Tuesday, September 26, 2023
முகப்புசெய்திஇந்தியாசந்திரயான் 2 : இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சம்பள குறைப்பு !

சந்திரயான் 2 : இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சம்பள குறைப்பு !

சந்திரயான் -2 திட்டம் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக ஜூன் 12-ம் தேதி சம்பள குறைப்பு உத்தரவு வந்தது. இதன்படி, 90% பணியாளர்கள் சம்பள இழப்பை ரூ.10,000 வரை சந்தித்து வருகின்றனர்.

-

டந்த ஒருவாரமாக இஸ்ரோ விஞ்ஞானிகளை பெரும்பான்மை இந்தியர்கள் புல்லறித்து, நெகிழ்ந்து, கண்ணீர் சிந்தி பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்ரோவின் சாதனையைத் தனது சாதனை போல காட்டியுள்ள மோடி அரசு, அதே வேளையில் சந்திரயான் – 2 பகுதியளவு வெற்றிக்கு பாடுபட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சம்பள குறைப்பையும் செய்துள்ளது.

சம்பளத்தை இரட்டிப்பாக்கும் 1996-ம் ஆண்டின் ஒப்புதல் முடிவின்படி வழங்கப்பட இருந்த ஊக்குவிப்பு மற்றும் பதவி உயர்வு மானியங்களை ஜூன் 12-ம் தேதி திரும்பப் பெற்றுள்ளது மத்திய அரசாங்கம்.

இருபதாண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் இஸ்ரோவில் விஞ்ஞானிகள் சேரவும், ஏற்கெனவே விண்வெளி முகமையில் பணியாற்றுபவர்களை ஊக்குவிக்கவும் ஒரு உத்தரவை போட்டது.

ISRO-Modiஆனால், சந்திரயான் -2 திட்டம் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக ஜூன் 12-ம் தேதி சம்பள குறைப்பு உத்தரவு வந்தது. இதன்படி, ஜூலை 1-ம் தேதி முதல் இஸ்ரோவின் 90% பணியாளர்கள் ஒரு மாதத்திற்கு ரூ. 10,000 வரை சம்பள இழப்பை சந்தித்து வருகின்றனர்.

காங்கிரஸ் எம்.பி. மோதிலால் வோரா, இதுகுறித்து பாராளுமன்றத்தில் ஜூலை 30-ம் தேதி கேள்வி எழுப்பினார். அப்போது 1996-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவின் பேரில் விண்வெளித் துறை அமலாக்கியதில், கூடுதல் சம்பள உயர்வை சம்பளமாகத்தான் கருத வேண்டும் என கூறப்பட்டுள்ளதாக அவர் மாநிலங்களவையில் தெரிவித்தார். அரசாங்கம் இஸ்ரோ விஞ்ஞானிகளின் சம்பளத்தை குறைப்பதை நிறுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

படிக்க:
நூல் அறிமுகம் : போர் நினைவுகள் : 1876 – 1877
♦ மூளை செயலிழப்பு : மந்திரம் தீர்வு தருமா | மத்திய அரசு ஆய்வு !

மோடி அரசாங்கத்தின் இந்த முடிவை இஸ்ரோ விஞ்ஞானிகள் கடுமையாக எதிர்த்துள்ளனர். சம்பளத்தை மட்டுமே தாங்கள் நம்பியுள்ளதாகவும் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற வேறு வருமான வாய்ப்பு எதுவும் தங்களுக்கு இல்லை எனவும் இஸ்ரோ பணியாளர்கள் சங்கமான Space Engineers Association (SEA) தெரிவித்துள்ளது.

அவர்கள் இஸ்ரோ தலைவர் கே. சிவனுக்கு எழுதிய கடிதத்தில் அரசாங்கத்தின் முடிவை திரும்பப் பெற வலியுறுத்தியதாக தெரிவிக்கின்றனர். இந்த முடிவால் விஞ்ஞானிகள் ஊக்கமிழப்பார்கள் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். ஆறாவது ஊதிய ஆணையம் பரிந்துரைகளும் அப்படியே கிடப்பில் உள்ளதையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ISRO-Sivan-Modiசெயல்திறன் தொடர்பான ஊக்கத்தொகை திட்டமான performance-related incentive scheme (PRIS) பற்றி அரசாங்கம் பேசுகிறது. ஆனால் அது 1996-ம் ஆண்டின் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கான இரட்டை ஊதிய உயர்வு முடிவை பாதிக்கக்கூடாது என சொல்கிறது. ஏனெனில் செயல்திறன் தொடர்பான ஊக்கத்தொகை திட்டம் எந்த அரசாங்க ஊழியரின் அடிப்படை ஊதியத்தையும் பாதிக்கக்கூடாது.

இஸ்ரோவில் A, B, C, D, E, F மற்றும் G ஆகிய பிரிவுகளாக தகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஊதிய உயர்வு பெற, ஒவ்வொரு விஞ்ஞானியும் அதற்குரிய தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டும்.

தனக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களின் சம்பள உரிமையை காவு கொடுத்துவிட்டு, ஊடகங்கள் முன்னே நீலிக்கண்ணீர் வடிக்கிறார் சிவன். அதை உலக மகா நடிகனாக உள்ள பிரதமர் மோடி துடைப்பது பெரும்பான்மை இந்தியர்களை புல்லறிக்கச் செய்கிறது; தேசபக்தி புரண்டோடுகிறது. அருகில் இருந்த விஞ்ஞானிகளுக்குத் தெரிந்திருந்திருக்கும் இந்த பக்தி, எவ்வளவு போலியானது என்று.


அனிதா
நன்றி
: தி வயர்.

  1. Villavan Ramadoss

    பிதுங்கி வழியும் தேசபக்திக்குப் பின்னால்,.,.,
    —-–
    இஸ்ரோ… உள்ளே என்ன தான் நடந்துகொண்டிருக்கிறது?

    திடீரென லட்சக்கணக்கான மக்கள் மனத்தில் இஸ்ரோ மேல் அன்பு பொங்கி வழிகிறது. இஸ்ரோ விஞ்ஞானிகளைச் சந்தித்து முதுகில் தட்டிக்கொடுக்கும் மோதியைப் பார்த்து மக்கள் நெகிழ்ந்துபோகிறார்கள்

    உணர்ச்சிகளைக் கிளறச்செய்து அதன் மூலம் லாபமடையும் நோக்கில் ஆளும் கட்சி செய்யும் நாடகீயங்களைப் பார்க்கும் போது இது ஒரு well planned meeting என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

    நாலாப்புறமும் கேமராக்கள் தமது பணியைச் செவ்வனே செய்துகொண்டிருந்தன.

    ஹிட்லரின் அமைச்சராக இருந்த கோயபல்ஸ் ஒரு சந்தேகத்தை, ஒரு பொய்யை அது உண்மையாகும்வரை சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும் என்றும் பிறகு அந்தப் பொய் உண்மையென்று எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தெள்ளத்தெளிவாக உணர்ந்து சொல்லியிருக்கிறார். இதை எப்போது இந்த நாடு உணர்ந்துகொள்ளும் என்பதுதான் தெரியவில்லை. வானொலியும், செய்தித்தாளும் மட்டுமே ஊடகங்களாக இருந்த ஹிட்லர் காலத்திலும், பல்வேறு செய்தி ஊடகங்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்திலும் கோயபல்ஸின் கூற்று உண்மையாகவே இருக்கிறது. அதன் தீவிரத்தன்மை இக்காலத்தில் அழிவு சக்தியாக மாறிவிட்டது

    இஸ்ரோ விஞ்ஞானிகளோடு மானசீகமாக கை கோர்த்து இன்று எல்லோரும் நிற்கிறார்கள். ஆனால் கொஞ்ச நாளுக்கு முன் அவர்களின் ஊதியம் குறைக்கப்பட்டபோது யாரும் அவர்களோடு இருக்கவில்லை.

    மோதி அரசு சந்த்ரயான் – 2 ஏவுவதற்கு கொஞ்சம் முன் இஸ்ரோ விஞ்ஞானிகளின் ஊதியம் குறைக்கப்பட்டது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் சங்கமான ஸ்பேஸ் இஞ்சினியர்ஸ் அசோசியேசன் இஸ்ரோ சேர்மன் டாக்டர் கே சிவன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி ஒரு கோரிக்கை வைத்தது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் ஊதியத்தைக் குறைத்திருக்கும் மத்திய அரசின் ஆணைகளை ரத்து செய்து உதவுங்கள் என அவரிடம் வேண்டிக்கொண்டது. ஏனெனில் விஞ்ஞானிகளுக்கு இந்த ஊதியத்தைத் தவிர சம்பாதிக்க வேறு எந்த வழியுமில்லை என்று விளக்கிச்சொன்னது .

    ஆனால், யாரும் எதுவும் பேசவில்லை. சென்ற ஆண்டு அரசு இஸ்ரோவை தனியார் மயமாக்குவதற்கு முயன்றபோது யாரும் எதுவும் பேசவில்லை.

    சென்ற ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக இஸ்ரோ இரண்டு தனியார் கம்பெனிகள் மற்றும் ஒரு பொதுத்துறை அமைப்புடன் இணைந்து 27 செயற்கைக்கோள்கள் உருவாக்க ஒப்பந்தம் செய்தது. கடந்த மூன்று பத்தாண்டுகளில் இஸ்ரோவுக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு இது. நேவிகெசன் சேட்டிலைட் தயாரிக்கக் கிடைத்த அந்த வாய்ப்பை தனியார் துறைக்குக் கொடுத்துவிட்டது.

    தனியார் துறைக்கு இப்படியாக 27 செயற்கைகோள்கள் உருவாக்கும் பணியை ஒப்படைத்ததால் இஸ்ரோவின் செயற்கைக்கோள் தயாரிக்கும் அஹமதாபாத் கிளையின் ஸ்பேஸ் அப்ளிகேசன் செண்டரின் இயக்குநர் டாக்டர் தபன் மிஸ்ரா மிகவும் கோபமடைந்தார்.

    சிவன் அவர்களுக்குப் பிறகு தபன் மிஸ்ரா இஸ்ரோவின் அடுத்த தலைவராகும் வாய்ப்பு ஏறக்குறைய முடிவான நிலையில் அவர் தனியார்மயமாவதை எதிர்த்த காரணத்தால் பதவியிறக்கம் செய்யப்பட்டு இஸ்ரோவின் ஆலோசகராக மட்டும் நியமிக்கப்பட்டார்.

    இஸ்ரோவின் சேர்மன் கே சிவன் அவர்கள்
    “தபன் மிஸ்ரா எல்லா பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார். அவர் இஸ்ரோவின் முதன்மை அலுவலகத்தில் ஆலோசகராக நியமிக்கப்படுகிறார். அவர் சேர்மன் க்கு தகவல்களை(ரிப்போர்ட்) தர வேண்டும்”
    என ஒரு ஆணை பிறப்பிக்கிறார்

    அப்போது தபன் மிஸ்ரா போன்ற சிறந்த விஞ்ஞானிக்கும் சிவனுக்கும் இருந்த கருத்து வேறுபாடு கலையப்பட்டதாக அப்போது செய்திகள் எழுந்தன.

    கே.சிவன் மேல் ஐயாவுக்கு அவ்வளவு இரக்கம் பொங்கி வழிந்தது ஏன் என்பது இப்போது நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள். யாருடைய கையசைவில் இந்த உயர் பதவிக்கு அவர் வந்தார் என்பதும் புரிந்திருக்கும்.

    தபன் மிஸ்ராவை இவ்விதம் பதவியிறக்கம் செய்தது தொடர்பாக நாட்டின் பல அறிவியல் துறை சார் விஞ்ஞானிகளும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு கடிதம் எழுதி இந்தப் பிரச்சினையில் தலையிட வேண்டுமென கோரிக்கை வைத்தனர். ஆனால், எதுவும் நடக்கவில்லை.

    இந்த செயற்கைக்கோள்களைத் தயாரிக்க தேர்வு செய்யப்பட்ட ஆல்ஃபா டிசைன் கம்பெனியானது பனாமா பேபர்ஸில் இணைந்ததாகும். இந்தக் கம்பெனியானது பாதுகாப்பு உபகரணங்களை முழுமையாக்கித் தரும் கம்பெனியாகும்.

    அடானி சமூகத்துடன் இந்தக் கம்பெனிக்கு நெருக்கமான உறவு இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. ஆல்ஃபா டிசைன் டெக்னாலாஜிஸ், டிபெண்ஸ் ஃபார்ம் எலக்ட்ரானிக்கின் முக்கியமான இந்திய கூட்டாளியுமாகும். அதன் பெயரானது இந்தியாவில் கமிசன் வழங்கியது தொடர்பான பனாமா பேப்பர்சில் முத்ன்மையாக வந்திருக்கிறது.

    கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக இஸ்ரோவுக்குள் இவையெல்லாம் நடந்துகொண்டிருக்கிறது. இந்த விசயங்கள் ஊடகங்களின் குரலாக வெளிப்படுத்தவும், அனைத்து விசயங்களையும் உங்கள் முன்னால் வைக்கும் துணிவும் ஊடகங்களுக்கு இருக்கிறது. ஆனால், அவை உங்களுக்கு ஆளுங்கட்சியின் ஏஜெண்டுகளை மட்டுமே படம்பிடித்துக்காட்டுகின்றன. நீங்கள் உங்கள் கண்களையும் காதுகளையும் திறந்து வைக்கவில்லையென்றால் அவை உங்களை முட்டாளாகவே வைத்திருக்கும்

    கிரிஸ் மாள்வியா
    …..

    साभार – Girish Malviya

    Trnaslated by Naanarkaadan Sara

  2. The existing salary and allowances is at higher side. Should not expect the entire treasury income as salary. There are 129.9 crore population outside PURVIEW OF GOVT. SALARY. WHAT ABOUT THEIR STATUS. THINK TWICE BEFORE VOMITING.

    • We are unable to DIGEST the exploitation made to the brain as well as muscle workers and the government institutions. That’s why we are VOMITING on you..!
      Have you ever opened any of your holes on the looting of our money by Modies or Mallayas?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க