privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்ஒகேனக்கல் : காவிரிக் கரையில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

ஒகேனக்கல் : காவிரிக் கரையில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

-

காவிரியை முடக்கும் கர்நாடகா
தீர்ப்பை அமுல்படுத்த வக்கற்ற மோடி அரசு
நடுநிலை நாடகம் ஆடும் உச்சநீதி மன்றம்!
என்ற தலைப்பில் பென்னாகரத்தில் நடந்த ஆர்ப்பாட்டம்

தமிழகத்தை பாலைவனமாக்கும் சதித்திட்டத்தை அம்பலப்படுத்தி தருமபுரி மாவட்டத்தில் சுற்றுலா தளமான ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒருவாரமாக வீச்சான பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இப்பிரச்சாரத்தை மக்கள் வெகுவாக ஆதரித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பிறகு 13-09-2016 அன்று பென்னாகரம் பகுதி மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தோழர் சிவா
தோழர் சிவா

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் பகுதி தோழர் சிவா தலைமை தாங்கினார். அவரது உரையில், “நதிநீரை இரு மாநிலங்களுக்கும் முறையாக பங்கிட்டு கொடுப்பதுதான் நியாயமானது. ஆனால் இந்த ஆட்சியாளர்களால் இதை செய்ய முடியவில்லை. ஏனென்றால் இந்த தண்ணீரை கர்நாடகாவில் பன்னாட்டு கம்பெனிகாரன் பாட்டில் போட்டு விற்கிறான். அதுமட்டுமல்ல தமிழகத்தை விவாசயத்தை அழித்து பாலைவனமாக்கி அங்கே குவிந்திருக்கும் கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்கு விவசாயம் செய்தால் இவர்கள் கொள்ளையடிப்பதை தடுப்பார்கள். அதனால் விவசாயத்தை அழித்தால் தான் இத்திட்டத்தினை நிறைவேற்ற முடியும். அதற்கான சதித்திட்டம் தான் இப்பிரச்சினைக்கான காரணம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதோடு இவர்களால் மீனவர் பிரச்சினை, காஷ்மீர் பிரச்சினை என்று எதையும் தீர்க்க முடியாமல் இருக்கிறார்கள். இதனால் இனியும் இவர்களை நம்பி நாம் இப்பிரச்சினையை தீர்க்க முடியாது. எனவே இருமாநில உழைக்கும் மக்களும் ஒண்றிணைந்து போராடுவதன் மூலம்தான் இப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும்” என்றார்.

அடுத்ததாக விவசாயிகள் விடுதலை முன்னணி வட்டாரச் செயலாளர் தோழர் கோபிநாத் உரையாற்றினார். அவரது உரையில், “கடந்த ஒருவாரமாக மக்களை அடித்து துரத்துகிறார்கள், பொருட்களை அடித்து துவம்சம் செய்கிறார்கள். இதைப்பற்றி பல கட்சிகளும் கண்டனம் தெரிவிக்கின்றனர். ஆனால் இவர்களின் நிலைப்பாடு என்ன? ஏன் இவர்களால் இப்பிரச்சினையை தீர்க்க முடியாமல் தவிக்கிறார்கள்? பா.ஜ.க தென்னகத்தில் கால் பதிக்க முடியவில்லை. அதற்கான ஒரு துருப்புச் சீட்டாக இப்பிரச்சினையை எடுத்துள்ளனர். ஓட்டு பொறுக்குவதை தவிர வேறு எதுவும் கிடையாது.

தோழர் கோபிநாத்
தோழர் கோபிநாத்

இன்றைக்கு கர்நாடகாவில் தமிழர்களை அடிக்கும் கன்னட வெறியர்கள், பன்னாட்டு நிறுவனம் தண்ணீரை எடுத்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார்களே அவர்களை அடிப்பார்களா? பன்னாட்டு நிறுவனங்கள் தண்ணீரை விற்று காசக்குவதற்காக இந்த காங்கிரசு, பி.ஜே.பி இந்த இரண்டு கட்சிகளும் அணை பாதுகாப்பு மசோதா என்று கொண்டு வந்து இருக்கிறார்கள். ஆறு, குளம், நதி கூறுபோட்டு விற்பதற்காக கொண்டு வரப்பட்டதுதான் இம்மசோதா.

தேசியக் கட்சிகளான கம்யூனிஸ்ட்கள் உட்பட நதிநீர் பிரச்சினையில் இரட்டை நிலைப்பாடு கொண்டதாகத்தான் இருக்கின்றன. எனவே தேசிய ஒருமைப்பாடு என்பதெல்லாம் சுத்தமான பொய். மாறாக, இரண்டு மாநில மக்களையும் மோதவிட்டு ரத்தம் குடிக்கிறார்கள். அதோடு இயற்கை வளம், காடுகளை அழித்து மழை வருவதை தடுக்கிறார்கள். இன்னொரு பக்கம் மழை கொடுத்த கொடையையும் விற்கிறார்கள். எனவே இப்பிரச்சினைக்கு இரண்டு மாநில மக்களையும் இணைக்கும் மாற்று மக்கள் அதிகாரமே, நதி நீர் மேலாண்மை வாரியம் அமைத்து மக்களே கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அமைப்பதன் மூலம் இனவெறியை தடுப்போம், இரண்டு மாநில மக்கள் இணைத்து இதனை சாதிப்போம்” என்று கூறினார்.

அடுத்தாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜானகிராமன் உரையாற்றினார். அவரது உரையில், “கடந்த 5-ம் தேதி தமிழக அரசு 50 டி.எம்.சி தண்ணீர் வேண்டும் என்று மனுதாக்கல் செய்தது. உச்ச நீதி மன்றம் 10 நாட்களுக்கு வினாடிக்கு 15,000 கன அடி தண்ணீர் திறந்து விடுங்க என்று இடைக்கால தீர்ப்பு கொடுத்தது. இதை எதிர்த்து கர்நாடகாவில் காங்கிரசு கட்சியை சேர்ந்த சீத்தாரமையா முதலமைச்சர் தலைமையிலான அரசு இதனை ஒத்துக்கொள்ள முடியாது என்று மனுபோட்டனர். இருப்பினும் நாள் ஒன்றுக்கு 12,000 கன அடி 20-ம் தேதி வரைக்கும் திறந்து விடவேண்டும் என்ற தீர்ப்பு வந்த உடன் அங்கே திட்டமிட்டு வன்முறை தமிழக மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகிறது. இதனை பி.ஜே.பி திட்டமிட்டு நடத்துகிறது. ஏனென்றால் பாரதிய ஜனதா கட்சி இந்தத் தாக்குதலை தலைமை தாங்கி நடத்தி கொண்டிருக்கிறது. பல்வேறு கட்சிகளின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பா.ஜ.க-வின் முக்கியமான தலைவர்கள் தண்ணீரை தமிழகத்திற்கு விடக்கூடாது என்று பேசியிருக்கிறார்கள். பா.ஜ.க ஒரு தேசிய கட்சியாக இருக்கும் போது தமிழகத்திற்கு தண்ணீர் விடக்கூடாது என்று பேசினர்.

வழக்கறிஞர் ஜானகிராமன்
வழக்கறிஞர் ஜானகிராமன்

இங்கே அ.தி.மு.க காவிரி பிரச்சினையை ஓட்டுக்காகக் கூட கையிலெடுப்பதில்லை. ஏனென்றால் காசு கொடுத்தால் ஓட்டை வாங்கி விடலாம் என்று இதை கண்டுகொள்ளவில்லை. 2007 காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வந்தது. தமிழகத்தின் பங்கு 58% கர்நாடகாவின் பங்கு 36%, கேரளா, பாண்டிச்சேரிக்கும் 6% என்று தீர்ப்பு வழங்கியது. நம்மமுடைய பங்கை பெற்றுத்தர தமிழக முதல்வர் சட்டப் போராட்டம் நடத்துகிறார் என்று ஊடகங்கள் பேசிகொண்டிருக்கின்றன. கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரைக்கும் 100 டி.எம்.சி தண்ணீர் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் குறுவை சாகுபடிக்கு கொடுத்தது 35 டி.எம்.சி தண்ணீர்தான். மீதி 65 டி.எம்.சி தண்ணீர் கர்நாடக அணையில் இருக்கும் 65 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்துக்கு சொந்தமானது.

ஆனால் செயலலிதா 50 டி.எம்.சி தண்ணீருக்காகதான் மனு போடுகிறார். உச்சநீதிமன்றோ, தமிழக அரசோ, கர்நாடக அரசோ நமக்கு பிச்சை போடுவதில்லை. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்த மனு போட்டிருக்க வேண்டும். அதை அமல்படுத்தும் நீதிமன்றமும் இதனை அமல்படுத்துவதில்லை. இது நாட்டாமை தீரப்பா? இல்லையா? இங்க இருக்கும் கட்சிகள் நாட்டாமை தீர்ப்பை மாற்றி சொல்லுங்க என்று கூறுவதற்கு கூட வக்கற்றுபோய் இருக்கின்றனர்.

கர்நாடகாவில் மாண்டியா விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள், தமிழகத்தில் தஞ்சை விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இவை இரண்டும் ஒன்றுதான். எனவே இயற்கை வளங்களை, மணல், கல்வி, நிலக்கரி, பெட்ரோல், ரோடு எல்லாமே கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்காக திறந்து விடப்படுகிறது. தனியாரிடம் இருக்கிறது. இப்படி கடந்த 30 ஆண்டுகளாக எந்தப் பிரச்சினையும் தீர்க்க வக்கற்று இந்த அரசு கட்டமைப்பும், நீதி மன்றம் தோல்வி அடைந்து விட்டது.

ø;
ø;

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண்ணை டாக்டர் பலாத்காரம் செய்கிறான். ஓடும் ரயிலில் இராணுவ வீரர் ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவு கொள்கிறான். சிவகங்கையில் காவல் துறையைச் சேர்ந்த கும்பல் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள். கங்குலி என்ற நீதிபதி தன்னுடன் பணியாற்றும் பெண்ணை படுக்கை அறைக்கு அழைக்கிறான். பெத்த குழந்தையை பாலியல் வல்லூறவு செய்கிறான் தந்தை. இதையெல்லாம் எப்படி ஈவு இரக்கமில்லாமல் செய்கிறார்களோ, அதே போலத்தான் காவிரி பிரச்சனையும். வேலியே பயிரை மேய்வது போல விவசாயிகள் யாரெல்லாம் நமக்கு நன்மை செய்வார்கள் என்று எண்ணி கொண்டு இருந்தார்களோ அவர்கள் தான் இன்றைக்கு துரோகம் செய்து கொண்டுயிருக்கிறார்கள். எனவே தோற்றுபோன நீதி மன்றமும், கட்சிகளும், கர்நாடகாவில் இருக்கும் இனவெறி பாசிஸ்ட்களும், இந்துமதவெறி பாசிஸ்ட்களும், யார் கல்பர்கியையும், பன்சாராவையும் கொலை செய்தார்களோ அவர்கள்தான் தமிழகத்தின் நலனை, சட்ட பூர்வ உரிமையை, சட்டபூர்வ பங்கை மறுக்கின்ற இந்தத் தருணத்தை ஜனநாயக பூர்வமாக தீர்க்க வேண்டுமென்றால், விவசாயிகளே தங்கள் நலன்களுக்காக மக்கள் மன்றங்களை கட்டியமைத்துக்கொண்டு போராடுவதன் மூலம் தான் நம்முடை பிரச்சினையை தீர்க்க முடியும். இதற்கு மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

நூற்றுக்கணக்கான மக்கள் இறுதிவரை நின்று கவனித்து சென்றனர். பகுதி மக்களிடையே உத்வேகத்தை ஏற்படுத்தும் ஆர்ப்பாட்டமாக அமைந்தது.

தகவல்;
மக்கள் அதிகாரம்
தருமபுரி.
தொடர்புக்கு; 8148573417