privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்போலீசுஓசூர் சப்படி - காமன் தொட்டி டாஸ்மாக் கடைகளை மூட வைத்த பெண்கள் !

ஓசூர் சப்படி – காமன் தொட்டி டாஸ்மாக் கடைகளை மூட வைத்த பெண்கள் !

-

சூர் சூளகிரி அருகே சப்படி மற்றும் காமன் தொட்டி பகுதிகளில் செயல்பட்டு வந்த இரண்டு டாஸ்மாக் கடைகளை மக்கள் அதிகாரத்தோடு இணைந்து கிராம மக்கள் பெண்கள் உள்ளிட்ட பலரும் திரளாக திரண்டு மூட வைத்தனர்.

இதுவரை ஒட்டுக் கட்சிகளுக்கு கூட்டம் காட்ட பயன்படுத்தி வந்த ஏழைப் பெண்கள் தங்கள் குடியைக் கெடுக்கும் டாஸ்மாக்கிற்கு மூடு விழா நடத்தியுள்ளனர். சப்படியில்  செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை மூடுவதற்கு வட்டாட்சியரிடம் மனு கொடுக்க வேண்டும். மேலும்  கலெக்டருக்கும் மனு கொடுக்க வேண்டும் என மக்கள் அதிகாரம் தோழர்களை நாடினர் சப்படி கிராம மக்கள். வட்டாட்சியரிடம் சென்று மனு கொடுத்தால் எனக்கு அதிகாரம் இல்லை என்பார். கலெக்டரிடம் சென்றால் மனுவை பரிசீலிக்கிறேன் என்பார். காரணம் டாஸ்மாக் டெவலப்மெண்ட் ஆபீசரு கலெக்டர் தான், தாசில்தார் – வி.ஏ.ஒ அவருக்கு கீழே வேலை செய்பவர்கள். இதனால், மனு கொடுத்து பயனில்லை என விளக்கினார்கள் தோழர்கள்.

மக்கள் அதிகாரம் சொன்ன விளக்கத்தை நடைமுறையில் புரியவைத்த தாசில்தார்.

“இவ்வளவு தூரம் வந்து விட்டோம், தாசில்தாரிடம் மனு கொடுத்து விடலாம்” என்று தாசில்தாரிடம் மக்கள் சென்றனர். மக்கள் அதிகாரம்  தோழர்கள்  சொன்னதை அப்படியே வார்த்தை மாறாமல், ”எனக்கு அதிகாரம் இல்லை எல்லாம் கலெக்டர் தான்” என்று தாசில்தார் சொல்லி மக்களுக்கு இந்த அரசுக்கட்டமைப்பின் யோக்கியதையைப் புரிய வைத்தார்.

இதன் பின்னர் கிராமத்தில் கூட்டம் போட்டனர். 24 வயது கொண்ட இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான கட்டிடத் தொழிலாளி  குடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே வேளையில், தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் பெண்களின் போராட்டங்களையும் எடுத்து விளக்கப்பட்டது. இதன் பின்னர் மக்கள் வீரத்துடன் களமிறங்கினர்.

200 -க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள்           22.05.2017 திங்கள்கிழமை அன்று டாஸ்மாக் கடை உடைப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து அதன்படி அன்று காலை 10:00 மணிக்கே திரண்டனர். 12:00 மணிக்கு வழக்கமாக கடையை திறக்க வரும் டாஸ்மாக் ஊழியர்கள் யாரும் மக்கள் சக்தியைக் கண்டு கடையை திறக்க முன் வரவில்லை. மாறாக, வட்டாட்சியர் பெருமாள் உள்ளிட்ட போலீசு அதிகாரிகள் ஓடோடி வந்து கூடியிருந்த மக்களிடம் நைச்சியமாகப் பேசி போராட்டத்தை கைவிடச்சொல்லி கேட்டுக் கொண்டிருந்தனர்.

மக்கள் சமாதானப் பேச்சுவார்த்தைகளை காது கொடுத்து கேட்கத் தயாரில்லை. அதிகாரிகளையும், போலீசையும் திட்டிக் கொண்டே கடையின் பூட்டை இரும்பு ராடு மற்றும் பெரிய அளவிலான கருங்கற்களை கொண்டு அடித்து உடைத்தனர். பதறிப்போன டாஸ்மாக் ஊழியர்கள் ஓடிவந்து மக்களிடம் மன்றாடினர். உடனே கடையை காலிசெய்து விடுகிறோம் என்று வாக்களித்து அதன்படியே கடையில் இருந்த மதுபானங்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

இப்பகுதியில் டாஸ்மாக் கடை செயல்படாது என அதிகாரிகள் உறுதியளித்தபிறகே, மக்கள் தங்களின் போராட்டத்தை முடித்துக்கொண்டனர். தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

உணவுப் பொட்டலங்கலை வரவழைத்து அங்கேயா உணவருந்தும் மக்கள்

கொளுத்தும் வெயில் என்றும் பாராமல் போராடிய மக்களுக்கு உணவுப் பொட்டலம் வரவழைக்கப்பட்டு அங்கே தங்களின் மதிய உணவை முடித்துக் கொண்டனர். மீண்டும் அனைவரும் கூடி தங்களுக்குள்ளே பேசிக் கொண்டு 3 கி.மீ. தொலைவில் உள்ள காமன்தொட்டியில் உள்ள டாஸ்மாக் கடையையும் இவ்வாறே அகற்றவேண்டும் என முடிவெடுத்துக் கொண்டு புறப்பட்டனர். அங்கிருத்து சுமார் 3 கி.மீ தூரம் ஊர்வலமாக சென்று கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக போலீசு அதிகாரிகள் டாஸ்மாக் கடைக்கு பாதுகாப்பு வளையம் போட்டு பாதுகாத்தனர். இதனை சற்றும் பொருட்படுத்தாமல் தடையை உடைத்துக்கொண்டு போலீசின் பயமுறுத்தல்கள் அனைத்தையும் அலட்சியப்படுத்திக்கொண்டே கடையின் பூட்டு மற்றும் கேட்டை உடைத்துக் கொண்டு முன்னேறினர். செய்வதறியாது திகைத்த ஊழியர்கள் மக்களின் போர்க்குணத்திற்கு அடிபணிந்து கடையில் இருந்த ரூ22 லட்சம் மதிப்புள்ள மதுபானங்களை வாகனத்தில் ஏற்றி அனுப்பிவிட்டு கடையை நிரந்திரமாக பூட்டினர்.

மக்கள் போராட்டத்தால் போலீசார் பாதுகாப்புடன் கடையை காலி செய்து ஓடும் டாஸ்மாக் நிவாகம்.

அடுத்ததாக, ஓசூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் செல்லும் சாலையில் ஒரு மதுக்கடை இயங்கி வந்த நிலையில் தற்போது இரண்டாவது கடையை அதே பகுதியில் திறந்துள்ளதை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்காவிடில் இதேபோன்று போராட்டம் நடத்தி அகற்றப்படும் என திரண்டிருந்த மக்கள் ஆவேசமாக பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல், மேலும், மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்பவர்களின் வீடுகளை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர்.

புக்கசாதம் – உத்தனப்பள்ளி — சூளகிரி சாலை, சின்னாறு தேசிய நெடுஞ்சாலை, சூளகிரி கீழ் தெரு ஆகிய பகுதிகளிலிருந்து அகற்றப்பட்ட டாஸ்மாக் கடைகளை புதிய இடங்களில் அமைப்பதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராடி வருகின்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

-பு.ஜ செய்தியாளர், ஒசூர்.