Friday, February 7, 2025
முகப்புவாழ்க்கைகுழந்தைகள்ஐ.எஸ்.ஐ.எஸ் கொடுமைகளுக்கிடையே முத்தம் மறையவில்லை - படக் கட்டுரை !

ஐ.எஸ்.ஐ.எஸ் கொடுமைகளுக்கிடையே முத்தம் மறையவில்லை – படக் கட்டுரை !

-

ராக்கின் கணிசமான பகுதியை 2014 -ம் ஆண்டின் தொடக்கத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் கைப்பற்றியது. அதன் பிறகு 30 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள், வன்முறை மற்றும் துயரங்களின் கதைகளை சுமந்து கொண்டு தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர். புலம் பெயர்ந்த மக்களைக் காட்டிய அளவிற்கு வன்முறை மற்றும் இழப்பை நினைத்து அதிர்ச்சியில் அவர்கள் வாழ்வதையும் முகாமின் கடினமான வாழ்க்கையையும், எதிர்காலத்தைப் பற்றிய பயமும் கொண்ட அவர்களது இருண்ட தருணங்களையும் ஊடகங்கள் பேசுவதில்லை.

புலம் பெயர்ந்த குழந்தைகளுக்கு நொறுங்கிய கட்டிடங்களே விளையாட்டு அரங்குகள். சேற்று நீரோடைகளே நீச்சல் குளங்கள். கூடாரங்களே பட்டம் பறக்கும் அரங்குகளாகின்றன. நினைத்து பார்க்கவே முடியாத தங்களின் சோகங்களை எதிர்கொள்ளவும் துயரத்தின் பிடியில் இருந்து தப்பவும் தனிசிறப்பான ஆற்றலை குழந்தைகள் பெற்றிருக்கின்றனர்.அவர்களின் உண்மைக் கதையை வெளிப்படுத்துவது இன்றியமையாததாக இருப்பினும் அது கதையின் ஒருப்பகுதி மட்டுமே. நாடகத்தின் தருணங்களுக்கு இடையிடையே வேலைகள், விரக்தி, மகிழ்ச்சி, விளையாட்டுக்கள் என ஒரு கலவையாக அவர்களது அன்றையப் பொழுது புலர்ந்து முடிகிறது. அவற்றில் சில காட்சிகள்….

மேற்கு மோசூல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட மூன்றாவது நாளில் ஐ.எஸ்.ஐ.எஸ் கட்டுப்பாட்டு எல்லையிலிருந்து தப்பி மனிதர்களற்ற நிலத்தை கடக்கையில் குழந்தை ஒன்று வெள்ளைக் கொடியைக் காட்டுகிறது. நகரை மீட்க நடக்கும் சண்டையில் நூறாயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர்.

மோசூலில் நடக்கும் சண்டையிலிருந்து தப்பி நகரத்தின் கிழக்கே ஹமாம்-அல்-அலில் வரவேற்பு பகுதிக்கு வந்த பின்னர் குழந்தைகள் தழுவிக் கொள்கின்றனர். மோசூல் விளிம்பிலிருந்து தப்பியவர்கள் பேருந்துகள் மூலம் ஹமாம்-அல்-அலிலுக்கு இடம்பெயர்ந்தனர்.

அரசு ஆதரவுப்படைகளுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் -க்கும் இடையில் மொசூலில் நடக்கும் சண்டையில் இடம்பெயர்ந்த ஈராக்கிய குழந்தைகள் ஹமாம்-அல்-அலில் இருக்கும் இரு உள்நாட்டு அகதிகள் (IDP) முகாம்களுக்கிடையில் குளமொன்றில் வெப்பத்தைத் தணிக்கின்றனர்.

IDP-யைச் சேர்ந்த சிறுவர்களும் உள்ளூர் சிறுவர்களும் சாருஜா பொலாக் கிராமத்திலுள்ள நீரோட்டமொன்றில் விளையாடுகையில் சிரித்து மகிழ்கின்றனர். அங்கு உள்ளூர் மக்கள் பல இடம்பெயர்ந்த குடும்பங்களை வரவேற்றுள்ளனர்.

முன்பு கோழிப்பண்ணையாக இருந்த ஒருக் கட்டிடத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் -சினால் இடம்பெயர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தற்போது தங்கியிருக்கிறார்கள். அங்கே சிறுமியொருத்தி இன்னொரு சிறுமிக்கு கன்னத்தில் முத்தமிடுகிறாள்.

நினிவே சமவெளியைச் சுற்றியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் கட்டுப்பாட்டு எல்லையிலிருந்து மோசூல் தாக்குதலுக்கு வழிவகுத்த மாதங்களில் குடும்பங்கள் இடம்பெயரத் தொடங்கின. இங்கே சமீபத்தில் டிபாகாவில் கட்டப்பட்ட முகாமில் இரண்டு சிறுமிகள் தவ்வாட்டம் (Skipping ropes) ஆடுகின்றனர்.

கிழக்கு மொசூலில் இருக்கும் ஹாசன்ஷாம் (Hassansham) IDP முகாமொன்றில் ஆக்ஸ்பாம் (Oxfam) பராமரிப்பு மையத்தில் பூவிற்கு வண்ணம் தீட்டுகிறார் தொஹா சமீர். மோசூலுக்கு கிழக்கே உள்ள ஹாய்-ஜாஹாரைச் சேர்ந்த அவருக்கு வயது ஏழு.

தியாலா (Diyala) மாநிலத்தில் கைவிடப்பட்ட பண்ணைக் கட்டிடம் ஒன்றில் வசிக்கின்ற இடம்பெயர்ந்த குழந்தைகள் அந்தி சாயும் நேரத்தில் ஆற்றுக்கருகே விளையாடுகின்றனர். IDP முகாம்களுக்கு பக்கமாக இடம்பெயர்ந்த ஈராக்கியர்கள் பலர் நண்பர்களோடும், குடும்பத்தினரோடும் வாடகை வீடுகளிலோ அல்லது கைவிடப்பட்ட கட்டிடங்களிலோ வாழ்கின்றனர்.

மோசூலில் தனது வீட்டிலிருந்துத் தப்பிய இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு அம்மா தன் சிறுக்குழந்தையுடன் விளையாடுகிறார். முன்பின் அறிமுகமில்லாதவர்கள் தங்களது வீட்டை அந்த குடும்பத்திற்கு கொடுத்திருந்தனர்.

அரசுப்படைகள் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் இடையே மோசூலில் நடக்கும் சண்டையினால் இடம்பெயர்ந்த சிறுமி ஒருத்தி ஈராக்கில் உள்ள ஹசிர் IDP முகாமில் பட்டமொன்றைப் பறக்க விடுகிறாள்.

தற்போது கிர்குக் மாநிலத்தில் வாழும் 39 வயதான வாபா தேர்வாஷ் (Wafaa Derwesh) பாதி கட்டி முடிக்கப்பட்ட வீட்டில் அவரது குடும்பத்துடன் உணவை பகிர்ந்து கொள்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்த குடும்பம் பல முறை இடப்பெயர்ச்சிக்கு ஆளானது.

புகாலி (Bugali) கிராமத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் -சினால் இடம்பெயர்ந்த குழந்தைகள் மிதிவண்டி ஒட்டி விளையாடுகிறார்கள். அங்கே இடம்பெயர்ந்த பல IDP குடும்பங்கள் பழைய விவசாய கட்டிடங்களில் தங்குவதற்கு உள்ளூர் நில உரிமையாளர்கள் இடம் கொடுத்தனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் -சினால் இடம் பெயர்ந்த இரு குழந்தைகள் சாருஜா போலக்(Sharuja Polaq) கிராமத்தில் இருக்கும் தங்களது புதிய வீட்டில் ஒரு ஜோடிப் பழைய கண்ணாடிகளை வைத்து விளையாடுகினறனர். அங்கே பல IDP குடும்பங்கள் உள்ளூர் மக்களால் வரவேற்கப்பட்டனர்.

கசான் மஹ்தி, தன்னுடைய மகளின் கன்னத்தில் முத்தமிடுகிறார். ஐ.எஸ்.ஐ.எஸ் -னால் இடம் பெயர்ந்த பிறகு தன்னுடைய குடும்பத்திற்காக திவ்யலா மாநிலத்தில் தான் கட்டிய புதிய வீட்டில் அவரது குடும்பத்தினர் ஓய்வெடுக்கின்றனர்.

மோசூல் மக்களுக்கான பல பெரிய IDP முகாம்கள் இருக்கும் ஹமாம்-அல்-அலில் -ன் சேற்றுப்பாதை ஒன்றில் தனது தமக்கையின் கையைப் பற்றிக்கொண்டு நடக்கிறாள் ஐ.எஸ்.ஐ.எஸ் -சினால் இடம் பெயர்ந்த சிறுமி ஒருத்தி.

நன்றி : அல்ஜசீரா

_____________

இந்த புகைப்படக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  1. ஐ.எஸ்.ஐ.எஸ் மதவெறி கும்பலுக்கு எதிராக எமது ஈராக் குழந்தைகளின் எதிர்வினைகளை வெளியிட்ட வினவுக்கு மிக்க நன்றி. கண் கலங்கும் சூழலிலும் எம் குழந்தைகள் அவர்கள் வாழ்வில் காட்டும் வெளிப்பாடுகள் என்னை மானுடத்தின் மீது நம்ம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க