பத்திரிக்கை செய்தி
06.03.2019
கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி தமிழக அரசு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் இயற்றி கவர்னருக்கு அனுப்பிய பிறகும், ஒட்டு மொத்த தமிழகமும் அற்புதம்மாள் அவர்களின் கோரிக்கையை ஆதரித்து நிற்கும் நிலையில், பா.ஜ.க மத்திய அரசும் ஆளுநரும் தாமதம் செய்வது ஏன்?.
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை உடனே விடுதலை செய்!
பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மார்ச் -9 ஆம் தேதியன்று மாலை 4 மணி முதல் 6 வரை நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தை ஆதரிப்பதுடன் மக்கள் அதிகாரம் அதில் பங்கேற்கும்.
தங்கள்
வழக்கறிஞர் சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம் – தமிழ்நாடு
தகவல் :
மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு. 99623 66321