privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்காவிரி மீட்க திருச்சி ரயில் மறியல் - மண்டபத்தில் அனைத்துக் கட்சி கூட்டம்

காவிரி மீட்க திருச்சி ரயில் மறியல் – மண்டபத்தில் அனைத்துக் கட்சி கூட்டம்

-

trichy-farmers-stir-pressருகும் பயிரை காக்க, காவேரி நீரை மீட்க, தமிழ்நாடு முழுவதும் நடந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, திருச்சியில் ரயில் மறியல், சாலை மறியல் என போராட்டங்கள் திட்டமிடப்பட்டது. தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க விவசாய பிரிவு, தி.க, பெ.தி.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், SDPI, விவசாய அமைப்புகள் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, ஊர்வலமாக சென்று, போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர், மக்கள் அதிகாரம் சார்பாக அதே ரயில் நிலையம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டோம். இப்போராட்டத்தில் பல்வேறு கட்சி, அமைப்புகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்டோர் திருச்சி மைய பேருந்து நிலையம் அருகே உள்ள மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். கைதான பிறகு அனைவரையும் ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தவும், காவேரி பிரச்சினை சம்பந்தமாக கருத்துகளை பறிமாறிக் கொள்வதும் தேவை என உணர்த்தி மக்கள் அதிகாரம் சார்பாக ஒருங்கிணைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அனைத்து தலைவர்களையும் மேடையில் அமர வைத்து, நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கூட்டத்தை மக்கள் அதிகாரம் திருச்சி ஒருங்கிணைப்பாளர் தோழர் தர்மராஜ் தலைமை ஏற்று நடத்தினார். பேச்சாளர்களுக்கு இடையே ம.க.இ.க மையக் கலைக்குழு தோழர்கள் புரட்சிகர பாடல்கள் பாடி உற்சாக மூட்டினர். தயாரிப்பு வேலைகள் முடிந்து, பறையடித்து “ஊருக்கூரு சாராயம் தள்ளாடுது தமிழகம்“ என்ற பாடல் துவங்கியதும், காவல் துறையினர் பதறி அடித்து ஓடிவந்து தடுத்தனர். மொத்த கூட்டமும் வெகுண்டெழுந்து காவல்துறையை விரட்டினர். பிறகு நாம் சமாதானப்படுத்தி நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தமிழ்மாநில காங்கிரஸ் மாநில செயலாளர் தியாகராஜன்  உரையாற்றும் போது, “நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தும் மக்கள் அதிகாரத்திற்கு நன்றி, இங்கு அதிகமாக விவசாயிகள் போராட்டத்திற்கு வரவில்லை. மத்திய அரசு மக்களை மோசம் செய்யும் வேலையை செய்கிறது. அதே வேலையை ஜெயா அரசும் செய்கிறது. இவர்களுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும்” என்றார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தந்தை பெரியார் திராவிடர் விடுதலை கழகம் – சீனி விடுதலை அரசு பேசும்போது, “மக்கள் அதிகார அமைப்பினருக்கு நன்றி. மூடு டாஸ்மாக் பாடல் ஏதோ தடைசெய்யப்பட்ட பாடல் போல அதை பாட விடாமல் காவல்துறையினர் தடுக்கின்றனர். இந்த நிகழ்ச்சி பல கட்சிகள் கலந்து கொண்டுள்ளதால் பாட வேண்டாம் என்ற உடன் தோழர்கள் வேறு பாட்டு பாடினர். ஆனால் இதுவே இவர்கள் கூட்டமாக இருந்திருந்தால் எவ்வளவு பெரிய காவல்துறை அதிகாரி வந்து தடுத்தாலும் பாடியே தீருவோம் என்று பாடி இருப்பார்கள் இவர்களின் போர்க்குணம் அவ்வளவு சிறப்பு. அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். முதலில் காவிரி நீர் பிரச்சனை என்பது யாருக்கானதோ கிடையாது நமக்கான பிரச்சனை இந்த போராட்டம் என்பது உரிமைக்கான போராட்டம் இறுதி வரை எழுச்சியாக போராட வேண்டும்” என்றார்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த G.M.ஹாசிம் பேசும்போது: “இதை மக்கள் பிரச்சனையாக பார்க்க வேண்டும். அவர்கள் மத்தியில் கொண்டு சென்று இந்தியா முழுக்க புரட்சியாக வெடிக்க வேண்டும்” என்றார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை பேசும்போது, “விவசாயிகளுக்கு ஆதராவாக கடந்த வாரம் நாங்கள் இரயில் மறியல் செய்தோம். இங்கு விவசாயிகள் அதிகமாக வரவில்லை. ஒரு போராட்டம் நாம் செய்தால் அந்தப் பகுதியே ஸ்தம்பிக்க வேண்டும். அடுத்தகட்ட போராட்டம் நாம் விவசாயிகளை அதிகமாக திரட்டி செய்ய வேண்டும்” என்றார்.

அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த ஃபாரூக் பேசும் போது, “தி.மு.க இந்தப் போராட்டத்தை முடிவு செய்தது. போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆனால் காவல்துறையினர் 200 பேரை மட்டுமே கைது செய்துள்ளனர். போராட்டத்தை நீர்த்து போகச் செய்ய திட்டமிட்டே செயல்பட்டுள்ளனர். நாம் தொடர்ந்து விவசாயிகளுக்காக போராட வேண்டும்” என்றார்.

இந்திய தேசிய காங்கிரஸின் விவசாய பிரிவைச் சேர்ந்த கருணாகரன் பேசும்போது, “தமிழக அரசு ஒரு காவல்துறை அதிகாரி இறப்பிற்கு 1 கோடி நிதி தருகிறது. ஆனால் விவசாயிகளின் நலனில் துளியும் அக்கறை செலுத்துவதில்லை. விவசாயிகளின் உரிமைக்காக தொடர்ந்து போராடுவோம்” என்றார்.

டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த தீட்சிதர் பாலசுப்ரமணியன் பேசும் போது, “தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி டெல்லி வரை சென்று போராடி உள்ளோம். இந்த அரசிற்க்கு விவசாயிகள் மீது துளியும் அக்கறை இல்லை. கடன் தள்ளுபடியில் கூட பாரபட்சம் பார்த்துதான் செய்கிறார்கள். 1991-ல் இருந்து போராடி வருகிறாம். இது மக்களின் பிரச்சனையாக மாற வேண்டும். போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திய தி.மு.க.விற்கு நன்றி” என்று கூறினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இறுதியாக இப்போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திய திராவிடர் முன்னேற்ற கழகத்தின் விவசாய அணி அமைப்பாளர் சேசு அடைக்கலம் பேசும்போது, “7000 கோடி விவசாய கடனை கலைஞர் தள்ளுபடி செய்தார். ஆனால் ஜெயலலிதா வாக்கை மட்டும் தான் பார்க்கிறார். மக்களின் பிரச்சனையாக துளியும் பார்ப்பதில்லை” என்று தனது அரசியலை விளக்கி பேசினார்.

மக்கள் அதிகாரம் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானதால் மண்டபத்தில் அத்தனை கட்சி, அமைப்புகளையும் ஒருங்கிணைத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பேச வைத்தது. இந்நிகழ்வு கைதான அனைவரையும் உற்சாகப்படுத்தியது. இனி மக்களுக்கான பிரச்சனைகளில் மக்கள் அதிகாரத்துடன் கைகோர்த்து களம் இறங்கி போராடுவோம் என்றனர்.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
திருச்சி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க