privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்ஏசு நாதர் போராட மாட்டாரா ?

ஏசு நாதர் போராட மாட்டாரா ?

-

லகமே ஓய்வெடுக்கும் நள்ளிரவு முழுக்க ஓய்வில்லாமல் எனது ஆலை இயந்திரத்தை இயக்கிவிட்டு, வெளி உலகம் எந்திரமாய் இயங்கிக்கொண்டிருக்கும் காலைப் பொழுதில் நானோ தூங்கி கொண்டிருந்தேன்.

ஏசு கிறிஸ்து
“உங்களின் சகல துன்பங்களையும் கர்த்தராகிய யேசு போக்குவார்”

ஆமென்… உங்களை கர்த்தர் ஆசிர்வதிப்பாராக. உங்களின் சகல துன்பங்களையும் கர்த்தராகிய யேசு போக்குவார். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். கர்த்தரை நேசியுங்கள். உங்கள் பாவங்களை உடனடியாக மன்னிப்பார். இறுதியாக உங்களுக்கு ஏதேனும் கடன் தொல்லை, குடும்ப பிரச்சனை, நிம்மதியின்மை, எதுவாக இருந்தாலும் எங்களிடம் வந்து சொல்லுங்கள். உங்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம். உங்கள் வாழ்வில் கஷ்டம் நீங்கி ஒளி பிறக்கும்” என

பிரசங்கம் செய்து கொண்டிருந்த சத்தம் கேட்டு, எழுந்து வெளியே சென்று பார்த்த போது எனது வீட்டின் முன் பெரிய வண்டி நின்று கொண்டிருந்தது. அதில் மைக் செட் கட்டப்பட்டிருந்தது. சுமார் 10 பேர் கையில் பிரசுரம், புத்தகம், சாக்லேட், என அனைவருக்கும் வீடு வீடாக சென்று கொடுத்துக் கொண்டிருந்தனர்.

நானும் அவர்கள் அருகில் சென்றேன். எனக்கும் ஒரு புத்தகம், சாக்லேட் கொடுத்தார்கள். அங்கே மைக்கை பிடித்து பேசிக்கொண்டிருந்தவரிடம் சென்று,

“ஐயா ஒரு நிமிடம்” என்றேன்.

“ம்….. சொல்லுங்கள்” என்றார்.

“பிரச்சனை இருந்தால் எங்களிடம் சொல்லுங்கள் என்று கூறினீர்கள், அதான் வந்தேன்” என்றேன்.

அவரும் மிகுந்த மகிழ்ச்சியோடு,

“ம்…! வாங்க! வாங்க! என்ன பிரச்சனை” என்று ஆவலாக கேட்டார்.

“ஐயா போன வாரம் கரண்டு பில் விலைய ஏத்திட்டாங்க. அத கொஞ்சம் குறைக்க முடியுமா” என்றேன்.

அவருடைய மகிழ்ச்சியான முகம் சற்று சுருங்கியது. சிறிது நேரம் யோசித்து விட்டு,

“ம்…! கண்டிப்பாக, ஆண்டவராகிய யேசு கிறிஸ்து தங்களின் ஜபத்தால் மனமுருகி அந்த அதிகாரத்தை கொண்ட மனிதரிடம் நெருங்கி தங்களின் கஷ்டத்தை வெளிப்படுத்தி….”

இடையே நான் குறுக்கிட்டு, தன்மையாக “ஐயா கொஞ்சம் நில்லுங்க. கரண்ட் பில்ல குறைக்க முடியுமா? முடியாதா?” எனக் கேட்டேன்.

அதற்கு அவர் “கண்டிப்பா முடியும்பா, அதுக்கு நீங்கள் ஆண்டவரிடம் ஜெபித்தால் விலை குறையும்” என்றார்.

“நான் இங்கே ஜெபித்தால் தமிழக அரசு எப்படி விலைய குறைக்கும்?”

“நீங்கள் ஜெபிக்கும் போது அந்த அதிகாரம் கொண்ட நபரிடம் யேசு சென்று உங்கள் கஷ்டங்களை எடுத்து கூறுவார். உடனே அவரும் மனமிறங்கி விலையை குறைத்து விடுவார்.”

“நீங்க சொல்றபடி, ஒ.பன்னீர்செல்வத்திட்ட இயேசு சொல்லி, அவரு விலைய குறைச்சுருவாரா?”

(பதில் கூறாமல் சிரித்து மழுப்புகிறார்).

“ஐயா, கூடங்குளம் மக்கள் இன்னைக்கில்ல, 3 வருஷமா ஆண்டவரை ஜெபித்துக்கொண்டுதான் இருக்காங்க. ஆனாலும் அந்த அணுவுலைய மூட முடியலையே. இப்ப மேலும் ரெண்டு அணு உலைய வேற புதுசா வைக்க போராங்காளாமே!”

அவரால் எந்த பதிலும் சொல்ல முடியாமல் திணறிய போது, அவருடன் வந்திருந்த இன்னொருவர் எனது கையை இருக பிடித்து,“ஐயா எனக்கு மூனு பிள்ளைங்க. நான் எந்த வேலைக்கும் போகல. இருந்தாலும் எனக்கு எந்த கஷ்டமும் இல்ல. நான் நல்லா இருக்கிறேன்” என்றார்.

“ஐயா நீங்க நல்லா இருக்கிங்க. ஆனா என் பிரச்சன இன்னும் தீரலையே. இந்த தெருவுக்கு நான் குடி வந்து 6 வருசத்துக்கு மேல ஆகுது. இந்த ரோடு மழ பெஞ்சா தண்ணியும், சேறுமா வந்து நிக்குது. வீட்டுக்குள்ள வரைக்கும் சாக்கடை கலந்த மழை தண்ணி வருது! நாங்க குடிக்கிற தண்ணி தினந்தோறும் வருவதில்ல! இருக்கிற பிரச்சனைல, இப்ப வேற கேஸ் வாங்கனும்னா, அக்கோண்ட் வேணுமாம்! எதோ பாம் எழுதி தரணுமா… இதெல்லாத்துக்கும் மேல விலவாசி ஏறிக்கிட்டே போகுது. ஆனா கம்பெனில, எங்க சம்பளத்த மட்டும் யேத்த மாட்டேங்குறாங்க. இத எங்க போய் சொல்றது?”

(என்னுடைய பதிலை கேட்டவுடன் அவரை பின்தள்ளிவிட்டு மீண்டும் பழைய நபரே பதிலை கூற ஆரம்பித்தார்.)

“ரோடு சரியில்ல, தண்ணி வரல, கரண்டு பில் யேறி போச்சுனா! இதுக்கெல்லாம் சம்பந்தப்பட்ட தலைவருங்க இருப்பாங்க. அவங்க கிட்ட போய் மனு கொடுங்க!”

“அதெல்லாம், பல தடவ கொடுத்துப் பாத்தாச்சு. ஒன்னும் நடக்கலீங்க!”

“ஒன்னும் நடக்கலன்னா, அதுக்கு மேல நீங்க போராடித்தான் ஆகனும்! எங்களால ஒன்னும் செய்ய முடியாது. நாங்க ஜெபிப்போம். அவ்வளவுதான் எங்க வேல பா!”

(இப்படி நானும் அவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே அவருடன் வந்திருந்த மற்றவர்கள் ஒருவர்பின் ஒருவராக வண்டியில் ஏறிக்கொண்டு, ஐயா, வாங்க! வாங்க! என்று அழைத்தனர். அவரும் கிளம்ப தயாரானார்.)

“நீங்க எல்லாரும் மக்கள் நல்லா இருக்கனும்னு தானே ஜெபிக்கிறீங்க! அப்போ வாங்க போராடலாம்” என்றதும்,

“நீங்க பெரிய ஆளய்யா! எங்கள ஆள வுடுங்க. எங்களுக்கு வேற வேலை இருக்குது!” எனக் கூறி வேனில் ஏறி சிட்டாக பறந்து விட்டனர்.
—————————————————————————————

யேசு நாதரே போராடாமல் எதுவும் கிடைக்காது என்று சொல்லிவிட்டார் என நினைத்துக்கொண்டு, மீண்டும் தூங்க ஆரம்பித்தேன். அரைமணி நேரத்தில் மீண்டும் ஒரு குரல், எனது செவியை கிழித்தது.

“சார்…. சார்….!”

தன்னார்வ அரசியல்
“2015-க்குள் பட்டினியை குறைக்க வேண்டும் – ஆயிரத்தாண்டு வளர்ச்சி இலக்கு” “எனக்கும் அதே நோக்கம்தான்”

யார் என்று எழுந்து பார்த்தால் சுமார் 15 பேர் இருப்பார்கள். வெள்ளை நிற தொப்பியுடன் கலக்கலான சட்டை பேண்டுடன் காலில் ஷூ (shoe)வுடன் நின்று கொண்டிருந்தனர். எனது, ஹவுஸ் ஓனர் எச்.டி.எஸ்.சி பேங்கில் இந்த வீட்டை அடமானம் வைத்து லோன் வாங்கியிருந்தார். திருப்பி கட்டாததால், ஜப்தி செய்ய வந்திருக்கிறார்களோ என திகைத்து போனேன்.

“என்ன வேணும் சார்?”

“உங்க வீட்டில் பாத்ரூம் இருக்குதா?”

“ங்….இருக்குதே”

“உங்களுக்கு ரோடு வசதி தண்ணி ஒழுங்கா வருதா?”

“ரோடு சரியில்ல. மழை பேஞ்சா சேறும் சகதியும்தான் மிஞ்சும். தண்ணி எடுக்க தினந்தோறும் சண்டதான் வரும்.”

“இல்ல சார். நாங்க உங்களுக்கு ஒரு இலவசமான பயிற்சி தந்து வேலையும் தருகிறோம். அதுக்கு 8-வது படித்திருந்தால் மட்டும் போதும். நீங்க, உங்க தம்பி தங்கச்சி யாரா இருந்தாலும் பரவாயில்ல.”

“நீங்க யாருங்க?”

“நாங்க வேல வாங்கி கொடுக்கிற ஒரு இன்ஸ்டியூட் வச்சிருக்கோம்.”

“அது கவர்மெண்டா? தனியாரா?”

“இது தனியார்தான். ஆனா கவர்மெண்டுக்கு ரிப்போர்ட் அனுப்புவோம்.  நீங்க ஏன் இந்த வேலைய செய்றீங்க. இதனால உங்களுக்கு என்ன இலாபம்?”

“இது ஒரு சேவை சார். வேலை இல்லாதவங்களுக்கு வேல கொடுக்கிறோம்ல”

“இதெல்லாம் கவர்மெண்ட் தானே செய்யனும். எல்லாதுக்கும் வேல கொடுக்கறது கவர்மெண்ட் வேல தான. அதுக்குதானே நாம ஓட்டுப்போட்டு எம்.பி, எம்.எல்.ஏ-ன்னு தேர்ந்தெடுத்து வச்சிருக்கோம்.”

“சார் அரசியல் எல்லாம் பேசாதீங்க? நோ பாலிடிக்ஸ், பிளீஸ். ஏதோ எங்களால முடிஞ்சத செய்றோம்.”

“சரிங்க சார். நீங்க வேலை இல்லாதவங்களுக்கு வேல கொடுக்கறதா சொல்றீங்க. அதுக்கு ஏன் இப்படி தெருத்தெருவா சுத்தறீங்க. இப்பதான் நோக்கியாவிலும், பாக்ஸ்கானிலும் 15,000 பேருக்கு மேல வேல இல்லாம போச்சு. அவங்களுக்கு கொடுக்க வேண்டியதுதானே.”

“இல்ல சார். அவங்கெல்லாம் ஐ.டி. பீல்ட சேந்தவங்க. நாங்க வந்து பிட்டரு, டர்னரு, வெல்டரு ட்ரெயின்ங் மட்டும்தான் கொடுக்கிறோம்.”

“பரவால்ல சார். நீங்க தான் ட்ரெயினிங் கொடுக்கிறீங்கல்ல. அவங்களும் கத்துப்பாங்க.”

“இல்ல சார். அவங்க காண்டக்ட் நம்பர் எங்கிட்ட இல்ல.”

“நான் வாங்கித்தரவா?”

“அவர். இல்ல சார். அவங்க வேற ஊரு. நாங்க இந்த ஊர்ல இருக்கறவங்களுக்கு மட்டும்தான் சொல்லித்தறோம். ஏன்னா எங்க இன்ஸ்டியுட் இங்க தான் இருக்குது. நாங்க தேட்ற ஆளுங்களுக்கு வயசு 30க்குள்ள இருக்கனும் சார். அவங்களுக்கு எல்லாம் வயசு அதிகமா இருக்கும்.”

“வேல எப்படி சார். ஈ.எஸ்.ஐ, பி.எஃப், சம்பளம், நிரந்தரம் (PERMANENT) என எல்லா இருக்கும்தானே?”

“அதெல்லாம் அவங்க கம்பெனி ரூல். அதுல நாங்க தலையிட மாட்டோம். எங்க வேலயே உங்களுக்கு வேல வாங்கி தர்றதோட முடிஞ்சிடும் சார்.”

“அப்ப நீங்க ஆள மட்டும் கொண்டு போய் தள்ளிடுவீங்க. அதன்பிறகு என்ன ஆனாலும் நீங்க கண்டுக்க மாட்டிங்கதானே. கொறஞ்சது ஒருத்தருக்காவது, நிரந்தர வேலை உங்களால் வாங்கித்தர முடியுமா?”

“இல்ல சார். அங்க அவங்களோட பெர்பாமன்ஸ் படி நிரந்தரம் பண்ணுவாங்க.”

“அப்படின்னா நீங்க ட்ரெயினிங் கொடுக்கிறேன்னு சொல்ற பிர்லா கம்பெனியிலேயே 20 வருசமா கான்ட்ராக்டிலதானே வேல செய்றாங்க.”

“இப்பல்லாம் வேல கிடைக்கறதே பெரிய விசயம். இதுல நீங்க பர்மெனட்ன்னு பேசுறீங்களே சார். எதோ எங்களால் முடிஞ்சது வேல வாங்கித்தறோம். அதுவே பெரிய விசயம்.”

“பர்மெனன்ட் இல்லனா கூட பரவால்ல சார். தொடர்ச்சியா அங்கயே வேல கொடுப்பாங்கல்ல.”

“அதுக்கு நான் உத்தரவாதம் கொடுக்க முடியாது சார். அப்படியே உங்கள வேலைய விட்டு தூக்கிட்டா எங்க கிட்ட வாங்க. உங்களுக்கு வேற வேல வாங்கித்தாறோம்.”

“அப்ப இப்படியே ஒவ்வொரு கம்பெனியா சுத்திக்கிட்டே இருந்தா எப்பதான் சார் நாங்க செட்டில் ஆகுரது” என்று கேட்டவுடன், பதில் சொல்ல முடியாமல் ரொம்ப நேரம் யோசித்து விட்டு

“ஓகே சார் உங்களுக்கு வாய்ப்பிருந்தா யாரையாவது அனுப்புங்க” என கூறிவிட்டு ( இந்த விவாதம் சென்று கொண்டிருந்த போதே கூட வந்த அனைவரும் ஒவ்வொருத்தராக சென்றுவிட்டனர் ) வந்த வழியே அவர்கள் சென்று விட்டனர்.

சமீபத்தில், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணத்தை உயர்த்துவது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் என்ற பெயரில் நாடகம் நடத்தியதையும், மின்சாரத்துறை நட்டத்திற்கு காரணம் அரசு தனியாரிடம் மின்கொள்முதல் செய்வது தான் என்பதை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை ஒத்துக்கொள்ள வைத்ததையும் மனித உரிமை பாதுகாப்பு மையம், புரட்சிகர அமைப்புகளான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் போராட்டம் தான் மக்களிடம் அம்பலப்படுத்தியது.

மின்கட்டண உயர்வு மட்டுமல்ல மற்ற எல்லா பொருள்களின் விலைவாசி உயர்வு, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் தற்கொலை என மக்களின் கழுத்தை நெறிக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் அரசின் தனியார்மய-தாராளமயக் கொள்கைகள் தான்.

மக்களின் பிரச்சனைகளுக்கு காரணம் யார்? அதற்கு தீர்வு என்ன? இந்த அரசு யாருக்கானது? என்பதை மக்களுக்கு புரிய வைத்து, மக்களை அரசியல்படுத்தி அரசுக்கு எதிராக மக்களை கேள்வி கேட்க வைத்து போராட வைப்பதே இன்றைய தேவையாக உள்ளது. அதை விடுத்து, பிரச்சனைக்கான காரணத்தை உணராத வகையில் திசை திருப்பி எதிர்த்து கேள்வி கேட்காத வண்ணம் மக்களின் போர்க்குணத்தை மழுங்கடித்து அடிமைகளாக்கும் வேலையை இது போன்ற பல்வேறு மத நிறுவனங்களும், என்.ஜி.ஓ.க்களும் செய்து வருகின்றன.

– புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, கும்மிடிப் பூண்டி.

  1. முதலாளித்துவம் ஒழிஞ்சு கம்மூனிசம் மலர்ந்துட்டா மக்களின் எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்படும் பிரச்சனையே இல்லாம வாழ்ந்த மக்கள் ஏன் ரஸ்யால கம்மூனிஸத்த வேண்டாமுனாங்க கம்மூனிசம் வந்துட்டா காச்சல் மண்டைஅடி எதுவும் வராது சுனாமி பூகம்பம் எதுவும் இல்லாம சூப்பரா வாழலாம் கம்மூனிஸ்டுல எல்லாரும் சமம்னா அது ஏன்யா காரல் மார்க்ஸ் ஸ்டாலின் லெலின் படத்த வைக்கிறிங்க அவங்கெல்லாம் எந்த வகையிலாவது நம்ம விட உயர்ந்தவங்கன்ற சிந்தனைதான இது எப்பிடி கம்மூனிசம் ஆகும் சரி விடுங்க எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் ரெம்ப கஸ்டபடுறார் அவர் தம்பி கால் நொண்டி தாய் தகப்பன் ரெண்டு பேருமே உடம்பு முடியாதவங்க அவர் உழைச்சு சாப்பிடுறார் ஒரு நாள் வேலைக்கு போகலனா பட்டினிதான் அவர் கஸ்டத்துக்கு போராட வாங்கனு கூப்பிட்டா அவரால வர முடியுமா வந்தா அன்னிக்கு அவர் குடும்பம் பட்டினிதான் கடவுள் நம்பிக்கையில் ஒரு பிரயோஜனமும் இல்லைதான் ஆனா போராடுனாலும் பட்டினி கிடக்கனுமே ,யேசுநாதர் போராட சொல்லலனு யாரு சொன்னா நீதிக்காக போராடுங்கனுதான் சொல்லிருக்காரு அனா ஜெபம் பன்னி கமிசன் வாங்குறதுதான் நீதி அப்பிடினு மாத்திட்டானுக மத வியாபாரிகள் கொஞ்சம் சாப்பாடும் கொஞ்சம் பணமும் இருக்கிற உங்களால் தொரந்து போராட முடியும் அனா 1நாள் போராட்டமுனு போனாலே சாப்பாட்டுக்கு வழி இல்லைன்றவன் எப்பிடி போராடுவான் ,கஸ்டபடுரவன் படிக்க முடியாம பள்ளிக்கூடம் போக முடியாம இருந்தப்ப கம்மூனிஸம் என்ன பன்னிச்சு படிப்பு சொல்லி குடுத்துதா இல்லையே அம்பேத்கர் சொன்னார் கற்பி ஒன்று சேர் போராடு நீங்க சொல்லுறீங்க போராடுனு மட்டும் ,கிறிஸ்தவம் கற்பிக்க மட்டும் செஞ்சுது போராட சொல்லல ,எல்லாம் இருந்தாதான் போராட முடியும் வெற்றி பெற முடியும்

    • அண்ணல் பாண்டியன் பல்வேறு அரிய தத்துவங்களை அறியத் தந்துள்ளார். அதனை பொறுமையாக படித்ததில் அடியேனின் சிற்றறிவுக்கு புலப்பட்டவைகளுள் சில….

      தங்களது நண்பர் போராட வாய்ப்பில்லாதவர் தினசரி வேலைக்கு போனாதான் உணவு. சரி நீங்கள் இது வரை எந்தெந்த விசயங்களில் போராடியிருக்கிறீர்கள்….? அதை கொஞ்சம் சொன்னீங்கன்னா ஈஸியா போராடுறது எப்டின்னு நாங்களும் கத்துக்குவோம்ல

      உங்கள் நண்பர் அன்றாடங்காய்ச்சியாக இருப்பதற்கும் கஷ்டப்படுபவன் படிக்க முடியாமல் இருப்பதற்கும் யார் காரணம் எது காரணம் என ஆழ்ந்து யோசித்தால் விடை கிடைக்கும். தங்களது முதல் பின்னூட்டத்தின் முதல் சில வரிகளில் சமூகத்தை பற்றிய தங்கள் பார்வையை அறியும் வாய்ப்பு கிட்டியது. அவ்வளவு ஞானம் உள்ள தாங்கள் கம்யூனிசம் தவிர்த்த வேறு ஒரு சிறந்த தீர்வை எங்களுக்கு அளித்தால் தங்களை பின் தொடர சித்தமாய் உள்ளோம். வியாக்கியானம் என்பது யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

      அடுத்து நான்காவதாக தாங்கள் பதிந்த பின்னூட்டத்தையும் படித்தேன். தங்களது அறிவு வளர்ச்சியும் பண்பாட்டின் யோக்கியதையும் என்னவென்று அதில் தெரிகிறது. இப்படியான நபர்களை வினவுவில் ஏன் அனுமதிக்கிறார்கள் என சற்று கடுப்பாகவும் உள்ளது என அன்போடு தெரிவிக்கிறேன்.

      • சாரிபா நான் போட்ட பின்னூட்டத்த வினவுல ரெம்ப நேரம் கழிச்சு வெளியிட்டதால டென்சன் ஆயிடேன்பா மன்னிச்சுக்கோ அண்ணாத்த போரட போகலாம்தான் அனா எனக்கும் வேலை இருக்குள்ள அப்புறம் இவுங்க அமைப்பு மேல நம்பிக்கை இல்லை இவங்க தீவரவாதிகளுக்கும் முஸிலீம்களுக்கும் தேவைக்கு அதிகமாகவே வக்காளத்து வாங்குவதால் முஸிலீம்கள் மட்டும் அப்பாவிகள் மற்றவர்கள் எல்லாம் மத வெறியர்கள் என்று பச்சையாக புளுகுவதால் இவர்களை எனக்கு புடிக்கவில்லை…

      • //அவ்வளவு ஞானம் உள்ள தாங்கள் கம்யூனிசம் தவிர்த்த வேறு ஒரு சிறந்த தீர்வை எங்களுக்கு அளித்தால் தங்களை பின் தொடர சித்தமாய் உள்ளோம். வியாக்கியானம் என்பது யார் வேண்டுமானாலும் செய்யலாம்.//நான் எந்த தீர்வையும் உங்களுக்கு அளிப்பதாக சொல்லவில்லை கம்மூனிஸம் சரிதான் அனாலும் அதை மக்களை பயமுறுத்தி அப்பப்ப கண்கானிச்சுதான் நடைமுறை படுத்தி வச்சு இருந்தாங்கனு கேள்விப்பட்டுறுக்கேன் அதத்தான் சொன்னேன் ஏன் அப்பிடி கட்டாயப்படுத்தி நடைமுறைப்படுத்தனும் ஏன்னா தனி மனிசன் எல்லாருக்கும் பணம் சம்பாதிக்கனும் ,கார் வாங்கனும் பங்களா கட்டனும் அடுத்தவன அடக்கி ஆளனுமுன்ற ஆசை இருந்துட்டேதான் இருக்கு இது எப்பவும் ஒழியாது கம்மூனிசம்னா என்ன எனக்கு காரல் மார்க்ஸ் எழுதுனதப்பத்தி எல்லாம் தெரியாது ஆனா கம்மூனிஸம் அப்பிடின்றத பத்தி கேள்விப்பட்டத சொல்லுறேன் கம்மூனிஸ ஆச்சில எல்லா நிருவனங்களும் மத நிருவனங்கள் உட்ப்பட எல்லாம் பொது சொத்தா இருக்கும் எல்லாருக்கும் வேலை உண்டு வேலை பாக்குறவங்களுக்கு எல்லாம் அறிவு உழைப்பு உடல் உழைப்புனு பாகுபாடு இல்லாம ஒரே மாதிரி ஊதியம் கல்வி சுகாதாரம் மருத்துவம் அப்பிடிங்கிற அடிப்படை தேவைகள் எல்லாம் அரசு இலவசமா மக்களுக்கு குடுக்கும் நில உடமையளர் யாரும் இருக்க மாட்டாக ,எல்லா நிலமும் அரசுதான் வச்சு இருக்கும் விவசாயம் பாக்கற விவசாய கூலிக்கும் ஒரே மாறி சம்பலம்தான் அரசின் தலைவருக்கும் இதுதான் கம்மூனிஸம் அப்பிடினு கேள்விப்பட்டு இருக்கேன் பாஸ் இது சரிதானனு எனக்கு நீங்கதான் விளக்கனும் இப்பிடிப்பட்ட சமூக அமைப்புல வாழ்கிற ஒருவனுக்கு பணத்தேவை இல்லை ஆனா பணம் பொருளுனு ஆசை இல்லாமயா வாழ்ந்து இருப்பானுக இத எதுக்கு சொல்லுறேன்னா பணத்தாசை பொருளாசை இருக்கிற மனுசங்ள கொஞ்ச நாள அடக்கி ஒடுக்கி கம்மூனிஸத்த பின்பற்ற வைக்கலாம் கட்டுப்பாடு தளர்ந்துருச்சுனா போச்சு அப்புறம் ரஸியால மாறி கம்மூனிஸம் கழன்டுக்கும் இப்ப முதலாளித்துவம் பீக்ல முதலாளித்துவ கொடுமைகளால எண்ணிக்கி மக்கள் சோத்துக்கும் துணிக்கும் வழி இல்லாம போறாகளோ அப்ப மீண்டும் கூட்டம் கூடி புரச்சி வரும் அப்புறம் மீண்டும் கம்மூனிஸ ஆட்சி வரும் அப்புறம் அதுவும் மக்களுக்கு சலிச்சி போய் கம்மூனிசம் கலண்டுக்கும் ரஸ்யால மாறி அதனால இந்த கொள்கை மட்டுதான் சூப்பரு இத விட்டா வேற வழியே இல்லைனு சும்மா உதார் விடக்கூடாது பாஸ் என்ன விளங்குதா (பொருளாசையே எல்லா தீமைக்கும் வேறாக இருக்கிறது நீ உன்னை எவ்வளவு நேசிக்கிறாயோ அதே அளவுக்கு அடுத்தவனையும் நேசி-திரு விவிலியம்)

        • வாடிகன் திருச்சபை வரியில்லா சொர்க்கங்களை உருவாக்கி பிரான்ஸ், இலண்டன் மற்றும் சுவிட்சார்லாந்தில் வாங்கிக் குவித்திருக்கும் ரியல் எஸ்டேட் சொத்துக்கள் அனைத்தும் முசோலினியால் வழங்கப்பட்ட நிதியால் வாங்கிகுவிக்கப்பட்டவை! பொருளாசையற்ற திருச்சபை, முசோலினியின் ஆட்சியை ஆதரித்ததற்கு கைமாறாக முசோலினியால் வழங்கப்பட்ட அற்பக்காணிக்கையின் இன்றைய மதிப்பு 500 மில்லியன் பவுண்டுகளாகும்.

          இப்பொழுது ஜோசப் சுட்டுக்காட்டும் திருவிலிய வரிகளை மீண்டும் படித்து பார்ப்போம்

          “பொருளாசையே எல்லா தீமைக்கும் வேறாக இருக்கிறது நீ உன்னை எவ்வளவு நேசிக்கிறாயோ அதே அளவுக்கு அடுத்தவனையும் நேசி”

          இதுபோன்ற தீர்க்க தரிசனங்கள் எல்லாம் கர்த்தரை நம்பும் தேவ ஆட்டுக்குட்டிகள் இவ்வளவு தூரம் நம்பிருப்பதால் தான் வாடிகன் முசோலினியை நேசிப்பதும், முசோலினி பொருளாசையற்று பணத்தை தூக்கி எறிந்ததும் ஒரு சேர நடந்திருக்கிறது.

          பைபிள் உனக்கு, பைனாப்பிள் எனக்கு என்று பங்குபோடுவது தான் மதம் என்பதன் சூழ்ச்சியை தேவ ஆட்டுக்குட்டிகளான மக்கள் கண்டுகொள்ளவில்லையென்றால் இதுபோன்ற வாக்குத்தத்தங்கள் வரலாற்றில் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும்.

          பரிசுத்த ஆவியை இட்லி சட்டியில் தேடும் பட்டினிகொண்டோர் எல்லா நாட்டிலும் பல இலட்சம் இருக்க, பாசிஸ்டுகளுக்கு கிறித்துவம் கிர்ணிப்பழமாக இனிப்பது இவ்விதத்தில் தான்.

          • //வாடிகன் திருச்சபை வரியில்லா சொர்க்கங்களை உருவாக்கி பிரான்ஸ், இலண்டன் மற்றும் சுவிட்சார்லாந்தில் வாங்கிக் குவித்திருக்கும் ரியல் எஸ்டேட் சொத்துக்கள் அனைத்தும் முசோலினியால் வழங்கப்பட்ட நிதியால் வாங்கிகுவிக்கப்பட்டவை! பொருளாசையற்ற திருச்சபை, முசோலினியின் ஆட்சியை ஆதரித்ததற்கு கைமாறாக முசோலினியால் வழங்கப்பட்ட அற்பக்காணிக்கையின் இன்றைய மதிப்பு 500 மில்லியன் பவுண்டுகளாகும்.//

            //பரிசுத்த ஆவியை இட்லி சட்டியில் தேடும் பட்டினிகொண்டோர் எல்லா நாட்டிலும் பல இலட்சம் இருக்க, பாசிஸ்டுகளுக்கு கிறித்துவம் கிர்ணிப்பழமாக இனிப்பது இவ்விதத்தில் தான்.//

            வாடிகன் திருச்சபை உலக பணக்காரர்களின் காலினை கழுவி பணம் சேர்ப்பதிலேயே குறியாக இருக்கிறது, அதற்காக மனித குல விரோதியான பாசிஸ்ட் முசொலினியிடமே கையேந்துகிறது சரி, இதற்கும் கிறித்துவத்திற்கும் என்ன சம்மந்தம்? விவிலியம் கூறுவதென்ன?

            “பேசத் தெரியாதவர்கள் சார்பாக (தங்களின் உரிமையை) பேசு; திக்கற்றவர்கள் எல்லாருடைய உரிமைகளுக்காகவும் போராடு.

            அவர்கள் சார்பாகப் பேசி நியாயமான தீர்ப்பை வழங்கு; எளியோருக்கும் வலியோருக்கும் நீதி வழங்கு.”- நீதி மொழிகள் 31:8-9.

            இது தான் விவிலியம் காட்டும் பாதை, இதனப் படி நடப்பவர்கள் யார்? இதற்க்கு மாறாக நடப்பவர்களை நீங்கள் கிறித்துவர்கள் என்றெண்ணினால் அதற்க்கு யார் பொறுப்பு.

            • தென்றல் அவர்களுக்கு நான் கேட்க வேண்டும் என்று நினைத்தை ரெபெக்கா மேரி சொல்லீட்டாங்க நான் கம்மூனிஸ்டு என்று சொல்லிக்கொண்டு 20 லச்ச ரூபாயில் புரண்ட ஆளின் செய்கைக்காக காரல் மார்க்ஸை சம்மந்தப்படுத்தி கேலி செய்ய முடியாது ஆனா இங்க என்ன நடக்குது வினவில் தொடந்து யேசுவை கேலி செய்கிறீர்கள் மிகவும் மோசமான முறையில் அதத்தான் ஏன் என்று கேட்டேன் அனா தென்றல் வேற எங்கெங்கயோ போயிட்டாரு ,முதலாளித்துவ பொருளாதாரத்துக்கு யேசுவுக்கு என்ன சம்மந்தம் போப்பையும் திருச்சபை அமைப்பையும் கேலி செய்தால் தவறு இல்லை அதில் எனக்கு உடன்பாடே ஆனா தொடர்ந்து யேசுவை கேலி செய்வது ஏன் என்பதுதான் என் கேள்வி

              • முதலாளித்துவ பொருளாதாரத்துக்கும் இயேசுவுக்கும் ஒரு சம்பந்தம் இல்லையென்பதால் தான் மதமோ இயேசுவோ இப்பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லை என்பதை இத்தளம் ஆணித்தரமாக அறைந்து நிருபீக்கிறது.

                இயேசுவை கேலி செய்கிறார்கள் என்பது அபாண்டமான குற்றச்சாட்டு. இயேசுவையோ முகம்மதுவையோ மனச்சிதைவுக்கு ஆளானவர்கள் என்று யார் சொல்ல முடியும் என்பது உங்களுக்கு தெரியாதா பாண்டியா?

                மாறாக கிறித்தவம் இசுலாம் போன்ற பாதைகள் மக்கள் இயக்கமாக சீர்திருத்த பாதையிலே சீரழிந்து நிற்பதை விமர்சிப்பதற்கு நிறைய அரசியல் காரணங்கள், போராட்டங்கள், சமரசபிழைப்புவாதங்கள் என்று அனேகம் இருக்கின்றன. இதில் பங்கெடுத்து விசுவாசிகளுக்கு மத்தியிலும் இறைநம்பிக்கையாளர்களுக்கு மத்தியிலும் பிரச்சாரம் செய்து மதம் தீர்வல்ல; அது ஆளும்வர்க்கத்தின் ஒடுக்கும் கருவி என்று அரசியல் படுத்துவதுதான் முதன்மையான நோக்கம். இதைவிட்டுபுட்டு வெள்ளரிக்காய் தொட்டுத் தின்பதில் அர்த்தம் இல்லை PJ.

                • //இயேசுவை கேலி செய்கிறார்கள் என்பது அபாண்டமான குற்றச்சாட்டு.// எப்பிடி சொல்லுறீங்க இங்கதான் யேசு கஞ்சா அடுச்சவருனு சொன்னிங்க அப்புறம் யேசுவை சூலம் விரட்டுச்சுனு சொன்னிங்க ,யேசு கண்ணடுச்சு கூப்பிடுறார்னு படம் போட்டிக இது யேசுவை கேலி செய்வது அல்ல அப்பிடினு எப்படி சொல்லுறீங்க நீங்கதான் விளக்கனும்
                  //மாறாக கிறித்தவம் இசுலாம் போன்ற பாதைகள் மக்கள் இயக்கமாக சீர்திருத்த பாதையிலே சீரழிந்து நிற்பதை விமர்சிப்பதற்கு நிறைய அரசியல் காரணங்கள், போராட்டங்கள், சமரசபிழைப்புவாதங்கள் என்று அனேகம் இருக்கின்றன.//
                  கிறிஸ்துவத்தையும் இசுலாமையும் மதம் என்ற ரீதியில் ஒன்றுனினைக்காதீர்கள் அது கம்மூனிஸ்டுகள் தெரிந்தே செய்யும் மடமை இந்த முட்டாள்தனத்தை காரல் மார்க்ஸ்தான் சொன்னார் என்றால் அதை நிச்சயமாக என்னால் ஏற்றுக்கோள்ள முடியாது

        • \\ கம்மூனிஸம் சரிதான் அனாலும் அதை மக்களை பயமுறுத்தி அப்பப்ப கண்கானிச்சுதான் நடைமுறை படுத்தி வச்சு இருந்தாங்கனு கேள்விப்பட்டுறுக்கேன்\\

          ரொம்ப டெரரா கேள்விபட்டிருக்கீக! உழைப்பவனுக்கு அதிகாரம் என்பதை கண்காணித்து நடைமுறைப்படுத்தியது சோசலிசம் தான் என்பது சரி. இதனால் மக்கள் பயப்படுவார்களா? அல்லது முதலாளிகளும் நிலப்பிரப்புகளும் பயப்படுவார்களா? நடுநிலை என்பதை விட்டுவிட்டு ஒரு பக்கத்தை தேர்வு செய்யுங்கள் ஜோசப். நீங்கள் பயப்படும் வர்க்கமா? அல்லது பயமுறுத்தும் வர்க்கமா? மேலை நாடுகளில் கம்யுனிசத்தால் கண்ணீர் வடிக்கிற நிலப்புரக்களின் குரல் ஜனநாயகத்தின் அழுகுரலாக இன்றைக்கும் தண்டி தண்டியாக புத்தகங்களாக வருகின்றன என்பதை மேற்கொண்டு கேள்விப்படுங்கள்!

          \\ ஏன் அப்பிடி கட்டாயப்படுத்தி நடைமுறைப்படுத்தனும் ஏன்னா தனி மனிசன் எல்லாருக்கும் பணம் சம்பாதிக்கனும் ,கார் வாங்கனும் பங்களா கட்டனும் அடுத்தவன அடக்கி ஆளனுமுன்ற ஆசை இருந்துட்டேதான் இருக்கு இது எப்பவும் ஒழியாது\\

          இந்த பாயிண்டை கறாராக மார்க்சிய ஆசான்கள் வரையறத்து மக்கள் முன் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள். மனிதர்களின் ஆசை சார் முரண்பாடுகள் இங்கு பிரச்சனைக்குரிய விசயம் அல்ல. ஏனெனில் இதைத் தீர்ப்பதற்கு ஆளும் வர்க்கம் தேவையில்லை. அப்படியானால் இங்கு இருக்கிற ஆளும் வர்க்கம் என்ன செய்துகொண்டிருக்கிறது? இதுதான் முதன்மையான கேள்வி.

          மூலதனத்தின் முரண்பாட்டை பேசவிடாமல் ஆளும் வர்க்கம் ஒரு சாரரின் நலன்களுக்காக பெரும்பான்மை மக்களை நசுக்குகிற ஆசையும் நீங்கள் கார் பங்களா வாங்க வேண்டும் என்கிற ஆசையும் ஒன்றா? உங்க பாயிண்டு படியே கார் வாங்கும் ஆசை ஒழியாது என்று வைத்துக்கொள்வோம். இதன்படியே ஆளும்வர்க்கம் மக்களை ஒடுக்கிற ஆசையும் ஒழியாது ஒழியமுடியாது ஒழியக்கூடாது அது இயற்கைக்கு எதிரானது என்று எடுத்துக்கொள்ளலாமா?

          • //உழைப்பவனுக்கு அதிகாரம் என்பதை கண்காணித்து நடைமுறைப்படுத்தியது சோசலிசம் தான் என்பது சரி. இதனால் மக்கள் பயப்படுவார்களா? அல்லது முதலாளிகளும் நிலப்பிரப்புகளும் பயப்படுவார்களா? நடுநிலை என்பதை விட்டுவிட்டு ஒரு பக்கத்தை தேர்வு செய்யுங்கள் //என்ன உழைப்பவ்னுக்கு அதிகாரமா எங்க குடுத்தாங்க ரஸ்யால லெனின் ஆட்சியிலா கம்மூனிஸ ஆட்சில முதலாளினு யாரும் இல்ல எல்லாம் உழைக்கும் மக்கள்தான் அப்பிடினா எல்லாருக்கும் அதிகாரம் இருந்துதா சொல்லவே இல்லயே எனக்கு யாரும் சொல்லல நீங்கதான் சொல்லுறீங்க உடனே பாராளிமன்றம் போன பால்கார அம்மா அப்பிடினு சொல்லிறாதிங்க அப்புறம் ஜனநாயகவாதிகள் செருப்புதைக்கிறவர் ஜனாதிபதி ஆனாருனு சொல்லுவாங்க இரண்டுக்கும் ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்கும் திறமை எல்லாம் என்னிடம் இல்லை
            இதனால் மக்கள் பயப்படுவார்களா? அல்லது முதலாளிகளும் நிலப்பிரப்புகளும் பயப்படுவார்களா? முதலாலிகள் நிலப்பிரபுக்கலே இல்லாத கம்மூனிஸ ஆட்சில ஆட்சியாலர்கள் யாரை பயமுறுத்தனும

            • அப்புறம் திருச்சபை சொத்துக்கும் யேசுவின் பொன் மொழிக்கும் என்ன சம்மந்தம் 20 லட்ச ரூபாயில புரண்ட கமூனிஸ்டுக்கும் காரல் மார்க்ஸிக்கும் உள்ள சம்மந்தமா ,நான் யேசுவின் போதனைகளில் கம்மூனிஸத்த பார்க்கிறேன் அதனாலதான் அந்த பொன்மொழிய போட்டேன் பாஸ் இருந்தாலும் இவ்வளவு கோவம் வேனாமே எழுதினது ஜோசப்பா பாண்டியனானு பாக்க கூடநேரமும் நிதானமும் இல்லாத அளவுக்கு…

              • \\ அப்புறம் திருச்சபை சொத்துக்கும் யேசுவின் பொன் மொழிக்கும் என்ன சம்மந்தம் \\

                கார்ல் மார்க்ஸ் ஏங்கல்சிடமே கேட்போம்.

                “மதகுரு எப்போதும் நிலப்பிரபுவுடன் கைகோத்துச் செயல்பட்டதைப் போன்றே, மதவாத சோஷலிசம் நிலப்பிரபுத்துவ சோஷலிசத்துடன் கைகோத்துக் கொண்டது.

                கிறிஸ்துவத் துறவு மனப்பான்மைக்கு சோஷலிசச் சாயம் பூசுவதைவிட எளியது எதுவும் இல்லை. கிறிஸ்துவ மதம், தனிச் சொத்துடைமைக்கு எதிராகவும், திருமணத்துக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் முழக்கமிடவில்லையா? அவற்றுக்குப் பதிலாக அது தர்மத்தையும் தரித்திரத்தையும், பிரம்மச்சரியத்தையும் புலனடக்கத்தையும், மடாலய வாழ்க்கையையும், புனித மாதா ஆலயத்தையும் பிரச்சாரம் செய்யவில்லையா? கிறிஸ்தவ சோஷலிசம் என்பது, சீமான்களின் மனப்புகைச்சலைப் புனிதப்படுத்த மதகுரு தெளிக்கும் புனித நீரன்றி வேறல்ல.”

                என்ன சம்பந்தம் என்று தெரிந்துவிட்டதா பாண்டியன் அவர்களே! அடுத்த கேள்விக்கு போவோம்.

                \\20 லட்ச ரூபாயில புரண்ட கமூனிஸ்டுக்கும் காரல் மார்க்ஸிக்கும் உள்ள சம்மந்தமா\\

                20 இலட்ச ரூபாயில் படுத்துப்புரளும் கம்யுனிஸ்டு மட்டுமல்ல, பலகோடி சுருட்டும் தளிராமச்சந்திரன் போன்றோரின் சோசலிசமும் எப்படிப்பட்டது என்பதை கார்ல் மார்க்ஸ் ஒருவரியில் உள்ளடக்கியிருக்கிறார் இப்படி; “முதலாளி முதலாளியாக இருப்பது – தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்காகவே.” இப்படிச் சொல்கிற கூட்டம் பணத்தில் புரளாமல் இருக்குமா? மார்க்ஸ் சரியாக எடுத்துக்காட்டியிருக்கிறார் இல்லையா?

                \\நான் யேசுவின் போதனைகளில் கம்மூனிஸத்த பார்க்கிறேன் அதனாலதான் அந்த பொன்மொழிய போட்டேன் பாஸ்\\

                ஏசுநாதர் போராட மாட்டாரா? நீங்கள் போராட மாட்டீர்களா பாஸ்?

            • என்ன பாண்டியன் நீங்க? முதலாளிகளே இல்லாத சமுதாயத்தில் குலாக்குகள் மற்றும் ஏகாதிபத்திய கைக்கூலிகளுக்கு எதிரான போராட்டங்கள் எதைக்காட்டுகின்றன? முதலாளித்துவ அழிவுசக்திகளை அப்புறப்படுத்தி உழைக்கும் மக்களை ஒன்றிணைக்கிற சமூகத்திற்கு சோசலிச சமூகம் என்று பெயர். விவசாயத்தில் நிலப்புரபுத்துவத்தை வீழ்த்தியும் தொழிற்சாலைகளில் முதலாளித்துவத்தை வீழ்த்தியும் சோசலிசத்தை நிலைநாட்டுகிற பொழுது உழுபவனுக்கு நிலம், உழைப்புக்கேற்ற ஊதியம் உறுதிப்படுத்தப்படுகிறது. இங்கு மூலதனத்தின் மீதான போர் முழுதாக முடிந்துவிடவில்லை. வர்க்கப்போராட்டம் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இங்கு மக்கள் எப்படி பயந்தார்கள் என்று சொல்லமுடியுமா? இந்தப் போராட்டத்தில் யாரு யாரை பயமுறுத்தினார்கள் என்று சொல்ல முடியுமா? மேலைநாடுகளின் கம்யுனிச எதிர்ப்பு பிரச்சார நூல்கள் வகைவகையாக இருக்கின்றன. அதைப் பார்த்துகூட நீங்கள் வாதங்களைக் கட்டமைக்கலாம். அதைவிட்டு விட்டு வெள்ளந்தியாக வெறும் வாயில் கேசரி கிண்டிக்கொண்டிருக்கிறீர்கள்!

        • பாண்டியன்,

          ஜோசப் என்று இருக்குமிடத்தில் உங்கள் பெயரைப்போட்டுக்கொள்ளுங்கள். தவறுதலாக பெயர் மாற்றம் நடைபெற்றுவிட்டது.

  2. கட்டுரையின் ரெண்டாம் பாகத்தில் நீங்கள் அவர்களுடன் பேசியதுதான் தான் விதண்டாவாதமாக தெரிகிறது.

    (இது ஒரு சேவை சார். வேலை இல்லாதவங்களுக்கு வேல கொடுக்கிறோம்ல”

    “இதெல்லாம் கவர்மெண்ட் தானே செய்யனும். எல்லாதுக்கும் வேல கொடுக்கறது கவர்மெண்ட் வேல தான. அதுக்குதானே நாம ஓட்டுப்போட்டு எம்.பி, எம்.எல்.ஏ-ன்னு தேர்ந்தெடுத்து வச்சிருக்கோம்.”)

    சுத்த அபத்தமாக தெரிகிறது.

    எல்லோருக்கும் கவேர்மேன்ட் வேலை என்றால் கவர்மெண்ட் தான் தரும்.மற்றபடி தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்வதென்றால் அதை தனிநபர்தான் தேடிக்கொள்ளவேண்டும் . அதற்குமா அரசாங்கம் துணைக்கு வரும்.அப்படி வந்தால் அது அரசாங்கமா அல்லது ஆள்கள் சப்பளை செய்யும் நிறுவனமா?

    (“சரிங்க சார். நீங்க வேலை இல்லாதவங்களுக்கு வேல கொடுக்கறதா சொல்றீங்க. அதுக்கு ஏன் இப்படி தெருத்தெருவா சுத்தறீங்க. இப்பதான் நோக்கியாவிலும், பாக்ஸ்கானிலும் 15,000 பேருக்கு மேல வேல இல்லாம போச்சு. அவங்களுக்கு கொடுக்க வேண்டியதுதானே.”

    “இல்ல சார். அவங்கெல்லாம் ஐ.டி. பீல்ட சேந்தவங்க. நாங்க வந்து பிட்டரு, டர்னரு, வெல்டரு ட்ரெயின்ங் மட்டும்தான் கொடுக்கிறோம்.”

    “பரவால்ல சார். நீங்க தான் ட்ரெயினிங் கொடுக்கிறீங்கல்ல. அவங்களும் கத்துப்பாங்க.”

    “இல்ல சார். அவங்க காண்டக்ட் நம்பர் எங்கிட்ட இல்ல.”

    “நான் வாங்கித்தரவா?”)

    அவர்களுக்கு நம்பர் வாங்கி தருவதர்க்குமுன் நீங்கள் சொன்ன நோக்கியாவிலும், பாக்ஸ்கானிலும் வேலை இழந்தவர்களிடம் இப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறது ,வருகிறீர்களா என ஒரு முறை கேட்டுப்பார்த்து அவர்களின் பதிலையும் பதிவிடுங்களேன் வினவு.

    (“மக்களின் பிரச்சனைகளுக்கு காரணம் யார்? அதற்கு தீர்வு என்ன? இந்த அரசு யாருக்கானது? என்பதை மக்களுக்கு புரிய வைத்து, மக்களை அரசியல்படுத்தி அரசுக்கு எதிராக மக்களை கேள்வி கேட்க வைத்து போராட வைப்பதே இன்றைய தேவையாக உள்ளது”. )

    போராட்டம் முடிந்து திரும்பிவரும்போதே யாரும் தீர்வுகளுடன் வருவதில்லை .இதையும் மனதில் கொள்ளுங்கள் வினவு.

    அதுபோல வேலைக்கான பயிற்சியைத்தான் ஒருவனால் தரமுடியும்.அதைவைத்து வாழ்வை வளப்படுதிகொள்வது என்பது தனிநபரின் கையில் தான் உள்ளது.

    ஒரு திரைப்படத்தில் சிறைக்கு சென்றவர்களுக்கெல்லாம் அரசாங்கம் நிலம் தருகிறதென்று கேள்விப்பட்டு கவுண்டமணியும் செந்திலும் செல்வார்கள்.தனது முறை வந்தபொழுது கவுண்டமணி அவர்கள் அந்த அதிகாரியைப்பர்ர்த்து சில பல கேள்விகளை கேட்பார்.வாய்ப்பிருந்தால்அந்த காட்சியை பாருங்கள்,இக்கட்டுரையை படிக்கும்பொழுது எனக்கு அந்த காட்சிதான் நினைவுக்கு வருகிறது

    • // சுத்த அபத்தமாக தெரிகிறது.

      எல்லோருக்கும் கவேர்மேன்ட் வேலை என்றால் கவர்மெண்ட் தான் தரும்.மற்றபடி தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்வதென்றால் அதை தனிநபர்தான் தேடிக்கொள்ளவேண்டும் . அதற்குமா அரசாங்கம் துணைக்கு வரும்.அப்படி வந்தால் அது அரசாங்கமா அல்லது ஆள்கள் சப்பளை செய்யும் நிறுவனமா?//

      https://www.vinavu.com/2014/12/30/unemployment-in-tamilnadu/

      நண்பர் மேற்காணும் கட்டுரையை படித்து விட்டு வரவும்.அதிலும் குறிப்பாக கீழ்க்காணும் வரிகளை கண்ணில் கலப்படமில்லா விளக்கெண்ணையை ஊற்றி விட்டு படிக்கவும்.

      //இதுமட்டுமில்லாமல், பிரைவேட் கம்பெனிக்காரனுகளுக்கு ஆள் சேர்த்துவிடனும்.
      சுத்துப்பட்டுல இருந்து சென்னையில இருக்கிற கம்பெனிக்காரங்க வரைக்கும் தனக்கு தேவையான ஆட்களை தெரிவு செய்துக் கொள்ள நாங்கதான் ஏற்பாடு செய்து தரணும். அதுக்கான லெட்டருல கலெக்டர் அனுமதி கையெழுத்துப் போட்டு அனுப்பிடுவாரு.//

      //போராட்டம் முடிந்து திரும்பிவரும்போதே யாரும் தீர்வுகளுடன் வருவதில்லை .இதையும் மனதில் கொள்ளுங்கள் வினவு.

      அதுபோல வேலைக்கான பயிற்சியைத்தான் ஒருவனால் தரமுடியும்.அதைவைத்து வாழ்வை வளப்படுதிகொள்வது என்பது தனிநபரின் கையில் தான் உள்ளது.//

      இதன் பெயர் தான் தனிநபர் வாதம். இதுக்கெல்லாம் பதில் சொன்ன நீங்க ஏன் கரண்ட் விலை குறித்த கேள்விகளுக்கும் வேலை நீக்கம் செய்த நோக்கியா ஃபாக்ஸ்கான் முதலியவைகளுக்கு பதில் சொல்லவில்லை. போராடினால்தான் தீர்வு என்றால் போராடத்தான் வேண்டும். அதை விடுத்து ஜடம் போல் இருத்தல் நன்றன்று.

  3. ஏற்றிய விலையை எந்த நாட்டில் குறைத்துள்ளனர்?

    விலையேற்றம் என்பது எல்லா நாடுகளிலும் தவிர்க்க முடியாததே. அதே சமயம் பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருந்தால் பரவாயில்லை. அது அரசின் கை மீறி போனால் பொதுமக்களுக்கு பிரச்சினை தான்.

    அரசே வேலை வாங்கி தர வேண்டும், அரசே வீடு கட்டி தர வேண்டும், அரசே உணவு தர வேண்டும் என்ற எண்ணம் தவறு. அது காலமெல்லாம் அனைத்திற்கும் அரசிடம் கையேந்தி நிற்கும் அவல நிலையை, ஒரு அடிமையை போன்ற நிலையில் நம்மை வைத்திருக்கும். நம் சொந்த உழைப்பில் இதை எல்லாம் ஈட்ட முடியும்.

    வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தால் போதுமா, நாமும் கொஞ்சம் முயல வேண்டாமா?
    டீ கடை வைத்தால் கூட கையில் காசு பார்க்கலாம். ஆனால் நம்மவர்கள் எல்லாம் வேலை என்றால் கம்பியுட்டர் முன்னாள் கீ போர்டை தட்டிக்கொண்டே டாலரில் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

    • //விலையேற்றம் என்பது எல்லா நாடுகளிலும் தவிர்க்க முடியாததே//

      ஏன் தவிர்க்க முடியாது?

      • In capitalist nature, people will earn and store their wealth for them and for future generation.
        If price doesn’t raise, people will simply save under the mattress/bank as it can be redeemed for the same worth in future.

        If people dont spend capitalism will fail. As per keynes, one person spending is another person earning.A moderate price raise ensures people spend or invest their money to simply preserve the wealth or catch up with inflation.

        A price increase will slowly put pressure on wages and employees will be earning more, most of the time it will be inflation adjusted salary but employees tend to think they are making more. This again helps employers.

      • சிவப்பு,

        விலையேற்றம் முற்றிலும் இல்லாத ஒரு நாட்டை காட்டுங்கள்.
        கம்மியுநிசவாதிகள் ஆண்ட கேரளா, மேற்கு வங்காளத்தில் விலையேற்றம் இல்லாமல் இருந்ததா?
        விதண்டாவாதம் புரியாதீர்கள்.

        அதே சமயம் பண வீக்கத்தை கட்டுக்குள் வைத்திருப்பது நாட்டின் பொருளாதாரத்திற்கும், நாட்டு மக்களின் பொருளாதாரத்திற்கும் நல்லது.

        விலையேற்றத்தை முழுக்க தடுக்க முடியாது. ஆனால் அதனை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். ஒரு தொழிற்சாலையில் மூலப்பொருட்களின் விலை ஏறும் போது உற்பத்தியாகும் பொருளின் விலை ஏறுவதை தவிர்க்க இயலாது. அதே சமயம் நமது பொருளுக்கு சந்தையில் தேவை இருக்கும்போது அதனை வேண்டுமென்றே பதுக்கி வைத்து செயற்கையாக டிமாண்டை உருவாக்கி விலையேற்றத்தை ஏற்றுவதும், இடைநிலை தரகர்கள் பேராசையினால் வேண்டுமென்றே விலையேற்றத்தை உண்டாக்குவதையும் நிச்சயம் தடுத்து நிறுத்த வேண்டும்.

        மற்றபடி ஒட்டுமொத்தமாக ௦% விலையேற்றம், ௦% பண வீக்கம் என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை. அப்படி நடக்க வேண்டுமானால் அந்த அரசு ஒன்று அரபு நாடுகளை போல பணத்தில் மிதக்க வேண்டும். அந்த நாடுகளில் கூட விலையேற்றங்கள் உண்டு தான்.

        • கற்றது கையளவு,

          உண்மையில் நான் இங்கே கம்யுனிசம் பேசவில்லை. இதை விளக்குவதற்கு கம்யுனிசம் தேவையில்லை சற்று மனிதாபிமானம் இருந்தாலே போதுமானது.

          மூலபோருட்களின் விலையேற்றம் ஏன் என்று கேள்வி உங்களுக்குள் இல்லையா? நன்றாக யோசித்துப் பாருங்கள். நம் மக்கள் அனைவரின் பொது சொத்தான இந்த இயற்க்கை வளங்கள், இப்படி அராஜகமான முறையில் அழிவதைப் பாருங்கள்.அப்புறம் இந்த விலையேற்றம்,பணவீக்கம் என்பதெல்லாம் ஒரு மாயை என்பது தெள்ளென விளங்கும்.

          1௦ ஆண்டுகளுக்கு முன்பிருந்த விவசாய நிலம் தமிழகத்தில் இன்றில்லை.இது இந்தியா முழுமைக்கும் பொருந்தும். இருந்தும் விவசாயத்திற்கு தேவையான இயந்திரங்களின் விலை உயர்ந்துக் கொண்டே தான் இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் இயந்திரங்களின் உற்பத்தியும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அது மட்டுமல்லாமல் இயந்திரங்கள் உற்பத்திக்குத் தேவையான இரும்புத் தாது சலிசான விலைக்கு சீனா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபடுகின்றன. பின்னர் தேவையான நுட்பமான கருவிகள் அதிக விலைக்கு தருவிக்கபடுகின்றன. உண்மையில் உள்நாட்டு உற்பத்தியில் ஈடுபடுத்தபடவேண்டிய இந்தியாவின் இயற்க்கை வளங்கள்(மனித வளம் உள்ளிட்டு) மலிவான விலைக்கு காவு கொடுக்கபடுகின்றன.

          சென்னையில் கட்டப்படும் கட்டடங்களுக்கு தேவையான மூலபொருட்கலான மணல்,செங்கல்,சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் கட்டடங்கள் கட்டப்பட்டு வாங்குவாரில்லாமல் சும்மா ஆண்டுகனக்கிலும் சும்மா கிடக்கின்றன. சென்னையில் உற்பத்தியாகும் கார்களை எடுத்துக் கொள்ளுங்கள். எத்துணைக் கார்கள் உற்பத்தியாகின்றன. அதற்க்கு தேவையான மூலபொருட்கள் எங்கிருந்து வருகின்றன. நான் கேள்விபட்டவரைக்கும் ஒரு கார் உற்பத்தி செய்ய 15k லிட்டர் தண்ணீர் தேவைபடுவதாக கூறுகின்றனர். எவனோ ஒருவன் நுகர்வதற்காக இவ்வளவு இயற்க்கை வளங்களும் வீனடிக்கபடுகின்றனவே. எவனோ ஒருவன் இலாபம் சம்பாதிக்க,கோக் குடிக்க மக்களுக்கு சொந்தமான தாமிரபரணி ஆற்றை கொள்ளையிடுகிறார்கள். இப்படி அனைத்து விதமான இயற்க்கை வளங்களும் போலி ஜனநாயகத்தில் ஓட்டுப் போட்ட ஒரே காரணத்தை வைத்து ஆளும் தரகு முதலாளித்துவ வர்க்கம் தனிப்பட்ட சொத்தாக பாவித்து கொள்ளையடிக்கிறது. அதீத கொள்ளையின் காரணமாக இயற்கை வளங்கள் நாசமாகின்றன. அவற்றில் பொது மக்களின் பெரும்பான்மையான பங்கும் அடங்கும்.

          இன்னொருபுறம், உள்நாட்டு உற்பத்தி இருந்த போதிலும் பான்னாடு நிறுவனங்களிடம் போட்ட ஒப்பந்தத்தின் காரணமாக தேவையில்லாமல் பொருட்களை இறக்குமதி செய்ய நேருகிறது. அது உள்நாட்டு உற்பத்தியின் விலை வீழ்ச்சிக்கு அடிகோலுகிறது. “உருளைக்கிழங்கு இறக்குமதி வளர்ச்சியா வீழ்ச்சியா ?” என்ற வினவுக் கட்டுரையை படித்துப் பாருங்கள்.

          repo-india என்ற தளத்தில் நான் படித்தது, பணக்கார 2௦ விழுக்காடு மக்கள் 84% இயற்க்கை வளங்களை நுகர்கிறார்கள் என்றும் ஏழை 20% மக்கள் 1.4% இயற்க்கை வளங்களையே நுகர்கிறார்கள் என்றும் படித்ததாக ஞாபகம். உண்மையில் இங்கு அனைத்து மக்களுக்கும் தேவையான அளவிற்கு இயற்க்கை வளங்கள் உள்ளன.மனிதனின் சமூக பொருளாதார வளர்ச்சியில் அதி முக்கியமான பிரச்சினையான இயற்கையை பங்குபோடுவது என்பது இன்று இப்படி தான் உள்ளது.

          உற்பத்தி-மிகை உற்பத்தி-தேக்கம்-உற்பத்தி பொருள்களின் அழிவு-உற்பத்தி என்று ஒரு வட்டமாக சுற்றும் இந்த உற்பத்தி முறை மாறும் பொது அதாவது, இந்த அராஜகமான உற்பத்தி முறையின் அழிவில் தான் இந்த மனித சமூகத்தின் எதிர்காலமே உள்ளது. அப்பொழுது இந்த விலையேற்றம்,பணவீக்கம் என்பதெல்லாம் ஏட்டில் இல்லாத பழஞ்சொல்லாகிவிடும்.

          நன்றி.

          • தோழர் சிவப்பு, தங்களின் விளக்கங்கள் மிகவும் அருமை. எளிய முறையில் அழகாக விளக்கியுள்ளீர்கள்.

          • சிவப்பு,

            தெளிவாக விளக்கினீர்கள். நன்றி.

            தற்போதைய ஜனநாயகத்தில் குறைகள் உள்ளன. இல்லை என்று மறுக்கவே இல்லை.
            இந்த ஜனநாயகம் போலி ஜனநாயகம் ஆனதற்கு யார் காரணம்?

            இலவச மிக்சி கிரைண்டர், சைக்கிள், போன்றவற்றிற்கும், 1௦௦௦ ரூபாய், ௨௦௦௦ ரூபாய், சரக்கு, பிரியாணி என்று லஞ்சம் வாங்கிக்கொண்டு வோட்டை விற்கும் நம் மக்கள் தானே காரணம்.

            நாட்டுக்காக உழைக்கும் நல்லவர்களை ஏன் நாம் தேர்ந்தெடுப்பதில்லை. இது தான் எனது வருத்தம். ஊழல் செய்பவர் என்று தெரிந்தும், அடாவடி ஆட்சி நடக்கும் என்று தெரிந்தும் நம் மக்கள் கவர்ச்சி அரசியலில் போதையில் மயங்கி வோட்டை அள்ளி அள்ளி கொடுக்கின்றனர்.
            தற்போதைய ஜனநாயகத்தில் உள்ள இந்த குறைகளை எப்படி சரி செய்வது என்று ஆலோசிப்போம்.

            புரட்சி ஏற்பட்டு கம்மியுனிச ஆட்சி எற்படுகிரதென்று வைத்துக்கொள்வோம்.
            அந்த கம்மியுனிச ஆட்சி, விரைவில் போலி கம்மியுனிச ஆட்சியாக மாறாமல் இருப்பதற்கு என்ன உத்திரவாதம்?

            தற்போதைய ஜனநாயகத்தில் ஆட்சியாளர்கள் தவறு செய்தால் அவர்களை மக்கள் தூக்கி எரிவதை போல புரட்சி கம்மியுனிச ஆட்சியில் ஆள்பவர்கள் தவறு செய்தால் அவர்களை தூக்கி ஏறிய மக்களுக்கு என்ன வழி உண்டு. ஆட்சி கிடைத்த மமதையில் சர்வாதிகாரம் தலை தூக்கினால் அதை மக்கள் எப்படி தடுப்பது?

            • \\இலவச மிக்சி கிரைண்டர், சைக்கிள், போன்றவற்றிற்கும், 1௦௦௦ ரூபாய், ௨௦௦௦ ரூபாய், சரக்கு, பிரியாணி என்று லஞ்சம் வாங்கிக்கொண்டு வோட்டை விற்கும் நம் மக்கள் தானே காரணம்.\\

              மக்கள் ஒருவிதத்தில் காரணம் தான். ஆனால் அது தங்கள் பார்வைப்படி அல்ல என்று கருதுகிறேன். ரிலையன்ஸ் பிரஸ்ஸோ வால்மார்ட்டோ போர்டு பவுண்டசேனோ சுரண்டிக்கொழுத்த லாபத்தின் ஒருபகுதியைத்தான் தேர்தலில் இவ்விதம் ஓட்டுக்குப் பணம் என்று முதலீடு செய்கின்றனர். காங்கிரசாக இருந்தாலும் பிஜேபியாக இருந்தாலும் திமுக அதிமுகவாக இருந்தாலும் ஓட்டுக்குப் பணம் என்பது மிகச் சிறந்த முதலீடு. இப்படிப்பட்ட முதலீட்டை முறியடிக்கவேண்டுமானால் முதலாளித்துவத்தைத் தான் முறியடிக்கவேண்டும். ஆனால் அப்படிப்பட்ட அரசியல் பேசுவதே உங்களுக்கு கசப்புவிடம். உங்கள் கருத்துப்படி நல்லவர்களைத் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமரவைப்பதன் மூலம் போலி ஜனநாயகத்தை ஜனநாயகமாக எப்படி மாற்றுவது?

              இந்த இடத்தில் இப்பொழுது மட்டும் ‘வருமுன் காப்போம்’ என்பதை தாங்கள் பிரச்சாரம் செய்ய மறப்பது ஏன்? ஜனநாயகத்திற்கு ஆபத்தாக இருக்கிற முதலாளித்துவத்தை தூக்கி எறிய மக்களைத் தயார்படுத்தாமல் மக்களையே நல்லவர்களை தேர்ந்தெடுக்கச் சொல்லி ஆட்சிக்கட்டிலில் அமரச்செய்வதன் மூலமாக ஆட்சி எப்படி சுத்தமாக முடியும்? மலத்தில் தேங்காய்ப்பூ தூவினால் அது உணவாகிவிடுமா?

            • \\ புரட்சி ஏற்பட்டு கம்மியுனிச ஆட்சி எற்படுகிரதென்று வைத்துக்கொள்வோம்.\\

              தங்கள் பார்வையின் படி புரட்சி என்பது என்ன? பொருளாதார கோரிக்கைகளா? சுதந்திரம் ஜனநாயகம் என்பதற்கான தத்துவார்த்த போராட்டமா? புரட்சி என்றால் அதில் உங்கள் பங்கு என்ன? தற்பொழுதுவரை புரட்சியை மதிப்பிடுகிற மாண்புமிகு மதிப்பீட்டாளராகவும், பாசமிகு பார்வையாளராகவும் இருக்கிறீர்கள். சமூகம் தங்களுக்கு அளிக்கிற வசதியான வாய்ப்பை இறுகப்பற்றி மேலேறும் மனிதர்கள் வரலாற்றில் புரட்சியின் பங்களிப்பை இவ்விதம் சோம்பல் முறிக்கும் assumptionஆக முன்வைக்கிறார்கள். மாறாக ஏன் புரட்சி தேவை அல்லது தேவையில்லை என்ற பார்வையை முன்வைப்பது சிறப்பாக இருக்கும். ஒரு மதநம்பிக்கையாளரிடம் கடவுளைப் பற்றி விவாதிக்கிற பொழுது இது என் நம்பிக்கை என்று சொல்கிற நேர்மை கூட உங்கள் assumptionஇல் இல்லை என்பது ஏமாற்றமே!

              \\அந்த கம்மியுனிச ஆட்சி, விரைவில் போலி கம்மியுனிச ஆட்சியாக மாறாமல் இருப்பதற்கு என்ன உத்திரவாதம்?\\

              சமூக இயக்கவியல் விதிகள் தான் உத்திரவாதம். முதலாளித்துவம் எப்படி நிலைபெற்றிருக்கிறது? அது தொடர்ச்சியாக வர்க்கப்போராட்டத்தை நொடிக்கு ஒருதரம் மக்கள் மீது நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது. எந்தளவுக்கு என்றால் ‘மக்கள் சனநாயகம் குறித்து தொல்லைப்படாதபடி’, ‘அரசியல் குறித்து கவலைப்படாதபடி’ தாக்குதல் தொடுக்கிறது. வெளிப்பார்வைக்கு குளத்தில் சலனமற்று அமர்ந்திருக்கிற வாத்தாக இருந்தாலும் அதன் கால்கள் தன்னை நிலைநிறுத்த ஓயாது அலைவுறுகின்றன.

              கம்யுனிசம் ஆட்சிக்கு வந்தாலும் வர்க்கப்போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கும்! தோழர் மாவோ சுட்டிக்காட்டுவதைப் போல முரண்பாட்டை நேரான வழியில் திசைதிருப்பும் இயக்கவியலில் பாட்டாளிகள் தங்கள் தரப்பு தாக்குதலை அரசியல் அதிகாரத்தின் மூலமாக நிலைநிறுத்துகிறார்கள். பாட்டாளிகளுக்கு அரசியல் அதிகாரம் என்பது முன்னெப்பொழுதையும் விட ஆட்சியில் முதலாளித்துவத்திற்கு எதிரான ஈவு இரக்கமற்ற போராட்டங்களைத் தொடுப்பதே!

              டிபி கிருமிகளுக்கே நோயாளி ஆறுமாதம் மாத்திரை முழுங்கவேண்டியிருக்கிற பொழுது இந்த சமூகத்தின் ஆகக் கேடான கிருமியாக நீடித்திருக்கும் முதலாளித்துவத்தை வீழ்த்துவதில் தளர்வுறுகிற பாட்டாளிகள் இயக்கம் பின்னடைவைச் சந்திக்கத்தான் செய்யும். ஆக இங்கு உத்திரவாதமாக வர்க்கப்போராட்டத்தை முன்னெடுப்பது அவசியம் ஆகும். மூலதனத்தின் மீதான் போர் தளர்வுறுவதற்கு சொல்லும் சாக்குபோக்குகளும் சமசரங்களும் போலியாக நிற்கும் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. சீனாவின் சீ பிங்க்கிடம் இதுபற்றி கேட்டுப்பாருங்கள். ‘நடைமுறையின் உரைகல்’ என்று லெனின் சுட்டிக்காட்டுவது இதைத்தான்.

              • Theory is different practical is different. Communist utopia states are one among Rama rajyam , Sharia Based Kingdom..

                As I have already pointed out

                East Germany Vs West Germany
                North Korea Vs South Korea

                are the experiments will clarify , which society progressed and innovated

                If communist principals made people happy why did Cuba have exit visa policy for its people?
                Even to do a haircut, one has to go to govt office, I cant imagine such a pathetic state.

            • கற்றது கையளவு,

              //நாட்டுக்காக உழைக்கும் நல்லவர்களை ஏன் நாம் தேர்ந்தெடுப்பதில்லை?//
              ————-
              பெண்களின் மீதான பாலியல் கொடுமைகள் புரிவது பெரும்பாலும் யாரோ அறியாதவர் அல்ல மாறாக அந்த பெண்களின் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும், உடன் பணி புரிவர்களுமே. இதை எதற்கு கூறுகிறேன் என்றால், ஆண்டுக்கணக்காய் அவர்கள் அறிந்த, அவர்கள் நல்லவர்கள் என்று எண்ணியவர்களே அவர்களின் மீது வன்கொடுமை புரிகிறார்கள் என்றால் அவர்களைப் பற்றி அறியாதவர்கள் பற்றி பேசுவது என்பது உண்மையில் அந்த பெண்களுக்கு செய்யும் துரோகமாகும்.நமக்கு நன்றாக தெரிந்தவர்கள் இதுகாறும் நல்லவர்கள் என்று நினைத்தவர்கள் துரோகமிளைப்பது அந்த பெண்களின் குற்றமா? அல்லது நல்லவர் கேட்டவர் என்று பிரித்துப் பார்த்து பழகத் தெரியாதது அந்த பெண்களின் குற்றமா? இப்படிப் பிரித்துப் பார்த்தால் இந்த சமூகத்தில் பெரும்பான்மையான ஆண்களை விலக்க நேரிடும். இப்படி இருக்கையில், எப்படி நாம் ஒரு நல்லவரைத் தேர்ந்தெடுக்க முடியும்?

              இங்கே நல்லவர்களை நாம் புதிதாக உருவாக்கி அரியணையில் அழகுபார்க்க முடியாது. ஏற்கனவே இருப்பவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்று பிரித்து பார்க்கவும் முடியாது. ஏனெனில் நிலவும் சமூக பொருளாதார சூழ்நிலையின் , இன்று ஒரு சாராருக்கு நல்லவராக இருப்பவர் நாளை கெட்டவராக மாறுவது எதார்த்தம்.
              ————–

              //ரைண்டர், சைக்கிள், போன்றவற்றிற்கும், 1௦௦௦ ரூபாய், ௨௦௦௦ ரூபாய், சரக்கு, பிரியாணி //
              —————
              ஒருபுறம், குறிப்பாக ஏழை எளிய மக்கள் இலவசத்தை நோக்கி ஓடுவதும், சரக்கு கடையை நோக்கி ஓடுவதும், வோட்டை விற்பதும் மறுபுறம் ஆளும் அதிகார வர்க்கம் இயற்க்கை வளங்களை கொள்ளையடிப்பதும், அடிப்படை உரிமைகளை பறிப்பதும்,தேவைகேற்ப கூலி கொடுக்காமல் இருப்பதும் இந்த சமூக உற்பத்தி முறையின் விளைவுகளாகும். சினிமாவில், ஹீரோ வில்லனை அடிப்பதை மேட்டுக் குடியினரைவிட சாதாரண ஏழை எளிய மக்களே அதிகம் இரசிக்கின்றனர். மொட்டை போடுதல், அலகுக் குத்துதல் போன்ற உடலை வருத்தும் பழக்கங்களையும் ஏழை எளிய மக்களே அதிகம் செய்கின்றனர். அது போல இலவசப் பொருட்களும் அவர்களை நோக்கியே எறியப்படுகின்றன.

              உண்மையில் இதன் பின்னணியைப் பற்றி அறிய உங்களுக்கு எந்த ஆர்வமும் இருப்பதாய்த் தெரியவில்லை. தங்களது பலப் பின்னூட்டங்கள் இதைத் தெளிவுப் படுத்துகின்றன.

              —————
              மனிதன் உள்ளிட்ட எந்த உயிர்களுக்கும் தத்தமது இனம் உயிர் வாழ்தல் அவசியமானது.அதற்க்கு மனிதனைத் தவிர்த்த அனைத்து உயிர்களும் இயற்கையை சார்ந்து , இயற்கையான பொருளாதாரத்தையே தழுவி உள்ளன. அதாவது அவைகளுக்கு உற்பத்தி என்பது தனியே ஏதுமில்லை. குட்டைகளில் தண்ணீர் தீர்ந்து விட்டாலோ, மரங்களில் கனிகள் தீர்ந்து விட்டாலோ பிரச்சினை தான். ஆனால் மனிதர்கள் சமூகமாக தனித்துவமான பொருளுற்பத்தியில் ஈடுபடுகிறார்கள். இப்படி ஆரம்பித்த உற்பத்தி இன்றைய முதலாளித்துவ உற்பத்தி முறையில் ஊசலாடுகிறது.

              இங்கே தான் பிரச்சினை ஆரம்பமாகிறது. இந்த உற்பத்தி முறையை தனிப்பட்ட முதலாளிகளோ, சின்டிகேட்டுகளோ அல்லது நாஸ்காம் போன்ற முதலாளித்துவ யூனியனோ தான் கட்டுபடுத்துகின்றன. ஒட்டுமொத்தமாய் கோடிகணக்கில் மிதமிஞ்சி பொருளுற்பத்தி செய்தாலும் காசிருந்தால் தான் வாங்க முடியும். விளைவு, இயற்கை வளங்களின் நாசம் தான்.

              //ஆட்சி கிடைத்த மமதையில் சர்வாதிகாரம் தலை தூக்கினால்//
              // கம்மியுனிச ஆட்சி எற்படுகிரதென்று//
              ——————–

              முதலில் இந்த சர்வாதிகாரம் என்ற பம்மாத்து நமத்து போன ஒன்று தான். உண்மையில் அரசு என்று ஒன்று இருக்கும் வரையில் இந்த சர்வாதிகாரம் இருக்கத் தான் செய்யும். இன்று தாங்கள் ஏற்றி போற்றிக் கொண்டிருக்கும் இந்த போலி ஜனநாயகம் என்னவாம்? உண்மையில் அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறை கருவி தான். இதற்கு ஏரளாமான சான்றுகள் உள்ளன. அவற்றைப் பற்றி வினவில் நிறைய கட்டுரைகள் உள்ளன.படித்து பாருங்கள்.

              தாங்கள் வியந்தோதும் இந்த போலி ஜனநாயகம் ஒன்றும் சும்மா வரவில்லையே. பிரெஞ்சு புரட்சியைப் பற்றி படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறன்.ஒவ்வொருப் புரட்சியும் ஒரு சமூக மாற்றத்தை தான் கோருகின்றன. அன்றைய ஆளும் வர்க்கமான நிலபிரபுக்களிடம் இருந்த அதிகாரத்தை,அரசைக் பாட்டாளிகளை அணிதிரட்டி வென்றெடுத்த முதலாளிகள் என்ன செய்தார்கள் என்பதை வரலாறு பதிவு செய்து உள்ளது. இந்த வரலாறைப் பதிவு செய்ததில் நிலபிரபுத்துவ சார்பு கொண்ட அறிஞர்களும் இருந்தனர், முதலாளித்துவ சார்பு கொண்ட அறிஞர்களும் இருந்தனர். நடுநிலையானவர்களும் இருந்தனர்.நிலபிரபுக்களிடம் இருந்து அதிகாரத்தை வென்றெடுத்த முதலாளிகள் , தொழிலாளிகளை எப்படி நடத்தினார்கள் என்பதற்கும் வரலாறு இருக்கிறது. முதலாளிகளின் கோரப்பிடியில் இருந்து ஓரளவிற்கேனும் தொழிலாளிவர்க்கம் தப்பித்தது எப்படி என்பதற்கும் வரலாறு இருக்கிறது.

              அது போல , முதன் முதலில் ஒரு சோசலிசப் புரட்சி நடந்தது. உண்மையில் அக்டோபர் புரட்சி சிந்திய இரத்தம் பிரெஞ்சு புரட்சி சிந்திய இரத்தத்தை காட்டிலும் குறைவே. இதற்கும் வரலாறு உள்ளது. இதை பொதுவுடைமை சார்பு அறிஞர்களும், முதலாளித்துவ சார்பு அறிஞர்களும்,நடுநிலைமை எழுத்தாளர்களும் எழுதி உள்ளனர்.அதில் எதை எடுத்துக் கொள்வது எதை நிராகரிப்பது என்பதிலும் வர்க்க சார்புகள் உள்ளன.

              கருத்துக்கள் வர்க்கம் சார்பானவை. உங்களது கருத்தும் ஒரு வர்க்கத்தின் சார்பானது.எங்களது கருத்துக்களும் ஒரு வர்க்கத்தின் சார்பானது தான்.பிரெஞ்சு புரட்சி,பாரிஸ் கம்யூன், அக்டோபர் புரட்சி,சீனப் புரட்சி முதல் இன்றைய சீரழிந்த போலி ஜனநாயகம் வரை என நம் முன்னே வரலாறு நீண்டு உள்ளது. இதனடிப்படையில் புரட்சி ஒன்று தான் தீர்வு என்பதை புரட்சிகர சக்திகள் முன்னெடுக்கின்றனர்.

              நன்றி.

              • இவ்வளவு பெரிதாக நீட்டி முழக்குகிறீர்கள். ஆனால் ஒரே ஒரு வெற்றிகரமான மாதிரி வடிவத்தை எங்களை போன்ற பொதுமக்களுக்கு காட்டுங்கள் என்றால் அதற்கு பதிலளிக்க மறுக்கிறீர்கள். உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு சிறிய அளவு தொழிற்சாலையில் இதை நடைமுறை படுத்தி காட்டுங்கள். இல்லை என்றால் உலகில் ஏதோ ஒரு மூலையில் இது போன்ற சிறந்த ஆட்சி நடைமுறையில் நடைபெறுகிறதா, காட்டுங்கள்.

                பண்டைய சீனா, ரசியாவில் அப்படிப்பட்ட ஆட்சி நடந்ததென்றால் இப்போது ஏன் மக்களிடம் அத்தகைய ஆட்சிக்கு அந்நாடுகளில் ஆதரவு இருப்பதில்லை?

                எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்,
                மெய்ப்பொருள் காண்பதறிவு.

                • கற்றது கையளவு,

                  புரட்சிகர அமைப்புகளின் கருத்துக்களும் போராட்டங்களும் உங்களுக்கு ஏற்புடையதோ அல்லவோ அது அதைப் பற்றி தங்களிடம் விவாதிப்பது என்னவோ பயனளிப்பது போல தோன்றவில்லை. இதற்கு முன்னரும் பல இடங்களில் விவாதம் புரிந்தும், விவாதம் தொடங்கிய இடத்தில் இருந்து வளராமல் தேங்கி ஒரே இடத்தில் இருந்து கொண்டிருக்கிறது. இது ஏதோ வெறும் விவாத போட்டி போலவும் அதன் வெற்றி தோல்வியே இறுதியானது போலவும் போல தான் இது எனக்கு புலபடுகிறது.

                  தாம் கொண்ட சித்தாந்தத்தில் மேல் முழு நம்பிக்கையும் கொண்டு, அதற்காக அயராது உழைப்பவர்கள் தோழர்கள். அந்த சித்தாந்தத்தின் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ அல்லவோ ஆனால் அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கை வெறுமனே உள்ளொளியாக இல்லமால், வெறும் ஏட்டுசுரக்காய் போன்ற அறிவுரைகளாகவும் ,போன்மொழிகளாகவும் அல்லாமல் எதார்த்தத்தில் மக்களின் பிரச்சினைகளுக்கு முன் நின்று களமாடுவதிலும் தான் இருக்கிறது.

                  உங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாடு,

                  அவர்களோ, நிலவும் அரசியலமைப்பும் , அதன் உற்பத்தி முறையும் பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு விரோதமானது என்றும் அதை அழிப்பதில் தான் அவர்களது எதிர்காலம் இருக்கிறது என்று வெறுமனே கருத்து மட்டும் கூறாமல் களத்திலும் நின்று போராடுகிறார்கள்.

                  நீங்களோ வெறுமனே அது சரி, இது தவறு என்று கருத்து மட்டும் கூறிக் கொண்டு, எங்கே அந்த கம்யுனிச சமூகத்தைப் படைத்துக் காட்டுங்கள் என்று கூறி எங்கோ வேற்றுக் கோளில் இருப்பது போல ஒதுங்கி கொள்கிறீர்கள்.

                  சமசீர் கல்வி,அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சி,மீதேன் திட்டம், வெள்ளாறு பிரச்சினை,மணற்கொள்ளை, கிரானைட் கொள்ளை உள்ளிட்ட பிரச்சினைகளில் அவர்கள் நேரிடையாக மக்கள் பக்கம் நிற்கிறார்கள். இது போலி ஜனநாயகம் நமக்கு தேவையோ ஒரு புதிய ஜனநாயகம் என்றும், இந்த அரசமைப்பை வீழ்த்தாது நமக்கு நிம்மதியில்லை என்று பிரச்சாரம் செய்து தான் மக்களை அணிதிரட்டுகிரார்கள். ஆனால் கம்யுனிசம் சரிபடாது அல்லது சர்வாதிகாரம் வந்தால் என்ன செய்வது என்று மடை மாற்றி விதண்டாவிவாதம் செய்யும் நீங்களோ யார் பக்கம் நின்று போராடுகிறீர்கள்.

                  ஏதோ கம்யுனிசம் என்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்றும், போலி ஜனநாயகம் ஒன்று இருந்தால் உண்மையான ஜனநாயகம் ஒன்று இருக்க வேண்டுமல்லவா என்று விதண்டாவாதம் புரிகிறீர்கள்.

                  நன்றி.

            • \\தற்போதைய ஜனநாயகத்தில் ஆட்சியாளர்கள் தவறு செய்தால் அவர்களை மக்கள் தூக்கி எரிவதை போல புரட்சி கம்மியுனிச ஆட்சியில் ஆள்பவர்கள் தவறு செய்தால் அவர்களை தூக்கி ஏறிய மக்களுக்கு என்ன வழி உண்டு. ஆட்சி கிடைத்த மமதையில் சர்வாதிகாரம் தலை தூக்கினால் அதை மக்கள் எப்படி தடுப்பது?\\

              தற்போதைய ஜனநாயகத்தை நிர்ணயிப்பது ஆட்சியாளர்களோ மக்களோ அல்லர். ஆட்சியாளர்களை மாற்றினாலும் அதிகாரம் யார் கையில் இருக்கிறது என்ற கேள்விக்கு பதில் சொல்லுங்கள். நாட்டின் எல்லா தொழில்களையும் எல்லா சுரண்டலையும் கட்சியாளர்கள் பங்குபிரித்துதான் செய்கின்றனர். இதில் கட்சி மாறினாலும் காட்சி மாறுமா?

              இரண்டாவதாக கம்யுனிச ஆட்சியில் உங்கள் பார்வையில் ஆள்பவர்கள் என்போர் யார்?
              மக்கள் மன்றங்கள் அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதும் அவர்களின் ஊழலை மக்கள் நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்துவதும் அதிகாரிகளை திரும்ப அழைப்பதும் சோசலிச சமூகத்தில் தான் சாத்தியமாகி இருக்கின்றன.

              இதை கம்யுனிச அவதூறு திரைப்படங்களைப் பார்த்தாலே தெரிந்துகொள்ளமுடியும்.
              சான்றாக கலாச்சாரப்புரட்சியின் போது மூத்த மருத்துவ அதிகாரிகள் எல்லாம் முதலாளித்துவ கைக்கூலிகள் என்று முத்திரை குத்தப்பட்டு அனுபவமற்ற கம்யுனிச மருத்துவர்கள் சிகிச்சை செய்ததால் பல மக்கள் மாண்டு போயினர் என்று To live படம் பிரச்சாரம் செய்கிறது. இங்கேயே உங்கள் கருத்து அடிபடுகிறது. எப்படியென்றால் அவதூறு பிரச்சாரம் செய்கிறவர்கள் இப்படி அதிகாரிகளை நீக்கி அனுபவமற்ற ஆட்களை கொண்டுவருவதால் கம்யுனிசம் தீங்கிழைக்கிறது என்று பிரச்சாரம் செய்கிறார்கள். நீங்கள் சற்று மாற்றி அதிகாரிகள் நீக்கப்பட வாய்ப்பேயில்லை கம்யுனிசம் என்பது சர்வாதிகாரம் என்று தப்புத்தாளம் போடுகிறீர்கள்! கம்யுனிசத்தை விமர்சிப்பதில்தான் எத்துணை முரண்பாடு!

              இரண்டாவது எடுத்துக்காட்டு தருகிறேன். அதே சீன படத்தில் வில்லேஜ் கமிசார் பதவி நீக்கம் செய்யப்படுவார். படத்தின் பிரச்சாரப்படி அவ்வளவு நல்லது செய்த கமிசாரே நீக்கப்படுகிறார் பார்த்துக்கொள்ளுங்கள் மக்களே கம்யுனிசத்தின் அராஜகவாதத்தை! என்பதாக காட்சியும் இசையும் இருக்கும். இங்கேயும் உங்களது பிரச்சாரம் பொய்யாகத்தான் இருக்கிறது.

              மூன்றாவது எடுத்துக்காட்டும் அதே படத்தில் இருந்து பார்ப்போம். கதாநாயகனின் நண்பன் கம்யுனிச புரட்சிக்குப் பிறகு டிரைவராக இருந்து ஆபிசராக மாறிவிடுவான். ஆனால் இப்படி மாறிய கம்யுனிச ஆபிசர் கார் ஓட்டி பள்ளிச்சுவரில் மோதுவதால் கதாநாயகனின் மகன் இறந்துவிடுவார்! இந்தக்காட்சி எதற்கு என்றால் கம்யுனிசம் மக்களுக்கு ஓய்வே தருவதில்லை என்பதைச் சொல்வதற்காக. ஏனெனில் தூக்க கலக்கத்தில் மகனை பள்ளிக்கு அனுப்பியிருப்பார் கதா நாயகன். இங்கு உணர்ச்சிகளை விற்றுத்தீர்க்க டிரக் ஏத்தி கொல்லுகிற கம்யுனிச அதிகாரியாக கதாநாயகனின் நண்பரே வருவார்! அடிப்படையான மக்கள் மேல்மட்டத்திற்கு வருவதற்கு லாயக்கற்றவர்கள் என்ற அரசியலும் இங்கு ஆபிசரின் வடிவத்தில் எடுத்துக்காட்டப்படும்!

              ஒரு கம்யுனிச அவதூறு பிரச்சார படம் எடுக்கிற பொழுது வாய்தவறி சோசலிசத்தின் அனைத்து உண்மைகளையும் படமே எடுத்துக்காட்டிவிடுவதை தாங்கள் காணமுடியும். அடித்தட்டு மக்கள் மேல் அதிகாரிகள் ஆவது. மேல் அதிகாரிகள் நீக்கப்படுவது அனைத்தும் எதிர்மறையில் விமர்சிக்கப்படும். இதைத்தான் கம்யுனிச கொடூரம் என்பதற்கு சான்றாக ஜெயமோகன் இந்தப்படத்தைப் பற்றி எழுதாத புனைவுகள் கிடையாது! படம் பார்த்து கண்ணீர் சிந்தாத மேட்டுக்குடி சீனனும் கிடையாது!

              ஆக உங்கள் கேள்விகள் அவதூறு பிரச்சாரத்தின் ஒருபகுதியாக இருப்பதை உணரலாம். சோசலிச சமூகத்தின் சாத்தியமான விசயங்களையும் அவதூறுப் பிரச்சார படத்தின் வாயிலேருந்தே அறிந்துகொள்ள முடியும்.

              வெறும் படத்தை வைத்து கம்யுனிசத்தை நியாயப்படுத்தி விடமுடியுமா என்று தாங்கள் கேட்கக் கூடும். வெறும் படமும், ஊடகமும், அவதூறு பிரச்சாரம் செய்கிற இலக்கியவாதிகளும் நடுத்தரவர்க்க பிழைப்புவாதிகளும் மக்கள் போராட்டங்களை காயடிக்கிற பணபலமும் எதேச்சதிகாரம் மட்டும் தான் உங்களை இயக்குகிற முதலாளித்துவத்திற்கு கம்யுனிசத்தை எதிர்க்கிற ஆயுதங்களாக இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.

              இதைத்தாண்டி போராட்டங்களை முன்னெடுக்கிற புரட்சிகர இயக்கங்களுக்கு மக்களும் அம்மக்களுக்கு தலைமையேற்கிற தத்துவார்த்த அரசியல் வர்க்கப்போராட்டமும் முதன்மையாக உள்ளன. இதுதான் நமக்கு முக்கியம். இதைத் தாங்கள் புரிந்துகொள்வதற்காகத்தான் இந்த மறுமொழியை எழுதினேன். மற்றபடி உங்களது கேள்விகளை சந்தேகங்கள் என்றோ தாங்கள் ஒன்றும் அறியாதவர் என்ற புரிதலில் இருந்தோ பதிலளிக்கவில்லை.

              நன்றி.

              • ஐயா, தென்றல்,

                நான் ஒரு நடைமுறை மாடலை காட்டுங்கள் என்றால் நீங்கள் ஏதோ ஒரு திரைப்படத்தில் வந்த காட்சியை காட்டுகிறீர்கள். சினிமாவில் பேனை பெருமாளாக்குவார்கள், ஏற்கனவே ஒரு நண்பர் (ஜோசெப் என்று நினைக்கிறேன்) கரட்டாண்டியை டைனோசராக காட்டுவார்கள் என்று கூறியுள்ளார்.

                நடைமுறையில் ஒரே ஒரு முழு கம்மியுனிச மாதிரி வடிவத்தை ஒரே ஒரு தொழிர்சாளையிலாவது வெற்றிகரமாக நடத்திக்காட்டுங்கள் நண்பரே.

                நான் முதலாளித்துவத்திற்கு ஆதரவாளன் என்று தவறாக சித்தரிக்கிறீர்கள்.
                கம்மியுனிசம் குறித்த சில சந்தேகங்கள் எனக்கு இருக்கிறது. அவற்றை உங்களிடம் கேட்டு தெளிவு பெறவே விரும்புகிறேன். கம்மியுநிசத்திற்கு நான் எதிரி அல்ல. கம்மியுனிச ஆட்சி நடந்த அனைத்து நாடுகளிலும், ஆட்சியிளுல்லோருக்கு எதிரானவர்கள் கொல்லப்படுகிறார்களே, அதனால் தான் கம்மியுனிசம் சர்வாதிகாரமாக மாறுமோ என்பது தான் என்னை போன்ற சாமானியர்களின் அச்சம்.
                எனது பல்வேறு பதிவுகளை படித்து விட்டும் நீங்கள் நான் கம்மியுநிசத்தின் விரோதி என்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

              • அண்ணன் தென்றல் கம்மூனிச ஆட்சி நடந்த ரஸியா மக்கள் கையிலயா உண்மையில் அதிகாரம் இருந்ததுனு கேட்டேன் அதுக்கு என்னய கம்மூனிஸ எதிர்ப்பு புத்தகங்கள படிங்கனு சொல்லிட்டு வெரும் வாயில கேசரி கிண்டுறேனு வேற சொன்னிங்கள்ல இப்ப சொல்லுங்க கம்மூனிஸமிருந்த ரஸியால மக்கள் கையில் அதிகாரம் இருந்ததா இல்ல சர்வாதிகாரிகள் கையிலா ,இது முதலாளித்துவ ஊசிப்போன அழுகிப்போன குற்றச்சாட்டுனு சொல்லாம மக்கள் கையில் தான் அதிகாரம் இருந்ததுனு கொஞ்சம் ஆதாரபூர்வமா விளக்கினா நல்லதுல்லயா…

        • \\ கம்மியுநிசவாதிகள் ஆண்ட கேரளா, மேற்கு வங்காளத்தில் விலையேற்றம் இல்லாமல் இருந்ததா? விதண்டாவாதம் புரியாதீர்கள்.\\

          தேர்தல் பாதை திருடர் பாதை; புரட்சி ஒன்றே மக்களின் பாதை என்று நாங்கள் சொன்னால் கம்யுனிஸ்டுகள் இப்படித்தான் அவர்கள் சர்வாதிகாரிகள் என்றும் குறுங்குழுக்கள் என்றும் அவதூறு செய்கிறீர்கள். அதற்கு ஜனநாயகம் மக்களாட்சி என்று பல அலங்கார வார்த்தைகளை பயன்படுத்தினீர்கள். ஆனால் மறுபக்கமோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒட்டுமொத்த முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயகமும் இந்தியாவில் சீரழிந்து நிற்கிற பொழுது கம்யுனிசவாதிகளின் கேரளா மேற்கு வங்கத்தில் மட்டும் விலையேற்றம் இல்லாமல் இருந்ததா? என்று கேட்கிறீகள். உங்களின் பச்சையான பித்தலாட்டத்திற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

          அதாவது முதலாளித்துவ பாராளுமன்றத்தின் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தினால் கம்யுனிஸ்டுகள் தீவிரவாதிகள். அதே சமயம் முதலாளித்துவ பாராளுமன்றமே சீரழிந்து நின்றால் உங்கள் கண்ணுக்குத் தெரிவது கேரளமும் மேற்கு வங்கமும். இதிலிருந்து உங்களின் கருத்துக்களைக் கீறிப்பார்த்தால் அதில் வடிவது கம்யுனிசத்தின் மீதான புரையோடிப்போன சீழ் மட்டுமே என்பது எளிதில் விளங்கும். நடுநிலையாளர் போன்ற பாவனை அவசியமற்ற ஒன்று.

          • தென்றல் அவர்களுக்கு,

            கக வுக்கு தகுந்த பதில். அருமை. நானும் தயங்கிக்கொண்டேயிருந்தேன். உங்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தேன். சில நாட்கள் உங்களைக் காணாமல் ஏக்கத்தில் இருந்தேன்.

            • Univerbuddy,

              ஏக்கத்தால் உண்மையிலேயே இளைத்துப் போகவில்லையே? இப்படி ஒரு நட்பை நான் இணையத்தில் எங்குமே கண்டதில்லை, நினைத்தாலே புல்லரிக்கிறது. 🙂

              • வியாசன்,

                உன்மைதான். தென்றலாருக்கு என்ன ஆயிற்று என்ற கவலை என்னை வாட்டியது என்றால் அது மிகையில்லை. இப்போது எனது பெல்ட் சிறிது தளர்வாக இருப்பதை உணர்கிறேன். ஆகையால் சிறிது இளைத்துக்கூடத்தானிருக்கிறேன். அவரில்லாமல் வினவின் விவாதகளமே மந்தமாக இருந்தது. முன்னோருமுறை SK காணாமல் போனபோதும் ஒரளவுக்கு இதே போன்ற கவலை எனக்கிருந்தது. (Now we know SK better. He is sure to be around for a long time, in one pseudo or another.) 😉
                அதேசமயம் குளத்தைத் கோபித்துக்கொண்டு போவோர்கள் etc என் எண்ணத்தில் சிறிதும் வந்ததில்லை. 😉

            • நண்பா யுனிவர்பட்டி,

              நலமா,
              தயங்கவே வேண்டாம், நான் இங்கே தான் இருக்கிறேன்.
              கேளுங்கள் நேரடியாகவே, பதிலளிக்கிறேன்.

              • நண்பர் KK,
                We have discussed before around last election. I have replied to almost all of your points. Other friends have also replied. After some time of discussion, you went silent and discussion stopped.
                Now you start from square 1. After some replies from Sivappu & Thendral, you again start from square 0. You either have a problem in comprehending our replies or have bad intentions to repeat the same questions over and over again (Both cases are very common).
                I don’t have much time. If you can go back to our discussion (2/3 posts), pose new questions based on my replies (in those post itself if possible), it would be worthwhile to continue. Thanks for understanding.

                • Univerbuddy,

                  If I am repeating the questions, it means that your answers are still not convincing.
                  I asked you to provide a working model where we can analyze all the pros and cons.

                  Religious people say that when god comes in new avatar, all problems will be solved.
                  Communists say that when revolution comes, all problems will be solved.

                  I dont find any difference between the above 2 statements.

                  Ok, let us dwelve a little deeper into this subject:

                  Let us consider a typical communist factory with 20 employees, 2 Maintenance engineers, 5 supervisors, 1 Accounts manager, 2 clerical work employees, 1 General Manager, 1 Marketing Manager, 5 Marketing executives, 2 Service engineers, 2 Office assistants.

                  Let us consider the raw material cost is Rs.10000.
                  Let us consider the finished product is priced at Rs.20000. (Margin Rs.10,000 per piece)
                  Let us consider that monthly 100 pieces of the product are sold.

                  Now we get the income of 100 x 10,000 = 10 Lakhs.

                  (If you want to modify the number of employees, cost of the product, the quantity of products produced per month, etc, you can do that, no issues).

                  Now please let us know how this 10 lakhs will be divided.

                  After that, let us consider the scenario of the sales increased by the sales team by 20%.
                  Then how this extra 20% income will be divided into the other employees.

                  Next, let us consider the scenario of the sales dropping drastically by 50% due to a new competition or people not interested in buying this product. Then how this loss of income will be divided into other employees.

                  Also, If One particular smart sales man is alone is able to bring 20% more profit to the company, then how the profit will be divided.

                  If the workers are not producing the required quantity of products even though there is a big word order, resulting in a big loss, Who will have to take the responsibility for the loss.

                  Please enlighten me my friends,

                  • கக,

                    // your answers are still not convincing//

                    இதை கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து இப்போதுதான் சொல்கிறீர்கள். முன்னரே சொல்லியிருந்தால் அப்போதே வேறு மாதிரி முயற்சி செய்து பார்த்திருக்கலாம்.
                    பரவாயில்லை. இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. எனது பதிலில் எது நம்பத்தகுந்ததாக இல்லை என்று சொல்லுங்கள். நான் மற்றுமொருமுறை முயற்சி செய்து பார்க்கிறேன். ஒவ்வொரு விசயமாகப் போகலாம். ஒரே ஒரு நம்பத்தகுந்ததாக இல்லாத விசயத்தைக் குறிப்பிடுங்கள். அதை உங்களுக்கு நம்பவைக்கமுடிந்தால் மேல போகலாம். இல்லாவிட்டால் நிறுத்திக் கொள்ளலாம்.

                    • யுனிவற்பட்டி,

                      அது என்ன, நான் தமிழில் கேட்குக் கேள்விக்கு ஆங்கிலத்தில் பதிலளிக்கிறீர்கள். சரி, உங்களுக்காக ஆங்கிலத்தில் பதிலளித்தால் தமிழில் அதற்கு பதிலளிக்கிறீர்கள். 🙂

                      நான் மேலே குறிப்பிட்ட ஒரு தொழிற்சாலையை மேற்கோளாக கொண்டு மேலும் நமது விவாதத்தை தொடரலாம். உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்.

                  • க.கை அவர்களே,

                    தங்களின் Let us consider மாடல், கம்யுனிச தொழிற்சாலை அன்று! ஏனெனில் கம்யுனிச சமுதாயம் சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல. இன்றைய உலகின் தொழிற்சாலை அமைப்பேயே கருத்தில் கொண்டிருப்பதால் உண்மையான தகவல்களையே விவாத்தில் எடுத்துக்கொள்வோம்.

                    2013-2014 டிசிஸ்ஸின் மொத்த ரெவுன்யு 14.44 பில்லியன் டாலர்கள். மொத்த புராபிட்டு 2.59 பில்லியன் டாலர்கள். மொத்தம் மூன்று இலட்சம் ஊழியர்கள் இருக்கிற பொழுது புராபிட்டை ஒவ்வொரு தொழிலாளிக்கும் எப்படி பிரிப்பீர்கள்? உங்கள் வசதிப்படி GM, MM என்று எதுவேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். எதற்காக 25000 பேரை வேலையை விட்டு நீக்குகிறார்கள் என்றும் சொல்லவேண்டும்? சனிக்கிழமை கூட்டத்திற்கு இது வசதியாக இருக்கும் என்பதால் பதில் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

                    • தென்றல் அவர்களே,

                      எதற்கு டிசிஸ் அளவுக்கு போக வேண்டும்?
                      ஒரு சிறிய அளவு தொழிற்சாலையை நான் மேலே கூறி இருந்தேனே, 1௦௦ பேர் கொண்ட தொழிற்சாலையை எடுத்துக்காட்டாக கொண்டு நீங்கள் விளக்கலாமே,

                  • Please read the book “Animal Farm”

                    It neatly explains how people are tricked into believe in a concept and being exploited.
                    Horse character fits Thenral guy perfectly.

                    If you are abroad, you can watch it as movie

                    • இராமன் ஜார்ஜ் ஆர்வெல்லின் விலங்குப் பண்ணையெல்லாம் மேற்கோள் காட்டுவது உங்களின் பரிதாப நிலையைக் காட்டுகிறது. ஜார்ஜ் ஆர்வெல் முதலாளித்துவத்திற்கு சேவை புரிந்த இலக்கிய உளவாளி என்பது நிருபிக்கப்பட்டு வெகுவருடங்களாகிவிட்டன. நீங்கள் நேர்மையாளராக இருந்தால் வினவில் வெளிவந்த கட்டுரையைப் படித்து தங்கள் பதிலை பார்வையை தெரிவியுங்கள் (கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள்: அறிவாளிகளா, உளவாளிகளா? https://www.vinavu.com/2010/11/08/spy-2/). மேலை நாடுகளே விலங்குப்பண்ணையை தூக்கிக்கொண்டு திரிவதில்லை. நீங்கள் ரொம்பவும் லேட் பிக்கப்பாக இருக்கிறீர்கள். கம்யுனிச எதிர்ப்பு நாவல் என்று ஜார்ஜ் ஆர்வெல்லிற்கு பிறகு சுந்தரராமி, ஜெயமோகன் என்று பலே பேர் குரைத்திருக்கிறார்கள். அதையும் சேர்த்துப்படித்து தெளிவு பெறவும். அதைவிடுத்து தாங்கள் கூறும் டர்கி கதையில் வரும் டர்கியாக இருக்காதீர்கள்!

                  • ககை,

                    //a typical communist factory//

                    [நண்பர் சிவப்பு Sorry for English]

                    A communist factory cannot exist in isolation. It can exist only as a part of a communist society. This society does not need Marketing Manager and Marketing executives. It does not even need too many supervisors, as all are owners and so none needs to cheat. Of course, we need to keep an eye on saboteurs in the beginning of the formation of socialistic society. We also don’t need to add ‘margin’. Production can be shared by the people in kind or for coupons.

                    A communist society as I envision:
                    Current model of production and more production, advt and more advt, marketing and more marketing, is deadly to us human beings and other sentient beings. We need to stop, turn around and proceed at a pace comfortable to us.
                    We now have machines capable of doing more work but kept idle most of the time. For e.g. Grinder, mixer, car, etc. These can be shared in the locality. We can phase out the production of these until reaching a stable production capacity that can replace machines in common use. Side by side, instead of going to gym and walking etc, we can also opt for manual grinder, water pump, etc and avoid lot health problems, environment problems, etc.
                    As living space, we need a small private space with an optimum protection from natural elements. What we now have is a lot of space. The current capacity can be shared for at least three generations to come. So we need to phase out production of construction materials until reaching a stable production capacity that can replace and repair spaces in use. Side by side, simple huts can be used for non-monsoon period.
                    This holds good for all the materials we consume: food, cloth, etc.
                    Almost 90% of our current work is waste and it directly pollutes our earth. Currently millions of start-ups go bust wasting lot of resources and this process does not end at all. In IT, lot of reinventing wheel is done. Once you do one thing, it should be shared by all, if we follow simple universal approach. But it is not the case now.
                    Based on the need, we may have to work only less than 8 hours/day in a communist society. It is foolishness to work more hours. At the same time, each one of us need to participate in production, recycling, cleaning, supervision, etc. in turns so that there is no stigma attached to any essential services.
                    All this is possible only in collective setup. We have to reach there. Sooner would be better, for we are running towards abyss. Currently no one sees the wait at traffic signals as despotic arrangement. We would require a push there and some nudge here. That might be despotic to you. So be it. The humanity cannot help it.

                    • // For e.g. Grinder, mixer, car, etc. These can be shared in the locality. We can phase out the production of these until reaching a stable production //

                      மன நிலை பிரன்றவர்களின் உளறகள் போல உள்ளது .

                      // So we need to phase out production of construction materials until reaching a stable production capacity that can replace and repair spaces in use. Side by side, simple huts can be used for non-monsoon period.//

                      In utopia, decision making guys will live in castle and will ask the poor to share the hut.(Read animalkfarm)

                      //production, recycling, cleaning, supervision,//

                      who will do cleaning ? I smell caste system

                      Why cannot you guys visit Cuba and report the findings?
                      Even to do a haircut one has to wait inline at the govt offices

                    • Univerbuddy,

                      What you are trying to say?

                      A communist factory cannot exist in Isolation.
                      With the same principle, Can we mean that A communist society cannot exist in isolation in a country?

                      Because, all humans have the inherent greed to get more, have more. If we force them to submission, how long can it be sustained? All the communist experiments in the world failed because of this inherent desire of the human beings.

                      Take the case of North Korea. Why people in North Korea risk their lives to come out of that country? When east and west germany were divided, why did people from east germany craved to move west germany? Why there were visible differences in their lifestyles between east and west germany, between north and south korea?

                      Dont jump to the conclusion that I am against the common people. I am just saying the reality. We just cannot suppress human desires. The history has already shown us lots of examples before.

                    • KK,

                      //Can we mean that A communist society cannot exist in isolation in a country?//
                      // people from east germany craved to move west germany?//

                      A society, however small, can become communist, irrespective of the world outside to it. But the outside world is less likely to let this community live its way. The people opposed to this will put spokes. Some insiders too won’t like to be in that setup. They will try to sabotage from inside or go out.

                      //all humans have the inherent greed to get more//

                      I am not sure if it holds good for all humans. I am not greedy for myself. There are certainly more people like me. If you forego your short-sightedness, you can see that the selfish greed is actually detrimental to your own wellbeing. I have spoken about this in previous discussions.

                      //conclusion that I am against the common people.//

                      In the current setup, 1/3 of the people are forced in object poverty and another 1/3 are left with average means and rest are affluent in various degrees.
                      You talk about despotism. Farmers and tribals are alienated from their lands with force. By this, they lose almost everything. Humble people are made to become nearly bonded and given just a meagre salary. You don’t see this as despotism. We say, we need to communalise the lands, natural resources, etc. We say the large tracts of lands and natural resources cornered by few (by various means) have to recovered and put to common use. While doing this those few are not going to lose their normal lives. But, here you see despotism. This is where we can identify your nature. Incentives you offer to your marketing agents, etc make u thing as someone with concern. This is really foolishness. Charities, CSR, NGOs, etc are all of this variety. They won’t have any problem when a poor farmer with a meagre holding (not with 100s of hectares) is evicted from his lands or when tribal people are evicted from their forests and mountains. If you/they are really concerned, they should join with those farmers and tribals to give them force to resist the eviction and first of all they should desist consuming more than just enough so that the eviction is not necessary in the first place.
                      People like you don’t like the word Communism. It can be called in any other way palatable to you. We also use the name ‘புதிய ஜனநாயகம்’ which you say you want (us) to develop too.
                      As I already said couple of times, this new setup is only possible when enough number of people see the interest. Till then people like me will have to have keep trying to convince more people. When the scale tips, it will happen, no matter what. And this time, we would be wiser from the past attempts and new developments.

                    • [this may be a duplicate]
                      Raman,

                      //மனப்பிறழ்வு//

                      Currently in city very few people use their grinder; instead they buy the batter from the neighborhood batter shops who use heavy duty machines. The current population of grinders is mostly in disuse and repair. It is less likely that they would replaced by their households.
                      Student hostels have some common appliances like heating pan, MW oven, etc. Apartments have shared facilities, like pumping, etc. Call taxies are common around us. Laundromats are also common in many countries. Etc. Even cycles are in common in some cities.
                      When the collective well being is the goal, you would not see these arrangements as the ideas of a deranged mind.

                      //animal farm//

                      I live in a very big free-range animan farm. Each animan family lives in a cage of its own of different sizes and a range to run around for foraging. Only different between animal farm and animan farm is, Animans go out to do their routines, return to their cages and lock-in themselves. Few animans have a wider range while most of them have a limited range.
                      Instead of using the hands, which are natural gift of unique nature, to create a better place for the community, animans behave worst than animals and live very shortsighted selfish lives.

                      //caste system//

                      I said each one has to do all kinds works in turn. You need to pay attention to the text and try to comprehend its full meaning. Many apologists of caste system say that it is a form of division of labour. Probably you too have such justification. But here you ‘smell’ caste system is ironical. It shows your blinkered vision. What I mean is one would do a week/day/month in production, then in recycling/maintenance, then in cleaning, then in supervision/management.

          • தென்றல்,

            மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியிலேயே இத்தனை குளறுபடிகள் உள்ளதென்றால், மக்களின் ஆதரவு பெறாமல் புரட்சி என்ற பெயரில் ஆட்சியமைத்தால் அவர்கள் தவறு செய்யாமல் இருப்பார்கள் என்று என்ன உத்திரவாதம்?

            இடிப்பாரிலா ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடுவான்.

            கம்மியுனிச ஆட்சியின் தவறுகளை இடித்துரைக்க மக்களுக்கு என்ன வழி?

            இவ்வளவு கோபமாக பதிவிடுகிரீர்களே, தற்கால உலகில் ஒரே ஒரு நாட்டில் ஒரு வெற்றிகரமான கம்மியுனிச மாடல் ஆட்சியை அளிக்க முடிந்ததா? உலகம் முழுதும் எல்லா நாடுகளிலும் கம்மியுநிச்டுகள் உள்ளனர். ஆனால் ஒரே ஒரு நாட்டில் கூட கம்மியுனிச ஆட்சி நடைமுறை படுத்தப்படவில்லையே ஏன்?

            ஒரு நாட்டில், அல்ல, ஒரு ஊரில், இல்லை ஒரு சிறு கிராமத்தில், இல்லை ஒரே ஒரு தொழிற்சாலையில் கம்மியுனிச மாடலில் நடத்திக்காட்டுங்களேன். அந்த மாடல் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் பின் அதனை எங்களை போன்ற பொதுமக்களும் பின்பற்றலாம் அல்லவா?

            உடனே, சூழ்ச்சி என்று மழுப்ப வேண்டாம். நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், மக்களுக்கு நல்லது நடக்கும் என்று மக்கள் தீர்க்கமாக நம்பினால் சூழ்ச்சி நடந்தால் கூட மக்கள் சக்தி அதனை வீழ்த்தி விடாதா? ரசியா, உக்ரைன், கசகிஸ்தான் நண்பர்களுடன் நான் இவற்றை பற்றி விவாதித்திருக்கிறேன். தற்காலத்தில் கம்மியுனிச ஆட்சி என்பது நடவாத விடயம் என்றே அவர்கள் கூறுகிறார்கள்.

            பசுந்தோல் போர்த்திய புலியாக, கம்மியுனிச ஆட்சியை ஒரு மோடியோ ஒரு ஜெயலலிதாவோ பதவியை பிடித்தால் அவர்களை தூக்கி ஏறிய என்ன வழி உள்ளது. கம்மியுனிச நாடு என்றழைக்கப்படும் வடகொரியாவில் தன்னை எதிர்ப்பவர்களை எல்லாம் கொன்று குவிக்கும் கிம் ஜோங் உன்னை அந்த மக்களால் என்ன செய்ய முடிகிறது?

        • \\ மற்றபடி ஒட்டுமொத்தமாக ௦% விலையேற்றம், ௦% பண வீக்கம் என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை.\\

          இது சாத்தியமான விசயம் தான். சுதந்திர சந்தைப் பொருளாதாரம் தான் விலையேற்றம் பணவீக்கம் என்ற வார்த்தைகளையே பெற்றுப்போட்டது. சோசலிசத்தில், சுதந்திர சந்தைப் பொருளாதாரம் கிடையாது.

          எடுத்துக்காட்டாக சோசலிசத்தில் சின்னவெங்காயத்தை ஆன்லைனில் விற்க வேண்டிய அவசியம் இருக்காது. விலைகிடைக்கவில்லை என்று தக்காளியையும் சாம்பார் வெள்ளரியையும் ரோட்டில் போடவேண்டிய தேவையும் இல்லை. இந்த கூத்துகள் எல்லாம் சுதந்திர சந்தைப் பொருளாதார சூதாட்டத்தினால் விளைந்தவை ஆகும்.

          வேறு ஒரு எடுத்துக்காட்டு வைப்போம். சீனாவில் ஒரு முட்டையின் விலை 1யுவான். இந்திய மதிப்புபடி பத்து ரூபாய். இந்தியாவில் பத்து ரூபாய்க்கு இரண்டு முட்டைகள் வாங்க இயலும் (இதுவே அநியாயம்). ஆனால் அமெரிக்காவில் ஒரு முட்டையின் விலை 12 ரூபாய்.
          அமெரிக்காவிலோ இந்தியாவிலோ சீனாவிலோ கோழிகள் முட்டையிட தயங்குவதில்லை!!!

          முட்டையை உருவாக்குகிற உயிரியல் செயல்கள் எல்லா நாட்டிலும் ஒன்றுதான். ஆனால் முட்டையின் விலை பங்குச்சந்தையின் டாலர் கையிருப்பின் அளவைப்பொறுத்து தான் நிர்ணயிக்கப்படுகின்றன. இவ்விதம் முட்டையின் விலையே ஒவ்வொரு நாட்டிலும் வேறு வேறாக இருப்பது கேலிக்கூத்தானது. இது தான் சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தின் யோக்கியதை!

          நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால் இந்த சுதந்திர சந்தைப் பொருளாதாரம் மானக்கேடான சுரண்டலான அமைப்பு என்கிறோம்! ஏனெனில் ‘முட்டையிடும் கோழிக்குத்தான் பொச்செரியும்’ என்பது எங்கள் வீட்டு கிழவி அடிக்கடி சொல்லும் சொலவடையாகும்.

          உழைப்பவனுக்கு உழைப்பின் அருமை தெரியும் என்பதும் அவனால் தன்னைத் தானே ஆண்டுகொள்ள முடியும் என்பதும் இதன் சாரமாகும். விலையேற்றம் பணவீக்கம் போன்ற பதங்கள் எல்லாம் தேவைக்கேற்ற உற்பத்தி, உழைப்புக்கேற்ற ஊதியம், உழைப்பவனுக்கு அதிகாரம் தருவதன் மூலமாக சுக்குநூறாக கிழியும் என்பது வரலாறு அல்ல; அறிவியல் ஆகும்.

          • முட்டையை உதாரணமாக எடுக்கும் போதே ஏதோ ஒரு வில்லங்கமான முடிச்சு தயாராக இருக்கிறது என்று மனதில் தோன்றிவிட்டது..

            // ஏனெனில் ‘முட்டையிடும் கோழிக்குத்தான் பொச்செரியும்’ என்பது எங்கள் வீட்டு கிழவி அடிக்கடி சொல்லும் சொலவடையாகும்.

            உழைப்பவனுக்கு உழைப்பின் அருமை தெரியும் என்பதும் அவனால் தன்னைத் தானே ஆண்டுகொள்ள முடியும் என்பதும் இதன் சாரமாகும். //

            இது போன்ற பொருந்தாப் பொன்மொழிகளை அதி உவப்புடன் எடுத்துவிடுவதால் பல தேவையற்ற குழப்பங்கள், எதிர்மறையான சிந்தனைத் தாவல்கள் நேர்கின்றன.. எடுத்துக்காட்டாக,

            கோழியானது முட்டையிடுவது குறைந்துவிட்டாலோ அல்லது நின்றுவிட்டாலோ, மேற்படி கிழவியார் அக்கோழிக்கு பொச்சரிப்பு குறைந்துவிட்டது, நன்று என்று ஆறுதலடைவாரா அல்லது முட்டை கிடைக்கப் போவதில்லை என்றுணர்ந்து அதை அடித்து குழம்பு வைப்பாரா..?

            • அம்பி டென்ஷன் ஆகி விட்டார். இனி தென்றல் தப்பிக்க முடியாது.

          • தென்றல்,

            போலி ஜனநாயகம் என்ற ஒன்று உள்ளதென்றால், அப்போது உண்மையான ஜனநாயகம் என்பதும் சாத்தியம் தானே, அதற்கு என்ன வழி என்று யோசிக்கலாம் அல்லவா.

            மக்களின் உணவுப்பொருட்களை வேண்டுமென்றே பதுக்கி விலையேற்றம் செய்பவனை ஜனநாயகத்தின் மூலமும், சட்டத்தின் மூலமும் தண்டிக்க வேண்டும். அதற்கு என்ன வழி என்று யோசிப்போம்.

            அநியாமாக பொருட்களை பதுக்கி வைக்கப்படும் பொருட்களை கண்டுபிடித்து அரசு கையகப்படுத்தி மக்களுக்கு அளிக்கலாம், தவறில்லை.

            மக்களுக்கு நல்லது நடப்பதற்காக சில அடாவடி நடவடிக்கைகள் தேவை தான்.
            ஆனால் அந்த அடாவடி நடவடிக்கைகள் மக்களையே பதம் பார்க்காமல் இருக்க வேண்டும்.

            அறிவியல் என்பது நடைமுறையில் சாத்தியப்படும் விடயங்களுக்கு சொல்வது.
            தங்களது கம்மியுனிச அறிவியலை ஏதாவது ஒரு இடத்தில் நடத்திக்காட்டுங்கள்.

          • //இவ்விதம் முட்டையின் விலையே ஒவ்வொரு நாட்டிலும் வேறு வேறாக இருப்பது கேலிக்கூத்தானது//

            Oh man, universal currency and universal share in resources …dream on

  4. இந்த தளத்த நடத்துறவங்க பெரிய திருட்டு கும்பல் போல இருக்கு நான் போட்ட கமென்ட்ல என்னய்யா அபாசம் தனிமனித தாக்குதல் கருத்து தவறு அல்லது தாக்குதல் கேட்ட கேள்விக்கு பதில் தெரியாதா ,ஏன்யா எஙருத்த வெளியிடாம அமுக்குறீக ரெம்ப தான் பன்றாய்ங்கப்பா இவனுக ,கருத்து தனிநபர் தாக்குதல் ஆரோக்கியமான விவாதமுனு கதை விடாம எங்களுக்கு பிடிச்சா மாறி பதில் எழுதுனு சொல்லிறவேண்டியதானே…

  5. //அரசே வேலை வாங்கி தர வேண்டும், அரசே வீடு கட்டி தர வேண்டும், அரசே உணவு தர வேண்டும் என்ற எண்ணம் தவறு. அது காலமெல்லாம் அனைத்திற்கும் அரசிடம் கையேந்தி நிற்கும் அவல நிலையை, ஒரு அடிமையை போன்ற நிலையில் நம்மை வைத்திருக்கும். நம் சொந்த உழைப்பில் இதை எல்லாம் ஈட்ட முடியும்.// Where it is mentioned like this who asked this? The article asks Job creation and Job security and social secutiry has to be maintained by Government . What is the problem in this request?

  6. அஞ்ஞானி,

    கட்டுரையில் நான் படித்தது:

    //“இதெல்லாம் கவர்மெண்ட் தானே செய்யனும். எல்லாதுக்கும் வேல கொடுக்கறது கவர்மெண்ட் வேல தான. அதுக்குதானே நாம ஓட்டுப்போட்டு எம்.பி, எம்.எல்.ஏ-ன்னு தேர்ந்தெடுத்து வச்சிருக்கோம்.”//

    //The article asks Job creation and Job security and social secutiry has to be maintained by Government . What is the problem in this request?//

    ஒரு சாரார் எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தை எதிர்பார்க்கிறார்கள்.
    மற்றொரு சாரார் எல்லாவற்றிற்கும் கடவுளை எதிர்பார்க்கிறார்கள்.
    பிரார்த்தனை, பரிகாரம், பூசை செய்தால் போதும், கடவுள் அவர்களின் அத்தனை பிரச்சினைகளையும் தீர்த்து விடுவார் என்று எண்ணிக்கொண்டு முயற்சி செய்யாமல் இருப்பதும் ஒன்று, வேலை வாய்ப்பு அலுவகத்தில் பதிவு செய்து விட்டால் மட்டும் போதும், அரசே நமக்கு அனைத்தையும் செய்து விட வேண்டும் என்று எண்ணுவதும் ஒன்று.

    தன்னம்பிக்கை உண்டெனில் இவற்றிற்கு யாரையும் எதிர்பார்க்காமால் நம் வாழ்வின் முன்னேற்றத்தை நம் முயற்சியின் மூலம் மட்டுமே வெற்றியடைய செய்ய முடியும்.

    Human Resource is the biggest resource of our Nation.
    Better we use our own resource to feed ourselves, than waiting for others to feed it for us.

    • ////“இதெல்லாம் கவர்மெண்ட் தானே செய்யனும். எல்லாதுக்கும் வேல கொடுக்கறது கவர்மெண்ட் வேல தான. அதுக்குதானே நாம ஓட்டுப்போட்டு எம்.பி, எம்.எல்.ஏ-ன்னு தேர்ந்தெடுத்து வச்சிருக்கோம்.”//// Who will do this then? It is Govt has the capacity to instill right economic policies to create job opportunities and social security. That is what the best I can infer from this statement.

      //“இது ஒரு சேவை சார். வேலை இல்லாதவங்களுக்கு வேல கொடுக்கிறோம்ல”// Whose responsibility is this? Any private owners has the capacity on this scale? especialy in India? Your optimism that if you put Tea stall also you can earn more than a IT is actually very pathetic. If earning is the only requirement then we don’t need school, colleges, Educational institute and state of the art institutes. India is youngest country of this Era – meaning 40% of Young population. Whose responsibility to have good eudcation, job creation, and social security for this automic potnetial human resource?

  7. ஆண்டவனையும் நம்ப வேண்டாம்.
    அரசாங்கத்தையும் நம்ப வேண்டாம்.
    தன்னம்பிக்கையை நம்புங்கள். அது போதும்.

    ஆண்டவனிடமும் அரசாங்கத்திடமும் கையேந்துவதை விட, நம் முயற்சியில் நம்மால் ஒரு பத்து பேரின் வாழ்வில் ஒளி ஏற்ற முடிந்தால் அதுவே பெருவெற்றியாகும்.

    • அரசாங்கத்த நம்ப வேண்டாம் என்றால் ,அப்புறம் அரசாங்கம் எதற்கு?

  8. //அவருடன் வந்திருந்த இன்னொருவர் எனது கையை இருக பிடித்து,“ஐயா எனக்கு மூனு பிள்ளைங்க. நான் எந்த வேலைக்கும் போகல. இருந்தாலும் எனக்கு எந்த கஷ்டமும் இல்ல. நான் நல்லா இருக்கிறேன்” என்றார்.//

    புத்திசாலிகள் சாமியாராகி விடுகிறார்கள் 🙂

  9. கற்றது கையளவு,
    அரசாங்கத்த நம்ப வேண்டாம் என்றால் ,அப்புறம் அரசாங்கம் எதற்கு?

  10. எனது பதில்களை முழுவதுமாக படித்து விட்டு கேளுங்கள்.

    அனைவருக்கும் வேலையை அரசே கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கட்டுரையில் இருப்பதால் தான் நான் அவ்வாறு குறிப்பிட்டேன்.

    வேலை, இருக்க இடம், உண்ண உணவு, எல்லாவற்றையும் அரசே ஏற்பாடு செய்தால் பின் நம் சொந்த முயற்சி என்று என்ன இருக்கும்? நமக்கு தேவையானவற்றை நாமே முயன்று பெற வேண்டும்.

    • அனைவருக்கும் கல்வியும் வேலையும் தருவது அரசுகளின் கடமையாகும்.அந்த கடமையை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதால்தான் அரசுக்கு வரி வசூலிக்கும் உரிமையே வருகிறது.கடமைகள் இன்றி உரிமைகள் மட்டும் தனியே கிடைக்காது.பல்லாயிரம் பல லட்சம் கோடி வரி வருமானத்தையும் மக்கள் அனைவருக்கும் உரிமையான பல லட்சம் கோடி டிரில்லியன் மதிப்பிலான கனிம வளங்களையும் அனுபவிக்கும் உரிமையை பெற்றுள்ள அரசுகள் வேலை கொடுக்கும் கடமையை தட்டிக்கழிக்க முடியாது.

      சொந்த முயற்சியால் ஒவ்வொருவனும் வாழ்ந்து கொள்ள வேண்டும் என்று சொல்வது விலங்கினங்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம்.ஒரு நாகரீக மனித சமூகத்துக்கு பொருந்தாத தன்மையாகும்.

      • Government must provide education & awareness to each and every person but cannot be providing employment,it can provide employment to some people and create an environment where everyone is empowered to have the confidence to survive,a true welfare state will not have any slaves or somberis.

      • திப்பு,

        நாட்டில் உள்ள அனைவருக்கும் வேலையை அரசே தர வேண்டும் என்று எதிர்பார்ப்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை. அரசு அலுவலகங்கள், தனியார் கம்பெனிகள், சுய தொழில் என்று எல்லா முறைகளிலும் நமக்கு வேலையும், வருமானம் ஈட்டும் வழியும் உள்ளது. யாருக்கு என்ன தொழில் தெரியுமோ, அந்தந்த தொழில்களில் தமது திறமையை காட்டி முன்னேறலாம். ஆனால் வேலை என்று செய்தால் கணினியை தட்டும் வேலையை மட்டும் தான் செய்வேன் என்று உட்கார்தால் அப்படியே இருக்க வேண்டியது தான். தீவிரமாக வேலை செய்தால், திறமையாக வேலை செய்தால் ஒரு பெட்டிக்கடை வைத்தே இந்த கணினி தட்டும் நபர்களின் வருமானத்தை மிஞ்சி விடலாம்.

        வேலையை கொடுப்பதற்கு அரசை நம்பி காத்திருக்க வேண்டாம், நாமே முயற்சி செய்யலாம் என்று தான் கூறினேனே ஒழிய மற்றபடி நாட்டின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, கட்டமைப்பு பணிகள், தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து, போன்ற அனைத்து சேவைகளுக்கும் அரசாங்கம் மக்களுக்கு சேவை செய்ய கடமைப்பட்டுள்ள்ளது.

        இன்னொன்றையும் சொல்லிகொள்ள விரும்புகிறேன். வெளிநாடுகளில் எல்லாம் கடினவேலை உழைப்பவர்களுக்கு கணினி வேலை செய்பவர்களுக்கும் வருமானம் கிட்டத்தட்ட ஒன்றாக தான் இருக்கிறது. ஆனால் நம்ம ஊரில் விவசாயியின் வயிற்றில் அடித்து இடைத்தரகர்கள் அதிக இலாபம் பார்க்கிறார்கள். கணினி வேலை செய்பவர்களுக்கும் வங்கி வேலை செய்பவர்களுக்கும் அதிக சம்பளம் கொடுத்து மற்ற வேலை செய்பவர்களுக்கு எலும்புத்துண்டை வீசுகிறார்கள். இதை நாம் சரி செய்ய வேண்டும்.

        • கற்றது கையளவு,

          //அரசே வேலை வாங்கி தர வேண்டும், அரசே வீடு கட்டி தர வேண்டும், அரசே உணவு தர வேண்டும் என்ற எண்ணம் தவறு//
          //வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தால் போதுமா, நாமும் கொஞ்சம் முயல வேண்டாமா?.//
          //ஒரு சாரார் எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தை எதிர்பார்க்கிறார்கள்.
          மற்றொரு சாரார் எல்லாவற்றிற்கும் கடவுளை எதிர்பார்க்கிறார்கள்.//
          // நம் வாழ்வின் முன்னேற்றத்தை நம் முயற்சியின் மூலம் மட்டுமே வெற்றியடைய செய்ய முடியும்//

          உண்மையில் தங்களது அறிவுரைகள் மற்றும் பொன்மொழிகள் எல்லாம் யாருக்கானது? உழைத்து உழைத்து ஓடாய்த் தேயும் ஏழை எளிய மக்களுக்கா? இல்லை அவர்களது உழைப்பை ஓட்டச் சுரண்டும் வர்க்கத்திற்கா? நாள் முழுதும் உழைத்து சரியான கூலி கூட கிடைக்காமல் சரியான சாப்பாடு இல்லாமல், சரியான மருத்துவம் இல்லாமல் இன்னும் சரியாக சொல்வதானால் அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழும் மக்களுக்கா தாங்கள் பொன்மொழிகள் கூறுகிறீர்கள்? டாடா,அம்பானி,அதானி உள்ளிட்டத் தரகு முதலாளிகளும், பன்னாட்டு முதலாளிகளும், உள்ளூர் பண்ணையார்களும் வசதியும் வாய்ப்புமாக இருப்பது சமூக கூட்டுழைப்பை ஏய்த்து ஏமாற்றியதாலா அல்லது அவர்களது தனிப்பட்ட முயற்சியாலா?

          முதலில் இந்த சமூகமும் பொருளாதாரமும் யாருடைய வசத்தில் இருக்கிறது. இங்கு இருக்கும் இயற்கை வளங்கள் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றன என்பதைப் பற்றியெல்லாம் ஆராயாமல் வெறுமனே தனிமனித முயற்சியை மட்டும் பேசிக் கொண்டுஇருப்பதில் பொருளில்லை.

          இங்க இருக்கும் அத்துணை மக்களும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இருக்கிறார்களா? ஒட்டு மொத்த மக்கள் தொகையை பார்க்கும் போது மிகவும் சொற்பமான மக்கள் தான் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளனர். உண்மையில் அவர்கள் யாரும் அதை நம்பவில்லை என்று தான் கூறுகிறார்கள்.அவர்கள் அவர்கள் பிழைப்பிற்கு ஏதேனும் வேலை பார்த்து கொண்டு தான் உள்ளனர்.

          எந்த ஒரு சாரார் இந்த அரசை எதிர்பார்கிறார்கள்? எந்த ஒரு சாரர் கடவுளை எதிர்பார்கிறார்கள்? 1 ரூபாய் சூடத்தை கொளுத்திப் போட்டு 1 நிமிடம் சாமி கும்புட்டுவிட்டு உழைக்க செல்லும் மக்களை தான் அப்படி சொல்கிறீர்களோ?.

          வெறுமனே தன்னம்பிக்கை, தனி மனித முயற்சி பற்றி அதிகம் பேசும் தாங்கள், மனிதனின் சமூக இருத்தலையே கேள்விக்குள்ளாக்குகிறீர்கள். இன்றைய சமூக சூழ்நிலையில் தனி மனிதனின் தன்னம்பிக்கையோ , தனி மனித முயற்சியோ என்ன சாதித்து விடும் என்று நினைக்கிறீர்கள். ஒரே ஒரு நாள் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். நாம் யாரையெல்லாம் சார்ந்து இருக்க வேண்டி இருக்கிறது என்பதை பட்டியலிட்டுப் பாருங்கள். கூட்டுழைப்பின் அருமை புரியும்.

          இங்கே நாம் கோருவது, உழைக்கும் மக்கள் அனைவருக்கும் தேவையான அடிப்படை வசதிகள் தாம். இந்த நாட்டின் வளர்ச்சிக்கு களமாக இருக்கும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இந்த அரசிடம் கேட்காமால் அமெரிக்க அரசிடமா கேட்க முடியும்.

          வயல் வெளிகளில் உழைக்கும் கூலி விவசாயிகளிடம் தனி மனித முயற்சி இல்லையா? இங்கே பாலம் கட்டும் வட இந்தியத் தொழிலாளிகளிடம் தனி மனித முயற்சி இல்லையா? இல்லை அதை விட இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்று எதிர்பார்கிர்ரீர்களா? அவர்கள் வாங்கும் கூலியை வைத்து கொண்டு அவர்கள் என்ன செய்ய முடியும்.

          தனி மனித முயற்சி தேவை தான். ஆனால் அது அனைத்துப் பிரச்சினைக்கும் தீர்வாகாது.வெள்ளாறு, தாமிரபரணி, தாது மணற்கொள்ளை, மீதேன் , நோக்கியா தொழிலாளர்கள் வேலையிழப்பு , டிசிஎஸ் ஊழியர்கள் பணிநீக்கம் போன்ற மக்களின் வாழ்வாதரமான,பொதுவான பிரச்சினைகளில் தனி மனித முயற்சியின் வரம்பு என்ன? ஒட்டுமொத்த சமூகத்திற்க்கான பிரச்சினைகளை சமூகமாக சேர்ந்துத் தீர்க்காமல், தனி மனிதன், தனிப்பட்ட முயற்சி, தனிப்பட்டப் பிரச்சினை தன்னம்பிக்கை என்று தனித் தனியாக தனியொருவனின் பிரச்சினையாக பிரித்து கூறுவது மக்களின் கவனத்தை திசை திருப்பும் ஆளும் முதலாளி வர்க்கத்திற்கேயுரிய பார்வையாகும்.

          நன்றி.

          • நண்பர் சிவப்பு,

            அருமையான பதில்.

            எனது இந்த பின்னூட்டம் உங்கள் பதிலுக்கு நன்றி தெரிவிக்கவும், இந்த விவாதத்தை தொடர்வதற்கும்.

            நன்றி.

          • சிவப்பு,

            முதல் கட்டம். இந்த உழைப்புக்கேற்ற ஊதியம் என்ன என்று தெளிவாக நிர்ணயிக்கப்பட்டு அதை அரசு நடைமுறை படுத்த வேண்டும். உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படவில்லை எனில் முதலில் அதிக ஊதியம் வழங்க கேட்க வேண்டும், மறுத்தால் போராடலாம். அதிக வருமானம் கிடைக்க வழி இல்லை என்ற பட்சத்தில் அடுத்து எப்படி வருமானத்தை பெருக்குவது என்று யோசிக்க வேண்டும். வருமானம் குறைவாக இருக்கிறதென்று வருத்தப்பட்டால் மட்டும் போதாது. அதற்கு நாமும் ஏதாவது முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

            உழைப்புக்கேற்ற சரியான ஊதியம் வழங்கப்பட்டால் நீங்கள் சொல்லும் பிரச்சினைகள் பெரும்பாலும் சரி செய்யப்படும்.

            ஒரு தொழிலாளி, அதுவும் திறமை மிக்க தொழிலாளி, திறமைகளை வளர்த்து கொள்ளும் தொழிலாளி ஒரே இடத்தில் நீண்ட நாள் வேலை செய்தால் அவரது உழைப்பை ஏய்ப்பது நடக்கிறது. அதே சமயம் தனது திறமையை மதிக்கும், அதிக ஊதியம் கொடுக்கும் இடத்தை தேடுவதை அவர்கள் நிறுத்த கூடாது.

            வடஇந்திய கூலித்தொழிலாளிகள் ஏன் தமிழகம் வந்தார்கள்? அவர்களது மாநிலத்தில் அவர்களுக்கு கிடைக்கும் வருமானத்தை விட இங்கு அவர்களுக்கு அதிக வருமானம் கிடைத்தால் தான் அல்லவா? திரைகடல் கடந்தும் திரவியம் தேடு என்று ஏன் சொல்கிறார்கள்? நாம் ஒரே இடத்தில் தேங்க ஆரம்பித்தால் நமது உழைப்பின் அருமை, மதிப்பு நமக்கு தெரியாது.

        • நண்பர் கற்றது கையளவு,
          குடி மக்கள் அனைவருமே அரசு ஊழியர்களாக இருக்க முடியாதுதான்.அதே சமயம் நாட்டு மக்கள் அனைவருமே ஏதாவது ஒரு வகையில் வருமானம் ஈட்டுவதற்கான சூழலை ஏற்படுத்தி தருவது அரசின் கடமை. .நீங்களே சொல்வது போல விவசாய பொருட்களுக்கு கட்டுபடியாகும் விலை கிடைக்கவில்லை.நாட்டின் மக்கள் தொகையில் நான்கில் மூன்று பகுதியினரின் வாழ்வாதாரமான விவசாயத்தை அரசே நசுக்கி சாவடிக்கிறது.அரசே அனைத்து உணவுப்பொருட்களையும் கட்டுபடியாகும் விலை கொடுத்து வாங்கி பொதுத்துறை ,கூட்டுறவு துறை மூலமாக விநியோகித்தாலே இதனை சாதித்து விடலாமே.வறுமையை பெருமளவு ஒழிக்கலாமே.

          இன்னொரு பதிவில் செர்மனி நாட்டு அரசு வேலை இழந்தவர்களுக்கு மறு வேலை கிடைக்கும் வரை அவர்கள் ஈட்டி வந்த வருமானத்தில் 60 விழுக்காடு உதவி தொகையாக வழங்குவதை படித்திருப்பீர்கள்.தனி மனித முயற்சியில் பார்த்துக்கொள் என மேலை அரசுகளே தட்டிக்கழிக்கவில்லை.அதற்கு காரணம் அங்கு நிலவும் சனநாயகம்.இங்கு நிலைமை என்ன.

          ஒரு சில அரை வேக்காடுகள் அரசே அனைத்தையும் செய்து தர சொல்வது சோம்பேறிகளின் செயல் என தூற்றுகிறார்கள். நாங்கள் உழைக்க அணியமாக இருக்கிறோம் ஆகவே எங்களுக்கு வேலை கொடு என்றுதான் கேட்கிறோம்.இலவசமாக சோறு போடு என கேட்கவில்லை என்பதை அந்த கோமாளிகள் உணர வேண்டும்.

          • திப்பு,

            உழைக்க தயாராக இருக்கிறோம், எங்களுக்கு வேலை கொடு என்று கேட்கிறீர்கள்.
            நம் நாட்டில் உண்மையில் எல்லா இடங்களிலும் வேலை உள்ளது. ஆனால் நம் இளைஞர்கள் அவர்களுக்கு ஏற்ற பணி கிடைக்க வேண்டும் என்று காத்திருந்து நேரத்தை விரயம் செய்கிறார்கள்.

            ஒரு மளிகை கடை அண்ணாச்சி என்ன பல கோடி ரூபாய் முதலீட்டில் வியாபாரம் ஆரம்பிக்கிறாரா? இல்லை ஒரு தேநீர் கடை வைத்திருப்பவர், ஒரு தள்ளு வண்டி பிரியாணி கடை நடத்துபவர் அரசை நம்பி காலம் தள்ளுகிறாரா? வீண் பேச்சு பேசிக்கொண்டிருக்காமல் அவரவர் முடிந்தவரை உழைத்து முன்னேறுகிறார்கள்.

            நான் இருக்கும் பகுதியில் ஒருவர் ரோட்டோரம் சைக்கிளில் சிறிய சூப்பு கடை ஒன்று ஆரம்பித்து பின்னர் அவரது சூப்புக்கு நிறைய வாடிக்கையாளர்கள் புழங்க, அடுத்து தள்ளு வண்டியில் விற்று, பின் சொந்தமாக கடை ஒன்றை பேருந்து நிலையம் அருகில் போட்டு, இப்போது மூன்று கிளைகளையும் ஆரம்பித்து விட்டார். இதற்கு என்ன சொல்கிறீர்கள். அரசாங்கம் அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை, அதை அவர் எதிர்பார்க்கவும் இல்லை. உழைத்தார், மூளையை உபயோகித்து, சமயோசிதமாக மக்கள் கூடும் இடங்களில், மக்கள் விரும்பும் வகையில், மூலிகை சூப்பு என்று விற்பனை செய்து முன்னேறினார்.

            நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு, அவர்களின் பாதுகாப்பிற்கு, அவர்களின் வசதிக்கு, கல்விக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால் வேலை தேடுவதற்கு கூட அரசை எதிர்பார்த்து காத்திருப்பது சரியல்ல என்பது எனது கருத்து.

      • திப்பு,

        இங்கே அனைவருக்கும் கல்வி,மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என்பதை சிலர் ஏதோ இலவசமாய் வேண்டுவது போல புரிந்து கொள்கின்றனர். அதே போல இன்னும் முயற்சி செய்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றும் போதனை செய்கிறார்கள்.

        விவசாயம் பொய்த்து அதில் ஒரு சாராரது வாழ்க்கை நொடிந்து நகரத்தை நோக்கி வருகிறார்கள் எனில் , இங்கே பிரச்சினை ஏன் விவசாயம் நொடிந்து போனது என்பதைப் பற்றி இல்லாமல் அல்லது ஆராயாமல் , விவசாயம் நோடிந்தால் என்ன வேறொரு வேலைப் பார்த்து பிழைத்து கொள்ள வேண்டியது தானே என்றும் அறிவுரை கூறுகிறார்கள். உண்மையில் இவர்கள் ஆளும் வர்க்கத்திற்கு சேவை தான் செய்கிறார்கள்.

        நன்றி.

        • சிவப்பு,

          விவசாயம் நொடிந்து போனதற்கு நாமும் ஒரு காரணம்.
          விவசாய நிலங்களை எல்லாம் பிளாட் போட்டு விற்கும், வாங்கும் நாமது பேராசை தான் காரணம்.

          நாட்டில் மற்ற தொழில் செய்பவர்கள் எல்லாம் அந்த பொருளின் விலையை தாங்களே நிர்ணயிப்பதை போல விவசாயிகளுக்கும் அவர்கள் வயலில் விளைந்த பொருளின் விலையை அவர்களே நிர்ணயித்தால் நன்றாக இருக்கும். அதே சமயம் இடைத்தரகர்களை சுத்தமாக ஒழித்தால் விவசாயிகளுக்கும் வருமானம் கிடைக்கும், பொதுமக்களுக்கும் நல்ல காய்கறிகள் நல்ல விலையில் கிடைக்கும்.

          வெளிநாடுகளில் இயற்கையாக வளர்க்கப்படும் காய்கறிகளுக்கு, இயற்கை உணவு உண்டு கோழிகள் போடும் முட்டைகளுக்கு அதிக விலை வைத்து விற்கிறார்கள். அதையும் மக்கள் வாங்கி உண்கிறார்கள்.

          விவசாயிகளுக்கென்று பொதுவான ஒரு யூனியன் இருந்தால் நன்றாக தான் இருக்கும். இந்த திசையில் நாம் ஆலோசித்தால் என்ன?

  11. அனைவருக்கும் வேலையை அரசே கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கட்டுரையில் இருப்பதால் தான் நான் அவ்வாறு குறிப்பிட்டேன். ////
    அப்புறம் எதற்க்கு இந்த அரசாங்கம் வேலை வாய்ப்பு அலுவலத்தை திறந்து வைத்து இருக்கிறது.

    பெரும்பாலான கம்பெனிகள் பணியாளர்கள் சட்டத்திற்க்கு உட்பட்டு பணி ஒப்பந்தம் போடுவது இல்லை. பெரும்பாலான கம்பெணிகள் நமது அசல் சான்றிதழை வாங்கிகொண்டுதான் வேலை தருகிறது. நமக்கி வேறு வேலை கிடைத்து போனால் அவர்கள் நமது அசல் சாண்றிதழ்களை தருவது இல்லை. ஆனால் அவர்கள் வேலையை விட்டு அனுப்ப வேண்டுமென்றால் வெறும் 2 மாதம் சம்பளத்தை தந்து வெளியே அனுப்பி விடுவார்கள். நமது அசல் சான்றிதழை வாங்கி வைக்கும் அதிகாரம் எந்த கம்பெனிக்கும் இல்லை.ஆனால் அவர்கள் வாங்கிவைத்து கொண்டு நம்மை மிரட்டுவார்கள்.அப்படி என்னை மிரட்டிய ஒரு கம்பெனிக்கு எதிராக போராடி எனது சான்றிதழை வாங்கியது மட்டுமல்லாமல் அனைவரது சான்றிதழையும் கொடுக்க செய்தேன்.ஆகவே போராட்டம் என்பது முக்கியம்.நமக்கு பெரும்பாலோனோருக்கு தொழிலார்களின் உரிமைகள் தெரிவது இல்லை. தெரிந்தாலும் பெரிய கம்பெனிகள் அதிகாரிகள் முதல் நீதிபதிகள் வரை கையூட்டு கொடுத்து தப்பித்து விடுகின்றன. அதில் ஒருசில நேர்மையான் அதிகாரிகள் தவிர.

  12. ராஜ் அவர்களே,

    கம்பெனிகள் பணியாளர்கள் சட்டத்திற்கு உட்பட்டு பணி ஒப்பந்தம் போடுவது முக்கியம் தான்.
    நம்ம ஊரில் சான்றிதழ்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்துக்கொண்டு வேலை கொடுப்பது போல வெளிநாடுகளில் நம்ம ஊர்காரர்களின் கடவுச்சீட்டை வாங்கி வைத்துக்கொண்டு வேலை தருகின்றனர்.
    இது தவறு தான்.

    நம்ம ஊரில் இதற்கு சட்டம் உள்ளது. வெளிநாடுகளில் ஏன் என்று கேட்க முடியாத நிலை. வேறு வழி இல்லாமல் பணியாளர்கள் கொத்தடிமை போல வேலை செய்ய வேண்டும்.

    தங்களை போல பணியாளர் சட்டம், தொழிலாளர் உரிமை தெரிந்த நண்பர்கள் சான்றிதழ்களை போராடி பெறுகின்றனர். மற்றவர்கள் அடிமையாகவே வாழ்கின்றனர். தங்களுக்கு என்னுடைய பாராட்டுகள். உங்களை போல ஒருவர் ஒவ்வொரு கம்பெனியிலும் இருந்தால் முதலாளிகள் தொழிலாளிகளை ஏமாற்ற முடியாது.

    அதே சமயம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டால் மட்டும் போதும். வேலை தானாக வீட்டில் தன்னை தேடி வரும் என்ற எண்ணம் தவறு. நாட்டில் வேலையா இல்லை. உண்மையை சொல்லப்போனால் நாட்டில் வேலை வாய்ப்பு எல்லா இடத்திலும் உள்ளது. ஆனால் நம்மவர்கள் வேலை என்றால் ஏசி அலுவலகத்தில் கணினி முன்னாள் உட்கார்ந்து கொண்டு சவுகரியமாக வேலை கிடைத்தால் தான் போவேன் என்று கூறிக்கொண்டு சோம்பேறியாக நண்பர்களுடன் சுற்றி திரிவதை பார்த்திருக்கிறேன். பாஸ் என்ற பாஸ்கரன் திரைப்படத்தில் கதாநாயகன் கூறுவானே, ஒவ்வொரு வேலையிலும், இது நொட்டை, நொள்ளை, நாய் பிழைப்பு என்று கூறிக்கொண்டு தட்டிக்கழிப்பானே, அதை போன்று தான் தற்கால இளைஞர்கள் இருக்கிறார்கள். பிழைப்பே இல்லாமல் வெட்டியாய் பெற்றோர் காசை வாங்கி ஊதாரித்தனமாக செலவு செய்வதற்கு பதில் நாய் பிழைப்பு போன்ற வேலையை செய்து அந்த பெற்றோரை உட்கார வைத்து நாம் சாப்பாட்டு போட்டால் அது உத்தமம்.

    தொழிலாளிகளின் உரிமைகளுக்கு நான் எதிரி அல்ல. ஆனால் ஆண்டவன் பேரிலும், ஆள்பவன் பேரிலும் பாரத்தை போட்டு விட்டு, அவர்கள் பார்த்து கொள்வார்கள் என்று வெட்டியாக திரியும் சோம்பேறித்தனத்திற்கு நிச்சயம் நான் எதிரி தான்.

    என்னை தவறாக நினைக்க வேண்டாம். உழைப்பவர்களுக்கு ஏற்ற ஊதியம் கொடுக்கப்பட வேண்டும், அவர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பதில் நிச்சயம் உங்களுடன் உடன்படுகிறேன்.

  13. “மேலே உள்ள பின்னோட்டங்களில்(சிவப்பு தவிர) வேறு எவறும் இந்த கட்டுரையின் தாக்கத்தை புரிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன்”

    மக்களின் பிரச்சனைகளுக்கு காரணம் யார்? அதற்கு தீர்வு என்ன? இந்த அரசு யாருக்கானது? என்பதை மக்களுக்கு புரிய வைத்து, மக்களை அரசியல்படுத்தி அரசுக்கு எதிராக மக்களை கேள்வி கேட்க வைத்து போராட வைப்பதே இன்றைய தேவையாக உள்ளது. அதை விடுத்து, பிரச்சனைக்கான காரணத்தை உணராத வகையில் திசை திருப்பி எதிர்த்து கேள்வி கேட்காத வண்ணம் மக்களின் போர்க்குணத்தை மழுங்கடித்து அடிமைகளாக்கும் வேலையை இது போன்ற பல்வேறு மத நிறுவனங்களும், என்.ஜி.ஓ.க்களும் செய்து வருகின்றன.

    “மக்களை அரசியல்படுத்தி அரசுக்கு எதிராக மக்களை கேள்வி கேட்க வைத்து போராட வைப்பதே இன்றைய தேவையாக உள்ளது”

    ஆனாலும் இந்த வகை போராட்டங்கள் ஆயிரம் வருடங்கள் நடத்தினாலும் ஒன்றும்
    மாறிவிடாது.
    மீன்டும் பொதுயுடமை புரட்சியே தீர்வு/

  14. சேசுவின் பெயரால் சபிக்கிறேன் இந்த வினவுதளம் நாசமாக போகட்டும்

    சைத்தானின் கைக்கூலி வினவே மதத்துவேஷம் செய்யாதே

  15. கம்யூனிச ஆட்சி அமையும்போது மக்களுக்கு எவ்வாறு அரசு வேலைவாய்ப்புகளை வழங்கும்? வேலை வழங்கும் அதிகாரி தன் சொந்த பந்தங்களுக்கு தன் அதிகாரத்தின் பேரில் கூடுதல் வருமானமுள்ள வேலைகளை கொடுத்து விட முடியாதா/? ஏதாவது உதாரண்த்தின் பேரில் விள்க்க முடியுமா/

  16. எவ்வளவு பயங்கரமான கேள்விகளை கேட்டு பாதிரியாரை தினரடிச்சிட்டாங்க . இப்படியே ஓட்டுங்க காலத்தை. யாரு யாரு எப்படின்னு மக்கள் தெளிவா புரிஞ்சிவசிருக்காங்க. அர்த பழைய ஸ்டைல் கட்டுரைய போட்டு மக்கள்கிட்ட புரட்சி உண்டுபண்ண போறாங்கப்பா வினவு………. .

  17. புண்ணலாரின் பிறந்த நாளுக்கு பினவின் அன்பு பரிசு, ஆளில்லாத கடைல யாருக்குடா டீ ஆத்துறிங்க….

    • திரு.ஜோஸப் அவர்களே,

      புண்ணலாரின்
      பினவின்

      இந்த பின்னூட்டம் புரியவில்லையே

    • சண்முகம் அண்ணன் உங்களுக்கு புரியாது வினவு தளத்த நடத்துறவங்களுக்கு புரியும் கடந்த ஞாயிற்று கிழமையில் எனது இசுலாம்,முகமது பற்றி இருந்த பின்னூட்டம் நீக்கப்பட்டு விட்டது அன்னிக்குதான் உலகம் போற்றும் உத்தமர் புண்ணலாரின் பிறந்த நாள் அன்னிக்கு கூட கடை லீவி விட்டாங்களே

      • நண்பர் பி.ஜோசப் அவர்களே. நானும் நீங்கள் இட்ட அந்த பின்னூட்டத்தை பார்த்தேன். ஏதோ ஒரு ஜெர்மானிய அறிஞர் சொன்னார் என்று பின்னூட்டமிட்டிருந்தீர்கள். பின்னூட்டமிட்டிருந்தீர்கள் என்பதை விட கட், காப்பி பேஸ்ட் பண்ணியிருந்தீர்கள் என்பதே சரி, ஏனென்றால் உங்களுடைய பின்னூட்டங்கள் பொதுவாக ஸ்பெல்லிங் மிஸ்டேக் அதிகமாக இருக்கும். நாங்களும் சரி எதோ கஷ்டப்பட்டு டைப் செய்கிறாரே, தத்து, பித்து சொல்லி வக்கிரார்னு சரி படிப்போமே என்றுதான், கடைசியில பார்த்தா ஒன்னு வினவ கண்டிப்பீங்க, இல்லாட்டி உங்க மத பங்காளி அதான் இஸ்லாம் (அப்படிதான் நீங்க நினைச்சிக்கிட்டு சிலுவைப் போரிலிருந்து இன்று வரை இஸ்லாத்துடன் போர் செய்துகொண்டே இருக்கின்றீர்கள்) மதத்த கொச்சையா ஏதாவது சொல்லி சீன்டிருப்பீங்க அவ்வளவுதான். நீங்க மட்டும் இல்ல முஹம்மது நபி எப்ப இஸ்லாத்தை பரப்ப ஆரம்பித்தாங்கலோ அப்ப இருந்தே இதை ஆரம்பிச்சுட்டாங்க.

        கீழே உள்ள குரான் வசனமே இதை கூறுகிறது.

        10:2. மனிதர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் நிச்சயமாகப் பெரும் பதவி கிடைக்கும் என்று நன்மாராயம் கூறுவதற்காகவும், அவர்களிலிருந்தே நாம் ஒரு மனிதருக்கு வஹீ அருள்கிறோம் என்பதில் மக்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டு விட்டதா? காஃபிர்களோ, “நிச்சயமாக இவர் பகிரங்கமான சூனியக்காரரே” என்று கூறுகின்றனர்.

        17:47. (நபியே!) அவர்கள் உமக்குச் செவி சாய்த்தால், என்ன நோக்கத்துடன் செவி சாய்க்கின்றார்கள் என்பதையும் அவர்கள் தமக்குள் இரகசியமாக ஆலோசனை செய்யும் போது, “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே அன்றி (வேறெவரையும்) நீங்கள் பின்பற்றவில்லை” என்று (தங்களுக்குள்) அந்த அநியாயக்காரர்கள் சொல்வதையும் நாம் நன்கறிவோம்.

        7:184. அவர்கள் சிந்திக்கவில்லையா? (நம் தூதராகிய) அவர்களுடைய தோழருக்கு எவ்வித பைத்தியமுமில்லை. அவர் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரேயன்றி வேறில்லை.

        23:70. அல்லது, “அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது” என்று அவர்கள் கூறுகிறார்களா? இல்லை; அவர் உண்மையைக் கொண்டே அவர்களிடம் வந்துள்ளார், எனினும் அவர்களில் பெரும்பாலோர் அந்த உண்மையையே வெறுக்கிறார்கள்.

        34:46. “நான் உங்களுக்கு உபதேசிப்பது ஒரே ஒரு விஷயத்தைப் பற்றித்தான்; நீங்கள் இரண்டிரண்டு பேர்களாகவோ, தனித்தனியாகவோ அல்லாஹ்வுக்காக எழுந்தமர்ந்து பின்னர் சிந்தித்துப் பாருங்கள்” என்று (நபியே!) நீர் கூறும்; உங்கள் நண்பருக்கு பைத்தியம் எதுவுமில்லை; உங்களுக்குக் கடினமான வேதனை வருவதற்கு முன்னர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரல்லாமல் அவர் வேறில்லை.”

        37:36. “ஒரு பைத்தியக்காரப் புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா?” என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

        இப்படில்லாம் அவர்கள் கொச்சையாக கூறத்தான் செய்தார்கள். அவர்கள் முஹம்மது நபியவர்களை நாற்பது வயது வரை நம்பிக்கையாளர், நல்லவர் என்றே சொன்னவர்கள் எப்பொழுது சத்தியத்தை சொன்னார்களோ அப்பொழுதே தூற்ற ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு முஹம்மது நபி கொண்டு வந்த இறைசெய்தி பிடிக்கவில்லை. ஏனென்றால் இதை அமல்படுத்தினால் ஆண்டான் – அடிமை ஒழிந்து விடும். ப்ரோகிததுவம் ஒழியும், etc ….

        மைக்கேல் H. ஹார்ட் என்பவர் ‘தி ஹன்றேட்’ என்னும் நூலில் உலகில் புகழ் பெற்ற மனிதர்களில் முதல்வராக முஹம்மது நபியை தேர்தெடுத்தார். ஏன் தேர்ந்து எடுத்தேன் என்பதற்கு விளக்கம் கொடுத்தார். வாங்கி படிக்கவும்.

        இறுதியாக சொல்வது என்னவென்றால் குர்’ஆன் இதுவரை படிக்கவில்லை என்றால் திறந்த மனதுடன் ஒருமுறை படியுங்கள். சும்மா அங்கெ, இங்கே அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று தேவையில்லாத செய்திகளை பதிய வேண்டாம்.

        • குரான் எல்லாம் இருக்கு படிச்சு பாத்தாச்சு உங்களுக்காகத்தான் வினவு கம்மூனிஸம் எல்லாம் இருக்கு நபி மாறி ஏகத்துவத்தையும் ____ கலந்து கட்டி அடிச்ச ஆளுகள விமர்சனனமே பண்ணக்கூடாது ,அஸ்கர் அலி,ஆரு சானவாஸ் சொன்னதெல்லாம்தான் இசுலாம் நபி செய்யசொன்னதெல்லாம் அமெரிக்கானு நம்புற கோஸ்டியான வினவுட்ட பேசி என்னயா பிரயோஜனம்நீங்க கலக்குங்க அப்துல் ஜாபர் கருனையே வடிவான முகமது வின் குரான் வசனங்கள் மூலம்…..

        • //மைக்கேல் H. ஹார்ட் என்பவர் ‘தி ஹன்றேட்’ என்னும் நூலில் உலகில் புகழ் பெற்ற மனிதர்களில் முதல்வராக முஹம்மது நபியை தேர்தெடுத்தார். ஏன் தேர்ந்து எடுத்தேன் என்பதற்கு விளக்கம் கொடுத்தார். வாங்கி படிக்கவும்.// மைக்கல் கார்ட் என்பவர் ஏன் தெரிந்து எடுத்தார் என்பதெல்லாம் இருக்கட்டும் முகமது என்பவர் உலக மக்களுக்கு நன்மைசெய்தவ்ர்களில் முதன்மையானவ்ர் என்று தெரிவிக்க ஏன்யா இருபதாம் நூற்றான்டுல வாழ்ந்த ஒருவரை துணைக்கு அழைக்கிறீர் அவரு (முகமது) என்ன செஞ்சாருனுதான் சொல்லுங்களேன்
          //இறுதியாக சொல்வது என்னவென்றால் குர்’ஆன் இதுவரை படிக்கவில்லை என்றால் திறந்த மனதுடன் ஒருமுறை படியுங்கள். சும்மா அங்கெ, இங்கே அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று தேவையில்லாத செய்திகளை பதிய வேண்டாம்.//
          உங்களின் இந்த கருத்தைதான் வினவு தளம் அப்படியே பின் பற்றுகிறதுநீங்க வேற வினவுக்கு எடுப்பா பேசுறீகலா அதுனால எனக்கு வினவு கம்மூனிஸ தலமா இல்லை முகமது தளமா என்பதுதான் என் சந்தேகம்நீங்க ரெம்ப டென்சன் ஆக வேண்டாம்…

  18. “மேலே உள்ள பின்னோட்டங்களில்(சிவப்பு தவிர) வேறு எவறும் இந்த கட்டுரையின் தாக்கத்தை புரிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன்”……….நண்பர் சண்முகம்,,,,,,

    தன்னார்வ குழுவினர் இலவசமாக சோறு போடுகிறோம்,துணிமணி தருகிறோம்,வீடுகட்டிகொடுக்கிறோம் என்று சொல்லி இருந்தால் அவர்கள் சோம்பேறிகளை உருவாக்குகிறார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் நீங்கள் கூறி இருப்பது சரி. ஆனால் அவர்கள் “வேலை கற்றுகொடுத்து” என்று சொல்லி இருப்பதற்கு பிறகும் இங்கே அதை கவனிக்காது கருத்து தெரிவிப்பது ஏனோ?
    மீன் குழம்பு இலவசமாக தருகிறேன் என்பதைவிட மீன் பிடிக்க கற்றுகொடுப்பவனின் சேவை பாராட்ட கூடியதே.

    தனி மனித முயற்சி தேவை தான். ஆனால் அது அனைத்துப் பிரச்சினைக்கும் தீர்வாகாது….நண்பர்/நண்பி சிவப்பு…..

    பிரச்சனைகளுக்கு தனிமனித முயற்சி தீர்வாகாது என்பது ஓரளவிற்கு உண்மைபோல தெரியலாம்.ஆனால் பிரச்சனைகள் உருவாவதே தனி மனித ஆசையினால் தானே?

    • 22 லட்சம் தன்னார்வ நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன.
      சராசரியக 10 நபர் என்றாலும் அவர்கள் தொகை 2 கோடியை தான்டும்(50 மக்களுக்கு ஒரு என் ஜி ஓ நபர்).
      அவர்கள் அவர்களுக்குதான் வேலை வாய்ப்பை உருவாக்கி கொள்கின்றனர்.
      மத பிரச்சாரர்களும் அதுபோன்றுதான்.

      “மக்களை அரசியல்படுத்தி அரசுக்கு எதிராக மக்களை கேள்வி கேட்க வைத்து போராட வைப்பதே இன்றைய தேவையாக உள்ளது”

      ஆனாலும் இந்த வகை VINAVU-போராட்டங்கள் ஆயிரம் வருடங்கள் நடத்தினாலும் ஒன்றும்
      மாறிவிடாது.
      மீன்டும் பொதுயுடமை புரட்சியே தீர்வு/

  19. நண்பர். பாண்டியன்
    //கம்மூனிஸ்டுல எல்லாரும் சமம்னா அது ஏன்யா காரல் மார்க்ஸ் ஸ்டாலின்
    லெலின் படத்த வைக்கிறிங்க அவங்கெல்லாம் எந்த வகையிலாவது நம்ம விட உயர்ந்தவங்கன்ற
    சிந்தனைதான இது எப்பிடி கம்மூனிசம் ஆகும//என்று சொன்னீர்கள்
    மகன் தனது தந்தையின் பெயரை (initial )ஆக போடுவதை ஏற்க்கும் நீங்கள் ,கமயூனிஸ்ட்டுகளின் initial ஐ ஏற்காதது ஏன்?

  20. சொல்லுறத சொல்லிப்புட்டேன் செய்யுறத செஞ்சிடுங்க…
    நல்லதுன்னா கேட்டுக்குங்க கெட்டதுன்னா விட்டுடுங்க…
    சித்தர்களும் யோகியரும் சிந்தனையில் ஞானிகளும்
    புத்தரோடு ஏசுவும் உத்தமர் காந்தியும்
    எத்தனையோ உண்மைகளை எழுதி எழுதி வச்சாங்க…
    எல்லாம்தான் படிச்சீங்க… என்ன பண்ணிக் கிழிச்சீங்க…
    – பட்டுக்கோட்டையார் பாடல்

  21. வினவில் பதிவிடும் அனைத்து நண்பர்களுக்கும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

    கம்மியுநிசத்திற்கு நான் எதிரி அல்ல.
    தேர்தல் முறை ஜனநாயகத்தில் சில குறைகள் உள்ளது.
    கம்மியுனிச முறை ஆட்சியிலும் சில குறைகள் உள்ளது.

    கம்மியுநிசத்தின் ஆணி வேரான – உழைப்பிற்கேற்ற ஊதியம், அனைத்து மக்களையும் சமமாக பாவிப்பது, மதத்தின் பிடியிலிருந்து மக்களை விடுவிப்பது, நாட்டின் வளங்கள் சூரையாடப்படாமல் தடுப்பது, இன்னும் பல கம்மியுனிச கருத்துக்களுக்கு நான் ஒத்துபோகிறேன்.

    ஏன் இத்தகைய நல்ல விடயங்களை ஜனநாயக முறையிலேயே செய்யலாமே, தேர்தல் முறையிலேயே இத்தகைய விளைவுகளை ஏற்படுத்தலாமே, மக்களின் ஆதரவை நீங்கள் பெறுவதற்கு ஒரே வழி நீங்கள் அவர்களுக்கு பயன்படுவீர்கள் என்று அவர்கள் நம்ப வேண்டும். அதற்கு என்ன வழி என்று யோசியுங்கள்.

    மக்களின் ஆதரவு இல்லாமல் ஒரு நல்லாட்சியை நீங்கள் தலை கீழாக நின்றாலும் தர இயலாது. முதலில் மக்களை உங்களுடன் இணைக்க பாருங்கள்.

    • அண்ணன் கக நீங்க கேட்ட கேள்விக்கு எல்லாம் சூப்பரா தென்றல் பதில் சொல்லி கலக்குறாரு அருமை ஆனா பாருங்க அவரு பேசுனதுல இருந்து ஒன்னு மட்டும் தெரியுது லட்சிய எந்தரம் அப்பிடினு ஸ்கூல்ல படிச்சு இருக்கோம் அதாவது 100% எபிஸியன்சி தர்ர மிஸின் தியரடிக்கலா அப்பிடி ஒரு மிஸின் இருக்கு ஆனா பிராக்டிக்கல அப்பிடி எந்த மிஸினியயும் கொண்டு வர முடியாது அனா கொண்டு வர சாத்தியம் இருக்கு எப்பிடி புவியீர்ப்பு விசை இல்லாம காற்றழுத்தம் இல்லாத உராய்வே இல்லாத இடத்துல கொண்டு வரலாம் அது மாறித்தான் கம்மூனிஸமும் சக்ஸஸ்புல்லா கொண்டுவரலாம் எப்ப மதத்த ஒழிக்கனும் முதலாளித்துவத்த ஒழிக்கனும் ஏகாதிபத்தியத்த ஒழிக்கனு யேசுவ ஒழிக்கனும் குறிப்பா யேசுவ மட்டும் ஒழிக்கனும் முகமது தீவீரவாதம் எல்லாம் இருக்கலாம் அத அப்புறமா ஒழிச்சிக்கிறலாம் ஏன்னா ஏகாதிபத்தியம் ஒழிஞ்சிட்டா தீவிரவாதா தன்னால
      ஒழிஞ்சுடும் ஒழிஞ்சிடும் குரான் வசனம் எல்லாம் அதுவா வன்முறை இல்லாத வசன புத்தகமா மாறிடும் அப்பிடினு அவுக நம்புறாக அதாவது மேற்க்கண்ட எல்லாத்தயும் ஒழுச்சு ஒரு லட்சிய எந்திரத்தப்போல உண்மையான் கம்மூனிஸ சோசலிஸத்த மலரச்செய்வோம் அப்பிடினு நினக்கிறார்கள் ,இவர்களின் மன உருதியை மெச்சலாம் இவர்களுடன் இணைந்து நிச்சயாமா போராடலாம் அதில் தப்பு இல்லை ஏன்னா நியாயத்துக்குதான போராடுறாக டி சி எஸ் காரன் சம்பளம் குடுக்கலனா சட்டய பிடிச்சு கேக்கும் உரிமை இருக்கு கேக்கலாம் தப்பு இல்லை ஆனா கம்மூனிஸம் மலர கி பி 3600 வரை காத்து இருக்க வேண்டும் அதுக்குள்ள வெல் செட்டில் ஆகுற மாறி கம்மூனிஸ்டுகளுக்கு ஒரு ஆபர் வந்தா தாராளமா போகலாம் தப்பு இல்ல என்ன போலி கம்மூனிஸ்டுனு சொல்லுவாங்க அந்த ஆபர டி சி எஸ் காரன் கூட குடுக்கலாம் ஏன் இப்பிடி சொல்லுறேன்னா அந்த மாறி ஆபர் கிடைச்சு போலி கம்மூனிஸ்டாகி போனவகதான் அதிகம்
      சரி விடுங்க, ரெம்பவும் பேசுற அப்பிடினு தென்றல் கோவப்படாம இருக்கனுமுனு கேட்டுக்கிறேன் தோழர் தென்றல் பாண்டியன் கேட்ட அதே கேள்விய கேக்குறேன் ஏன் வினவுல யேசுவ மட்டும் கேலி செய்யுறீக பாரிஸ்ல 12 பேர போட்டுத்தள்ளுனது மாறி பன்னமாட்டாகன்ற தைரியமா இருக்கட்டும், .இருக்கட்டும் ,அப்புறம் எனக்கு வினவின் எல்லா போராட்டங்களிலும் உடன்பாடே என்னா யேசு புத்தர் காந்தி போல மென்மையான மனிதர்தான் ஆனா சமூகத்துல தீமை நடக்குதுனு தெரிஞ்ச உடனே சாட்டய எடுக்கலயா அது போல நீங்க சாட்டய எடுக்குறதுல தப்பே இல்லை உங்க கூட இனைந்து போராடனுமுதான் நினைக்கிறேன் சந்தர்ப்பந்தாம் வாய்க்கல நன்றி வினவு நண்பர்களே அதுவும் டிசி எஸ் ஊழியர்களுக்கு உங்களிமன் போராட்டம் வெல்லட்டும்…

      • கம்யுனிசம் என்பது இலட்சிய எந்திரமா? யாரெல்லாம் கம்யுனிச சமூகத்திற்காக போராடுகிறார்கள்?

        ஜோசப் பயவுள தன் பின்னூட்டத்தில் கம்யுனிசம் குறித்த தனது பார்வைகளை வைத்திருந்தார். அதற்கான மறுமொழிகளைப் பார்த்துவிடுவோம்.

        கம்யுனிசம் என்பது இலட்சிய கார்னாட் எந்திரம் போன்றது என்று ஜோசப் சொல்லவருவதன் மூலமாக, ‘கேட்க நல்லாயிருக்கு, நடைமுறை சாத்தியமா?’ என்று கேட்கிறார். நாம் கேள்வியை மாற்றிப்போடுவோம்.

        5% முதலாளிகள் 95% தொழிலாளிகளை அடக்கிச் சுரண்டுவது இயந்திரவிதிப்படி Workdone on the system என்றால் 95% தொழிலாளிகள் 5% சுரண்டலை எதிர்த்து தங்களுக்கான சமூகத்தைப் படைத்துக்கொள்வது Workdone by the system. இது இயற்கைக்கு மாறான ஒன்றா? இரண்டுக்குமே வெப்பநிலை வேறுபாடு வர்க்கநிலை மாறுபாடு கறாராக இருக்கிறது.

        சோசலிச சமூகத்தில் நாம் இதைத்தான் செய்யப்போகிறோம். முதலாளித்துவ சர்வாதிகாரத்தை வீழ்த்தி பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிலைநாட்டுகிறோம். வர்க்க வேறுபாடுகளை தோற்றுவிக்கும் மூலதனங்களுக்கு எதிராக போராடுகிறோம். இதற்கு efficiency அதிகமாக இல்லையா என்பதற்கு இரண்டு பார்வைகள் மட்டுமே உண்டு. அது ஒருவர் இப்போராட்டத்தில் Source ஆக இருக்கிறாரா அல்லது Sink ஆக இருக்கிறாரா என்பதைப் பொறுத்தது. பார்வையாளர்களுக்கு இங்கே வேலை இல்லை. அவர்கள் தெரிந்தே ஆளும்வர்க்கத்தின் கைக்கூலிகளாக இருக்கிறார்கள்.

        ————————————————

        ஜோசப் சொல்வதன் படி கம்யுனிசத்திற்காக போராடுகிறவர்கள் இச்சமூகத்தை கிபி 3600படைப்பார்கள். அதற்குள் நமக்கு டாடாவிலே வேலை கிடைத்தால் பார்க்க வேண்டியதுதான் என்கிறார். வர்க்கவேறுபாடுகள் கூர்மையாக இருக்கும் இச்சமூகத்தில் வாழ்க்கைக்கான வசதிகள் சிலருக்கு கிடைக்கத்தான் செய்கின்றன. அது இலட்ச ரூபாய் சம்பளமோ, வெளிநாட்டு வேலையோ என்றிருக்கிறது. இழப்பதற்கு ஏதுமற்றவர்களுக்குத்தான் பொதுவுடமைச் சமூகம் என்பது தலையாயபிரச்சனையாக இருக்கிறது. இதை ஒரு எடுத்துக்காட்டு மூலம் பார்ப்போம்.

        தமிழ் ஹிந்துவில் கிரிக்கெட் விமர்சனம் தொடர்பான கட்டுரையை ஒன்றை வாசிக்க நேர்ந்தது. இசை, வணிகம், சுயமுன்னேற்றம், விளையாட்டு தொடர்பாக கட்டுரைகளை கவனித்துப்பாருங்கள். பத்திரிக்கையை ஆளும் வர்க்கம் எதற்காக எப்படி பயன்படுத்துகிறது என்று தெரியும். நிற்க. விமர்சனக் கட்டுரையாளர் ஒரு பார்வையை முன்வைத்திருந்தார்.
        ஆஸ்திரேலியாவுடனான நான்காவது டெஸ்டின் ஐந்தாம் நாளன்று இந்தியா டிரா செய்ய முயற்சிக்கக்கூடாது; வெற்றிய அடைய முயற்சி செய்ய வேண்டும் என்றார். ஏன் என்றால் ஏற்கனவே தொடரை இழந்து நிற்கும் இந்தியா 2-0 தோற்றாலும் 3-0 தோற்றாலும் ஒன்றுதான் என்றார்.

        ஒன்றுக்கும் ஒப்பேறாத பதினோறு லும்பன்கள் விளையாடும் கிரிக்கெட்டுக்கே தோற்றுப்போனாலும் வெற்றிக்கு விளையாட வேண்டும் என்றால் இந்த சமூகத்தை மோசமாக சுரண்டும் முதலாளித்துவத்தைப் எதிர்த்துப்போராடும் வாழ்க்கைக்காக வர்க்கப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் இல்லையா? அப்படி முன்னெடுப்பவர்கள் யார்? இழப்பதற்கு ஏதுமற்ற தொழிலாளிகளும் விவசாயிகளும் தான். போராடித் தோற்றால் போராட்டத்திற்கு முன்பிருந்த வாழ்க்கையும் போராட்டத்திற்கு பின்பிருந்த வாழ்க்கையும் நமக்கு மாறிவிடுவதில்லை. ஆனால் இலட்ச ரூபாய் சம்பாதிக்கிற வாய்ப்புள்ள வாழ்க்கையைப் பற்றுபவரும், 200பேரை மேய்க்கிறவர் மாடல் கொடு என்று கேட்பவரும் இந்த சமூகத்தில் எதைப் பிரதிபலிக்கிறார்கள்?

        மானை வேட்டையாடுகிற சிங்கங்களுக்கு மத்தியில் சிதறி விழும் மாமிசத்துணுக்குகளுக்காக காத்து நிற்கிற காக்கைகளுக்கும் அதுதான் வாழ்க்கை என்று கரைகிற இராமன்களுக்கும் கம்யுனிசம் ஏன் தேவை? பலியாகக் காத்திருக்கும் ஜோசப்போன்ற தேவ ஆட்டுக்குட்டிகள் பதில் சொல்ல வேண்டும்.

        ———————————–

        இயேசுவை கேலி செய்கிறார்கள் என்று கம்யுனிஸ்டுகளுக்கு எதிராக விசுவாசிகள் கேள்வி கேட்கிறார்கள் என்றால் ரோமானிய ஆளும்வர்க்கம் இயேசுவை சிலுவையில் அறைந்த பொழுது எந்த விசுவாசிகள் தட்டிக்கேட்டார்கள். கர்த்தரே நீர் என்னைக் கைவிட்டீரும் என்று இயேசு சிலுவையில் மரிப்பதற்கு முன்பாக சொன்னார் என்றால் இங்கு இயேசுவை கேலி செய்தது கிறித்தவமா? கம்யுனிஸ்டுகளா? இதில் எது கேலி?

        • அய்யோ எத்தனை டேஸ்,டேஸ் தென்றல் அப்ப்டியே புயலா மாறி என்னய எதோ ஏசிருக்காரு போல வழக்கம் போல வினவு டேஸ் போட்டு நீயே புல் அப் பன்னிக்கடானு விட்டுருச்சு 95 % தொழிலாளர்கள் நினைச்சா முசியாதா கம்மூனிசத்த கொண்டு வர அப்பிடினு கேக்குறாரு, மறைமுகமா கம்மூனிஸம் கார்னட்ஸ் எஞ்சினுதான் அப்பிடினு ஒத்துக்கிறார் 95% வேண்டாம்யா அட்லீஸ்ட் 5 % தொழிலாளர்களாவது சுரண்டலை எதிர்த்து கம்மூனிஸம் மலரச்செய்யனுமுனு நினைக்குறார்களா, ஏன் நினைக்கல 50 பேரு மட்டும் தனியா நிண்டு கத்திட்டு கிடக்கிக ,மத்தவங்க எல்லாம் பாட்டாளி வர்க்கம் தொழிலாளி வர்க்கம் இல்லயா அவுங்க எல்லாம் உங்க பின்னாடி வருவாகலா இல்லை இவிங்க எப்பவும் இப்பிடித்தான் கத்திட்டு சோஸ்லிசம் ,சம்தர்மம், முதலாளித்துவமுனு பேசுவாங்க நாம நம்ம பொழைப்ப பாப்போமுனு ஒதுங்கி ஓடிறுதாகலா தெரியல,

          • யோசேப்பு, டேஸ் எல்லாம் பத்திகளைப் பிரிப்பதற்காக கோடு போட்டு எழுதியதாகும். ஏசுவதற்காக அல்ல. வேண்டுமானால் ஏசுவிடம் கேட்டுப்பாருங்கள். விசயத்திற்குச் செல்வோம்.

            95% சதவீத தொழிலாளர்கள் 5% சதவீத முதலாளிகளை எதிர்த்துப் போராடுவது மறைமுக கார்னாட் இஞ்சினாக உங்களுக்குத் தெரிந்தால் 5% முதலாளிகள் 95% தொழிலாளிகளைச் சுரண்டுவது நேர்முக கார்னாட் இஞ்சினா? ஒன்று செயற்கையாக இருந்து மற்றொன்று இயற்கையாக இருக்க முடியுமா? ஏதாவது ஒரு வழிக்கு சீக்கிரம் வரவும்.

            இரண்டாவதாக இங்கு மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வாக மொட்டையடிப்பதிலிருந்து மருந்தீஸ்வரருக்கு மண் சோறு தின்பதுவரை பல உத்திகளை தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் சொல்வதைப் போல பத்து பத்தாக அல்ல தனித்தனியாக தீர்வைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களையெல்லாம் அணிதிரட்டி அரசியல்படுத்தி போராடுகிற பொழுது முதலாளித்துவமும் சும்மா இருக்காது. இங்கு சோசலிசம் வானத்திலிருந்து இறங்கிவருவதில்லை. முதலாளித்துவ சக்திகளுக்கு மத்தியில் தான் போராட்டங்களைக் கட்டியமைக்கிறோம். ஆக இங்கு நாம் போராட்டத்தை நடத்தி பின்னடைவு கண்டால் சமரசமாவதற்கும் பொறுக்கித் தின்பதற்கும் ஓடுவதற்கும் ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இதில் நீங்கள் எந்தப் பக்கம் என்பதை ஆணித்தரமாக கூறுங்கள்.

            தெலுங்கானாவில் நிலப்புரத்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் விவசாயிகளோ, நக்சல்பாரியின் புரட்சியில் புடம் போட்ட மக்களோ, முல்லைப் பெரியாரில் வாழ்வாதராத்திற்கு போராடிய மக்களோ தஞ்சையின் கீழ் தஞ்சை விவசாயிகளின் போராட்டமோ இன்றைய வெள்ளாற்று மக்களின் மணற்சுரண்டலுக்கு எதிரான போராட்டமோ “இவிங்க எப்பவும் இப்பிடித்தான் கத்திட்டு சோஸ்லிசம் ,சம்தர்மம், முதலாளித்துவமுனு பேசுவாங்க நாம நம்ம பொழைப்ப பாப்போமுனு ஒதுங்கி ஓடிறுதாகலா தெரியல” என்று சொல்வதில்லை. போராட்டத்தில் பங்கு பெற்று நேரடி அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

          • பிஜோ,
            // எத்தனை டேஸ்,டேஸ்//

            தென்றாலார் ஒரு chapter க்கும் மற்றதற்கும் இடையல் கோடு போடுவது அவரது வழக்கம். ஏதோ கண்களை மறைத்து விடும் என்பார்களே அது தான் உங்களுக்கு நடப்பது. அவரின் பின்னூட்டங்களில் வினவார் கோடு போடுவதற்கு அவசியமே இல்லை. ஏனென்றால் No loose-talk. இன்னொரு முக்கிய காரணம். அவர் முகமதியத்தைப்பற்றி politically correct ஆக மட்டுமே பேசுவார்.

      • பிஜோ,

        // *** வெல் செட்டில் ஆகுற மாறி கம்மூனிஸ்டுகளுக்கு ஒரு ஆபர் வந்தா தாராளமா போகலாம்***//

        முன்னனியில் போராட முன்வருபவர்களைக் கொச்சைப்படுத்தி எதை சாதிக்க போகிறீர்கள். நாமும் முன்னோடிகளுடன் சேர்ந்தால் தான் நமது கூட்டுப் பலம் கூடும். நண்பர்களின் எண்ணிக்கையில் தான் தலைமையின் சங்கத்தின் பலமும் பலவீனமும் இருக்கிறது. தலைமையைப்பற்றிய சந்தேகத்திலேயே காலத்தைக்கழிப்பதைவிட தலைவர்களுடன் களத்தில் இறங்கவேண்டும். கூட்டுத்தலைமையில் பங்குபெறவேண்டும். கொச்சைப்படுத்த மட்டும் செய்வது அருவருப்பானது.

  22. கற்றது கையளவு,

    உங்களது வாதத்தின் சாரமாக “நடைமுறையில் ஒரே ஒரு முழு கம்மியுனிச மாதிரி வடிவத்தை ஒரே ஒரு தொழிர்சாளையிலாவது வெற்றிகரமாக நடத்திக்காட்டுங்கள் நண்பரே.” என்று தொடர்ச்சியாக சொல்கிறீர்கள்.

    நீங்கள் மட்டும் அல்ல; படித்த மேன்மக்கள், நடுத்தரவர்க்கமும் இப்படித்தான் சொல்கிறார்கள். சான்றாக தனியார் மருத்துவமனையின் சுரண்டலுக்கு எதிராக போராடுகிறபொழுது நடுநிலை நீதியாளர்களின் கருத்துப்படி காசு இல்லையென்றால் கவர்மெண்டு ஆஸ்பத்திரிக்கு போகவேண்டியதுதானே இங்கு வந்து எதுக்கு கொடி போராட்டம் என்று திரியற என்று கேட்கிறார்கள்.

    அவர்களின் கருத்துப்படி நோயுள்ளவன் தன் தகுதிக்கேற்ற மருத்துவமனையைக் கட்டிக்கொள்வதுதான் தீர்வே தவிர அநியாயம் சுரண்டல் என்று போராடுவது தீர்வல்ல என்கிறார்கள். இது எத்தகைய மனவக்கிரம் என்பது உங்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன்.

    அதே மனவக்கிரத்தைத்தான் மனசாட்சியின்றி தொழிற்சாலை விசயத்திலும் கக்குகிறீர்கள். இங்கு தொழிலாளர்களின் உழைப்பே ஒரு முதலீடாக கருதப்படாமல் உழைப்பு கூலியாக சுரண்டப்படுவதை எதிர்த்துபோராடுகிற பொழுது நீங்கள் தொழிற்சாலை ஏற்படுத்தி இலாபம் இல்லாமல் நடத்தி உன் போராட்டத்தை நியாயப்படுத்து என்று சொல்கிறீர்கள். போராட்டத்தை முதலாளிகளுக்கு சார்பாக காயடிக்கும் பிழைப்புவாதிகளின் பேச்சு இது என்று உங்களுக்கு தெரியவில்லையா?

    என் உழைப்பு விற்பனைக்கு அல்ல என்பதன் ஊடாக நாம் முதலாளித்துவத்திற்கு எதிராக போராடுகிற பொழுது இத்துனை நூற்றாண்டுகளாக சுரண்டி வந்த கணக்குவழக்கை வட்டியும் முதலுமாக முதலாளிகள் பைசல் செய்வது தான் நியாயம். பிறகு தொழிற்சாலை ஆரம்பிப்பதா அல்லது தீம் பார்க் ஆரம்பிப்பதா என்பதை தொழிலாளர்கள் முடிவு செய்வார்கள் இல்லையா?

    இதற்கு பதில் சொல்லாமல் சொந்தமாக தொழில் தொடங்கு என்று சொன்னால் இதுவரை தொழிலாளர்கள் சொந்தமாக போட்ட உழைப்புக்கு என்ன பதில்?

    • தென்றல் அவர்களே,

      தொழிலாளிகளின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படவேண்டும் என்ற கருத்தில் உங்களோடு நான் 100% ஒன்றுபடுகிறேன்.

      அவரவர் உழைப்புக்கு ஏற்ப அவரவருக்கு நியாயமான ஊதியம் வழங்கப்பட வேண்டும். நான் மறுக்கவே இல்லை.

      உழைப்புக்கு ஏற்ற சரியான ஊதியம் என்று நிர்ணயிக்கப்பட்டால், பிரச்சினை தீர்ந்தது.
      நீங்கள் அவர்களின் உழைப்பை ஒரு முதலீடாக கருதுகிறீர்கள்.

      நீங்கள் தொழிலாளிகளின் உழைப்பை முதலீடாக கருதி ஊதியம் வழங்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். ஒரு தொழிலில் முதலீடு செய்தால் அந்த தொழிலில் இலாபம் நட்டம் இரண்டுக்கும் அவர் பொறுப்பேற்க வேண்டும். தொழிலில் இலாபம் குறையும் போது முதலீடு செய்பவருக்கு வருமானம் குறையும். தொழிலில் நட்டம் ஏற்பட்டால் அப்போது அவர்களின் உழைப்புக்கு என்ன பதில்?

      தொழிலில் இலாபம் ஏற்ற குறைவு ஏற்பட்டாலும் தொழிலாளிகளுக்கு வருமானம் சீராக தர வேண்டுமென்றால் இலாப பகிர்வு என்பதற்கு பதில் மாத சம்பளம் என்று வழங்குகிறார்கள்.

      பார்ப்பதற்கு முதலீடும், சம்பளமும் இரண்டு வெவ்வேறு துருவங்கள் மாதிரி தோன்றலாம். ஆனால் இதற்கு ஒரு தீர்வு உண்டு. தொழிலாளிகளின் குடும்ப செலவுகளுக்கு குறைந்த பட்ச மாத சம்பளம் வழங்கப்பட்டு, பின்னர் தொழிலின் இலாபம் அதிகமானால் அவர்களின் வேலை, திறமைக்கு ஏற்ப ஊக்க ஊதியம் வழங்கப்படலாம்.

      கம்மியுநிசத்தின் தியரியை நடைமுறையில் ஏதாவது ஒரு தொழிற்சாலையில் நடைமுறைபடுத்தினால் எங்களுக்கும் அதன் சாதக பாதகங்கள் தெரியும். வெறும் வாயிலேயே வடை சுட்டுக்கொண்டிருந்தால் பின் நாங்கள் எப்படி நம்புவது?

      • கற்றது கையளவு,

        உங்களின் பின்னூட்டம் மற்றொமொரு மோசடி. முதலும் சம்பளமும் ஒன்றல்ல. சான்றாக அம்பானிக்கு மூலதனம் எப்படி வந்தது? உழைப்பை கூலி என்று சுரண்டியதால் தான் வந்தது. இதுவரை நடந்த சுரண்டலுக்கு கணக்கு போட்டு காசை டேபிளில் வைத்துவிட்டு உங்கள் நியாயத்தை மேற்கொண்டு பொளங்கள். அதுவரை உங்கள் வாதங்கள் அனைத்தும் அயோக்கியத்தனமானவையே என்று உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

        நமது உழைப்பு சுரண்டலுக்கானதல்ல என்று சொல்லும் சோசலிச தொழில் கூட்டத்தை கட்டியமைப்பதில் நாம் என்றைக்கோ இறங்கிவிட்டோம். அதன் முதல்படிதான் தொழிற்சங்கம்! மற்றபடி மூலதனத்தின் முடைநாற்றத்தில் தொழிற்சாலையை ஆரம்பிப்பது கம்யுனிசம் அல்ல. ஏனெனில் இருக்கிற தொழிற்சாலைகள் எல்லாம் தொழிலாளிகளுடையது! ஒவ்வொன்றும் அவர்களின் இரத்தத்தால் உருவாக்கப்பட்டவை!

        பறிகொடுத்த குழந்தையை மீட்டெடுப்பதற்கு பதிலாக இன்னொரு குழந்தையை பெற்றுக்கொள் என்று மனவக்கிரம் பிடித்தவர்கள் தான் சொல்லமுடியும். ஏனெனில் இழப்பு என்பது அவர்களுடையது அல்லவே!

        \\கம்மியுநிசத்தின் தியரியை நடைமுறையில் ஏதாவது ஒரு தொழிற்சாலையில் நடைமுறைபடுத்தினால் எங்களுக்கும் அதன் சாதக பாதகங்கள் தெரியும். வெறும் வாயிலேயே வடை சுட்டுக்கொண்டிருந்தால் பின் நாங்கள் எப்படி நம்புவது?\\

        இதுவும் உங்கள் மற்றுமொரு வெறுக்கத்தக்க மோசடி. ஏனெனில் இப்படிப்பட்ட ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலையின் சாதகபாதகங்களை உங்களுக்கு சுட்டிக்காட்டி விளக்கிய பின்னூட்டத்திற்கு தாங்கள் பதிலே சொல்லவில்லை. வரலாறு நீங்கள் சொல்வதைத் தாண்டித்தான் வந்திருக்கிறது! அந்தப் பின்னூட்டத்தை இங்கு கிளிக் செய்து படியுங்கள் (ராபர்ட் ஓவனின் சோசலிச நடவடிக்கைகளின் தன்மைகள் https://www.vinavu.com/2014/08/28/hindu-spiritual-fair-experiences-5/#comment-180274). இப்பொழுதாவது பதில் சொல்வீர்களா என்று பார்ப்போம்.

        தத்துவத்தையையும் நடைமுறையையும் இணைத்துதான் கம்யுனிஸ்டுகள் எந்த விசயத்தையும் பரிசீலிக்கிறார்கள். வரும் சனிக்கிழமை லே ஆப்பிற்கு எதிராக நடைபெறும் கூட்டமும் இங்கிருந்துதான் ஆரம்பிக்கின்றன! ஆண்டவனையோ அரசையோ நம்பாத (உங்களது வார்த்தைகள் தான்) நமது தொழிலாளி வர்க்கம் ஆக்கப்பூர்வமாக தன்னம்பிக்கையுடன் தெருவில் இறங்கிப் போராடுகிறது! தொழிலாளர்களை அணியப்படுத்துகிறது! அரசியலை எடுத்துச் சொல்கிறது! தொழிற்சங்கத்தை கட்டுகிறது! தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துகிறது! மற்றவர்களை உங்களை என்னை தொழிலாளர்களுடன் ஐக்கியப்படுத்துகிறது! மூலதனத்திற்கு எதிராக போராடுகிறது! மாற்று அதிகார மன்றங்களை கட்டியமைக்கிறது! இவ்வளவு முயற்சிகளும் கம்யுனிசம் அல்லாது என்னவாம்? இதில் உங்களுக்கும் ஏதும் சம்பந்தமே இல்லாது போல ரயில் வந்தால் தொத்திக்கொள்வேன் என்று சொல்கிற மனப்பாங்குதான் இருக்கிறது!

        • வேலை போயிரும்னு பயம் இருக்கும் போதே வேலை செய்யாதவர்கள் , வேலை நிச்சயம் என்றானவுடன் எந்த வேலையும் செய்ய மாட்டார்கள் .

          பி எஸ் ஏன் எள் சர்வீசு எப்புடி ?

          போட்டி இல்லை என்றவுடன் முதலாளிகள் கூட பெஞ்சு தேய்ப்பார்கள்
          அம்பாசிடர் கார் , பஜாஜ் ஸ்கூடர்

          நாடு உருப்படாது

        • தென்றல்,

          இராபர்ட் ஓவன் பற்றிய சுட்டியை நான் முன்பு கவனிக்கவில்லை, மன்னிக்கவும், இப்போது தான் படித்தேன். அவரை பற்றிய மேலும் பல விவரங்களையும் மற்ற தளங்களில் இருந்து படித்து அறிந்தேன். நன்றி.

          இராபர்ட் ஓவன் மிகச்சிறந்த மனிதர், உன்னதமான கொடையாளி, தொழிலாளிகளின் நலன், அவர்களின் குடும்ப வளர்ச்சி குறித்து மிகுந்த அக்கறை கொண்டவர். அவரை பற்றி அறிய வைத்ததற்கு எனது நன்றிகள்.

          கூட்டுறவு முறையில் தொழிலாளிகளின் உழைப்புக்கு ஏற்ற உரிய ஊதியம், அவரது சோதனை முயற்சி சமுதாயத்தில் குடிப்பழக்கத்தை ஒழித்தது இதெல்லாம் மிகவும் பாராட்டத்தக்க நல்ல விடயங்கள்.

          அவரது வாழ்க்கை வரலாற்றை பார்த்தால் அவர் ஆரம்ப காலத்தில் புதிய லானார்க் மில்லின் அதிபரின் மகளை காதலித்து மணந்து பின்னர் அந்த மில்லின் கூட்டு முதலாளி ஆனார். அந்த மில்லின் அருகில் கிளைடு நதியின் அருவி இருந்ததால் மில்லின் மின்சாரத்தேவைகளை அருவியின் சக்தியின் மூலம் பெற்றனர். இந்த வகை வாய்ப்பு, இலவச மின்சாரம், எல்லா இடங்களிலும் கிடைக்காது.

          தொழிலாளிகளின் வாழ்க்கை முறையை உயர்த்தியதற்கு அவரக்கு நான் தலைவணங்குகிறேன்.

          இப்போது சில கேள்விகள்.

          ஓவன் இயல்பாகவே ஒரு கொடையாளியாக இருந்ததினால் அவரது சோஷலிச சோதனை முறையை அவரால் ஆரம்பிக்க முடிந்தது. ஆனால் ஏன் அவரது முயற்சிகள் நீண்ட நாள் வெற்றியை பெறவில்லை?

          ஆர்பிஸ்டனிலும், பின்னர் நியு ஹார்மொனி, இன்டியானாவிலும் அவர் ஆரம்பித்த சோஷலிச சோதனை முயற்சி இரண்டு வருடங்களில் தோல்வியை தழுவியது ஏன்? “a heterogeneous collection of radicals, enthusiastic devotees to principle, honest latitudinarians, and lazy theorists, with a sprinkling of unprincipled sharpers thrown in.” என்று இந்த முயற்சியின் தோல்வி குறித்து ஓவனின் மகன் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது, தான் அதிகம் சாதிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோர் மனத்திலும் உள்ளது. இந்த ஆசை தான் மனிதனை மேலும் மேலும் அதிகம் சாதிக்க தூண்டுகிறது. இந்த ஆசை பேராசையாக, வெறியாக மாறினால் அது மற்றவரிடமிருந்து திருட, சுரண்ட தூண்டுகிறது. அதே சமயம் நீ எதற்கும் ஆசைப்பட கூடாது. உனக்கு கொடுத்தது இவ்வளவு தான் என்று கட்டுப்பாடு விதித்தால் அது விலங்குகளை கூண்டில் அடிப்பதை போல மனித ஆசைகளை கூண்டுக்குள் வைத்து அடைப்பது போலாகும். நீண்ட நாள் இப்படி மனிதர்களை வைத்திருக்க முடியாது. ஓவனின் சோதனை முயற்சிகள் பின்னர் தோல்வியை அடைந்ததற்கு இது தான் காரணம் என்று நான் நினைக்கிறேன்.

          இந்த சோதனைகளை அடுத்து அயர்லாந்தில் ராலஹைனிலும், ஹாம்ப்ஷைரின் டைதரிலும் நடந்த சோசலிச சோதனை முயற்சிகளும் தோல்வியையே தழுவின. இந்த தோல்விகள் நமக்கு என்ன கற்று தருகிறது என்று ஆராய வேண்டும்.

          ஒரு தொழிற்சாலையின் தொழிலாளிகளுக்கு அவர்களின் உழைப்புக்கு ஏற்ற சரியான ஊதியம், ஊக்க தொகைகள் வழங்கப்பட வேண்டும் என்பதிலும், கூட்டுறவு முயற்சிகளையும் நான் வரவேற்கவே செய்கிறேன். என்னை கம்மியுநிசத்தின் எதிரியாக சித்தரிக்க முயல வேண்டாம். ஜனநாயகம், கம்மியுனிசம், சோசலிசம் இவற்றில் உள்ள நல்ல விடயங்களை சேர்த்து, குறைகளை களைந்து, ஒரு நல்ல, தோல்வியை தழுவாத ஒரு மாடலை எங்களுக்கு அளியுங்கள் என்று தான் நான் கேட்கிறேன்.

          • \\அவரது வாழ்க்கை வரலாற்றை பார்த்தால் அவர் ஆரம்ப காலத்தில் புதிய லானார்க் மில்லின் அதிபரின் மகளை காதலித்து மணந்து பின்னர் அந்த மில்லின் கூட்டு முதலாளி ஆனார். அந்த மில்லின் அருகில் கிளைடு நதியின் அருவி இருந்ததால் மில்லின் மின்சாரத்தேவைகளை அருவியின் சக்தியின் மூலம் பெற்றனர். இந்த வகை வாய்ப்பு, இலவச மின்சாரம், எல்லா இடங்களிலும் கிடைக்காது.\\

            கற்றது கையளவு, முதலாளிகளுக்கு மூலதனம் எப்படி வந்தது என்ற கேள்வி கம்யுனிஸ்டுகள் கேட்கிற முதன்மையான கேள்வி. உங்களின் பதில் என்ன சொல்கிறதென்றால் ராபர் ஓவன் இன்னொரு முதலாளியின் மகளைக் காதலித்தார். அதனால் வந்தது என்று சொல்வீர்கள் போல் இருக்கிறது. ராபார் ஓவனுக்கு மூலதனம் என்பது காதலால் வந்தது என்றால் ராபார்ட் ஓவனின் மாமனாருக்கு மூலதனம் உபரியால், உழைப்புச் சுரண்டலால் தான் வந்தது. சமூகவிஞ்ஞானத்தில் உபரி, மூலதனம் போன்றவற்றிற்கு எல்லாம் காதல் காரணம் கிடையாது. வழிவழியாக வரும் பரம்பரை வாரிசுரிமை, சமூகத்தை கேடாக நசுக்கிற சொத்தை மூலதனத்தை பாதுகாக்கிறது என்பதுதான் கறாராக இங்கு புரிந்துகொள்ளவேண்டியது. இப்படிப்பட்ட பரம்பரை வாரிசுரிமை சொத்துகள் கம்யுனிச சமூகத்தில் கிடையாது.

            இன்றைய உலகத்தின் மொத்த சொத்துக்கள் 5% பணக்காரர்கள் கையில் இருக்கிற பொழுது 95% மக்கள் ஏழைகளாகத்தான் இருக்கிறார்கள். இது இயற்கையானதா? 95% மக்கள் சோம்பேறிகள், உழைக்கமுடியாதவர்கள் என்றும் அறிவுஜிவிகளின் நக்கத்தனமான பிரச்சாரமும் இங்கு எளிதில் அடிபட்டு போகிறது அல்லவா.

            \\ ஓவன் இயல்பாகவே ஒரு கொடையாளியாக இருந்ததினால் அவரது சோஷலிச சோதனை முறையை அவரால் ஆரம்பிக்க முடிந்தது. ஆனால் ஏன் அவரது முயற்சிகள் நீண்ட நாள் வெற்றியை பெறவில்லை?\\

            ஓவன் போன்ற முதலாளிகள் கூட கொடையாளியாக இருக்கமுடியும்; ஆனால் மூலதனமும் முதலாளித்துவமும் தீங்கானது என்பதை அறைந்து நிரூபிக்கிறது ஓவனின் வாழ்க்கை.மதங்கள் சுட்டுகிற தர்மம், தானம் என்பது எத்தகைய சுரண்டலான அமைப்பு அது முதலாளித்துவத்தைத்தான் பாதுகாக்கும்; அது உழைப்பாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு அல்ல என்பதும் இங்கு விளங்கும்.

            \\ ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது, தான் அதிகம் சாதிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோர் மனத்திலும் உள்ளது. இந்த ஆசை தான் மனிதனை மேலும் மேலும் அதிகம் சாதிக்க தூண்டுகிறது. இந்த ஆசை பேராசையாக, வெறியாக மாறினால் அது மற்றவரிடமிருந்து திருட, சுரண்ட தூண்டுகிறது.\\

            இதுவும் வழைமையான கேடுகெட்ட அவதூறு பிரச்சாரம் தான். உங்கள் கருத்துப்படியே வந்தாலும் 5% பேரிடம் தானே உலகின் மொத்த சொத்துக்களும் இருக்கிறது. அப்படியானால் உலகின் 95% மக்கள் ஆசையே படாதவர்களா? நான் மேலே கூறியுள்ளது படி 95% மக்கள் சோம்பேறிகள், உழைக்கமுடியாதவர்கள் என்றும் அறிவுஜிவிகளின் பிரச்சாரம் இங்கு ஆசையைச் சுட்டிக்காட்டுவதன் மூலமாக எளிதில் அம்பலப்பட்டு போகிறது அல்லவா.

            \\அதே சமயம் நீ எதற்கும் ஆசைப்பட கூடாது. உனக்கு கொடுத்தது இவ்வளவு தான் என்று கட்டுப்பாடு விதித்தால் அது விலங்குகளை கூண்டில் அடிப்பதை போல மனித ஆசைகளை கூண்டுக்குள் வைத்து அடைப்பது போலாகும். நீண்ட நாள் இப்படி மனிதர்களை வைத்திருக்க முடியாது. ஓவனின் சோதனை முயற்சிகள் பின்னர் தோல்வியை அடைந்ததற்கு இது தான் காரணம் என்று நான் நினைக்கிறேன்.\\

            இது உங்கள் சொந்தத் தயாரிப்பு. ஆசைப்படக்கூடாது என்று பிரச்சாரம் செய்வது மதங்களாகும். இதற்கும் சோசலிசத்திற்கும் கம்யுனிசத்திற்கும் என்ன சம்பந்தம்? ஒரு நல்ல முதலாளியே பேராசைப்படாமல் இருந்தாலும் கூட உற்பத்தி சாதனங்கள் பெருகிற பொழுது மூலதனத்தின் மீதான முரண்பாடு எழத்தான் செய்யும். நிலப்புரத்துவத்திலிருந்து முதலாளித்துவம் எப்படி வந்தது? இது தவிர்க்க இயலாது. இன்றைய முதலாளி-பாட்டாளி என்று நிற்கிற முரண்பாட்டிற்கான திசையை நாங்கள் மாற்றுகிற பொழுது மத நிறுவனங்கள் முதற்கொண்டு தாங்கள் வரை நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள். தனிமனித பேராசையை ஒழிக்க இயலாது என்று சொல்லிவிட்டு கம்யுனிசம் ஆசையை அடக்குகிறது என்று பொய்ப்பிரச்சாரம் செய்கிறீர்கள். உழைப்பாளர்களின் உழைப்பு விற்பனை பண்டம் அல்ல என்று நிறுவுகிற இவ்வுலகின் பெரும்பான்மைத் தொழிலாளர்களின் ஆசையை கண்டுகொள்ளாமல் முதலாளிகளின் முதலுக்கு மோசம் வருகிற பொழுது மட்டும் ஆசை இயற்கையானது என்கிறீர்களே அப்படியானால் உழைப்பாளிகளின் ஆசை ஆசையில் வராதா? ஆகையால் மதப்பூச்சுகளை கொண்டு வந்து அப்பாதீர்கள். இதனால் முதலாளித்துவ அம்மணத்தை எவ்விதத்திலும் மறைக்க இயலாது.

    • தென்றல்,

      கொஞ்சம் ப்ராக்டிகலாக யோசிக்கலாம்.

      ஒரு மளிகை கடை வைத்திருக்கும் அண்ணாச்சியிடம் அந்த மளிகை கடையில் வேலை செய்யும் தொழிலாளிக்கு இலாபத்தில் பங்கு தருகிறாரா? ஒரு தேனீர் கடை வைத்திருப்பவர் அந்த கடையில் வேலை செய்யும் பையனுக்கு அந்த கடையின் இலாபத்தில் பங்கு கொடுப்பாரா? நாம் கேட்டால் அவர் தந்து விடுவாரா?

      இலாபத்தில் பங்கு என்றால் அவர்கள் தர மாட்டார்கள். ஆனால் திறமையாக வேலை செய்பவர்களுக்கு ஊக்க தொகை அளியுங்கள் என்றால் அவர்கள் ஒத்துக்கொள்வார்கள். நான் இதற்கு முன்பு 200 பேர் கொண்ட குழுவிற்கு மேலாளாராக பணிபுரிந்திருக்கிறேன். எனது சக மேலாலாளர்கள் அவர்களின் குழு உறுப்பினர்களை கத்தி கூப்பாடு போட்டு வேலை வாங்குவார்கள். எனக்கு அதில் விருப்பமில்லாமல் எனது குழுவிடம், “நீங்கள் அதிகம் சம்பாதிக்க, உங்கள் குடும்பம் மேலும் வளமாக வாழ விரும்பினால், நாம் அனைவரும் ஒருங்கிணைந்து வேலை செய்வோம் என்று ஊக்க தொகை முறையை கடைபிடித்தேன், எனது குழுவினரும் அதனால் பயனடைந்தனர். வாடிக்கையாளர்களிடம் கனிவாக பேசுவது, குழு வெற்றி மனப்பான்மையை வளர்த்தது, குழுவில் அதிக திறமையாக வேலை செய்தவர்களை ஊக்குவித்தது (ஊக்க தொகை, சிறந்த குழு பரிசு, சிறந்த தனித்திறன் பரிசு) என்று பல்வேறு நடவடிக்கைகளை செய்ததால் எனது குழுவினர் இந்திய அளவில் சிறந்த குழுவினராக திகழ்ந்தனர். எனது குழுவினர் அதிக இலாபத்தை ஈட்டியதால் அவர்களுக்கு உரிய அதிக அளவு வருமானத்தை ஊக்கத்தொகைகளை நிறுவனத்திலிருந்து என்னால் பெற முடிந்தது. அனைவருக்கும் ஒரே அளவு சம்பளம், இதற்கு மேல் சம்பாதிக்க இயலாது என்று அவர்களை அடக்கினால் அவர்களின் திறமை வளராது, மழுங்கியே போகும்.

      Incentives, Recognition for Good talent will ensure Good Performances from the team.
      Fixed Income will make them sulk that they are treated like slaves.
      Without Competitive spirit, the urge to succeed fades.

      இராபர்ட் ஓவன் போல தொழிலுக்கு முதல் போட்டவருக்கு இலாபத்தில் ஐந்து சதவீதம் தான் தரப்படும் என்றால் அவர்கள் ஏன் அந்த முதலை தொழில் போட வேண்டும், அதனை வங்கியில் போட்டாலே அதனை விட அதிக இலாபம் கிட்டுமே?

      • அண்ணாச்சி கடையும் டீக்கடையும்- பிரச்சனை என்ன? தீர்வு என்ன?
        ——————————————————————

        To கற்றது கையளவு

        \\ ஒரு மளிகை கடை வைத்திருக்கும் அண்ணாச்சியிடம் அந்த மளிகை கடையில் வேலை செய்யும் தொழிலாளிக்கு இலாபத்தில் பங்கு தருகிறாரா? ஒரு தேனீர் கடை வைத்திருப்பவர் அந்த கடையில் வேலை செய்யும் பையனுக்கு அந்த கடையின் இலாபத்தில் பங்கு கொடுப்பாரா? நாம் கேட்டால் அவர் தந்து விடுவாரா?\\

        பிராக்டிலான பதிலையே சொல்லிவிடுவோம். சுரண்டுபவன் ஒருவனாக இருந்து சுரண்டப்படுபவன் ஒருபவராக அடையாளம் கண்டால் இலாபத்தை பெறுவதில் பெரிய போராட்டங்கள் தேவையில்லை. ஆனால் இங்கு டீக்கடை மற்றும் பலசரக்கு கடை தொழிலாளி மட்டும் சுரண்டப்படவில்லை. அண்ணாச்சியும் சுரண்டப்படுகிறார். அண்ணாச்சிக்கு மேலே சமூக-பொருளாதார கட்டுமானங்கள் மிகவும் வலுவாக சுரண்டிக்கொண்டிருக்கிறது.

        டாடாவிற்கு மேலே சுரண்டல் அமைப்பு ஏதாவது உண்டா? அப்படிப்பட்ட மேற்கட்டுமானத்தை உடைக்காமல் அண்ணாச்சியை எப்படி முதலாளியாக கருத முடியும்? சான்றாக அண்ணாச்சிக்கு மூலப்பொருட்கள் எல்லாம் பெரிய பெரிய முதலாளிகளின் தொழிற்சாலைகளில் இருந்துதான் வருகிறது. டீக்கடை முதலாளியோ ரத்தன் டாடாவின் டீ எஸ்டேட்டிலிருந்துதான் தேயிலை வாங்க வேண்டும். அதிமுக மாதவரம் அமைச்சர் 2000கோடி கொள்ளையடித்த தண்ணீர் கலந்த பாலைத்தான் அதிக காசுகொடுத்து வாங்க வேண்டும். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அண்ணாச்சி முதலாளித்துவம் என்றும் டீக்கடை முதலாளித்துவம் என்றும் பேசுவது எனக்கு வக்கிரத்திலும் வக்கிரமாக தெரிகிறது.

        ஆக பெருமுதலாளிகளையும் இவர்களுக்குச் சார்பான ஆளும் வர்க்கத்தையும் தகர்த்தால் தான் அதாவது கொள்ளியை உருவினால் தான் கொதி முதலில் அடங்கும். பிறகு என்ன வேண்டுமானால் செய்யலாம்.

        அப்படியானால் அண்ணாச்சியிடம் கூலி வேலை பார்க்கிற தொழிலாளிகளுக்கு தீர்வு என்ன? சோசலிச சமூகத்தில் அண்ணாச்சிகளுக்கும் டீக்கடை முதலாளிகளுக்கும் தீர்வு என்ன?

        லெனினின் ‘கூட்டுறவு பற்றி’ புத்தகத்தில் இருந்து சில பார்வை.

        சோவியத்தில் சோசலிசப் புரட்சி ஆரம்பித்த காலகட்டத்தில் மொத்தம் ஐந்து சமூகப் பொருளாதார வடிவங்கள் இருந்தன.

        1. சோசலிஸ்ட் துறை: நாட்டுடைமையாக்கப்பட்ட அரசுக்குச் சொந்தமான தொழில்துறை, போக்குவரத்து, வர்த்தகம், வங்கிகள், தொலைத்தொடர்பு, கூட்டுறவு ஸ்தாபனங்கள், கிராமங்களில் கூட்டுப்பண்ணைகள்.

        2. சிறு அளவான பண்ட உற்பத்தி: சொந்த உழைப்பை பயன்படுத்திக்கொண்டு சந்தையுடன் இணைந்திருக்கிற விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள். மற்றவர்களை வேலைக்கு வைத்துக்கொள்ளாத கைவினை கலைஞர்கள்.

        3. தனியார் முதலாளித்துவத் துறை: கூலியுழைப்பை பயன்படுத்துகிற குலாக்குகள், சிறு தொழில் நிறுவனங்களின் உடமையாளர்கள், தனியாக வியாபாரம் செய்பவர்கள்.

        4. தந்தை வழித்துறை. விவசாயம் சார்ந்த இயற்கைப்பொருளாதாரம். வழிவழியாக செய்துவருகிற வியாபாரம்.

        5. அரசு முதலாளித்துவத் துறை: அரசிடமிருந்து முதலாளிகள் குத்தகை பெற்று நடத்துகிற் தொழில்கள்,

        இப்பொழுது அண்ணாச்சி மற்றும் டீக்கடையை எந்த சமூக-பொருளாதார வடிவத்தில் நிறுத்தலாம்?

        அதற்கு முன்பாக இந்தியாவில் நடந்த பிரச்சனையைப் பார்ப்போம்.
        வால்மார்ட் உள்ளே வந்தால் சிறு தொழில்வணிகம் பாதிக்கப்படும் என்று போராடினோம். கற்றது கையளவு போன்றவர்கள் அந்தகாலத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்றால் அவர் சொல்வது படியே 200 தொழிலாளர்களை பிழிகிற கங்காணி வேலை பார்த்துகொண்டிருந்தார்!

        இதுதவிர இந்திய அறிவுசீவிகள் வால்மார்ட்டிற்கு எதிராக மூச்சுவிடாத நிலைமைதான் இருந்தது.
        ரிலையன்ஸ் பிரஸ்சும் ஒட்டுமொத்தமாக மக்களைச் சுரண்டுகிற பொழுது ஜெயமோகன் போன்ற இலக்கிய கைக்கூலிகள் போராட்டத்தைக் கூட்டிக்கொடுக்கும் மாமாக்களாக இருந்தார்கள். இந்த இருசுரண்டலின் வடிவங்கள் முறையே மறுகாலனியாதிக்கம் மற்றும் தரகு முதலாளித்துவம் ஆகும். இதை இரண்டையும் முறியடிக்கிற பொழுது அண்ணாச்சி மற்றும் டீக்கடைகளின் பாதி பிரச்சனை தீர்ந்துவிடுகிறது.

        இப்பொழுது கூலியுழைப்பை தடுத்து நிறுத்தி எப்படி உழைப்பவனுக்கு அதிகாரத்தை நிறுத்துவது? அண்ணாச்சி கடையையும், டீக்கடையையும் சிறு பண்ட உற்பத்தியில் நிலைநிறுத்துவோமே! ஒரு உதாரணத்திற்காக. இவ்விரு தொழில் செய்பவர்களையும் கூட்டுறவு ஸ்தாபனங்களாக ஒன்றிணைப்பது சோசலிசத்தின் கடமைகளுள் ஒன்று. இங்கு மனித உழைப்பை கூலியாக சுரண்டுவதைத் தடுத்து பல மளிகைக்கடை யுனிட்டுகளையும், பல டீக்கடை யுனிட்டுகளையும் கூட்டுறவு கழகங்களாக நிர்மாணிக்க வேண்டும். அரசுத் துறையின் நிர்வாகத்துறையின் மிகப்பெரும் கேண்டீன்கள், அல்லது மக்கள் நல அரசுக்கு தேவையான சரவணா சூப்பர் ஸ்டோர்கள் இப்படித்தான் உருவாகும். இவர்களுக்கு தேவையான மூலப்பொருட்கள், இயந்திரங்கள், வசதிகள் அனைத்தையும் சோசலிச அரசு செய்துகொடுக்கும்.

        இங்கு வேலை பார்க்கும் தொழிலாளி முன்னைப்போல அண்ணாச்சியிடம் கைகட்டி நிற்பவரும் அல்ல; அண்ணாச்சியும் சுரண்டப்படுபவரும் அல்லர்; மேலும் அண்ணாச்சி நிர்வாகக் குழுவில் தொழிலாளர்களை அடக்குபவராக இருக்கமாட்டார். ஏனெனில் அண்ணாச்சியின் பங்குபெற்றிருக்கிற கூட்டுறவு சிறப்பான உற்பத்தியை அளித்தால் தான் அண்ணாச்சிக்கு பலன் என்பதோடு அவர் முதலாளிகளால் இனியும் சுரண்டப்படமுடியாதவராக இருக்க முடியும். இவ்விதம் அண்ணாச்சி, தொழிலாளிகள், டீக்கடை மாஸ்டர் அவரின் தொழிலாளிகள் யாருடைய உழைப்பும் சுரண்டப்படாமல் கூட்டுறவு ஒரு திடப்பொருளாக சோசலிச சமூகத்தில் முன் நிற்கும். இவர்களின் வளர்ச்சியும் அபரிவிதமாக இருக்கும். இப்படித்தான் இவர்களின் உழைப்பு பங்கிடப்படுகிறது.

        இது நியாயம் தானே!

      • \\ இலாபத்தில் பங்கு என்றால் அவர்கள் தர மாட்டார்கள். ஆனால் திறமையாக வேலை செய்பவர்களுக்கு ஊக்க தொகை அளியுங்கள் என்றால் அவர்கள் ஒத்துக்கொள்வார்கள்.\\

        உழைப்பில் இலாபத்தில் அண்ணாச்சியும் டீக்கடைக்காரர்களும் அவரின் தொழிலாளிகளும் எப்படி பங்கு கொள்கிறார்கள் அதன் வடிவம் என்ன என்பதைச் சொல்லிவிட்டேன். வெறும் ஊக்கத் தொகை என்பது மோசடி என்பது உங்களுக்குப் புரிய வேண்டிய அவசியமில்லை. இங்குள்ள வாசகர்கள் உங்களைப்போன்ற வர்க்கத்தினர் எவ்விதம் ஊக்கத் தொகை என்பதன் பெயரில் தங்களின் சுரண்டலை முதலாளித்துவ விசுவாசமாக வெளிப்படுத்துகின்றனர் என்பதைத் தெரிந்துகொள்ளட்டும். அதற்காகத்தான் இந்த விவாதம்.

        உங்களது வேலை பற்றி சொல்லியிருந்தீர்கள். கத்தி கூச்சல் போடுகிற மேலாளர்களால் தொழிலாளர்கள் தங்கள் அரசியலை எளிதில் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் நைச்சியமாக கனிவு, ஊக்கத்தொகை என்று சொல்கிற கங்காணிகள் வரலாறு முழுவதுமே இருந்திருக்கிறார்கள். சான்றாக தேயிலைத் தோட்டத்திற்கு அடிமைகள் காலனி ஆட்சிக்காலத்தில் கனிவாக பேசியும் கடன் கொடுத்தும், அட்வான்ஸ் கொடுத்தும் அனுப்பபட்டு அவர்களது உழைப்பு சுரண்டப்பட்டது. இதே வடிவத்தை அலங்கரித்துச் சொன்னால் அதன் நாற்றம் போய்விடுமா என்ன? உங்களது திறமை அயாரத உழைப்பு அனைத்தும் முதலாளிகளுக்கு தரகு வேலை பார்க்கத்தான் பயன்படுகிறது. இதில் வேறு வடிவங்களே கிடையாது.

      • \\நாம் அனைவரும் ஒருங்கிணைந்து வேலை செய்வோம் என்று ஊக்க தொகை முறையை கடைபிடித்தேன், எனது குழுவினரும் அதனால் பயனடைந்தனர். வாடிக்கையாளர்களிடம் கனிவாக பேசுவது, குழு வெற்றி மனப்பான்மையை வளர்த்தது, குழுவில் அதிக திறமையாக வேலை செய்தவர்களை ஊக்குவித்தது (ஊக்க தொகை, சிறந்த குழு பரிசு, சிறந்த தனித்திறன் பரிசு) என்று பல்வேறு நடவடிக்கைகளை செய்ததால் எனது குழுவினர் இந்திய அளவில் சிறந்த குழுவினராக திகழ்ந்தனர். எனது குழுவினர் அதிக இலாபத்தை ஈட்டியதால் அவர்களுக்கு உரிய அதிக அளவு வருமானத்தை ஊக்கத்தொகைகளை நிறுவனத்திலிருந்து என்னால் பெற முடிந்தது.\\

        முதலாளித்துவ நாட்டிலேயே கூட தொழிலாளர் கம்பனி நலச்சட்டங்களின் படி போனஸ் என்பது இத்துணை சதவீதம் என்று வரையறுத்துத் தரப்படவேண்டும். எல்லா நாடுகளிலும் தொழிலாளர்கள் நலச்சங்கங்கள் இதற்கு உயிரைக் கொடுத்துப்போராடியிருக்கின்றன.

        நியாயப்படி உங்களது கம்பெனியில் பணிப்பாதுகாப்பு, பிஎப், ஓய்வூதியம், போனஸ், மருத்துவ வசதிகள், வேலை நேரம் அனைத்தும் கறாராக வழங்கப்படவேண்டும். இதெல்லாம் இல்லாமல் ஊக்கத்தொகை என்று பேச்சுவார்த்தை ரொட்டித்துண்டை வீசி எறிவதையே ஏன் சாதனையாக சொல்கிறீர்கள்?

        உங்கள் முதலாளிகளிடையே கங்காணிகளான நீங்கள் தொழிலாளர்களுக்கு முன்னிலையில் என்றைக்காவது பேச்சுவார்த்தை நடத்தீனீர்களா? இது குறித்த வெள்ளை அறிக்கையை தொழிலாளர் நலச் சட்டங்களின் கீழ் வெளியிட இயலுமா?

        \\அனைவருக்கும் ஒரே அளவு சம்பளம், இதற்கு மேல் சம்பாதிக்க இயலாது என்று அவர்களை அடக்கினால் அவர்களின் திறமை வளராது, மழுங்கியே போகும்.\\

        அனைவருக்கும் ஒரே அளவு சம்பளம் என்பதும் உழைப்புக்கேற்ற ஊதியம் என்பதும் முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது அல்லவா? இப்படியொரு மோசமான அருவெறுப்பு பிரச்சாரம் உங்களுக்கு எதற்காக?

        முதல் பொய்யே கழன்றுவிட்டால் பணித்திறன் குன்றும் என்ற வாதத்திற்கு எப்படி முகம் கொடுப்பது? மழுங்கியே போகும் என்றால் என்ன? ஆகையால் வேறு எதாவது சிந்தித்து பொய் சொல்லவும்.

        ——————————————————

        குழு பரிசு, தனி நபர் பரிசு என்று சொன்னீர்கள் அல்லவா? இதெல்லாம் சோசலிச சமூகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவை. Order of Red banner of Labour என்றால் என்ன? அது ஏன்? எதற்காக தரப்படுகிறது? ஒரே தொழிலாளி ஒரே கூட்டுறவு எத்துணை முறை இந்தவிருதை வாங்கியிருக்கிறார்கள் என்பதை படித்து தெரிந்துகொண்டு என்ன படித்தீர்கள் என்பதை மறக்காமல் எழுதுங்கள்.

        • தென்றல்,

          குழு பரிசு, தனி நபர் பரிசு இவை சோஷலிச சமூகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவை என்றால் அதை நான் பயன்படுத்தக்கூடாது என்று அர்த்தம் இல்லையே, நல்ல விடயங்கள் எங்கிருந்தாலும் அதனை பின்பற்றுவதில் தவறில்லையே.

          உழைப்புக்கேற்ற ஊதியம் – ஒரே நிறுவனத்தில் ஒரே அளவில் இருக்கும் இரண்டு தொழிலாளிகளில் அதிக திறமையுடன், அதிக ஆர்வமுடன், நிறுவனத்திற்கு அதிக வருமானம் ஈட்ட வழி செய்யும் ஒருவருக்கு மற்றவரை விட அதிக ஊதியம் கொடுக்கலாம் என்று தானே கோருகிறேன். இதில் என்ன அருவருக்க தக்கது உள்ளது என்று சொல்கிறீர்கள்? குழு பரிசு, தனி நபர் பரிசு என்பதை என் குழுவிடம் நான் பயன்படுத்தும்போது நீங்கள் என்னை கண்காணி என்கிறீர்கள், ரொட்டித்துண்டை வீசிஎறிகிறேன் என்கிறீர்கள்.

          தற்போதைய கார்பரேட் உலகத்தில் ஊழியர்களை பிழிந்து இலாபம் சம்பாதிக்கிறார்கள் முதலாளிகள். இல்லை என்று மறுக்கவும் இல்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக நாட்டை தலைகீழாக ஒரேயடியாக மாற்ற முடியாது. படிப்படியாக தான் மாற்றத்தை கொண்டு வர முடியும்.

          தற்போதைய முதலாளித்துவ சமுதாயத்தில் சோஷலிச தொழிற்சாலையை உருவாக்கவே முடியாது என்று சொல்வதை விட, அப்படி உருவாக்குவதற்கு என்ன வழிமுறை உள்ளது என்று யோசிக்கலாம் அல்லவா?

          சோஷலிச சமுதாயத்தில் மூலப்பொருள்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிய விலையில் கிடைக்கும் என்கிறீர்கள். அது வரை சோஷலிச தொழிற்சாலையை உருவாக்கும் முயற்சியை நிறுத்தி வைப்பீர்களா, இல்லை, இராபர்ட் ஓவன் போன்ற ஒரு முயற்சியை மேற்கொள்வீர்களா?

          ஒரு நீண்ட கால குறிக்கோள் என்று ஒன்று இருக்குமானால் அதற்கு படிப்படியாக சிறிய குறிக்கோள்களாக பிரித்து ஒவ்வொரு படியாக செயல்படுத்துவது தானே சரியான வழியாக இருக்கும்? உங்கள் ஊரில் சோஷலிச தொழிற்சாலை உருவாகுவதற்கு நீங்கள் என்ன எதிர்பார்கிறீர்கள்? உலகம் முழுக்க சோஷலிச சமுதாயம் ஆன பின்பு தான் இதனை உருவாக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? இல்லை, முதல் படியாக, இப்போதும் இருக்கும் சமுதாயத்தில், தற்போதைய நிலையில் இதனை எப்படி உருவாக்க முடியும் என்று யோசிப்பீர்களா?

  23. கற்றது கையளவு அவர்களே,

    \\எதற்கு டிசிஸ் அளவுக்கு போக வேண்டும்?
    ஒரு சிறிய அளவு தொழிற்சாலையை நான் மேலே கூறி இருந்தேனே, 1௦௦ பேர் கொண்ட தொழிற்சாலையை எடுத்துக்காட்டாக கொண்டு நீங்கள் விளக்கலாமே,\\

    தாங்கள் சொல்கிற மாடலில் எண்ணிக்கை ஒரு பிரச்சனையல்ல. 100 ஆக இருந்தாலும் பல இலட்சமாக இருந்தாலும் விவாதிக்கிற கருதுகோள்கள் ஒன்றுதான். டிசிஎஸ் முதன்மையாக எடுக்கப்பட்டதன் நோக்கம் தாங்கள் குறிப்பிட்ட அனைத்து அம்சங்களும் இதற்கு இருந்தது என்பது தான். உங்களுடைய மாடல் கம்யுனிச தொழிற்சாலை அல்ல என்பதற்கும் எப்படி இருந்தால் கம்யுனிச தொழிற்சாலையாக இருக்கும் என்பதற்கும் டிசிஎஸ் ஐ சுட்டிக்காட்டினேன்.

    இனி ஒன்றன் கீழ் ஒன்றாக பல தன்மைகளை பரிசீலிப்போம்.

    முதலில் மூலப்பொருள் என்று ஆரம்பித்தீர்கள். டிசிஎஸ்க்கு மூலப்பொருள் கிடையாது என்று அறைந்து கூறியவர் இராமன். இங்கு தொழிலாளர்களின் உழைப்பு மற்றும் வாடிக்கையாளர்களின் சேவை இவையிரண்டையும் மோதவிட்டு கசக்கிப் பிழியப்பட்ட புராவிட்தான் டிசிஎஸ்ஸின் புராவிட். இது முதலில் முதலாளித்துவம் அல்ல. தரகு முதலாளித்துவம் ஆகும். ஒரு முதலாளி தன் சொந்த உழைப்பில் முதல் போட்டு செய்வதற்கும் இதற்கும் வித்தியாசம் தெரிந்திருக்கும் இல்லையா? இந்த தொழிலுக்கு சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தண்ணீர் வசதி, மின்சார வசதி, வரிச்சலுகை, சீப் லேபர் என்று அனைத்தையும் வழங்கியிருப்பது நாம் தான். ஆனால் இன்றோ வாழ்க்கை கேள்விக்குறி. மூன்றாம் உலக நாடுகளில் இவ்விதம் ஆளும் வர்க்கத்தை கைக்குள் போட்டுக்கொண்டு சுகவாசியாக இருக்கும் தரகுமுதலாளித்துவம் தகர்க்கப்பட வேண்டும். தேசிய முதலாளித்துவம் வருவதற்கே இதுபோன்ற ஒட்டுண்ணிகள் முறியடிக்கப்படவேண்டும். ஆக சோசலிச சமூகத்தில் மூலப்பொருளே இல்லாமல் தொழிலாளிகளைச் சுரண்டும் தரகு முதலாளித்துவம் இருக்காது. இப்பொழுதும் அரசுதான் அனைத்துவேலைகளையும் இந்தக் கூட்டத்திற்கு செய்து தருகிறது. ஆனால் இலாபம் பிழிபவன் மட்டும் டாடா. சோசலிச சமூகத்தில் அரசே தான் இதைச் செய்யும். இலாபத்தையும் மக்கள் நல அரசுதான் பயன்படுத்த வேண்டும். இது முதல் பாயிண்ட். இது நியாயம் தானே! அப்படியெனில் இந்தியாவில் மூன்றால் உலக நாடுகளில் எத்துணை தொழில்கள் தரகு முதலாளித்துவமாக மூலப்பொருளே இல்லாமல் கசிக்கப்பிழியப்படுகின்றன என்று கணெக்கெடுத்துப்பாருங்கள். சான்றாக கோதாவரி ஆற்றுப்படுகையின் எரிவாயுவும், நிலக்கரியும், சட்டீஸ்கரின் தாது வளங்களும் இலவசமாகவே இந்தக் கூட்டங்கள் அனுபவித்துவருகின்றன. இவையனைத்தும் பொதுவுடமையாக்கப்பட்டு தொழிலாளர்கள் நலன் நாட்டின் நலன் காக்கப்படவேண்டும். உற்பத்தி பெருக்கப்படவேண்டும்.

    மூலப்பொருளின் பிரச்சனை இதுவென்றால் புராவிட் லாஸ் பற்றி அடுத்து பார்ப்போம்.

    • புராவிட் லாஸ் பற்றி பார்ப்பதற்கு முன்னர் மூலப்பொருளின் இன்னொரு பரிமாணத்தையும் பார்த்துவிடுவோம். ஏனெனில் நமது பிரச்சனை பொருளாதார பிரச்சனை மட்டுமல்ல; அது தத்துவார்த்துவ பிரச்சனையோடு அரசியல் போராட்டத்தோடு தான் இணைந்திருக்க முடியும். புரட்சி என்பது வர்க்கப் போராட்டம் என்று சொல்கிற பொழுது அது தெருச்சண்டையாகவோ, அரசியல் இயக்கமாகவோ அல்லது வெறும் தொழிற்சங்கமாகவோ மட்டும் தனித்து இருப்பதில்லை என்பதைச் சுட்டிக்காட்ட இது பயன்படும் என்று கருதுகிறேன்.

      தமிழ்நாட்டில் சற்றேறக்குறைய 14க்கும் மேற்பட்ட சர்க்கரை ஆலைகள் இருக்கின்றன. சமீபத்தில் 1 டன் கரும்பிற்கு விதிக்கப்பட்ட ஆதார விலை 2650 மட்டுமே. ஆனால் விளைச்சல் கூலியே 3500-4500 ஆக இருக்கிறது. அதே சமயம் 1 டன் கரும்பினால் சர்க்கரை முதல் சரக்கு வரை முதலாளிகளுக்கு கிடைக்கும் வருவாய் ரூ 30000 ஆகும். ஆனால் விவசாயிகளுக்கு விளைவித்த கூலியே கிடைக்கவில்லை. சர்க்கரை ஆலையின் முதலாளிகள் பெரும் புள்ளிகள். அவர்கள் இத்தொழிலை முதன்மையாகக் கொண்டும் இயங்கவில்லை. தமிழ்நாட்டின் சரக்கு உற்பத்தியில் கணிசமான பங்குகளை ஓட்டுக்கட்சிகள் தான் வைத்திருக்கின்றன. சர்க்கரைத் தொழிலாளிகளின் நலனையும் விவசாயிகளின் நலனையும் ஒட்ட நசுக்குவதில் இந்த ஆட்சிமுறை கணிசமான பங்குபற்றியிருக்கிறது. இதில் போராடாமல் சீர்திருத்தங்களைச் செய்யமுடியாது. இந்தத் தொழிற்சாலைகளில் பணமுதலைகள் அரசியல் பினாமிகளின் தொடர்பை துண்டிக்காமல் சீர்திருத்தங்கள் செய்வது ராபர்ட் ஓவனின் செயலுக்கு ஒப்பானது. அது எதில் போய் முடியும் என்றும் படித்து தெரிந்துகொள்ளலாம். மேலும் இங்கு உற்பத்தியோடு நிலவுடமையும் சேர்ந்திருக்கிறது. பெரும்பாலான விவசாயிகளுக்கு நிலம் கிடையாது. நிலவுடமை மதத்தோடு சேர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டின் தேவஸ்தான நிலங்களை அரசின் இணையதளத்தில் சென்று எத்துணை இலட்சம் ஹெக்டேர்கள் என்று அறிந்துகொள்ளலாம். வாசனுக்கு தஞ்சையில் எவ்வளவு ஹெக்டேர்கள் இருக்கின்றன என்று பாருங்கள். ஜீயர் வானமாமலை பெருமாள் கோயில் சொத்துக்களில் இருந்து 1000 ஏக்கரை தொழிற்பூங்காவிற்கு கொடுத்திருப்பது உச்சி முகர்ந்து பாராட்டப்பட்டிருக்கிறது. இனி மடங்கள், தேவாலயங்கள் வக்பு வாரியங்கள் கையில் எவ்வளவு நிலம் இருக்கும்? அனைத்தும் விவசாயிகளுக்கு சென்று சேர்ந்தால் தான் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருளும் கிடைக்கும், உற்பத்தியும் பெருகும். உழுபவனுக்கு நிலம் உழைப்பவனுக்கு அதிகாரம் என்ற அரசியல் போராட்டம் சோசலிச நாடுகளில் நிலங்களை ஒன்று குவித்து பரந்துபட்ட அளவில் விவசாயத்தைச் சாதித்தின. நம் நாட்டில் தலித்துகளும் சூத்திர சாதிகளும் இன்னும் நிலங்களில் கொத்தைமைகளாக இருக்கின்றனர். இதுதவிர முதலாளித்துவம் என்றாலும் கூட பரந்து பட்ட அளவில் விவசாய நிலங்கள் தேவை. சான்றாக அமெரிக்காவின் சாட்டிலைட் பிக்சரைப் பார்த்தீர்களேயானால் ஒவ்வொரு கார்ப்பரேட் விவசாயப்பண்ணையும் பல இலட்சம் ஹெக்டேர்கள் தொடர்ச்சியாக இருக்கும். ஆனால் இந்தியாவில் தொடர்ச்சியான நிலங்களை பார்க்கமுடியாது. அதாவது தஞ்சை கூட சிறியது!! அப்படியானால் விவசாயம் எந்தளவுக்கு சீரழிவான நிலையில் இருப்பதை அறிந்துகொள்ள முடியும்.

      கூட்டுப்பண்ணைகளால் தொழிற்சாலைகளும் தொழிற்சாலைகளால் கூட்டுப்பண்ணைகளும் ஒன்றையொன்று வளப்படுத்தி உற்பத்தியை ஒருங்கே குவிப்பது சோசலிசத்தின் பிரதான அரசியல் பிரச்சனையாகும். மூலப்பொருள் காஸ்ட்டிற்கு உங்கள் மாடலில் நீங்கள் ஒரு விலை நிர்ணயித்து இருந்தீர்கள் அல்லவா? ஆனால் மூலப்பொருளையும் உற்பத்தியையும் சோசலிசம் இப்படித்தான் நிர்ணயித்து பெருக்குகின்றன. இது சோசலிசத்தின் இரண்டாவது அம்சம்.

      • தென்றல்,
        மிகச் சிறப்பான விளக்கம். எனக்கும் சில விசயங்கள் புரியாமல் இருந்தன. தெளிவூட்டியமைக்கு நன்றி.

  24. கற்றது கையளவு அவர்களுக்கு,

    புராபிட் பற்றி

    உங்களது மாடலில் லாஸ் மற்றும் புராபிட்டை எப்படிப் பிரிப்பீர்கள் என்று கேட்டிருந்தீர்கள்.
    டிசிஎஸ்ஸின் 2013-2014 புராபிட் 2.59 பில்லியன் டாலர்கள் என்று பார்த்தோம். இதை என்ன செய்கிறார்கள்? இது யாருக்கு சொந்தமானது என்று கேள்விக்கு தாங்கள் பதில் சொல்லத்தயாராக இல்லை. ஆனால் சோசலிச சமூகத்தில் எப்படி பிரிப்பார்கள் என்று கேட்டிருக்கிறீர்கள்?

    முதலில் இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து ஆரம்பிப்போம். இந்திய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி இந்திய அரசின் ஐந்தாண்டு திட்டங்களுக்கு இதுவரை ஏழு இலட்சம் கோடியை திரட்டித் தந்திருக்கிறது. இது எப்படி சாத்தியம்? ஒரு நாட்டின் வளத்திற்கு ஒரு பொதுத்துறை நிறுவனம் இரத்தமும் சதையுமாக இருக்கிற பொழுது டாடா டிசிஎஸ்ஸோ நிழலில் வாழும் சந்தன ஒட்டுண்ணியாக இருக்கிறது. டிசிஎஸ்ஸால் அதன் ஊழியர்களுக்கே பலனில்லை.

    டாடா, இன்சுரன்ஸிலும் கால்பதித்து மிதித்து நிற்கிறது. இன்றைய மோடி அரசு இன்சுரன்ஸில் 100சதவீத அன்னிய முதலீட்டை திறந்துவிட்டிருக்கிறது. எதற்காக? இது ஒருபுறம் இருக்கட்டும்.

    ஒரு நிறுவனத்தின் புராபிட் நாட்டுவளத்திற்கு எப்பொழுது திருப்பிவிடப்படுகிறது? ஊழியர்களின் பணிபாதுகாப்பை உறுதிபடுத்தி, பிஎப், மருத்துவமனை வசதிகளை உருவாக்கி, போனஸ் மற்றும் ஓய்வூதியம் வழங்கிய பிறகுதான். ஆனால் பொதுத்துறை நிறுவனங்களிலேயே தொழிலாளர் பாதுகாப்பிற்கான இந்த அம்சங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக இன்றைக்கு இழந்து நிற்கிறோம். இப்படி கிடைத்த அம்சங்கள் அனைத்தும் சோசலிச நாடுகளில் நடைமுறைப்படுத்தியவை.

    ஒரு சோசலிச தொழிற்சாலையின் உற்பத்தி பெருகினால் அதனால் கிடைக்கிற இலாபத்தில் தொழிற்சாலையை புணர்நிர்மாணம் செய்வதற்கு பயன்படுத்தவும், தொழிலாளர்களின் உடல் உழைப்பிற்கு விடுதலை அளித்து இயந்திரமயமாக்கவும் செய்கிறது. கவனிக்க; முதலாளித்துவம் இயந்திரங்களுக்காக தொழிலாளர்களை தூக்கி எறிகிறது. ஏனெனில் அதற்கு இலாபம் மட்டுமே முக்கியம். ஆனால் சோசலிசம் தொழிலாளர்களின் வாழ்விற்கும் பண்பாட்டிற்கும் இயந்திரங்களை ஊக்குவிக்குகின்றன. உற்பத்தியை ஒருங்கே குவிக்கின்றன. இவ்விதம் உற்பத்தியும் தொழிலாளர் நலனும் சோசலிசத்தில் ஒரு சேர பெருகுகின்றன. முதலாளித்துவத்தை விட சோசலிசம் உற்பத்தியை பெருக்குகின்றன. இயந்திரத்தையும் புதிய தொழில்நுட்பங்களையும் புகுத்துகின்றன. எடுத்துக்காட்டும் அடுத்து தருகிறேன்.

    இந்தியாவில் கூட ரயில்வே மருத்துவமனை, ரயில்வே குடியிருப்புகள், ரயில்வே விளையாட்டு மைதனாங்கள் என்று வாழ்வின் அடிப்படையை கூட்டுச்சமுதாயம் பொறுப்பேற்று நிறைவேற்றுவதை சோசலிச சமூகம் தான் கற்றுக்கொடுத்தது. சோசலிச நாடுகளில் கூலி முறை இவ்விதம் ஜெனரல் பேமண்ட் முறையில் தான் இருந்தது. அதாவது இலாபத்தின் பகுதி இப்படித்தான் கட்டுமானங்களை எழுப்பின.

    உழைப்பை விற்காத தொழிலாளிவர்க்கச் சமுதாயத்திற்குத் தான் இது முற்றிலும் சாத்தியம். ஆனால் இங்கோ நமது உழைப்பிற்கு 30000 பெற்றுக்கொண்டு அனைத்தையும் இதில் சமாளி என்கிறது டாடா. வீட்டு லோன் வாங்காத டிசிஎஸ் காரனைக் காட்ட முடியுமா? இருக்கப்பட்டவன் வாழ்க்கையே இப்படி இருந்தால் இந்தியாவில் 80 சதவீதமக்களின் மாத வருமானம் 1000 ரூபாய்க்கும் கீழே! அவர்கள் என்ன செய்வார்கள்?

    டாடாவில் பணிபுரிகிற ஒரு தொழிலாளி சுரண்டப்பட்டு 30000 பெற்றுக்கொண்டாலும் தன் சம்பளத்தின் ஒரு பகுதியை மருத்துவமனைக்கு செலவழிக்கிறார். ஆனால் டாடாவின் புராபிட் எங்கு போகிறது? மருத்துவமனையிலும் டாடா தான் நிற்கிறது. இவர்களிடமே சம்பாரித்துவிட்டு இவர்களிடமே போய் மருத்துவத்திற்காக நிற்கிறோம். முதலாளியோ இலாபத்தை ஒரே பீரோவில் தான் அடுக்குகிறான்.

    ஆக நாம் வாழ்வதற்காக சம்பாரிக்கிறோமா அல்லது சம்பாரிப்பதற்காக வாழ்கிறோமா என்று கேட்டால் முதலாளித்துவம் சம்பாரிப்பதற்காக வாழச் சொல்கிறது. வீட்டுக்கடன் கட்ட, கல்யாணம் முடிக்க, ஆப்ரேசன் செய்வதற்காக, படிப்பதற்காக நாம் ஒவ்வொருவரும் நாயாய் உழைக்கிறோம். வாழவேண்டும் என்று நினைப்பதற்குள்ளேயே வாழ்க்கை முடிந்துவிடுகிறது. நமது உழைப்பின் பலனில் சிறு பகுதி பயன்படுத்தப்பட்டாலே தனியார்மயம் ஒழிக்கப்பட்டாலே தரமான கல்வி, நல்ல மருத்துவம், சிறந்த குடியிருப்புகள், நாட்டின் கட்டுமானங்கள் என்று ஒவ்வொருவருக்கும் உறுதிப்படுத்த முடியும். மனிதர்கள் ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார்கள் என்பதை இதற்குப்பிறகுதான் கணக்கே எடுக்கமுடியும்.

    இதன்படி தனியார்மயம் முதலாளித்துவத்தை முறியடித்து கல்வி, மருத்துவம், போக்குவரத்து போன்ற கட்டுமானங்களை ஒரு தொழிலாளி பெற்றுக்கொள்ள வேண்டியது உரிமை என்றும் அது நம் பணம் என்றும் உங்களுக்குத் தெரிகிறது அல்லவா? புராபிட் இப்படித்தான் பங்கிடப்படுகின்றன.

    சான்றாக கட்டுமானங்கள் வளர்ந்த அதே நேரம் வேதித் தொழிற்சாலைகளில் மிகை உற்பத்தி அடைந்துவிட்டோம் என்பதற்காக ஒரு நாடு தபால் தலை வெளியிட்டு கொண்டாடியது என்றால் அது உலகில் சோவியத் மட்டுமே (விக்கிபிடியாவில் கம்யுனிச அவதூறுகட்டுரைகளை படித்தாலே தெரிந்துகொள்ளலாம்)! புராபிட் எப்படி பயன்படுத்தப்படுகின்றன எப்படி பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

    இனி நான் தரவேண்டியது என்ன? புள்ளிவிவரங்கள். அதாவது ஒவ்வொருவருக்கும் எவ்வளவு வீதத்தில் என்னென்ன கிடைத்தது என்பதாகும். இவை எளிதானவை. சான்றாக ரசியாவில் 1920-1935 வரை, 1935-1952 வரை, 1952லிருந்து 1965 வரை, 1965-1980 வரை, 1980-தற்பொழுதுவரை என்னமாதிரியான சம்பள அமைப்பு எப்படி இருந்தது என்பதை புள்ளிவிவரங்களோடு பல அறிவியல் சஞ்சிகைகளில் இருக்கின்றன. இவற்றின் பெரும்பாலான அம்சங்கள் அமெரிக்க ஐரோப்பிய தொழிற்சங்கங்களிலும் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன. ஏனென்றால் அவையெல்லாம் தவிர்க்கமுடியாத போராட்டங்களால் விளைந்தவையாகும். இனி உங்கள் சொந்த முயற்சியை புள்ளிவிவரங்களுக்கு பயன்படுத்துங்கள்.

    மேற்கொண்டு நாம் கம்யுனிசம் சோசலிசம் இரண்டையும் பகுத்துபுரிந்துகொள்ளவேண்டும். சோசலிசம் என்பது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிறுவி உற்பத்தியை பெருக்கியும் முதலாளித்துவ வடிவங்களை ஈவு இரக்கமின்றி அடித்து நொறுக்கி கம்யுனிசத்திற்கு செல்லுகிற வரலாற்று இடைக்கட்டம் ஆகும். கம்யுனிசம் என்பது வர்க்கங்களற்ற சமுதாயம். ஆனால் சோசலிசத்தில் வர்க்கப்போராட்டம் முனைப்பாக ஓயாது நடைபெறுகிறது. இங்கே உழைப்புக்கேற்ற ஊதியம் கொடுக்கப்பட்டாலும் மூலதனம் மறைந்துவிடவில்லை. ஆக கல்வியாளர் ஜெனரல் மேனஜர், கூலி உழைப்பு செய்வோர் ஆகியோர் உழைப்புக்கேற்ற ஊதியம் பெறுகின்றனர். இதன் அடிப்படையில் பார்த்தால் நிறைய சம்பளம் என்ற கருத்தும் பணக்காரன் ஏழை என்று ஏற்றத்தாழ்வும் பெருகும் வாய்ப்புகள் சோசலிசத்தில் முற்றாக அழிந்துவிடவில்லை. சான்றுகள் பார்ப்போம்.

    சீனாவில் சோசலிசம் கலாச்சாரப் புரட்சி முடிந்த பிறகு அன்றிலிருந்து இன்றுவரை சீன ரயில் கழகம் பொதுவுடமைக்கழகம் தான். இதன் இலாபங்கள் அபரிவிதமானவை. ஒவ்வொரு காலகட்டத்திலும் இவர்கள் அடைந்த வளர்ச்சி மிகச்சிறப்பானவை. இன்றைக்கு மிகப் பெரிய முதலாளித்துவ சுரண்டல் அமைப்பாக இது இருக்கிறது. சீனா கம்யுனிசப் பாதையிலிருந்து விலகி அதவாது மூலதனப்போராட்டங்களை நிறுத்துகிற பொழுது புதியபணக்காரர்களின் சுரண்டல் ஆரம்பிக்கிறது. இன்றைக்கு சீன இரயில் கழகம் இந்தியாவில் புல்லட் சேவை செய்து கொடுப்பதற்கு பெரும் இலாபம் ஈட்டும் முதலையாக வந்து நிற்கின்றன. இந்தியாவில் தங்க நாற்கர சாலையை போட்டு பெரும் இலாபம் ஈட்டுவதும் சீன நிறுவனம் தான். இப்படியிருந்தும் சீனர்கள் நம்மைப்போன்றே துன்பத்தில் இருக்கிறார்கள். ஏன்?

    சீனப் பிரதமர் ச்சீ பிங் இந்தக் கழகங்கள் அரசிடம் இலாபத்தை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்! என்ன? ஒரு கம்யுனிஸ்டு கோரிக்கை வைத்து கெஞ்சிக் கொண்டு இருக்கிறாரா? உங்களுக்கு விசயங்கள் பிடிபடுகிறது இல்லையா? மக்கள் திரள் தான் சீனாவை கட்டியமைக்கிறார்கள். பெருகி வளர்ந்து வருகிற பொழுது உங்கள் உழைப்பைத் தூக்கி தனியாருக்கு தாரைவார்க்கிறார்கள் என்றால் அங்கே ஊடறுத்து செயல்படவேண்டியது யார்?

    கட்சி தேவையில்லை, புரட்சி தேவையில்லை, அரசியல் இயக்கம் தேவையில்லை என்று நினைக்கிற பொழுது மக்களின் ஒட்டுமொத்த வெற்றிகளும் காவுகொடுக்கப்படுகின்றன. உங்களது பின்னுட்டத்தில் என்ன சொல்லியிருந்தீர்கள் என்றால் கம்யுனிஸ்டுகள் ஆட்சியை விட்டு விட்டு கையைப் பிசைந்து நிற்கிறார்கள் என்றீர்கள். ஆனால் வரலாற்று இயங்கியல் விதி என்ன சொல்கிறது? மூலதனம் இருக்கும் வரை முரண்பாடு இருக்கும். இதை எதிர்த்துப்போராடாமல் விட்டால் ஓங்கியிருந்த பாட்டாளிகளின் கைகள் தாழ்வுற்று முதலாளிகளின் கை ஓங்கும். சமதான சகவாழ்வு என்று சொன்ன கார்ப்பசேவ் எல்ட்சின் கூட்டணி சோவியத்தில் ரத்தக்களறியை உருவாக்கியது. தெங் சியோ பிங் திறந்துவிட்ட சீர்திருத்தங்கள் ஏத்தலக்கடி என்று முதலாளிகளை ஏற்றிவைத்திருக்கிறது. இவர்கள் எல்லாம் தனிப்பட்ட நபர்கள் என்று புரிந்துகொள்ளாதீர்கள். அன்று எழுந்த புதியவர்க்கங்கள், ஏகாதிபத்திய ஆதிக்க சக்திகளின் பிரதிநிதிகள் தான் இவர்கள். இவையெல்லாம் இன்றைய காலகட்டங்கள்.

    நார்த் கொரியாவிற்கு இதுபோன்ற எந்தவரலாறும் நமக்கு யாருக்குமே தெரியாது. கேட்டால் கம்யுனிச நாடு என்று வாய்கிழிய கத்துகிற பிரச்சாரகர்கள், இலக்கியவாதிகள், அறிவுஜிவிகள் நாம் பரிசீலித்த அம்சத்தில் எதையாவது ஒன்றின் அடிப்படையில் நார்த்கொரியாவைப் பற்றி நமக்கு அறியத்தந்திருக்கிறார்களா? நார்த்கொரியா கம்யுனிச நாடு என்பது எதன் அடிப்படையில் என்று நீங்களாவது சொல்வீர்கள் என்று நம்புகிறேன். என்ன வர்க்கப்போராட்டம் நடைபெற்றது? உற்பத்தி என்னவாக இருந்தது? அங்கு நிலவுகிற அரசியல் சூழல் என்ன என்று எதுவுமே தெரியாமல் வெறும் பொய்புளுகுகளை வைத்துக்கொண்ட்டு பிரச்சாரம் ஏன் செய்யவேண்டும் என்று யோசித்து இருக்கிறீர்களா?

    கியுபா தேசிய முதலாளித்துவத்தை புரட்சியால் வென்ற நாடு. அதற்குப் பிறகு அங்கு அடுத்தகட்ட புரட்சி நடைபெற்றிருக்கவேண்டும். அப்படி இல்லாது இருந்துமே அந்த நாடு பலவிசயங்களை முன் உதாரணமாக நமக்கு காட்டியிருக்கிறது. சான்றாக இயற்கை வளங்களை நாட்டிற்கு எப்படி சொந்தமாக்குவது என்ற போராட்டங்களை நாம் கற்றுக்கொள்கிறோம். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களை நாம் கண்டு கொள்கிறோம். மருத்துவத்தின் மகத்துவத்தைக் கண்டு கொள்கிறோம். எதிர்பிரச்சாரம் செய்பவர்கள் இங்கு முடிவெட்ட அரசாங்கத்திடம் அனுமதி கேட்க வேண்டும் என்ற அளவிற்கு சொல்கிறார்கள். ஆனால் இவர்கள் ஏன் தேசிய முதலாளிகளின் ஆதிக்கத்தை பேச மறுக்கிறார்கள் என்று என்றைக்காவது யோசித்தது உண்டா? அதற்காக போராடுகிற புரட்சிகர குழுக்களின் குரல்கள் எந்த நாளிதழ்களிலாவது ஒலிக்கின்றனவா?

    ஏன் இன்றைய ஆளும்வர்க்கத்தின் பிரச்சாரங்கள் கீயுபா என்றாலோ சீனா என்றாலோ அதன் முதலாளித்துவப்போக்கை பேசமறுக்கின்றன? என்பதற்கு என்ன பதில் இருக்கிறது?

    இந்த இடத்தில் புராபிட்டை பற்றியும் சோசலிச கம்யுனிசத்தைப் பற்றியும் நிறுத்துகிறேன். அடுத்த பின்னுட்டத்தில் லாஸ் பற்றி பேசுவோம்.

  25. சோசலிச தொழிற்சாலையில் நட்டம் குறித்த பார்வை
    ————————————————-

    கற்றது கையளவு அவர்களுக்கு,

    தொழிற்சாலையை ஏற்று நடத்துகிற தொழிலாளர்கள் இலாபம் வரும் பொழுது பகிர்கிற பொழுது நட்டம் வந்தாம் பகிர்வார்களா? என்று கேட்கிறீர்கள். இந்த கேள்வியை சில சான்றுகளுடன் பரிசீலிப்போம்.

    முதலில் இந்தக் கேள்வியைத் திருப்பிப்போடுவோம். முதலாளிகள் நட்டம் வந்தால் ஏற்றுக்கொள்கிறார்களா?

    விஜய் மல்லையாவிடம் கேட்டுப்பாருங்கள். நட்டக்கணக்கு காட்டிவிட்டு ஐபில் குத்தாட்டம் போடப்போன விஜய்மல்லையாவின் நட்டத்தை யார் ஏற்றது? இந்திய அரசுதான் ஏற்றது. ஏரோப்பிளேன் என்றால் என்னவென்று பார்த்திராத அடித்தட்டு மக்களின் வரிப்பணம் தான் விஜய் மல்லையாவின் நட்டத்தை அடைத்தது. இது நியாயமா? இதைத்தடுக்க என்ன தீர்வு சொல்லப்போகிறீர்கள்?

    உங்களின் கேள்வியின் தன்மையிலேயே “இலாபம் என்றால் என் உழைப்பு என்று ஓடிவரும் தொழிலாளியே நட்டம் என்றால் ஏற்றுக்கொள்வாயா?” என்று கேக்கிற மனவக்கிரம் தான் இருக்கிறது. ஏன் மனவக்கிரம் என்று சொல்கிறேன் என்றால் உங்களுக்கு நாட்டு நடப்பு தெரியும். இதே டிசிஎஸ் சென்ற ஆண்டு மொத்த புராபிட்டு 37481 கோடி ரூபாய் என்கிற பொழுது இந்திய பட்ஜெட்டில் 55000 ஆயிரம் கோடி வரிச்சலுகையை மக்களின் பணத்திலிருந்து கார்ப்பரேட்டுகளுக்கு தூக்கிக்கொடுத்திருக்கிறோம். முதலாளிகள் இலாபம் தவிர வேறு எதையும் ஏற்பதில்லை என்பதற்கு இது இரண்டாவது எடுத்துக்காட்டு.

    மூன்றாவது சான்று பொதுத்துறை வங்கிகள். மறுகாலனியாதிக்கம் புகுத்தப்பட்டு பிறகு ஓய்வூதியத்தை சூதாட அனுமதித்திருக்கிறது இந்திய அரசு. முதலாளிகளுக்கு தேவையான பணம் இங்கிருந்து கறக்கப்படுகிற பொழுது நட்டம் வந்தால் மக்கள் தான் ஏற்க வேண்டும் என்று கடகடவென்று ஒரு வசனம் ஒப்பிப்பார்கள் பார்த்திருக்கிறீர்களா? மியுச்சவல் பண்டிற்கு வருகிற விளம்பரம் தான் இன்று ஓய்வூதியத்திற்கும் வந்திருக்கிறது. அதாவது ஓய்வூதியம் is subject to market risk! Read the offer document carefully before investing! இதையே இரண்டே நொடியில் சொல்லிவிட்டால் மக்களுக்குத் தெரியாதாம். எவ்வளவு நக்கத்தனம் பார்த்தீர்களா!

    மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு என்பதை நுண்ணிய எழுத்துக்களால் எழுதிவைத்துவிட்டு டாஸ்மாக்கை மொக்கையடியாக அடிப்பது என்பது இதுதான். ஜனநாயகம் இங்கே முதலாளிகளுக்கு ஏற்றவகையில் முதலாளிகளின் நட்டத்தை மக்களைத்தான் ஏற்கவைக்கிறது. இது மூன்றாவது எடுத்துக்காட்டு.

    இவ்விதம் தனக்கு சம்பந்தமேயில்லாத நட்டம் மக்கள் தலையில்தான் விடிகிற பொழுது தொழிலாளிகள் பார்த்து வளர்க்கிற தொழிற்சாலையின் நட்டத்தை யார் ஏற்பார்கள்? தொழிலாளிகள் தான் ஏற்பார்கள். இது போகிற போக்கில் புரியக் கூடிய பதில் என்றாலும் பதில் இன்னும் என்னைப்பொறுத்தவரை கருத்துருவாகத்தான் இருக்கிறது. ஏனெனில் நட்டம் என்று சோசலிச சமூகத்தில் எதை வரையறுக்கமுடியும்? அனைத்து தொழில்களும் அரசின் கீழ் ஒன்றை ஒன்றையொன்று பிண்ணிப்பிணைந்து நடக்கின்றன. அதாவது கிளினிக் பிளஸ்சும் கார்த்திகா சியக்காயும் ஒருங்கிணைக்கப்பட்டு உற்பத்தி பெருக்கப்படுகிறது. வெறும் புளியங்கொட்டையில் வாசனைத் திரவியங்களின் விகிதத்தை மாற்றினால் அதற்குப் பெயர் பிராண்டு அல்ல. இது விற்பனை உத்தி மட்டுமே. இதையும் தாங்கள் குறிப்பிட்டு இருந்தீர்கள். மார்கெட்டிங்கில் ஒரு பொருள் நிற்காமல் போனால் மக்கள் விரும்பாமல் போனால் நட்டம் ஏற்படுமே என்றீர்கள்.

    சந்தைப்பொருளாதாரத்தில் மக்கள் பொருளை விரும்புவதற்கு ஒரே வழி விளம்பரம் மட்டுமே. ஆனால் பிராண்டுகளுக்கான விளம்பரம் என்பது முழுக்கவும் மோசடி. இதில் இரண்டு பார்வை உண்டு.

    முதலாளித்துவமே தனது வாடிக்கையாளர்களை டார்கெட் செய்து பாக்கெட்டில் அடைத்தால் விளம்பரத்திற்கான முதலீடு தேவையில்லை என்கிறது! ஆச்சர்யமாக இருக்கிறதா! சான்றுகள் பார்ப்போம். சென்னை ஹாட் சிப்ஸ்ஸின் வருட இலாபம் 64 கோடி. இந்த முதலாளி இதுவரைக்கும் தன் நிறுவனத்தை பிரான்சைஸ் செய்யவோ விளம்பரப்படுத்தவோ இல்லை. விளம்பரம் தேவையில்லை என்கிறார். ஏன் அப்படி சொல்கிறார் என்றால் ஹாட் சிப்ஸ் ஸின் வாடிக்கையாளர்கள் தற்பொழுதுவரை நடுத்தரவர்க்கமாம். இவர்களை அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் இவர்கள் இங்குதான் வருவார்களாம். ஏழைகள் இங்குவருவதில்லை. அவர்களை பிராண்டை நோக்கி அழைக்கவேண்டிய அவசியம் இல்லை என்கிறார். சரி நிலைமை இப்படியேதான் இருக்குமா என்றால் இல்லை என்கிறார். ஒரு முறை விளம்பரப்படுத்திவிட்டு பிறகு நிறுத்தினால் அந்த பிராண்டு சந்தையில் இருந்து அழிந்துவிடும் என்கிறார். ஆகையால் இந்த ரிஸ்க் வேண்டாம் என்கிறார்.

    அதாவது புலிகேசி சொல்வதைப்போல ஆட்டுமூத்திரத்தை சுத்த இளநீர் என்று நீங்கள் தொடர்ச்சியாக பலவண்ணங்களில் விளம்பரப்படுத்தினால் மட்டுமே ஆட்டுமூத்திரம் நிற்கும். இதன் அடிப்படையில் தான் புராவிட்டில் சற்றேறக்குறைய 10-20சதவீதம் இந்தக்கூத்துக்காகவே செலவிடுகின்றனர் முதலாளிகள்.

    ஐஸ்வர்யா ராய் கோகோ கோலாவை வாயில் வைத்து துப்புவதும், வெளிக்கியே போகாத காம்பளனுக்கு சுப்புலட்சுமி ஜெகதீசன் ஊட்டச்சத்து நிபுணராக பரிந்துரைப்பதும், பல்விளக்கும் பிரசுக்கு அமெரிக்க டாக்டர்கள் அசோசேசியன் ரெக்கமெண்டு பண்ணுவதும் நாள்தோறும் நடைபெறுகின்றன.

    துர்தர்சனை பற்றி உங்களுக்கு பரிச்சயம் என்பதால் வெள்ளிக்கிழமை இரவு தோறும் ஒளிபரப்பாகும் லக்சின் சூப்பர் ஹிட்பிலிம் என்பதன் பெயரில் விளம்பரங்களைப் போட்டுத்தாகும் கொடுமை நன்றாக தெரியும் என்று நினைக்கிறேன். முதலில் வீக்கோ டெர்மரிக் என்று இரண்டு விளம்பரம் மட்டுமே வரும், அடுத்தடுத்து 20, 30, 40 விளம்பரங்கள் என்று போட்டுத்தாக்குவார்கள். எங்கள் காம்பவுண்டில் அன்றைய காலகட்டத்தில் எனக்குத் தெரிந்து ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டும்தான் துர்தர்சனின் முழுப்படமும் பார்த்திருக்கிறார்கள் என்று அடித்துச் சொல்லமுடியும்!

    விசயத்திற்கு வருவோம். முதலாளித்துவம் தன் வாடிக்களையார்களை நிர்ணயித்துவிட்டால் விளம்பரம் செய்யாமல் இருக்கிறது அல்லது மூர்க்கத்தனமாக செய்கிறது. ஆனால் சோசலிசத்தில் வாடிக்கையாளர்கள் என்போர் யார்? ஒட்டுமொத்த மக்கள். ஹாட்சிப்ஸின் வாடிக்கையாளர் நடுத்தரவர்க்கம் என்று முடிவுசெய்துவிட்டு விளம்பரம் செய்யாமல் இருக்கிற பொழுது, சோசலிசத்தில் ஒட்டுமொத்த மக்களும் வாடிக்கையாளர்களாக இருந்தால் விளம்பரத்திற்கும் புராபிட்டிற்கும் நட்டத்திற்கும் எதாவது சம்பந்தம் இருக்கிறதா?

    மேலும் சோசலிசத்தில் பொருள் விற்றுத்தீர்க்கப்படவேண்டுமென்பதற்காக நாம் உற்பத்தி செய்யவில்லை. மாறாக தேவைகளின் அடிப்படையில் உற்பத்தி செய்கிறோம். இங்கு ஒரு சல்லியான பிரச்சாரம் ஒன்று இருக்கிறது க.கை அவர்களே! அதவாது பிராண்டுகளின் அரசியல் பேசினாலும் கண்டுபிடிப்புகளையும் புதிய தொழில்நுட்பங்களையும் இதனுடன் குழப்பி கம்யுனிசம் நம்மை ஒரே பொருளை பயன்படுத்தச் சொல்கிறது; புதுமை இல்லை; வாழ்க்கை போர் என்று சொல்வார்கள். ஆனால் அப்படியொரு நிலையே இங்கு கிடையாது. அது முதலாளித்துவத்தில் தான் உண்டு. சான்றுகளைப் பார்ப்போம்.

    100கிராம் சோப் 30 ரூபாய் என்றால் விலையேற்றம் செய்தால் மக்கள் எதிர்ப்பார்கள் என்ற காரணத்திற்காக 90 கிராம் சோப் 30 ரூபாய் என்று போட்டு புது பிராண்டு என்கிறார்கள். இந்த மோசடிக்கு விளம்பரம் லைட் வெளிச்சமின்றி நடத்த இயலாது. விளம்பரம் என்பது இதற்குத்தான். மேலும் இதையே காம்பேக்ட் பேக் என்று ஒருபக்கம் சொல்வது மூன்று காம்பேக்ட் பேக்குகளை ஒன்றிணைத்து காம்போ பேக் என்று சொல்வது என்று தலையில்கட்டுகிற இலாப வெறி மட்டுமே சுதந்திர சந்தைப்பொருளாதாரத்தில் உண்டு.

    அப்படியானால் சோசலிசத்தில் வெரைட்டி இன்னோவேசன் காம்படிசென் எங்கு இருக்கிறது என்ற கேள்விக்கு பதில் என்ன? சூப்பர் மார்கெட் அறிமுகப்படுத்தப்பட்டதே சோசலிச சமூகத்தில் தான். இது ஒன்றே அனைத்து பிரச்சாரங்களை அடிக்கப்போதுமானது! பல புதிய தொழில்நுட்பங்கள், மனிதனின் மேதமைகள் உற்பத்திப்பொருளில் வெளிப்பட்ட காலமும் சோசலிச சமூகம் தான்.

    இது ஒருபுறமிருக்க, தீவிரமான போட்டி சோசலிச சமூகத்தில் தான் சாத்தியம். முதலாளித்துவ சமூகத்தில் போட்டி மூலதனங்களுக்கு இடையில் ஆனது. இதையாரும் சொல்வதில்லை. இந்தப் போட்டியை சுதந்திர சந்தைப் பொருளாதாரம் என்று சொல்வது எத்துணை கேலிக்கூத்தானது என்று தெரிந்திருக்கும். ஆனால் சோசலிச சமூகத்தில் போட்டி பொருள்களின் தரங்களுக்குகிடையில் மட்டும்தான் இருக்கமுடியும். ஏனெனில் உற்பத்தியை நாம் மையப்படுத்தி பாட்டாளிகளின் தலைமையில் வைத்திருக்கிறோமே!

    செராமிக் தொழிற்சாலையில் சோவியத் யுனியன் கண்டறிந்த வியத்தகு தொழில்நுட்பங்கள் தொழிலாளர்கள் கண்டுபிடித்தவை (வலைத்தளத்தில் தேடிப்பாருங்கள்). கல்லூரிக்காலத்தில் தேசிய கப்பற்படையில் இருந்தேன். நாம் வாங்கிக்குவித்திருக்கும் அத்துணை நீர்மூழ்கி மற்றும் டெஸ்ட்ராயர்வகை கப்பல்களும் சோவியத் யுனியனிடமிருந்து செகண்ட் ஹேண்டாக வாங்கியவை தான். அவர்களுக்கு இந்தத் தொழில் நுட்பம் எப்படி சாத்தியமானது?

    சீனாவை எடுத்துக்கொள்வோம். கலாச்சார புரட்சிக்கு முந்தைய புரட்சியாக Great Leap forward முன்னெடுக்கப்பட்டது. விக்கிபீடியாக் கட்டுரைகளில் இருந்து மேலை நாட்டு பிரச்சாரங்கள் வரை Great Leap forwardஆல் சீனாவில் ஐயகோ பஞ்சம் வந்தது என்று எழுதினார்கள். இந்தப் பிரச்சாரம் சீக்கிரமே வெளுத்துப்போனதால் இரண்டாவது தரப்பாக இப்பொழுது என்ன சொல்கிறார்கள் என்றால் சீனா தாதுவளங்களை மூர்க்கமாக பெருக்கியது! அதாவது ஒவ்வொரு வீட்டில் உள்ள வடச்சட்டி, இசைக்கருவிகளை தீயில் இட்டு பொசுக்கி இரும்பை உருக்கி ஒவ்வொரு கிராமமும் 20-40டன் இரும்பை தொழிற்சாலைகளுக்கு வழங்கி உற்பத்திக்கருவிகள் பெருக்கப்பட்டதால் சீனாவிற்கு பொருளாதாரம் வந்தது என்று ஒருவழியாக வளர்ச்சி என்று இன்று ஒரு கதை சொல்கிறார்கள்.

    இங்கு நட்டம்-உற்பத்தி-இலாபம் குறித்த சோசலிச தொழிற்சாலையின் பார்வையை நிறுத்துகிறேன். ஆக நீங்கள் சுட்டிக்காட்டிய மாடலில் மூலப்பொருள், உற்பத்தியில் இலாபம், நட்டம் பகிரப்படுதல், இன்றைய நிலைமை என்னவாக இருக்கிறது? எப்படி இருக்கவேண்டும்? சோசலிசத்தில் எப்படி இருந்தது என்பதில் பொதுவான பார்வையை முன்வைத்திருக்கிறேன். இனி அடுத்தபின்னூட்டத்தில் பணத்தின் மதிப்பு, ஏகாதிபத்தியங்கள் சோசலிச தொழிற்சாலையை எப்படி அணுகுகின்றன? மறுகாலனியாதிக்கத்தின் பங்கு என்ன? என்பதை பகிர்கிறேன்.

    • தென்றல் அவர்களே,

      மிகப்பயனுள்ள தகவல்களை பகிர்ந்தீர்கள். நன்றி.

      முழு கம்மியுனிச அமைப்புக்கு மக்கள் ஆதரவு கிடைக்குமா தெரியவில்லை. ஆனால் சோசலிசத்திற்கு மக்கள் ஆதரவு கிடைக்கும்.

      அரசே அனைத்து தொழில்களையும் தானே எடுத்து நடத்துவது தற்போதைய நடைமுறையில் சாத்தியப்படுமா தெரியவில்லை. ஆனால் இந்த பன்னாட்டு கம்பெனிகள் மார்கெடிங் செய்வதற்கும், சச்சின் ஐஸ்வர்யா போன்ற பிரபலங்களுக்கு கோடிக்கணக்கில் கொடுத்து செய்யும் செலவுக்கு பதில் தரமான பொருட்களை மக்களுக்கு இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக சென்றடையும் விதத்தில் செய்தால் குறைந்த விலையில் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும். இதில் மிக முக்கியமான விடயம் பொருட்களின் தரத்தை அந்த பன்னாட்டு கம்பெனிகள் தரும் தரத்திற்கு ஈடாகவோ, இல்லை அதற்கும் மேலாகவோ தர வேண்டும். இத்தகைய பொருட்களுக்கு மார்கெடிங் இல்லாமலேயோ அல்லது குறைந்த செலவில் மார்கெடிங் செய்தோ மக்கள் மனதை அடைய முடியும்.

      இதற்காக தான் ஒரு மாதிரி சோஷலிச தொழிற்சாலையை உருவாக்கி வெற்றிகரமாக நடத்திக்காட்டுங்கள் என்று கேட்கிறேன். இதில் உள்ளர்த்தமோ, உள்குத்தோ இல்லை.

      சோஷலிச தொழிற்சாலைக்கு முதல் எப்படி ஏற்பாடு செய்வது?
      எந்த தொழிலானாலும், மூலதனத்தை ஒருவர் தருகிறார் என்றால் அவர் அதிக இலாபம் கிடைக்க என்ன வழி என்று தான் யோசிப்பார். சோஷலிச தொழிற்சாலையில் இலாபம் குறைவு என்பதால் அதற்கு முதல் போடுபவர்கள் யோசிப்பார்கள். அதனால் தொழிலாளிகள் கூட்டுறவு முறையில் முதலை சேர்த்து, தொழிலை தொடங்கலாம். இவ்வகை தொழிற்சாலையில் கூட இலாபம் என்பது உண்டு என்றால் தான் தொழிலாளிகள் கூட பணத்தை முதலீடு செய்வார்கள். 5 சதவீத இலாபம் தான் கிடைக்கும் என்றால் அதற்கு ஏன் தொழில் தொடங்க வேண்டும், பணத்தை வங்கியிலேயே போட்டு வைக்கலாமே என்று யோசிப்பார்கள்.

      நட்டமடையாமல் ஒரு தொழிலை, சோஷலிச சோதனை முறையில் நடத்துங்கள். அதன் வெற்றியை மக்களிடம் காட்டுங்கள். பின் ஒவ்வொரு தொழிலாக சோஷலிச முறையில் தொடரலாம்.

      • Socialist projects may work where there is no competition from private entities like power generation…
        For consumer products they will fail and will provide worst service .

        If you take Hindustan photo films as an example, decision making process in govt entity was too slow while technology moved so quick and fast.They were not able to keep up with the latest.On top of it innovation was zero.

        Socialist Amul project worked because they dont need to innovate in the product level , improving the process would be suffice.

        Are you using any consumer grade product made by or innovated by Govt projects(Anybody heard Car/pen/bike/TV brand from then socialist Russia?). It will not bring the best from common folks.

        Solution from Thenral,Sivappu reminds me of the movie “Villege” by night shyamalan .
        These guys are totally away from the reality and they cannot be persuaded as they are with delusion and they will try push their utopia talks.

        “செந்தில் ஒரு படத்துல சொல்லுவாரு , மலையை தூக்கி முதுகுல வையுங்க தூகுறேன் ”

        அந்த மாதிரி , உலகம் முழுசும் ஒரே கரன்சி , மக்கள் எல்லாம் ஆசை இல்லாமல் நல்லவர்கலாவது, “எனக்கு எதுக்கு சார் சம்பளம் ஜாஸ்தி வேண்டாம் சார் மூணு வேலை சாப்பாடு கிடக்குது இதுவே போதும் ” எனும் மனப்பாங்கு எல்லாம் வந்த பிறகு இவர்கள் சொல்வது நடக்கலாம்

        • முட்டாள் இராமனின் மூன்று தத்துவங்களும் அதற்கான பார்வைகளும்.

          தத்துவம்-1: உலகம் முழுவதும் ஒரே கரன்சி என்று கம்யுனிஸ்டுகள் நாங்கள் சொல்கிறோமாம்.

          உலகம் முழுவதும் ஒரே கரன்சி என்று ஆளும்வர்க்கத்தை கைப்பற்றி ஒவ்வொரு நாட்டு நாணயத்தையும் வலுவிலக்கச் செய்து ஒட்டச்சுரண்டிக்கொண்டிருப்பது யார்? ஏகாதிபத்தியம் தான். அதை ஒழிக்கப்போராடுகிற கம்யுனிஸ்டுகள் அல்லர். மூலதனத்தை முறியடிக்காமல் உலகம் முழுவதும் ஒரே கரன்சி என்று யாரால் சொல்ல முடியும்? ஏகாதிபத்தியத்தால் மட்டும்தான் சொல்லமுடியும். அமெரிக்காரன் உற்பத்தியில் ஈடுபடாமலேயே சுரண்டுவதற்கு வரைமுறையின்றி அச்சடித்து தள்ளுகிற ஒவ்வொரு கருப்பு டாலரையும் வெள்ளையாக்குவது மூன்றாம் உலக நாடுகளில் கசக்கி பிழியப்படும் நம்மைப்போன்ற தொழிலாளிகளே! இன்றைக்கு உற்பத்திக்கும் பணத்திற்கும் நேரடியான எந்தத் தொடர்பும் இல்லாமல் இருக்கிறது! கடன் பத்திரங்கள், பிராமசிரி நோட்டுக்கள் பங்குச்சந்தையின் ஊதிப்பெருக்கப்பட்ட நீர்க்குமிழிகள் எல்லாம் உண்மையான பணமாக மாற்றப்படவேண்டுமானால் உலக ஹவாலா முழுக்கவும் நம்பியிருப்பது மூன்றாம் உலக நாடுகளான இந்தியா போன்ற உழைக்கும் அடிமை தேசங்களைத்தான். இதே வெட்கங்கட்ட இராமன் டிசிஎஸ்ஸிற்கு எதிராக போராடினால் டிசிஎஸ் தன் ஜாகையை இதைவிட சம்பளம் குறைவாகத் தரும் பிலிப்பைன்ஸ்க்கு மாற்றும் என்று சொன்னதை நாம் மறந்துவிடக்கூடாது. இதன் அர்த்தம் அன்ன? இந்திய தொழிலாளிக்கு 30000 ரூபாய் கூலி என்றால் பிலிப்பன்ஸ் தொழிலாளிக்கு இரண்டாயிரம் பேசோக்கோள். அதாவது கூலியை ஒவ்வொரு நாட்டு பணத்தின் அடிப்படையிலும் இலாபத்தை டாலர் அடிப்படையிலும் பெற்றுக்கொள்ள வேண்டும். ஏகாதிபத்தியத்தின் உலகம் முழுவதும் ஒரே டாலர் என்பதன் சூட்சுமம் வரைமுறையற்ற சுரண்டல் என்பதும் அதைசெய்வது முதலாளிகள் தான் என்பதும் இங்கு அம்பலப்பட்டுபோகிறது அல்லவா?

          டாலர் என்றில்லை இன்றைக்கு ஹெச்டிஎப்சி பரிமாற்ற பணமாக யுவானை பயன்படுத்த வேண்டும் என்று யோசித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் பிரச்சனையின் ஆணிவேர் மூலதனத்தின் முடைநாற்றமாகும். இங்கு உலக கரன்சியாக நீங்கள் டாலரை வைத்தாலோ யுவானை வைத்தாலோ மூலதனம் முறிந்துவிடாது. உலக கரன்சி, முதலாளிகளின் ஏகபோகத்திற்குத்தான் என்பது தெரிகிறது அல்லவா? ஆக உலக கரன்சியின் யோக்கியதையும் இராமனின் அவதூறுகளும் கிழிந்து தொங்குகிறது அல்லவா?
          ———————————————————————————–

          தத்துவம்-இரண்டு: மக்கள் எல்லோரையும் ஆசைகள் இல்லாமல் நல்லவர்களாக்குவது கம்யுனிஸ்டுகளின் திட்டமாம்.

          இந்த பிரச்சாரத்திற்கு பதில் சொல்வதற்கு முன் இராமனின் கருத்தை சற்று ஆராய்வோம். முதலில் ஆசைப்படாமல் இருந்தால் நல்லவர்கள் என்கிறார். ஆனால் அதே இராமனின் கருத்துப்படி உலகம் நல்லவர்களால் இயங்கவில்லை; அது முதலாளிகளின் ஆசையால் இயங்குகிறது என்று அடித்துச் சொல்கிறார்.

          கம்யுனிஸ்டுகள் ஆசையை விட்டொழி என்று மதங்களின் பிரச்சாரங்களை முன்னெடுக்கவில்லை என்பதை விளக்கித் தெரியவேண்டுமா? மாறாக ஆசையால் தான் உலகம் இயங்குவது உண்மையென்றால் அது தொழிலாளிகளின் ஆசைப்படி இயங்கட்டும் என்கிறோம்.

          ஆனால் இதே தொழிலாளி போராடினால் இந்தப் பித்தலாட்டக்காரர்கள் மதங்களைக் கொண்டு மட்டிப்பிரச்சாரம் செய்வார்கள்; நீதி நெறிக்கருத்துகளும் உபவாச ஜெபங்களும், சுவனபதத்து பேரிச்சைகளைக் காட்டி உழைப்பாளிகளே உங்கள் இச்சைகளை அடக்குங்கள் என்பார்கள். ஆறுவது சினம் என்பார்கள். ஊக்கமது கைவிடேல் என்பார்கள்;

          கந்தையானாலும் கசக்கி கட்டு என்று சொல்வார்களே ஒழிய குண்டித்துணிக்காக உன்னைச்சுரண்டும் முதலாளிகளுக்கு எதிராக போராடு என்றும் ஒருபோதும் சொல்லமாட்டார்கள். ஆசையின் பிரச்சாரம் இவ்விதம் சீரழிந்து நிற்கிறது இல்லையா? தொழிலாகள் இதைகண்டு கொண்டு அரசியல் ஆசையை மேற்கொண்டு வளர்த்துக்கொள்ளவேண்டும்!
          —————————————————–

          தத்துவம்-3: ‘எனக்கு எதுக்கு சார் சம்பளம் ஜாஸ்தி வேண்டாம் சார் மூணு வேலை சாப்பாடு கிடக்குது இதுவே போதும்’என்று சோசலிச தொழிலாளி சொல்கிறாராம்.

          இதைச் செய்துகொண்டிருப்பது யார்? முதலாளிகள் தான். இதை நாம் ஒரே வாக்கியத்தில் அம்பலப்படுத்திவிடலாம். வாழ்வதற்காக சம்பாரிக்கிறோமா? அல்லது சம்பாரிப்பதற்காக வாழ்கிறோமா?

          முதலாளித்துவம் சொல்கிற பதில் ‘சம்பாரிப்பதற்காக வாழ்’. இப்படிச் சொல்வது மட்டுமில்லாமல் முதல் வேலையாக நமது உழைப்பை கூலி என்று வரையறுத்து குறைந்த சம்பளத்தை தூக்கி எறிகிறது. இவர்கள் வழங்கும் பணத்தில் நமக்கு மருத்துவமோ, குடியிருப்புகளோ, கல்வியோ, ஓய்வுதியமோ,கலையோ, விளையாட்டுகளோ, போக்குவரத்து எதுவும் இல்லாமல் ஒட்டச்சுரண்டுவது முதலாளித்துவம் தான் என்பது தெரியும். ஆக வெந்ததைத் தின்றுவிட்டு விதிவந்தால் சாவு என்று சொல்கிற முதலாளித்துவம் தான் இலாபத்தை எதிர்த்துகேள்வி கேட்காதே! சம்பளம் அதிகம் கேட்காதே. வாழ்க்கைக்கான கட்டுமானங்கள் உனது சம்பளத்தில் கிடையாது. அதையும் விற்பனையின் மூலமாக ரியல் எஸ்டேட்டாக, மெட்ரிக்குலேசன் பள்ளியாக, டாட்டா இன்சுரன்ஸ்ஸாக, அப்போல்லோ மருத்துவமனையாக நாங்களே விற்போம். இது போன்ற நடைமுறை பயன்பாடுகள் எல்லாம் அதிகம் உன்னை பிழிந்து கொடுத்தால் தான் கிடைக்கும் என்று சொல்லிவிட்டு இலாபத்தை பீரோவில் அடுக்கி பல்குத்திக்கொண்டிருக்கிறது.
          ஆக உழைப்பைச் சுரண்டி சம்பளத்தைக் குறைப்பது யார் என்று தெரிகிறதா?

          இலாபத்தைப் பற்றிக் கேள்வி கேட்டால் இராமன் போன்ற முதலாளித்துவ அடிவருடிகளுக்கே பைத்தியம் பிடித்து உளறுகிறார்கள் என்றால் முதலாளிகளின் மனோபாவம் எப்படியிருந்திருக்கும்? இவர்கள் கம்யுனிசத்தை எவ்விதம் நோக்குவார்கள்? இவர்களுக்கு இலக்கியபிரச்சாரம் செய்கிற ஊடகங்கள் எப்படியெல்லாம் எழுதும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

          • //உலகம் முழுவதும் ஒரே கரன்சி என்று கம்யுனிஸ்டுகள் நாங்கள் சொல்கிறோமாம்.//

            உலகம் முழுவதும் கோழி முட்டைகள் ஒரே விலையில் இருக்க வேண்டும் என்று கூறியது நீங்கதானே

            // ஆசையால் இயங்குகிறது என்று அடித்துச் சொல்கிறார்.//

            ஆசைகள் தான் மனித குலத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கின்றன.
            இதை பத்தாயிரம் வருட வரலாற்றை ஆராய்ந்தவர் கூறியது .

            //மாறாக ஆசையால் தான் உலகம் இயங்குவது உண்மையென்றால் அது தொழிலாளிகளின் ஆசைப்படி இயங்கட்டும் என்கிறோம்//

            பலே பலே ! வேலை வீண்டாம் சம்பளம் மட்டும் போதும் 🙂

            பனி பாதுகாப்பு ,முதலாளிகளின் லாப வெறி என்னும் கோசத்தில் ஒளிந்து இருக்கிறது உங்கள் பேராசை

            நிரந்தர பணி, எல்லோருக்கும் ஒரே மாதிரி வேலை , நல்ல வேலை செஞ்சா சர்டிபிகேட்டு தருவாங்களாம் யாருக்கு வேணும் . ஜாலியா ஓபி அடுசுட்டு வரலாம் .

            உணக்ளுடைய பதிலில் அடுத்தவர்களுடைய உழைப்பை திருடி தின்ன வேண்டும் என்கின்ற ஆசையும் வெறியும் தான் கண்ணில் பட்டது .

            • ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளது போல முதலாளிகள் செய்யும் தவறை நாம் கண்டிக்கும் அதே வேளையில் தொழிலாளர்களான நம்மில் சிலர் செய்யும் தவறுகளையும் நாம் கண்டிக்க தான் வேண்டும்.

              சென்னை பெரம்பூர் ICF தொழிற்சாலையில் எனக்கு தெரிந்த பலர் எப்படி வேலை செய்கிறார்கள் என்று சொல்கிறேன். காலையில் ஆறு மணிக்கு தொழிற்சாலைக்கு செல்வார்கள், டைம் கார்டில் பன்ச் செய்து விட்டு வீட்டுக்கு வந்து விடுவார்கள். வீட்டு வேலைகள், வெளி வியாபாரம் என்று மற்ற வேளைகளில் பிசியாக இருப்பார்கள். இது தான் அவர்களது தினசரி வழக்கம். உங்கள் வேலையை அப்போது யார் செய்வார்கள் என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் அங்கு வேலை செய்யும் மற்ற தொழிலாளர்கள் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை அவர்களே செய்து விடுவார்கள். இவர்களுக்கு ஓசியில் கிடைக்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை இவர்களுக்காக வேலை செய்யும் நண்பர்களுக்கு கொடுத்து விடுவார்களாம். மூவர் செய்யும் வேலையை ஒருவரே செய்ய முடியுமாம். ஆனால் அதற்கு மூன்று பேரின் சம்பளம், போனஸ், வேலை நிரந்தரம், அவர்களது வாரிசுகளுக்கும் அதே வேலை என்று பல சலுகைகள், வேலைக்கு போகாமலேயே அவர்களுக்கு கிடைக்கிறது. இந்த சலுகைகள் எல்லாம் யார் பணம்? ரயிலில் பயணிக்கும் நமது பணம் தான் அல்லவா? நாள் முழுதும் உழைக்கும் எண்ணற்றோர் அவர்களின் தினசரி பயணத்திற்கு செலவு செய்யும் காசு இப்படி வீட்டில் சும்மா இருப்பவர்களுக்கு விழலுக்கு இழைத்த நீராக வீணாகலாமா? யோசித்து பாருங்கள். இப்படி சும்மா இருந்து சம்பளம் வாங்குபவர்களுக்கு ICF யூனியன்கள் அனைத்தும் ஆதரவு தருவது மனதுக்கு சங்கடமாக உள்ளது. யூனியன் தத்துவத்தை இவர்கள் கேலிகூத்தாக மாற்றி இருகிறார்கள்.

              முதலாளிகளின் தவறுகளையும் கண்டிக்க வேண்டும். தொழிலாளிகள் தவறு செய்தாலும் அதனை கண்டிக்க வேண்டும். நிறுவனம் இலாபம் அடைந்தால் தான் தொழிலாளிகளுக்கு பல்வேறு சலுகைகளை அந்த நிறுவனம் கொடுக்க இயலும். நட்டத்தில் ஓடும் கம்பெனிகளால் எப்படி தொழிலாளிகளுக்கு நிரந்தர பாதுகாப்பு கொடுக்க இயலும்?

              அம்பானி, டாடா, மல்லையா இவர்கள் எல்லாம் வரி எய்ப்பு நிகழ்த்தினாலோ அல்லது நிறுவனத்தில் நட்ட கணக்கை காட்டி மக்களின் வரிப்பணத்தில் பெறப்பட்ட வங்கிக்கடனை ஏப்பம் விட்டாலோ, நாம் அதனை தீவிரமாக எதிர்க்க வேண்டும், தடுக்க வேண்டும். மறுக்கவே இல்லை. அதே சமயம் நம்மவர்களும் கொஞ்சம் பொறுப்புணர்வுடன் வேலை செய்தால் நாம் வேலை செய்யும் நிறுவனம் உயரும். அதிக வருமானம், அதிக சலுகைகளையும் நிறுவனங்கள் வழங்க முடியும்.

              முதலாளிகள் நாட்டை ஊழல் செய்து சுரண்டுகிறார்கள் என்றால் தொழிலாளிகளான நம்மில் சிலர் சும்மா இருந்து சோம்பேறியாக வாழ்ந்து நாட்டிற்கு தீங்கு விளைவிக்கிறார்கள். அந்நியன் படத்தில் வருவதை போல ஐந்து ஐந்து பைசாவாக ஐந்து கோடி பேர்கள் திருடினால் அது பெரிய திருட்டாக மாறுகிறது அல்லவா, அதே போல ஒவ்வொரு தொழிலாளியும் தனது பணி நேரத்தை வீணாக செலவு செய்யும் போது ஒட்டுமொத்தமாக கணக்கிட்டு பார்த்தால் அதனால் நாடு பெரும் நட்டமடைகிறது.

              நம் நாட்டின் மிகப்பெரிய பலம் என்பது நமது மக்கள் தொகை என்பது பலருக்கு புரியவில்லை.
              இருக்கும் 120 கோடி மக்களில் ஒரு 70 கோடி மக்கள் உழைக்க தகுந்தவர்களாக நிச்சயம் இருப்பார்கள். இவர்களில் ஒவ்வொருவரும் தன்னுடைய சக்தியை சரியான வழியில் பயன்படுத்தினால் நாடு எங்கேயோ போய் நிற்கும்.

              • KK,

                // ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் //

                எது முதலில் வந்தது. முதலாளியமே முதல் அநீதி என்று கூறினேன். அதற்கு பதிலில்லை. தொழிலாளர் சிலர் செய்யும் தவறுகளை இங்கே யார் நியாயப்படுத்தினார்கள்.
                //ஒவ்வொருவரும் தன்னுடைய சக்தியை சரியான வழியில் பயன்படுத்தினால் நாடு எங்கேயோ போய் நிற்கும்.//

                இதை எப்படி ஒருங்கினைப்பது. சரியான வழி என்பதை தனிநபர்கள் தனித் தனியாக கற்பனை மட்டுமே செய்து கொள்ளமுடியும். அவர்களின் செயல்கள் வீணாகத்தான் போகும். Reinventing wheel பற்றிக் கூறியிருந்தேன். அதுதான் நடக்கிறது. நடக்கும். நமது நாடு குப்பைத்தொட்டியாக சாக்கடையாக இருக்கிறது. இதைத்தான் நாம் முன்னுரிமை கொடுத்து சரி செய்ய வேண்டும். ஆனால் இதை கூட்டுத்திட்டம் கூட்டுமுயற்சி இல்லாமல் தேற்றிவிட முடியுமா. கூட்டுமுயற்சி மட்டுமே எல்லாவிதத்திலும் முழுமையான வளர்ச்சியைக் கொடுக்க முடியும். இதற்கு இப்போதைக்கு கோடி தடைகள் இருக்கின்றன என்பார்கள். Vested interest. ஆனால் அவற்றை தாண்டுவதுதான் சரியான தீர்வு.

                // நட்டத்தில் ஓடும் கம்பெனிகளால் எப்படி தொழிலாளிகளுக்கு நிரந்தர பாதுகாப்பு கொடுக்க இயலும்?//

                ஒரு தொழில் நட்டத்தில் ஏன் ஒடவேண்டும். தேவையில்லாத தொழிலை ஏன் செய்ய வேண்டும். தவறு இங்கே தான் இருக்கிறது. நமது நாட்டை சுத்தப்படுத்தும் வேலை நிறைய இருக்கிறது. 1/3 மக்கள் அதைச் செய்தால் தான் இது சரியாக நடக்கும். அவ்வளவு வேலை இருக்கிறது. இந்த வேலையால் கிடைக்கும் லாபம் சுத்தமான சுற்றுப்புறமும் நீரும் உணவும் சுகாதாரமும் தான். இது பணமாக கண்ணில் படாது கையில் கிடைக்காது.

                • //ஒரு தொழில் நட்டத்தில் ஏன் ஒடவேண்டும். தேவையில்லாத தொழிலை ஏன் செய்ய வேண்டும். தவறு இங்கே தான் இருக்கிறது//

                  நல்லா சொன்னீங்க சார் !

                  பால் பண்ணை , கோழி பண்ணை , டி கடை ,இட்லி கடை போன்ற நட்டமாகாத தொழில் செய்தால் போதும்

                  கார் செய்வது , செல்போன் செய்வது டிவி செய்வது போன்ற உழைப்பாளிகள் ரத்தத்தை உருஞ்சும் தொழிலோ பொருளோ நமக்கு தேவை இல்லை

                  • எந்த தொழில் செய்தாலும் அதில் எதிர்பாரா விதமாக நட்டம் ஏற்படலாம். பறவை காய்ச்சல் நோய் வந்து கோழிகள் இறந்தால் கோழி பண்ணை வியாபாரம் கூட நட்டமடையும். மாடுகளுக்கு ஆந்தராக்ஸ் வந்தால் பால் பண்ணை வியாபாரம் கூட நட்டமடையும்.
                    இலாபம் வரும்போது வரும் மொத்த லாபத்தையும் பங்கு பட்டுக்கொண்டு பூஜ்யமாக வைத்திருந்தால் நட்டம் வரும்போது கம்பெனியை இழுத்து மூட வேண்டும். இலாபம் வரும் வேளையில் குறிப்பிட்ட அளவு சேமிப்பாக தனியாக எடுத்து வைத்தால் நட்டம் வரும் வேளையில் அது பயன் தரும்.

                    இதில் நான் சொல்வது நேர்மையாக நடக்கும் கம்பெனிகள் பற்றி தான். ஊரை அடித்து உலையில் போடும் மல்லையா வகை கம்பெனிகள் பற்றி அல்ல.

                    • டி கடை நடத்தும் தகுதி கூட அறவே இல்லாத இவர்கள் , தத்துவத்தை பேசி கம்ம்யூனிச ஆட்சி அமைத்த பிறகு ரூலிங் கிளாசாக மாறிவிடுவார்கள் . மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று இவர்கள் முடிவு செய்து தொல்லை கொடுப்பார்கள். கேள்வி கேட்டால் முதலாளிகளின் கைக்கூலிஎ பாட்டாளிகளை புரிந்து கொள் , என்று லேபர் கேம்பில் போடுவார்கள்

                    • Raman,

                      // டி கடை நடத்தும் தகுதி கூட அறவே இல்லாத இவர்கள்//

                      அப்படிப்பட்ட எங்களிடம் வருடக்கணக்கில் மல்லுக்கட்ட வேண்டிய அவசியமென்ன. உங்கள் வேலையைப்பார்த்துக்கொண்டு போக வேண்டியதுதானே.
                      நாலு வரி பின்னூட்டம் போடவேண்டியது. பதில் சொன்னால் அதற்கு பதில் சொல்லும் நாணயமில்லை. வேறு கிளைக்குத் தாவவேண்டியது. அப்படியே சுற்றிச் சுற்றி வரவேண்டியதுதான். என்ன பிழைப்பு இது.

            • \\ உலகம் முழுவதும் கோழி முட்டைகள் ஒரே விலையில் இருக்க வேண்டும் என்று கூறியது நீங்கதானே\\

              இராமன், புரியவில்லையென்றால் இரண்டு ஆம்லேட்டுகளை தின்றுவிட்டு திருப்பியும் படிக்கலாம். டாலரின் ஏகாதிபத்தியம் கோழிமுட்டையையும் விட்டுவைக்கவில்லை என்பதுதான் சொல்லவருகிற செய்தி. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு நாணயம் இருப்பது என்பதை கேலிக்கூத்தாக ஆக்கிவைத்திருப்பது ஏகாதிபத்தியம் தான்.

              1டாலர்=63 ரூபாய் என்பதற்கும் இந்திய உற்பத்திக்கும் என்ன தொடர்பு? 1டாலரின் உண்மையான பயன் மதிப்பு என்பது என்ன? காகிதத்தில் பிராங்களின் படம் போட்டு அச்சடித்து அதற்கு ஈடாக கடன்பத்திரம் வழங்குகிற, கணினியில் மட்டும் வெறும் எண்களாக விளங்குகிற, பங்குச்சந்தயை நிலைகுலையச்செய்கிற, உழைப்போடு உற்பத்தியோடு தொடர்பில்லாத ஏகாதிபத்தியம் தான் இது. ஏகாதிபத்தியம் இருக்கும் வரை உலக கரன்சி என்பது சுரண்டுவதற்குத்தான்.

              அதனால் தான் உங்களைப்போன்ற முதலாளித்துவ அடிவருடிகள் டிசிஎஸ்எஸ்ஸை எதிர்த்து போராடினால் டிசிஎஸ் இந்தியா அல்லாமல் பிலிப்பைன்ஸ் போகும் என்று திமிராக கூறியது. அதவாது கூலி ரூபாயிலோ பேசோவிலோ இருக்கும் ஆனால் இலாபம் டாலரில் இருக்கும் என்கிற உங்களது நக்கத்தனம் மறுகாலனியாதிக்கத்தை தரகுமுதலாளித்துவத்தை சரியென்று நியாயப்படுத்தியது.

              இவ்விதம் ஒரு சகமனிதனாக மதிப்பதற்கு ஒவ்வாத அறுவெறுப்பை நியாயப்படுத்துகிற உங்களைப் போன்ற பிழைப்புவாதிகளைப் பார்த்துதான் ஒட்டுமொத்த மென்பொருள் தொழிலாளர்களே மோசமானவர்கள் என்று பக்கத்து பதிவில் காறித்துப்பியிருக்கிறார்கள். இவய்ங்களுக்காகவெல்லாம் போராட வேண்டுமா என்று கேட்கிற குரல் உங்களைப்போன்ற பிழைப்புவாதிகளால் தான் விளைகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளட்டும். மற்றபடி மூலதனத்திற்கு எதிரானபோர் உலக கரன்சி என்ற ஒன்றை வைப்பதால் வந்துவிடாது.

              • கடைசி வரியை “மற்றபடி மூலதனத்திற்கு எதிரானபோர் உலக கரன்சி என்ற ஒன்றை வைப்பதால் நின்றுவிடாது” என்று திருத்திவாசிக்கவும்.

            • “ஆசைகள் தான் மனித குலத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கின்றன. இதை பத்தாயிரம் வருட வரலாற்றை ஆராய்ந்தவர் கூறியது.” என்று சொல்கிற இராமன் முதலில் கம்யுனிசம் ஆசைகளை கட்டுப்படுத்துகிறது என்று சொன்னார். இல்லை நாங்கள் தொழிலாளிகளின் ஆசையை அங்கிகரித்து, ஊக்குவித்து உளப்பூர்வமான திடப்பொருளாக மாற்றுகிறோம் என்றால் இப்பொழுது பேராசை என்கிறார். அதாவது அம்பானிக்கு டாட்டாவுக்கு இருப்பது ஆசையாம். ஆனால் தொழிலாளிக்கு இருப்பது பேராசையாம். அது பணிபாதுகாப்பு, முதலாளிகளின் லாப வெறி எனும் கோசத்தில் ஒளிந்திருக்கிறதாம்.

              சரி ஏற்றுக்கொள்வோம். பேராசையின் இலக்கணம் தெரிந்திருப்பதால் தொழிலாளி முதலாளியை வீழ்த்துவதும் இயல்பே என்கிறோம். எப்படி பெயர் கொடுத்தாலும் கவுந்தியடிகள் போன்று கம்யுனிசம் ஆசையை கட்டுப்படுத்துகிறது என்று அவப்பிரச்சாரம் துர்வாசமுனிவரின் சாபத்தால் இவ்விதம் நீங்கியது! நன்றி!

              • புதிய பொருள் படைக்க வேண்டும் , மனித வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்னும் ஆசை முதலீட்டு தத்துவத்தில் நடப்பது

                பணி பாதுகாப்பு என்னும் பெயரில் உழைக்காமல் , அடுத்தவர் உழைப்பை சுரண்டி சுகபோகமாக வாழலாம் என்னும் ஆசை சோசியலிசத்தில் நடப்பது .

                நீ இதைதான் செய்ய வேண்டும்,இப்படிதான் வாழவேண்டும் என்று அடுத்தவனை மிரட்டும் ஆசை கம்ம்யூநிசதிற்கு உரியது

                எல்லோரும் என் கடவுளை வணங்கி , நான் படிக்கும் புத்தகம் படித்து , ஏன் மத சட்டப்படி மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்னும் ஆசை மதவாதிகள் உடையது

                எல்லா ஆசையும் ஒன்ராகிவிடாது

                • /புதிய பொருள் படைக்க வேண்டும் , மனித வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்னும் ஆசை முதலீட்டு தத்துவத்தில் நடப்பது……….//

                  Well Said Mr.Raman… இன்று உலகில் இருக்கும் அளப்பரிய அறிவியல் கண்டுபிடிப்புகளில் எத்தனை சதவிகிதம் சோஷலிச ரஷ்யாவிலும், சென்சீனத்திலும் கண்டுப்பிடிக்கப்பட்டது என்று கூற முடியுமா? இன்று தோழர்கள் முதலாளித்துவத்தையும் அதனை பின்பற்றும் நாடுகளையும் திட்டித் தீர்ப்பதற்கு பயன்படுத்தும் கணினியும், அதனை தாங்கி வரும் மென்பொருளும், இணையமும் எந்த நாட்டின் கண்டுபிடிப்புகள்? சாதாரண குண்டூசி முதல் தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஹிக்ஸ் போசான் அணுத்துகள் வரை அனைத்து விஞ்ஞான கண்டுபிடிப்புகளையும் செவ்வனே செய்வது மேற்குலக முதலாளிய நாடுகளே!!! இன்றைய நாகரீக வளர்ச்சியின் உச்சங்கள் என்று நாம் கூறிக்கொள்ளும் அனைத்தும் தனி மனித ஆசையின் விளைவுகள் தான். சமுகத்திற்காக உழைக்க வேண்டும் என்று கூப்பிட்டால் யாரும் உழைக்க முன்வர மாட்டார்கள். “நீங்கள் அரிசி எடுத்து வாருங்கள் நான் உமி எடுத்து வருகின்றேன். இரண்டையும் கலந்து ஊதி சாப்பிடலாம். சரியா? என்பதுப்போல தான் போய் முடியும்.

                  • நமது கம்மியுனிச நண்பர்கள் புழுத்து போன முதலாளித்துவ நாடுகள் என்று பழித்துரைக்கும் ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர் நலச்சட்டங்கள் மிக வலுவாகவே உள்ளன. அதே சமயம் சீனாவில் தொழிலாளர் நிலை கொத்தடிமை போல தான்.

                    என்னுடைய நண்பர் அயர்லாந்தில் இருந்து வந்தார். அவரிடம் தொழிலாளர் நலன் பற்றி உரையாடியபோது அவர் கூறினார், அங்கே தொழிலாளர் நலம், உழைப்புக்கு ஏற்ற ஊதியம், சரியான நேரத்தில் சம்பளம் இவை அனைத்தும் கட்டாயம் வழங்கப்பட வேண்டுமாம்.

                    • \\ நமது கம்மியுனிச நண்பர்கள் புழுத்து போன முதலாளித்துவ நாடுகள் என்று பழித்துரைக்கும் ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர் நலச்சட்டங்கள் மிக வலுவாகவே உள்ளன.\\

                      ஏனெனில் அங்கெல்லாம் இன்செண்டிவ் வாங்கித் தருகிறேன் என்று எந்த கங்காணிகளும் தொழிலாளர்களை ஏமாற்ற முடியாது. எப்பொழுது முதலாளித்துவம் தொழிலாளர்களை ஒன்றுகுவித்ததோ அப்பொழுதே அங்கெல்லாம் தொழிலாளர்கள் தங்களுக்கான அரசியல் போராட்டங்களை இடதுசாரிகளின் இயக்கங்கள் மூலமாக சாதித்துக்கொண்டார்கள். அமெரிக்காவின் தொழிற்சங்கமும் ஐரோப்பிய தொழிற்சங்கமும் ரசியப்புரட்சியின் காரணமாக பல போராட்டங்களை உள்வாங்க வேண்டியிருந்தது. சான்றாக 1920-1950வரை ரசியாவிலும் இன்னபிற முதலாளித்துவ நாடுகளிலும் தொழிற்சங்க போராட்டங்கள் என்னவாக இருந்தன என்பதை அக்குவேறு ஆணிவேராக படிக்க இயலும். முயற்சித்துப்பாருங்கள்.

                      \\ அதே சமயம் சீனாவில் தொழிலாளர் நிலை கொத்தடிமை போல தான்.\\

                      எலும்பில்லாத நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசும் என்பார்கள் இல்லையா? உங்களால் ஒரு நிமிடம் உங்கள் கருத்தில் நிற்கமுடியவில்லையே! சோசலிசத்தைப் பற்றி பேசுகிற பொழுது ஒரு காலத்தில் சீனாவில் சோசலிசம் இருந்தது இன்று ஏன் இல்லை என்று கேட்ட இதே க.கை இப்பொழுது சீனாவை கம்யுனிச நாடு என்று வரிந்துகட்டி எழுதுகிறார். இந்த பித்தலாட்டம் எதற்காக? சரி உங்கள் கருத்தின்படியே சீனாவில் தொழிலாளர் நிலைமை கொத்தடிமை போலத்தான் இருக்கிறது என்பதன் மூலமாக அது முதலாளித்துவ நாடு என்று ஏற்றுக்கொள்கிறீர்களா? சீன சோசலிச கால கட்டம் மீண்டும் வர வேண்டும் என்ற அபிலாசையில் இப்படிச் சொல்கிறீர்களா!!!!!

                      \\என்னுடைய நண்பர் அயர்லாந்தில் இருந்து வந்தார். அவரிடம் தொழிலாளர் நலன் பற்றி உரையாடியபோது அவர் கூறினார், அங்கே தொழிலாளர் நலம், உழைப்புக்கு ஏற்ற ஊதியம், சரியான நேரத்தில் சம்பளம் இவை அனைத்தும் கட்டாயம் வழங்கப்பட வேண்டுமாம்.\\

                      அயர்லாந்தில் கம்யுனிச அறிக்கை வெளியிடப்பட்டு பருண்மையாக விவாதிக்கப்பட்ட நூற்றாண்டு 19ஆம் நூற்றாண்டு. அப்பொழுது இந்தியாவில் நாம் என்ன செய்துகொண்டிருந்தோம்?. ஜமீந்தாரி, இரயத்துவாரி, மகல்வாரி என்று வரிகட்டி செத்துக்கொண்டிருந்தோம். நிலப்பிரபுக்கள் கசக்கிப்பிழிந்த காலம் அது. அன்றிலிருந்து இன்றுவரை இந்தியா தரகு முதலாளித்துவமாக மேற்குலகநாடுகளுக்கு பட்டறையாக கூலிச்சந்தையாக இருக்கிறது. இன்று இந்திய தேசியக்கொடி வெறும் பங்குச்சந்தைக்கான கொடியாக இருக்கிறது. தரகுமுதலாளிகளின் கூட்டிக்கொடுக்கும் வர்க்கம் தான் இன்றைக்கு ஆளும்வர்க்கமாகவும் இருக்கிறது. இங்கு தொழிலாளர் சட்டங்கள் அனைத்தும் கடுமையாகப்போராடிப்பெற்றவை. மேலாளர்களுக்கும் மேஸ்திரிகளுக்கும் கங்காணிகளுக்கும் அது தெரிந்திருக்கவாய்ப்பில்லை.

                  • நன்றி. அமெரிக்காவோடு வர்த்தக உடன்படிக்கை ஏற்படுத்தி கொண்ட க்யூபா, ஏற்றுமதி செய்ய வைத்து இருக்கும் கூட்டுறவு பொருள் சுருட்டு .

                    அமேரிக்கா க்யூபாவில் கம்யூட்டர் கார் செல்போன் விர்கபோகிறது

                    சிறிய தீபகற்பம் கொரியா கார் செய்கிறது , உலகத்திற்கே ஏற்றுமதி செய்கிறது .
                    ரஷ்ய கார் அல்லது செல்போனே கேள்வி பட்டு இருகிறீர்களா?

                    • \\ அமெரிக்காவோடு வர்த்தக உடன்படிக்கை ஏற்படுத்தி கொண்ட க்யூபா, ஏற்றுமதி செய்ய வைத்து இருக்கும் கூட்டுறவு பொருள் சுருட்டு . அமேரிக்கா க்யூபாவில் கம்யூட்டர் கார் செல்போன் விர்கபோகிறது\\

                      இது இராமனின் நக்கத்தனமா அல்லது அமெரிக்காவின் நக்கத்தனமா என்று தெரியவில்லை. ஏனெனில் கேவலம் சுருட்டு கிடைக்காமல் மூஞ்சி வீங்கி செத்தாலும் பராவாயில்லை என்று அமெரிக்க முதலாளிகள் கியுபாவின் மீது பொருளாதாரத் தடையை இத்துணை ஆண்டுகள் போட்டிருப்பார்கள் போலும். இப்பொழுது என்ன காரணத்தினாலோ இராமனின் கருத்துப்படி அமெரிக்கர்கள் சுருட்டைப் பெற்றுக்கொண்டு அதற்கு மாற்றாக கம்பூயுட்டரையும் செல்போனையும் விற்க முன்வந்திருக்கிறார்கள். கியுபாவின் சுருட்டுக்கு அத்துணை மதிப்பா?

                      ஒரு வேளை இராமன் புளுகுகிறாரோ? ஏனெனில் கியுப தேசிய முதலாளிகளை வளைத்துப்போட்டு சர்க்கரைக்காகவும் கச்சாப் பொருளுக்காகவும் அமெரிக்கா, நாயைப் போல தொங்கிக்கொண்டிருப்பது தான் தென்அமெரிக்க நாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியம் சொல்லும் செய்தியாகும். ஈக்குவேடாரிலிருந்து பெரு சிலிவரை பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலத்தில் ஜான்பெர்கின்ஸ் அமெரிக்காவின் நக்கத்தனத்தை அம்பலப்படுத்தி பத்தாண்டுகள் ஆகப்போகிறது.

                      இராமனோ பிடல் காஸ்ட்ரோ குடித்துப்போட்ட எச்சி சுருட்டில் இப்பொழுதுதான் ஒரு இழுப்பு இழுத்துப் பார்க்கிறார்!

                      \\ சிறிய தீபகற்பம் கொரியா கார் செய்கிறது , உலகத்திற்கே ஏற்றுமதி செய்கிறது .\\

                      கொரியா கார் செய்வதற்காகத்தான் உருவாக்கப்பட்டது. உலக ஏகாதிபத்தியத்தின் நிதிமூலதன வங்கமூலதனத்தின் கேந்திரம் கொரியா மட்டுமல்ல; சிங்கப்பூரும் தான். நிதிமூலதனத்திற்காக அமெரிக்கா வைத்திருக்கும் அரசியல் செட்டப்தான் கொரியா. இதையெல்லாம் வளர்ச்சி என்று சொன்னால் தண்ணீரின் ஈரப்பசை இருக்கும் இடமில்லாமல் படரும் பாசிகளும் பூஞ்சைகளும் தான் முதலாளித்துவத்தை விட உலகின் வலிமையான ஜீவராசிகளாக இருக்க முடியும். எதற்கும் இட்ச் கார்டு வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் மனித அங்கங்களில் பூஞ்சான் படர்ந்தாலும் அதையும் வளர்ச்சி என்று சொல்வதற்கு முன் அரிப்பை நிறுத்துவது அவசியமாகும்.

                      \\ ரஷ்ய கார் அல்லது செல்போனே கேள்வி பட்டு இருகிறீர்களா?\\

                      ரஷ்யாவில் காரோ செல்போனோ இல்லாமல் இருப்பதால் தான் நேட்டோ நாடுகள் புறவாசலில் ரசியாவிடம் கையேந்தி நிற்கிறதா? ரசியா இன்றைக்கு அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியமாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஓர் அழுத்தம் கொடுப்பதை பார்க்கிற பொழுது ரசிய முதலாளித்துவத்திற்கு இராமன் இன்னேரம் சப்புக்கொட்டியிருக்க வேண்டுமே? இங்கு மட்டும் ஏன் மிஸ்ஸிங்? பிரான்ஸ் அதிபர் ரசியாவின் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படவேண்டும் என்று அறிக்கைவிட்டு உலர்வதற்கு முன்னமே அங்கு நடந்த தாக்குதலுக்கு ஏமன் நாட்டு அல்-கைதா பொறுப்பேற்றிருக்கிறதே! ஆக ரசியவோ அமெரிக்கவோ பிரான்சோ இன்னபிற முதலாளித்துவ நாடுகளின் ஏகாதிபத்தியம் நாய்ச்சண்டையாக நடந்துகொண்டிருக்கிற பொழுது பித்துக்குளியாக ரசியாவில் கார் செல்போன் கேள்விபட்டிருக்கிறீர்களா என்று கேட்கிற பொழுது எள் காய்கிற இடத்தில் எலிப்புழுக்கைக்கு என்ன வேலை என்பதைத் தான் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. இந்திய அறிவு சீவி வர்க்கத்தின் நுகர்வு மனநிலைக்கு இது மற்றுமொரு சான்று.

                    • தென்றல் அவர்களின் கருத்துக்கு பின்னூட்டமிடும் Reply பொத்தானை காணவில்லை. அதனால் தனியாக பின்னூட்டமிடுகிறேன். வினவு தளத்தில் தென்றலுக்கு யாரும் பதில் சொல்லக்கூடாது என்று ஏதாவது சட்டம் உள்ளதா தெரியவில்லை 🙂

                      தென்றல் அவர்கள் ஊக்கத்தொகை பற்றி நான் குறிப்பிட்டதற்கு ஏன் இத்தனை கோபப்படுகிறார் என்று தெரியவில்லை. என் குழுவில் உள்ளவர்களுக்கு சம்பளம், பி.எப். விடுமுறைகள், விடுமுறை சம்பளம், மருத்துவ காப்பீடு, போன்ற அனைத்தும் வழங்கப்பட்டு மேற்கொண்டு அவர்களின் திறமையை வளர்த்துக்கொள்வதற்கு ஊக்குவிப்பதற்காக ஊக்கத்தொகை மற்றும் தனி மனித ஆற்றல் பரிசு, குழு பரிசு என்று வழங்கினேன். இதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர் ஒவ்வொரு பதிவிலும் கண்காணி என்றும் ஏமாற்றுகிறேன் என்றும் அவதூறு பரப்புகிறார்.
                      ஏன் தென்றல், உலகில் நீங்கள் மட்டும் தான் உத்தமர், மற்றவர் அனைவரும் அயோக்கியர் என அரவிந்த் கேஜ்ரிவால் போல இருக்கிறீர்கள்? இதற்கு நண்பர் யுனிவற்பட்டியும் நன்றாகவே ஜால்ரா தட்டுகிறார்.

                      நான் சொல்ல வந்த முக்கிய கருத்தை தென்றல் திசை திருப்புகிறார். அயர்லாந்து நாடு தங்களை பொறுத்தவரை முதலாளித்துவ நாடு. சீனா, ரசியா கம்மியுனிச நாடு (உண்மையோ, போலி கம்மியுநிசமோ, அது அவரவர் பார்வையை பொருத்தது). ஆனால் முதலாளித்துவ அயர்லாந்தில் தொழிலாளர் நல சட்டங்களுக்கு இருக்கும் வலிமை கம்மியுனிச சீனாவில் உள்ளதா? இல்லை.

                      ஜனநாயகத்தை பின்பற்றுகிற நாடுகளிலும் மக்கள் நலமாக வாழ்கிறார்கள். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இந்த வகையை சேர்ந்தது. அங்கு தொழிலாளிகள் நலம் காக்கப்படுகிறது.
                      முதலாளித்துவதை பின்பற்றுகிற சில நாடுகளில் மக்கள் சில அவதிப்படுகிறார்கள். அமெரிக்க மக்களின் தற்போதைய நிலை இதை தான் காட்டுகிறது.
                      கம்மியுநிசத்தை உண்மையாக பின்பற்றுகிற நாடுகளில் (அப்படி ஒன்று உண்டென்றால்) மக்கள் நலமாக வாழ்வார்கள் என்று தென்றல் கூறுகிறார். (ஆனால் தற்போதைய உலகில் அப்படிப்பட்ட நாடு ஒன்றை காட்டுவாரா, தெரியவில்லை).
                      கம்மியுநிசத்தை பெயரளவில் வைத்துக்கொண்டு உண்மையில் சர்வாதிகாரம் நடைபெறும் நாடுகள் பல இந்த உலகில் உள்ளன. சீனா, ரசியா, கியூபா, வடகொரியா, இவை அந்த வரிசையில் வரும்.

                      இவற்றுக்கு எல்லாம் இடையில் சோசியலிசம் என்று பெயரளவில் வைத்துக்கொண்டு இந்தியா இரண்டுக்கும் நடுவில் இருக்க முயற்சித்து இடைப்பட்ட நிலையில் உள்ளது.

                      மக்கள் நலன், தொழிலாளர் நலன், உழைப்பாளர் நலன் பேணும் ஒரு அரசு ஜனநாயக வழியில் ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் கம்மியுநிசத்தில் ஜனநாயகம் பின்பற்றப்படுகிறதா, தெரியவில்லை, தென்றல் தான் விளக்க வேண்டும்.

                      கம்மியுநிசத்தில் உள்ள நல்ல விடயங்களை நான் ஆதரிக்கவே செய்கிறேன். அதை பல பதிவுகளில் வெளிப்படையாகவே கூறியிருக்கிறேன். அதில் ஜனநாயகம், கருத்து சுதந்திரம், தனி மனித உரிமைகள் முடக்கப்படலாம் என்ற அய்யம் உள்ளது.
                      என்னை பொறுத்தவரை தேர்தல் முறை ஜனநாயகம் என்பது ஒரு சிறந்த ஆட்சி முறை தான். ஆனால் தவறான ஆட்கள் கையில் ஆட்சியை நாம் ஒப்படைத்து அதற்கான தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். அதை ஜனநாயக முறையில் எப்படி சரி செய்வது என்று யோசிக்கலாம். கம்மியுநிசத்தில் உள்ள நல்ல விடயங்களை தேர்தல் முறை ஜனநாயக ஆட்சியில் எப்படி கொண்டு வர முடியும் என்று ஆக்கபூர்வமாக யோசிக்கலாமே நண்பர்களே.

                    • KK,

                      //Reply பொத்தானை காணவில்லை.//

                      Nesting comment has a limit of levels. This is not hard to observe and guess. At least you could have informed Vinavu about the missing button neutrally without your loose-talk. But Alas, it is not your type. I have already seen you do such loose-talk in our previous series of discussion and remarked about it.

                      By the by,

                      One thing has to be appreciated. You have come to this LEVEL for the first time. 

            • Raman,

              // பி எஸ் ஏன் எள் சர்வீசு எப்புடி ?//

              The admin class should take the major portion of the blame. This shows the ineptness of our ruling class. Our ‘Indian Culture’ is also involved in it.

              // அம்பாசிடர் கார் , பஜாஜ் ஸ்கூடர்//

              All our new vehicles have come past these pioneers. Automobiles can last for more than 100 years. Junking them in few years is costly environmentally, etc.

              New cars offer nothing more than some cosmetic changes (new body design, audio, video, etc). They may be speedier. But, in Indian condition, we hardly need this extra speed. Most of our streets are just bumps and pot holes at every few feets. We cannot drive without breaking and changing gear and we can hardly drive at more than 30-40 km. In main roads, which are little better, congestion forces the vehicles to go at even slower pace.

              //decision making process in govt entity was too slow while technology moved so quick //

              Technology moving too quickly is a recent trend or probably a series of accidents like pile-up.

              //product made by or innovated by Govt projects//

              Till now most of the research is done in govt funded universities, research institutions and projects. The recent developments in Telecommunication, Computer, etc. are possible only with govt and military involvement. So, the fruits are from public property. All these developments are used by private businesses after some changes (mostly cosmetic and gimmicks) to patent and exploit. They too get their funds from national bank loans and such sources.

              Soviet has invented and innovated a lot. The fact that you have not heard of them does not make them non-existent. Some well-known soviet names are Mig, AK47, etc. Volkswagen [People’s car] was originally founded in 1937 by the German Labour Front for producing cars for common people as against luxury models.

              //Amul *** they dont need to innovate in the product level//

              Our food is from nature. We need not do anything more than simple processing and preservation. What privatization (even Amul) has added are some gimmicks and lots of chemicals, packaging and advt.

              //உணக்ளுடைய பதிலில் அடுத்தவர்களுடைய உழைப்பை திருடி தின்ன வேண்டும் என்கின்ற ஆசையும் வெறியும் தான் கண்ணில் பட்டது//

              யார் யாருடைய உழைப்பை திருடித்தின்கிறார்கள் என்பது பற்றி முன்னர் வந்த பதில்களில் இருக்கிறது. அதற்கு பதில் கூறாமல் அப்படியேத் திருப்பிப்போடுவது சில்லறைத்தனமாக இருக்கிறது.

              To be continued…

              • //The admin class should take the major portion of the blame. This shows the ineptness of our ruling class. Our ‘Indian Culture’ is also involved in it.//

                It is called Socialist culture. If you want to get more feel visit Venezuela

                //All our new vehicles have come past these pioneers. Automobiles can last for more than 100 years. Junking them in few years is costly environmentally, etc//

                ஒரு ஆணியும் புடுங்குல .ஆனா என்விரான்மெண்ட் அப்பிடின்னு வியாக்கியானம் .

                அப்படின்னா எல்லோரும் உழவு தொழில் பண்ணி ஆதிவாசிகளா திருஞ்சா சுற்று சூழலை நல்லா பாதுகாக்கலாம் . நீங்க கட்ட வண்டி பயன்படுத்துங்க . சைக்கிள் பண்ணுவதற்கு கூட சுற்று சூழலை மாசுபடுத்த வேண்டி வரும்

                //olkswagen [People’s car] was originally founded in 1937 /

                Ford model T கேள்விப்பட்டு இருக்கீங்களா !

                //We need not do anything more than simple processing and preservation/

                மூன்னு வேளை சாப்பாடு இருந்தா போதும் எதுக்கு இதெல்லாம் என்னும் சிந்தனை கொண்ட பண்டாரங்கள் தனித்து அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்வது தவறில்லை .
                ஆனால் மற்றவர்கள் மீது தங்களது கருத்துகளை திணித்து எல்லோரும் அப்படிதான் வாழவேண்டும் என்னும் போது தான் எதிர்க்க வேண்டி இருக்கிறது.

                உங்களுக்கு வாழ்கையில் எந்த சொபிச்டிகேசனும் வேண்டாம்னா ,சந்தோசம். அந்தமான் ஆதிவாசிகளாக சமத்துவமாக வாழுங்கள் வாழ்த்துக்கள்

                • Raman,

                  // Socialist culture//

                  இங்கே தான் உங்கள் பித்தலாட்டம் வருகிறது. நேருவின் இந்தியா சோசலிச இந்தியா என்று சொல்லிக்கொண்டாலும் அது அப்படி இருக்கவில்லை. குறிப்பாக அதிகார வர்க்கம் அப்படி இருக்கவில்லை. பொது நலனைப்பற்றியெல்லாம் சிந்திக்கும் அளவுக்கு அவர்களுக்கு இதயமில்லை. பைலை தனது மேசையிலிருந்து நகர்த்துவதற்கு பதிலாக தனது பின்புறத்தில் போட்டு அமுக்கிக்கொண்டு உட்கார்ந்தவர்கள் அவர்கள். அவர்களுக்கு சோசலிசத்தின் மீது எந்த அக்கறையும் இல்லை.

                  // சைக்கிள் பண்ணுவதற்கு கூட சுற்று சூழலை மாசுபடுத்த வேண்டி வரும்//

                  நான் சைக்கிள் பண்ணுவதையோ கார் பண்ணுவதையோ எதிர்க்கவில்லை. ஆனால் பின்விளைவுகளைக் கருத்தில் கொண்டு அத்தியாவசிய எண்ணிக்கையில் செய்வதையும், செய்ததை முடிந்த வரை பொதுவாக பயன்படுத்தவதன் மூலம் அவற்றின் தேவையை குறைத்து அவற்றிலிருந்து அதிக பலன் பெறுவதையும், அவற்றின் முழு ஆயுள் காலத்திற்கும் பயன்படுத்துவதன் மூலம் கூடுதல் தேவையை தவிர்ப்பதையும் தான் விரும்புகிறேன்.
                  நாங்கள் வளர்ச்சிக்கு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு எதிரானவர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதும் மோசடிதான். பொதுவுடமையில் மனிதர்கள் மேலும் அதிக அளவில் நமது வாழ்க்கையை மேம்படுத்த முயல முடியும். வாய்ப்புகள் உங்களது கற்பனைக்கும் எட்டாதது.

                  // மற்றவர்கள் மீது தங்களது கருத்துகளை திணித்து//

                  இயற்கை வளங்களை பொதுவில் வைத்த பிறகு மற்றவர்களுக்கு பொது நலனுக்கு இடையூறு இல்லாத வகையில் அவரவர் தங்கள் தங்கள் வழிகளைப் பின்பற்றலாம். முன்னரே கூறியதைப்போல, சிக்னலில் பச்சைவிளக்குக்காக காத்திருப்தை யாரும் தவறென்று சொல்வதில்லை. ஆனால் 100 ஆண்டுகளுக்கு முன்னர் இதன் தேவையே எழவில்லை.
                  இயற்கை வளங்களின் மீது எல்லோருக்குமான உரிமை என்ற பழைய பிரச்சனை தீர்க்கப்படவில்லை. இதை ஏற்றுக்கொள்கீறீர்களா இல்லையா. நிலம் நீர் சீர்கேடு போன்ற புதிய மாற்றங்களும் புதிய சிக்கல்களும் நம்மை பொதுஉடமையை நோக்கி தள்ளிக்கொண்டு இருக்கின்றன. பிரிந்து பட்ட நிலையில் எவ்வளவு நாள் நாம் தாக்குப்பிடிக்கப்போகிறோம் என்பது கடினமான கேள்விதான். நாங்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கவிரும்புகிறோம்.

                  // சொபிச்டிகேசனும் வேண்டாம்னா //

                  What is sophistication, particularly in food and life style? Today, many diabetes patients eat ‘kazhi’, loose their toes and foot. Many obese persons literally live wasted lives as couch potatoes. Due to lot of packed snacks, children don’t feel hungry and young mothers find it hard to make their children eat. This is not sophistication for me.

        • தென்றல் அவர்கள் முதலாளித்துவத்தை முழுதும் தவர்த்த கம்மியுனிசம் என்பது இறுதி குறிக்கோள், சோசலிசம் என்பது கம்மியுநிசத்தை அடைவதற்கான இடைநிலை குறிக்கோள் என்று கூறுகிறார்.

          சரி, அதற்கான வழிமுறைகள், முதல் படி, இரண்டாம் படி, இப்படி படிப்படியாக என்ன முன்னேற்றம் நிகழும் என்பதற்கு படிப்படியான இடைநிலை குறிக்கோள்கள் உள்ளதா?
          அது நிகழ்வதற்கு கால வரைமுறை உள்ளதா?

      • கற்றது கையளவு அவர்களே, விடிய விடிய கத கேட்டீங்க. விடிஞ்சப்புறம் சீதைக்கு ராமன் சித்தப்பூனு ஒரே போடா போட்டீகளே………………!!!!!!!!!!

          • க.கை,
            பல திரெட்டுகளில் பின்னூட்டங்கள் விழுவதால் எதன்கீழ் என்னோடது வருதுன்னு புரியாம போவுது.

            //நட்டமடையாமல் ஒரு தொழிலை, சோஷலிச சோதனை முறையில் நடத்துங்கள். அதன் வெற்றியை மக்களிடம் காட்டுங்கள். பின் ஒவ்வொரு தொழிலாக சோஷலிச முறையில் தொடரலாம்.//

            தென்றல் எல்லாத்தையும் விளக்கினப் பிறகும், இது வொர்கவுட் ஆகாதுன்னு உதாரனத்தோட விளக்கினப்புறமும் மேற்கண்ட பின்னூட்டத்தை போட்டிருக்கீங்க. அதனால் சொன்னேன். இதன்பின்னும் மாற்றம் இல்லைனா நா ஒன்னும் சொல்றதுக்கில்ல.

            • சரவெடி,

              தென்றல் அவர்கள் கம்மியுநிசத்தின் குறிக்கோளை அடைய முதலில் சோசலிசம் தேவைப்படுகிறது என்று கூறுகிறார்.

              ஆனால் அவர் கொடுத்த நீண்ட விளக்கங்களை காணும்போது நம் வாழ்நாளில் அந்த குறிக்கோளை அடைய முடியுமா, தெரியாது. எந்த ஒரு குறிக்கோள் என்றாலும் அதனை படிப்படியான சிறு சிறு இடைநிலை குறிக்கோள்களாக பிரித்து அதனை எந்த சமயத்தில் அடைய முடியும் என்ற சீரான திட்டம் அமைக்க வேண்டும்.

              தாங்கள் சொல்லும் இறுதி குறிக்கோளை அடைய என்ன வழியை வைத்திருக்கிறீர்கள்? உலகின் ஒட்டுமொத்த கடலின் அலைகளும் ஓய்ந்த பின்னர் கரையை நான் கடப்பேன், ஆனால் நிச்சயம் ஒரு நாள் கடப்பேன் என்று கூறுகிறீர்கள். கரையை கடப்பதற்கு ஓட்டையில்லாத ஒரு படகை தாங்கள் வைத்திருக்கிறீர்களா, என்று கேட்கிறேன். இல்லை அப்படிப்பட்ட படகு ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ரசியா, சீனாவில் கட்டினார்கள் என்கிறீர்கள். சரி, அந்த படகு இப்போது பயன்படுத்தப்படுகிறதா என்று கேட்டால் சில காலம் பயன்படுத்தினார்கள் ஆனால் அந்த கப்பலை பயன்படுத்தியவர்கள் இப்போது அதை பயன்படுத்தவில்லை, காரணம் கப்பலில் இருந்த சிலர் அந்த படகில் ஓட்டை போட்டு விட்டார்கள் என்கிறீர்கள். தாங்கள் கட்டும் கப்பல் ஓட்டையில்லாத கப்பலாக இருக்குமா, தொலைதூர பயணத்தை தாங்கும் கட்டுமானம் உள்ளதா என்று கேட்டால் அதை தவறு என்று சொல்கிறீர்கள். எங்களை போன்ற பொதுமக்கள் அந்த படகில் பயணம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்கிறீர்கள். ஆனால் அந்த படகு உண்மையிலேயே கடலில் செல்ல தகுதி வாய்ந்ததா என்று நாங்கள் சோதிக்க கூடாது என்கிறீர்கள்.

              முதலில் தங்களது படகை கண்ணில் காட்டுங்கள். அலை ஓய்ந்தால் தான் படகை காட்டுவேன் என்று விதண்டாவாதம் பேசாதீர்கள். சரி, படகை எப்போது கட்டுவீர்கள், எப்படி கட்டுவீர்கள் என்று சொல்லுங்கள். தங்களது பதிலுக்காக காத்திருக்கிறேன்.

      • KK,

        // நட்டமடையாமல் ஒரு தொழிலை, சோஷலிச சோதனை முறையில் நடத்துங்கள். //

        You have gone back to square 0 and want us to create a model.

        Thendral has replied to this. Search for ‘முதல் கேள்வி’ and ‘தீம் பார்க்’ and read the relevant replies again. I too have replied. Let me add few more points.

        As for models, the current Govt enterprises like railway are already socialist models created by natural resources (public property) and labor from common people. Amul is another one in cooperative sector. We have cooperative sugar mills too. But, the private property system works in a way so as to break the public and cooperative enterprises so that they can be privatized by few. With the connivance of bone-loving dogs guarding the positions, this is done ever since the Governments came into being and the current status is 95 % of the resources are controlled by 5%.

        Why common ownership?

        The predators claim a territory to themselves. They mark the territory by spraying their urine on the ‘out-posts’ (trees, rocks, etc). The extent of a territory is related to the population of prey that the territory can sustain so that the preys can sustain the predator with enough preys. Each territory is guarded by mostly a lone male animal.

        Man is not a predator in the strict sense. He cannot piss mark a territory and protect it alone. He needs to be in group to face the real predators, hunt for food and survive. They worked together in group; shared the produce from their territory among themselves. This is by partnership that the human beings became masters of the earth. All the members of the group are none other than blood relatives. No individual can claim special ownership on natural resources (land, water, flora, fauna, minerals etc.). But, much later, it is with force and connivance of a clique that some individuals could claim and maintain special rights on these resources. This is the original conflict. This conflict is yet to be addressed. With each passing generation, the divide becomes wider. The phenomenon of large scale privatization of lands is only few centuries old.

        The knowledge of agriculture, animal husbandry, fishery, foundry etc were invented and innovated by our long gone parents and so they are our common property. Any new invention and innovation is based on them so they too are common property. The most of the inventors are not greedy to keep the fruits of their invention to themselves. The processes in industry are perfected and innovated continuously by the workers and in current system they don’t get to claim the ownership of their part.

        All capital comes from the lands and other natural resources and the human work applied on them. So, it is common to all. Private ownership, barring a reasonable space and resources, is unnatural and unjust. Dispossessed people have the right to reclaim their part. It is with the force that they were dispossessed and alienated from the resources. If it takes force to reclaim, so be it.

        While attending the short term goals of livelihood, the dispossessed should not lose sight of the ultimate goal. The workers always find a way, alone or in group, but they are constantly made to lose their independence by various means and become dependent on the haves. I have given you, in earlier discussion, an example of successful leather workers cooperative which was later ruined by the current government system. The fate of self-employed mechanic ராஜ் என்ற சுதர்சன் (refer a new post in Vinavu) is a very recent example. Till we settle the original conflict, the episodes like these are bound to repeat.

        To end:
        We now know very well what your questions are. We have provided our answers couple of times. Please don’t pose the same questions again after some time with the same pseudo (KK). Thanks a lot.

        • KK,

          எனது பதில்களில் ஏதேனும் நம்பத்தகுந்ததாக இருந்ததா?
          எனது பதில்களிலிருந்து ஏதேனும் புதிய கேள்விகள் உண்டா இல்லை நாம் நிறுத்திக்கொள்ளலாமா?

          • Univerbuddy,

            Let us face the facts. Lets be practical.
            Communism is not able to sustain in any one country in the world.
            Even if Communism is succeeding in our country, there is no guarantee that it will be sustainable. The Past history of communism is not that great, Sorry to say that, But we need to accept the facts present before us.

            Agreed, 100% Capitalism is not good for the country. But, Neither is 100% Communism any better.
            We have seen both extremes. All the explanations of you and Thendral still did not allay my fears about communism tightening the noose of democracy. I am not sure whether a Tienanmen square Massacre cannot be repeated again in a Communist rule.

            But nothing is lost, there is still hope.
            We can consider a Socialistic model which takes care of the basic needs of the common man, providing a safety net, at the same time providing ample freedom to entrepreneurs, with not too much interference from the government.

            Expecting the whole world to change to communism is just not practical.
            If it is practical, the general public would have embraced it and given it continued support.

            Let us move on, Life doesnt end here. Let us not be dogmatic and stick to a failed model.
            Let us try to make the model which is more effective, more acceptable to the general public.

            In this new model, let us find ways where the Mallaiyas and Ambanis are dealt with.

            In my opinion, the Cooperative model is best and can be tried in all industries to keep a leash over the greedy capitalists. If the end product of this Cooperative model is cheaper and better, the general public will go for it.

            This is what I am saying as being constructive. Find an Alternate model to provide the same products at a cheaper price, without compromising on the quality in the same democratic socialistic fabric.

            This is not impossible. Only we should find ways to do it. Thats all.

            • KK,

              Let me be brief.

              // Communism is not able to sustain//

              Man is a social animal. We are dependent on one another. We are already living in a community, ie., in communism with many services already in common. Only difference is some have more control over the fruits and abuse them while many hardly get their basic needs. It needs courage and imagination to see the true potential. It is not about few leaders with vision. It is about a mass of pioneers. Something gets practical when enough people practice it. Let it happen when it can happen. We are doing our part. I see you are an observer. Enjoy the show, heckle and boo. But, please don’t ever repeat the same questions and suggestions, again, for goodness sake, for we know them, by heart.

              // no guarantee that it will be sustainable//

              It IS sustainable. But it depends on the people inheriting the new system. This is beyond our control and so we need not worry. What we need to worry is to make the system as better as possible.

              // fears about communism //

              I would say tightening the belt for some and loosening the noose for many. By the by, what do you fear losing?

              // Tienanmen square Massacre //

              I am not sure about the extent of deaths. It is certain that the media around us is biased in this aspect. Governments all over the world do some measures to control the crowds and protests. China need not be judged differently.

              //We can consider a Socialistic model//

              This is exactly what we say. A model which takes care of the basic needs of all men, providing a safety net, at the same time providing ample freedom to entrepreneurs, with just enough interference from the government. The difference is very less. You need to explain why the difference is significant.

  26. தென்றல் அவர்களே,

    ஏழு இலட்சம் கோடியை ஈட்டிய எல்ஐசி அந்த பணத்தை தொழிலாளிகளுக்கு பங்கிட்டு தரவில்லை. தனது முதலாளியான இந்திய அரசுக்கு கொடுக்கிறது. தாங்கள் சொல்லும் கம்மியுனிச வழியில் இந்த ஏழு இலட்சம் கோடி எல்ஐசியில் வேலை செய்யும் தொழிலாளிகள், அதில் முதலீடு செய்த பொதுமக்கள் இவர்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டு, ஐந்து சதவீதம் மட்டும் அரசுக்கு செலுத்த வேண்டும். ஆனால் நடைமுறையில் அப்படி சாத்தியமா?

    //ஒரு சோசலிச தொழிற்சாலையின் உற்பத்தி பெருகினால் அதனால் கிடைக்கிற இலாபத்தில் தொழிற்சாலையை புணர்நிர்மாணம் செய்வதற்கு பயன்படுத்தவும், தொழிலாளர்களின் உடல் உழைப்பிற்கு விடுதலை அளித்து இயந்திரமயமாக்கவும் செய்கிறது. கவனிக்க; முதலாளித்துவம் இயந்திரங்களுக்காக தொழிலாளர்களை தூக்கி எறிகிறது. ஏனெனில் அதற்கு இலாபம் மட்டுமே முக்கியம். ஆனால் சோசலிசம் தொழிலாளர்களின் வாழ்விற்கும் பண்பாட்டிற்கும் இயந்திரங்களை ஊக்குவிக்குகின்றன. உற்பத்தியை ஒருங்கே குவிக்கின்றன. இவ்விதம் உற்பத்தியும் தொழிலாளர் நலனும் சோசலிசத்தில் ஒரு சேர பெருகுகின்றன. //

    இயந்திரமயமாக்குதல் எல்லா தொழிற்சாலையிலும் தற்போது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. மூட்டை தூக்கும் தொழிலாளிகளுக்கு பதில் மூட்டைகளை தூக்கும் போர்க் லிப்ட் இயந்திரங்கள் வந்துள்ளன, அவற்றை செயல்படுத்த திறமையான போர்க் லிப்ட் ஆபரேட்டர்கள் அந்த தொழிற்சாலைக்கு தேவைப்படுகிறார்கள். இந்த இயந்திரம் மூலம் வேலை பலமடங்கு அதிகமான வேகத்தில் முடிகிறது. சோஷலிச தொழிற்சாலைகளிலும் இப்போது போர்க் லிப்ட் பயன்படுத்தப்படுகிறது. அதனால் மூட்டை தூக்கும் தொழிலாளிகள் அழிக்கப்படுகிறார்கள் என்று கொள்ளலாமா? அந்த மூட்டை தூக்கும் தொழிலாளிகளுக்கு போர்க் லிப்ட் பயன்படுத்த கற்று தந்தால் போதுமே.

    • கற்றது கையளவு,

      எல்.ஐ.சி என்பது அரசின் கட்டுப்பாட்டில் இயங்க கூடிய ஒரு பொது துறை நிறுவனம். அது, பொது மக்களிடம் சேகரித்த அந்த ஏழு லட்சம் கோடிகலானது உண்மையில் மக்களின் நலனிற்கு திருப்பட்டிருக்க வேண்டும் மாறாக என்ன நடக்கிறது? பெருமுதலாளிகளின் நலனிற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.தோழர் தென்றலின் விளக்கப்படி, ஒரு பொதுத் துறை நிறுவனம் தனது கடமையை சரியான முறையில் நிறைவேற்றி ஏழு லட்சம் கோடியை அரசிடம் கொடுத்துள்ளது மாறாக டி.சி.எஸ் என்ற தனியார் நிறுவனத்தின் அதிகாரத்தில் இருப்பவர்கள் லட்சக்கணக்கான கொடிகளை தனியாக சுருட்டிக் கொண்டுள்ளனர்.நிலம்,நீர்,மின்சாரம்,மலிவான தொழிலாளர் என இந்த உள்நாட்டு வளங்கள் எல்லாம் தரகு முதலாளிகளிடம் தாரை வார்க்கபடுகின்றன. இங்கே அரசின் கொள்கை தனியார்மயமாக இருப்பதால் பொதுத் துறை நிறுவனங்கள் பொது மக்களிடம் சேகரித்த பணம் தரகு முதலாளிகளிடம் திருப்பப்பட்டுள்ளது. இதன் பின்விளைவுகள், எஸ்,பி,ஐ போன்ற பொது துறை வங்கிகள் சேகரித்த மக்களின் பணம் அதானி,மல்லையா போன்ற கொள்ளையர்களிடம் பறிபோகிறது. இது எதனால் என்று விடிய விடிய விளக்கியப் பின்னும் , இது சாத்தியமா என்று திரும்பவும் அரைத்த மாவையே தாங்கள் அரைப்பது ஏன்?

      சோசலிச சமுதாயத்தில் இது போல ஏற்றத் தாழ்வு இருக்காது. அதாவது ஒரு இடத்தில் இயந்திரமும் மறு இடத்தில் மனிதனும் ஒரே மாதிரியான வேலையை செய்யும் நிலைமை இருக்காது. சோசலிச சமூகத்தில், இயந்திரத்தால் மனிதனின் வேலை நேரம் குறையுமேத் தவிர அவனுக்கு வேலை பறிபோகாது மாறாக இந்த முதலாளித்துவ சமூகத்தில்,வேலை நேரமும் குறையாது ஆனால் தொழிலாளர்களின் வேலைகள் பறிக்கப்படும்.

      இயந்திரமயமாதலுக்கு பிறகு உண்மையில் என்ன நடந்திருக்க வேண்டும்? தொழிலாளர்களின் வேலை நேரம் குறைய வேண்டும் மாறாக குறைவது என்னவோ தொழிலாளிகளின் எண்ணிக்கை தான். இதை சொன்னால் உடனே வேலை நேரம் குறைந்தால் மக்கள் சோம்பேறி ஆகி விடுவார்கள் என்று கூறுவீர்கள். உண்மையில் தமது அடிப்படைத் தேவைக்கான உழைப்பின் நேரம் குறையக் குறைய மனிதர்கள் வேறு பல விடயங்களில் கவனம் செய்ய ஆரம்பித்து விடுவர். இது அறிவியல்,மருத்துவம்,கலைகள் இன்னும் பிற பிரிவுகளில் பெரும்பான்மையான மக்களின் உற்சாகமிக்க பங்களிப்பை அதிகரிக்கச் செய்யும்.

      ——-

      சோசலிச தொழிற்சாலையை பற்றி ஏற்கனவே தோழர் தென்றல் எடுத்துக்காட்டுடன் விளக்கியிருக்கிறார். இருந்தும் எனது சிறிய பதில் கேள்விகளுடன் கிழே.

      ஒரு சோசலிச தொழிற்சாலை என்பது தனித்து இருக்க முடியாது. எடுத்துக்காட்டாக ஒரு பிஸ்கட் செய்யும் ஒரு
      தொழிற்சாலையை எடுத்துக் கொள்வோம். ஆனால் அதற்கு தேவைப்படும் மூலப்பொருட்களை எங்கிருந்து பெறுவது? உற்பத்தி செய்யப்பட பிஸ்கட்டுகளை எங்கு விற்பனை செய்வது? அதற்கு விலையை நிர்ணயம் செய்வது யார்? முதலாளித்துவ சட்டங்கள் உள்ள நாட்டில் எப்படி சோசலிச தொழிற்சாலைகள் அமைப்பது?

      நன்றி.

  27. சிவப்பு அவர்களே,

    முதலாளித்துவ சட்டங்கள் உள்ள நாட்டில் சோஷலிச தொழிற்சாலைகள் அமைக்க முடியாது என்கிறீர்கள். அதே வழியில் பார்த்தோமானால் முதலாளித்துவ நாடுகள் நிறைந்த இந்த உலகில் ஒரு சோஷலிச நாடு என்ன செய்ய முடியும் என்று பேசலாம் அல்லவா?

    ஒட்டுமொத்தமாக உலகம் முழுதும் ஒரே சமயம் சோஷலிச, கம்மியுனிச உலகாக மாறினால் தான் நீங்கள் சொல்வது 1௦௦ சதவீதம் நிகழ சாத்தியம் உள்ளது.

    இல்லாத ஒன்றுக்கு ஏங்கிக்கொண்டே நோன்துகொண்டிருப்பதற்கு பதில் இருக்கும் ஒன்றை எப்படி செம்மையாக செயபடுத்தலாம் என்று தான் யோசிக்க சொன்னேன்.

    ஜனநாயகமும் சோசலிசமும் ஒன்றாக இருக்க முடியாது என்கிறீர்களா? இராபர்ட் ஓவன் என்ன சோஷலிச நாட்டில் அவரது முயற்சிகளை செய்து காட்டினாரா? முதலாளித்துவ நாட்டில் தானே அவ்வாறு செய்தார். அவரது முயற்சியில் நீண்ட நாள் வெற்றியை காண இயலவில்லை. அது ஏன், அதில் என்ன குறைகள் உள்ளன, அதனை நிவர்த்தி செய்தால் ஜனநாயக நாட்டிலும் சோஷலிச முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்.

    என்னை பொறுத்தவரை, மக்களாட்சியாக இருந்தாலும், மன்னராட்சியாக இருந்தாலும், கம்மியுனிச ஆட்சியாக இருந்தாலும், மக்கள் நலம் பேணும் ஆட்சியாக, மக்களின் ஜனநாயக உரிமைகளை காக்கும் அரசாக இருக்கும் பட்சத்தில் என் ஆதரவு எப்போதும் உண்டு.

    தற்காலத்தில் மக்களிடம் ஒரு வெற்றிகரமான சோதனை முயற்சி, இராபர்ட் ஓவனை போன்ற ஒரு முயற்சியை வெற்றிகரமாக மக்களிடம் நிரூபித்தால் ஒழிய மக்கள் பேராதரவு கிடைக்காது.

    நாட்டை ஆள்பவர்கள் நேர்மையானவர்களாக, மக்கள் நலன் மேல் அக்கறை உள்ளவர்களாக, ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கும் பட்சத்தில், அது யார் ஆட்சியாக இருந்தாலும் எனக்கு கவலையில்லை.

    • கற்றது கையளவு கேட்கிற இந்த கேள்விக்கு என்ன பதில்?

      \\முதலாளித்துவ நாடுகள் நிறைந்த இந்த உலகில் ஒரு சோஷலிச நாடு என்ன செய்ய முடியும் என்று பேசலாம் அல்லவா?\\

      கற்றது கையளவு அவர்களின் இந்தக் கேள்வி மையமானதும் முக்கியத்துவமானதும் கூட. இந்த கேள்வி என்ன சொல்கிறது? உலகமே ஏகாதிபத்தியமாக இருக்கிற பொழுது ஒரு சோசலிச நாடு எப்படி உருவாக முடியும் என்று நேரடியாகக் கேட்கிறது. அப்படி கேட்டுவிட்டு இல்லாத ஒன்றுக்காக ஏங்கிக்கொண்டு இருப்பதைவிட பதில் இருக்கும் ஒன்றை செம்மைப்படுத்துக என்று தன்முடிவை சொருகுவதில் முனைப்பாக இருக்கிறது. அதாவது முதலாளித்துவத்தை எதிர்ப்பது எல்லாம் வீண் வேலை என்கிறது.

      முதலில் இந்தக் கேள்வியின் தன்மையைப் பரிசீலிப்போம். அதற்காக க.கையின் கேள்வியை சற்று மாற்றிப்போடுவோம்.

      உலகம் முழுவதும் தீவிரவாதிகள் வெறியாட்டம் போடுகிறார்கள். ஆஸ்திரேலியாவில் மக்களைக் கொல்கிறார்கள் என்றெல்லாம் சரியாகச் சொல்கிற க.கை தாலிபானியத்தை கறாராகக் கண்டிக்கிறார். சரியாகச் சொல்வதென்றால் க,கையின் கறாரான நியாயம் உலகம் முழுவதும் வியாபித்திருக்கிற தீவிரவாதத்தைக் கண்டிக்கிறது. இங்கு தீவிரவாதத்தோடு நம்மை சமசரமாக செம்மைப்படுத்திக்கொண்டு கிடைப்பதை வைத்து வாழச்சொல்லவில்லை.

      ஆனால் இதே க.கையின் மனம், முதலாளித்துவத் தீவிரவாதம் உலகம் முழுவதும் வியாபித்திருக்கிற பொழுது இங்கு மட்டும் அதை எதிர்ப்பது வீண் வேலை என்றும் அது அழிக்கமுடியாத ஒன்று என்றும் அடித்துச் சொல்கிறது. இது பித்தலாட்டம் தானே? ஏகாதிபத்தியத்தின் செல்லப்பிள்ளையான தாலிபானியம் அழிக்க முடியும் என்றால் அதற்காக க.கை தன் கண்டனங்களையும் போராட்டங்களையும் இங்கிருந்தே தொடங்குவார் என்றால் அதே ஏகாதிபத்தியத்தின் முதலாளித்துவம் அழிக்கமுடியாத ஒன்றா?

      —————————————————————–

      இப்பொழுது கேள்வியின் பரிமாணத்தைப் பரிசீலிப்போம். இன்று நாடுகளுக்கான எல்லைகள் சுருங்கி சீர்மிகு முதலாளித்துவம், அழுகி நாறும் ஏகாதிபத்தியமாக மாறி நிற்கிறது (லெனின் காலத்திலேயே இப்படித்தான்). அப்படியானால் தன்னை கம்யுனிஸ்டு என்று சொல்லிக்கொள்கிற இயக்கம் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பாட்டாளிகளை படைதிரட்டவேண்டும். நமது புரட்சிகர இயக்கங்களைப் பார்த்தீர்களேயானால் தனியார்மயம், தாராளமயம், தரகுமுதலாளித்துவம் என்று சொல்கிற பொழுது கறாராக மறுகாலனியாதிக்கம் என்று ஏகாதிபத்தியத்தை வரையறுக்கிறார்கள். ஆக ஏகாதிபத்தியத்தை எதிர்க்காமல் தொழிலாளிகளுக்கு விடிவு இல்லை என்று தெரிகிறது.

      ஏகாதிபத்தியத்தை எப்படி எதிர்ப்பது என்ற கேள்விக்கும் லெனினியம் கறாராக பதில் சொல்கிறது. அது இரண்டாம் அகில சந்தர்ப்பவாதிகள் சொல்வதைப்போல ‘யுத்தத்திற்கு எதிராக யுத்தம்’ என்று சர்வதேச எல்லைகளில் நின்று கொண்டு நீரிலும் நிலத்திலும் ஏகாதிபத்திய எதிரிகளை தேடிக்கொண்டு நிற்பதில்லை. மாறாக ஒவ்வொரு நாட்டு பாட்டாளிவர்க்கத்தையும் அதன் ஆளும்வர்க்கத்திற்கு எதிராக நிறுத்துகிறது. ஏனெனில் ஒவ்வொரு நாட்டு ஆளும்வர்க்கமும் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள். ஏகாதிபத்தியத்தின்ன் கண்ணியை பாட்டாளிவர்க்கம் தன் நாட்டு ஆளும்வர்க்கத்தை எதிர்த்துப்போராடுவதன் மூலமாகத்தான் அறுக்க இயலும். ஆக மறுகாலனியாதிக்கம் என்று வரையறுத்து ஆளும்வர்க்கத்தின் மீது பலமுனைத்தாக்குதல் நடத்துவது ஒன்றே பாட்டாளிகளை ஏகாதிபத்தியத்தின் நுகத்தடியில் இருந்து விடுவிக்கும் என்பதும் நமது பொருளாதார பிரச்சனைகள் இவ்விதம் அரசியல் பிரச்சனையோடு தத்துவார்த்தப்பிரச்சனையாக மறுகாலனியத்தோடு பின்னிப்பிணைந்திருப்பதைக் காணலாம்.

      இப்பொழுது ஒவ்வொரு சக்திகளாக கணக்கெடுத்துப்பாருங்கள். நம் நாட்டில் சிபிஐயும் சிபிஎம்மும் இந்த ஆளும்வர்க்கத்துடன் கூட்டணிவைத்துக்கொண்டு தொழிலாளிகளை அரசியல்படுத்தாமல் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக எந்த ஒரு போராட்டத்தையும் எடுக்காமல் தொழிலாளிகளையும் மக்களையும் காட்டிக்கொடுக்கும் கைக்கூலிகளாக கழுத்தறுப்பு கணவான்களாக இருப்பது தெரியும். இவர்கள் மறுகாலனியாதிக்கம் என்ற வார்த்தையைக் கூட பயன்ப்படுத்துவதில்லை. ஏனெனில் அது இந்த அரசுக்கு பிரச்சனை தரும் என்பதால் உலகமயமாக்கல் என்று உப்புக்கு சப்பில்லாமல் ஒப்புக்கு சொல்வதைப் பார்க்கலாம். இவர்களையும் கம்யுனிஸ்டுகள் என்று க.கை போன்றவர்கள் பயன்படுத்திக்கொண்டு கேரளாவில் விலையேற்றம் ஏன் என்று கேட்டது ஞாபகம் இருக்கலாம். அதாவது சந்தர்ப்பவாதிகள் பாட்டாளிகளின் போராட்டங்களுக்கு எதிராக எப்படி வேண்டுமானாலும் இணைந்துகொள்வார்கள். முதலாளித்துவம் முறியடிக்கமுடியாது என்று சொல்லிவிட்டு பாராளுமன்றத்தில் சிபிஐ சிபிஎம், காங்கிரசு, பிஜேபி ஈயும் பியுமாக இருக்கும். இதைத்தான் ஜனநாயகம் என்பார்கள்.

      இவ்விதம் ஒவ்வொரு நாட்டிலும் பாராளுமன்ற இடதுசாரிக்கட்சிகள், புரட்சிகர இயக்கங்களின் தனியார்மய, தாராளமய, மறுகாலனியாதிக்க கொள்கைகளை எதிர்த்துப்போராடும் போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் ஆளும்வர்க்கக் கைக்கூலிகள் என்பது தெளிவாகத் தெரியும். இன்றைக்கு இவர்களின் கொள்கைகளில் புரட்சி என்ற வார்த்தை கூட கிடையாது. இவர்களையும் இவர்களின் முட்டுக்கட்டைகளையும் முறியடித்துதான் பாட்டாளிவர்க்கம் தன் விடுதலையை அடைய வேண்டியிருக்கிறது.

      கேள்வியின் முடிவிற்கு வருவோம். எப்படி உலகம் முழுவதும் முதலாளிகள் பன்னாட்டு நிதி முனையம் என்றும் உலகவங்கி என்றும் நாஸ்காம் என்றும் கைகோர்த்து நிற்பது சாத்தியம் என்றால் உலகத் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து போராடுவது ஏன் சாத்தியமானதன்று? மார்க்சிய ஆசான்கள் கம்யுனிச அறிக்கைக்கு உள்ளே போவதன் முன்னமே சொல்கிற முதல் அறைகூவல் சர்வதேசப் பாட்டாளிகளே ஒன்று சேருங்கள் என்பதுதான். அது வரலாற்றிலும் நடந்தேயிருக்கிறது. நடக்கும்.

      இதற்கு நாம் முதன்மையாக புரிந்துகொள்ள வேண்டியது என்ன?

      எந்த ஆளும் வர்க்கம் தரகுமுதலாளிகளின் மாமனாக இருக்கிறதோ அதே ஆளும் வர்க்கம் தான் ஏகாதிபத்திய கைக்கூலியாகவும் இருக்கிறது. ஆக ஆளும்வர்க்கத்திற்கு எதிரான பாட்டாளிவர்க்கத்தின் போராட்டம் இந்த தரகுமுதலாளித்துவத்தைத் தூக்கி எறிவது மட்டுமல்ல ஏகாதிபத்தியத்தின் கண்ணியையும் இற்றுப்போகச்செய்கிறது. சோசலிசத்தை முதலாளித்துவ இடிபாடுகளுக்கு மத்தியில் கட்டியமைக்கிறது. கட்டியமைக்கும்.

  28. தென்றல் அவர்களுக்கு,

    உங்கள் பதில்கள் மிகச்சிறப்பாக உள்ளன. சகல நாடியும் அடங்கியது/ஒடுங்கியது என்று ஏதோ சொல்வார்களே எனக்கு அதைப்போல் இருக்கிறது.
    நன்றி.

  29. மேரி அவர்களின் பின்னூட்டத்திற்கான மறுமொழிகள்

    \\ “நீங்கள் அரிசி எடுத்து வாருங்கள் நான் உமி எடுத்து வருகின்றேன். இரண்டையும் கலந்து ஊதி சாப்பிடலாம். சரியா? என்பதுப்போல தான் போய் முடியும்.\\

    சோசலிசத்தை அமைப்பதற்கான பாட்டாளிகளின் போராட்டம் ஒரு போதும் நீங்கள் அரிசி எடுத்து வாருங்கள் என்று கோரிக்கை வைக்காது. அவர்களே எடுத்துக்கொள்வார்கள். ஏனெனில் அரிசி மட்டுமல்ல இதுவரை உலகம் படைத்த அனைத்தும் பாட்டாளிகளுடையது.

    உரிமைகள் எடுத்துக்கொள்ளப்படவேண்டியவை. கொடுக்கப்படவேண்டியவையல்ல. இது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.

    மேலும் நீங்கள் சொல்வதும் சரி. ஏதுமற்ற சுரண்டப்பட்ட பாட்டாளிகள் உமி தருவது பெரிய விசயம் தான். சுரண்டித்தின்றவர்களுக்கு தவிட்டு பிஸ்கட் போதாதா?! என் பார்வையில் கோதுமையை கடலில் கொட்டி டிமாண்டிற்கும் சப்ளைக்கும் ஏற்றத்தாழ்வை உண்டாக்கி இலாபத்தைச் சுரண்டிய முதலாளிகளுக்கு தவிட்டு ரொட்டி போதுமானது என்றே கருதுகிறேன்.

    \\ சமுகத்திற்காக உழைக்க வேண்டும் என்று கூப்பிட்டால் யாரும் உழைக்க முன்வர மாட்டார்கள்.\\

    இப்பொழுதும் மக்கள் சமூகத்திற்காகத்தான் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். உழைப்பின் பலன் யாருக்குப் போய்க்கொண்டிருக்கிறது என்பது தான் இங்கு மையமான கேள்வி. ஆகையால் உங்கள் கருத்து பித்தலாட்டமானது.

    \\ இன்றைய நாகரீக வளர்ச்சியின் உச்சங்கள் என்று நாம் கூறிக்கொள்ளும் அனைத்தும் தனி மனித ஆசையின் விளைவுகள் தான்.\\

    ஆகையால் தான் சொல்கிறோம். அதனை உருவாக்கிய உழைப்பாளர்களுக்குத்தான் இந்த உலகம் சொந்தமானது என்று. பொருளுக்கு பேடண்ட் கேட்பது நியாயமென்றால் உழைப்பை கூலியாகக் கருதாமல் தொழிலாளிகள் தங்கள் உழைப்பை பேடண்டாகக் கருதுவதும் நியாயம் தான். இதில் சுரண்டலைப் பற்றி பேசாமல் தனிமனித ஆசைகள் என்று பூசி மெழுகுவதன் மூலமாக உழைப்பாளர்களை மட்டும் புத்தப் பிக்குணிகளாக மாற்ற முயலும் மோசடி ஏன்?

    \\ சாதாரண குண்டூசி முதல் தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஹிக்ஸ் போசான் அணுத்துகள் வரை அனைத்து விஞ்ஞான கண்டுபிடிப்புகளையும் செவ்வனே செய்வது மேற்குலக முதலாளிய நாடுகளே!!!\\

    பித்தலாட்டமான கருத்து இது. எப்படியென்று ஹிக்ஸ் போசானை வைத்தே பார்ப்போம். ஹிக்ஸ் போசான் ஆய்விற்கு இதுவரை செலவழித்த தொகை மக்களின் வரிப்பணம் ஆகும். முதலாளிகளின் நயா பைசா இதில் கிடையாது.

    கணக்கு வழக்கை கவனியுங்கள். செர்ன் உலையைக் கட்டுவதற்காக செலவிடப்பட்ட தொகை 4.75 பில்லியன் டாலர்கள். தரகு முதலாளி டாடாவின் டிசிஎஸ் மட்டும் கடந்து ஆண்டு சுரண்டியிருக்கும் இலாபம் 2.6 பில்லியன் டாலர்கள். பொறுக்கித் தின்னும் டாடாவாலேயே இரண்டு என்ன 100 செர்ன் உலைகளைக் கட்ட இயலும். ஆனால் செர்ன் உலையோ மக்கள் வரிப்பணத்தில் முழுக்கவும் கட்டப்பட்டவை.

    மேலும் ஒரு புள்ளிவிவரம் தருகிறேன். ஹிக்ஸ் போசான் கண்டுபிடிக்கும் வரை 15 ஆண்டுகளில் ஆன மொத்த செலவு 13.25 பில்லியன் டாலர்கள். இந்தத் தொகை நாசா விண்வெளி ஆய்விற்காக ஒரு வருடத்தில் செலவிடும் தொகையை விட 4.5பில்லியன் டாலர்கள் குறைவு. அதாவது பல நாடுகளைச் சுரண்டும் அமெரிக்கா இதற்கு ஒரு மயிரையும் கிள்ளிப்போடவில்லை.

    இன்னொரு தகவலையும் பாருங்கள். அமெரிக்கா, ஈராக் போன்ற நாடுகளில் கொத்துகொத்தாக மக்களைக்கொல்வதற்காக 2013இல் போட்ட இராணுவபட்ஜெட்டின் 2.5% தான் ஹிக்ஸ் போசான் கண்டுபிடிக்க பயன்படுத்திய தொகையாகும்.

    உலக வல்லரசோ, நிதி மூலதனமோ பொறுக்கித்தின்னும் தரகு முதலாளித்துவமோ அறிவியல் ஆய்விற்கு ஒரு துரும்பையும் கிள்ளிப்போடவில்லை என்று தெரிகிறதா?

    இலாபம் என்ற ஒன்று இல்லையென்றால் அதில் முதலாளித்துவம் இறங்காது என்பதற்கும் அடிப்படை மருத்துவமோ ஆராய்ச்சிகளோ உலகம் முழுவதும் மக்களின் சிறு பைசாக்களைவைத்துதான் நடைபெறுகின்றன என்பது புரிந்திருக்கும் இல்லையா?

    முதலாளித்துவத்தின் அறிவியல் மீதான கரிசனத்தின் யோக்கியதைக்கு இது ஒரு சான்று. ஆனால் இங்கு இராமன் போன்ற நபர்கள் செல்லுபோன் என்று பல்லுப்போன கிழவிபோல முதலாளித்துவத்தின் மகிமையைப் பேசுவது நக்கத்தனத்திலும் நக்கத்தனமாகும். அதற்கு உங்களைப்போன்ற வெங்காயங்களும் வெல்டன் என்று வியந்தோதிக் கொண்டிருக்கிறீர்கள். மானக்கேடு!

    \\ இன்று தோழர்கள் முதலாளித்துவத்தையும் அதனை பின்பற்றும் நாடுகளையும் திட்டித் தீர்ப்பதற்கு பயன்படுத்தும் கணினியும், அதனை தாங்கி வரும் மென்பொருளும், இணையமும் எந்த நாட்டின் கண்டுபிடிப்புகள்?\\

    ரிச்சார்ட் ஸ்டால்மேனைக் கேட்டுப்பாருங்கள். அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் மைக்ரோசாப்டின் சுரண்டலையும் காறித்துப்பி மென்பொருளும் இணையமும் தொழிலாளர்களுடையது; அது யாருக்கும் சொந்தமானதல்ல என்று காத்திரமாகக் கூறுவார். இன்றைய இணையத்திற்கு யார் காரணமோ அவரே இப்படி அறைந்து கூறுகிற பொழுது முதலாளித்துவ கைக்கூலிகளுக்கு இங்கு வேலையே கிடையாது.
    மேலும் இணையத்தில் பீசா வாங்குகிற நடுத்தர வர்க்கம் இதை முதலாளித்துவ கண்டுபிடிப்பு என்று மெச்சுகிற பொழுது துருக்கியில் இணைய போராளிகள் குழு ஆளும்வர்க்கத்தின் மின் கட்டணச் சுரண்டலில் இருந்து மக்களை விடுவித்திருக்கிறது.

    ஜீலியன் அசாஞ்சேவும் ரைஸ்அப் டாட் நெட்டும் மென்பொருளும் இணையமும் மக்களுடையைது என்று சொல்லி முதலாளித்துவ முகத்திரையைக் கிழித்து பல வருடங்கள் ஆகின்றன. உங்களுக்குத்தான் இந்த உழைப்பின் நேர்மையைப் பரிசீலிக்கும் எண்ணம் சிறிதும் இல்லை! அதற்கான துணிவும் இல்லை!

    \\ இன்று உலகில் இருக்கும் அளப்பரிய அறிவியல் கண்டுபிடிப்புகளில் எத்தனை சதவிகிதம் சோஷலிச ரஷ்யாவிலும், சென்சீனத்திலும் கண்டுப்பிடிக்கப்பட்டது என்று கூற முடியுமா?\\

    கூறுவது என்ன பட்டியலே போடலாம். இயற்பியல், வேதியியல், கணிதம், மருத்துவம், இயந்திரவியல், புவியியல், மினராலஜி, உளவியல், கலை இலக்கியம் என்று அடுக்கலாம்.

    எனது இயற்பியல் துறையிலேயே பலபங்களிப்புகள் சோவியத் சோசலிச காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை அனேகம். Super fluidity, super conductivity, Nuclear physics, Optics, Aerodynamics, Aeronautics என்று உலகின் முன்னணி கண்டுபிடிப்புகளை சொல்வதற்கு ஒரு பின்னூட்டம் போதாது.

    சோசலிச சோவியத் அல்லாமல் கணிதங்களின் இன்றைய வளர்ச்சியும் சாத்தியமல்ல. கணிதத்தின் மூன்று பீல்ட்ஸ் மெடலுமே சோசலிச ரசியாவில் உருவாக்கப்பட்ட கணித கண்டுபிடிப்புகளுக்காக வழங்கப்பட்டவை தான்.

    பயாலஜி மற்றும் வேதியியல் கண்டுபிடிப்புகளுக்கு தனிப்புத்தகங்களே இருக்கின்றன. செஞ்சீனத்தைப் பற்றி பேசவேண்டுமானால் அதைப்பற்றியும் தனியாக எழுதலாம்.

    ஆனால் இதையெல்லாவற்றையும் விட சமூகவிஞ்ஞானத்தை நடைமுறை யதார்த்தமாக உலகிற்கு அளித்ததுதான் என்னைப்பொறுத்தவரை உலகின் அளப்பரிய கண்டுபிடிப்பு என்று சொல்வேன். ஏனெனில் அது பாட்டாளிகளின் விடுதலைக்கான கருவி! கார், செல்போன், ஹெச்பிஓ என்று கதறும் சில்லுண்டிகளுக்கு இதன் வலிமை புரிந்திருக்க நியாயமில்லை.

    • தோழர் தென்றல்…..

      எதையுமே எடுத்த வேகத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று உங்களின் வழமையான பாணியிலேயே பேசினால் எப்படி… நான் கூற வருவதை நீங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்றே நினைக்கிறேன்.. சம்மந்த சம்மந்தம் இல்லாமல் பேசுகிறீர்கள்.

      //இப்பொழுதும் மக்கள் சமூகத்திற்காகத்தான் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். //

      அப்படியா… எந்த மக்கள் என்று கூற முடியுமா.. எனக்கு தெரிந்து மென்பொருள் துறையில் வேலை செய்பவர் முதல் துப்புரவு துறையில் வேலை செய்பவர் வரை, யாரும் சமுகத்திற்காக இதை செய்கிறேன் என்றெல்லாம் கூறுவதுக் கிடையாது. அவரவரின் தனி மனித முன்னேற்றதிர்க்காகவும் தங்களின் சொந்த கனவுகளை ஈடேற்றிக் கொள்வதற்காகவும் தான் கடினமாக உழைக்கிறார்கள். அதனால் தானோ என்னவோ சோவியத் மக்கள் 74 ஆண்டுகளாக சமுகத்திற்காக உழைத்துக் கொட்டியது போதும், இனி நமக்காக வாழ்வோம் என்று கால் கழுவிட்டார்கள் போலும்(உடனே இதற்கும் உங்களின் பழைய பல்லவியான ஸ்டாலின் காலத்தோடு உண்மையான சோஷ்யலிச ஆட்சி முடிந்து விட்டது அதற்க்கு பிறகு நடந்தது குருஷேவ் தலைமையிலான திரிபுவாத கும்பலின் ஆட்சி என்று கூறி கீறல் விழுந்த ரெகார்டாக போரடிக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்).ஒரு வேளை, நீங்கள் இன்னும் உங்களின் கற்பனை உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தால் அதற்க்கு நான் பொறுப்பில்லை.

      இதை விட ஹிக்ஸ்போசான் பற்றி தாங்கள் கூறியது தான் சகிக்கவில்லை, நான் கேட்டது என்ன? ஹிக்ஸ்போசான் போன்ற மிகப்பெரிய அறிவியல் ஆராய்சிகளுக்கு இணையான மிகப்பெரிய ஆய்வுகள் ஏதேனும் சோவியத்தில் நடந்திருக்கிறதா என்று தான்? அதற்க்கு எங்கிருந்து நிதி வந்தது என்பதெல்லாம் என்னைப் பொறுத்த வரை தேவை இல்லாத ஒன்று. முதலாளிகள் இதற்க்கு படியளந்தார்களா அல்லது மக்கள் பணம் வாரி இறைக்கப்பட்டதா என்பதெல்லாம் இப்போது தேவை இல்லாத வாதம். சோஷலிச நாட்டை விட முதாலிய கொள்கை கொண்ட நாட்டில் அறிவியல் வளர்ச்சி அபராமாக இருந்தது என்பது தான் என் வாதம்?

      //கூறுவது என்ன பட்டியலே போடலாம். இயற்பியல், வேதியியல், கணிதம், மருத்துவம், இயந்திரவியல், புவியியல், மினராலஜி, உளவியல், கலை இலக்கியம் என்று அடுக்கலாம்.//

      //எனது இயற்பியல் துறையிலேயே பலபங்களிப்புகள் சோவியத் சோசலிச காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை அனேகம். Super fluidity, super conductivity, Nuclear physics, Optics, Aerodynamics, Aeronautics என்று உலகின் முன்னணி கண்டுபிடிப்புகளை …….//

      நான் கூறியதை நீங்கள் சரியாக பரிசீலிக்க வில்லை என்றே நினைக்கிறேன், நான் கூறியதை மீண்டும் நினைவு படுத்துகிறேன் நான் கூறியது இதை….

      //இன்று உலகில் இருக்கும் அளப்பரிய அறிவியல் கண்டுபிடிப்புகளில் எத்தனை சதவிகிதம் சோஷலிச ரஷ்யாவிலும், சென்சீனத்திலும் கண்டுப்பிடிக்கப்பட்டது என்று கூற முடியுமா?\\

      மேலே உள்ள வாக்கியத்தில் “அளப்பரிய” என்னும் சொல்லை Underline செய்து கொள்ளுங்கள். நான் கேட்பது சோவியத்தில் என்ன மாதிரியான புதுப் புது விஞ்ஞான கண்டுபிடிப்புகள் நடந்தது என்று தான்(Neo Technologies), சோவியத்தில் யாரும் விஞ்ஞானிகளே இல்லை என்று நான் கூறவில்லை மாறாக அவர்கள் உலகிற்கு எதை அளித்தார்கள் என்பது தான் நான் கேட்கும் கேள்வி? Pls list out their Innovations in field of science ? உங்கள் இயற்பியல் துறையிலேயே எடுத்துக்கொள்வோம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், நியூட்டன், pascal, Coloumb,George Ohm, J.p Joule போன்ற உலக புகழ் பெற்ற இயற்பியல் அறிவியலாளர்கள் வரிசையில் எனக்கு ஒருவரை காட்டுங்கள். எனக்கு தெரியவில்லை ஒரு வேளை என் அறியாமையாகவும் இருக்கலாம். ஒரு புதுமையான டெக்னாலஜி என்று எதை செய்தார்கள் என்று எனக்கு கூறினால் நான் தெரிந்து கொள்வேன். உயிரியல் துறையில் வேண்டுமானால் “Dimitri Ivanowsky” மற்றும் வேதியியல் துறையில் சிறந்து விளங்கிய “Dmitri Mendeleev” என்கிற இருவரை வேண்டுமானால் கூறலாம். அனால் இந்த இருவருக்கும் சோஷலிச சமூகத்திற்கும் எந்த சம்மந்தமுமில்லை. ivanowsky 1920லும், periodic law வை கண்டறிந்த mendeleev 1907ஆம் ஆண்டிலும் இறந்து விட்டார். ஆக, 1917 புரட்சிக்கு முன்பு உள்ள ரஷ்ய விஞ்ஞானிகளை சோஷலிச போதைக்கு உருகாயாக அறிவு நாணயத்தோடு அழைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

      விக்கிப்பீடியாவில் பார்த்தேன் சோவியத் விஞ்ஞானிகள் என்று தட்டினால் ஒரு பட்டியலே வருகிறது, அதே போல் சோஷலிச புரட்சி நடக்காத ஒரு பின் தங்கிய நாடான பாகிஸ்தான் விஞ்ஞானிகள் என்று தட்டினால் என்ன ஆச்சர்யம் அதிலும் ஒரு பட்டியல் வருகிறது.. இவர்களை எல்லாம் நான் எப்பொழுதுமே கேள்வி பட்டதேயில்லை…

      //எனது இயற்பியல் துறையிலேயே பலபங்களிப்புகள் சோவியத் சோசலிச காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை அனேகம். Super fluidity, super conductivity, Nuclear physics….//

      நீங்கள் மேற்கூறிய அனைத்தும் உண்மையிலேயே சோவியத் நாட்டில் தான் கண்டு பிடிக்கப்பட்டதா இப்போது “nuclear physics”ஐ எடுத்துகொள்வோம், இதற்கும் சோவியதிர்க்கும் என்ன தொடர்பு. Nuclear Physics ஐ கண்டுப்பிடித்து ரஷ்யர்கள் தான் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது. இதை நீங்கள் நிருபிக்க வேண்டுமானால் அதை கண்டறிந்த நியூசிலாந்து நாட்டை சார்ந்த “Ernest Rutherford” என்பவரை நீங்கள் ரஷ்யராக மாற்ற வேண்டும். சோவியத் விஞ்ஞானிகள் வேண்டுமானால் அந்தத் துறையில் கூடுதலாக சில பங்களிப்புகள் செய்திருக்கலாம். அனால் கண்டுப்பிடிததே சோவியத் நாட்டை சேர்ந்தவர்கள் தான் என்று கூறுவது மெத்த மோசடியாகும். இதே போன்றது தான் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இன்ன பிற கண்டுப்பிடிப்புகளும். நீங்கள் கூறிய அனைத்தும் எப்படி ரஷ்யர்கள் கண்டறிந்தது என்பதை இப்பொழுது நீங்கள் எனக்கு ஆதாரத்துடன் விளக்க வேண்டும்.

      //ரிச்சார்ட் ஸ்டால்மேனைக் கேட்டுப்பாருங்கள். அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் மைக்ரோசாப்டின் சுரண்டலையும் காறித்துப்பி மென்பொருளும் இணையமும் தொழிலாளர்களுடையது;//

      ஸ்ஸ்ஸ்ஸ்…. ப்ப்ப்பா..முடியல.. அதுமட்டும் அல்ல இப்போது நாங்கள் கட்டிக்கொண்டிர்க்கும் புது வீடும் தொழிலாளர்களுக்கு தான் சொந்தம், கட்டி முடித்ததும் அதற்க்கு ஊதியமாக எங்கள் வீட்டையும் அவர்கள் அனைவரின் பெயருக்கும் எழுதி வைக்க கூறி விடுகிறேன் போதுமா…

      //செஞ்சீனத்தைப் பற்றி பேசவேண்டுமானால் அதைப்பற்றியும் தனியாக எழுதலாம்//

      எழுதுங்களேன் தெரிந்து கொள்கிறேன்… இன்று உலகம் முழுதும் கோலோச்சி வரும் ஜப்பானின் ஹோண்டா, யமஹா, சோனி,CASIO போன்ற பெருநிறுவனங்களுக்கு ஈடான ஒன்றை சீனாவில் இருந்து எனக்கு காட்டுங்கள் பார்க்கலாம். சில நேரங்களில் எனக்கு போரடித்தால் நான் விளையாடும் “play Station” “game cube” போன்ற நவீன 3D,4D T.v games கூட அங்கிருந்து தான் வருகிறதாம்.

      தோழர் தென்றல், எனக்கு கம்யுனிசத்தின் மீது எந்த கோபமுமில்லை,அதன் நல்ல அம்சங்களை நிச்சயம் ஏற்றுக்கொள்கிறேன். German, canada, மற்றும் நண்பர் கற்றது கையளவு கூறியதுப் போல Scandinavian நாடுகளில் உள்ளது போன்ற ஆட்சி முறை தான் வேண்டும். சுருங்க கூற வேண்டுமானால் “We need liberal Capitalism & Free market economy. ஆக எந்த வெறுப்பும் காழ்புணர்ச்சியும் இல்லாமல் என்ன மறுமொழிகளை பரிசீலித்து தவறுகளை சுட்டிக் காட்டவும், ஏற்றுக்கொள்கிறேன்.

      • \\அப்படியா… எந்த மக்கள் என்று கூற முடியுமா.. எனக்கு தெரிந்து மென்பொருள் துறையில் வேலை செய்பவர் முதல் துப்புரவு துறையில் வேலை செய்பவர் வரை, யாரும் சமுகத்திற்காக இதை செய்கிறேன் என்றெல்லாம் கூறுவதுக் கிடையாது. அவரவரின் தனி மனித முன்னேற்றதிர்க்காகவும் தங்களின் சொந்த கனவுகளை ஈடேற்றிக் கொள்வதற்காகவும் தான் கடினமாக உழைக்கிறார்கள்.\\

        அப்படியா? அப்படியானால் உழைப்பின் பலன் யாருக்குப் போகிறது? இதற்கு பதில் சொல்ல துணிந்திருந்தால் சுரண்டலை நியாயப்படுத்திருக்க மாட்டீர்களே? சமூகத்தின் அனைத்து கட்டுமானங்களான கல்வி, மருத்துவம், போக்குவரத்து, என அனைத்தும் சுரண்டுபவர்களின் கையில் இருந்தால் தனிமனித முன்னேற்றம் என்பது எப்படி சாத்தியம்? உங்களது இரவுகளையும் பகலையும் முதலாளித்துவத்திற்கு காவு கொடுத்துவிட்டு சொந்தக் கனவுகளை ஈடேற்றுகிறார்கள் என்று சொல்வது எத்துணை பெரிய பித்தலாட்டம்? இங்கே அதிக சம்பளம் இருந்தால் தான் நல்ல வாழ்க்கை என்பதன் அர்த்தம் என்ன? ஏற்றத்தாழ்வுகள் இருந்தால் மட்டுமே வரைமுறையற்று சுரண்டினால் மட்டுமே சமூகத்தின் பெரும்பாலானவர்களை அழுத்தி பிழிந்தால் மட்டுமே இது சாத்தியம்.

        எடுத்துக்காட்டு வேண்டுமா? இந்திய தரகுமுதலாளித்துவமும் பன்னாட்டு கம்பெனிகளும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரித்தால் அதாவது இந்தியாவின் உள்நாட்டுப் பொருளாதாரம் அதிகரித்தால் வாரிச் சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவார்கள். ஏனெனில் அது அவர்களுக்கு இலாபமானதல்ல.

        மூன்றாம் உலக நாடுகளில் எவ்வளவுக்கு எவ்வளவு உள்நாட்டு பொருளாதாரம் உயராமல் இருக்க முடியுமோ எவ்வளவுக்கு எவ்வளவு மக்கள் ஏழைகளாக இருக்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு முதலாளிகளுக்கு இலாபம் ஆகும். இதில் சிந்தியைதைப் பொறுக்கித் திங்கும் வீடியோ கேம் விளையாடும் நடுத்தர வர்க்கம் தான் இதன் வாய்ப்புகளை வளர்ச்சி என்று சொல்லும். இங்கே தனிமனித முன்னேற்றமும் சொந்தக் கனவுகளை ஈடற்றுவதாக சொல்லும் பிழைப்புவாதிகளும் அற்ப சொற்பமானவர்கள். இது சமுதாயம் அன்று. மாறாக இந்த முதலாளிகள் வாழ்வதற்காக இந்த நாட்டின் 80% மக்களின் உழைப்பு கொடூரமாகச் சுரண்டப்படுகிறது. அவர்களின் கூலி என்பது ஒரு டாலருக்கும் குறைவானது என்கிற பொழுது இந்த சமூகத்தின் 1% வாழ்வதற்காக மக்கள் நாயாக உழைக்கிறார்கள் என்பதும் இவர்களின் உழைப்பிற்கான பலன் இவர்களுக்கு இல்லை என்பதும் தெளிவாகும். இந்த முரண்பாட்டை மாற்றியமைக்கிற பொழுது அதாவது நாட்டின் உழைப்பாளிக்கு உழைப்பின் பலனை உறுதிப்படுத்துகிற பொழுது சமூகத்தின் உழைப்பையும் உறுதிப்படுத்துகிறோம். சமூகம் ஒரு சேர வளர்கிறது. சமூகத்திற்காக உழைப்பது என்பதன் அம்சம் இதுதான்.

        \\அதனால் தானோ என்னவோ சோவியத் மக்கள் 74 ஆண்டுகளாக சமுகத்திற்காக உழைத்துக் கொட்டியது போதும், இனி நமக்காக வாழ்வோம் என்று கால் கழுவிட்டார்கள் போலும்\\

        கால் கழுவியவர்கள் மக்கள் அல்லர். இந்தியாவில் கூட விடுதலைப் போராட்டத்தை மறந்து விட்டு தாயைத்தின்ற நண்டுகளாக இன்றைய மறுகாலனியாதிக்க கொள்கைகளில் சூடேற்றிகொள்கிற வர்க்கம் ஒன்று இருக்கிறதென்றால் அது சோனியையும் நோக்கியாவையும் புகழ்கிறது என்றால் நமக்காக வாழ்வோம் என்று சொன்ன மாக்கள் யாரென்பதன் சூட்சுமம் உங்களுக்குப் புரிந்திருக்கும் தானே!

        \\(உடனே இதற்கும் உங்களின் பழைய பல்லவியான ஸ்டாலின் காலத்தோடு உண்மையான சோஷ்யலிச ஆட்சி முடிந்து விட்டது அதற்க்கு பிறகு நடந்தது குருஷேவ் தலைமையிலான திரிபுவாத கும்பலின் ஆட்சி என்று கூறி கீறல் விழுந்த ரெகார்டாக போரடிக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்).\\

        மக்களைச் சுரண்டும் கிறித்தவ மதத்தின் அதிகாரத்தில் அண்டி வாழும் திருச்சபையைச் சுட்டிக்காட்டிய பொழுது திருச்சபை மோசம் என்பதற்கு கிறித்தவம் எப்படி பொறுப்பாக முடியும் என்று விழுந்து கும்பிட்டு பிரச்சாரம் செய்தவர் தாங்கள். அங்கு மதத்தின் சுரண்டலை நியாயப்படுத்துகிற உங்களின் மனதுதான் இங்கு பாட்டாளிகளின் விடுதலையை காயடிக்கும் திரிபுவாத கும்பலின் ஆட்சி என்பதை கீறல் விழுந்த ரெகார்டு என்கிறது என்றால் உங்கள் மனவக்கிரத்தின் பருண்மை உங்களுக்கே புலப்படுகிறதா?

        மூலதன முரண்பாடுகளுக்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தில் குருசேவும் எல்ட்சினும் தனிநபர்கள் அல்லர். ஏகாதிபத்தியம் மற்றும் சொத்துடமை வர்க்கங்களின் கைக்கூலிகள் அவர்கள். இங்கு புரிய வேண்டியது இதுதானே!

        • \\ இதை விட ஹிக்ஸ்போசான் பற்றி தாங்கள் கூறியது தான் சகிக்கவில்லை, நான் கேட்டது என்ன? ஹிக்ஸ்போசான் போன்ற மிகப்பெரிய அறிவியல் ஆராய்சிகளுக்கு இணையான மிகப்பெரிய ஆய்வுகள் ஏதேனும் சோவியத்தில் நடந்திருக்கிறதா என்று தான்?\\

          ஹிக்ஸ்போசான் என்ற ஒன்று கண்டுபிடிக்க வேண்டுமானால் Cryophysics என்ற துறை இல்லாமல் சாத்தியமே இல்லை. இந்த துறையை உலகிற்கு அறிமுகப்படுத்தியதே சோசலிச ரசியாதான். 1930 கபிட்சா ஹீலியத்தில் Superfulidity கண்டுபிடித்ததற்கும் அதற்கான கருத்தியல் கோட்பாட்டை லாண்டோ தந்ததற்காகத்தான் லாண்டோவிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. லாண்டோவின் கருத்தியல் கோட்பாடுகளை வெற்றிகரமாக சோதனைகளில் நிரூபித்தவர் V.P. Peshkov. இப்படி ஒரு துறை உருவாக்கப்பட்டு ஒட்டுமொத்த சாதனைகளையும் தன்னகத்தே வைத்திருப்பதுடன் உலகிற்கு வழங்கியதும் சோசலிச ரசியாதான்.

          ஸ்டாலின் விஞ்ஞானிகளை சித்ரவதை செய்தார் என்ற மேற்குலக அவதூறு பிரச்சாரக் கட்டுரைகளே படித்தாலே என்னென்ன கண்டுபிடிப்புகள் என்று தெரிந்துகொள்ளலாமே! முக்கியமாக மேற்குலகம் சோவியத் ரசியாவில் அறிவியல் ஆராய்ச்சிகள் பல்கலைக்கழகங்களில் நடக்கவில்லை. அது தனியாக ரகசியமாக நடைபெற்றது என்று அவுத்துவிடுவார்கள். ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்று என்றைக்காவது வாசித்திருக்கிறீர்களா? ஐந்தாண்டு திட்டங்களில் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு என்று தனித்தனியாக கழகங்களை உருவாக்கியது சோசலிசம் தான்.

          Institute of Physics ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு என்ன? அங்கிருந்து போடப்பட்ட பாடத்திட்டங்களும் புத்தகங்களும் தான் இன்றளவும் உலகில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் புத்தகங்களாக இருக்கின்றன. தாங்கள் மட்டுமல்ல இந்திய நடுத்தரவர்க்கத்திற்கு இந்த அறிவியல் வாசனையே என்னவென்று தெரியாமல் வெறும் வீடியோகேம், கார், செல்போன் என்ற அளவிற்குத்தான் தெரிந்துவைத்திருக்கிறார்கள் என்றால் முதலாளித்துவ கைப்பிள்ளைகள் எத்துணை பித்துக்குளிகளாக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது இல்லையா? மற்ற அறிவியல் சாதனைகளை தங்களது பிரேத்யகே கேள்விக்கு தனியாக பதில் எழுதுவதன் மூலம் அளிக்கிறேன்.

          \\ அதற்க்கு எங்கிருந்து நிதி வந்தது என்பதெல்லாம் என்னைப் பொறுத்த வரை தேவை இல்லாத ஒன்று.\\

          இது தேவையில்லாத ஒன்று என்றால் சமூக உழைப்பையும் தனிமனித சுரண்டலையும் எப்படி புரிந்துகொள்வீர்கள்? பிறகு சோசலிச நாடு முதலாளித்துவ நாடு என்றால் உங்கள் பார்வையில் என்ன? எதற்காக இந்த வெட்டி ஜம்பம்?

          \\ முதலாளிகள் இதற்க்கு படியளந்தார்களா அல்லது மக்கள் பணம் வாரி இறைக்கப்பட்டதா என்பதெல்லாம் இப்போது தேவை இல்லாத வாதம்.\\

          முதலாளி வர்க்கம் அறிவியலை வளர்த்தெடுக்க லாயக்கற்ற மொன்னைபாம்புகள் என்று நிரூபிக்கப்பட்ட பிறகு முதலாளித்துவ நாடுகள் என்பது வெறும் பம்மாத்து தானே! அங்கெல்லாம் ஆளும் வர்க்கம் சீரழிந்து வெறும் இலாபத்தை மடைமாற்றுகிற மண்சட்டிகளாகத்தான் இருக்கிறபொழுது முதலாளிகள் படியளந்தார்களா என்பது தேவையில்லாத வாதமாகத்தானே இருக்கும்? பசுமாடு சாணிபோடும் பொழுது கைகளில் ஏந்திக்கொள்வார்களே அதைப்போல் இருக்கிறது முதலாளிகளை விடுவிக்கிற உங்களது வாதம்!!! அந்தோ பரிதாபம்!

          \\சோஷலிச நாட்டை விட முதாலிய கொள்கை கொண்ட நாட்டில் அறிவியல் வளர்ச்சி அபராமாக இருந்தது என்பது தான் என் வாதம்?\\

          இந்த வாதம் இப்பொழுது பக்கவாதமாகத்தான் இருக்கிறது. முதலாளிய கொள்கை என்றால் அதைப்பற்றி எனக்குத் தெரிந்துகொள்ளத் தேவையில்லை என்று கருதுகிறவர் பிறகு எப்படி சோசலிச நாட்டைவிட முதலாளிய கொள்கை கொண்ட நாட்டில் அறிவியல் வளர்ச்சி அபாரமாக இருப்பது என்று சொல்ல முடியும்? வெறும் பித்தலாட்டம் தானே இது!

          மேலும் முதலாளித்துவம் என்றைக்கு ஆளும்வர்க்கமாக தன்னை மாற்றிக்கொண்டதோ அன்றைக்கு முதலில் கைகழுவியது அறிவியலைத்தான். ஆகையால் தான் மக்களுக்கு மதங்களைப் போதிப்பதில் முதலாளித்துவம் முனைப்பாக இருக்கிற பொழுது சோசலிசமோ Science for everyone என்று அறிவியலை அனைவருக்கும் கற்றுக்கொடுத்தது.

          முதலாளித்துவ நாடுகளில் பொதுமக்கள் அறிவியலில் இருந்து விலகியிருப்பதற்கும் அங்கு அறிவியல் புனைகதைகள் கூட மேட்டுக்குடி வர்க்கங்கள் காதலர் தினம் படத்தில் வரும் சோனாலி பிந்தேரவும் குணாலும் இசையைக்கேட்டுக்கொண்டே டால்டாஸ்யின் போரும் அமைதியையும் படிப்பதைப் போல லேஸ் சிப்ஸ் கடித்துக்கொண்டே கனவுலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறது. எவ்வளவு வெட்கங்ககெட்ட சமூக அமைப்பு பார்த்தீர்களா மேரி?

          இதனால் தான் தொடைநடுங்கி அமெரிக்கா இலாபத்தின் அடிப்படையில் எவ்வளவு காசு பார்க்க முடியும் என்று எபலோவிற்காக ஆராய்ச்சியை கணக்குப்போட்டு பண்ணுகிற பொழுது குட்டி நாடு கியுபா நானூறு மருத்துவர்களை அனுப்பி முதலாளித்துவத்தின் மூஞ்சியில் காறித்துப்பியது நினைவிறுக்கலாம் இல்லையா? முதலாளித்துவ நாடுகளின் அறிவியல் மீதான கண்ணோட்டத்திற்கு இது மற்றொரு பார்வை.

          இதில் பங்கு பற்றி என்னத்த பேச? வேண்டுமானால் ஏதோ ஒரு லிட்டு பேனா வைத்து எழுதினால் செண்டு மணக்குமாமே! அதைவேண்டுமானால் முதலாளித்துவத்தின் சாதனை என்று சொல்லலாம். அதைத்தவிர்த்து ஒன்றரை லிட்டர் பெப்சி பாட்டிலை கக்கூசில் ஊற்றினாலும் கழிவறை நன்றாக சுத்தமாவதாக கேள்விபட்டேன்! இது இரண்டாவது சாதனை.

          இதையும் தாண்டி முத்தாய்ப்பாக சார்லி சாப்ளினின் மாடர்ன் டைம்ஸில் முதலாளித்துவ கண்டுபிடிப்புகளை புட்டுபுட்டு வைத்திருப்பார். பார்த்து மகிழ்ந்துகொள்ளுங்கள். வீடியோகேம்ஸ் விளையாடுவதற்கு இதைப் பார்த்தாலாவது தாங்கள் சமூக உணர்வு பெறுவது நிச்சயம்!

        • தோழர். தென்றல்………..

          ஏன் இப்படி………..

          தரகு முதலாளித்துவத்தை இப்படி பிய்த்து உதறுகிறீர்கள். நான் முதலாளித்துவத்தை ஆதரிக்கிறேன் என்று தான் சொன்னேன், அதற்காக நீங்களாக தரகு முதலாளித்துவத்தை நான் ஆதரிப்பதாக நினைத்துக் கொண்டால் அதற்க்கு நான் பொறுப்பாளியல்ல.

          //மூன்றாம் உலக நாடுகளில் எவ்வளவுக்கு எவ்வளவு உள்நாட்டு பொருளாதாரம் உயராமல் இருக்க முடியுமோ எவ்வளவுக்கு எவ்வளவு மக்கள் ஏழைகளாக இருக்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு முதலாளிகளுக்கு இலாபம் ஆகும்.//

          ஏற்றுக்கொள்கிறேன், அதற்காகத் தான் இந்தியாவை மூன்றாம் உலக நாடு என்கிற நிலையில் இருந்து ஏகாதிபத்தியம் என்கிற முதல் நிலைக்கு செல்லவில்லை என்றாலும் ஒரு மிகச் சிறந்த சுய சார்புள்ள தேசிய முதலாளித்துவ நாடாக(பிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி.கனடா போன்ற தேசிய முதலாளித்துவ நிலைக்கு) இட்டு செல்ல வேண்டும் என்று கூறுகிறேன்.

          நான் கூறியதை நீங்கள் சரியாக படிக்கவில்லை என்றால் நான் என்ன செய்ய.. நான் கூறியது இதனை..

          //German, canada, மற்றும் நண்பர் கற்றது கையளவு கூறியதுப் போல Scandinavian நாடுகளில் உள்ளது போன்ற ஆட்சி முறை தான் வேண்டும். சுருங்க கூற வேண்டுமானால் “We need liberal Capitalism & Free market economy.//

          நான் எங்கே எப்போது தரகு முதலாளியத்தை ஆதரித்து கருத்து கூறி இருக்கிறேன். இந்திய நாட்டிற்க்கு தேவை இப்பொழுது ஒரு புரட்சி, அந்த புரட்சி என்பது பிரெஞ்சு புரட்சியை போன்றதொரு புரட்சியாக இருக்க வேண்டும்.

          இந்தியாவின் தனி நபர் சராசரி மாத வருமானம் வெறும் $295, ஆனால் நோர்வே நாட்டின் சராசரி தனிநபர் மாத வருமானம் 3,978 டாலர்கள், கனடா$2,724, அயர்லாந்தில்$3000,ஜெர்மனியில்2,700$.ஜப்பானில்$2500. ஏன் இந்தியாவில் மட்டும் இவ்வளவு குறைந்த ஊதியம், மேற்சொன்ன மற்ற அனைத்தும் முதலாளிய கொள்கைகளை கொண்ட நாடுகள் தான் எனும் பொழுது இந்தியாவில் மட்டும் ஏன் தனி நபர் வருமானம் இவ்வளவு சரிவை கொண்டுள்ளது. நீங்கள் கூறும் கல்வி, சமுகவிழிப்புணர்வு, உட்டச்சத்து குறைப்பாடின்மை,பொது சுகாதாரம் போன்ற அனைத்திலும் மேற்சொன்ன நாடுகள் முன்னணியில் இருக்கின்றனவே. அப்பொழுது பிரச்சனை முதலாளித்துவத்திலா அல்லது இங்கிருக்கும் ஜனநாயகமற்ற சுரண்டி திங்கும் சுயநல அரசியல் விழுமியங்களாலா.தாயை தின்ற நண்டுகள் யாராக இருக்கும்.தயவு செய்து விளக்கவும்.

      • \\ ஸ்ஸ்ஸ்ஸ்…. ப்ப்ப்பா..முடியல.. அதுமட்டும் அல்ல இப்போது நாங்கள் கட்டிக்கொண்டிர்க்கும் புது வீடும் தொழிலாளர்களுக்கு தான் சொந்தம், கட்டி முடித்ததும் அதற்க்கு ஊதியமாக எங்கள் வீட்டையும் அவர்கள் அனைவரின் பெயருக்கும் எழுதி வைக்க கூறி விடுகிறேன் போதுமா…\\

        உங்கள் வீட்டைக் கட்டிக்கொடுக்கும் தொழிலாளிகளுக்கு உங்கள் வீடு தேவையில்லை. ஏனெனில் தொழிலாளிகளின் உழைப்பிற்கு முன் அது ஒரு பொருட்டே அல்ல. மாறாக உங்கள் வீட்டைக்கட்டிக்கொடுப்பவர்களுக்கு என்ன கிடைத்தால் சரி என்பதை பட்டியலிடுகிறேன்.

        உங்கள் வீட்டைக் கட்டிக்கொடுக்கிற கட்டிட தொழிலாளிகள் சோசலிச சமூகத்தின் கீழ் கூட்டுறவு ஸ்பாதனத்தை அமைப்பார்கள். வீடு கட்டுவதற்கு தேவையான அத்துணை உற்பத்தி சாதனங்களும் இந்த தொழிலாளிகளின் கையில் தான் இருக்கும். இப்பொழுது சென்னையிலேயே 200க்கும் மேற்பட்ட பில்டர்கள் வாடிக்கையாளர்களைச் சுரண்டுவதோடு மட்டுமில்லாமல் தொழிலாளர்களையும் சுரண்டுகிறார்கள். இந்த சுரண்டலான அமைப்பை ஒழிப்பதற்கு கற்பனையான ஊதிப்பெருக்கப்படும் ரியல் எஸ்டேட்டு பிசினசோ அது தொடர்பான கன்சல்டன்சியோ தரகுத்தனமோ அறவே இருக்காது. நிலத்திற்கான அமைப்பை கைக்கூலி முதலாளிகள் ஊதிப்பெருக்க முடியாது. மணல் மாபியாக்கள் இருக்க மாட்டார்கள். கருணாநிதியோ இந்துத்துவ பிஜேபியோ ஜெயலலிதாவோ சிமெண்ட் பேக்டரி நடத்தமாட்டார்கள்.

        ஒட்டுமொத்த உற்பத்தி ஸ்தாபனங்களும் தொழிலாளர்களின் கூட்டுறவின் கீழ் வருகிற பொழுது பெரிய பெரிய கட்டுமானங்களை இவர்கள் எழுப்புகிற பொழுது சான்றாக லெனின் கரோகி நீர்பாசனத்திட்டத்திற்காக டெனிபர் ஆற்றில் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய நீர்மின்சாரம் பெறும் அணையே தொழிலாளர்களின் கூட்டுறவு தான் இவ்வுலகிற்கு வழங்கியது என்கிற பொழுது உங்கள் வீடும் தொழிலாளிகளுக்கு சொந்தம் என்கிற பிரச்சாரம் நக்கத்தனத்திலும் நக்கத்தனமாக இருக்கிறது இல்லையா? முதலாளித்துவம் பெற்றெடுக்கிற அற்பவாதிகளைத் தவிர வேறு யாரால் இப்படிச் சிந்திக்க முடியும்?

        இந்தத் தொழிலாளிகளின் கூட்டுறவின் காரணமாக தங்கள் வீடுகட்டுகிற பணமும் கணிசமாக குறைந்துவிடும். இதுபோக தங்கள் உழைப்பிற்கு வீட்டை உறுதிப்படுத்துவது சோசலிச அரசாகும். அது வீட்டிற்கான பெரும்பாதியை ஏற்கிறது. கட்டுமான பணிகளை கூட்டுறவின் கீழ் விடுகிறது. இது தான் சோசலிச சமூகத்தின் கூட்டுறவு செயல்படுகிற முறை. இப்பொழுது சொல்லுங்கள் உங்களுடைய வீடு எங்கள் தொழிலாளிகளுக்கு தேவையில்லை என்பது தெரிகிறதா?

        ரிச்சர்ட் ஸ்டால்மேனும் மைக்ரோசாப்டைப் பார்த்து இப்படித்தான் காறித்துப்புகிறார். இணையமும் மென்பொருளும் இன்னபிற உற்பத்தி சாதனங்களும் தொழிலாளிகளின் கையில் தான் இருக்க வேண்டும் என்பதையும் அது இவ்வுலக மக்களுக்கானது என்பதையும் நிருபிக்கிறார். மைக்ரோசாப்ட் வெறுமனே சுரண்டிக்கொழுப்பவன் என்பதை அம்பலப்படுத்தி அதற்காக போராடவும் செய்கிறார்.

        இப்பொழுது உங்களைப்போன்ற அடிவருடிகள் செய்ய வேண்டியது எங்களுக்கு உஸ் போடுவதற்கு பதிலாக நீங்கள் சுரண்டப்படுவதை நினைத்து உச்சு கொட்டிக் கொள்ளுங்கள். அதையாவது ஒழுங்காக செய்கிறீர்களா என்று பார்ப்போம்.

        • உலகில் இவன் சரியில்லை, அவன் சரியில்லை, எவனும் சரியில்லை. எதுவும் சரியில்லை. தென்றல் ஒருவர் மட்டும் தான் உலக உத்தமர். நடத்துங்கள்…

          அலை ஓய்ந்த பின் கடலை கடப்பேன் என்கிறார். பார்ப்போம். அதுவரை நான் உயிரோடு இருப்பேனா தெரியவில்லை 🙂

          • தென்றல் அவர்களுக்கும் அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களுக்கும் சில ஒற்றுமைகளை காண்கிறேன். இருவருமே தம்மை தவிர உலகில் மற்றவர் அனைவரும் அயோக்கியர்கள், சுரண்டல் பேர்வழிகள் என்று பிரகடனம் செய்கின்றனர். தமது சித்தாந்தம் நடைமுறை படுத்தப்பட்டால் நாடே தலைகீழாக மாறி, எங்கும் பாலும் தேனும் ஓடும், மக்கள் நிம்மதியாக, ஆனந்தமாக இருப்பார்கள் என்றும் வாக்குறுதி தருகிறார்கள்.

            அரவிந்த் கேஜ்ரிவாலிடம் டெல்லி மக்கள் ஆட்சியை கொடுத்து பார்த்தார்கள். ஒரு 49 நாட்கள் நாடகம் நடத்தினார். பின் அவர் ஜகா வாங்கிக்கொண்டார்.

            இப்போது தென்றலார் கூறும் புரட்சி நடக்கிறேதேன்றே வைத்துக்கொள்வோம். 2020 இல் நாட்டில் புரட்சி வெடித்து கம்மியுனிச ஆட்சி மலர்கிரதென்றே வைத்துக்கொள்வோம்.
            பின் என்ன நடக்கும், நான் சொல்கிறேன்.
            ஒரு 2 வருடங்கள் இதை மாற்றுகிறேன், அதை மாற்றுகிறேன் என்று பல்வேறு நடவடிக்கைகள் நடக்கும். மக்களும் முதலில் ஆவலோடும், பின்னர் பொறுமையோடும் காத்திருப்பார்கள்.
            பின் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் நாட்டில் முன்னேற்றம் என்பது ஒன்றும் காணவில்லை, ஆட்சியின் அதிகாரம் அரசியல்வாதிகளிடம் இருந்து கம்மியுனிசவாதிகளிடம் மாறியதை தவிர அவர்கள் வாழ்வில் வேறு எந்த மாற்றமும் இல்லை என்று மக்கள் உணர்வார்கள்.
            அப்போது மக்கள் மீண்டும் ஆட்சியாமைப்புக்கு எதிராக போர்க்கொடி தூக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அடக்குமுறைக்கு எதிராக புரட்சி நடக்கும், முதலில் கட்டுபடுத்தப்பட்டாலும், பின்பு மக்கள் சக்தியின் முன் அது செல்லுபடி ஆகாமல் தோற்று மீண்டும் ஜனநாயகம் மலரும். அப்போது அடுத்த வரும் தலைமுறையில் தாங்கள் ஆண்ட அந்த காலத்தில் நாட்டில் தேனாறும் பாலாரும் ஓடியதாகவும் நாட்டு மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்ததாகவும், பின்னர் முதலாளிகளின் சூழ்ச்சியினால் அது தோற்கடிக்கப்பட்டதாகவும் புலம்பி, மீண்டும் அவ்வகையில் ஒரு புரட்சி நடக்க வேண்டுமென்று இன்னொரு 100 வருடங்களுக்கு காத்திருப்பார்கள். ஆட்சி அமைக்கும் வாய்ப்பை மக்கள் கையில் ஒப்படைக்கும்போது கம்மியுநிசவாதிகள் அதனை ஒழுங்காக பயன்படுத்தி இருந்தால் மக்கள் கம்மியுநிசத்தை ஏன் ஒதுக்க நினைப்பார்கள்?

            இந்த template தான் எல்லா கம்மியுனிச நாடுகளிலும் நடக்கிறது.
            2020 அல்ல, 2050 இலோ, அல்லது 2100 இலோ புரட்சி நடந்தாலும் இதே கதை தான்.

            மக்களின் பேராதரவு இல்லாமல் நடைபெறும் எந்த மாற்றமும் நிரந்தரமாக இருக்காது.
            ஜனநாயக வழியிலேயே சோசியலிசத்தை கடைபிடிக்க முடியும் என்று கம்மியுநிஸ்டுகள் உணராத வரை அவர்கள் குறிக்கோளை அடைய முடியாது. அடைந்தாலும் அதனை நீண்ட நாள் தக்க வைத்திருக்க முடியாது.

            புரிந்தால் சரி.

  30. தென்றல் அவர்கள் இப்போது மட்டும் ரசியா சீனா பற்றி பெருமையாக பேசுகிறார். ஆனால் அதே ரசியா சீனாவை மறைமுகமாக முதலாளித்துவத்தை ஆதரிக்கும் போலி கம்யுனிசம் என்று வேறு ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிடுகிறார்.

    உண்மையை சொல்லுங்கள் தென்றல், இந்த கண்டுபிடிப்புகள் அனைத்தும் ரசியாவில் சீனாவில் உண்மையான கம்மியுனிசம் இருக்கும்போது மட்டும் தான் உருவானதா? தற்காலத்தில் இங்கு இருப்பது உண்மை கம்மியுநிசமா, இல்லை போலி கம்மியுநிசமா?

    • \\உண்மையை சொல்லுங்கள் தென்றல், இந்த கண்டுபிடிப்புகள் அனைத்தும் ரசியாவில் சீனாவில் உண்மையான கம்மியுனிசம் இருக்கும்போது மட்டும் தான் உருவானதா?\\

      சோசலிச ரசியாவில் செஞ்சீனத்தில் உருவான கண்டுபிடிப்புகள் என்னவென்று தெளிவாகத்தானே கேட்டிருக்கிறார் மேரி. பிறகு அரண்ட முதலாளிக்கு இருண்டதெல்லாம் கம்யுனிச பேயாக தெரியும் என்ற கதையாக இப்படி புலம்புவது ஏன்?

      அதுதவிர முதலாளித்துவ நாடுகள் கண்டுபிடித்தாக சொல்லும் ஹிக்ஸ்போசானிற்கும் முதலாளித்துவத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று என்பதற்கான நிரூபணம் தரப்பட்டிருக்கிறது. உங்களுக்கு திருப்திகரமாக இல்லையெனில் முதலாளிகள் எப்படி அறிவியல் பங்களிப்புகளுக்கு பங்குபற்றினார்கள் என்று எடுத்துச் சொல்லவேண்டியதுதானே நீதிமானுக்கு அழகு. இப்படி புள்ளிமானாக துள்ளினால் எப்படி? தட்டிவிடுங்கள்.

      \\ தற்காலத்தில் இங்கு இருப்பது உண்மை கம்மியுநிசமா, இல்லை போலி கம்மியுநிசமா?\\

      சீனாவில் ரசியாவில் இப்பொழுது கம்யுனிசம் இல்லையென்று கம்யுனிஸ்டுகள் கையை பிசைந்து நிற்கிறார்களே என்று தாங்கள் முதலைக்கண்ணீர் வடித்ததற்கு பதில் எழுதியிருக்கிறேன். தாங்கள் தான் பதில் சொல்லவில்லை. பின்னூட்டம் 24, 25இல் விரிவாக எழுதியும் வெறும் மெளனத்தை தான் பதிலாக தந்தீர்
      .
      உண்மை கம்யுனிசமா போலி கம்யுனிசமா என்பதை தாங்கள் விளங்கிக்கொள்வதற்கு சில கேள்விகளைக் கேட்கிறேன்.

      கம்யுனிஸ்டுகள் எதற்காக பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்திற்காக போராடுகிறார்கள்? தற்பொழுது சீனாவிலும் ரசியாவிலும் ஆளும்வர்க்கத்தின் தன்மை என்ன? அவர்கள் யாரை பிரதிபலிக்கிறார்கள்?

      சுரண்டுகிறவன் ஒரு வர்க்கமாக இருந்து சுரண்டப்படுகிறவர் ஒருவர்க்கமாக இருக்கிற முதலாளித்துவ சமூகத்தை வீழ்த்துவது பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் முதன்மையான நோக்கம். சோசலிச சமூகம் கட்டமைக்கப்பட்ட பின்னும் மூலதனத்திற்கு எதிரான போர் முடிவுற்றுவிடவில்லை. ஆக இதற்கு எதிராக போராடாமல் பாட்டாளிவர்க்கம் தன் பிடியை தளர்த்துமேயானால் அதற்கு மாறாக ஏகாதிபத்திய சொத்துடமைவர்க்கங்களின் பிடி இறுகுமேயானால் அது எதில் போய்முடியும்?

      ஒவ்வொரு கேள்விக்கும் பாயிண்ட் போட்டு எழுதுங்கள். என்னவென்று விவாதித்துவிடுவோம்.

  31. தென்றல் அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.

    இந்த உலகம் என்பது கருப்பு வெள்ளை அல்ல. பல்வேறு மனிதர்கள், பல்வேறு குணாதிசயங்கள், பல்வேறு தத்துவங்கள் நிரம்பியது.

    தாங்கள் கம்மியுநிசத்தை ஆதரிப்பதால் கம்மியுனிசம் மட்டுமே சரி என்று வாதிடுகிறீர்கள். அதில் உள்ள குறைகள் ஒன்று உங்கள் கண்ணுக்கு தெரிவதில்லை, இல்லை உங்களுக்கு தெரிந்தும் விதண்டாவாதம் புரிந்து ஒப்பெற்றுகிரீர்.

    தற்போதைய தேர்தல் முறை ஜனநாயகத்தில் உள்ள நிறை குறைகள் இரண்டையுமே நான் விவாதிக்கிறேன். ஆனால் நீங்கள் இதை முற்றிலும் ஒதுக்கி விடுகிறீர்கள்.

    இது தான் நமக்குள் இருக்கும் வித்தியாசம். நான் கம்மியுனிசம், தேர்தல் முறை ஜனநாயகம், இரண்டிலும் உள்ள நிறை குறைகளை சீர்தூக்கி ஆராய விரும்புகிறேன். ஆனால் நீங்கள் ஒருதலைபட்சமாக வாதிடுகிறீர்கள்.

    • \\ இந்த உலகம் என்பது கருப்பு வெள்ளை அல்ல. பல்வேறு மனிதர்கள், பல்வேறு குணாதிசயங்கள், பல்வேறு தத்துவங்கள் நிரம்பியது.\\

      பல்வேறு மனிதர்கள், குணாதிசயங்கள், கலாச்சாரம் என அனைத்தையும் அழித்து, நுகர்வதும் சுரண்டுவதும் தான் வாழ்க்கை என்று மாற்றியிருக்கும் முதலாளித்துவத்திற்கு இனியும் என்ன சப்பைக்கட்டு கட்ட முடியும்?

      \\ தாங்கள் கம்மியுநிசத்தை ஆதரிப்பதால் கம்மியுனிசம் மட்டுமே சரி என்று வாதிடுகிறீர்கள். அதில் உள்ள குறைகள் ஒன்று உங்கள் கண்ணுக்கு தெரிவதில்லை, இல்லை உங்களுக்கு தெரிந்தும் விதண்டாவாதம் புரிந்து ஒப்பெற்றுகிரீர்.\\

      கம்யுனிசத்தின் குறைகள் என்று சொல்லியதெல்லாம் வெறும் வெற்று அவதூறுகள் மட்டுமே. மேலும் ஒரு முதலாளிக்கு கம்யுனிசத்தின் மீது வெறுப்பு இல்லாமல் இருந்தால் தான் பிரச்சனை. தற்போதுவரை உங்களால் நேர்மையாய் ஒன்றையும் விவாதிக்க இயலவில்லை. சமூகத்தின் முதலாளித்துவ பிரச்சாரங்கள் அனைத்துமே இவ்வகைப்பட்டவை தான். முதலாளித்துவத்திற்கு இந்தப் பிரச்சாரம், ஊடகம், நடுத்தர வர்க்கம், பணம், ஆயுதம் இது மட்டும்தான் உள்ளது. நடுத்தரவர்க்க புல்லுருவித்தனம் என்பது பின்னூட்டங்களில் மட்டும் அல்ல; சமூகத்தின் ஒவ்வொரு கட்டமைப்பிலும் காண்கிறோம். இது இன்னும் போராடுவதற்கான உத்வேகத்தை அளிக்கிறது.

      \\ தற்போதைய தேர்தல் முறை ஜனநாயகத்தில் உள்ள நிறை குறைகள் இரண்டையுமே நான் விவாதிக்கிறேன். ஆனால் நீங்கள் இதை முற்றிலும் ஒதுக்கி விடுகிறீர்கள்.\\

      தற்போதைய தேர்தல் சனநாயக முறையில் தாங்கள் குறைகள் ஒன்றையும் காணவில்லை. இது முதலாளிகளுக்கானது என்கிற பொழுது இதில் குறைகள் காண்பதாக தாங்கள் கூறுவது வெறும் பாசாங்கு மட்டுமே. ஏனெனில் எது நிறைகள் என்று சுட்டிக்காட்டுகிறீர்களோ அது அம்பானிக்கும் டாட்டாவிற்கும் மட்டும்தான். எதையாவது ஒன்றைத்தொட்டு விளக்கிக்காட்டினால் வாசகர்களுக்கு நல்லது. ஆகையால் முயற்சியை கையில் எடுங்கள்.

      \\ நான் கம்மியுனிசம், தேர்தல் முறை ஜனநாயகம், இரண்டிலும் உள்ள நிறை குறைகளை சீர்தூக்கி ஆராய விரும்புகிறேன். ஆனால் நீங்கள் ஒருதலைபட்சமாக வாதிடுகிறீர்கள்.\\

      கம்யுனிசம், தேர்தல் முறை என்று கலந்து கட்டி அடிப்பது ஆளும்வர்க்கத்தின் நலன்களைக் காக்கும் முயற்சி. தாங்கள் நேர்மையாளர் என்றால் உங்களது கம்பெனியில் முதலில் தொழிற்சங்க தேர்தலை வெளிப்படையாக நடத்திக்காட்டுங்கள்.

      ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் தொழிற்சாலை மாடல் கொடு என்று கேட்கிற தாங்கள் புஜதொமுவைப்போன்று தொழிலாளர்களை அணிதிரட்டி அரசியல்படுத்தி உங்கள் முதலாளிகளுக்கு எதிராக ஒரு தொழிற்சங்கத்தைக் கட்டுங்கள். ஒரு சிறு தொழிற்சாலையிலேயே தேர்தலை நடத்தமுடியாதவர் சனநாயகத் தேர்தல் என்று கூவுகிறார் என்றால் அதன் பித்தலாட்டம் இதனால் எளிதில் அம்பலப்பட்டு போய்விடும் இல்லையா?

      இது போக பாராளுமன்ற ஜனநாயகத்தில் சீரழிந்த முதலாளித்துவத்திற்கு சேவகம் புரிகிற சிபிஎம்மையும் சிபிஐயும் வரிக்கு வரிக்கு கம்யுனிச ஆட்சி என்று எழுதுகிற பித்தலாட்டத்திற்கு மத்தியில் தான் தேர்தல் முறை சனநாயகம் என்று பம்மாத்து காட்டுகிறீர்கள். இவ்விதம் ஒரு மனிதருக்குள் எத்துணை முரண்பாடுகள் தான் இருக்க முடியும்?

      ஒருதலைப்பட்ச விவாதம் என்பதையும் பார்ப்போம். புரட்சிகர இயக்கங்களுக்கு பாட்டாளிவர்க்க நலன்களைத் தவிர வேறு எதுவும் முதன்மையானது இல்லை. இது ஒருதலைப்பட்சம் என்றால் அது சரியே.

      • ஐயா,

        //இதை தாண்டி உலகம் அறிவியலை நோக்கி செல்ல வேண்டிய காலகட்டம் இது.//

        நீவிர் எவ்வளவுதான் முயன்றாலும் உங்கள் அறிவியலால் – இந்தப் பஞ்சபூத இயற்கையை வைத்து ,அரைத்த மாவையே திரும்ப திரும்ப அரைக்கலாம். இந்த பஞ்சபூதத்தை விட்டு வேறு ஒரு கூறு செய்ய இயலுமோ?

        நன்றி

  32. திருவாளர் கற்றது கையளவு அவர்களே! தங்களுக்கும் ரிப்ளே செய்யும் பொத்தானை காணவில்லை. பரவாயில்லை இதற்காகவெல்லாம் நான் வினவை சந்தேகிக்கவில்லை 🙂 ரஷ்யாவில் எப்படிப்பட்ட ஜனநாயகம் இருந்தது. இதோ ஒரு வினவின் கட்டுரை.

    பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா
    https://www.vinavu.com/2010/11/07/nov-7-3/

    • யுனிவர்பட்டி அவர்களே,

      என் பதிவில் இருந்த 🙂 சிரிமுகத்தை கவனிக்கவில்லை போலும். உடனே லூஸ்டாக் அது இது என்று கோபப்படுகிறீர்கள் 🙂

      பெரோஸ் அவர்களே,

      ________(சோவியத் யூனியன் பஞ்சம், கொலை குறித்த அவதூறு, பொய்கள் லிங்குகள் வெளியிடப்படுவதில்லை . இங்கு எடிட் செய்யப்பட்டிருக்கிறது)

      பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மாக்களின் தற்போதைய நிலை என்ன. இன்றைய காலகட்டத்தில் பொற்காலமாக சித்தரிக்கப்பட்ட கம்மியுநிசத்தை ரசியாவில் மக்கள் உதாசீனப்படுத்துவது ஏன்?

      • ஒன்றுமே தெரியாதவர் போல் பாசாங்கு செய்த கற்றது கையளவு அவர்கள் சோசலிச மாடல் காட்டுங்களேன் என்று அப்பொழுது கதறி நின்றார். ஆனால் இப்பொழுதோ கம்யுனிச அவதூறுகட்டுரைகளை நரகல் போல் மிதித்துக்கொண்டு வந்து நிற்கிறார் போலும். இதில் மாடல் கொடு, எதையும் பிளா…….ன் பண்ணாம பண்ணக்கூடாது. என்று எத்துணை அட்வைசு!!!!! இவர்களின் தாரதரமே இம்புட்டுதான் போலிருக்கிறது.
        ——————————————————————————————

        \\ இன்றைய காலகட்டத்தில் பொற்காலமாக சித்தரிக்கப்பட்ட கம்மியுநிசத்தை ரசியாவில் மக்கள் உதாசீனப்படுத்துவது ஏன்?\\

        யோக்கியவான்களே இந்தக்கேள்விக்கு பதில் தெரியாதா என்ன? பகத்சிங்கும், முதல் சுதந்திரப்போராட்டமான சிப்பாய்க்கலகமும், வஊசியின் தன்மானமும், ஹசரத் மகலின் வீரஞ்செறிந்த போராட்டம் என்று எண்ணிலா போராளிகளால் பெற்ற இந்திய விடுதலையையே தொலைத்துவிட்டு தரகுமுதலாளிகளுக்கும், பன்னாட்டு கம்பெனிகளுக்கும் நாட்டை காட்டு ஒப்பந்தத்திற்கு கூட்டிக்கொடுத்த கருங்காலிகள் வாழ்கிற தேசத்தில் இன்று எங்கே போயிற்று இந்திய சுதந்திரம் என்று என்றைக்காவது கேட்டிருக்கிறார்களா? கேட்கமாட்டார்கள். இதே பித்தலாட்டக் கூட்டம்தான் ரசியாவில் கம்யுனிசம் எங்கே போயிற்று என்று கேட்கிறது? என்பதை வாசகர்கள் இனம் காண வேண்டும்.

        தான் அடைகிற சொகுசுகளுக்காக, பெற்றதாயையே களவாண்டு போகிற மறுகாலனியாதிக்கத்தை அனுமதிக்கிறவர்களுக்கு தரகுமுதலாளித்துவத்தை பிணமாக தழுவுபவர்களுக்கு விடுதலைப்போராட்டமே சுதந்திர தினத்தின் ஆரஞ்சு மிட்டாயாகவும் பாகிஸ்தானின் கிரிக்கெட் தோல்வியாகவும் வெளிப்படுகிற பொழுது இவர்கள் எப்படி இன்னொரு நாட்டின் சோசலிச பின்னடவை உற்றுநோக்குவார்கள்?

        தனியார்மயத்தாலும் தாராளமயத்தாலும் தரகுமுதலாளித்துவத்தாலும் ஏகாதிபத்திய மறுகாலனியாக்க கொள்கைகளாலும் இந்திய விடுதலையை உதாசீனப்படுத்துகிற கருங்காலி வர்க்கங்கள் தான், ரசியாவில் கம்யுனிசத்தை மக்கள் உதாசீனப்படுத்தியது ஏன் என்று கேட்கிறார்கள்.
        பதில் என்ன? இந்தியா என்றில்லை எந்த நாடாக இருந்தாலும் அந்நாட்டில் வாழ்கிற இதுபோன்ற வர்க்கங்களுக்கு இக்கொள்கைகள் தான் ஒட்டுண்ணி வாழ்க்கையை வழங்கியிருக்கின்றன. அவைகள் தான் இவர்களை இப்படியெல்லாம் பிழைப்புவாதியாகவும் மாற்றியிருக்கின்றன.

        இவ்விதம் விடுதலையாலும் சோசலிசத்தாலும் தொழிலாளிகளின் தியாகத்தாலும் இன்னபிற மக்கள் திரள் போராட்டங்களினாலும் சொகுசு அடைகிற கூட்டம் தான் இதைக் கொச்சைப்படுத்துவதிலும் முதன்மையாக இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. இதை முறியடிப்பது, இதுகாறும் சுரண்டப்படும் வர்க்கமாக இருக்கும் பாட்டாளிகளுக்கு முதன்மையானது என்பதை இடவலமாக நிரூபிக்கிறது இக்கூட்டங்களின் தராதரம்.

        • தோழர் தென்றல்,

          //பகத்சிங்கும், முதல் சுதந்திரப்போராட்டமான சிப்பாய்க்கலகமும், வஊசியின் தன்மானமும், ஹசரத் மகலின் வீரஞ்செறிந்த போராட்டம் என்று எண்ணிலா போராளிகளால் பெற்ற இந்திய விடுதலையையே தொலைத்துவிட்டு தரகுமுதலாளிகளுக்கும், பன்னாட்டு கம்பெனிகளுக்கும் நாட்டை காட்டு ஒப்பந்தத்திற்கு கூட்டிக்கொடுத்த கருங்காலிகள் வாழ்கிற தேசத்தில் இன்று எங்கே போயிற்று இந்திய சுதந்திரம் என்று என்றைக்காவது கேட்டிருக்கிறார்களா? கேட்கமாட்டார்கள்//

          அருமையான வரிகள். உண்மையில் இதற்கு பதில் தெரிந்தால் அதற்கும் பதில் தெரியும்.

          கற்றது கையளவு.
          ————————————————

          ஒரு சித்தாந்தத்தின் வெற்றியை எதை வைத்து தீர்மானிப்பீர்கள்? ஒரு கொள்கையின் வலிமையை எப்படி பறைசாற்றுவீர்கள்?

          அன்று ,
          நாட்டில் பெரும்பாலான ஏழை எளிய மக்களுக்கு படிப்பறிவு கிடைக்க வேண்டும் என்று தான் பள்ளிகள் அரசுடைமையாக இருந்தன.
          ஆனால் இன்று?

          அன்று,
          ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக தான் அரசு மருத்துவமனைகளை அரசு தன்வசமே வைத்திருந்தது.
          ஆனால் இன்று?,

          அன்று,
          சோவியத் ரஷ்யாவின் சோஷலிச வெற்றி, உலகெங்கும் புரட்சி அலைகளை தூண்டிய போது, அதனால் உந்தப்பட்டு, உலகெங்கும் , சுரண்டப்பட்ட தொழிலாளிகள் போராடி சில சலுகைகள் பெற்றனர். அதை கட்டிக் காக்க தொழிலாளர் நல சட்டங்கள், முதலாளிகள் இயற்ற வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டது. அதன் எச்சம் தான் இன்று நம் நாட்டில் உள்ள பேரளவிலான தொழிலாளர் நல சட்டங்கள்.
          ஆனால் இன்று?

          அனைத்தும் கடந்த காலமாக மாறி விட்டது தானே. அதனால் தொழிலாளர் நல சட்டங்களை மக்கள் மறந்து விட்டனரா இல்லை மறுத்து விட்டனரா? அரசுப் பள்ளிகள் தேவையற்றவையாகி விட்டனவா? அரசு மருத்துவமனையின் தேவைகள் குறைந்து விட்டனவா?

          அனைவருக்கும் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் உங்களுடன் ஒன்றுபடுகிறேன் என்று கூறும் தாங்கள், அதை எப்படி பெறுவது என்பதை பற்றி ஒன்றும் சொல்ல காணோம் ஆனால் கம்யுனிசத்தை கண் முன்னாள் காமி என்று கண்ணாமூச்சியாட்டம் ஆடுவது மட்டும் நிற்கவில்லை.

          நன்றி.

          • தட்டச்சுப் பிழைக்காக வருந்துகிறேன். சலுகை அல்ல உரிமை என்பதே சரியானது. கற்றது கையளவுக்கான பின்னூட்டத்தில் தோழர் தென்றலின் எதிர் வினையை படித்த பின்பு தான் உரைத்தது. நன்றி.

        • தென்றல்,

          ஜனநாயக ஆட்சியில் குறைகள் இல்லை என்று நான் மறுத்தேனா?
          குறைகளை நிவர்த்தி செய்யும் வழி என்ன என்பதை பற்றி தானே பேசிக்கொண்டிருக்கிறோம்.

          கம்மியுனிச ஆட்சியிலும் குறைகள் உள்ளன. ஆனால் அதை நீங்கள் ஒத்துகொள்ள மறுக்கிறீர்கள்.
          தியனன்மென் சதுக்க படுகொலைகள் பற்றிய தங்களது கருத்து என்ன?

  33. க.கை அவர்களே,

    கங்காணி என்பது அவதூறு அன்று. இந்த வேலையின் தன்மையே அதுதான். தாங்கள் சொல்கிற தொழிலாளர் நல அம்சங்கள் எல்லாம் முறைப்படி தொழிலாளர் நலச் சட்டங்கள் படி வழங்கப்பட்டிருக்க வேண்டும். தாங்கள் தங்கள் எசமானிடம் நடத்திய பேச்சுவார்த்தை தொழிலாளிகளின் முன்னிலையில் நடைபெற்றதா என்ற கேள்விக்கு தற்பொழுதுவரை பதில் வரவில்லையே ஏன்?

    தொழிலாளர் நலச் சட்டங்களை மதிக்கிறவர் எனில் இதை அமல்படுத்துவதும் அதற்காக போராடுவதும் அப்படி போராடுகிறவர்களோடு ஐக்கியப்படுவதும் தானே நியாயம்! ஆனால் தாங்களோ யுனியன் என்பதே சுரண்டுவதற்குத்தான் என்று ஐசிஎப் பற்றி எழுதிய தங்களின் வக்கிரம் துருத்திக்கொண்டு இருக்கிறது. அதற்கு சிறப்புப் பதிலை பிற்பாடு எழுதுவோம்.

    முதலாளித்துவ சமூகத்தில் மேலாளர் என்பவர் கங்காணியை வேலையைத்தான் பார்க்கிறார். இதற்கு வேறு அர்த்தம் கிடையாது. இதே முதலாளித்துவ அடிவருடியாக இருக்கும் இராமன் தனது டீம் லீடர் கனடா செல்லும் வாய்ப்பை மறுத்தார் என்று எழுதுகிற பொழுது ஒரு தொழிலாளி டீம் லீடர் குறித்து வைத்திருக்கும் பிம்பம் என்னவாக இருந்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்யமுடிகிறதா? இதைவிட ஹெச் எர் என்பவர்கள் மனிதவடிவில் இருக்கும் மிருகங்கள் என்று சொல்லலாம். எந்த தொழிலாளிக்கும் ஹெச் ஆர் மீது மதிப்போ மரியாதையோ கிடையாது. இது ஒரு புறம் இருக்கட்டும்.

    தாங்களே என்ன சொன்னீர்கள்? பிற மேலாளர்கள் திட்டி வேலை வாங்குகிற பொழுது நான் கனிவாக பேசி ஊக்கப்படுத்தி வேலை வாங்குவேன் என்று எழுதினீர்கள். இதில் என்ன சிறப்பு இருக்கிறது? முதலாளிக்கு இலாபத்தை சுரண்டித்தருவதில் மேற்பார்வையிடுகிறவர் திட்டினால் என்ன? கனிவாக பேசினால் என்ன? பாயசத்தில் விசம் கலந்து தருவதற்கும் கசையடி தருவதற்கும் என்ன வித்தியாசம்?

    கிம்பர்லி ரெவராவைப்பற்றி வினவில் வந்த ஒரு பதிவு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. படித்துப் பார்க்கலாம். அதன் முடிவுரையில் இவ்விதம் சொல்லியிருப்பார்கள்.

    “கிம்பெர்லி தனது இதயத்தை வயிற்றுக்கு மேல் வைத்திருந்தாள். இதயத்தின் மீது வயிறு அமையப் பெற்றவர்களால் அவள் அனுபவித்த வேதனையைப் புரிந்து கொள்ள இயலாது.”

    தாங்கள் மட்டுமில்லை, இராமனும் மற்றும் இன்னபிற நண்பர்களும் தான் அடைந்த வசதிகளுக்காக முதலாளித்துவத்தை நியாயப்படுத்துகிற பொழுது பாட்டாளிவர்க்கத்தின் மீதான சுரண்டலுக்கு செவிமடுக்காத சுரண்டல் பேர்வழிகளாக இருக்கிற பொழுது இதயத்தின் மீது வயிறு அமையப்பெற்றவர்களாகத்தான் தெரிகிறார்கள். ஏன் என்பதை இதைக் கிளிக் செய்து மேற்கொண்டு படிக்கலாம். https://www.vinavu.com/2013/05/24/kimberly-rivera/

    • \\ ஏன் தென்றல், உலகில் நீங்கள் மட்டும் தான் உத்தமர், மற்றவர் அனைவரும் அயோக்கியர் என அரவிந்த் கேஜ்ரிவால் போல இருக்கிறீர்கள்?\\

      இந்தக் கருத்தை உங்களுக்கு கொஞ்சம் பொருத்திப் பாருங்கள். நாம் சமூகத்தின் ஆகக்கேடான சுரண்டலை எதிர்த்துப் போராடுகிற பொழுது தங்களுடைய எல்லா பதிவுகளிலும் ரொம்ப சலிப்புற்றவராக ஒரு வாக்கியத்தை எழுதுவீர்கள். அது என்ன? இதுபோன்ற வேலைகளை விட்டு ஆக்கப்பூர்வமாக செயல்படலாம் என்று எழுதுவீர்கள். இப்பொழுது மீண்டும் படித்துப் பாருங்கள். இந்த உலகில் ஏதோ தாங்கள் மட்டும் தான் ஆக்கப்பூர்வமான வேலை செய்யவதாகவும், போராடுவது எல்லாம் ஆக்கப்பூர்வமான வேலையல்ல என்ற தொனியில் எழுதுகிற பொழுது தாங்கள் ஏன் ஒரு மேட்டிமைவாத நடுத்தரவர்க்க மனவக்கிரம் பிடித்தவர்போல் இருக்கிறீர்கள்? உங்களுடைய ஆயுதம் தான் இது. பதில் சொல்லுங்கள்.

      \\ நான் சொல்ல வந்த முக்கிய கருத்தை தென்றல் திசை திருப்புகிறார். அயர்லாந்து நாடு தங்களை பொறுத்தவரை முதலாளித்துவ நாடு. சீனா, ரசியா கம்மியுனிச நாடு (உண்மையோ, போலி கம்மியுநிசமோ, அது அவரவர் பார்வையை பொருத்தது). ஆனால் முதலாளித்துவ அயர்லாந்தில் தொழிலாளர் நல சட்டங்களுக்கு இருக்கும் வலிமை கம்மியுனிச சீனாவில் உள்ளதா? இல்லை.\\

      இதில் ஒரு திசைதிருப்புதலும் இல்லை. முதலாளித்துவ நாடுகளில் உள்ள தொழிலாளர் நலச் சட்டங்கள் எவ்விதம் வந்தது? அதற்காக நடந்த உயிரிழப்புகளும் தியாகங்களைப்பற்றியும் எதாவது வாய்திறந்தீர்களா? இதே அயர்லாந்தின் நிலையில் தொழிற்சங்க நிலைமைகள் என்னவாக இருந்தது என்பதை மனம் திறந்து விவாதிக்க தயாரா? ரஷ்யாவில் புரட்சி நடந்த பொழுது அயர்லாந்து தொழிலாளிகளிடையே உண்டாக்கிய பருண்மையான விளைவுகள் என்ன? என்பது விவரிக்கப்பட்டிருக்கிறது. மனதைத் திறந்து விவாதியுங்கள்.

      இரண்டாவதாக, அயர்லாந்து தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு இருக்கும் வலிமை கம்யுனிச சீனாவில் உள்ளதா என்ற கேள்விக்கு இல்லை என்ற பதிலை எதன் அடிப்படையில் முன்வந்தீர்கள்?

      தங்கள் பார்வையின்படி முதலாளித்துவத்தின் வெற்றிக்காக அயர்லாந்தைப் பற்றி பேசுகிற பொழுது இன்றைய சீனா முதலாளித்துவ நாடு என்கிற பொழுது அங்குள்ள தொழிலாளர் நலச்சட்டங்களுக்காக தாங்கள் அதை ஒரு பாயிண்டாக எடுத்து விவாதிப்பது தானே முதலாளித்துவ பற்றாளர்களின் போக்கு.

      சீப் லேபருக்காவும் பொருள் உற்பத்தி கட்டமைப்பிற்காகவும் உலக முதலாளிகள் சீனாவிற்கு படையெடுக்கிற பொழுது அதாவது பொறுக்கித் திங்கிற பொழுது அந்நாட்டின் தொழிலாளர்களின் ரத்தத்தில் கையை நனைத்துவிட்டு வெளி உலகில் சீனாவில் தொழிலாளர் நலச்சட்டங்கள் அயர்லாந்தைவிட மோசமாக இருப்பதாக கதைகட்டுகிற பித்தலாட்டம் ஏன்?

      ஏன் என்றால் கம்யுனிச அவதூறுப் பிரச்சாரத்திற்கும் சீனாதான் கேந்திரம்; முதலாளிகள் முத்துக்குளிப்பதற்கும் சீனாதான் கேந்திரம் என்றால் இதன் யோக்கியவான்களின் இரட்டைமுகம் அம்பலப்படுத்தப்படவேண்டியது தானே?

      மற்றபடி சீனாவில் தொழிலாளர் நலச்சட்டங்கள் குறித்து உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்பது உங்கள் பதிலில் இருந்து தெரிகிறது. சான்றாக சில பாயிண்டுகளைத் தருகிறேன்.

      1. அன்றைய சோசலிச சீனாவில் ஒரு கிராமத்தில் தொழிற்சாலைத் தொடங்க வேண்டுமென்றால் அதை நிர்மானிப்பது அக்கிராமத்தின் மக்கள் தான். சோசலிச சீனாவில் கிராம மக்களே தொழிற்சாலை ஆரம்பிக்கிற பொழுது இன்றைய சீனாவில் முதலாளிகள் ஆரம்பிப்பதற்கு ஒரு அனுமதியைப் பெற வேண்டும் என்று முதல் காயடிப்பு நடைபெற்றிருக்கிறது; இரண்டாவதாக கிராம மக்கள் ஒப்புதல் தேவையில்லை; ஆனால் கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு தரவேண்டும் என்பது இப்பொழுது உள்ள இரண்டாம் கட்ட சீர்திருத்தம். இதன்படி பல கிராமங்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றன. அயர்லாந்தில் இந்தியாவில் இது தான் நிலைமையா?

      2. ஒரு கிராமம் பங்குபெற்றிருக்கிற மொத்த தொழில்களிலும் அதன் மக்கள்தான் உடமையாளர்கள் என்ற சோசலிச விதி நீக்கப்பட்டு இன்றைக்கு பணம் வீசி எறியப்படுகிறது. இது எந்த நாட்டில் இருக்கிறது?

      3. பாக்ஸ்சான் தொழிற்சாலையில் தொழிலாளிகள் தற்கொலை செய்துகொண்ட பிறகு தொழிலாளிகளுக்கான ஊதிய உயர்வு அரசு விசாரணையாக நடைபெற்று இப்பொழுது கண்துடைப்பாக கூலி உயர்வு வந்திருக்கிறது. இதே சோசலிச சீனாவாக இருந்தால் விசாரணை மன்றம் மக்கள் கமிட்டியின் முன் நடைபெற்றுஇருக்கும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட்டிருபார்கள். இன்றைக்கு அது இல்லை என்பதால் சீரழிவு என்கிறோம். ஆனால் மானேசரில் நடந்து என்ன? சென்னை நோக்கியா செய்தது என்ன?

      4. சோசலிச சீனாவில் ஆரம்பிக்கப்பட்ட ஒவ்வொரு கூட்டுறவும் இன்றைக்கு அபரிவிதமான இலாபத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. சோசலிச கட்டமைப்பில் உற்பத்தியின் பலன் அதன் கூட்டுறவுகளின் வளர்ச்சிக்கு தான் செலவிடப்படவேண்டும் என்ற விதிகாரணமாக இன்றைக்கு சீன ரயில் கழகம் மற்றும் ஒவ்வொரு மாகாண போக்குவரத்துக்கழகமும் விதவிதமான தொழில்நுட்பங்களைப் புகுத்திவருகின்றன. ஆனால் கட்டணம் இன்னும் குறைக்கப்படவில்லை. தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். அந்நாட்டு பொலிட் பியுரோ இந்தக்கழகங்களிடம் இலாபத்தை பகிர்ந்துகொள்ளுமாறு கோரிக்கை விடுக்கிறது! ஏன் கோரிக்கை? சோசலிச சமூகம் கோரிக்கை வைத்து முதலாளிகளிடம் கெஞ்சிக்கொண்டிருக்குமா?

      இந்த நான்கிலும் சோசலிசத்தை ஒப்பிடுகிற பொழுது இன்றைய சீனம் எப்படியெல்லாம் சோசலிச வெற்றிகளை சூறையாடுகின்றன என்பதற்கான பார்வை வெளிப்படுகிறது. இதிலிருந்து தொழிலாளர் நலச் சட்டங்கள் எப்படி மாற்றப்பட்டிருக்கின்றன என்பதை குத்துமதிப்பாக தெரிந்துகொள்கிறோம். இதற்கும் அயர்லாந்து தொழிலாளர் நலச்சட்டங்களுக்கும் சீனா கொத்தடிமை போல நடத்துகிறது என்று சொல்வதற்கும் எதாவது சம்பந்தம் இருக்கிறதா? உங்களது பிரச்சாரம் பொய்ப்பிரச்சாரம் என்பதும் கம்யுனிசத்தின் மீதான வெறும் வன்மப் புழுதி என்று தெரிகிறது இல்லையா?

      சீன முதலாளித்துவத்தை கண்டுகொள்ள முடியாதவர் அயர்லாந்து முதலாளித்துவம் தொழிலாளர் நலச்சட்டங்களை சிறப்பாக தருகிறது என்று சொல்வது வெறும் வெற்று அவதூறு என்று புலப்படுகிறது இல்லையா?

    • ஐசிஎப் பற்றி நான் எழுதியது நான் நேரிலே கண்டறிந்த உண்மை. வடசென்னையில் ஐ.சி.எப் தொழிலாளர்கள் என்னுடைய அக்கம்பக்கத்தினராக இருந்தனர். தங்களுக்கு பிடிக்காத ஒரு உண்மையை உடனே பொய் என்று அடித்து விடுகிறீர்கள்.

      ஒரு தனியார் கம்பெனியில் ஊக்கத்தொகை என்பது அவர்களின் திறமையை கொண்டு வழங்கப்படுகிறது. ஊக்கத்தொகையை வியாபாரத்தின் நிலையை வைத்து நிர்ணயிப்பார்கள். இதில் தவறிருப்பதாக தெரியவில்லை.

      ஊக்கத்தொகை அளிப்பதும் விஷம் தருவதும் ஒன்றா? என்ன பிதற்றுகிறீர்கள். உங்கள் பிதற்றலுக்கு ஒரு அளவே இல்லையா தென்றல்? ஐயா, ஊக்கதொகை என்பது உழைப்புக்கும் திறமைக்கும் கிடைக்கும் ஒரு மதிப்பு. அது சும்மா எல்லோருக்கும் ஒரே சமமாக வழங்கினால் பின் சோம்பேறியாக இருப்பவர்களை எப்படி சுறுசுறுப்பாக மாற்றுவது?

      • நுங்கு பிடுங்குபவனும் நோண்டித் தின்பவனும்

        \\ ஐசிஎப் பற்றி நான் எழுதியது நான் நேரிலே கண்டறிந்த உண்மை. வடசென்னையில் ஐ.சி.எப் தொழிலாளர்கள் என்னுடைய அக்கம்பக்கத்தினராக இருந்தனர். தங்களுக்கு பிடிக்காத ஒரு உண்மையை உடனே பொய் என்று அடித்து விடுகிறீர்கள்.\\

        தாங்கள் சொல்ல வருகிற உண்மையின் தாராதரம் என்ன? இரண்டே வரியில் அடுக்கி விடலாம். “ரிலையன்ஸ் பிரஸ்ஸில் சர்க்கரையின் எடை துல்லியமாக இருக்கும்; ரேசன் கிடையில் புளுத்து நாறும்” அவ்வளவு தானே!

        இது நடுத்தர வர்க்க மேட்டிமைவாதிகளின் தனியார்மயப் பாசம். ஆனால் இதே ஒட்டுண்ணிகள் எப்படி ரிலையன்ஸ் பிரஸ் வந்தது? எப்படி ரேசன் கடை மோசமாக்கப்பட்டது? என்பது பற்றி மட்டும் பேசமாட்டார்கள். ஏன் பேசமாட்டார்கள்?

        அரசு கட்டமைப்புகளை குழிதோண்டி புதைப்பதற்கு ஆளும் வர்க்கத்தை ஏற்படுத்தி இருப்பவர்களே இவர்கள் தான். இதில் அரசு முதலாளி தனியார் முதலாளிகளுக்காக பொறுக்கித் தின்னும் பொருட்டு கூட்டிவிடத்தானே செய்வார். அங்கே பொறுக்கித் திங்க தயங்காத தனியார் நிறுவனங்கள் அரசு கட்டமைப்பு மோசம் என்று பிரச்சாரம் செய்வதிலும் முதன்மையாக இருப்பார்கள் என்றால் இதில் யோக்கியன் யார் என்று உங்களுக்குத் தெரிகிறது இல்லையா? எப்படியென்று சில நிருபணங்களை முன்வைப்போம்.

        இஸ்ரோவிற்கு ஒதுக்கப்பட்ட 4ஜி அலைக்கற்றை தேவாஸ் மல்டி மீடியா என்று இராதா கிருஷ்ணன் தனியாக ஒரு கம்பெனி தொடங்கி அரசு வளங்களை தனியாருக்கு திருப்பிவிட்டது முதல் கதை. அதை பொறுக்கித் தின்றது தனியார் முதலாளிகள் தான்.

        இதுவரை இரயில் கட்டமைப்புகளை உருவாக்கியது அரசு. தனியார் எப்பொழுதுமே உட்கட்டமைப்புகளை உருவாக்கி கொடுத்தபிறகுதான் உள்ளேயே நுழைவார்கள். நொங்கு பிடுங்குபவன் ஒருத்தன்; நோண்டித்திங்கறவன் ஒருத்தன் என்று கிராமத்தில் சொல்வார்கள் இல்லையா? அப்படி நோண்டித்திங்கறவன் சொல்கிற முதல் பிராது என்ன? நொங்கு பிடுங்கிறவனுக்கு நோண்டித்திங்கத் தெரியாது. அவன் நுங்கைச் சிந்திவிடுவான். அதாவது பஞ்சடித்துவிட்டு வீட்டிற்கு வந்துவிடுவான். நாங்கள் சுரண்டித்தின்போம் என்பது தான். ஆகையால் தான் நுங்குமட்டுமல்ல ஐசிஎப்பும் தனியார் முதலாளிகள் சுரண்டித்திங்க போகிறது. இதன் சூட்சுமம் புரிகிறது இல்லையா?

        பெல் பொதுத்துறை நிறுவனத்தின் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளைத் திருடி தனியார் கம்பெனிகள் மோசடி செய்வது மூன்றாவது எ.கா. தற்பொழுதுவரை பலகோடி இலாபம் ஈட்டித்தருகிற இந்நிறுவனத்தின் பாய்லர் தொழில்நுட்பங்கள் தனியார் தரகு முதலாளிகள் வீசியெறியும் ரொட்டித்துண்டுகளுக்காக பறிபோய் இருக்கிறது.

        அருண் ஜெட்லி உங்களைப்போன்ற முதலாளிதானே. அவன் ஆட்சிக்கு வந்தவுடன் என்ன செய்தான்? தனக்குச்சாதகாமக பொறுக்கித்திங்கும் பொருட்டு சனநாயகம் என்ற போர்வைக்குள் அனைத்து சட்டங்களையும் அம்பானி டாட்டாவிற்காக மடைமாற்றினான். மடைமாற்றிக்கொண்டிருக்கிறான். அதற்கு இந்த கைக்கூலி சொல்கிற பதில் என்ன? பொதுத்துறை நிறுவனங்கள் மோசம். தொழிலாளிகளின் யூனியன் பிரச்சனை; தனியாரிடம் விட்டால் தான் சிறப்பாக இருக்கும். என்று சொல்லி பாரதத்தாயைக் கூட்டிக்கொடுத்துவிட்டான். அதையே கொஞ்சம் டிசெண்டாக மாற்றி அக்கம் பக்கம் ஐசிஎப் என்று தாங்கள் ஜாக்கி வைத்து தூக்கி நிறுத்துகிறீர்கள்.

        பின் குறிப்பு: உங்கள் அக்கம் பக்கத்தினர் ஐசிஎப்பில் இருக்கிறார்கள் என்று வாக்குமூலம் தருகிறீர்களே! எங்கள் வீட்டிலேயே ஐசிஎப் தொழிலாளி இருக்கிறார். அவருக்கு பஞ்ச் விசயங்களும் தெரியும். அதே போன்று உங்களைப்போன்றவர்கள் ரிலையன்ஸ் பிரஸ் சர்க்கரைக்காக நாக்கைச் சுழற்றிக்கொண்டிருப்பவர்கள் என்றும் தெரியும். தொழிலாளி அரசியல் படுத்துப்படுவதன் அவசியத்தை அவர் உணர வேண்டியிருக்கிறது! ஆகையால் புல்லுருவிகளின் அரசியலை நம்மால் அம்பலபடுத்த முடியும். அதுதானே நமது வேலையாக இருக்க முடியும்! சரிதானே க.கை.

        • தென்றல்,

          ஐசிஎப்பில் தொழிலாளிகள் காரை பஞ்ச் செய்து விட்டு வீட்டில் அவரவர் வேலையை செய்வதை தாங்கள் ஆதரிப்பதை போல இருக்கிறது. அரசியல்வாதி தவறு செய்தான், முதலாளி தவறு செய்தான், அதனால் தொழிலாளியும் தவறு செய்யலாம் என்று தாங்கள் நியாயப்படுத்துவதாகவே தெரிகிறது.

          அரசியல்வாதிகள் உத்தமர்கள், அம்பானி, மல்லையா எல்லாம் உத்தமர்கள் என்று நான் உங்களிடம் வக்காலத்து வாங்கினேனா? ஏன் இப்படி பழியை போடுகிறீர்கள்?

          ரிலையன்ஸ் பிரஷ் சக்கரையையும் ரேசன் சக்கரையையும் நான் எப்போது ஒப்பிட்டேன். ஏன் இல்லாதது பொல்லாததை எல்லாம் கதை கட்டி விடுகிறீர்கள்? இருவரி கேள்விக்கு இருநூறு வரி பதில் அளித்தாலும் அதில் ஒரு நேர்மை இருக்க வேண்டும் தென்றல். தங்களிடம் அது இல்லை என்று தெளிவாக தெரிகிறது.

          ரிலையன்ஸ் பிரஷ் பொருட்கள் நல்லதாக இருக்க வேண்டும் என்பதால் வேண்டுமென்றே அரசு வழியாக தரப்படும் பொருட்கள் தரமற்றதாக ஆக்கப்படுகிறது என்று நீங்கள் கூறுகிறீர்கள். நான் ரிலையன்ஸ் பற்றியே பேசவில்லை. நான் பேசியது ஐ.சி.எப் பற்றி. அதுவும் எனக்கு தெரிந்து ஒரு 20 வருடமாக நடக்கும் விடயத்தை தான் உங்களிடம் பகிர்ந்தேன். 20 வருடமாக எந்த தனியார் ரயில் பெட்டிக்கு ஆதரவாக ஐ.சி.எப் செயல்படுகிறது? சொல்லுங்கள் தென்றல்?
          இதில் இருந்து ஒன்று தெரிகிறது. தொழிலாளிகள் பன்ச் அடித்து விட்டு வீட்டுக்கு வருவதால் அந்த தொழில் நட்டமடைந்து பின்னர் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று சொல்கிறீர்களா? அப்போது உண்மையில் தனியார்மயமாக்கலுக்கு யார் உண்மையான காரணம் என்று சொல்கிறீர்கள்?

          நான் ரிலையன்ஸ் பிரஷ் சக்கரைக்காக நாக்கை சுழற்றுகின்றேன் என்று எதை வைத்து சொல்கிறீர்கள்? தவறு எங்கிருந்தாலும் அது முதலாளியிடம் இருந்தாலும் சரி, தொழிலாளியிடம் இருந்தாலும் சரி அதை கண்டிப்பது தான் சரி என்று சொல்வதற்கும் மேட்டிமைதனத்திற்கும் வித்தியாசம் உங்களுக்கு விளங்கவில்லை தென்றல்.

          தங்கள் வீட்டிலேயே ஐ.சி.எப் தொழிலாளி இருக்கிறார். அவருக்கு பன்ச் விசயங்கள் தெரியும் என்கிறீர்கள். அவ்வாறு செய்வது சரியா, தவறா?

      • \\ ஒரு தனியார் கம்பெனியில் ஊக்கத்தொகை என்பது அவர்களின் திறமையை கொண்டு வழங்கப்படுகிறது. ஊக்கத்தொகையை வியாபாரத்தின் நிலையை வைத்து நிர்ணயிப்பார்கள். இதில் தவறிருப்பதாக தெரியவில்லை.\\

        ஒரு தனியார் கம்பெனி தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு அப்பாற்பட்டதா? இல்லையில்லையா? பிறகு அதனடிப்படையில் போனசை எண்ணி வைப்பதில் என்ன பிரச்சனை? இதை மறைத்து வேசம் போடுவது எதற்காக? பிறகு எந்த நியாய உணர்ச்சியின் அடிப்படையில் சனநாயகம் என்று கதையளக்கிறீர்கள்! தற்பொழுது முதலாளிகளுக்கு சாதகமாக இருக்கும் தொழிலாளர் நலச்சட்டங்களையே உங்களைப்போன்ற ஆசாமிகள் பீ துடைத்த குச்சியாக கருதுவார்கள் எனில் சனநாயகம் புத்தகம் கழிவறைக்காகிதம் என்று அறைந்து நிரூபிக்கிறது இல்லையா உங்களின் செயல்?

        உங்கள் கருத்துப்படியே வியாபாரத்தின் நிலையை வைத்து ஊக்கத்தொகையை நிர்ணயிக்கிறார்கள் எனில் 2013இல் டாடா டிசிஎஸ் பெற்ற மொத்த இலபாமான 2.5பில்லியன் டாலர்களை எப்படி பிரிக்கப்போகீறீர்கள் என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லையே? என்ன காரணம்? யார் செய்த தாமதம்?

        \\ ஊக்கத்தொகை அளிப்பதும் விஷம் தருவதும் ஒன்றா? என்ன பிதற்றுகிறீர்கள். உங்கள் பிதற்றலுக்கு ஒரு அளவே இல்லையா தென்றல்? ஐயா, ஊக்கதொகை என்பது உழைப்புக்கும் திறமைக்கும் கிடைக்கும் ஒரு மதிப்பு. அது சும்மா எல்லோருக்கும் ஒரே சமமாக வழங்கினால் பின் சோம்பேறியாக இருப்பவர்களை எப்படி சுறுசுறுப்பாக மாற்றுவது?\\

        உழைப்பைச் சுரண்டிவிட்டு ஊக்கத்தொகை என்பது பம்மாத்து இல்லையா? இதில் சுறுசுறுப்பு, சோம்பேறி என்று மனவக்கிரம் வேறு! முதலில் உங்கள் கம்பெனியில் உள்ள தொழிற்சங்க நடவடிக்கைகளை பட்டியலிடுங்கள். பிறகு மேற்கொண்டு பேசுவோம்.

        மேலும் பிறிதொரு பின்னூட்டத்தில் சலுகை என்று குறிப்பிட்டிருந்தீர்களே! முதலாளிகளிடம் தொழிலாளிகள் சலுகைகளுக்காக தொங்கிக்கொண்டிருக்கவில்லை. அவர்கள் தங்களின் உரிமைகளுக்காக போராடுகிறார்கள். பேச்சு இதனடிப்படையில் இருப்பது நல்லது. அதைவிடுத்து, உங்களின் கனிவு, ஊக்கத்தொகை என்று கங்காணிகளுக்கு உரிய பாசாங்கு தேவையில்லை. ஒரு முதலாளியிடம் கைக்குலுக்குவது என்பது பாம்புக்கு பால் வார்ப்பதைப்போன்றது. அது எமது வர்க்க உணர்வுகளுக்கு எதிரானது!

        • டாடா டிசிஎஸ் பணியாளர்களை நீக்கியதை நான் எதிர்க்கவே செய்கிறேன். ஆயிரக்கணக்கான பணியாளர்களை நீக்கி விட்டு நாட்டின் அதிக இலாபம் ஈட்டிய நிறுவனம் என்று கேடுகெட்ட பெயரெடுத்த டி.சி.எஸ் கம்பெனிக்கு மானமுள்ள எவனும் வக்காலத்து வாங்க மாட்டான்.

          ஆனால் நம் விவாதம் டி.சி.எஸ் பற்றி இல்லை, தொழிலாளிகளுக்கு தரப்படும் ஊக்கத்தொகை பற்றியது தானே.

          நாடு இப்போது இருக்கும் நிலையில் தொழிலாளிகளுக்கு ஒழுங்காக சம்பளம் மாதமாதம் அளித்து அவர்களில் அதிக திறமையுடன் வேலை செய்பவர்களுக்கு அதிக ஊக்கத்தொகை வழங்கி ஊக்குவிப்பது தவறு என்று சொல்வீர்களானால் அதற்கு பின் பேசுவதற்கு ஒன்றுமே இல்லை.

          கடல் அலை ஓய்ந்த பின் கரையை கடக்க நீங்கள் காத்திருங்கள், கனவுலகத்தில் வாழுங்கள், வாழ்த்துக்கள்.

          • டாடா போன்ற கம்பெனிகளை எடுத்துவிட்டு வேலை வாய்ப்புக்கு என்ன இருக்கிறது என்பதை சிந்தித்து பாருங்கள் ?

            தொழில் நுட்ப கம்பெனிகள் வந்ததால் தான் திறமையை மதித்து வேலை கொடுத்தார்கள் .சோசிலிச காலத்தில் லஞ்சம் கொடுத்து , சிபாரிசு கடிதம் கொடுத்து அல்லது சாதியை காட்டி தான் வேலை வாங்க முடிந்தது .

            அவர்களால் முடிந்த வரை 10 வருடத்தில் ,30 வருட சோசியலிச சம்பளத்தில் வேலை கொடுத்து இருகிறார்கள் .

  34. தென்றல்,

    பெரும்பாலும் மத விவகாரத்தில், சாதி விடயத்தில் வினவில் நண்பர்கள் சண்டையிடும்போது ஆக்கபூர்வமாக ஏதாவது செய்வோம், ஆகிற வேலையை பார்ப்போம் என்று பலமுறை கூறியுள்ளேன். நீங்கள் சரியாக படித்து பாருங்கள். அதற்குள் “மேட்டிமைவாத நடுத்தரவர்க்க மனவக்கிரம் பிடித்தவர்” என்று குறை கூறுகிறீர்கள்.

    என் கேள்விக்கு சரியான பதிலை தாருங்கள். அயர்லாந்தில் வேலை செய்யும் தொழிலாளர்களை விட சீனாவில் வேலை செய்யும் தொழிலாளிகள் அதிக மகிழ்ச்சியுடன் அதிக நிம்மதியுடன் வாழ்கிறார்களா?

    தற்போது சீனாவில் இருப்பது கம்மியுனிசமா, முதலாளித்துவமா? தெளிவாக ஒரு பதிலை கூறுங்கள்.

  35. தென்றல்,

    தங்களின் புரட்சிக்கு தெளிவான ஒரு பாதை இருக்கிறதா?
    Roadmap? Timeline?

    • \\ தங்களின் புரட்சிக்கு தெளிவான ஒரு பாதை இருக்கிறதா? Roadmap? Timeline?\\

      “தங்களின் புரட்சி” என்றால் என்ன? அதாவது மணல் மாபியாக்களுக்கு எதிரான போராட்டம் நடைபெறுகிறது. மணற்கொள்ளையை முறியடிப்பது மக்களுக்கு முதன்மையான அவசியமாகும். இதில் நான் கலந்துகொள்ள மாட்டேன் என்று சொல்கிற வர்க்கங்கள் பிசிலரி வாட்டர் வாங்கிக்குடிக்கும்; சோற்றுக்கு ரிலையன்ஸில் கல்ச்சர்பொன்னியும் பஞ்சாப்பின் பாஸ்மதியும் தின்பார்கள்! அவர்கள் தான் கால்மேல் கால்போட்டுக்கொண்டு புரட்சியை எப்பொழுது நடத்துவார்கள் என்று கேட்பார்கள்!

      அடிமைச் சமூகத்தில் நிலப்புரபுக்களின் விருந்தினர்கள் தனக்குப்பிடித்த அடிமைகளைத் தேர்ந்தெடுத்து சண்டையிட வைத்து விசிலடித்து ரசிப்பார்கள் (ஸ்பார்ட்டகஸ்). சண்டையில் தோற்கிற அடிமையின் கழுத்து வெட்டப்படும் என்பதால் அடிமைகள் வாழ்வைத் தக்கவைப்பதற்காக ஒருவொருக்கொருவர் போராடுவார்கள். தாங்கள் Rodamap, Timeline என்று பின்னூட்டத்தில் விசிலடிப்பதைப் பார்த்தால் வேடிக்கைபார்க்கிற வினோத வக்கிர வர்க்கங்களையும் விஞ்சிவிடுவீர்கள் போலிருக்கிறது!

      அய்யகோ! நான் அப்படியில்லை என்றால் இதே மணல் மாபியாக்களுக்கு எதிரான போராட்டத்தில் போராட வாருங்கள். இதை முறியடிக்கவேண்டியது அவசியம் என்று உங்களுக்குத் தெரியும். இது புரட்சி அளவிற்கு பருண்மையானது என்பதை நேரடியாக தெரிந்து கொள்ளவேண்டியது மீதிப்பணியாகும். ஆக மக்களை அணிதிரட்டி ஆளும்வர்க்கத்திற்கு எதிராக தரகுமுதலாளிகளுக்கு எதிராக அரசியல் பினாமிகளுக்கு எதிராக போராடினால் தான் மணல் மாபியாக்கள் கொள்ளையைத் தடுத்து நிறுத்த முடியும். வினவுக்காரர்கள் நமக்குத்தேவையான சுவரொட்டிகளையும் போஸ்டர்களையும் இன்னபிற உதவிகளையும் வழங்குவார்கள். எத்துணை நாட்களில் முறியடிக்கலாம் எப்பொழுது வருகிறீர்கள்? என்பதையும் அதற்கான ரோட்மேப் மற்றும் டைம்லைனையும் தாங்களே தீர்மானித்து சொன்னால் நாம் சென்னையில் இருந்து வேலையைத் தொடங்குவது சிறப்பாக இருக்கும்? சரியா? தாங்கள் பங்குபெற வேண்டிய அவசியமான போராட்டம் ஒன்றை உதாரணமாகக் காட்டி டைம்லைனையும் ரோட்மேப்பையும் கேட்கிறேன். அதாவது எக்காரணத்திலும் ஆக்கப்பூர்வமாக மட்டுமே இருக்கவேண்டும் என்ற உங்களது பண்பாட்டினை இந்த விசயத்தில் பொருத்திப் பார்க்க விழைகிறேன். சீக்கிரம் ஒருபதிலைச் சொல்லுங்கள். இப்பொழுதே பதினைந்து நிமிடம் ஓடிவிட்டது!

  36. மணல் மாபியாவுக்கு எதிராக தாங்கள் நடத்தும் போராட்டம் நியாயமானதே, அவசியமானதே. அதை நான் எங்கே குறை சொன்னேன்.

    தாங்கள் கம்மியுனிசம் வெல்ல வேண்டுமானால் நாடு முழுதும் ஒரு நேர்மையான கம்மியுனிச ஆட்சியின் கீழ் வர வேண்டும். அது தற்போதைய நிலையில் அந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. முதலில் சாதாரண பொதுமக்கள் மத்தியில் கம்மியுனுஸ்டுகள் என்றால் யார், அவர்களின் மேல் மக்கள் கொண்ட கருத்து என்ன தெரியுமா?

    மக்கள் பேராதரவு இல்லாமல் நாட்டில் ஒரு புரட்சியும் வெடிக்காது.
    அது சுதந்திரம் வேண்டிய புரட்சியாக இருந்தாலும் சரி, ஜனநாயகம் வேண்டிய புரட்சியாக இருந்தாலும் சரி, ஊழல் அற்ற ஆட்சி வேண்டிய புரட்சியாக இருந்தாலும் சரி, ஒட்டு மொத்த நாட்டை கம்மியுனிச சித்தாந்தத்துக்குள் அடக்கும் புரட்சியாக இருந்தாலும் சரி, அதற்கு மக்கள் பேராதரவு என்பது மிக மிக முக்கியம். அதற்கு நீங்கள் எடுத்த முயற்சிகள் என்ன? தங்கள் போராட்டங்கள் பெருமளவு மக்களிடம் ஏன் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, கொஞ்சம் யோசித்து பாருங்கள் தென்றல்.

    கண்ணை மூடிக்கொண்டு உங்கள் பின்னால் மக்கள் அணிவகுத்து நிற்பார்களா? ஏன், எதற்கு, எப்படி, எப்போது, எவ்வாறு என்ற கேள்விகள் பொதுமக்களிடம் இருக்கிறது. அதற்கு என்ன பதில்?

    உங்கள் குறிக்கோள் என்ன, எப்போது இலட்சியத்தை அடைவீர்கள், எப்படி இலட்சியத்தை அடைவீர்கள் என்று கேட்டால் அதற்கு மீண்டும் என்னிடமே நீங்களே சொல்லுங்கள் என்று தட்டிக்கழிக்கிரீர்கள். உங்களை நம்பி எப்படி ஒட்டுமொத்த மக்களும் ஆதரவு தெரிவிப்பார்கள்?

    இராமன் அவர்கள் மேலே குறிப்பிட்டதை போல செந்தில் மலையை தூக்கி என் முதுகில் நீங்கள் வையுங்கள், பின் நான் அதனை தூக்குகிறேன் என்று கூறுவாரே, அதை போல தான் நீங்கள் பேசுவது இருக்கிறது.

    • கற்றது கையளவு,

      //அதற்கு மக்கள் பேராதரவு என்பது மிக மிக முக்கியம். அதற்கு நீங்கள் எடுத்த முயற்சிகள் என்ன? தங்கள் போராட்டங்கள் பெருமளவு மக்களிடம் ஏன் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, கொஞ்சம் யோசித்து பாருங்கள் தென்றல். //

      முதலில் தங்களின் புரட்சிக்கு தெளிவான ஒரு பாதை இருக்கிறதா? என்று கேட்டீர்கள். தற்போது இந்த கேள்வியை கேட்கிறீர்கள்.

      இரண்டிற்கும் பதில் ஏற்கனவே தோழர் தென்றல் அளித்தது தான்.
      மணல் மாபியா கும்பலை ஒழித்துக் கட்ட மக்களை அணித் திரட்டுவது, போராடுவது. இதில் எந்த ஒரு குறுக்கு வழியும் கிடையாது.

      இதற்கு தங்களை போன்ற மண்குதிரைகளை நம்பி களத்தில் இறங்கவில்லை. ஏனெனில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அடித்தட்டு மக்களுக்கு தான் அதன் வேதனையும், போராட்டத்திற்கான தேவையும் புரியும். வெறுமனே இணைய விவாதத்தில் இதனை புரிய வைக்க முடியாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதன் (அரசியல் பொருளாதார) பின்னணி என்ன என்பது தெரியாமல் இருக்கலாம்.. ஆனால் பாதிப்பு என்னவென்று நன்றாக தெரியும்.

      இந்த so called ஜனநாயகத்தை வைத்து ஏன் இதை தடுக்க முடியவில்லை. ஓட்டுப் பொறுக்கு கட்சிகள் ஏன் இதில் தலையிடவில்லை.

      அதனால் தான் புரட்சிகர சக்திகளை மக்கள் நம்புகிறார்கள். அது மட்டுமல்லாமல் ம.க.இ.க தோழர்களை தவிர எந்த கட்சிகளும் சக்திகளும் ஆக்கபூர்வமான வழிகளில் மக்களுடன் கைகோர்க்கவில்லை.

      ஒருபுறம் முதலாளித்துவ ஒட்டுண்ணிகள்,கைகூலிகள்,நடுநிலையாளர்கள்(!) என்று அனைவரும் ஒரே கோரசாக வோட்டு போடுவதே ஜனநாயகம், கம்யுனிசம் என்பது ஒரு சர்வாதிகாரம் என்று கூவிக் கொண்டு மக்களை(!) மடை மாற்றுகையில் மறுபுறம் இந்த தரகு முதலாளித்துவ அதிகார வர்க்கம் குடிக்கும் தண்ணீரில் இருந்து, உண்ணும் உணவில் இருந்து, செத்த பின் சுடுகாடு வரையில் வரைமுறையற்று இயற்க்கை வளங்களை கொள்ளையடிக்கிறது. இதைக் காப்பாற்ற என்ன வழிமுறைகளை இந்த ஜனநாயகத்தில் வைத்துள்ளீர்?

      இதனால் இது ஒரு போலி ஜனநாயகம் என்று முழக்கமிட்டு தான் புரட்சிகர சக்திகள் மக்களை அணித் திரட்டுகின்றன.

      இதில் கேலிக்கூத்து என்னவெனில், மக்கள் ஆதரவு,மக்கள் பேராதரவு என்று ஓவ்வொரு முறையும் கோரசாக சௌண்டு கொடுக்கும் தாங்கள், வோட்டு போட்டு பேராதரவுக் கொடுத்த மக்களை சந்தித்து உங்களது ஜனநாயகத்தை பேசிப் பாருங்கள் என்ன ஆதரவு கிடைக்கும் என்று அப்புறம் கூறுங்கள்.

      நான் சென்னையில் தான் இருக்கிறேன். தாங்களும் சென்னையில் இருந்தால் வாருங்கள் சேர்ந்து சாதாரண மக்களை சந்திப்போம். இந்த so called ஜனநாயகத்தைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று பாப்போம்.

      காங்கிரசு,பி.ஜே.பி, தி.மு.க,அ.தி.மு.க போன்ற வோட்டுப பொறுக்கிக் கட்சிகள் மாறி மாறி ஆள்வது தான் மக்களின் பேராதரவு, இது தான் ஜனநாயகம் என்றால் இதை விட கேளிக்கூத்தனதும் வேட்க்ககேடானதும் வேறொன்றுமில்லை.

      எங்களது குறிக்கோள்,இலக்கு பற்றி எல்லாம் பேரார்வத்துடன் கேட்கும் தாங்கள், அதாவது ஒட்டு மொத்த புரட்சிக்கு ஒரு outline , timeline கேட்கும் தாங்கள், உங்களது ஜனநாயகத்தின்படியே இந்த மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த எவ்வளவு காலம் பிடிக்கும் என்று நாங்கள் கேட்டால் தொட்டார் சிணுங்கி போல சிணுங்கி கொள்கிறீர்கள்.

      இல்லையில்லை நான் தான் முதலில் கேள்விக் கேட்டேன் அதனால் நீங்கள் தான் முதலில் பதில் கூற வேண்டும் என்று அடம் பிடித்தால் என்ன செய்வது.

      அப்புறம் ஒன்னு, சரி உங்களால மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த outline , deadline தான் தர முடியல ஆனா அதுக்கு ஆக்கபூர்வமான ஜனநாயகபூர்வமான வழிகளை சொல்லலாமில்லையா. சரி உங்களது வழி சரியல்ல தோழர்களே, இந்த வழிகளை பின்பற்றுங்கள் வெற்றி கொள்ளுங்கள் என்று ஏதாவது வழிமுறைகளை கூறினாலாவது விவாதம் ஆக்கபூர்வமானதாக இருக்கும்.

      ஆனால் இவ்வளவு நீண்ட நெடிய விவாதத்திற்கும் பிறகும் தாங்கள் கீழ்வரும் சந்துகளில் தான் நுழைந்து ஒளிந்து கொள்கிறீர்கள்,

      1. புரட்சிக்கு deadline ,timeline என்ன?
      2. ஒரு சோஷலிச மாடல் வேண்டும்.
      3. மக்கள் பேராதரவு வேண்டும்.
      4. போலியான ஜனநாயகம் என்றால் உண்மையான ஜனநாயகம் இருக்க வேண்டும்.
      5. நேர்மையான ஆட்சியாளர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
      6. ரஷ்ய,சீனா,கேரளா,மேற்கு வங்கம் கம்யுனிஸ்டுகள்.நிலை என்ன?
      7. உழைப்பு நேரம் குறைந்தால் மக்கள் சோம்பேறி ஆகி விடுவார்கள்.

      பிழைப்புவாதிகளுக்கு சந்து பொந்துகளுக்கு பஞ்சமில்லை.
      ஆனால் , புரட்சிகர சக்திகளுக்கு?

      மக்களை அணிதிரட்டுவது, நிலவும் ஜனநாயகமற்ற இந்த அமைப்பு முறைக்கு எதிராக போராட செய்வது ஒருபுறம் இருந்தாலும் சந்தர்ப்பவாதிகளையும், பிழைப்புவாதிகளையும் இனம் காணுவதும், அவர்களை மக்களிடம் இருந்து அப்புறப்படுத்துவதும் முன்னே இருக்கும் ஒரு இன்றியமையாத பணியாகும்.

      நன்றி

      • சிவப்பு,

        ஆக இப்போது என்ன சொல்ல வருகிறீர்கள்:

        1. புரட்சிக்கு deadline ,timeline என்ன? – Deadline, Timeline எதுவும் இல்லை, குறிக்கோள் இல்லை.
        2. ஒரு சோஷலிச மாடல் வேண்டும். – அத்தகைய மாடல் இல்லை.
        3. மக்கள் பேராதரவு வேண்டும். – மக்கள் பேராதரவு இல்லை.
        4. போலியான ஜனநாயகம் என்றால் உண்மையான ஜனநாயகம் இருக்க வேண்டும். – பதில் இல்லை.
        5. நேர்மையான ஆட்சியாளர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் – முடியாது என்கிறீர்கள்.
        6. ரஷ்ய,சீனா,கேரளா,மேற்கு வங்கம் கம்யுனிஸ்டுகள்.நிலை என்ன? – சொல்ல மாட்டீர்கள்.
        7. உழைப்பு நேரம் குறைந்தால் மக்கள் சோம்பேறி ஆகி விடுவார்கள். – இது பித்தலாட்டம். உழைப்பு நேரத்தை குறைக்க நான் சொல்லவில்லை.உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்படவேண்டும் என்று தானே நானும் சொல்கிறேன். மக்களுக்கு உந்துதல் இல்லை என்றால் சோம்பேறி ஆகிவிடுவார்கள் என்று தான் சொன்னேன்.

        • டெட்லைன் கேட்கும் புளிச்ச ஏப்பக்காரர்கள்

          \\ மணல் மாபியாவுக்கு எதிராக தாங்கள் நடத்தும் போராட்டம் நியாயமானதே, அவசியமானதே. அதை நான் எங்கே குறை சொன்னேன்.\\

          புரட்சி எங்கிருந்து ஆரம்பிக்க முடியும்? போராட்டங்களில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. ஆனால் கற்றது கையளவோ மணல் மாபியாவுக்கு எதிரான போராட்டம் நியாயமானதே என்று சொல்கிறாரே தவிர தன் பங்களிப்பு என்னவென்று சொல்லவில்லையே! எதிரியை வீழ்த்த என்ன முயற்சி செய்யப்போகிறார் என்றும் சொல்லவில்லையே? ஏன் சொல்லவில்லை?. இவர்களைப் போன்றவரின் மனநிலையை ஓர் உதாரணத்தின் மூலம் பரிசீலிப்போம்.

          ஒருவேளை கற்றது கையளவின் குடும்பத்தின் உறுப்பினர் ஆபத்தில் தத்தளித்தால் அவரைக் காப்பாற்றுவது நியாயமானது, அவசியமானது, அதை நான் எங்கே குறை சொன்னேன் என்று சொல்வாரா? அல்லது அவர் முயற்சி செய்து காப்பாற்ற போவாரா?

          அங்கு மட்டும் காப்பாற்ற போவார் எனில் அதற்காக ஒரு டைம்லைனையும் திட்டத்தையும் கற்றது கையளவு வகுப்பாரெனில் மணற்கொள்ளையைத் தடுக்க மட்டும் ஏன் இவரால் வரமுடியாது?

          ஏன் வரமுடியாது என்றால் இதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லையென்று கருதுகிறார். மணற்கொள்ளையைத் தடுக்கமாலேயே தன்னால் வாழ்ந்துவிட முடியுமென்று கணக்குபோடுகிறார்!

          மணற்கொள்ளைக்கே இவரின் மனநிலை இப்படியென்றால் முதலாளித்துவ கொள்ளைக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையென்று நினைக்கிற க.கை மட்டுமல்ல, முதலாளித்துவம் வழங்கியிருக்கிற பொறுக்கித் தின்னும் வாய்ப்புக்களை பயன்படுத்துகிற வர்க்கம், ஆகக் கேடான இச்சமுதாயத்தின் சுரண்டலை வீழ்த்த புரட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று கருதுவதில் என்ன ஆச்சர்யம் இருக்க முடியும்?

          ஆக இவ்விதம் கற்றது கையளவின் கோரிக்கை அடிப்படையிலேயே ஒரு புளிச்ச ஏப்பக்காரனின் மன நிலையாக இருப்பதால் தான் புரட்சிக்கு டெட்லைன் கொடு, பிளான் பண்ணாம பண்ணக்கூடாது என்று கதைக்கிறார்.

          இவருக்கு அடிப்படையிலேயே போராட விருப்பம் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்துவிடுகிறது. ஆனால் தன் பிரச்சனைகளுக்காக போராடுகிறவன் டெட்லைனோ ரோட்மேப்போ அடுத்தவர்களிடம் கேட்டுக்கொண்டிருப்பதில்லை. இதுதான் கற்றதுகையளவின் கேள்வியில் உள்ள அயோக்கியத்தனம்.

          • மணல் கொள்ளைக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றால் அதற்கு மணல் கொள்ளையை ஆதரிப்பதாக அர்த்தம் கொள்வீரோ? என்ன பிதற்றல்.

            நேரில் வந்து போராடினால் தான் மணல் கொல்லைக்கு எதிரானவர்கள். இல்லை என்றால் அனைவரும் மணல் தாதாக்களின் கூட்டாளிகளாகி விடுவார்களோ?

            அப்படி என்றால் தமிழகத்தின் ஆறே முக்கால் கோடி மக்களும் உங்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டால் தான் ஒத்துக்கொள்வீரோ?

        • ஏழுக்கு ஏழு! என்ன சொல்கிறது? ஒரு மீள் பார்வை
          ———————————————–
          கற்றது கையளவின் பதில்களில் இருந்தே இவரது மோசடிகளை பரிசீலிப்போம்.
          —————————————————————————
          ஒன்று: புரட்சிக்கு Deadline, Timeline எதுவும் இல்லை, குறிக்கோள் இல்லை என்கிறார் க.கை.

          பதில். இது இவரது வெற்று பாசாங்கு மட்டுமே. பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்ற கதையாக, முதலாளிகளை கம்யுனிஸ்டுகள் அடக்குவார்கள் என்கிற வாதத்திற்கு பயந்து அன்னாரே புரட்சியை, அதாவது கம்யுனிஸ்டுகளை எதிர்த்து முதலாளிகளுக்கு ஆதரவாக நடத்தும் மக்கள் புரட்சியை இவ்வாறாக முன் மொழிந்திருந்தார்.

          “ஆட்சியின் அதிகாரம் அரசியல்வாதிகளிடம் இருந்து கம்மியுனிசவாதிகளிடம் மாறியதை தவிர அவர்கள் வாழ்வில் வேறு எந்த மாற்றமும் இல்லை என்று மக்கள் உணர்வார்கள். அப்போது மக்கள் மீண்டும் ஆட்சியாமைப்புக்கு எதிராக போர்க்கொடி தூக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அடக்குமுறைக்கு எதிராக புரட்சி நடக்கும், முதலில் கட்டுபடுத்தப்பட்டாலும், பின்பு மக்கள் சக்தியின் முன் அது செல்லுபடி ஆகாமல் தோற்று மீண்டும் ஜனநாயகம் மலரும்.”

          இங்கு மட்டும் சோதிட கலா ரத்னா சிவல்புரி சிங்காரம் போல கம்யுனிசத்தை எதிர்த்து புரட்சி நடக்கும் என்று சொன்ன முதலாளி கற்றது கையளவு, டைம்லைனைப் பற்றியோ குறிக்கோளைப் பற்றியோ திட்டமிடுதலைப் பற்றியோ ஏன் வாயே திறக்கவில்லை?

          கம்யுனிச ஆட்சியின் மீளாணொத் துயரலிருந்து மக்கள் புரட்சி செய்வதுதான் முதலிடமே தவிர டைம்லனிற்காக மக்கள் ஒருபோதும் காத்திருக்க மாட்டார்கள் என்று சொல்லவருகிறாரோ?

          கரூர் மாவட்டத்தில் ஒரு பாலியல் சொலவடை உண்டு! அதைக் கொஞ்சம் மாற்றிச் சொல்கிறேன் இப்படி! “தனக்கென்று வந்தால் உறுப்பும் களையெடுக்குமாம்” அது ஏன் முதலாளிகள் மட்டும் தங்களுக்கு சாதகமான புரட்சி, கம்யுனிஸ்டுகளின் அடக்குமுறைக்கு (!!!!) எதிராக துரிதமாக வந்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்? ஆனால் இதே பாட்டாளி முதலாளித்துவ கொடுமைகளுக்கு எதிராக புரட்சி செய்கிற பொழுது மட்டும் இது பகல் கனவு, டைம் லைன் இருக்கா? புளு பிரிண்ட் இருக்கா? திட்டமிடுதல் இருக்கா? என்று கேட்கிறார்கள் என்றால் எத்துணை நூற்றாண்டுகளாக இந்த வர்க்கம் நம்மைச் சுரண்டிக் கொழுத்திருக்கும்?

          வெறும் பின்னூட்டங்களையே சகிக்காதவர்கள் நாளை தங்கள் அதிகாரத்தின் மீது பாட்டாளிகள் கைவைக்கப்போவதை எப்படி சகித்துக்கொள்வார்கள்? இதுதான் விளைவுதான் அன்னாரது பதில்; பாட்டாளிகளுக்கு திட்டமிடுதல் இல்லை; டைம்லைன் இல்லை; ரோட்மேப் இல்லை என பலப்பல இல்லைகள்.

        • பார்வை இரண்டு; ஒரு சோசலிச மாடல் இல்லை என்கிறார் க.கை

          பதில்: தரகுமுதலாளித்துவமும், மறுகாலனியாதிக்கமும் தனியார்மயமும் இருக்கும் வரை சோசலிச மாடல் வைப்பது எப்படிச் சாத்தியமல்ல என்பதை விளக்கினோம். இது அவருக்கு தெரிந்தும் தெரியாது போல் ஏன் நடிக்கிறார் என்பதுதான் இந்தப் பார்வையின் மீதிப் பரிமாணம்.

          அதாவது அன்னார் க.கை யுனிவர்படிக்கு பதில் அளிக்கிற பொழுது இந்த சனநாயகம் எண்டர்புருனர்க்கு பங்கம் வராமல் பார்த்துக்கொள்வதோடு ஊக்குவிக்கவேண்டும் என்று சொன்னார். யார் அந்த எண்டர்புருணர்? அன்னார் தான். அதாவது மேட்டுக்குடி வர்க்கம் எல்கேஜியில் தங்களது குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்து செக்கோஸ்லோவாக்கியாவைச் சொல்லச்சொல்லி, ஐபிஎம்மில் எண்டர்புருணருக்காக அதாவது கங்காணிகளாக பயிற்சி கொடுத்து வெளியே தள்ளுவார்கள். ஆனால் இதேக்கூட்டம் தான் உண்மையில் தொழில்முனைவர்களான சிறுவணிகத்தை இந்தியாவில் அழித்து தரகுமுதலாளித்துவம் தரும் சொகுசுச் சூட்டில் எண்டர்புருணர்களாக வலம் வருபவர்கள்.

          சென்னையின் பெரும் தொழிற்சாலைகளுக்கு அன்றைய காலகட்டத்தில் நோக்கியா மற்றும் கொரிய கம்பெனிகளுக்கு உதிரி பாகங்கள் தயாரித்து தரும் நமது உள்நாட்டு சிட்கோவை முற்றிலும் அழித்து இன்றைக்கு கொரிய கம்பெனிகள் கொள்ளை இலாபம் அடிக்கும் பொருட்டும் நமது நாட்டு தொழிலாளிகளையும் தொழில்வளத்தையும் கொள்ளையடித்தவர்கள் இதுபோன்ற பொறுக்கித்தின்னும் எண்டர்புருனர்கள் தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

          இதே க.கை, முதலாளிகளுக்கு தொழில்நுட்பத்தைக் கற்றுத்தரவேண்டும் என்று பக்கத்து பதிவில் கதறியிருக்கிறாரே தவிர தொழில்நுட்பம் தெரிந்த பாட்டாளிகளின் கையில் உற்பத்தி சாதனங்கள் சென்று சேரவேண்டும் என்பதை Not practical என்று திமிராகச் சொன்னவர் தான் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. இது பார்வை இரண்டு.

        • பார்வை-3: மக்கள் பேராதரவு இல்லை என்கிறார் க. கை

          பதில்: இப்படிச் சொல்பவர்கள் யார் என்று மணல் மாபியாக்களை வைத்துப் பார்த்தோம். அதில் அன்னார் இந்தப்போராட்டம் நியாயம் என்று சொன்னாரே தவிர தான் எப்படி போராடப்போகிறோம் என்று சொல்லவில்லை. இதன் அர்த்தம் என்ன? அதாவது தனக்கும் இந்தப் போராட்டதிற்கும் நேரடிச் சம்பந்தம் இல்லையென்று நேரடியாகவே சொல்கிறார். இப்படிச் சொல்லிவிட்டு மக்கள் பேராதரவு இல்லை என்கிறார். அப்படியானால் இது நேரடியாக நமக்கு சுட்டவிழைகிற செய்தி; இப்படிப்போராடுவது அவசியமற்ற ஒன்று; என்னைப்போல் எண்டர்புருனராக இரு என்கிறார். முதலாளித்துவத்தை எதிர்க்கிற போராட்டத்திற்கு மக்கள் பேராதரவு இருக்காது என்கிறார். இதுதான் இந்த பார்வையின் பரிமாணம். முதலாளி அணிந்திருக்கும் மக்கள் முகமூடி இது. கிழித்தெறிவது அவசியமாகும்.

        • பார்வை நான்கு: போலியான ஜனநாயகம் என்றால் உண்மையான ஜனநாயகம் இருக்க வேண்டும் என்று க.கை கேட்கிற கேள்விக்கு பதில் இல்லை என்கிறார்.

          பதில்: எல்லா நாட்டிலும் பாராளுமன்ற சனநாயகம் முதலாளிகளுக்கானது என்கிற பொழுது உண்மையான சனநாயகம் பாட்டாளிவர்க்க சர்வாதிகரத்தில் தான் இருக்கிறது. பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் முதலாளிகளை முற்றிலும் கிள்ளி எறிகிற பொழுதுதான் எந்த நாட்டிலும் உண்மையான ஜனநாயகமும் சுதந்திரமும் நிலவ முடியும்.

          தோழர் லெனின் அழகாகச் சொல்வார் இப்படி;

          “”ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஒடுக்குவோர்களுக்கும், சுரண்டப்படுபவர்களுக்கும் சுரண்டுவோருக்கும் இடையே சமத்துவம் என்பது இல்லை. அப்படி ஏற்படவும் முடியாது.

          ஆண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சட்டப்பூர்வமான தனி உரிமைகளால் பெண்குலம் பாதிக்கப்படும் வரை மூலதனத்திலிருந்து தொழிலாளிக்கு விடுதலை கிடைக்காத வரை, முதலாளி நில உரிமையாளர் வணிகர் ஆகியோரின் அதிகாரத்தில் இருந்து உழைக்கும் விவசாயிக்கு விடுதலை கிடைக்காத வரையில் உண்மையான சுதந்திரம் என்பது கிடையவே கிடையாது.”

          இதுதான் க,கை முன்வைக்கும் உண்மையான சனநாயகத்திற்கு பதில் மட்டுமல்ல; அதைப் பெறுவதற்கான பாட்டாளிகளின் ஆயுதமும் கூட!

        • பார்வை-5: நேர்மையான ஆட்சியாளர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் சொல்கிற க.கைக்கு முடியாது என்று சொல்கிறீர்களே என்று கேட்கிறார் க.கை

          பதில். முதலாளிகளுக்கான பாராளுமன்றம் பன்றித்தொழுவம் என்கிற பொழுது தோழர் கோவன் பாடுகிற மகஇக பாடல்தான் க.கையின் கேள்விக்கு பதிலாக வருகிறது; அந்த வரி இதுதான். “பன்னிக்கு எதுக்குடா தங்கத்திலே மூக்குத்தி?” சாக்கடையை நல்லவர்கள் அலங்கரித்தால் அது புதுமணம் பெற்றுவிடுமா?

        • பார்வை-6: ரஷ்ய,சீனா,கேரளா,மேற்கு வங்கம் கம்யுனிஸ்டுகள்.நிலை என்ன? – என்று இவர் கேட்டு சொல்ல மாட்டீர்கள் என்று பொய்பிரச்சாரம் செய்கிறார்.

          பதில்: இந்த விவாதத்திலே கணிசமாக இடம்பெற்றது இதைக்குறித்த அவதூறுகளுக்கு பதில் எழுதியது தான். ஆனால் க.கை என்ன சொல்கிறார் என்றால் பதில் சொல்லவில்லை என்கிறார். இவர் ஏன் இப்படிச் சொல்கிறார் என்பதற்கு இவரின் இரட்டை நிலைப்பாட்டையே கவனத்தில் கொள்வோம்.

          இந்தியாவின் தரகுமுதலாளித்துவமும் மறுகாலனியாதிக்கமும் ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாயிருக்கிற பொழுது இவர் இந்த பாராளுமன்றத்தைக் கேள்விகேட்காமல் அதே பாராளுமன்றத்தை ஏற்றுக்கொண்டு முதலாளிகளுக்கு சேவை செய்யும் சிபியை சிபிஎம்மின் ஆட்சியில் கம்யுனிஸ்டுகள் என்ன சாதித்தார்கள் என்று கேட்டார். ஆனால் தேர்தல் பாதை திருடர் பாதை என்று நாம் சொல்கிற பொழுது நம்மை சர்வாதிகாரிகள் என்றார். பாராளுமன்ற சனநாயகம் தான் தீர்வு என்று அதே கேரள மேற்குவங்க பிழைப்புவாத கம்யுனிஸ்டுகள் விழுந்த சாக்கடையைத் தான் சுட்டிக்காட்டினார். மக்களைத் திரட்டிப்போராடுகிறவன் அய்யாவிற்கு சர்வாதிகாரி; மக்களின் போராட்டத்தை நசியச்செய்கிற முதலாளித்துவத்திற்கு கால் அமுக்கிற பாராளுமன்ற செஞ்சட்டை கட்சிகளும் அய்யாவிற்கு கம்யுனிஸ்டுகள்.

          திரைப்படங்களில் கைக்கூலிகளை இப்படித்தான் வில்லன் அமர்த்துவார். கைக்கூலிகளை வைத்து தனது எதிரியை அழிப்பது; பிறகு எதிரியே போனபிறகு கைக்கூலி எதற்கு என்று கைக்கூலியையும் போட்டுத்தாக்கி துப்பாக்கியை வாயில் ஊதி இடுப்பில் சொருகுவது;

          இது வரலாற்றிலும் இப்படித்தான் அரங்கேறுகிறது. எந்த நாட்டில் புரட்சி நடைபெறுகிறதோ அந்த நாட்டில் முதலாளிகள் முன்னுக்கு நிறுத்துவது இந்த பாராளுமன்ற இடதுசாரிக் கட்சிகளைத்தான். அவர்கள் அதற்காகத்தான் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். ரசியாவில் 1917 புரட்சியின் போது கூட மென்ஸ்விக்குகள் அதாவது நம்ம ஊரு சிபிஐ சிபிஎம் போன்றவர்கள் முதலாளிகளுக்கு ஆதரவாக புரட்சிக்காரர்களுடன் அணிவகுத்துவிடாதீர்கள் என்று அழுது குவித்தனர். ஜாரின் வெள்ளைப்படையை விட கணிசமான இடைஞ்சல்களைச் செய்தது இந்த பாராளுமன்ற இடதுசாரிக்கட்சிகள் தான். இது தான் நிகழ்ச்சி நிரல்.

          இதை மாற்றி தலைகீழாக நின்று நர்த்தனம் புரிந்தாலும் அர்த்தம் மாறிவிடுமா? பாட்டாளிகளைத் திரட்டி புரட்சி நடைபெறுவது நின்றுவிடுமா? புராட்டா சூரி போன்று பொதுவுடமையாளர்கள் புரட்சியை முதலில் இருந்து ஆரம்பிப்பார்கள் என்பதை க.கை புரிந்துகொள்ளவேண்டும்.

          • தென்றல் அவர்களுக்கு,

            உங்கள் பதில்கள் மிகமிக அற்புதமாக இருக்கின்றன. குறிப்பாக புரோட்டா சூரி யின் எடுத்துக்காட்டு என்னைக் கட்டுப்படுத்து முடியாத ஆனந்த அழுகையிலும் சிரிப்பிலும் ஒரு சேர ஆழ்த்திவிட்டது. உங்களுக்கு ஜால்ரா வாக இருப்பதில் நான் அளப்பரிய பெருமிதத்தைக்கொள்கிறேன்.
            ககை மையக்கருத்துக்களை விட்டுவிட்டு வெளியிலேயே சுற்றிசுற்றி வருகிறார். அவரைப் போதுமான அளவுக்கு அம்பலப்படுத்தியாயிற்று. ஆனாலும் கடைசிவரை பார்த்துவிடுங்கள். நானும் என்னால் முடிந்தவரை பார்த்துக்கொள்கிறேன்.

        • பார்வை-7: உழைப்பு நேரம் குறைந்தால் மக்கள் சோம்பேறி ஆகி விடுவார்கள். – இது பித்தலாட்டம். உழைப்பு நேரத்தை குறைக்க நான் சொல்லவில்லை.உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்படவேண்டும் என்று தானே நானும் சொல்கிறேன். மக்களுக்கு உந்துதல் இல்லை என்றால் சோம்பேறி ஆகிவிடுவார்கள் என்று தான் சொன்னேன்.

          பதில்: கற்றது கையளவின் இந்தப் பதில் தான் முழுக்கவும் மோசடியானது. தனியார் கம்பெனி தொழிலாளர் நலச்சட்டங்களுக்கு அப்பாற்பட்டது இல்லை என்கிற பொழுது தொழிலாளிகளுக்கான உரிமைகள் தொழிலாளர் நலச்சட்டங்கள் படி வழங்கப்படவேண்டும் என்றும் அதை எப்படி தங்களது கம்பெனியில் அமல்படுத்தினீர்கள் என்பதற்கும் தங்களின் கம்பெனியில் தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து எழுதுங்கள் என்று சொன்னதற்கும் இதெல்லாம் எதற்கு என்று விட்டேத்தியாக கங்காணியாக நான் எனது தொழிலாளிகளுக்கு ஊக்கத்தொகை வாங்கிக்கொடுக்கிறேன்; ஊக்கப்பரிசு அளிக்கிறேன் என்று சுரண்டலை நியாயப்படுத்தினார்.

          இவ்விதம் நம் நாட்டில் முதலாளிகள் தொழிலாளிகளின் குறைந்த பட்ச உரிமைகளைக் கூட அது சட்டவடிவ இருந்தாலும் மயிரளவிற்கு கூட மதிப்பதில்லை என்கிற பொழுது க.கை இதுவரை வைத்த வாதங்கள் அனைத்தும் எத்துணை பெரிய பித்தலாட்டம் என்பதும் கம்யுனிசம் மீதும் பாட்டாளிவர்க்கத்தின் போராட்டத்தின் மீதும் இவர்கள் எத்துணை வன்மமாயிருக்கிறார்கள் என்பதையும் பரிசிலீத்து பாட்டாளிவர்க்கபோராட்டத்தில் நம்மைப் புடம்போட்டக்கொள்ள வேண்டும்.

          • தென்றல்,

            Brevity is the soul of Wit என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
            இரண்டு வரியில் சொல்லகூடிய கருத்தை இருநூறு வரியில் சொல்கிறீர்கள்.
            மைல் அளவில் எழுதினால் தங்களின் கருத்து உண்மை ஆகி விடாது.

            அடுத்து உங்கள் கருத்துக்கு பதிலளிக்கிறேன்.

            • பார்வை 1:
              தங்களது புரட்சிக்கு Roadmap, Timeline கேட்டேன். அப்படி தர இயலாது என்று முதலிலேயே நீங்கள் தெள்ளதெளிவாக கூறிவிட்டீர்கள். சரி, மீண்டும் அதனை குறித்து ஏதோ பெரியதாக விளக்கம் அளித்தீர்கள் என்று முழுவதும் படித்தால் அதிலும் ஒன்றும் இல்லை.
              கம்மியுனிசம் குறித்து நான் சொன்னது ஜோசியம் அல்ல, அதன் பழைய வரலாறை தான். கம்மியுனிசம் இது வரை எல்லா நாடுகளிலும் எப்படி பயன்படுத்தப்பட்டது, முடிவில் அந்த நாடுகளில் என்ன ஆனது என்பதை தான் குறிப்பிட்டேன். இதை கூட தங்களால் புரிந்து கொள்ள இயலவில்லை என்றால் அதற்கு மேல் பேச ஒன்றும் இல்லை. சுற்றி வளைத்து தேடினாலும் தங்களின் புரட்சிக்கு தெளிவான ஒரு பாதை இல்லை என்பது தான் புலனாகிறது.
              என்ன செய்யப்போகிறோம், எப்படி செய்யப்போகிறோம் என்ற குறிக்கோள் இல்லாமல் கண்ணை கட்டிக்கொண்டு பயணிக்கும் உங்கள் பின்னால் மக்கள் அணிவகுக்க வேண்டும் என்றால் அது எப்படி சாத்தியாமாகும்?

              பார்வை 2:
              Entrepreneur என்றால் தொழில் முனைவோர் என்று அர்த்தம். அது பெட்டிக்கடை வைப்பவராகவும் இருக்கலாம், டீக்கடையும் வைத்திருக்கலாம். சிறு அளவில் குடிசை தொழிலாக உபகரணங்களை உற்பத்தி செய்பவராகவும் இருக்கலாம். இவர்கள் எல்லோரும் அவர்களது சிறிய தொழிலுக்கு முதலாளிகள் தான். முதலாளி என்றால் உங்கள் கண்ணுக்கு அம்பானி, டாடா, பிர்லா, மல்லையா மட்டும் தான் தெரிவார்கள் போலிருக்கிறது. அவர்களின் வரி எய்ப்புக்கும், சுரண்டலுக்கும் நானும் எதிரி தான். மற்ற கட்டுரைகளில் இருக்கும் எனது பின்னூட்டங்களையும் படித்து விட்டு பதிவிடவும். தங்களின் பதிலை நீங்களே பாருங்கள்:
              //தரகுமுதலாளித்துவமும், மறுகாலனியாதிக்கமும் தனியார்மயமும் இருக்கும் வரை சோசலிச மாடல் வைப்பது எப்படிச் சாத்தியமல்ல என்பதை விளக்கினோம். //
              இதில் இருந்து தாங்கள் சோசலிச மாடல் தற்போதைய நிலையில் சாத்தியமில்லை என்று தானே கூறுகிறீர்கள். சாத்தியமில்லை என்பது தங்களின் வாதம். ஆதாவது ஒட்டுமொத்த ஊரும், உலகமும் கம்மியுநிசத்திற்கு மாறினால் தவிர இவ்வகை சோசலிச மாற்றம் சாத்தியமில்லை என்பது தங்களின் வாதம். ஆனால் சிறிய அளவில் செங்கல் செங்கலாக முயற்சி செய்தால் சாத்தியம் என்பது என் வாதம். முதலில் கூட்டுறவு முறையில் மக்களுக்கு பொருட்களையோ அல்லது சேவைகளையோ குறைந்த விலையில் கொடுத்தால் மக்கள் அத்தகைய முயற்சிக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். இதை முதலில் முயன்று பார்க்க சொன்னேன். இதில் என்ன தவறு. மீண்டும் மீண்டும் சொல்கிறேன். என்னை நீங்கள் தவறாகவே புரிந்து கொண்டுள்ளீர்கள், இல்லை தவறாக சித்தரிக்க முயன்று தோற்று போகிறீர்கள்.

              பார்வை 3:
              என்னால் போராட்டத்தில் நேரடியாக கலந்து கொள்ள இயலவில்லை என்றால் எந்த போராட்டத்திற்கு நான் எதிரி ஆகி விடுவேனா? மீண்டும் தென்றலின் பிதற்றல். போராட்டம் அவசியம் இல்லை என்று நான் சொன்னதாக ஏன் போய் சொல்கிறீர்கள்?

              பார்வை 4:
              உண்மையான ஜனநாயகம் சாத்தியமே. 100 சதவீதம் முதலாளித்துவமும், 100 சதவீத கம்மியுநிசமும் மக்களுக்கு நன்மை பயக்கவில்லை என்று வரலாறு தெரிவிக்கிறது. சாதாரண பொதுமக்களை பாதுகாக்கும் வண்ணம், மக்களின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வண்ணம் ஒரு அமைப்பை நிர்ணயிக்க நாம் முயலலாம். அதற்கு முதலில் மக்கள் ஆதரவை பெற வேண்டும்.
              கம்மியுநிஸ்டுகளை நம்பித்தானே மக்கள் பல நாடுகளில், மேற்கு வங்கம், கேரளாவில் ஆதரவளித்தார்கள். ஆனால் இப்போது லாவகமாக அவை போலி கம்மியுனுஸ்டுகள் என்று கை கழுவி விடுகிறீர்கள். தங்களை நம்பி மக்கள் ஆட்சியை ஒப்படைத்தால் தாங்களும் போலியாக மாற மாட்டீர்கள் என்று என்ன நிச்சயம். ஜனநாயகத்திலாவது ஆள்பவர்களை மாற்றும் அதிகாரம் மக்களிடம் உள்ளது. சர்வாதிகாரத்தில் அந்த அதிகாரம் மக்களிடம் இல்லையே?

              • பார்வை 5:
                //சாக்கடையை நல்லவர்கள் அலங்கரித்தால் அது புதுமணம் பெற்றுவிடுமா?//
                தவறு. சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்தால் அடைப்பு விலகும். மக்களும் பயன்பெறுவார்கள். தாங்கள் செய்வதோ சாக்கடையில் கல்லெறிவது மட்டும் தான். அது மேலும் சாக்கடையை தெரித்து மற்ற இடங்களில் அசுத்தமாக்கும். பயன் தராது. சாக்கடை ஏன் அடைபடுகிறது, எங்கு குத்தி அந்த அடைப்பை சரி செய்வது என்று யோசிப்பது புத்திசாலித்தனம். அதனை விடுத்து சாக்கடை சரியில்லை என்று போராட்டம் செய்தால் சாக்கடை அப்படியே தான் இருக்கும்.

                பார்வை 6:
                இரட்டை நிலைப்பாடு என்னிடம் இல்லை. அது தங்களிடம் தான் உள்ளது என்று தாங்கள் அறிவீர்கள். ஆனால் மறைக்கிறீர்கள். பரவாயில்லை. சரி, சிபிஎம், சிபிஐ எல்லாம் போலி கம்மியுனுஸ்டுகள், ரசியாவில் இருப்பதும் போலி கம்மியுனுஸ்டுகள், சீனாவில் இருப்பதும் போலி கம்மியுனுஸ்டுகள். இதிலிருந்து என்ன தெரிய வருகிறது? ஆட்சியின் அதிகாரம் கிடைக்காத வரை கம்மியுனுஸ்டுகள் உண்மையானவர்கள். மக்கள் அவர்களை நம்பி ஆட்சியை ஒப்படைப்பார்கள். பின் அவர்களை போலி கம்மியுனுஸ்டுகள் என்று நீங்களே குறை கூறி கை கழுவி விடுவீர்கள். பின் எப்படி கம்மியுனிசம் மேல் மக்களுக்கு நம்பிக்கை வரும்?

                பார்வை 7:
                இதே தென்றலின் வாய் தானே ஊக்கத்தொகை, ஊக்கப்பரிசு இவற்றை முதலில் அறிமுகப்படுத்தியது கம்மியுனுஸ்டுகள் என்று பெருமைப்பட்டுக்கொண்டது?
                ஊக்கத்தொகை என்பது திறமைக்கு கொடுக்கப்படும் பரிசு. இதனை கொடுக்கக்கூடாது என்று ஏன் தென்றல் எதிர்க்க வேண்டும்?

                • பார்வை நான்கு மற்றும் ஆறிற்கான பதில்
                  —————————————————-

                  கீழ்க்கண்ட பதில் பார்வை-6 க்கும் சேர்த்துதான் எழுதப்பட்டிருக்கிறது.

                  \\ உண்மையான ஜனநாயகம் சாத்தியமே. 100 சதவீதம் முதலாளித்துவமும், 100 சதவீத கம்மியுநிசமும் மக்களுக்கு நன்மை பயக்கவில்லை என்று வரலாறு தெரிவிக்கிறது.\\

                  100% முதலாளித்துவமும் தீமை மட்டுமே பயக்கக் கூடியது. 100% கம்யுனிச சமுதாயத்திற்கான பாதையில் இதுவரை வந்த சோசலிசமே மக்களுக்கு 100% நன்மைகளை பயத்திருக்கிறது என்பதுதான் வரலாறு.

                  \\ சாதாரண பொதுமக்களை பாதுகாக்கும் வண்ணம், மக்களின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வண்ணம் ஒரு அமைப்பை நிர்ணயிக்க நாம் முயலலாம்.\\

                  பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் தான் இந்த அமைப்பு.

                  \\ அதற்கு முதலில் மக்கள் ஆதரவை பெற வேண்டும்.\\

                  புரட்சியை மக்கள் தான் நடத்துகிறார்கள். நடத்துவார்கள். இதைப் புரிவது எளிது. விடுதலையை மக்கள் தான் பெற்றெடுத்தனர். அதே மக்கள் தான் மறுகாலனியாதிக்கத்திலிருந்து சகலபிரிவினரையும் விடுவிக்க உள்ளனர். மக்கள் ஆதரவு என்ற உங்கள் பாசாங்கிற்கு ஒருமுறை தோழர் சிவப்பு சொன்னது போல உங்களின் முதலாளித்துவ ஜனநாயகத்தின் அருமை பெருமை பற்றி மக்களிடம் வந்து பேசுவது மானமுள்ளவருக்கு அழகு.

                  \\ கம்மியுநிஸ்டுகளை நம்பித்தானே மக்கள் பல நாடுகளில், மேற்கு வங்கம், கேரளாவில் ஆதரவளித்தார்கள். ஆனால் இப்போது லாவகமாக அவை போலி கம்மியுனுஸ்டுகள் என்று கை கழுவி விடுகிறீர்கள்.\\

                  பாராளுமன்ற ஜனநாயகத்தை வைத்துக்கொண்டு மேற்குவங்கம், கேரளா என்பதற்கு மக்கள் ஆதரவளித்தார்கள் என்பது முழுக்கவும் பொய். ஏனெனில் இதே இந்தியாவில் கம்யுனிசம் என்பது என்ன என்பதை தெலுங்கானா புரட்சியிலும் நக்சல்பாரி புரட்சியிலும் உழைக்கும் மக்கள் நிரூபித்துக்காட்டியிருக்கிறார்கள். இதை மறைத்துவிட்டுதான் மக்கள் பாராளுமன்ற கம்யுனிஸ்டுகளுக்கு ஆதரளிவத்தாக இட்டுகட்டி பிரச்சாரம் செய்கிறீர்கள்.

                  சச்சினை இந்த ஆளும் வர்க்கம் முன் நிறுத்துகிற பொழுது நம்மில் எத்துணை பேருக்கு தொட்டி கொமரய்யாவைத் தெரியும்? ஆக உழைக்கும் மக்களின் வர்க்கப்போராட்டங்கள் தான் மக்களின் ஆதரவு என்பதற்கு அளவுகோலே தவிர சுதந்திர தினத்தில் ஆரஞ்சு மிட்டாய் சப்பிய கூட்டமோ கெஜ்ரிவால் என்று கதறிய கூட்டமோ அல்ல.

                  இதில் பாராளுமன்ற கம்யுனிஸ்டுகளை உருவாக்கியது யார்? முதலாளித்துவம் தான். இதுதான் போராட்டம் என்று தெலுங்கான நிலப்புரட்சியிலும் நக்பாரி எழுச்சியிலும் கண்டுகொண்டு பிறகு போலிகம்யுனிஸ்டுகள் என்று அம்பலப்படுத்துகிற பொழுது உங்களைப்போன்ற ஆட்களோ இதே உழைக்கும் வர்க்கப்போராட்டங்களை மறைத்துவிட்டுதான் போலிகம்யுனிஸ்டுகள் என்று கைகழுவுகிறீர்களே என்று கதறுகிறீர்கள். இது கைக்கூலிகளின் காயடிப்பு வேலையன்றி வேறல்ல.

                  \\ தங்களை நம்பி மக்கள் ஆட்சியை ஒப்படைத்தால் தாங்களும் போலியாக மாற மாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்.\\

                  ஒரு அரசு இயல்பாகவே முதலாளிகளுக்கானது என்கிற பொழுது ஓட்டுப்போடச் சொல்லி நம்பிக்கழுத்தறுப்பது உங்களைப்போன்ற ஆட்கள் தான். மாறாக கம்யுனிசம், மக்களை ஆட்சி பொறுப்பேற்க அரசியல் ரீதியாக தயார்படுத்துகிறது.

                  இதில் ஆட்சியை ஒப்படைப்பது என்கிற தங்களின் வாதம் மாமானார் அழுதுகொண்டே தன் பெண்ணை கண் கலங்காம பாத்துங்குங்க மாப்பிள்ளை என்று சொல்லும் அந்தக்கால நிலப்புரத்துவ விழுமியங்களைத்தான் தூக்கிப்பிடிக்கிறது. ஆனால் வரலாறு என்றைக்கும் அப்படி இருந்ததில்லை.

                  சான்றாக நிலப்புரத்தவ சமூகத்திலிருந்து முதலாளித்துவ சமூகம் வந்த பொழுது எந்த மக்களும் தாங்கள் சொல்வதைப்போன்று ஆட்சியை ஒப்படைக்கவில்லை. உற்பத்தி சாதனங்களில் மேலாண்மை செய்கிற வர்க்கம் தான் என்றைக்குமே ரூலிங் கிளாஸ்ஸாக இருந்திருக்கிறது. இருக்க முடியும். வரலாற்றிலேயே கம்யுனிசம் ஒன்று மட்டும் தான் பாட்டாளிகள் ஆளப்படும் வர்க்கமாக இருக்க முடியும் என்பதை சொல்லியதோடு மட்டுமில்லாமல் நிரூபித்தும் காட்டியது. அன்றைய சோசலிச ரசியாவிலும் சீனாவிலும் இதை புரட்சியின் மூலம் சுரண்டப்படும் வர்க்கமான பாட்டாளிகள் தங்களின் சமசரமற்ற வர்க்கப்போராட்டத்தின் மூலமாக அடைந்தனர். இதில் ஏற்பட்ட பின்னடைவு சுரண்டும் மற்றும் சுரண்டப்படும் வர்க்கங்களின் மோதலாகத்தான் என்றைக்கும் இருந்திருக்கிறதே தவிர தாங்கள் சொல்வதைப்போல அன்று.

                  ஆகையால் தான் சீனாவில் இன்று கம்யுனிசம் ஏன் இல்லை என்று கேட்கிற உங்களைப்போன்றவர்கள் இந்தியாவில் விடுதலையைப் பெற்றெடுத்த மக்கள் இன்றைக்கு மறுகாலனியாதிக்கத்திற்கு அடிமைப்படுத்தப்பட்டு ஏன் கிடக்கிறார்கள் என்று பரிசீலிப்பதில்லை.

                  ஆக முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டம் என்பது எல்லா நாட்டு பாட்டாளிகளுக்கும் முதன்மையான ஒன்றாக இருக்கிற பொழுது எந்த நாட்டைக் கொடுத்தாலும் முதலில் நம் பார்வை அது முதலாளிகளுக்கானதா பாட்டாளிகளுக்கானதா என்பதுதான் எமது முதன்மையான கேள்வி. இதை மேற்கொண்டு பயன்படுத்திப் பாருங்கள். விசயங்கள் பிடிபடும். இரண்டுக்குமான அரசு என்பது உலகத்தில் கிடையாது. எதாவது ஒரு நாட்டைக்காட்ட முயற்சி செய்துபாருங்கள்.

                • பதில் ஏழு

                  \\இதே தென்றலின் வாய் தானே ஊக்கத்தொகை, ஊக்கப்பரிசு இவற்றை முதலில் அறிமுகப்படுத்தியது கம்மியுனுஸ்டுகள் என்று பெருமைப்பட்டுக்கொண்டது?\\

                  சோசலிச சமூகத்தில் ஊக்கப்பரிசு என்பது உழைப்பு சுரண்டலுக்கான மோசடி அல்ல; அங்கு மனிதர்கள் தங்கள் உழைப்பை தற்போது போல் கூலிக்கு விற்பதில்லை. இங்கு இலாபம் என்பது முதலாளிகளின் பாக்கெட்டிற்கு போவதில்லை. மாறாக ஊக்கத்தொகையாக உரிமையாக தொழிலாளிகளும், தொழிற்சாலையும் சமூகமும் பங்குபோட்டுக்கொள்கின்றன. ஆனால் உங்கள் கம்பெனியின் நிலை என்ன? அடுத்த கேள்விக்கான பதிலைப் படித்துபாருங்கள்.

                  \\ஊக்கத்தொகை என்பது திறமைக்கு கொடுக்கப்படும் பரிசு. இதனை கொடுக்கக்கூடாது என்று ஏன் தென்றல் எதிர்க்க வேண்டும்?\\

                  தொழிலாளர் நலத்திற்கான உரிமைகளை சுரண்டிவிட்டு ஊக்கத்தொகை என்று சொல்வதற்கு தாங்கள் வெட்கப்படவில்லையா? உங்களது கம்பெனி தொழிலாளர் நலச்சட்டங்களுக்கு அப்பாற்பட்டதில்லை என்கிற பொழுது ஊக்கத்தொகையை சட்டங்களுக்கு உட்பட்டு எண்ணிவைத்துவிட்டு பிறகு ஊக்கத்தொகையோ ஊக்கப்பரிசோ சோசலிச சமூகம் போல கொடுக்கவேண்டியதுதானே!

                  தொழிற்சங்கம் என்று பேச்சு எடுத்த எந்தக்கேள்விக்குமே தாங்கள் பதில் சொல்லவில்லையே! இப்பொழுதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. எந்த தேதிக்குள் தொழிலாளர் நலச்சட்டங்களை உங்கள் கம்பெனி அமல்படுத்துகிறது என்று சொல்லிவிடுங்கள். தொழிற்சங்கம் கட்டமைப்பதற்காக தொழிலாளிகளையும் அரசியல்படுத்த வேண்டியுள்ளது. சரிதானே க.கை.

                  பதில் 5

                  \\\\ தவறு. சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்தால் அடைப்பு விலகும். மக்களும் பயன்பெறுவார்கள். தாங்கள் செய்வதோ சாக்கடையில் கல்லெறிவது மட்டும் தான். அது மேலும் சாக்கடையை தெரித்து மற்ற இடங்களில் அசுத்தமாக்கும். பயன் தராது. சாக்கடை ஏன் அடைபடுகிறது, எங்கு குத்தி அந்த அடைப்பை சரி செய்வது என்று யோசிப்பது புத்திசாலித்தனம். அதனை விடுத்து சாக்கடை சரியில்லை என்று போராட்டம் செய்தால் சாக்கடை அப்படியே தான் இருக்கும்.\\

                  மக்கள் சாக்கடையில் தான் இருக்கிறார்கள். தாங்களோ சாக்கடையை இறங்கி சுத்தம் செய்வதைப் பற்றி இப்பொழுதுதான் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். மேன்மக்கள் சாக்கடையில் இறங்குவதற்காக ஒரு பிளானையும் ரோட்மேப்பையும் போடுகிற பெருந்தன்மையை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை.

                • திரு. கற்றது கையளவு….

                  //மேற்கு வங்கம், கேரளாவில் ஆதரவளித்தார்கள். ஆனால் இப்போது லாவகமாக அவை போலி கம்மியுனுஸ்டுகள் என்று கை கழுவி விடுகிறீர்கள். தங்களை நம்பி மக்கள் ஆட்சியை ஒப்படைத்தால் தாங்களும் போலியாக மாற மாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்.//

                  மிகவும் ஆதர்சமான கேள்வி ….இவர்களின் கூற்றுப்படி மாவோவினால் சீன தேசத்தில் உண்மையான கம்யுனிசம் சில காலம் இருந்தது(இது எந்த அளவிற்கு உண்மையோ) பிறகு டெங்சியோபிங்கினால் போலி கம்யுனிசமாக மாறியது!! ஸ்டாலின் உள்ள வரை உண்மையான கம்யுனிச ஆட்சி இருந்தது பிறகு வந்த குருஷ்சேவினால் போலி கம்யுனிசமாக மாறியதாகக் கூறினார்கள். அதேப்போன்றதொரு பரிசோதனை இங்கு நடத்திப் பார்க்க ஆசைப் படுகிறார்கள். ஆனால் அதற்குள் சில கோடி மக்களாவது இவர்கள் கட்டி எழுப்பும் பொன்னுலகம் பலிக் கொண்டுவிடும். ஆனால், சோவியத்தில் நடந்தது போல், சீனாவில் நடந்தது போல் இங்கு நடக்காது என்று என்ன நிச்சயம். இதற்க்கு இவர்களிடம் என்ன பதில் இருக்கிறது..

              • பதில்-1:

                புரட்சிக்கு ரோட்மேப், டைம்லைன் கேட்டவனின் மனவக்கிரம் என்னவென்று எழுதியிருக்கிறேன். அதைப் புரிந்துகொள்வதற்கு வரலாற்று அறிவு எல்லாம் தேவையில்லை. சுரணை இருந்தாலே போதுமானது. ஏனெனில் தனக்காக போராடுகிற எவனும் டைம்லைன் கேட்பதில்லை. தன் பிள்ளைகளின் நலனுக்காக எவனும் கணக்குப்போட்டுக்கொண்டு வேலை செய்வதில்லை. புரட்சியும் இப்படிப்பட்ட சமூக கடமைதான். பார்வை ஒன்றுக்கான பதில் இங்கேயே முடிந்துவிட்டது.

                ——————————————

                மேற்கொண்டு எழுதியிருப்பதை விருப்பப்பட்டால் வாசிக்கலாம். ஏனெனில் வாசிப்பு என்பது கங்காணிகள் வைக்கும் short and sweet கட்டளைகளுக்கு உட்பட்ட நேர்முகத் தேர்வு அன்று. இங்கு முழு சுதந்திரம் உண்டு. எந்தப் பாசாங்கும் தேவையில்லை.

                ————————–

                புரட்சிக்கு டைம் கேட்கிற தாங்கள் தான் கம்யுனிச அடக்குமுறைகளுக்கு எதிராக புரட்சி வரும் என்று கூவியது. அங்கு டைம் லைன் ரோட் மேப் இந்தியா மேப் என்று எந்த மேப்பும் வரவில்லை. ஆனால் இதே பாட்டாளிகள் புரட்சி செய்வார்கள் என்றால் அங்கு மட்டும் டைம் லைன் குறிப்பாக வந்துவிடுமா? அங்கேயே உங்களது நடுநிலைவாதம் நடுத்தெருவில் நிற்கவில்லையா?

                உலகில் சோசலிசத்தின் வீழ்ச்சியை முதலாளித்துவம் தாங்கள் சொல்வதைப் போல மக்களைத்திரட்டி டைம்லைன் வைத்துகொண்டு ரோட்மேப் போட்டுக்கொண்டா செய்தது?

                இரண்டு உலகப்போர்கள், உழைப்பைச் சுரண்ட மூன்றாம் உலக நாடுகள், எண்ணெய் வளங்களுக்கு அரேபிய நாடுகள்; கனிம வளங்களுக்கு ஆப்ரிக்க காலனிகள், பணத்தைச் சேர்க்க வரியில்லா சொர்க்கங்கள், அடிக்கடி திவலாகும் வங்கிகள், பொருளாதாரம் கவிழும் நாடுகள் இதுதான் 300 ஆண்டுகளில் முதலாளித்துவத்தின் வீச்சமெடுக்கும் பரிமாணம். இதில் கம்யுனிசம் தோல்வி என்று சொல்வதற்கு முதலில் எந்த அருகதையாவது இந்த முதலாளித்துவத்திற்கு இருக்கிறதா? முதலாளித்துவத்தால் முதலில் சொந்தக் காலில் நிற்கமுடியுமா? பிறகு கைக்கூலிகளின் நிகழ்ச்சி நிரல் தான் என்ன? ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்வது மட்டும் தானே!

              • பதில்-2

                \\ Entrepreneur என்றால் தொழில் முனைவோர் என்று அர்த்தம்.\\ பெருந்தன்மையுடன் மொழிபெயர்ப்பை நல்கியிருக்கிறீர்கள். நன்றி!! இந்தியாவில் சிறுதொழில்களையும் சிறுவணிகத்தையும் கைவினைத் தொழில்களையும் அழித்தது தரகுமுதலாளித்துவம் மறுகாலனியாதிக்கமும் தான். இதைத் தவிர்த்து ஐஐஎம்மின் பனியாக்களும் தொழில்முனைவோர்! சின்னாளப்பட்டி டீக்கடை நடந்துவோரும் தொழில்முனைவோர்! என்று அயோக்கியர்களால் மட்டுமே கூற முடியும். ஏற்கனவே இதுபோன்ற இணைப்புகளை அந்தி யோஜனா அன்ன பூர்ணா என்று பல பாசாங்குகளில் கிராம தொழில்முனைவோர் திட்டம் என்று பிரமோத் மகஜானையும் டீமாஸ்டர் பரமசிவனையும் ஒன்றாக கருதும் ஆளும்வர்க்கத்தின் புல்லுருவித்தனம் அம்பலப்பட்டு நிற்கிறது. ஆக இனி தொழில் முனைவோர் இந்தியாவில் சுதந்திரமாக வேலை செய்ய வேண்டும் என்றால் அந்தக் கூட்டம் சுய சார்பாக வளர்த்தெடுக்கப்பட வேண்டுமென்றால் இந்த பொறுக்கித் தின்னும் தரகுமுதலாளித்துவமும், அதைச் செயல்படுத்தும் ஏகாதிபத்தியமும் ஒழிந்தால் ஒழிய தீர்வில்லை.

                இதற்கு மறுமொழியாக உங்கள் வாதம் இப்படியிருக்கிறது.

                \\இதில் இருந்து தாங்கள் சோசலிச மாடல் தற்போதைய நிலையில் சாத்தியமில்லை என்று தானே கூறுகிறீர்கள். சாத்தியமில்லை என்பது தங்களின் வாதம். ஆதாவது ஒட்டுமொத்த ஊரும், உலகமும் கம்மியுநிசத்திற்கு மாறினால் தவிர இவ்வகை சோசலிச மாற்றம் சாத்தியமில்லை என்பது தங்களின் வாதம். ஆனால் சிறிய அளவில் செங்கல் செங்கலாக முயற்சி செய்தால் சாத்தியம் என்பது என் வாதம்\\

                இதுதான் உங்கள் வாதம் என்றால் நிலப்புரபுத்துவத்தை முதலாளித்துவம் வீழ்த்திய பொழுது இப்படித்தான் சிறிய அளவில் செங்கல் செங்கலாக எடுத்துவைத்ததா? என்று கேள்வி கேட்பேன். அழிந்துவரும் உற்பத்தி முறையில் முதலாளித்துவம் தன் புரட்சிக்கான கூறுகளை ஊன்றி நின்றதை வரலாறு நிரூபித்தது நிதர்சனமாக இருக்கிற பொழுது பாட்டாளிகளை மட்டும் ஜெண்டில்மேன் டிக்கிலோனா மற்றும் லைம்ஸ்பூன் கேம் போன்று செங்கல் செங்கலாக எடுத்து வைக்க வேண்டும் என்று யார் சொல்வார்கள்?

                இதே முதலாளித்துவத்தின் நிழலில் அண்டிவாழும் தரகர்கள் தான் சொல்வார்கள். இது தன் நலனிற்கு பங்கம் வராமல் பார்த்துகொள்கிற முயற்சியேயன்றி இதில் எந்த நியாயமோ கண்ணட்டோமோ கிடையாது.

                ————————————————

                இதைத் தவிர உங்கள் மனநிலை, இதே சமூகத்தில் குறைந்த விலையில் பொருளை விற்கச் சொல்லி ஒரு வாதம் வைக்கிறது. குறைந்த விலையில் பொருள் என்பது இலாபத்தை உறிஞ்சும் சக்திகளை ஒடுக்கினால் அன்றி சாத்தியமில்லை. ஏன் என்றால் ஒரு பொருளுக்கான குறைந்த விலை அல்லது அதிக விலை என்பதே உழைப்பைக் கூலியாகவும், இலாபத்தை கணக்கில்லாமல் சுரண்டிக்கொழுக்கிற மூலதனத்தாலும் தான் வருகிறது. இதை இரண்டையும் ஒழித்தால் தான் பொருளுக்கான விலை குறையும். மற்றபடி பொருளுக்கான விலையைக் குறை என்பது மோசடியிலும் மோசடி. ஏனெனில் முதலாளித்துவம் பொருளுக்கான விலை குறைந்தபொழுது அதைக்கடலில்தான் கொட்டியதே தவிர மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவில்லை. இதை எதிர்த்துகேள்வி கேட்பவர்களை பார்த்து உங்களைப்போன்ற ஆட்கள் பொருளுக்கான விலையை நீ குறைத்து பயன்பாட்டிற்கு விடு என்று சொல்வது தெரிந்தே துரோகத்தை நியாயப்படுத்துகிற வன்மம் இன்றி வேறில்லை.

                இந்தக் கருத்தோட்டம் மறுகாலனியாதிக்கத்தை திறந்துவிட்டு விட்டு ‘கைத் தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்! கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்’ என்று கழுத்தில் கத்தி வைத்து மிரட்டுகிற கருங்காலித்தனமன்றி வேறல்ல.

                • ஐயா தென்றல்,

                  உங்களுக்கு உண்மையிலேயே புரியவில்லையா, இல்லை நடிக்கின்றீர்களா?
                  டீக்கடை நடத்துபவரும் மளிகை கடை வைத்திருப்பவரும், தொழில் முனைவோர் தான். இதில் என்ன தவறு. ஏன் தொழில் முனைவோர் என்றால் உங்கள் கண்களுக்கு தரகு முதலாளிகள் மட்டும் தான் கண்ணில் படுகிறார்களா? உழைத்து சுயதொழில் புரிபவர்கள் எல்லாம் தங்களின் அகராதிப்படி தொழில் முனைவோர் அல்ல என்று சொல்கிறீர்களா?

                  பொருளின் விலை குறைந்த பொழுது அதை கடலில் கொட்டியது யார்?
                  உலகில் உள்ள எல்லா தொழில் முனைவோரும் ஒட்டுமொத்தமாக இதே செயலை தான் செய்கிறார்களா? அப்படியென்றால் ரசியாவில் கம்மியுனிசம் வந்த பின் பெரும் பஞ்சம் எப்படி ஏற்பட்டது என்று தாங்கள் விளக்க முடியுமா?

              • பதில்-மூன்று

                \\ என்னால் போராட்டத்தில் நேரடியாக கலந்து கொள்ள இயலவில்லை என்றால் எந்த போராட்டத்திற்கு நான் எதிரி ஆகி விடுவேனா? மீண்டும் தென்றலின் பிதற்றல். போராட்டம் அவசியம் இல்லை என்று நான் சொன்னதாக ஏன் போய் சொல்கிறீர்கள்?\\

                போராட்டத்தில் வெற்றியின்றி நாளை வாழ்வு இல்லையென்று இருக்கிறபொழுது யாராவது உங்களைப்போன்று இப்படித்தான் பேசிக்கொண்டிருப்பார்களா? உங்கள் குடும்ப விசயம் என்றால் இப்படித்தான் சொல்வீர்களா? அப்படியானால் இங்கு விவாதிக்கப்படுகிற போராட்டத்திற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லையென்பதை உங்கள் மன நிலை வெளிச்சம் போட்டுக்காட்டிவிடுகிறது இல்லையா? தன் கைகளை போராட்டத்தில் கலக்காதவர் மக்கள் ஆதரவு, மக்கள் ஆதரவு என்று கூவுவது கடைந்தெடுத்த பித்தலாட்டம் என்பது தெரியவில்லையா?

                பக்கத்து பதிவில் மணல் மாபியா பிரச்சனையை போராட்டத்தால் தீர்க்க முடியாது ஸ்டீல் கம்பி கண்டுபிடிக்க வேண்டும் என்று போராட்டத்திற்கு மாற்று சொன்ன பெருந்தகை தாங்கள். மணலால் ஆறே தொலைகிறதே! எந்த ஸ்டீல் கம்பி ஆற்றை உருவாக்கும்? நிலத்தடி நீருக்கு பதில் என்ன? விவசாயத்திற்கு பதில் என்ன? மேலும் ஸ்டீல் கம்பி தொழில்நுட்பம் தெரிந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான டிஎல்எப் பங்குசந்தையில் 3000 கோடிக்கு மேல் திரட்டிவிட்டு கம்பி நீட்டிவிட்டது! இது எந்தக் கம்பி என்று கேட்டுச் சொன்னால் தேவலை!!!

                • மணலே இல்லாமலும் வீடு கட்டலாம் என்று தான் சொன்னேன்.
                  புதிய தொழில்நுட்பம். வீடு கட்டும் செலவும் குறைவு, வேகமாகவும் கட்ட இயலும்.
                  மணலுக்கான தேவை இல்லை என்றால் மணற்கொள்ளை தேவைப்படாது.
                  LIGHT GAUGE STEEL CONSTRUCTION என்று வலைதளங்களில் தேடிப்பாருங்கள்.
                  ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய வீடுகள் பிரபலம்.

                  Every Problem definitely has a Solution.
                  Every Problem has more than one Solution, if we think deep.

                  • கற்றது கையளவு,

                    நீங்க ஏன் இதற்க்கு ஒரு ஸ்டெப் எடுக்க கூடாது. இதுகாறும் தாங்கள் கூறி வரும் மக்களின் மகத்தான ஆதரவை பெற்று ஏன் இந்த புரட்சியை தாங்கள் செய்ய கூடாது. இவ்வளவு நேரம் தங்களிடம் உரையாடிய பிறகுதான் எனக்கு மயக்கம் தெளிந்தது. சும்மா எதுக்கெடுத்தாலும் மணல் கொள்ளை, தனியார்மயம்னு இவிங்களுக்கு வேற வேலையே இல்லை. போராட்டங்களில் கலந்து கொள்ள முடியாத நம்மை போன்றவர்கள் ஏன் இனைந்து மக்களிடம் இதைப் பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தி, மணலுக்கு பதிலாக அந்த புது டெக்னாலஜிய பயன்படுத்த கூடாது. நாம் ஏன் நேரில் சந்தித்து இதைப் பற்றி ஒரு ஒரு புரிந்துணர்வு பெற கூடாது? பிறகு இதை நாம் இதைப் பற்றி அரசுக்கு புரிய வைத்தோ அல்லது அரசிடம் ஒரு கோரிக்கையாக வைத்தோ மணலுக்கு பதிலாக அந்த நியூ டெக்னாலஜிய பயன்படுத்த நாம் சொல்லலாம். நீங்க என்ன சொல்றீங்க.

                  • கற்றது கையளவு,

                    ஆனால், இந்த பயபுள்ளங்க இதுக்கு timeline கேப்பாங்களே.என்ன பண்றது?

                    நானும் என்னால முடிஞ்சா வரைக்கும் யோசிக்கிறேன். ஏன் சொல்றேன்னா, கல்வி சட்டத்தின்
                    படி , ஒருப் பள்ளியில் இத்தன கக்கூசு இருக்கோணும் , இத்தன வாத்தியாரு இருக்கோனும் , சத்துணவு கொடுக்கோனும் மொட்டு கொடுக்கோனும் …இன்னும் ஏகப்பட்ட இருக்கோனும்… இதுக்கெல்லாம் பள்ளிக்கூடம் இருக்கோனும். இந்த சட்டம் போட்டு பல ஆண்டுகள் ஆச்சு. ஆனா பாருங்க இன்னும் அதை நடைமுறைப்படுத்தல. தோழர் தென்றல் அப்புறம் இது மாதிரியெல்லாம் நோன்டுவாரு. ஆனாப் பாருங்க இந்த எல்லா வசதியும் தனியார் பள்ளிக்கூடங்களில் இருக்கு. ஆனா காசில்லாதவன் அங்க படிக்கமுடியாதே.

                    அப்புறம் பாருங்க நீங்களும்,அண்ணாத்த இராமனும் வெளிநாட்டுத் ட்ரிப்ப எடுத்து உட்டவுடனே,சும்மா தென்றலு ஓஞ்சு போச்சு பாத்தீங்களா. இந்தத் தென்றலுக்கு புது டெக்னாலஜி பத்தியெல்லாம் தெரியாது. வெளிநாட்டுக்கு போன அனுபவமும் இல்லை. இந்த டெக்னாலஜி எல்லாம் தனியாரு தான் குடுக்கரானாம். அதுக்கு காசு எல்லாம் செலவாகுமாம். அதனால் காசில்லாதவன் எல்லாம் அதை பயன்படுத்த முடியாதாமே. எனக்கு யோசிச்சு யோசிச்சு மண்ட மூள கோளம்பியே போச்சு.

                    இவ்ளோ நேரம் உங்க விவாதத்த கேட்டு கொஞ்சம் மெர்சல் ஆச்சு. ஆனால் திரும்பி வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சு. மறுபடியும் உங்க விளக்கங்களை கேட்டா மறுபடியும் என்னோட மயக்கம் தெளிஞ்சுடும் என்று நினைக்கிறன். ஹம் பாக்கலாம்.

                    நன்றி.

              • //
                பார்வை 3:
                என்னால் போராட்டத்தில் நேரடியாக கலந்து கொள்ள இயலவில்லை என்றால் எந்த போராட்டத்திற்கு நான் எதிரி ஆகி விடுவேனா? மீண்டும் தென்றலின் பிதற்றல். போராட்டம் அவசியம் இல்லை என்று நான் சொன்னதாக ஏன் போய் சொல்கிறீர்கள்? //

                க.கை.,
                என்னால விவாதங்கள்ல பங்கெடுக்க முடியல. மன்னிக்கனும்.
                இந்தப் பார்வை மூணுக்கு என்னோட பதிலைச் சொல்றேன். அதாவது நீங்க நல்லவர்தான். மனசு நல்லதுதான் நினைக்குது. ஒன்னும் தப்பில்ல. ஆனால் அதால பிரயோசனமில்லனுதான் கம்யூனிட்கள் சொல்றாங்க. அதாவது நடைமுறைப்படுத்தப் படாத, செயல்படுத்தப்படாத ‘நல்ல தனத்தை’ வைத்துக்கொண்டு ஒன்னும் செய்ய முடியாதுங்கிறாங்க. புரியுதா/? இப்ப பிரச்சினை என்னன்னா.. ஒரு இடத்துல தப்பு நடக்குது. எல்லாருக்குமே அது தப்புனு புரியுது. உடனே சராசரிகளோட மனசு என்ன நினைக்குது. எவனாவது வந்து இதெல்லாம் சரி பண்ணுவான்.. மக்களை திரட்டி போராடுவான்னு நினைக்குது. அதுக்கு ‘ஆதரவு’ கொடுப்போம்னு மனசு சொல்லி தன்னை தானே சமாதானப் படுத்திக்குது. மெயின் பிரச்சினை இந்த மாதிரி ‘நல்ல தனம்’ உங்கள்ட்ட, என்கிட்ட உட்பட சமூகத்துல பெருவாரியான ஆட்கள்ட்ட இருக்கறதுதான்!!!!!

            • கற்றது கையளவு,

              ஊழல்வாதி ஜெயலலிதா, குற்றப்பத்திரிக்கையின் மொழிபெயர்ப்பு மற்றும் நீளம் கருதி பதினெட்டு வருடம் வாய்தா வாங்கியதுபோல் இருக்கிறது தாங்கள் பயன்படுத்திய Brevity is the soul of Wit பழமொழி. அயோக்கியர்களின் கடைசிப் புகலிடங்களுள் இதுவும் ஒன்று என்பது என் தரப்பு புரிதலாகும். ஆகையால் உங்களின் இந்த கனிவு மிகுந்த கரிசனத்திற்குள் உள்ளே இருக்கும் ஊழலை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தாலும் கண்டுபிடிக்க இயலாது. இதைத்தவிர்த்த உங்களது அட்வைசு முதலாளித்துவத்தை வீழ்த்துவதற்கு பயன்படுமேயானால் கவனத்தில் கொள்கிறேன். நன்றி.

              • சிரிப்பு தான் வருகிறது தென்றல்.
                Brevity is the soul of Wit என்பதற்கும் தாங்கள் சொன்ன //அயோக்கியர்களின் கடைசிப் புகலிடங்களுள் இதுவும் ஒன்று // என்ன ஒப்புமை இது?

                ஜெயலலிதாவின் மொழிபெயர்ப்புக்கும் நான் சொன்ன பழமொழிக்கும் ஏன் முடிச்சு போடுகிறீர்கள்?

                இதில் என்ன ஊழலை கண்டுபிடித்து விட்டீர்கள்? உளறல்களின் எவரெஸ்ட் சிகரமாகிவிட்டீர்கள்.

  37. தென்றல்,

    தியநேன்மேன் சதுக்க படுகொலைகள் போன்ற ஒரு நிகழ்வு தங்களின் புரட்சிகர கம்மியுனிச ஆட்சியில் நடைபெறாது என்பதற்கு என்ன உத்திரவாதம்? இந்த கேள்விக்கு தாங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை.

    • ஐயா தியான்மென் சதுக்கப் படுகொலைகள் என்பது மேற்குலகப் பத்திரிக்கைகளில் நடந்த எழுத்துலகப் பிரச்சாரம். அது இன்று வரை தியான்மென்னில் நடைபெறவில்லை! தாங்கள் மட்டுமல்ல மேற்குலகம் முயற்சித்து தோற்றுப்போன சில்லுண்டிப் பிரச்சாரம் இது. 2011இல் வெளிவந்த விக்கிலீக்ஸ் கேபிள் இந்த பொய்ப் பிரச்சாரத்தை அம்பலப்படுத்திய செய்தி உங்களுக்குத் தெரியுமா? தெரியாதா?

      1. தியன் அன் மென் படுகொலை, அம்பலமாகும் பொய்கள்!
      2. Wikileaks: no bloodshed inside Tiananmen Square, cables claim

      என்ற இருவாசகங்களை கூகுளில் டைப்செய்து மேற்கொண்டு விசயங்களை அறிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு மான ரோசம் இருந்தால் தார்மீகரீதியாக தாங்கள் இந்த அவதூறுக்கு பொறுப்பேற்றுக் கொள்வீர்களா? என்பது ஒருபுறம் இருக்கட்டும். இனி எந்த நியாய உணர்ச்சியுடன் மேற்கொண்டு உரையாடுவீர்கள்?

      இனி அடுத்த அவதூறை எடுத்துக்கொண்டு வருகிற பொழுது முன்னே பின்ன என்ன வாதம் இருக்கிறது என்று பார்த்துக்கொண்டு வரவும். முதலாளித்துவ பாசிஸ்டுகள் இவ்விதம் கோமாளிகளாகவும் இருப்பார்கள் என்பது புரிகிறதா!

      • அவ்வளவு நல்லவங்களா இருந்தா ,சைனாவில் டினாமன் சதுக்கம் என்பதை பற்றி வலைத்தளத்தில் தேட முடியாத படி செய்வது ஏன் ?

        அரசாங்கம் எதற்கு மக்கள் பேச்சுரிமையை அபகரிக்க வேண்டும் ?

        சிறப்பான கம்ம்யூனிச சமுதாயத்தை மக்கள் வலைத்தளத்தில் பாராட்டுவார்கள் அல்லவா !

        • \\அவ்வளவு நல்லவங்களா இருந்தா ,சைனாவில் டினாமன் சதுக்கம் என்பதை பற்றி வலைத்தளத்தில் தேட முடியாத படி செய்வது ஏன் ?\\

          சீனா புளிகுழம்பு வைத்தாயா என்று கேட்கும் பேஸ்புக், ஜிமெயிலையே தடைசெய்கிற பொழுது மேற்குலகத்தின் தியான்மென் பிரச்சாரங்களை மட்டும் விட்டுவைக்குமா?

          புளிக்குழம்பிற்கே இல்லாத கருத்துச் சுதந்திரம் தியான்மென் சதுக்கத்திற்கு எப்படி கிடைக்கும்? அற்பவாதிகள் பதில் சொல்வார்களா?

          \\அரசாங்கம் எதற்கு மக்கள் பேச்சுரிமையை அபகரிக்க வேண்டும் ?\\

          அரசாங்கம் ஏன் மக்கள் பேச்சுரிமையை அபகரிக்கிறது என்ற கேள்வி சீனாவிற்கு மட்டுமல்ல எல்லா நாட்டு முதலாளித்துவ அரசாங்களுக்கும் பொருந்தும். இந்தியாவில் எப்படி நுகர்வுக்கலாச்சாரத்திற்கான இணைய கருத்துரிமை அதிகமாக இருக்கிறதோ அதோ போன்றுதான் சீனாவும் நுகர்வு என்று வருகிற பொழுது இணைய விசயத்தில் திறந்துவிட்ட புலிகேசியாகத்தான் இருக்கிறது.

          அமெரிக்க அடிமைநாடுகளுக்கு ஜிமெயில் பேஸ்புக் என்றால் சீன அடிமை நாடுகளுக்கு QQ, Weibo. இதில் கம்யுனிச அவதூறு செய்யும் மேற்குலக பிரச்சாரங்கள் மட்டும் தடைசெய்யப்படுவதில்லை. சீன முதலாளித்துவத்தை விமர்சிக்கும் வினவு போன்ற பாட்டாளிவர்க்கத்திற்கான தளங்களும் தான் இங்கு தடைசெய்யப்படுகின்றன. ஆக கருத்துரிமை என்பதில் இரண்டு ஏகாதிபத்தியங்களுக்கும் ஒற்றைப் பார்வைதான் உண்டு. அது மேலாதிக்கம் மட்டுமே.

          \\சிறப்பான கம்ம்யூனிச சமுதாயத்தை மக்கள் வலைத்தளத்தில் பாராட்டுவார்கள் அல்லவா !\\

          எப்படியென்று பார்ப்போமே!

          சீனாவில் கலாச்சாரப் புரட்சி குறித்து இரண்டு பிரச்சாரங்கள் உண்டு.

          ஒன்று அது பல மக்களைக் கொன்றது என்ற மேற்குலகப் பிரச்சாரம்.

          இரண்டு அது மக்களை எப்படி அணிதிரட்டி நிலப்புரத்துத்துவத்தை வீழ்த்தியது என்ற கம்யுனிஸ்டுகளின் பிரச்சாரம்.

          இரண்டுமே பிரச்சாரங்களும் சீனாவில் தடைசெய்யப்படும்.

          முதல் பிரச்சாரத்தை தடைசெய்வது அமெரிக்கா ஏகாதிபத்தியத்திற்கான அரசியல் அபிலாசையை அனுமதிக்காது இருப்பது. இரண்டாவது பிரச்சாரம் சீனாவில் கம்யுனிசம் எக்காரணம் கொண்டும் வந்துவிடக்கூடாது என்பதற்காக.

          இன்றைய நிலையில் சீனா கலாச்சாரப்புரட்சியின் புரட்சிகர அம்சங்களை தடைசெய்வதில் தான் பெருத்த அக்கறைகொண்டிருக்கிறது. மற்றபடி அமெரிக்காவின் கைஓங்குவதோ தாழ்வதோ மாவோ பல்விளக்கமாட்டார்; அவருக்கு பலமனைவிகள்; அவர் பல இலட்சம் மக்களைக்கொன்றார் என்பதன் வீச்சான பிரச்சாரம் சீனா இணையதளத்தின் பிராக்சிகளைப் பொறுத்து அவ்வப்பொழுது வரும்; போகும்.

          இது தான் இன்றைய சீனா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத்தின் கருத்துரிமை பிரச்சார முறையாகும்.

          • 2001 இல் நான் பீஜிங் சென்று வந்தவன். தியநேன்மேன் படுகொலை நடக்கவேயில்லை என்று கூறுவதை உங்களது ஜால்ராக்கள் வேண்டுமானால் நம்புவார்கள். நான் பணி நிமித்தமாக அங்கு நேரில் சென்று வந்தவன், அங்கு உள்ளவர்களிடம் உரையாடியவன். உங்கள் புளுகு மூட்டைகளை என்னிடம் அள்ளி வீசாதீர்கள்.

            • சீனாக்காரனே சொல்லிவிட்டான், விக்கிலீக்ஸ் எல்லாம் ஒரு ஆதாரமா என்று கேட்கிறீர்களா? இதுதான் உங்களது டூர் சொல்லவரும் செய்தியா?

              அக்கம் பக்கம் உள்ள ஐசிஎப் தொழிலாளிகள் பஞ்சு கார்டு அடிக்கிறார்கள் என்று சொல்லித்தான் தங்களது தனியார்மயக் குட்டு உடைந்து வெளியே நின்றது. இப்பொழுதோ கம்யுனிச அவதூறுக்கு 2001 அனுபவம் ஒரு பாயிண்டாக இருக்குமோ என்று முயற்சித்துப் பார்க்கிறீர்கள். உங்கள் பாணியிலேயே எனது பதிலையும் சொல்லிவிடுகிறேன்.

              விக்கிலீக்ஸ் ஆதாரம் பொய் என்று சொல்லக்கூடிய முதலாளித்துவக் கூஜாக்களுக்கு வேண்டுமானால் தியான்மென் படுகொலை, அரிப்புக்குச் சொரியும் களிம்பாக இருக்கலாம். ஆனால் கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு மட்டும்தான். அது சீனனாக இருந்தாலோ இந்தியனாக இருந்தாலோ மாற்றிவிட இயலாது.

              அமெரிக்கபோரை நியாயப்படுத்திய அமெரிக்க கமாண்டரை, வியட்நாம் போராளி சல்யூட் அடிப்பதாக பிரச்சாரமே செய்திருக்கிறது முதலாளித்துவம். தியான்மென் படுகொலை என்ற பிரச்சாரம் எம்மாத்திரம்?

  38. தென்றல்,

    முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலுகிறீர்கள். Good Try, But Failed!
    தூங்குகிறவர் போல நடிக்கிரவர்களை எழுப்ப முடியாது. நீங்கள் உங்கள் கனவுலகத்தில் வாழ்ந்கள்.
    நிஜம் சுடும்.

    நீங்களும் கூகிளில் நன்கு தேடிப்பாருங்கள். தியான்மென் சதுக்கத்தில் அல்ல, படுகொலைகள் அனைத்தும் அந்த சதுக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தான் நடந்தன என்று சீன அரசு சால்ஜாப்பு சொல்கிறது. சரி, அப்படியே வைத்துகொண்டாலும், சதுக்கத்தின் உள்ளேயோ, வெளியேயோ, படுகொலைகள் நிகழ்ந்தது உண்மை தான்.

    சரி, படுகொலைகள் நடக்கவே இல்லையெனில் ஏன் மொத்த சீன ஊடகங்களிலும் தியநேன்மேன் சதுக்க நிகழ்வுகளை பற்றி எதையும் வெளியிடக்கூடாது என்று அடக்குகிறார்கள்?

    TANK MAN at Tianenmen என்று தேடிப்பாருங்கள். அதே கூகுளில்.

    • \\நீங்களும் கூகிளில் நன்கு தேடிப்பாருங்கள். தியான்மென் சதுக்கத்தில் அல்ல, படுகொலைகள் அனைத்தும் அந்த சதுக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தான் நடந்தன என்று சீன அரசு சால்ஜாப்பு சொல்கிறது.\\

      சீன அரசு 1989லிருந்தேதான் இதைச் சொல்லிவருகிறது. உங்களைப்போன்ற பித்தலாட்டக்காரர்களுக்கும் மேற்குலக ஜனநாயகவாதிகளும் அப்பொழுது தேவைப்படாத ஒன்றாக இருந்தது. ஏன்? என்ன காரணம் என்று பதில் சொல்வீர்களா? 2011க்குப் பிறகு இந்தப் பிரச்சாரம் அடக்கிவாசிக்கப்படுவது ஏன்?

      மேலும் இதுமட்டுமில்லை ஆர்வெலும் ரஸ்ஸலும் பிரிட்டிஸ், சிஐஏ உளவாளி என்று அம்பலப்பட்டுப் போனபிறகும் கூட அதன் பிரச்சாரங்களை தேடித்தேடி படிக்கிற கூட்டம் எதுவாக இருக்கும்? ஒன்று ஜெயமோகன் போன்ற அடிபட்ட ஓநாய்கள்; அல்லது இயல்பிலயே கம்யுனிசத்தை கண்டு அலறும் வர்க்க மேட்டிமைகள். இந்த இருகூட்டமும் எப்பொழுதும் மக்கள் திரளின் கேள்விகளுக்கு முகம் கொடுத்ததேயில்லை என்பதை யாரைவிடவும் பாட்டாளிவர்க்கம் புரிந்துகொள்ளும்.

      பஸ்கண்டக்டர் வடிவேலு டைம்பாம் மேல் உட்கார்ந்துகொண்டு டிக்கி டிக்கி சவுண்டை கேட்பது போல இந்தப் பிரச்சார கூட்டங்கள் தெரிந்தோ தெரியாமலோ உட்கார்ந்திருப்பது பாட்டாளிவர்க்க குண்டின் மீது. அசையாமல் மெயிண்டன் பண்ணுவது உங்கள் அடிமட்டத்தை ஓரளவு பாதுகாக்கும்! ஆனால் வெடித்துச் சிதறுவது உறுதி!

      ——–

      இப்பொழுது அம்மணமாக நிற்கிற பொழுது \\சரி, அப்படியே வைத்துகொண்டாலும், சதுக்கத்தின் உள்ளேயோ, வெளியேயோ, படுகொலைகள் நிகழ்ந்தது உண்மை தான்.\\ என்று சொல்வதால் எந்தப் பிரயோசனமும் இல்லை. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்ற கதையாக அம்பலப்பட்டு போனபிறகு இதுபோன்ற பிரச்சாரங்களை வைத்து பத்து சட்டி மண்ணைக் கூட அள்ளமுடியாது. ஒன்று சொந்தப் புத்தி வேண்டும். அல்லது சொல்புத்தி வேண்டும் என்பார்கள் இல்லையா? சொந்த அனுபவத்தில் இந்த சொலவடையைப் பயன்படுத்திப் பாருங்கள்.

      \\சரி, படுகொலைகள் நடக்கவே இல்லையெனில் ஏன் மொத்த சீன ஊடகங்களிலும் தியநேன்மேன் சதுக்க நிகழ்வுகளை பற்றி எதையும் வெளியிடக்கூடாது என்று அடக்குகிறார்கள்?\\

      இராமன் இதே கேள்வியைக் கேட்டிருக்கிறார். அங்கு படித்து பாருங்கள் (37.1.1).

      \\TANK MAN at Tianenmen என்று தேடிப்பாருங்கள். அதே கூகுளில்.\\

      உங்கள் முதலாளித்துவ ஊடகமே அடக்கி வாசிக்கிற பொழுது எதுகைமோனையாக டேங்க் மேன் அட் டின்னெமென் என்றால் என்ன அர்த்தம்? விக்கிலீக்ஸ் செய்தியை ஒப்புக்கொள்ளும் நேர்மையோ துணிவோ உண்டா?

      நான் வைத்த இந்த வாதத்திற்கு முகம் கொடுக்க துப்பில்லாதவர் இந்தோனசியா பல இலட்சம் கம்யுனிஸ்டுகளை கொன்றழித்தையோ ஈராக்கில் பல இலட்சம் குழந்தைகள் கொல்லப்பட்டதையோ மோடி பல ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றழித்ததையோ ஜனநாயகத்தின் பேரில் எப்படி சகித்துகொள்ள முடிகிறது? அல்லது எதனடிப்படையில் பரிசீலிப்பார்?

      கம்யுனிச அவதூறு பிரச்சாரத்திற்கு பொய்களை மட்டுமே நம்பியிருக்க கூட்டம் இவ்விதம் உண்மைகளின் மீது ஏறிநின்றுதானே மோகனம் பாடுகிறது. இரத்தத்தில் கையை நனைத்தவன் சனநாயகத்தை சிலாகிப்பது இறந்த பிணத்தை புணர்வதற்கு ஒப்பானதுதானே!

  39. தென்றல்,

    தியநேன்மெனிலோ அல்லது அந்த சதுக்கத்தை சுற்றியோ ஒன்றுமே நடக்கவில்லை என்று சொல்கிறீர்களா? ஆம்/இல்லை

    யாரும் அடக்கி வாசிக்கவில்லை, வருடங்கள் செல்ல செல்ல, மக்கள் மறக்க ஆரம்பித்து விட்டனர். அவ்வளவு தான்.

    குஜராத் கலவர படுகொலைகள் – தியநேன்மேன் படுகொலைகள். இரண்டும் வேறல்ல.
    நாட்கள் செல்ல செல்ல மக்கள் அந்த நிகழ்வுகளை பற்றி அதிகம் பேச மாட்டார்கள். ஆனால் அப்படி ஒரு நிகழ்வே நடக்கவில்லை என்று சொல்ல உங்களை போன்ற பித்தலாட்டகாரரால் மட்டும் தான் முடியும்.

    • \\ தியநேன்மெனிலோ அல்லது அந்த சதுக்கத்தை சுற்றியோ ஒன்றுமே நடக்கவில்லை என்று சொல்கிறீர்களா? ஆம்/இல்லை\\

      எவ்வளவு சீரழிந்து போய்நிற்கிறது உங்கள் கேள்வி என்று பாருங்கள். தியான்மென்படுகொலை என்று ஆரம்பித்தவர் தற்பொழுது தியான்மென்னிலோ அல்லது அந்த சதுக்கத்தைச் சுற்றியோ ஒன்றுமே நடக்கவில்லையா என்று கேட்பது உங்களுக்கே வெட்கமாகயில்லையா?

      படுகொலை நடந்திருப்பதற்கு ஆம் இல்லை என்ற பதில்வேண்டுமா? இல்லை சதுக்கத்தைச் சுற்றி நடந்த விசயங்களுக்கு பதில் வேண்டுமா?

      சதுக்கத்தைச் சுற்றி நடந்தவிசயங்களுக்கு பதில் வேண்டுமெனில் நான் கேட்டகேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். உங்கள் பார்வைக்கு மீண்டும் வைக்கிறேன்,

      1. சீன அரசு 1989லிருந்தேதான் இதைச் சொல்லிவருகிறது. உங்களைப்போன்ற பித்தலாட்டக்காரர்களுக்கும் மேற்குலக ஜனநாயகவாதிகளும் அப்பொழுது தேவைப்படாத ஒன்றாக இருந்தது. ஏன்? என்ன காரணம் என்று பதில் சொல்வீர்களா?

      2. 2011க்குப் பிறகு இந்தப் பிரச்சாரம் அடக்கிவாசிக்கப்படுவது ஏன்?

      \\ யாரும் அடக்கி வாசிக்கவில்லை, வருடங்கள் செல்ல செல்ல, மக்கள் மறக்க ஆரம்பித்து விட்டனர். அவ்வளவு தான். குஜராத் கலவர படுகொலைகள் – தியநேன்மேன் படுகொலைகள். இரண்டும் வேறல்ல. நாட்கள் செல்ல செல்ல மக்கள் அந்த நிகழ்வுகளை பற்றி அதிகம் பேச மாட்டார்கள். ஆனால் அப்படி ஒரு நிகழ்வே நடக்கவில்லை என்று சொல்ல உங்களை போன்ற பித்தலாட்டகாரரால் மட்டும் தான் முடியும்.\\

      26 வருடங்களாக மேலைத்தேயம் இதை மணிக்கணிகில் பிரச்சாரம் செய்திருக்கிறது. விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தல்களுக்குப் பிறகு பிபிசி நிருபர் தான் சொன்ன செய்தி தவறு என்று அந்தர் பல்டி அடித்திருக்கிறார். அமைதிக்கான நோபல் பரிசுவாங்கிய ஈராக் போரை நியாயப்படுத்திய அமெரிக்க கைக்கூலி லியூ ஜிபோ, விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தல்களுக்குப் பிறகு ஜாகையை மாற்றி வாசிக்கிறான். தியான்மென் சதுக்கத்தின் சுட்டுவீழ்த்தப்பட்ட பிணங்கள் இப்பொழுது எழுந்து வந்து சாட்சி வேறு சொல்கின்றன. இவ்வளவு கூத்துகளுக்கு பிறகு சோசலிச மாடல் கேட்ட தாங்கள் கம்யுனிச அவதூறுக்கு தியான்மென் படுகொலை என்று வாந்தியை அள்ளிக்கொண்டு வந்துபோட்டீர்கள். இப்பொழுது கருத்து அனாதையாக இருக்கிறீர்கள். காறித்துப்புவதற்கும் தகுதியில்லாத அளவிற்கு உங்களது வாதங்கள் அடிபட்டு நிற்கின்றன. இன்னமும் சமாளிப்பதற்கு பதில் 1989ல் நடந்த மறுபக்க பிரச்சாரத்தை படித்து தெரிந்துகொண்டு கோமாளியாக இருப்பதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

      • தென்றல், சுற்றி வளைக்க வேண்டாம். மீண்டும் நேரடியாக கேட்கிறேன்.

        தியநேன்மேன் சதுக்க பகுதியில் (சதுக்கத்தின் உள்ளேயா, வெளியா சந்து பொந்துக்குள் ஒளிய வேண்டாம்) படுகொலைகள் நடந்தனவா, இல்லையா?

        நேரடி பதிலை எதிர்பார்கிறேன். ஆம் / இல்லை.

  40. தென்றல்,

    நாளுக்கு நாள் தங்களின் பிதற்றல் அளவு எல்லை மீறுகிறது.

    ஐ.சி.எப் தொழிலாளர்கள் கார்டு பஞ்சு செய்து விட்டு வீட்டுக்கு வருவதை நேரில் பார்த்தவன் நான். இதில் என்ன குட்டு உடைந்தது? நான் கூட ஆரம்பத்தில் இரவு நேர ஷிபிட் முடித்து வீட்டுக்கு திரும்புகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவ்வாறு திரும்பிய தொழிலாளர்களின் பிள்ளைகள் எனக்கு நண்பர்களாக இருந்ததனால் இந்த விவரம் பின்னர் எனக்கு தெரிய வந்தது. இதில் என்ன குட்டு உடைந்தது?

    ஒன்று புரிகிறது. மோடியின் ஆன்லைன் பக்தர்களுக்கு நிகராக நீங்கள் கம்மியுனிச கொலைகளை நியாயப்படுத்துகிறீர்கள். அவர்கள் கூட தான் குஜராத்தில் கலவரமே நடக்கவில்லை, அது அண்டப்புளுகு, ஆகாயப்புளுகு என்கிறார்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் எள்ளளவும் வித்தியாசம் இல்லை.

    இவ்வளவு நாள் தென்றல் அவர்களின் மேல் இருந்த மதிப்பு இந்த சமீபகால பின்னூட்டங்களை கண்ட பின் முற்றிலும் சரிந்தது. மன்னிக்கவும். இவ்வாறு பதிவிடுவது என் இயல்பு அல்ல. ஆனால் தங்களின் விதண்டாவாதம் என்னை இந்த அளவுக்கு அடிமட்ட அளவில் விவாதம் செய்ய தூண்டியது. தூண்டியது நீங்களாக இருந்தாலும், கோபப்பட்டது என் தவறு தான். மன்னிக்கவும்.

  41. ஐயா தென்றல், நீங்களும் அந்த ரிப்போர்டுகளை முழுவதுமாக படியுங்கள். டியநேன்மேன் சதுக்கதுக்குள்ளே படுகொலை நடக்கவில்லை ஆனால் வெளியே படுகொலைகள் நடந்தன என்று பிபிசி நிருபர் ஜேம்ஸ் மைல்ஸ் சொல்கிறார். உள்ளே நடந்ததோ, வெளியே நடந்ததோ, படுகொலை படுகொலை தானே.

    • \\ஐயா தென்றல், நீங்களும் அந்த ரிப்போர்டுகளை முழுவதுமாக படியுங்கள். டியநேன்மேன் சதுக்கதுக்குள்ளே படுகொலை நடக்கவில்லை ஆனால் வெளியே படுகொலைகள் நடந்தன என்று பிபிசி நிருபர் ஜேம்ஸ் மைல்ஸ் சொல்கிறார். உள்ளே நடந்ததோ, வெளியே நடந்ததோ, படுகொலை படுகொலை தானே.\\

      கற்றது கையளவு அவர்களே, படுகொலை உள்ளே நடந்தாலும் வெளியே நடந்தாலும் படுகொலை படுகொலை தானே என்ற சொல்கிற தங்களின் வெள்ளந்தியான வாதம் தியான்மென் சதுக்க படுகொலைகள் குறித்த பிரச்சாரத்தைக் கேலிக்கூத்தாக்குவது தங்களுக்கு தெரியவில்லையா?

      ஏன் கேலிக்கூத்து என்று பார்ப்போமே!

      முதலில் டியான்மென் சதுக்க படுகொலைப் பிரச்சாரங்களுக்கான கதையை முற்றிலும் அடித்து நொறுக்குகிறது உங்கள் வாதம். அதாவது மைதானத்திற்குள் இருக்கும் ஒட்டுமொத்த போராட்டக்காரர்களுக்கு எதிராக மார்சியல் லா பிறப்பிக்கப்பட்டு மைதானத்தின் கதவுகள் அடைக்கப்பட்டு, விளக்குகள் அணைக்கப்பட்டு ஒட்டு மொத்த போராட்டக்காரர்களும் ராணுவத்தால் சுற்றி வளைத்து சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். ஒருவரும் எஞ்சவில்லை! 4000லிருந்து பத்தாயிரக்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்! இப்பொழுது இந்தக் கதையை எதை வைத்து நியாயப்படுத்துவீர்கள்? சாட்சி சொன்ன பிபிசி ஜேம்ஸ் மைல்ஸ் படுகொலை வெளியே நடந்தது என்றால் சீனாவின் ஜாலியன் வாலாபாக்கை எப்படி கட்டமைப்பீர்கள்? அறிவாளியான தாங்கள் இந்த மாக்கானுக்கு புரியவைப்பீர்களா?

      இரண்டாவதாக பிபிசி மைல்ஸ் கொடுக்குகிற வாக்குமூலம் என்ன சொல்கிறது என்றால் கொல்லப்பட்ட ஆளும் கொலைசெய்யப்பட்ட இடமும் தான் மாறியதே தவிர படுகொலை நடந்தது உண்மையென்று அடித்து சத்தியம் செய்கிறது. எனது கேள்வி என்னவென்றால் குற்றவாளியைக் கண்டுபிடிக்கிற உங்களைப் போன்ற பித்துக்குளிகள் முதலில் கைகாட்டிய நிரபராதிக்காக சோடிக்கப்பட்ட தகவல்களுக்காக ஏன் பொறுப்பேற்கவில்லை? அந்த 22ஆண்டுகால பிரச்சாரங்களின் பலன் தானே உங்களைப்போன்ற நடுத்தரவர்க்க வியாதிகளை கட்டிப்போட்டிருக்கிறது?

      மூன்றாவதாக வெளியே நடந்தாலும் படுகொலை படுகொலை தானே என்று கேட்கிறது உங்களது வாதம். இந்த நியாயம் 25வருடங்களாக கேட்கப்பட்டுவருகிறது. அனைவரும் இதைப் பற்றி பேசிவந்திருக்கின்றனர். ஆனால் வெளியே நடந்த படுகொலை என்பதே பொய் என்று நிராகரித்து தன் கதையை நிலைநாட்டியது மேற்குலக முதலாளித்துவ பத்திரிக்கைகள் தான். ஏன் என்று சொல்வீர்களா? தாங்களாவது வெளியில் நடந்த படுகொலை குறித்த ஆவணங்களை ஏற்றுக்கொள்வீர்களா? ஏற்றுக்கொள்வீர்கள் எனில் எதை ஏற்கிறீர்கள்? என்பதையும் தியான்மென் படுகொலைகள் பற்றிய தங்களது புதிய குற்றச்சாட்டையும் வாசகர்கள் முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

      அதைவிடுத்து ஈரவெங்காயங்கள் பிராது என்னவென்று தெரியாமலேயே போறவன் வர்றவனையெல்லாம் கையப் பிடிச்சு இழுத்தியா என்று கேட்பது நாணயமான வாதமாகத் தெரியவில்லை.

  42. அமேரிக்கா வியட்நாமில் நடத்திய அட்டோழியத்தையும், குஜராத்தில் மோடி நடத்திய அராஜகத்தையும் மேற்கோள் காட்டினால் சீனாக்காரன் செய்த படுகொலைகளை நியாயப்படுத்திவிட முடியுமா தென்றல்?

    இதற்கு முன்பே வினவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பள்ளியில் நடத்திய படுகொலைகளுக்கும் இதே போல அமெரிக்கா, ஈராக், வியட்நாம் என்று உலகம் முழுக்க சுற்றி வந்து பாகிஸ்தானில் நடந்தது பத்தோடு ஒன்று, பதினொன்று என்று அந்த கொலைகளை பூசி மெழுகி நீர்த்து போக செய்ய முயன்றது.

    தவறு எங்கே நடந்தாலும் அது தவறு தானே, சீனாக்காரன், ரசியாக்காரன் என்றால் தவறே செய்யமாட்டான் என்று நம்ப அவ்வளவு மாக்கானா நீங்கள்?

  43. @கற்றது கையளவு

    கற்பனையில் சுகம் காணும் தென்றல் போன்றவர்களின் அக கண்களை திறப்பது மிக கடினம் .
    அடுத்து கற்பனாவாதிகளின் நெட்வொர்க் அவர்களின் கற்பனை சுகத்தை அதிகரிக்கிறது .
    உதாரணமாக அமெரிக்க கட்டிட தகர்ப்பு , புஷ் செய்தது என்று ஒருவன் கூறுவான் . அதை கேட்கின்ற கற்பனாவாதிக்கு அது உண்மையாக தெரியும் .அவன் கற்பனை உலகின் நிகழ்வுகளுக்கு அது ஒத்துபோகின்றது . அதே போல தென்றல் போன்றவர்கள் அவர்கள் கற்பனை உலகிற்கு ஒத்துபோகும் கட்டு கதைகளை மட்டும் தான் நம்புவார்கள் .

    மகாராஸ்ட்ராவில் மஜீத் என்கின்ற இளைஞர் இசுலாமிய பேரரசு மக்களுக்கு நல்லாட்சி கொடுக்கும் என்று நம்பினார் . சிரியாவிற்கும் சென்றார் ,போரிட்டார் . ஆனால் நடைமுறை நிகழ்வுகள் அவரை கற்பனை உலகத்தில் இருந்து நடைமுறை உலகிற்கு கொண்டுவந்தது.
    தனது தவறை உணர்ந்து இந்தியா திரும்பினார் .

    தென்றல் போன்ற கற்பனாவாதிகளுக்கு ரியாலிட்டி ஷாக் மட்டும்தான் ஒரே வழி . கிளிபிள்ளை மாதிரி அவர்களுடைய கற்பனையை அல்லிதேளிதுகொண்டேதான் இருப்பார்கள் .

    • ராமன்…

      இந்த விவாதம் எப்போதுமே முடிவுக்கு வராது… இதை தான் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் Ronald Reagon இதை சரியாக கூறுவார்.

      “Communism is evil, we (Right and Left) have philosophical differences, This war will be eternal”

      உலகம் உள்ள வரை இந்த போர் தொடர்ந்து கொண்டே இருக்கும்…

      • ‘நான் தரகுமுதலாளித்துவத்தை எதிர்க்கிறேன்’ என்று சவடால் விட்ட மேரி அவர்கள் தரகுமுதலாளி ரொனால்டு ரீகனின் கருத்தைப் பிடித்துகொன்டு பிலாசபிகள் டிபெரன்ஸ் கம்யுனிச சாத்தான் என்று கலந்துகட்டி காக்டெயில் தருகிறாரா? எல்லாமே வேசந்தானா? அல்லது கம்யுனிசம் யாருக்குச் சாத்தான் என்பதை அமெரிக்க வேதாளங்களின் ஒப்பாரியைத் தான் மேரி அவர்கள் லல்லுபி பாடலாக பாடிக்காட்டுகிறாரா?

        • ஏப்பா தென்றலு அதான் அண்ணாத்த இராமன் சொல்லிட்டாருள்ள. கம்முனு இருக்க வேண்டியது தானே.இல்லேன்னா அப்புறம் ரியாலிட்டி ஷோ எல்லாம் கிடைக்குமாம் ச்சீ ரியாலிட்டி ஷாக் எல்லாம் கிடைக்குமாம். எனக்கு கரண்ட் ஷாக் கிடைச்சிருக்கு layoff ஷாக் கிடைச்சிருக்கு. இந்த ரியாலிட்டி ஷாக் எல்லாம் எப்படி இருக்கும்னு தெரியலையே. ஒருவேளை அப்படி இருக்குமோ. ஒருவேளை இப்படி இருக்குமோ…. அட ராமா என்ன பொலம்ப வெச்சுட்டானே(அண்ணாத்த உங்களை இல்ல)

      • அம்மா மேரி,

        நல்லா முட்டுக் குடுக்குறீங்க. உங்களுக்கு முட்டுக் குடுக்க டொனால்டு ரீகன கூப்புடுரீக. அங்க வியாசருக்கு முட்டுக் குடுக்க போனீங்க. சைவத்துக்கு முட்டுகுடுக்க கிருத்துவமும், முதலாளிகளுக்கு முட்டுகுடுக்க அடிப்பொடிகளும்…

        இதுவல்லவோ கண்கொள்ளா காட்சி.

      • Rebecca Mary,

        கம்யூனிசத்தை அதாவது பொதுவுடைமையை Evil என்று சிலர் கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று விளக்குங்கள். நன்றி.

    • ஏப்பா தென்றலு அதான் அண்ணாத்த சொல்லிட்டாருள்ள. கம்முனு இருக்க வேண்டியது தானே.இல்லேன்னா அப்புறம் ரியாலிட்டி ஷோ எல்லாம் கிடைக்குமாம் ச்சீ ரியாலிட்டி ஷாக் எல்லாம் கிடைக்குமாம். எனக்கு கரண்ட் ஷாக் கிடைச்சிருக்கு layoff ஷாக் கிடைச்சிருக்கு. இந்த ரியாலிட்டி ஷாக் எல்லாம் எப்படி இருக்கும்னு தெரியலையே. ஒருவேளை அப்படி இருக்குமோ. ஒருவேளை இப்படி இருக்குமோ…. அட ராமா என்ன பொலம்ப வெச்சுட்டானே(அண்ணாத்த உங்களை இல்ல)

  44. @கற்றது கையளவு ,
    நமக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் , பல தரப்பட்ட மக்களை சந்திக்கிறோம் . உண்மைகளை தெரிந்து கொள்கிறோம் . தென்றல் போன்றவர்களுக்கு மூளை சலவை செய்யும் புத்தகங்கள் தான் உலகத்தை புரிந்து கொள்ள கிடைக்கும் ஒரே வழி. அவரை அந்த கற்பனை உலகத்தில் விட்டுவிடுங்கள் .

    • Just because some people have chance to go abroad,they paint a greener picture about capitalist countries and bleak picture about communist countries.To Raman,queue in front of Venezuelan shops is the big news.He will believe only NewYork Times but not our own “The Hindu”.Still I quote below excerpts from an article entitled “In Davos,worrying about inequality”by Seumas Milne which appeared in The Hindu dated 23-1-2015.”Just 80 individuals now have the same net wealth as 3.5 billion people-half the entire global population.Last year,the best-off one percent owned 48 percent of the world”s wealth,up from 44 percent five years ago.On current trends,the richest one percent will have pocketed more than the other 99 percent put together next year.The 0.1 percent has been doing even better,quadrupling their share of U.S income since the 1980s”

      “This is` wealth grab on a qrotesque scale.For 30 years,under the rule of “market fundamentalism”inequality in income and wealth has ballooned,both between and within the large majority of countries.In Africa,the absolute number living on less than $2 a day has doubled since 1981.”

      “In most of the world,labour”s share of national income has fallen continuously and wages have stagnated under this regime of privatisation,deregulation and low taxes on the rich.”

      “Escalating inequality has also been a crucial factor in the economic crisis of the past seven years,squeezing demand and fuelling the credit boom.The British economy would have been almost 10 percent larger if inequality hadn”t mushrommed.”

      “The BIG EXCEPTION to the tide of inequality in recent years has been Latin America.Progressive governments across the region turned their back on a disastrous economic model,took back resources from corporate control and slashed inequality.The numbers living on less than $2 a day have fallen from 108 million to 53 million in little over a decade.These are result of political and economic decisions.”

      Paditthavan poy sonnaal aiyo yendru poyviduvaan ganavaangale,maravaadheer.

      • சூரியன்,

        தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். வெளிநாடு சென்றதால் இக்கரைக்கு அக்கரை பச்சை என்று கூறவில்லை. வெளிநாட்டில் இருந்து வரும் எல்லாம் உசத்தி, உள்நாட்டு சரக்கு சரியில்லை என்னும் மேனாமினுக்கித்தனம் உள்ளவனில்லை நான். அக்கம் பக்கம் சுற்றி பாருங்கள், தீயவைகளை தவிர்த்து நல்ல விடயங்களை மட்டும் பின்பற்றுவதில் தவறில்லை.

        //“The BIG EXCEPTION to the tide of inequality in recent years has been Latin America.Progressive governments across the region turned their back on a disastrous economic model,took back resources from corporate control and slashed inequality.The numbers living on less than $2 a day have fallen from 108 million to 53 million in little over a decade.These are result of political and economic decisions.”//

        தங்களின் மேற்கண்ட கருத்தை சற்று விரிவாக விளக்கவும்.

        100 சதவீதம் முதலாளித்துவம் தீங்கிழைக்கும். இல்லை என்று மறுக்கவில்லை.
        அதே சமயம் 100 சதவீதம் கம்மியுநிசமும் மக்களை நிம்மதியாக வாழ விடவில்லையே.
        அப்படி மக்கள் கம்மியுநிசத்தினால் அவ்வளவு நன்மைகள் அடைந்திருந்தார்கள் என்றால் ஏன் அதனை கைவிடப்போகிறார்கள்? யோசித்து பாருங்கள்.

        இந்தியாவில் தற்போது இருக்கும் தேர்தல் முறை ஜனநாயகம் 100 சதவீதம் அப்பழுக்கற்றது என்று நான் சொல்லவில்லை. அதில் குறைகள் உள்ளன. அதனை எப்படி சரி செய்வது என்று தங்களை போலவே நானும் யோசித்துக்கொண்டு தான் இருக்கிறேன். அதே சமயம் கம்மியுநிசத்திலும் சில குறைகள் உள்ளன. நான் ஜனநாயகத்தில் குறைகள் உள்ளதை நேர்மையாக ஒத்துக்கொள்கிறேன். ஆனால் தென்றல் போன்றவர்கள் கண்ணை மூடிக்கொண்டு கம்மியுநிசத்தில் குறையே இல்லை என்று மார் தட்டுகிறார்கள்.

        பணக்காரன், ஏழை விகிதத்தை குறைப்பதற்கு ஆக்கபூர்வமாக என்ன வழி? யோசிக்கலாம்.

        • People in Latin American socialist countries have not abandoned communism.By nationalizing oil company,Chaves has reduced inequality in Venezuela.In return for oil,he got medical facilities from Cuba,another communist country by bringing Cuban doctors.

          • அடேங்கப்பா! தென் அமெரிக்கா நாடுகளில் ஏழை பணக்காரன் விகிதாசாரத்தை சமன் படுத்தி விட்டார்கள் என்கின்றது செய்தி .

            உண்மை என்ன ? பணக்காரர்களையும் ஏழையாக்கி கூப்பன் கடை வரிசையில் நிற்க வைத்து விட்டது . இதை பாலீஸ் போட்டு செய்தி போடுகிறார்கள் .ஊரில் எல்லோரும் அரசாங்கத்திடம் பிச்சை எடுக்கும் பிச்சைகாரர்கள் என்று நேரடியாக சொல்லாமல் , எங்க நாட்டில் எல்லோரும் சமம் என்று பன்றிக்கு லிப்ஸ்டிக் போட்டு அழகாகுகிரார்கள்

            சூரியன் அவர்களை ஒரு வருடம் அந்த நரகத்தில் வாழவைத்தால் , அப்புறம் மஜீத் போல ஓட்டம் எடுப்பார்.காலியிலே நாலு மணிக்கு எந்திர்சு ரேசன் கடை க்யூவில் ஒருவர் , ரேசன் பார்மசி கடையில் ஒருவர் என்று க்யூவிலே நின்று வாழ்கையை தொலைத்தால் தான் புரியும் .
            காற்பறேடுகள் கொடுத்த கம்யூட்டரில் , காற்பறேட்டுகள் கொடுக்கும் இண்டர்நெட்டிலும் அமர்ந்து கதைத்து கொண்டு இருந்தால் புரியாது .

            பெட்ட்ரோளை வித்து தின்பதற்கு ஒரு சமுதாயத்திற்கு என்ன அறிவு தேவை படுகிறது ?
            புதிய பொருள் படைத்தது உலகின் மூன்றாம் பெரிய பொருளாதார நாடாக ஜப்பான் இருக்கிறது, ஆயில் விளையும் குறைஞ்சு போச்சு , கூடிய சீக்கிரம் பொலிவார் திவால் என்று செய்தி வரும் . அப்போ சோசியலிசம் போதும் என்று மக்கள் புரட்சி செய்வார்கள் . அதையும் நாம் காணத்தான் போகிறோம் . என்ன தென்றல் அதை அமெரிக்க சதி என்று கற்பனையில் கடம் வாசிப்பார் .

            சாவேஸ் வெட்டி வீரம் பேசி ,மருத்துவம் பார்க்க முடியாமல் உயிர் விட்டதுதான் மிச்சம் .
            நாளைக்கு சூரியனுக்கு மருத்துவ கருவிகள் வேண்டும் என்றால் , மேடு இன் க்யூபா பார்த்து வாங்குவாரா ?

            எனக்கு என்ன கவலை என்றால் , பெட்ரோல் வித்து காசு வருகின்ற நாட்டையே போண்டி ஆக்கிவிட்டது சோசியலிசம் . இந்தியாவை சொமாலியாவாக மாற்றிவிடும் …

            • One requires patriotism and people”s welfare in mind to retain control over the resources of one”s own country.Raman will dream about doomsday for socialist countries.Let him dream.If only Chavez has gone to any western country for his treatment,he would have died of poisoning instead of his disease.We have heard about 30 assassination attempts against Fidal Castro and the poisoning of Yasar Arafat.Let Raman wait for the results to be declared for the elections in Greece.Even without following socialism,how that country”s economy shrunk by 25% in recent years?India does not require socialism to become Somalia.

              • Greece …

                http://www.breitbart.com/big-government/2015/01/26/greece-hits-the-bottom-of-the-socialist-death-spiral/
                //
                The same moment is passing in other nations right now, most definitely including the United States. Socialists always tell everyone to stop worrying as long as they can keep borrowing and printing enough money to keep their schemes floating. They tell us not to worry about bankruptcy until after it happens… but as Greece illustrates, it’s far too late by then. When the final stage of socialist cancer arrives, it has weakened the population so much that they have no way to fight. They can only collapse in their national deathbed and demand fresh infusions of cash from everyone who still has a dollar to lose.

                “The problem with socialism is that you eventually run out of other people’s money,” Margaret Thatcher famously observed//

                Remember Your hero ,Chavez was buttering sheikhs and Russian oligarchs to increase the price of oil ,so that he gets other(yours too) people money, to run the country. If he was pro poor, why should he wanted to increase the price oil and make poor people life miserable? Why was he greedy to make more money like capitalist ?

                • The people of Venezeula were very happy with Chavez and that’s why they have elected his disciple as the next President.The poor were suffering under Chavez etc are the mis-propaganda of the western countries.The agitations against the govt is engineered by outsiders and ironically the well-to-do greedy people are creating unnecessary problem for the govt.The areas inhabited by poor are peaceful.The article quoted by Raman chides the Obama style debt fueled dependency politics.Let him explain why the mighty capitalist country like USA adopts debt fueled dependency politics

                  • Socialism makes one dependent on Govt. Once people become dependent on the govt and other growth avenues are closed for them, they will live in fear that their subsidies may be removed.
                    In Tamilnadu people voted for JJ in parliament election, explains this phenomena.

                    Socialist govts need natural resources to sustain the freebies. TN survives by selling liquor.
                    Once the subsidies goes out of control, bankruptcy is inevitable.

                    Yes, America is under huge debt now due to oil greed and bankers greed. But they have the capacity to innovate and produce new product and eventually will find a way to come out.

                    For Venezula only way is to prey oil prices to go up or try to create a cartel like chavez did.

          • Sooriyan,

            There are 26 Latin American Countries. Why talk about only Venezeula and Cuba and give a picture as all latin american countries are the same. To my knowledge, Venezuela is neither a democratic country nor a pure communist country. It is not even a socialist country, Right now it is under a deep problem.

            Please refer the below link:
            http://en.wikipedia.org/wiki/2014_Venezuelan_protests

            Do you think the rising Inflation, Unemployment, Violence is a good sign for Venezeula?
            Adding to that, the arrest of opposition leaders all and sending them behind jail bars.
            Press freedom is crushed. Media is deeply scrutinized. Does this ring some alarm bells?

            In terms of corruption, it ranks 164 out of 177. (177 being Most corrupt and 1 being least corrupt). Too much drug trafficking and cocaine influence is spoiling the nation there.

            In my opinion, On a socialistic view point, We are better than Venezeula. Atleast we have freedom to criticize the government and are free to express our views against it.

            I would suggest you can read Books and internet material other than those that preach communism.
            Communism narrows our viewpoint.

            Sooriyan, I have been with you and agreed with you in several discussion threads in vinavu, but in this one, I would like to differ from your opinion.

            • “Rising inflation,unemployment,violence and corruption in Venezuela”.All are the mis-propaganda of America and other western countries.How could Evo Moralis could win for the third time in Bolivia if Bolivians have abandoned socialism?Moralis driven away American corporates and multinationals from Bolivia in 2005.He brought the end to market economy and neo-liberalism.Bolivian people struggled for water and gas.Moralis brought new constitution in 2009.Government took control of industries.GDP got doubled between 2006 and 2012.Wealth in the hands of top 20% got reduced and the share of wealth in the bottom 20% got increased.UNDP has appreciated the growth of Bolivia.Bolivia has got the lowest inflation rate among Latin American countries.Natural gas was nationalized and growth doubled.Information and Technology,tin,zinc in the hands of Italian companies were nationalized.Lot of people welfare schemes were undertaken.Medical facilities for pregnant ladies,higher allocation for education,educational facilities with the assistance from Cuba and Venezeula were provided.There was 4 fold increase in the allocation of pattas for small farmers.Women empowerment paved way for 28% participation in parliament and 47%in the senate and half of the ministers are ladies (three are tribals)Moralis himself is the first President from a tribal community.Even without reducing allocation for any of the welfare schemes,Bolivia has more savings among its people.IMF has appreciated this feat.In the recent President election also,Moralis has defeated his rival who was propped by America.Still sizeable industries are with capitalists.The media is controlled by right wing capitalists.But,Bolivians never believed the wrong propaganda of the media.There is unity among Cuba,Venezeula,Brazil,Argentina,Uruguve and Chile.Moralis says that he was inspired by Castro,Chavez and Che Quvera.Nom Samsky,the great political thinker has said,”Bolivia,by its example has challenged the capitalist world”-Exerpts from an article by Dr.Vasanthi Devi,Former VC,Annai Theresa University in Tamil Hindu dated 21-10-14.

              • Sooriyan,

                This is exactly my point.
                Evo Moralis is e Democratically elected President who had the Mass support of the general public. I dont have any problems with the socialistic ideologies as long as the government is choosen by the public.

                If nationalizing the hydro carbon fuels is helpful for the country, then it should be done.

                Now, if Evo Moralis continues to do a good job of governing, he will be elected one more time. If he is not, then the public have the power to reinstate a new president by elections.

                I am perfectly ok with this system. No problems.

                If Bolivia can successfully build a democratic model, why can’t we do it?
                Our friend Thendral will say it is not possible.

                • The previous President of Bolivia Mr.Gonzalo Sánchez de Lozada is thrown out of power and Mr.Evo Morales is sworn in as the new President by a democratic system with the same route which Thendral mentions as தேர்தல் பாதை திருடர் பாதை.

                  This is proof that a good government CAN BE ELECTED by the general public.
                  Hope the same can happen to India, where we elect the right candidates so govern us.

                  • தேர்தல் பாதை திருடர் பாதை; புரட்சி ஒன்றே மக்களின் பாதை என்பதை ஈக்வெடாரை எடுத்துக்கொண்டும் விளக்கலாம். அதற்கு முன்பு க.கையின் இரட்டை நிலைப்பாட்டை பார்த்துவிடுவோம்.

                    முதலாளித்துவத்திற்கு பங்கம் வராது என்று நினைக்கிற கற்றதுகையளவு போன்றவர்கள் தனது கம்பெனியிலேயே தொழிற்சங்கத் தேர்தலை கட்டியமைக்க முன்வராதவர் அதற்காக ஒரு பதிலையும் உதிர்க்க துப்பில்லாதவர் ஈக்வெடாரை எடுத்துக்கொண்டு சனநாயகத் தேர்தல் என்பது முழுக்கவும் முதலைக்கண்ணீரே. இதுபோன்ற வெற்றுப்பாசாங்குகளை வரலாறு முழுவதும் பார்க்க முடியும்.

                    இருகேள்விகளை க.கைமுன் வைத்துவிடுவோம்.

                    1. ஈக்குவொடரில் உள்ள குறைந்தபட்ச தொழிலாளர் நலச்சட்டங்களை தனது கம்பெனியில் இந்த முதலாளி அமல்படுத்தும் தேதியை அறிவிப்பது எப்பொழுது? அது குறித்த வெள்ளை அறிக்கையை வினவு வாசகர்கள் முன்பாக சமர்பிக்க வேண்டும்.

                    2. ஏழுபேர் சேர்ந்தால் தொழிற்சங்கம் அமைக்கிற உரிமையும் தொழிலாளிகளுக்கு உள்ளது. இதை ஆதரிக்கிற க.கை எப்பொழுது தன் கம்பெனியில் தொழிற்சங்கத்தைக் கட்டியமைக்கிற போராடப் போகிறார் என்பதையும் அறிவிக்க வேண்டும்.

                    பதிலை எழுதுங்கள். எப்படி தேர்தல் பாதை திருடர் பாதை என்பதை விளக்குகிறேன்.

        • கற்றது கையளவு,

          உங்க யோசனைப்படியே , இந்த ஜனநாயகத்தினுடைய குறைகளை சரி செய்ய எவ்வளவு காலம் எடுக்கும்? அதற்க்கு தாங்கள் ஏதாவது timeline, deadline வைத்து இருக்கின்றீர்களா? விரைவாக தங்களது செயல் திட்டங்களையும், ஒவ்வொரு திட்டங்களையும் எப்படி எவ்வளவு நேரத்தில் செயல்படுத்துவது என்பதையும் சொல்லி விடுங்கள்.ஏனெனில் தாங்கள் அப்படி தனிமையில் யோசித்துக் கொண்டு இருக்கையில் தங்களது மூளையை கூட கழட்டி விற்று விடுவார்கள் இந்த முதலாளி பயல்கள்.

          • நாமும் இதைப் பற்றி பலகாலமா விவாத்தித்து கொண்டு தான் இருக்கிறோம். இந்த தோழர்களே மோசம். ஒரு மண்ணும் தெரியல. இவ்ளோ நாளு யோசிச்சு இருப்பீங்களே. கண்டிப்பாக ஒரு நல்லத் திட்டம் தீட்டி இருப்பீங்க. அதற்கு ஒரு roadmap,timeline கூட போட்டு இருப்பீங்கன்னு நினைக்கிறேன். இதோ பாருப்பா தென்றலு அண்ணன் இப்போ ஒன்னொன்னா புட்டு புட்டு வைப்பாரு நாம அப்படியே ஏதாவது லேட்டஸ்ட் டெக்னாலஜி வெச்சு பதிவு செஞ்சுடணும். ஏன்னா காலம் கண் போன்றது நேரம் பொன் போன்றது.

            • சூரியன், சிவப்பு, தென்றல் அவர்களே,

              முடியாத விடயம் எதையும் நான் சொல்லவில்லை.
              மக்கள் ஆதரவு பெற்றால் தான் எந்த புரட்சியின் வெற்றி நிலைக்கும் என்று நான் சொன்னதில் என்ன தவறு.

              காவாலக்குடியில் மணல் குவாரியை மூடுவதற்கு மக்கள் ஆதரவு எப்படி கிட்டியது?
              அந்த மணல் குவாரியினால் தங்களின் வாழ்வாதாரம் போய்விடும் என்றதாலும், அதனை நிறுத்தினால் தங்களுக்கு நன்மை என்று கருதியதாலும் தானே.

              இதே போன்று ஒவ்வொரு சிறிய, பெரிய பிரச்சினைகளுக்கும் நாம் ஒரு தெளிவான தீர்வு கிடைக்க வழி செய்தோமானால் தானாக மக்கள் உங்களுக்கு ஆதரவு தருவார்கள்.

              தெருவிளக்கு, குடிநீர் தேவை, சாக்கடை அடைப்பு, இவை போன்றவற்றிற்கு மக்களுக்கு ஆட்சியில் இருந்தால் தான் சேவை செய்ய வேண்டும் என்றில்லாமல் பதவி இல்லாமலும் செய்யலாம். (தண்ணீர் தண்ணீர் நாடகம் போல). ஒரு கட்டத்தில் மக்கள் உணர்வார்கள்.

              பின் அடுத்து பொருட்களின் உற்பத்தி. கூட்டுறவு முறையில் சிறு சிறு தொழிற்சாலைகளை உருவாக்கலாம். சரியான இலாபத்தில், குறைந்த செலவோடு உற்பத்தி செய்தால் பொருட்களின் விலையும் குறைவாக இருக்கும். ஒவ்வொரு பொருளாக, ஒவ்வொரு சேவையாக விரிவாக்கம் செய்யலாம்.

              தேவை இல்லாத பொருட்கள் என்று வீணடிக்கப்படும் எத்தனையோ பொருட்களை மறு உபயோகப்படுத்தலாம். மக்களிடம் தேவை இல்லாத பொருட்களை குப்பையில் போடுவதை விட அதை வேறு எவ்வகையில் உபயோகப்படுத்தலாம் என்று யோசிக்கலாம்.

              • கற்றது கையளவு,

                மக்களின் ஆதரவு இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை என்று கூறும் தாங்கள், எங்கே தோழர்கள் மக்களின் ஆதரவு இல்லாமலே சமூக மாற்றம் சாத்தியம் என்று கூறினார்கள் என்று கூறினால் நலம்.

                இங்கே புரட்சிகரமான சமூக மாற்றம் என்று முழக்கம் இடும் தோழர்கள் ,இங்கே தேவைப்படும் சீர்திருத்தங்களுடனோ, போரட்டங்களுடனோ, சட்டரீதியிலான அணுகுமுறைகளில் இருந்தோ, வேலை நிறுத்தங்களில் மூலம் பெறப்படும் சிற்சில உரிமைகளில் இருந்தோ, தொழிற்சங்கங்கள் கட்டுவதில் இருந்தோ , சாதி மத பிரச்சினைகளுக்கு எதிராக போராடுவதில் இருந்தோ தம்மை துண்டித்துக் கொள்வதில்லை மாறாக, இது போன்ற சீர்திருத்தங்களுக்காக மக்களை அணிதிரட்டி போராடுவதன் ஊடாக தமது இறுதி இலக்கான இந்த சுரண்டல் முறையில் அமைந்த சமூகத்தை மாற்றுவதற்கு போராடுகிறார்கள்.

                சான்றாக, இங்கே மணல் கொள்ளைக்கு எதிராக மக்கள் ஒன்றுபட்டு ஓரணியாக நின்று போராடி அதை தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். இதை வேறொரு கோணத்தில் சொல்வதானால் அவர்கள் தாமாகவே அப்படி அணி திரளவில்லை அதை இந்த புரட்சிகர அமைப்புகள் தாம் செய்கின்றனர்.

                இது போன்ற மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு அந்த மக்களை அணித் திரட்டி போராடுவதன் மூலம் அம்மக்களின் ஆதரவை பெரும் புரட்சிகர சக்திகள் வெளிப்படையாக நிலவும் இந்த சுரண்டல் அடிப்படையிலான சமூக அமைப்பு அடிப்படையிலேயே மக்கள் விரோதமானது என்றும் இது ஒரு போலி ஜனநாயகம் என்றும் நமக்கு தேவை உண்மையான ஜனநாயகம் என்று ஒளிவு மறைவு இல்லாமல் அதாவது புரட்சிகரமான போராட்ட வடிவங்கள் தாம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வென்றும் முழக்கம் இடுகின்றனர் மாறாக தாங்கள் புரிந்து கொள்வது போல ஜனநாயகம் வேறு சோசலிசம் வேறு என்பதாக அல்ல.

                சுரண்டலுக்கு ஆட்படும் மக்கள், தமது அடிப்படை தேவைகளுக்காக, தாம் உற்பத்தி செய்த பொருட்களை பயன்படுத்துவதில் இருந்து உரிமை கோர மறுக்கபடுவதால் குறிப்பாக சொல்வதானால் அவர்களின் வாழ்விற்கும் சாவிற்கும் இடையே நடக்கும் இந்த போராட்டம் ஒரு வர்க்க போராட்டமாக கூர்மையடைகிறது. உண்மையில் அம்மக்களுக்கு இது ஒரு வர்க்க போராட்டம் என்பதோ நமக்குத் தேவை ஒரு பொதுவுடைமை சமுதாயம் என்றோ தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது. தாமும்,தமது இயற்க்கை வளங்களும் சுரண்டபடுகின்றோம் , கொல்லையடிக்கபடுகின்றோம் என்று.

                நாம் விவாதிப்பது போல அல்ல மாறாக, எந்த ஒரு timeline roadmap உடனோ மக்கள் போராட்டத்தை ஆரம்பிப்பதில்லை. ஏனெனில், யோசிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ரணகளம் தான். நம்மை போல ஆற அமர இணையத்தில் விவாதித்து யோசித்து, feedback பார்த்து அல்ல. உண்மையில் நடுநிலைவாதிகள்,ஜனநாயவாதிகள்,தேசியவாதிகள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் அறிவுஜீவிகள் இந்த மணல் போராட்டத்திற்கு என்ன செய்தார்கள். இன்னொரு உண்மை என்னவேனில், பெரும்பான்மையான இணையவாசிகளுக்கு மணல் கொள்ளையைப் பற்றி ஒன்றுமே தெரிவதில்லை.

                உங்களை போனறவர்கள் மக்களைப் பார்த்து சீர்திருத்தம் பேசிக் கொண்டு இருக்கையில் அதாவது, பொருட்களின் மறுபயன்பாடு,பொருட்களை வீணடித்தல்,தண்ணீர் சிக்கனம் , சாக்கடையில் அடைப்பு நீக்கம் என்று பிரசினைகளை எல்லாம் மக்கள் தலையில் சுமத்தும் பொது , மக்களின் வாழ்வாதரமான இயற்க்கை வளங்கள் கட்டுக்கடங்காத வகையில் வீனடிக்கபடுகின்றன.மனித வளமும் அதில் அடங்கும்.இங்கே ஆற்று நீரை தனியார் முதலாளிகளிடம் விற்காமல் இருந்தால் தண்ணீர் சிக்கனம் பற்றி உபதேசம் செய்ய தேவை இருக்குமா? ஆறே சாக்கடை ஆகும் பொது சாக்கடை அடைப்பைப் பற்றி பேசத் தான் முடியுமா? மணல் கொள்ளை நடக்காமல் இருந்தால், இங்கே கட்டிடங்கள் கட்டப்பட்டு வீணடிக்கப்படுமா? மின்சாரத்தை தனியார் நிறுவனங்களுக்கு குறைந்தக் கட்டணங்களுக்கு தாரை வார்த்து விட்டு , மின்சாரம் சேமிப்பதைப் பற்றி ஊருக்கு உபதேசம் செய்து என்ன பயன்? அப்புறம் பல்லுயிர்களின் உயிராதாரத்தை தனிப்பட்ட முதலாளிகளுக்குத் தாரை வார்த்து விட்டு தொழில் முனைவது பற்றி கதை தான் அளக்க முடியுமா?

                மோடிக்கு கூட தான் மக்கள் பெராதரவுத் தந்தார்கள் என ஊடகம் முழுதும் ஆர்பரித்தார்கள். அதே ஊடகங்கள் இன்று தலைகீழ் மாற்றமாய் அவரை கிண்டல் செய்கின்றன, தனியார்மயத்தின் கோரத்தை எழுதத் தலைபடுகின்றன. நடுத்தர மக்களில் ஒரு சாரார் முன்பு அவரை ஆதரித்தவர்கள் கூட குறிப்பாக டி.சி.எஸ் ஊழியர்களிடம் பேசியதில் தனியார்மயத்தின் கோரத்தை இன்று புரிந்து கொண்டதாய் கூறினர். தான் பாதிக்கப்படும் பொது , தன்னை சார்ந்த மக்கள் பாதிக்கப்படும் போது இவர்கள் தம்மை சுற்றியும் மக்கள் பாதிக்கபடுவதை உணர்கிறார்கள் வர்க்க உணர்வு பெறுகிறார்கள்.யூனியானாய் அணித் திரள முன்வருகிறார்கள். இந்த உணர்வை பெற அவர்களிடம் timeline ஏதாவது இருந்ததா என்று நாம் கேட்கத் தான் முடியுமா? இங்கே மக்கள் ஆதரவு என்பது நிபந்தனைக்கு உட்பட்டு நிலவும் சமூக பொருளாதார அமைப்பிற்கு உட்பட்டு தான் ஏற்படுகிறதோ ஒழிய நிபந்தனையற்ற ஆதரவு,பேராதரவு என்று ஒன்றுமில்லை.
                மேலும் மேலும் மக்கள் நெருக்கடிக்கு ஆட்படும் போது இந்த ஆதரவு எனும் பிம்பம் கானல் நீராகிறது. பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டு சச்சின் 1௦௦ அடிக்கும் போது மைதானத்தில் மக்கள் ஆர்பரித்து சத்தம் போடுவார்களே அது போலல்ல இது.

                பெப்சி,கோக் ஸ்டைலாக குடிப்பவர்களுக்கு வேண்டுமென்றால் timeline,roadmap தேவைப் படலாம். சாக்கடை கலந்த குடிநீர் கிடைப்பவர்களுக்கு அதுத் தேவையில்லை.தனியார் பள்ளிகளில் தன் பிள்ளைகளை சேர்த்து தனது பிள்ளைகள் நன்றாக இருந்தால் போதும் என்று எண்ணும் பெற்றோர்கள் பின்னர் கடனில் உழலும் போதும், புறச் சூழல் அழுத்தும் போதும் பெற்ற உணர்வில் தம்மை மாய்த்து கொள்கிறார்கள். தனியார்மயம் மக்களை தனித்தனியாக பிரித்து தீர்வுகளையும் தனித்தனியாக சொல்கிறது. ஆனால், அதை எதிர்கொள்ள புரட்சிகர சக்திகள் மக்களை பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களாய் அணித் திரள அறைகூவல் விடுகின்றன..

                நிலவும் புறச்சூழலையும்,வர்க்கப் போராட்டங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு உழைக்கும் மக்களை அணிதிரட்டி சுரண்டும் வர்க்கத்திற்கு எதிராக போராட செய்வது தான் புரட்சிகர அமைப்புகள் முன் இருக்கும் தலையாயப் பணியாகும்.

                ————————————–
                இந்த விவாதங்களை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். மீண்டும் வேறொரு கட்டுரையில் நாம் சந்திக்கலாம்.

                நன்றி.

          • Capitalism runs greed as its fuel . Govt has to keep its greed in check with its regulation and control over natural resources.

            People have to elect right people for the govt. Currently they are voting based on the freebies. India is in learning phase of democracy . It is trying all possibilities.
            The same people chose Kamaraj and MGR. people make mistakes, but over the period , people will have a collective experience and will learn to make better choices.

            we are slowly getting there.

            Just for fun:-
            Caste liberation AD 2500
            Religion liberation AD 2900
            Perfect democracy AD3000

            I wish above linear progress for humanity.However

            In the past 10000 year history , civilizations will reach its peak and will collapse due its own weight. Now American empire is taking humanity to next level.If America collapses due its own debt , the progress will be delayed and we will move into dark ages.

            If anyone have time ,Please watch “Mankind:the story of all of us” video series.
            They have touched 10000 year history

            • ராமன் அவர்களே,

              சில சமயம் யோசிப்பேன். எது நம்மை பிரிக்கிறது. எது நம்மை சேர்க்கிறது.

              இப்போது மதம், இனம், மொழி, சாதி, வர்க்கம் என்று பல்வேறு வழிகளில் பிரிந்திருக்கிறோம்.
              ஆனால் ஒரு பேரழிவு என்று வரும்போது இதெல்லாம் காணாமல் போய் விடுகிறதல்லவா?

              உதாரணத்திற்கு ஒரு நகரில் ஒவ்வொரு பகுதியிலும் மதம், இனம், மொழி, சாதி, வர்க்கம் என்று சண்டையிட்டுகொண்டிருக்கும் போது ஒரு சுனாமி வந்து அந்த ஊரின் பெரும்பகுதியை அழிக்கும் நேரத்தில் இந்த பிரிவினைகள் நம் மனதில் அச்சமயம் தோன்றுமா?

              எது உண்மையில் நமக்கு முக்கியம் என்பது பேரழிவு காலத்தில் தான் மனிதனுக்கு விளங்குகிறது. அதுவரை சண்டைகள் ஓயாது.

              தூசியிலிருந்து உருவானோம். தூசியாக மீண்டும் ஆவோம்.
              ஆனால் இடையில் நாம் ஆடும் ஆட்டம் இருக்கிறதே, அடடடா…..

          • கற்றது கையளவு,

            சரி எங்களால் நீங்க கேக்குற மாதிரி ஒரு திட்டமோ,நேரமோ வரையறுத்து சொல்ல முடியல என்றே வைத்து கொள்வோம். சரி, நாம், தாங்கள் சொல்லியது போல சீர்திருத்தங்கள், நமது சட்டத்தின் ஓட்டை ஓடிசல்கள், தூசி துப்பட்டக்களை சரி செய்து உண்மையான ஜனநாயகத்தை அடைய முயற்சி செய்யலாம்.

            அதற்க்கு,
            1.தாங்கள் தொலைநோக்குள்ள காலம் வரையறுக்கப்பட்ட திட்டங்களை சொல்ல வேண்டும் அதாவது timeline,roadmap,target.
            2.அதற்க்கு மக்கள் பேராதரவு எப்படி பெறுவீர்கள் என்பதை தெளிவாக கூற வேண்டும்.
            3.இரண்டையும் சேர்த்து இலக்கை எப்படி அடைவீர்கள்?

            இதை இப்படி சொல்லலாம்,

            இந்திய மாணவர்களுக்கு குறிப்பாக ஏழை எளிய மாணவர்களுக்கு நல்லத் தரமான கல்வியை அளிக்க கல்வித் திரையில் பணியாற்றிய மூத்த அதிகாரிகள் அளித்த பரிந்துரைகள் சட்டப் புத்தகங்களாக தூங்குகின்றன பல ஆண்டுகளாக. இந்த பிரச்னையை சரி செய்ய அதாவது அந்த சட்டங்களை பள்ளிகளில் எப்படி செயல்படுத்த முடியும் என்பதை மேற்கண்ட கேள்விகளுக்குள் பொருத்தி விளக்குக.

    • \\நமக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் , பல தரப்பட்ட மக்களை சந்திக்கிறோம் . உண்மைகளை தெரிந்து கொள்கிறோம் . தென்றல் போன்றவர்களுக்கு மூளை சலவை செய்யும் புத்தகங்கள் தான் உலகத்தை புரிந்து கொள்ள கிடைக்கும் ஒரே வழி. அவரை அந்த கற்பனை உலகத்தில் விட்டுவிடுங்கள் .\\

      ஏதோ கிராமத்தான் நானு. எனக்குப் புரியற வகையில உங்களைப்போன்றவர்களின் பிழைப்பை பெருமாள் முருகனும் அழகாகச் சொல்லியிருக்கிறாரு இப்படி;

      “நாயிக்கு என்ன வேல?. நெவுலுக் கண்ட எடத்துல குழி பறிச்சுப் படுத்துக் கெடக்கும். இல்லீனாக் காடுமேடுன்னு ஓடிச் சலிக்கும். எங்க போனா என்ன? ராத்திரி பட்டிச்சோத்துக்குக் கூப்புடும் போது ஓடியாந்திரும்,”

      சரிதானுங்களே எசமான்?

      • சற்று விளக்கமாக சொல்லுங்கள். என்ன சொல்ல வருகிறீர்கள்?
        யாரும் வெளிநாடு செள்ளக்கூடாதேன்றா? வெளியுலகில் என்ன நடக்கிறதென்று தெரிந்து கொள்ளக்கூடாதா? கண்ணை மூடிக்கொண்டு நாம் காணும் கனவு உண்மை என்று நம்பிக்கொண்டு இருக்க வேண்டுமா?
        //“நாயிக்கு என்ன வேல?. நெவுலுக் கண்ட எடத்துல குழி பறிச்சுப் படுத்துக் கெடக்கும். இல்லீனாக் காடுமேடுன்னு ஓடிச் சலிக்கும். எங்க போனா என்ன? ராத்திரி பட்டிச்சோத்துக்குக் கூப்புடும் போது ஓடியாந்திரும்,”//

        தென்றலின் வாதங்களில் வர வர சரக்கு தீர்ந்து போய் வெறும் காற்று தான் வருகிறது.

    • அண்ணா மன்னிச்சுருங்…நீங்க உலகம் சுத்தும் வாலிபன்னு தென்றலுக்குத் தெரியாது போல.

      • சிவப்பு,

        உலகில் எங்கே சுற்றினாலும் வேர் இங்கு தான் இருக்கிறது.

        • சிவப்பு அவர்களே,

          ஒரு கம்மியுனிச அமைப்பில் சோம்பேறித்தனத்தை எப்படி அணுகுவீர்கள்?
          ஒரு தொழிற்சாலையில் அனைவருக்கும் ஒரே சம்பளம் என்ற நிலையில், நாம் ஏன் அதிகமாக உழைக்க வேண்டும் என்றோ, அல்லது ஐ.சி.எப். போல கார்டு அடித்து வீட்டில் இருந்தாலோ அதனை கம்மியுனிசம் எப்படி அணுகும்?

          இன்று முதல் கம்மியுனிசம் வந்து விட்டது. அதனால் இன்று முதல் நீங்கள் அனைவரும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டால் உடனே அனைவரும் சுறுசுறுப்பாகி விடுவார்களா?

          • \\ ஒரு கம்மியுனிச அமைப்பில் சோம்பேறித்தனத்தை எப்படி அணுகுவீர்கள்?
            ஒரு தொழிற்சாலையில் அனைவருக்கும் ஒரே சம்பளம் என்ற நிலையில், நாம் ஏன் அதிகமாக உழைக்க வேண்டும் என்றோ, அல்லது ஐ.சி.எப். போல கார்டு அடித்து வீட்டில் இருந்தாலோ அதனை கம்மியுனிசம் எப்படி அணுகும்?\\

            கற்றது கையளவு அவர்களே! கம்யுனிச சமுதாயத்தில் உழைப்பாளிகள் சுறுசுறுப்பாக இயங்குவார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியாத வாழைப்பழ சோம்பேறியாக இருக்கிறீர்கள். சோம்பேறியாக இருப்பது கூட உங்கள் உரிமை என்று விட்டுவிடலாம். ஆனால் இதைப்போன்ற அவதூறு எழுதுபவர்களின் உடல் சாக்கடையால் தான் ஓட வேண்டும். அதைக் கண்டிப்பதோடு உங்கள் வாதம் ஏன் அவதூறு என்பதைச் சொல்ல விழைகிறேன்.

            இதுவரை முதலாளித்துவம் உழைப்பாளிகளிடமிருந்து உழைப்புச் சாதனங்களை அபகரித்துகொண்டிருக்கிறது. உழைப்பைச் சுரண்டுகிறது. இதுகாரும் முதலாளிகளின் கைவசம் இருக்கிற உழைப்புச் சாதனங்களை பாட்டாளிகளுக்கு சொந்தமாக்குவது சோசலிசத்தின் முதன்மையான நோக்கம். இதைப் பற்றி பேசாமலேயே சம்பளம் என்று மட்டும் பேசுவது பித்தலாட்டமில்லையா? அதாவது ஒரு கம்பெனியின் ஒட்டுமொத்த உற்பத்தி சாதனங்களும் சான்றாக டிசிஎஸ்,ஐசிஎப்,பெல் தொழிலாளிகளின் கைவசம் இருக்கட்டும். உற்பத்தியையும் இலாபத்தையும் நட்டத்தையும் அவர்களே தீர்மானிக்கட்டும். இதைத் தாங்கள் வரவேற்பீர்கள் எனில் பிறகு எதற்கு இதுபோன்ற வெற்று அவதூறுகள்?

            தொழிலாளிகளுக்கு இல்லாத நட்டம் உற்பத்தி இலாபம் குறித்த கரிசனம் உங்களுக்கு மட்டும் இருப்பதாக நடிப்பது ஏன்? வெளிநாட்டு அனுபவம் இருப்பதாக சில்லறைப் பிரச்சாரம் செய்த மேட்டிமைத்தனம் தான் இங்கும் உற்பத்தி பற்றியும் இலாபம் பற்றியும் முதலாளிக்குத் தெரிந்தது தொழிலாளிக்கு தெரியாது என்று நினைக்கிறது. இந்த சில்லைறைத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

            உழைப்புச் சாதனங்கள் தொழிலாளிகள் வசம் இருப்பதால் தொழிலாளி சோம்பேறி ஆகிறான் என்று எந்தக் கூட்டம் பிரச்சாரம் செய்யும்? இதுவரை பொறுக்கித் தின்ற கூட்டமும் சுரண்டிக்கொழுத்த முதலாளித்துவ கூட்டம் தான் பிரச்சாரம் செய்யும். இங்கேயே உங்களது வாதம் அடிபட்டுபோகிறது இல்லையா?

            உழைப்புச் சாதனங்கள் பொதுவுடமையாக்கப்பட்ட சோசலிச தொழிற்சாலைகள் உலகில் அபரிவிதமான உற்பத்தியை நல்கியிருக்கின்றன. அங்கு சம்பளம் என்னவாக இருந்தது? தொழிற்சாலை எப்படி வளர்ந்தது? சமூகக் கட்டுமானங்கள் எப்படி வளர்ந்தன என்பதை கணக்காவும், துல்லியமாகவும் நம்மால் சொல்ல முடியும். இங்கு உற்பத்தியை திட்டமிட்டு பெருக்குவதிலும் எப்படி இயங்க வேண்டும் என்பதிலும் நமக்கு ஆயிரக்கணக்கான சான்றுகள் உள்ளன.

            ஆகையால் தாங்கள் இதுவரை முதலாளிகள் சுரண்டிக் கொழுத்திருக்கிற உழைப்புச் சாதனங்களை தொழிலாளிகளுக்கு எப்படி சாதகமாக்குவது என்பதைப் பற்றி முதலில் பேசுங்கள். சம்பள விகிதம் குறித்தும் உற்பத்தி விகிதம் குறித்தும் பிறகு வாதங்களைக் கட்டமைப்போம். சரிதானே க.கை?

  45. சிவப்பு, தென்றல் அவர்களே,

    நம் இறுதி குறிக்கோள் என்ன?
    மக்கள் அல்லல்படாமல் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும்.
    அதற்கு ஜனநாயகமே சரியான வழி என்கிறேன்.
    நீங்கள் கம்மியுநிசமே சரியான வழி என்கிறீர்கள்.
    இருவரின் குறிக்கோளும் ஒன்று தான். ஆனால் வழிமுறைகள் வேறுபடுகின்றன.

    தற்போதைய ஜனநாயகம் என்பது முழுமையடையவில்லை என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். குறைகள் இருக்கின்றன. இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால் அதனை தூக்கி கடாசி எறிந்து கண்டம் செய்யும் அளவுக்கு நிலைமை இல்லை. ரிப்பேர் செய்யும் அளவில் தான் ஜனாநாயகம் உள்ளது.

    குறிக்கோள்களின் பாகங்களை பட்டியலிடுகிறேன்:

    * உண்மையான ஜனநாயகம் பேணிக்காக்கப்பட வேண்டும்.
    * நாட்டின் ஜீவாதாரமான வளங்களை அழித்தொழிக்காமல் வருங்கால சந்ததியினருக்கும் நம் வளங்கள் பயன்படும் வகையில் நம் வளர்ச்சி இருக்க வேண்டும்.
    * உழைப்புக்கு ஏற்ற உரிய ஊதியம்/வருமானம் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.
    * ஊழலற்ற, நேர்மையான, திறமையான ஒரு ஆட்சி அமைய வேண்டும்.
    * அப்படி ஆட்சி அமைப்பவர்களின் கடிவாளம் மக்களிடம் எப்போதும் இருக்க வேண்டும்.
    * மக்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். VIP என்ற சொல் தேவைப்படகூடாது. அனைவருமே VIP தான்.
    * கருத்து சுதந்திரம் நிச்சயம் இருக்க வேண்டும். தனிமனிதனாக இருந்தாலும் சரி, ஊடகங்களாக இருந்தாலும் சரி, அரசாங்கத்தை எதிர்த்து வரும் கட்டுரைகளுக்கு தடை விதிக்க கூடாது.
    * சோம்பேறித்தனம் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். சும்மா இருத்தல் நாட்டிற்கு பெரும் கேடு.
    * சாதி, மதம், இனம், மொழி, இவற்றின் மூலம் மக்கள் பிளவுபடாமல் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.
    * நாட்டின் பாதுகாப்பு முக்கியம். அண்டை நாடுகள் நம் நாட்டையோ நம் மக்களையோ தாக்காத வண்ணம் பலமான நாடாக நாம் இருக்க வேண்டும்.

    என்னை பொறுத்தவரை இது தான் குறிக்கோள்.
    இதனை அடைய என்ன வழி என்று அடுத்து ஆராயலாம்.

    • முழு கம்மியுனிசம் என்று தாங்கள் கூறிய எடுத்துக்காட்டுகளில் எல்லாம் அரசியல் எதிரிகள் பழிவாங்கப்படுவதையும், ஊடகங்களின் குரல் நெரிக்கப்படுவதையும் பார்த்ததால் தான் கம்மியுநிசத்தில் உள்ள பல நல்ல விடயங்களோடு நான் ஒத்துப்போனாலும், 100% கம்மியுனிசம் சரியாக இருக்காது என்ற கருத வேண்டியுள்ளது. அதே சமயம் 100% முதலாளித்துவத்திலும் பெரும் ஆபத்து உள்ளதை மறுக்கவில்லை.

      இரண்டிற்கும் இடையே ஒரு தெளிவான பாதையை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

      • கல்வி முறையிலும் பெருமாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

        * நம்மிடம் இருப்பதை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழும் தன்மையை ஆசிரியர்கள் மாணவர்களிடம் கொண்டு வர வேண்டும். சில பள்ளிகளில் மாணவர்கள் தங்களின் உணவை மற்றவருடன் பகிர்வதை வரவேற்கின்றனர்.
        * மனப்பாடம் செய்தால் அதிக மதிப்பெண் பெறலாம் என்பதற்கு பதில் அதிக அளவில் செயல்முறை கல்வி விளக்கங்களை கொடுக்க வேண்டும்.
        * கல்வி என்பது இத்தனை நாட்களுக்குள் இத்தனை சிலபஸ் முடிக்க வேண்டும் என்ற குறுகிய வட்டத்தை தாண்டி மாணவர்களிடம் வெளியுலகத்தை கண்டு கற்க முயல வேண்டும்.
        * அரசு பள்ளிகளின் தரம் தனியார் பள்ளிகளை விட நன்றாக இருக்க வேண்டும்.

        இதெல்லாம் முடியாத விடயங்கள் அல்ல.

Leave a Reply to தென்றல் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க