privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மணப்பாறை : டாஸ்மாக்கை மூடுங்கள் - கலெக்டரிடம் மக்கள் போராட்டம் !

மணப்பாறை : டாஸ்மாக்கை மூடுங்கள் – கலெக்டரிடம் மக்கள் போராட்டம் !

-

மூடு டாஸ்மாக்கை ! மணப்பாறையில் போராட்டம் தொடர்கிறது…

trichy-people-power-to-shutdown-tasmac-shop-1ணப்பாறை தாலுக்காவுக்கு உட்பட்ட அமையபுரம், வேங்கைகுறிச்சி, பழைய கோட்டை பஞ்சாயத்திற்கு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள அனைவரும் கூலி வேலை, கட்டிட வேலை செய்வோராகவும் மற்றும் சிறு விவசாயிகளாக உள்ளனர். இப்பகுதியில் மையமாக உள்ள ஒத்தக்கடை அருகே உள்ள டாஸ்மாக் கடையினால் (கடை எண் 10400) அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்கடையை சுற்றி உள்ள டீ கடை, டிபன் கடை உள்ளிட்ட அனைத்தும் டாஸ்மாக் பார்களாக மாற்றப்பட்டு குடிகாரர்களின் புகலிடமாக மாறியுள்ளது. பல்வேறு இடங்களில் இருந்து வந்து காலை முதலே குடிப்பதும், குடித்துவிட்டு சாலையில் கிடப்பது, ஆபாசமாக பேசுவது, பாட்டில்களை ரோட்டில் போட்டு உடைப்பது, சாலையில் போவோர் வருவோரிடம் தகராறில் ஈடுபடுவது, அப்பகுதியை கடந்து செல்லும் பெண்களை பார்த்து இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசி கிண்டல் செய்வது என தொடர்ச்சியாக தொந்தரவு கொடுத்து வருகின்றனர்.

இப்பகுதியில் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது. பள்ளிக்கூட மாணவர்கள் உள்பட பல வயதினரும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் தினந்தோறும் மக்கள் கிராமங்களில் நிம்மதியின்றி தவித்து வருகின்றனர். வீட்டில் உள்ள ஆண்கள் வேலைக்கு சென்று சம்பாதித்த பணத்தை குடித்தே அழிக்கின்றனர். வேலை இல்லாத நாட்களில் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து சென்று விற்று குடிப்பதும் தடுத்தால் அடிப்பதும், பொருட்களை உடைப்பது என மனநலம் பாதிக்கப்பட்டோர்களாக மாறி வருகின்றனர். போதை தலைக்கேறிய பிறகு கண்ணெதிரே நிற்பது தாயா, தாரமா என வித்தயாசமின்றி நடந்து கொள்கின்றனர். இதனால் வீதிதோறும் குடும்பங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். மன ரீதியாகவும், உடல் ரீதியாவும் பிள்ளைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கணவனை இழந்து 20-க்கும் மேற்பட்டோர் விதவைகளாக உள்ளனர். குடிபோதையில் வாகனம் ஓட்டி கை, கால் உடைந்து முடமாவது, உயிரிழப்பு ஏற்படுவதும் அதிகரித்து வருகிறது. நேர்மையான முறையில் கூலி வேலையில் ஈடுபட்டு குடும்பத்தை நடத்தி வருகின்றனர். அதில் மண் அள்ளிப் போடும் விதமாக அரசு மதுபான கடை உள்ளது. ஆகவே மேற்கண்ட டாஸ்மாக் கடையை உடனடியாக அப்புறப்படுத்துமாறு மக்கள் கோருகின்றனர்.

trichy-people-power-to-shutdown-tasmac-shop-2இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக தோழர்கள் பணியாற்றி மக்களை திரட்டி மக்கள் அதிகாரத்தின் சார்பாக ஒத்தக்கடை டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுப்பது என முடிவு செய்து 22-8-2016 அன்று காலை 11.00 மணியளவில் மணப்பாறை ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு பகுதி மக்கள், பகுதி தோழர்கள், திருச்சி பகுதியைச் சேர்ந்த தோழர்கள், மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர். தர்மராஜ் உட்பட 100க்கும் மேற்பட்டோர் சென்றனர்.

உள்ளே நுழையும் போதே அப்பகுதி பெண் ஆய்வாளர், “உங்களை பரிசோதித்த பிறகே உள்ளே அனுமதிக்கபடும் என்றும், கொடி பேனர்கள் உள்ளே அனுமதி இல்லை”யென மிரட்டினார்.

ஆனால் தோழர்கள், “நாங்கள் என்ன குற்றவாளிகளா, அமைப்பின் சார்பாக மனு கொடுக்க வந்துள்ளோம். அதுவும் எங்களது மாவட்ட ஆட்சித்தலைவரிடம். அதை தடுப்பதற்கு உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது” என கேள்வி கேட்க, ஆய்வாளர் பதில் எதுவும் கூற முடியாமல் துணை கமிசனருக்கு போன் செய்து யாரோ சட்ட விரோதமாக அலுவலகத்திற்கு வந்து விட்டதைப்போல உணர்ச்சி பொங்க கூறினார்.

trichy-people-power-to-shutdown-tasmac-shop-3வந்த கமிசனர் மக்கள் அதிகார பதாகையுடன் குழுமியிருந்ததை பார்த்தபின், “உங்களுக்கு என்ன சார் பிரச்சனை” என்று கேட்டார். அவர் பணிவோடு பேசியதைப்பார்த்து பெண் ஆய்வாளர் வாய் அடைத்துப்போனார்.

அவரிடம், “நாங்கள் அனைவரும் சேர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து மனுகொடுக்க வேண்டும்” என்று கூறினோம்.

வட்டாட்சியர் வருகை தந்து, “ஐந்து பேர் உள்ளே சென்று மனு கொடுங்கள்” எனக் கூறினர்.

“நாங்கள் பல கிராமங்களில் இருந்து வந்துள்ளோம். நாங்கள் அனைவரும் சென்று ஆட்சியரை சந்தித்து பேச வேண்டும்” என்று கண்டிப்பாக கூறினோம்.

அதை ஏற்றுக் கொள்ள மறுத்து மக்களை 1 மணி நேரம் காக்க வைத்தனர். அப்படி செய்தால் அனைவரும் கலைந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்தனர். ஆனால் மக்கள் உறுதியோடு அங்கேயே அமர்ந்து விட்டனர். அதன்பின் வேறு வழியில்லாமல் அனைவரையும் உள்ளே சென்று சந்தித்து பேச அனுமதித்தனர்.

அனைவரும் ஆட்சித்தலைவரின் முன்பே வரிசையாக சென்று ஒவ்வொருவரும், “ஒருவார காலத்திற்குள் கடையை மூட வேண்டும், இல்லையென்றால் நாங்களே கடையை மூடுவோம்” என்று கூறியதும் மாவட்ட ஆட்சித்தலைவர் வாயடைத்துப்போனார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இப்படிப்பட்ட நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் பொழுது அதை மக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர். இப்படியெல்லாம் ஆட்சியரிடம் பேசமுடியுமா என்று மக்கள் பரவலாக பேசிக்கொண்டனர். இது மக்களுக்கு ஒரு புதிய அனுபவமாக அமைந்தது.

அரசு என்றாலே மக்களுக்கானது இல்லை என்பதை உறுதி செய்யும் விதமாக கடையை அங்கே மாற்றப்போகிறோம்! இங்கே மாற்றப்போகிறோம்! என்பது போல நாடகமாடி, உளவுத்துறையை வைத்து மக்களை மிரட்டியதோடும், சரக்கை இறக்க வேண்டாம் என்று வட்டாட்சியர் கூறியது போலவும் அதிகாரிகளும் காவல்துறையும் சேர்ந்துகொண்டு பித்தலாட்டம் செய்து கடையை பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். மேலும் மக்களை அச்சுறுத்தும் வகையில் 27-08-2016 அன்று சுமார் 100 காவலர்களை டாஸ்மாக்கை பாதுகாக்க இறக்கியுள்ளது. இது அரசின் அச்சத்தை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. இதை மீறி இப்பகுதி மக்கள், மக்கள் அதிகாரத்தின் துணையோடு கடையை எடுத்தே தீரவேண்டும் என்று உறுதியோடு போராட தாயாராகி வருகிறார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்:
மக்கள் அதிகாரம்
மணப்பாறை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க