privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விமாநகராட்சிப் பள்ளிகளின் தேர்ச்சி வீதம் வீழ்ச்சி - பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்

மாநகராட்சிப் பள்ளிகளின் தேர்ச்சி வீதம் வீழ்ச்சி – பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்

-

தனியார் பள்ளிகளின் கொள்ளைக்காக சென்னைப் பள்ளிகளின் தரத்தைக் குலைத்த மாநகராட்சி கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு!

சென்னையில் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்

பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்
சென்னைப்பள்ளிகளின் தரத்தைக் குலைத்த மாநகராட்சி கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு !

ரு நாட்களுக்கு முன்னர் வெளியான +2 தேர்வு முடிவுகளின் படி சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் சென்ற ஆண்டின் 88.98% லிருந்து 85.30 % ஆக குறைந்துள்ளது. ஒரு வகையில் சொன்னால் திட்டமிட்டு குறைக்கப்பட்டுள்ளது.

ஆம், தனியார் பள்ளிகளின் முதலாளிகளின் லாபவெறிக்காகவே திட்டமிட்டு ஏழைமாணவர்களின் படிப்பு பாழாக்கப்பட்டுள்ளது. அரசு விதிப்படி எந்தப்பள்ளியிலும் கழிவறை , ஆய்வகம், நூலகம், ஆசிரியர் உள்ளிட்ட கட்டுமான வசதிகள் எதுவும் இல்லை. இவ்வாறு படிக்கின்ற சூழலே இல்லாத இடத்தில் எப்படி மாணவனால் படிக்க முடியும்? தேர்ச்சி விகிதம் குறையாமலா இருக்கும்? இதைக்காரணம் காட்டி பெற்றோர்கள் அரசுப்பள்ளியில் மாணவர்களை சேர்க்காமல் விடுவர், அதைக் காரணமாகக் கொண்டு மாநகராட்சிப் பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்க்கிறது சென்னை மாநகராட்சி.

பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்
ஆய்வக வசதிகள் இல்லாமல் அறிவியலில் தேர்ச்சி கிடைக்குமா ?

ஜெயலலிதாவுக்கு பஜனை பாடவே நேரம் போதாத மேயர் மற்றும் அமைச்சர்கள் எப்படி மாநகராட்சிப் பள்ளிகளைப் பற்றிப் பேசுவார்கள் ? ஏழை எளிய மாணவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட மாநகராட்சி பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்ப்பதை நோக்கமாகக் கொண்ட கல்வித்துறை அதிகாரிகள் முதல் குற்றவாளிகள் என்பதை அம்பலப்படுத்தி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் சென்னை மாநகராட்சி முன்பு 09-05-2015 காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்
ஏழை வீட்டுப் பிள்ளைகளை, தனியார் முதலாளிகள் கொள்ளையடிக்க திட்டமிட்டு பெயிலாக்குறான் !

நடவடிக்கை எடு ! நடவடிக்கை எடு !
தனியார் பள்ளிகளின் கொள்ளைக்காக
சென்னைப்பள்ளிகளின் தரத்தைக் குலைத்த
மாநகராட்சி கல்வி அதிகாரிகள் மீது
நடவடிக்கை எடு ! நடவடிக்கை எடு !

வாத்தியார் இல்லை; வகுப்பறை இல்லை
ஆய்வகம் இல்லை ; நூலகம் இல்லை
படிக்கின்ற சூழல் கொஞ்சமும் இல்லை
ஆய்வக வசதிகள் இல்லாமல்
அறிவியலில் தேர்ச்சி கிடைக்குமா ?
கணக்கு வாத்தியார் இல்லாமல்
கணக்கில் தேர்ச்சி கிடைக்குமா?

மாநகராட்சிப் பள்ளி
“மாநகராட்சிப் பள்ளிகளின் வீழ்ச்சி, மேயர் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களை சந்திக்கப் போவதில்லை” – பத்திரிகை செய்தி

சரியுதய்யா சரியுது
மாநகராட்சி மாணவர்களின்
தேர்ச்சி விகிதம் சரியுது!
பெயிலாக்குறான் ! பெயிலாக்குறான்!
ஏழை வீட்டுப் பிள்ளைகளை
திட்டமிட்டு பெயிலாக்குறான்!
தனியார் முதலாளிகள் கொள்ளையடிக்க
திட்டமிட்டு பெயிலாக்குறான் !

அம்மாவுக்கு பஜனை பாடும்
அமைச்சர்களுக்கு அவசியம் இல்லை
தேர்ச்சி விகிதம் அவசியம் இல்லை

பள்ளிகளை இழுத்து மூடவும்
தனியாருக்கு தாரைவார்க்கவும்
கல்வி அதிகாரி பதவி எதற்கு?

கல்வி இப்போது கடைசரக்காச்சு
தனியார் …… முதலாளிகளுக்கு
அரசுப்பள்ளிகள் படையலாச்சு..

பலி கொடுத்த கவர்மெண்டை
பழிவாங்க வீதியில் இறங்கு
மாணவர்களே ! பெற்றோர்களே !

குடிக்கச் சொல்லுறான் கலெக்டரு
பெயிலாக்குறான் அதிகாரி

எதிர்நிலை சக்தியாய் மாறிவிட்ட
அரசு…………..கட்டமைப்பை
அடித்து நொறுக்காமல் தீர்வு இல்லை
அமைப்பாக…….. இணையாமல்
கல்வி உரிமையும் கிடைப்பது இல்லை!

என்ற முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

மாநகராட்சி சிக்னலில் இருந்து பேரணியாக வந்த தோழர்கள் மாநகராட்சியின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 30 நிமிடங்கள் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பு.மா.இ.மு.வின் சென்னை மாநகரக் கிளையின் இணைச் செயலர் தோழர் மருது கண்டன உரையாற்றினார்.

பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்
எதிர்நிலை சக்தியாய் மாறிவிட்ட அரசு…………..கட்டமைப்பை அடித்து நொறுக்காமல் தீர்வு இல்லை

அவர் தனது உரையில் “சென்னைப்பள்ளிகள் எதற்காக ஏற்படுத்தப்பட்டதோ அதற்கு எதிராகவே மாநகராட்சி கல்வி அதிகாரிகள் வேலை செய்கின்றனர். கடந்த ஆண்டினை விட 3% தேர்ச்சி விகிதம் குறைவு என்பதை 3% தானே என்று பார்க்க முடியாது. சென்னைப் பள்ளிகளை சீரழித்து அதன் மூலம் அவைகளை தனியாருக்கு தாரைவார்க்கும் நோக்கத்திலிருந்து அதை எதிர்க்க வேண்டிய அவசியத்திலே உள்ளோம்.

மொத்தமாக டாஸ்மாக் மூலம் அனைவரையும் குடிக்கச் சொல்லும் அதே அரசு , உழைக்கும் வர்க்கத்தினரின் பிள்ளைகளை பெயிலாக்குகின்றது, தனியார் முதலாளிகளின் லாபவெறிக்காக. மக்களுக்கு முற்றிலும் எதிராய்ப் போன இந்த அரசுக்கட்டமைப்பை அடித்து நொறுக்காமல் உழைக்கும் மக்களுக்கு விடிவு இல்லை” என்று பேசினார்.

பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்
“கடந்த ஆண்டினை விட 3% தேர்ச்சி விகிதம் குறைவு என்பதை 3% தானே என்று பார்க்க முடியாது.”

தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததாகக் கூறி அனைவரையும் போலீசு கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்து இருந்து 3 மணிக்கு விடுவித்தது.

தேர்ச்சி விகிதம் குறைவு என்பதை வெறும் செய்தியல்ல, அது நம்முடைய பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் சதி என்பதை மெய்ப்பிக்கும் விதமாகவும் அதற்கு எதிராக போராடுவது என்பது அரசுக்கட்டமைப்பை நொறுக்குவதற்காகவே இருக்கவேண்டும் என்பதை அறிவிக்கும் விதமாகவும் பு.மா.இ.மு.வின் ஆர்ப்பாட்டம் அமைந்தது.

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை.
9445112675

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க