privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விநீட் தேர்வு - அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள் !

நீட் தேர்வு – அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள் !

-

டந்த 07.05.2017 – ஞாயிற்றுக் கிழமையன்று இந்தியா முழுவதும் சுமார் 104 நகரங்களில் பல் மற்றும் மருத்துவக் கல்லூரிக்கான தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வுக்கு இந்தியா முழுவதில் இருந்தும் சுமார் 11 இலட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான தேர்வு விதிமுறைகளை சி.பி.எஸ்.ஈ உருவாக்கி கடந்த ஏப்ரல் மாத இறுதியில் அறிக்கையாக வெளியிட்டது. அதில் மாணவர்களின் கல்வித் தகுதி, மதிப்பெண் தகுதி உள்ளிட்ட விவரங்களோடு, உடைகளுக்கான விதிமுறைகளையும் சேர்த்து வெளியிட்டிருந்தது. அவை,

  • கருப்பு நிற உடைகளையோ, அடர் நிற உடைகளையோ அணியக்கூடாது. வெளிர் நிற உடைகளையே அணிய வேண்டும்.
  • ஆண்களும் பெண்களும் முழுக்கை மேலாடை அணியக் கூடாது. மேலாடைகளிலோ, கீழாடைகளிலோ பெரிய பட்டன்கள் இருக்கக் கூடாது.
  • உடம்பில் / துணியில் துளி கூட உலோகங்கள் இருக்கக் கூடாது.
  • பூட்ஸ் அணியக் கூடாது. ’ஹை-ஹீல்ஸ்’ அணியக் கூடாது.
  • மோதிரம், வளையல், ப்ரேஸ்லெட், செயின், நெக்லெஸ், மூக்குத்தி, தோடு உள்ளிட்ட ஆபரணங்கள் அணியக் கூடாது. திருமணமான பெண்களுக்கு மட்டும் தாலியும், வளையலும் அணிந்து கொள்ள அனுமதி உண்டு.
  • தலைமுடியைக் கட்டும் பெரிய ரப்பர் பேண்டுகள், பெல்ட், தொப்பி, புர்கா, பைஜாமா, குர்தா, சேலை ஆகியவை அணியக்கூடாது.

மாணவர்கள் ‘பிட்’ மற்றும் ‘காப்பி’ யடிப்பதைத் தடுக்கும் பொருட்டே இத்தகைய கறாரான உடைக் கட்டுப்பாடுகளை விதித்திருப்பதாகக் கூறியிருக்கிறது சி.பி.எஸ்.ஈ. அதாவது, கருப்பு / அடர் நிற உடைகள் மூலமும், உடையில் இருக்கும் உலோகங்கள் மூலமும், காதில் போடும் தோடுகளின் மூலமும் முறைகேடுகளில் ஈடுபட முடியும் எனத் ‘தொலைநோக்குப்’ பார்வையோடு சிந்தித்து இவற்றை எல்லாம் தேர்வு அறைக்கு வெளியே விடவேண்டும் என வலியுறுத்தியிருக்கின்றது சி.பி.எஸ்.ஈ.

சி.பி.எஸ்.ஈ இந்த ஆடை விதிமுறைகளை, அனைத்துத் தேர்வு மையங்களிலும் கறாராக நடைமுறைப்படுத்த அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டது. அந்த அடிப்படையில் கடந்த 07.05.2017 ஞாயிறு அன்று நடைபெற்ற நீட் தேர்வில் குறிப்பாக தென்னிந்தியா முழுவதும் பல்வேறு அவலங்கள் அரங்கேறின.

சென்னையில் இரண்டு நிமிடம் தாமதமாக வந்த மாணவியர் மூவரை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது எனக் கூறி வெளியேற்றியிருக்கின்றனர். அதனைக் கண்டித்து மற்ற மாணவர்களின் பெற்றோர்களும் சேர்ந்து போராடிய பின்னும் போலீசை வைத்து மிரட்டி, அப்பெண்களுக்கு அனுமதி மறுத்துள்ளனர். சென்னையில் முழுக்கைச் சட்டை அணிந்து வந்த மாணவர்களின் சட்டையின் கைகளை அரைக்கைச் சட்டை அளவிற்கு கிழித்த பின்னரே அவர்களைத் தேர்வு எழுத அனுமதித்தனர். ஆனால் குஜராத்தில் முழுக்கைச் சட்டையுடன் மாணவர்கள் எவ்விதத் தடையுமின்றி தேர்வு எழுதியிருக்கிறார்கள்

பெங்களூருவில் ஒரு மாணவியின் காதணிகளைக் கழற்ற முடியாதபடி அதன் திருகாணி கழண்டு வராத நிலையில் அப்பெண்ணை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என அதிகாரிகள் கூறிய பிறகு, அப்பெண் தனது  தந்தையுடன் உடனடியாக அருகில் உள்ள தங்க நகை ஆசாரியிடம் சென்று காதணியை வெட்டி எடுத்த பின்னரே தேர்வு எழுத அனுமதித்தனர்.

ஆந்திராவில் பல இடங்களில் தலைமுடியை கட்டும் முடி பேண்டுகள் நீக்கப்பட்டால் தான் தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். இந்தக் கெடுபிடிகளால் அங்கு மாணவிகள் அனைவரும் தலைவிரி கோலமாகவே தேர்வு எழுதினர்.

தென்னிந்தியா முழுவதும் கருமை நிற மற்றும் அடர் நிற ஆடைகள் அணிந்துள்ள மாணவர்களை பரீட்சை எழுத அனுமதிக்கவில்லை. பல மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் அவசர அவசரமாக வெளியில் சென்று தேடிப்பிடித்து வெளிர் நிற ஆடைகளை வாங்கி வந்தனர்.

கேரளாவில் பெண் ஒருவர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டில் இருக்கும் உலோக பட்டன் ’மெட்டல் டிடெக்டர்’ கருவியில் சத்தம் கொடுத்ததும் அப்பெண்ணை தேர்வு எழுத அனுமதி மறுத்தனர். அப்பெண் தனது தந்தையிடம் இது குறித்துக் கூறியதும், அவர் தனது மகளின் ஜீன்ஸ் பேண்டில் இருந்த உலோக பட்டனை அறுத்தெடுத்தார். அதன் பின்னரே அப்பெண்ணை தேர்வுக்கு அனுமதித்தனர்.

இவை அனைத்திற்கும் மேலாக, இழிவுகளின் உச்சமாக நடைபெற்ற ஒரு சம்பவம் இந்தியாவையே உலுக்கிவிட்டது. கேரள மாநிலம் கண்ணூர் அருகே அடர் நிற ஆடை அணிந்திருந்த ஒரு மாணவியை தேர்வு எழுத அனுமதிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அதன் பின்னர், அப்பெண்ணின் தாயார் அருகில் உள்ள பகுதிகளில் அலைந்து தேடி ஒரு மாற்று உடையை அம்மாணவிக்கு வாங்கி வந்து கொடுத்துள்ளார். தேர்வு ஆரம்பிக்க 10 நிமிடம் மட்டுமே உள்ள சூழலில் அப்பெண் மீண்டும் பரிசோதனை வளையத்திற்குள் செல்லும் போது மெட்டல் டிடெக்டர் பரிசோதனையில் அப்பெண்ணின் உள்ளாடையின் கொக்கிக்கு ‘மெட்டல் டிடெக்டர்’ சத்தம் எழுப்பியுள்ளது. அப்பெண்ணின் உள்ளாடையைக் கழட்டினால் தான் தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என்றும், அதுவும் தேர்வு தொடங்கும் நேரத்திற்குள் உள்ளாடையைக் கழற்றிவிட்டு வந்தால் தான் தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். அம்மாணவி வேறு வழியில்லாமல் அலுவலர்கள் இருந்த பரிசோதனை அறையிலேயே தனது மேல் உள்ளாடையைக் கழட்டி அதனை வாயிலில் இருந்த தனது தாயாரிடம் ஒப்படைத்து விட்டு அவசர அவசரமாகத் தேர்வுக்குச் சென்றுள்ளார்

இச்சம்பவங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்கும் போது, அவர்கள் கூறிய ஒரே பதில், “விதிமுறைகளில் கூறியதை நாங்கள் அப்படியே பின்பற்றினோம், இதில் தவறு ஏதும் இல்லை” என்பது தான். விதிகளைக் காரணம் காட்டி ஒரு பெண்ணின் உள்ளாடையைக் கழட்டச் சொன்ன அந்த அலுவலர் தனது மகளை அவ்வாறு பொதுவெளியில் நடத்தியிருப்பாரா ? அல்லது தனது மகளுக்கு அவ்வாறு நிகழ்ந்திருந்தால் சும்மாயிருந்திருப்பாரா? பிழைப்புவாதமும் அடிமைத்தனமும் நமது மூளைக்குள் குடில் போட்டு குடித்தனம் செய்யும் போது தான் நாமும் இந்த ரூல்ஸ் ராமானுஜங்களை, ‘பாவம், அவர்கள் என்ன செய்வார்கள்?, அவர்கள் தங்கள் கடமையைத் தானே செய்தார்கள்’ என்று அங்கீகரிக்கிறோம்.

தங்கள் வாழ்வாதாரங்களுக்காகப் போராடும் மக்களின் மீது தமது மேலதிகாரிகளின் உத்தரவிற்கிணங்க வெறிநாய் போல பாய்ந்து குதறும் போலீசுக்கும், இராணுவத்திற்கும் இதே அடிமைத்தனம் தான் தலையில் ஏற்றப்பட்டிருக்கிறது. இந்த அடிமைத்தனத்தைத் தான் இராணுவப் பயிற்சியிலும், போலீசுப் பயிற்சியிலும் பிரதானமாக சொல்லித் தருகின்றனர். இந்த அடிமைத்தனம் தான் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சாதியப் படிநிலையின் ‘ஒழுக்கமாக’ நமக்குப் போதிக்கப்பட்டிருக்கிறது.

மாணவர்கள் மீதான இந்தக் கடுமையான ஒழுங்கு விதிமுறைகள் மற்றும் அத்துமீறல்கள் குறித்து வெளிப்படையாக விமர்சித்த பெற்றோர்கள் வெகு சிலரே. இது குறித்து மூச்சே விடாமல் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு ‘அட்ஜஸ்ட்’ செய்யும் பெற்றோர்களின் எண்ணிக்கையே பெரும்பான்மை. “நான் சொல்வதே சட்டம், அதுவே சாசனம்” என்ற பாகுபலியின் எதேச்சதிகார  வசனத்திற்கு கைதட்டி ரசிக்கும் கூட்டம் இருக்கும் போது சுய மரியாதைக்கு எங்கே போவது?

  1. நீட் தேர்வு விதிமுறைகளில் மிக தெளிவாக என்ன ஆடை அணிந்து வர வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள், அதை கடைபிடிக்காதது மாணவர்களின் தவறு. மேலும் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் பிட் அடிப்பது high tech ஆகிவிட்டது. அதை தடுப்பதற்கு இந்த கட்டுப்பாடுகளை கொண்டு வந்து இருக்கிறார்கள், இதில் எந்த தவறும் இல்லை. மேலும் இம்மாதிரியான உடை கட்டுப்பாடுகள் பல மாநிலங்களிலும் உண்டு (தமிழ் நாடு தேர்வாணையம் உட்பட)

    • மணி,

      அது தான் கட்டுரையின் ஆரம்பத்திலேயே சொல்லிட்டாங்களேப்பா ..

      இப்ப அதுவா பிரச்சினை? கட்டுரைய படிச்சுட்டு வந்து பேசுப்பா .. ரெண்டு வரி படிச்சிட்டு பினாத்தக் கூடாது.

      • படித்து விட்டு தான் பதில் சொல்லி இருக்கிறேன்.

        உள்ளாடைக்குள் டிரான்ஸ்மிட்டர் ரிசீவ்ர் வைத்து நேர்மையற்ற முறையில் தேர்வு எழுத்தும் முறையெல்லாம் எப்போதோ வந்து விட்டது. மூக்கு கண்ணாடியில் கூட அப்படி வந்து விட்டது, சிறிய கேமரா மூலம் வினாத்தாளை வெளியே அனுப்பி பதிலை ரிசீவ்ர் மூலம் பெற முடியும்.

        மருத்துவ கல்லூரியில் சேர பல நேர்மையற்ற வழிமுறைகள் கையாளப்படுகின்றன ஒரு தனியார் கல்லூரியில் சேர வேண்டும் என்றால் கோடிகளில் பணம் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள், சில சமயம் ஏலம் கூட விட்டு இருக்கிறார்கள் யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு சீட் அந்தளவுக்கு மருத்துவ கல்லூரி மோசம் அடைந்து இருக்கிறது. இப்படி பணம் கொடுத்து படிப்பவர்கள் உண்மையில் எத்தனை பேர் திறமையானவர்களாக இருப்பார்கள் ? நோயாளிகளின் உயிர் திறமையற்றவர்களின் கைகளில் போவது சரியா ?

        NEET தேர்வு முறை நல்ல விஷயமாகவே நான் பார்க்கிறேன். உண்மையில் கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்களுக்கு இம்மாதிரியான கட்டுப்பாடுகள் மூலம் நியாயம் செய்யப்படுகிறது.

        நன்றாக படிக்கும் மாணவனின் நிலையில் இருந்து இந்த விஷயத்தை பாருங்கள் நேர்மையற்ற முறையில் தேர்வு எழுதி ஒருவன் வெற்றி பெறுவதும், உண்மையில் கஷ்டப்பட்டு படித்த மாணவன் தோல்வி அடைவதும் சரியா ?

        • மத்திய பிரதேச எம்.பி.பி.எஸ். மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளில் இலஞ்சம் பெற்றுக் கொண்டு மோசடிகள் செய்து (வியாபம் ஊழல்), அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சீட்டுகளை ஒதுக்கி கொடுத்தவர்கள் தான் இந்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி கும்பல்.

          அப்படிப்பட்ட இவர்கள், மாணவர்கள் பிட் அடித்து மோசடிகளில் ஈடுபடுவதை தடுப்பதற்கு தான் இம்மாதிரியான கட்டுப்பாடுகளை கொண்டு வந்து இருக்கிறார்கள் என்று நம்புவதற்கு ‘ஸ்பெசல் காமதேனு மாட்டு’ மூளை தான் இருந்தாக வேண்டும்.

          அந்த ஸ்பெசல் மூளை மணிகண்டனுக்கு தாராளமாக இருக்கலாம் தவறில்லை. ஆனால், அது மற்றவர்களும் இருந்தே ஆக வேண்டும் என்று நிர்பந்திப்பதையும், மக்களை முட்டாளாகக் கருதுவதையும் வன்மையாக கண்டிக்கிறேன்.

        • மத்திய பிரதேச வியாபம் ஊழலைப் பற்றி முதலில் பேசுங்கள் மணிகண்டன்.

          அதில் குற்றம் சாட்டப்பட்ட சவுகன்ன் இன்னும் முதல்வராக நீடிக்கிறாரே? நேர்மையின் சிகரம் மோடி, மற்றும் ஜூனியர் மோடிகள் அவரை நீடிக்க அனுமதித்துள்ளனரே ? மர்மமான முறையில் பல கொலைகள் நடந்துள்ளனவே.. இவற்றைப் பற்றி வாய்திறங்கள்.

          https://www.vinavu.com/2015/09/23/vyapam-brahminical-criminial-scam-2/

  2. கேனபயஊருக்குளே கிருக்குபயநாட்டாமை!இதைகேள்விகேட்க துப்பில்லாமல் சட்டையைகிழிச்சிகிட்டு அலையுதுகளே ! அடேய்பையபுள்ளைகளா! நீபைத்தியம்ஆகனுமா வைத்தியம்பார்க்கனுமா?4+3=8என்பவன்நீதியரசர்,பத்து லட்சம் செலவுசெய்து தன் பெயரில் சட்டைதைச்சுபோட்டுதிரிபவன் பிரதமரு!மக்களுக்குமரபணுசோதனையே நடத்திஅடையாள அட்டைவழங்கலாம்னு ஆலோசனைகூறும்ஆண்டிபயலுக, அரைலூசுக ஆளும்தேசமடா! கால்சட்டை யைகலட்டிக்கிட்டு நின்னாலும் கவலைபடாதகூமூட்டைகூட்டம்!இருந்த இடம் தெரியாமல் வாலநினைக்காதே !இந்தகுப்பையைதூர்வாறாமல் வாழ்க்கையில்லை!

  3. மணிகன்டன்சார் ஒருடவுட்டு?உள்ளாடையில்கூடமறைத்துவைத்துநவீனகருவிமூலம்தேர்வு எழுதமுடியும்எனநீட்தேர்வுஆடைஅவிழ்ப்பைநியாபடுத்துகிறீர்!உங்கள்ஆய்வுபடி அம்மணமாக எழுதசொன்னாலும்ஏற்றுக் கொள்வீர்கள்எனநினைக்கிறேன்!அதுசரி அவரவர்க்கு எதுமுக்கியமோஅதில்தானே கவனம்கொடுப்பார்கள்! சார்இன்னொருடவுட்டு? தேர்வுகண்காணிப்பாளர், பறக்கும்படை ,கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவை என்னாச்சி!அவை இல்லையா ? அல்லதுஅவற்றின் மீது நம்பிக்கை இல்லையா?அவைஅனைத்தும் காலாவதியாகிவிட்டதா மணிகன்டன் இன்னொரு டவுட்டு?பீகார்உள்ளிட்டவடமாநிலங்களில்+2,10 தேர்வில்மாணவர்கள்காப்பியடிக்க ஊருக்கே உதவிய அரசைபார்த்து நாடேஎல்லாவாய்வழியாகவும் சிரித்ததே அங்கே நீட்டை எப்படிநடத்துவார்கள்? சரி அதை விடுங்க தேர்வுக்கேஇவ்வளவு கெடுபிடி காட்டும் அரசு நாளைதேர்வாகிவேலையில் அமர்ந்தபிறகுஊழல் ,முறைகேடு , பிராடு ,பிணத்திடம் கைநாட்டு,பிணத்தை வைத்து பிழைப்பு நடத்துவதை செய்முறைபயிற்சிமூலம் நிருபித்தார்களே இந்த டீலை எப்படி எதிர்கொள்வது அரசுஅப்போது எதைஅவிழ்க்கும்? அம்மணத்துக்கு மேல் வேறு ஏதும் அவிழ்க்க உள்ளதா?

  4. எழுத

    போக்குவரத்து ஊழியர்களின் சம்பளம் மற்றும் பென்சன்

    லென்ஸ் பட விமர்சனம்

    ரஜினியின் அரசியல் அவலங்கள்

    தமிழகத்தை மோடியிடம் தாரைவார்க்கும் அதிமுக

    நெடுவாசல் போராட்ட மாணவிகள் கைதும் சித்திரவதையும்

    என்று எவ்வளவோ விசங்கள் இருக்க வினவு அமைதி காப்பது ஏன் ?

Leave a Reply to கிழக்கு காற்று பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க