privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஆசியாகுற்றவாளிக் கூண்டில் அதியமான் + பத்ரி சேஷாத்ரி

குற்றவாளிக் கூண்டில் அதியமான் + பத்ரி சேஷாத்ரி

-

2006 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், வங்கதேசத்தின் சிறுகடன்கள் வழங்கும் கிராமீன் வங்கியின் நிறுவனருமான முகமது யூனுசை வரி ஏய்ப்பு செய்ததாக  குற்றம் சாட்டி வரிபாக்கியை கட்டச் சொல்லியிருக்கிறது, வங்கதேசத்தின் தேசிய வருவாய் வாரியம்.

முகமது யூனுஸ்
வரிஏய்ப்பு, ஏழ்மை ஒழிப்புக்கான பணத்தை குடும்பத்துக்கு கொடுத்தல், சட்டவிதி மீறல்கள் – முகமது யூனுஸ்

முன்னதாக, 2010-ம் ஆண்டில் கிராமீன் வங்கியில் நுண்கடனுக்காக திரட்டப்பட்ட பணத்தை வேறு லாபநோக்கத்திலான தனியார் நிறுவனங்களுக்கு திருப்பி விடப்பட்டதாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்திருந்தது.

மேலும் 2011-ல் அவரை கிராமீன் வங்கியின் நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து விலக்க உத்தரவிட்ட வங்கதேசத்தின் மத்திய வங்கி, அவரது நியமனம்  முறையான ஒப்புதலை பெறவில்லை என்றும், 1999 முதல் சட்ட விரோதமாக பதவியில் இருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தது. தான், பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக யூனூஸ் தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆகவே, அவர் பதவி விலகினார்.

ஏற்கனவே, யூனுஸ் கிராமீன் வங்கியைத் தனது சொந்த சொத்தாகப் பயன்படுத்துகிறார் என்றும், ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சி பணம் கறக்கிறார் என்றும் வங்கதேசத்தில் பலர் குற்றம் சாட்டியிருந்தனர்.

நார்வே, சுவீடன், ஜெர்மனி போன்ற நாடுகளிடமிருந்து கிராமீன் வங்கி நிவாரணப் பணிக்காக பெற்ற சுமார் 10 கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ 600 கோடி) பணத்தை கிராமீன் நிறுவனத்தின் துணை நிறுவனமான கிராமீன் கல்யாண் என்ற தனியார் நிறுவனத்திற்கு கைமாற்றியதாக நார்வே அரசுத் தொலைக்காட்சி 2010-ம் ஆண்டில் ஆவணப்படம் ஒன்றை ஒளிபரப்பியது.

கிராமீன் கல்யாண் என்பது சிறுகடன்கள் வழங்கும் நிறுவனம் அல்ல. இது பணத்தை கைமாற்றி செலவழிப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட தனியார் நிறுவனம்.

“ஆஸ்லோவிலிருந்து செயல்படும் நார்வீஜிய உதவி நிறுவனமான நோராட் பராமரிக்கும் ஆவண காப்பகத்திலிருந்து இது தொடர்பான ஆவணங்களை நான் பெற்றேன்” என்கிறார் டென்மார்க்கைச் சேர்ந்த அந்த ஆவணப்படத் தயாரிப்பாளர் டாம் ஹைன்மன்.

நார்வே அதிகாரிகள் இது குறித்த தமது குற்றச்சாட்டுகளை கிராமீன் வங்கிக்கு தெரிவித்ததும், 10 கோடியில் ஒரு பகுதியாக 3 கோடி டாலர்களை கிராமீன் வங்கி திரும்பப் பெற்றுக்கொண்டதாகவும் அந்த ஆவணப் படம் தெரிவிக்கிறது. ”நுண்கடனில் சிக்கியவர்கள் (“Caught in Microdebt”) என்பது தான் அந்த ஆவணப்படத்தின் தலைப்பு.

“வங்கதேசம், இந்தியா, மெக்சிகோ போன்ற நாடுகளுக்கு பயணம் செய்து நுண்கடன்கள் ஏழைகளுக்கு எப்படி பலனளித்தன என்று ஆய்வு செய்தேன். அதன்படி நுண்கடன்களின் மூலம் ஏழைகள் மேலும் மேலும் கடனுக்குள் தள்ளப்படுவதை கண்டறிந்தேன்” என்று பி.பி.சி.க்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்திருந்தார் ஹைன்மன். இந்த ஆவணப்படத்துக்கு பதில் சொல்லும் சப்பைக் கட்டுகளையும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தயாரித்து வெளியிட்டிருக்கின்றன.

ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சி பணம் கறக்கும் நுண்கடன்
ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சி பணம் கறக்கும் நுண்கடன்

பணம் கைமாற்றப்பட்டிருப்பது பற்றி அதிருப்தி தெரிவித்து, ஏழ்மை நிவாரணத்திற்காக வழங்கப்பட்ட பணம் வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, என்று நார்வே அமைச்சர் எரிக் சோல்ஹெய்ம் தெரிவித்திருந்தார்.

யூனுஸ் தலைமை தாங்கும் கிராமீன் குழுமம் கிட்டத்தட்ட 30 நிறுவனங்களை நடத்தி வருகிறது. அவற்றில் லாப நோக்கத்தில் இயக்கப்படும் நிறுவனங்களும், லாபநோக்கமற்ற நிறுவனங்களும் உள்ளன. லாப நோக்கமற்ற நிறுவனங்களின் பெயரில் நிதிதிரட்டி லாபமீட்டும் நிறுவனத்துக்கு மாற்றுவதற்கான சாத்தியங்களை கிராமீன் குழுமம் ஏற்படுத்தி வைத்திருந்தது. இவ்வாறு, 30 நிறுவனங்களை வைத்து அம்பானி, டாடா போல சட்டத்தின் கண்ணைக் கட்டும் வலைப்பின்னலை உருவாக்கியிருந்ததன் நோக்கம் வேறு என்னவாக இருக்கும்?

அதே நேரம் யூனுஸ் தனிப்பட்ட முறையில் ஆதாயம் அடைந்ததாக தான் கருதவில்லை என்று ஆவணபட இயக்குனர் ஹைன்மெனும், நார்வே அமைச்சர் எரிக் சோல்ஹெய்மும் கூறியிருந்தனர்.

ஏழை நாடுகளையும், மக்களையும் தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களை வைத்து அரசியல் ரீதியாக காயடிக்கும் வேலையினை ஏகாதிபத்தியங்கள் செய்து வருகின்றன. இப்போது அவர்களே தாங்கமுடியாத அளவுக்கு ஊழல் இருப்பதால்தான் ஏகாதிபத்திய பங்காளிகளான நார்வே போன்றோர் மெல்லிய தொனியில் யூனூசை கண்டிக்கின்றனர். கத்தரிக்காய் அழுகினால் குப்பைக்குத்தான் போக முடியும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் முகமது யூனூஸ் தனது பெயரிலான அறக்கட்டளைகளுக்கு 77 கோடி டாக்கா பணத்தை பரிசாக  கொடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறது வங்கதேசத்தின் வருவாய் வாரியம் . இதற்கு 14 கோடி டாக்கா (வங்கதேச பணம் 1 டாக்கா = 0.80 இந்திய ரூபாய்)  வரி செலுத்த வேண்டும். ஆனால் வரி செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பதாக கூறி யூனுசுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

வறுமை ஒழிப்பு
வறுமையை ஒழிக்க ஏகாதிபத்திய தீர்வுகள்.

யூனுஸ் பல நாடுகளில் நிகழ்த்திய உரைகளுக்காக கிடைத்த பெரும் பணம்,  அவருடைய புத்தகங்கள் விற்றதற்கான தொகை ஆகியவற்றின் மூலம் 2011-14 ஆண்டுகளில் அவருக்கு டாக்கா  பணம் 77 கோடி வருமானம் வந்திருக்கிறது. அதாவது, வங்கதேசம் மற்றும் பிற ஏழை நாடுகளின் வறுமையை விற்று சம்பாதித்த பணம் அது.

அதில் 72 கோடி டாக்கா பணத்தை ஆராய்ச்சி, சமூக ஆய்வுகளுக்கு பணம் கொடுக்கும் முகமது யூனுஸ் அறக்கட்டளைக்கும், 5 கோடி டாக்காவை யூனுஸ் குடும்பத்தினரின் நலனுக்கான யூனுஸ் குடும்ப அறக்கட்டளைக்கும் கொடுத்துள்ளார். இந்தப் பரிசுகளுக்கான வரித் தொகையாக 15 கோடி டாக்கா கட்ட வேண்டும் என்று வருவாய் வாரியம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், வங்கதேச சட்டத்தின்படி அறக்கட்டளைகளுக்கு நன்கொடை கொடுத்தால் வரி கட்டத் தேவையில்லை என்று சப்பைக்கட்டு கட்டி வருகிறார், யூனுஸ்.

வரி ஏய்ப்பு இருக்கட்டும், ஏழைகளின் வாழ்வை துயர் துடைக்க வந்த யூனூஸ் சொந்த குடும்பத்தினருக்கு எப்படி 5 கோடி ரூபாயை பரிசாக வழங்கினார்? புத்தக விற்பனை, உரைகள் என்ற பெயரில் பணம் வந்தாலும் அதில் 5 கோடியை (இந்திய ரூபாய் சுமார் ரூ 4 கோடி) ஸ்வாகா செய்வதை என்னவென்று அழைப்பது? மேலும், ஏழை நாட்டின் ஏழை மக்களுக்கு நுண்கடன் கொடுப்பதாக நிதி திரட்டும் இவர், வரி இல்லா அறக்கட்டளைகளை ஏற்படுத்தி வரி செலுத்த மறுப்பதை என்னவென்று சொல்வது? கிராமீன் குழுமத்தின் எந்த நிறுவனத்துக்கு பணம் வருகிறது, எங்கு போகிறது, எப்படி செலவாகிறது இன்ன பிற பினாமி வேலைகள் எதற்காக?

ஏழ்மையை ஒழிக்கிறேன் என்கிற பெயரில் வங்கி துவங்கி பாவப்பட்ட வங்கதேச ஏழை மக்களின் உழைப்பை உறிஞ்சி, நிவாரணப்பணிகளுக்கு என்று பெற்ற பணத்தை கையாடல் செய்த வட்டிக்கடைக்காரன்தான் முகமது யூனூஸ். குறுங்கடன்கள் என்கிற பெயரில் 30 லிருந்து 40 சதவீதம் வரை வட்டி வசூலிக்கும் கிராமீன் வங்கி, கடனைக் கட்ட இயலாத ஏழை மக்களை அடியாட்களை வைத்து மிரட்டும். அப்படியும் கடனை கட்டாதவர்களின் உடைமைகளை பறித்தெடுக்கும். இந்த வங்கிக்கு பயந்து கடனை கட்ட முடியாத பலர் சொந்த ஊரைவிட்டே ஓடியிருக்கின்றனர்.

இந்த சாதனைகளுக்கெல்லாம் சொந்தக்காரரான யூனூசுக்கு தான் 2006-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவரைத்தான் ஏழ்மையிலிருந்து ஏழைகளை கடைத்தேற்றிய மீட்பர் என்றும், தேவதூதர் என்றும் பலர் விதந்தோதுகின்றனர்.

யூனூசின் வங்கி மட்டுமல்ல பல பன்னாட்டு வங்கிகளும் தற்போது மூன்றாம் உலக நாடுகளில் உள்ள ஏழை மக்கள் மீது அக்கறை கொண்டு ஏழமையை ஒழிக்க குறுங்கடன்களை வழங்க இறங்கியிருக்கின்றன. உலகளவில் உள்ள நிதிமூலதன கொள்ளையர்கள் ஏழை நாடுகளில் புகுந்து இவ்வாறு கடனளிப்பதன் காரணம் கிராமங்களின் சந்தையையும், பொருளாதாரத்தையும் சுருட்ட வேண்டியே. கூடவே அந்த கொள்ளைக்கு ஏழ்மையை ஒழிப்பதாக கூறிக்கொண்டு விளம்பரமும் செய்யலாம்.

ஏழ்மையை ஒழிப்பதாக கூறும் இத்தகைய குறுங்கடன்கள் ஏழைகளை மேலும் மேலும் ஏழைகளாக்கி கொள்ளையடிக்கவே செய்கின்றன. இலட்சக்கணக்கான ஏழைகளின் இரத்ததை உறிஞ்சி தான் யூனூஸ் தனது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் பரிசுகளை வழங்கியுள்ளார்.

2011-ம் ஆண்டிலேயே யூனுசை அம்பலப்படுத்தி வெளியான வினவு கட்டுரையில், முதலாளித்துவத்தின் பிரச்சாரகர் திருவாளர் அதியமான் (உண்மையில் முதலாளித்துவம் என்றால் என்னவென்றே அறியாதவர்) இப்படிக் குறிப்பிட்டிருந்தார்:

“முகமது யுனஸ் செயற்க்கறிய செயல் செய்யும் கர்ம வீரர். சுயநலமில்லாமல், ஏழைகளுக்குகாக முப்பது வருடங்களாக உழைப்பவர். சுயநலம் இருந்திருந்தால் அவர் படித்த படிப்பிற்கு, நியூ யார்க் நகர் வால் ஸ்ட்ரீட்டில் பல மில்லியன் டாலர் சம்பளம் தரும் நல்ல வேலையில் ஆரம்பத்திலேயே அமர்ந்து, இன்னேரம் பெரும் கோடிஸ்வரராகியிருக்க முடியும். ஆனால் அவர் அதைச் செய்யாமல், தம் நாட்டு மக்களுக்குகாக தொண்டாற்றுகிறார். அதை புரிந்து கொண்டு பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் இப்படி எழுதுவது மடமை மற்றும் சிறுபிள்ளை தனம்.”

அதியமானுக்கு மேலாக கிழக்கு பதிப்பக பத்ரி யூனுசுக்கு வாய் வலிக்க பாராட்டு பத்திரம் வாசிக்கிறார். யூனூஸ் வறுமையை ஒழித்துவிட்டார்  என்று புகழ்ந்தும் எழுதியிருக்கிறார்.

“ஏழைமையை முற்றிலும் ஒழிக்க குறுங்கடன் போதாது என்றாலும்கூட பெரும்பாலான உலக ஏழைகளின் நிலையை ஓரளவுக்கு உயர்த்தும் எனலாம். அந்த வகையில் குறுங்கடன் முன்னோடியான முகமது யூனுஸுக்கும் அவரது நிறுவனமான கிராமீன் வங்கிக்கும் நோபல் பரிசு கிடைத்திருப்பது வரவேற்கத்தக்கது.”

வணக்கம் நேயர்களே,

நான் ரெண்டு புத்தகங்களைப் பத்தி இப்ப பேசப்போறேன். ரெண்டுமே ஒரே ஆளைப் பத்தினதுதான். அவரு பேரு முகமது யூனுஸ். பங்களாதேச நாட்டைச் சேர்ந்தவரு.

இவர் என்ன செஞ்சாரு? என் இவரைப் பத்தி நாம தெரிஞ்சுக்கணும்? கடந்த 2,000-2,500 வருடங்கள்ள, மிக அதிகமான எண்ணிக்கைல மனுஷங்களோட வாழ்க்கையை மாத்தின ஆட்கள்னு பாத்தீங்கன்னா ரெண்டு மூணு பேரைச் சொல்லலாம் – யேசு, புத்தர், காந்தின்னு. எனக்குத் தோணுது.

இதுல யேசு, புத்தர் ரெண்டு பேரும் spiritual – அதாவது ஆன்மிகத் துறைல சாதிச்சாங்க. காந்தி அரசியல் துறைல – நம்ம நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்தாரு. முகமது யூனுஸ் பொருளாதாரத் துறைல நிறைய சாதிச்சிருக்காரு. அந்த வரிசைல முகமது யூனுஸ் பேரைச் சேக்கலாம்னு எனக்குத் தோணுது. முகமது யூனுஸ் பொருளாதாரத் துறைல நிறைய சாதிச்சிருக்காரு.”

புத்தர், ஏசு, காந்தி வரிசையில் யூனுசை சேர்த்திருக்கிறார் என்றால் பத்ரியின் உள்ளக்கிடக்கையை நீங்கள் புரிந்து கொள்வது அவசியம்.

அதியமானுக்கு முதலாளித்துவம் என்றால் என்னவென்றே தெரியாது; பத்ரிக்கு முதலாளித்துவம் என்றால் என்னவென்று நன்கு தெரியும். அதனால் அதனை நியாயப்படுத்தி சென்டிமெண்டாக வாதங்களை எப்போதும்  சலிக்காமல் முன்வைப்பார். அதியமான் வாழ் நிலையில் ஒரு பாட்டாளி என்பதால் முதலாளித்துவத்தை கனவாக வைத்து இன்பம் காண்கிறார்;  அதிலும் இந்த முட்டாள்தனமான கனவை ஓயாமல் மொக்கை விக்கிபீடியா அல்லது சுவாமிநாதன்களின் லிங்குகளால் போட்டு நம்மை வதைக்கிறார்.

பத்ரி வாழ்நிலையில் ஒரு முதலாளி என்பதால் முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் கனவின் மாயைகளை மக்கள் உணர்ந்து கொண்டால் தனது வாழ்நிலை கேள்விக்குள்ளாக்கப்படுமென்பதை நன்கு உணர்ந்தவர். அதனாலேயே ஒரு கிரிமினல் வழக்கறிஞர் போல புத்திசாலித்தனமாக முதலாளிகளின் கருத்துக்களுக்காக வாதிடுவார். அதியமான் ஒரு முட்டாள் என்பதை அநேகர் ஏன் பத்ரி உட்பட ஒத்துக்கொண்டாலும், முதலாளித்துவ நாயகர்களை ஆதரித்து வாதாடும் பத்ரியை ஒரு ‘கிரிமினல் லாயர்” என்பதை அதியமான் உட்பட யாரும் ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.

இன்று யூனூசை வங்கதேச அரசு, அதிமயான் போற்றும் ஸ்காண்டிநேவிய நாடுகள், பத்ரி மதிக்கும் சர்வதேச ஊடகங்கள் அனைத்தும் தலையில் குட்டி அம்பலப்படுத்துகின்றன. யூனுஸ் நோபல் பரிசு வாங்கும் போதே பல்வேறு பத்திரிகையாளர்கள் இதனை மேற்குல ஊடகங்களில் கோடிட்டும் ஆழமாகவும் பேசியிருக்கின்றனர். அதை வைத்தும், பொதுவில் என்.ஜி.ஓக்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், ஏகாதிபத்தியங்களின் கருணை பேசும் சுரண்டல் திட்டங்கள், முதலாளித்துவ பொருளாதாரத்தின் இயங்கு முறை மற்றும் அதன் முரண்பாடுகள், இவை அனைத்தும் கலந்த ஒரு அறிவியல் பார்வையோடு வினவில் விரிவாக ஒரு கட்டுரை வந்தபோது யூனுசுக்கு ஆதரவாக பேசியவர்களை இப்போது நினைத்துப் பாருங்கள்.

குறுங்கடனை ஆதரித்து பத்ரி அவர்கள் ஒரு வலைப்பூவையே ஆரம்பித்துவிட்டார்.

அதியமான், பத்ரி மட்டுமல்ல, பொதுவில் 5000 ரூபாய்க்கு ஸ்டார் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு ஐந்து ரூபாயை பிச்சை போடுவதை மாபெரும் கருணை பாய்ச்சலாக கருதிக் கொள்ளும் கனவான்கள் கூட இந்த குறுங்கடன்களை பாராட்டி, விரைவில் குறுங்கடனை வாங்குவோரின் வீட்டில் தங்க பிஸ்கட்டு நிரம்பி வழியும் என்று நம்பினார்கள்.

ஆனால் இவ்வாறு குறுங்கடன்கள் வழங்குவதன் மூலமோ, என்.ஜி.ஓக்கள் பாணியிலோ ஏழ்மையை ஒழிக்க முடியாது. பெரும்பான்மை மக்களின் வறுமைக்கும், இழிநிலைக்கும் காரணம் இந்த சமூக அமைப்பு தான். அதாவது சுரண்டப்பட்டதால் ஏழைகள், சுரண்டியதால் பணக்காரர்கள். இதுதான் இன்றைய சமூக அமைப்பின் அடிப்படை.

இதை மாற்றியமைக்காத வரை ஏழ்மையை மட்டுமல்ல, ஏழைகளை மூலதனமாக்கி உயிர்பிழைக்கும் யூனூஸ், யூனூசுக்கு புரவலராக ஏகாதிபத்தியங்கள், ஏகாதிபத்தியங்களின் எடுபிடிகளான என்.ஜி.ஓக்களையும் ஒழிக்க முடியாது.

மேலும் படிக்க:

  1. ஒரு மனிதரை பற்றி அறிந்த தகவல்களை கொண்டு ஒரு முடிவுக்கு வருகிறோம். பாராட்டுகிறோம். சில வருடங்கள் கழித்து அவரை பற்றி முழு தகவல்கள் வெளியாகும் போது வேறு முடிவுக்கு வருகிறோம். ஆனால் முன்பு கிடைத்த தகவல்கள் அடிப்படையில் சொன்ன கருத்தை மட்டும் வைத்து கற்பிதம் செய்வது விஞ்ஞானமல்லவே !!

    சரி, ஃபிடல் கேஸ்ட்ரோவையும் கூபாவையும், 60களில் உங்களை போன்ற நிஜ கம்யூனிஸ்டுகள் வியந்தோந்தினர். போற்றினர். வழிகாட்டியாக ஏற்றனர். இன்றும் அவர் இருக்கிறார். ஆனால் அவை நிராகரித்துவிட்டீர்கள். கூபா பற்றி பேசுவதே இல்லை. 1959 முதல் 70கள் வரை அவரை பற்றிய உங்களின் கருத்துகளை மட்டும் வைத்து இதே போல் ‘கட்டுரை’ எழுதினால் எப்படி ? 🙂

    அன்னை தெரசா பற்றிய உங்களின் ‘கட்டுரை’ பற்றி : எத்தனை தன்னலமற்று ஒருவர் சேவை செய்தாலும், அவர் செய்த சில பிழைகளால், அவருக்கு 100க்கு முட்டை மார்க் தானே போடுவீர்கள். தெரிசாவுக்கு ஒரு 60 மார்க் கூட கொடுக்காத நீங்க ஸ்டாலினுக்கு 100 மார்க் கொடுப்பீர்கள். இது தான் உங்களின் மார்க்சிய மெய்யில முறை !! 🙂

  2. ///ஆனால் இவ்வாறு குறுங்கடன்கள் வழங்குவதன் மூலமோ, என்.ஜி.ஓக்கள் பாணியிலோ ஏழ்மையை ஒழிக்க முடியாது. பெரும்பான்மை மக்களின் வறுமைக்கும், இழிநிலைக்கும் காரணம் இந்த சமூக அமைப்பு தான். அதாவது சுரண்டப்பட்டதால் ஏழைகள், சுரண்டியதால் பணக்காரர்கள். இதுதான் இன்றைய சமூக அமைப்பின் அடிப்படை.///

    இதே டைலாக்கை பேசி பேசி, மார்க்சிய பாதையில் கடந்த 100 வருடங்களில் முயற்சிக்கபட்ட
    அனைத்து நாடுகளிலும் (விதிவிலக்கிலாமல்) டெபாசிட் இழந்ததை மறந்துவிட்டு, ‘முதலாளியம்’ இன்று குற்றவாளி கூண்டில் நிறுகிறது, எனக்கு முதலாளியம் பற்றி ’எதுவும்’ தெரியாது (உங்களுக்கு எல்லாம் தெரியும் பாருங்க !! 🙂 ) என்று சொன்னால் அது விஞ்ஞான பூர்வமான உண்மையாகிவிடுமா என்ன ?

    உலக வறுமையை கடந்த 100 ஆண்டுகளில் (முக்கியமாக கடந்த 25 ஆண்டுகளில்) குறைத்தது மாதிரி முன்பு எப்போதும் சாத்தியமானதில்லை. எதிர்காலத்தில் இன்னும் குறைக்க நிறைய சாத்தியங்கள், நம்பிக்கைகள் இருக்கு. (நீங்க நம்மாவிட்டால் குடி முழுகிவிடாது. 650 கோடி மக்களை சில குறுங்குழுக்களால் ‘திசை திருப்ப’ முடியாது !!.

    The world’s next great leap forward
    Towards the end of poverty

    http://www.economist.com/news/leaders/21578665-nearly-1-billion-people-have-been-taken-out-extreme-poverty-20-years-world-should-aim

    Nearly 1 billion people have been taken out of extreme poverty in 20 years. The world should aim to do the same again

    • சோசியலிசம் ,கம்யுனிசம் ஆகிய கொள்கைகளை எல்லாம் விலக்கி விட்டு பார்த்தால் கூட அதியமான் உங்களின் எழுத்துகள் கிறுக்கு தனமாக உள்ளது

      //உலக வறுமையை கடந்த 100 ஆண்டுகளில் (முக்கியமாக கடந்த 25 ஆண்டுகளில்) குறைத்தது மாதிரி முன்பு எப்போதும் சாத்தியமானதில்லை.//

  3. //வங்கதேசம், இந்தியா, மெக்சிகோ போன்ற நாடுகளுக்கு பயணம் செய்து நுண்கடன்கள் ஏழைகளுக்கு எப்படி பலனளித்தன என்று ஆய்வு செய்தேன். அதன்படி நுண்கடன்களின் மூலம் ஏழைகள் மேலும் மேலும் கடனுக்குள் தள்ளப்படுவதை கண்டறிந்தேன்” ///

    கந்துவட்டியில் ஆண்டாண்டுகளாக சிக்கி சீரழ்ந்தவர்களுக்கு இது ஒரு மாற்று வழி. லச்சகணாக்கான குடும்பங்க பத்து ரூபாய் கந்துவட்டி (120 சதவீதம்)யில் இருந்து மீண்டு வர வகை செய்தவை நுண்கடன் நிறுவனங்கள். லச்சகணக்கான பயனாளிகளில் சிலருக்கு இது சரியாக வேலை செய்யாமல், தோல்வி அடைந்திருக்கலாம். (விதி விலக்குகள் அவை). ஆனால் இந்நிறுவனங்களே இல்லாமல் இருந்தால், கந்து வட்டி கொடுமையில் இருந்து இந்த அளவுக்கு கூட விடுபட சாத்தியம் இல்லை. உங்களால் உருப்படியாக இதை கூட செய்ய முடியாது. யாராவது செய்தால், அரை உண்மைகளை மட்டும் எடுத்து காட்டி என்னமோ, பெரும் உண்மைகளை வெளிப்படுத்தியது போல் பில்டப். இதை உங்க ‘தொண்டர்கள்’ வேண்டுமானால் அப்படியெ நம்பிகொண்டு கும்மியடிக்கலாம். ஆனால் படிப்பவர்கள் பலருக்கும் யதார்த்தம் தெரியும்.

    இதுக்கெல்லாம் ஒரே தீர்வு செம்புரட்சி என்பீர்களே. சரி, அது எப்ப சாத்தியம் என்று யாருக்கு தெரியாது. எத்தனை நூற்றாண்டுகள் ஆகும் என்றும் தெரியாது. அதுவரை இது ‘தற்காலிக’ தீர்வு என்று வச்சிகங்களேன்..

    • கந்துவட்டியில் ஆண்டாண்டுகளாக சிக்கி சீரழ்ந்தவர்களுக்கு மைரோ பைனாஸ் மாற்று வழியா அதியமான் ? அதே கேள்வி தான் மீண்டும் :

      100 ரூபாய்க்கு 30% வட்டியில் ஏழை மக்கள் மைரோ பைனாஸ் வாங்கி வியாபாரம் அல்லது தொழில் செய்து வாழ்க்கை நடத்த முடியும் என்றால் அதே 100 ரூபாய்க்கு பெரு முதலாளிகள் தொழில் செய்ய அதிகபச்சம் 15% வட்டிக்கு மட்டுமே கடன்வாங்கி தொழில் செய்வது ஏன் என்று அம்பானி அதியமானுக்கு விளங்குகின்றதா இல்லையா ?

      • சரி, வேறு மாற்று வழி சொல்லவும், முடிந்தால். மைக்ரோ பைனாஸ் நிறுவனங்களின் transaction and delivery costs மிக அதிகம் என்பதால் வட்டி விகிதம் வங்கி விகிதங்களை விட மிக அதிகமாக வைக்க வேண்டியிருக்கிறது. ஆனாலும் அவர்களின் லாப விகிதம் (operating profit margin) பெருசா ஒன்றும் இல்லை. மற்ற துறைகள் அளவு தான். மேலும் default ratioவும் அதிகம். பார்க்க்கவும் :

        http://swaminomics.org/don%E2%80%99t-cap-microfinance-lending-rates/
        Don’t cap microfinance lending rates

        • அம்பானி அதியமானே வேறு மாற்று வழி கேட்கும் போது நாம சொல்லாம போனா எப்படி ? முதலில் மைக்ரோ பைனான்ஸ் ஏழைகளுக்கு தொழில் செய்ய உள்ள சாத்தியமான திர்வு அல்ல என்று அதியமான் இப்ப தான் முதன் முதலா ஒத்துக்கொண்டு இருக்காரு. ஏன் ஏற்றுக்கொண்டாரு என்றால் பெருமுதலாளிகள் 15% அளவுக்குள் மட்டுமே வட்டியில் கடன் வாங்கி தொழிலை விரிவாக்கம் செய்யும் போது ஏழைகள் 30% வட்டிக்கு கடன் வாங்குவது என்பது சாத்தியமே அல்ல என்பது அம்பானி அதியமானே உணர்கின்றாரு. முதலில் ஏழைகள் 30% மைக்ரோ பைனான்ஸ் மூலம் rs 50,000 கடன் வாங்கினால் என்ன இலாபம் பார்க்க முடியும் என்பதை லிபரல் முதலாளித்துவத்தின் ஆதரவாளர் அதியமான் கூறியாகவேண்டும். அதுவும் குறுகிய கால கடன் என்று வேறு சொல்லுறாரு. சரி ஒரு சின்ன கணக்கை போடுவோம்.

          மைக்ரோ பைனான்ஸ் மூலம் பெற்ற மூலத கடன் : rs 50,000

          அதற்கு மாதவட்டி 2.5% : rs 1,250

          Yearly interest 30% : rs 15,000

          rs 50,000 க்கு எந்த தொழில் செய்தாலும் எத்துனை % இலாபம் கிடைக்கும் ?

          xerox கடை
          ——————

          மாத செலவு :

          வாடகை : rs 3,000
          EB : rs 1500
          A 4 Paper :rs 1750 [10 *500 TNPL papers ]
          மா.வட்டி :rs 1250

          மாத மொத்த செலவு : 7,500

          மாத வரவு :

          Scenario I
          ஒரு நாளைக்கு சராசரி zerox : 200page * 1.5 = rs 300
          ஒரு pageக்கு லாபம் rs 0.5 so : 200pageக்கு * 0.5 = rs 100
          மாத இலாபம் = 100 * 25 days = Rs 2,500
          மாத நட்டம் : rs 5,000

          Scenario II
          ஒரு நாளைக்கு சராசரி zerox : 1000page * 1.5 = rs 1500
          ஒரு pageக்கு லாபம் rs 0.5 so : 1000 pageக்கு * 0.5 = rs 500
          மாத இலாபம் = 500 * 25 days = Rs 12,500
          மாத இலாபம் : rs 5,000

          எப்படி பார்த்தாலும் Scenario I [per day 200pages ]க்கும் Scenario II [per day 1000pages ]க்கும் இடைபட்ட நிலையில் தான் ஜெராக்ஸ் பிசினஸ் நடக்க போகுது ,எனவே மாத நட்டம் rs 5,000[Scenario I] ல் இருந்து மாத இலாபம் rs 5,000 வரைக்கும் இடையில் தான் பிசினஸ் நடக்கப்போவுது. இத்தகைய சூழலில் எப்படிங்க rs 50,000 க்கு மாத வட்டி rs 1250 யையும் கட்டி குடும்பத்தையும் நடத்துவது அதியமான் ? இதற்கு பதில கூறுங்க முதலில் .மாற்று வழியை பின்னால பார்க்கலாம்.

          மேலும் 8,000 முதல் 10,000 பக்கங்களுக்கு ஒருமுறை rs 2,500 செலவு செய்து டோனர் மாற்றவேண்டும் , 60,000 பக்கங்களுக்கு ஒருமுறை drum யை மாற்றவேண்டும் . zerox drum ரேட் எனக்கு தெரியவில்லை .

          • ///மைக்ரோ பைனான்ஸ் மூலம் பெற்ற மூலத கடன் : rs 50,000

            அதற்கு மாதவட்டி 2.5% : rs 1,250

            Yearly interest 30% : rs 15,000

            rs 50,000 க்கு எந்த தொழில் செய்தாலும் எத்துனை % இலாபம் கிடைக்கும் ?///

            அந்த மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் நிக்ர செலவுகள் எத்தனை என்பதை கணக்கில் கொள்ளாமல் (எல்லம் தெரிந்த ஏகாம்பரம் போல) பேசினால் எப்படி ? அவர்களின் லாப விகிதம் எத்தனை என்பதை பற்றி மேலே தெளிவாக நான் சொலியிருந்து, சாமினாதன் அங்கலேஸ்வரையர் எழுதிய முக்கிய பதிவை எடுத்து இயம்பியும், இப்படி பேசினால் எப்படி ?

            சரி, கந்து வட்டி ஜோராக நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதை பற்றி கவலை படாமல், மைக்ரோ நிறுவனங்களை ஒழித்து கட்டினால் எல்லாம் சுபம். வாழ்க.

            • தமிழ்,

              பெரிய ‘கணக்கு’ எல்லாம் போட்டீக ? மேலே எனது 3.1.1.1.1 கடைசி பின்னூடத்திற்க்கு பதில் சொல்லாமல் ஓடிவிட்டீக ? முக்கியமாக, கந்துவட்டிக்கு மாற்று வழி சொல்லாமல், மைக்ரோகடன் நிறுவனங்களை நிரகாரித்து விட்டு, ஓடி போய்விட்டீக ? வினவு அலுவலக ’சந்திப்பில்’ இதையும் பேசலாம்.

            • மைக்ரோ பைனானஸ் மாற்று அல்ல என்று நான் நிருபித்தவுடன் வேறு வழியின்றி வெட்டி வீறாப்புடன் துள்ளி எழும் அதியமானே , மைக்ரோ பைனானஸ் மிக தவறான ஏழைகளுக்கு தொழில் ,வணிக கடன் தரும் முறை அதனை கொண்டு அவர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற முடியாது என்பதை அறிந்தும் நீர் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் நிக்ர செலவுகள் பற்றி ___________________ பேசுகின்றாய் ? _______ மைக்ரோ பைனான்ஸ் முதலாளி தான் முக்கியமா ?

              30% அதிக வட்டியில் ஏழைகள் என்ன தொழில் ,வணிகம் செய்ய முடியும்_________________

              • ///மைக்ரோ பைனானஸ் மாற்று அல்ல என்று நான் நிருபித்தவுடன் வேறு வழியின்றி வெட்டி///

                எங்க நிருபித்தீக ? லூஸுத்தனமாக பேசுவது தான் நிருபனமா ? 🙂 சரி, அப்ப மாற்று வழி தான் என்ன ?

            • அதியமான், பெரு முதலாளிகள் எல்லாம் சலிசான ,குறைந்த ,மிகக்குறைந்த வட்டிக்கு தொழிலை அபிவிருத்தி செய்ய தேசிய மயம் ஆக்கப்ட்ட வங்கியில் கடன் வாங்குவிங்க , உயர் நடுத்தர வர்க்கமும் அதே தேசிய மயம் ஆக்கப்ட்ட வங்கியில் கார் வாங்க , வீடு கட்ட மிக குறைந்த வட்டியில் கடன் வாங்குவிங்க …, ஆன ஏழைகளுக்கு மட்டும் மைரோ பைனாஸ் 30% வட்டியா ? ஏன் தேசிய மயம் ஆக்கப்ட்ட வங்கிகள் ஏழைகளுக்கும் கடன் கொடுத்து தொழில் ,வணிகம் செய்ய அவர்களுக்கு உதவி செய்ய கூடாதா என்ன? இது தான் கத்து வட்டி மற்றும் மைரோ பைனஸ்க்கு மாற்று வழி ! நண்பர் சங்கர் அவருடைய பின்னுட்டத்தில் [3.1.1.3]உமக்கு தானே விளக்கி உள்ளார் . நீர் அதனை பார்க்க வில்லையா ?

              • ///ஆன ஏழைகளுக்கு மட்டும் மைரோ பைனாஸ் 30% வட்டியா ?/// எனென்றால் அந்த 30 சதவீத வட்டியில் பெரும் பகுதி நிர்வாக செலவாக இருப்பதால். இதை இதுக்கு மேல வந்து ‘விளக்க’ கார்ல மார்க்ஸ் தான் வரனும் !! 🙂 சரி, அப்ப கந்து வட்டி தொடரட்டும்.

                • விவசாய கடன்கள் போன்று ஏழைகளுக்கும் குறைந்த வட்டியில் சிறு தொழில் , வணிகம் செய்ய,ஆடு,மாடு ,கோழி பண்ணை அமைக்க கடன் தேசிய மயம் ஆக்கபட்ட வங்கிகளால் பரவலாக கொடுக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே மாற்று வழி. ஏன் கொடுக்க கூடாது ,முடியாது என்பதை தக்க ஆதாரங்களுடன் விளக்கவும். ஆனால் உளறக்கூடாது அதியமான்.

        • ஏழை மக்களுக்கு சிறு வணிகம் ,சிறு தொழில் செய்ய கந்துவட்டியில் ஆண்டாண்டுகளாக சிக்கி சீரழ்ந்தவர்களுக்கு மைரோ பைனாஸ் மாற்று வழி அல்ல என்பதை அதியமான் இன்றாவது உணர்ந்தார் என்று நினைக்கும் போது சிறிது மகிழ்ச்சியாக உள்ளது. ஏழை மக்களுக்கு வேறு யார் கடன் குறைந்த வட்டிக்கு கொடுக்க வேண்டும் ? ஆமாம் தேசிய மயம் ஆக்க பட்ட வங்கிகள் தான் கொடுக்க வேண்டும் . வங்கிகள் கொடுக்கும் மொத்த கடனில் ஏழை மக்களுக்கு சிறு வணிகம் ,சிறு தொழில் செய்ய குறைந்தது 30% மாவது இருக்கவேண்டும். உண்மையில் அப்படி இல்லையே அதியமான் !

          • ///ஆமாம் தேசிய மயம் ஆக்க பட்ட வங்கிகள் தான் கொடுக்க வேண்டும் . வங்கிகள் கொடுக்கும் மொத்த கடனில் ஏழை மக்களுக்கு சிறு வணிகம் ,சிறு தொழில் செய்ய குறைந்தது 30% மாவது இருக்கவேண்டும்.// கொடுத்தா நல்லா தான் இருக்கும். ஆனால் முடியவில்லையே. காரணம் operating costs, recovery costs and service costs in opening rural branched all over India. அனுபவ அறிவு இல்லாதவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம்.

            • NPA [Nan Performing Assert ] அதிகம் இருக்கும் Bank of Baroda போன்ற வங்கிகளில் சென்று கேட்டு பாருங்க ! அங்க branch Manager தெளிவாக கூறுவாரு : திருப்பி வராத கடன் விகிதம் அதிகமானதுக்கு காரணம் பெரு முதலாளிகள் தான் என்று. கிராம புறங்களில் உள்ள அவர்கள் வங்கிகள் நன்றாகவே லாபத்துடன் செயல்படுவதை நாம் பார்த்துகொண்டு தானே இருக்கின்றேம். கத்துவ்ட்டிக்கு ,மைக்ரோ பைனாஸ்க்கு மாற்றாக தேசிய வங்கிகள் தான் தொழில் தொடங்க கடன் கொடுக்கனும் அதியமான்

              • ///NPA [Nan Performing Assert ] அதிகம் இருக்கும் Bank of Baroda போன்ற வங்கிகளில் சென்று கேட்டு பாருங்க ! அங்க branch Manager தெளிவாக கூறுவாரு : திருப்பி வராத கடன் விகிதம் அதிகமானதுக்கு காரணம் பெரு முதலாளிகள் தான் என்று.///

                ஆம். பெரு நிறுவனங்கள் தான் காரணாம். கிங் ஃபிஸ்ஸர் ஏர்லைனஸ் மல்லையாவே சரியான உதாரணம். ஆனால் இது போன்ற வராகடன்கள் தனியார் வங்கிகளில் அதிகம் இல்லை. தேசியமயமாக்கபட்ட அரசு வங்கிகளில் தான் மிக மிக அதிகம். ஏன் ? என்னா, கூட்டு கொள்ளை அடிக்க அதில் தான் முடியும். முதலாளி என்று யாரும் கிடையாது பாருங்க. மக்கள் வங்கி என்பதால் பொறுப்பில்லாமல், crony capitalism மிக சகஜமாக உருவாகி சீரழியும். அய்.சி.அய்.சி வங்கியும் மல்லையாவுக்கு சுமார் 400 கோடி கடன் அளித்திருந்தது. ஆனால் அவரிடம் முன் ஜாக்கரதையாக (அல்லது வங்கி விதிகளை சரியாக செயல்படுத்தி)
                personal guarantee வாங்கியிருந்தால், ஒழுங்காக பணத்தை மீட்க முடிந்தது. அரசு வங்கி மேலாளர்களுக்கு லஞ்சம் கொடுத்து, இப்படி கியரண்டி கொடுக்காமல் ஒபி அடிப்பது மிக சகஜம். 1969இல் பல தனியார் வங்கிகளை இந்திரா காந்தி அரசுடைமையாக்கியதன் நிகர விளைவு இது.

                Why are NPAs higher in public sector banks?
                http://www.business-standard.com/article/opinion/charan-singh-why-are-npas-higher-in-public-sector-banks-114051901183_1.html

                • Adhiyaman may not know that it was Canara Bank which has collected huge dues from a VVIP by utilizing the personal guarantee given by him.Canara Bank”s panel advocate who was so daring became a celebrity overnight in Mumbai about a decade ago.Only because of nationalization,crores of poor people were saved.Only because private banks helped only a section of their own people,banks were nationalized.Often he quotes about the removal of poverty.The role of nationalized banks is great in removal of poverty.Many number of first generation entrepreneurs were groomed by nationalized banks.Let him meet first generation entrepreneurs from Ambattur Industrial Estate and Guindy Industrial Estate.Let him meet the office bearers of Ambattur Industrial Estate Manufacturers Association.They will tell him the role of nationalized banks.

                • முன்னுக்கு பின் முரணாக பேசுவதையே வாழ்க்கை இலச்சியமமாக கொண்டு உள்ளாறு அதியமான். கிங் ஃபிஸ்ஸர் ஏர்லைனஸ் மல்லையா ஒரு தரகு முதலாளி. அவனுக்கு தேசிய மயம் ஆக்கபட்ட வங்கிகள் மூலமாக கடன் கொடுக்க சொன்னது சிதம்பரம் ,பிரணாப் ,மன்மோகன் ஆகிய கூட்டு கொள்ளையர்களின் தரகு முதலாளித்துவ காங்கிரஸ் அரசு. கடனுக்கு செக்யுரிட்டியா கிங் ஃபிஸ்ஸர் ஏர்லைனஸ் பங்குகளை ஏற்றுக்கொள்ளலாம் என்று அனுமதி அளித்ததும் தரகு முதலாளித்துவ காங்கிரஸ் அரசு தான். ஆனால் தரகு முத்லாளித்துவம் இந்தியாவில் ந்டைமுறைப்டுத்தப்ட்டது 1991 நரசிம்ம ராவ் அரசு வந்த பின்புதான். நிலைமை இப்படி இருக்க 1969ல் வங்கிகள் தேசிய மையம் ஆக்கபட்டது தான் வங்கிகள் பெரு முதலாளிகளால் கொள்ளை அடிக்கபடுவதற்கு காரணம் என்று எப்படி கூறமுடியும் ? வங்கிகள் 1969ல் தேசிய மையம் ஆக்கபட்டதற்கு உரிய நோக்கத்தையே சீர் குலைத்து NPA விகிதத்தை அதிகமாகியதர்ற்கு காரணமே 1991 க்கு பின் வந்த அதியமானின் அன்பிற்கு உரிய தரகு முதலாளித்துவ அரசுதானே காரணம். நிலைமை இப்படி இருக்க 1969ல் வங்கிகள் தேசிய மையம் ஆக்கபட்டது தான் அந்த வங்கிகளின் வீழ்ச்சிக்கு காரணம் என்று உளரிவைக்கின்றாறு அதியமான். Common அதியமான் கீப் இட் up

              • ///கத்துவ்ட்டிக்கு ,மைக்ரோ பைனாஸ்க்கு மாற்றாக தேசிய வங்கிகள் தான் தொழில் தொடங்க கடன் கொடுக்கனும் அதியமான்///

                45 வருசமாச்சு தேசிய வங்கிகளையை அரசுடைமையாக்கி. ஏன் இதுவரை இதை சாத்தியபடுத்த முடியவில்லை ? இத்தனைக்கும் 1991 வரை சோசியலிச பாணி இடதுசாரிகளின் ஆதிக்கமே இந்தியாவில் அதிகம். இன்றைய நவதாரள கொள்கைகள் எல்லாம் அன்று இல்லை.

                ஏன் இதுவரை சாத்தியமாகவில்லை என்பதை உம்மை போன்ற லூசுகளுக்கு புரியவைக்க முடியாது. சென்னையில் சொகுசா உக்காந்து கொண்டு, கள அனுபவமோ, அல்லது வங்கி அனுபவமோ இல்லாமல், பெரிய நிபுணர் மாதிரி கதைப்பவர்களுக்கு ground realityஅய் புரிய வைக்க முடியாது.

                ஒரு தேசிய வங்கி கிளை மேலாளராக உம்மை நியமித்தி (அட, ஒரு பேச்சுக்கு தான் !!:) )
                free hand கொடுத்து, நீர் எடுத்தியம்பும் தீர்வை ’செயல்படுத்த’ அனுமதித்தால் புரியலாம். அதுவும் ஒன்னும் கியாரண்டி இல்லை. 🙂

                • எதுக்கு அதியமான் bp எகிறும் அளவுக்கு குதிக்கணும் ? தேசிய மயமாக்க பட்ட வங்கிகளில் ஆடு ,மாடு ,கோழி என்று ஏழைகள் தொழில் செய்ய கடன் கொடுத்து கொண்டு தானே இருந்தாங்க இந்திரா காந்தி இருந்த வரைக்கும் ! ____

            • I have served in a nationalized bank for 34 years.I have served as Branch Manager in rural/semi-urban/metropolitan branches.No rural branch(even at a remote place at Kolli Hills,Javvadhu Hills) has shown losses due to operating costs,recovery costs and service costs.Till 1991,everything wentwell.Only with the advent of liberalization,when nationalized banks also shifted from their social objective to profit earning that too on par with foreign/private banks,common people were neglected.Adhiyaman should read this article by B.S.M.Rao in Dinamani dated 6th Mar,2015.Title of the article-Grama Vangigal-seerthiruttham thevai.He can understand how the lofty ideal of Grameena Banks got twisted out of shape by policy changes brought about by govt and what is their present position.Mr Rao has also pointed out that the policy changes` were brought about only from 1993.

              • ///I have served in a nationalized bank for 34 years.I have served as Branch Manager in rural/semi-urban/metropolitan branches.No rural branch(even at a remote place at Kolli Hills,Javvadhu Hills) has shown losses due to operating costs,recovery costs and service costs.//

                then why couldn’t your banks replace the money lenders Sir ? they are flourishing as usual all over India, even right next door to ‘nationalised’ bank branches ?

                Bu op costs, i meant the op costs of MFIs which has a totally different model from banks.

                and //Only with the advent of liberalization,when nationalized banks also shifted from their social objective to profit earning that too on par with foreign/private banks,common people were neglected// this is sweeping generalisation which need to be true. we haven;’t forgetton the loan melas of Janardhan Poojary during the hey days of socialistic lending which corrupted the system and encouraged willful defaults.

                and pls explain the reason for the bankruptcy of ‘nationalised’ Indian Bank which had to saved by injecting nearly 2000 crores (that is in 1995 rupees) by the govt. Indian Bank Chairman was convicted. and KVB, TMB which escaped ‘nationalisation’ in 1969 are doing fine.

                Pls try this excellent analysis by a banker :

                http://www.business-standard.com/article/opinion/charan-singh-why-are-npas-higher-in-public-sector-banks-114051901183_1.html
                Why are NPAs higher in public sector banks?

                • The thrust on rural banking was removed gradually.Still the large scale financing of Self Help Groups of Women in TN relatively saved lakhs of poor people from the clutches of private money lenders.
                  Indian Bank was saved by the Govt.But after it was rescued,it is doing fine for the past 20 years.
                  NPAs have reached alarming proportion only during the past decade.Majority of defaulters are who is` who in the big industry as per the list released by AIBEA.

                • The article quoted by you has been written by a commercial banker(not from a PSB).He is quoting Mr K.C.Chakrabarty,who served as CMD of Indian Bank before becoming Dy.Governor of RBI.There is lot of difference between PSB functioning and private banks.Among the names of private banks given in the article,there is one bank which was notorious for seizing vehicles even in case of no default in loan repayments.Private banks mostly cater to the needs of high net worth individuals.PSBs can not afford to refuse service to poor/needy/lower middle class people.They thrive on the goodwill of the inhabitants of their location.They can not take stringent action like seizure of vehicle etc in their area of operation fearing public opinion.Political pressure plays a major role.But with the help of SARFAESI Act,resourceful PSB managers are successful in recovery of dues even in loan accounts of politically influential persons.
                  PSBs generally pay the cost of tractors to the selling agency directly.The author of the article made sweeping statements regarding non-creation of loan assets and about commission allegedly paid to employees of lending institutions.The exceptions are magnified.
                  With multi-various functions to be executed in a branch atmosphere,the recovery officers of PSBs may not be as effective as in private banks.Major portion of NPA in PSBs are due to wilful defaulters.

                • Mr Adhiyaman was talking about the “imaginary”difficulties of nationalized banks in opening rural branches by citing operating costs etc in his comment under 3.1.1.3.1.After reading my reply under 3.1.1.3.1.2,he now states that he meant operating costs of MFIs.There should be consistency in his arguments.

                  • Mr.Sooriyan,

                    Your banks had NOT done micro financing at all. suppose if it tries what will be its operating costs ? and pls answer the basic question, why it is practically impossible for PSU or other banks to give micro finance (which lend tiny amounts like Rs.1000 and without any papers). and pls suggest a viable solution to replace kanthuvatti. that is the crux of this post.

                    and pls explain how KVB and TMB flourishes while the nationalised Indian Bank went bankrupt by mismangement.

                    • As I already explained,activity based micro finance is being done by nationalized banks by way of finance to SHG(Self Help Group)of women for carrying on any activity on cottage industry basis.Since this type of finance is given to thousands of women groups in TN only,the kanthuvatti problem is somewhat under control here.Indian Bank is the leading bank giving this type of finance to women in large numbers.
                      Why are you harping on the credit mismanagement that has happened in the 1990s in Indian Bank?After it was rescued by govt,it is doing fine for the past 20 years.Much water has flown under the bridge Mr Adhiyaman.Wake up and come to terms with the present.

                    • Mr Adhiyaman twice asked me the reason for the failure of Indian Bank in the 1990s.Instead of feeling sad for the plight of a south based public sector bank,he was having sadist pleasure in using choicest epithets in describing the mismanagement and other irregularities in that bank particularly and in the PSBs in general.When I referred about the loss of original character of Grameena Banks(RRBs),even without reading the link provided by me,he blamed socialist policies for the changed character of RRBs.Actually,after 1993,with the advent of liberalization,the Grameena Banks which were started with the sole purpose of financing small farmers,marginal farmers,village artisans,micro industries etc were made to open branches in cities and towns and to finance rich people.In my separate comment,I have described the changes that have taken place in Grameena Banks.No sane person will blame socialist policies for that transformation.
                      Now,I am asking Adhiyaman a pertinent question.Why Global Trust Bank,a private bank started by three well experienced entrepreneurs in 1994 with much fanfare failed and got merged with Oriental Bank of Commerce,a PSB in 2004?At least in the case of PSBs,Janardhan Poojari”s loan melas,political compulsion to finance ineligible borrowers,political pressure against recovery measures and overloading with govt agency services etc can be the excuses for huge NPAs.But,who compelled Ramesh Gelli,former Chairman of Vysya Bank for 10 years,to lend Rs1.4 billion in 2000 to Ketan Parekh,a leadfing stock broker in Bombay Stock Exchange.Parekh used this money to buy GTB”s shares in BSE and NSE.Not only Pareck,the kingpin of the stock market scam 2001,but also several individuals were financed heavily by GTB for their stock market speculations.The people who repeatedly questioned the capability of Gopalakrishnan of Indian Bank kept mum when GTB failed.GTB was promoted by Ramesh Gelli,former Chairman of Vysya Bank,Jayant Madhab,Development Banker who earlier served Asian Development Bank and Sridhar Subasri,a former bank executive and close friend of Gelli.Why their wisdom was not questioned?After the merger of GTB with OBC,the share holders of GTB lost everything.GTB”s IPO was over subscribed 60 times.Rs62.40 billion was invested by over one million investors.Not only that,GTB was also the first among Indian banks to raise Tier 2 capital from international investors like International Finance Corporation(IFC),Asian Development Bank(ADB) and Goldman Sachs.Before GTB”s winding up,Goldman Sachs owned 4% of the bank and IFC owned 5%.
                      In an earlier comment,Adhiyaman praised the ingenuity of ICICI Bank in utilizing the personal guarantee given by Vijay Mallya for the advances granted to Kingfisher Airlines in a consortium model finance by several PSBs along with ICICI Bank.He lamented about the inability of PSBs in getting personal guarantees in such advances.Adhiyaman”s information must be wrong.In a consortium financing model,all member banks will have parri-passu charges over all securities (including personal security)given by the borrower.If ICICI Bank has recovered its dues by utilizing personal security of Mallya,it amounts to fraudulant preference which is illegal.
                      Now,let us praise OBC for getting the following advantages due to merger of GTB.
                      1)1 million new customers.
                      2)Business volume reached Rs 65 billion.
                      3)Branch network crossed 1100.OBC gained increased presence in the south.
                      4)All corporate accounts with salary accounts of corporate employees were transferred.
                      5)OBC enjoyed a huge tax break by acquiring GTB”s NPAs(Non Performing Assets) worth Rs 1.2 million and impaired assets of Rs3 billion.
                      6)GTB shareholders were not issued with OBC shares.
                      GTB shareholders got nothing out of their investment.It was a total loss for them.
                      “It is a big relief that GTB is to be merged with OBC.I have decided never to park any money with a private sector entity.”-A depositor of GTB on the eve of merger.
                      The independent analysts also felt that the GTB saga created an environment of suspicion against private sector banks.This they felt,became one of the reasons for the immense success of PSBs in India
                      I request Adhiyaman”s response to this.

              • //He can understand how the lofty ideal of Grameena Banks got twisted out of shape by policy changes brought about by govt and what is their present position.//

                the policy of LPG did NOT distort the lofty ideals of Grammena Banks or Co-OP banks. But the long decades of ‘socialism’ destroyed basic work ethics and all these institutions were corrupted by political parties in power which pushed their henchmen inside and swindled them by all means. loan melas, frauds are the RESULTS of these mafia like gangs and has nothing to do with liberalsiation polices.

                • The Grameena Banks were started as a result of M.Narasimham Committee recommendations.There was tremendous growth in this sector up to 1990.196 banks with 14500 branches were functioning in 1990.These banks financed 123 crore people.It was a big achievement.The main objective of Grameena banks was to assist agriculture,small and micro industries.These banks were evaluated on commercial terms(forgetting their objectives) and found to have incurred losses to the tune of 621 crores in 1991. Without considering their service to the poor,the losses were magnified.If only micro analysis of their profitability was done,the Govt would have known that individual banks made losses to the tune of 18 lakhs only per year.Commercialization of these banks was started during 1991-92.Out of loan amount earmarked for poor,10% was allowed to be lent to rich people.40%of those loans to rich were allowed on commercial terms.In course of time,the share of poor in loan disbursement got reduced from 100% to 85%.Their operations hitherto confined to one particular local area or district got expanded to other districts and even entire State.Telengana Grameena Bank operates as the only bank of this kind in the Telengana State.Grameen Banks now operate in cities.As on Mar,2014,there are 19082 branches in towns and cities.Before the advent of reforms,deposits were deployed in rural areas.As on Mar,2013,only 72.84% deposits were deployed in rural areas.Out of total loans,only 64.78% were given in rural areas.The remainder has been deployed in towns and cities for the benefit of rich people.”Small loans”are the things of the past.According to a study,there were 20 loans with loans of 100 crores and above,539 loan accounts with loans ranging from 25 crore to 100 crore,30022 loan accounts with loans ranging from 10 lakhs and 25 lakhs.It is quite obvious that loans for more than 5 lakhs are not meant for poor.There was a balance outstanding to the tune of 15937.6 crore as on Mar,2013.These loans were with individual loan amount of 5 lakhs or more.
                  Grameen Banks were started with the objective of assisting 87% of marginal farmers and 70%of small farmers who could not get finance from the organized sector.What happened to these objectives?Whether all small and marginal farmers are now getting bank finance?If it is so,why thousands of farmers are committing suicides?
                  Grameen Banks Reforms Bill,2014 is pending before the Rajya Sabha.As per this Bill,the share capital of the Grameen Bank will be raised from 5 crore to 2000 crore.The private investment will be increased to 49%.The share of sponsoring bank,central govt and state govt put together will be reduced from 100% to 51%.Directors will be selected from private investors apart from central govt,state govt and the sponsoring bank.
                  If the Bill is passed,the term “Grameen Bank”will be a misnomer.The very purpose of starting these banks will get defeated.

              • Sooriyan,தேசிய மயம் ஆக்கப்பட்ட வங்கியில் வேலை செய்யும் சங்கர் இதை கூறும் போது அவருக்கு அனுபவம் இல்லை என்று உதார் விட்டாரு அதி அக்கிரம அதியமானு . நீங்க அதையே கூறினாலும் அனுபவம் பத்தாது என்று பெனாத்துவாறு இந்த அதி அக்கிரம தரகு முதலாளித்துவ கைக்கூலி அதியமானு .

              • till 1991,there was nothing.There was hardly any loan disbursement.

                There was no industry active in the country and all the money was just sitting tight with bank managers having all the power to do nothing,i am the son of a psu bank scale 2 manager with exactly the same profile as you.I can talk about the biggest bank in the country and how poor and inefficient it is,how overloaded were the bank employees.

                If banks dont have profit motive,they can never lend to the right customer.

                service motive is indeed important but banks dont exist to give free food to anyone,thats done by PDS.

                • You do not seem to know the difference between free food and loans to priority sector at concessional terms and interest.Without loan disbursement,these banks would have incurred losses.But it was not so.My dear friend,please explain how they survived until 1991.In his dictionary,only MNCs and big industries are classified as “industries”Read Gurumoorthi”s articles to know about SSIs(now known as SMEs)and their contribution to exports,GDP and creation of employment opportunities.According to him,even after availing credit and capital to the tune of 54 lakh crore in the past 20 years,the formal sector ie big industries created jobs for 20 lakhs only.But the SSI sector,created employment opportunities to crores of people.SSI sector and agriculture was financed by nationalized banks only.Please ask your father to interact.The so called “right customers”financed by banks after 1991 in a big way only landed them in huge NPAs.You can see who is who of “right customers”in the list published by All India Bank Employees”Association.

                  • Mr.Sooriyan,

                    First of all, pls answer to the basic issue raised by this post : how to conquer the evil of Kandhuvatti, and about the idiotic contention by ‘experts’ like Tamil who say PSU banks can replace kanthuvatti. Pls explain why this could not happen all these decades or how it can replace kandhuvatti.

                    We shall get into the merits of PSU / Private banks after finishing this basic issue. Also, i tried to explain why the cost of transactions in MFI is much higher than banks. Pls answer those points.

                    and Badri has explained yesterday about this :

                    http://www.badriseshadri.in/2015/04/blog-post.html
                    மைக்ரோஃபைனான்ஸ்

                    • Mr Adhiyaman is escaping from his responsibilities to answer the rebuttals for every accusations he made against nationalized banks and socialistic policies of previous congress governments.Instead of discussing the basic issue of kandhuvatti,why he blamed nationalized banks.I have read the latest post of Badri.It seems Badri is totally blind about the abundant loans given to self-help groups by nationalized banks in TN.I do not understand how both Badri and`Adhiyaman are totally unaware of such popular and admired service of nationalized banks.Are they aware that credit disbursement to agriculture,micro credit,SMEs and other priority sector loans are being monitored by the Lead Bank appointed by RBI.The District Consultative Committee meets every month under the chairmanship of the District Collector.Representatives of Lead Bank,RBI,NABARD besides VAOs and revenue officials are participating in this meeting.Credit Plan for the district should be drawn every year by the Lead Bank.The DLCC meetings are held to monitor the disbursement to each sector.I was Chief Manager of a nationalized bank at its Kancheepuram Circle Office.I was involved in monitoring the disbursement of priority sector loans in Kancheepuram District.Our bank was the Lead Bank of that district.Along with the Lead District Manager(our bank official)I have attended many such DLCC meetings.There are more than 50 rural branches of our bank operating in that district.All those branches are giving micro credit to SHGs of women.Before talking about any issue,first of all Badri and Adhiyaman should make a study as to what is happening in the field.How Badri is telling that village women are neglected by nationalized banks and those women opened accounts only under Jan Dhan Plan?All nationalized banks are giving micro credit right from late 80s.Zero balance accounts for villagers were opened in 2005 itself under Inclusive Banking.The new name given to this scheme is Jan Dhan.Our bank,which is the Lead Bank in Pondicherry State has opened such zero balance accounts to all villagers in 2005 itself.
                      Only because of the SHG financing the kandhuvatti problem is not that much serious in TN when compared with other States.Of course,there is no 100% coverage.For that, all socially concsious people should prevent Central Govt from closing down rural branches of nationalized banks while implementing liberalization policies.
                      I would request Mr Adhiyaman to interact with any Lead Bank Manager of any nationalized bank (preferably south based )operating at any district centers in TN to know the truth of my above statements.
                      And Adhiyaman,you have only gained only some time to reply for my comments regarding private banks and about the changed character of RRBs.These issues are connected with the basic issue of kandhuvatti.

                    • Mr.Sooriyan,

                      First answer my basic question why PSU Banks could not abolish kanthuvatti even in the areas they operate ? The ‘expert’ Tamil offers this as a ‘solution’. Then i will ‘answer’ your points. Or i can accuse of ‘escaping’ this basic issue of this post and etc !! 🙂

                    • and is MFI as bad as this Vinvu tries to portray ? Sure PSU banks do play their part. but their reach is limited and there is enormous gap which needs to be filled by MFIs and OTHER orgs. Is there any simple solution to this complex issue which also is caused by macro economic imbalances / fiscal deficits, etc ?

                    • At first Adhiyaman was telling that PSU banks have not done anything to abolish kandhuvatti.After my replies,now he says that PSB’s reach is` “limited”.On what basis he says like that only he knows.Govt of India launched many poverty alleviation programmes right from 1970.In 1999,it launched Swarnajayanti Gram Swarozgar Yojana (SGSY)replacing previous schemes like IRDP,TRYSEM,DWCRA,SITRA,GKY,MWS etc.According to this scheme,rural people from BPL families should be mobilized to form Self Help Groups (SHGs)in order to undertake the activity of micro enterprises with bank finance and subsidy and other support from Central/State Govts.50% of SHGs should be formed from SC/ST beneficiaries and 40% of SHGs earmarked for women and 3% for the disabled.In a survey made in 2008,it was found that 65% of the beneficiaries were able to read and write.82% were landless.The scheme is being implemented through District Rural Development Agencies (DRDAs).It is a scheme of the Ministry of Rural Development,Govt of India.This ministry makes the assessment of poverty in each district and determines the amount of fund needed by the district by way of subsidy and for implementation.It releases 75% of the required fund in 2 installments in a year.The rest 25% of funds has to be contributed by individual State Govt.Both the Central and State Govts along with banks provide Promotional support,Financial support,Capacity Building support and Infrastructure Building support(including Marketing support). Mr Adhiyaman cannot miss Mother Theresa Self Help Group”s Marketing Plaza near Valluvarkottam.Due to various poverty alleviation programmes mentioned above including SGSY,the reduction of poverty levels in percentage terms from 54.9% of India”s population in 1973-74 to 36% in 1993-94 and to 26.1% in 1999-2000 could be achieved.Since the inception of SGSY scheme in 1999,approximately 3.13 million groups were formed.Based on the lessons of the implementation of the SGSY model in the last decade,the GOI has restructured SGSY as the National Rural Livelihood Mission (NRLM)from June,2010.

                      Latest data about NRLM as on 2nd April,2015;-
                      No of States transited to NRLM-28 States and 1 Union Territory
                      No of villages in which intensive implementation has started-176603
                      No of households mobilized into SHGs-249.1 lakhs
                      No of SHGs promoted-21.3 lakhs
                      Amount of revolving fund disbursed to SHGs (in lakhs)-46084.1
                      Amount of Community Investment Fund disbursed to SHGs/village organizations (in lakhs)-146001.3
                      Amount of credit mobilized thro”banks during 2013-14-(in lakhs)-1474760.2
                      BANK LINKAGE
                      PSBs-422817 SHGs-Amount in lakhs-987611.94
                      Indian Bank among 24 banks leads with 73710 SHGs-Amount in lakhs-235309.63
                      Next to PSBs,RRBs linked with 210823 SHGs-Amount in lakhs-437901.61
                      Cooperative Banks-191732 SHGs-Amount in lakhs-166293.51
                      Now come Adhiyaman”s favourite private banks with “enormous” social responsibility-
                      32233 SHGs-Amount in lakhs-62695.45
                      Total SHGS linked with banks-857605-Amount in lakhs-1654502.51

                      GEOGRAPHICAL COVERAGE
                      Andhra Pradesh leads with 130521 SHGs Amount in lakhs-411963.64.
                      Karnataka with 187103 SHGs and Amount in lakhs-311491.60 occupies second place among the States.
                      Tamilnadu with 128419 SHGs and Amount in lakhs-298806 has occupied third position.
                      These data are available in Govt of India website-www.nrlmbl.aajeevika.gov.in/NRLM/UI/Achievement/ProjectwiseAchievement.aspx
                      nrlm.gov.in/nrlmlive/outerReportAction.do;jsessionid=EA218F897AAIDE86EDD5209EA075AE92?methoName=showIndex
                      Now Mr Adhiyaman can tell about the reach of PSBs.If he just clicks “poverty alleviation programmes of Govt of India” with an open mind he can find out about various programmes implemented by Govt of India right from 1970(after bank nationalization).
                      Now for the kind information of Mr Badri,”No Frills Accounts(NFAs)were opened in rural areas as per the direction of RBI in 2005.KYC norms were relaxed and zero balance `accounts were opened.At the end of 2010-11,74.4 million accounts with a balance of Rs65.6 billion were there.4.2 million overdraft accounts were there.68% of households had opened NFA accounts in the entire country to receive MGNRES wages.In Andhra Pradesh 79% of households received MGNRES wages thro”these accounts.
                      http://www.ifmrlead.org/cmf/wp-content/uploads/attachments/csy/3166/GovtFinancing-FS.pdf.
                      Thanks for your patience.

            • K.R.Athiyaman,ஏழைகளுக்கு அளிக்கப்படவேண்டிய கடன்களை எல்லாம் ஒட்டுமொத்தமாக பெரு முதலாளிகளுக்கு திருப்பி விடுவிங்க , பின்பு அந்த கடனும் திரும்பி வராது அதற்கு காரணமாக வங்கிகள் தேசிய மயம் ஆக்கபட்டது தான் காரணம் என்று உளருவிங்க ….., ஏங்க அதியமான் இப்படி ? 1969ல் வங்கிகள் தேசிய மயம் ஆக்கபட்டதே, அதன் நோக்கமே ஏழை எளிய மக்களுக்கு நிதி உதவி அளித்து அவர்களை தொழிலில் ஈடுபடுத்தி அவர்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவது தான் என்று இருக்கும் போது அதனை புறம் தள்ளி 1991க்கு பின் வந்த தரகர்களின் அரசு பெருமுதலாளிகளின் நலனை மட்டுமே முதனமையாக கொண்டு செயல்படுவது என்று முடிவெடுத்த பின்பு தானே KF airlines க்கு தேவையின்றி கடன் கொடுக்கபட்டு அது வராத கடனில் சேர்க்கபட்டு உள்ளது தரகு அடிவருடி அதியமான் ?

      • ஏன் ஏன் ஏன் அதியமான் ?நண்பர் தமிழ் கேட்கின்றார் அல்லவா ? சொல்லுங்க அதியமான் ! சொல்லுங்க ! எழைக்கு 30% வட்டி, பெருமுதலாளிக்கு அதிகபச்சம் 15% வட்டி ? ஏன் ஏன் ஏன் அதியமான் ?

        • தமிழ் எந்த விதமான படமும்[பிலிம்] காட்டாமல் , எந்த அந்த தியரி இந்த தியரி என்று அதியமான் போன்று சித்தாந்தங்களையும் நேரடியாக கூறாமல், அதே சமயம் கூர்மையான கேள்விகளை கேட்கின்றார் . பதில் சொல்லாமல் ‘பெரியவர்’ அதியமான் விலகி விலகி ஒடுகின்றார். வாங்கும் கடனில் ஏழைகளுக்கு 30%வட்டி, பெரும் முதலாளிகளுக்கு அடிக பச்சம் 15% வட்டி. அநியாயம் தான். அதியமான் கூறுவது போன்று மைரோ பைனான்ஸ் நிறுவனத்துக்கு transaction and delivery costs 15% என்பது எல்லாம் சும்மா பொய். பிரைவேட் பாங்கிங் செக்டரில் வேலை செய்து பப்ளிக் பாங்கிங் செக்டரில் வேலை செய்யும் எனக்கு “transaction and delivery costs” பற்றி நன்றாகவே தெரியும். ஒன்றுமே இல்லாத எறும்பு கடிக்கு அதியமான் சுண்ணாம்பு தடவி பூச்சி காட்டுகின்றார் அதியமான். Adyaman I am very sorry for your poor transaction and delivery costs knowledge. மேலும் அதியமான் ஒரு இடத்தில் மைரோ பைனான்ஸ் பற்றி கூறும் பொது “லச்சகணக்கான பயனாளிகளில் சிலருக்கு இது[மைரோ பைனான்ஸ்]சரியாக வேலை செய்யாமல், தோல்வி அடைந்திருக்கலாம். (விதி விலக்குகள் அவை).” என்று கூறுகின்றவர் வேறு ஒரு இடத்தில் மைரோ பைனான்ஸ் நிறுவனங்களுக்கு “default ratio” அதிகம் என்று கூறுகின்றார். வங்கிக்கு திரும்பி வராத கடனை தான் “default ratio” என்ற parameterல் சேர்ப்போம். அதிமான் கூறுவது போன்று “default ratio” அதிகம் என்றால் அந்த மைரோ பைனான்ஸ் நிறுவனத்திடம் கடன் வாங்கியவர்கள் செய்யும் தொழில் இலாபம் இல்லாமல் படு நட்டத்தில் நடப்பதாக பொருள். ஆனால் அதியமான் கூறுவது என்ன ?

          “லச்சகணக்கான பயனாளிகளில் சிலருக்கு இது[மைரோ பைனான்ஸ்]சரியாக வேலை செய்யாமல், தோல்வி அடைந்திருக்கலாம். (விதி விலக்குகள் அவை).” என்று.

          அதியமானின் சிந்தனைகள் முரண் படுகின்றதே ஏன் ?

          • பொதுவாக வங்கிகளில் பாதுகாப்பான கடன் என்று சொல்லக்கூடிய Secured Loanகளுக்கு வட்டி விகிதம் குறைவாகவும், கொடுத்த கடன் திரும்பி வருவதில் சிக்கல் இருக்கக்கூடி Unsecured Loanகளுக்கு அதிக வட்டி விகிதமும் வசூலிக்கப்படும். ஒரு பத்தாயிரம் ருபாய் கடன்கொடுக்க வங்கிகளுக்கு ஆகும் அதே செலவு தான் ஒரு பத்து இலட்சம் ரூபாய் கடன் கொடுக்கவும் ஆகிறது. அதனால் பெரிய கடன்களுக்கு விகித அளவில் வங்கிகளால் குறைந்த அளவில் வட்டியை வழங்க முடிகிறது.

            அதே போல ஒரு நூறு பேருக்கு கொடுக்கும் கடனில் 99 பேர் ஒழுங்காக கடனை திருப்பி செலுத்தினால் அது போன்ற நபர்களுக்கு குறைந்த வட்டியில் கடனும், நூற்றில் 80 பேர் மட்டும் திரும்ப செலுத்தும் நிலையில் வட்டி விகிதம் அதிகமாகவும் வசூலிக்கப்படும்.

            அதே சமயம் வட்டி விகிதம் மிக அதிகமாக இருக்கும் பட்சத்தில் கடன் வாங்குபவர்களும் வேண்டுமென்றே கடனை செலுத்தாமல் வீட்டை மாற்றி வேறு ஏரியாவுக்கு செல்வதும் நடைமுறையாக இருக்கிறது. கடனை கேட்கும் கலெக்சன் ஏஜெண்டுகளும் கடன் கட்ட இயலாத அப்பாவிகளை பிழிகின்ற அதே வேளையில் கடனை வேண்டுமென்ற கட்ட கூடாது என்ற முடிவோடு வக்கீலின் துணை கொண்டு ஏமாற்றுகின்ற பிராடு பேர்வழிகளை விட்டு விடுகிறார்கள்.

            பெரும்பாலான வங்கிக்கடன் கொடுக்கும்போதே இன்சுரன்சு பேப்பரிலும் கையெழுத்து வாங்கி விடுவார்கள்.கடன் வாராக்கடனாக ஆகிவிட்டால், கடனாளி இறந்து விட்டால் அந்த பணத்தை இன்சுரன்சு கம்பெனியிடம் வங்கிகள் வாங்கி விடும். சில கடன்களில் கடன் வாகியவர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டால் கூட இன்சூரன்சு கம்பெனி வங்கிக்கு காசு கொடுத்து விடு.

            இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணனை அனைவருக்கும் தெரிந்தே இருக்கும். கமிஷன் கொடுப்பவர்களுக்கு, அது வாராக்கடனாக இருக்கும் என்று தெரிந்தே பல வங்கிகள் கடனை வாரி வழங்கியுள்ளன. விஜய் மல்லையா, சகாரா சுப்புரட்டோ இவர்கள் எல்லாம் கடனை திருப்பி செலுத்த இயலாதவர்களா? இது யார் அப்பன வீட்டுக்காசு? வங்கிகளில் இருப்பது பொதுமக்களின் காசு. அதனை வாராக்கடனாக பணக்காரர்களுக்கு தருவதை எப்படி ஏற்க முடியும?

            கடனை திருப்பி செலுத்த இயலாமல் இருக்கும் அப்பாவிகளுக்கு அதிக நேரம் அளித்து நீண்ட தவணை முறையில் கடனை திரும்ப வசூலிக்கலாம், வேலை இழந்தவர்களுக்கு அந்த வேலை கிடைக்கும் வரை காத்திருந்து மீண்டும் கடனை செலுத்த சலுகை வழங்கலாம். ஆனால் சட்டத்தின் சந்துபோந்துகளுக்குள் நுழைந்து கொண்டு ஏமாற்றும் பிராடு பேர்வழிகளை நிச்சயம் கடுமையாக தண்டித்து கடனை வசூலிக்க வேண்டும்.

            வங்கிகள் நட்டமடைய முக்கிய காரணம் இரண்டு:
            1. பெரிய பணமுதலைகளுக்கு வாராக்கடனாக கோடிகளில் அள்ளிக்கொடுப்பது.
            2. அதிக வட்டிக்கு கடன் கொடுத்து வாடிக்கையாளர்களை கடனை திருப்பி செலுத்த இயலாவண்ணம் பிழிந்தெடுத்து அவர்களை ஓட்டமெடுக்க வைத்து மொத்த கடனும் அம்பெலாகுவது.

            • அதியமான் பதில் கூறியே ஆக வேண்டிய கருத்துக்கள் :

              வங்கிகள் நட்டமடைய முக்கிய காரணம் இரண்டு:
              1. பெரிய பணமுதலைகளுக்கு வாராக்கடனாக கோடிகளில் அள்ளிக்கொடுப்பது.
              2. அதிக வட்டிக்கு கடன் கொடுத்து வாடிக்கையாளர்களை கடனை திருப்பி செலுத்த இயலாவண்ணம் பிழிந்தெடுத்து அவர்களை ஓட்டமெடுக்க வைத்து மொத்த கடனும் அம்பெலாகுவது.

              என்ன நேருக்கு நேர் சந்திக்கும் போது தான் பதில் கூருவிரோ ?

              • ///அதியமான் பதில் கூறியே ஆக வேண்டிய கருத்துக்கள் :///

                இதற்க்கு மேலே எனது பின்னூட்டம் 3.1.1.3.1.1.1 இல் தெளிவாக பதில் சொல்லியிருக்கிறேன்.

                //அதிக வட்டிக்கு கடன் கொடுத்து வாடிக்கையாளர்களை கடனை திருப்பி செலுத்த இயலாவண்ணம் /// வட்டி, அதிக வட்டி என்பதெல்லாம் வங்கிகள் தன்னிச்சையாக நிர்ணியம் செய்யவது அல்ல. ஆர்.பி.அய் கட்டுபாட்டு நிறைய உண்டு. இதைவிட முக்கிய அம்சம் பணவீக்கம் / விலைவாசி உயர்வு விகித்தை ஒட்டியே வங்கி வட்டி விகிதங்கள் இருக்கும்.
                80கள் வரை வீட்டு கடன் 18% என்பது மிக சகஜம். அன்று 18%க்கு வீட்டு கடன் பெற்றவர்கள் பாக்கியவான்களாக கருதுப்படும் அளவுக்கு வெளியே கடும் வட்டி விகிதம்.

                it is impossible to make guys like you who have no memory of the past economic history when inflation, interest rates and poverty were terrible high in India.

                • சில வருடங்களுக்கு முன்னர் STPL – Small Ticket Personal Loan என்று ஐஸிஐஸிஐ, இந்தியா புல்ஸ், ஜி.இ.மணி, சிட்டிபைனான்ஸ் போன்ற நிறுவனங்கள் பத்தாயிரம் ரூபாய் கடனுக்கு 50 சதவீத வட்டி விகிதத்தில் கொடுத்தார்கள். இத்தனை அதிக வட்டியுடன் 5 சதவீத பிராசசிங் பீஸ் என்றும் 1.5 சதவீதம் இன்சுரன்சு என்றும் கழித்து கொண்டு கடன் கொடுத்தார்கள். கடனை உரிய காலத்துக்கு முன்பே முழுபணத்தையும் கொடுத்து தீர்க்க முயன்றால் அதற்கு 6 சதவீத பிரிகுலோசிங் சார்ஜ் என்று வசூலித்தார்கள். இத்தனை அதிக வட்டியில் அவர்சரத்தேவைக்கு கடனை வாங்கி, பின் கட்ட முடியாமல் முழி பிதுங்கி, பின்னர் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை வேறு ஏரியாவுக்கு காலை செய்து போனார்கள். ஒருவர் பின் ஒருவராக பொதுமக்கள் பலர் இந்த நடைமுறையை செய்ய ஆரம்பித்தனர். சிலர் வக்கீல்களின் துணை கொண்டு சட்டரீதியாக வழக்குகளை சந்தித்தனர். அதிக வட்டிக்கு ஆசைப்பட்ட அனைத்து நிறுவனங்களும் முதலுக்கே மோசமாகும் இந்த நிலையை எதிர்பார்க்கவில்லை. ஒட்டுமொத்தமாக அனைத்து நிறுவனங்களும் STPL கடன் கொடுப்பதை நிறுத்தி விட்டனர். பேராசை பெருநட்டமானது.

                  இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் பல கார்பரேட் முதலைகள் வங்கி மேலாளர்களுக்கு எலும்புத்துண்டுகளை வீசி எரிந்து பல கோடிகளை சுவாகா செய்தனர். இங்கு வங்கி மேலாளர்களின் பேராசை கையூட்டு பெறவைத்து வங்கிகளை பெருநட்டமடைய செய்தது.

                  • கற்றது கையளவு,

                    வங்கிகளை பொறுத்தவரை கார்பரேட்களுக்கு அவர்களின் பங்குகளை அடமானமாக பெற்று பெரும் கடன் அளிப்பார்கள்.அது தான் மல்லையா விடயத்திலும் நடந்தது. நட்டத்தில் நடக்கும் அந்த நிறுவனம் KF Airlines ,கடனை திருப்பி அளிக்க இயலாத நிலையில் ,அடமானமாக கொடுத்த அந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பும் சரியும். அதுதான் KF Airlines கடன் பெற்று திருப்பி அளிக்க இயலாத போது நடந்தது. அடமான பங்குகளின் மதிப்பும் சரிந்ததால் கொடுத்த கடனை திரும்ப பெறுவதற்க்கான் வாய்ப்பு தேசிய மயமாக்க பட்ட வங்கிகளுக்கு இல்லாமல் போய்விட்டுது. பங்குகளை அடமானமாக பெறலாம் என்ற விதிமுறையை இயற்றியவர்களை என்ன செய்யலாம் ?

                • ஒரு மண்ணும் தெரியாத அடியமானாகிய நீர் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போன்று உளறுவதில் அர்த்தமே இல்லை

                  //it is impossible to make guys like you who have no memory of the past economic history when inflation, interest rates and poverty were terrible high in India.//

  4. //இதுக்கெல்லாம் ஒரே தீர்வு செம்புரட்சி என்பீர்களே. சரி, அது எப்ப சாத்தியம் என்று யாருக்கு தெரியாது. எத்தனை நூற்றாண்டுகள் ஆகும் என்றும் தெரியாது. அதுவரை இது ‘தற்காலிக’ தீர்வு என்று வச்சிகங்களேன்..// But Athiyaman Theervu is ‘Liberal Capitalism’, that also he never knows when comes, and ironically there is no one example exists in the past and in present to show how liberal capitalism looks like even after 300 years of Capilitalist ruling.

  5. //மக்களின் வறுமைக்கும், இழிநிலைக்கும் காரணம் இந்த சமூக அமைப்பு தான். அதாவது சுரண்டப்பட்டதால் ஏழைகள், சுரண்டியதால் பணக்காரர்கள். இதுதான் இன்றைய சமூக அமைப்பின் அடிப்படை.

    இதை மாற்றியமைக்காத வரை ஏழ்மையை மட்டுமல்ல, ஏழைகளை மூலதனமாக்கி உயிர்பிழைக்கும் யூனூஸ், யூனூசுக்கு புரவலராக ஏகாதிபத்தியங்கள், ஏகாதிபத்தியங்களின் எடுபிடிகளான என்.ஜி.ஓக்களையும் ஒழிக்க முடியாது.// என்ன சமூக அமைப்ப மாற்றி அமைக்கனுமா இது என்ன உங்க வீட்டு பெட் ரூம்ல அழுக்கு பெட் சீட்ட மாத்துற மாறி அவ்வளவு ஈஸியான வேலையாவா நினைச்சுட்டீக அய்யோ அய்யோ ஆமா உங்க வலைப்பூவ எத்தன பேரு படிக்காகனாவது தெரியுமா இருந்தாலும் உங்க தன்னம்பிக்கைய பாராட்டலாம் உங்க உலகத்த மாத்துர நம்பிக்கையும் க்டவுள் நம்பிக்கையும் அடிப்படைல வேற விதமா இருந்தாலும் அதோட முடிவு ஒன்னுதான் பூஜ்ஜியம்…

  6. திரு அதியமான்,
    உங்களின் பதிலை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    //கீழ்கண்ட வரிக்கு உங்களின் மனசாட்சி படி உண்மையான உங்களின் கருத்து என்ன?

    //தற்காலிக வேலைச் சீட்டு பெற்று சுமார் 15 இலட்சம் (மொத்த சிங்கப்பூர் மக்கள் தொகையில் 25%ஹ்கும் அதிகம்) தொழிலாளிகள் அங்கே கொத்தடிமை வேலை செய்கிறார்கள்.//

    • திரு.நாதன்,

      ஆம், தற்காலிக வேலை சீட்டு பெற்று அங்கு வேலை செய்கிறார்கள் தான். ஆனால் கொத்தடிமைகளாக அல்ல. எந்த நேரமும் இந்தியா திரும்ப தடையில்லை (அரேபிய வளைகுடா போல் பாஸ்போர்ட்டுகளை பிடிங்கி வைத்திருந்தால் தான் கொத்தடிமை என்று சொல்ல முடியும்). இந்தியாவை விட அங்கு சம்ப்பளம் மற்றும் வாழ்க்கை தரம் அவர்களுக்கு அதிகம் கிடைப்பதால் அங்கு செல்கிறார்கள். 50 வருடங்களுக்கு முன்பு சிங்கபூரின் நிலை, அதன் தொழிலாள வர்கத்தின் நிலை இந்தியாவை விட மோசமாக தான் இருந்தது. இரண்டாம் உலகப்போரில் முற்றாக அழிந்த பகுதி அது. தென் கொரியா, ஜப்பான், ஹாங்காங், தைவான் போன்ற நாடுகளும் அன்று சிங்கபூரை போல் போரில் அழிந்து, வறுமையில் வாடின. அன்று இந்தியாவின் நிலை இத்தனை மோசமில்லை.
      சரியான பொருளியல் பாதையில் சென்று அந்நாடுகள் தன் வறுமையை அழித்தன. நாம் சொதப்பிவிட்டோம். எனவே இங்கிருந்து அங்கு புலம் பெயர்களிறார்கள்.

      உலக வறுமையை படிப்படியாக தான் குறைக்க முடியும். நூற்றாண்டுகள் ஆகலாம். சரியான அரசியல், பொருளியல் கொள்கைகளை அனைத்து நாடுகளும் பின்பற்றினால் தான் இது சாத்தியம்.
      ஆனால் பல distortions and violations கொண்ட உலகம் இது.

      சரி, சோசியலிச வழியில் செல்வது தான் தீர்வு என்றால், அதை முயன்று தோற்ற செஞ்சீனா, 1978க்கு பின் பொருளியல் கொள்கைகளை ஓரளாவு மாற்றி அபார வளர்ச்சி பெற்று, வறுமையை பெருமளாவு குறைத்தது. இதை பற்றி விவாதிக்கலாமே. வறுமையை அழிக்க வேண்டும் என்பதில் நமக்குள் மாற்று கருத்தில்லை. ஆனால் எவ்வழி அதை சாத்தியப்படுத்தும் என்பதை வரலாற்று தரவுகளில் இருந்து ஆராய்ந்து விவாதிப்பவர்களுடன் மட்டுமே பேச முடியும். வெத்து கும்மியடிக்கும் தொண்டர்களிடம் (உங்களை சொல்லவில்லை) பேச ஒன்றுமில்லை.

      இந்த கட்டுரையை முழுசா படிக்கவும் :

      The world’s next great leap forward
      Towards the end of poverty

      http://www.economist.com/news/leaders/21578665-nearly-1-billion-people-have-been-taken-out-extreme-poverty-20-years-world-should-aim

      Nearly 1 billion people have been taken out of extreme poverty in 20 years. The world should aim to do the same again

      முக்கியமாக இந்த பகுதியை : China (which has never shown any interest in MDGs) is responsible for three-quarters of the achievement. Its economy has been growing so fast that, even though inequality is rising fast, extreme poverty is disappearing. China pulled 680m people out of misery in 1981-2010, and reduced its extreme-poverty rate from 84% in 1980 to 10% now.

        • ///What is your solution for removing inequality?///

          Liberal democracy based market economy with a prudent welfare mechanism. that is the trend worldwide today. and thankfully we have abandoned old ideas of socialism..

          and Which is more important ? removing inequality or removing poverty ? our obsession with inequality kept our poverty rates stagnant until 90s. But shouldn’t the net poverty ratio and absolute number of people in poverty be the most important criterion when we discuss about “growing inequality” ?

          Suppose a nation has 100 % people below poverty line and all living on one square meal a day ; and another nation has 10 % people below poverty line, 80 % middle class and
          10 % in rich category. Statistically, the first nation has most equality of income and what not, than the second nation. So which is better ?

          I suppose, theoritically, with relative statistics, it is possible to prove that war torn and starving Rawanda or Sudan has less ‘income inequality’ than, say Sweden.

          liberal demoracy

      • எளிய ,நேர்மையான கேள்விகளை கூட எதிர்கொள்ள இயலாமல் சலிப்புற்று ,வேதனையில் வாடி வதங்கும் உங்களை போன்றோருக்கு எல்லாம் பின்னுட்டங்கள் எழுதும் ஆர்வம் வந்து இருக்க அவசியம் இல்லை அல்லவா அதியமான்.? வினவு நேயர்களின் கேள்விகளுக்கு பொறுமையுடன் பதில் அளிக்க மீண்டும் முயன்று பாருங்கள் அதியமான்

        //ஆனால் எவ்வழி அதை சாத்தியப்படுத்தும் என்பதை வரலாற்று தரவுகளில் இருந்து ஆராய்ந்து விவாதிப்பவர்களுடன் மட்டுமே பேச முடியும். வெத்து கும்மியடிக்கும் தொண்டர்களிடம் (உங்களை சொல்லவில்லை) பேச ஒன்றுமில்லை.//

  7. //அதியமானுக்கு முதலாளித்துவம் என்றால் என்னவென்றே தெரியாது.//

    //அதியமான் வாழ் நிலையில் ஒரு பாட்டாளி என்பதால் முதலாளித்துவத்தை கனவாக வைத்து இன்பம் காண்கிறார்; அதிலும் இந்த முட்டாள்தனமான கனவை ஓயாமல் மொக்கை விக்கிபீடியா அல்லது சுவாமிநாதன்களின் லிங்குகளால் போட்டு நம்மை வதைக்கிறார்.//
    100% true.

  8. முன்னுக்கு பின் முரணாக பேசுறிங்களே அதியமான்.சிலருக்கு மட்டுமே மைக்ரோ பைனாஸ் விதிவிலக்காக சரியாக வேலை செய்யவில்லை என்று கூறினிர்கள். பின்பு மைக்ரோ பைனாஸ் நிறுவனத்துக்கு திருப்பி வரா கடன் விகிதம் அதிகம் என்று கூருகின்றிர்க்ளே அதியமான். லாஜிக் உதைக்கின்றதே அதியமான். திருப்பி வரா கடன் விகிதம் அதிகம் என்றால் மைக்ரோ பைனாஸ் மூலம் செய்யும் பிசினஸ் flop என்று தானே அர்த்தம் அதியமான்?

    Did you understand the bug in your thinking?

    Feedback 3 K.R.Athiyaman//லச்சகணக்கான பயனாளிகளில் சிலருக்கு இது சரியாக வேலை செய்யாமல், தோல்வி அடைந்திருக்கலாம். (விதி விலக்குகள் அவை). //

    Feedback 3.1.1 K.R.Athiyaman//மேலும் default ratioவும் அதிகம்.//

    • ///லச்சகணக்கான பயனாளிகளில் சிலருக்கு இது சரியாக வேலை செய்யாமல், தோல்வி அடைந்திருக்கலாம். (விதி விலக்குகள் அவை). // தோல்வி என்று நான் சொல்ல வந்தது, கடங்களை திருப்பி கேட்டு நெருக்கியதால் நடந்த தற்கொலைகளை பற்றியும், அதனால் கைது செய்யபட்ட ஊழியர்கள் பற்றியும்.

      Feedback 3.1.1 K.R.Athiyaman//மேலும் default ratioவும் அதிகம்.///// ஆம், அதிகம் தான். அவை willful faultஆ, அல்லது genuine defaultஆக் என்பதை அலச வேண்டும். பலரும் கடனை வேண்டும் என்றோ, அல்லது இதர காரணிகளுக்காக கொடுக்காமல் விட்டு விடும் தன்மை அதிகம் இந்த துறையில். that is default ratio as a percentage of total no of borrowers. அப்படியும் பல குறுங்கடன் நிறுவனங்கள் வெற்றி பெற முடியாமல் திவாலும் ஆகியிருக்கின்றன. அதை எல்லாம் பார்க்காமல், வெத்து பேச்சுகள் இங்கு..

      சரி, இத்தை வேக்கியானம் பேசும் ‘தொண்டர்கள்’, கந்து வட்டியில் சிக்கி அல்லல் படும் கோடிக்கணக்கான இடங்களில் சென்று ‘கேள்வி’ கேட்ட வேண்டும். 120 சதவீத வட்டியை விட 30 சதவீத வட்டி அவர்களை பொருத்த வரை பெரிய வரப்பிரசாதம். 30 சதவீத வட்டிக்கு காரணம், அப்ப தான் போட்ட முதலீட்டுக்கு குறைந்த பட்ச லாபம் ஈட்ட முடியும். நிர்வாக, செயல்முறை செலவுகள் மிக மிக அதிகம் என்பதால், வட்டி விகிதம் 30 சதவீத அளவு இருக்கிறது. 1000 பேர்களுக்கு 500000 ரூபாய்யை கடனாக அளித்து, பிறகு வசூலிக்க ஆகும் செலவை விட ஒரே நபர் / நிறுவனத்திற்க்கு அதே 5 லச்சத்தை கடனாக அளித்து, பிறகு வசூலிக்கும் செலவு 100 மடங்கு கம்மியாக இருக்கும். இந்த எளிய விசியத்தை ‘புரிய’ வைக்க இதுக்கு மேல் யாராலும் முடியாது.

      • மைரோ பைனாஸ் என்ற நிதி மூலதனமே தவறானது அதியமான். அவர்கள் கோரும் கடன்க்கான வட்டி விகிதமே எதார்த்தத்துக்கு புறம்பாக இருக்கும் போது அதனை எப்படி திருப்பி கட்டுவார்கள் ? சரி default ஆகும் கடன்கள் மூலம் மைரோ பைனாஸ் நிதி நிருவனமே திவால் ஆவதாக கூருகின்றிர். இந்தகைய திவால் ஆகும் நிலையிலும் மேலும் மேலும் மைரோ பைனாஸ் நிறுவனத்தை நடத்தவேண்டிய அவசியம் என்ன அதியமான் ?

        கடைசியில் ஏழைகள் தான் வாங்கிய கடனை default ஆகி விடுகின்றார்கள் என்று கூடிவிட்டிர்கள். அப்படிஎன்றால் பெரு முதலாளிகள் பெற்ற கடனுக்கான default விகிதம் அதிகம் இல்லையா அதியமான் ?பெரு முதலாளிகளின் குறைந்த வட்டி கடனுக்கான default விகிதம் அதிகம் என்பதற்கு ஆதாரம் வேண்டுமா அதியமான் ?

        //ஆம், அதிகம் தான். அவை willful faultஆ, அல்லது genuine defaultஆக் என்பதை அலச வேண்டும். பலரும் கடனை வேண்டும் என்றோ, அல்லது இதர காரணிகளுக்காக கொடுக்காமல் விட்டு விடும் தன்மை அதிகம் இந்த துறையில். that is default ratio as a percentage of total no of borrowers. அப்படியும் பல குறுங்கடன் நிறுவனங்கள் வெற்றி பெற முடியாமல் திவாலும் ஆகியிருக்கின்றன. அதை எல்லாம் பார்க்காமல், வெத்து பேச்சுகள் இங்கு..//

  9. Brilliant Discussion By Mr. Tamil and Mr.Shankar. keep it up friends .Go ahead. But Mr K.R.Athiyaman sir is Struggle to survive in this debate. Very bad situation for him.

  10. ஆம்.பத்ரி ஒரு தேர்ந்த குற்றவியல் வழக்குரைஞரை போல புத்திசாலித்தனமாக நடந்து கொள்கிறார்.

    வினவு தளத்தை அவர் படிக்கிறார் என்பதையும்,கிழக்கு பதிப்பகம் குறித்து வந்த விமரிசனங்களுக்கு ஓரிரு முறை அதில் பின்னூட்டம் எழுதியிருக்கிறார் என்பதையும் நாம் அறிவோம்.அவரது வலைப்பக்கத்தின் முகப்பிலேயே வினவு கட்டுரைகளுக்கு இணைப்பும் கொடுக்கப்படுகிறது.ஆகவே இந்த பதிவை ,அதிலும் தலைப்பிலேயே அவரையும் அதியமானையும் குற்றம் சாட்டும் இந்த பதிவை நிச்சயம் அவர் படித்திருப்பார் எனபது தெளிவு.ஆனாலும் ஒரு பதிலும் சொல்லாமல் கள்ள மவுனம் காக்கிறார்.குற்றவியல் வழக்கறிஞர்கள் தங்கள் தரப்புக்கு பாதகமான அம்சங்கள் பற்றி குறுக்கு விசாரணையில் ஒரு கேள்வி கூட கேட்க மாட்டார்களாம்.அது போன்று இருக்கிறது பத்ரியின் கள்ள மவுனம்.அதுனாலதான் இங்க இவ்வளவு அமளி துமளி நடந்தாலும் ஒரு ஓரமாக உக்காந்து மிக்சர் தின்னுட்டு இருக்காரு.

    பாவம் அதியமான்தான் ஓட்டைப்பானையில நண்டை ஓட விட்ட மாதிரி கடபுட கடபுட என்று எதையாவது சொல்லி சமாளிக்க பாக்குறாரு.பத்ரியில் பாதியளவு தேறியிருந்தால் கூட முதல் பின்னூட்டத்தோட அவர் நிறுத்தி இருப்பாரு.அதுல ஓரளவு சமாளிச்சுருக்காறு.ஆனாலும் விட்டேனா பார்னு தொடரும்போதுதான் அவர் பற்றிய கணிப்பை உண்மையாக்காமல் வுட மாட்டாரோன்னு தோணுது.
    \\அதியமான் வாழ் நிலையில் ஒரு பாட்டாளி என்பதால் முதலாளித்துவத்தை கனவாக வைத்து இன்பம் காண்கிறார்; அதிலும் இந்த முட்டாள்தனமான கனவை ஓயாமல் மொக்கை விக்கிபீடியா அல்லது சுவாமிநாதன்களின் லிங்குகளால் போட்டு நம்மை வதைக்கிறார்.

    பத்ரி வாழ்நிலையில் ஒரு முதலாளி என்பதால் முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் கனவின் மாயைகளை மக்கள் உணர்ந்து கொண்டால் தனது வாழ்நிலை கேள்விக்குள்ளாக்கப்படுமென்பதை நன்கு உணர்ந்தவர். அதனாலேயே ஒரு கிரிமினல் வழக்கறிஞர் போல புத்திசாலித்தனமாக முதலாளிகளின் கருத்துக்களுக்காக வாதிடுவார். //

    • ஆமாம் நண்பர் திப்பு , உண்மையை சொல்வது என்றால் அதியமான் அளித்த முதல் பின்னுட்டத்திலேயே மைரோ பைனான்ஸ் விசயத்தில் தன் தவற்றை ஏற்று கொண்டு இருந்து இருப்பார் என்றால் சங்கர் இடமும் ,தமிழ் இடமும் இந்தளவுக்கு அதியமான் முழி பிதுங்கி,மாட்டிக்கொண்டு இருக்க மாட்டார் . அதியமானுக்கு தவற்றை ஏற்றுக்கொள்வதில் ஈகோ பிரச்சனை இருக்கின்றது .

    • ///பாவம் அதியமான்தான் ஓட்டைப்பானையில நண்டை ஓட விட்ட மாதிரி கடபுட கடபுட என்று எதையாவது சொல்லி சமாளிக்க பாக்குறாரு.பத்ரியில் பாதியளவு தேறியிருந்தால் கூட முதல் பின்னூட்டத்தோட அவர் நிறுத்தி இருப்பாரு.அதுல ஓரளவு சமாளிச்சுருக்காறு.ஆனாலும் விட்டேனா பார்னு தொடரும்போதுதான் அவர் பற்றிய கணிப்பை உண்மையாக்காமல் வுட மாட்டாரோன்னு தோணுது.///

      திப்பு,

      Very many thanks for your ‘compliments’ !! 🙂 யார் ஓட்டை பானை, யார் அரை வேக்காடு என்பதை அமைதியாக படிக்கும் வாசகர்கள் முடிவு செய்து கொள்வார்கள். நீங்க ’முழங்க’ வேண்டாமே !! 🙂

      கந்து வட்டிகாரர்களை ‘அழித்தொப்பது’ தான் ஒரே தீர்வு என்று முன்பு தர்மபுரியுல் நகஸ்பாரிகள் முயன்றார்கள். ஆனால் உண்மையில் real rate of interests (not govt fixed rates) ஏன் இந்தியாவில் மட்டும் இத்தனை அதிகமாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள கொஞ்சம் கிட்னி வேண்டும். inflation rates, interest rates, exhcnage ratesகளுக்கு இடையே உள்ள தொடர்பையும், பண வீக்கம் ஏன், அதற்க்கும் பட்ஜெட் பற்றாகுறைக்குமான காரணிகளையும் ; ஜெர்மனி போன்ற நாடுகளில் ஏன் ‘கந்து வட்டி’ இல்லை என்பதையும், வங்கி துறை இந்தியாவில் எப்படி அதீத கட்டுபாடுகளினால், lack of debt recovery mechanisms, high operating costs, high transaction costs in rural areas due to rigid labour laws within banking sector என்றெலாம் அலச வேண்டும். மேலும் மைக்ரோ கடன் நிறுவனங்களின் பாலஸ்ன் ஷீட்டுகள் என்ன சொல்கிறன, அவைகளின் நிகர லாப / நட்ட விகிதங்கள் என்ன பற்றியும் தான். கிரம்மீன் வங்கிக்கு நோபல் பரிசு அளித்த ‘கேனையன்களுக்கு’ ஏன் உங்களை போல் ‘மெய்ஞானம்’ இல்லை என்பதையும் தான் !! 🙂

      • Mr Adhiyaman should explain as to how rigid labour laws within banking sector that too in rural areas affect the banking sector?What are all his expectations from banks in rural areas and how rigid labour laws affect that sort of services?

    • கவலைப்படாதீங்க திப்பு, பத்ரி இப்பத்தான் மிரட்டலா அறிவிப்பு கொடுத்துருக்காரு….யூனுசுக்கு கோவில் கட்டுவாரா, வாழ்க்கை வரலாற்று புக்கு போடுவாரான்னு பாப்போம்.

      //Badri Seshadri
      33 mins ·

      வினவில் வெளியான இந்தப் பதிவுக்கு நான் கட்டாயம் எதிர்வினை எழுதுவேன். இந்த வாரம்….

      https://www.vinavu.com/…/muhammed-yunus-athiyaman-badri-to-…/
      Like · Comment · Share

      Yuva Krishna and 5 others like this.

      Yuva Krishna குறுங்கடன் குறித்த வினவின் கருத்து ஏற்புடையதல்ல.

      குறுங்கடன் எத்தனை ஏழைகளின் வாழ்வை மாற்றியமைத்திருக்கிறது என்பதற்கு குறைந்தபட்சம் பத்து சாட்சிகளையாவது நேரில் நிறுத்த முடியும்.

      குறுங்கடனை ஏதோ மீட்டர் வட்டி ரேஞ்சுக்கு பேசுவது சரியல்ல.
      26 mins · Like

      Tesla Ganesh அரசாங்கம் என்றாலே சில அடையாளப்படுத்தப் பட்டவர்களுக்கு காசை இலவசமாக அள்ளி வீசவேண்டும் என்று நினைப்பவர்களை என்ன செய்ய முடியும்?
      6 mins · Like
      //

  11. அதியமான் என்ன உமக்கு மறை கழன்று விட்டதா ? என்னுடைய பின்னுட்டம் 3.1.1.1ல்

    “எப்படி பார்த்தாலும் Scenario I [per day 200pages ]க்கும் Scenario II [per day 1000pages ]க்கும் இடைபட்ட நிலையில் தான் ஜெராக்ஸ் பிசினஸ் நடக்க போகுது ,எனவே மாத நட்டம் rs 5,000[Scenario I] ல் இருந்து மாத இலாபம் rs 5,000 வரைக்கும் இடையில் தான் பிசினஸ் நடக்கப்போவுது. இத்தகைய சூழலில் எப்படிங்க rs 50,000 க்கு மாத வட்டி rs 1250 யையும் கட்டி குடும்பத்தையும் நடத்துவது அதியமான் ? இதற்கு பதில கூறுங்க முதலில் .மாற்று வழியை பின்னால பார்க்கலாம். ”

    என்று கேள்வியை எழுப்பி இருந்ததை படிக்கவில்லையா அதியமான்.
    //எங்க நிருபித்தீக ?\\

    தேசிய மையமாக்க பட்ட வங்கிகள் தான்ஏழைகளுக்கு வணிகம் செய்ய ,தொழில் செய்ய கடன் கொடுக்க வேண்டும் . அப்படி அவர்கள் கொடுபதில் அதியமானுக்கு எங்க வலிக்குது ? பெரு முதலைகள் ,முதலாளிகள் பெரும் பெருங்கடனுக்கு எல்லாம் operating cost ,recovery cost ஏதும் இல்லையா அதியமான் ?

    //சரி, அப்ப மாற்று வழி தான் என்ன ?

    • ///தேசிய மையமாக்க பட்ட வங்கிகள் தான்ஏழைகளுக்கு வணிகம் செய்ய ,தொழில் செய்ய கடன் கொடுக்க வேண்டும் . அப்படி அவர்கள் கொடுபதில் அதியமானுக்கு எங்க வலிக்குது ? ////

      ரொம்ப புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து கொண்டு தொடர்ந்து உள்ர கூடாது. நடைமுறையில் இது சாத்தியமில்லை என்பதால் தான் இத்தனை விவாதமே. போகாத ஊருக்கு வழி சொல்வதில் வல்வர்கள் நிறைந்திருக்கு சபை இது. வங்கி கிளைகளின் எண்ணிக்கை இந்தியாவில் எத்தனை ? மக்கட் தொகை எத்தனை ? கிராமங்களில் இருக்கும் தேசியமயமாக்கபட்ட வங்கிகளினாலும் ஏன் இதுவரை கந்துவட்டியை அவர்கள் இயங்கும் பகுதியில் ஒழிக்க முடியவில்லை. அது போன்ற வங்கியிலே வேலை செய்பவர்களுக்கு தான் புரியும்.

      /// இத்தகைய சூழலில் எப்படிங்க rs 50,000 க்கு மாத வட்டி rs 1250 யையும் கட்டி குடும்பத்தையும் நடத்துவது அதியமான் ?/// 50,000 எல்லாம் யாருக்கும் குறுங்கடன் வழங்குவதில்லை. ஆயிரம், 3000 என்ற அளவில் தான் அவை. மேலும் இதிலேயே வாழமுடியாத என்றால் பிறகு எங்கும் நிறைந்திருக்கும் பாராபரம் போல் எல்லா பகுதிகளிலும் இன்றும் தொடரும் கந்துவட்டிகாரர்களிடம் 150% இல் வாங்கி எப்படி ‘வாழ்கிறார்களாம்’ ? 150% வட்டியை விட 30% வட்டி அவர்களுக்கு பெரிய வரப்பிரசாதம் என்பதை உம்மை போன்ற மேதைகளிடம் விளக்க கார்ல மார்க்ஸ் வர வேண்டும் !! 🙂

      • பெரு முதலாளி வாங்கும் கடனுக்கு 15% வட்டி , ஏழைகளுக்கு 30% வட்டி என்பதை ஞாயபடுதும் ______ தான் பாரதிதாசனின் பாட்டை பாடிகாட்டுது ______

      • K.R.Athiyaman,

        அதியமான் முட்டாள் மாதிரியே எப்போதும் பேசுவிர்கலா ?

        Under the current norms, MFIs operating as non-banking financial companies (NBFCs) are not allowed to lend more than Rs.50,000 to individuals. RBI only regulates those MFIs that operate as NBFCs.

        மேலே உள்ள ஆங்கில வாக்கியத்தின் பொருள் உமக்கு புரிந்ததா ? Rs 50,000 க்கு மேல் தான் மைரோ பைனானஸ் கடன் வழங்க கூடாது என்று RBI கூறியுள்ளது. Rs 50,000 வரை வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை.

        //50,000 எல்லாம் யாருக்கும் குறுங்கடன் வழங்குவதில்லை. //

      • வாயில் வந்ததை எல்லாம் மலம் மாதிரி கழிவிர்களா அதியமான் ? தேசிய மயம் ஆக்க பட்ட வங்கிகளை பொருத்தவரை அவர்களுக்கு ஏழைகளுக்கு தொழில் கடன் வழங்க்குவதில் ஒன்றுமே பிரச்சனை கிடையாது. மைரோ பைனாஸ் நிறுவனங்களின் கிளைகளின் மொத்த எண்ணிக்கையை விட அனைத்து தேசிய மயம் ஆக்க பட்ட வங்கிகளின் எண்ணிக்கை கிராம அளவிலும் ,ஒட்டு மொத்த இந்திய அளவிலும் அதிகம் என்பது கூட உமக்கு தெரியாமல் வினவுக்கு வந்து உளறுவது ஏன் அதியமான ?

        //ரொம்ப புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து கொண்டு தொடர்ந்து உள்ர கூடாது. நடைமுறையில் இது சாத்தியமில்லை என்பதால் தான் இத்தனை விவாதமே. போகாத ஊருக்கு வழி சொல்வதில் வல்வர்கள் நிறைந்திருக்கு சபை இது. வங்கி கிளைகளின் எண்ணிக்கை இந்தியாவில் எத்தனை ?//

  12. //முதலாளித்துவத்தின் பிரச்சாரகர் திருவாளர் அதியமான் (உண்மையில் முதலாளித்துவம் என்றால் என்னவென்றே அறியாதவர்)//
    30%வட்டி வரப்பிரசாதம் என்றால் மேலே குறிப்பிட்டது ரொம்பச்சரியே

Leave a Reply to தமிழ் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க