கடந்த மாதம் மே 31ம் தேதி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது, பிரான்ஸ் மாணவர்களும் தொழிலாளிகளும் இணைந்து நடத்திய மாபெரும் போராட்டம். தொழிலாளர் சட்டத்தில் சீர்திருத்தங்களை கொண்டு வருவதாக கூறி அவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலில் ஈடுப்பட்டது பிரான்ஸ் அரசு. இதனை முறியடிக்கும் வகையில் தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தில் மாணவர்களும் கலந்து கொண்டு முதலாளித்துவக் கோட்டையை அச்சுறுத்தினர்.
இந்தப் போராட்டம் பல இடங்களில் அமைதியான முறையில் நடந்தாலும் சில இடங்களில் அரசு அடக்குமுறையால் வன்முறையில் முடிந்தது. இந்த அடக்குமுறையின் போது கிழக்கு பாரிசில், முகமூடி அணிந்த சில போராட்டக்காரர்கள் ஆளும் வர்க்கத்தின் கஜானவாக செயல்படும் வங்கிகளிலும் கடைகளிலும் பெயிண்ட் குண்டுகளை வீசினர். சில இடங்களில் போலீசாரால் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.
மேற்கு பிரான்சில் உள்ள நாண்டீஸ் மற்றும் ரேன்ஸ் நகரங்களில் சில இளம் போராட்டக்காரர்களுக்கும் போலீசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மாதத்தில் இது நான்காவது ஆர்ப்பாட்டமாகும். வாரத்தில் 35 மணிநேரம் பணி என்கிற சட்ட திருத்தத்தை அரசு திரும்ப பெற வேண்டும் என இரயில் ஓட்டுநர்கள் மற்றும் ஆசிரியர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டனர். இதனால் பள்ளிகள் மருத்துவமனைகள் மற்றும் அரசு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.
“வாரத்தில் 35 மணிநேரம் பணி என்கிற சட்ட திருத்தத்தை அரசு திரும்ப பெற வேண்டும்”
Than how many hours people want to work-Less than 5 hours(Average) in a day.
Exactly my point. 35 hours = 7 hours work for 5 days a week. I think these slackers want 5 hours work-week.
@Hisfeet,
நீங்கள் கூறிய அந்த சோம்பேறி(!) பிரான்ஸ் மக்கள் 35 மணி நேரத்திற்கும் குறைவான நேரம் கோரி போராடவில்லை. இந்த போராட்டத்திற்கு காரணம் அந்த சட்ட திருத்தத்தால் 35 நேரத்திற்கும் மேலாக அவர்களை வேலை செய்ய நிர்பந்திக்கவும் , மேற்படி அதிக நேர வேலைக்கு ஒப்பீட்டு அளவில் ஊதியம் குறைவாக கொடுக்குமாறும் மாற்ற முடியும். அது மட்டுமல்லாமல் நினைத்த நேரத்தில் பணி நீக்கம் செய்யவும், காப்பீடு உள்ளிட்ட நல உரிமைகளை நீக்கவும் வழி வகை செய்கிறது.
இங்கே வேலை நேரத்தை அதிகரிப்பதால் வேலை வாய்ப்புகள் குறையுமே ஒழிய அதிகரிக்காது.
நினைத்த நேரத்தில் வேலையை விட்டு தூக்குவதால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்காது. பெரும்பாலான ஆசிய, ஆப்ரிக்கா நாடுகளில் உள்ளது போல முறை சாரா தொழில் ஒரு
சமூகப் பழக்கமாக பிரான்சில் இல்லை.
இந்த காரணங்களால் தான் போராடுகிறார்கள்.
வினவுத் தோழர்களுக்கு,
//வாரத்தில் 35 மணிநேரம் பணி என்கிற சட்ட திருத்தத்தை அரசு திரும்ப பெற வேண்டும்..
இந்த வாக்கியம் தவறான பொருளை தருகிறது.
//அந்த சோம்பேறி(!) பிரான்ஸ் மக்கள் 35 மணி நேரத்திற்கும் குறைவான நேரம் கோரி //
http://www.npr.org/2013/03/01/173067804/u-s-boss-offers-blunt-critique-french-workers-give-fiery-response
இந்தியா போன்ற வளர்ச்சியடையாத ஏழை நாடுகளில் ஒரு வேலை போனால் இன்னொரு வேலை என்பது மக்களின் மூளையில் ஒரு கலாச்சாரமாகவே பதியப்பட்டு உள்ளது.
அதனால் தான் முறைசாரா தொழிலில் ஈடுபடுகிறவர்கள் தான் இந்தியாவில் அதிகம்.
10 விழுக்காடு வேலை வாய்ப்பின்மை என்பது இந்தியாவைப் பொறுத்த அளவில் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்த போவது கிடையாது. ஏனெனில் அனைவருக்கும் நிரந்தர வேலை என்பது சட்டபூர்வமாகவே இங்கே கிடையாது.
ஆனால் பிரான்ஸ் போன்ற முதலாளித்துவ நாட்டில் அந்த நிலைமை கிடையாது. 10 விழுக்காடு வேலை வாய்ப்பு இல்லை என்பது மிகப் பெரிய சமூக பிரச்சினை ஆகும். உதவித் தொகை கொடுப்பதாக அரசு உறுதிமொழிக் கூறினாலும் அதன் செயல்பாடு முழுமையாக இல்லை. அது மட்டுமல்ல சமீபத்தில் சுவிஸ் பெரும்பான்மை மக்கள், அரசு உதவித் தொகையை நிராகரித்து ஒட்டு போட்டது குறிப்பிடத்தக்கது.
அதனால் நாம் பொத்தாம் பொதுவாக ஒட்டு மொத்த மக்களை சோம்பேறிகள் என்று முத்திரையிடுவது ஒருவகையான மனவியாதி போல தான் இருக்கிறது.