Monday, June 23, 2025
முகப்புசெய்திமீனவர்களும் முசுலீம்களும்தான் முதல்ல வந்தாங்க !

மீனவர்களும் முசுலீம்களும்தான் முதல்ல வந்தாங்க !

-

சென்னை ஜாபர்கான் பேட்டையிலிருந்து கோட்டூர்புரம், வேளச்சேரி ராம் நகர் பகுதி வரை சென்று பார்த்ததில் மீனவ இளைஞர்களையும், பகுதி இளைஞர்களையும், முஸ்லீம் அமைப்பினரையும் மக்கள் நன்றியோடு பார்க்கிறார்கள்.

வீட்டில் குடிக்க வைத்திருந்த தண்ணீர் கேன்களை கட்டி அதன் மூலம் தன் குழந்தைகளை காப்பாற்றிய இளைஞனை தன் தெய்வம் என்று போற்றுகிறார் ஒரு தாய். ”மீனவர்கள் தான் சார் எங்கள காப்பாத்துனாங்க”, ஜாபர்கான்பேட்டை கூலிதொழிலாளிகள் முதல் ராம்நகர் ஐ.டி ஊழியர்கள் வரை இதை கூறுகிறார்கள்.

அடுத்தபடியாக மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருபவர்களை பற்றி மக்கள் நன்றியோடு கூறினார்கள். அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்களின் பங்கு குறித்து சிலாகித்து பேசுகிறார்கள். சபரிமலைக்கு மாலை அணிந்திருக்கும் செட்டித்தோட்டம் பகுதி இளைஞர்
ஒருவர் நம்மிடம “மக்கள் எல்லாரும் உதவி பண்றாங்க. மத்தவங்க கூட தண்ணி கொஞ்சம் வடிய ஆரம்பிச்ச பின்னாடிதான் நிவாரணம் கொண்டு வந்தாங்க. ஆனா இவ்ளோ தண்ணியிருந்தப்ப முஸ்லீம் ஆளுங்கதான் மரபலகையில மிதவை செஞ்சு சாப்பாடு கொண்டாந்தாங்க.” என்று கூறினார். நாம் சென்று வந்த பல பகுதிகளிலும் நிவாரண் பணியில் ஈடுபவர்களில் பரவலாக முஸ்லீம் மக்களை பார்க்க முடிந்தது.

முசுலீம்கள் என்றால் பயங்கரவாதிகள், குண்டு வைப்பவர்கள், சந்தேகத்திற்குரியவர்கள் என்பதில் ஆரம்பித்து மணம், குணம், உணவு வரை ஆர்.எஸ்.எஸ் உருவாக்கி வைத்திருக்கும் பொதுப்புத்தி தவறானது என்பதை ஓரளவிற்கேனும் ‘இந்துக்கள்’ உணர்வார்கள் என்பது உறுதி. ஆர்.எஸ்.எஸ் அவாள் கூட்டம் கரண்டை காலில் தண்ணீர் கூட நனையாமல் நாரதகானசபாவில் வெங்காயம் வெட்டி தயிர்சாதம் போட்ட சேவையெல்லாம் முசுலீம் இளைஞர்கள் செய்திருக்கும் அளப்பரிய பணியின் கால் தூசுக்கு கூட பெறாது என்பதும் நிச்சயம்.  உடன் சென்றதாக இருக்கட்டும், குப்பைகளை அகற்றுவதாக இருக்கட்டும், நிவாரணப் பொருட்களை உடன் திரட்டி விநியோகித்தாக இருக்கட்டும் அனைத்தும் திட்டமிட்ட முறையில் உரிய மக்களுக்கு போய்ச் சேர்ந்தது.

பாரிமுனையின் கறிக்கடை சங்கத்தினர் தினமும் 2000ம் பேருக்கு கோழிக்கறி பிரியாணியே போட்டிருக்கிறார்கள். இருப்பினும் அவையெல்லாம் இந்துமதவெறியர் போல மிகுந்த விளம்பர நோக்கத்திற்காக செய்யப்படவில்லை. பலருக்கும் தெரியாது. முசுலீம்கள் என்றால் தனித்திருப்பார்கள், ஒட்டமாட்டார்கள் என்ற பொய்ப்பிரச்சாரமும் இங்கே தகர்க்கப்பட்டிருக்கிறது.

மேற்கு சைதாப்பேட்டையை ஒட்டியுள்ள செட்டித்தோட்டம் பகுதி அடையாறு ஆற்றை ஒட்டி அமைந்திருக்கிறது.  நகரத்தில் கூலிவேலை செய்யும் மக்களின் குடிசைகள் மற்றும் சிறுவீடுகளுக்கு சற்று தொலைவில் பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளும் இருக்கின்றது. இருவர்க்கத்தினரையும் புரட்டிப் போட்டிருக்கிறது வெள்ளம்.

தங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னல்கள் வழியே குப்பத்து இளைஞர்களிடமும் மற்றவர்களிடமும் அபயக்குரல் எழுப்புவோம் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள்,  அடுக்குமாடி குடியிருப்புவாசிகள்.  “அவர்கள் நிறையவே உதவி செய்தார்கள்”என்று குடிசைப் பகுதி இளைஞர்களை ஆங்கிலத்தில் வாழ்த்துகிறார்கள். இருப்பினும் இந்த வெள்ளம் தங்களையும் கையேந்த வைத்துவிட்டதாக பொருமவும் செய்கிறார்கள்.

வளர்ச்சி என்ற பெயரில் வீடுகள், கார்கள், நுகர்வுப் பொருட்கள் அடங்கிய உலகமயமாக்கத்தை ஆதரித்தவர்கள் இன்று ஏரிகள் ஆக்கிரமிப்பையும், ரியல் எஸ்டெட் வீடுகளையும், மியாட் மருத்துவமனையின் படுகொலையையும் கண்டித்து பேசுகிறார்கள். எட்டிப்பார்க்காத அரசு குறித்தும் அவர்களுக்கு விமரிசனமிருக்கிறது. ஒரு சிலரோ பகுதி வாழ் மக்களை அணிதிரட்டி நிவாரணப்பணிகளையும் கூட செய்கிறார்கள். அடுக்கு மாடிகளில் தனித்திருந்து வாழப்பழகியவர்கள் இன்று கூட்டாக வாழவேண்டிய அவசியத்தை உணர்ந்திருக்கிறார்கள், கொஞ்சமேனும்.

chennai-flood-photos-2
ரியல் எஸ்டேட் ஆக்கிரமிப்பின் விளைவினால் பேரழிவைக் கொண்டு வந்த அடையாறு சற்று அமைதியாக ஓடுகிறது.
chennai-flood-photos-1
வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட பொருட்களோடு விளையாடும் சிறுவர்கள்- ஜாபர்கான்பேட்டை கரையோரம் கட்டப்பட்டுவரும் வணிகவளாகத்தில்.

 

settithottam-flood-damages-photo-8
வெள்ளத்தில் அடித்து நொறுக்கப்பட்ட கரையோர வீடுகள்.

 

chennai-flood-photos-6
கடையில் இருப்பு வைத்திருந்த பொருட்களை இழந்து கரையோர வியாபாரிகளும் பெரும் நஷ்டத்திற்குள்ளாகியிருக்கிறார்கள் – சூளைப்பள்ளம் பகுதி கடையின் முன் பயன்படுத்த முடியாத பொருட்களை குவித்து வைத்திருக்கும் காட்சி

soolaipallam-flood-damages-photo-1

 

chennai-flood-photos-12

chennai-flood-photos-4
சுத்தியிருக்குற தண்ணியில தான் யூரின் போனோம். டாய்லட் போறது இடமில்லால்லாத காரணுத்துக்காகவே சாப்பிடாம இருந்தோம். பீரியட் சமயத்துல வேற துணிக்கூட இல்லாம தண்ணியிலதான் இருந்தோம்.
chennai-flood-photos-3
”யாருமே என்ன பாக்கவரவில்லை. நீ மட்டும் என்ன மயித்துக்கு பேட்டி எடுக்க வர்ர” – வினவு செய்தியாளர்களிடம் சீறுகிறார் ஒருவர்.
settithottam-flood-damages-photo-3
“முஸ்லீம்கள சும்மா சொல்லக்கூடாது சார். மத்தவங்க கூட தண்ணி கொஞ்சம் வடிய ஆரம்பிச்ச பின்னாடிதான் நிவாரணம் கொண்டு வந்தாங்க. ஆனா இவ்ளோ தண்ணியிருந்தப்ப முஸ்லீம் ஆளுங்கதான் மரப்பலகையில மிதவை செஞ்சு சாப்பாடு கொண்டாந்தாங்க.”

chennai-flood-photos-8settithottam-flood-damages-photo-2

 நான்கில் மூன்று பங்கு மக்கள் சேற்றுப்புண்ணினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

chennai-flood-photos-11
அடுக்குமாடி குடியிருப்புகளையும் விட்டுவைக்கவில்லை மழைவெள்ளம் -முதல் தளம் வரை வெள்ளம் சூழ்ந்து தற்போது வடிந்திருக்கும் செட்டித்தோட்டம் பகுதி குடியிருப்பு.

settithottam-flood-damages-photo-1

settithottam-flood-damages-photo-7
“செம்பரம்பாக்கம் வாட்டர் ரிலீஸ் ஆகுதுனு நியூஸ் பாத்ததும் தயாராத்தான் இருந்தோம்.லாப்டாப், எல்சிடி எல்லாம் பெட் மேல வெச்சோம் ஆனா இவ்ளோ வரும்னு தெரியாது.” – செட்டிதோட்டம் அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள பெண்

 

 

settithottam-flood-damages-photo-5
சீ மை வெசல்ஸ். ஐ காண்ட் யூஸ் எ சிங்கிள் ஸ்பூன். ஐ ஹவ் நத்திங் டு லாஸ். (என் பாத்திரங்களை பாருங்கள். ஒரு ஸ்பூனை கூட பயன்படுத்தமுடியாது. என்னிடம் இழப்பதற்கு எதுவுமில்லை) – செட்டிதோட்டம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத  நடுத்தரவர்க்க பெண்.
settithottam-flood-damages-photo-6
வெள்ளத்தப்போ மூணாவது மாடி போயிட்டோம். ரெண்டு நாள் இருந்ததை கொஞ்சம் கொஞ்சமா சமைச்சி சாப்டோம். பிரெண்ட்ஸ் ரிலேடிவ்ஸ் புட் கொண்டு வருவாங்க.உண்மைய சொல்லனும்னா அங்க (நிவாரண மையங்கள்) போய் சாப்பாடு வாங்க எங்க சுயகொளரவம் இடம் கொடுக்கல. என் குழந்தைக்கு எந்த கஷ்டமும் தெரியகூடாதுனு இது வரை வளத்துவந்தேன். குழந்தைங்கள நினைக்கும்போது தான் கஷ்டமா இருக்கு.
chennai-flood-photos-16
இரண்டாம் தளம் வரை வெள்ளம் சூழ்ந்து வடிந்திருக்கும் கோட்டூர்புரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு.
chennai-flood-photos-13
”தண்ணிவந்த மொதநாளே வந்துட்டோம். நாங்க மட்டும் 200 பேர காப்பாத்திருப்போம். இவங்க சொல்ற கணக்கவிட ரொம்ப பேரு செத்திருப்பாங்க.தண்ணி வடிஞ்ச பின்னாடி தான் தெரியவரும்.” – நொச்சிக்குப்பம் மீனவ இளைஞர்கள், சென்னை கோட்டூர்புரம் பகுதியில். காப்பாற்ற வந்தவர்களும் வீதியிலேதான் சாப்பிட வேண்டும்.

 

chennai-flood-photos-14
”எங்க ஏரியாலிருந்து 30 படகுகளோடு வந்திருக்கோம். கடல்ல இவ்ளோ போர்ஸா தண்ணிவராது. காருங்க மேல தான் படகு போச்சினா பாத்துகாங்க. எங்க படகு கூட சேதமாயிருக்கு. எதையும் எதிர்பாத்துலாம் இங்க வரல.” – மீனவ இளைஞர்கள்

– வினவு செய்தியாளர்கள்

  1. ‪#‎சென்னை_வாசிகளே‬…..

    ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கிற பாதிப்பேரோட புலம்பல்…
    அரசாங்கம் கண்டுகிடல, அரசாங்கத்தில் இருந்து யாரும் உதவி செய்ய வரல என்பதாகவே இருக்கிறது.

    என்னோட கேள்வி இதுதான்….

    ஏன் அரசாங்கம் உதவி செய்ய வரணும்..? அரசாங்கம் என்பது என்ன..?? சென்னையில குடியிருந்தா என்னவோ விண்வெளியில குடியிருக்கிற மாதிரி விவசாயிகளோட போரட்டங்களுக்கு மதிப்பு கொடுக்கிறது இல்ல..மக்கள் நல போராட்டங்களுக்கு செவி சாய்க்கிறது இல்ல.
    விவசாயத்துக்கு இந்த தண்ணி இல்லாமத்தான் ஒவ்வொரு வருஷமும் வறுமையில சிக்கி தென்மாவட்டத்து விவசாயிகள் கொத்து கொத்தா செத்துகிட்டு இருக்கான். காவிரி நீர் பிரச்சனையில இருந்து முல்லை பெரியாரு அணை விவகாரம் வரைக்கும் ஒரு ஐடி கம்பெனி ஊழியனோ அல்லது கார்ப்பரேட் கம்பெனி ஊழியனோ தெருவுல நின்னு போராடியிருப்பானா…?? தண்ணின்னா ஏதோ சு.. ன்னு நினைச்சுக்க வேண்டியது. இப்போ தெரியுதா தண்ணியோட பவரு.

    உலகத்துலேயே படிச்ச முட்டாளுங்க அதிகமா வாழக்கூடிய ஊரு சென்னைதான்னு சொல்லலாம். ஏன்னு கேக்குறீங்களா…. நூறுக்கும் இருநூறுக்கும் ஆசப்பட்டு, உலகத்துக்கே தெரிஞ்ச ஒரு ஊழல் குற்றவாளியை.. ஆர்கே நகர்ல நடந்த இடைத்தேர்தல்ல பெருவாரியான வாக்குகள் வித்தியாசங்கள்ல ஜெயிக்க வைக்கிறானுகன்னா.. இவனுகள விட முட்டா பயலுகள உலகத்துல வேற எங்கயாவது இருக்க முடியுமா…????
    இப்ப குத்துதே குடையுதேன்னு சொன்னா யாரோட குற்றம்..??

    அரசாங்கம் என்பது நாமதான் என்பதை முதல்ல தெரிஞ்சுக்கங்கடா. எம்எல்ஏ வையும் எம்பி யையும் ஏதோ கடவுளை பாக்குற மாதிரி பார்க்காதிங்க. நாம ஓட்டுப்போட்டதாலதான் அவன் எம்எல்ஏ, எம்பி…இல்லன்னா வெறும் டம்மிதான்னு புரிஞ்சுக்கங்க.

    ரோட்ல குப்பையை போடுறது, கூவத்துல குடிசையை போடுறது, ஏரிகளை ஆக்ரமிக்கிறது, குளங்கள்ல கும்மி அடிக்கிறதுன்னு இப்படி ஒட்டு மொத்த தப்பையும் நீங்க பண்ணிட்டு…இப்போ அரசாங்கம் அரசாங்கம்னு கூவுனா எவன்டா வருவான்.

    இவ்வளவு ரணகளத்திலேயும் ஒரு சென்னைவாசி இப்படி பேட்டி கொடுக்குறாங்க… “சாப்பாடுங்கிற பேருல நாலு தக்காளியையும் மிளகாய் தூளையும் தூவி தராங்களாம்…இதனால புட் பாய்சன் ஆகிடுமோன்னு பயமா இருக்காம்” ..
    ஒக்காளி உங்களையெல்லாம் கண்டுக்காம விட்டு இருந்தா இந்நேரம் உங்களோட படையல் சாப்பாட ஊரே சாப்பிட்டிருக்கும்.. இன்னமும் ஹைடெக் சிட்டியில வாழுறோம் நம்மள மிஞ்ச ஆள் இல்லன்னு நினைச்சுகிட்டு பேசாதிங்க… இயற்கைக்கு ஏழை பணக்காரன் என்கிற வித்தியாசமெல்லாம் தெரியாது.

    உங்கள பொறுத்தவரைக்கும் மழையும் புயலும், வெள்ளமும் தண்ணீரும்.. வருஷா வருஷம் தென்மாவட்ட விவசாயிகளும் அவர்கள் குடும்பமும் சர்வ சதாரணமான சந்திக்கிற ஒரு பிரச்சனை … அதுவே இந்த ஆண்டு உங்களுக்கு நேரும்போது சாகும்வரை ஆறாத ரண பிரச்சனையா தெரியுது.

    KFC யில உட்கார்ந்துகிட்டு விவசாயிகள கேவலமா பார்த்தவனுக கூட இன்னைக்கு பசின்னு வந்ததும் ஒரு வேள சோறும் குடிக்க தண்ணியும்தான் கேக்குறான். இது இரண்டுமே விவசாயத்தோடு சம்மந்தப்பட்ட விஷயங்கள் என்பதையும் விவசாயிகளோட அருமையையும் உங்களுக்கு இயற்கை இப்போ மறைமுகமா உணர்த்தியிருக்கு.

    விலைவாசி உயர்வுக்கு போராடியவன் கூட இதுவரைக்கும் வில்லேஜ்காரனுகளாதான் இருந்திருக்கிறான்.
    ஒரு வித்தியாசத்துக்கு வேண்டுமானால் நீங்கள் இந்த வெள்ளம் வடிந்ததும் ஒன்றை செய்யுங்களேன்… “நாம கொடுத்த வரியெல்லாம் எங்க போச்சுன்னு” கேட்டு ஆட்சியாளர்களுக்கு எதிர்ப்பாய் ஒரு போராட்டம் நடத்துங்களேன்.. புரயோஜனமா இருக்கும்.

  2. //SEENI
    December 8, 2015 at 1:40 pm// சிந்திக்க வேண்டியவர்களின் சிந்தனையில் தங்கள் கருத்துகள் ஏறட்டும்.

    Poor Vinavu …

    //முசுலீம்கள் என்றால் பயங்கரவாதிகள், குண்டு வைப்பவர்கள், சந்தேகத்திற்குரியவர்கள் என்பதில் ஆரம்பித்து மணம், குணம், உணவு வரை ஆர்.எஸ்.எஸ் உருவாக்கி வைத்திருக்கும் பொதுப்புத்தி தவறானது என்பதை ஓரளவிற்கேனும் ‘இந்துக்கள்’ உணர்வார்கள் என்பது உறுதி.//
    http://www.dinamani.com/world/2015/12/09/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-/article3168012.ece

    மேற்கண்ட செய்தி வினவு பொதுப்புத்தி தவறானது என்பதற்கு சான்று. உலகம் முழுவதும் உள்ள இத்தகைய உணர்வு ஆர் எஸ் எஸ் என்ற அமைப்பால் உருவானதல்ல … அது தாங்களே ஏற்படுத்திக் கொண்டது.

    //மீனவ இளைஞர்களையும், பகுதி இளைஞர்களையும், முஸ்லீம் அமைப்பினரையும்//

    இதில் முஸ்லீம் அமைப்பினர் மட்டும் மதஅடையாளங்களுடன் உதவி செய்யவேண்டிய அவசியம் என்னவந்தது.

    மற்றவர்கள் குறித்து இந்து மீனவ இளைஞர், கிருஸ்தவ மீனவ இளைவர் என்றோ பகுதி இந்து இளைஞர் அல்லது பகுதி கிருஸ்தவ இளைஞர் என்றோ இல்லை ஏன்? உதவி செய்யும் பொழுது மதஅடையாளத்துடன் செய்ய வேண்டுமா? வினவின் பார்வை கோணலாக உள்ளது என்பதன் விளைவு வாசிக்கும் வாசகர்கள் எதை கூறியனாலும் ஏற்றுக் கொள்வார்கள் என்ற என்னத்தை தோன்றுவித்துள்ளது.

    மதஅடையாளங்களுடன் செய்யப்பட்ட உதவியை கூட இந்து சக்திகள் ஏற்றுக் கொண்டன ஆனால் வினவுக்கு மட்டும் எந்த தொடர்பும் இன்றி இந்து சக்திகளை வசபாடியே ஆகவேண்டும் கட்டுரை வழி வெளிப்படுவது காரணம் வெறுப்புணர்வின் வெளிப்பாடன்றி இன்றி வேறில்லை.

    //பிரெண்ட்ஸ் ரிலேடிவ்ஸ் புட் கொண்டு வருவாங்க.உண்மைய சொல்லனும்னா அங்க (நிவாரண மையங்கள்) போய் சாப்பாடு வாங்க எங்க சுயகொளரவம் இடம் கொடுக்கல.//
    சுயகெளரவத்தை வைத்துக் கொண்டு அவதிபட்டவர்கள் அரசாங்கதை குறை கூற என்ன அருகதை உள்ளது. நிவரான முகாமுக்கு போகலன்னா அரசாங்கம் என்ன டோர் டெலிவரியா செய்ய முடியும்? சுயகௌரவம் அவர்களுக்கு சோறு பேடட்டும்.

  3. என்ன வினவு சார்.. நாலு சுவத்துக்குள் நடந்த அந்த அன்பான விசாரிப்புகளுக்கு பிறகு ஒரு கை ஓசை மட்டுமே ஓங்கி ஒலிக்கிறது.
    இருந்தாலும் கட்டுரையில் ஒரு பிழை இருக்குறது.. எனன்னு கேட்குறீங்களா இந்த வரிகள் இல்லை “அமெரிக்க, ஏகாதிபத்திய, பாசிச..”

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க