privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்அமெரிக்க கோக்கை அடித்து விரட்டு ! - நெல்லை ஆர்ப்பாட்டம்

அமெரிக்க கோக்கை அடித்து விரட்டு ! – நெல்லை ஆர்ப்பாட்டம்

-

தாமிரபரணி மக்கள் சொத்து! அமெரிக்க கோக்கை அடித்து விரட்டு!!  என்ற முழக்கத்தை முன்வைத்து 24.03.17 மாலை  திருநெல்வேலியில் பாளை ஜவகர் திடலில் மக்கள் அதிகாரம் சார்பாக தாமிரபரணியை கோக்குக்கு தாரைவார்க்கும் அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மக்கள் அதிகாரம் தோழர் ஆதி இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர் சிவா, மக்கள் உரிமைப்பாதுகாப்பு மையத்தின் தூத்துக்குடி தோழர் அரிராகவன், பொட்டல் கிராம இளைஞர் செல்வக்குமார், நாகர்கோவிலிலிருந்து வந்திருந்த வின்சாண்டோ (குமரி பாசனத்துறை) ஆகியோர் கண்டனங்களை பதிவு செய்தனர். மக்கள் அதிகாரம் சிவகங்கை தோழர் நாகராசன் சிறப்புரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கிராமங்களிலிருந்து மாணவர்கள் – இளைஞர்களும், விவசாயிகளும் பெண்களும் கலந்துகொண்டனர். ஓட்டுக்கட்சிகள் காசு தந்தும், வண்டி அனுப்பியும் தான் கூட்டம் கூட்டுகின்றனர். ஆனால் மக்கள் அதிகாரம் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உணர்வுபூர்மாக நிதியளித்தும், சொந்த செலவில் வந்து கலந்துகொண்டதையும் பார்த்த பலவேறு அமைப்பினர் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர்.

சிபிஎம் கட்சியைச் சேர்ந்த தோழர் “எங்க உண்ணாவிரதத்துல ஒரு கான்ஸ்டபிள்தான் குச்சிய வெச்சிக்கிட்டு நின்னார். உங்க ஆர்ப்பாட்டத்துல இவ்வளவு போலீஸ்காரங்க குவிஞ்சிருக்கராங்களே! வஜ்ரா வண்டிய வேர கொண்டாந்திட்டான்” என்று ஆச்சர்யப்பட்டார்.

சீமைக்கருவேல மரம்தான் முதன்மையான பிரச்சினை என்று தண்ணீர் பிரச்சினையை திசைதிருப்பும் அரசை கண்டித்தும், காடுகளை அழிக்கும் கும்பல்களான எஸ்டேட் முதலாளிகள் முதல் சாமியார்கள் வரை அம்பலப்படுத்தியும், பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமான தனியார்மயத்தை அம்பலப்படுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் பேசிய தோழர்கள் அம்பலப்படுத்தினார். மாவட்ட ஆட்சியரிடம் கெஞ்சுவதாலோ, நீதிமன்றத்தில் வழக்கு போடுவதாலோ பலனில்லை. தாமிரவருணியை உறிஞ்சிக்கொழுக்கும் கோக் உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளை விரட்ட மெரினா போன்றதொரு எழுச்சியை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையை இளைஞர்களிடம் உருவாக்கினார்.

கல்லூரி மாணவர்கள் “தட்டிக்கு (பதாகை) எங்கிருந்த இந்தமாதிரி போட்டோவை பிடிக்கறீங்க. முழக்கமும் அருமை” என்று பாராட்டினர். பொட்டலைச் சேர்ந்த பெண்மணியோ “ஆசியாவிலேயே முதல்முறையா நம் நாட்லதான் பெக்டெல் நுழைஞ்சிருக்கான்னு, திருப்பூரப்பத்தி சொன்னீங்க! ஒவ்வொன்னும் புது செய்தியா இருந்துச்சு!” என்றார்.

நாம் தாமிரபரணியை பாதுகாக்க இந்த அரசை கெஞ்சிப்பயனில்லை! நாமே அதிகாரத்தை கையில் எடுக்கவேண்டும்! மெரினா எழுச்சியை நெல்லையில் உருவாக்க வேண்டும் என்ற கருத்தை பதியவைத்துள்ளது இந்த ஆர்ப்பாட்டம்.

சொல்லிவைத்தாற்போல் எந்த ஒரு நாளிதழிலும் இந்த ஆர்ப்பாட்ட செய்தி வரவில்லை. “கலெக்டரே சொல்லிருப்பான். நம்மளையே ஏசுறானுங்க, ஒருத்தனும் செய்திபோடக்கூடாதுன்னு” என்று ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவரே ஊடக தர்மத்தையும், அரசின் ஜனநாயகத்தையும் விமர்சித்தார்.

கிராமங்களில் நம் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்  சொன்னதைக்கேட்டு பலரும்  “என்னை விட்டுட்டு போயிட்டியே, இவ்வளவு நல்லா நடக்கும்னு தெரியல்லியே” என்று ஆதங்கப்பட்டுள்ளனர். “அடுத்து கூட்டம்னா நாங்க நிச்சயமா 100 பேர கூட்டியாருவோம்!” என்று சில ஊர்களில் மக்கள் நம்மிடம் கருத்து கூறினர்.  அடுத்தகட்ட போராட்டத்துக்கு மக்களை தயார்படுத்தும் ஆலோசனைகளை செய்துவருகிறது மக்கள் அதிகாரம்.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – 80152 46753

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க