privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புதலைப்புச் செய்திபோலீஸ் துன்புறுத்தலுக்கு எதிரான உயர்நீதிமன்ற தீர்ப்பு - மக்கள் அதிகாரம் அறிவிப்பு

போலீஸ் துன்புறுத்தலுக்கு எதிரான உயர்நீதிமன்ற தீர்ப்பு – மக்கள் அதிகாரம் அறிவிப்பு

விசாரணை என்ற பெயரில் போலீஸ் தொந்தரவு செய்தால் வழக்கறிஞர் மருது, 99623 66321 என்ற கைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் !!

-

போலீசு துன்புறுத்தலுக்கு ஆளாகும் தூத்துக்குடி மக்கள்,
விசாரணை என்ற பெயரில் போலீஸ் தொந்தரவு செய்தால் தொடர்பு கொள்ளுங்கள் !

தூத்துக்குடி நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போலீசின் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதையொட்டி, தமிழக அரசுக்கும் காவல்துறை டி.ஜி.பி மற்றும் தென்மாவட்ட ஐ.ஜி ஆகியோருக்கும் எதிராக, எமது அமைப்பின் நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் தங்கபாண்டியன் மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் வழக்கு தொடுத்திருந்தார்.

அந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் நேற்று வழங்கியிருக்கும் தீர்ப்பினை கீழே கொடுத்திருக்கிறோம்.

“The respondents are hereby directed to ensure that the enquiry and investigation conducted by the police, in the cases registered relating to the sterlite copper unit as per the procedures contemplated under the guidelines issued by the hon’ ble supreme court in the case of D.K.Basu. In case if any violation is found, the authorities concerned should initiate legal action against the erred officers.”

“The respondents are further directed to ensure that the residents of Tuticorin and tirunelveli are not subjected to harassment under the guise of enquiry and investigation. Further the inmates and family members of the named accused in any of the cases registered in this regard shall not be disturbed or harassed by the police under the investigation.”

இதன் தமிழாக்கம் கீழ்வருமாறு :

“ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கில் புலன் விசாரணை செய்யும் போலீசார், டி.கே பாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றத் தவறினால், அவ்வாறு தவறுகின்ற அதிகாரி மீது அவரது உயர் அதிகாரிகள் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

“மேலும், விசாரணை என்ற பெயரில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த குடிமக்களை போலீசார் துன்புறுத்தக் கூடாது என்று உத்தரவிடப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்களையோ, அந்த வீட்டைச் சேர்ந்தவர்களையோ போலீசார் எந்த விதத்திலும் தொந்தரவு செய்வதோ, துன்புறுத்துவதோ கூடாது எனவும் உத்தரவிடப்படுகிறது.”

எனவே போலீசின் துன்புறுத்தலால் பாதிக்கப்படும் மக்கள், உங்களைத் துன்புறுத்திய போலீசு அதிகாரியின் பெயர், துன்புறுத்திய நாள், நேரம், இடம் போன்ற தகவல்கள், என்ன விதமாகத் தொல்லை கொடுத்தார்கள் என்ற விவரம் ஆகியவற்றை எழுதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தென்மண்டல ஐ.ஜி ஆகியோருக்குப் புகார் அனுப்பவும்.

இதன் பிறகும் அத்தகைய தொல்லைகள் தொடர்ந்தால், இது தொடர்பாக சம்மந்தப்பட்ட போலீசு அதிகாரியின் மீது நடவடிக்கை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும்.

இது தொடர்பாக சட்ட உதவி தேவைப்படுவோர் வழக்கறிஞர் மருது, 99623 66321 என்ற கைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவண்
வழக்கறிஞர் ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க