privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்முன்னோடிகள்சென்னை, கோத்தகிரி நவம்பர் புரட்சி விழா கொண்டாட்டங்கள் !

சென்னை, கோத்தகிரி நவம்பர் புரட்சி விழா கொண்டாட்டங்கள் !

-

“கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு!!” நிகழ்வு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புரட்சிகர அமைப்புகளின் சார்பில் கொண்டாடப்பட்டது.

சென்னையில்…

துரவாயல் பிள்ளையார் கோவில் தெரு, மற்றும் நொளம்பூர் ஆகிய பகுதிகளில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பாக கொடியேற்றும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பிள்ளையார் கோவில் தெருவில், அப்பகுதி கிளை செயலாளர் தோழர் செந்தில் கொடியேற்றும் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். அங்கு சென்னை கிளையின் செயலாளர் தோழர் ராஜா கொடியேற்றி உரையாற்றினார். அவர் தனது உரையில் “ரசிய புரட்சி 100 -வது ஆண்டையும் ஆசான் காரல் மார்க்ஸின் மூலதனம் நூலின் 150 -வது ஆண்டையும் நாம் ஏன் நினைவு கூறவேண்டும். அதை ஏன் உயர்த்தி பிடிக்க வேண்டும் என்பதையும். இன்றைய தினம் நம் மக்கள் எப்படி கொள்ளைக்கார ஓ.பி.எஸ். – எடப்பாடி கும்பலிடமும், கொலைகார காவி கும்பலிடமும் சிக்கித் தவிக்கின்றனர் என்பதையும் விளக்கி பேசினார்.

மேலும் மக்களின் நலனுக்காக அல்லாமல் கார்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் இந்த அரசை தூக்கி எறிவோம்! ரசியப் புரட்சி சாதித்தது போன்று மக்களுக்கான அரசை நமது நாட்டிலும் நிறுவப் போராடுவோம்.” என்று தனது உரையை முடித்தார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நொளம்பூர் பகுதியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு அப்பகுதியின் கிளைச் செயலாளர் தோழர் கணேசன் தலைமை தாங்கினார். அங்கு சென்னை கிளை இணைச் செயலாளர் தோழர் சாரதி கொடியேற்றி உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் “மக்கள் இங்கு கொத்து கொத்தாக டெங்கு காய்ச்சலால் செத்து கொண்டும், மழை வெள்ளத்தில் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தும் தவிக்கையில் எடப்பாடி அரசு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வருகிறது.

மேலும் இரட்டை இலை சின்னத்தை எப்படி காப்பாற்றுவது என காவிகளுடன் பேரம் நடத்தி வருகின்றனர். இவர்களை ஒழிக்காமல் நமக்கு வாழ்வில்லை. நாமும் நமது நாட்டில் ரசிய மக்கள் போல் ஒரு புரட்சியை நடத்த வேண்டியுள்ளது.” எனக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை, தொடர்புக்கு : 94451 12675.

***

கோத்தகிரியில்…

நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கம் சார்பில், “கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு!!” நிகழ்ச்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
அனைத்து தொழிலாளர் சங்கம்,
நீலமலை, கோத்தகிரி.


விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க