privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்ஓசூர் : மாருதி தொழிலாளர்களை விடுதலை செய் !

ஓசூர் : மாருதி தொழிலாளர்களை விடுதலை செய் !

-

மாருதி தொழிலாளர்களை விடுதலை செய்யக்கோரி ஓசூரில் செயல்பட்டுவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக 16.03.2017 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு 18.07.2012 அன்று மாருதி ஆலையில் நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்களை காரணம் காட்டி 148 தொழிலாளர்கள் 4- ஆண்டுகள் விசாரணைக் கைதிகளாகவே வைத்திருக்கப்பட்டனர். இந்திய வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய அடக்குமுறை.

மேற்கண்ட 148 தொழிலாளர்களில் 117 பேர் குற்றமற்றவர்கள் எனவும், மாருதி சுசுகி தொழிற்சங்க நிர்வாகிகள் அனைவரையும் உள்ளிட்ட 31 பேர் குற்றவாளிகள் எனவும் 2017 மார்ச் மாதம் 10-ம் தேதி குர்கான் மாவட்ட அமர்வு நீதிமன்றம் அறிவித்து உள்ளது. இவர்களுக்கு நாளை (மார்ச் 17) அன்று தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.

சங்க நிர்வாகிகள் அனைவரும் இந்தக் குற்றவாளிப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். ஆலை நிர்வாகமே திட்டமிட்டு நடத்திய வன்முறை என்பதையும், தொழிலாளர் மீது போடப்பட்டது பொய்வழக்கு என்பதையும், சங்க நிர்வாகிகள் அனைவரையும் குற்றவாளிகள் என அறிவித்ததிலிருந்தே தெளிவாக உணரமுடிகிறது. ஆகையால், மாருதி தொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும், காண்ட்ராக்ட் தொழிலாளர் முறையை உடனடியாக ரத்து செய்யவேண்டும். தொழிலாளர்கள் மீதான மாருதி சுசுகி நிர்வாகத்தின் அடக்குமுறையை விசாரணை கமிசன் அமைத்து முறையாக விசாரிக்கவேண்டும் என்பதை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தோழர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் செந்தில் மற்றும் மாநில துணைத்தலைவர் தோழர் பரசுராமன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் காந்தராஜ் நன்றியுரையாற்றினார். பல தொழிலாளர்களும் கலந்துக்கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

சிறப்புரையாற்றிப் பேசிய தோழர் பரசுராமன் தனது உரையில், மாருதி தொழிலாளர்மீது புனையப்பட்டுள்ளது அனைத்தும் பொய்வழக்கு. மாருதி சுசுகி தொழிலாளர் சங்கம் என்பது மார்ச் 2012-இல் தொடங்கப்பட்டது. ஏப்ரல் மாதத்தில் அந்தச் சங்கம் கோரிக்கை மனுவைக் கொடுக்கிறது. ஜூலை மாதத்தில் மேற்கண்ட வன்முறை சம்பவத்தை அரங்கேற்றி 2,300 சங்க உறுப்பினர்களை பணிநீக்கம் செய்துள்ளது ஆலை நிர்வாகம். ஆலை நிர்வாகம் கொடுத்த பட்டியலின் படி 148 முன்னணியாளர்கள் மீது குற்றம் சுமத்தி சிறையிலடைத்தது போலீசு.

சங்கம் தொடங்கப்பட்ட 4 மாதத்திலேயே இப்படி ஒரு வன்முறையை மிகவும் நன்கு திட்டமிட்டு நிர்வாகத்தால் நடத்தப்பட்டதற்கு முக்கிய காரணம், நிர்வாகத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும், காண்ட்ராக்ட் தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றவேண்டும் என்றும் சங்கம், உரிமைக்காகப் போராடியதுதான். இது சங்கத்துக்கு எதிரான பொய்வழக்கு என்பதை புரிந்துக்கொள்ள இதைவிட ஒரு நிரூபணம் தேவையில்லை.

18.07.2012 அன்று காலை 7.20 க்கு வன்முறை நடந்து முடிந்தது. ஆனால், போலிசோ காலை 11 மணிக்குத்தான் வந்தது. அந்தபோலீசும் ஆலைக்குள்ளே நுழையவில்லை. ஆனால், எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுவிட்டது, எப்படி? காரணம், நிர்வாகம் கொடுத்த பட்டியல் அடிப்படையிலே அந்த எஃப். ஜ.ஆர் பதிவு செய்யப்பட்டது.

முதல்நாள் சம்பவம் நடந்து மறுநாள் காலை 6 மணி வரை தடயவியல் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தி முடிக்கின்றனர். முற்றிலும் எரிந்துப் போன அறையை பல பாகங்களாக பிரித்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். தடவியல் ஆய்வாளர்களுக்கு கிடைக்காத ஆதாரங்களை (தீப்பெட்டி) அதற்கு பிறகு போலியாக ஆலை நிர்வாக அதிகாரிகளே தயார்செய்து கொடுத்தனர். அந்த வகையில்தான் தொழிலாளர்கள் மீது தீவைப்பு சம்பவம் திணிக்கப்பட்டது.

ஒரு அதிகாரியை 4-5 தொழிலாளர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கியதாக எஃப்.ஐ.ஆர். சொல்கிறது. தாக்கப்பட்டதாக சொல்லப்பட்ட எந்த அதிகாரியும் மருத்துவ சான்றிதழ்களை கொடுக்கவில்லை. ஒரு அதிகாரி தனது பல்லின் ஈறு அழுக்குகள் பிரச்சனைக்காக மருத்துவம் எடுத்துக் கொண்டதை தான் தாக்கப்பட்டதற்கான சான்றாக நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார். அதிகாரிகள் தாக்கப்பட்டதாக சொல்வது பொய் என்று இதனைவிட வேறு காரணங்கள் வேண்டுமா?

இறந்து போன மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரியோ மூச்சுத்திணறலில்தான் இறந்து போனதாக பிரேதப் பரிசோதனை அறிக்கை சொல்கிறது. ஆனால், தொழிற்சங்க நிர்வாகிகள் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது, இது எப்படி?

குற்றம் சாட்டப்பட்ட காண்ட்ராக்ட் தொழிலாளர்களின் (89 பேர்) பெயர் காண்ட்ராக்ட்காரனின் பதிவேட்டில் உள்ள அகரவரிசைப்படி (A, B, C…Z) அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு சாட்சி சொல்பவர்களும் அகரவரிசைப்படியே  முதல் 25 பேருக்கு ஒருவர் அடுத்த 25 பேருக்கு ஒருவர் என்று சாட்சி சொல்கின்றனர். இது போன்றவையெல்லாம் இந்த சாட்சிகளும் குற்றப்பட்டியலும் முற்றிலும் பொய்யானவை என்பதை நிரூபிக்கவில்லையா? சாதாரண பொது அறிவு உள்ள எவரும் ஏற்கதக்க இந்த உண்மைகளை குர்கான் மாவட்ட நீதிபதி ஏன் ஏற்கவில்லை ?

இது தான் நீதிமன்றம். இதுதான் போலீசு. தண்டனையை அவர்கள் முடிவு செய்து விட்டார்கள். குற்றங்களை முன்னமே தயார் செய்துவிட்டார்கள். சம்பவங்களை அதற்காக நிகழ்த்திவிட்டார்கள். இதற்கு மேல் அதற்கேற்ப குற்றப்பட்டியலையும் ‘நீதி’ விசாரணையையும் நடத்திக் காட்டும் பொறுப்பு போலீசுக்கும் நீதிமன்றத்திற்கும் கொடுத்துள்ளனர். அதற்காக எந்த சட்டங்களைப் பற்றியும் கவலைப்படாமல், எந்த நீதி நியாயங்களையும், இயற்கை நியதிகளைப் பற்றியும் கவலைப் படாமல் தீர்ப்பு வழங்கியுள்ளது குர்கான் நீதிமன்றம்.

போலீசின் வேலை இத்துடன் முடிந்து விடவில்லை. அடுத்தக் கட்டமாக தொழிலாளர்கள் கிளர்ந்தெழாத வகையில் தடுக்கும் ‘கடமை’ அதற்கு கார்ப்பரேட் உலகத்தினால் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த தீர்ப்பு வழங்கவிருந்த கடந்த 9-ம் தேதி முதல் குர்கான் மானேசர் தொழிற்பேட்டை முழுவதும் துணை இராணுவப்படை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டுள்ளனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தொழிலாளர்கள் கூட்டம் நடத்துவதற்கும், நடமாடுவதற்கும், பேசுவதற்கும் கூட நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாருதி தொழிலாளர்கள் ஆலைக்குள்ளே சிறைவைக்கப்பட்டு ஒவ்வொரு தொழிலாளருக்கும் ஒரு போலீசு என்ற அளவிற்கு நிறுத்திவைத்து கொடிய அடக்குமுறை செலுத்தப்பட்டு வருகிறது. பொய்வழக்கை போட்டது மட்டுமல்ல மேற்கண்ட அடக்குமுறையையும் இந்த போலீசுதான் செலுத்தி வருகிறது. இதன் மூலமெல்லாம் தொழிலாளர் போராட்டங்களை நசுக்கிவிடலாம் என்று போலீசு கருதினால் அது பகல்கனவே.

அரியானா அரசு தன்பங்குக்கு இன்னும் கூடுதலாக தொழிலாளர்கள்மீது அடக்குமுறை செலுத்திவருகிறது. இதனைப் புரிந்து கொள்வது மிக அவசியம். தொழிலாளர்களுக்கு எதிரான இந்த வழக்கை நடத்துவதற்கு மாருதி ஆலை நிர்வாகம், அரசு தரப்பு வழக்கறிஞர் மட்டும் வாதாடவில்லை. குறிப்பாக, அரசே தனிச்சிறப்பாக 5.5 கோடி ரூபாய் செலவு செய்து கே.டி.எஸ். துளசி என்ற வழக்கறிஞரை நியமித்துள்ளது. இந்த வழக்கறிஞர் ஒரு முறை நீதிமன்றத்ததில் ஆஜர் ஆவதற்கு ரூ.11  லட்சம் கட்டணமாகப் பெற்றுள்ளார். இவ்வளவு செலவு செய்துதான் இந்த மோசடியான தீர்ப்பை அரியானா அரசு மாருதி கார் நிறுவனத்துக்கு வாங்கிக் கொடுத்துள்ளது. 148 தொழிலாளர்கள்  4 ஆண்டுகள் வரை சிறையில் விசாரணைக் கைதிகளாகவே, பிணைவழங்கப்படாமல் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்; இன்னும் 11 சங்க நிர்வாகிகளுக்கு பிணை வழங்கப்படவில்லை. முக்கியமாக இன்று 31 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் அரசின் தீவிரமான முயற்சியால்தான் நடந்துள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். யாருக்காக இவ்வளவு முயற்சிகளை அரியானா அரசு எடுத்துள்ளது? யாருடைய பாதுகாப்புக்காக? யாருடைய சொத்தைப் பாதுகாப்பதற்காக? மாருதி-சுசுகி ஆலை நிர்வாகத்தின் அடக்குமுறை-இலாபங்களை பாதுகாக்க!

தமிழகத்தில் உள்ள எந்த பத்திரிக்கையும் மாருதி தொழிலாளர் மீதான இவ்வளவு பெரிய அடக்குமுறையைப் பற்றி ஒரு வரிகூட பேசவில்லை. தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராக இவை அனைத்தும் கூட்டு சேர்ந்து செயல்படுகின்றன.

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காகவும், கெயில் எரிவாயு திட்டத்துக்காகவும் மீத்தேன், கூடங்குளம், நியூட்ரனோ போன்ற பல்வேறு அழிவுத்திட்டங்களை தமிழகத்தின்மீது திணிக்கும்போதும் அரசு, நீதிமன்றம், போலீசு, இதே வகையான அடக்குமுறைகளைத்தான் செலுத்தி வருகின்றன. ஓசூரில் கமாஸ் வெக்ட்ரா, வெக் இந்தியா, குளோபல் ஃபார்மாடெக், ஏ.பி.எல்,லால், சாகாகீல், உமாமகேஸ்வரி, போன்ற பல ஆலைகளிலும் உரிமைக்கோரி போராடிய தொழிலாளர்களுக்கு எதிராக இதே வழியிலதான் கூட்டுசேர்ந்து அடக்குமுறை செலுத்தின, செலுத்தி வருகின்றன. ஆகையால், நீதிமன்றம், போலீசு, இந்த அரசு கட்டமைப்பு முழுவதுமே கார்ப்பரேட் முதலாளிகளுக்குத்தான் செயல்படுகிறது என்பதை நாம் உணர்ந்து, இவற்றிற்கு வெளியே இந்த ஒட்டுமொத்த கட்டமைவுக்கு எதிரானதொரு எழுச்சியை கட்டியமைப்பதன் மூலமாகத்தான்  தொழிலாளர் வர்க்க உரிமைகள், உழைக்கும் மக்களின் அடிப்பபடைத் தேவையை பாதுகாக்க முடியும்.

மாருதி ஆலைத் தொழிலாளர்கள் இவ்வளவு அடக்குமுறைகளுக்கு எதிராக உறுதியாகப் போராடி வருகின்றனர். குர்கான் – மானேசர் தொழிலாளர்கள் 9-ம் தேதிமுதல் உணவுப் புறக்கணிப்பு, ஆலைவாயில்கூட்டங்கள் போட்டு இந்த தீர்ப்பைக் கண்டித்து வருகின்றனர்; மாருதி தொழிலாளர்களைப் பாதுகாக்க ஒருமித்த வகையில் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த அரசு கார்ப்பரேட் முதலாளிகளுக்கானது. நீதியும் சட்டமும் வெறும் மாயை என்பதை உணர்ந்து வருகின்றனர். இந்த சட்டத்திடமிருந்து இது போன்ற ஒரு தீர்ப்புதான் வரும் என்பதை உணர்ந்தும் வருகின்றனர். இனி ஒன்றுதான் தீர்வு, குர்கான் முதல் ஒசூர் வரையிலான தொழிலாளர்கள் ஒன்றிணைக்கப்படவேண்டும்! முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு அது பெரிய அடியாக அமையும். அடுத்து அதற்கு சவக்குழி தோண்டுவதற்கான தொடக்கமாகவும் இருக்கும்!

அந்த வகையில், மாருதி தொழிலாளர்களை காப்பாற்ற வேண்டுமென்றால் இந்த நீதிமன்ற அரசுக்கட்டமைப்புக்கு வெளியே ஒரு தொழிலாள வர்க்க எழுச்சியை நாம் உருவாக்குவோம் என்ற அடிப்படையில் அறைகூவி அனைவரையும் அழைக்கும் வகையில் சிறப்புரையாற்றினார்.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தருமபுரி -கிருஷ்ணகிரி-சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு: 97880 11784


Judiciary and police not for us! Save Maruthi Suzuki Workers!

Statewide Protest

On March 16, 2017 at 5 p.m. near Ram Nagar Anna Statue, Hosur

Dear Workers!

On March 10, Once again the Delhi-Gurgaon Sessions court proved that, the judiciary, police and entire state machinery is against working people. In the judgment of criminal case against Maruthi-Suzuki workers (MSW) the court released 117 workers are innocence and announced that 31 workers including entire body of the MSW union are criminals. Among the 31 workers, the crime of murder is imposed on 13 workers and the crime of violence, setting fire and looting. The quantum of punishment for these crimes the 31 workers will be held on coming March 17.

Conspiracy of State machinery and Owners!

On 18.07.2012, Violence was erupted in the Factory of Maruthi-Suzuki Car Company which was located in Manesar industrial estate near New Delhi. This violence and setting fire was performed by the hundreds of goons arranged by the management of this company. In this violence a HR officer, Mr.Avanishdev was dead. By name of the death the management terminated 2,300 workers and 148 were arrested by the false case of murder, violence, setting fire, looting.

The Maruthi-Suzuki workers were demanding Hariyana Government, to arrange an Enquiry Committee leading by the present Judge. Not only the Haryana Government rejected the plea of workers, but also opposed to give bail the workers in the court. By the reason the workers took bail by hard struggle in the court for a long time of 3 ½ years.

But, in the name of Maruthi-Suzuki violence, the Haryana Government and the owners of Multi-National Companies (MNCs) jointly restricted the workers unions in the hundreds of MNCs situated in the industrial area of Gurgaon-Manesar.

Collaboration of Police-Judiciary-Managements!

In every stages of the trail of this case, it was witnessed that the above collaboration actively tried to suppress the workers movement. The police blatantly lied in the court that in the violence of the workers 90 police men and managing officers of Maruthi-Suzuki were injured, but, no one worker was not. The court accepted it. The same court released 117 accused workers have no offence. Then, who was injured the officers, particularly the striking force police men? It become clear that the accusation of gang violence was fabricated by the police.

The evidences and witnesses produced by the police in the court are fake and guilty. Majority of the witnesses gave confessions in the court. And they openly stated in the court that they were not at the spot of violence and police forced them to give false witness. The postmortem report of the diseased officer was not proved the murder. The role of the 13 workers who are subjected to crime does not establish beyond doubt. The Gurgaon Court has accused the all workers despite many loopholes in the ‘preparation’ of police.

What is the lesson to learn?

The judiciary, police and the entire state machinery is against working people. Each and every day the Capitalist terrorism is killing thousands of workers by the accidents in factories, unsafe working conditions. The labour department is unfit to sake the hair of corporate owners and and buckling like worm in front of the corporate owners who is flush the employment of lacks of workers and torturing, threatening the workers to do hard work and banning the workers union.

The Labour department which is Betraying workers trying to form a union, sightseeing the owners attacks the union and getting them to bribery and the Judicial system which covers might makes right eye are not save us. The police threaten workers by registering false cases like from murder to riot. Why we have to stoop to these? It’s time to stand united working class. The unity of working class is protecting not only to Maruthi workers, but the entire working class!

Let us unify the working class! Defeat the Capitalist terrorism!

New Democratic Labour Front
Krishnagiri – Dharmapuri – Salem Districts.
For Contact: 97880 11784 – ndlfhosur2004@gmail.com


న్యాయ స్థానములు, పోలీసులు మనకోసం కాదు!
మారుతి కర్మాగర కార్మికులను రక్షించెదము!

రాష్ట్రం పూర్తిగ ఆర్బాటం
2017 మార్చి 16 సాయంకాలం 5.00 గంటలకు
రామనగర్ అణ్ణాశిల ప్రక్కన హొసూరు.

ప్రియమైన కార్మికులారా!
న్యాయస్తానము, పోలీసులు, ప్రభుత్వ నిర్మాణము పూర్తిగ కష్ఠపడు ప్రజలకు విరుద్దం అనుట మార్చి 10 తేదిన డిల్లినందు గుర్కాన్ జిల్లా క్రిమినల్ న్యాయస్తానము మరల ఒక్కసారి నిరూపించినది. మారుతి కర్మాగార కార్మికుల పైన నడపించుచున్న క్రిమినల్ కేసునందు 117 మంది కార్మికులను విడుదల చేసిన న్యాయస్తానం 31 కార్మికులను అపరాదిలుగ ప్రకడించినది. వీరులో 13 మంది హత్య అపరాదులని 18 మందిపై హింసాకాండం, దోపిడి తగల పెట్టుట వంటి నేరములు మోపబడినది. ఈ నేరములకు తగిన దండన వచ్చు మార్చి ౧౭వ తేది నందు ప్రకటించునట్లు తెలియపరచినది.
ప్రభుత్వము-మొదళాలిలు దిట్టమేసిన తంత్రం!

గడచిన 18.07.2017 నందు డిల్లి మనేసర్ పారిశ్రామిక ప్రాంతములొ నడపుతున్న మారుతి సుజుకి కారు కర్మాగారములో తగరాలు ఏర్పడినది. యాజమాన్యం సూరారు మంది గూండాలను కర్మాగారం లోపలికి రప్పించి ఈ హత్యాకాండమును నిప్పంటించుట వంటి అసంబవములను నడపించినది. ఈ అసంబవములో అవానిష్ దేవ్ అను హె.ఆర్. అధికారి చనిపోయినాడు. ఈ చావును కారణముగా చెప్పి 2,300 కార్మికులను పనులనుండి తొలగించినారు. 148 కార్మికులపై హత్యా, నిప్పంటించుంట, దోపిడి, హత్యాకాండం వంటి కేసులు పదవిచేసి జైలునందు పెట్టినారు.

ఈ అసంబవమునకు కారణం ఎవరు? అదికారిని చంపినది ఎవ్వరని విచారించు సుప్రీం కోర్టు న్యాయాదిపతి అద్యక్షతన విచారణ కమిసన్ జరపవలయునని కార్మికులు కోరు కొనుదానిని అర్ధం చేసుకొనక రాష్ట్ర ప్రబుత్వం నిరాకరించినది. పైగ ఖైదు చేయబడెన కార్మికులను జామీనునందు విడవరాదని న్యాయస్తానములో పోరాడినది. దీనినుండి కార్మికులు కొన్ని సంవత్సరములు పోరాడినపిదప జామీను దొరకినది. ఈ అసంబవమును వాదుకొనిన గుర్కాన్-మానేసర్ పారిశ్రామిక ప్రాంతములో నడపుతున్న నూరారు బహుళజాతి కంపెనిలలో కార్మిక సంఘములు స్థాపించక పోవు సందర్బములలో హరియాన రాష్ట్ర ప్రభుత్వం – బహుళజాతి కంపెనిలు చేతులుకలిపి నడపుతున్నారు.
పోలీసు-మొదళాలిలు-న్యాయస్థానములు ఉమ్మడి!

బ్రదుకు జీవితములో ఒకోక్క సంభవములో ఈ ఉమ్మడి నడవడికలు కార్మిక వర్గ సంఘములను నులిపిటను తీవ్రముగ ప్రయత్నం చేయుట కన్నుల ముందు తెలిసినది. కార్మికుల తగరాలులలో 90 మంది పోలీసులు మరియు మారుతి అధికారులు గాయపడినట్లు చెప్పిన పోలీసు, ఓకేఒక కార్మికునకు కూడ చిన్నగాయమోకాని, గీతనేకాని ఏర్పడలేదని అపద్దమును చెప్పినది. దీనిని న్యాయస్తానం అంగీకరించినది. కాని ఈ న్యాయస్థానము 148 మందిలో 117 మంది నిరపరాదులని విడుదలచేసెనది. అట్లున్న 90 అధికారులకు-ముఖ్యముగ స్ట్రైకిం ఫోర్స్ పోలీసులకు గాయములను ఏర్చరచినది ఎవ్వరు? గుంపు జగడములను క్రిమినల్ పోలీసు మూలముగనే నడచినదని తెలియపరచలేద!

పోలీసు తీసుకొచ్చిన సాక్షిలు, కాగితములు తప్పని పలుసందర్భములలో నిరూపించబడినది. పోలీసు తీసుకొని వచ్చిన సాక్షిలలో కొందరు సంబవం నడచిన స్తలమునందు లేదని, తప్పుసాక్షిచెప్పుమని నిర్బందించినారని న్యాయస్థానమునందే వాక్మూలము చెప్పినారు. చనిపోయిన అధికారి శవ పరిక్షలో హత్య అని నిర్ణయంచలేదు. ఇప్పుడు హత్యనేరమునకు గురియైన 13 మందికి బాగము ఏమనునదిని సందేహపరిస్థితిలో యున్నప్పడికి తీర్పునిలపడం లేదు. పోలీసు తయారింపులో యున్న ఇన్ని తూట్లను మీరి సంఘ నాయకులందరిని నేరస్తులని బావించిన గుర్కాన్ న్యాయస్థానం.
నేర్చుకోవలసిన పాఠం ఏమి?

పోలీసు-న్యాయస్థానములు మాత్రంకాదు, అన్ని ప్రభుత్వ యంత్రాంగములు ఉమ్మడిచేరి కష్ఠపడు ప్రజలకు వ్యతిరేకముగ యున్నది. కర్మాగార అపఘాతములు, అనురక్షిత పనిపరిస్తితిని మొదళాలి భయంగరవాదులు దినదినము వేలాది మంది కార్మికులను చంపి పూడ్చుచున్నది. లక్షలాది మంది కార్మికుల పనులను తీసి, మానసికముగ హింసించి హత్యవెర్రి ఆట వేయు కార్పరేట్ మొదళాలిల చిన్నవ్రేలు కదలించడానికి చేతకాని లేబర్ డిపార్టుమెంట్ (కార్మిక శాఖ).

సంఘం స్థాపించాలని ప్రయత్నించిన కార్మికులను చూపించు, సంఘము నడపించు నాయకులపై నడవడికలను ఎత్తు యాజమాన్యాం వేడికలను చూచు లేబర్ డిపార్టుమెంట్, మొదళాలిలు చెప్పినదే చట్టం అని కల్లుమూసుకొనిన న్యాయస్థాం, మనలను రక్షించలేదని మనం నేర్చుకోవలసిన పాఠం.

హత్య కేసునుండి అల్లర కేసువరకు తప్పు కేసులు దాకల్‌చేసి కార్మిక వర్గామునకు భయపెట్టిన పోలీసులకు ఎందుకు భయపడవలేను? కోట్లాదికోట్ల కార్మికులు ఐక్యమైయుటకు సందర్పమిది. ఈ కార్మికుల ఐక్యం మారుతి కర్మికుల మత్రమే కాదు అన్ని కార్మికుల వర్గములను రక్షించి మొదళలి భయంకరవాదములను ఓడించెదము!

కార్మిక వర్గ ఐక్యతను కట్టికాపాడుదము! మొదళాలి భయంకరవాదమును ఓడించెదము!

నుతన ప్రజాస్వామ్య కార్మిక రంఘం
క్రిష్ణగిరి-ధర్మపురి-సేలం జిల్లాలు.
సంప్రదింపులకు: 97880 11784

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க