privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்மார்க்ஸ் 200-வது பிறந்த நாள் - லெனின் 148-வது பிறந்த நாள் - புஜதொமு பிரச்சாரம்

மார்க்ஸ் 200-வது பிறந்த நாள் – லெனின் 148-வது பிறந்த நாள் – புஜதொமு பிரச்சாரம்

-

மே 5, 2017 பாட்டாளி வர்க்க ஆசான் காரல் மார்க்ஸ் 200-வது பிறந்தநாள் ! ஏப்ரல் 22, 2017 பாட்டாளி வர்க்க ஆசான் லெனின் 148-வது பிறந்தநாள் !

தமிழகம் மற்றும் புதுவையில் அரங்கு மற்றும் ஆலைவாயில் கூட்டங்கள் !

ன்பார்ந்த உழைக்கும் மக்களே !

“முதலாளி இல்லாமல் தொழிலாளி இல்லை, முதலாளிகளால்தான் எல்லாமே நடக்கிறது. அவன் முதல் போட்டவன், நாம எதுவும் கேட்க முடியுமா?” என விரக்தியோடு அடங்கிக் கிடப் பவர்கள் ஏராளம். இது காலங்காலமாக நடந்து வரும் சமாச்சாரம்தானே என சலித்துக் கொண்டும், சகித்துக் கொண்டும் வாழ்வதற்கு நாம் பழகிக் கொள்ள வேண்டும் என்பதுதான் முதலாளிகளின் விருப்பம். அதனால்தான் இது போன்ற நச்சுக் கருத்துக்களைத் தமது அடிவருடிகள் மூலம் அவிழ்த்துவிட்டு நம்மை நம்ப வைத்து வருகின்றனர். இதெல்லாம் உண்மை இல்லை, மோசடி அயோக்கியத்தனம் என உலகமே அதிரும்படியாக உரக்கச் சொல்லி, உரிய ஆதாரங்களுடன் நிரூபித்தவர் காரல் மார்க்ஸ், அவர் உருவாக்கிய தத்துவம், உழைக்கும் வர்க்கத்துக்காகவே உருவாக்கப்பட்ட தத்துவம், உழைக்கும் வர்க்கத்துக்காக மட்டுமே பேசுகின்ற, போராடுகின்ற தத்துவம். அதுதான் கம்யூனிசம் அதனால்தான் கம்யூனிசம் என்ற வார்த்தையைக் கேட்டாலே முதலாளி களுக்கு மிளகாயை அரைத்து எங்கோ பூசியது போல எரிகிறது.

உழைப்பாளிக்கு உரிய கூலியைத் தரமறுப்பதன் மூலம் அவனது உழைப்பைக் கொள்ளையடித்து சேர்த்ததுதான் முதலாளிகளின் மூலதனம், என்பதை அசைக்க முடியாத ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டினார் காரல் மார்க்ஸ், முதலாளிகளின் சொத்து மட்டுமல்ல, அனைத்து உற்பத்தி சாதனங்களுமே உழைப்பாளிகளின் உழைப்பின் பயனாக உருவானவைதான் என்பதையும், அதையெல்லாம் தனது தனிப்பட்ட சொத்தாக வைத்திருப்பதன் மூலம் முதலாளிகள், உழைப் பாளிகளை அடிமைப்படுத்தி சுரண்டுகிறார்கள் என்பதையும் அம்பலப்படுத்திக் காட்டினார்.

இப்படிப்பட்ட திருட்டு முதலாளிகள் தமது சொத்தை, மூலதனத்தைப் பாதுகாக்கவும், பெருக்கிக் கொள்ளவும் உருவாக்கியது தான் தற்போதைய அரசு அமைப்பு என்பதையும், அந்த அரசிடமே கெஞ்சிக் கொண்டிருப்பதால் எந்தப் பலனும் கிடைக்காது என்பதையும் வரலாற்று அனுபவங்களில் இருந்து தெளிவாக்கிக் காட்டினார் மார்க்ஸ். எனவே, பாட்டாளி வர்க்கம் இப்போதுள்ள முதலாளித்துவ அரசமைப்பைப் புரட்சியின் மூலம் தூக்கியெறிந்துவிட்டு தனக்கான புதிய அரசை உருவாக்கிக் கொள்ள வேண்டும்; இதற்காக தொழிலாளி வர்க்கம் தன்னைப் போலவே ஒடுக்கப் படும் பெரும்பான்மை விவசாய வர்க்கத்தையும் தன்னோடு அணிசேர்த்துக் கொண்டாக வேண் டும் எனவும் வழிகாட்டினார். பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான தத்துவத்தை உருவாக்கிக் கொடுத்ததோடு, அதைக் காப்பாற்றி நிலைநாட்டவும், நடைமுறையில் சாதிக்கவும் தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தார் காரல் மார்க்ஸ்.

மார்க்சின் வழிநின்று, அவரது தத்துவத்தை நடைமுறையில் சாதித்துக் காட்டி உலகின் முதல் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை நிறுவிக் காட்டியவர் ஆசான் லெனின், ஜார் மன்னனின் கொடுங்கோலாட்சி, அதன் பாதுகாப்பில் தொழிலாளிகளை உறிஞ்சிக் கொழுத்த முதலாளிகள், விவசாயிகளை சுரண்டிக் கொள்ளையடித்த பண் ணையார்கள் என ரஷ்ய நாட்டு உழைக்கும் மக்கள் நடுங்கித் தவித்தனர். அம்மக்களின் துயரம் தீர்க்கும் விடிவெள்ளியாக, ரஷ்ய போல்ஷ்விக் கட்சியை உருவாக்கி, தொழிலாளி – விவசாயி வர்க்கங்களின் கூட்டை உறுதியாக நிறுவினார் லெனின்.

பாட்டாளி வர்க்கத்தின் தலைமை யில் 1917- நவம்பர் 7-ஆம் நாளில் சோசலிசப் புரட்சியை வெற்றிகரமாக நடத்தி பாட்டாளிகளின் புதிய அரசு அமைக்கப்பட்டது.

உழைக்கும் வர்க்கத்தின் கையில் அரசதிகாரம் வந்தவுடன் உழுபவருக்கே நிலம், உழைப் பவருக்கே அதிகாரம் என்ற முழக்கத்தை நிறை வேற்றும் வகையில், ஆலைகள் அனைத்தும் அரசுடைமை ஆனது. பணக்கார விவசாயிகளின் நிலங் கள் பறிமுதல் செய்யப்பட்டு உழுபவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டது. உழைக்கும் மக்களின் அறியாமை போக்க அனைவருக்கும் கல்வி கொடுக்கப்பட்டது. ஆயிரம், லட்சம் என உழைப் பாளிகள் வேலையே இல்லாமல் அலைந்த நாட் டில், எங்கு திரும்பினாலும் ஆலைகளின் வாச லில் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற அட்டை களே தொங்கின என்னுமளவிற்கு தொழிற்துறை உற்பத்தி பெருகியது. சிறுவிவசாயிகளை ஒன் றிணைத்து கூட்டுறவுகளும், கூட்டுப்பண்ணை களும், பிறகு அரசுப் பண்ணைகளும் உருவாக்கப் பட்டன. யாரும் பட்டினியில்லை என்று சொல்லும் அளவுக்கு தானியக் களஞ்சியங்கள் நிரம்பி வழிந்தன.

தேர்ந்தெடுக்க, தவறு செய்வோரை திருப்பியழைக்க – தண்டிக்க மக்களுக்கு அதிகாரம் கொடுத்த சோவியத்துகளுக்கு தொழிலாளி களும், விவசாயிகளும் மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் நலன் காக்கும் சட்ட திட்டங்களை உருவாக்கி, மக்கள் ஒப்பு தலோடு நிறைவேற்றினார்கள். தங்களது மக்கள் நலனில் கண்ணும் கருத்துமாக இருந்து, சகல வசதிகளையும் செய்து கொடுத்தன. கல்வி, மருத்துவம், குடிநீர் அனைத்தும் இலவசம், மிகச்சொற்பமான தொகையில் வீட்டுவசதியும், போக்குவரத்தும் சாத்தியமாகின. அவரவர் தகுதிக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம் ஆண் – பெண், தொழிலாளி – விவசாயி, உடலுழைப்பு – மூளையுழைப்பு, நகர்ப்புறம்-கிராமப்புறம் ஆகிய வேறுபாடுகளை ஒழித்துக்கட்டியதுடன் உழைப் பாளிகளுக்கான அனைத்து சலுகைகளும் நிலை நாட்டப்பட்டன.

சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகி விட்டதாகக் கூறப்படும் நமது நாட்டில் என்ன நிலைமை கல்வி, மருத்துவம், குடிநீர் அனைத்தும் தனியார்மயம், பகற்கொள்ளை வீட்டு வாடகையும், போக்குவரத்தும் தகவல் தொடர்பும் பாதிச் சம்பளத்தை விழுங்கும் நிலை, வாழ்க்கைக்குத் தகுதியான படிப்பில்லை, படித்தவருக்கும் வேலையில்லை, வேலையில் இருப்பவருக்கோ தக்க ஊதியமில்லை. விவசாயமே வேண்டாம் என விவசாயிகளே கிராமங்களை விட்டு ஓடும் நிலை, அப்படியும் உயிரைக் கொடுத்து விளைய வைத்தாலும் போதிய விலை இல்லை, விலையை நிர்ணயிக்கும் உரிமையுமில்லை. விளைந்த தானியங்கள் எல்லாம் அரசாங்க குடோனில் எலிக்கும், கரப்பானுக்கும் உணவாகி வீணாகின்றன. உழைக்கும் மக்களோ கோடிக்கணக்கில் இராப்பட்டினி, முழுப் பட்டினி கிடக்க, பெண்களும் குழந்தைகளும் கோடிக்கணக்கில் ரத்தசோகையில் வாட லட்சம் கோடிகளில் கொழிக்கும் கார்ப்பரேட் முதலாளிகளோ சுகவாழ்வு வாழ்கிறார்கள். அவர்களின் அடியாளாய் நிற்கும் அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் எல்லாம் ரொக்கத்தில் மிதக்கிறார்கள்.

அந்தத் திமிரில் தான், போராடும் விவசாயிகளைக் கண்டுகொள்ள மறுக்கிறார்கள் உரிமை கேட்கும் தொழிலாளர்களை ஒடுக்குகிறார்கள் மீனவர் படுகொலைகளைக் கண்டும் காணாதது போல நடிக்கிறார்கள். முதலாளிகளின் லாபத்திற்காக, ரேசன் கடைகளை மூடிப்பட்டினிப் போட்டு, தெருக்கள்தோறும் சாராயக்கடைகள் திறந்து மக்களைக் கொள்ளையிடத் துடிக்கிறார்கள். மக்கள் சிந்தனையை மழுங்கடித்து, ஊழல்படுத்த விழை கிறார்கள். மக்களோ வாழ்க்கை இழந்து வாழும் வழி தெரியாது அலைகிறார்கள்.

இந்த அவலம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிப்பது? நாட்டையே பீடித்துக் கொண்டிருக் கும் இந்தக் கேவலத்தை விரட்டவே முடியாதா? முடியும் என வழிகாட்டியவர்கள்தான் மார்க்சும், லெனினும். பரதேசிகள், அழுக்குச் சட்டைகள் என்றெல்லாம் ஆளும்வர்க்கம் கேவலப்படுத் திய உழைக்கும் வர்க்கத்தின் ஆட்சியைப் புரட்சி மூலம் நிறுவுவதே ஒரே வழி. நம்மால் முடியுமா? யாரும் வரமாட்டார்கள், மக்கள் சுயநலக்காரர்கள் என்பதெல்லாம் வீண்பழி, இதோ மெரீனா காட்டி விட்டது நமக்கு வழி.

உலகப் பாட்டாளி வர்க்கத்துக்கே வழிகாட்டிய ஆசான் காரல் மார்க்சின் இருநூறாவது பிறந்த ஆண்டு மே 5 அன்று தொடங்குகிறது. ஆசான் லெனினின் 149-வது பிறந்த நாளான ஏப்ரல் 22 நெருங்கிவிட்டது. இனியும் எதற்கு நம்மால் முடியுமா என்னும் தயக்கம்?

  • தொழிலாளிகளும் விவசாயிகளும் ஒன்றிணைவோம் !
  • மாணவர் – இளைஞர்களுடன் கைகோர்ப்போம் !
  • மார்க்ஸ் – லெனின் வழியில், நவம்பர் புரட்சியின் ஒளியில் தமிழகத்தையே மெரினாவாக்குவோம் !
  • உழைக்கும் மக்களின் துயர் நீக்குவோம் !

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் (கிழக்கு, மேற்கு), காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்கள்.
94444 61480, 94453 68009, 88075 32859, 84897 35841.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க