privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2017 மின்னிதழ்

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2017 மின்னிதழ்

-

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2017 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. பன்னீர் எதிர் சசி:  முன் விட்டையா, பின் விட்டையா?
இரண்டு திருடர்களில் யாரைத் தேர்ந்தெடுப்பது? சிரித்த முகமும் அடிமைக்குரிய பணிவும் காட்டும் பன்னீரையா? மன்னார்குடி மாஃபியாவின் தலைவியான சசிகலாவையா?

2. மிக்சர் பன்னீரா? மிஸ்டர் பன்னீரா?
தலை முதல் கால் வரை கிரிமினல்மயமாகிவிட்ட இந்த அரசமைப்புக்குள் யாராவது ஒருவரை அதிகாரத்தில் அமர்த்திவிட்டு, பிறகு ஏமாந்துவிட்டதாகப் புலம்பியது போதும். “அதிகாரத்தை மக்கள் கையில் எடுத்துக் கொள்வதுதான் ஜனநாயகம்” என்று புரிந்து கொண்டோமானால், புதிய புதிய வாயில்கள் திறக்கும்.

3. மக்கள் அதிகாரம் விடுத்த மெரினா பிரகடனம்!
மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரான தோழர் ராஜு 22.1.17 அன்று மெரினாவில் திரண்டு போராடிய மக்களிடையே ஆற்றிய உரை(சுருக்கப்பட்ட வடிவம்).
ஜல்லிக்கட்டு கோரிக்கை என்பது ஒரு குறியீடு மட்டுமே என்று வலியுறுத்தி, தமிழக மக்களின் மெரினா போராட்டத்தில் மக்கள் அதிகாரத்தின் சார்பாக 11 கோரிக்கைகளை உள்ளடக்கிய மெரினா பிரகடனம் வெளியிடப்பட்டது.

4. மெரினா எழுச்சி : அடித்தாலும் அடங்காது இது வேறு தமிழ்நாடு!
போராட்டமென்றும் கொண்டாட்டமென்றும் பலவாறாக விளக்கப்படுகின்ற மெரினா எழுச்சி என்பது தனியொரு கோரிக்கைக்கான போராட்டமல்ல. இது ஒரு உணர்வெழுச்சித் தருணம். ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்தின் ஒரு மனநிலை.

5. விவசாயி பயிரை வளர்க்கவில்லை, பிள்ளையை வளர்க்கிறான்!
தொழில் நொடித்து, கடனாளியாகும் ஏனைய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் கொத்துக்கொத்தாகத் தற்கொலை செய்து கொள்ளாதபோது, விவசாயிகள் மட்டும் உயிரை மாய்த்துக் கொள்ளும் காரணம் இதுதான்.

6. வறட்சி நிவாரணம்: வரும், ஆனா வராது!
தமிழக அரசு அறிவித்திருக்கும் பயிர் இழப்பீடு தொகையும், காப்பீடு தொகையும் கைக்குக் கிடைப்பதற்குள் விவசாயிகள் செத்துச் சுண்ணாம்பாகி விடுவார்கள்.

7. புதிய பயிர்க் காப்பீடு: விவசாயிகளை வஞ்சித்த மோடி!
மோடி அரசு கொண்டுவந்திருக்கும் தேசிய வேளாண் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்குச் சுண்ணாம்பையும், தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு வெண்ணெயையும் வழங்குகிறது.

8. நுண்கடன் நிறுவனங்கள் – மகளிர் சுய உதவிக் குழுக்கள்: தனியார்மயம் உருவாக்கிப் பரப்பும் விஷக்கிருமிகள்!
பண்ணையார்களுக்கும் கங்காணிகளுக்கும் பயந்து நடுங்கிய மக்கள், இப்பொழுது நுண்கடன் நிறுவனங்களின் வட்டிப் பணம் வசூலிக்கும் துரைமார்களைக் கண்டுதான் அச்சப்படுகிறார்கள்.

9. விவசாயி வீட்டில் இழவு: யார் குற்றவாளி? இயற்கையா? அரசின் உதாசீனமா?
சாகுபடி பரப்பு குறையக்கூடாது, உற்பத்தி குறையக்கூடாது என உத்தரவிடும் அரசு, விவசாயத்திற்கு அடிப்படையான பாசன வசதிகளை, நீர்நிலை பராமரிப்பைத் திட்டமிட்டு புறக்கணிக்கிறது, அழிக்கிறது.

10. போலீசு ராஜ்ஜியம்! எழுந்து நின்ற தமிழகமே, எதிர்த்து நில்!

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2017 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

புதிய ஜனநாயகம் மாத இதழின் ஆண்டுச் சந்தா : உள்நாடு ரூ.180

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க