privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புநீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்ஒடிஸா நியமகிரி பழங்குடி மக்கள் போராட்டம்

ஒடிஸா நியமகிரி பழங்குடி மக்கள் போராட்டம்

-

டிஸா மக்கள் அம்மாநில அரசின் இயற்கை வள அபகரிப்பிற்கு எதிராக போராடி வருகிறார்கள். அரசு மற்றும் ருங்டா சுரங்க நிறுவனத்தின் நில அபகரிப்பிற்கு எதிராக ஒடிசாவின் கொய்டா மாவட்டத்தை சேர்ந்த  கமண்டா கிராம பழங்குடி மக்கள்  மார்ச் 23 – ம் தேதி நடந்த கிராம நிர்வாக கூட்டத்தில் தங்களது சொந்த நிலங்களை சுரங்கம் வெட்டுவதற்குக் கொடுக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

odishagramsabha2௦௦9-ல் தீர்மானம் போடுவதற்காக நடந்த கூட்டத்தில் ருங்டா நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி அஸ்வின் குமாரும் , நிலத்தை கையகப்படுத்தும் அதிகாரி பக்பன் சாகுவும், வட்டார வளர்ச்சி அதிகாரி பவானி சங்கர் மிஸ்ராவும் கலந்து கொண்டு இருந்தனர். அந்த கூட்டத்தில் கிராம மக்கள் 30 பேர்கள் மட்டுமே  கலந்து கொண்டதாகவும், ருங்க்டா நிறுவனத்தின் கைப்பாவை போல செயல்பட்ட அரசு அதிகாரிகள் 1௦௦ வெளியாட்களை அழைத்து வந்து அந்த தீர்மானத்தை போட்டு இருந்ததாகவும் குற்றம் சாட்டுகிறார் அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பஞ்சாயத்தின் மூத்த தலைவரான பினோத் நாயக்.

2009-ல் போட்டத் தீர்மானத்தின் படி ஒடிஸா மேம்பாட்டு கழகம் (IdCo) 75.4 ஹெக்டேர் அளவு (186.34 ஏக்கர்) நிலங்களை அப்பழங்குடி மக்களிடம் இருந்து அபகரித்து ருங்க்டோ நிறுவனத்திடம் கொடுத்திருந்தது. அந்நிலத்தில் தான் எஃகு தொழிற்சாலை அமைப்பதாய் திட்டமிட்டு இருந்தனர் ருங்டா நிறுவனத்தினர். அந்த நிலத்திற்கு விலையாக  19.4 கோடி ரூபாய் என மதிப்பிட்டிருந்தனர்.

இதனிடையில் சுற்று சூழல் அமைச்சகம் ஒடிஸா அரசின் (ருங்டா நிறுவனத்திற்காக) நில அபகரிப்புக்கான விண்ணப்பத்தை ஏற்காத நிலையில் ருங்டா நிறுவனத்துக்காக  உச்ச நீதிமன்ற படிக்கட்டு ஏறி இருக்கிறது ஒடிஸா அரசு. உச்ச நீதி மன்றமும் ஒடிஸா அரசின் வழக்கைத தற்காலிகமாக தள்ளுபடி செய்து உள்ளது. ஏற்கனவே, பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் கிராம சபைகளின் அனுமதி கிடைக்கும் வரை சுரங்கம் வெட்டக் கூடாது என 2013-ல் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தும் அதை மதியாமல் ஒடிஸா அரசு படியேறி உள்ளது. இருப்பினும் நீதிமன்ற வரலாற்றைப் பார்த்தால் உச்சநீதிமன்றம் பொதுவாக கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகவே தீர்ப்பும் பொழிப்புரையும் அளித்து வருகிறது.

சுற்றுசூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெறுவதற்காக அனுப்பப்பட்ட விண்ணப்பத்தில் மொத்த தொழிற்சாலைக்கான இடம் 154.489 ஹெக்டேர் எனவும் , அதில் 111 ஏக்கர் ஏற்கனவே வாங்கப்பட்டு தொழிற்சாலை அமைப்பதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தனர். 186.34 ஏக்கர் நிலம் ஏற்கனவே கையப்படுத்தி இருக்கும் நிலையில் 22.8 ஏக்கர் தான் இன்னும் நிலுவையில் இருப்பதாக அவ்விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

cm-naveen-patnayakஆனால் கிராம சபையோ அந்த 186.34 ஏக்கர் நிலத்தை ருங்டா நிறுவனம் வாங்கி விட்டதாக கூறுவது தவறு என்று அதை மறுக்கிறது. அது மட்டுமல்லாமல் அந்த 186  ஏக்கர் நிலங்களும் கமாண்டா மற்றும் குஸ்முண்டா என்ற இரு கிராமங்களை சேர்ந்த சுமார் 103 குடும்பங்களுக்கு சொந்தமானவை என்றும் அவற்றில் 23 நில உரிமையாளர்களுக்கு மட்டும் இழப்பீட்டுத் தொகை கிடைத்துள்ளதாகவும் மற்றவர்களுக்கு இன்னும் இழப்பீட்டுத் தொகைக் கிடைக்கவில்லை என்றும் கிராம சபை குற்றம் சாட்டியுள்ளது.

2003-04 ல் ருங்டா நிறுவனம் 111 ஏக்கர் நிலங்களை ஏக்கர் ஒன்றிற்கு 25,000 ருபாய் மட்டுமே கொடுத்து வாங்கியது. பதிலுக்கு நிலத்தை இழந்தவர்களுக்கு வேலை தருவதாக உறுதி கூறி இருந்தது. ஆனால் வெறும் வாக்குறுதியைத் தவிர வேறெதுவும் அம்மக்களுக்கு கிடைக்கவில்லை.

இந்த நில அபகரிப்பிற்கு எதிராய் போராட்டம் மட்டுமல்லாமல் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்ததுடன் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து இருக்கிறது கிராம சபை.

பழங்குடி மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட நிலத்தை தனியாரோ இல்லை அரசாங்கமோ வாங்குவது சட்டத்திற்கு புறம்பானதாகும் என்கிறார் சுற்றுச்சூழல் அமைப்பொன்றின் உறுப்பினரான மனோஜ் சவுகான்.

186 ஏக்கரில் 117.11 ஏக்கர்கள் பழங்குடி மக்களுக்கானது. எனவே இதை வாங்குவது என்பது, ஒரிசாவின் வரையறுக்கப்பட்ட அசையா சொத்துக்களை இடம் மாற்றம் செய்வதற்கான விதிமுறைகள் 1956 க்கும், வருவாய்த் துறை சுற்றறிக்கைக்கும் (Dec,3,2013)  முரணானதாக உள்ளது. இந்த சட்டம் மற்ற எல்லா சட்டங்களையும் கடந்து பழங்குடி மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதை பெயர் அளவிற்கேனும் உறுதி செய்கிறது.

landmineஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளுக்குத் தீர்வாக தீண்டாமை வன்கொடுமை சட்டம், பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளுக்குத்  தீர்வாக வரதட்சணைத் தடை சட்டம், குடும்ப வன்முறை சட்டம் போன்ற சட்டங்கள் எப்படி அதன் தீர்வை இந்த அமைப்பிற்குள்  செயலாக்காமல் வக்கத்து திணறி நிற்கின்றனவோ அதே போல தான் பழங்குடி மக்களுக்கான பஞ்சாயத்து மற்றும் வன உரிமை சட்டங்களும்.

இந்தியா போலியான விடுதலை அடைந்த பிறகு பழங்குடி மக்களை காத்திட பெயரளவிற்க்காகவாவது இருக்கும் இந்த சட்டங்கள்(FRA,PESA) கூட அம்மக்களை காக்க முடியாமல் இருப்பது அரசு உறுப்புகள் செயல் இழந்து நிற்பதை அப்பட்டமாக காட்டுகிறது. தனியார் நிறுவனங்களுக்காக தமது சொந்த மக்களையே காவு கொடுக்கிறது ஒடிஸா அரசு.

வேதாந்தா நிறுவனத்திற்கான மூலப் பொருளை கொடுப்பதற்காக பாக்ஸைடு சுரங்கம் அமைக்க இந்த நிலங்களை போலியாகக் கையகபப்படுத்தி இருந்தது ஒடிஸா அரசு. வேதாந்ததா அலுமினிய சுத்திகரிப்பு ஆலை நியமகிரி மலையின் அடிவாரத்தில் இருக்கிறது.

இங்கே உச்சகட்ட நகைச்சுவை என்னவெனில் காங்கிரசு கட்சி  ஓடிஸா அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து பழங்குடி மக்களுக்கு ஆதரவாய் இருக்கிறதாக காட்டிக்  கொண்டு இருக்கிறது. வேதாந்தா போன்ற பெருநிருவனங்களுக்காக காட்டு வேட்டை என்ற பெயரில் இந்தியாவின் இதயத்தின் மீது தாக்குதலை தொடுத்ததே காங்கிரசு ஆட்சியின் போது தான். ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதை தான் இது. தற்போது பா.ஜ.க எனும் முதலை கனிம வளத்தை அபகரித்து முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதில் தீவிரமாக இருக்கிறது.

வன உரிமை சட்டப்படி பழங்குடி மக்களின் உரிமைகளுக்குத்  தீர்வு காணப்பட்ட பிறகு, அரசுக்கு நிலம் தேவைப்பட்டால் அதற்காக பழங்குடி மக்களின் அனுமதி பெற வேண்டும் என்று வன உரிமை சட்டம் கூறவில்லை என்று ஒடிஸா அரசு கூறுகிறது. அதுமட்டுமல்லாமல், பழங்குடி மக்கள் தாம் புனிதமானதாக கருதும் இடத்திற்கு அப்பாலும் உள்ள இடங்களையும் புனித இடமாக கருதுவது எல்லை மீறும் செயலாகும் என்று ஒடிஸா அரசு கபடத்தனமாக குற்றம் சாட்டுகிறது. பழங்குடி மக்களின் நிலத்தை வெறும் புனிதம் என்று சுருக்கிவிட்டு ஏமாற்றும் தந்திரமே அன்றி இதில் வேறு எதுவும் இல்லை. மக்களோ வாழ்வுரிமைக்காக எதிர்க்கிறார்கள், அரசோ அதை பண்பாடு என்று திரிக்கிறது.

வன உரிமை(FRA) சட்டப்படி, பழங்குடி மக்களின் கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மை மதிக்கப்பட வேண்டும். அம்மக்களை தவிர்த்து அரசு தனியார் உள்ளிட்ட யாரும் அவர்களின் கலாச்சார நம்பிக்கைகைளை கேள்வி கேட்க முடியாது. பஞ்சாயத்து சட்டப்படி(PESA) கிராம சபைகளே பழங்குடி மக்களின் கலாச்சார நம்பிக்கைககளை பாதுகாக்கும் மையங்களாக உள்ளன. இயற்கையோடு இயைந்து வாழும் இம்மக்களின் எளிய நம்பிக்கைகளை மதிப்பது என்பது அவர்களின் நிலத்தை பறிக்க கூடாது என்பதோடு மட்டும் தொடர்புடையது.

1997-ல் அளிக்கப்பட சமதா (அரசு சாரா நிறுவனம்) தீர்ப்பில், “எந்த ஒரு மாநில அரசும் பழங்குடி மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களை பழங்குடியல்லாத வேறு யாருக்காவது கொடுப்பதற்கு அனுமதிப்பது என்பது பழங்குடி மக்களை காப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்ட மற்றும் அரசியலமைப்பை முழுவதுமாய் Tribal-Indiaஅழிப்பதாகும்”, என்று கூறி இருக்கிறது.

ஆனால் இங்கே பழங்குடி மக்கள், உச்ச நீதி மன்றம் கூறும் சட்டத்திற்கு உட்பட்டு தான் ஓடிஸா அரசை எதிர்த்து போராடுகிறார்கள். ஆனால் வரலாறு என்னவோ வேறுவிதமாய் இருக்கிறது. இதே சுரங்க நிறுவனங்களை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்களை காட்டு வேட்டை என்ற பெயரில் இந்திய அரசு நசுக்கியது. அதை உச்ச நீதிமன்றமும் வேடிக்கை தான் பார்த்துக் கொண்டு இருந்தது.

ஆகப்பெரும்பான்மையான மக்களுக்கான சட்டங்கள் அது பழங்குடி மக்களுக்கானதாக, மாணவர்களுக்கானதாக , தொழிலாளார்களுக்கானதாக மற்றும் விவசாயிகளுக்கானதாக  இருக்கட்டும்  அவை அனைத்தையும் கைக்கழுவி விட்டு ஏட்டில் இன்னும் ஏறாத முதலாளிகளின் ஆணைகளை சிரமேற்றுச் செயல்படுத்திக் கொண்டு இருக்கின்றன இந்த அரசுகள். ஆகவே, தான் எழுதிய சட்டங்களின்  படி நடந்து கொள்ளாத இந்த அரசை எதிர்த்து போராடும் நியமகிரி பழங்குடி மக்களை ஆதரிப்போம்.

– சுந்தரம்

தொடர்புடைய பதிவுகள்
Another Village In Odisha Rejects Mining
Odisha says tribals had no power to reject Vedanta bauxite mining
Odisha move on Niyamgiri hills triggers controversy
Mining in tribal Niyamgiri: SC rejects petition against local refusal consensus

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க