலிருந்தே வைக்கப்பட்டது. அதன் முன் சாணார்கள் என்ற பெயர்தான். ஓபிசி சர்டிபேட்டில் பலர் சாணார் என்று போடப்படுவதைப்பார்த்திருக்கிறேன். ரிசர்வேஷன் வேணுமுன்னா பறையன், பள்ளன், சாணான் என்று நைசாகப்போட்டுக்கொள்கிறார்கள். பார்ப்பனர்களில் அர்ச்சகர்களை ஓபிசிக்களாக்க வேண்டுமென ஒரு டிமாண்ட் அடிக்கடி வைக்கப்படுகிறது. அது வெற்றியடைந்தால், அவர்களும் தம் சாதிச்சான்றிதழில் நைசாக 'பார்ப்பான்' என்று போட்டுக் கொள்வார்கள்.

    பணம் பத்தும் செய்யும்:-)

    • BS,

      தமிழ்நாட்டில் பிராமணர்களை மரியாதையாகப் பார்ப்பனர்கள் என்கிறார்கள். ஆனால் ஈழத்தில் பார்ப்பான் என்ற சொல் வழக்கில் இல்லை, பார்ப்பான் என்பதற்குப் பதிலாக, ஈழத்தமிழர்கள்(குறிப்பாக யாழ்ப்பாணத்தமிழர்கள்) அவர்களைக் *’கள்ளப்பிராமணி’ என்பார்கள். உங்களின் கருத்தின்படி பார்த்தால், கள்ளப்பிராமணிக்குப் பிறந்தவனை கள்ளப்பிராமணி மகன் என்று தான் நான் அழைக்க வேண்டும் அல்லவா?

      பறையனுக்குப் பிறந்தவனை பறைப்பையன் என்று தான் அழைக்க வேண்டும் என அடம்பிடிக்கும் நீங்கள், தமிழ்நாட்டுத் தமிழர்களும் தமது உறவுகளாகிய ஈழத்தமிழர்களின் வழக்கத்தைப் பின்பற்றி, பார்ப்பானுக்குப் பிறந்தவனை பார்ப்பனப்பையன் என்று அழைப்பதற்குப் பதிலாக. கள்ளப்பிராமணிபையன் என்று அழைக்கத் தொடங்கினால், அதுவும் சரியானது தானென்று நீங்கள் தொடர்ந்து வாதாடுவீர்களா என்பதை அறிய எனக்கு ஆவலாக உள்ளது.

      (ஈழத்தில் பார்ப்பனர்களை ‘கள்ளப்பிராமணி’ என்றழைப்பதை inioru.com என்ற வலைப்பதிவில் தமிழரசன் என்பவர் தனது கட்டுரையில் உறுதி செய்வதைக் காணலாம்.)

      “……..தமிழ்நாட்டைப் போல் ஒடுக்கப்பட்ட சாதிமக்களின் மத்தியில் மேல்- இடை-நடு என்ற பிளவுகளும் பிரித்து ஆக்கப்பட்ட அமைப்புக்களும் கிடையாது. பிராமணியம் என்பது அவர்கள் அறியாத ஒன்று.புலம் பெயர் தமிழர்கள் யாழ்.குடாநாட்டின் சைவ வேளாளச் சமூகக் கட்டமைப்பிலிருந்து வந்தவர்கள் பிராமணியம் சார்ந்த சமூக உயர்நிலையும் ஆதிக்கமும் இலங்கையில் கிடையாது. பிராமணர்கள் மிகமிகச் சிறுபிரிவாக தனித்து இருந்தனர். *கள்ளப்பிராமணி*’ என்ற நையாண்டியுடன் அவர்கள் அழைக்கப்பட்டனர். சைவவேளாள கருத்துகட்கும் சமூக நிகழ்வுக்கும் அவர்கள் அடங்கி நடந்தனர். பகவத்கீதையையோ உபநிடதம்களையோ அறிந்த அல்லது கௌரவிக்கும் ஒருவர் கிடையாது. மாறாக தேவார, திருவாசகம்கள் தான் இலங்கைத் தமிழ்ச் சமூகப் பண்பாக இருந்தது.நாட்டுப் புறத் தெய்வம்கள் சிறு தெய்வம்கள் சந்திக்குச் சந்தி மரத்தடிக்கு மரத்தடி இருந்தது.”

      • //தமிழ்நாட்டில் பிராமணர்களை மரியாதையாகப் பார்ப்பனர்கள் என்கிறார்கள்//

        எவ்வளவுதான் தூய தமிழ்ச்சொல் ஆக இருப்பினும் வினவு, பெரியாரிஸ்டுகள் எல்லாரும் அச்சொல்லை இன்று அவச்சொல்லாக்கி விட்டதனால், பிராமணர்கள் பார்ப்பனர்கள் என்று தங்களைக் குறிப்பிடப்பட விரும்புவதில்லை. அவர்களுள் தமிழறிஞர்கள் மட்டுமே இச்சொல்லை பயன்படுத்துகிறார்கள். காரணம். இதற்கு மாற்றுசொல், பிராமணர் எனபது, வடமொழிச்சொல். தமிழறிஞர்கள் தவிர்க்கிறார்கள் எழுத்துக்களில். பேச்சுவழக்கில் பிராமணர் என்று சொல்லலாம். உவேசா, பரிதிமாற்கலைஞர், கல்விக்கடல் கோபாலையர், இரு ஐயங்கார்கள் (மு. ராகவையங்கார்; ரா.ராகவையங்கார்) இவர்கள் கட்டுரைகளைப்படித்துப்பாருங்கள். தெரியும். கல்விக்கடல் கோபாலையரின் ஒரு கட்டுரையின் தலைப்பே //பார்ப்ப்னர்கள்// அவர்கள் அந்தணர் என்பதையும் பயன்படுத்துவர்.

        ஈழத்துப்பழக்கம் இங்கு தேவையில்லை. ஈழம் ஒரு குறுகிய வட்டம். மலையாளம், வடமொழியோடு சேர்த்துத்தான் தமிழ் அங்கே புழங்குகிறது. உச்சரிப்பு மலையாள வாடையோடே. தமிழ்நாட்டுக்குத் தேவையில்லை. (இலங்கைத்தமிழை நான் ஏற்பதில்லை பெர்சனலாக)

        • BS,

          உங்களிடம் பெரிதாக எதிர்பார்த்தேன், ஆனால் உங்களின் பறைப்பையன் என்ற வார்த்தைப் பிரயோகம் தவறானது என்பதை ஒப்புக் கொள்ள உங்களின் சாதிவெறி இடமளிக்காததால் வெறும் சப்பைக் கட்டு கட்டுகிறீர்கள் என்பதை உங்களின் பதிலை வாசிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.

          ///ஈழத்துப்பழக்கம் இங்கு தேவையில்லை. ஈழம் ஒரு குறுகிய வட்டம். மலையாளம், வடமொழியோடு சேர்த்துத்தான் தமிழ் அங்கே புழங்குகிறது உச்சரிப்பு மலையாள வாடையோடே.///

          இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், உங்களுக்கு ஈழத்தமிழைப் பற்றியோ, ஈழத்தமிழரைப் பற்றியோ எதுவும் தெரியாது. இங்கு நாங்கள் ஈழத்தமிழைப் பற்றி ஆய்வு செய்யவில்லை. ஆகவே அதைப் பற்றி உங்களுடன் நான் வாதாடப் போவதில்லை. உங்களை உங்களின் குறுகிய வட்டத்திலிருந்து வெளியே கொண்டு வருவதும் என்னுடைய நோக்கமல்ல. உங்களைப் போன்றவர்கள் ஈழத்தமிழைப் பற்றி அறிந்தும் ஒன்றும் ஆகப் போவதில்லை.

          //தமிழ்நாட்டுக்குத் தேவையில்லை. (இலங்கைத்தமிழை நான் ஏற்பதில்லை பெர்சனலாக)///

          என்னுடைய கேள்விக்கு உங்களால் பதிலளிக்க முடியாததால் சும்மா சளாப்புகிறீர்கள் என்பது தெரிகிறது. நான் ஈழத்தில் பார்ப்பனர்களை கள்ளப்பிராமணி என்றழைப்பது போல், இன்று தொடக்கம் தமிழ்நாட்டிலும் எல்லோரும் அழைக்கிறார்களென்றோ, அழைக்க வேண்டுமென்றோ கூறவில்லை.

          உங்களுக்காக எனது கேள்விகளை மீண்டும் விளக்கமாகக் கூறுகிறேன். இப்பொழுது சுற்றி வளைக்காமல் பதிலளிக்க முயற்சி செய்யுங்கள்.

          1. ஈழத்தமிழர்கள் (குறிப்பாக யாழ்ப்பாணத்தமிழர்கள்) பார்ப்பனர்களைக் *’கள்ளப்பிராமணி’ என்போம். உங்களின் கருத்தின்படி, கள்ளப்பிராமணிக்குப் பிறந்தவனை கள்ளப்பிராமணிமகன் அல்லது கள்ளப்பிராமணிப்பையன் என்று ஈழத்தமிழனாகிய நான் அழைக்கலாமா? அதை நீங்கள் சரியென்று ஏற்றுக் கொள்வீர்களா? பார்ப்பான் என்ற பதம் ஈழத்தில் வழக்கில் இல்லை.

          தமிழ்நாட்டுக்கு ஈழத்தமிழ்ச் சொற்கள் தேவை என்று நான் கூறவில்லை, அது தேவையா இல்லையா என்பதையும் நீங்கள் ஒருவர் மட்டும் தீர்மானிக்க முடியாது.

          2. ஒருவேளை, இந்த கருத்துப்பரிமாறலை படிக்கும், தமிழ்நாட்டுத் தமிழர்களில் சிலர், அவர்களின் ஈழத்தமிழ்ச் சகோதரர்களைப் போலவே, பார்ப்பான்களை கள்ளப்பிராமணிகள் என்று அழைக்கத் தொடங்கினால், உங்களின் கருத்துப்படி அதாவது பறையனுக்குப் பிறந்தவனை பறைப்பையன் என்று தான் அழைக்க வேண்டும் என்பது போலவே. பார்ப்பனப்பையன் என்று அழைப்பதற்குப் பதிலாக. கள்ளப்பிராமணிபையன் என்று அழைத்தால், அது சரியென்று நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என்பது தான்.

          ஆம் அல்லது இல்லை என்ற பதில் போதுமானது, அதை விட்டு, தமிழ்நாட்டுக்கு இலங்கைத் தமிழ் தேவையில்லை என்று உளற வேண்டாம். ஏனென்றால் அதை உங்கள் ஒருவரால் மட்டும் கட்டுப்படுத்தவோ அல்லது நீங்கள் ஒருவர் மட்டும் தீர்மானிக்கவோ முடியாது.

          • வியாசன்,

            விடயம் போன்ற ஈழ தமிழ் சொற்களை வியாசனின் வினவு வருகைக்கு பின் தான் நான் பயன்படுத்த தொடங்க்கினேன் . வியாசன், bs ன் வக்கிர சாதி வெறி பேச்சிக்கு எதிராக அவ்ரை மட்டும் என்று இனி ‘கள்ளப்பிராமணி’ எனறு அழைக்கலாம் . மற்ற பார்பனர்களை அவ்வாறு அழைக்கவேண்டிய தேவை என்ன ? ’கள்ளப்பிராமணி’ என்ற சொல்லில் கள்ள தனமான பிறப்பு என்ற பொருள் உள் அடங்கி இருப்பதால் இந்த வக்கிர சாதி வெறிபேச்சுகாரனை மட்டும் ’கள்ளப்பிராமணி’ என்று அழைக்கலாமே வியாசன் ! மற்ற பார்பனர்களை அவ்வாறு அழைப்பது தேவை இல்லை அல்லவா ?

        • //உச்சரிப்பு மலையாள வாடையோடே//

          இந்த கண்டுபிடிப்புக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.மலையாளம் என்பது தமிழும்,வடமொழியும் கலந்த கலவை என்பதை மலையாளிகளே மறுப்பதில்லை.தமிழ் பேரகராதி[லெக்சிகன்] தயாரித்த வையாபுரி பிள்ளை மலையாளத்தில் உள்ள பல வார்த்தைகள் தூய தமிழ் வார்த்தைகள் என்று அகராதியில் அப்படியே சேர்த்துகொண்டார்.ஈழத்தமிழர்கள் தூய தமிழில் பேசுவது உங்களுக்கு மலையாள வாடை அடிப்பதாக தெரிகிறது.

          ஆயிரமாண்டு காலம் சமூக அடுக்கின் அடிதட்டில் இருந்த ஒரு ஒடுக்கப்பட்ட சாதிக்கு உள்ள அனைத்தும் தங்களுக்கும் பொருந்தும் என்று பேசுவது அடுத்த காமடி.

            • //மலையாளம்,வடமொழியோடு சேர்த்துதான் தமிழ் அங்கே புழங்குகிறது//-55.1.1

              இதை சொன்னது நீங்கள்தானே? இதற்கு என்ன பொருள்?

              உச்சரிக்கும் தொனி என்று எடுத்துகொண்டாலும் மலையாள வாடை அடிப்பதாக சொல்வது அபத்தம்.

              ஆயிரத்தில் ஒருவன்[புதியது] திரைப்படம் வந்து சர்ச்சையானது பழைய செய்தி.அதில் வரும் பழந்தமிழ் உச்சரிப்பு மற்றும் வார்த்தைகளை வடிவமைத்தவர் ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரன்.அது குறித்து “சொல்வனம்” இதழுக்கு அளித்த நேர்காணலில் இப்படி சொல்கிறார்.
              //சில பழந்தமிழ்ச் சொல் வழக்குகள் இலங்கையில் வழங்குகின்ற பேச்சுத் தமிழிலும் மலையாள மொழியிலும் கூட நீடித்து வருகின்றன//- சொல்வனம் நேர்காணல்-19/02/2010

              சாதி பித்து கொண்ட உங்களுக்கு இது புரிய நியாயமில்லை.

    • ஏதோ புத்திசாலித்தனமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டோ அல்லது பிராமணர்களின் பக்க வாதங்களைக் கெட்டித்தனமாக இங்கே தான் நியாயப்படுத்துவதாகவோ, நினைத்துக் கொண்டு, பெரும்பாலான பார்ப்பனர்கள், தமிழர்களின் இணையத்தளங்களில் அடக்கி வாசிக்கும் அவர்களின் சாதிவெறியைத் தன்னையறியாமலே வெளிப்படுத்துகிறார் BS என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

      தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் என்று பிராமணர்களை அழைப்பதால், பார்ப்பனுக்குப் பிறந்தவனைப் பார்ப்பனப் பையன் என்றழைப்பதைப் போலவே, பறையனுக்குப் பிறந்தவனை பறைப்பையன் என்றழைப்பது தான் சரி என்பது அவரது வாதம். ஆனால் பார்ப்பனீயத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு, அதனால் கட்டிக்காக்கப்பட்ட சாதீயப்பகுபாடுகளால், ஒடுக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு, எழுந்து நிற்க முயலும் தமிழ்த் தலித்துகளும் , பார்ப்பனீயத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சாதிப்பாகுபாடுகளினால் இன்றும் சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் பார்ப்பான்களும் சமுதாயத்தில் ஒரே நிலையில் இல்லை, என்பது தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறார் BS.

      உதாரணமாக , வெள்ளையர்களுக்கு பீத்தல் பறங்கி, Cracker, Doozers, Goat Roper, Honky, Yeehaw இப்படி நூற்றுக்கணக்கான இழிவான (derogatory names) பெயர்கள் உண்டு. அவர்களை அந்தப் பெயர்களால் அழைப்பதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை, ஆனால் பல நூற்றாண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு, அவர்களின் உழைப்பு சுரண்டப்பட்ட கறுப்பின மக்களை Nigger என்றழைப்பது தவறானதாக, இனவெறி பிடித்த செயலாக மேலைநாடுகளில் கருதுகிறார்கள். அதையும் மீறி யாராவது இனவெறி வெள்ளையர்கள் அவர்களை Nigger என்று அழைத்தால், அப்படி அழைத்தவர்களின் மூஞ்சை, முகறைக்கட்டை எல்லாவற்றையும் உடைத்து விடுவார்கள் கறுப்பர்கள். அதற்கும் நீங்கள் தலித்துகளை வாய்க்கொழுப்புடன் பறைப்பையன் என்றழைப்பதற்கும் பெரிய வேறுபாடிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

      அதிலும், ஒரு கறுப்பர் இன்னொரு கறுப்பரை Nigger என்றழைத்துக் கொள்வதும், தன்னைத் தானே Nigger என்றழைத்துக் கொள்வதும், அப்படி பாடல்களைப் பாடிக் கொள்வதும் கூட சகஜமான, ஏற்றுக் கொள்ளப்பட்டது தான். ஆனால் மற்றவர்கள் அப்படி அழைக்கக் கூடாது. அது தவறு.

      அது போல் கிருஷ்ணப் பறையானார் தன்னைப் பறையன் என்று அழைத்துக் கொள்வது மட்டுமல்ல, “முந்திப் பிறந்தவன் நான் முதல் பூணூல் தரித்தவன் நான் சங்குப் பறையன் நான் சாதியில் மூத்தவன் நான்” என்று பாட்டுக் கூடப் பாடிக் கொள்ளாலாம். ஆனால் வேறு யாராவது அவர்களைப் பறையன் என்று அழைத்தால், அவர்களின் பல்லை உடைக்க வேண்டும்.

      உங்களின் வாய்க்கொழுப்பைப் பார்த்த பின்னர் தான் பெரியாரியத்திலோ, பெரியாரிலோ எந்த வித ஈடுபாடுமில்லாத எனக்குக் கூட, பெரியாரின் பார்ப்பனர் பற்றிய கருத்துக்களின் காரணம் புரிகிறது. உங்களைப் போன்ற வாய்க்கொழுப்பு பிடித்தவர்கள் இந்தக் காலத்திலேயே இருக்கும் போது, பெரியாரின் காலத்தில் பார்ப்பனர்களுக்கு எவ்வளவு வாய்க்கொழுப்பிருந்திருக்கும்.

      • // பார்ப்பனுக்குப் பிறந்தவனைப் பார்ப்பனப் பையன் என்றழைப்பதைப் போலவே, பறையனுக்குப் பிறந்தவனை பறைப்பையன் என்றழைப்பது தான் சரி என்பது அவரது வாதம். //

        இப்படி யான் எழுதவில்லை. எழுதியது:

        பார்ப்பனருக்குப் பிறந்தவனைப் பார்ப்பனப் பையன் என்றழைப்பதைப் போலவே, பறையருக்குப் பிறந்தவனை பறைப்பையன் என்றழைப்பது தான் சரி என்றெழுதினேன்.

        பெரியவர்களுக்கு இன் சாரியை வராது. சிறியவர்களுக்கே வரும்.
        //அது போல் கிருஷ்ணப் பறையானார் தன்னைப் பறையன் என்று அழைத்துக் கொள்வது மட்டுமல்ல, “முந்திப் பிறந்தவன் நான் முதல் பூணூல் தரித்தவன் நான் சங்குப் பறையன் நான் சாதியில் மூத்தவன் நான்” என்று பாட்டுக் கூடப் பாடிக் கொள்ளாலாம். ஆனால் வேறு யாராவது அவர்களைப் பறையன் என்று அழைத்தால், அவர்களின் பல்லை உடைக்க வேண்டும்.//

        தப்பு.

        கிருஷ்ணப்பறையனார் என்றுதான் அவர் பெயர் அவரது விருப்பமாக சென்னைச்சுவர்களில் எழுதப்பட்டிருக்கிறது. //ஆன்// என்ற சாரியை வேறுபாட்டைக்காட்டும். அவரை ஒரு கூட்டத்தில் வாழ்த்திப்பேசுவதாக எடுத்தால், பேசுபவர்கள், திரு கிருஸ்ணப்பறையனார் என்றே குறிப்பிடுவர். அவர் எதிர்க்க முடியாது. ஊருக்கு ஒரு பெயர், மேடைக்கு இன்னொரு பெயரா என விளிப்பர். ஆர் சாரியை மதிப்பைக்காட்ட.

        கிருஷணப்பறையன் என எவரும் சொல்லமாட்டார்கள். வியாசனின் கற்பனை தறிகெட்டு ஓடுகிறது. இன் சாரியை ஒரு அவமதிப்பு பெரியவர்கள பெயர்களில் பின் வருமாயின்.

        பார்ப்பான் பார்ப்பான் என்று எழுதும் வியாசன் அவை நாகரிகம் தெரிந்தவரா? அது மட்டும் இழிவில்லையா?

        நேற்று, ஒரு கட்டுரையை இந்து ஆங்கில நாளிதழில் படித்தேன். அது இசுலாமியர் பற்றியது. கட்டுரை, தீவிரவாதிகள் ஒரு கூட்டம்; அல்லது தனிநபர்கள். இவர்கள் செயல்கலைக் காட்டி, ஒட்டுமொத்த இசுலாமிய மக்களை பிற சமூகம் வெறுக்கிறது என்கிறார்.

        அதேதான் இங்கு. ஏதோ சிலர் செய்வதை ஒட்டுமொத்த சமூகமும் செய்ததாக சொல்லும் வியாசன் தன்னைச் சுயபரிசோதனை செய்யவேண்டும்.

        • //அது போல் கிருஷ்ணப் பறையானார் தன்னைப் பறையன் என்று அழைத்துக் கொள்வது மட்டுமல்ல, “முந்திப் பிறந்தவன் நான் முதல் பூணூல் தரித்தவன் நான் சங்குப் பறையன் நான் சாதியில் மூத்தவன் நான்” என்று பாட்டுக் கூடப் பாடிக் கொள்ளாலாம். ஆனால் வேறு யாராவது அவர்களைப் பறையன் என்று அழைத்தால், அவர்களின் பல்லை உடைக்க வேண்டும்.//

          அவர் ஏன் தன்னை அப்படி அழைத்துக்கொள்கிறார் பொதுமக்களுக்குத் தெரியும் வகையில் என்றால், அதன்மூலம் அவர் தமிழ்ச்சமூகத்திற்கும் தான் சார்ந்த ஜாதிசனத்துக்கும் சொல்லும் செய்தியிது:

          — இப்பெயரில் எந்த இழிவும் இல்லை. இது வழிவழி வந்த சொல். காரணப்பெயர். பறையடித்து சேதி சொல்லும் மக்களால் இஜ்ஜாதியமைந்தது. சேதிமட்டுமில்லாமல், அதை ஒரு இசைக்கருவியாகவும் ஆட்டம்பாட்டம் நிகழ்வுகளில் வைத்து இசையோடு கூடிப்பாடும் மக்களை வைத்து, இஜ்ஜாதியமைந்தது. இசை ஆட்டம் பாட்டம் – இவை இழிவல்ல. அதே சமயம் இச்சமூக ம்க்களைப்பிறதொழில்கள் – இழிவாகப் பார்க்கப்படுபவை- உடன் சேர்த்துப்பார்க்கும் வழக்கத்தை இவர் பின் தள்ளப்பார்க்கும் முயற்சியே இச்சொல்லுக்கு புது மரியாதையுடன் தமிழக மக்கள் பார்க்கவேண்டுமென்ற அவா.

          –பறையிசை தமிழர்களில் பாரம்பரிய கலாச்சாரக்கூறுகளுள் ஒன்று. இதை அனைத்துத்தமிழர்களும் பெருமையாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதே செய்தி.

          –மதுரையில் எல் ஐ சி ஊழியர்கள் சேர்ந்து பறையிசைக்குழு வைத்திருக்கிறார்கள். போனவாண்டு பாரம்பரிய தமிழ்க்கலாச்சார விழா ஐந்து நாட்கள் நடந்தது அங்கே. தமிழக அரசு நடாத்தியது. அதில் ஒரு நாள் இவர்கள் பறையிசையைக்கேட்டேன். இவர்கள் எல்லாரும் வெவ்வேறு ஜாதியினைச்சேர்ந்த எல் ஐ சி ஊழியர்கள். அனைவரும் இவ்விசையை தமிழிசையாக எடுக்கிறார்கள்.

          –ஆக, பறை, பறையிசை, இசைத்து ஜாதியான பறையர்கள் – தமிழகத்தின் தொன்மைக்கலாச்சாரம்.

          –ஏன் வெட்கப்ப்படவேண்டும் எனப்துதான்

          கிருஸ்ணப்பறையனார் சொல்லும் சேதி.

          பறையர்களால் நடாத்தப்படும் ஒரு இணையதளத்தின் பெயர் பறையோசை !

          இன்று அது கானா பாடல்களாக உருவெடுத்து தமிழ்ச்சினிமாவில் நுழைந்திருக்கிறது. அப்பாடர்களுல் ஒருவர் – டோன்ட் ஒர்ரி, பி ஹாப்பி என்ற பாடலைப் பாடியவர் தன் இணையதளத்தில் பறையோடுதான் காட்சிதருவார். கானா பாடல்கள் பறையர் சேரிகளில் உருவானவை.

          Accept yourself and be proud of your heritage.

          • ///பார்ப்பனருக்குப் பிறந்தவனைப் பார்ப்பனப் பையன் என்றழைப்பதைப் போலவே, பறையருக்குப் பிறந்தவனை பறைப்பையன் என்றழைப்பது தான் சரி என்றெழுதினேன்.///

            உங்களின் கருத்துப்படி, பறையருக்குப் பிறந்தவனை பறைப்பையன் என்றழைப்பது தான் சரி என்பது போலவே ஒரு கள்ளப்பிராமணிக்கு பிறந்தவனை, யாழ்ப்பாணத்தமிழனாகிய நான் கள்ளப்பிராமணிப்பையன் என்று அழைப்பது சரி என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

            //கிருஷணப்பறையன் என எவரும் சொல்லமாட்டார்கள். வியாசனின் கற்பனை தறிகெட்டு ஓடுகிறது. இன் சாரியை ஒரு அவமதிப்பு பெரியவர்கள பெயர்களில் பின் வருமாயின்.///

            கிருஷ்ணப்பறையனார் என்று அவர் தன்னைக் கூறிக் கொள்வதில் தவறில்லை, அதுவே அவரது பெயராக இருந்தால் உரிய மரியாதையுடன் அவரது பெயரை அழைப்பது தான் முறை என்பதும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்த குறிப்பிட்ட சாதியினருக்கு, பார்ப்பனர்களும், பார்ப்பனீயமும், ஆதிக்க சாதிகளும் இழைத்த அநீதிகளை அவர்கள் நடந்து வந்த பாதையை உணர்ந்த எவருமே கொஞ்சம் அவதானமாக நடந்து கொள்வர். உங்களைப் போல் உளறமாட்டார்கள். ஆனால் ‘உங்களின் பறையனுக்குப் பிறந்தவனை பறைப்பையன் என்றழைப்பது தான் சரி’ என்ற வாதத்தில் எந்த மரியாதையும் கிடையாது என்று தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு இங்கு யாரும் முட்டாள்கள் அல்ல. எப்படி நீங்கள் வார்த்தை ஜாலம் காட்டினாலும் உங்களின் சாதிவெறி வெளிப்படையாக தெரிகிறது.

            //பார்ப்பான் பார்ப்பான் என்று எழுதும் வியாசன் அவை நாகரிகம் தெரிந்தவரா? அது மட்டும் இழிவில்லையா?///

            என்னைப் பொறுத்த வரையில் பார்ப்பான் என்பது இழிவான சொல் அல்ல. அது உண்மையான தமிழ்ச் சொல். பிராமணர் என்ற சொல்லின் வடமொழிக் கருத்து இக்காலப் பிராமணர்களுக்குப் பொருந்தாது ஆகவே தான், இலங்கையில் எமது முன்னோர்கள் பிராமணர்களைப் பிராமணிகள் என்றார்கள் போலிருக்கிறது. நீங்கள் விரும்பினால், பார்ப்பனருக்குப் பதிலாக, இனிமேல் வினவிலும், ஏனைய இணையத் தளங்களிலும், யாழ்ப்பாணத்தில் போலவே,கள்ளப்பிராமணிகள் என்று எழுதுகிறேன்.

            //அதேதான் இங்கு. ஏதோ சிலர் செய்வதை ஒட்டுமொத்த சமூகமும் செய்ததாக சொல்லும் வியாசன் தன்னைச் சுயபரிசோதனை செய்யவேண்டும்.///

            உங்களின் பதில்களைப் பார்க்கும் போது நீங்கள் தான் உங்களைச் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் போல் தெரிகிறது.

            // இப்பெயரில் எந்த இழிவும் இல்லை. இது வழிவழி வந்த சொல். காரணப்பெயர். ///

            பார்ப்பான் என்பதும் அப்படி வந்த காரணப் பெயர் தான், ஆனால் நீங்கள் தான் பார்ப்பான் என்பது இழிவான சொல் என்று ஒப்பாரி வைக்கிறீர்கள்.

            • யாரோ ஒரு பார்ப்ப்னர் உங்ககிட்ட கடன் வாங்கிகிட்டுத் திருப்பித்தராமா வெளி நாட்டுக்குப்போயி விட்டார் போலிருக்கு 🙂

              • //யாரோ ஒரு பார்ப்ப்னர் உங்ககிட்ட கடன் வாங்கிகிட்டுத் திருப்பித்தராமா வெளி நாட்டுக்குப்போயி விட்டார் போலிருக்கு :-)//

                பார்ப்பனர்கள் எங்கே கடன் கேட்கிறார்கள், தானம் கேட்பார்கள் அல்லது இனாமாக கேட்பார்கள் என்று பாரதியாரே பாடிவைத்து விட்டுப் போனது உங்களுக்குத் தெரியாது போலிருக்கிறது. 🙂

                “ஏமாத்துக்காரனடா பார்ப்பான்-அவன்
                ஏது செய்தும் காசு பெறப் பார்ப்பான்
                பிள்ளைக்குப் பூணூலாம் என்பான்-நம்மைப்
                பிச்சுப் பணங்கொடெனத் தின்பான்….”

                நான் பிராமணர்கள் அனைவரையும் எதிர்க்கவில்லை, உங்களைப் போன்ற வாய்க்கொழுப்பு மிகுந்த, சாதிவெறிப் பார்ப்பனர்களை மட்டும் தான் எதிர்க்கிறேன், தமிழை மட்டும் தாய்மொழியாக கொண்டு, வீட்டிலும் வெளியிலும் தமிழைத் தமது மொழி அடையாளமாகக் கொண்டு, தம்மை தமிழர்களாக மட்டும் அடையாளப்படுத்தும் அனைவரும் (பார்ப்பனர்கள் உட்பட) தமிழர்கள் என்பது தான் என்னுடைய கருத்து. அதை எங்குமே கூற நான் பயப்பட்டதில்லை. இங்கு கூடச் சிலர் நான் பார்ப்பனருக்குப் பந்தம் பிடிப்பதாக நினைத்துக் கொண்டதுண்டு.

                • வியாசன் கவிதை உண்மையில் கருத்தாக இருகின்றது. வியாசன் உண்மையை கூறுங்கள் இதை எழுதியது பாரதியா அல்லது வியாசபாரதியா ?:)

                  • -சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்-

                    பேராசைக் காரனடா பார்ப்பான் — ஆனால்
                    *பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான்

                    யாரானாலும் கொடுமை இழைப்பான் — துரை
                    இம்மென்றால் நாய்போலே உழைப்பான்.

                    முன்னாளில் ஐயரெல்லாம் வேதம்- ஓதுவார்
                    மூன்று மழை பெய்யுமடா மாதம்

                    இந்நாளில் பொய்மைப் பார்ப்பார் –இவர்
                    ஏதுசெய்தும் காசுபெறப் பார்ப்பார்.

                    பிள்ளைக்குப் பூணூலாம் என்பான் – நம்மைப்
                    பிய்த்துப் பணம் கொடெனத் தின்பான்

                    கொள்ளைக் கேசென்றொரு பொய் மூட்டி — நம்மைக்
                    கொண்டதிலே தொல்லை செய்வான் மாட்டி.

                    (பெரியதுரை – வெள்ளைக்காரர்)

                    கவிதை: மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

                    • வீழ்ந்தது பாரதி அல்ல ,சமுகம் தான்
                      —————————————————————————–

                      பாரதியின் கவிதைகளை குழந்தைகளுக்கானது என்று நினைத்து அவற்றை படிக்காமல் அவனின் கட்டுரைகளை மட்டுமே நூலகத்தில் படித்தமையால் எனக்கு ஏற்பட்ட வினையது . அவரின் கவிதைகளை விட கட்டுரைகள் மிக்க செறிவும ,நுட்பமும் உடையது என்ற போதிலும் இனி அவரின் கவிதைகளை மீதும் கவனம் செலுத்தவேண்டியதன் அவசியத்தை இக்கவிதை எனக்கு ஏற்படுத்தியுள்ளது. பாரதி இன்னும் ஒரு 40 ஆண்டுகள் வாழ்ந்து இருந்தால் தன் எழுத்துக்கள் மூலம் மிகப்பெரிய சமுக மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பான். ஒருவேளை பெரியாருடன் கூட கைகோர்து இருப்பான். பாரதி தன் வாழ்வின் இருதி வரை சில தத்துவார்த்த கொள்கை முரண்பாடுகளுடன் வாழ்ந்து இருந்தாலும் ஒருவேலை அவன் வாழ்வு நீடித்து இருந்தால் அவற்றை முழுமையாக களையும் அளவிற்கு அறிவாற்றலும் ,எட்டுதிக்கு ஞானத்தையும் படிக்கும் ஆர்வமும் கொண்டு தான் இருந்தான். அவனை பார்பனர்களும் கைவிட்டு விட , பார்பனர் அல்லாதவர்கள் ஆகிய பிறரும் அவன் வாழ்நாளில் அவனை உதாசினம் செய்து விட்டதை நினைக்கும் போது மனதிற்கு மிக்க வருத்தத்தை அளிக்கின்றது. இத்தகைய புறக்கணிப்புகளுக்கு எல்லாம் எதிர்வினையாற்ற தான் “வீழ்வேன் என்று நினைத்தாயோ …” என்று நெஞ்சு வலி மிகுதியுடன் தன் சுயத்தை கவிதையாக வடித்து இருப்பானோ ?

                      இனி இந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியின் சமுக மாற்றத்துக்கான தேவையையும் நம் நினைவில் ஏற்றுவோம். மிக்க நன்றி வியாசன்.

                    • “சூத்திரனுக்கொரு நீதி,
                      தண்டச் சோறுண்ணும்
                      பார்ப்புக்கு வேறொரு நீதி
                      சாத்திரம் சொல்லிடுமாயின்,
                      அது சாத்திரமன்று
                      சதியென்று கண்டேன்”

                      -பாரதியார்-

                    • வியாசன் ,இது ஆரிய வேதத்தை முற்றும் அறிந்த பாரதியின் நேர்மை கொண்ட மனசாட்சி தெறித்த, அவன் கண்கள் சிவக்கும் கவிதை இது .
                      //“சூத்திரனுக்கொரு நீதி,
                      தண்டச் சோறுண்ணும்
                      பார்ப்புக்கு வேறொரு நீதி
                      சாத்திரம் சொல்லிடுமாயின்,
                      அது சாத்திரமன்று
                      சதியென்று கண்டேன்” //

                    • என்ன bs இக்கவிதையை தன்னிடம் கடன் வாங்கி திருப்பி கொடுக்காத பார்பானை நோக்கி பாரதி எழுதினான ? அல்லது பெருதுளி சமுகத்தை சூத்திரன் என்று கூறி இழிவு செய்யும் சிறுதுளி பார்பான்களை நோக்கி எழுதினான ?

          • B .S ,

            பறையர் இனத்தவர் தமிழ் கொல்குடிகலாவார் என்பது ஒருபக்கம் இருக்கட்டும் ஆனால் பறைபயன் என்று விளித்ததை சரி தான் என்று மார்தட்டி தாங்கள் நீட்டி முழங்கும் வாதங்கள் ஆகா, அடடடா.

            சரி, தான் ஒரு பார்பனன்/பாப்பாத்தி என்று தம்மை கருதி கொள்பவர்களுடைய பெருமை/ஆங்காரம்/ஆணவம்/சாதித்திமிர் எது வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள், அது ஒருவன்/ஒருத்தி தன்னை பறையன்/பறைச்சி என்று அழைத்துக் கொள்ளும் போதோ அல்லது அழைக்கப்படும் போதோ வருமா? அப்படி வருமானால் இந்தியாவில் சாதி ஏற்றத் தாழ்வுகளே இல்லை என்று தான் வரும். இல்லை என்றால் தாங்கள் ஒரு சாதித் திமிருடன் தான் அப்படி விளித்தீர்கள் என்று தான் கருத வேண்டும்.

            ஆண்டாண்டுகளாக , பறையன் என்றாலே தீட்டு, கண்பார்வைக்கு இத்தனை அடி தூரம் , மூச்சுக் காத்துக்கு இத்தனை அடி தூரம் என்று ஒரு இழிபிறவிகள் போல மிருகத்தனமாக நடத்தப்பட்ட ஒரு இனம் எப்படி தம்மை பறையன் என்று அழைத்துக் கொள்ள பெருமைப்படுமா . தான் ஒரு பாப்பாத்தி என்று சட்டமன்றத்தில் திமிரோடு அளித்த பாசிஸ்டு ஜெயலலிதா போல ஒரு பறையர் இனத்தை சேர்ந்த ஒருவர் அப்படி தன்னை அழைத்துக் கொள்ள முடியுமா?.

            ஒரு பள்ளிக் கூடத்திலோ, கல்லூரிகளிலோ, அரசு அலுவலகங்களிலோ இல்லை தனியார் நிறுவனங்களிலோ ஒரு பறையர் சாதியை சேர்ந்தவர் தம்மை அவ்வாறு பெருமையுடன் பறை சாற்றிக் கொள்ள முடியுமா? ஆனால் ஆதிக்க பார்பன,கவுண்டர்,தேவர் சாதி வெறியர்கள் தம்மை அவ்வாறு பெருமையுடன் அழைத்துக் கொள்கின்றனரே. இது என்ன முரண்பாடு. சுய சாதி பெருமை பேசி, சோத்துக்கு வழியில்லைஎனினும் மீசையை முறுக்கும் ஆண்ட பேண்ட சாதி வெறியர்கள் போல தாழ்த்தப்பட்ட மக்களும் தாம் அந்த சாதியில் பிறந்ததற்காக மீசையை முருக்க தான் முடியுமா.

            நன்றி.

            • மன்னிக்கவும், “கொல்குடிகலாவார்” என்பது “தொல்குடிகளாவார்” என்றிருக்க வேண்டும்.

    • வார்த்தைகளில் வக்கிர விளையாட்டில் ஈடுபட்டு கொண்டு இருகின்றார் bs . உண்மையில் தலித் ,பழங்க்குடி மக்களை அவர்களின் சாதி பெயரை கூறி bs போன்றவர்கள் டைம் பாஸ்க்காக இழிவு செய்வதை விடவும் அவர்கள் நிலை மிகவும் அவலமாக உள்ளது. குறிப்பாக பழங்க்குடி மக்களின் நிலை மிகவும் அவலமாக உள்ளது. சமுகவியல் ,மானுடவியல் சார்ந்த மாணவர்கள் கள ஆய்வுக்கு இம் மக்களிடம் செல்லும் போது நமக்கு கிடைக்கும் அவர்கள் வாழ்வு பற்றிய விழுமியங்கள் மிகவும் வலியுட்டுவதாக இருக்கின்றது !எனக்கும் ,என் மாணவர் குழுவுக்கும் அப்படி ஒரு வலி மிகு அனுபவம் கொடைக்கானல் அருகாமையில் பழனி செல்லும் பாதையில் உள்ள வெங்கடாசலபாறை என்ற பழங்க்குடி மக்கள் வாழும் ஊரில் கிடைத்தது. இது ஒன்றும் தன்னார்வ குழுக்களின் வெளிநாட்டு பணம் ஊட்டப்படும் பயணம் அல்ல. கல்லூரி வாகனத்துக்கு எங்கள் சொந்த செலவில் டீசல் ஈட்டு ஒவொரு சனி கிழமை தோறும் செல்வோம். எம்முடன் பயணித்த எத்தியோப்பிய நாட்டை சேர்ந்த மணவர்கள் கொடுத்த பின்னுட்டம் என்னவென்றால் வறுமை பஞ்சம் மிகு அவர்கள் நாட்டில் கூட இப்படி வறுமையில் வாடும் மக்களை ,கல்வி அறிவு அளிக்கபடாத மக்களை பார்த்தது இல்லை என்பது தான் !நிலமை இப்படி அவலமாக இருக்க பார்பன பூசாரிகளுடன் தலித் ,பழங்க்குடி மக்களுடன் சமன் செய்து வியாக்கானம் பேசும் bs சின் சிந்தனை சிதறல்கள் மிகவும் கீழ்மையானது ! மேலும் அது அறிவற்றவனின் செயலும் கூட !

      • அவ்விட ஒரு ஸ்கூல் வைச்சு ஒரு பத்திரண்டு பிராமண வாத்தியார்களைப்போட்டுட்டா சில வருஷங்களில் எஸ் டிஸ் எல்லாம் முன்னேறிவிடுவார்கள்.

        • ஆமாம் bs .., அவர்கள்[இந்திய பழங்குடி மக்கள்] நாம் எல்லாரும் முன்னேறுவதையும் விட பல மடங்கு முன்னேறிக்கொண்டு தான் இருகின்றார்கள். மார்சிய கல்விகற்று யார் உண்மையில் எதிரி என்பதை அறிவு பூர்வமாக உணர்ந்து கொண்டு அத்தகைய எதிரிகளுக்கு எதிராக வர்க போரை தொடுத்துக்கொண்டு ,அருந்தியின் வார்த்தையில் கூறுவது என்றால் இந்தியாவின் இதயத்தின் மீது வர்க போரை தொடுத்துக்கொண்டு, சிவப்பு பிரதேசங்களை விரிவாக்கிக்கொண்டு வரலாறில் இந்திய சமுகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக்கொண்டு முன்னேறிக்கொண்டு தான் இருக்கின்றார்கள்.

          ஆனால் அறிவாளிகளான நீங்களும் உமது சக எழுத்தாளர்களும் செய்வது என்ன ?

          2006 ஜனவரி 2இல் கலிங்க நகரில் டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு எதிராகப் போராடிய ஆதிவாசிகள் 14 பேர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். 31 பேர் படுகாயமடைந்தனர். டாடாவின் கூலிப்படையும் போராடிய ஆதிவாசிகளைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. போஸ்ட் மார்டம் செய்யப்பட்ட நான்கு உடல்களின் கைகள் மணிகட்டிற்கு மேல் வெட்டப்பட்டு இருந்தன. இன் நிகழ்வுக்கும் பின் தானே, டாடாவிடம் காசு பெற்று தானே மாதொருபாகன் என்ற நாவலை உமது அறிவாளி எழுத்தாளர் சமுகம் எழுதியது ? வெட்கமாக இல்லையா வர்க எதிரி டாடா விடம் இருந்து காசுபெருவதற்கு ?

          //அவ்விட ஒரு ஸ்கூல் வைச்சு ஒரு பத்திரண்டு பிராமண வாத்தியார்களைப்போட்டுட்டா சில வருஷங்களில் எஸ் டிஸ் எல்லாம் முன்னேறிவிடுவார்கள்.//

  49. பின்னுட்டத்தில் BS என்பவர் போடும் வெறித்தனமான மொக்கைக்கு காரணம் இக் கட்டுரையில் உள்ள கீழ்வரும் கருத்து தான் :

    //உங்கள் கட்டுரையில் கிழக்கு புத்தக பத்ரி,[“Bathri Shashathri [BS ]”] எழுத்தாளர் ஜெயமோகன் கட்டுரைகளை சேர்த்திருந்தீர்கள். அதையும் படித்தேன். என்ன தோணுதுன்னா இவங்களெல்லாம் எங்கேயாச்சும் ஒரு பிராமண குடும்பத்தையாவது நேரில் பார்த்தோ இல்லை பழகியோ பாத்திருப்பாங்களோன்னு சந்தேகமா இருக்கு.//

    இக்கருத்து BS என்பவருக்கு,[பார்பனருக்கு] அளவில்லாத ஈகோவை உருவாக்கி அதன் காரணமாக சாதிவெறியும் மடைதிறந்தோடுகின்றது. எனவே தான் bs பார்ப்பவர் அனைவரையும் பூனூல் கொண்டு விலாசுகின்றார் !

  50. அம்பி ,

    இவ் விவாதத்தில் bs தவிர வேறு எவரும் தலித் மக்களை இழிவு செய்யவில்லை என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.தமிழன்,தெலுங்கன் என்று கூறுவது எல்லாம் அவ்வினத்து மக்களை இழிவு செய்யாது அல்லவா ? அது போல நாடன் ,கவுண்டன் ,பாப்பான் ,வன்னியன்,தேவன் என்று கூறப்படும் ஆதிக்கசாதிகளின் பெயர்கள் எல்லாம் ஆதிக்கசாதிகளின் மீதான துவேசம் என்று எப்படி கூறமுடியும். தலித் மக்களிடன் வீட்டு விழாவுக்கு செல்லும் பிற சாதியினரை அவர்கள் வாங்க நாயுடு ,வாங்க அண்ணாச்சி என்று மரியாதையுடன் தான் அழைக்கின்றனர். பரம்பரை பரம்பரையாக ஆண்ட சாதி என்பதால் அத்தகைய மரியாதையை கொடுக்கின்றனர்.[அத்தகைய சாதி அடிப்படையிலான மரியாதை கொடுப்பது தேவை இல்லை என்பது என்னுடைய நிலைப்பாடு. அதற்கு பதிலாக வாங்க அண்ணா ,தம்பி என்று அழைபதில் தான் சமத்துவம் வார்த்தை அளவிலாவது சாதிகள் இடையே ஏற்படும் ] ஆனால் நீங்கள் தலித் மக்களின் சாதியுடன் ‘ன்’ விகுதியை சேர்ப்பது பார்பனியத்துடன் ‘ன்’ விகுதியை சேர்பதையும்[பார்பான்] பொதுமை படுத்தி இரண்டுமே அச் சாதிகளின் மீதான துவேசம் என்று கூருகின்றிர். [தலித் மக்களின் சாதியுடன் ‘ன்’ விகுதியை சேர்ப்பது சாதி துவேசத்துடன் சாதிய இழிவும் சேர்ந்துகொண்டு வழிகிறது என்பது உண்மைதான். ] இது எப்படிபட்ட தவறு என்று சிந்தித்து பாருங்கள்! பார்பன பூசாரிகளுடன் தலித் ,பழங்க்குடி மக்களை சமன் செய்து வியாக்கானம் பேசும் bs சின் சிந்தனை சிதறல்களுடன் உங்கள் சிந்தனை ஒன்றுபட்டு தானே உள்ளது !

    மேலும் பார்பான் என்று கூறுவது தவறு என்று நீங்கள் உண்மையில் உணர்ந்து இருந்தால் கீழ்கண்ட bsக்கு கூறும் அறிவுரையில் ” பார்ப்பானுக்கு முன்புத்தியுமில்லை, பின்புத்தியுமில்லை என்பதை புரிந்துகொண்டுதான் பெரியார் பார்ப்பனர்களுக்கு எதிராக பிற சாதியினரை அத்தனை எளிதாக மடைமாற்றினார்..!” பார்பான் என்ற சொல்லை பயன்படுத்த மாட்டிர்கள் அல்லவா ? பார்பான் என்ற சொல் பார்பனியத்தை தூக்கி பிடிக்கும் மனிதனை ,அதன் மூலம் சக மனிதனை தாழ்த்தும் செயலை செய்பவனை நோக்கி கூறப்படுவதால் அதில் ஒன்றும் சாதி துவேசம் ஏதும் இல்லை ! சாதிவெறி கொண்ட ஆதிக்க சாதி வெறியனை கருப்பு பாப்பான் என்று தூற்றுவது போன்றது தான் இதுவும்![பார்பான் என்று எந்த சாதியும் கிடையாது என்பதையும் நினைவில் கொள்க ! பார்பான் என்பது பார்ப்பனியத்தை உயர்தி பிடிக்கும் சாதிவெரியனுக்கான பட்ட பெயர் மட்டுமே ] சகமனிதர்களுடன் சாதிய துவேசம் இன்றி பழகும் ஆரிய இனத்து மனிதர்களை தமிழர்கள் ஐயர் ,ஐயங்கார் என்று அவர்கள் பெயருடன் சேர்த்து தான் அழைக்கின்றனர் என்பதையும் நினைவில் கொள்க. நான் முன்பு கூறியது போன்று இத்தகைய சாதி ரீதியான மரியாதை எவருக்குமே தேவை இல்லை …அதற்கு பதில் அண்ணன் தம்பி என்று அழைத்துவிட்டு போகலாம் அல்லவா ?

    //இவர்கள் இந்தப் பக்கம் பார்ப்பனன் என்று கூறும்போது அதில் பார்ப்பன சாதி மீதான துவேசம் தெரிகிறது என்றால்,……//

    • தமிழ்,

      // இவ் விவாதத்தில் bs தவிர வேறு எவரும் தலித் மக்களை இழிவு செய்யவில்லை என்பதை கருத்தில் கொள்ளுங்கள். //

      இவ்விவாதத்தில் வேறு எவரும் தலித் மக்கள் நடத்தப்படும் விதம் குறித்தும் பேசவில்லை என்பதையும் கருத்தில் கொள்ளலாமல்லவா..

      // தமிழன்,தெலுங்கன் என்று கூறுவது எல்லாம் அவ்வினத்து மக்களை இழிவு செய்யாது அல்லவா ? அது போல நாடன் ,கவுண்டன் ,பாப்பான் ,வன்னியன்,தேவன் என்று கூறப்படும் ஆதிக்கசாதிகளின் பெயர்கள் எல்லாம் ஆதிக்கசாதிகளின் மீதான துவேசம் என்று எப்படி கூறமுடியும். //

      தாங்கள் கூற வருவது என்ன என்று எனக்கு பிடிபடவில்லை, என்றாலும் அடுத்த இனத்தவரை/சாதிக்காரரை ‘ன்’ விகுதியுடன் அழைப்பது பெரும்பாலும் துவேசத்தின் அடிப்படையிலேயே என்பதைத்தான் அவதானித்திருக்கிறேன்..

      // பார்பான் என்ற சொல் பார்பனியத்தை தூக்கி பிடிக்கும் மனிதனை ,அதன் மூலம் சக மனிதனை தாழ்த்தும் செயலை செய்பவனை நோக்கி கூறப்படுவதால் அதில் ஒன்றும் சாதி துவேசம் ஏதும் இல்லை ! சாதிவெறி கொண்ட ஆதிக்க சாதி வெறியனை கருப்பு பாப்பான் என்று தூற்றுவது போன்றது தான் இதுவும்![பார்பான் என்று எந்த சாதியும் கிடையாது என்பதையும் நினைவில் கொள்க ! பார்பான் என்பது பார்ப்பனியத்தை உயர்தி பிடிக்கும் ச