Sunday, June 1, 2025
முகப்புசெய்திசென்னை புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று

சென்னை புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று

-

அரசியல் வானில் ஒளிக்கீற்று! அழைக்கிறது கீழைக்காற்று…

ன்பிற்கும், சமூக ஆர்வத்திற்கும் உரிய வாசகர்களே!

38-வது சென்னை புத்தகக்காட்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி, நந்தனம், சென்னை – 35-ல் நடைபெற உள்ளது.

நாள் : சனவரி 9 – 21 (9 – 1 – 2015  முதல் 21 – 1 – 2015 வரை)

நேரம்:
வேலைநாட்கள் : மதியம் 2 – இரவு 9 – மணி வரை
விடுமுறைநாட்கள் : காலை 11 – இரவு 9 – மணி வரை

புதிய நூல்கள், சமூகப் பரிமாணங்களை அறிய உதவும் தேவையான வெளியீடுகள், காலத்தை வென்ற மாஸ்கோ நூல்கள், பெரியார் – அம்பேத்கர் படைப்புகள், மாற்றத்திற்கு வித்திடும் மார்க்சிய – லெனினிய சிந்தனைகள்… இவைகளுடன் “கீழைக்காற்று” புத்தகக்காட்சிக்கு உங்களை வரவேற்கிறது.

பிற்போக்கு பாசிசக் கருத்துக்கள், முதலாளித்துவ சந்தை வக்கிரங்கள் கழுத்தை நெறிக்கும் இந்தச் சூழலில், அரசியல் கூர்மை இன்னும் அதிக அவசியமாகிறது.

சமூக முன்னேற்றத்திற்காக படிக்கவும், அதை சக மனிதர்களிடம் பரப்பவும், புதிய சமூகத்தை உருவாக்கவும் சிந்திப்போம்… சந்திப்போம்!

keezhai-katru-chennai-bookfair

வாருங்கள்!

வரவேற்கும்
கீழைக்காற்று
சென்னை – 2
போன்: 044 – 28412367