Thursday, January 16, 2025
முகப்புகட்சிகள்சி.பி.ஐ - சி.பி.எம்காவிக் கும்பலை கண்டித்து கோவை புஜதொமு பத்திரிக்கை செய்தி !

காவிக் கும்பலை கண்டித்து கோவை புஜதொமு பத்திரிக்கை செய்தி !

-

பத்திரிக்கை செய்தி

மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையகம் முன் வன்முறையில் ஈடுபட்ட ஏ.பி.வி.பி. –  ஆர்.எஸ்.எஸ். கும்பலை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு அலுவலகத்தின் முன்பு ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஏ.பி.வி.பி. பொறுக்கிகள் மார்க்சிஸ்ட் கட்சிக் கொடியையும் கேரள முதல்வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பினராயி விஜயனின் புகைப்படத்தையும் எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதனை காவல் துறை அனுமதித்தது மட்டுமன்றி அவர்களை பெயருக்கு நான்கு பிரிவுகளில் வழக்கு போட்டு உடனே விடுவித்தும் உள்ளது. இச்செயலை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது

பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகளான சங்கப் பரிவாரங்கள் அனைத்தும் சமூகத்தின் நச்சுக்களை தின்று வன்முறையை தூண்டுவதிலேயே குறியாய் இருக்கின்றன. இவற்றின் அடையாளம் வன்முறையும் பிற்போக்குத்தனமும் ஏகாதிபத்திய அடிமைப்புத்தியும் ஆகும். பிற்போக்குத்தனத்தையும் ஏகாதிபத்திய அடிமைதனத்தையும் நாம் கேள்விக்குள்ளாக்கினால் அதனை வன்முறையாக எதிர்கொள்வதும், அந்த வன்முறையை எதிர்த்தால் அதனை பெரும் கலவரமாக மாற்றுவதுமே இவர்களின் செயல்முறையாக இருக்கிறது.

இதற்கு முன்பாக கோவை மார்க்சிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தின் மீது வி.ஹெச்.பி. பொறுக்கிகள் பெட்ரோல் குண்டு வீசினார்கள். இவ்விரு சம்பவங்களும் ஒரு சில மாதங்களுக்குள் நடந்துள்ளன. ஜனநாயக முறையில் எதிர்ப்பு தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் இம்மாதிரியான சம்பவங்கள் பெரும் வன்முறையை எதிர்நோக்கிய சிறு பொறிகள் இதில் பாரதிய ஜனதாவின் தேர்தல் பலாபலன்களும் ஒரு பகுதி பாஜக அரசின் வருமான வரி மற்றும் இதர துறைகளின் மூலம் அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்துவிட்ட ஆளும் அதிமுக அரசும் அதன் காவல்துறையும் இந்த அயோக்கியத்தனத்திற்கு உடந்தையாக இருப்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது.

ஆகையினால், இந்த ஒருங்கிணைக்கப்பட்ட வன்முறையை ஒரு பரந்த முற்போக்கு ஜனநாயக சக்திகளின் ஐக்கிய முன்னணி மூலமே எதிர்க்க முடியும்! விழ்த்த முடியும்! அதற்கான அபாய மணியாக இச்சம்பவத்தை எடுத்துக் கொண்டு அணியமாவோம் என அறைகூவி அழைக்கிறோம்.

விளவை இராமசமி

மாநில துணைத் தலைவர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை. தொடர்புக்கு : 90924 60750.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க