privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்வைஃபேஸ்புக் பார்வைகொரோனா தொற்று அபாயம் : தோழர் வரவர ராவை விடுதலை செய் !

கொரோனா தொற்று அபாயம் : தோழர் வரவர ராவை விடுதலை செய் !

தோழர் வரவர ராவ் தற்போது மாற்றப்பட்டுள்ள சிறையில் ஒரு சிறைவாசி கொரானா தொற்று உயிரிழந்திருப்பது நமக்கு மிகவும் கவலை அளிக்கிறது.

-

கீழே தரப்பட்டுள்ளது தோழர் வரவர ராவின் உறவினரும் பத்திரிகையாளருமான வேணுகோபால் அவர்களின் முக நூல் வழியான கடிதம் ஆகும்.

தோழர் வரவர ராவ் தற்போது மாற்றப்பட்டுள்ள சிறையில் ஒரு சிறைவாசி கொரானா தொற்று உயிரிழந்திருப்பது நமக்கு மிகவும் கவலை அளிக்கிறது.

80 வயதிற்கு மேல் ஆகிவிட்ட, பல்வேறு தீவிர உடல்நல சிக்கல்கள் கொண்ட தோழர் வரவர ராவை குறைந்தபட்சம் பரோலில் கூட விட மறுக்கும் காவல்துறையின் மனிதாபிமானமற்ற செயலை அனைத்து ஜனநாயக சக்திகளும் கண்டிக்க வேண்டும்.

இது மறைமுகமாக அவரை படுகொலை செய்வதற்கு ஒப்பானதாகும்.

மேலும் பல்வேறு சிறைகளில் உள்ள எண்ணற்ற அரசியல் கைதிகள் யு.ஏ.பி.ஏ போன்ற கொடும் சட்டங்களின் காரணமாக பிணை கிடைக்காமல் இதே அபாயத்தை எதிர் கொள்கின்றனர்.

வரவர ராவின் நிலை இதற்கு ஒரு உச்சகட்டமான எடுத்துக்காட்டாகும். எனவே தோழர் வரவர ராவ்,தோழர் சாய்பாபா மற்றும் இதர அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தொடர்ந்து குரல் கொடுப்பது மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது.

***

நன்றி…

கடந்த இருபத்து நான்கு மணி நேரத்தில், வரவர ராவின் உடல்நிலை தொடர்பாக, அவருடன் தொடர்பு கொள்ள முடியாத மோசமான சூழ்நிலையை பகிர்ந்து கொண்டதிலிருந்து, ஆதரவும் அக்கறையும் கொண்ட பல விசாரிப்புகளும் எதிர்வினைகளும் வந்த வண்ணமுள்ளன..

நூற்றுக்கணக்கான நண்பர்கள் எங்களை அலைபேசியில் அழைத்தனர், அவர்கள் வரவர ராவின் குடும்பத்திற்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

அவர்கள் சிறை அதிகாரிகளை தாமே அழைத்துப் பேசினர், மகாராஷ்டிரா அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் தொடர்பு கொள்ள முயன்றனர். பத்திரிகை அறிக்கைகளை வெளியிட்டனர்.

சமூக ஊடகங்களில் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்… அவர்கள் தமது கவலை, கோபம், அக்கறை, ஆதரவு ஆகியவற்றை சாத்தியமான அனைத்து வழிகளிலும் வெளிப்படுத்தினர்.

தெலுங்கானாவின் அனைத்து எதிர்க்கட்சிகளும் (சிபிஐ, சிபிஎம், டி.ஜே.எஸ், சிபிஐ எம்.எல்., விப்லவ ராச்சாய்தலா சங்கம், பூரா ஸ்பந்தனா வேதிகா (வாரங்கல்), தெலுங்கானா வித்யவந்துலா வேதிகா மற்றும் பல அமைப்புகள்) அவரை விடுவிக்கக் கோரி அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

வரவர ராவின் மகள்களின் முறையீட்டை தி இந்து, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் ஆந்திர ஜோதி ஆகிய இதழ்கள் வெளியிட்டுள்ளன.

சிறை அதிகாரிகளும் மாநில அரசு அதிகாரிகளும் “வரவர ராவ் நலமாக உள்ளார்” என்று கூறுவதாக நண்பர்கள் மூலம் நாங்கள் அறிந்தோம். இதன் அர்த்தம் என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை என்றாலும், வி.வி “நலமாக இருப்பார்” என்று நம்புகிறோம்.

எப்படியிருந்தாலும், நாளை அவரது ஜாமீன் மனு மீதான நீதிமன்ற விசாரணை வருகிறது. அப்போது சிறை அதிகாரிகள் அவரது உடல்நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

கடந்த மூன்ற வாய்தாக்களிலும் நீதிமன்றம் இந்த அறிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

படிக்க:
<சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு ஒரு நாள் கட்டணம் ரூ. 60,000 !
♦ <செயல்பாட்டாளர்கள் ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு !

ஆனால் துறை அதிகாரிகள் அதை கண்டு கொள்ளவில்லை. குறைந்தபட்சம் நாளைய வாய்தாவிலாவது அவர்கள் வரவர ராவின் உடல்நிலை குறித்த சமீபத்திய அறிக்கையை தாக்கல் செய்வார்கள் என்றும், உண்மையான நிலையை எங்களுக்குத் தெரிவிப்பார்கள் என்றும் நம்புகிறோம்.

அதுவரை நாங்கள் பதட்டத்துடன் தான் இருக்க வேண்டியுள்ளது.

இருப்பினும், , குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சார்பாக, இதயத்தின் ஆழத்திலிருந்து, தங்களால் இயன்றதைச் செய்ய முயன்ற ஒவ்வொருவருக்கும் நன்றி கூறுகிறோம்…

நன்றி : ஃபேஸ்புக்கில்Venugopal

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க