டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் மீது ஏ.பி.வி.பி குண்டர்கள் நடத்திய தாக்குதலைக் கண்டித்து, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில், கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

***

திருச்சியில் டெல்லி JNU மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ஏபிவிபி குண்டர்களை கைது செய்ய வலியுறுத்தி 08.01.2020 அன்று பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கல்லூரி வளாகத்துக்குள் இருந்த தந்தை பெரியார் சிலை நோக்கி பேரணியாக சென்ற மாணவர்கள் “ABVP – சோலிய முடி! RSS – சோலிய முடி! BJP – சோலிய முடி!” என்று முழக்கமிட்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
திருச்சி. தொடர்புக்கு : 99431 76246.

***

ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய யோகேந்திரா தலைமையிலான  ABVP குண்டர்களை கைது செய்யக்கோரி, 07.01.2020 அன்று, கும்பகோணம் அரசுக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வாயிலில் போராட்டம் நடத்தினர். மேலும் இப்போராட்டத்தின்போது ஜே.என்.யூ மாணவர்களுக்கு ஆதரவாக களம் இறங்குவோம் என்றும், ABVP குண்டர்களை கைது செய்யக்கோரியும் முழக்கமிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
கும்பகோணம். தொடர்புக்கு : 89408 75070.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க