தஞ்சாவூர் மாவட்டம் திருவோணத்தில் 28-05-2017 ஞாயிறு அன்று மாட்டு சந்தை நடைபெற்றது. மோடி அரசின் மாட்டிறைச்சி தடை காரணமாக மாடுகளை விவசாயிகள் சந்தைக்கு கொண்டு வர முடியாமல் வெறிச்சோடி கிடந்தது. பல மாட்டு வியாபாரிகள் இதனால் மாடுகளை வாங்கி விற்கவும் முடியாமல், வேலையிழந்து நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மாட்டு சந்தையில் அடிமாடுகளும் குறைந்த அளவே கொண்டுவரப்பட்டன. சந்தையில் இதை சார்ந்து தொழில் செய்யும் மற்ற வியாபாரிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மோடி அரசால் கொண்டுவரப்பட்டுள்ள இத்தடை வெறும் பசு புனிதம் என்று கூறும் மனுநீதி மட்டுமல்ல, இந்தியாவின் மாட்டுசந்தையை தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டத்திற்கான முதல் கட்டம்.
– வினவு செய்தியாளர்கள்