privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைமாணவர் - இளைஞர்துணைவேந்தரை உடனே போடு - அண்ணா பல்கலைக்கழக முற்றுகை !

துணைவேந்தரை உடனே போடு – அண்ணா பல்கலைக்கழக முற்றுகை !

-

சென்னை அண்ணா பல்கலைக்கழக வாயிலில் 4.5.2017 அன்று காலை 11.00 மணியளவில் பு.மா.இ.மு தலைமையில் பல்கலைக்கழகத்தில் உடனடியாக துணைவேந்தரை நியமனம் செய்யக்கோரி போராட்டம் நடைப்பெற்றது.

போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பு.மா.இ.மு சென்னை கிளை இணை செயலாளர் தோழர் சாரதி தனது கண்டன உரையில் “அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், சட்டப் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் இயங்கிவருகிறது. இன்றுவரை அரசு இதற்கு எந்த முடிவும் எடுக்கவில்லை. அண்ணா பல்கலைக்கழகமும்,  சென்னை பல்கலைக்கழகமும் இந்த மே மாதத்தில் பட்டமளிப்புவிழா நடத்தவுள்ளனர். மாணவர்கள் அந்த பட்டங்களை வாங்கினாலும் துணைவேந்தரின் கையெழுத்து இல்லாமல் தரப்படும் பட்டமானது குப்பை காகிதத்திற்கு சமமானது. எனவே இந்த பட்டத்தை மாணவர்கள் வாங்க விடமாட்டோம்.

மேலும், இந்த பிரச்சினையை பற்றி மற்ற கட்சிகள் ஏதும் வாய்கூட திறக்கவில்லை. சிலர் கருத்துக்கள் சொல்வதோடு நிறுத்திக் கொள்கின்றனர். யாரும் போராட்டத்தில் இறங்கவில்லை. மத்திய பாஜக கட்சியின் பினாமியை போல் செயல் படும் எடப்பாடி அரசு சரியான நபரை துணைவேந்தராக நியமிப்பதில் எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த துணைவேந்தர் பதவிக்கு வருவதற்கு 50 கோடி போரம் பேசுகிறார்கள். இதுமட்டும் இல்லாமல் பேராசிரியர் பதவிக்கு 50 லட்சம் பேரம். இப்படி பேரம் பேசுவதே அ.தி.மு.க அரசின் வேலையாக இருக்கிறது.

அதனால், இந்த பிரச்சினையில் துனைவேந்தரை நியமிக்காமல் பட்டமளிப்பு விழாவை நடத்த விடமாட்டோம். மீறி நடத்தினால் தமிழகம் முழுவதும் போராட்டங்களை கட்டியமைப்போம்” என பத்திரிக்கையாளர்களிடம் கூறினார். அதன் பின் தோழர்களை வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்து கைதுசெய்து, மண்டபத்தில் அடைத்தது அ.தி.மு.கவின்  அடியாள்களான போலீசு.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை. தொடர்புக்கு – 94451 12675.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க