Thursday, March 20, 2025
முகப்புபுதிய ஜனநாயகம்புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2016 மின்னிதழ் : தேர்தல் தீர்வாகுமா ?

புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2016 மின்னிதழ் : தேர்தல் தீர்வாகுமா ?

-

puthiya-jananayagam-april-2016

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி : டாஸ்மாக் ஜனநாயகத்தை எதிர்க்கும் தேசத்துரோகிகள்!

2. நரகலில் நல்லரிசி தேடாதீர்!

3. போயசு தோட்டம் : ஊழலின் தலைமைச் செயலகம்!
தி.மு.க.வின் ஊழல், குடும்ப ஆட்சிக்கு மாற்றாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயா, ஊழலில் யாரும் எட்டவே முடியாத உச்சத்தைத் தொட்டு விட்டார்.

4. தி.மு.க.வையும் அ.தி.மு.க.வையும் சமப்படுத்துபவர்களின் நோக்கமென்ன?
தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் சம்பபடுத்துவதன் பின்னே, திராவிட இயக்க அரசியல் மற்றும் கொள்கைகளின் சுவடுகூடத் தமிழகத்தில் இல்லாமல் ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற பார்ப்பனக் கும்பலின் சதி மறைந்திருக்கிறது. இதனை நிறைவேற்ற துக்ளக் சோ தொடங்கி போலி கம்யூனிஸ்டுகள் வரை வெவ்வேறான அரசியல் சக்திகள் வெவ்வேறான பாத்திரத்தை ஆற்றுகின்றன.

5. மக்கள் நலக் கூட்டணி : அம்மா, அம்மா! எங்களை ஏன் கைவிட்டீர்?
மக்கள் நலக்கூட்டணி, அ.தி.மு.க.வின் பி டீம் என அழைக்கப்படுவதற்குத் தகுதியானது என்பதை வை.கோ, போலி கம்யூனிஸ்டுகளின் கடந்த கால வரலாறு நிரூபிக்கிறது.

6. நேற்று அண்ணாயிசம்! இன்று அண்ணியிசம்!
எத்தனை நாற்காலிகள், எத்தனை பதவிகள், எத்தனை பணம் என்பதைத் தவிர, வேறு எந்தவிதமான கொள்கையோ, சித்தாந்தமோ இல்லாத பிழைப்புவாதிகளின் கூடாரம்தான் பிரேமலதா இயக்கும் விஜயகாந்தின் தே.மு.தி.க.

7. தோற்றுப்போனது அரசுக் கட்டமைவு! தேர்தல் தீர்வைத் தராது!!
தேர்தலுக்குத் தேர்தல் மாறிமாறி வாக்களித்து ஆட்சிகளை மாற்றிய பிறகும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எனும்பொழுது, இந்தச் செக்கு மாட்டுப் பாதையைப் பொதுமக்கள் ஏன் சுற்றிச் சுற்றி வர வேண்டும்?

8. இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் படுகொலைகள் : சமூக நீதி அரசியல் சாதியை ஒழித்ததா, வளர்த்ததா?
சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக ‘கீழே’ சாதி மெல்ல மெல்ல அழியத்தான் செய்கிறது. ஆனால், இட ஒதுக்கீட்டின் மூலம் அதிகாரமிக்க பதவிகளைப் பெற்றவர்களும் ஓட்டுக் கட்சித் தலைவர்களும் ரியல் எஸ்டேட் முதலாளிகள், கல்வி வள்ளல்கள் போன்றவர்களும்தான் ‘மேலிருந்து’ சாதியை நிலைநாட்ட வெறித்தனமாக முயற்சிக்கின்றனர்.

9. டார்ஜிலிங் டீயில் பிணவாடை!
மேற்கு வங்க மாநிலத்தில் டார்ஜிலிங் டீயை உற்பத்தி செய்யும் தேயிலைத் தோட்டங்களும் தொழிற்சாலைகளும் சட்டவிரோதமான முறையில் மூடப்படுவதால், கடந்த ஓராண்டுக்குள் 150 தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பட்டினியால், அதனால் ஏற்பட்ட கொடிய நோயால் மாண்டு போனார்கள்.

10. பாரதமாதா பஜனைக்குப் பயப்படலாமா?
மக்கள் மத்தியில் மதிப்பிழந்து வரும் மோடி அரசை முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்துவதற்கான பாரத மாதா பஜனையைத் தொடங்கி வைத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

தேசம் என்பது சாமியா, மடிசார் மாமியா?

11. அம்பேத்கரை மதம் மாற்றுகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல்!
மனித உரிமை, மதச்சார்பின்மை செயற்பாட்டாளரும், மும்பையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் பேராசிரியருமான ராம் புன்யானி “அம்பேத்கரின் சித்தாந்தம் மதவாத தேசியமும் இந்திய அரசியலமைப்பும் என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழாக்கம்.

13. திருடன் திருந்துவான்: போலீசு திருந்துமா?

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

  1. எத்தனை விமர்சனஙள் இருந்தாலும் இந்த தேர்தலில் தி.மு.க வை விட்டால் வேறு வழி இல்லை என்பதையே இந்த பதிவும் உணர்த்துகிறது

  2. உணர்ச்சிப்பூர்வமான ஒரு காரணம் இருந்தால் மட்டும் தான் மக்கள் தேர்தலை புறக்கணிக்கிறார்கள். உடனடி நலன் சார்ந்த ஒன்றை மட்டுமே அவர்கள் நெருக்கமாக உணர்கிறார்கள். அரசுக் கட்டமைப்பின் செயல்படாத தன்மைக்காக தேர்தல் புறக்கணிப்பில் அமைப்புகள் ஈடுபடலாம். மக்கள் ஈடுபடுவது கடினம்.

    ஒரு பிரச்சினையின் நீண்ட பரிமாணத்தை மக்கள் புரிந்து கொள்வது சிரமம். எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் வேட்டந்திட்டை என்ற கிராமத்தில் மக்களின் போராட்டத்தை கடுமையாக நசுக்கி உள்ளது போலீஸ். அங்கு செய்தி சேகரிக்க சென்ற ஜூ.வி நிருபரை பார்த்து ஒரு பெண்மணி எம்.ஜி.ஆர் தான் அவரை அனுப்பி வைத்ததாக சொன்னாராம்.

    தேர்தலில் ஈடுபடாத கட்சிகளை மக்கள், ஊடகங்கள் மற்றும் அரசு கூட பொருட்படுத்துவதில்லை. மக்களுக்கு அவநம்பிக்கை. ஊடகங்களுக்கு சுவாரசியமின்மை. அரசுக்கு கையாள்வது எளிதாக இருக்கிறது. நா.த.க, பா.ஜ.க ஆகியவை பேராபத்தாக தமிழ்ச் சமூகத்தில் வளர்ந்து வருகின்றன. இதனை தேர்தல் புறக்கணிப்பு உத்தி தடுத்து விடுமா என்று சிந்திப்பது நல்லது. இன்னொரு பக்கம் அரசு மேலும், மேலும் மக்களை வதைத்து வருகிறது. தனது தோல்வியை மறைக்க இன்னும் ஒரு ஐந்து வருடத்தில் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று கட்டாய ஆணை பிறப்பிக்கப்படலாம். குஜராத்தில் உள்ளாட்சி தேர்தல்களில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற நிலை அமலில் இருக்கிறது. அப்படி ஒரு நிலை வந்தால் என்ன செய்ய முடியும்? நீதிமன்ற ஆணைக்கிணங்க மனித உரிமை பாதுகாப்பு மையத்தை மக்கள் உரிமை பாதுகாப்பு மையமாக மாற்றியது போன்று மக்கள் அதிகாரமும் அப்படி ஒரு நெருக்கடிக்கு பிறகு முடிவை மாற்றிக் கொள்ள நேரிடும். அப்படி செய்தால் அது பெரும் இழப்புக்கு பிறகு எடுக்கும் முடிவாக இருக்காதா?

    காஷ்மீர் மக்களாலேயே புறக்கணிக்க இயலாத தேர்தலை இந்தியாவின் பிற பகுதிகள் புறக்கணிக்க இயலுமா?

  3. சுகதேவ் போன்ற __வர்களுக்கு நான் கூறிக்கொள்ள விரும்புவது என்னவெனில் நரகலில் நல்லரிசி தேடாதிர்கள் என்பது மட்டும் தான்…. சுகதேவ் போன்றவர்கள் நேப்பாளத்தில் கம்யுனிசம் சீர் குலைய காரணம் என்னவென்று சிறிதாவது சிந்தித்து பார்க்கவேண்டும்….

  4. பார்பன எதிர்ப்பு, தமிழ் மொழி என்று பார்க்கும் போழுது திமுக 0K தான், ஆனால் உண்மையான தமிழக வளர்சிக்கு இந்த இரு கட்சிகலும், உதவாகரைதான்…. எந்த கட்டுரையை போல…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க