privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்தமிழகம்குடி கெடுக்கும் எடப்பாடி ! பெருகும் டாஸ்மாக் !

குடி கெடுக்கும் எடப்பாடி ! பெருகும் டாஸ்மாக் !

தமிழக மக்களின் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்ட வீரியம் குறைந்ததைப் பயன்படுத்தி டாஸ்மாக் கடைகள், பார்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, சாராய வருமானத்தையும் பெருக்கிக் கொண்டுவிட்டது, எடப்பாடி அரசு.

-

குடி கெடுக்கும் எடப்பாடி !

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்ற பழமொழிக்கு வாழும் உதாரணமாய்த் திகழ்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஜெயா இறந்துபோன 2016-ம் ஆண்டில் 26,995 கோடி ரூபாயாக இருந்த தமிழக அரசின் டாஸ்மாக் (வரி) வருமானம், கடந்த இரண்டாண்டு கால எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் ரூ. 31,157 கோடியாக அதிகரித்திருக்கிறது. வருமானம் மட்டுமின்றி, டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையும் கடந்த ஒரு ஆண்டில் 3,866-லிருந்து 5,152 ஆகவும்; பார்களின் எண்ணிக்கை 1,456-லிருந்து 1,872 ஆகவும் அதிகரித்துள்ளன.

தமிழக மக்கள் நடத்திவந்த டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களின் வீரியம் குறைந்து போய்விட்டதைப் பயன்படுத்திக்கொண்டு டாஸ்மாக் கடைகள், பார்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, சாராய வருமானத்தையும் பெருக்கிக் கொண்டுவிட்டது, எடப்பாடி அரசு.

Edappadi-Palaniasamy_TASMACதமிழக மக்களில் 10-ல் நான்கு பேர் சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைகளுக்கு அடிமையாகியிருக்கும் புள்ளிவிவரங்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு போதை நாடு ஆகிவருவதை எச்சரிக்கும் செய்தி இது. இந்த அபாயத்திலிருந்து தமிழ்நாட்டை மீட்க வேண்டுமென்றால், முதல் நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும். ஆனால், எடப்பாடி அரசு அதற்கு நேர்எதிராக, இந்தக் கோரிக்கை வாயளவில் எழுப்பப்படுவதைக்கூடச் சகித்துக் கொள்ள மறுத்து, டாஸ்மாக்கை எதிர்ப்பவர்களை நர வேட்டையாடி வருகிறது.

படிக்க:
பீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் !
♦ காஷ்மீர் பற்றிய கார்ட்டூனை பகிர்ந்த மக்கள் அதிகாரம் தோழர் கைது !

♣ திருவாரூர் அருகேயுள்ள தேவர்கண்டநல்லூரில் டாஸ்மாக் கடைகளிலேயே கள்ளச் சீமைச் சாராயம் விற்பதை அம்பலப்படுத்தித் தட்டிகளை வைத்ததற்காக செல்லப்பாண்டி என்ற இளைஞரை மூன்று வழக்குகளின் கீழ் கைது செய்து சிறையிலும் அடைத்தது, தமிழக போலீசு.

♣ டாஸ்மாக் கடைகளை மூடக் கோரித் தொடர்ச்சியாகப் போராடிவரும் மதுரையைச் சேர்ந்த நந்தினியையும் அவரது தந்தை ஆனந்தனையும், அவர்கள் மீது ஐந்தாண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட வழக்கைக் காரணமாக வைத்துக் கடந்த ஜூன் மாத இறுதியில் அடாவடித்தனமாகக் கைது செய்தது, போலீசு. அவ்வழக்கு விசாரணையின்போது, “போதைப்பொருள் விற்பது ஐ.பி.சி. 328-ன்படி குற்றம். அந்தக் குற்றத்தை அரசே செய்யலாமா?” என நீதிபதியிடம் கேள்வி எழுப்பியதற்காக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் அவர்கள் மீது பதியப்பட்டது.

அவ்விருவருக்கும் பிணை கொடுப்பதற்கு, “மது விற்பது குற்றமா என்பது போன்ற கேள்விகளை நீதிமன்றத்தில் இனி கேட்கக் கூடாது என எழுதிக் கையெழுத்திட வேண்டும்” என்றொரு நிபந்தனையையும் விதித்தது, நீதிமன்றம். இந்நிபந்தனைக்கு நந்தினியும் ஆனந்தனும் மறுக்கவே, அவர்களைச் சிறையில் அடைத்துவிட்டது நீதிமன்றம் – போலீசு கூட்டணி.

மனைவியின் இறந்த உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்ட மருத்துவர் ரமேஷ் (கோப்புப் படம்)
மனைவியின் இறந்த உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்ட மருத்துவர் ரமேஷ் (கோப்புப் படம்)

கோவை மாவட்டம்-ஆனைக்கட்டி பகுதியில் மருத்துவராகப் பணியாற்றி வரும் ரமேஷின் மனைவி ஷோபனா சாலை விபத்தொன்றில் அகால மரணமடைந்ததற்கு டாஸ்மாக் சாராயம்தான் காரணம் என்பது மறுக்கவியலாத உண்மை. எனினும், ஷோபனாவின் மரணம் குறித்த முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளிகள் மதுபோதையில் இருந்த விவரம் பதிவு செய்யப்படவில்லை. அதற்கான சோதனையே நடத்தப்படவில்லை எனக் குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

டாஸ்மாக் சாராயத்தால் நேர்ந்துவரும் இத்தகைய அவலங்கள் குறித்துத் தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் விவாதிக்கப்படவில்லை. அதற்கு மாறாக, “டாஸ்மாக் கடைகள் கள்ளச் சாராயச் சாவுகளை ஒழித்துவிட்டதாக” வெட்கமின்றி பெருமை பாராட்டிக் கொண்டது அ.தி.மு.க. அரசு. மேலும், எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ. தனியரசு, “நடமாடும் டாஸ்மாக் கடைகளைத் திறக்க வேண்டும்” எனக் கோரியதை அமைச்சர் பெருமக்கள் அனைவரும் ரசித்துச் சிரித்திருக்கிறார்கள்.

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சட்டங்கள்!

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க