privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபாஜக X அதிமுக : திருடன் - போலீசா, திருட்டு போலீசா ?

பாஜக X அதிமுக : திருடன் – போலீசா, திருட்டு போலீசா ?

-

போலீசின் உண்மையான முகத்தைப் புரிய வைக்கும் ஆற்றல் கிரிமினல்களுக்குத்தான் உண்டு. தாங்கள் அரும்பாடுபட்டுத் திருடிக் கொண்டுவந்த நகையை, போலீசார் தங்களிடமிருந்து திருடிவிடாமல் காப்பாற்றுவதற்குத் திருடர்கள் படும்பாடு கொஞ்சமல்ல. இருந்தாலும், நூறு பவுன் திருடியிருந்தால், அதில் 50 பவுனை போலீசு பிடுங்கிக் கொள்ளும். 25 பவுனைத் திருடனுக்கு ஊதியமாகக் கொடுத்துவிட்டு, மீதி 25 பவுனை மேசையின் மீது பரப்பி வைத்து, புகைப்படம் எடுத்துக்கொண்டு மக்களிடம் நற்பெயர் ஈட்டுவார் புலனாய்வு அதிகாரி. கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தில் அரங்கேறி வரும் வருமானவரித்துறை சோதனைகள் – கைதுகள், “திருடன் – போலீசு கதை”யைத்தான் அப்படியே பிரதிபலிக்கின்றன.

எடப்பாடி, நத்தம், பன்னீரின் பினாமிகள், சைதை துரைசாமி, பிறகு சட்டமன்றத் தேர்தலின்போது அன்புநாதன், கன்டெயினர்கள், ஜெயா மரணத்துக்குப் பின் ராம மோகனராவ், சேகர் ரெட்டி, விஜயபாஸ்கர், கீதாலட்சுமி, தினகரன் என்று வரிசையாக நடந்து வரும் ரெய்டுகள், போலீசின் மாமூல் வேட்டை நடவடிக்கையை அப்படியே பிரதிபலிக்கின்றன. இந்த வேட்டையில் பா.ஜ.க.வினரும் அதிகார வர்க்கமும் மிரட்டிப் பிடுங்கியது எவ்வளவு என்பது திருடர்களுக்குத்தான் வெளிச்சம்.

எவ்வளவு பிடுங்கப்பட்டதோ திருடர்களுக்கு தான் வெளிச்சம்

“சேகர் ரெட்டியிடமிருந்து கைப்பற்றப்பட்ட டயரியில் எழுதப்பட்டிருக்கும் குறிப்புகளில் உள்ள அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று தலைமைச் செயலாளருக்கு வருமான வரித்துறை சிபாரிசு செய்திருக்கிறதாம். இது, திருடனிடமிருந்து பிடுங்க வேண்டியதைப் பிடுங்கிக் கொண்டு, அதன் பிறகு விடுதலையாவதற்குத் தோதாக ஒரு கேசைப் போட்டு உள்ளே தள்ளும் போலீசின் நடவடிக்கையன்றி வேறென்ன?

அ.தி.மு.க. என்பது ஒரு பாளையக்காரர் கூட்டம். பாளையக்காரர்களின் உட்பகையைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டைப் பிடித்த கும்பினிக்காரனின் இடத்தில் இருக்கிறது பாரதிய ஜனதா. தங்கள் பதவியையும் சொத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக, நாட்டின் பகுதிகளைக் கூறு போட்டு வெள்ளையனுக்கு எழுதிக் கொடுத்த மன்னர்களைப் போல, “காவிரி, நீட் தேர்வு, உதய் திட்டம், ஜி.எஸ்.டி.” உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் நீட்டிய இடத்தில் கையெழுத்திட்டு வருகிறார்கள் அ.தி.மு.க. அமைச்சர்கள்.

அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையிலான வேறுபாடு திருடனுக்கும் போலீசுக்கும் இடையிலான வேறுபாட்டைப் போன்றதுதான்.

“வாரிசு இல்லாத மன்னர்களின் சமஸ்தானங்களை கும்பினி கைப்பற்றிக் கொள்ளலாம்” என அன்றைய கவர்னர் ஜெனரல் டல்ஹௌசி ஒரு சட்டம் இயற்றினான். அப்படி ஒரு சட்டத்தை இயற்றித் தமிழகத்தை முழுவதுமாகக் கைப்பற்றிக் கொள்ள முடியுமானால், மோடி அரசு பெரிதும் மகிழ்ந்திருக்கும். அவ்வாறு அவர்கள் கைப்பற்றிக் கொள்ளத் தடையாக அ.தி.மு.க.வில் யாரும் இல்லை. தமிழகத்தில் பா.ஜ.க.வைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருப்பது, தமிழ் மக்களின் எதிர்ப்புணர்வுதான்.

அ.தி.மு.க.வின் தலைவி ஜெயலலிதா ஒரு பார்ப்பன பாசிஸ்டு. பாரதிய ஜனதாவோ பார்ப்பன பாசிசக் கட்சி. அந்தக் கழிசடை அரசியல் நாயகியை தாங்கிப் பிடித்து, ஊழல் வழக்குகளிலிருந்து காப்பாற்றிக் கரை சேர்த்ததில் முக்கியமான பங்கு பாரதிய ஜனதாவுக்குரியது. அ.தி.மு.க. என்பது ஒரு உதிரியான கிரிமினல்களைச் சேர்த்துக் கட்டப்பட்ட ஒரு மாபியா கும்பல். பாரதிய ஜனதாவோ முறைப்படி ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு கிரிமினல் கும்பல்.

அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையிலான வேறுபாடு திருடனுக்கும் போலீசுக்கும் இடையிலான வேறுபாட்டைப் போன்றதுதான். அ.தி.மு.க. என்ற திருடர் கூட்டத்தை இணைத்துக் கட்டியிருந்த பார்ப்பன பாசிஸ்டு மறைந்த பிறகு, அந்தப் பாத்திரத்தை பார்ப்பன பாசிசக் கட்சி எடுத்துக் கொண்டிருக்கிறது. போலீசின் ஆசியுடன்தான் திருடர்கள் ஆட்சி நீடித்துக் கொண்டிருக்கிறது. திருடர்களை மக்கள் அறிவார்கள். இது திருட்டு போலீசு என்பதை அறியச் செய்யவேண்டும்.

புதிய ஜனநாயகம், மே 2017

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க