privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்வறுமையின் நிறம் சிவப்பு : ஐ.நா - ஐ.எம்.எப் நீலிக் கண்ணீர்

வறுமையின் நிறம் சிவப்பு : ஐ.நா – ஐ.எம்.எப் நீலிக் கண்ணீர்

-

ரு சமூகம் தன் குழந்தைகளை எப்படி கவனித்து கொள்கிறது என்பதை வைத்து ஐ. நா சபையின் யூனிசெஃப் UNICEF வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அமெரிக்கா நம்ப முடியாத அளவிற்கு மோசமான நாடாக இருக்கிறது.

உலகின் முதல் பணக்கார நாடான அமெரிக்காவின் வறுமையின் அளவும் அதன் தனி நபர்கள் கைகளில் புழங்கும்  செல்வத்தின் அளவும் கடந்த 30 ஆண்டுகளில் தாறுமாறாக அதிகரித்துள்ளது தான்
உலகின் முதல் பணக்கார நாடான அமெரிக்காவின் வறுமையின் அளவும் அதன் தனி நபர்கள் கைகளில் புழங்கும் செல்வத்தின் அளவும் கடந்த 30 ஆண்டுகளில் தாறுமாறாக அதிகரித்துள்ளது தான்

ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 41 பணக்கார நாடுகளில் முதல் பணக்கார நாடு அமெரிக்கா என்பதும் வறுமையில் வாடும் குழந்தைகள் பட்டியலில் முதலிடத்திலும் இருப்பதும் அமெரிக்கா தான் என்பது ஒரு முரண் நகை.

அந்த ஆய்வறிக்கை இப்படி தொடங்குகிறது “குழந்தைகளை மையமாக வைத்து அரசு அல்லது தனியாரின் சமூக நல நிறுவனங்கள், நீதிமன்றங்கள், நிர்வாக மற்றும் சட்டமியற்றும் அதிகாரிகளால்  எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளின் பிரதான நோக்கம் குழந்தைகளின் சிறந்த நலன்களை முதன்மையான நோக்கமாக கொண்டிருத்தல் வேண்டும்.”

அந்நிறுவனம் மேற்கொண்ட  ஆய்வு, சமூகத்தில் மிகவும் அடித்தட்டில் உள்ள குழந்தைகள் முதல் நடுத்தர மக்கள் வரை வெவ்வேறுவிதமான விவரங்கள் குறிப்பாக குடும்ப வருமானம், கல்வி சாதனை,மகிழ்ச்சியான மற்றும் நலமான வாழ்க்கை ஆகியவற்றை வைத்து நடத்தப்பட்டதாக கூறுகிறது. ஒரு நாட்டின் நிலை குறித்து அந்நாட்டின் மக்களது வாழ்வு நிலை குறித்து அல்லாமல் இப்படி குழந்தைகள் என்று பிரிப்பது என்.ஜி.வோ பார்வை என்றாலும் அதிலேயே என்.ஜி.வோக்களின் பிதாகமகன்கள் தேறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

உலகமயமாக்கலின் முக்கிய கூறுகள் ஏற்றத்தாழ்வை அதிகரித்து விட்டன என்று இந்த ஆய்வு நெக்குருகி தனது கவலையை தெரிவித்து உள்ளதால் அதற்கு ஏழையின் பால் திடீரென கருணை உதித்து விட்டது என்று பொருளல்ல. அந்த கவலைக்கான காரணம் அந்த ஏழைகள் முதலாளித்துவத்திற்கு பாடை கட்டி விடுவார்களோ என்ற அச்சம் தான்.

இந்த அச்ச்சத்திற்க்கான வேறொரு காரணம் உலகின் முதல் பணக்கார நாடான அமெரிக்காவின் வறுமையின் அளவும் அதன் தனி நபர்கள் கைகளில் புழங்கும்  செல்வத்தின் அளவும் கடந்த 30 ஆண்டுகளில் தாறுமாறாக அதிகரித்துள்ளது தான்.

ஊதிய ஏற்றத்தாழ்வில் துருக்கி, எஸ்தோனியா மற்றும் ஸ்லோவாகியா ஆகிய நாடுகளுக்கு பின்னால் அமெரிக்கா 30 வது இடத்தை பிடித்திருக்கிறது. அமெரிக்காவில் ஐந்தில் ஒரு குழந்தை வறுமையில் இருப்பது தான் இதற்கு காரணம்.

கடுமையான, ஏற்றதாழ்வான (இந்த) சமூக சூழல் குழந்தைகளின் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் ஆக்கபூர்வமான வாழ்க்கைக்கு தடையை இருக்கின்றன
கடுமையான, ஏற்றதாழ்வான (இந்த) சமூக சூழல் குழந்தைகளின் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் ஆக்கபூர்வமான வாழ்க்கைக்கு தடையை இருக்கின்றன

கல்வித்தரத்திலோ 10 வது இடத்தில இருந்தாலும் மன நிறைவான வாழ்கையில் அது 21 வது இடத்தையே பிடித்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள ஸ்காண்டிநேவியன் நாடுகள் அமெரிக்காவிற்கு முன்னால் உள்ளன. இதற்க்கு காரணம் சமூகப் பாதுகாப்பிற்காக அந்நாடுகள் கணிசமான நிதியை ஒதுக்குகின்றன. ஆனால் அமெரிக்காவில் அப்படி இல்லை.

அந்த மிகப்பெரிய அறிக்கையின் ஒரு வரி கூறுகிறது, “கடுமையான, ஏற்றத் தாழ்வான (இந்த) சமூகச் சூழல் குழந்தைகளின் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் ஆக்கப்பூர்வமான வாழ்க்கைக்கு தடையாக இருக்கின்றன”

அமெரிக்க பொருளாதார கொள்கை ஆராய்ச்சி மையத்தின் ஆய்வறிக்கையின் படி, இன்னும் 20 ஆண்டுகளில் அமெரிக்காவின் முதல் 1 விழுக்காடு பணக்காரர்கள் கடைகோடி 62 விழுக்காடு மக்களின் மொத்த சொத்து மதிப்பை கொண்டிருப்பார்கள். அமெரிக்கா மக்கள் 50 விழுக்காடு பேர்களின் மொத்த சொத்து மதிப்பு தற்போது 400 அமெரிக்க தனி நபர்களிடம் இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் 2005-ல் இருந்து சொந்த வீடு வைத்துள்ள அமெரிக்க நடுத்தர மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று வேறொரு ஆய்வு கூறுகிறது. தனி நபர்களிடம் செல்வம் சேர சேர வறுமையில் வாடும் மக்களும் அதிகரிக்கிறார்கள் எனில் அவர்களின் குழந்தைகள் மட்டும் தப்புமா என்ன?

மில்லினியம் கோஹோர்ட் ஆய்வில் எடுத்து கொண்ட  19,000  இங்கிலாந்து குழந்தைகளில் வசதி படைத்த பின்னணியில் இருந்து வரும் குழந்தைகளே அறிவாற்றலில் தேர்வில் சிறந்து விளங்குகின்றன. அறிவாற்றல் தேர்வில் கடைசி 10 விழுக்காடு பணக்கார குழந்தைகளை விட 3 மடங்கு குறைந்த புலனுணர்வு திறனையே வறுமையில் வாடும் குழந்தைகள் பெற்று இருப்பதாக அந்த ஆய்வு மேலும் கூறுகிறது.

சுற்றுசூழல் சமூக மனிதனை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன என்பது தான் இந்த ஆய்வு கூறும் உண்மையாகும். ஏற்றத்தாழ்வான இந்த முதலாளித்துவ சமூக அமைப்பின் குளறுபடிகள், அதனுள்ளே வளரும் அந்த குழந்தைகளின் மனங்களில் ஏற்றத்தாழ்வை தோற்றுவிக்காதா என்ன?

உறுதி செய்யப்பட உலகளாவிய மழலையர் கல்வி வாய்ப்பு என்பது அக்குழந்தைகளுக்கு ஒருவேளை நல்வாய்ப்பாய் அமையலாம்.
உறுதி செய்யப்பட உலகளாவிய மழலையர் கல்வி வாய்ப்பு என்பது அக்குழந்தைகளுக்கு ஒருவேளை நல்வாய்ப்பாய் அமையலாம்.

உறுதி செய்யப்பட உலகளாவிய மழலையர் கல்வியை அளிக்கும் நாடுகளில் 26 வது இடத்திலும் அதற்கான முதலீடு செய்வதில் 21  வது இடத்திலும் அமெரிக்கா இருக்கிறது.

ஆனால் இந்த திட்டம் கூட பணக்கார குழந்தைகளுக்கும் ஏழைக் குழந்தைகளுக்கும் இடையேயான இடைவெளியை குறைக்குமா என்பது சந்தேகமே. பொருளாதார கட்டமைவில் கடைகோடியில் இருக்கும் அந்த ஏழைக் குழந்தைகளின் பிரச்சினைகளுக்குக் காரணம் அது அல்ல. அக்குழந்தைகளின் குடும்பங்களின் வருமானம் மிகக் குறைவு. அதை வைத்து கொண்டு அவர்களது சுயத் தேவைகளை பூர்த்தி செய்வது என்பது நம்ப முடியாத செயலாகும்.

ஊதியத்தை உயர்த்துவதும், குறைந்தபட்ச ஊதியத்திற்க்கான சட்ட வரைவை நிறைவேற்றுவதும் ஒருவேளை பயன் தரலாம். ஆனால் சட்டங்கள் இயற்றுவது முதலாளிகள் தான் என்பது நமக்குத் தெரியும்.

15 டாலர்கள் குறைந்த பட்ச ஊதியமாக பெறுவதற்காக அமெரிக்காவெங்கும் கிட்டத்தட்ட 300 நகரங்களில் மெக்டொனால்ட் உணவு நிறுவனத்தின் பணியாளர்கள் போர்கொடி ஏந்தினர். இந்த போராட்டங்களின் பயனாக கலிபோர்னியா மற்றும் நியூயார்க் நகர மக்கள் மட்டும்  மணியோன்றிற்கு குறைந்தபட்ச ஊதியமாக 15 டாலர்களை பெற்றுள்ளனர். அதுவும் சில ஆண்டுகளில் தான் நடைமுறைக்கு வருகிறது.

விரும்பியோ விரும்பாமலோ 35,000 டாலர்கள் மதிப்புள்ள தானியங்கி இயந்திரங்கள் 15 டாலர்கள் பெரும் ஊழியர்களை விட மலிவானதாகும் என்று எச்சரிக்கிறார்
எட் ரென்ஸி – விரும்பியோ விரும்பாமலோ 35,000 டாலர்கள் மதிப்புள்ள தானியங்கி இயந்திரங்கள் 15 டாலர்கள் பெரும் ஊழியர்களை விட மலிவானதாகும் என்று எச்சரிக்கிறார்

இதற்கு பதில் அளித்துள்ள மெக்டொனால்டின் முன்னாள் தலைமை அதிகாரி எட் ரென்ஸி, இந்த 15 டாலர்கள் குறைந்தபட்ச ஊதியமென்பது மிகப்பெரிய அளவில் வேலையிழப்பை ஏற்படுத்தும் என்றும் விரும்பியோ விரும்பாமலோ 35,000 டாலர்கள் மதிப்புள்ள தானியங்கி இயந்திரங்கள் 15 டாலர்கள் பெறும் ஊழியர்களை விட மலிவானதாகும் என்று எச்சரிக்கிறார். அதாவது கொடுப்பதை வாங்கி கொண்டு பிழைத்துக் கொள் என்கிறார்.

கடந்த 30 ஆண்டுகளில் முதலாளித்துவ பொருளாதாரம் தோல்வியடைந்து விட்டது என்றும்  சில தனி நபர்களிடம் மென்மேலும் சேரும் சொத்துக்கள் தாம் ஏற்றத்தாழ்வை அதிகரிக்கின்றன என்றும்  ஐக்கிய நாடுகள் முதல் பன்னாட்டு நாணய  நிதியம் வரை நீலிக் கண்ணீர் வடித்தாயிற்று. எனில் சில தனிநபர்களிடம் மட்டும் சேரும் சொத்துக்களை இந்த முதலாளித்துவ அமைப்பில் தடுப்பது எங்கனம்?

ஒருபுறம் இந்த பிரச்சினைகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் இல்லாததன் காரணமாகவும் மறுபுறம் ஊதியத்தை நிர்ணயம் செய்து கொள்வதை தனியாரிடம் விட்டு விட வேண்டும் எனவும் அரசு அதில் மூக்கை நுழைக்க கூடாது என்று கூறுவதும் முரண் நகையாக இல்லையா?

இப்பொழுது ஐ.எம்.எப் இந்த “ஏற்றத்தாழ்வானது மேல்நோக்கிய சமூக இயக்கமாக மூச்சு திணற செய்யும்” என்று கூறியிருக்கிறது. ஆகவே முதலாளித்துவ வள்ளல்கள் கொஞ்சம் கஞ்சித் தொட்டி திறந்து கருணையை காட்ட வேண்டும் என்பே அதன் உட்கிடை.  அல்லது வால் ஸ்ட்ரீட் போராட்டம், பிரான்ஸ் மக்கள் போராட்டம், பெங்களூர் ஆயத்த ஆடைத் தொழிலாளர்களின் போராட்டம் குறித்து எச்சரிக்கிறார்கள். மக்களைப் பொருத்தவரை இந்த எச்சரிக்கைகளும் கருணைகளும் முதலாளித்துவத்தை தூக்கி எறிவதற்கான அறிகுறிகள் என்று எடுத்தக் கொள்வார்கள்!

– சுந்தரம்

தொடர்புடைய பதிவுகள்

Fairness for Children
The World’s Richest Countries
Neoliberalism is increasing inequality and stunting economic growth, IMF says

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க