கடந்த மாதம் மே 31ம் தேதி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது, பிரான்ஸ் மாணவர்களும் தொழிலாளிகளும் இணைந்து நடத்திய மாபெரும் போராட்டம். தொழிலாளர் சட்டத்தில் சீர்திருத்தங்களை கொண்டு வருவதாக கூறி அவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலில் ஈடுப்பட்டது பிரான்ஸ் அரசு. இதனை முறியடிக்கும் வகையில் தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தில் மாணவர்களும் கலந்து கொண்டு முதலாளித்துவக் கோட்டையை அச்சுறுத்தினர்.
இந்தப் போராட்டம் பல இடங்களில் அமைதியான முறையில் நடந்தாலும் சில இடங்களில் அரசு அடக்குமுறையால் வன்முறையில் முடிந்தது. இந்த அடக்குமுறையின் போது கிழக்கு பாரிசில், முகமூடி அணிந்த சில போராட்டக்காரர்கள் ஆளும் வர்க்கத்தின் கஜானவாக செயல்படும் வங்கிகளிலும் கடைகளிலும் பெயிண்ட் குண்டுகளை வீசினர். சில இடங்களில் போலீசாரால் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.
மேற்கு பிரான்சில் உள்ள நாண்டீஸ் மற்றும் ரேன்ஸ் நகரங்களில் சில இளம் போராட்டக்காரர்களுக்கும் போலீசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மாதத்தில் இது நான்காவது ஆர்ப்பாட்டமாகும். வாரத்தில் 35 மணிநேரம் பணி என்கிற சட்ட திருத்தத்தை அரசு திரும்ப பெற வேண்டும் என இரயில் ஓட்டுநர்கள் மற்றும் ஆசிரியர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டனர். இதனால் பள்ளிகள் மருத்துவமனைகள் மற்றும் அரசு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.
கிழக்கு பாரிசில் உள்ள கேர் டி லயான் ரயில் நிலையம் அருகே போலீசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்ப்பட்ட மோதல்
பாரிசில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிச கொடியுடன் பங்கேற்கும் பிரெஞ்சு மாணவன்
பிரான்சின் தலைநகரில் தொழிலாளர் நலச்சட்ட சீர்திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தடியடி நடத்தும் போலீஸ்.
கேர் டி லயானில் போலீசை எதிர்கொள்ளும் மாணவர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள்
பிரான்ஸின் உயர்நிலைப்பள்ளி மற்றும் பல்கலைகழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கேடயங்களைக் கொண்டு பாதுகாத்துக் கொள்ளும் போலிசு.
சலூனில் சிகையலங்காரம் அமைதியான முறையில் நடக்கிறது. ஆர்ப்பாட்டங்களை எதிர்பார்த்து நிற்கும் போலிசோ திகிலுடன் குழுமியிருக்கின்றனர்.
பாரிசில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் பெருமளவில் கலந்துக்கொண்டனர்.
பாரிசில் போலீசுக்கும், தொழிற்சங்க உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களுக்குமிடையே மோதல் ஏற்ப்பட்டது
மாணவர்களிடம் திட்டு வாங்கும் போலிசு.
கலவரத்தின் போது பயத்துடன் பதுங்கும் பிரெஞ்சு போலிசு!
கண்ணீர் புகை குண்டுகளிலிருந்து பாதுகாக்க முகமூடியுடன் போராடும் ஆர்ப்பாட்டக்காரர்கள்.
போராடும் மாணவர்கள் வாகனத்தில் ஏறி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.
கிழக்கு பாரிசில் நடைபெற்ற பேரணியில் போராட்டக்காரர்கள் பதாகைகள் மற்றும் புகை குண்டுகளை கையில் ஏந்திய படி சென்றனர்.
மாணவர்கள் செங்கொடியை ஏந்தியும், புகை குண்டுகளை கொளுத்தியும் பேரணி நடத்தினர்.
பிரான்சில் நாண்டிஸ் என்னும் இடத்தில் தொழிலாளர் சட்ட திருத்தத்திற்கு எதிராக ”முதலாளித்துவத்துவத்தைக் கொல்வோம்” என்று பதாகை ஏந்தியப்படி போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தெற்கு பிரான்சு மார்சேய்ல் நகநரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் “உங்கள் ரோலக்ஸ் கடிகாரத்தை பாருங்கள்,புரட்ச்சிக்கான நேரம் வந்துவிட்டது என்பதை காட்டும்” என்கிற பதாகையுடன் போராளிகள்.
மார்செய்ல் நகரத்தின் காஸ்டெலின் சதுக்கத்தில் இருக்கும் கான்டினி ஃபவுன்டைன் சிலையில் ஏறி முழக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்!
மார்சேய்லில் காண்டினி பாவுண்டேய்னில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றாக குழுமுகின்றனர்.
வடமேற்கு பிரான்சில் உள்ள கேய்ன் என்னுமிடத்தில் போராட்டக்காரர் ஒருவர் போலீசுக்கு பூ அளிக்கிறார்.
வடமேற்கு பிரான்சில் உள்ள ரேன்ஸில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் போராட்டக்காரர்கள் போலீசை திருப்பி தாக்க கண்ணீர் புகை குண்டுகளை தயார் நிலையில் வைத்துள்ளனர்.
போலிசு வீசிய கண்ணீர் புகை குண்டிகளை எதிர் கொள்ளவதற்கு போராட்டக்காரர்கள் முகமூடிகளை அணிந்துக் கொண்டனர்.
ரேன்ஸில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போலீசுக்கு எதிராக போராட்டக்காரர்கள் எறிப்பொருட்களை கொண்டு வீசினர்.
வட பிரான்சில் உள்ள வேலன்சின்னெஸில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போராட்டக்காரர்கள் “ஓன்றிணைவோம், எதையும் விட்டுகொடுக்காமல்” என்ற பதாகையை ஏந்தி பேரணியாக சென்றனர்.
Related